مقدمة وغلاف المنتقى من موسوعة الأحاديث النبوية

مقدمة وغلاف المنتقى من موسوعة الأحاديث النبوية

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

Language: lang_ta
Prepared by:
Version: 1.0
Translations 63
Akan Amharic Assamese Azerbaijani +59
Attachments 7
PDF
Audio
Video
+3

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

முன்னுரை

புகழனைத்தும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டுமாக.ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் மறுiமை நாள் வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றிய அனைவர் மீதும் உண்ணடாவதாக. என்று கூறியதன் பின் :

-வாசித்தல்;, சிந்தித்தல், ஆய்வுசெய்தல், கற்றல் மற்றும் செயல்படுதல் போன்ற விடயங்களில் அல்லாஹ்வின் வேதத்தின் பின் - ஒரு முஸ்லீம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய பகுதி அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவாகும். இது குறித்து நபி ஸல் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். மனிதர்களே! நீங்கள் கடைப்பிடித்து வாழும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள் என்றமைந்த அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் ஸுன்னாவையும் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். என்றார்கள். மனிதர்களே! நான் உங்களிடம் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் கடைப்பிடித்து ஒழுகும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவறி செல்லமாட்டீர்கள் அவைதான் அல்லாஹ்வின் இறைவேதமும் அவனின் தூதரின் வழிமுறையுமாகும் என்றார்கள். ஆதாரம் : இமாம் மாலிக் -முஃதா- இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறான். (உங்களுக்கு இத்தூதர் எதை வழங்கினாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், அவர் எதை தடுத்தாரோ அதை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்) அல் ஹஸ்ர் (வசனம் :7 ) இந்த வகையில், மொழிகளுக்கான இஸ்லாமிய உள்ளடக்க சேவைகள் அமைப்பும், ரப்வாவில் உள்ள வெளிநாட்டாவருக்கான தஃவர் மற்றும் வழிகாட்டல் நிலையமும்; இணைந்து ஹதீஸ் கலைக்கலஞ்சியமொன்றை தயாரித்து அதனை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்குதில் ஆர்வம் கொண்டன.

குறித்த இந்த கலைக்களஞ்சியத்திலிருந்து ஒரு முஸ்லிமுக்கு தேவையான மார்க்கம் மற்றும் உலக விவகாரங்கள் சம்பந்தமான சில ஹதீஸ்கள் தேர்வு செய்யப்ட்டு, அதன் சுருக்கமான விளக்கம், அவற்றின்; சொல்லியல் மற்றும் ஹதீஸ் பிரதிபளிக்கும் கருத்துகள் ஆகியவற்றுடன் ஹதீஸ்களிருந்து பெறும் சில பயன்;களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த நூலானது 'அல் முன்தகா மின் மவ்ஸுஅதில் அஹாதீஸ் அந்நபவிய்யா' என்ற பெயரால் -ஹதீஸ் கலைக்களஞ்சியத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஹதீஸ்கள் என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. 'அல் முன்தகா மின் மவ்ஸுஅதில் அஹாதீஸ் அந்நபவிய்யா' என்ற பெயரால் -ஹதீஸ் கலைக்களஞ்சியத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஹதீஸ்கள் என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வி;ன் தூதரின் பொன்மொழிகளை தங்களின் மொழிகளிலேயே மக்களுக்கு எத்தி வைக்கவும் இக்களைக்களஞ்சியத்தின் உள்ளடக்கத்தினால் அனைவரும் பயன்பெற வேண்டும் எனும் நன்நோக்கிலும், இதன் மொழிபெயர்ப்புப் பணிகள் உலகில் வாழும் மொழிகள் அனைத்திலும் நடைபெற்று வருகின்றது.

அல்லாஹ் இந்நற்பணியை ஏற்றுக்கொண்டு இதனை பரக்கத் பொருந்திய பணியாகவும், அவனின் திருமுகம் நாடி செய்த தூய பணியாகவும் அமைத்துத் தரவேண்டும் என பிரார்திப்பதோடு இக்கலைக்களஞ்சியத்தை தயாரித்து அதனை மொழிபெயர்த்து பிரசுரிப்பதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இறைவனின் நற்கூலி கிடைக்க வேண்டுமெனவும் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக!

சிறு குறிப்பு :

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் இஸ்லாமிய சாட்டவாக்கத்தின் இரண்டாம் மூலாதாரமாக கருதப்படுகிறது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் அவர் (நபியவர்கள்) தனது மனோ இச்சையின் பிரகாரம் எதனையும் பேசுவதில்லை (3) அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியைத் தவிர வேறில்லை (அந்நஜ்ம் : 3-4)

இக்கலைக்களஞ்சியமானது சொற்சுருக்கமும் பொருட்செறிவும் மிக்க சிறிய ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. அல்லாஹ்வி;ன் தூதரின் பொன்மொழிகளை தங்களின் மொழிகளிலேயே மக்களுக்கு எத்தி வைக்கவும் இக்கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கத்தினால் அனைவரும் பயன்பெற வேண்டும் எனும் நன்நோக்கிலும் முஸ்லிமுக்கு தேவையான மார்க்கம் மற்றும் உலக விவகாரங்கள் சம்பந்தமான சில ஹதீஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் சுருக்கமான விளக்கம், அவற்றின்; சொல்லியல் மற்றும் ஹதீஸ் பிரதிபளிக்கும் கருத்துகள் ஆகியவற்றுடன் ஹதீஸ்களிலிருந்து பெறும் சில பயன்கள்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.