الإسلام دين رسل الله
رسالة لطبفة توضح أن الإسلام هو الاستسلام لله خالق الكون والانقياد له محبة وتعظيماً، وهو دين جميع الأنبياء، يقوم على الإيمان بالله، ورسله، وملائكته، وكتبه، واليوم الآخر، والقدر خيره وشره. ويدعو إلى عبادة الله وحده، ويرى أن عيسى عبد الله ورسوله وليس ابن الله.
இஸ்லாம் இறைதூதர்களின் மார்க்கம்
இஸ்லாம் என்பது இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனுமாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிவதும், நேசம் மற்றும் பயபக்தியினால் அவனுக்கு முழுமையாக கட்டுப்படுவதுமாகும். இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்வை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகும்.அதாவது அவன் மாத்திரமே சிருஷ்டிகர்த்தா என்றும் அவன் தவிரவுள்ளவை யாவும் சிருஷ்டிகள் என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபட மிகத்தகுதியானவன். அவனுக்கு நிகராக எந்த இணையும் கிடையாது என்பதை உண்மைப்படுத்தி அவன் மாத்திரமே உண்மையான இறைவன் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அவனுக்கு மிக அழகிய பெயர்களும் உயர் பண்புகளும் உண்டு.அவன் குறைகள் அனைத்திற்கும் அப்பாட்பட்டவன்.அவன் எவரையும் பெறவும் இல்லை அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை மொத்தத்தில் அவனுக்கு நிகராக எதுவுமில்லை. அவன் தனது படைப்புகளில் எதிலும் பிரதிபளிப்பதோ அல்லது தங்குவதோ கிடையாது என்பதை ஆழமாக நம்புவதுமாகும்.
இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கமாகும் இம்மார்க்கத்தைத்; தவிர வேறு எந்த மார்க்கத்தையும் மனிதர்களிமிருந்து அவன் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மார்க்கத்தையே அனைத்து நபிமார்களும் தனது இரட்சகனிடமிருந்து பெற்று இப்புவியில் போதித்தார்கள்.
இறைத்தூதர்கள் அனைவரையும் விசுவாசிப்பது இஸ்லாமிய அடிப்படைகளுள் ஒன்றாகும். அதாவது தனது கட்டளைகளை அடியார்களுக்கு எத்திவைப்பதற்காக அவர்களை அல்லாஹ் தூதர்களாக தேர்வு செய்து அனுப்பிவைத்ததுடன் அவர்களுக்கு வேதங்களையும் இறக்கியருளினான். இந்த வரிசையில் இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் வந்தார்கள்.அவருக்கு முன்னுள்ள அனைத்து இறை சட்டங்களை மாற்றி இறுதி இறை சட்டங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அல்லாஹ் அவர்களை தூதராக அனுப்பிவைத்தான். அவர்களை மிகப்பெரும் அத்தாட்சிகள் மூலம் பலப்படுத்தினான். அதில் மிக உன்னதமானதாக அல்குர்ஆன் திகழ்கிறது.இது அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் வார்த்தை மனிதகுலம் அறிந்த மிகப்பெரும் உயரிய நூல். அது தனது உள்ளடக்கம்,; வார்த்தை, மொழி நடை, கட்டமைப்பு போன்றவற்றில் தனித்துவமானது மட்டுமல்லாது அற்புதம் நிறைந்தது. அதில் இம்மை மறுமையின் நிலையான மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் சத்திய வழி உண்டு. அது இன்றுவரை அதன் அசல் மொழி அறபுமொழியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஹர்ப் எழுத்து கூட மாற்றப்படவில்லை
மலக்குமார்களையும் இறுதி நாளையும் ஈமான் கொள்வது இஸ்லாத்தின் மிகப்பிரதான அடிப்படைகளுள் உள்ளவைகளாகும்.இதனடிப்படையில் மறுமையில் மனிதர்கள் மண்ணறைகளிலிருந்து தங்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணைக்காக மீளெழுப்படுவார்கள்.எனவே யார் அல்லாஹ்வை உண்மையான இறைவானாக ஏற்று நற்காரியங்களை செய்கிறாறோ அவர் முஃமினாவார் அவருக்கு சுவர்க்கத்தில் நிரந்தரப் பேரிண்பம் உண்டு.யார் அல்லாஹ்வை ஏற்காது புறக்கணித்து தீமைகைளை செய்கிறாரோ அவருக்கு நரகில் மிகப்பெரும் தண்டனை உண்டு.மேலும் அல்லாஹ் விதித்துள்ள நன்மை மற்றும் தீமை குறித்து ஈமான் கொள்வதும் இஸ்லாமிய அடிப்படைகளுள் ஒன்றாகும்
முஸ்லிம்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை, அல்லாஹ்வின் மகனாக அன்றி அவனின் அடியாராகவும், அவனின் தூதராகவும் விசுவாசிக்கின்றனர். ஏனெனில்; அல்லாஹ் மகத்தானவன். அவனுக்கு மனைவியோ அல்லது பிள்ளையோ ஒரு போதும் இருக்க முடியாது. என்றாலும் அல்லாஹ் அல்குர்ஆனில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி –தீர்க்கதரிசி என்றும் அவருக்கு அதிகமான அற்புதங்களை அருளினான் என்றும் எமக்கு அறிவித்துத்தந்துள்ளதோடு, அவரை தனது சமூகத்திற்கு அவனை வணங்கி வழிபடுவதின் பால் அழைப்புவிடுக்க தூதராகவும் அனுப்பிவைத்ததாகவும் பிரஸ்தாபிக்கிறான்.அத்துடன்; ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடம் தன்னை வணங்குமாறு வேண்டிக்கொள்ளவில்லை மாறாக அவரைப் படைத்த சிருஷ்டி கர்த்தா அல்லாஹ்வை வணங்குமாறு பணித்தார் என்றும் எமக்கு அல்லாஹ் அறியத்தந்துள்ளான்.
இஸ்லாம் இயல்புணர்வுடனும் சீரிய பகுத்தறிவுடன் இணைந்து போகும் ஒரு மார்க்கமாகும்.அதனை சீரிய ஆன்மாக்கள் ஏற்றுக்கொள்கின்றன.அந்த மார்க்கத்தை மகத்தான சிருஷ்டிகர்த்தாவாகிய அல்லாஹ் மனிதர்களுக்கு விதியாக்கினான்.அது மனிதர்கள் அனைவருக்குமான பாக்கியமும் மகிழ்சியும் நிறைந்த ஒரு மார்க்கம்.இந்த மார்க்கம் இனம் நிறம் ஆகியவற்றால் மனிதர்களை வேறுபடுத்திப்பார்ப்பதில்லை.மக்கள் அனைவரும் இந்த மார்க்கத்தில் சரிநிகர் சரிசமமானவர்கள். இந்த மார்க்கத்தில் மனிதர்களிடையிலான வித்தியாசமும் உயர்வும் அவரவர் செய்கின்ற நற்கருமங்களில் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.நற்கருமங்களில் உயர்ந்து நிற்பவரே இம்மார்க்கத்தில் உயர்வானர் என்பது இம்மார்க்கத்தின் அடிப்படையாகும்.
புத்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை இரட்சகனாகவும்;,இஸ்லாத்தை மார்க்கமாகவும்,முஹம்மதை நபியாவும் விசுவாசம் கொண்டு ஏற்று வாழ்வது கடமையாகும்.இது விடயத்தில் எந்த மனிதனுக்கும் தெரிவுரிமைகிடையாது.ஏனெனில் மறுமை நாளில் அல்லாஹ் தூதர்களின் அழைப்புக்கு பதிலளித்தது குறித்து விசாரிக்கவுள்ளான். யார் இறைவிசுவாசியாக இருந்தாரோ அவருக்கு மகத்தான வெற்றி உண்டு.யார் இறைமறுப்பாளனாக இருந்தாரோ அவருக்கு மிகப்பெரும் தோழ்வியும் நஷ்டமும் உண்டு.
இஸ்லாத்தினுள் நுழைய விரும்பும் ஒருவர் பின்வரும் வார்த்தையை அதன் பொருளை அறிந்து அதனை ஆழமாக விசுவாசித்து கூறினால்; போதுமானது: அஷ்ஹது அன் லாஇலாக இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ்(அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் எவறும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் முஹம்மது அல்லாஹ்வின்; தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்), இவ்வாறு; அவர் கூறுவதால் முஸ்லிமாக மாறிவிடுகிறார்.அதன் பிறகு அல்லாஹ் அவரின் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இஸ்லாத்தின் ஏனைய சட்ட திட்டங்களை சிறிது சிறிதாக கற்றுக்கொள்ளவேண்டும்.
மேலதிகத் தகவளைப்பெற