من خلقني؟ ولماذا؟
المطوية تتناول مفهوم الخلق والغرض من الحياة، متسائلة عن منشأ الكون والإنسان والقوانين التي تحكمهما. تشرح وجود خالق واحد مستحق للعبادة، وتبرز الدلائل على عظمة الخالق من خلال الطبيعة وأحكام الكون. كما تستعرض المطوية صفات الله وأهمية الوحي في توجيه البشر لعبادة الله وحده واتباع شرعه. وتؤكد على أن الإسلام هو الدين الحق، وتحث على الدخول فيه واعتناقه للحصول على السعادة الحقيقية في الدنيا والآخرة.
எல்லாம் படைப்பாளியின் இருப்பைக் குறிக்கிறது
என்னைப் படைத்தவன் யார்? எதற்காக என்னைப் படைத்தான் ?
வானங்களையும் பூமியையும், அவற்றில் எம்மால் அறிந்துகொள்ளமுடியாத பெரிய உயிரினங்களையும் படைத்தவன் யார்?
வானத்திலும் பூமியிலும் செயற்படும் மிகவும் நுணுக்கமானதும், துல்லியமானதுமான ஒழுங்கை அமைத்தவன் யார்?
மனிதனைப் படைத்து அவனுக்கு செவிப்புலனையும், பார்வையையும், பகுத்தறிவையும் வழங்கி, அறிவு ஞானங்களை பெற்றுக்கொள்ளவும், உண்மைகளை புரிந்து கொள்ளவும் தகுதிமிக்கவனாக ஆக்கியவன் யார்?
உங்கள் உடல் அமைப்புகளிலும், உயிரினங்களின் உடலிலும் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பை எப்படி விளக்குவீர்கள்?அதை உருவாக்கியவன் யார்?
மேலும் இம்மாபெரும் பிரபஞ்சமானது அதன் விதிகளுக்கமைவாக பல ஆண்டுகளாக மிகவும் துல்லியமாக கட்டுக்கோப்புடன் இயங்கி நிலைபெறுவதற்கு எவ்வாறு ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது?
இவ்வுலகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது ஆளக்கூடிய முறைமைகளை (வாழ்வு,மரணம், உயிரினங்களின் இனப்பெருக்கம்,இரவு பகல்,பருவகால மாற்றங்கள் போன்றவை) வகுத்தவன்-நிறுவியவன்- யார்?
இப்பிரபஞ்சம் தானாக உருவானதா? அல்லது ஏதுமில்லாத ஒன்றின் மூலம் உருவானதா? அல்லது தற்செயலாக வந்ததா?
புரிதல், பகுத்தறிவு, ஆன்மா, உணர்வுகள், பாசம் போன்ற மனிதன் தனது புறக்கண்களால் காணாத விடயங்களை நம்புவது ஏன்? அவைகளின் பிரதிபலிப்புகளை –விளைவுகளை தனது புறக்கண்களால் அவன் காண்பதால் அல்லவா! அவ்வாறாயின் இந்த மிகப்பிரமாண்டமான பிரபஞ்சத்தை படைத்தவனின் பிரதிபலிப்புகளான –விளைவுகளான- உயிரினங்களையும், அவனின் நேர்த்தியான கைவினைகளையும், அவனின் அளப்பரிய கருணையையும் காணும் மனிதன் அவனின் இருப்பை எப்படி ஏற்றுக்கொகொள்ளாது இருக்க முடியும்? ஏற்றுக்கொள்வது அறிவுடைமையல்லவா!
ஒருவர் ஒரு வீட்டை காட்டி இந்த வீடு எவரும் கட்டாமல் உருவானது என்று கூறினால் அல்லது இல்லாமை இந்த வீட்டை உருவாக்கியது என்று கூறினால் யாரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அவ்வாறாயின் இந்த மாபெரும் பிரபஞ்சம் படைப்பாளன் ஒருவன் இல்லாமல் உருவானது என்று கூறுபவர்களை எப்படி நம்ப முடியும்? ஒரு பகுத்தறிவுள்ள ஒருவர்-புத்தியுள்ளவர்- பிரபஞ்சத்தின் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பானது தற்செயலாக வந்தது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான். அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை. [52 : 32].
அல்லாஹ் தூய்மையானவனும் மேலோங்கியவனுமாவான்
இறைவன் மற்றும் படைப்பாளன் ஒருவர் இருக்கிறான்.அவனது முழுமையைக் குறிக்கும் பல சிறந்த பெயர்கள் மற்றும் பண்புகளை அவன் கொண்டுள்ளான். படைப்பாளன், மிக்க கருணையாளன், பராமரிப்பாளன் மற்றும் தாராளமானவன் என்பவை அவனது பெயர்களில் உள்ளவை. சர்வவல்லமையுள்ள இறைவனின் பெயர்களில் "அல்லாஹ்" என்பது மிகவும் பிரபலமான பெயர், இதன் பொருள்: எந்த துணையும் இல்லாமல் தனியாக வணக்கத்திற்கு தகுதியானவன்.
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் : அல்லாஹ் ஒருவன் தான் என நபியே நீர் கூறுவீராரக அல்லாஹ் (எவ்விதத்) தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை [112: 1-4].
மேலும் அல்லாஹ் கூறினான்: 'அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்ழி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இதி(ணு)னிஹி யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹீ இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' பொருள் :(உண்மையாக) வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன். [2 : 255].
எல்லாம் வல்ல இறைவனின் பண்புகள்
பூமியைப் படைத்து, அதைத் வசப்படுத்தி, தன் உயிரினங்களுக்கு ஏற்றவாறு அமைத்தவன் இறைவனே, வானங்களையும், அதிலுள்ள பெரிய உயிரினங்களையும் படைத்து, சூரியனையும், சந்திரனையும், இரவையும், பகலையும் கொடுத்தவனும் அவனே. இந்த துல்லியமான கட்டுப்பாடு அவனது மகத்துவத்தை குறிக்கிறது.
அவன்தான் எமக்கு காற்றை வசப்படுத்தித் தந்தவன். அது இல்லாமல் எம்மால் உயிர் வாழ முடியாது. அவன்தான் எமக்குப் மழையைப் பொழியச் செய்து கடல்களையும், நதிகளையும் வசப்படுத்தித்தந்தான். தாயின் வயிற்றில் நாம் கருவாக மிகவும் பலயீனமானவர்களாக இருந்த போது எமக்கு ஊட்டச்சத்தை தந்து நம்மை வளர்த்து பாதுகாத்து, நம் நரம்புகளில் இரத்தத்தை ஒடச்செய்பவனும் அவனே!, மேலும் நாம் பிறந்த நாள் முதல் இறக்கும் வரை நம் இதயத்தை தொடர்ந்து துடிக்கச் செய்பவனும் அவனே !
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான். ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். மேலும், உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், இதயங்களையும் (அறிவையும்) கொடுத்தவன் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (16: 78)
வணங்கி வழிபடக்கூடிய இறைவன் நிறைவான பண்புகளைப் பெற்றிருப்பது அவசியமாகும்
நம்முடைய படைப்பாளன் அவனுடைய மகத்துவத்தை உணரும் அறிவை நமக்குக் கொடுத்தான், மேலும் அவன் முழுமையானவன்; குறையுள்ளவனாக இருக்கமுடியாது என்ற ஒரு உள்ளார்ந்த இயல்பை நம்மில் விதைத்தான்.
வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருத்தல் வேண்டும். ஏனெனில் அவன் மாத்திரமே வணக்கத்திற்கு முழுமையான தகுதிபடைத்தவன்.அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படும் அனைத்தும் அசத்தியக் கடவுள்களாகும். அவை அனைத்தும் மரணத்திற்கும் அழிவிற்கும் உட்படக்கூடியவையே!
இந்த அடிப்படையில் கடவுள் என்பவன் மனிதனாகவோ அல்லது சிலையாகவோ அல்லது மரமாகவோ அல்லது மிருகமாகவோ ,இருக்க முடியாது!
ஆகவே ஒரு பகுத்தறிவுள்ளவன் எல்லாப் பண்புகளாளும் நிறைவான, எவ்விதக் குறைகளுமற்ற ஒருவனை வணங்குவதே அவனுக்குப் தகுதியான விடயமாகும். ஆகவே மனிதன்; குறைகளுடைய, அவனைவிட தகுதியில் குறைந்த ஒன்றை எப்படி வணங்கிட முடியும?
இறைவன் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாக இருந்து குழந்தைகளைப் போல் பிறக்க முடியாது!
படைப்பைப் படைத்தவன் இறைவன், படைப்பு அவனது பிடியிலும் ஒடுக்குதலிலும் உள்ளது. மனிதர்கள் அவனுக்குத் தீங்கு செய்ய முடியாது, அவனைச் சிலுவையில் அறையவோ, சித்திரவதை செய்யவோ, அவமானப்படுத்தவோ முடியாது!
இறைவன் இறக்க முடியாது!
இறைவன் மறவாதவன், உறங்காதவன், உணவு உண்ணாதவன்,அவன் பெரியவன், மனைவியோ மகனோ இருக்க முடியாது. படைப்பாளிக்கு மகத்துவத்தின் பண்புகள் உள்ளன, தேவை அல்லது குறை ஆகியவை அவனில் இருக்க முடியாது நபிமார்களுக்குக் கூறப்படும், படைப்பாளனின் மகத்துவத்திற்கு முரணான எதையும் உள்ளடக்கிய அனைத்து ஆதாரங்களும் திரிபுபடுத்தப்பட்டவையாகும். அவை மற்றும் மூஸா, ஈஸா மற்றும் பிற நபிமார்கள் கொண்டுவந்த சரியான வஹீ அல்ல.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான். மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே! அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.(74) [22: 73, 74].
படைப்பாளன் நம்மை வஹ்யில்லாமல் விட்டுவிடுவது சாத்தியமா?
ஞானமும், முக்காலம் பற்றிய அறிவும் குறைவின்றி நிறைவாகப் பெற்ற அல்லாஹ் இந்த உயிரினங்களை எவ்வித இலக்கின்றி படைத்திருப்பான்? அல்லது வீணாக படைத்தான்? என்பதை பகுத்தறிவு கூட ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.
இவ்வளவு நுணுக்கமாகவும்; கச்சிதமாகவும் -செம்மையாகவும்- நம்மைப் படைத்து, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் நமக்குக் வசப்படுத்தித் தந்தோனாகிய அல்லாஹ் -இறைவன்- எந்த நோக்கமும் இல்லாமல் நம்மைப் படைத்துள்ளான்! அல்லது நம்மை ஆட்கொள்ளும் மிக முக்கியமான கேள்விகளான ஏன் நாம் இங்கே வந்தோம்? இறந்த பிறகு எமது நிலை என்ன? நமது படைப்பின் நோக்கம் யாது? போன்ற வினாக்களுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டுவிட்டான் என்பதை எமது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா?
மாறாக அல்லாஹ் இப்பிரபஞ்சத்தின் எமது இருப்புக்கான இலக்கை எமக்கு அறிமுகப்படுத்திதருவதற்காகவும், அவன் எம்மிடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றான் என்பதைத் தெரியப்படுத்தவுமே இறைத்தூதர்களை அனுப்பினான்.
வணங்கி வழிபடுபவதற்கும்,வணக்கங்களை செலுத்துவதற்கும் தகுதியான ஒருவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை எமக்கு அறியத்தரவும் அவனை எப்படி வணங்க வேண்டும் என்ற வழிமுறைகளை கற்றுத்தரவுமே அல்லாஹ் அவனது தூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தான். அவர்கள் எமக்கு அவனின் கட்டளைகளையும்,(தவிர்ந்து நடக்க வேண்டி ) தடுக்கப்பட்ட விடயங்களையும் எமக்கு எத்திவைத்தார்கள்.மேலும் அவர்கள் சிறந்த பண்பாடுகளையும் உயர் பெறுமானங்களையும் எமக்கு போதித்தார்கள். அவற்றை நாம் எமது வாழ்வில் பின்பற்றி ஒழுகினால் பாக்கியங்களும் அருள்வளமும் நிறைந்ததாக எமது வாழ்வு ஜொலித்திடும்.
அல்லாஹ்,(நூஹ், இப்ராஹீம், மூஸா,ஈஸா )போன்ற அதிகமான தூதர்களை மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கில் அனுப்பி வைத்தான்.அவர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர்கள் என்பதை நிரூபிக்கவும் அத்தாட்சிகள், மற்றும் அற்புதங்களை வழங்கி அவர்களுக்கு உதவிசெய்தான்.
தூதர்களில் கடைசியாக வந்தவர் முஹம்மது - (ஸல்) - மேலும் இறைவன் அவருக்கு புனித குர்ஆனை அல்லாஹ் இறக்கியுள்ளான் .
இறைவனால் அனுப்பப்பட்ட அத்தூதர்கள் இந்த வாழ்க்கை தற்காலிகமானது; இது ஒரு சோதனை என்பதையும், உண்மையான, நிலையான வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்பதையும் மிகத்தெளிவாக எமக்கு அறிவித்துள்ளார்கள்.
மேலும் இறைத்தூதர்கள் அனைவரையும் விசுவாசித்து, இணையில்லாத அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட்ட முஃமின்களுக்கு- இறைவிசுவாசிகளுக்கு- சுவர்க்கம் உண்டு எனவும் அல்லாஹ்வுடன் பிறகடவுள்களை வணங்கியவர்கள் அல்லது அல்லாஹ்வை இறைவனாக ஏற்பதை புறக்கணித்தோர் அல்லது அல்லாஹ்வின் தூதர்களில் எவரையாவது ஏற்காதோர் ஆகிய அனைவருக்கும் அல்லாஹ் நரகத்தை சித்தப்படுத்தியுள்ளான் என்பதையும் அத்தூதர்கள் எமக்கு போதித்துள்ளார்கள்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்.
ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.(35) (எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். (36) [7 : 35,36].
மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.) [23: 115].
புனித குர்ஆன்
புனித அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையும், அவனின் வேத வெளிப்பாடுமாகும். அதனை தனது இறுதித்தூதரான முஹம்மதிற்கு இறக்கியருளினான். இது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தின்- நபித்துவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்தும் மிகப் பெரும் அற்புதமாகும். அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ள சட்டதிட்டங்கள் யாவும் யதார்த்தமானதாகவும், அது கூறும் வரலாற்றுச் சம்பவங்கள் மிகவும் நம்பகமானதாகவும்; காணப்படுகிறது. இம்மாபெரும் இறைமறையை பொய்ப்பித்தோரிடம் அல்லாஹ் அதிலுள்ள ஒரு அத்தியாயத்தைப் போன்ற ஒன்றை கொண்டுவருமாறு சவால்விடுத்தான். அதனுடைய அழகான பாணியினாலும், வார்த்தைகளின் திறமையாலும் அவர்களால் அவ்வாறு கொண்டுவர இயலாமல்ஆகிவிட்டது. மேலும் இந்நூலானது-அல்குர்ஆன் -மனித ஆக்கம் அல்ல இறை ஆக்கம் என்பதை நிரூபிக்கக்கூடிய அறிவியல் மற்றும் பகுத்தறிவுரீதியான அதிகமான ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
பல தூதர்கள் அனுப்பப்பட்டது ஏன்;?
அல்லாஹ் தனது தூதர்களை எல்லா சமூகங்களுக்கும் தேசங்களுக்கும் அனுப்பி வைத்தான். தனது ஏவல்களையும், விலக்கல்களையும்அந்த சமுதாயத்தவருக்கு எத்திவைத்து தன்னை மாத்திரமே இறைவனாக ஏற்று வணங்க வேண்டும் என்பதின் பால் அழைப்புவிடுக்கவும் அவர்களை அனுப்பி வைத்தான். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்வை மாத்திரம் வழிபடுவதே அவர்கள் அனைவரது பிரச்சாரத்தின் குறிக்கோளாக இருந்தது. ஒரு சமுதாயம் தனது தூதர் கொண்டுவந்த ஏகத்துவம் தொடர்பான கட்டளைகளை கைவிட்டு அல்லது அவற்றை அலங்கோலப்படுத்தும் போதெல்லாம், அவர்களை சீர்படுத்தி அம்மக்களை திரும்பவும் சீரான வழியில் செலுத்தவும் அல்லாஹ்வை மாத்திரம் கடவுளாக ஏற்று அவனுக்கு கீழ்படிந்து நடக்கவும் வழிகாட்ட இன்னுமொரு தூதரை அல்லாஹ் நியமிக்கிறான்.இவ்வாறு அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கு தூதர்களை அனுப்பும் நிலையை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களை இறுதித்தூதராக அனுப்பி முடிவுக்குக் கொண்டுவந்தான். நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமைவரையில் தோன்றும் மனித சமூகத்திற்கான நிரந்தரமானதும் பரிபூரணமானதுமான மார்க்கத்தை கொண்டுவந்துள்ளார்கள். இம்மார்க்கம் முழுமைத்துவம் பெற்றதாகவும் இதற்கு முன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட இறைசட்டங்களை மாற்றக்கூடியதாகவும் உள்ளது. அதுமாத்திரமின்றி மறுமை வரையில்- இவ்வுலகம் அழிவுரும் வரையில் இம்மார்க்கம் நிலைத்திருக்கும் என்பதையும் அல்லாஹ் உத்தரவாதப்படுத்தியுள்ளான்.
இதனால் அல்லாஹ் கட்டளையிட்டதிற்கிணங்க முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் -அனைத்து தீர்க்கதரிசிகளையும்,அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட முன்னைய வேதங்களையும் ஈமான் கொள்கிறோம். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான். (மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். எவறுக்கிடையிலும் நாம் வேறுபாடுகாட்டமாட்டோம். எங்கள் இரட்சகனே , ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள். [2: 285].
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரையும் விசுவாசிக்காத -ஈமான் கொள்ளாத - வரையில் ஒருவர் இறைவிசுவாசியாக –முஃமினான ஆகிவிட மாட்டார்.
இறைத்தூதர்களை அனுப்பிவைத்தவன் அல்லாஹ்வே. எனவே யார் அவர்களில் ஒருவரை நிராகரிக்கிறாரோ, அவர் அவர்கள் அனைவரையும் நிராகரித்ததற்கு சமமானவராக மாறிவிடுகிறார். அல்லாஹ்வின் இறைவெளிப்பாடான வஹியை நிராகரிப்பது மிகப்பெரும் பாவமாகும்; இப்பாவத்திற்கு ஈடாக எதுவும் கிடையாது. அத்துடன் ஒருவர் சுவர்க்கம் செல்ல அனைத்து நபிமார்களையும் விசுவாசிப்பது - ஈமான் கொள்வது மிக முக்கிய விடயமாகும்.
இன்றைய காலத்தில் வாழும் ஒவ்வொருவரும் அனைத்து இறைத் தூதர்களையும் நம்பிக்கை கொள்வது கடமையாகும். இது தூதர்களில்-இறுதியான; முத்திரை நபி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பி பின்பற்றுவதன் மூலமே சாத்தியமாகும்
அல்லாஹ் தனது பொதுமறையான அல்குர்ஆனில், யார் அவனின் தூதர்களில் ஒருவரை நிராகரிக்கிறானோ அவன் அல்லாஹ்வை நிராகரித்து அவனின் வஹியை –வேதவெளிப்பாட்டை - பொய்பித்தவர் எனக் குறிப்பிடுகிறான்.
பின்வரும் வசனத்தைப் படியுங்கள்: நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும, அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ, அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பவர்கள். நாம் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். [4: 150,151].
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்பது ஏகத்துவத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும் வணக்கத்தின் மூலம் அடிபணிவதும், அவனின் ஷரிஆவை –சட்டதிட்டங்களை முழுத் திருப்தியுடன் ஏற்று நடப்பதாகும்
அல்லாஹ் தூதர்களை இணையே இல்லாத அவனை மாத்திரம் வணங்குவதின் பால் அழைப்பு விடுத்தல் என்ற ஒரே தூதுச்செய்தியுடன் அனுப்பி வைத்தான்
இஸ்லாம், அனைத்து நபிமார்களினதும் மார்க்கமாகும். அவர்களின் அடிப்படை பிரச்சாரம் -அழைப்பு- அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்ற ஒரே ஒலி நாதமாக இருந்தது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டதிட்டங்கள் வித்தியாசமானதாகவும் இருந்தன. இந்த வகையில் நபிமார்கள் அனைவரும் கொண்டுவந்த உண்மையான –சரியான மார்க்கத்தை பின்பற்றி ஒழுகும் ஒரே சமூகமாக இன்று முஸ்லிம்கள் மாத்திரமே உள்ளனர். இன்றைய காலத்தில் இஸ்லாம் ஒன்றே உண்மையான தூதாகும். மூஸாவையும் ஈஸாவையும் அனுப்பிய இறைவன்தான் இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் தூதராக அனுப்பினான். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் யாவும் அதற்கு முன்னுள்ள சட்டங்களை மாற்றியமைத்துவிட்டது.
மக்கள் இன்று ஏற்று வழிபடும் -இஸ்லாம் தவிர்ந்த- ஒவ்வொரு மதமும் ஒன்றில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. அல்லது இறைவானால் இறக்கியருளப்பட்ட மார்க்கமாக இருந்து மனிதக்கரங்களின் திருவிடையால்களினால் மூடநம்பிக்கைள், பரம்பரை கட்டுகதைகள் மனித சிந்தனைகள் ஆகியவற்றின் கலவையாக காணப்படுகிறது. முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பொறுத்தவரை, இது மாறாத ஒரு தெளிவான நம்பிக்கையாகும். மேலும் புனித குர்ஆனைப் பார்த்தால், இது அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் ஒரே வேதமாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :
(நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்.''(84) இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார். (85). [3: 84,85].
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி முஸ்லிம்கள் என்ன நம்புகிறார்கள்?
முஸ்லிம்கள் ஈஸா நபியை நம்ப வேண்டும், அவரை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், இணையே இல்லாத அவனை மாத்திரம் வணங்குவதின் பால் அழைப்பு விடுத்தல் என்ற அவருடைய செய்தியை நம்பவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஈஸா நபி மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தீர்க்கதரிசிகள் என்றும், அவர்கள் கடவுளின் பாதை மற்றும் சொர்க்கத்தின் பாதையில் மக்களை வழிநடத்த அனுப்பப்பட்டவர்கள் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் மகத்தானவர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் என்று நம்புகிறோம். அவர் அற்புதமாகப் பிறந்தார் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இறைவன் ஆதம் (அலை) அவர்களை தந்தையும் தாயும் இல்லாமல் படைத்ததை போல, ஈஸா அலைஹிஸ்ஸலாம் தந்தை இல்லாமல் படைத்தான் என்று குர்ஆனில் கூறியுள்ளான். எனவே இறைவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவன்.
ஈஸா (அலை) கடவுள் அல்ல, இறைவனின் மகனும் அல்ல, அவர் சிலுவையில் அறையப்படவில்லை; மாறாக உயிருடன் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். யுகமுடிவு காலத்தில் நியாயமான தீர்ப்பைக் கொண்டு தீர்ப்பளிப்பவராக இறக்கிவைக்க இறைவன் அவரை உயர்த்திவிட்டான். அவர் முஸ்லிம்களுடன் இருப்பார், ஏனென்றால் முஸ்லிம்கள் ஈஸா (அலை)மும் அனைத்து நபிமார்களும் கொண்டு வந்த ஏகத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
ஈஸா (அலை) அவர்களின் தூது செய்தியை கிறிஸ்தவர்கள் திரித்து சொன்னார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். மேலும், இன்ஜீலில் உள்ள வார்த்தைகளை திரித்து மாற்றி, ஈஸா (அலை) சொல்லாத மார்க்கப் போதனையை சேர்த்த தவறான வழிகேடர்கள் இருக்கிறார்கள். இன்ஜீலின் பல பதிப்புகள் மற்றும் அவற்றிற்கிடையில் உள்ள பல்வேறுபட்ட முரண்பாடுகள் இதை உண்மைப்படுத்துகின்றது.
ஈஸா (அலை) தம்முடைய இறைவனை வணங்கினார் என்றும், தன்னை வணங்கும்படி யாரையும் கேட்கவில்லை என்றும், மாறாக, தம்மை படைத்தவனை வணங்கும்படி தன் மக்களுக்குக் கட்டளையிட்டார் என்றும், ஆனால் ஷைத்தானே கிறிஸ்தவர்களை ஈஸாவை (அலை) வணங்கும்படி செய்தான் என்றும் இறைவன் கூறுகிறான். தான் அல்லாதவனை வணங்கிய யாரையும் மன்னிக்க மாட்டான் என்று குர்ஆனில் இறைவன் நமக்குக் கூறியுள்ளான். மேலும் உயிர்த்தெழுதலின் நாளில், ஈஸா(அலை) தம்மை வணங்குபவர்களை மறுதலித்து அவர்களிடம் : “படைப்பாளரை வணங்குமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டேன், என்னை வணங்குமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை.” என்று கூறுவார். நான் இதற்கு அல்லாஹ்வின் பின்வரும் வசனங்கள் அதற்கு ஆதாரமாகும்:
வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.) [4 : 171].
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன். (5 :116)
எனவே யார் மறுமையில் விமோசனம் பெற விரும்புகிறாரொ அவர் இஸ்லாத்தினுள் நுழைந்து நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது அவிசியமாகும்.
அல்லாஹ்வை மாத்திரம் ரப்பாக, எஜமானாக ஏற்று விசுவாசித்து, அவனை வணங்கி வழிபடுவதில் அவனுக்கு நிகராக எவரையும் இணையாக்காது இருந்த முஸ்லிம்கள் தவிர்ந்த, எவருக்கும் மறுமையில் விமோசனம் கிடைக்காது என்பது எல்லா நபிமார்களும்,, இறைத்தூதர்களும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்ட உண்மைகளுள் ஒன்றாகும். இந்த அடிப்படையில் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தோர் அவர்களை நம்பி அவர்களின் போதனைகளை பின்பற்றி நடந்திருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் சிறந்த இறைவிசுவாசிகளுமாவர். என்றாலும் நபி மூஸா (அலை) அவர்களின் மரணத்தின் பின் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்களை மூஸா நபியை பின்பற்றியோர் ஏற்று பின்பற்ற வேண்டும். அவ்வாறு ஈஸா நபியை யார் விசுவாசித்தார்களோ -நம்பினார்களோ-அவர்களே சிறந்த முஸ்லிம்களாவர். அவர்களில் யார் ஈஸாவை நபியாக ஏற்றுக்கொள்ளாது தான் மூஸாவின் மார்க்கத்தில்தான் தொடர்ந்தும் இருப்பேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபியை ஈமான் கொள்ளாது மறுத்ததினால், அவர் ஓரு முஃமினாக கருதப்படமாட்டார். அதன் பின் அல்லாஹ் தூதர்களில் இறுதியானவராக முஹம்மதை அனுப்பி வைத்தான். எனவே உலக மாந்தர் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு அவரின் போதனைகளை பின்பற்றி ஓழுகுவது கடமையாகும். காரணம், இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளனான அல்லாஹ் மூஸாவையும்,ஈஸாவையும் தூதராக அனுப்பினான். அவனே தூதர்களின் இறுதியானவராக முஹம்மதையும் தூதராக அனுப்பி வைத்தான். எனவே யார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்ளாது, தன் நபிமார்களான மூஸா அல்லது ஈஸா போன்றோரது மார்க்கத்திலேதான் இருப்பேன் என்று கூறினால் அவர் ஒரு இறைவிசுவாசியாக –முஸ்லிமாக கருதப்படமாட்டார்.
அதேபோன்று ஒருவர் தான் முஸ்லிம்களை கௌரவப்படுத்துவதாக –மதிப்பதாக கூறுவது, அல்லது ஏழைகளுக்கு தர்மம் மற்றும் உதவிகளைப் புரிவது ஒரு போதும் மறுமையில் விமோசனம் கிடைக்க வழியாக அமையாது. இந்த நற்காரியங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள அவர் அல்லாஹ்வையும் அவனின் வேதங்களையும் தூதர்களையும் இறுதி நாளையும் நம்பி ஏற்றுக்கொண்டவராக இருப்பது அவசியமாகும். இணைவைத்தல், அல்லாஹ்வை உண்மையான இறைவானக ஏற்றுக்கொள்ளாமை, அல்லாஹ் இறக்கியருளிய வேத வெளிப்பாடுகளை மறுத்தல், அவனின் இறுதித்தூதரான முஹம்மதை புறக்கணித்தல் போன்ற செயல்களை விடவும் மிகப்பெரும் குற்றச் செயல் ஒன்று கிடையாது!ஆகவே, யூதர்கள்,கிறிஸ்தவர்கள் எவரும் அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதை செவிமடுத்து, அவர்களை தூதராக நம்புவதையும் , இஸ்லாத்தினுள் நுழைவதையும் புறக்கணித்தால் அவர்கள் நிரந்தர நரகத்தில் இருப்பார்கள். இந்த தீர்ப்பானது எந்த ஒரு மனிதனின் தீர்ப்பு அல்ல. மாறாக அல்லாஹ்வின் தீர்ப்பாகும். இது குறித்து அல்லாஹ் தனது உலகப் பொதுமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
"வேதத்தையுடையவர்களிலும், இணைவைப்பாளர்களிலும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள். இவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள்". [98: 6].
ஆகவே இறைவனிடமிருந்து மனித குலத்திற்கான கடைசி இறைச் செய்தி இறக்கியருளப்பட்டுவிட்டதினால், இஸ்லாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைச் செய்தியைக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் அதை நம்பி, அதன் சட்டதிட்டங்களை பின்பற்றி, அவர்களின் ஏவல் -கட்டளை- மற்றும் விலக்கலில் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யார் இந்த கடைசி இறை செய்தியை பற்றி கேள்விப்பட்டு அதை நிராகரிக்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ்; எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையில் அவனுக்கு நிச்சயம் தண்டனை வழங்குவான். இதற்கு அல்லாஹ்வின் பின்வரும் சில கூற்றுகள் ஆதாரமாக அமைந்துள்ளன :
"யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகின்றானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்" [3 : 85].
மேலும் அல்லாஹ் கூறினான்: (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3: 64).
நான் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு என்னிடம் அவசியம் இருக்க வேண்டிய விடயங்கள் என்ன?
இஸ்லாத்தினுள் நுழைந்து ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு பின்வரும் ஆறு அடிப்படைகளை நம்புதல் வேண்டும்.
முதலில் அல்லாஹ்வை நம்பவேண்டும். இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவும் திட்டமிடுபவனும் உரிமையாளனும் வாழ்வாதாரங்களை வழங்குபவனும் அவனே என்றும், அவனைப்போன்ற எதுவுமில்லை என்றும், அவனுக்கு மனைவியோ மக்களோ கிடையாது என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியானவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும்.
இரண்டாவது : -மலக்குமார்களை –வானவர்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று நம்ப வேண்டும். அவர்களை அல்லாஹ் ஒளியால் படைத்தான்; அவர்களுக்கு சில பணிகளை ஒப்படைத்துள்ளான்; அப்பணிகளுள் தனது தீர்கதரிசிகளுக்கு இறைவெளிப்பாட்டை –வஹியை- கொண்டு சேர்க்கும் பணியும் ஒன்றாகும்.
மூன்றாவது : தனது நபிமார்களுக்கு அல்லாஹ் இறக்கியருளிய (திரிவுபடுத்த முன்னுள்ள தவ்ராத், இன்ஜீல்) போன்ற அனைத்து வேதங்களுடன், இறுதி வேதமான அல்குர்ஆனையும் நம்ப வேண்டும்.
நான்காவது : அல்லாஹ்வின் தூதர்களான நூஹ், இப்ராஹீம் ,மூஸா, ஈஸாவுடன் இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) போன்ற அனைத்து நபிமார்களையும் நம்புதல் வேண்டும். அவர்கள் அனைவரும் மனிதர்கள்; அவர்களை இறைவெளிப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தி, அவர்கள் இறைவனின் தூதர்கள் என்ற உண்மையை காட்டக்கூடிய அத்தாட்சிகளையும், அற்புதங்களையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.
ஐந்தாவது: மறுமை நாளை நம்புதல் வேண்டும். அந்நாளில்தான் அல்லாஹ், ஆரம்பமாக இருந்தோரையும் பின்வந்தோரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ்வை நம்பிய முஃமின்களை சுவர்க்கத்தினுள்ளும் அவனை ஏற்றுக்கொள்ளாத காபிர்களை நரகினுள்ளும் நுழைவிப்பான்.
ஆறாவது : இறைவிதியை நம்ப வேண்டும். அதாவது முக்காலம்பற்றியும் அல்லாஹ் அறிந்துள்ளான் என்பதையும் அவை அனைத்தையும் அறிந்து அதனை பதிவு செய்து வைத்திருப்பதுடன் அவற்றை அவனே நாடுகிறான், அனைத்தையும் அவனே படைக்கிறான் என்பதையும் உறுதியாக நம்பவேண்டும்.
இஸ்லாம் சுபீட்சத்திற்கான வழியாகும்.
இஸ்லாம் அனைத்து நபிமார்களின் மார்க்கம். அது மட்டுமல்லாது உலக மாந்தர் அனைவருக்குமான அல்லாஹ்வின் மார்க்கமாகும். இது அரபுகளுக்கு மாத்திரமான மார்க்கம் அல்ல.
இஸ்லாம் இவ்வுலகில் யதார்த்தமான சுபீட்ஷத்திற்கும், மறுமையில் நிரந்தர இன்பத்திற்குமான மார்க்கமாகும்.
ஆன்மா மற்றும் உடலியல் தேவைகள், மனித இனத்தின் அனைத்து வகையான பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கூறும் ஒரே மார்க்கம். இஸ்லாம் ஆகும்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்.
‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான். எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ, அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். [20: 123 ,124].
இஸ்லாத்தினுள் நுழைவதினால் -இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதினால் நான் பெறும் நன்மைகள் என்ன?
இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொள்வதினதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள் சில பின்வருமாறு :
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட அடிமையாக இருப்பதன் மூலம்; அவனுக்கு இவ்வுலகில் மரியாதையும்,(கௌரவம்) வெற்றியும்; கிடைக்கிறது. இல்லா விட்டால் அவன் மனோ இச்சைக்கும், ஷைத்தானுக்கும்,ஆசைகளுக்கும் கட்டுப்பட்ட அடியானாக மாறிவிடுகிறான்.
நரகத்தின் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு, சொர்க்கத்தில் நுழைந்து, மறுமையில் இறைவனின் பொருத்தத்தையும் நித்திய சுவனத்தையும் வெல்வதே மறுமையில் மிகப்பெரிய வெற்றியாகும்.
அல்லாஹ் யாரை சொர்க்கத்தில் அனுமதிக்கிறானோ; அவர்கள் மரணம், நோய், வலி, முதுமை, சோகம் எதுவுமின்றி நித்திய பேரின்பத்தில் வாழ்வார்கள்; மேலும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள்.
சுவர்க்கத்தில் கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் சிந்தையிலும் தோன்றியிராத இன்பங்கள் காணக்கிடைக்கும்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். [16 : ٩٧].
இஸ்லாத்தை புறக்கணிப்பதினால்; -ஏற்காததினால்; - எனக்கு ஏற்படும் இழப்பு என்ன?
ஒருவர் இஸ்லாத்தை ஏற்காததினால் மிகப்பெரும் அறிவான அல்லாஹ் பற்றிய அறிவை இழந்திடுவான். அத்துடன் அல்லாஹ்வை விசுவாசிப்பதினால் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் இவ்வுலகத்தின் நிம்மதி மற்றும் பாதுகாப்பையும், மறுமையின் நித்திய பேரின்பத்தையும் இழந்துவிடுவார்.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாது இருப்பதினால், அல்லாஹ் மனித சமூகத்திற்கு இறக்கியருளியிருக்கும் அல்குர்ஆனை அறிந்து அம்மாபெரும் வேதத்தை விசுவாசம் கொள்ளும் பாக்கியத்தை இழந்து நிற்பார்.
மேலும் கண்ணியமிகு நபிமார்களை நம்பும் -பாக்கியம் கிடைக்காது. அதே போல் மறுமையில் அவர்களுடன் சுவர்க்கப் பூஞ்சோலையில் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்பதுடன் , ஷைத்தான்களுடனும்,குற்றவாளிகளுடனும், கொடுங்கோளர்களுடனும் இருப்பார். அவரின் தங்குமிடமும், சுற்றுப்புறமும் மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்.
எவர்கள் மறுமை நாளில் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டனரோ அவர்களே நஷ்டவாளர்களாவர். அறிந்து கொள்ளுங்கள்: இதுவே தெளிவான நஷ்டமாகும். என நபியே நீர் கூறுவீராக (15) (மறுமை நாளில்) ‘‘இவர்களின் (தலைக்கு) மேல் இருந்தும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின்) கீழ் இருந்தும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்'' இதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான். ‘‘என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' [39: 15 ,16].
ஆகவே உனது முடிவை தாமதப்படுத்திடாதே!
இவ்வுலகம் நிரந்தரமானதன்று....
இங்கு காணும் அழகுகள் அனைத்தும் மறைந்து விடும் , ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும்.
இவ்வுலகில் செய்த விடயங்கள் பற்றி விசாரணை செய்யப்படவிருக்கும் நாளான மறுமை நாள் வந்துவிடும். அது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்; (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான். [18 : 49].
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதனின் இறுதி நிலை நிரந்தர நரகமே என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
எனவே இங்கு இழப்பென்பது சாதாரணமானது அல்ல. மாறாக, மிகப்பெரியது. இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார். [3 : 85].
ஆகவே இஸ்லாம் தவிர்ந்த எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
அல்லாஹ்வே எம்மைப் படைத்தான். அவனிடமே மீண்டும் திரும்பி செல்ல இருக்கிறோம். இவ்வுலக வாழ்வு எமக்கான ஒரு பரீட்சைக் களம் மாத்திரமே!
எனவே ஒரு மனிதனைப்பொருத்தவரை அவன் இந்த உலகவாழ்வு கனவு போன்று குறுகியது என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும் ....அவன் எப்போது மரணிப்பான் என்பது அவனுக்குத் தெரியாது!
ஒரு மனிதனிடம் இறைவன், சத்தியத்தை ஏன் பின்பற்றவில்லை? நபிமார்களின் இறுதியான முஹம்மதை பின்பற்றாததிற்கு காரணம் என்ன? என்று மறுமையில் கேட்டால் அவன் கூறப்போகும் பதில் என்ன?!
இஸ்லாத்தை ஏற்காது இருப்பதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்து, அவ்வாறு ஏற்காதோரின் நிலை அழிவும் நாசமும் நிரந்தர நரகமுமே என்று கூறிய உமது எஜமானான அல்லாஹ்வுக்கு மறுமையில் என்ன பதில் கூறப்போகிறாய்!
மேலும் அல்லாஹ் கூறினான்: (தவிர) எவர்கள் (என் நேர்வழியை) நிராகரித்து என் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்! அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்.'' [2: 39].
சத்தியத்தை புறந்தள்ளிவிட்டு தனது பெற்றோர்களையும், மூதாதையர்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றியோருக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது.
மனிதர்களில் அதிகமானோர் தான் வாழும் சூழலில் உள்ளோருக்கு பயப்படுவதினால் இஸ்லாத்தை ஏற்காது புறக்கணிப்பதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
தங்களது மார்க்கத்தை தம் மூதாதையர்களிடமிருந்து அநந்தரமாக பெற்றதினாலும் அல்லது அவர்கள் வாழும் சூழல் மற்றும் சமூகத்திடமிருந்து அதனைப் பெற்று அதிலேயே அவர்கள் பழக்கப்பட்டதின் காரணமாகவும் அதிமானோர் தங்களது நம்பிக்கையை மாற்றிக்கொள்வதை விரும்பாததினால் அவர்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றார்கள்.அவர்களில் பெரும்பாலானோரிடம், தங்கள் முன்னோரிடமிருந்து பெற்ற நம்பிக்கைகளில் பிடிவாதமும் அசத்தியத்தில் அவர்களுக்கு உள்ள முரட்டுத்தனமுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக உள்ளது.
இவர்கள் அனைவருக்கும் எவ்வித மன்னிப்பும் கிடையாது. அவர்கள் எவ்வித ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் முன்னிலையில் முடங்கிக்கிடப்பார்கள்.
ஒரு நாத்திகனைப் பொருத்தவரை தான் ஒரு நாத்திகக் குடும்பத்தில் பிறந்ததினால் நான் நாத்திக கொள்கையில்தான் இருப்பேன் என்று கூறினால் அவனுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. மாறாக அவன் அல்லாஹ்வால் அவனுக்கு வழங்கப்பட்ட புத்தியைப் பயன்படுத்தி வானங்கள் மற்றும் பூமியின் பிரமாண்டம் பற்றி சிந்தித்தல் வேண்டும். அத்துடன் இந்த பிரபஞ்சத்தை படைத்த சிருஷ்டிகர்த்தா ஒருவன் உள்ளான் என்பதை புரிந்து கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட புத்தியால் -பகுத்தறிவினால் சிந்தித்தல் வேண்டும். அதேபோல் கற்களையும் சிலைகளையும் வணங்குபவன்; தனது மூதாதையர்களது அடிச்சுவட்டைப் கண்மூடிப்பின்பற்றுவதினால் அவனுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. மாறாக அவன் சத்தியத்தை தேட வேண்டும். எனது கோரிக்கைகளை, வார்த்தைகளை கேட்க முடியாத, என்னைப் பார்க்க முடியாத, எனக்கு எந்த நன்மையும் செய்யாத ஒரு உயிரற்ற பொருளை நான் எப்படி வணங்க முடியும்? என அவன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
மனித இயல்பிற்கும், பகுத்தறிவிற்கும் முரணாக சில விடயங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவரைப் பொறுத்தவரை அவர், பிறரின் பாவங்களுக்காக பாவம் செய்யாத தன் மகனை கடவுள் -கர்த்தர்- எப்படிக் கொல்ல முடியும்? இது அநியாயம் அல்லவா! கடவுளின் மகனை மனிதர்கள் எப்படி சிலுவையில் அறைந்து கொல்ல முடியும்?! கடவுளால் மனிதகுலத்தின் பாவங்களை அவனின் மகனை கொலைசெய்யாது மன்னிக்க முடியாதா? கர்த்தர் தன் மகனைக் காக்க வல்லவர் அல்லவா? என்பது போன்ற வினாக்களை தன்னைத் தானே வினவிக்கொள்ள வேண்டும்!
ஆகவே அறிவார்ந்த ஒருவரைப்பொறுத்தவரை அவர் தனது பெற்றோர்,மூதாதையர்களின் அசத்திய வழியைப் பின்பற்றாமல், சத்தியத்தைப் பின்பற்ற முன் வர வேண்டும்
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான். “அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)! [5 :104].
இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்பும் ஒருவர், தனது உறவினர்கள் தனக்கு தீங்கு விளைவிப்பர் என்று பயப்படுபவராக இருப்பின் அவர் என்ன செய்ய வேண்டும்?
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்க விரும்பும் ஒருவர் தன்னைச் சூழ வாழ்வோருக்கு பயப்பட்டால், இஸ்லாத்தைத் தழுவி, தன் இஸ்லாத்தை வெளிக்கொணரக்கூடிய ஒரு சிறந்த வழியை இறைவன் அவருக்கு வழங்கும் வரை, இஸ்லாத்தை ஏற்றதை மறைத்து வாழ முடியும்.
ஆக ஒரு மனிதனைப்பொறுத்தவரை அவர் உடனடியாக இஸ்லாத்தை தழுவிக்கொள்வது கடமையாகும், ஆனால் அவர் இஸ்லாத்திற்கு மாறியதை –தழுவியதை- சுற்றியுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதால் தீங்கு ஏற்படும் என்றிருந்தால்; அதை விளம்பரப்படுத்தவோ, பிறரிடம் தெரிவிப்பதோ கடமை இல்லை.
ஒருவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுவிட்டால் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு அவர் சகோதரராக மாறிவிடுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அவர் தனது நாட்டில் உள்ள பள்ளிவாயில் அல்லது இஸ்லாமிய மையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் கேட்கலாம். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை பெற்றுத்தரும்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்.
'யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)குரிய ஏதேனும் வழியை ஏற்படுத்துவான்.''அவர் நினைத்துப்பார்க்காத விதத்தில் வாழ்வாதாரங்களை வழங்குவான்.' [65 : 2، 3]
அன்புள்ள வாசகரே!
உம் தாயின் வயிற்றில் கருவில் இருக்கும்போதே உமக்கு உணவு அளித்து, இப்போது நீர் சுவாசிக்கும் காற்றை அளித்து, தனது எல்லா அருட்கொடைகளையும் உமக்கு அளித்த படைப்பாளனான அல்லாஹ்வை திருப்திபடுத்துவது, மனிதர்களின் திருப்தியைப் பெறுவதை விட உமக்கு முக்கியமானதல்லவா?
அழிந்து போகும் இவ்வுலக இன்பங்கள்; அனைத்தையும் தியாகம் செய்வதில்தான் இவ்வுலகினதும் மறுமையின் வெற்றி தங்கியுள்ளதல்லவா? அதுவே உண்மையாகும்.
உங்கள் தவறான பாதையை சரிசெய்வதற்கும் சரியானதைச் செய்வதற்கும் உங்கள் கடந்த காலம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
இன்று நீ உண்மையான விசுவாசியாக மாறிவிடு! சத்தியத்தை பின்பற்றுவதை விட்டும் உன்னைத் தடுத்திட சைத்தானுக்கு அனுமதிக்க வேண்டாம்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்.(174) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்.(175) [4: 174 ,175].
உமது வாழ்வில் மிகவும் உன்னதமான ஒரு முடிவை எடுக்க நீ தயாராக உள்ளாயா?
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் ஏற்கத்தக்கதாக இருந்து, உனது உள்ளத்தால்; அவை உண்மை என்பதை அறிந்திருந்தால்; நீர் முஸ்லிமாக மாறுவதற்கான முதல் படியை எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் சிறந்த முடிவை எடுப்பதற்கும், முஸ்லிமாக எப்படி மாறுவது என்பதற்கு வழிகாட்டுவதற்கும் நான் உங்களுக்கு உதவ வேண்டுமா?
அதாவது இஸ்லாத்தினுள் நுழைய உன் பாவங்கள் தடையாக ஆக்கிவிடதே. அல்லாஹ், ஒருவர் இஸ்லாத்தை ஏற்று தனது படைப்பாளனிடம் மீண்டு விட்டால் அவனின் பாவங்களை மன்னித்துவிடுவதாக அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான். இஸ்லாத்தை தழுவிய பின்னரும் மனிதன் என்ற வகையில் நீ இயல்பாக சில பாவங்களை செய்து விடமுடியும், நாமெல்லாம் பாவங்களே செய்யாத மலக்குகள் அல்லர் என்பதனால் அப்பாவங்களைக்கூட அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். எனவே, இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதும், வருந்துவதும் எம்மிடம் வேண்டப்பட்ட விடயமாகும். நாம் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள விரைந்து சென்று, இஸ்லாத்தில் நுழைந்து,ஷஹாதா வார்த்தைகளை மொழிவதை எம்மில் அல்லாஹ் கண்டால், ஏனைய பாவகாரியங்களை செய்வதை தவிர்ந்து நடந்து கொள்ள நமக்கு உதவி செய்வான். ஆகவே யார் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு சத்தியத்தைப் பின்பற்றுகிறாரோ அவருக்கு அதிகமான நன்மையான செயல்களை செய்வதற்கு வாய்ப்பை அளிப்பான். எனவே இப்போதே இஸ்லாத்தில் நுழைவற்கு தயங்கவேண்டாம்.
இதற்கான ஆதாரங்களில் ஒன்றாக பின்வரும் இறைவசனம் அமைந்துள்ளது நிராகரித்தோர் தமது விரோதப்போக்கை விட்டும் விலகிக்கொண்டால் முன்சென்றவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்பட்டுவிடும்.' [8 : 38].
நான் முஸ்லிமாவதற்கு என்ன செய்ய வேண்டும்?
இஸ்லாத்தில் நுழைவது எளிதான காரியம். சடங்குகளோ, சம்பிரதாயங்களோ உத்தியோகபூர்வ விவகாரங்களோ, எவரினதும் பிரசன்னமோ தேவைப்படாது. ஒருவர் இரண்டு சாட்சியங்களையும், அவற்றின் அர்த்தத்தை அறிந்து, அவற்றில் நம்பிக்கை வைத்து 'அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹ} வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் எவரும் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூற வேண்டும். நீங்கள் அதை அரபியில் சொல்ல முடிந்தால் சிறப்பானது. அவ்வாறு அரபியில் கூறுவது உங்களுக்கு கடினமாக இருந்தால், உங்கள் மொழியில் கூறினால் போதுமாகும். அதன் மூலம் நீங்கள் ஒரு முஸ்லிமாக மாறிவிடுவீர்கள், பின்னர் நீங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட உங்கள் மார்க்கம் இஸ்லாத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இம்மார்க்கம், இந்த உலகில் உங்கள் மகிழ்ச்சிக்கும், மறுமையில் உங்கள் வெற்றிக்கும் ஆதாரமாக இருக்கும்.
மேலதிகத் தகவளைப்பெற byenah.com வெப்தளத்தை பார்வையிடவும்
திருக்குர்ஆனின் அர்த்தங்களின் மொழிபெயர்ப்பைப் பெறுவதற்கான இணைப்பு...:
இஸ்லாத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதை அறிய, நீங்கள் பின்வரும் வலைத்தளத்தைப் பார்வையிட பரிந்துரைக்கிறோம்: