مطوية الحج

مطوية الحج

சவூதி அரேபியா

Language: lang_ta
Prepared by: முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்)
Version: 1.0
Translations 15
Bengali Bosnian German English +11
Attachments 7
PDF
Audio
Video
+3

சவூதி அரேபியா

இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்புப் பணி மற்றும் வழிகாட்டல் அமைச்சகம்

ஹஜ்ஜின் கிரியைகள்

கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் :

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்)

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக

முதல் நாள் செய்யவேண்டியவை (எட்டாவது நாள்) :

١- (மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தங்கியிருப்பவர்) தமது இடத்திலிருந்தே ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து, குளித்து, வாசனைத் திரவியங்களைப் பூசி, இஹ்ராம் ஆடையை அணிந்து, பின்வருமாறு கூற வேண்டும்:

(லப்பைக் ஹஜ்ஜன், லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக) பொருள் : ஹஜ்ஜுக்காக இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! யா அல்லாஹ்! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு நிகரானவர் எவருமில்லை. மீகாத் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்து, அன்றைய தினமே மக்காவை அடைபவர், இஹ்ராம் கட்டாமல் அந்த எல்லையைக் கடக்கக் கூடாது. 2- மினாவிற்குச் சென்று, ஒன்பதாம் நாள் சூரியன் உதயமாகும் வரை அங்கு தங்க வேண்டும். அங்கு எட்டாம் நாளின் ளுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் ஒன்பதாம் நாளின் ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை அதனதன் நேரத்திலும், நான்கு ரக்அத் தொழுகைகளைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகவும் தொழ வேண்டும்.

இரண்டாம் நாள் செய்யும் கிரியைகள் : (ஒன்பதாவது நாள்)

1- (ஒன்பதாம் நாள்) சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். அங்கு சென்றடைந்ததும், வாய்ப்பிருந்தால் சூரியன் மேற்குத்திசையில் சாய்வதற்கு முன் நமிராவில் தங்க வேண்டும். ளுஹர், அஸர் தொழுகைகளை சுருக்கியும், (ளுஹ்ர் வக்த்தில்) முற்படுத்திச் சேர்த்தும் தொழ வேண்டும்.

2- தொழுகைக்குப் பிறகு, கிப்லாவை முன்னோக்கி இரு கைகளையும் உயர்த்தி, சூரியன் மறையும் வரை திக்ர் செய்து பிரார்த்திக்க வேண்டும்.

٣- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவிற்குச் சென்று, அங்கு மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்துகளாகவும், இஷா தொழுகையை இரண்டு ரக்அத்துகளாகவும் தொழுது, ஃபஜ்ர் உதயமாகும் வரை அங்கு தங்க வேண்டும்.

4- ஃபஜ்ர் நேரம் வந்தபின் ஃபஜ்ர் தொழுகையை தொழுது, பிறகு சூரிய வெளிச்சம் பரவும் வரை திக்ரிலும், துஆவிலும் ஈடுபட வேண்டும்.

5- சூரியன் உதயத்திற்கு முன் மினாவிற்கு செல்ல வேண்டும்.

மூன்றாம் நாளின் கிரியைகள் (பெருநாள் தினம்)

1. மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாவிற்குச் சென்று, ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கற்களை எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும்.

2. அவரிடம் பிராணி இருந்தால், அதை அறுத்துப் பலியிட வேண்டும்.

3. தலையை மழித்தல் அல்லது குறைப்பதன் மூலம் அவர் முதல் தஹல்லுல் (இஹ்ராமில் இருந்து விடுவிப்பு) பெறுகிறார். இதன் பிறகு தனது ஆடைகளை அணிந்து, நறுமணம் பூசிக் கொள்ளலாம். உடலுறவைத் தவிர இஹ்ராமின் மற்றைய எல்லாத் தடைகளும் அவருக்கு இப்போது அனுமதிக்கப்படும்.

4. தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவராக இருந்தால் மக்காவிற்கு வந்து ஹஜ்ஜுடைய தவாஃப் அதாவது தவாஃபுல் இஃபாழா செய்யவேண்டும். தமத்துஃ அல்லாதவராக இருந்து வருகைக்கான தவாபுடன் ஸஃயை செய்யாதிருந்தால், ஹஜ்ஜுக்காக ஸஃபா மர்வாவுக்கிடையில் ஸஃயும் செய்ய வேண்டும்.

இதன் மூலம் இரண்டாம் விடுவிப்பு நிகழ்ந்து, உடலுறவு உட்பட இஹ்ராமின் அனைத்துத் தடைகளும் அனுமதிக்கப்படுகின்றன.

5. மினாவுக்குத் திரும்பி, பதினோராவது இரவை மினாவில் கழிக்க வேண்டும்.

நான்காவது நாள் கிரியைகள் : (பதினோராவது நாள்)

முதல் ஜமரா, பிறகு இரண்டாவது ஜமரா, பின்னர் ஜம்ரதுல் அகபா என மூன்று ஜமராக்களுக்கும் கல் எறிய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஏழு கற்களை ஒன்றன்பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லுக்கும் தக்பீர் கூற வேண்டும். இவற்றை சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பின்னரே எறிய வேண்டும், அதற்கு முன் எறிவது கூடாது. முதல் மற்றும் இரண்டாவது ஜம்ராக்களில் (கல்) எறிந்த பிறகு துஆவிற்காக நிற்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. துல்ஹஜ் பன்னிரண்டாவது இரவு மினாவில் தங்க வேண்டும்.

ஐந்தாவது நாளின் கிரியைகள் (பன்னிரண்டாவது நாள்)

١- நான்காம் நாளில் எறிந்ததைப் போலவே, மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிய வேண்டும்.

2- அவசரமாக வெளியேற நாடினால் சூரியன் மறைவதற்கு முன் மினாவிலிருந்து புறப்பட வேண்டும், அல்லது தாமதிக்க நாடினால் அங்கு தங்க வேண்டும்.

ஆறாம் நாள் அமல் (பதிமூன்றாம் நாள்)

இந்த நாள் முந்தைய நாள் புறப்படாமல் மினாவில் தங்கியவருக்கு மாத்திரம் உரியதாகும். அதில் செய்யப்படும் கிரியைகளாவன :

١- முன்னைய இரண்டு நாட்களில் செய்ததைப் போலவே, மூன்று ஜமராக்களுக்கும் கல் எறிய வேண்டும்.

2- அதன் பின்னர் மினாவிலிருந்து புறப்பட வேண்டும்.

கிரியைகளில் இறுதியானது, மக்காவை விட்டு பயணம் புறப்படும் போது செய்யும் தவாஃபுல் வதாஃ ஆகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.