مشروع منهاج زادك
منهاج "زادك" هو منهج تعليمي إسلامي متكامل يهدف إلى تعليم وتربية الأجيال على المبادئ الإسلامية الصحيحة، ويشمل جوانب متنوعة من العقيدة، والفقه، والتفسير، والسيرة النبوية، والأخلاق الإسلامية. عادةً ما يتضمن دروسًا ومواد تعليمية مصممة لتبسيط المفاهيم الدينية وتعميق فهم الطلاب للمبادئ الإسلامية وتطبيقها في حياتهم اليومية. يمكن أن يشمل أيضًا وسائل تعليمية متنوعة مثل الكتب، والدروس الصوتية والمرئية، والأنشطة التفاعلية.
இஸ்லாமிய அழைப்பு,வழிகாட்டல்,மற்றும் வெளிநாட்டவர் விழிப்புணர்வு மையம்-அர்ரவ்ழா
இறைவா ! எனது மார்க்கத்தில் விளக்கத்தைத் தருவீராக!
முதலாம் தரம்
வெளியீட்டுரை-பதிப்புரை
மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவியையும் ,தெளிவாகப் பேசும் திறனை வழங்குவதன் மூலம் அவனை கண்ணியப்படுத்தி அல்குர்ஆன் ஹதீஸ் மற்றும் தொழுகை மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக .
ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள் மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இறைவாழ்த்துக்குப் பின் : ஒரு நற்செயலை செய்வதற்கு முன் அது பற்றி கற்றுக்கொள்வது ஒரு அடியானின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். '(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத்தகுதியான வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்'.
ஸுறா முஹம்மத்: 19
இஸ்லாமிய அறிவு என்பது இச்சமூகத்தின் மிகப்பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும்;,இஸ்லாமிய ஆளுமையை அடையாளப்படுத்தும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
ஆகையால், இஸ்லாமிய அறிவின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையமானது மக்களை விவேகம் மற்றும் அழகிய உபதேசத்தின் மூலம் இஸ்லாத்தின் பால் அழைத்;தல், மேலும் வெளிநாட்டவர்களுக்கு அறிவூட்டல்,மற்றும் ஷரீஆ ரீதியாக அவர்களைத் தகுதிப்படுத்தல் ; போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுடன் இயங்கிவருகிறது.அந்த வகையில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களில் ஒரு அங்கமாக (எனது மார்க்கத்தில் எனக்கு விளக்கத்தை தருவாயாக) எனும்தொனிப்பொருளில் 07 மொழிகளில் கருத்தரங்குகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை மேம்பாடுத்தும் நோக்கில் 'பஸாஇர் - கல்வி ஆலோசனை நிறுவன' த்துடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு, அழைப்பு மையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதுடன் அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் நான்கு தரங்களைக் கொண்டதாக இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாம் தரம் 40 பாடங்களை உள்ளடக்கியுள்ளது
இரண்டாம் தரம் 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
மூன்றாம் தரம் - இது 30 பாடங்களைக் கொண்டுள்ளது.
மாணவர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஆசிரியர் அறிவுரைப்பு நூல் ஒன்று உண்டு அந்நூலானது கற்பித்தல் முறையை இலகுபடுத்தி,வினைத்திறன் மிக்கதான சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும். இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்,மாணவர்களுக்கான நூலாக்கம்,ஆசிரியர்களுக்கான அறிவுரைப்பு வழிகாட்டல் நூல் மேம்படுத்தல் செயன்முறையானது பல கட்டங்களைக்கொண்டதாக அமைந்ததுடன்,இப்புத்தகங்கள் அனைத்தும் இஸ்லாமிய் ஷரீஆத்துரையில் குறிப்பாக பாடவிதானத்துரையில் துரைசார்ந்தார்ந்தோரினால் சரிபார்க்கப்பட்டு, நுணுக்கமான முறையில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, இச்செயற்திட்டத்தின் மூலம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நல்ல பல நன்மைகள் கிட்ட வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம். இப்புத்தகத்தை அழகிய முறையில் வெளிவர பங்களிப்புச்செய்த அனைவருக்கும் நற்பாக்கியமும்;, சுவனமும் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக்கொள்வதோடு, இப்புத்தகம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் எமது சமூகவலைத்தளத்தின் மூலமும்,தொடர்பு இலக்கம் மூலமும்; நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக!
அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்
முகவுரை
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் என்றென்றும் உண்டாகட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின்,
அன்பார்ந்த மாணவர்களே!உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகம் எமது பாடத்;திட்டத்தின் முதலாவது புத்தகமாகும்.இந்நூலானது ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைப் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன்;,சீரான இஸ்லாமிய கலாச்சாரத்தை விதைத்து, இஸ்லாமிய கல்வி அணுகுமுறையிற்கிணங்க மாணவனின் ஆளுமையை கட்டமைத்திடுவதையும் நோக்காகக்கொண்டுள்ளது.
இஸ்லாமிய கல்விசார் துறைகளை மையமாகக் கொண்டு இப்புத்தகம் பின்வருமாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் பகுதி இப்பகுதியானது அல்குர்ஆனின் மகிமை பற்றியும் சூறதுல் ஃபாதிஹா உட்பட சில சிறிய சூறாக்களுக்கான சுருக்கமான தஃப்ஸீர் -விளக்கவுரையுடன் வசனங்களிலிருந்து பெறப்படும் கல்வி மற்றும் –தர்பியாரீதியிலான பல முக்கிய படிப்பினைகளையும் கொண்டுள்ளது.
(இறைவிசுவாமும் உளப்பரிசுத்தமும்) இப்பகுதி ஈமானின் முக்கியத்துவம்,அதன் ருக்குன்களை-அடிப்படைகள்- (முக்கிய அம்சங்களை )உள்ளடக்கியுள்ளதுடன், ஈமானின் ஒவ்வொரு ருக்குன்களும் ஒரு முஸ்லிமின் கொள்கையிலும்-நம்பிக்கையிலும்-, நடத்தையிலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திலும்; அதன் தாக்கம் குறித்த சுருக்கமான பல விடயங்களையும் இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.
ஹதீஸ் மற்றும் நபியவர்களின் அக புற வர்ணணை இப்பகுதியானது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றியும், அவர்களின் மிகமுக்கிய பண்புகள்,மற்றும் தனித்துவங்கள் பற்றியதுமான சுருக்கமான ஒரு அறிமுகத்தைக் கொண்டுள்ளது.இதனூடாக மாணவர்கள் மனதில் நபியவர்கள் பற்றிய மகிமையை திடப்படுத்தி,அவர்களைப் பின்பற்றி ஒழுகுவதற்கு வகைசெய்து ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.அத்துடன் நான்கு ஹதீஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் அல்குர்ஆனை ஓதுவதன் முக்கியத்துவம், பாவங்களைப் போக்கும் முக்கிய அம்சங்கள், அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள், மறுமையின் பயங்கரமான நிலையில் அல்லாஹ்வின் ரஹ்மத்தைப்- கருணையைப் பெறும் சிலர் எனும் தலைப்புகளில் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய சட்டதிட்டதிட்டங்கள்: ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சுத்தம், தொழுகை பற்றிய சட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில்:
சுத்தத்துடன் தொடர்பான வுழூ மற்றும் குளிப்பு பற்றிய சட்டங்களும் தொழுகையுடன் தொடர்பான தொழும் முறை பற்றியும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளன
ஒழுக்கம் தொடர்பான பகுதி இப்பகுதியில் உண்ணல் பருகல், அனுமதி கேட்டல், பேசுதல், சபை ஒழுக்கம், கழிவறை ஒழுக்கம் போன்ற நாளாந்த செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
கல்விசார் அடிப்படைகள் மற்றும் நவீன கல்வித் தர வரைமுறைகளுக்கு இசைவான வகையில் இந்தப் புத்தகங்களை ஆக்கி வெளியிட நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்.
மேலும் நாம் இப்புத்தகத்தை தயாரித்தளிப்பதில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்:
தேவையேற்படும் இடங்களில் பாடங்களில் கவனத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு பீடிகையுடன் -முற்குறிப்புடன்- பாடத்தை ஆரம்பித்தல்-
பாடத்தை நினைவில் வைக்கும் வண்ணம் படங்கள் , அட்டவணைகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளமை.
செயல் வழிக் கற்றல் உத்திகளுக்கு அமைவாக கற்பித்தலின் நோக்கங்களை எய்துகொள்ளும் நோக்கில் பாடரீதியிலான சில பயிற்சிகளை வழங்கல். போன்ற விடயங்களுடன்
மேலும் சில விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்:
பாடத்தின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் பாடத்திட்டத்தின் இயல்பு நிலையோடு தொடர்புபடுத்தி அதன் உள்ளடக்கம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
நனிநபர் ஆளுமைப் பண்புகள் உட்பட பல்வேறுபட்ட திறன்களை விருத்தி செய்தல்
தனிநபராகவும்,குழுவாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பல் வேறு வழிமுறைகளையும், வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விடயங்களையும் உள்ளடக்கியிருத்தல்
எழுத்து, பேச்சு, செயற்பாடு, சிந்தனைத் திறன் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அவற்றைப் பயன்படுத்தல்.
பாடத்தின் அடைவையும், அதன் நோக்கத்தின் அடைவையும் பரீட்சிப்பதற்காக ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விகள் வழங்கல்.
இப்புத்தகத்தை உங்கள் முன் சமர்பிக்கும் இவ்வேளையில் இதன் பாட உள்ளடக்கம் இலகுவானதாகவும், அது முன்வைக்கும் முறை தொளிவானதாகவும்
இப்புத்தகத்தை உங்கள் முன் சமர்பிக்கும் இவ்வேளையில் இதன் பாட உள்ளடக்கம் இலகுவானதாகவும், அது முன்வைக்கும் முறை தொளிவானதாகவும்
அறிவைத் தேடும் மாணவர்கள் இதன் மூலம் முழுமையான பயன்பெற வேண்டுமெனவும், எங்கள் அனைவரது நற்செயல்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
நபி ( ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாவதாக.
பஸாஇர் - கல்விநடவடிக்கைகளுக்கான ஆலோசனை நிறுவனம்.
அல்குர்ஆன் மற்றும்(விளக்கவுரை) தஃப்ஸீர்
முதலாம் பாடம்: அல்குர்ஆனின் மகிமை.
செயன்முறை நோக்கங்கள்;
இப்பாடத்தை படித்தன் பின் நீங்கள்
1.அல்குர்ஆனின் மகிமைக்கான ஆதாரங்களை முன்வைப்பீர்..
2.அல்குர்ஆனுடன் ஈடுபாடுகொண்டோரின் அந்தஸ்த்தை ஒவ்வொன்றாக குறிப்பிடுவீர்
3. அல்குர்ஆனை கண்ணியப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.
4. அல்குர்ஆனையும், அதோடு தொடர்பில் உள்ளோரையும் நேசிக்க ஆரம்பிப்பீர்கள்.
புனித அல்குர்ஆன் என்பது வானிலிருந்து இறக்கப்பட்ட உயர்வான வேதங்களுள் ஒன்றாகும். அல்லாஹ்வின் வார்த்தைகளான இது முழு படைப்பினங்களுக்கும் வழிகாட்டுவதற்காக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டுள்ளது. அல்குர்ஆன் அல்லாஹ்வின் அற்புதமாக இருப்பதால் இதைப் போன்ற ஒன்றை யாராலும் தொகுக்கவோ, உருவாக்கிடவோ முடியாது.
அல்குர்ஆனின் மகிமை:
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும்.
அல்குர்ஆனின் அற்புதம்
அல்குர்ஆன் ஓளியும் நேர்வழிகாட்டியுமாகும்
அல்லாஹ் அல்குர்ஆனைப் பாதுகாத்துள்ளமை
இம்மையிலும், மறுமையிலும் அல்குர்ஆனோடு தொடர்பில் உள்ளோருக்கு கிடைக்கும் கௌரவம்
1.அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும்
அல்லாஹ்வின் பேச்சாக-வார்த்தையாக இது இருப்பதால் அனைவரது பேச்சுக்களையும், கருத்துக்களையும் விட இது உயர்வாகவும், கண்ணியம் பொருந்தியதாகவும் காணப்படுகிறது. அல்குர்ஆன் ஓதப்படுவதை கேட்போருக்கும்,அதை விளங்குவோருக்கும் ஒரு வகையான தாக்கம் இதனால் ஏற்படுவதை வைத்து இது எவ்வளவு உயர்வானது என்பதை அறிய முடிகிறது.
2. அல்குர்ஆனின் அற்புதம்:
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரும் அற்புதம் அல்குர்ஆனாகும். இதைப் போன்ற ஒன்றை முடியுமானால் கொண்டு வருமாறு அல்லாஹ் மனிதர்களையும், ஜின்களையும் பார்த்து சவால் விடுகிறான். ஆனால் அது எவராலும் முடியாத காரியமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான், ""இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!"(அல் இஸ்ராஉ 23) (ஸூறா அல் இஸ்ராஃ : 88)
உலக மக்களைப் பார்த்து அல்லாஹ்,அல்குர்ஆனின் சூறாக்களைப் போன்ற 10 சூறாக்களை கொண்டு வருமாறு சவால் விட்டான். யாாராலும் அது முடியாமல் போனது. பின்பு ஒரு சூறாவையாவது கொண்டு வருமாறு சவால்விட்டான். அதுவும் ஒருவராலும் முடியாமல் போனது.
3. அல்குர்ஆன் அகிலத்தாருக்கான நேர்வழிகாட்டியாகும்.
மார்க்கத்தை தெளிவுபடுத்துவதற்காகவும், மக்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காகவும் அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கினான். அல்லாஹ் இது பற்றி (கூறும் போது) "அனைத்தையும் தெளிவுபடுத்தக்கூகூடியதாகவும்,நேர்வழியாகவும் ,அருளாகவும் முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும்.நாம் இவ்வேதத்தை உம்மீது இறக்கிவைத்தோம். (அன்நஹ்ல் : 89)
4. அல்குர்ஆனுக்கான அல்லாஹ்வின் பாதுகாப்பு:
அல்குர்ஆனுக்கு முன் இறக்கப்பட்ட இன்ஜீல், தவ்ராத் போன்ற வேதங்களில் ஏற்பட்ட திரிபுகள் அல்குர்ஆனிலும் இடம்பெறக் கூடாது என்பதற்காக இதைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுள்ளான். அல்லாஹ் கூறுகிறான், "நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கியுள்ளோம்.இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம்." (அல்ஹிஜ்ர் : 9).
5.அல்குர்ஆனோடு தொடர்பில் இருப்போருக்கு இம்மையிலும்,மறுமையிலும கிடைக்கும் கௌரவம்:
அல்குர்ஆனோடு தொடர்பில் உள்ளோர் என்பது அல்குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு, அதன் விளக்கத்தையும் அறிவியலையும் (அதன் கலைகளையும் அறிந்து, அதன் சட்டதிட்டங்களை எடுத்து நடப்போரையே குறிக்கிறது. இவர்களுக்கு இவ்வுலகில் உயர்வையும், மறுமையில் வெற்றியையும் வழங்கி அல்லாஹ் இவர்களை கண்ணியப்படுத்துகிறான்.
(எனவே)அல்குர்ஆனோடு தொடர்பில் உள்ளோர் மனிதர்களிலே மிகவும் சிறந்தவர்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள், "அல்குர்ஆனை தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" (ஆதாரம் : புஹாரி 5027).
அல்குர்ஆனானது தன்னுடன் தொடர்பில் உள்ளோருக்காக மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரையும் செய்கிறது. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள், 'குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்' (ஆதாரம் : முஸ்லிம் 804).
செயற்பாடுகள் :
செயற்பாடு (1): தேடிப்பார்த்து குறித்துக்கொள்கிறேன் .
அல்குர்ஆனுக்கு பல்வேறுபட்ட மகிமைகள் உள்ளன. உமது ஆசிரியரின் கண்கானிப்பின் கீழ் அவற்றை ஆராய்க. அவற்றை பின்வரும் அட்டவணையில் பதிவு செய்க.
மகிமை
இடம் சார் மகிமை
காலம் சார் மகிமை
அது இறக்கப்பட்ட மொழி
கொண்டுவந்த மலக்கின் பெயர்
பெற்றுக்கொண்ட தூதரின் பெயர்
தெளிவுகள் இது அல்லாஹ்வின் புனித பூமியான மக்காவில் ஆரம்பமாக இறங்கியது. ஆரம்பமாக இது ரமழான் மாதத்தில் இறங்கியது. சுவர்க்கவாசிகளின் மொழியான அரபு மொழியில் இது இறங்கியது. ஜிப்ரீல் (அலை) அவர்களே இதைக் கொண்டு வந்தார்கள். இறுதி நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது இது இறக்கப்பட்டது. இஸ்லாமிய சமுதாயம்,உலகிற்கு அனுப்பப்பட்ட –உலகில் தோற்றுவிக்கப்பட்ட- மிகவும் சிறந்த சமுதாயமாகும்.
செயற்பாடு: (2)அவதானித்து- பதிலளிக்கிறேன்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை (பரஸ்பரம்) படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் மூடிக்கொள்கிறது அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூர்கிறான்" (ஆதாரம் : முஸ்லிம் 2699). மேற்கூறப்பட்ட ஹதீஸை நன்கு அவதானித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1. அல்குர்ஆனை ஓதுவதிலும், கற்றுக்கொள்வதிலுமுள்ள சிறப்புகளை மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து குறிப்பிடுக.
அ. மலக்குமார்கள் இறங்கி, அல்குர்ஆன் ஓதும் சபைகளுக்கு சமூகமளிக்கின்றமை .
ஆ).அல்குர்ஆனை ஓதுபவர்கள் மீது அமைதியும், இறையருளும் இறங்குகின்றமை.
இ. அல்குர்ஆனை ஓதுபவர்களைப் பற்றி வானத்தில் இருப்பவர்களிடம் அல்லாஹ்பிரஸ்தாபிக்கின்றமை.
2. அல்குர்ஆன் ஓதும் போதும், சபையில் இருக்கும் போதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் மூன்றினை உமது நண்பர்களுடன் கலந்துரையாடுக.
வுழூ செய்தல்,அமைதியாக உட்காருதல்;, ஓதும் போது பேணுதலாகவும், பொருளுணர்ந்தும் ஓதுதல்
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ( ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. அல்குர்ஆன் ஷஃபான் மாதத்தில் இறங்கியது. (x)
2. அல்குர்ஆனை ஓதுபவர்கள் மீது அல்லாஹ்விடமிருந்து அமைதியும், அவனது அருளும் இறங்குகிறது.
3.அல்குர்ஆனை ஓதியவருக்காக மறுமையில் அல்குர்ஆன் சிபாரிசு செய்யும்.
4. அல்குர்ஆன் போன்ற ஒன்றை ஜின்களால் கொண்டு வர முடியும். (x)
5-அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதால்,அது நேர்வழி, மற்றும் எல்லாவிதமான நலன்களையும்; பூரணமாகக் கொண்டுள்ளது.
கேள்வி 2: பின்வருவனவற்றைப் பூரணப்படுத்துக.
1- அல்லாஹ் கூறுகிறான் : "நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். ....................................."
2- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனை தானும் கற்று, ........................................"
கேள்வி 3: நீர் அல்குர்ஆனை கண்ணியப்படுத்தும் விதம் குறித்தும், அதோடு தொடர்பில் உள்ளவர்களை நேசிப்பது குறித்தும் 3 மூன்று வாசகங்களை எழுதுக
இரண்டாம் பாடம்: சூறதுல் ஃபாதிஹாவுக்கான விளக்கம்
செயன்முறை நோக்கங்கள்:
பாடத்தை நிறைவு செய்ததன் பின் மாணவராகிய உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்;க்கப்படுகின்றன.
1. சூறதுல் ஃபாதிஹாவின் வசனங்களுக்கு சுருக்கமாக விளக்கம் கூறுவீர்.
2. சூறதுல் ஃபாதிஹாவின் வசனங்களிலிருந்து சில படிப்பினைகளை கூறுவீர்.
3. சூறதுல் ஃபாதிஹாவின் மகிமையை உணர்ந்து -போற்றி-நடப்பீர்.
ஸூறத்துல் பாத்திஹா
1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... 2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். 3. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 4. தீர்ப்பு நாளின் அதிபதி. 5. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 6. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக! 7. அது உன் அருள் பெற்றோர் பாதை கோபத்திற்குட்பட்டோர் பாதையுமன்று.வழிதவறியோர் பாதையுமன்று. (அல் பாதிஹா :1-7)
விளக்கமும் விரிவுரையும்:
அல்குர்ஆனின் மகிமை பொருந்திய சூறாக்களில் சூறதுல் ஃபாதிஹாவும் ஒன்றாகும். இது ஏகத்துவத்தின் அடிப்படைகளையும், வணக்கத்தின் அடிப்படையையும் பற்றி பேசுகிறது.
"பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரால்...). 'பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு) என்பதுஅல்லாஹ்விடம் உதவிதேடியவனாகவும்,அவனின் பெயரைக்கூறுவதன் மூலம் அருள்வளத்தை எதிர்பார்த்தவனாகவும் அவனின் பெயரின் உதவியால் அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கிறேன்.
"அளவற்ற அருளாளன்" அர்ரஹ்மான என்பது :இவ்வுலகில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொதுவாக வழங்கப்படும் அருளுக்கு சொந்தக்காரன்.
{அர்ரஹீம்} 'நிகரற்ற அன்புடையவன்' என்பது தனது அடியார்களான இறைவிசுவாசிகளுக்கு பிரத்தியேகமாக அன்பு காட்டுபவன் என்பது கருத்தாகும்.
அல்ஹம்துலில்லாஹ் "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே" அல்லாஹ்வுக்கே உரித்தான அழகிய புகழும் பாராட்டும் என்பது இதன் கருத்தாகும்
ரப்புல் ஆலமீன் (அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்') என்பது நாம் வாழும் இப்பூமியையும், அதில் உள்ளவற்றையும், இது தவிர உள்ள ஏனைய பேரண்டங்களையும், அதில் உள்ளவற்றையும் படைத்து, பராமரிப்பவன்.
மாலிகி யவ்முத்தீன் ('தீர்ப்பு நாளின் அதிபதி') என்பதன் கருத்து : மறுமையில் அனைவரையும் விசாரணை செய்து, கூலி வழங்கும் ஒரே இறைவன்.
இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்'(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்') உன்னை மாத்திரமே நாம் வணங்குகிறோம்.உனக்கு நிகராக எந்த இணையும் கிடையாது அனைத்து விடயங்களிலும் உன்னிடம் மாத்திரமே உதவியும் தேடுகிறோம்.
இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் ('எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!') என்பதன் கருத்து : தூய இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் எமக்கு வழிகாட்டி, அதன் படி எம்மை செயற்பட வைப்பாயாக! என்பதாகும்
ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் "அது உன் அருள் பெற்றோர் பாதை" என்பதன் கருத்து : நபிமார்கள், அவர்களைப் பின்பற்றியோருக்கு தூய இஸ்லாத்தின் பக்கம் நீ வழிகாட்டி, அவர்களை நெறிப்படுத்திய வழியில் எம்மையும் செலுத்துவாயாக! என்பதாகும்
ஃகைரில் மஃழுபி அலைஹிம் (கோபத்திற்கு உள்ளானோர்களின் வழியில் அன்று' என்பது யூதர்களைப் போன்று உண்மையை விளங்கி, அதைப் பின்பற்றாமல் இருப்போர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உரியவர்கள்.
வழழ்ழாள்ளீன்'வழிதவறியவர்களின் வழியிலும் அன்று' எனபதன் அர்த்தம்: கிறிஸ்தவர்களைப் போன்று உண்மையான ஒன்று இருக்க வழிகெட்ட ஒன்றைப் பின்பற்றுவோர் பாதை மாறிச் செல்பவர்கள்.
சூறதுல் ஃபாதிஹாவின் சிறப்பு:
ஒவ்வொரு தொழுகையிலும் அவசியம் ஓத வேண்டிய சூறா எனும் வகையில் சூறதுல் ஃபாதிஹா தனித்துவமாக காணப்படுகிறது. அல்குர்ஆனின் மகிமை வாய்ந்த சூறாக்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கென அதிகமான சிறப்புகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு சிறப்பு பற்றி பின்வரும் நபிமொழி எமக்கு குறிப்பிடுகிறது. 'அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.) மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்'. (ஆதாரம் : முஸ்லிம் 395.)
ஸுறா பாத்திஹாவிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்
1.அல்குர்ஆனை ஓதுதல், வேலையைத் துவங்குதல், உண்ணல், பருகல் போன்ற விரும்பத்தக்க அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வின் பெயரை பிஸ்மில்- கூறி ஆரம்பித்தல்
2. அல்லாஹ்வின் அருளானது அனைத்து படைப்பினங்கள் மீது, குறிப்பாக முஃமினான அடியார்கள் மீது வியாபித்துள்ளது.
3. கூலி வழங்கப்படும் மறுமை நாளுக்காக நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்.
4. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் நிறைவேற்றக் கூடாது.
5. நபிமார்களின் வழியை அவசியம் பின்பற்றி, காஃபிர்களின் வழிமுறைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும்.
செயற்பாடுகள்
செயற்பாடு(1): அவதானித்து, தொடர்பு படுத்துகிறேன்.(இணைக்கிறேன்:
அல்குர்ஆன் வசனத்தையும், அது கூறும் அர்த்தத்தையும் இணைக்குக.
அல்குர்ஆன் வசனம்
கருத்து
2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
அல்லாஹ்வுக்கு என மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன.
3. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.(3
வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ் மாத்திரமே.
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(5
ருபூபிய்யாவில் அல்லாஹ் எப்போதும் தனித்தவன்.
செயற்பாடு (2): வாசித்து, இணைக்கிறேன்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பின்வரும் துஆவைக் கூறுமாறு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னுஜபல் (ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வஸிய்யத் செய்தார்கள்: "இறைவா! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றி செலுத்தவும், உனக்கான வணக்கங்களை சிறப்பாக செய்வதற்கும் எனக்கு உதவிடுவாயாக!"
சூறதுல் ஃபாதிஹாவின் எந்த வசனம் மேலுள்ள துஆவின் அர்த்தத்தில் அமைந்துள்ளது?
மதிப்பீடு :
கேள்வி 1: (அ) பகுதியில் இருக்கும் சொற்களை (ஆ) பகுதியில் உள்ள சொற்களுடன் இணைக்குக.
பகுதி (அ): "அளவற்ற அருளாளன்" "நிகரற்ற அன்புடையோன்" "அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்கள்" "'வழிதவறியோர்'" "எமக்கு நேர்வழிகாட்டுவாயாக" பகுதி (ஆ):
உண்மையை அறிந்தும், அதன்படி செயற்படாதவர்கள்.
தனது முஃமினான அடியார்களுடன் அன்பாக இருப்பவன்.
எம்மை வழிநடாத்துவாயாக.
அனைத்து படைப்பினங்கள் மீதும் அவனது அருள் வியாபித்துள்ளது.
அறியாத் தனத்தாலும், வழிகேட்டாலும் அல்லாஹ்வை வணங்குபவர்கள்.
கேள்வி 2: பின்வரும் அர்த்தங்களைக் குறிக்கும் அல்குர்ஆன் வசனங்களை எழுதுக.
1. அல்லாஹ்வின் அருள் அனைத்திலும் வியாபித்துள்ளது.
2. நபிமார்கள், நல்லடியார்கள் போன்றோரின் வழியில் செல்வது அவசியமாகும்.
கேள்வி 3: பின்வரும் வசனத்தின் மூலம் நீர் பெற்ற படிப்பினையைக் குறிப்பிடுக. 5. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
மூன்றாம் பாடம்: அல்கவ்ஸர் மற்றும் அல்காஃபிரூன் ஆகிய இரு சூறாக்களினதும் விளக்கம்
செயன்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1.இவ்விரு ஸூறாக்களினதும் விளக்கத்தை சுருக்கமாக கூறுவீர்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்பை தெளிவு படுத்துவீர்.
3.இறை நிராகரிப்பு, அதைச் சார்ந்தோர்களிடமிருந்து விலகியிருப்பீர்
4. இவ்விரு ஸூறாக்களின் அனைத்து வசனங்களினதும் படிப்பினைகளை தெளிவாகக் குறிப்பிடுவீர்.
அத்தியாயம் அல்கவ்ஸர்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1.(முஹம்மதே!) நாம் உமக்கு அல்கவ்ஸரை வழங்கினோம். 2.எனவே உமது இரட்சகனுக்காக தொழுது அவனுக்காகவே அறுத்துப்பலியிடுவீராக.
3. நிச்சயமாக உம்மை கோபமூட்டுபவனே சந்ததியற்றவன். (அல் கவ்ஸர்:1-3)
ஸூறாவின் விளக்கமும் விரிவுரையும்:
சூறா அல்கவ்ஸர் ஆனது நபி (ஸல்) அவர்களின் சிறப்பையும், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் அவருக்கு இருக்கும் அந்தஸ்த்தையும் குறிப்பிடுகிறது.
இன்னா அஃதய்னாகல்கவ்ஸர்' (முஹம்மதே!) நாம் உமக்கு அல் கவ்ஸரை வழங்கினோம்.) என்பதன் கருத்து எமது தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் அதிக நன்மைகளை (பாக்கியங்களை) வழங்கியுள்ளான். அவற்றில் சுவர்க்கத்தில் உள்ள அல்கவ்ஸர் எனும் நதியும் ஒன்றாகும் .
)، பஸல்லி லிரப்பிக வன்ஹர் என்பது ' எனவே உமது இரட்சகனுக்காக தொழுது அவனுக்காகவே அறுத்துப்பலியிடுவீராக)இதன் கருத்தாவது: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவனுக்காக தொழுகையை நிறைவேற்றுங்கள். உங்கள் அறுப்புப் பிராணியை அவனுக்காக மாத்திரம் அறுத்துப் பலியிடுங்கள். அவனோடு வேறு எவரையும் இணையாக்காதீர்கள்.
இன்ன ஷானிஅக வல்அப்தரின் கருத்தாவது" 'நிச்சயமாக உம்மை கோபமூட்டுபவனே சந்ததியற்றவன்.'" உங்கள் மீது பொறாமைப்பட்டு, உங்களை (வெறுப்பவனும் ) கோபமூட்டிக்கொண்டிருப்பவனே குழந்தை பாக்கியமற்ற, இம்மை மறுமை நலவுகளையும் இழந்தவன்.
அத்தியாயம்: அல்காபிரூன் (நிராகரிப்பாளர்கள்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. (நபியே!) நீர் கூறுவீராக: (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' 2. நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. 4. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன்.
5. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. 6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் . எனக்கு என்னுடைய மார்க்கம் (அல்குர்ஆன் 109:01-06). அல் காபிரூன் : 1-6
ஸுறாவின் விளக்கமும் விரிவுரையும்:
வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மாத்திரம் அமைத்துக்கொள்ள வேண்டுமெனவும், இறை நிராகரிப்பு மற்றும் அதைச் சார்ந்தோரிடமிருந்து விலகியிருக்குமாறும் இவ்வத்தியாயம் வலியுறுத்துகிறது.
குல் யாஅய்யுஹல் காபிரூன் "(நபியே!) நீர் கூறுவீராக: (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!' "நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்." முஹம்மதே! இறை நிராகரிப்பாளர்களைப் பார்த்து, 'நீங்கள் வணங்குகின்ற சிலைகளை நான் வணங்க மாட்டேன் எனக் கூறுங்கள்.
வலா அன்தும் ஆபிதூன மா அஃபுது : ('நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரல்லர்)'என்பதன் அர்த்தம் நான் வணங்கும் இறைவனை நீங்களும் வணங்கமாட்டீர்கள். அவன் வணங்கப்படுவதற்குத் தகுதியான உண்மையான ஒரே இறைவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை.
வலா அன ஆபிதும் மாஅபத்தும் '"நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன்."(4) நீங்கள் வணங்கும் சிலைகளை நான் ஒருபோதும் வணங்கப்போவதில்லை.
"நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை." லகும் தீனுகும் வலியதீன் என்பது :"உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு." நீங்கள் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் மார்க்கம் உங்களுக்குரியது அதிலிருந்து நான் விலகியிருக்கிறேன். எனக்கு எனது இறைவன் வழங்கிய தூய மார்க்கம் உள்ளது. நான் ஒரு போதும் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன்.
அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
1. அல்லாஹ்விடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு உரிய உயரிய கண்ணியம்.
2. இவ்வுலகில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எதிராக வரும் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் அவரை அல்லாஹ் காப்பாற்றியுள்ளான்.
3.சுவனத்தில் அல்கவ்ஸர் எனும் நதியை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கி, அவர்களை சிறப்பித்துள்ளான்.
4. அறுத்துப் பலியிடல் என்பது ஒரு வணக்கமாகும். அதை அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும்.
5. முஸ்லிம் தனது இஸ்லாத்தின் மூலம் பெருமிதம் கொள்ளவது அவசியமாகும்
6. இறை நிராகரிப்பாளர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத பிற தெய்வ வழிபாட்டை விட்டும் ஒரு முஸ்லிம் எப்போதும் ஒதுங்கியிருக்க வேண்டும்.
7. முஸ்லிம் எப்போதும் தனது வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒப்படைகள்
ஒப்படை (1): தேடிப்பார்த்து, கணிக்கிறேன்:
நபி (ஸல்) கூறினார்கள் : "அல்கவ்ஸர் என்பது சுவனத்தில் உள்ள ஒரு நதியாகும். அதன் இரு ஓரங்களும் தங்கத்தினால் ஆனது. அதன் வடிகால் -படுக்கை-முத்துக்கள் மற்றும் பவளங்களால் ஆனது.அதன் மண் கஸ்தூரியை விடவும் சுகந்தமானது. அதன் நீர் தேனை விட இனிமையாகவும், பணிக்கட்டியை விட வெண்மையானதாகவும் காணப்படுகிறது.' (நூல்: திர்மிதி 3361, இப்னுமாஜா 4334).
இந்த ஹதீஸை நன்கு உற்று நோக்குக. இதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும், அவர்களின்; சமூகத்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புகளை கவனிக்குக. இதை வைத்து சுவனத்தில் உள்ள அல்கவ்ஸர் ஆற்றில் நீர் அருந்துபவர்களின் பண்புகளைக் கணிக்குக.
செயற்பாடு (2): அல்குர்ஆன் வசனத்தையும் அதன் அர்த்தத்தையும் இணைக்குக.
அல்குர்ஆன் வசனத்தையும் , அதன் சரியான அர்த்தத்தையும் இணைக்குக
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் "'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நிச்சயமாக நீதியாக நடப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்;.' (அல்மும்தஹினா: 8) அல்லாஹ் கூறுகிறான் "நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்". (அல்காபிரூன் : 2) அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள், 'அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் என்னிடம், என் தாயார் வந்திருந்தார் அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்;. நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்,,
‘ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’ என்று கூறினார்கள்." ஆதாரம் : புஹாரி (2620). அது கூறும் அர்த்தம்
முஸ்லிமல்லாத சொந்தக்காரர்களிடம் உறவைப் பேணி நடப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
போர் புரியாத முஸ்லிமல்லாதோருக்கு உதவிகள் செய்ய முடியும்.
இணைவைப்பாளர்களின் மார்க்கத்தை விட்டும் (கட்டாயம்)விலகியிருக்க வேண்டும்.
செயற்பாடு (3) கலந்துரையாடி வேறுபடுத்துகிறேன்
இஸ்லாத்திற்கு முரணாக இருக்கும் அனைத்து மார்க்கங்களை விட்டும் அவசியம் விலகியிருக்க வேண்டுமென சூறா அல்காஃபிரூன் குறிப்பிடுகிறது. இது இவ்வாறிருக்க, சமூகத்தில் எம்மோடு வாழும் முஸ்லிமல்லாத உறவுகளுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.
இதைப் பற்றி உங்கள் ஆசிரியரோடு கலந்துரையாடி,கொள்கை ரீதியாக அவர்களுடன் நடந்து கொள்வதற்கும் கொடுக்கல் வாங்கள் தொடர்பாக அவர்களுடன் நடந்து கொள்வதற்கிடையில் உள்ள வேறுபாட்டை அறிக.
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ( ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய மார்க்கத்தை வைத்து பெருமிதம் கொள்வதோடு,தனது இஸ்லாமிய கொள்கைகளில் உறுதியானவராகவும் இருக்க வேண்டும். ( ✓)
2. தொழுகை, ஹஜ் போன்று அறுத்துப் பலியிடுவதும் வணக்கமாகும். ( )
3. கவ்ஸர் நதி நபி ﷺ அவர்களுக்கு மாத்திரம் உரியது. அது அவர்களின் சமூகத்திற்குரியதன்று. (x)
4. எப்போதும் முஸ்லிம்களோடு மாத்திரமே நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். (x)
கேள்வி 2: பின்வரும் இரு வசனங்களின் அர்த்தங்களையும் சுருக்கமாக எழுதுக.
3.நிச்சயமாக உம்மை கோபமூட்டுபவனே சந்ததியற்றவன்.
6. உங்கள் மார்க்கம் உங்களுக்குரியது எனது மார்க்கம் எனக்குரியது. 6)
கேள்வி 3: பின்வருவற்றுக்கு பொருத்தமான அல்குர்ஆன் வசனங்கங்களை குறிப்பிடுக.
1. தொழுகையையும், அறுத்துப் பலியிடுவதையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே செய்யுமாறு ஏவப்பட்டுள்ளது.
2. இறை நிராகரிப்பாளர்களின் கடவுள்களை விட்டும் விலகியிருக்க வேண்டும்.
நான்காம் பாடம்: அந்நஸ்ர், அல்மஸத் ஆகிய சூறாக்களுக்கான விளக்கம்
செயல்முறை நோக்கங்கள்:(செயன்முறை கற்றல் பெறுபேறுகள்)
இப்பாடத்தை நிறைவு செய்ததும் மாணவர்களாகிய நீங்கள்:
1. இவ்விரு சூறாக்களினதும் வசனங்களுக்கான விளக்கத்தை சுருக்கமாக கூறுவீர்.
2-நபி ﷺ அவர்களை அல்லாஹ் பாதுகாத்தமை தொடர்பாக தெளிவு படுத்துவீர்.
3. இவ்விரு சூறாக்களின் படிப்பினைகளை தெளிவாக குறிப்பிடுவீ;ர்.
4. இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் வெற்றி கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியடைவீர்.
அத்தியாயம் : அந்நஸ்ர் (வெற்றி)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது, 2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,
3. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
(அந்நஸ்ர் :1-3)
விளக்கமும் விரிவுரையும்;:
முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்து, அரேபியர்களுக்கு மத்தியில் இஸ்லாம் விரைவாகப் பரவும் எனும் மகத்தான முன்னறிவிப்பைப் பற்றி இவ் அத்தியாயம் குறிப்பிடுகிறது.
(இதா ஜாஅ நஸ்ருள்ளாஹி வல்பத்ஹ்) 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,' என்பது இணைவைப்பாளர்களான குறைஷியர்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்து,மக்காவை உங்களுக்காக அல்லாஹ் வெற்றிபெறச் செய்து தரும் போது' என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்
வரஅய்தன்னாஸ யத்குலூன பீ தீனில்லாஹி அப்வாஜா என்பதன் கருத்து "அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது," மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவதை நீர் காணும் போதும்,
வஸப்பிஹ்பிஹம்த ரப்பிக வஸ்தஃபிர்ஹு என்பதன் கருத்தாவது"உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக!" விளக்கம் :அல்லாஹ்வுக்கு இணையாக வேறொருவரை தேர்ந்தெடுப்பதை விட்டும் அல்லாஹ்வை தூய்மைப்படுத்துவீராக! குறைஷியர்களுக்கு எதிராக உங்களுக்குக் கிடைத்த உதவிக்கும், மக்கா வெற்றிக்கும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! அவனிடம் மாத்திரமே பாவமன்னிப்பையும் தேடுவீராக!
இன்னஹு கான தவ்வாபா என்பது :"அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்" நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களின் பிழை பொறுப்புகளை ஏற்று, அவர்களின் மன்னிப்புக் கோரலை ஏற்றுக்கொள்பவன்
அத்தியாயம் (அல்மஸத்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. அபூலஹபுடைய இரு கைகளும் நாசமாகட்டும். மேலும் அவனும் நாசமாகட்டும். 2. அவனின் செல்வமோ, அவன் சம்பாதித்தவையோ அவனுக்கு எந்தப்பயனையும் அளிக்கவில்லை.
3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் கருகுவான். 4. விறகு சுமக்கும் அவனது மனைவியும் (கொழுந்து விட்டெரியும் நெருப்பில் கருகுவாள்).
5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு இருக்கும். ( அல்மஸத் : 1-5)
விளக்கமும் விரிவுரையும்:
நபி ﷺ அவர்களைப் புறக்கணித்து, அவருக்கு நோவினை செய்தமைக்காக, அவரின் சிறிய தந்தையான அபூலஹபிற்குக் கிடைத்த தண்டனை பற்றி இவ் அத்தியாயம் குறிப்பிடுகிறது.
'தப்பத் யதா அபீ லஹபிவ் வதப்ப' என்பது : 'அபூலஹபுடைய இரு கைகளும் நாசமாகட்டுமு;.அவனும் நாசமாகட்டும்;' நபி ﷺ அவர்களை நோவினை செய்தமையின் காரணமாக அபூலஹப் நஷ்டமடைந்துவிட்டான்.பாவியாக (துஷ்டனாக) மாறி வேதனை செய்யப்படும் அளவிற்கு அவன் சென்றுவிட்டான்.
மாஅஃனா அன்ஹு மாலுஹு வமா கஸப் என்பதன் கருத்து:அவனின் செல்வமோ, அவன் சம்பாதித்தவையோ அவனுக்கு எந்தப்பயனையும் அளிக்கவில்லை. அவன் சேர்த்து வைத்த சொத்து செல்வங்களும், அவனது குடும்பமும், பதவிகளும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவனைக் காக்கவில்லை.
ஸயஸ்லா நாரன் தாத லஹப் என்பதன் கருத்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் அவன் நுழைவான். அது அவனை சூழ எரிந்துகொண்டிருக்கும்.
"வம்ரஅதுஹு ஹம்மாலதல் ஹதப் என்பதன் கருத்தாவது ." அவனது மனைவியான உம்மு ஜமீலும் அவனுடன் சேர்ந்து நெருப்பில் கருகுவாள். முள்விறகுகளை சுமந்து செல்லும் அவள் நபி ﷺ அவர்கள் செல்லும் பாதைகளில் அவற்றைப் போட்டு, அவருக்கு நோவினை செய்தாள்.
பீ ஜீதிஹா ஹப்லும் மிம்மஸத் என்பதன் கருத்து : அவளது கழுத்தில் சொறசொறப்பான முறுக்கேறிய ஈச்சம் கயிறு போடப்பட்டு, அதன் மூலம் நரகிற்கு இழுத்துச் செல்லப்படுவாள். என்பதாகும்
அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் (படிப்பினைகள் பயன்கள்: :
1. எப்போதும் அல்லாஹ்வை துதி செய்து, அவனைப் புகழ்ந்தவாறு இருக்க வேண்டும். அவனிடம் அடிக்கடி பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
2. பாவமன்னிப்பை வழங்குபவன் அல்லாஹ் மாத்திரமேயாவான். தனது அடியார்களின் பிழைபொறுப்பை ஏற்றுக்கொள்பவனும் அவனே.
3. நபி ﷺ அவர்களை அல்லாஹ் எப்போதும் பாதுகாத்து, அவருக்கு ஆறுதலாகவே இருந்துள்ளான். அவருக்கு நோவினை செய்பவருக்கு தண்டனைகளையும் வழங்கியுள்ளான்.
4. யார் அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளாமலும், நல்ல செயல்களை செய்யாமலும் இருப்பாரோ -அவர் நபி ﷺ அவர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தவராக இருந்தாலும் சரி- அவருக்கு அவருடைய சொத்து செல்வங்களோ, குடும்பத்தார்களோ, பட்டம் பதவிகளோ என்றும் பயனளிக்கப்போவதில்லை.
செயற்பாடுகள்
ஒப்படை (1): தேடிப்பார்த்து, விடையளிக்கிறேன்:
பாவம் செய்யும் சந்தர்ப்பங்களில் மாத்திரமின்றி எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு முஸ்லிம் எவ்வாறு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும் என்பதை அறிந்திட, சூறா அந்நஸ்ரை அடிப்படையாக வைத்து உமது ஆசிரியருடன் கலந்துரையாடுக.
செயற்பாடு (2) சிந்தித்து, தெளிவுபடுத்துகிறேன்
நபி ﷺ அவர்களை பொய்ப்பித்தமைக்காகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அவரைத் தடுத்தமைக்காகவும் அவரின் சிறிய தந்தையான அபூலஹபிற்கு அல்லாஹ் வேதனை இருப்பதாக அல்குர்ஆன் மூலம் எச்சரிக்கிறான். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள்’ எனும் (அல்குர்ஆன் 26:214 வது) வசனத்தை அருளியபோது, இறைத்தூதர் ﷺ அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக் கூறியழைத்து, ‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்) கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றமுடியாது. அப்துல் முத்தலிபின் புதல்வரான (என் பெரிய தந்தை) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. இறைத்தூதர் ﷺ அவர்களின் அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள்." (நூல்: புஹாரி 4771, முஸ்லிம் 206).
இஸ்லாத்தில் நீதி பற்றி இந்த ஹதீஸ் எவ்வாறு குறிப்பிடுகிறது என்பதை தெளிவுபடுத்துக.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ( ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் வெற்றியினால் ஒரு முஸ்லிம் சந்தோசமடைகிறான். ( )
2. பாவம் செய்தால் மாத்திரமே பாவமன்னிப்பு கேட்க வேண்டும். (x)
3. நபி ﷺ அவர்களின் குடும்பத்தார்கள் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். (x)
4. இஸ்லாம் நீதமான, கருணையுள்ள மார்க்கமாகும். ( )
கேள்வி 2: பின்வரும் இரு வசனங்களின் அர்த்தங்களையும் சுருக்கமாக எழுதுக.
"அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்"
அவனின் செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எவ்விதப்பபயனையும் அளிக்கவில்லை.
கேள்வி 3: அந்நஸ்ர், அல்மஸத் ஆகிய சூறாக்களில் இருந்து இரு பயன்களைக் குறிப்பிடுக.
ஐந்தாம் பாடம்: அல்இஹ்லாஸ் மற்றும் முஅவ்விததைன் அத்தியாயங்களின் விளக்கம்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் உங்களால்:
1. இம்மூன்று சூறாக்களுக்கும் சுருக்கமாக விளக்கமளிப்பீர்.
2ஸுறதுல் இஹ்லாஸுடன் முஅவ்விதான் ஸூறாக்களுக்கு சுருக்கமா விளக்கமளிக்கமளிப்பீர்.
3. இம்மூன்று சூறாக்களினதும் மகிமையை உணர்வீர்
4ஒவ்வொரு நாளும் பகலிலும், இரவிலும் இம்மூன்று சூறாக்களையும் ஓதிவருவீர்.-
அத்தியாயம் அல் இஹ்லாஸ்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1.அல்லாஹ் ஒருவன் தான் என நபியே நீர் கூறுவீராரக 2. அல்லாஹ் (எவ்விதத் ) தேவையற்றவன். 3. (யாரையும்) அவன் பெறவுமில்லை,(யாருக்கும்) பிறக்கவுமில்லை
4. அவனுக்கு நிகராக யாருமில்லை. (ஸூறத்துல் இஹ்லாஸ்: 1-4
விளக்கமும் விரிவுரையும்:
இவ் அத்தியாயம் அல்லாஹ்வின் சில பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
1. குல்ஹுவல்லாஹு அஹத் என்பதன் என்பதுன் கருத்து : (அல்லாஹ் ஒருவன் தான் என நபியே நீர் கூறுவீராரக) நபியே! நீங்கள் கூறுங்கள், இறைத்தன்மை, பரிபாலனம் (ருபூபிய்யாஉலுஹிய்யா)போன்றவற்றில் அல்லாஹ் எப்போதும் அல்லாஹ் தனித்துவமானவன்.
2. அல்லாஹ் (எவ்விதத்) தேவையற்றவன். அடியார்கள் தமது தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடிச்செல்லும் எஜமானனாக அல்லாஹ் திகழ்கிறான் என்பதாகும்
3. "லம் யலித் வலம் யூலத் "என்பதன் கருத்து (யாரையும்) அவன் பெறவுமில்லை,(யாருக்கும்) பிறக்கவுமில்லை அல்லாஹ்வுக்கு பிள்ளைகளோ, வம்சாவளியினரோ கிடையாது. அவனுக்கு தாய் தந்தையர்களும் கிடையாது.
வலம் யகுல்லஹு குபுவன் அஹத் என்பதன் கருத்து :( "அவனுக்கு நிகராக யாருமில்லை") அவனைப் போன்றவர்களோ, அவனுக்கு இணையாகவோ எவரும் கிடையாது.
அத்தியாயம் : அல்பலக் (காலைப்பொழுது)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 2. அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், ((பாதுகாப்புத் தேடுகிறேன்) 3. பரவும் இருளின் தீங்கை விட்டும்,
4. முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
5. பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!) (அல்பலக் : 1-5)
விளக்கமும் விரிவுரையும்;:
அல்லாஹ் படைத்தவற்றின் தீங்கை விட்டும், சூனியம், பொறாமை போன்றவற்றின் தீங்கை விட்டும் அவனிடம் பாதுகாவல் தேட வேண்டுமென இவ் அத்தியாயம் கற்றுத்தருகிறது.
குல் அஊது பிரப்பில் பலக் என்பது '(அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!) 'ஒளியைத் தந்து, காலைப்பொழுதை உண்டாக்கும் இரட்சகனான அல்லாஹ்விடம் புகழிடம் தேடி,அவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என நபியே நீங்கள் கூறுங்கள். என்பது இதன் கருத்தாகும்.
2. அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும் (பாதுகாப்புத் தேடுகிறேன்) 'அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்கள், ஜின்கள், மிருகங்கள், விஷ ஜந்துக்கள் போன்ற கண்ணுக்கு புலப்படுகின்ற, புலப்படாத அனைத்தின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்' என்பதாகும்.
'பரவும் இருளின் தீங்கை விட்டும் வமின் ஷர்ரிமாக கலக் 'என்பதன் கருத்து 'இரவு நேரங்களில் நடமாடும் கெட்ட ஜின்கள், கெட்ட மனிதர்கள், தீங்கிழைக்கும் விலங்குகள் போன்றவற்றின் தீங்குகளை விட்டும், இருளால் ஏற்படும் பௌதீக மாற்றங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்பதாகும்
"முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்" 'சூனியம் செய்வதற்காக முடிச்சுகளைப் போட்டு அதில் மந்திரங்களைக் கூறி ஊதும் பெண்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்பதாகும்.
"பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்"வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத் என்பதன் கருத்து 'தான் பெற்ற அருட்கொடை நிலைக்க வேண்டும் பிறரின் அருட்கொடைகள் அழிந்து போக வேண்டும் என்ற பொறாமைக்காரனின் பொறாமையை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அத்தியாயம் : அந்நாஸ் (மனிதர்கள);
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 2. மனிதர்களின் அரசனும், 3. மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், (மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!) 5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
6. இத்தகையோர் ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர். ஸுறத்துன்னாஸ் :(1-6)
விளக்கமும் விரிவுரையும்:
ஷைத்தானின் தீங்குகளை விட்டும், அவனால் உள்ளங்களில் விதைக்கப்படும் தீய எண்ணங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமாறு இவ் அத்தியாயம் எமக்குக் கற்றுத்தருகிறது.
"மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!" 'மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கான வாழ்வாதாரங்களை செய்து கொடுத்து, அவர்களின் சகல விடயங்களையும் கண்கானித்துக்கொண்டிருக்கும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்' என நபியே! நீங்கள் கூறுங்கள்.என்பதாகும்
"மனிதர்களின் அரசனும்" மலிகின்னாஸ் என்பதன் கருத்து மனிதர்களின் அனைத்து விடயங்களையும் நிர்வகிப்பவன். மனிதர்களை விட்டும் தேவையற்றவன்.என்பதாகும்.
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். அனைத்து வணக்கங்களுக்கும் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ் மாத்திரமே. அவனைத் தவிர உண்மையாக வணங்கப்படும் கடவுள் வேறு யாரும் இல்லை.
"மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், (மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!)" மின்ஷர்ரில் வஸ்வாஸ் அல்கன்னாஸ் என்பதன் கருத்து : அல்லாஹ்வை நினைவுகூறாமல் இருக்கும் போது மனிதனின் உள்ளத்தில் புகுந்து அதில் தீய எண்ணங்களை விதைக்கும் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன் எனக் கூறுங்கள். அல்லாஹ்வை நினைவுகூறும் போது அவனது சூழ்ச்சிகள் மறைந்துவிடுகின்றன.
"அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்" அல்லதி யுவஸ்விசு பீ ஸுதூரின்ன்ஸ் என்பதன் கருத்து : மனிதர்களின் உள்ளங்களில் குறித்த நபர் பற்றிய தீய எண்ணங்களை உள்ளங்களில் உண்டாக்குகிறான்.
" ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்" மினல் ஜின்னதி வன்னாஸ' என்பதன் கருத்து : மறைவாக உள்ளத்தில் தீய எண்ணங்களை உண்டு பன்னும் ஜின்களின் தீங்குளை விட்டும், எப்போதும் தீயதை ஏவி, தீயதையே செய்துகொண்டிருக்கும் மனிதர்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
1. அல்லாஹ் ஒருவன் அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் வேறுயாருமில்லை.அவனுக்கு எந்த சந்ததியோ பெற்றோரோ கிடையாது அவனுக்கு ஒப்பாகவோ நிகராகவோ யாரும் கிடையாது.
2. அனைத்து வகையான வணக்கங்கங்களையும் செலுத்துவதற்கு முழுத்தகுதி படைத்த ஒரே இறைவன் அல்லாஹ் மாத்திரம் தான்.
3. மனித, ஜின்களின் தீங்குகளை உணரும் போது அதிலிருந்து பாதுகாப்புப் பெற தன் பக்கம் ஒதுங்கும் முஸ்லிமை அல்லாஹ் பாதுகாக்கிறான்.
4. பொறாமை, சூனியம் என்பவற்றின் தீங்குகள் உண்மையாகும். அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி, அவன் மீது தவக்குல் வைப்பதன் மூலம் ஒரு முஸ்லிம் இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும்.
5. அல்லாஹுத்தஆலாவை ஞாபகப்படுத்துவது ஷைத்தானால் ஏற்படும் தீய எண்ணங்களை விட்டும் ஒரு முஸ்லிமை பாதுகாக்கிறது.
செயற்பாடுகள் :
செயற்பாடு(1): அல்இஹ்லாஸ், முஅவ்விததைன் ஆகிய சூறாக்களை ஓதுவதற்கான நேரத்தை ஒதுக்குகிறேன் .
அதிகமான சந்தர்ப்பங்களில் அல்இஹ்லாஸ், முஅவ்விததைன் ஆகிய சூறாக்களை ஓதிக்கொள்ளுமாறு நபி ﷺ அவர்கள் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். இவை ஓதப்படும் சரியான சந்தர்ப்பங்களுக்கு முன்னால் அடையாளமிடுக.
நேரமும் -சந்தர்பமும் ஓதுவது ஆகுமானது.
காலையில்
மாலையில்
பள்ளியினுள் நுழையும் போது
பள்ளியிலிருந்து வெளியேறும் போது
தூங்குவதற்கு முன் சாப்பிட்ட பின்
செயற்பாடு (2) நண்பர்களுடன் கலந்துரையாடுகிறேன்
சூனியம், ஷைத்தானின் தீங்குகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுவதற்காக முஅவ்விததைன் சூறாக்களை ஓதிக்கொள்ளும் வழிமுறையை அல்லாஹ் கற்றுத் தந்துள்ளான். இப்படியிருக்க தாயத்து, ஜின் வைத்தியம் என அல்லாஹ் அனுமதிக்காத முறைகளில் சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெறும் முறைகளை சிலர் கையாழ்கின்றனர்.
சூனியம், ஷைத்தானின் தீங்குகள் போன்றவற்றிலிருந்து தவறான முறையில் பாதுகாப்புத் தேடும் முறைகளை உமது நண்பரோடு கலந்தாலோசித்து, பட்டியலிடுக. ஒரு முஸ்லிமின் கொள்கையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிடுக.
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓)எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. 'அஹத்' எனும் அரபு வார்த்தை, இறைத் தன்மை, பரிபாலணம் போன்றவற்றில் அல்லாஹ் தனித்தவன் என்பதைக் குறிக்கிறது. (✓)
2. 'ஸமத்' எனும் அரபு வார்த்தை, தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அடியார்களால் தேடிச்செல்ப்படக்கூடியவன் என்பதைக் குறிக்கிறது. ( )
3. ஒரு முஸ்லிம் சூனியத்திலிருந்து தன்னைக் காதத்துக்கொள்ள சூனியத்தின் வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். (x)
4. 'நஃப்ஃபாஸாத்' எனும் அரபு வார்த்தை, மக்களுக்கு சூனியம் செய்யும் போது முடிச்சுகளில் மந்திரித்து ஓதும் பெண்களைக் குறிக்கிறது. ( )
5. முஅவ்விததைன் சூறாக்களை ஓதும் போது சூனியம், ஷைத்தான் போன்றவற்றின் தீங்குகளை விட்டும் பாதுகாக்கும். (✓)
6. தாயத்துகள் கட்டுவதும், ஜின்வைத்தியம் செய்வதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளாகும்.
கேள்வி 2: பின்வரும் அர்த்தங்களுக்கு பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடுக.
கருத்து
அல்லாஹ்வுக்கு ஒப்பாகவோ நிகராகவோ எதுவும் இல்லை.
இருளிலிருந்தும், இரவின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேட வேண்டும்.
ஜின்கள், மனிதர்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும். அல்குர்ஆன் வசனங்கள்
கேள்வி 3: அல்இஹ்லாஸ், முஅவ்விததைன் சூறாக்களை ஓதும் சந்தர்ப்பங்களைக் கூறுக.
ஈமானும் தஸ்கியாவும்
முதலாம் பாடம்: ஈமானும், அதன் முக்கியத்துவமும்.
செயன்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. ஈமானுக்கான வரைவிலக்கிணத்தை குறிப்பிடுவீர்
2. ஈமானின் ருகுன்களை ஒவ்வொன்றாக குறிப்பிடுவீர்
3. இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் என்பவற்றுக்குகிடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வீர்கள்
4. ஈமானுக்கும், நற்செயல்களுக்கும் இடையிலான இருக்கமான தொடர்பின் பலத்தை உணர்ந்து கொள்வீர்
5. உங்கள் ஈமானை சரிபடுத்தி உங்கள் செயல்பாடுகளை சீர்படுத்திக்கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருப்பீர்.
அறிமுகம்
ஸஹாபாக்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். பின்வரும் ஹதீஸ் இதனைக் குறிப்பிடுகிறது.
உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள், "நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார். அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம். அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார். அடுத்து அம்மனிதர்,இஹ்ஸான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்ஸான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்."
(ஆதாரம் : முஸ்லிம் 8)
ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது போன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு மூன்று படித்தரங்கள் காணப்படுகின்றன:
முதலாம் படித்தரம்: இஸ்லாம் (கட்டுப்படுதல்), இது ஐந்து ருக்குன்களைக் கொண்டுள்ளது. அவையாவன: ஏகத்துவத்தின் இரு சாட்சி கூறல்களான -அல்லாஹ்வை உண்மையான இறைவன் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனின் தூதரும் அடியாருமாவார்கள் என சான்று பகர்தல்-, தொழுகையை நிலைநாட்டுதல் , ஸகாத் கொடுத்தல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல் என்பனவாகும்.
இரண்டாம் படித்தரம்: ஈமான் (விசுவாசம் கொள்ளல்), இது இஸ்லாத்திற்கு அடுத்து வரும் படித்தரமாகும்.
மார்க்கம் குறிப்பிடுகின்ற அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை- உள்ளத்தால் உண்மைப்படுத்தி, நாவால் மொழிந்து, உடல் உறுப்புக்களால் செயற்படுத்துவதற்கு ஈமான் எனக் கூறப்படும்.
ஒரு மனிதன் முதலில் உள்ளத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்வதன் வெளிப்பாடே இரு கலிமாக்களையும் நாவால் மொழிவதாகும். உறுப்புக்களால் அமல்களை செய்யும் போது மாத்திரமே ஈமான் பரிபூரணம் பெறுகிறது. இந்த வகையில்தான் அல்குர்ஆன் சுவன வாசிகளை வர்ணிக்கையில் அவர்களிடம் ஈமான் எனும் ஆழமான இறைவிசுவாசமும் சீரான நல்லமகளும் காணப்படும் என்று குறிப்பிடுகிறது.இது குறித்து குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறான். "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சுவர்க்வாசிகளாவர் . அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்." (ஸூறா அல் -பகரா : 82).
எனவே ஒவ்வொரு முஃமினும் தான் ஈமான் கொண்டவற்றிட்கு இணங்க நற்செயல்களை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இதுவே அவருக்கு ஈருலகிலும் வெற்றியைக் கொடுக்கும்.
ஈமானுக்கு ஆறு ருக்குன்கள் இருக்கின்றன, அவை வருமாறு: அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், வேதங்களையும், நபிமார்களையும், மறுமைநாளையும், விதியையும் நம்பிக்கை நம்பிக்கை கொள்வதாகும்.
மூன்றாம் படித்தரம்: இஹ்ஸான் (அல்லாஹ்வின் கண்காணிப்பை உணர்தல்), தனது ஒவ்வொரு சொல்லையும், செயலையும், அசைவையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்வதே இஹ்ஸான் ஆகும். நாம் அல்லாஹ்வை காண்பது போல் செயற்பட வேண்டும். நாம் அவனைக் காணாவிட்டாலும், அவன் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தாவது செயற்பட வேண்டும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1): மார்க்கத்தின் படித்தரங்களை வேறுபடுத்துவேன்:
பின்வரும் அல்குர்ஆன் வசனங்களில் ஈமானின் படித்தரத்திற்கு முன் இஸ்லாத்தின் படித்தரம் உள்ளது என்பதை காட்டும் வசனங்களைத் தேர்வு செய்க.
""நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமப்புற அறபிகள் கூறுகின்றனர். "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக "கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக!" (ஹுஜுராத் : 14).
"உங்கள் தந்தை இப்பராஹிமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் . இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்." (ஹஜ் : 78).
"நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்." (முஃமினூன் : 1).
செயற்பாடு (2): அல்குர்ஆன் வசனத்தையும், அவை குறிப்பிடும் அர்த்தங்களையும் இணைக்கிறேன்.
பின்வருவனவற்றில் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களையும், அவை குறிப்பிடும் அர்த்தங்களையும் இணைக்குக.
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்
அல்லாஹ் கூறினான் "நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன." (தாஹா : 75).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "யாரிடமிருந்து மக்களின் சொத்துக்களும், உயிர்களும் பாதுகாப்பாக இருக்கிறதோ அவரே முஃமினாவார்" (நூல்: இப்னுமாஜா 3934).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொள்கிறாரோ அவர் விருந்தினரை நல்லமுறையில் உபசரிக்கட்டும்." (ஆதாரம் : புஹாரி 6135, முஸ்லிம் 48). ஹதீஸ்கள் கூறும் கருத்துக்கள்
ஈமான் ((இறைவிசுவாசம்) ஒருவர் மற்றவருக்கு துன்பம் இழைப்பதைத் தடுக்கிறது.
சிறந்த நற்குணங்கள் ஈமானின் விளைவுகளில் ஒன்றாகும் .
மறுமையில் அந்தஸ்த்து உயர்வதற்கு ஈமானே காரணமாகும்.
செயற்பாடு (3): (அறிவுறை வழங்குவேன்)
கடமையான வணக்கங்களை செய்யாது, தமது உள்ளம் ஈமானால் நிரம்பியுல்ளது என சிலர் (வாதிடுகின்றனர்) கூறுகின்றனர்.
இவர்களுக்கான அறிவுறையொன்றை எழுதுக.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் () எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. தொழுகையை நிலைநாட்டுவது இஹ்ஸானின் ருக்குன்களில் ஒன்றாகும். ( )
2. சுவர்க்கத்தையும், நரகத்தையும் நம்பிக்கை கொள்வது ஈமானின் ருக்குன்களில் உள்ளவையாகும். ( )
3. ஈமான் என்பது மார்க்கத்தின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். ( )
கேள்வி 2: பின்வருவனவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்க.
1. ஈமானின் ருக்குன்கள்
(ஐந்து - ஆறு - ஏழு) ஆகும்.
2. அல்லாஹ் கண்காணிக்கிறான் ((இறைஅவதானம்)எனும் படித்தரம்:
(இஸ்லாம் - ஈமான் - இஹ்ஸான்) குறிக்கிறது.
3. ஈமான் முழுமை பெற அவசியம் இருக்க வேண்டிய விடயங்களில் ஒன்று ............ ஆல் ஏற்றுக்கொள்வதாகும் ( நம்புவதாகும் )
(உள்ளம் - நாவு - உடல்உறுப்புகள்)
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
1. ஈமானின் வரைவிலக்கணத்தை குறிப்பிடுக.
2. ஈமானோடு, நற்செயல்களும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரத்தைக் குறிப்பிடுக.
3. பின்வருவனவற்றை குறைந்த படித்தரத்தில் இருந்து கூடிய படித்தரம் வரை பின்வருபவற்றை ஒழுங்குபடுத்துக. (இஹ்ஸான் - இஸ்லாம் - ஈமான்).
இரண்டாம் பாடம்: அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதும், அதன் அதன் விளைவுகளும்
செயன் முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. அல்லாஹ்வை ஈமான் கொள்ளல் என்பதன் கருத்தை தெளிவுபடுத்துவீர்.
2. தனிமனித மற்றும் சமூகத்தில் ஈமான் ஏற்படுத்தும் விளைவுகளை -பிரதிபலன்களை - தெளிவாகக் கூறுவீர்.
3. நடத்தையில் செல்வாக்குச் செலுத்துவதில் ஈமானின் முக்கியத்துவத்தை உணர்வீர்.
4. முஃமின்களின் பண்புகளையும், அவர்களின் நன்நடத்தைகளையும் வாழ்வில் அணிகலனாகக் கொள்வீர்- -பின்பற்றி நடப்பீர்.
அர்கானுல் ஈமான் -ஈமானின் அடிப்படை அம்சங்கள்- ஆறு என்பதை அறிந்து கொண்டீர்.அதில் முதலாவது அம்சம் அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும். எனவே அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளல் என்பதன் அர்த்தம் யாது?
இதற்கான பதிலை பின்வரும் தலைப்புகளினூடாக தெரிந்து கொள்வோம்.
அல்லாஹ்வை நம்புதல் ( ஈமான் கொள்ளுதல்)
அல்லாஹ்வின் இருப்பை விசுவாசம் கொள்ளல்.
அல்லாஹ்வின் பரிபாலணத்தை ( (ருபூபிய்யாவை)படைப்பினங்களுக்கான இரட்சிப்பை )விசுவாசம் கொள்ளல்.
அல்லாஹ்வின் இறைத் தன்மையை (உலூஹிய்யா)(விசுவாசம் கொள்ளல்.
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை விசுவாசம் கொள்ளல்.
முதலாவது: அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளல்:
அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது ஈமானின் முதலாவதும், மிகப்பிரதானமானதுமான ருக்னாகும். இது நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன:
1. அல்லாஹ்வின் இருப்பை விசுசித்தல்-ஈமான் கொள்ளல். இதனை மனிதஇயல்புணர்வு மற்றும் சீரிய பகுத்தறி ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடியும் .
சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் இருப்பிற்கான ஆதாரங்களுள் "படைப்பின் ஆதாரம் "அடிப்படையானதாகும்.இவ்வடிப்படையின் படி படைப்பினங்கள் அல்லாஹ்வின் இருப்பை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு படைப்பும் அதற்குப் பின்னால் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை உணர்த்துகின்றன. அல்லாஹ் கேட்கிறான், "எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைப்பவர்களா?" (ஸுறதுத் தூர்:35)
2. அனைத்தையும் படைத்து, ஆட்சி செய்து பரிபாலிப்பவன் அல்லாஹ் ஒருவன் தான் என விசுவாசம் கொள்ள வேண்டும். அவனே அனைவருக்கும் வாழ்வாதாரத்தை வழங்குகிறான். உயிர்கொடுக்கிறான், மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் , "வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்." (ஸுறா அல் ஜாஸியா :36)
3. அல்லாஹ்வுக்கு என தனித்துவமான பெயர்களும், உயரிய பண்புகளும் இருக்கின்றன என விசுவாசம் கொள்ள வேண்டும். அவனைப் போல் எதுவும் கிடையாது. அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் ,, "அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்" (அல்குர்ஆன் 42:11).
4. வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ் மாத்திரமே என விசுவாசம் கொள்ள வேண்டும். இரட்சகனும், படைப்பாளனும் அல்லாஹ் தான் என்பதை அறிந்த ஒருவர் வணக்கத்திலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். அவனைத் தவிர வேறு கடவுள்களை விட்டும் விலகியிருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், "வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?" (ஸுறா மர்யம் :65)
இரண்டாவது: அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதினால் ஒரு முஸ்லிமின் நடத்தையில் ஏற்படும் விளைவுகள் :
1. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது ஒரு முஃமினின் உள்ளத்தை எப்போதும் அல்லாஹ்வுடன் தொடர்பில் வைத்திருக்கும். அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டு, அவனது தண்டனைகளை அஞ்சி, அவன் தரவிருக்கும் கூலிகளை எதிர்பார்த்து, அவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, எல்லா விடயங்களையும் அவனிடமே பொறுப்புச் சாட்டி எப்போதும் அல்லாஹ்வின் நினைவிலே இருக்க மனதை பக்குவப்படுத்திடும். அத்துடன் இறைவிசுவாசமனாது நாவை அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவும்,அல்குர்ஆனை ஓதிடவும் உட்படுத்துவதோடு, உறுப்புக்களை வணக்கவழிபாடுகளில் ஈடுபடுத்தி தீமைகளிலிருந்து தவிர்ந்து நடக்கவும் வகை செய்கிறது.
2. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதனால் அல்லாஹ் அல்லாத ஏனையோர் மீது இருக்கும் பயம் நீங்கிவிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான், "தனது நேசர்களை ஷைத்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!" (ஆல இம்ரான் : 175).
3. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதால் வணக்க வழிபாடுகளை மிகவும் ஈடுபாட்டோடு செய்யவும் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவன் மீது தனது அனைத்து விடயங்களையும் பொறுப்பு சாட்டி, அவன் பக்கம் நெருங்க வகைசெய்கிறது.அல்லாஹ் கூறுகிறான், "2. நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்." "3. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்." "4. அவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு." (அல்அன்பால் : 2-4)
4. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதால் பிறரின் உரிமைகளைப் பேணி நடக்க முடிகிறது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "யாரிடமிருந்து மக்களின் சொத்துக்களும், உயிர்களும் பாதுகாப்பாக இருக்கிறதோ அவரே முஃமினாவார்" (நூல்: இப்னுமாஜா 3934).
இவ்வாறு தான் அல்லாஹ்வை விசுவாசம் கொள்வது ஒரு முஸ்லிமின் நடத்தைகளில் மாற்றத்தை உண்டு பண்ணி, நல்ல செயல்களை செய்வதற்கும், தீய செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பதற்கும் அவருக்கு வழிகாட்டுகிறது.
செயற்பாடுகள் :
ஒப்படை (1): சிந்தித்து, பகருத்துக்களையும் முடிவுகளையும் பெறுவேன்.
பின்வருவனவற்றில் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களையும், அவை குறிப்பிடும் அர்த்தங்களையும் இணைக்குக.
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்
அல்லாஹ் கூறினான் "அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்." (ஸாரியாத் : 55).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிடு வார்கள். பிறகு “யாருடைய உள்ளத்தில் கடுகு வித்தளவேனும் இறைநம்பிக்கை (ஈமான்) இருக்கிறதோ அவரை (நரகத் திலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளை யிடுவான்." (நூல்: புஹாரி 22, முஸ்லிம் 184).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "“அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி ﷺ அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள் “எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள்." (ஆதாரம் : புஹாரி 6016). அவற்றின் அர்த்தங்கள்
ஈமான் என்பது அடியார்களின் உரிமைகளோடு தொடர்புபடுகிறது.
உபதேசங்களைக் கேட்டு பயன்பெறுவது ஈமானின் பிரதிபலன்களில் உள்ளவையாகும்.
மறுமையில் நரகிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்குக் காரணமாக இருப்பது ஈமானாகும்.
செயற்பாடு (2): ஆய்வு செய்து, பதிலளிக்கிறேன்..
தான் நபி ﷺ அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தது பற்றி அபூபக்கர் (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள், "சூரியன் உச்சி சாய்ந்தபிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னு மாலிக் பின்தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை.) நான், “(எதிரிகள்) நம்மிடம் வந்துவிட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள். நபி ﷺ அவர்கள் சுராக்காவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே சுராக்காவுடன் அவரது குதிரை தன் வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது." (ஆதாரம் : புஹாரி 3615, முஸ்லிம் 7706).
மேற்கூறப்பட்ட சம்பவத்தை வாசித்த பின், பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்குக:
1. இச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விடயம் யாது?
2. இச்சம்பவத்திற்கும், பாடத்தின் தலைப்பிற்கும் உள்ள தொடர்பு யாது?
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. படைப்பினங்களின் இருப்பு குறிப்பது:
(அல்லாஹ்வின் இருப்பு - நபி ﷺ உண்மைப்படுத்தல் - அல்குர்ஆனின் அற்புதம்)
2. நபியவர்களின் இவ்வார்த்தை குறிப்பது: "யாரிடமிருந்து மக்களின் சொத்துக்களும், உயிர்களும் பாதுகாப்பாக இருக்கிறதோ அவரே முஃமினாவார்"
பரிபாலணத்தில் (ருபூபிய்யாவில் ) அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல் - ஈமானை செயலுடன் இணைந்திருத்தல் - சமூக பாதுகாப்பின் முக்கியத்துவம்)
3. உண்மையான முஃமின் என்பவர்:
(அல்லாஹ்வை படைப்பினங்களுக்கு ஒப்பாக மாட்டான் - அண்டை வீட்டாரை நோவினை செய்வான் - பேச்சில் உண்மையாக இருக்கமாட்டான்)
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
1. அல்லாஹ்வின் இருப்பை நம்பினால் ஒருவருக்கு இஸ்லாத்தில் நுழைய முடியும்.
அல்லாஹ்வின் இருப்பு, அவனின் பரிபாலணம், இறைத்தன்மை ஆகியவற்றை ஒருவர் நம்பும் வரை அவர் முஸ்லிமாக மாட்டார்.
2. ஈமான் என்பது உள்ளத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். இதற்கும் உடல் உறுப்புக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.
ஈமான் என்பது உள்ளத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். ஆனால் அதன் பிரதிபலன்கள் நாவினாலும், உடல் உறுப்புக்களாலுமே வெளிப்படும்.
கேள்வி 3: பின்வருவனவற்றுக்கு ஆதாரங்களைக் குறிப்பிடுக.
1. அண்டை வீட்டாருக்கு நோவினை செய்வதை ஈமான் தடுக்கிறது.
2. உண்மையான முஃமின் எப்போதும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பார்.
கேள்வி 4: ஒரு முஸ்லிம் நான்கு விடயங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவரின் ஈமான் உறுதியாகிறது. அவற்றை நான்கு வரிகளில் சுருக்கமாக குறிப்பிடுக.
மூன்றாம் பாடம்: மலக்குகளை ஈமான் கொள்தல், மற்றும் அதன் பிரதிபலன்கள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. மலக்குகள் என்றால் என்ன என்பதைத் தெளிவு படுத்திடுவீர் .
2. மலக்குகளை ஈமான் கொள்வதன் அர்த்தத்தை தெளிவுபடுத்துவீர் .
3. மலக்குகளை ஈமான் கொள்வதற்கான ஆதாரங்களை முன்வைப்பீர்.
4. மலக்குகளின் சில பணிகளைக் குறிப்பிடுவீர்,
5. மலக்குகளைப் பார்த்து வெட்கி(த்து அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது நாணம் பேணி நடப்பீர்.
ஆரம்ப செயற்பாடு :
மலக்குகளைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?
"அல்லாஹ் மலக்குகளிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்கின்றான்".
(ஹஜ் : 75).
முதலாவது: மலக்குமார்கள் என்போர் யார்?
இரண்டாவது : மலக்குகளை ஈமான் கொள்ளல் என்பதன் கருத்து
மூன்றாவது :மலக்குளின் பணிகள்
நான்காவது: மலக்குகளை விசுவாசிப்பதனால் ஏற்படும் பிரதிபலன்கள்
மலக்குகளை ஈமான் கொள்வது அனைத்து முஸ்லிம்களினதும் கடமையாகும். இது ஈமானின் பிரதான தூண்களில் ஒன்றாகும். இதனைக் கொண்டே ஓர் அடியானின் ஈமான் செல்லுபடியாகிறது, அதற்கான ஆதாரம் பின்வருமாறு :
அல்லாஹ் கூறுகிறான் : (மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். எவறுக்கிடையிலும் நாம் வேறுபாடுகாட்டமாட்டோம். எங்கள் இரட்சகனே , ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள். (பகரா : 285).
ஈமானைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள் : ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்பபடியே நடைபெறும் என்பதையும் விசுவாசம் கொள்வதாகும் என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 102).
முதலாவது: மலக்குமார்கள் என்போர் யார்?
அவர்கள் பிரமாண்டமான படைப்பினம், ஒளியினால் அல்லாஹ் அவர்களைப் படைத்துள்ளான், அல்லாஹ் தமக்கு ஏவியவற்றில் அவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள், தமக்கு ஏவப்பட்டதை செயற்படுத்துவார்கள்.
மலக்குகள் பிரமாண்ட படைப்பு என்பதை அறிவிக்கும் ஆதாரங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறிய வார்த்தையாகும் : "(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்". (தக்வீர் : 20).
இரண்டாவது : மலக்குகளை ஈமான் கொள்ளல் என்பதன் கருத்து
ஒரு முஸ்லிம் மலக்குகளை ஈமான் கொள்வதை பின்வரும் விடயங்களின் மூலம் சாத்தியப்பத்திக்கொள்கிறான். :
அவர்கள் இருப்பை உண்மைப் படுத்தல்.
அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள, நாமறிந்துள்ள மலக்குகளின் பெயர்களை ஈமான் கொள்ளுதல்.
அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள, நாமறிந்துள்ள மலக்குகளின் பண்புகளை ஈமான் கொள்ளுதல்.
மூன்றாவது :மலக்குளின் பணிகள்
மலக்குகளுக்கு பல பணிகள் உள்ளன, அவற்றில் சில பின்வருமாறு :
1. வஹி இறக்குதல் , இது ஜிப்ரீல் (அலை) அவர்களின் பணியாகும்.
2. மழை பொழிய வைத்தல், இது மீகாஈல் (அலை) அவர்களின் பணியாகும்.
3. அடியார்களின் செயல்களைப் பதிந்து வைத்தல், அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். (இன்பிதார் : 10, 11).
4. உயிர்களை கைப்பற்றல், இது மலகுல் மௌத்தின் பணியாகும்.
5. மறுமையில் ஸூர் ஊதுதல், இது இஸ்ராபீல் (அலை) அவர்களின் பணியாகும்.
அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இன்னும் பல பணிகள் இடம்பெற்றுள்ளன.
நான்காவது: மலக்குகளை விசுவாசிப்பதனால் ஏற்படும் பிரதிபலன்கள்
மலக்குகள் மீதான நம்பிக்கை முஸ்லிமின் நடத்தையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது, அவற்றுள் சில :
1. மலக்குகளை முன்மாதிரியாகக்கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு முயற்சித்தல்.
2. நற்செயல்கள் மூலம் மமதையுடன் பெருமிதம் கொள்ளாதிருத்தல், ஏனெனில் மலக்குகள் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள், அவ்வாறிருந்தும் அவர்கள் வணக்கத்திலே தொடர்ந்து நிலைத்திருக்கின்றனர், எனவே அலட்சியப்போக்குள்ள, பாவியான மனிதனே வணக்கத்திற்கும், பாவமன்னிப்புக் கோரவும் மிகத் தகுதியானவர்கள்.
3. முதலில் அல்லாஹ்வை அஞ்சியும், பின்னர் எமது செயல்களைப் பதியும் மலக்குகளைப் பார்த்து வெட்கித்தும் அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் தூரமாக முயற்சித்தல்.
செயற்பாடுகள்:
செயற்பாடு (1) :நன்கு அவதானித்து விடையளிக்கிறேன்
அல்லாஹ் கூறினான் "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்". (அஹ்ஸாப் : 56).
இந்த வசனத்தில், அல்லாஹ் மலக்குகளின் ஒரு செயலைக் குறிப்பிட்டுள்ளான், அதில் அவர்களைப் பின்பற்றும் படி விசுவாசிகளுக்கு கட்டளையிட்டுள்ளான். அது என்ன செயல்?
செயற்பாடு (2) : விவாதித்து, கருத்துத் தெரிவிக்கிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "கல்வியைத் தேடுபவனைப் பார்த்து திருப்திப்பட்டதால் மலக்குகள் அவர்களைப் பாதுகாப்பதற்காக தமது இறக்கைகளைத் தாழ்த்துகின்றனர்" (ஆதாரம் : அபூதாவூத் 3643).
மலக்குகள் கல்வியைத் தேடுபவர்களை மதிப்பதை நீர் அறியும் போது- ஒரு மாணவன் என்ற ரீதியில் - உமது உணர்வுகளைக் கூறவும்.
செயற்பாடு (3) : தெளிவுபடுத்துவேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: "வெங்காயம், வெள்ளைப் பூண்டு, லீக்ஸ் போன்றவற்றை உண்டவர் எமது பள்ளிக்கு நெருங்க வேண்டாம், ஏனெனில் மனிதர்கள் நோவினை அடைவதிலிருந்து மலக்குகளும் நோவினை அடைகின்றனர்". (ஆதாரம் : முஸ்லிம் 1282)
இந்நபிமொழியினூடாக மலக்குகளுக்கு நீர் செய்ய வேண்டிய செயன்முறை சார்ந்த கடமைகளைத் தெளிவுபடுத்தவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. அல்லாஹ் மலக்குகளை ஒளியினால் படைத்துள்ளான்.
2. இஸ்ராபீல் (அலை) அவர்களின் பணி நபிமார்களுக்கு வஹி எத்திவைப்பதாகும்.
3. பூமிக்கு மழை பொழிவித்தல் ஜிப்ரீல் (அலை) அவர்களின் பணியாகும்.
4. மலக்குகளைப் பின்பற்றி வணக்க வழிபாடுகளில் ஈடுபட முயற்சிப்பது அவசியமாகும்.
கே 2 : பின்வருவனவற்றிற்கு ஒரு வசனம் அல்லது ஹதீஸில் இருந்து ஆதாரம் வழங்கவும்:
1. மலக்குகளை ஈமான் கொள்ளுதல்.
2. ஜிப்ரீல் (அலை) அவர்களின் பிரமாண்ட தோற்றம்.
கேள்வி :3 பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடையளிக்குக.
1. ஒரு முஸ்லிம் மலக்குகளை ஈமான் கொள்வதை சாத்தியப்படுத்துவது எவ்வாறு?
2 - மலக்குகள் மீதான நம்பிக்கையின் விளைவுகளில் ஒன்று: மமதையை உள்ளத்தை விட்டும் நீக்குதலாகும். இதை விளக்குக.
பாடம் நான்கு : வேதங்கள் மற்றும் இறைத்தூதர்கள் மீதான நம்பிக்கை மற்றும் அவற்றின் பிரதிபலன்கள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. வேதங்கள் மற்றும் இறைத்தூதர்களை ஈமான் கொள்வதன் அர்தத்தை தெளிவுபடுத்திடுவீர்.
2. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது போல் வேதங்கள் மற்றும் இறைத்தூதர்களின் பெயர்களைக் குறிப்பிடுவீர் .
3. பிற வேதங்களை விட அல்குர்ஆனுக்குள்ள சிறப்பியல்புகளை வேறுபடுத்திடுவீர் .
4. வேதங்கள் அருளப்படுதல் மற்றும் இறைத்தூதர்கள் அனுப்பப்படல் ஆகிய அருட்கொடைகளை உணர்ந்து நடப்பீர்
5. நபிமார்களின் நற்பண்புகளை முன்மாதிரியாகக் கொண்டு நடந்து கொள்வீர்.
இறை வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்)
இறைத்தூதர்களை நம்புதல் (ஈமான் கொள்ளல்)
இறைவேதங்களையும் இறைத்தூதர்களையும் நம்புவதால் ஏற்படும் விளைவுகள்
முதலாவது :வேதங்களை ஈமான் கொள்ளல்
1. வேதங்களை ஈமான் கொள்ளலின் அர்த்தம் மற்றும் அதன் சட்டம் :
வேதங்களை நம்புதல் என்பது அல்லாஹ் தனது தூதர்களுக்கு மக்களை நேர்வழிப்படுத்தவும், ஈருலக சுபீட்சத்தைக் பெற்றுக் கொடுக்கவும் வேதங்களை இறக்கினான் என உண்மைப்படுத்தி, ஏற்றுக் கொள்வதாகும்..
அல்லாஹ் இறக்கிய அனைத்து வேதங்களையும் பொதுப்படையாக ஏற்றுக் கொள்வது கட்டாயமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்". (நிஸாஃ : 136).
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்களை விரிவாக நம்பிக்கை கொள்வது அவசியமாகும். அவையாவன : இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸுஹுபுகள், தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர் வேதம், மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத் வேதம், ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல் வேதம், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆன்.
2. மிகச்சிறந்த வேதம் :
அல்குர்ஆனைப் பற்றி பின்வரும் விடயங்களை ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்வது அவசியமாகும் :
அது அல்லாஹ்வின் பேச்சு-வார்த்தை - என நம்பிக்கை கொண்டு, அதிலுள்ள அனைத்தையும் உண்மைப் படுத்துதல்.
அது திரிபுகள், மாற்றங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஏனைய வேதங்களோ திரிபு செய்யப்பட்டு விட்டன, குர்ஆனைத் தவிர அல்லாஹ்வுக்கு உறுதியாக சேர்க்கத்தக்க ஒரு வேதம் தற்போது நம் கரங்களில் இல்லை.
அந்த வகையில் அல்குர்ஆன் அல்லாஹ்வின் வேதங்களில் மகத்தானதும், இறுதியானதுமாகும். அது முன்னைய வேதங்களிலுள்ளவற்றை மாற்றக்கூடியது .
மேலும் அது ஒரு அற்புத வேதம் அதைப் போன்று எவறாலும் கொண்டு வரமுடியாது.
இரண்டாவது: இறைத்தூதர்களை ஈமான் கொள்ளல்.
1. இறைத்தூதர்களை ஈமான் கொள்ளுதல் என்பதன் கருத்தும் அதன் சட்ட நிலையும்:
இறைத்தூதர்களை நம்புதல் என்பது, அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட அழைப்புவிடுப்பதற்கு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு தூதர்களை அனுப்பினான் என்றும், அவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்கள் என்றும் உண்மைப்படுத்தி, ஏற்றுக் கொள்ளலாகும்.
அவர்களது பெயர்கள், மற்றும் எண்ணிக்கையை நாம் அறியாவிட்டாலும் பொதுப்படையாக அனைத்து நபிமார்களையும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "இதற்கு முன்னரும் சில தூதர்களையும் அனுப்பி அவர்களின் சரித்திரங்களையும் உமக்கு நாம் கூறியில்லோம் மற்றும் சில தூதர்களை அனுப்பி அவர்களின் சரித்திரங்களை நாம் கூற வில்லை.இன்னும் அல்லாஹ் மூஸாவுடன் உறுதியாக பேசியுமுள்ளான்" (நிஸாஃ 164).
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களை விரிவாக நம்பிக்கை கொள்வது அவசியமாகும். அவர்களின் எண்ணிக்கை 25 ஆகும்.
அதே போன்று நபிமார்கள் அனைத்துப் பாவங்கள், அசிங்கமான பண்புகளை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆகவே, பொய், மோசடி, புத்திக் கோளாறு போன்ற மோசமான குறைகள் இருப்பது அவர்களுக்கு அறவே சாத்தியமற்றதாகும் .
2. இறைத்தூதர்களில் சிறந்தவர் :
அனைத்து இறைத்தூதர்களிலும் மிகச் சிறந்தவர்கள் உலுல் அஸ்ம் (உறுதி மிக்கவர்கள்) எனப்படும் ஐவர் ஆகும் என்பதை - மாணவரச் சகோதரா- நீ அறிந்து கொள், ஏனெனில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எத்தி வைப்பதில் அதிகம் பொறுமை காத்தவர்கள் ஆவார்கள்.பிஇவர்கள் குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தல் இவ்வாறு குறிப்பிடுகிறான்: "(நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்". (அஹ்ஸாப் : 7).
இறைத்தூதர்களில் மிகச் சிறந்தவர் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவார்கள். தூதர்களில் அவர் இறுதியானவர்.அவருடைய தூது மறுமை வரை அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகும்.
மூன்றாவது : வேதங்களையும் இறைத்தூதர்களையும் விசுவாசம் கொள்வதினால் ஏற்படும் விளைவுகள்.
வேதங்களையும் இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொள்வதில் பல நல்ல விளைவுகள் உள்ளன அவற்றுள் சில :
1. எமக்கு நேர்வழிகாட்டுவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பியதினால் அல்லாஹ்வின் மகத்தான கருணையை ஆழமாக நம்புதல்.
2. வேதங்களினூடாகவும் நபிமார்கள் அறிவித்துத்தந்ததினூடாவும் அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல்.
3. வேதங்கள் தெளிவுபடுத்தியதன் அடிப்படையிலும் இறைதூதர்கள் நடைமுறைபடுத்தி காட்டியதற்கினங்க அல்லாஹ்வை தெளிவான முறையில் வணங்க வகை செய்தமை.
4. நபிமார்களின் குணங்கள் பண்புகள் மற்றும் பணிகளை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்றி ஒழுகுதல்
செயற்பாடுகள்:
செயற்பாடு (1) : நபிமார்களின் பெயர்களை எழுதவும் :
ஸூரா அன்ஆமின் 83 முதல் 86 வரையிலான வசனங்களில் 18 இறைத்தூதர்களுடைய பெயர்களை அல்லாஹ் கூறியுள்ளான், இவ்வசனங்களை வாசித்து அவற்றில் இடம்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்களைக் கண்டறியவும்.
செயற்பாடு (2) : கண்டறிந்து பதிலளிப்பேன் :
நபிமார்களின் வாழ்க்கை, பண்புகளில் பின்பற்ற பல இடங்கள் உள்ளன, நற்குணங்கள் அவற்றில் ஒன்றாகும், தனது நபிமார்களின் குணங்களில் ஒரு பகுதியை அல்லாஹ் கூறியுள்ளான். அவற்றில் உமக்கு நினைவிலிருப்பவற்றை பின்வரும் அட்டவணையில் எழுதுக.
குணம் / நபி
கொடை / இப்ராஹீம் (அலை)
பொறுமை. / - - - - - - - -
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் மிகச் சிறந்தவர். ()
2. நபி தாவூது (அலை) அவர்களுக்கு ஸபூர் வேதம் அருளப்பட்டது. ()
3. அனைத்து நபிமார்களினதும் பெயர்கள் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
நபிமார்களின் பணிகள், பண்புகளைப் பின்பற்றி ஒழுகுவது அறவே சாத்தியமற்றதாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. அனைத்து நபிமார்களும் பின்வரும் குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர் என்று நம்ப வேண்டும்:
(புத்திக் கூர்மை - அதிக பணம் - நோயின்மை -)
2. உறுதி மிக்க தூதர்களில் உள்ளோர் :
(இப்ராஹீம் மற்றும் இஸ்மாஈல் - நூஹ் மற்றும் ஈஸா - ஆதம் மற்றும் மூஸா) அலைஹிமுஸ்ஸலாம்.
3. நோயுடன் பொறுமையாக இருக்க நாம் பின்பற்ற வேண்டிய நபி :
(ஸகரிய்யா (அலை) - அய்யூப் (அலை) - இத்ரீஸ் (அலை))
4. பிற வேதங்களை விட்டும் அல்குர்ஆன் தனித்துவம் பெறும் விடயம் :
(அல்லாஹ்வின் பேச்சு - ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றமை - திரிபு படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை)
கே 3 : தூதர்களை அனுப்புதல் மற்றும் வேதங்கள் இறங்குதல் ஆகியவை மனிதனுக்கு அல்லாஹ் செய்துள்ள மிகப்பெரிய அருள்களில் ஒன்றாகும்? விவரிக்குக.
கேள்வி 4: பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடை தருக.
1 - உமக்கு பின்பற்ற முடியுமான நபிமார்களின் மூன்று குணங்களை அடையாளம் காணவும்.
2. அல்குர்ஆனின் மகத்துவம் பற்றி ஓர் ஆதாரத்தை எழுதுக.
ஐந்தாம் பாடம்: : மறுமை நாளை நம்பிக்கை கொள்வதும் அதன் விளைவுகளும்.
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. மறுமை நாளை நம்பிக்கை கொள்வதன் கருத்தை தெளிவுபடுத்துவீர்.
2. மறுமையின் இடங்களைத் -படித்தரங்களை -தெளிவுபடுத்துவீர்.
3. மறுமையை நம்பிக்கை கொள்வதன் அவசியத்தை உணர்ந்து நடப்பீர் .
4. நரகை விட்டும் பாதுகாப்புப் பெற்று சுவனத்தை அடைய செயல்படுவீர்.
எமது உலக வாழ்வு நாம் பயிரிடும் நிலத்தைப் போன்றதாகும். உலகில் நல்லதை விதைத்தவர் மறுமையில் நல்லதையே அறுவடை செய்வார், மறுமையில் கூலி சுவனம் அல்லது நரகமாகும். இப்பாடத்தில் நாம் மறுமையின் முக்கிய சில நிகழ்வுகளைக் கற்போம்.
பின்வரும் இறைவசனம் பெரிய எழுத்தினால் தெளிவாக எழுதப்பட்ட ஒரு பதாதை ' :
"(நபியே!) மேலும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையைஉறுதியாக நம்புவார்கள்". (பகரா : 4)
முதலாவது:மறுமை நாளை நம்புதல் என்பதன் கருத்து :
மறுமை நாளின் படிநிலைகள்
மறுமை நாளை நம்புவதால் ஏற்படும் நல்ல -விளைவுகள்-
முதலாவது : மறுமை நாளை நம்புதல் என்பதன் கருத்து :
மறுமைநாளை நம்பிக்கை கொள்வது ஈமானின் ஐந்தாவது தூணாகும். அதாவது , மரணத்திற்குப் பின் நிகழ்வதாக அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்துள்ள அனைத்தையும் உண்மைப்படுத்தி, ஏற்றுக் கொள்ளல் என்பது இதன் கருத்தாகும்.
இரண்டாவது : மறுமை நாளின் படிநிலைகள் :
மரணத்திற்குப் பின் நிகழும் பின்வரும் விடயங்களை நம்புவதை மறுமை நாளை ஈமான் கொள்ளுதல் என்பது உள்ளடக்கியுள்ளது :
1. மண்ணறையின் சோதனை : மரணித்தவரிடம் மலக்குகள் இறைவன் பற்றியும் மார்க்கம் மற்றும் நபி குறித்தும் விசாரணை செய்வதைக் இது குறிக்கும்.ஒரு முஃமினைப் பொறுத்தவரை அவன் மலக்குகளின் கேள்விகளுக்கு எவ்வித தடுமாற்றமுமின்றி பதிலளிப்பான்.அவன் மீண்டும் மறுமை விசாரணைக்காக எழுப்பாட்டப்படும் வரை மண்ணரையில் இன்பமாக இருப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். நிராகரிப்பாளன், நயவஞ்சகன் பொறுத்தவரை மலக்குகளின் கேள்விகளுக்கு : "எனக்குத் தெரியாது" எனக் கூறுவான், மறுமை வரை மண்ணறையில் அவன் தண்டிக்கப்படுவான்.
2. மீள் எழுப்பப்படல் இஸ்ராபீல் (அலை) அவர்களுக்கு இரண்டாவது ஸூரை ஊதுமாறு பணிக்க, அவரும் ஊதுவார், உடனே மக்கள் தமது மண்ணறைகளிலிருந்து அகிலத்தாரின் இரட்சகனின் பக்கம் எழுந்து வருவார்கள், பின் அவன் அவர்களை விசாரணை செய்து, அவர்களது செயல்களுக்குத் தகுந்த கூலியை வழங்குவான்.
3. ஒன்று திரட்டுதல் : இது மக்கள் தத்தமது மண்ணறைகளிலிருந்து வெளியேறியதன் பின் விசாரணைக்காக அவர்களை ஒன்று திரட்டுவதைக் குறிக்கின்றது.
4. பதிவேடுகளும் தராசும் : செயல்கள் பதியப்பட்ட ஏடுகள் வழங்கப்பட்டு, அடியார்களுக்கு அவர்களின் செயல்பாடுகளை அல்லாஹ் காண்பிப்பான். பின்னர் அச்செயல்களை நிறுப்பதற்காக தராசுகள் நிறுவப்படும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "பட்டோலைகள் விரிக்கப்படும் போது" (தக்வீர் : 10). மேலும் கூறுகின்றான் : "இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது". (அன்பியாஃ : 47).
5. ஸிராத் : இது நரகின் மேல் நிறுவப்பட்டுள்ள துல்லியமான பாலமாகும், மக்கள் அதை அவர்களது நற்செயல்களுக்கு ஏற்ப கடந்து செல்வார்கள், அதிலிருந்து விழுந்தவர் நரகில் வீழ்வார், கடந்தவர் சுவனம் நுழைவார்.
6. சுவனம் மற்றும் நரகம் : சுவனம் அல்லாஹ் தனது நல்லடியார்களுக்காக தயாரித்து வைத்திருக்கும் வீடாகும். இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில் : (ஹிஜ்ர் : 45). "நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும்,நீரருவிகளிலும் இருப்பார்கள்.". நரகம் என்பது அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களுக்குத் தயாரித்துள்ள வீடாகும், இது குறித்து அவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பாளர்கள் அனைவரையும் நரகில் ஒன்று சேர்க்கக்கூடியவனாவான்.". (நிஸாஃ : 140).
மறுமை நாளை நம்புவதால் ஏற்படும் நல்ல விளைவுகள் :
மறுமை நாளை நம்பிக்கை கொள்வதில் பல நல்ல விளைவுகள் உள்ளன, அவற்றுள் சில :
1. மறுமையின் விசாரணையின் காரணமாக இவ்வுலகில் மோகம் கொள்வதிலிருந்து தடுக்கப்படுதல்.
2. நற்செயல்கள் புரிவதில் ஆர்வம் அதிகரித்தல்.
3. பாவங்கள் செய்வதில் அச்சம் அதிகரித்தல்.
4. தனது சொல், செயல்களில் முஸ்லிம் பொறுப்புணர்வை உணர்தல்.
5.ஒரு முஃமின் மறுமையில் கிடைக்கும் பேரின்பத்தை எதிர்பார்த்திருப்பதால் இவ்வுலகில் அவனுக்கு நிகழும் இழப்புகளுக்காய் கவலைப்படாமல் இருப்பான்.
செயற்பாடுகள் :
செயற்பாடு (1): தேடிப்பார்த்து, விடையளிக்கிறேன்:
மறுமை நாளை விசுவாசித்தல் புனித குர்ஆனில் மிக அதிகமாக குறிப்பிடப்பட்ட ஈமானின் அடிப்படைகளுள் ஒன்றாகும். அது மாத்திரமின்றி அல்லாஹ் இந்த நாளை பல பெயர்களில் அழைத்துள்ளான். இது அதன் கடுமையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
மறுமை நாளின் பெயர்களில் பின்வருவன அடங்கும் என்பதற்கான சான்றுகளை நீர் மனனமிட்டுள்ளதிலிருந்து கூறவும் :
பெயர்/அது குறிக்கும் அர்த்தம்
இறுதி நாள்
தீர்ப்பு நாள்
கூலி வழங்கப்படும் நாள்
திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
செயல்பாடு (2) : சக மாணவர்களுடன் கலந்து பதிலளிப்பேன் :
உமது ஆசிரியரின் பங்குபற்றுதலுடன் பின்வரும் சம்பவத்தை வாசித்து ., பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
அபிசீனியா நாட்டிலிருந்து திரும்பி வந்த புலம்பெயர்ந்தவர்களிடம் -முஹாஜிர்களிடம் - நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அபீ ஸீனியா நாட்டில் நீங்கள் கண்ட அதிசயங்களை எனக்குக் கூற மாட்டீர்களா?", அப்போது சில வாலிபர்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே, நாம் அமர்ந்திருக்கும் போது அவர்களில் துறவிகளில் ஒரு மூதாட்டி தலையில் ஒரு வாளி தண்ணீரைச் சுமந்து கொண்டு எங்களைத் தாண்டிச் சென்றாள். அந்நாட்டு வாலிபன் ஒருவனைத் தாண்டிச் செல்லும் போது அவளுடை தோள்புயத்திற்கிடையில் ஒரு கையைப் போட்டு அவளைத் தள்ளி விட்டான். அவள் முகம்குப்புற விழுந்து, வாளியும் உடைந்து விட்டது. அவள் எழுந்ததும் அவ்வாலிபனைப் பார்த்து பின்வருமாறு கூறினாள் : "அல்லாஹ் குர்ஸியை வைத்து, முன்னோர்கள், பின்வருவோர் அனைவரையும் ஒன்று சேர்த்து, கைகளும் கால்களும் தாம் செய்தவற்றைக் கதைக்கும் போது, எனக்கும் உனக்கும் இடையில் நடைபெற்ற இந்நிகழ்வைப் பற்றி அல்லாஹ்விடம் எப்படி இருக்கும் என்பதை குதரே நீ நிச்சயமாக அறிந்து கொள்வாய்". அப்போது நபியவர்கள் "அவள் உண்மையே கூறினாள், உண்மையே கூறினாள்" என்று கூறினார்கள். (ஆதாரம் : இப்னுமாஜா 4010).
1. இந்த நபிமொழிக்குப் பொருத்தமான தலைப்பொன்று கூறுக.
2. இச்சம்பவத்திலிருந்து மறுமையை நம்பிக்கை கொள்வதில் உள்ள நல்ல விளைவைக் கண்டுபிடிக்கவும்.
செயல்பாடு (3) : முடிவுகளைப் பெறுவேன் :
திருக்குர்ஆன் மறுமை நாளில் உயிர்த்தெழுதலின் தெளிவான பகுத்தறிவு ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், கீழே உள்ள ஒவ்வொரு பகுத்தறிவு ஆதாரத்தையும் அதைக் குறிப்பிடும் வசனத்துடன் இணைக்குக :
அல்குர்ஆன் வசனம்
அல்லாஹ் கூறினான் "அவனே முதன் முறையாகப் படைத்து பின்னர் அதனை மீட்டுகின்றான்.அது அவனுக்கு இலகுவானது.". (ஸுறா அர்ரூம் : 27)
அல்லாஹ் கூறினான் "நபியே நிச்சயமாக நீர் பூமியை வரண்டு போனதாகக் காண்பதும் பின்னர் அதில் நாம் மழையை இறக்கினால் அது செழித்து வளர்வதும்,அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.(இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்". (புஸ்ஸிலத் : 39).
அல்லாஹ் கூறினான் "நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றைப்படைத்தில் சோர்வடையாத அல்லாஹ்,மரணிததோரை உயிர்பிப்பபதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா?ஆம்!நிச்சயமாக அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.". (அஹ்காப் : 33). ஆதாரம்
பூமி வரண்டதன் பின் மழை பொழியச் செய்வதன் மூலம் அதனை உயிர்ப்பித்தல்.
வானங்கள் பூமியைப் படைத்தல்.
மனிதர்களை மரணத்திற்குப் பின் மீள உயிர்ப்பிப்பது அவர்களை முதலில் படைப்பதை விட மிக இலகுவானது
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ((✓)) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. மக்கள் தத்தமது நற்செயல்களுக்கு ஏற்ப ஸிராதைக் கடந்து செல்வார்கள்.
2. இரண்டாவது ஸூர் ஊதும் போது அனைத்து படைப்பினங்களும் மரித்து விடும்.
3. விசுவாசி மறுமை வரை மண்ணறையில் இன்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பான்.
4. ஏடுகளைப் பெற்றுக் கொண்ட பின் செயல்கள் நிறுக்கப்படும்.
கே 2 : பின்வரும் சொற்களை பொருத்தமான சொற்றொடர்களுக்கு முன்னால் வைக்கவும்:
(ஒன்று திரட்டல் - மண்ணறை - மீள எழுப்பப்படல் - ஸிராத்)
1. மண்ணறைதான் மறுமையின் முதல் வீடு.
2. ஸிராத் என்பது நரகத்திற்கு மேல் போடப்பட்டுள்ள பாலமாகும்.
3. ஹஷ்ர் என்பது விசாரணைக்காக மக்களை ஒன்று சேர்த்தல்.
4. பஃஸ் என்பது மரணித்தோரை மண்ணறையிலிருந்து உயிர்ப்பித்தலாகும்.
Q3: பின்வரும் இரண்டு வினாக்களுக்கு பதிலளிக்கவும்:
1. மறுமை பற்றிய நம்பிக்கையை ஒரு முஸ்லிம் எவ்வாறு நிலைநிறுத்துவான் ?
2. முஸ்லிம்கள் தடம்புரளாமல் இருப்பதில் மறுமை மீதான நம்பிக்கை செலுத்தும் தாக்கத்தை தெளிவு படுத்துக.
ஆறாம் பாடம் : விதியை நம்புதலும், அதன் தாக்கங்களும்/விளைவுகளும்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை கற்ற பின் நீங்கள்:
1. விதியை நம்புதலின் கருத்தை தெளிவுபடுத்துவீர் .
2. விதியை நம்புவதன் அர்த்தம் செயல்களை விடுவதல்ல என்பதற்கான சான்றை முன்வைப்பீர் .
3. விதியை நம்புவதால் எற்படும் நல்ல விளைவுகளைத் தெளிவுபடுத்துவீர் .
முஸ்லிமின் வாழ்வில் விதியை நம்புவதன் அவசியத்தை உணர்நது நடப்பீர்.
5. அல்லாஹ்வின் விதி, ஏற்பாட்டைப் பொருந்திக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு :
மாணவரே, நாம் ஈமானின் தூண்களில் ஆறாவதும் இறுதியுமான தூணில் உள்ளோம். இதர தூண்களை நினைவுபடுத்தி, அவற்றை பின்வரும் அமைப்பில் எழுதவும் :
ஈமானின் அடிப்படைகள்
முதலாவது: விதியை (கழாகத்ரை) ஈமான் கொள்வதன் கருத்து:
விதியை நம்புதல் என்பது :இப்பிரபஞ்சத்தில் நிகழும் நல்லவை கெட்டவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்து பதிவு செய்துள்ளான் என்றும் அவற்றில் அவனின் நாட்டம் உள்ளது என்றும் அவற்றை உருவாக்கியவன் அவனே எனவும் உறுதியாக நம்பி உண்மைப்படுத்துவதாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : "நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் திட்டப்படியே படைத்திருக்கிறோம்". (அல் கமர் : 49)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உபதேசிக்கும் போது பின்வருமாறு கூறினார்கள் : "அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன". (ஆதாரம் : அஹ்மத் 2669, திர்மிதி 2516).
இரண்டாவது : கழாகத்ரை நம்புவதும் தேவையான காரணகாரியங்களை மேற்கொள்வதும்.
விதியை நம்புவது, வாழ்க்கைக்குத் தேவையான காரியங்களைத் தேடி முயற்சித்து எடுப்பதற்கு முரணாகாது. ஏனெனில் மனிதன் முயற்சியின் மூலம் அல்லாஹ் அவனுக்கு நிர்ணயித்ததையே பெற்றுக் கொள்கின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உங்களில் எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமாக அல்லது நரகமாக என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. எனக் கூறினார்கள். உடனே ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம்விட்டுவிடலாமா? என்றதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் அவரவர் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளனரோ அது எளிதாக்கப்படும்" என்று கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 1362, முஸ்லிம் 2647).
மனிதன் தனக்கு அல்லாஹ் நிர்ணயித்துள்ளதை அறிய மாட்டான். எனவே தான் அறியாத ஒன்றை வைத்து எவ்வாறு விதியை குற்றம் காணமுடியும் ?ஆகவே தனக்கு நன்மை சேர்க்கும் விடயங்களில் முயற்சிப்பது அவன் மீதுள்ள பொறுப்பாகும்.
மூன்றாவது:கழா கத்ரை நம்புவதால் கிடைக்கும்; நல்ல விளைவுகள் :
விதியை நம்புவதால் பல நல்ல விளைகள் ஏற்படுகின்றன, அவற்றுள் சில பின்வருமாறு : :
1. ஆழ்ந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும் சிரமங்களை அணுகுதல்.
2. வஞ்சகம், பொறாமை போன்ற பல சமூக நோய்களைக் கையாள்தல்.
3. அல்லாஹ்வின் விதிகளைப் பார்த்து பதற்றமடைந்து பொறுமையிழக்காமல், திருப்தியுடன் பொறுமை காத்தல்.
கத்ரை ஏற்ற ஒரு முஃமின் அவனுக்கு கிடைக்கும் எந்த அருளாயினும் அது அல்லாஹ்வின் புரத்திலிருந்தே கிடைத்தது என ஆழமாக நம்புவதினால் அவனில் பணிவு ஏற்படுதல்;
செயற்பாடுகள் :
செயல்பாடு (1) : ஆலோசனை வழங்குவேன்:
விருதொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்த உமது நண்பருக்கு , நாட்கள் கடந்தும், எவ்வளவு முயன்றும் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை, அதற்காக அவர் மிகவும் வருத்தப்பட்டார் .
நீர் பாடத்தில் கற்ற பிரகாரம் இந்த நண்பருக்கு ஓர் உபதேசத்தை எழுதவும் .
செயல்பாடு (2) : யோசித்து பதிலளிப்பேன் :
நபி நூஹ் (அலை) அவர்கள் ஒரு கப்பலைக் கட்டினார், அதைக் கொண்டு அல்லாஹ் அவரை வெள்ளத்திலிருந்து காப்பாற்றினான், மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கான தனது இடம்பெயர்வை முன்கூட்டியே திட்டமிட்டார்கள், மேற்கண்ட இரு காரணிகளும் இல்லாமலேயே அல்லாஹ்வால் அவ்விருவருக்கும் உதவ முடியும்.
நபி நூஹ் (அலை) அவர்களும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் காரண காரியங்களை ஏன் தமது வாழ்வில் பின்பற்றி நடந்தார்கள் ?
இதிலிருந்து பெறப்படும் படிப்பினை யாது?
மதிப்பீடு
கே1 : பின்வருவனவற்றில் சரியான விடையை தேர்வு செய்து இடைவெளியை நிரப்புக :
1. விதியை நம்புவது ஈமானின் ........................... ல் ஒன்றாகும்.
(முழுமைப்படுத்தும் அம்சங்கள் - ருகுன்)
2. அல்லாஹ் தனது நல்லடியார்களுக்கு ....................................... விதித்துள்ளான்.
(நன்மை மற்றும் தீமையை - தீமையைத் தவிர்த்து நன்மையை மாத்திரம் -)
3. இறை விதியை ஈமான் கொள்ளல் ...........................................................
(காரணகாரியங்களை மேற்கொள்வதோடு முரண்படாது - காரணகாரியங்களை கைவிடுவதை வேண்டிநிற்கிறது.)
கே 2 : பின்வரும் சந்தர்ப்பங்களில் விதியின் மீதான நம்பிக்கை முஸ்லிம் மீது ஏற்படுத்தும் விளைவை விளக்குக:
1. அல்லாஹ் அவருக்கு ஓர் அருளை வழங்கினால்.
2. ஏதாவதொரு சோதனைக்குட்பட்டால்.
3. தன்னை விட தன் அயலவர் அதிக சொத்துள்ளவராக இருப்பதைக் கண்டால்.
Q3: தைரியமும் அமைதியும் விதியின் மீதான நம்பிக்கையுடன் தொடர்புடையது. அதனைத் தெளிவுபடுத்துக.
ஹதீஸும் நபியவர்கள் பற்றிய வருணனையும்
முதலாம் பாடம்: நபி ﷺ அவர்களும், அவரின் முக்கிய பண்புகளும்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. நபி ﷺ அவர்களது பரம்பரையின் மகிமைையை தெளிவுபடுத்துவீர்.
2. நபி ﷺ அவர்களின் மனைவியர் பற்றியும், அவரது பிள்ளைகள், உறவினர்கள் பற்றியும் குறிப்பிட்டு காட்டுவீர்
3. நபியவர்களின் உடல் மற்றும் குணம் சார் பண்புகளைக் குறித்து ஒ ரு சிறு குறிப்பை எழுதுவீர்.
4. நபி ﷺ அவர்களின் குணங்கள் குறித்த ஆதாரங்களை எடுத்துக்கூறுவீர்.
5. நபியவர்களின் பண்பாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பீர்.
நபி ﷺ அவர்களைப் பற்றிய அறிமுகம்
நபி ﷺ அவர்களின் பரம்பரை
நபி ﷺ அவர்களின் பிறப்பு
நபி ﷺ அவர்களின் மனைவியர்
நபி ﷺ அவர்களின் பிள்ளைகளும், குடும்பத்தார்களும்
நபி ﷺ குணம், உடல் உடல் மற்றும் பண்பாடுகள் குறித்த ஒரு வருணனை.
நபி ﷺ அவர்களின் பரம்பரையினரும் அவர்களின் பெயர்களும்:
அரேபியர்களின் சிறந்த கோத்திரத்தில் நபியவர்களைப் பிறக்கச் செய்து அல்லாஹ் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளான். அவரின் தந்தை அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் அல்குரஷீ என்பதாகும். அவரின் தாயார் ஆமினா பின்த் வஹப் என்பதாகும். இவர் குரைஷியரின் ஸஹ்ரா குலத்தைச் சேர்ந்தவராவார். நபி ﷺ அவர்களின் தாயும், தந்தையும் குரைஷிக் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள். இருவரின் பரம்பரையும் இஸ்மாஈல் (அலை) அவர்கள் வரை நீண்டு செல்கிறது.
நபி ﷺ அவர்களுக்கு அஹ்மத், ஹாஷிர், ஆகிப் என பல பெயர்கள் உள்ளன.
நபி ﷺ அவர்களின் பிறப்பும், இறப்பும்:
நபி ﷺ அவர்கள் கி.பி 571ம் ஆண்டு யானை வருடத்தில் மக்காவில் பிறந்தார்கள். ஹஜ்ரி 11ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 12ம் திகதி திங்கட்கிழமை (கி.பி633) மதீனாவில் மரணித்தார்கள். மரணிக்கும் போது அவருக்கு வயது 63 ஆகும்.
நபி ﷺ அவர்களின் மனைவியர்:
நபி ﷺ அவர்களின் மனைவியரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, அவர்களை முஃமின்களின் அன்னையராக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான், "நம்பிக்கையாளர்களுக்கு தங்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்.அவரது மனைவியர் அவர்களின் அன்னையராவார்'." (ஸுறா அல் அஹ்ஸாப் : 6) அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:
1. ஹதீஜா பின்த் ஹுவைலித் (ரழியல்லாஹு அன்ஹா ).
2. ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா ).
3. ஆஇஷா பின்த் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹா ).
4. ஹஃப்ஸா பின்த் உமர் (ரழியல்லாஹு அன்ஹா ).
5. ஸைனப் பின்த் ஹுஸைமா (ரழியல்லாஹு அன்ஹா ).
6. உம்மு ஸலமா ஹின்த் பின் அபூ உமைய்யா (ரழியல்லாஹு அன்ஹா . 7. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா ). 8. ஜுவைரிய்யா பின்த் அல்ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹா ). 9. உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ ஸுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹா ). 10. ஸஃபிய்யா பின்த் ஹுயைய் இப்னு அஹ்தப் (ரழியல்லாஹு அன்ஹா ). 11. மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹா ).
நபி ﷺ அவர்களின் பிள்ளைகளும், குடும்பத்தார்களும்:
1. நபி ﷺ அவர்களின் ஆண் பிள்ளைகள்: காஸிம், அப்துல்லாஹ், இப்றாஹீம். இவர்கள் மூவரும் சிறுவயதிலே மரணித்துவிட்டார்கள். அவரின் பெண் பிள்ளைகள்: ஸைனப், ருகையா, உம்மு குல்ஸூம், ஃபாதிமா ஆகியோராவர். நபியவர்களின் அனைத்துப் பிள்ளைகளும் ஹதீஜா (ரழி) அவர்களுக்கு பிறந்தவர்களாவர். இப்றாஹீம் மாத்திரம் அவரின் மனைவியான மாரியா அல்கிப்திய்யா (ரழி) அவர்களுக்கு பிறந்தவராவார்.
2. நபி ﷺ அவர்களின் நெருங்கிய குடும்பத்தார்களில் சிலர்: சிறிய தந்தை ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப், சிறிய தந்தை அப்பாஸ், சிறிய தந்தையின் மகன் அலீ இப்னு அபூதாலிப், சிறிய தந்தையின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோராவர்.
நபி ﷺ அவர்களின் உடல் தோற்றம் :
நபி ﷺ மனிதர்களில் மிக அழகானவராகவும் மிக அழகிய தோற்றமுடையவராகவும் இருந்தார்கள்.வெள்ளை நிறத்தவராகவும், பிரகாசமான முக அமைப்பைக் கொண்டவராகவும், எப்போதும் புண்முறுவல் பூத்தவராகவும் இருந்தார்கள் . நடுத்தர உயரமும் ,விரிந்த மார்பும் கொண்டவராகவும் இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் , அடர்த்தியான தாடியும் கொண்டிருந்தார்கள்.
நபி ﷺ அவர்களின் குணங்கள்:
நபி ﷺ அவர்கள் மனிதர்களில் மிகவும் அழகிய நற்குணமுடையவர்களாக இருந்துள்ளார்கள். இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில்: "நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்." ஸுறா அல்கலம் :4) இதுவே மக்கள் நபியவர்களுடன் அன்பாக இருக்கவும், அவர்கள் இஸ்லாத்தில் நுழையவும் காரணமாக இருந்தது. நபி ﷺ அவர்களின் சிறந்த குணங்களில் சில வருமாறு:
1. தாரளமனப்பான்மையும், துணிவும் . அனஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் குறிப்பிடுகிறார்கள், "நபி ﷺ அவர்கள் மனிதர்களில் மிக அழகானவர்களாகவும், தாராள மனமுடையவர்களாகவும் (தயாள சிந்தையுடையவர்களாகவும்) , வீரமிக்கவர்களாகவும் இருந்தார்கள்." (நூல்: புஹாரி 2875)
2.சகிப்புத்தன்மையும் இங்கிதமும் -(நலினமும்) ஆஇஷா (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்த தில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்)." (நூல்: புஹாரி 6853, முஸ்லிம் 2328)
3. பணிவு நபி ﷺ அவர்கள் தன் தோழர்களுடன் நண்பன், சகோதரன், தந்தை என்ற நிலையிலே வாழ்ந்துள்ளார்கள். சிறியவர்கள், பெரியவர்கள் என பாரபட்சமின்றி அனைவருடனும் பழகியுள்ளார்கள். பொது மக்களைப் போன்று உண்டு, உடுத்து, பிரயாணம் செய்துள்ளார்கள்.
4. பொறுமை: நபி ﷺ அவர்கள் மக்காவில் வாழும் போது குறைஷியர்கள் நோவினை செய்யும் போதெல்லாம் பொறுமையாக இருந்துள்ளார்கள். மதீனாவுக்கு வந்த பின் யூதர்கள், முனாஃபிக்குகள் போன்றோரின் தந்திரங்கள், ஏமாற்றுகள் போன்றவற்றையும் சகித்து, பொறுமைகாத்துள்ளார்கள். இவர்களிடமிருந்து அல்லாஹ் நபி ﷺ அவர்களைப் பாதுகாத்துள்ளான்.
மக்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கும் போதும், மக்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கும் போதும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போதும் பொறுமைகாத்துள்ளார்கள்.
அவ்வாறே, பிள்ளைகள் மரணிக்கும் போதும், ஏழ்மை, நோய் போன்ற பல உலக துன்பங்களின் போதும் பொறுமையாக இருந்துள்ளார்கள்.
5. மன்னிக்கும் தண்டிக்காது இருத்தலும் : தனக்கு நோவினை செய்த அனைவரையும் நபி ﷺ அவர்கள் மன்னித்துள்ளார்கள். மக்கா வெற்றியின் போது தனக்கு நோவினை செய்து, தனக்கு எதிராக பல போர்களைத் தொடுத்தோரை எதுவும் செய்ய முடியும் எனும் நிலையில் இருக்கும்ப போது கூட அவர்கள் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1): ஆய்வு செய்து முடிவுகளைப்பெறுவேன்.
நபி ﷺ அவர்களின் பெயர்களிலும் அவரின் பண்புகள் வெளிப்படுகின்றன. 'அல்முகஃப்ஃபீ - பின்துயர்பவர்' என்பது அவரின் ஒரு பெயராகும். இதில், ஏகத்துத்தின் பக்கம் மக்களை அழைப்பதில் தனக்கு முன் சென்ற நபிமார்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர் எனும் பண்பு புதைந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து, பின்வரும் நபியவர்களின் பெயர்களுக்கான பொருத்தமான பண்புகளைக் குறிப்பிடுக.
பெயர்
நபிய்யுர் ரஹ்மா
முஹம்மத்
அஹ்மத்
ஆகிப்
நபிய்யுத் தவ்பா பெயருக்கான காரணம் நபிமார்களில் இறுதியானவர். அவருக்குப் பின் வேறு நபிமார்கள் வரமாட்டார்கள். நபியவர்களின் சிறந்த் பண்புகளின் காரணமாக தனக்கு முன் சென்ற, பின்னால் வர இருக்கின்றவர்களின் பாராட்டுக்குரியவர். நபியவர்கள் தனது இரட்சகனை புகழ்பவர்களில் அதிகம் புகழும் ஒருவராக இருந்ததினால் அவர் நற்பண்புகளின் மிக உயர்ந்த நிலைகளை அடைந்திருந்தார்கள், அல்லாஹ்விடம் அதிகமாக பாவமன்னிப்புக் கேட்பவராக இருந்துள்ளார். இவரை அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்குமான அருட்கொடையாக அனுப்பியுள்ளான்.
செயற்பாடு (2): நண்பரோடு சேர்ந்து, முடிவுகளை வெளிக்கொணர்வேன்.
உமது நண்பரோடு சேர்ந்து, பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் குறிப்பிடும் நபி ﷺ அவர்களின் பண்புகளை வெளிக்கொணர்க.
ஹதீஸ்
அல்லாஹ் குறிப்பிடுகிறான். "உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் வருத்தத்தையளிக்கிறது. உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்." (ஸூறா அத்தவ்பா : 128)
அல்லாஹ் கூறுகிறான்: " (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்." (அல்குர்ஆன் 03:159)
அனஸ் ரழியல்லாஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள், "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள்." (நூல்: முஸ்லிம் 2312)
அலீ இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள், "யுத்தத்தில் கடினமான சூழல் ஏற்படும் போதும், இரு தரப்பினரும் போரிடும் போதும் நாம் நபி ﷺ அவர்களிடம் தஞ்சம் புகுவோம்." (நூல்: அஹ்மத் 654). நபி ﷺ அவர்களின் குணங்கள் இரக்கம் காட்டுதல் மென்மையும் நளினமும் கொடையும் தயாளமும் வீரம்
மதிப்பீடு /கணிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. நபி ﷺ அவர்கள் எப்போதும் புன்முறுவலுடன் இருப்பார்கள். ( )
2. நபி ﷺ அவர்கள் உயரமானவராகவும், விரிந்த தோள்புஜத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள் . ( )
3. மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு நபி ﷺ அவர்களின் நற்குணங்களின் தாக்கமே காரணமாக இருந்துள்ளது. ( )
4. யுத்த களங்களில் நபி ﷺ அவர்களின் வீரம் வெளிப்பட்டுள்ளது. ( )
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நபி ﷺ அவர்கள் பிறந்த ஆண்டு:
(கி.பி 517 - கி.பி 751 - கி.பி 571)
2. நபி ﷺ அவர்களின் பெயர்களில் ஒன்று:
(ஆகிப் - காஸிம் - அப்துல்லாஹ்)
3. நபி ﷺ அவர்கள் மரணிக்கும் போது, அவரின் வயது:
(53 வயது - 63 வயது - 73 வயது)
கேள்வி 3: நபியவர்களின் பின்வரும் பண்புகளைக் காட்டக் கூடிய சந்தர்ப்மொன்றை குறிப்பிடுக.
1. நபி ﷺ அவர்களின் தாராளத் தன்மை.
2. நபி ﷺ அவர்களின் மன்னிப்பு.
3. நபி ﷺ அவர்களின் வீரம்.
கேள்வி 4: நபி ﷺ அவர்களின் நற்குணங்களில் உம்மை கவர்ந்த மிக முக்கிய குணங்களை உமது உமது அப்பியாசப் புத்தகத்தில் சுருக்கமாக எழுதுக.
இரண்டாம் பாடம்: நபி ﷺ அவர்களின் சிறப்பம்சங்கள்.(தனித்துவங்கள்)
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் :
1. இம்மையிலும், மறுமையிலும் நபி ﷺ அவர்களுக்கு உள்ள சிறப்புகளை குறிப்பிடுவீர்.
2. நபி ﷺ சிறப்புகளுக்கான ஆதாரங்களை முன்வைப்பீர்.
3. நபி ﷺ அவர்களின் அந்தஸ்த்தை அறிவதால் உமது வாழ்வில் அதன் படி ஒழுகி நடப்பீர்.
4. நபி ﷺ அவர்களின் . அந்தஸ்த்தை மதித்து நடந்து கொள்வீர்.
5. நபி ﷺ அவர்கள் மீது அன்பு செலுத்துவீர்.
தயார்படுத்தல்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "நான் மறுமை நாளில் ஆதமின் பிள்ளைகளுக்கு தலைவன் ஆவேன்" (நூல்: புஹாரி 4712, முஸ்லிம் 2278).
நபி ﷺ அவர்கள் இந்த அந்தஸத்தைப் எதனால் பெற்றார்கள்?
நபி ﷺ அவர்களின் வேறு சிறப்பம்சங்கள் பற்றி நீர் அறிந்துள்ளீரா?
இப்பாடத்தினூடாக அவற்றை உமக்கு தெரிந்து கொள்ளலாம்.
இம்மையிலும், மறுமையிலும் நபி ﷺ அவர்களுக்குள்ள சிறப்பம்சங்கள்
நபி ﷺ அவர்களுக்கு சில சிறப்பம்சங்களை வழங்கி, ஏனைய நபிமார்களை விடவும் அவரை அல்லாஹ் சிறப்பித்துள்ளான்.இது குறித்து நபி ﷺ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள், "நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. சொற்சுருக்கமும் பொருள்தெளிவுமிக்க வசனங்களை பேசுகின்ற ஆற்றல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 2. எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். .6என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது." (நூல்: புஹாரி 7013, முஸ்லிம் 523).
மேலும் கூறினார்கள், "மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே." (நூல்: புஹாரி 4712, முஸ்லிம் 2278).
இவ்வுலகில் நபி ﷺ அவர்களின் சிறப்புகள்
நபி ﷺ அவர்களின் நபித்துவம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
நபிமார்களில் இறுதியானவர்.
சொற்சுருக்கமும் பொருள்செரிவுமிக்க வார்த்தைகள் வழங்கப்பட்டமை.
இப்பூமி முழுவதும் சுத்தம் செய்வதற்கு ஏற்றதாகவும், தொழுகையை நிறைவேற்றுவதற்கு ஏற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
எதிரிகளின் உள்ளங்களில் நபி ﷺ அவர்கள் பற்றிய அச்சம் போடப்பட்டு, அதன் மூலம் வெற்றியும் வழங்கப்பட்டுள்ளது.
போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் நபி ﷺ அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
1. நபி ﷺ அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நபியாக அனுப்பப்பட்டுள்ளார்கள்: இதற்கு முன் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபியவர்கள் அரேபியர்களுக்கும், அவர்கள் அல்லாத ஏனைய இனத்தவருக்கும் பொதுவாக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
2. இறுதி நபி: இவரோடு வானத்திலிருந்து வரும் இறைச் செய்தி முற்றுப் பெற்றுவிட்டது. இவருக்குப் பின் வேறு நபிமார்கள் வரமாட்டார்கள்.
3. சொற்சுருக்கமும் பொருள்செரிவுமிக்க வார்த்தைகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது: இலக்கண, இலக்கிய அடிப்படையில் புலவர்களையும் விஞ்சி, சுருக்கமான வார்த்தைகளுக்குள் பல அர்த்தங்களை உள்ளடக்கிய சொற்களைப் பயன்படுத்தும் திறன் இவருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
செற்பாடு (1): எனது கருத்தைக் கூறுகிறேன்:
அறபு மொழியை தெளிவாகக் பேசக்கூடியவர்களாக இருந்தமை நபி ﷺ அவர்களின் பண்புகளின் ஒன்றாகும். இதை அடிப்படையாக கொண்டு , பின்வரும் விடைகளில் சரியான விடைக்கு முன் சரி அடையாளமிடுக.
அரபு மொழியை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் கற்க வேண்டும். ஏனெனில்அதன் மூலம் :
1. அல்குர்ஆனின் அர்த்தங்களை அறிய முடியும்.
2. வணக்க வழிபாடுகளின் சட்டங்களை அறிய முடியும்.
3. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எத்திவைக்க முடியும்.
4. மேற்கூறப்பட்ட அனைத்தும் சரியானவை.
4. இப்பூமி முழுவதும் தொழுமிடமாகவும், சுத்தம் செய்யும் இடமாகவும் நபி ﷺ அவர்களுக்கு ஆக்கப்பட்டுள்ளது: நபியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மார்கக்தில் தொழுகை நேரம் வரும் போது பூமியின் சுத்தமான எப்பகுதியிலும் தொழுகையை நிறைவேற்ற முடியும் எனும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே வணக்கத்திற்கு முன்னர் செய்யும் வுழு, குளிப்பு ஆகியவற்றிற்கு நீர் கிடைக்காவிட்டால், அல்லது நீர் இருந்தும் நோய் போன்ற காரணங்களால் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் சுத்தமான மண்ணைப் பயன்படுத்தி தயம்மும் செய்ய முடியும்.
5. எதிரிகளின் உள்ளங்களில் நபி ﷺ அவர்கள் பற்றிய அச்சம் போடப்பட்டு, அதன் மூலம் வெற்றியும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது எதிரிகள் போரின் போது நபியவர்களுக்கு பயப்படுவார்கள்.
6. போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் நபி ﷺ அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இவை எதிரிகளின் பொருட்களாக இருப்பினும் முஸ்லிம்கள் வெற்றிபெறும் போது அவற்றை எடுத்துக்கொள்ள முடியும் எனும் சட்டத்தை நபியவர்களுக்கு அல்லாஹ் ஆகுமாக்கினான்.
மறுமையில் நபி ﷺ அவர்களின் சிறப்புகள்
ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவர்
முதல் முதலில் கப்றைப் பிளந்துகொண்டு எழுபவர்
பெரும் நீர்தடாகத்திற்கு உரிமையானவர்
1. மறுமையில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவர்.
2. முதலில் கப்றைப் பிளந்துகொண்டு எழுபவர்: மறுமையில் இரண்டாம் சூர் ஊதப்பட்டதும் முதன் முதலில் கப்றில் இருந்து எழுபவர் நபி ﷺ அவர்களாவார்.
3. முதன்முதலில் பரிந்துரை செய்பவர், பரிந்துரை ஏற்கப்படுபவர்: மறுமை நாளில் எப்போது விசாரணை ஆரம்பிக்கும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் கஷ்டமான தருணத்தில் நபி ﷺ அவர்களுக்கே முதலில் பரிந்து பேசுவதற்கான அனுமதி வழங்கப்படும். அவரின் பரிந்துரையே முதலில் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும்.
4. மறுமையில் ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்படும் நீர்த்தடாகங்களை விடவும் பெரிய நீர்த்தடாகம் நபி ﷺ அவர்களுக்கு வழங்கப்படும்.
5. சுவனத்தின் வாயில் நபியவர்களுக்கே முதலில் திறக்கப்படும்.
செயற்பாடு: (2): சிந்தித்து, படிப்பினையைக் குறிப்பிடுகிறேன்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகம் ஏற்படமாட்டாது.." (நூல்: புஹாரி 6579, முஸ்லிம் 2292)
ஆசிரியரின் உதவியுடன், மேற்படி ஹதீஸிலிருந்து , நபி ﷺ அவர்களுக்கு வழங்கப்படும் நீர்த்தடாகத்தின் பண்புகளையும் அமைப்பையும் குறிப்பிடுக.
மதிப்பீடு:
கேள்வி 1: பின்வருவனவற்றில் நபி ﷺ அவர்களுக்கு வழங்கப்படுபவை குறித்து வந்துள்ள வாசகங்களுக்கான அர்த்தங்களைக் குறிப்பிடுக. பயண தூரம் (மஸீரதுன்): குதிரையில் பயணிக்கும் ஒருவர் ஒரு மாத காலத்திற்குப் பின் சென்றடையும் தூரம். கூஜா (கீஸான்) : குறித்த தடாகத்தின் நீரைப் பருகுவதற்காக வைக்கப்பட்டுள்ள பாத்திரம்.
1. "சுசொற்சுருக்கமும் பொருட்செரிவுமிக்க வார்த்தைகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது': "ஊதிய ஜவாமிஉல் கலிம்')(..........................................................
2. "பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது.": (ஜுஇலத் லிய ல் அர்ழு மஸ்ஜிதன் வதஹுரா ').........................................
3. "ஆதமுடைய மக்களின் தலைவன்": "ஸய்யிது வலதி ஆதம்' (..................................
4. "எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது."(நுஸிர பிர்ருஃப்): (..........................
கேள்வி 2: "முதன்முதலில் பரிந்துரை செய்பவன்" எனும் வார்த்தைக்கும், "முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவன்" எனும் வார்த்தைக்கும் இடையில் உள்ள வேறுபாடு:
பரிந்துரை செய்பவர் என்பது, முதன் முதலில் பரிந்துரை செய்யுமாறு அல்லாஹ்வால் அனுமதி வழங்கப்படுபவரைக் குறிக்கும். பரிந்துரை ஏற்கப்படுபவர், என்பது முதன்முதலில் அல்லாஹ்வால் தான் செய்யும் பரிந்துரைகள் ஏற்கப்படுவதைக் குறிக்கும்.
பரிந்துரை செய்பவர் என்பது, பரிந்துரைக்கும் உரிமை வழங்கப்படுபவதைக் குறிக்கிறது. பரிந்துரை ஏற்கப்படுபவர் என்பது, பரிந்துரைக்கும் உரிமை மறுக்கப்படுதல் என்பதைக் குறிக்கும்.
கேள்வி 3: நீர் இதுவரை கற்றவற்றில் நபி ﷺ அவர்களின் சிறப்புகள் மூன்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கான ஆதாரங்களையும் குறிப்பிடுக.
மூன்றாம் பாடம்: அல்குர்ஆனை ஓதுவதின் சிறப்பு
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் :
1. ஹதீஸின் சொற்களுக்கான அர்த்தங்களை தெளிவுபடுத்துவீர்.
2. ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி பற்றி வாழ்க்கை குறிப்பை கூறுவீர்.
3. அல்குர்ஆன் ஓதுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவீர்.
4. அல்குர்ஆனை ஓதுவதற்கு ஆர்வம் கொள்வீர்.
5. பாடத்தில் இடம்பெற்ற ஹதீஸை மனனம் செய்வீர் .
6. அல்குர்ஆன் ஓதுவதை அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பை பெருமைப்படுத்துவீர்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவித்தார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"யார் அல்லாஹ்வின் வேததில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. அது பத்துமடங்காக மாறுகிறது. 'அலிஃப் லாம் மீம்' என்பதை ஒரு எழுத்து எனக் கூறமாட்டேன். மாறாக 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து ஆகும்." (நூல்: திர்மிதி 2910)
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
இவர் அபூ அப்துர் ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அல்ஹுதலி ரழியல்லாஹு அன்ஹு ஆவார்.
முதலாவது இஸ்லாத்தை ஏற்றவர்களில் ஒருவரான இவர், முதன் முதலில் கஃபாவில் பகிரங்கமாக அல்குர்ஆனை ஓதியவராவார்.
ஸஹாபாக்களில் அல்குர்ஆனைப் பற்றி நன்கறிந்த ஒருவராக இருந்தார் இவரிடம் அல்குர்ஆனைக் கற்றுக்கொள்ளுமாறு நபி ﷺ அவர்கள் வஸிய்யத் செய்துள்ளார்கள்.
இறுதியாக இவர் ஹிஜ்ரி 32ல் மதீனாவில் மரணித்தார்.
சொற்களுக்கான பொருள்:
சொல்
பிஅஷ்ரி அம்ஸாலிஹா அலிஃப் லாம் மீம் ( தனி எழுத்துக்கள் ) பொருள் ஒரு நன்மை அது போன்று பத்து மடங்காக மாறும்.
இவை ஹுரூபுல் முகத்தஆ என்ற பெயரால் அழைக்கப்படுபவை . இது போன்ற தனி எழுத்துக்களால் அல்குர்ஆனின் சில சூறாக்கள் ஆரம்பமாகின்றன.
ஹதீஸின் விளக்கம்:
அல்குர்ஆனை ஓதுவதற்கு அல்லாஹ்விடத்தில் அளப்பரிய கூலிகள் இருக்கின்றன. அல்குர்ஆனை ஓதுபவர் பலமடங்கு நன்மைகளைப் பெறுகிறார். அல்குர்ஆனில் ஒரு எழுத்தை யார் ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. பின்னர் அதே போன்ற பத்து மடங்கு நன்மையாய் அது எழுதப்படுகிறது. உதாரணத்திற்கு, சூறதுல் பகராவின் முதல் எழுத்துக்களான அலிஃப், மாம், மீன் ஆகிய மூன்று எழுத்துக்களையும் ஓதுபவர் 30 நன்மைகளைப் பெறுகிறார். ஒருவர் எந்த அளழிற்கு அதிகமாக அல்குர்ஆனை ஓதுகிறாரோ அந்த அளவிற்கான நன்மைகள் அவருக்கு வழங்கப்படுகிறது. இது அல்லாஹ்வின் அருட்கொடையையும் தயாளத்தன்மையையும்அல்லாஹ்வின் எடுத்துக் காட்டுகிறது.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
1. அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பும் அதற்கான அளப்பரிய கூலி கிடைக்கின்றமையும்.
2. அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதவேண்டுமென தூண்டப்பட்டிருத்தல். .
3. நன்மைகள் பன்மடங்காக அதிகரிக்கும் என்பது உறுதிப்படுத்தட்டிருத்தல்.
4. சிறிய நற்செயல்களுக்கும் அளப்பரிய கூலிகளை வழங்குவது அல்லாஹ்வின் தாராளத் தன்மையைக் குறிக்கிறது.
செயற்பாடுகள்:
செயற்பாடு (1): வாசித்து, படிப்பினைகளைக் குறிப்பிடுகிறேன்:
அல்குர்ஆனை ஓதுவதற்கு அதிகமான சிறப்புகள் காணப்படுகின்றன. உமது ஆசிரியரின் வழிகாட்டலுக்கு அமைய பின்வரும் இரு ஹதீஸ்களிலிருந்தும் அவற்றைக் குறிப்பிடுக.
ஹதீஸ்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "அல்குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில்,அல்குர்ஆனை ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்" (நூல்: முஸ்லிம் 804)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள், 'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம், 'குர்ஆனிய தோழரே! ஓதுவீராக!' என்று கூறப்படும். மேலும், 'உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும்' என்று அவரிடம் கூறப்படும்' (நூல்: அபூதாவுத் 1464, திர்மிதி 2914). சிறப்பு அல்குர்ஆனை ஓதுபவருக்கு மறுமை நாளில் அல்குர்ஆன் பரிந்துரை செய்யும். அல்குர்ஆனை ஓதுபவரின் அந்தஸ்த்து மறுமையில் உயர்த்தப்படுகின்றமை.
செயற்பாடு: (2): நண்பரோடு சேர்ந்து, கருத்தைப் பரிமாறுகிறேன்:
அல்குர்ஆனில் நாம் மனனம் செய்தவற்றை பேணிக்கொள்ளுமாறு நபி ﷺ அவர்கள் எமக்கு ஏவியுள்ளார்கள். "குர்ஆனை (மனனம் செய்து, அதை)க் கவனித்து வாருங்கள்." (நூல்: புஹாரி 5033, முஸ்லிம் 791). அல்குர்ஆனில் மனனம் செய்தவற்றை நாம் மறந்து விடாதிருக்க,
அல்குர்ஆனில் மனனம் செய்தவற்ற மீட்டி, உறுதியாக்குவதற்கு உதவும் வழிமுறைகள் என்ன? என்பதை உமது நண்பரோடு கதைத்து அறியுங்கள்.
அல்குர்ஆனை மீட்டுவதற்கான ஆன்லைன் தளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றில் இணைந்து அல்குர்ஆனை ஓதவும் மனனம் செய்தவற்றை மீட்டிக்கொள்ளவும் முடியும். இரு புனிதஸ்தளங்களின் அல்குர்ஆன் சேவை இதற்கு பெரிதும் உதவும். அதன் இணைப்பு வருமாறு:
https://maqraa.com
பயிற்சி (3): கணக்கிட்டு ஒப்புநோக்குகிறேன்.
சூறதுல் இஹ்லாஸில் உள்ள எழுத்துக்களை கணக்கிட்டு, அதை ஓதுபவருக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதைக் கணிக்கவும். பின்னர் நீ கணக்கிட்டதை உமது நண்பர் கணக்கிட்டதுடன் ஒப்பிட்டுப்பார்க்குக.
மதிப்பீடு(கணிப்பீடு)
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. அல்குர்ஆனை ஓதுபவரின் நன்மை ஏழு மடங்காக அதிகரிக்கும். (x)
2. இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபாக்களில் அல்குர்ஆனைப் பற்றி அதிகம் தெரிந்தவராக இருந்தார்கள். (√)
3. நேரமுகாமைத்துவம் அல்குர்ஆனை மனனம் செய்வதற்கு உதவிடும். (√)
4. அல்குர்ஆன் வகுப்புகளுக்கு சமூகம் தருபவர்களுக்கு அமைதி இறங்குகிறது. (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் முதன் முதலில் அல்குர்ஆனை பகிரங்கமாக ஒதிய இடம் :
(புனித கஃபா - நபி ﷺ அவர்களின் வீடு - மஸ்ஜிதுன் நபவி)
2. அல்.குர்ஆனை தொடர்ந்தும் பேணி ஓதிவருபவர் :
(நாளாந்தம் - கிழமைதோறும் - மாதாந்தம்) ஒதுவார்
3. இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் :
(அல்குர்ஆனை இறக்கியமை - நன்மைகளை பன்மடங்காக உயர்த்தப்படுகின்றமை - மனிதனைப்படைத்தமை எனும் அல்லாஹ்வின் தயாளத்தன்மைக்கான ஆதாரமொன்றை முன்வைக்கிறது.
கேள்வி 3: நீர் மனனம் செய்த பாடத்தில் இடம்பெற்ற ஹதீஸை 3 தடவை எழுதுக.
கேள்வி 4: அல்குர்ஆனை ஓதுவதற்கு இவ்வாறெல்லாம் சிறப்பு இருக்கிறதா என்பதை நீர் அறிந்த பின் உமது உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளைக் குறிப்பிடுக.
நான்காம் பாடம்: பாவங்களுக்கான பரிகாரங்கள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் :
1. ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வீர்.
2. ஹதீஸில் உள்ள கடினமான சொற்களுக்கான அர்த்தங்களை தெளிவுபடுத்துவீர்.
3. ஹதீஸின் கருத்தை சுருக்கமாக குறிப்பிடுவீர்.
4. ஹதீஸின் முக்கியமான படிப்பினைகளை தெளிவுபடுத்துவீர் .
5. ஹதீஸில் குறிப்பிட்டுள்ள வணக்கத்தை பேணி பேணிநடப்பீர்.
6. ஹதீஸை மனனம் செய்வீர்.
ஹதீஸ்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள், 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.' (நூல்: முஸ்லிம் 574)
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை
ஒரு ரமழானில் இருந்து மறு ரமழான் வரை
பரிகாரம்
பெரும் பாவம் ஒரு ஜும்ஆத் தொழுகையிலிருந்து மறு ஜும்ஆத் தொழுகை வரை ஒரு ரமழானின் நோன்பிலிருந்து மறு ரமழான் நோன்பு வரை பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ தண்டனை உள்ளது என இஸ்லாம் குறிப்பிடும் அனைத்து பாவகாரியங்களும் பெரும்பாவமாகும். உதாரணம்: விபச்சாரம், களவு, வட்டி சாப்பிடுதல்.
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸி என்பது இவரின் முழுப்பெயராகும். இவர் எப்போதும் பூனையை கையில் சுமந்திருப்பதால் நபி ﷺ அவர்கள் இவருக்கு அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு என புனைப் பெயர் சூட்டினார்கள்.
ஹிஜ்ரி 7ல் இஸ்லாத்தைத் தழுவிய இவர் நபியவர்கள் மரணிக்கும் வரை அவருடனே இருந்துள்ளார்கள்.
இவருக்கு மனன சக்தி அதிகரிக்க வேண்டும் எனவும், முஃமின்களுக்கு அதிக விருப்பத்திற்குரியவராக இவர் இருக்க வேண்டுமெனவும் நபி ﷺ இவருக்காக பிராத்தனை செய்துள்ளார்கள். இதன் காரணமாகவே ஸஹாபாக்களில் அதிக மனன சக்தியுல்ளவராகவும், அதிக ஹதீஸ்களை அறிவித்தவராகவும் காணப்படுகிறார். இவர் 5000 இற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
ஸஹாபாக்களில் சிறந்த அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர் அதிகமாக அழைப்புப் பணியிலும், கற்பித்தல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.
ஹிஜ்ரி 59ல் இவர் மரணித்தார்.
ஹதீஸின் விளக்கம்: (ஹதீஸின் மைய்யக் கருத்து )
கருணைகாட்டுவதிலும் மன்னிப்பை வழங்குவதிலும் அல்லாஹ் எவ்வளவு விசாலமானவன் என்பதை நபி ﷺ அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இவ் ஹதீஸில் கூறப்பட்டுள்ள வணக்கங்கள் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும், இவ் வணக்கங்கள் பாவங்களுக்கான பரிகாரமாக அமைகின்றன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் வணக்கங்களாவன: ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகையைத் தொழல், ஒவ்வொரு கிழமையும் ஜும்ஆத் தொழுகையைத் தொழல், ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகியவையாகும்.
இவ்வணக்கங்கள் ஒருவர் செய்த சிறிய பாவங்களுக்கே பரிகாரமாக அமைகின்றன. விபச்சாரம், களவு, பெற்றோருக்கு நோவினை செய்தல், தடுக்கப்பட்ட முறையில் பணம் சம்பாதித்து உண்ணல் போன்ற பெரும்பாவங்கள் செய்திருந்தால் அவற்றுக்கு தனியாக தவ்பா செய்துகொள்ள வேண்டும்.
உண்மையாக கேட்கப்படும் எல்லா தவ்பாக்களையும் அல்லாஹ் மன்னிக்கிறான். அல்லாஹ் கூறுகிறான், "தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். " (அஸ்ஸுமர் :53)
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
1. அல்லாஹ்வின் அல்லாஹ்வின் கருணை மிகவும் விசாலமானதாக காணப்படுகின்றமை.
2. இஸ்லாத்தில் தொழுகையும், நோன்பும் முக்கியத்துவம் வாய்ந்த வணக்கங்களாகத் திகழ்கின்றமை .
3. வணக்கங்களை தொடராக செய்வதன் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளமை
4. பாவங்கள் இரு வகைப்படும்:
சிறிய பாவங்கள் - இவை வணக்கங்கள் மூலம் அழிக்கப்படும்.
பெரும் பாவங்கள் - இதற்கென பிரத்தியேகமாக தவ்பா செய்ய வேண்டும்.
5. பெரும்பாவங்களில் ஈடுபடுபடுவதன் ஆபத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை..
செயற்பாடுகள்
செயற்பாடு(1): ஆய்வு செய்து முடிவுகளைப்பெறுவேன்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிமுக்கு ஐநேரத் தொழுகை நேரம் வந்து, அதற்காக அழகாக அங்க சுத்தம் செய்து, பயபக்தியோடு தொழுது, ருகூஐயும் செய்தால் -பெரும் பாவங்கள் செய்யாதவரை- அது அவரது முன்செய்த பாவத்திற்கான பரிகாரமாக அமையும்." (நூல்: முஸ்லிம் 228)
1.இந்த ஹதீஸ் குறிப்பிடும் சிறப்பைக் கூறுக.
இந்த ஹதீஸின் சிறப்பு பாடத்தில் இடம்பெற்ற ஹதீஸுடன் தொடர்புபடும் முறையை தெளிவு படுத்துக.
செயற்பாடு (2): ஹதீஸிலிருந்து குறிப்பிடுக.
பின்வரும் விடயங்கள் ஒவ்வொன்றையும் தெளிவாக காட்டும் ஒரு வாசகத்தை ஹதீஸிலிருந்து எடுத்துக்காட்டுக.:
செயற்பாடு (3): திரும்பத் திரும்பக் கூறி, மனனம் செய்வேன்.
உமது நண்பரோடு இவ் ஹதீஸை திரும்பத் திரும்பக் கூறி மனனமிடவும். பின்னர் ஒருவருக்கொருவர் பாடம்கேட்கவும். பின்பு இருவரும் சேர்ந்து மற்ற ஒருவரிடம் பாடம் கொடுக்கவும். இவ்வாறு செய்து உமது மனனத்தை வழுப்படுத்தவும்.
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. பாவங்களுக்கு பரிகாரமாக அமைவதற்கு பாடத்தில் குறிப்பிடப்பட்ட மூன்று வணக்கங்களும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் நிபந்தனைகளாக அமைகின்றன. ( )
2. உண்மையான தவ்பாவின் மூலம் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ( )
விபச்சாரம் பெரும் பாவமாகும். ஏனெனில் அதை செய்பவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ( )
4. வணக்கங்கள் பாவங்களை மன்னித்து, அந்தஸ்துக்களைக் கூட்டுகிறது. ( )
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. அபூஹுரைரா (ரழி) அவர்களை உதாரணப் புருஷராக எடுக்க வேண்டியது பின்வருவனவற்றில்:
(அறிவைக் கற்றல் - பணம் சேர்த்தல் - பள்ளி கட்டுதல்)
2. ஹதீஸில் குறிப்பிடப்படட்டுள்ள ( பாவங்களுக்கான பரிகாரம் ) என்பதன் அர்த்தம்:
(வேதனையைக் குறைக்கும் - பாவங்களைப் போக்கும் - குறைகளை மறைக்கும்) என்பதாகும்.
3. ஐநேரத் தொழுகைகள் மூலம் மன்னிக்கப்படுவது:
(சிறிய பாவங்கள் - பெரிய பாவங்கள் - அனைத்துப் பாவங்கள்) ஆகும்.
4. இவ் ஹதீஸ் குறிப்பிடும் சிறப்பான நோன்பு:
(அரஃபா நோன்பு - ஆஷூரா நோன்பு - ரமழான் நோன்பு)
கேள்வி 3: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக.
«الصَّلَوَاتُ..........، وَالْجُمُعَةُ إِلَى..........، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ .............».
கேள்வி 4: வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, தீமைகள் மற்றும் பாவங்களுக்கான பரிகாரமாக அமைந்து விடும். இது எதைக் கூறுகிறது?
ஐந்தாம் பாடம்: அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்::
1. அபூஹுரைரா (ரழி) அவர்கள் பற்றி அறிமுகப்படுத்துவீர்.
2. கடினமான சொற்களுக்கு பொருள்களை அதெளிவுபடுத்துவீர் .
3. ஹதீஸுக்கான சுருக்கமான விளக்கத்தை ஹதீஸ் குறித்த சுருக்கமான விளக்கத்தை குறிப்பிடுவீர்.
4. அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதன் சிறப்பை தெளிவுபடுத்துவீர்.
5. முறையாக அல்லாஹ்வை வழிபடவும், மார்க்கத்தில் நிலையாக இருக்கவும் பிறரை அழைப்பீர்.
6. ஹதீஸை மனனம் செய்வீர்..
அறிமுகம்
ஹதீஸ்களில் சிலவற்றுக்கு 'ஹதீஸுல் குத்ஸீ' எனக் கூறப்படும். இவற்றை அல்லாஹ் கூறியதாக நபி ﷺ அவர்கள் அறிவிப்பார்கள். ஆனால் இது குர்ஆனைப் போன்று அற்புதங்கள் கொண்டது கிடையாது.
இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸுல் குத்ஸி முஃமின்கள் மீது அல்லாஹ் பொழிந்துள்ள அருட்கொடைகளின் விசாலத்தை சுட்டிக்காட்டுகிறது..
ஹதீஸ் வாசகம்::
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். உயர்ந்தோனாகிய அல்லாஹுத் தஆலா கூறுகிறான் 'என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன நினைக்கிறானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை உள்ளத்தினுள்; நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூறுவேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூறுவேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்வேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன்.அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் விரைந்து செல்வேன். (நூல்: புஹாரி 7405, முஸ்லிம் 2675).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
கூட்டம் என்பது (ஜமாஅதுன் ) சபை, குழு, திரள்
சாண் விரிக்கப்பட்ட நிலையில் உள்ள பெருவிரலுக்கும், சுண்டு விரலுக்கும் இடைப்பட்ட தூரம்.
முழம் (திராஃ என்பது : முழங்கைக்கும், உள்ளங்கை விரல்களுக்கும் இடைப்பட்ட தூரம்
பாகம் ( பாஉன் ) என்பது முழுக் கையையும் விரித்தால் கிடைக்கப்பெறும் தூரம்
விரைந்து செல்லல் (ஹர்வலா என்பது : நடந்து செல்வதை விட சற்று வேகமான நிலை
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
இவர் அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸீ (ரழி) ஆவார். இவர் பற்றிய குறிப்பு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இவர் அதிகம் நோன்பு பிடிப்பவராகவும், அதிகம் இரவில் நின்று வணங்குபவராகவும் இருந்துள்ளார். உலக வாழ்க்கையில் பற்றற்று இருந்த இவர் தாய்க்கு அதிகம் பணிவிடை செய்பவராக இருந்துள்ளார்.
ஹதீஸின் விளக்கம்:
மேற்கூறப்பட்ட ஹதீஸுல் குத்ஸியில் ஒரு முஃமின் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் அல்லாஹ் அவரை எவ்வாறெல்லாம் நினைவுகூர்கிறான் என்றும், அவரை பொருந்திக்கொண்டு, அவருக்கு கருணை காட்டுகிறான் என்றும், அவர் செய்யும் செயல்களை விடவும் அவருக்கு கூலி வழங்குகிறான் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு முஃமின் இரகசியமாக அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் அல்லாஹ்வும் இரகசியமாக அவரை நினைவுகூறுகிறான். மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வை நினைவு கூறினால் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளிடம் அவரை அல்லாஹ் நினைவுகூறுகிறான். வணக்கம் ஒன்றை செய்து அல்லாஹ்வை ஒரு முஃமின் நெருங்கினால் அதை அல்லாஹ் ஏற்று, அதற்கான கூலிகளை வழங்குகிறான். வணக்கங்களை அதிகம் செய்து தன்னை நெருங்கும் ஒவ்வொரு நொடிக்கும் அதிகமான கூலிகளை அல்லாஹ் வழங்கி, அவரின் அந்தஸ்த்தை உயர்த்துகிறான்.
இதனால் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பது ஒரு முஸ்லிமுக்கு கடமையாகிறது. அல்லாஹ் எப்போதும் ஒரு முஃமினுக்கு அதிக நலவுகளையும், நன்மைகளையும் வழங்குகிறான். இவ்வுலகில் அவருக்கான விதியை நிர்ணயித்து, சோதிக்கிறான். அவரின் தவ்பாவை ஏற்று, மறுமையில் அவரை மன்னித்து, தகுந்த வகுமதிகளை வழங்குகிறான்.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
1. அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதன் முக்கியத்துவமும், வணக்க வழிபாடுகளை மனதார ஏற்று, அல்லாஹ்வை நெருங்க வேண்டும் என்பதும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2. அல்லாஹ்வை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் நினைவுகூறுவது சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.
3. தனது படைப்பினங்கள் மீது அல்லாஹ்வின் கருணை அளப்பரியது.
4. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்பவருக்கு சிறந்த வெகுமதிகளையும் அளவில்லா கூலியையும்அல்லாஹ் வழங்குறான்.
5. கூலி என்பது செயல்களைப் பொருத்தே அமைகிறது. யார் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்து, நல்ல செயல்கள் செய்கிறாரோ அவருக்கு நல்லதையே அல்லாஹ் வழங்குகிறான்.
ஒப்படைகள் _செயற்பாடுகள்:
செயற்பாடு (1): சிந்தித்து, விடையளிக்கிறேன்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைக்காமல் மரணிக்க வேண்டாம்." (நூல்: முஸ்லிம் 2877)
இப்றாஹீம் அந்நஹஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், 'ஒருவர் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்த நிலையில் மரணிக்க வேண்டும் என்பதற்காக, முன்சென்ற அறிஞர்கள், ஒருவரின் மரணத் தருவாயில் அவரின் நற்செயல்களைப் பற்றி அவரிடம் அதிகமாக கதைப்பதை ஆகுமான ஒன்றாக கருதியிருந்தார்கள்'
மேற்கூறப்பட்ட இரு செய்திகள் பற்றியும் சிந்தித்து, உமது நண்பருடன் கலந்துரையாடி, பின்வருவனவற்றுக்கு விடை தருக.
1. மேற்கூறப்பட்ட இரு செய்திகளின் சுருக்கத்தைக் குறிப்பிடுக.
2. மேற்கூறப்பட்ட இரு செய்திகளுக்கும் பாடத்தின் ஹதீஸிற்கும் உள்ள தொடர்பைக் கூறுக.
3. ஒரு முஸ்லிம் எப்போது தனது நல்ல செயல்கள் பற்றி நினைவுகூற வேண்டும்?
செயற்பாடு (2): காரணத்துடன் தெரியப்படுத்துகிறேன்.
பின்வரும் நிலைமைகளை வைத்து, அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பது பற்றிய உமது கருத்தை, காரணத்துடன் குறிப்பிடுக.
நிலைமைகள்
ஒரு வாலிபர் தொழுகையை விட்டுவிட்டு, 'அல்லாஹ் மன்னிப்பவன், இரக்கமுள்ளவன்' எனக் கூறுகிறார்.
ஒருவர் தொழுகைகளைப் பேணி, இரத்த உறவுகளுடன் சேர்ந்து நக்கிறார்.
அஹ்மத் தனது செயல்களை திறன்பட செய்து, அண்டை வீட்டாருக்கும் உதவி புரிகிறான்.
ஒரு வாலிபர் தடுக்கப்பட்ட செயல்களை செய்து, 'வயோதிபம் அடையும் போது தவ்பா செய்யலாம்' எனக் கூறுகிறார். உமது கருத்து காரணம்
செயற்பாடு (3): என்னை மதிப்பிட்டுக்கொள்கிறேன்.
அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து, அன்றாடம் பேணி வரும் வணக்கங்கள் மூன்றைக் குறிப்பிடுக.
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அதிகமாக வணக்கம் செய்வதில் பிரபல்யமானவர். (√)
அல்லாஹ்வை நினைவு கூர்வதை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செய்யலாம். (√)
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பது வணக்க வழிபாடுகளை விட்டுவிடுவதற்கு வழிவகுக்கும். (x)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹதீஸுல் குத்ஸி எனும் ஹதீஸ் வகைகளின் கூற்றுக்குச் சொந்தக்காரர்:
(அல்லாஹ் - நபி ﷺ - ஜிப்ரீல் (அலை))
ஹதீஸில் இடம்பெற்றுள்ள "அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூறுவேன்" எனும் வாசகத்தினால் குறிக்கப்படுபவர்கள்:
(மலக்குகள் - நபிமார்கள் - அறிஞர்கள்)
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டிய நிலைகளில் ஒன்று:
(வணக்கத்தை விடும் போது - பாவம் செய்யும் போது - மரணத்தின் போது)
கேள்வி 3: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: «يَقُولُ اللهُ تعالى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حِينَ ............، إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي ............، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأ ذَكَرْتُهُ فِي مَلَأ هُمْ خَيْرٌ ..........».
கேள்வி 4: பின்வரும் இரு கேள்விகளுக்கு விடை தருக.
செயல்களைப் பொறுத்தே கூலி கிடைக்கிறது என்பது ஹதீஸின் கருத்தாகும். அதனை விளக்குக.
அல்லாஹ்வின் கருணை அளப்பரியது என்பதை ஹதீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அதனை விளக்குக.
ஆறாம் பாடம்: அல்லாஹ்வின் நிழலைப் பெறும் ஏழு பேர்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. ஹதீஸில் உள்ள கடினமான சொற்களுக்கான அர்த்தங்களை தெளிவுபடுத்துவீர்.
2. அல்லாஹ்வின் நிழலைப் பெற்றுத் தரும் ஏழு செயல்களை தெளிவு படுத்துவீர்.
3. வாலிப வயதில் அல்லாஹ்வை வணங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்து செயற்படுவீர்.
4. ஹதீஸின் முக்கியமான படிப்பினைகளை தெளிவுபடுத்துவீர்.
5. எவ்வித பிழைகளும் இன்றி பாடத்தின் ஹதீஸை ஒப்புவிப்பீர்.
6. அபூ ஹுரைரா (ரழி) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க முயல்வீர்.
அறிமுகம்
மறுமை நாளில் மஹ்ஷர் பூமியில் அனைத்துப் படைப்பினங்களும் ஒன்று சேர்வார்கள். அப்போது நெரிசல் அதிகரிக்கும். அதிக வெப்பம் ஏற்படும். நீண்ட நேரம் நிற்க வேண்டி ஏற்படுவதால் மக்கள் அதிக துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆலாகுவார்கள். ஆனால் சிலபேர் மாத்திரம் நிழலே இல்லாத பூமியில் நிழலில் இருப்பார்கள். யார் அவர்கள்? இத்தகைய கொடிய வேதனையிலிருந்து அல்லாஹ்வின் கருணையைப் பெற என்ன செய்தார்கள்?
இதற்கான விடையை அறிய பின்வரும் ஹதீஸை வாசியுங்கள்:
ஹதீஸ்:
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ், தனது (-அர்ஷின் -அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்த போதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று கூறியவர். 6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். (நூல்: புஹாரி 660, முஸ்லிம் 1031)
சொற்களுக்கான பொருள்:
சொல் தனது நிழல் தன்னை அழைத்த போது தனிமையில் இரு கண்களும் கண்ணீர் சிந்தின பொருள்: அர்ஷின் நிழல்
விபச்சாரம் செய்ய அழைத்த போது மக்கள் இல்லாத இடத்தில் அல்லாஹ்வின் மகிமையை உணர்ந்து, அவனுக்கு அஞ்சி கண்ணீர் சிந்துதல்
அல்லாஹ்வின் நிழலைப் பெறுபவர்கள்:
நீதி மிக்க ஆட்சியாளர்.
இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர்.
பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
அல்லாஹ்வுக்காக நேசம் வைக்கும் இருவர்.
அல்லாஹ்வை அஞ்சி, பாவம் செய்வதை விடுபவர்.
இரகசியமாக தர்மம் செய்பவர்.
அல்லாஹ்வுக்கு அஞ்சி அழுபவர்.
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் பற்றிய குறிப்புகள் முன்னரே கூறப்பட்டுள்ளன.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் எப்போதும் நபி ﷺ அவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள். அவரைப் பார்த்து நற்காரியங்கள் செய்யவும், அவரின் கட்டளைகளையும், வஸிய்யத்களையும் அமுல்படுத்தவும் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். நபியவர்கள் தனக்கு கூறியதாக ஓர் செய்தியை அபூஹுரைரா (ரழி) அவர்கள் பின்வருமாறு பதிவிடுகிறார்கள்: "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, (இரண்டு ரக்அத்கள்) ‘ளுஹா’ தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் (நபி ﷺ அவர்கள்) எனக்கு அறிவுறுத்தினார்கள். அவற்றை நான் இறக்கும்வரை கை விடமாட்டேன்." (நூல்: புஹாரி 1178, முஸ்லிம் 721)
ஹதீஸின் விளக்கம்:
மறுமை நாளுக்காக கப்றுகளிலிருந்து வெளியேறி மஹ்ஷர் பூமியில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்வார்கள். இந்நாளில் சூரியனின் வெப்பம் கடுமையாக இருக்கும். மக்கள் அனைவரும் அதனால் துன்புருவார்கள். முஃமின்களில் சிலரை மாத்திரம் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலைக் கொடுத்து கௌரவிப்பான்.
அர்ஷின் நிழலைப் பெறும் முஃமின்களின் ஏழு பிரிவினர்களை நபி ﷺ பினவருமாறு வகைப்படுத்தியுள்ளார்கள்:
1. நீதமான ஆட்சியாளர் - நீதமாக நடந்துகொள்ளும் அனைத்து தலைவர்கள், ஆட்சியாளர்கள், நீதிபதிகள் போன்றோரை இது குறிக்கிறது.
2. இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர் - தொழுகை, பெற்றோருக்கு உபகாரம் செய்தல், தடைசெய்யப்பட்டவற்றை விட்டும் விலகியிருத்தல் போன்ற அனைத்து வகையான வணக்கங்களையும் இளம் வயது முதலே செய்பவரை இது குறிக்கிறது.
3. பள்ளிவாசல்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர் - பள்ளிவாயில்களை அதிகம் விரும்பி, அதோடு அதிக தொடர்பு வைத்து, ஆரம்ப நேரத்திலேயே ஐமாஅத்தோடு தொழுகைகளை நிறைவேற்றுவோரை இது குறிக்கிறது.
4. அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரியும் இருவர் - முஃமின் என்ற ஒரே காரணத்துக்காக இறுதி மூச்சு வரை இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிப்பார்கள். தனது நேசத்தில் வேறு குறிக்கோல்களை வைத்திருக்க மாட்டார்கள்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை அழைத்த போதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகி றேன்” என்று கூறியவர் - விதவையோ, கண்ணிப்பெண்ணோ, தனது மேலதிகாரியோ அழகான, அந்தஸ்த்தில் உள்ள, வசதிபடைத்த பெண் ஒருவர் விபச்சாரம் செய்ய தன்னை அழைத்தால் அல்லாஹ்வுக்கு பயந்து அதை மறுக்கும் ஒருவரையே இது குறிக்கிறது.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர் - மக்கள் அறியாத வகையில் தர்மம்செய்தவரை இது குறிக்கிறது. அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்மத்தில் ஏழைகள் எப்போது சஞ்சலப்படவோ, துன்பப்படவோ, அவமானப்படவோ மாட்டார்கள்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதர் - அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது வல்லமையை உணர்ந்து, அவனது அருட்கொடைகளை அடைய வேண்டுமென ஆசைவைத்து, அவனை சந்திக்க வேண்டுமென பேராசைப்பட்டு அழும் ஒருவரையே இது குறிக்கிறது.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
1. தன்னை வணங்கி, வழிபடுவோரை மறுமையில் ஏனைய படைப்பினங்களுக்கு முன்னால் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்.
2. நீதம் என்பது இவ்வுலகில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய பண்பாகும். அதற்காக மாபெரும் கூலி மறுமையில் காத்திருக்கிறது.
3. வாலிபப் பருவத்தை வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுத்துவது கட்டாயமாகும்.
4. தர்மம் செய்வதிலும், சமூகப் பணிகள் செய்வதிலும் உளத்தூய்மையைப் பேணுவது சிறந்ததாகும்.
5. அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வது, இவ்வுலகிலும், மறுமையிலும் மகிழ்ச்சி ஏற்பட காரணமாக அமைகிறது.
6. தடைசெய்யப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்திருப்பதற்கு மறுமையில் பாரிய கூலி இருக்கிறது.
-செயற்பாடுகள்: (ஒப்படைகள்)
செயற்பாடு 1: பின்வரும் பண்புகளை, அதற்கான ஆதாரங்களுடன் இணைக்கிறேன்.
பின்வரும் பண்புகளையும், அது பற்றி ஹதீஸ் குறிப்பிடும் வாசகத்தையும் இணைக்குக.
பண்புகள்
வணக்க வழிபாடுகளில் உளத்தூய்மையை கடைபிடித்தல்.
அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதில் நிலையாய் இருத்தல்.
கற்பைப் பாதுகாத்தல்.
நீதமாக நடத்தல்.
அல்லாஹ்வை அஞ்சுதல். ஹதீஸ் குறிப்பிடும் வாசகம்
செயற்பாடு : 2: வாசித்து, விடையளிக்கிறேன்.
நபித்தோழர் ஒருவர் நபி ﷺ அவர்களிடம் அமர்ந்திருந்தார். அப்போது அவர்களை ஒரு மனிதர் கடந்து செல்லும் போது, "அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் நேசிக்கிறேன்" எனக் கூறினார். அப்போது நபியவர்கள், "அவரிடம் அறிவித்தீர்களா?" எனக் கேட்டார்கள். அதற்கு அந்த நபித்தோழர், "இல்லை" எனக் கூற, "அவரிடம் தெரியப்படுத்துங்கள்" என நபியவர்கள் கூறினார்கள். அந்த மனிதரை நபித்தோழர் சந்தித்து, "அல்லாஹ்வுக்காக உங்களை நான் நேசிக்கிறேன்" எனக் கூறினார். அதற்கு அந்த மனிதர், "யாருக்காக நீங்கள் என்னை நேசிக்கிறீர்களோ, அதற்கு பதிலாக, அவரும் உங்களை நேசிக்கட்டும்" எனக் கூறினார். (நூல்: அபூதாவுத் 5125)
ஆசிரியரின் உதவியுடன், மேற்கூறப்பட்ட ஹதீஸிலும், பாடத்தின் ஹதீஸிலும் இடம்பெற்றுள்ள 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்பதன் கூலியைப் பற்றி தெளிவுபடுத்துக.
மதிப்பீடு:
கேள்வி 1: (ஆம்), (இல்லை) என்பதைத் தெரிவு செய்து பின்வருவனவற்றுக்கு விடையளிக்குக.
1. "பள்ளிவாசல்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" - எனும் வாசகம் பள்ளிகளை விரும்புவோரைக் குறிப்பிடுகிறது. (ஆம் - இல்லை).
2. பாடத்தின் ஹதீஸ் குறிப்பிடும் வணக்கங்களில் ஹஜ் கடமையும் நுழைகிறது. (ஆம் - இல்லை)
3. "கண்ணீர் சிந்திய மனிதர்" - எனும் வாசகம் நோயினால் கண்ணீர் சிந்துவதைக் குறிக்கிறது. (ஆம் - இல்லை)
4. தர்மம் செய்யும் போது உளத்தூய்மையை பேண வேண்டும் என்பது பாடத்தின் ஹதீஸிலிருந்து பெறப்படும் முக்கிய வழிகாட்டலாகும். (ஆம் - இல்லை)
5. நபி ﷺ அவர்கள் மீது அதிகம் ஸலவாத்துக் கூற வேண்டுமென மேற்படி ஹதீஸ் எமக்கு வழிகாட்டுகிறது. (ஆம் - இல்லை)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. "நீதி மிக்க ஆட்சியாளர்" எனும் வாசகத்தால் குறிக்கப்படுபவர்:
(ஆசிரியர்கள் - நீதிபதிகள் - அழைப்பாளர்கள்)
2. விபச்சாரம் புரிவதைத் தவிர்த்த வாலிபரிடம் இருக்கும் பண்பு:
(கற்பொழுக்கம் - உண்மை - நீதம்)
3. பின்வரும் காரணத்திற்காக அழுதால் மறுமையில் அர்ஷின் நிழல்கிடைக்கும்:
(மக்களுக்கு அஞ்சுதல் - அல்லாஹ்வுக்கு அஞ்சுதல் - நோய்க்கு அஞ்சுதல்)
கேள்வி 3: பாடத்தின் ஹதீஸை நீங்கள் மனனம் செய்தவாறு ஹரகத்துடன் எழுதுக.
கேள்வி 4: பின்வரும் கேள்விகளுக்கு விடையெழுதுக:
1. பின்வரும் ஹதீஸின் அர்த்தத்தை தெளிவுபடுத்துக: "தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்".
2. பாடத்தின் ஹதீஸிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட மூன்று படிப்பினைகளைக் குறிப்பிடுக.
3. அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் ஆழுமையில் உங்களை வியக்க வைத்த பண்பு எது ?
இஸ்லாமிய சட்டதிட்டங்கள்:
முதலாம் பாடம்: : சுத்தம் மற்றும் வுழூ செய்யும் முறை
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. முஸ்லிமின் வாழ்வில் சுத்தத்தின் அவசியத்தை தெளிவு படுத்துவீர்.
2. வுழூவின் செயல்களை ஒழுங்கு முஒழுங்கு முறைப்படி கூறுவீர்.
3. சுத்தம் மற்றும் வுழூவின் சிறப்புகளுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவீர்.
4. சரியான முறையில் வுழூச் செய்வீர்.
சுத்தமும் வுழுசெய்யும் முறையும்.
சுத்தத்தின் அவசியமும், சிறப்பும்
வுழூ செய்யும் முறை
வுழூவின் சிறப்பு
சுத்தத்தின் அவசியம் :
இஸ்லாம் சுத்தத்திற்க்குப் பாரிய முக்கியத்துவம் அளித்து, தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளது.அது குறித்த விபரம் பின்வருமாறு :
உடல், உடை, தொழுமிடம் ஆகியன சுத்தமாக இருக்க வேண்டும், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்வருமாறு கூறுகின்றான் : "இன்னும் உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக". (முத்தஸ்ஸிர் : 4).
இரு தொடக்குகளிலிருந்தும் சுத்தமாக இருத்தல், அவையாவன :
1. பெருந்தொடக்கு : இது குளிப்பதன் மூலமே நீங்கும்.அதாவது ,குளிப்பு கடமையான சந்தர்ப்பங்களில் முழு முழு உடலையும் நனைப்பதாகும்.
2. சிறு தொடக்கு : இதனை நீக்க வுழூச் செய்வது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வுழூ இன்றி தொழுகை ஏற்கப்பட மாட்டாது". (ஆதாரம் : முஸ்லிம் 224).
சுத்தத்தின் சிறப்பு :
1. சுத்தம், அல்லாஹ் அடியான் மீது நேசம் கொள்வதற்கான ஒரு காரணமாக அமைந்திருப்பது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். "நிச்சயமாக அல்லாஹ் பாவங்களைவிட்டு மீள்பவர்களையும் இன்னும் தூய்மையாக இருப்போரை யும் நேசிக்கின்றான்". (பகரா : 222)
2. சுத்தம் ஈமானின் பாதியாகும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "சுத்தம் ஈமானின் பாதியாகும்". (ஆதாரம் : முஸ்லிம் 223). இங்கு ஈமான் என்பது தொழுகையாகும்.
வுழூ பாவங்களுக்குப் பபரிகாரமாகும் . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “"யார் தொழுகைக்காக வுழுசெய்து அதனை அழகான முறையில் செய்தால் அவரது பாவங்கள் நகங்களுக்குக் கீழ் உட்பட உடலிருந்து வெளியேறி விடுகின்றன".”. (ஆதாரம் : முஸ்லிம் 245).
வுழூ செய்யும் முறை
பின்வரும் வழிமுறையின் மூலம் வுழு செய்யும் முறையை தெளிவாக அறிந்து கொள்வீர் :
1. வுழூச் செய்வதாக மனதால் எண்ணி, பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும்.
2. இரு கரங்களையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவ வேண்டும்.
3. மூன்று முறை வாய் கொப்பளித்து, மூக்கினுள் நீரை உறிஞ்சி விட்டு பின்னர் இடது கையால் சிந்தி விட வேண்டும்.
4. முகத்தை மூன்று முறை கழுவ வேண்டும்.
5. விரல் நுனியிலிருந்து முழங்கை வரை இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும்.
6. தலையை ஒரு முறை நீரால் தடவ (மஸ்ஹு செய்ய) வேண்டும்.
7. தலையுடன் சேர்த்து இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும்.
8. கணுக்கால் வரை முதலில் வலது காலையும், பின்னர் இடது காலையும் மும்மூன்று முறை கழுவ வேண்டும். கால் கழுவும் ஒரு நபரின் படம்
வுழூச் செய்து முடிந்ததும் பின்வரும் பிரார்த்தனையைக் கூற வேண்டும் : ''அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸூலுஹு'' (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும்;.மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனின் அடியாரும் துதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்).
செயற்பாடுகள்: (ஒப்படைகள்)
செயல்பாடு (1): கேட்டு, எழுதுவேன் :
வுழு செய்வது , பல சந்தர்ப்பங்களில் மார்க்கரீதியாக சட்டபூர்வாக அனுமதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் சில சந்தர்ப்பங்களில் வாஜிபாகவும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஸுன்னத்தாவும் ஆக்கப்பட்டுள்ளது .இதனடிப்படையில்
1. வுழூச் செய்வது கட்டாயமான இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடவும். (தொழுகைக்கு முன் - குர்ஆனைத் தொடும் முன்)
2. வுழூச் செய்வது ஸுன்னத்தான இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடவும். (அல்லாஹ்வை நினைவுகூரும் போது - உறங்கும் போது)
செயற்பாடு : (2) : அறிவுரை கூறுவேன் :
நீர் கற்ற வுழு செய்யும் முறையை உமது குடும்பத்தினறுக்கும் கற்றுக்கொடுத்து அவர்ளை பயிற்றுவிக்குக.
உமது குடும்பத்தினர் வுழூச் செய்யும் முறையை நீர் உன்னிப்பாக அவதானித்து, அவர்களில் தவறிழைப்போரை மென்மையாகத் திருத்தவும்.
செயற்பாடு (3) ஆய்வு செய்து முடிவுகளை எடுத்துக்கூறுவேன். .
பின்வரும் ஹதீஸை வாசித்து அதனை வுழுவுடன் தொர்படுத்துக.பின் அதில் குறிப்பிடப்பட்ட வுழுவின் சிறப்பை தெளிவு படுத்துக.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் முழுமையான முறையில் வுழூச் செய்துவிட்டு, "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்." (ஆதாரம் : முஸ்லிம் 234)
மதிப்பீடு -(கணிப்பீடு)
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓)எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
தொழுகை (நிறைவேறுவதற்கான )-செல்லுபடியாவதற்கான நிபந்தனைகளில் வுழூ ஒன்றாகும். (✓)
வுழூச் செய்யும் போது இரு பாதங்களுடன் கரண்டைக்கால்களையும் சேர்த்துக்கழுவுதல் வேண்டும். (✓)
வுழூச் செய்யும் போது முழங்கையும் கைகளைக் கழுவுவதில் உட்படும். (✓)
வுழூச் செய்யும் போது தலையை மூன்று முறை கழுவ வேண்டும். (×)
கே 2 : சரியான இடத்தில் எண்ணை வைப்பதன் மூலம் வுழூவின் பின்வரும் செயல்களை சரியான முறையில் ஒழுங்கு படுத்துக:
வுழூவின் செயல்கள் ஒழுங்குமுறை
முகத்தை கழுவுதல் 5
வாய் கொப்பளித்தல் 3
முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல் 6
மூக்கினுள் நீரை உறிஞ்சி விட்டு, சிந்தி விடுதல் 4
இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல். 8
இரு கால்களையும் கழுவுதல் 9
தலையை மஸ்ஹு செய்தல். 7
இரு மணிக்கட்டுவரை கழுவுதல். 2
நிய்யத் வைத்து, பிஸ்மில்லாஹ் என்று கூறுதல் 1
கே 3 : வுழூவின் சிறப்பைப் பற்றி ஹதீஸில் இருந்து ஓர் ஆதாரம் எழுதுக.
கே 4 : சுத்தத்திற்க்கும் நம்பிக்கைக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில் விளக்குக.
தயம்மும் மறைப்பான்கள் மீது மஸ்ஹு செய்தல்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் :
1. தயம்மும் செய்ய அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை தெளிவாக குறிப்பிடுவீர்.
2. சரியான முறையில் தயம்மும் செய்யும் முறையை செய்து காட்டுவீர்
3. சரியான முறையில் பாதணிகளில் மஸ்ஹு செய்வீர் .
பாதணியில் மஸ்ஹு செய்வதற்கும், பெண்டேஜில் மஸ்ஹு செய்வதற்கும் இடையில் வேறுபடுத்திக்காட்டுவீர்.
5. நியாயமான கராணமுள்ளோருக்கு மார்க்கம் மார்க்கத்தின் இலகுபடுத்தலை மதித்து நடப்பீர்..
முதலாவதாக : தயம்மும்
தயம்மும் என்பது சுத்தமாகும் எண்ணத்துடன் தூய்மையான மண்ணைக் கொண்டு முகத்தையும், இரு முன்னங்கைகளையும் மஸ்ஹு செய்வதாகும். இது வுழூ, அல்லது குளிப்புக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தயம்மும் செய்வதற்கு ஷரீஆ அனுமதித்த சந்தர்ப்பங்கள் :
1. தண்ணீர் இல்லாத சந்தர்ப்பத்தில்.
2. குடிப்பதற்கு மாத்திரம் போதியளவு தண்ணீர் இருந்து, தனக்கோ, பிறருக்கோ தாகம் ஏற்படலாம் என அஞ்சும் சந்தர்ப்பத்தில்.
3. தண்ணீரைப் பயன்படுத்துவதால் நோய் அதிகரிக்கும் என்ற நிலையிலுள்ள ஒரு முஸ்லிம் நோயாளி
தயம்மும் செய்யும் முறை :
தயம்மும் செய்வதை மனதால் எண்ணி, பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்.
சுத்தமான மண்ணில் தனது இரு கைகளினால் ஒரு தடவை அடிக்க வேண்டும்.
இரு கைகளாலும் முகத்தைத் தடவ வேண்டும்.
இரு கைகளாலும் முன்கைகளின் வெளிப்புறத்தை தடவுதல்.
தயம்மும் செய்யும் முறையை பின்வரும் இணைப்பினூடாகப் பார்க்கவும்.
இரண்டாவது : பாதணி (ஹுப்பின்)மீது மஸ்ஹ் செய்தல்
'ஹுப்' என்பது தோல் அல்லது அதை ஒத்த பொருட்களினால் செய்யப்பட்டு காலில் அணியப்படும் பாதணிகளை குறிக்கும்
காலணி (ஹுப்பின்)மீது மஸ்ஹ் செய்வதற்கான நிபந்தனைகள் :
1. கணுக்கால்கள் உட்பட இரு கால்களையும் மூடிக் கொள்ளும் வகையில் மறைக்கக் கூடியதாக அந்தப்பாதணி இருக்க வேண்டும்.
2. வுழூச் செய்த பின் அவ்விரண்டையும் அணிந்திருக்க வேண்டும்.
காலணி (ஹுப்பின்)மீது மஸ்ஹ் செய்யும் முறை :
இரு கை விரல்களையும் தண்ணீரில் நனைத்து இரு கால்களின் விரல்களுக்கு மேல் வைத்து, இரு பாதங்களின் வெளிப்புறத்தை ஒரு தடவை மாத்திரம் மஸ்ஹு செய்ய வேண்டும். பாதிணிகளின் உட்புறத்தை மஸ்ஹு செய்யக் கூடாது.
இவ்விணைப்பில் பாதணிகளில் மஸ்ஹு செய்யும் முறையைப் பார்க்கவும்.
பெண்டேஜ்களில் (காயக்கட்டுகள்) மஸ்ஹு செய்தல் :
'ஜபீரா' –( bandage) என்பது முறிவுகள்,காயங்கள் ஆறுவதற்கு இடப்படும் கட்டுகள்.
காயத்திற்கோ, முறிவுக்கோ தேவைக்கேற்ப ஒரு முஸ்லிமுக்கு பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்யலாம். வுழூவின் போது வுழுச் செய்யும் உறுப்பில் மாத்திரம் மஸ்ஹு செய்ய வேண்டும். குளிப்பின் போது முழு பென்டேஜ் மீதும் மஸ்ஹு செய்ய வேண்டும்.
பாதணிகளில் நிபந்தனையிடப்படுவது போன்று பெண்டேஜ்களை வுழூவுடன் போட்டிருக்க வேண்டுமென்ற நிபந்தனையில்லை.
இதற்கென வரையறுக்கப்பட்ட கால அளவும் கிடையாது, முறிவு ஆறும் வரை, காயம் குணமடையும் வரை மஸ்ஹு செய்யலாம்.
இவ்விணைப்பில் பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்யும் முறையைப் பார்க்கவும்.
செயற்பாடுகள்:
செயல்பாடு (1) : வேறுபடுத்துவேன் :
பின்வரும் இரண்டு படங்களைப் பார்த்து, சரியான மற்றும் தவறான செயலைக் குறிப்பிட்டு, காரணத்தை தெளிவுபடுத்துக:
செயல்பாடு (2) : வாசித்து பெபேறுகளை பெறுவேன் :
அலி பின் அபி தாலிப் (ரலி) அவர்கள் பாதணிகளில் மஸ்ஹு செய்வது பற்றி பின்வருமாறு கூறினார்: "நபி (ஸல்) அவர்கள் பிரயாணிக்கு மூன்று நாட்களையும், ஊரிலிப்பவருக்கு ஒரு நாளையும் (பாதணியில் மஸ்ஹு செய்ய அனுமதிக்கப்பட்ட காலமாக) ஆக்கினார்கள்". (ஆதாரம் : முஸ்லிம் 276). இந்த நபிமொழியிலிருந்து பிரயாணிக்கும், ஊரிலிப்பவருக்கும் உள்ள மஸ்ஹு செய்யும் கால அளவைக் கண்டறியவும்.
பயணிக்கு மூன்று நாட்களும், ஊரிலிருப்பவருக்கு ஒரு நாளும் அவகாசமுண்டு.
செயல்பாடு (3) : கற்றுக்கொள்வதில் பிறருடன் கலந்துகொள்வேன்:
பாதணிகள் மற்றும் பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்வதற்கான செய்முறையை பார்ப்பதில் உமது குடும்பத்தினருடன் கலந்து கொள்க., அத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடுக.
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
பாதணி மீது மஸ்ஹு செய்ய, அவற்றை வுழூவுடன் அணிய வேண்டியது நிபந்தனையாகும. (✓)
பாதணி மீது மஸ்ஹு செய்வது அல்லாஹ் வழங்கியுள்ள சலுகையாகும். (✓)
தயம்மும் செய்யும் போது வுழூவின் அனைத்து பாகங்களையும் மஸ்ஹு செய்ய வேண்டும். (×)
பெண்டேஜ் மீது மஸ்ஹு செய்ய வரையறுக்கப்பட்ட கால அளவு ஏதும் கிடையாது. (✓)
கே 2 : தயமுமின் செயல்களை பின்வருமாறு வரிசைப்படுத்தவும்:
கே 3: பாதணி மேல் மஸ்ஹு செய்வதற்கும், பெண்டேஜ் மீது மஸ்ஹு செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை பின்வரும் அட்டவணையில் எழுதவும்:
ஓப்பீட்டு முறை மஸ்ஹு செய்யும் இடம் மஸ்ஹு செய்யும் முறை மஸ்ஹ் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலம்: பாதணிகள் மீது மஸ்ஹு செய்தல் பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்தல் :
கே 4 : வுழூ மற்றும் குளிப்பு ஆகியவற்றிற்குப் பதிலாக தயமும் செய்ய அனுமதிக்கப்படும் இரண்டு சந்தர்ப்பங்களை குறிப்பிடவும்.
மூன்றாம் பாடம் : குளித்தல்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. குளிப்பின் வரைவிலக்கணத்தை குறிப்பிடுவீர்.
2. குளிப்பின் செயல்களை வரிசைப்படுத்துவீர்.
3. குளிப்பு கடமையாகும் சந்தர்ப்பங்களை தெளிவுபடுத்துவீர்.
4. ஷரீஆ சுத்தத்திற்கு கொடுத்திருக்கும் கரிசனையை பாராட்டுவீர்.
தயார்படுத்தல்:
தொழுகைக்காக அல்லாஹ் வுழூச் செய்யும் படி ஏவி விட்டு பின்னர் கூறுகின்றான் : "நீங்கள் குளிப்புக்கடமையானவர்களாக (ஜுனுபாளியாக) இருந்தால் (குளித்து) சுத்தமாகிக் கொள்ளுங்கள்". (மாஇதா : 6)
ஜுனுப் என்றால் என்ன?
ஜுனுபாளி என்ன செய்ய வேண்டும்?
குளிப்பு:
குளித்தல் என்பதன் கருத்து
கட்டாயமாக குளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
குளிப்பின் அவசியம்
குளிப்பின் முறை
குளித்தல் என்பதன் கருத்து :
குளித்தல் என்பது சுத்தமாகும் நோக்கத்தில் -எண்ணத்தில்- உடல் முழுவதையும் நீரால் நனைத்தல்.
கட்டாயமாக குளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
1. உறக்கத்தில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ தூக்கத்தின் போது சுயநாட்டமின்றி விந்து வெளியேறுதல்.
2. விழிப்புடன் இருக்கும் போது இச்சையுடன் விந்து வெளிப்படல், நோய் போன்ற காரணிகளுக்காக இச்சையின்றி வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது.
3. உடலுறவு கொள்ளல், ஆண்குறி பெண்குறிக்குள் சென்றால் குளிப்புக் கடமையாகி விடும்.
4. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு நிற்றல், அப்பருவம் முடிந்ததும் பெண் குளிப்பது கடமையாகும்.
5. காபிர் இஸ்லாத்தை ஏற்றல்.
குளிப்பு கடமையான வணக்கங்கள் :
1. தொழுகை, ஒரு முஸ்லிம் பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாக இருப்பது அவசியமாகும். குளிப்பு கடமையாகும் சந்தர்ப்பங்களில் ஒன்று உறுதியாக நிகழ்ந்து, குளிப்பதற்கு முன்னர் தொழுதால் அத்தொழுகை செல்லுபடியாக மாட்டாது.
2. அல்குர்ஆனை ஓதுதல், அல்குர்ஆன் பிரதியைத் தொடுதல் ., பெருதொடக்கு ஏற்பட்டவர் குளிக்கும் வரை(ஜுனுபாளிக்கு) குர்ஆன் பிரதியைத் தொடுவதோ, அல்குர்ஆன் ஓதுவதோ கூடாது.
குளிப்பின் முறை :
தொடக்கை நீக்கும் எண்ணத்துடன் முழு உடலையும் நீரினால் நனைத்தல் போதுமானது.
பரிபூரணமான குளிப்பை விரும்புபவர் பின்வரும் வழிமுறையைக் கடைபிடிக்கவும் :
1. பெருந்தொடக்கைிலிருந்து சுத்தமாகுவதாக மனதால் எண்ணி, பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்.
2. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிவிட்டு, தனது மர்ம உறுப்பை சுத்தமாகும் வரை கழுவ வேண்டும், பின்பு தொழுகைக்காக வுழுச் செய்வதைப் போல் வுழூச் செய்ய வேண்டும்.
3. தலைக்கு மூன்று முறை தண்ணீர் ஊற்றி, முடி முளைக்கும் இடங்களிலெல்லாம் நீர் படும் வரை முடிகளைத் தேய்க்க வேண்டும்.
4. முழு உடலுக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும், முதலில் வலப்பக்கமாகும் பின்பு இடப்பக்கமாகவும் ஊற்ற வேண்டும்.
அன்னை ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹு ) கூறுகின்றார் : 'நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய வுழூவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலை முடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்'' (ஆதாரம் : புஹாரி 248, முஸ்லிம்316).
ஒப்படைகள் -செயற்பாடுகள்
செயற்பாடு (1): பார்த்து, ஒப்பிடுகிறேன். :
எப்படி குளிப்பது என்பது பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை இந்த பத்தியில் கூறப்பட்டுள்ளவற்றுடன் ஒப்பிடுங்கள்: (குளிக்கும் முறை பற்றி இந்த காணொளியில் பார்த்தவற்றை நீ கற்றவற்றுடன் ஒப்பிடுக)
செயல்பாடு (2) : பகுப்பாய்வு செய்து பதிலளிக்கவும்:
உமது ஆசிரியின் கண்காணிப்பின் கீழ் பின்வரும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து குளிப்பதற்கான காரணத்தை எடுத்துக் கூறுக.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான். "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்". (நிஸாஃ : 43).
உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : உம்மு ஸுலைம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு, 'தண்ணீரைக் கண்டால்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' (ஆதாரம் : புஹாரி 282, முஸ்லிம் 313).
செயல்பாடு (3) : தகவல்களைத் தேடி பதிலளிப்பேன்:
குளிப்பு கட்டாயமாகும் சந்தர்ப்பங்களை நீ கற்றுக்கொண்டீர் எனவே குளிப்பு ஸுன்னத்எனும் நிலையிலுள்ள இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடவும்.
ஜும்ஆ தொழுகை
இரு பெருநாள் தொழுகை
மதிப்பீடு:
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
தொழுகைக்கான நேரம் வந்தால், ஜுனுபாளி குளிக்க வேண்டும். (✓)
ஜுனுபாளி ஒருவர் குளிப்பதற்கு முன் குர்ஆனைத் தொடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. (✓)
நோய் காரணமாக விந்து வெளியேறினால் குளிக்க வேண்டும். (×)
ஆண்குறியின் முன் பகுதி பெண்குறிக்குள் நுழைந்தால் குளிப்பு கடமையாகிறது. (×)
கே 2 : பின்வரும் குளிப்பின் செயல்களை ஒழுங்கு படுத்துக :
(கைகளை மூன்று முறை கழுவுதல் - சுத்தமாகும் எண்ணம் - உடலில் தண்ணீர் ஊற்றுதல் - அந்தரங்க உறுப்பை கழுவுதல்)
கேள்வி 3: பின்வரும் கேள்விகளுக்கு விடையெழுதுக:
1. குளிப்பின் வரைவிலக்கணம் என்ன?
2. குளிப்பு கடமையாகும் இரு சந்தர்ப்பங்களைத் தெளிவுபடுத்துக.
3. ஒரு முஸ்லிம் குளிக்க எண்ணி, தனது முழு உடலும் நனையும் விதத்தில் கடலில் நீந்தினால் இக்குளிப்பின் சட்டம் என்ன?
நான்காம் பாடம் : தொழுகையின் மகிமை
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்:
1. அல்குர்ஆன், அல்ஸுன்னாவிலிருந்து தொழுகையின் மகத்துவத்திற்கான ஆதாரங்களை முன்வைப்பீர்.
முஸ்லிமின் ஈருலக வாழ்வில் தொழுகையின் அவசியத்தை தெளிவு படுத்துவீர் .
3. தொழுகையை விடுதல், அல்லது அதில் அலட்சியமாக இருப்பதன் விபரீதத்தை உணர்ந்து கொள்வீர்,.
4. தொழுகையின் முக்கியத்தை அறிந்து அதனை போற்றி நடப்பீர்.
தயார்படுத்தல்:
அல்லாஹ் தனது நபி ﷺ அவர்களுக்கு விதியாக்கிய அனைத்து வணக்கங்களையும் பூமியில் ஜிப்ரீல் (அலை) அவர்களினூடாக வஹீ மூலமே விதியாக்கினான். ஆனால் தொழுகையை நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு மிஃராஜுடைய இரவில் வானில் நேரடியாகவே விதியாக்கினான்.
இது எதனை காட்டுகிறது?
இஸ்லாத்தில் தொழுகையின் முக்கியத்துவம்
தொழுகை மார்க்கத்தின் தூணாகும்
தொழுகை இஸ்லாத்தின் அடையாளமாகும்
ஏகத்துவத்தை ஏற்ற பின் நிறைவேற்ற வேண்டிய முதல் கடமை.
நபியவர்கள் செய்த இறுதி வஸிய்யத் .
மறுமையில் முதலில் விசாரணை செய்யப்படும் வணக்கம்
பாவங்கள் மண்ணிக்கப்படுவதற்கான ஒரு வழி.
இஸ்லாத்தில் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது, பின்வருவன அதற்கு சான்றாக உள்ளன :
1. தொழுகை மார்க்கத்தின் தூணாகும்
மார்க்கத்தின் இன்றியமையாத தூண், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "விடயங்களில் தலையாயது இஸ்லாமாகும், அதன் தூண் தொழுகையாகும்". (ஆதாரம் : திர்மிதி 2616).
2. தொழுகை இஸ்லாத்தின் அடையாளம் :
தொழுகையைப் பேணிவருவது இஸ்லாத்தில் உறுதியாக இருக்கிறார் என்பறத்கானஅடையாளமாகும், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "(முஸ்லிம்களாகிய) எங்களுக்கும் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் தொழுகையே, அதனை விட்டவர் நிராகரித்து விடுகின்றார்" . (ஆதாரம் : திர்மிதி 2621).
3. ஏகத்துவத்தை ஏற்ற பின் நிறைவேற்ற வேண்டிய முதல் கடமை.
அல்லாஹ் கூறுகிறான் : "அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும். மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்." (பய்யினா : 5).
4.இது நபியவர்கள் செய்த இறுதி உபதேசம் :
தொழுகையைப் பேணிவருவது நபி ﷺ அவர்கள் செய்த இறுதி உபதேசமாக இருந்தது, அன்னார் கூறினார்கள் : "தொழுகையைப் பேணுங்கள், தொழுகையைப் பேணுங்கள்". (ஆதாரம் : அஹ்மத் 26483, இப்னு மாஜா 1625). அதாவது, தொழுகையைப் பற்றிப்பிடியுங்கள், அதனைப் பேணி வாருங்கள்.
5. மறுமை நாளில் அடியானிடம் விசாரிக்கப்படும் முதல் விடயம் :
நபி ﷺ கூறுகிறார்கள் : "மறுமை நாளில் ஓர் அடியானிடம் முதலில் விசாரணை செய்யப்படும் செயல் தொழுகையே, அது சீரானால் அவன் வெற்றி பெற்று விட்டான். அது சீர்கெட்டால் அவன் நஷ்டமடைந்து விட்டான்". (நூல்: திர்மிதி 413, இப்னுமாஜா 1425).
6. பாவங்கள் மற்றும் தவறுகளுக்கான பரிகாரமாக தொழுகையை அல்லாஹ் வைத்துள்ளான்
நபி (ஸல்) கூறுகிறார்கள் : ''உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளுக்கான உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்''. (ஆதாரம் : புஹாரி 528, முஸ்லிம் 667).
செயற்பாடுகள் :
செயல்பாடு (1) : படிப்பினை கூறுவேன் :
தொழுகை மன அமைதியைத் தரும், கவலைகளைப் போக்கும், இதனால்தான் நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் பதற்ற நிலை ஏற்பட்டால் தொழுவார்கள் (அபூதாவூத் 1319), மேலும் நபியவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் பின்வருமாறு கூறுவார்கள் : "பிலாலே, தொழுகையை நிலைநாட்டுவதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக". (ஆதாரம் : அபூதாவூத் 4985).
மன அமைதியை ஏற்படுத்துவதில் தொழுகையின் தாக்கம் குறித்து உமது நிகழந்த ஒரு சந்தர்ப்பத்தை நினைவில் கொள்க., பின் அது பற்றி உமது உணர்வை உங்கள் சக நண்பர்களிடம் விவரிக்கவும்.
செயல்பாடு (2) : கூர்ந்து கவனிப்பேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ஒரு முஸ்லிமுக்கு ஐநேரத் தொழுகை நேரம் வந்து, அதற்காக அழகாக வுழூச் செய்து, பயபக்தியோடு தொழுது, ருகூஐயும் செய்தால் -பெரும் பாவங்கள் செய்யாதவரை- அது அவரது முன்செய்த பாவத்திற்கான பரிகாரமாக அமையும்". (ஆதாரம் : முஸ்லிம் 228).
1 - ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள தொழுகையின் சிறப்பு என்ன?
2 - இந்த சிறப்பை அடைவதற்கான நிபந்தனைகள் என்ன?
செயல்பாடு (3) : சம்பவம், கதை கூறுவேன் :
தொழுகையை அலட்சியப்படுத்துவது அல்லது அதைச் செய்யத் தவறினால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி ஒரு மத போதகர் அல்லது மத நிகழ்ச்சியிலிருந்து நீங்கள் கேட்ட கதையை உங்கள் குடும்பத்தினரிடம் சொல்லுங்கள்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. தொழுகை ஆன்மாவுக்கு ஆறுதலையும் மனதிற்கு நிம்மதியையும் தருகிறது .(✓)
2. மதீனாவில் தொழுகையை கடமையாக்குவது தொடர்பாக வஹீ வந்தது. (×)
3. தொழுகை என்பது மறுமையில் முதலில் விசாரணை நடத்தப்படும் செயலாகும். (✓)
கே 2 : பின்வருவனவற்றில் தொழுகையின் நிலை குறித்து முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துக:
1. அல்லாஹ் கூறுகிறான் : "அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்."
2. நபி ﷺ கூறுகிறார்கள் : "விடயங்களில் தலையாயது இஸ்லாமாகும், அதன் தூண் தொழுகையாகும்".
கே 3 : தொழுகையின் நிலை மற்றும் அதில் உங்கள் ஆர்வத்தை மூன்று வரிகளில் குறிப்பிடவும்.
ஐந்தாம் பாடம் : தொழுகை முறை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. தொழுகை முறையை தெளிவுபடுத்துவீர்.
2. தொழுகையாளிகளின் செயற்பாடுகளில் காணப்படக்கூடிய பரவலான தவறுகளை அவதானித்து எடுத்துக் கூறுவீர்.
3. தொழுகையில் உள்ளச்சத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடப்பீர்.
4. தொழுகையை அதன் சரியான முறையில் நிறைவேற்றுவீர்.
சில தொழுகையாளிகள் எவ்வாறு தொழ வேண்டும் என்பதில் வேறுபடுகிறார்கள், ஒருவேளை இதற்கான காரணங்களில் ஒன்று தொழுகையின் சரியான விளக்கத்தைப் பற்றிய அறிவு இல்லாததாகும், எனவே தொழும்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தப் பாடத்தை நன்கு கவனிக்குக.
தொழும் முறை
ஒரு முஸ்லிம் வுழுசெய்து , தனது அந்தரங்க உறுப்புகளை மறைத்தவனாக கிப்லாவை முன்னோக்கி நிற்பார் , அதன்பின் பின்வரும் தொழுகையின் செயல்பாடுகளைசெயல்களை செய்வார். :
ஒரு முஸ்லிம் தொழுகைக்கான நிய்யத்தை மனதால் நினைத்து அத்தொழுகை பர்ழ் அல்லது ஸுன்னத் என்பதை தனது நிய்யத்தில் வரையறுத்துக்கொள்வார்.
நேராக நின்று, இரு கரங்களையும் உயர்த்தி الله أكبر என்று தக்பீரதுல் இஹ்ராம் (முதலாம் தக்பீர்) கூறி. பின் வலது கையை இடது கை மீது வைத்து, நெஞ்சின் மீது த்துக்கொள்வர்.
ஸூரா பாதிஹா ஓதி விட்டு, அல்குர்ஆனிலிருந்து அவருக்கு இயலுமான ஒரு பகுதியை ஓதுவார்.
இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் சொல்லி ருகூஃ செய்வார், இரு கைகளையும் முழங்காலில் வைத்து, ஸுப்ஹான ரப்பியல் அழீம் என்று மூன்று முறை கூறுவார். (பொருள் : மகத்தான என்னுடைய இறைவனைத் துதிக்கிறேன்).
"ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு" என்று கூறி தலையை உயர்த்தி நடு நிலைக்கு வர வேண்டும், (பொருள் : தன்னைப் புகழ்வதை அல்லாஹ் கேட்டுக் கொண்டான்.) வந்ததும் "ரப்பனா வலகல் ஹம்து" எனக் கூற வேண்டும். (இறைவா உனக்கே புகழனைத்தும்).
தக்பீர் கூறி ஸுஜூது ஸுஜூத் செய்வார்., அதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று முறை கூறுவார். (பொருள் : உயர்வான என்னுடைய இறைவனைத் துதிக்கிறேன்).
தக்பீர் கூறி ஸுஜூதிலிருந்து நடு அமர்விற்கு வருவார் . அதில் ரப்பிஃபிர்லீ ரப்பிஃபிர்லீ என்று கூறுவார். (பொருள் : இறைவா என்னை மன்னித்து விடு, இறைவா என்னை மன்னித்து விடு).
மீண்டும் தக்பீர் கூறி இரண்டாவது ஸுஜூது செய்வார், அதிலும் ஸுப்ஹான ரப்பியல் அஃவா என்று மூன்று முறை கூறுவார். (பொருள் : உயர்வான என்னுடைய இறைவனைத் துதிக்கிறேன்).
இரண்டாவது ரக்அத்திற்கு பின் தஷஹ்ஹுத் ஓதுவதற்காக அமர்வார். : "அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு". (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும், அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்).
இறுதி ரக்அத்திற்குப் பின் உட்கார்ந்து முன்னர் ஓதிய தஷஹ்ஹுதை ஓதி விட்டு, நபியவர்கள் மீது பின்வரும் ஸலாதுல் இப்ராஹீமிய்யாவை ஓதுவார் : "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்". (பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீ அபிவிருத்தி(பரகத்து) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி(பரகத்து) செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்).
வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் அஸ்லாமு அலைக்கும் என்று ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்வார்.
தொழுகையில் அமைதியும் உள்ளச்சமும் :
தொழுபவர் தனது உள்ளத்தில் அல்லாஹ்வின் மகத்துவத்தை வரவழைத்து, தனது அசைவுகளில் அமைதி பேணி, உறுப்புக்கள் உள்ளச்சத்துடன் இருக்க வேண்டும், தான் கூறும் குர்ஆன் வசனம், திக்ருகள், துஆக்களில் சிந்தனை செலுத்த வேண்டும் : "நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்". (முஃமினூன் : 1, 2).
செயற்பாடுகள் :
செயல்பாடு (1): பார்த்து பயிற்சி பெறுவேன் :
பின்வரும் ஒளிப்பதிவினூடாக தொழுகை முறையை நீர் உமது குடும்பத்துடன் பார்த்து, அவர்கள் தவறிழைத்தால் சுட்டிக் காட்டவும்.
செயல்பாடு (2) : வாசித்து, விடையளிக்கிறேன்.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : ''நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சாரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!". (ஆதாரம் : புஹாரி 793, முஸ்லிம் 397).
இந்த நபிமொழியை வாசித்த பின் பின்வருவனவற்றுக்கு விடையளிக்கவும் :
1. பாடத்தில் நீர் கற்றுக்கொண்ட தொழும் முறையில், இந்த ஹதீஸில் குறிப்பிடப்படப்படாத விடயங்களை குறிப்பிட்டுக் காட்டுக.
2. இந்நபிமொழியில் நிதானம் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, தொழுகையில் அதனைக் கடைபிடிக்கும் முறை பற்றி உமது ஆசிரியருடன் கலந்தாலோசிக்கவும்.
செயல்பாடு (3) : நான் எப்படி செயல்படுவது?
பின்வரும் நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்து, அவை ஒவ்வொன்றிலும் சரியான சட்ட நடத்தையை அறிய, உங்கள் ஆசிரியர் அல்லது உங்கள் பள்ளியின் இமாமைத் தொடர்பு கொள்ளுங்கள்:
1. தொழுகையில் ஸூறா பாத்திஹாவை மறதியில் ஓதாது ருகூஉ செய்தாய்.
2. நடு அத்தஹிய்யாத் ஓத மறந்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழுந்து எழுந்துவிட்டீர் .
3. அஸர் தொழுகையில் நான்காம் ரக்அத்திற்குப் பின்னால் தவறுதலாக எழுந்துவிட்டீர் .
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. ஒரு முஸ்லிம் தொழுகைக்கு முன் நிய்யத்தை வாயால் மொழிதல் வேண்டும். (×)
2. பாத்திஹா தொழுகையின் அனைத்து ரக்அத்களிலும் ஓதப்பட வேண்டும். (✓)
3. தொழுபவர் ருகூஃவில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று கூறுகிறார். (×)
4. உள்ளச்சம் என்பது இதயத்தின் செயல், அது உறுப்புகளின் நிதானத்திலும்.அவசரமின்மையிலும்தோன்றுகிறது. (✓)
5. தொழுபவர் தனது வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்க்கு மேல் கட்டிக் கொள்வார். (✓)
கே 2 : பின்வரும் வாக்கியங்களை முடிக்கவும்:
1. ருகூஃவிலே ஓத வேண்டியது .........................................
2. ருகூஃவிவிருந்து நடு நிலைக்கு வந்ததும் கூற வேண்டியது .....................................................................................
3. இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் கூற வேண்டியது ............................................................................................
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
1. முதலாம் இரண்டாம் தஷஹ்ஹுத்களில் ஓதுப்படுதற்கிடையில் ஓதவப்படுபவற்றிற்கிடையிலுள்ளவைகளை ஒப்பிட்டுக.
2. உள்ளச்சம் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதாகவும், அடியானின் வெற்றியாகவும் உள்ளது. இதனைத் தெளிவு படுத்துக.
பண்பாடு பகுதி
முதலாம் பாடம் : உண்ணல் பருகலின் ஒழுங்குகள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. உணணல், பருகலின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகளைக் ஒவ்வொன்றாக் குறிப்பிட்டுக்காட்டுவீர்.
2. உண்ணல், பருகலின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் மார்க்கமாக்கப்படுவதற்குரிய காரணிகளை குறிப்பிட்டுக்காட்டுவீர் .
3. உண்ணல் ; பருகலின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகளுக்கான ஆதாரங்களை முன்வைப்பீர்..
4. உணணல்; பருகலின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகளைக் நடைமுறைப்படுத்துவீர்.
இந்த பாடத்தின் போது, தினசரி ஒழுங்குகள் குறித்து கவனம் செலுத்தும் இஸ்லாமிய சட்டவியலின் சில சிறப்பியல்புகளைஉங்களால் கண்டு கொள்ளமுடியும் , மேலும் இந்த ஒழுங்குளை ஒரு முஸ்லிம் கடைப்பிடிக்கும் போது அவை அவனில் இம்மை மறுமையில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் தெளிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.
உணணல்; பருகலின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள்
கடைப்பிடித்து ஒழுக வேண்டி ஓழுங்குகள் :
உண்ணுவதற்கு முன்பாக இரு கைகளையும் கழுவிக்கொள்ளல்.
உண்பதற்கும் குடிப்பதற்கும் வலது கையைப் பயன்படுத்தல்.
உட்கார்ந்து சாப்பிடுதல்.
உண்பதற்கும் குடிப்பதற்கும் முன் பிஸ்மில் கூறுதல்.
கூட்டாக உண்ணும் போது முன்னாலுள்ளதை மாத்தரிம் உண்ணுதல்.
உண்ணல், பருகலுக்குப் பின்னால் அல்லாஹ்வைப் புகழ்தல்.
உண்ணல் பருகலின் போது தவிர்க்கப்படவேண்டிய விடயங்கள்.
சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்.
பானங்களை அருந்தும் போது அதில் மூச்சுவிடுதல்.
அளவுக்கதிகமாக வயிறு நிரம்ப உண்ணுதல்.
சூடான உணவில் ஊதுதல்.
முதலாவது : கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
1. உண்ணுவதற்கு முன்பாக இரு கைகளையும் கழுவிக்கொள்ளல்.
2. உண்பதற்கும் குடிப்பதற்கும் முன் பிஸ்மில் கூறுதல். பிஸ்மில் சொல்ல மறந்தால் "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு" என்று கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் உணவு உண்ணும்போது "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி சாப்பிடுகிறேன்) என்று கூறவும், ஆரம்பத்தில் இவ்வாறு சொல்ல மறந்துவிட்டால் "பிஸ்மில்லாஹி பீ(f) அவ்வலிஹி வஆகிரிஹி" என்று கூறவும்". (இதன் ஆரம்பத்திற்கும் இறுதியிலும் அல் லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (நான் சாப்பிடுகிறேன்). (ஆதாரம் : திர்மிதி 1858).
3. உண்பதற்கும் குடிப்பதற்கும் வலது கையைப் பயன்படுத்தல். நோய் போன்ற காரணங்களுக்காக வலது கையால் முடியாவிட்டால் இடது கையைப் பயன்படுத்தலாம்.
4. கூட்டாக உண்ணும் போது முன்னாலுள்ளதை மாத்தரிம் உண்ணுதல். உமர் இப்னு அபீ ஸலமாவுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு". (ஆதாரம் : புஹாரி 5376, முஸ்லிம் 5388).
5. உட்கார்ந்து உண்ணுதல், தேவைக்காக நின்று கொண்டு உண்ணுவதில் தடையேதுமில்லை.
6. ஒரே மிடரில் பருகாமல் பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நபியவர்கள் பருகும் போது மூன்று தடவை மூச்சு விடுவார்கள்" (ஆதாரம் : முஸ்லிம் 2028).
7. உண்ணல் பருகலின் பின் அல்லாஹ்வைப் புகழ்தல், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உணவு சாப்பிட்டதுவும்,அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்". (ஆதாரம் : முஸ்லிம் 7108).
இரண்டாவது : உண்ணல் பருகலின் போது (தவிர்க்க வேண்டிய( தடைசெய்யப்பட்ட சில செயல்கள்
1. சாய்ந்து கொண்டு உண்ணுதல், ஏனெனில் இது பெருமைக்காரர்களின் பண்பாகும்.
2. வீண்விரயம் மற்றும் அளவுக்கதிகமாக வயிறு நிரம்ப உண்ணுதல்,அளவு கடந்து உண்ணுதல் உடற்பருமன் மற்றும் உடற்பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமையலாம். நபியவர்கள் அதனைத் தடுத்துள்ளார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை". (அஃராப் : 31).
3. சூடான உணவில் ஊதுதல்
4. பருகும் போது தண்ணீரில் மூச்சு விடுதல், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார் : "நபி (ஸல்) அவர்கள் பருகும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையோ, ஊதப்படுவதையோ தடுத்தார்கள்". (ஆதாரம் : திர்மிதி 1888, இப்னுமாஜா 3288).
செயற்பாடுகள்:
செயல்பாடு (1) : வாசித்து, விடையளிக்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : "மனிதன் வயிற்றை விட மோசமான எந்தப் பையையும் நிரப்பவில்லை. மனிதனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்துமளவு உணவில் சில கவளங்கள் போதுமானது. அதை விட அவசியமென்றால் தனது வயிற்றை மூன்றிலொரு பகுதி உணவுக்கும், மூன்றிலொரு பகுதி பானத்திற்கும், மீதி மூன்றிலொரு பகுதி சுவாசிக்கவும் பிரித்துக் கொள்ளட்டும்". (ஆதாரம் : திர்மிதி 2380, இப்னுமாஜா 3349).
இந்நபிமொழி குறிப்பிடும் ஒழுங்கு என்ன?
செயற்பாடு (2) ஆய்ந்து வெளிப்படுத்துகிறேன்.
பின்வரும் பதிவைத் தொடர்ந்து கவனித்து விட்டு, அதிலிருந்து பின்வருவனவற்றைக் கண்டுபிடிக்கவும் :
1. பாடத்தில் இடம்பெறாத உண்ணலின் இரண்டு ஒழுங்குகள்.
2. உண்ணலின் போது கடைப்பிடிக்கப்படும் சில ஒழுங்குகளில; காணப்படும் சில நுட்பங்கள் :
செயல்பாடு (3) : மதிப்பீடு செய்து திட்டமிடுவேன் :
1. இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள உண்ணல் பருகலின் அனைத்து ஒழுங்குகளையும் நீர் கடைபிடிக்கின்றீரா?
2. உமது குடும்பத்தினருக்கு உண்ணல், பருகலிந் ஒழுங்குகளைக் கற்பிக்க ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்யவும்.
மதிப்பீடு:
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1 - நபி (ஸல்) அவர்கள் குடிக்கும் போது பாத்திரத்தில் மூச்சு விடுவதைத் தடை செய்தார்கள். (√)
2 - ஒரு முஸ்லிம் தனது வலது அல்லது இடது கையால் சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. (×)
3- சாப்பிடும் போது சாய்ந்திருத்தல் பணிவைக் குறிக்கிறது. (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1 - சாப்பிடும் போது சாய்வது பின்வரும் விஷயங்களில் ஒன்றாகும்:
(விரும்பத்தக்க - அனுமதிக்கப்பட்ட - தடைசெய்யப்பட்ட) விஷயங்களில் ஒன்றாகும்
2 - உணவு, பானங்களில் ஊதுவது :
(ஒழுங்குகளில் - கடமையானவை களில்- தடுக்கப்பட்டவைகளில்) ஒன்றாகும்
1 - வலது கை உடைந்த ஒருவர் இடது கையால் சாப்பிடுவது :
(அனுமதிக்கப்பட்டது - வெறுக்கத்தக்கது - தடைசெய்யப்பட்டது).
கேள்வி :3 பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடையளிக்குக.
1. நபியவர்கள் அதிகமாக உண்ணவோ, பருகவோ வேண்டாமென ஏன் எமக்கு ஏவியுள்ளார்கள்?
2. உண்ணுவதற்கோ பருகுவதற்கோ முன்னர் பிஸ்மில்லாஹ் கூற மறந்த ஒருவர் என்ன கூற வேண்டும்?
பாடம் இரண்டு : அனுமதி கோரலின் ஒழுங்குகள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. அனுமதி கோரலின் ஒழுங்குகளைக் எடுத்துக் கூறுவீர்.
2. அனுமதி கோரலின் சட்டத்தைத் சட்ட நிலையை தெளிவு படுத்துவீர்.
3. அனுமதி கோரலின் முறை, அதிலுள்ள அதில் மறைந்துள்ள நுட்பங்ளையும் விபரிப்பீர்.
4. பிறரின் உரிமைகளைக் கவனிப்பதன் அவசியத்தை உணரந்து நடப்பீர்.
5. வீட்டினுள்ளும், வெளியேயும் அனுமதி கோரலின் ஒழுங்குகளைக் கடைபிடித்தல் வேண்டும்.
(அலி காலிதை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றார், பல முறை அழைப்பு மணி அடித்தும், யாரும் பதிலளிக்கவில்லை, அதனால் அலி கோபமாக திரும்பி வந்தார், அவர் காலிதை சந்தித்தபோது, தனக்காக கதவைத் திறக்கவில்லை என்று அவர் கடிந்து கொண்டார், எனவே காலித் அவரிடம் அவரை வரவேற்பதற்கு வீடு பொருத்தமானதாக இருக்கவில்லை என்று கூறினார்).
உங்கள் கருத்துப்படி: கோபப்படவும், கண்டிக்கவும் அலிக்கு உரிமை இருக்கிறதா?
வீட்டின் உள்ளேஅனுமதி கோரலின் ஒழுங்குகள்
அனுமதி கோரலின் சட்டம்
அனுமதி கோரலில் உள்ள தத்துவம்
அனுமதி கோரலின் ஒழுங்குகள்
அனுமதி கோருவதன் சட்டம் :
ஒரு முஸ்லிம் வீடுகள் போன்ற தனிப்பட்ட இடங்களுக்குள் நுழைய விரும்பினால் அனுமதி கேட்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள்". (நூர் : 27).
அனுமதி கோருவதில் காணப்படும் தத்துவம் -
யாரும் பிறரின் அந்தரங்கங்களை அறிந்திடாமலிருக்கும் வகையிலும் வீடுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் அல்லாஹ் அனுமதி கோரலை மார்க்கமாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அனுமதி கோரல் வைக்கப்பட்டுள்ளதெல்லாம் பார்வைக்காக வேண்டிதான்". (ஆதாரம் : புஹாரி 6241).
அனுமதி பெறுவதின் ஓழுங்குகள் :
1. அனுமதி கோருபவர் முதலில் ஸலாம் கூறி, பின் உட்பிரவேசிக்க அனுமதி கோர வேண்டும். யாரும் பதிலளிக்கா விட்டால் மீண்டும் இரு தடவைகள் கோர வேண்டும். அப்போதும் யாரும் பதிலளிக்கா விட்டால் திரும்பி விட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அனுமதி கோரல் மூன்று தடவையாகும், உனக்கு அனுமதியளிக்கப்பட்டால் உட்செல்லவும், இல்லாவிடில் திரும்பிச் செல்லவும்". (ஆதாரம் : முஸ்லிம் 5753).
அவருக்கு கோபித்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்". (நூர் : 28).
2. அனுமதி கோருபவர் வீட்டுரிமையாளர் தன்னை அறிந்து கொள்வதற்காகத் தனது பெயரைக் கூற வேண்டும்.
3. கதவு திறக்கப்படும் போது வீட்டினுள்ளே தென்படாமலிருக்க வீட்டின் வலது அல்லது இடது பக்கத்தில் அனுமதி கோருபவர் நிற்க வேண்டும்.
4. தாய், சகோதரி போன்ற நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்குள் நுழைய முன்னரும் அனுமதி கோரல் அவசியமாகும்.
வீட்டின் உள்ளேஅனுமதி கோரல் -அதாவது வீட்டின் அறைகளுக்கு செல்லும் போது அனுமதி கோரல்.
உறவினர்களின் அந்தரங்கங்களில் எதையும் பார்க்கக்கூடாது என்று குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, அல்லாஹ் குறிப்பிட்ட நேரத்தில் பெற்றோர்களிடம் அனுமதி கேட்பதைக் கட்டாயமாக்கியுள்ளான். அவன் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “லுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும்". (நூர் : 58).
அம்மூன்று அந்தரங்க நேரங்களாகின்றன :
1. பஜ்ர் தொழுகைக்கு முன்னால்.
2. ஓய்வு நேரங்களில் ஆடைகளைக் களையும் சந்தர்ப்பம் (அதாவது : மதியம் தூங்கும் நேரம்).
3. இஷாத் தொழுகைக்குப் பின்.
இந்த மூன்று நேரங்களிலும் அனுமதி கேட்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மனிதன் அந்நேரங்களில் தூங்க தயாராக இருப்பதால், அல்லது தொழுகைக்காக எழுந்திருப்பதால், ஆடைகளை தளர்த்த அல்லது மாற்றுவதற்கான நேரம் போன்ற காரணங்களுக்காகவே இந்த சட்டம் விதியாக்கப் பட்டுள்ளது.
(ஒப்படைகள்) செயற்பாடுகள்:
செயற்பாடு (1) : விளக்கி பரிந்துரைப்பேன் :
குறிப்பாக உறவினர்கள் மத்தியில் அனுமதி கேட்கும் ஒழுங்குகளில் பல மீறல்கள் உள்ளன, இதன் மூலம் பல தீமைகள் ஏற்படலாம், அதனூடாக பின்வருவனவற்றை விளக்கவும் :
1. அனுமதி கோரலை விடுவதால் ஏற்படும் தீமைகள்.
பிறரின் குறைகளைக் காணுதல்.
2 - அனுமதி கேட்கும் நெறிமுறைகளைப் பரப்புவதற்கும் அதில் ஏற்படும் மீறல்களைத் திருத்துவதற்கும் மூன்று வழிகளைப் பரிந்துரைக்கவும்.
செயல்பாடு 2 : பார்த்து விளக்கவேன் :
பின்வரும் இணைப்பில் உள்ள பதிவை உன்னிப்பாக பார்த்து, அதன் உள்ளடக்கத்தை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மெதுவாக விளக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ( ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1 - அனுமதி கேட்காமல் ஒருவர் மற்றொருவரின் வீட்டிற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. ✓
2- அனுமதி கோரும் நபர் தனது நண்பர் அல்லது சக ஊழியர் என விவரித்தால் போதுமானது. ×
3- குழந்தைகள் பகலில் தூங்கும் நேரங்களில் அனுமதி கேட்க வேண்டும். ✓
4- ஒரு ஆண் தன் சகோதரியிடம் நுழையும் போது அனுமதி கேட்கத் தேவையில்லை. ×
5 - பஜ்ர் தொழுகைக்கு முன் குழந்தைகள் அனுமதி கேட்க வேண்டும். ✓
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. அனுமதி கோரும் நபருக்கு வீட்டின் உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை என்றால், அனுமதி கோருபவர் கண்டிப்பாக:
(காத்திருப்பது - வெளியேறுவது - மீண்டும் அனுமதி கேட்பது) அவசியமாகும்.
2. குழந்தைகள் எந்தத் தொழுகைக்குப் பிறகு அனுமதி கேட்க வேண்டும் :
(அஸர் - மக்ரிப் - இஷா)
3. வீட்டின் உள்ளே அனுமதி கேட்க பரிந்துரைக்கப்படுவதன் காரணம் :
(சிறுவர்களைத் தண்டிப்பதைக் கைவிடுதல் - இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையைக் காட்டுதல் - குடும்பத்தின் அந்தரங்கங்களைப் பாதுகாத்தல்)
கே 3 : பின்வருவனவற்றிற்கான காரணங்களைக் கூறுங்கள்:
1. அனுமதி கோருபவர் வீட்டுக் கதவின் வலது அல்லது இடது புறமாக நிற்றல்.
2. அனுமதி கோருபவர் தனது பெயரைக் கூறுதல்.
மூன்றாம் பாடம் : உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகளைப் குறிப்பிடுவீர்..
உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகளின் அவசியத்தை மதித்து நடந்து கொள்வீர்.
3. உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகளைப் பேணி நடந்து கொள்வீர்..
4. சபை களையும் போது ஓதும் துஆ பற்றிய நபிமொழியை மனனமிட்டு கொள்வீர்.
அறிமுகம்
சிலர் சபைகளின் ஒழுங்குகளைக் கவனத்திற் கொள்ளாமல் சபையை ஆரம்பித்து, முடிக்கின்றனர். இது இஸ்லாமிய வழிமுறைக்கு மாற்றமானதாகும். எனவே இப்பாடத்தில் நீர் கற்கும் சபை ஒழுங்குகளைப் பேணி வரவும்.
உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகள்
உரையாடலின் ஒழுங்குகள்
சபையின் ஒழுங்குகள்
முதலாவது : உரையாடலின் ஒழுங்குகள்
1. பேச்சைத் துவங்க முன்னர் ஸலாம் கூற வேண்டும், ஸலாத்தை செவிமடுப்பவர் அதற்கு பதிலளிப்பது அவசியமாகும்.
2. நல்லதை மாத்திரமே பேச வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ அவர் நல்லதையே பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும்". (ஆதாரம் : புஹாரி 6018, முஸ்லிம் 47).
3. பொய், புறம், கோல், தீய வார்த்தை, இரகசியங்களை அம்பலப்படுத்துதல், மக்களைப் பரிகசித்தல் போன்றவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4. தனக்குத் தேவையில்லாததை விட்டு விடுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'. (ஆதாரம் : இப்னுமாஜா 3976).
5. சபையோர் மூவராக இருந்தால் ஒருவரை விட்டு மற்றிருவரும் இரகசியம் பேசலாகாது, அது அவரைக் கவலைக்குள்ளாக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் மூவராக இருந்தால் மக்களுடன் நீங்கள் கலக்கும் வரை மற்றவரை விட்டுவிட்டு இருவர் மாத்திரம் இரகசியம் பேச வேண்டாம்". (ஆதாரம் : புஹாரி 6290, முஸ்லிம் 2184).
இரண்டாவது : சபை ஒழுங்குகள்
1. சபைக்குள் நுழையும் வேளையிலும்; வெளியேறும் போதும் ஸலாம் கூறுதல்.
2. சபையில் கிடைக்குமிடத்தில் அமர்தல், சபையின் ஆரம்பத்திற்குச் செல்வதற்காக மக்களைக் கடந்து செல்வதைத் தவிர்ந்து கொள்ளல்.
3. இடம் கிடைக்காதோருக்கு அமர்வதற்காக சபையில் சற்று விசாலப்படுத்திக் கொள்ளுதல். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்". (அல் முஜாதலா: 11).
4. சிறு பிள்ளையோ, வறியவரோ யாரையும் உட்கார்ந்திருக்கும் இடத்தை விட்டு நகர்த்தி விட்டு அவ்விடத்தில் உட்காரக் கூடாது.
5. அருகருகில் அமர்ந்திருக்கும் இருவருக்கிடையில் அவர்களது அனுமிதியின்றி அமரக்கூடாது.
6. தடைசெய்யப்பட்ட கேளிக்கைகள், வீண் பேச்சுக்கள், தீய செயல்களைப் பார்ப்பது போன்றவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளல்.
7. கௌரவமானவர்கள், அறிஞர்கள், நல்ல நண்பர்களுடன் அமர்வதில் அக்கறை கொள்தல்.
8. சபையில் அவசியம் அல்லாஹ் நினைவுகூரப்படுவதில் அக்கறை கொள்ளல்.
9. களைந்து செல்லும் முன் கப்பாரதுல் மஜ்லிஸ் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளுதல். கப்பாரதுல் மஜ்லிஸ் பின்வருமாறு : "ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லா அன்த, அஸ்தஃபிருக வஅதூபு இலைக". (இறைவா! உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைத் துதிக்கிறேன். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் உன்னைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகின்றேன். உன்னிடமே பாவமன்னிப்புக் கோரி மீள்கின்றேன்). (ஆதாரம் : திர்மிதி 3762).
இறுதியாக, சபை ஒழுங்குகளைப் பின்வரும் இணைப்பினூடாக மீட்டிப்பார்க்கவும் :
செயற்பாடுகள்:
செயல்பாடு (1) : கண்டுபிடித்து இணைப்பேன் :
1. பின்வரும் நபிமொழியில் இருந்து ஸலாம் சொல்வதன் படித்தரங்களையும், அவற்றின் தரங்களையும் கண்டுபிடித்தெடுக்கவும் :
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைகும் எனக் கூறினார், பதிலளித்த நபியவர்கள் "பத்து" என்றார்கள், பின்னர் மற்றுமொருவர் வந்து அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ் என்றார், பதிலளித்த நபியவர்கள் "இருபது" என்றார்கள், பின் வந்த மூன்றாமவர் அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ என்றார். பதிலளித்த நபியவர்கள் "முப்பது" என்றார்கள். (ஆதாரம் : அபூதாவுத் 5195, திர்மிதி 2698).
2. முன்னைய நபிமொழிக்கும், பின்வரும் இறைவசனத்திற்குமிடையில் தொடர்பு படுத்தவும் : "(எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்". (நிஸாஃ : 86).
செயல்பாடு (2) : தெளிவுபடுத்தி ஆலோசனை கூறுவேன் :
பின்வரும் சூழ்நிலைகளில் நிகழ்ந்த பாவத்தை விளக்கி, அதைச் செய்தவர்களுக்கு ஆலோசனை வழங்கவும்:
சூழ்நிலை
ஒரு ஊழியர் தனது சக ஊழியர்களுக்கு இடையே ஒரு பிளவை உருவாக்க அவர்களின் வார்த்தைகளை பிறரிடம் கூறுகிறார்.
ஒருவர் தனது அயலவர்களின் குறைகளைக் கூறுகிறார்.
ஒரு யுவதி தனது வறிய தோழியின் ஆடைகளைக் கொச்சைப்படுத்துகிறாள்.
சாரதி தனது முதலாளி வீட்டு இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். பாவத்தின் வகை உபதேசம்
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓)எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
1. ஸலாத்திற்கு பதில் கூறுவது விரும்பத்தக்க விஷயங்களில் ஒன்றாகும். (×)
2. ஒரு முஸ்லிமுக்குப் புறம் பேசுவது, கோல் சொல்லித் திரிவது, கேலி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. (✓)
3. பணக்காரர் ஒருவர் ஒரு ஏழையை அவரது இடத்திலிருந்து எழுப்பி விட்டு அமரலாம்.(×)
கே 2 : பின்வரும் பின்வரும் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யவும் :
«سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ ...................، أَسْتَغْفِرُكَ ................».
கேள்வி 3: பின்வரும் கேள்விகளுக்கு விடையெழுதுக:
1 - ஒரு முஸ்லிம் நல்லதை மட்டுமே கூறுவது சபையின் ஒழுங்குகளில் உள்ளதாகும். இதை விளக்குங்க.
2. சபையில் பேண வேண்டிய 3 ஒழுங்குகளை எழுதுக.
3 - "அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ" என்று ஸலாம் கூறுபவருக்கு உண்டான கூலியைக் கூறுக.
நான்காம் பாடம்: : கழிப்பறை ஒழுங்குகள்
செயல்முறை நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகளைப் ஒவ்வொன்றாக குறிப்பிடுவீர்.
2. மலசல கூடத்திற்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் ஓத வேண்டிய துஆவை மனனமிட்டுக்கொள்வீர்.
3. மலசல கூடத்தின் ஒழுங்குகளைக் கடைபிடிப்பதில் கரிசனையுடன் நடந்து கொள்வீர்.
4. பிரத்தியேக தூய்மையில் இஸ்லாம் கரிசனை செலுத்தியிருப்பதால்பெருமிதம் அடைவீர்.
ஆரம்ப செயற்பாடு :
மலசலம் கழிப்பது உட்பட உமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார்களா என ஸல்மான் பாரிஸீ (ரழி) அவர்களிடம் வினவப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள் : "ஆம், மலசலம் கழிக்கும் போது கிப்லாத் திசையை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது எனவும், வலது கையால் சுத்தம் செய்யக் கூடாதெனவும், மூன்று கற்களுக்கு குறைவாகப் பயன்படுத்தக் கூடாதெனவும், விட்டை, எலும்பு போன்றவற்ரால் சுத்தம் செய்ய வேண்டாமெனவும் எங்களைத் தடுத்தார்கள்". (ஆதாரம் : முஸ்லிம் 262).
இந்நபிமொழியிலிருந்து இஸ்லாத்தின் மகத்துவம், முஸ்லிமின் வாழ்விலும், ஈருலகிலும் அவனை வெற்றியடையச் செய்வதிலும் அது எடுத்துள்ள அக்கறை, இஸ்லாம் எவ்வளவு தூய்மையான, சுத்தமான மார்க்கம் என்பதையும் ஆராய்ந்தெடுக்கவும்.
மலசலம் கழிக்க பல ஒழுங்குகள் உள்ளன, அவை பின்வருமாறு அதனை பின்வருமாறு பிரிக்க முடியும்:
இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் :
மலசலம் கழிக்க முன்
மலசலம் கழிக்கும் போது
மலசலம் கழித்த பின்
முதலாவது : மலசலம் கழிக்க முன்:
1. கழிப்பிடத்திற்கு இடது காலை முன்வைத்து நுழைதல்.
2. பின்வரும் துஆவை ஓதுதல் : "அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்". (பொருள் : யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்). (ஆதாரம் : புஹாரி 142, முஸ்லிம் 375).
இரண்டாவது : மலசலம் கழிக்கும் போது :
1. மற்றவர்களின் பார்வைகளை விட்டும் மறைத்துக்கொண்டு , கழிப்பிடத்திற்குள் நுழையும் போது கதவை மூடிக் கொள்ளல்.
2. பாதையோரம், மக்கள் நிழல் பெறும் இடம், தண்ணீர் போன்றவற்றில் மலசலம் கழிப்பதைத் தவிர்த்தல்.
3. மலசலம் கழிக்கும் போது குர்ஆனைச் சுமந்து செல்வது, அதனை ஓதுவது, அல்லாஹ்வை நினைவுகூர்வது என்பதைத் தவிர்ந்து தவிர்ந்து கொள்ளுதல்.
தண்ணீர், டிசூ, கல் போன்றவற்றால் சுத்தம் செய்யும் போது இடது கையைப் பயன்படுத்துதல்.
திறந்த வெளியில் கழிக்கும் போது கிப்லாத் திசையை முன்னோக்குவதையோ, பின்னோக்குவதையோ தவிர்ந்து கொள்ளல்.
மூன்றாவது : மலசலம் கழித்த பின்
1. குளியலறை போன்ற பொதுக் கழிப்பிடங்களைத் தூய்மையாக வைக்க அக்கறை கொள்ளுதல்.
2. அசுத்தத்தின் அடையாளங்கள் நீங்க இரு கைகளையும் சிறந்த முறையில் கழுவிக்கொள்ளல்.
கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது வலது காலை முன்வைத்து வெளியேறுதல்.
4. வெளியேறிய பின் 'குப்ரானக' என்று கூறுதல்.
செயற்பாடுகள் :
செயற்பாடு (1) : பார்த்து விளக்குவேன் :
பின்வரும் இணைப்பின் மூலம் வீடியோ கிளிப்பைப் பார்க்கவும், பின்னர் கழிப்பறைக்குள் நுழையும் ஒழுங்குகள் மூலம் மனிதர்கள் மதிக்கப்படும் முறைகளை விளக்குங்கள்.
செயல்பாடு (2): நான் முடிவைக் கணிக்கிறேன்:
பின்வரும் சூழ்நிலைகளில் எதிர்பார்க்கப்படும் முடிவை எழுதவும் :
சுழ்நிலைகள்
பொதுப்பாதையில் ஒருவர் மலசலம் கழிக்கின்றார்.
ஆற்றில் ஒருவர் மலசலம் கழிக்கின்றார்.
மலசலம் கழித்த பின் ஒருவர் தனது கைகளை தண்ணீர், சவர்க்காரமிட்டுக் கழுவுகின்றார்.
ஒருவர் மலசலம் கழிக்கும் போது தனது ஆடையை முறையாக உயர்த்தவில்லை. எதிர்பார்க்கப்படும் முடிவு
மதிப்பீடு
Q1: அடைப்புக்குறிக்குள் இருந்து பொருத்தமானசொல்லைக் கொண்டு வெற்றிடங்களை முடிக்கவும் :
(அல்அவ்ராத் - தடைசெய்யப்பட்டது (ஹராம் - குர்ஆன் - பலனளிக்கும் மரம்)
1 - . . . . . . . . . . பலனளிக்கும் (கனிதரும்) மரத்தடியில் . . . . . . . . . . . . மலசலம் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 - வெட்டவெளியில் மலசலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்குவது .................... தடை செய்யப்பட்டுள்ளது ........................
3 - மலசலம் கழிக்கும் போது ................ அவ்ரத்தை ...................... மக்களின் கண்களில் இருந்து பாதுகாப்பது அவசியமாகும்.
4 - கழிவறைகளில் ............. குர்ஆன் ............ ஓதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
கே 2 : பின்வரும் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யவும் :
கழிப்பறைக்குள் நுழையும் போது, நாங்கள் பின்வருமாறு ஓதுவோம் : "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ...........................................".
கேள்வி 3 : பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
1. மலசலம் கழித்த பின் வலது கையால் சுத்தம் செய்வேன்.
- மலசலம் கழித்த பின் இடது கையால் அசுத்தத்தை நீக்குவேன்.
2. கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறுவேன்.
கழிவறையில் இருந்து வெளியேறியதும் "குஃப்ரானக" எனக் கூறுவேன்.
3. மலசலம் கழிக்கும் போது அதான் ஒலி கேட்டால் அதற்கு பதிலளிப்பேன்.
மலசலம் கழிக்கும் போது அதான் ஒலித்தால் பதில் கூற மாட்டேன்.
வெளியீட்டுரை
மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவியையும், தெளிவுகளையும் வழங்கி, அல்குர்ஆன் ஹதீஸ் மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக .
ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள் மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இறைவாழ்த்துக்குப் பின் : ஒரு செயலை செய்வதற்கு முன் அது பற்றி கற்றுக்கொள்வது ஒரு அடியானின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். '(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத்தகுதியான வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்'.
முஹம்மத் : 19
இஸ்லாமிய அறிவு என்பது இச்சமூகத்தின் மிகப்பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும்; இஸ்லாமிய ஆளுமையை அடையாளப்படுத்தும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
ஆகையால், இஸ்லாமிய அறிவின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையமானது, மக்களை விவேகம் மற்றும் அழகிய உபதேசத்தின் மூலம் இஸ்லாத்தின் பால் அழைத்தல், மேலும் வெளிநாட்டவர்களுக்கு அறிவூட்டல், மற்றும் ஷரீஆ ரீதியாக அவர்களைத் தகுதிப்படுத்தல்; போன்ற நிகழ்ச்சித் திட்டங்களுடன் இயங்கிவருகிறது. அந்த வகையில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களில் ஓர் அங்கமாக (எனது மார்க்கத்தில் எனக்கு விளக்கத்தை தருவாயாக) எனும் தொனிப்பொருளில் ஏழு மொழிகளில் பாடநெறிகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை மேம்பாடுத்தும் நோக்கில் 'பஸாஇர்' - கல்வி ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு, அழைப்பு மையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதுடன், அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. மேலும் வரையறுக்கப்பட்ட தரங்களை அடிப்படையாகக் கொண்டு பாட நூல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதலாம் தரம்; 40 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
இரண்டாம் தரம்; 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
மூன்றாம் தரம்; 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
பாடங்களை திறம்பட கற்பிப்பதற்கு உதவும் வகையில் மாணவருக்கான ஒவ்வொரு பாடநூலுடனும் ஆசிரியருக்கான வழிகாட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட ஆவணத்தை மேம்படுத்தல், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளைத் தயாரித்தல் ஆகியன அறிவியல் தயாரிப்பு மற்றும் நுணுக்கமான மதிப்பாய்வு செய்தல் ஆகிய செயல்முறைகளை கடந்து வந்துள்ளன. ஷரியா கல்வி பாடத்திட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவால் இவை மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக, இச்செயற்திட்டத்தின் மூலம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நல்ல பல நன்மைகள் கிட்ட வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, இப்புத்தகத்தை அழகிய முறையில் வெளிவர பங்களிப்புச்செய்த அனைவருக்கும் நற்பாக்கியமும், சுவனமும் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் க்கொள்கிறோம். மேலும் இப்புத்தகம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எமது சமூகவலைத்தளத்தின் மூலமும், தொலைபேசி இலக்கங்கள் மூலமும் நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் ஸலாதும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக!
அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்
முகவுரை
புகழனைத்தும் தனித்தவனாகிய அல்லாஹ்வுக்கே, ஸலாதும் ஸலாமும் இறுதி நபி முஹம்மத் பின் அப்துல்லாஹ், மற்றும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தவர், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக. மதிப்பிற்குரிய ஆசிரியரே, கற்பித்தல் பணி மிக கண்ணியமிக்க பணிகளில் ஒன்றாகும். இது நபிமார்கள், சீர்திருத்தவாதிகளின் பணிகளிலுள்ளதாகும். பொதுவாக சமூகத்தையும், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தையும் மேம்படுத்துவதில் இதற்குப் பாரிய பங்களிப்புண்டு.
உமது பங்களிப்பை மெச்சி உமது பணியை செவ்வனே நிறைவேற்றிட உதவும் இவ்வழிகாட்டியை நாம் உமக்கு வழங்குகிறோம்.
கற்பித்தல் பணி அதிக சுவாரஸ்யமுள்ளதாகவும், சிறந்த பெறுபேறுகளை கொண்டதாகவும் அமைய இதனை வழங்குகிறோம். மாணவர்களின் தரங்கள் மற்றும் சூழலுக்குப் பொருந்தும் வகையில் பாடங்களுக்கான திட்டவரைபுகளை இவ்வழிகாட்டி கொண்டுள்ளது.
மேலும் பாடநூலின் நோக்குகள், இலக்குகளுடனும், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளுடன் தொடர்புடையதாகவும் இது உள்ளது.
ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள பாட உள்ளடக்கம் .
இந்த வழிகாட்டியானது ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பிரதான குறிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது, அவை கல்வி நிலைகளின் மிக முக்கியமான அம்சங்களைக் குறிக்கின்றன. பின்வருவன இப்பிரதான கூறுகளில் முக்கியமானவையாகும் :
தகவல்பெட்டி:
இதில் பாடத்திற்கான உத்தேச நேரம், கற்க வேண்டிய புதிய சொற்கள், பயன்படுத்தப்படும் பாடஅலகுகள், பாடம் குறிப்பிடும் பெறுமானங்கள் மற்றும் நோக்குகள் மற்றும் முன்மொழியப்பட்ட கற்பித்தல் உத்திகள் ஆகியன உள்ளன.
பாடத்தை கற்பிக்கும் படிமுறைகள் :
இது பின்வரும் படிமுறைகளை உள்ளடக்கியுள்ளன :
1. பாடத்திற்கான அறிமுகம் : மாணவரை பாடத்தின்பால் ஈர்க்கும் நோக்கில் இது பல முறைகளைக் கொண்டு அமையும் : பாடத்தின் அறிமுகமாக அமையும் வகையில் சிறு சிறு வினாக்கள், பாடத்துடன் தொடர்பான நடைமுறைச் சம்பவம், சென்ற பாடத்துடன் அன்றைய பாடத்தைத் தொடர்புபடுத்துதல், நவீன கற்பித்தல் வழிகளைப் பயன்படுத்துதல் ஆகியன இவற்றுள் சிலவாகும்.
2. முடிவுரை : ஒரு தனி மாணவர் குறித்த தலைப்பில் கற்ற பின் அவர் பெற்றுக்கொள்ளும் அறிவுகள், விளக்கங்கள், யதார்த்தங்கள் சட்டதிட்டங்களையே இதன் மூலம் நாம் நாடுகிறோம். மாணவர்களின் முடிவுரைகள் பற்றிய எதிர்வுகூறல்களையும் இவ்வழிகாட்டி உள்ளடக்கியுள்ளது. அதில் கவனம் செலுத்தி, மாணவர்களுக்கு அதனைத் தமது அப்பியாசப் புத்தகங்களில் எழுத வழிகாட்டுவது ஆசிரியரின் கடமையாகும்
3. செயல்பாடுகள் : இது பாடத்தின் உள்ளடக்கத்தில் இருக்கும் இடைவெளிகளை நிரப்பும் நோக்கில், புதிய சூழ்நிலைகளில் அவர் படித்த பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதையும் இறுதிச் சுருக்கத்தையும் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட மாணவருக்கு பயிற்சி அளிப்பதாகும். இச்செயற்பாடுகளை அமுல்படுத்தத் தனது மேற்பார்வையில் மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியரின் கடமையாகும். இந்த செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் இணைக்கப்பட்டு அதை அடைவதற்கு துணை நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறையில் உள்ள பாடங்களிலிருந்து கற்றுக்கொண்ட அறிவை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவது என்பது குறித்து தங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
4. மதிப்பீடு : பாடத்தின் நோக்கங்கள் எந்த அளவிற்கு அடையப்பட்டுள்ளன, மற்றும் எதை அடையவில்லை என்பதை அளவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, பாடத்தில் உள்ள ஒவ்வொரு கேள்வியும் அதன் நோக்கங்களில் எந்த அளவிற்கு தொடர்புடையது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசிரியரின் கல்வித்தகமையை மேம்படுத்தும் நோக்கில் பாடங்களின் கேள்விகளுக்கான சில பதில்களை இந்த வழிகாட்டி உள்ளடக்கியுள்ளது.
5. கல்வியியல் மற்றும் உணர்வியல் விழிப்பூட்டல்கள் : இது மாணவர் பாடத்தில் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விடயங்களை அமுல்படுத்தவும் , அதை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் செயல்படுத்தவும் உதவும்.
இந்த வழிகாட்டி அமைக்கப்படுள்ள கல்விசார் அடிப்படைகள்
முதலாவது : பாடத்திட்டத்தின் நோக்கங்கள் :
ஒவ்வொரு பாடத்திற்குமான செயன்முறை நோக்கங்கள் வகுக்கப்ட்டு, அந்நோக்கங்ககை வகுப்பதில் பின்வரும் விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :
- இது பாடத்திட்டத்தின் திறன்களை பிரதிப்பளிப்பதாக அமைதல் வெண்டும்.
- அறிவு,மனம் திறமை அனைத்திற்கும் மத்தியில் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
அது யதார்த்தமானதாகவும், எய்து கொள்வதற்கு இயலுமானதாகவும் , மாணவர்களின் நிலைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
அறிவுசார் இலக்குகளின் நிலைகளுக்கிடையே படித்தர வரிசையை பேணல் : (நினைவு செய்தல் - புரிந்து கொள்ளுதல் - அமுல்படுத்தல் - பகுப்பாய்வு செய்தல் - ஒருங்கிணைத்தல் - மதிப்பீடு செய்தல்).
- ஒரு நல்ல இலக்கை உருவாக்குவதற்கான நிபந்தனைகளைப் பயன்படுத்துதல், அது அளவிடக்கூடிய மற்றும் கவனிக்கக்கூடிய நடத்தை விளைவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
- இலக்கு கற்பவரின் நடத்தையை விவரிப்பதில் கவனம் செலுத்தக் கூடியதாகவும், அனுபவத்தை வரையறுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவது: உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் ஒழுங்கமைத்தல்:
இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கமானது கட்டமைக்கப்பட்ட பாட இலக்குகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் உண்மையான நடைமுறைத்தன்மையை பிரதிபளிப்பதாகவும் அமையப்பெற்றுள்ளது. மேலும் பாடத்திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்ட திறன்களுக்கு பொருந்தும் வகையிலும், மாணவர்களின் நிலைக்கு பொருந்தும் வகையிலும், மற்றும் உள்ளடக்கத்தை எளிமையில் இருந்து ஆழத்திற்கு படிமுறையாகச் செல்தல், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்பதை உறுதி செய்வதன் மூலம் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையில் கவனம் செலுத்துதல், குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி உள்ளடக்கத்தை முன்வைத்தல், மாணவர்களுக்கு வசதியாக உள்ளடக்கத்தில் உள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் உள்ள கடினமான சொற்களஞ்சியத்தை விளக்குதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை இடம்பெற்ற அத்தியாயம் மற்றும் வசனங்கள் குறிப்பிடுவதுடன் ஹதீஸ்களை உறுதிப்படுத்துவதில் அவை இடம்பெற்ற ஹதீஸ் நூல்களை குறிப்பிடுவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது: கற்பித்தல் செயல்பாடுகளை கையாள்தல் :
கற்பித்தல் செயல்பாடுகளில் பல பின்வரும் அளவுகோள்கள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன , அவற்றுள் சில :
பாடத்தின் நோக்கங்களுடன் செயல்பாடுகளை இணைப்பதையும், அந்நோக்கங்களை அடைவதில் அவற்றின் பங்களிப்பையும் கவனத்திற்கொள்ளல்.
மாணவர் தனது ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் அவரது இயல்புநிலை மற்றும் பிற செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் அவரது சக நண்பர்களுடன் அவர் ஒத்துழைப்பது போன்றவற்றை கவனத்திற்கொள்ளல்.
கல்வியியல் செயற்பாடுகளில் பன்முகத்தன்மை, செவித்திறன் செயல்பாடுகள், ஆசிரியர் கூறுவதைப் போன்றே திரும்பத் திரும்ப கூறுதலின் அடிப்படையிலான செயல்பாடுகள், ஒரு தலைப்பைப் பற்றிய குறிப்பிட்ட விஷயங்களைச் சேகரிப்பது தொடர்பான செயல்பாடுகள், விளக்குதல், சுருக்கம், வகைப்படுத்துதல் மற்றும் பகுத்தறிவு தொடர்பான செயல்பாடுகள், மனப்பாடம் செய்தல், கேட்டல் மற்றும் படித்தல், ஏற்பாட்டின் செயல்பாடுகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலமும் எண்கணித நடவடிக்கைகள் மூலமும் இது செய்யப்படுகிறது.
நான்காவது: பின்வருவனவற்றை உள்ளடக்கிய கல்வி வழிமுறைகள்(கற்பித்தல் சாதனங்கள் ):
விவரணப்படங்கள், உதாரணங்கள் உள்ளடங்கிய பாடப்புத்தகங்கள்.
வகுப்பறையில் தொங்கவிடப்படும் பெரிய காட்சிப் பலகைகள்,
குழுநிலை செயல்பாடுகளுக்கான அட்டைகள்,
பதிவு சாதனங்கள்.
ஐந்தாவது: மதிப்பீட்டு முறைகளின் பன்முகத்தன்மை :
பாட உள்ளடக்கத்தின் வினாக்களை வடிவமைப்பதில் அவை பாட நோக்கங்களுடன் தொடர்புபட்டிருப்பதையும், சரி, பிழை அடையாளமிடும் கேள்விகள், இணைத்தல், பல் தேர்வு வினாக்கள் , பூரணப்படுத்தல் மற்றும் வரிசைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள அறிவாற்றல் அம்சத்தை அளவிடும் கேள்விகளின் உருவாக்கத்தில் உள்ள பன்முகத்தன்மையையும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது . அறிவை மாணவர் பின்பற்றும் நடத்தைகளாக மாற்ற முயற்சிப்பதன் மூலம் உணர்ச்சி மற்றும் திறன் அம்சங்களை அளவிடவும் இது பயன்படுத்தப்பட்டது. உணர்ச்சி மற்றும் திறன் அம்சங்களை அளவிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வகுப்பறையில் ஆசிரியர்களால் கண்காணிக்கும் மற்றும் பின்தொடரும் முறை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்துடன் வீட்டில் பெற்றோர்களது கண்காணிக்கும் மற்றும் பின்தொடரும் முறை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆறாவது: கற்பித்தல் உத்திகள்:
இங்கே - அன்புள்ள ஆசிரியரே - இந்த வழிகாட்டியில் பயன்படுத்தப்பட்ட சில கற்பித்தல் முறைகள்: அதைப் பற்றியும், அதன் நடைமுறைகள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான படிமுறைகளையும் அறிந்து கொள்வதற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
1. கூட்டுக் கற்பித்தல் முறை:
இது ஒரு கற்பித்தல் முறையாகும், அதன் யோசனை (2 முதல் 6 மாணவர்கள் கொண்ட)சிறிய மாணவர் குழுக்களுக்குள் கற்றலை அடிப்படையாகக் கொண்டது, இதனால் மாணவர்கள் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். மற்றும் ஒவ்வொரு நபரின் நிலையை உயர்த்தவும் பொதுவான கல்வி இலக்கை அடையவும் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவரைக் கொண்டு, குழுவிற்குள் பணி பிரிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குழு உறுப்பினர்களின் செயல்திறனைப் பின்தொடர்ந்து, அவர்களின் பதில்களைச் சேகரித்து, ஆசிரியரிடம் வழங்குகிறார்.
2. சிந்தனைக் கிளரல் :
இது சிந்தனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையாகும், மேலும் சிந்தனைக் கிளரல் பல்வேறு அறிவியல் மற்றும் வாழ்க்கை சிக்கல்களைத் தீர்ப்பதில் குழு அல்லது தனிப்பட்ட சிந்தனைக்கான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது, இது மன திறன்கள் மற்றும் செயல்முறைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது. மிகப் பெரிய அளவிலான பரிந்துரைகள், தீர்வுகள் அல்லது தகவல்களை வழங்குதல், பின்னர் சரியான தீர்வு அல்லது கருத்தைப் பெறுவதற்காக அவற்றைச் செம்மைப்படுத்துதல்.
3. சிக்கலைத் தீர்க்கும் முறை :
இது ஒரு புதிய மற்றும் அறிமுகமில்லாத வழியில் ஒரு சூழ்நிலையை சமாளிக்க, அதைக் கட்டுப்படுத்த மற்றும் அதற்கான தீர்வை அடைவதற்கு மாணவர் தனது அறிவையும் திறமையையும் பயன்படுத்தும் ஒரு முறையாகும்.
அதன் படிமுறைகள், சிக்கலை உணர்ந்து, அதை அடையாளம் கண்டு, அது தொடர்பான தரவுகளைச் சேகரித்து, தீர்வுகளை முன்மொழிந்து, அவற்றைப் படித்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன.
4. சொற்பொருள் வரைபடங்கள்:
அவை அழைக்கப்படுகின்றன: அறிவாற்றல் வரைபடங்கள், மன வரைபடங்கள், கருத்து வரைபடங்கள் மற்றும் தகவல் வரைபடங்கள் என்பன இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு தலைப்பை அதன் பகுதிகளாக பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையிலானது, மேலும் அட்டவணைகள், வட்டங்கள் அல்லது முக்கோணிகள் போன்ற பல்வேறு வடிவியல் வடிவங்களை எடுக்கும் வரைபடங்கள் மற்றும் திட்ட வரைபுகள் மூலம் வெளிப்படுத்துகிறது. தகவல்களைப் படிப்பதை எளிதாக்கி, அவற்றுக்கிடையில் இணைத்து, நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டுள்ளது.
5. சமச்சீர் உத்தி :
இந்த மூலோபாயம் மன திறன்களை செயல்படுத்தி, உறுப்புகள் மற்றும் பொருட்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை தெளிவுபடுத்துவதற்கும், ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காணவும் மனதை பயன்படுத்துவும் செயற்படுகிறது. அத்தகைய சிந்தனைக்கு அதிக படைப்பாற்றல் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு கேள்விக்கான பதில் எப்போதும் பிரதான கூறுகளுக்கு இடையே ஒரு புதிய பார்வையை வேண்டி நிற்கிறது.
6. கதைகூறும் முறை :
மாணவர்களை தூண்டி கவர்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் கதைகூறும் முறைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. கதை கூறுதல் கற்பனையை வளர்க்கிறது, உணர்ச்சிகளைத் தூண்டுகிறது, முடிவுகளுடன் அறிமுகங்களை இணைக்க அழைப்பு விடுக்கிறது. மற்றும் வெறும் ஒரு கருத்தை புலனுறுப்புக்களால் உணர முடியுமான யதார்த்தமாக மாற்றுகிறது. கதை நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்பைச் சார்ந்தது, அதே நேரத்தில் மாணவர் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைக்கவும் தூண்டுகிறது. அவர் என்ன கற்றுக்கொள்கிறார் என்பதற்கு, கதையை முன்வைக்கும் மொழி மற்றும் பாணி மற்றும் மாணவர்களுக்கு அதன் பொருத்தம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
7. வாழ்க்கை பிரயோக முறை :
இந்த முறையானது வாழ்க்கை சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளுடன் தகவலை இணைக்க முயற்சிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்செயன்முறையானது மாணவர், பாட உள்ளடக்கத்தை மிக ஆர்வத்துடன் படிக்க உதவியாக அமையும். அதே வேளை அதில் அவர் தவறுகள் மற்றும் பாதகமான -எதிர்மறை விடயங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும், சாதகமான விடயங்களில் தன்னை வழுப்படுத்திக்கொள்ளவும் முடியும்.மேலும் இஸ்லாம் கொண்டு வந்த சட்டத் தீர்ப்புகள் மற்றும் ஒழுக்க விதிகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பார் , இதனால் இஸ்லாம் தனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது என்று அம்மாணவர் உணர்கிறார்.
சிந்தி-ஒருங்கிணை-பகிர் எனும் உத்தி:
சிந்தி-ஒருங்கிணை-பகிரு எனும் உத்தி மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு கூட்டு விவாத உத்தி ஆகும்: முதலாவதாக, மாணவர் சுயமாக கேள்விக்கு பதிலளிக்கவும் அல்லது செயற்பாடுகளை செய்வதற்குமான சந்தர்ப்பத்தை ஆசிரியர் வழங்குவார்.பின்னர் அவர் -மாணவர்- தனது பதிலை தனது சக நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார், இது இரண்டாவது கட்டத்திலாகும். மூன்றாவது கட்டத்தில் குழுவின் கருத்தை வெளிப்படுத்தும் பொதுவான பதிலைக் கண்டறிய குழு உறுப்பினர்கள் எட்டப்பட்ட பதில்களைப் பற்றி தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதிலும் அவற்றைப் பற்றி விவாதிப்பதிலும் ஒத்துழைக்கிறார்கள்.
கற்றல் செயல்பாட்டில் இந்த உத்தி மிகவும் முக்கியமானது. மாணவர்கள் தகவல்களை திறம்பட செயலாக்க உதவுவதால், அவர்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்து, அவர்களின் சிந்தனையை மேம்படுத்துகிறது.
9. மேம்பட்ட ஒழுங்கமைப்புகள் :
மேம்பட்ட ஒழுங்கமைப்புகள்? என்பது, கற்பித்தல் சந்தர்ப்பத்தில் தொடக்கத்தில், தலைப்பின் அமைப்பு மற்றும் அலச வேண்டிய தகவல்கள், கருத்தாக்கங்கள், யோசனைகள் மற்றும் சிக்கல்களைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குவதையும், தலைப்புடன் தொடர்புடையது. மேலும் கற்றவர் ஏற்கனவே அறிந்ததை அவர் தெரிந்து கொள்ள வேண்டியவற்றுடன் இணைப்பதையும் நோக்காகக் கொண்டு கற்பவர்களுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் அல்லது அறிமுகப் பொருளை வழங்குவதாக அறியப்படுகிறது.
மேம்பட்ட ஒழுங்கமைப்புகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: அவை மேம்பட்ட எழுதப்பட்ட அமைப்புகள் மற்றும் மேம்பட்ட எழுதப்படாத அமைப்புகள் ஆகும், எழுதப்பட்ட அமைப்புகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன; அவை விளக்க ஒழுங்கமைப்புகள் மற்றும் ஒப்பீட்டு ஒழுங்கமைப்புகள் ஆகும்.
எழுதப்படாதவற்றைப் பொறுத்தவரை, அவை ஆடியோ, காட்சி, ஆடியோ-விஷுவல் மற்றும் கிராஃபிக் அமைப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன, அவை கிராஃபிக் வடிவங்களில் நிகழ்வுகளின் பகுதிகளைக் குறிக்கும். இது ஒரு "கிராஃபிக்" அட்டவணையாக இருக்கலாம், மேலும் இது பாடத்தின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
10.எதிர்வு கூறுதல்
இந்த முறையானது, கற்பவர் கருதுகோள்களை அமைப்பதையோ, அல்லது தலைப்பில் என்ன விவாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்புகளை உருவாக்குவதையோ வேண்டி நிற்கின்றது. இது கற்பவருக்கு ஒரு இலக்கை வழங்குகிறது மற்றும் உள்ளடக்கத்தைக் கற்கும் போது கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்த எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ முயற்சிப்பதற்காக, கற்றவர் ஏற்கனவே தன்னிடம் உள்ள தகவல்களுடன் புதிய தகவலை இணைக்கும் வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.
பின்வருவனவற்றின் மூலம் படிக்கப்படும் தலைப்பு என்ன என்பதை எதிர்பார்க்க ஆசிரியர் தனது மாணவர்களுக்கு உதவலாம் :
தலைப்பை வாசித்தல், பாடத்தின் நோக்கங்களைக் கற்றுக்கொள்ளல், அல்லது கேள்விகளைப் பயன்படுத்துதல்.
11. சுய கேள்வி (கேள்விகளை உருவாக்குதல்)
இம்முறையானது, கற்றல் செயல்முறைக்கு முன், அதன்போது, மற்றும் கற்றல் செயல்பாட்டிற்குப் பிறகு, தலைப்பைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், சுய விழிப்புணர்வை உருவாக்குதல், உரையுடன் தொடர்புகொள்வதை எளிதாக்குதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் மற்றும் நினைவுகூருதல் செயல்முறையை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. படித்த ஹதீஸ்களைக் கையாளும் போது கற்பவர் தனக்குள்ளேயே கேள்விகளின் தொகுப்பை இயக்குவதை அடிப்படையாகக் கொண்டது. இது அவர் கற்றுக் கொள்ளும் தகவல் மற்றும் அவர் அடையும் அறிவு ஆகியவற்றுடன் அவரை மேலும் ஒருங்கிணைக்கிறது, மேலும் சிந்தனை செயல்முறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குகிறது.
12. எனக்குத் தெரியும் - நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன் (KWL) என்ற உத்தி:
இந்த மூலோபாயம் மாணவர்கள் தலைப்பில் உள்ள தகவலை முன்கூட்டியே அறிந்து அதை அவர்களின் முந்தைய அறிவோடு இணைக்க உதவுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அந்தத் தலைப்பைப் பற்றிய மாணவர்களின் புரிதல் மற்றும் அவர்களின் கருத்தியல் பிழைகளை மதிப்பிடுவதற்கும் ஆசிரியர் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த உத்திக்கு KWL எனக் குறிக்கப்படுகிறது, இது பின்வரும் சொற்றொடர்களின் சுருக்கமாகும்:
(K): தெரியும், (W): வேண்டும், (L): கற்றது.
முதல் வார்த்தை கற்பவர் பாடத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்ததை வெளிப்படுத்துகிறது, இரண்டாவது வார்த்தை அவர் பாடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறது, மூன்றாவது வார்த்தை கற்பவர் பாடத்தைப் பற்றி கற்றுக்கொண்டதை வெளிப்படுத்துகிறது.
13. பார்வைப் பகுப்பாய்வு உத்தி :
இந்த மூலோபாயம் கற்பவர் தனது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது, மேலும் பல்வேறு சூழ்நிலைகளில் அவர் நம்பும் பார்வை, சிந்தனைகள், கொள்கைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது, இது விஷயங்களைப் பற்றிய அவரது பார்வையிலும், நிகழ்வுகளுடனான அவரது எதிர்வினையிலும் தாக்கம் செலுத்துகிறது. இந்த மூலோபாயம் அதைப் பற்றிய அவரது சிந்தனையை மேலும் ஆழமாக்குவதற்கும், அதன் செல்லுபடியாகும் தன்மை, சூழ்நிலைக்கு அதன் பொருத்தம் அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்கும் அவருக்கு வாய்ப்புகளை வழங்குதல், அல்லது ஒரு சிக்கலைத் தீர்க்க, மற்றும் கண்ணோட்டத்தை பகுப்பாய்வு செய்து அதனை ஆதரித்து ஏற்றுக்கொள்ளல் (அது பொருத்தமானது மற்றும் சரியானது என்றால்), அல்லது அதனை மாற்றுதல் (தேவைப்பட்டால்) அல்லது அதனை நிராகரித்தல் (அது பொருத்தமற்றது மற்றும் தவறானது என்றால்) எனும் அடிப்படையில் மாணவர் தனது கண்ணோட்டத்தை பகுப்பாய்வு செய்வதைப் பொறுத்தது.
முடிவில், என் மதிப்பிற்குரிய ஆசிரியரே:
இந்த வழிகாட்டி உங்கள் கைகளில் உள்ள ஒரு கருவியாகும், அது நன்றாகப் பயன்படுத்தப்பட்டால் அது பலனைத் தரும், இல்லையெனில் அது வேலை செய்யாது.? உங்கள் திறன்களை மட்டுப்படுத்தவோ அல்லது உங்கள் படைப்பாற்றலை மட்டுப்படுத்தவோ நாங்கள் இது அர்த்தப்படுத்தவில்லை.!
அல்குர்ஆன் மற்றும்(விளக்கவுரை) தஃப்ஸீர்
முதலாம் பாடம் : புனித அல்குர்ஆனின் மகத்துவம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அல்குர்ஆனின் அற்புதம் - குர்ஆனிய மனிதர்கள் )
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - சில அல்குர்ஆன் வசனங்களுக்கான ஓடியோ பதிவு)
கற்பித்தல் உத்திகள் :
( கூட்டு கற்கைமுறை - உரையாடலும் ,கருத்துப்பரிமாரலும் )
பெறுமானங்கள் மற்றும் போக்குகள்:
புனித அல்குர்ஆனின் அந்தஸ்தை மதித்தல்
புனித அல்குர்ஆனை கண்ணியப்படுத்தல்
அல்குர்ஆனையும் அதனை ஓதி அதனுடன் இறுக்கமான தொடர்பை பேணி வருவோரை நேசிப்பதில் ஆர்வம் கொள்ளல்.
பாடம் பற்றிய ஓர் அறிமுகம் :
அன்புள்ள ஆசிரியரே, திருக்குர்ஆனின் சிறிய வசனங்களுடன் ஆடியோ பதிவை இயக்கி, அவற்றை மாணவர்களுக்குக் கேட்கச் செய்து பாடத்தை ஆரம்பிக்கவும். பின்னர் குர்ஆன் ஓதுவதன் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் தெளிவுபடுத்தி, அவ்வசனங்கள் பொதிந்துள்ள கருத்துக்களை அவர்களுக்குக் கூறுங்கள்.
பின்னர் பாடத்தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்
பாடத்தை முன்வைத்தல் :
முதல் கட்டம்:
உமது மாணவர்களிடம் பாடத்தை மௌனமாக வாசிக்க வேண்டிக்கொள்ளுதல் .
ஒரு மாணவரைத் தெரிவு செய்து, நண்பர்களுக்கு சப்தமாக வாசித்துக் காட்டச் செய்யவும். பின் பாடத்தின் பிரதான குறிப்புகளை கரும்பலகையில் எழுதுமாறு இன்னொருவருக்குக் கூறவும். பின்பு, ஒவ்வொரு ஓவ்வொரு குறிப்பு பற்றியும் விரிவாகப் பேசுதல் .
இரண்டாம் கட்டம்:
பாடத்தில் உள்ள புதிய சொற்களை பலகையில் எழுதி, அவற்றின் ஒத்த ருத்து சொற்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துiரையாடுதல்.
அந்த ஒத்த கருத்துச் சொற்களை கரும்பலகையில் எழுதவும்.
மூன்றாம் கட்டம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, கூட்டு கற்றல் முறையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.
பின் புனித குர்ஆனின் மிக முக்கியமான சிறப்புக்களை அடையாளம் காண ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் ஒத்துழைக்குமாறு வேண்டிக்கொள்க.
கிடைத்த பெறுபேற்றை கரும்பலகையில் எழுத குழுவில் உள்ள மாணவர்களில் ஒருவரை பொறுப்புச்சாட்டுக..
அவர்களின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவிக்கவும்.
நான்காம் கட்டம்:
உரையாடல் மற்றும் விவாதத்தின் (கருத்துப்பரிமாரல் ) மூலம் : புனித குர்ஆனுடையவர்களை (அல்குர்ஆனிய மனிதர்கள்) கௌரவிப்பதன் வெளிப்பாடுகள் என்ன? திருக்குர்ஆன் மீது எமது கடமை என்ன? என்பதை எடுத்துக்காட்டுக.
மாணவர்களின் பதில்கள் மூலம், பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை கண்டுகொள்வீர்கள்., பின்னர் அவற்றை பலகையில் எழுதுங்கள், அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு:
படிப்பினைகள்:
1. அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சுக்களில் மிக மகத்தானதாகும்.
2. அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மகத்தான அற்புதமாகும்.
3. அல்குர்ஆன் அகிலத்தாருக்கு ஒளியாகவும், நேர்வழியாகவும் உள்ளது.
4. அல்லாஹ் இக்குர்ஆனைப் பாதுகாக்கின்றான்.
5. குர்ஆனுடையவர்களை (குர்ஆனிய மனிதர்களுக்கு) இவ்வுலகில் அந்தஸ்த்தை உயர்த்துவதன் மூலமும் மறுமையில் வெற்றியை வழங்குவதன் மூலமும் அல்லாஹ் அருள் புரிந்துள்ளான்.
6. குர்ஆனின் இந்த மகத்தான நிலையை நாம் அறிந்தால், அதைப் படித்து, சிந்தித்து, கற்று, மனப்பாடம் செய்து, அதன் கட்டளைகளைப் பின்பற்றி, அதன் தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதை உண்மையாக மதிப்பது நம் கடமையாகும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாடு 1 அதன் வகையும், நோக்கமும் தனி நபர்/குழு முறைமையில் குர்ஆனின் மகத்துவத்தை விளக்குதல்.
நோக்க இலக்கம் 1.
செயற்பாட்டின் விடையைத் தேடுமாறு அனைத்து மாணவர்களையும் பணிக்கவும்.
தேடி முடிந்ததும் எழுதப்பட்ட விடயத்தில் அவர்களுடன் கலந்துரையாடி, சரியான முடிவை எட்டவும்.
தமது அப்பியாசக் கொப்பிகளில் எழுதிக் கொள்வதற்காக சரியான விடைகளை கரும்பலகையில் எழுதுமாறு ஒருவரைப் பணிக்கவும்.
செயற்பாடு 1 :
அல்லாஹ்வின் புனித நகரமான மக்காவில் அது இறங்க ஆரம்பித்தது.
ரமழான் மாதத்தில் அது இறங்க ஆரம்பித்தது.
அரபு மொழியில் இறங்கியது, அதுவே சுவனத்தின் மொழியாகும்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதனைக் கொண்டு இறங்கினார்.
இறைத்தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.
இஸ்லாமிய சமூகமே மக்களுக்கு தோற்றுவிக்கப்பட்ட சமூகங்களில் மிகச் சிறந்த சமூகமாகும்.
செயற்பாடு 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறைமை, அல்குர்ஆன் ஓதுவதினதும், அதனைக் கற்பதினதும் சிறப்பை விளக்குதல்.
நோக்க இலக்கம் 3, 4
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, செயல்பாட்டின் படத்தில் உள்ளதைப் போல அவர்களை வட்டவடிவில் உட்காரச் சொல்லுங்கள், மேலும் ஒவ்வொரு குழுவும் செயற்பாட்டிற்கு பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் தாம் எட்டிய முடிவை சமர்ப்பிக்க அதன் உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பர், பின்னர் அவர் அதைக் கரும்பலகையில் எழுதவேண்டும். கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் உங்கள் முன்னிலையில் மற்றும் உங்கள் மேற்பார்வையில் விவாதிக்கப்பட்டு, பின்பு சரியானது கண்டடையப்பட்டு, கரும்பலகையில் எழுதப்படவேண்டும்
செயற்பாடு 2 :
1. மலக்குமார்கள் இறங்கி, அல்குர்ஆன் ஓதும் சபைகளுக்கு சமூகமளிக்கின்றமை.
அல்குர்ஆனை ஓதுபவர்கள் மீது அமைதியும், இறையருளும் இறங்குகின்றமை.
அல்குர்ஆனை ஓதுபவர்களைப் பற்றி வானத்தில் இருப்பவர்களிடம் அல்லாஹ் நினைவு கூறுகின்றமை.
2. வுழூ செய்தல்,அமைதியாக உட்காருதல், ஓதும் போது பேணுதலாகவும், பொருளுணர்ந்தும் ஓதுதல்.
மதிப்பீடு
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:
கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.
பதிலை மதிப்பிடுவதற்காக ஒவ்வொரு குழுவும் அதை மற்றொன்றுடன் மாற்றிக்கொள்ளவும். பின்னர், சரியாகப் பதிலளித்த குழுவைப் பாராட்டவும்.
கே.1 : (×) - - - (×) -
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
மாணவர்கள் பாடத்தில் கற்றுக்கொண்டதை பின்வருவனவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறைகளுக்குப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
திருக்குர்ஆனை ஆழ்ந்து சிந்தனையுடனும், அதன் சட்டங்களை புரிந்து கொண்டும், செவிமடுத்து, தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதன்பால் வழிகாட்டுதல்.
துன்பம் மற்றும் பலவீனமான காலங்களில் மட்டுமல்லாமல், எல்லா நேரங்களிலும், சூழ்நிலைகளிலும் எல்லாம் வல்ல இறைவனை நாடுதல்.
இரண்டாம் பாடம்: ஸூறதுல் ஃபாதிஹாவுக்கான விளக்கம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (நியாயத் தீர்ப்பு நாள் - நேரான பாதை - வழிகெட்டவர்கள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - பதிவு செய்யப்பட்ட ஓடியோ)
அல்குர்ஆன் வசனங்கள்
கற்பித்தல் உத்திகள் (கூட்டு கற்றல் முறை - கருத்துதிர்ப்பு - இறுதிச் சுருக்க முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைகளைப் உறுதியாக கடைப்பிடித்தொழுகுதல்.
அல்லாஹ்வை நேசித்து, அவனை மகத்துவப்படுத்தி, அவனுக்கு அஞ்சுதல்.
ஸூரா பாதிஹாவை மகத்துவப்படுத்தல்.
பாட அறிமுகம்:
ஸூரா பாதிஹாவின் ஆடியோ பதிவை இயக்கி, அவற்றை உங்கள் மாணவர்களுக்குக் கவனமாகக் கேட்கச் செய்து பாடத்தைத் ஆரம்பியுங்கள். பின்னர் குர்ஆனின் இதர அத்தியாயங்களுக்கு மத்தியில் இவ்வத்தியாயத்தின் மகிமையை அவர்களுக்குக் கூறுங்கள். பின்னர் தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்
பாடத்தை முன்வைத்தல்: (விளக்குதல்)
முதல் கட்டம்: (படிமுறை இல : 1)
புனித இறைவசனங்களை நோட்டமிட்டு, பின்னர் குர்ஆன் வசனங்கள் பதியப்பட்ட ஓடியோவை மௌனமாக செவிதாழ்த்திக் கேட்குமாறு மாணவர்களிடம் வேண்டுங்கள்.
இரண்டாம் கட்டம்:
அவ்வசனங்களின் சாரம்சத்தை விளக்கிவிட்டு, அவற்றை விரிவாக விளக்குங்கள்.
எழுமாறாக மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் அவ்வசனங்களிலிருந்து ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுத்து அதை விளக்கப் பணியுங்கள்.
அவ்வாறே வேறு மூவரைத் தெரிவு செய்து எஞ்சியுள்ள வசனங்களை விளக்கச் செய்யுங்கள்
மூன்றாம் கட்டம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, கூட்டுகற்றல் முறையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.
ஸூரா பாத்திஹாவில் உள்ள சட்டதிட்டங்களைப் பிரித்தெடுக்க ஒவ்வொரு குழுவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்.
கிடைத்த பெறுபேற்றை கரும்பலகையில் எழுத குழுவில் உள்ள மாணவர்களில் ஒருவரை நியமியுங்கள். பின்பு அவர்களது செயல்திறன் குறித்து கருத்துத் தெரிவிக்கவும்.
படிப்பினைகள்:
ஒவ்வொரு மாணவரும் ஸூராவின் விளக்கத்தைப் புரிந்துகொண்ட பிறகு அவர் கண்டறிந்த முடிவுகளில் ஒன்றைக் கூறப் பணியுங்கள், பின்னர் அவர்களின் பதில்களை பலகையில் எழுதி, அவற்றில் கருத்து தெரிவியுங்கள்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1. அதன் வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது, ஸூரா பாதிஹாவின் மகத்துவத்தைத் தெளிவுபடுத்துதல்.
நோக்க இலக்கம் 3.
செயல் நூல் புத்தகத்தை திறக்க மாணவர்களைக்வேண்டிக்கொள்ளவும். , பின்னர் கருத்துதிர்ப்பு மூலம் அவர்களின் பதிலைப் பற்றி சிந்திக்கச் செய்யுங்கள், அவர்கள் பெற்றுக் கொண்ட முடிவைப் பற்றி விவாதிக்கவும்.
செயற்பாட்டு இலக்கம் 2 செயற்பாடு : வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது, ஸூரா பாதிஹாவின் கருத்துக்களை அறிதல்
நோக்க இலக்கம் 2
செயல்பாட்டுக் கேள்விக்கு பதிலளிக்குமாறு ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்த வேண்டும், மாணவர் அருகே சென்று, பதில்களைப் பார்த்து, மிக்கச்சரியானதைத தெரிவுசெய்து எடுப்பார். பின்னர் சக நண்பர்களின் முன்னிலையில் வசனத்தைக் குறிப்பிடுவதற்கு ஒருவரையும் மற்றும் அவர் தவறு செய்யும் போது அவரைத் திருத்துவதற்கு இன்னொருவரையும் தேர்ந்தெடுப்பார்.
மதிப்பீடு
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டுக் கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
ஒவ்வொரு மாணவரும் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் மற்றவரின் பதிலை மதிப்பீடு செய்வதற்காக தத்தமது பதிலை சக நண்பரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
தங்கள் சக நண்பரின் பதிலில் தாம் அடையாளம் கண்டு, விடைகளை திருத்தி அமைத்த சில மாணவர்களை தேர்ந்தெடுக்குக.
மானவர்களினால் முன்வைக்கப்படும் விடயங்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்க அவர்களுக்கே வாய்ப்பளிக்கவும். பின்னர் மாணவர்களின் செயல்திறனைப் பற்றி கருத்து தெரிவிக்கவும். கேள்விகளுக்கான சிறந்த முன்மாதிரி பதிலைக் காட்டவும்.
5. அறிவியல் மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
பாடத்தில் கற்றுக்கொண்டதை அவர்களின் வாழ்க்கையிலும் உறவாடல்களிலும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
அல்லாஹ்வைப் புகழ்வதில் அக்கறையாக இருத்தல், மற்றும் நேர்வழிக்கான வழிகாட்டுதலைக் கேட்டு அவனிடம் பிரார்த்தித்துக் கேட்டல்.
நன்மைகள் செய்து, பாவங்களை விட்டும் தூரமாகி மறுமைக்காகத் தயாராவதன் அவசியம்
மூன்றாம் பாடம் : கவ்ஸர் மற்றும் காபிரூன் அத்தியாயங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (கவ்ஸர் -(ஷானிஅக) உம்மை வெறுப்பவன்- (அல்அப்தர்)சந்ததியற்றவன் - (லகும் தீனுகும் வலியதீன்)உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்)
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - புனித மிக்க அந்த இரு ஸூராக்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ)
புனித மிக்க அந்த இரு ஸூராக்களும்.
கற்பித்தல் உத்திகள்:
(கல்விக் கதைகள் - கல்விப் புதிர்கள் - விவாதம் - கண்டுபிடிப்பு மூலம் கற்றல்).
பெறுமானங்கள் மற்றும் போக்குகள்:
நபி (ஸல்) அவர்களின் சிறப்பை மதித்தல், மற்றும் அன்னாருக்காக போராடுவதால் ஈருலகிலும் கிடைக்கும் சிறப்புக்கள்.
இறைநிராகரிப்பு மற்றும் நிராகரிப்பாளர்களை விட்டும் விலகிக் கொள்ளல்.
நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் அல்லாஹ் பிரத்தியேகமாக வழங்கியுள்ள கவ்ஸர் எனும் நீர் தடாகத்தை நம்பிக்கை கொள்ளல்.
இஸ்லாமிய மார்க்கத்தில் இருப்பதை கண்ணியமாகக் கருதுதல்.
வணக்க வழிபாடுகளில் உளத்தூய்மையைக் கடைபிடித்தல்.
பாட அறிமுகம் :
மாணவர்களிடம் பின்வரும் புதிரைக் கேளுங்கள், "இது சொர்க்கத்தின் நதிகளில் ஒன்றைப் பற்றி பேசும் ஒரு ஸூரா, மேலும் இது உழ்ஹிய்யா பற்றிய சட்டங்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது. அது என்ன ஸூரா?" அவர்களின் பதில்களைக் கற்றுக்கொண்ட பிறகு, ஸூராவையும் அதன் வசனங்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.பின்னர் நீங்கள் தலைப்பிற்குச் சென்று அதனை கரும்பலகையில் எழுதுங்கள்.
குரல், மொழி மற்றும் பாணியில் கதை சொல்லும் திறன்களைக் கருத்தில் கொண்டு, கதைகூறும் முறையைப் பயன்படுத்தி ஸூரா அல்-காஃபிரூன் இறங்குவதற்கான பின்னணிக் காரணத்தை மாணவர்களுக்கு விளக்குங்கள். அவர்கள் அதைப் புரிந்துகொண்டிருப்பதை உறுதிசெய்ய, அதை தனது சக நண்பர்களுக்கு மீண்டும் சொல்ல அவர்களில் ஒருவரைத் தெரிவுசெய்யுங்கள். பின்னர் கரும்பலகையில் ஸூராவின் பெயரை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
படிமுறை : 1
பாடத்தின் இரண்டு ஸூராக்களையும் ஏதாவதொரு ஓடியோ மூலமாக கேட்கும்படி ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அவ்விரு அத்தியாயங்களையும் தமது நண்பர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்காக திறமையாக ஓதும் இரு மாணவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
படிமுறை :( 2)
பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு ஸூராக்களில் ஒவ்வொன்றையும் ஆசிரியர் தனித்தனியாக முன்வைக்க வேண்டும்.
அந்த ஸூறாக்களை விளக்கி தெளிவுபடுத்தி மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
பாடத்தை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் போது அவர்களுடன் கலந்துரையாட பின்வரும் வினாக்களை உதவியாகக் கொள்க
கே : நபி (ஸல்) அவர்கள் ஏன் கவ்ஸர் எனும் தடாகத்தைக் கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள்?
கே : நிராகரிப்பாளர்கள் வணங்குபவற்றை விட்டும் விலகுவது முஸ்லிமுக்குக் கடமையா ? விவரிக்குக.
கே : ஒரு முஸ்லீம் தான் ஒரு இஸ்லாமியன் என்பதன் மூலம் பெருமிதம் கொள்வதினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
பகுப்பாய்வின் மூலம் கண்டறிதல் :
இரண்டு ஸூராக்களின் விளக்கத்திலிருந்தும் தான் கற்றுக்கொண்டதை எழுத ஒவ்வொரு மாணவரையும் கட்டாயப்படுத்தவேண்டும், பின்னர் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதையும், அதை அவர் தனது வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுத்தப் போகின்றார் என்பதையும் சமர்பிக்க மூன்று மாணவர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 வகையும், நோக்கமும் குழு முறை , சுவனத்தையும், அதன் நதிகளையும் விவரித்தல்.
நோக்க இலக்கம் 2
இரண்டு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் மின்னட்டை (கற்றல் உதவி அட்டை)ஒன்றைக் கொடுங்கள். ஒருவரின் அட்டையில் செயல்பாட்டில் உள்ள ஹதீஸும், மற்றதில் கவ்ஸர் ஆற்றில் இருந்து குடிப்பவர்களின் குணாதிசயங்களும் உள்ளன. ஒவ்வொரு மாணவரும் தனக்கு வழங்கப்பட்டதை சக நண்பரிடம் படித்துக் காட்ட வேண்டும்.
முதலாமவரிடத்தில் கவ்ஸர் நதியை விவரிக்கும் படியும், இரண்டாமவரிடத்தில் கவ்ஸர் ஆற்றில் இருந்து குடிப்பவர்களின் குணாதிசயங்களை விவரிக்கும் படியும் ஆசிரியர் கோர வேண்டும்.
அவ்விரு மாணவர்களுடைய பதில்களையும் ஆசிரியர் அறிவதுடன், சக நண்பர்களுக்கு அதிலுள்ள தவறுகளைத் திருத்தவும், கருத்துரைக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும்.
செயற்பாட்டு இலக்கம் 2 வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது, உறவினர்களாக இருந்தாலும் மாற்று மதத்தவர்களுடன் நடக்கும் முறையை அறிதல்.
நோக்க இலக்கம் 3, 4
கண்டறிதல் மூலம் கற்றல் என்பதை அடிப்படையாகக் கொண்டு செயற்பாட்டில் இடம்பெற்ற அல் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் வாசகங்களை எடுத்துக்காட்டுமாறு வேண்டுக.
இந்த பாடங்களுடன் இணைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களை சிந்திக்குமாறு வேண்டுக.
அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, தகுந்த வலுவூட்டலை வழங்கி, பதில்களை முன்வைக்கச் செய்யவும்
செயற்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, நம்பிக்கை சார் நிலைக்கும் நடத்தை சார் நிலைக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிதல். நோக்க இலக்கம் 3
நம்பிக்கை சார் நிலை மற்றும் நடத்தை சார் நிலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விளக்கும் ஒரு எழுத ஒவ்வொரு மாணவனையும் எழுதுமாறு மாணவர்களை வேண்டிக்கொள்க.
எழுதப்பட்டவற்றை ஒன்று சேர்த்து, அவை எடுத்துச் சொல்லும் அர்த்தத்தங்களையும், நோக்கங்களையும் உணரவைக்க அவற்றில் சிலதை எழுமாறியாகத் தேர்ந்தெடுத்து வாசிக்க வைக்கவும்.
அவற்றில் மிகச் சிறந்ததைத் தேர்வு செய்து வகுப்பறையில் ஓர் பலகையில் தொங்க விடவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் நீர் வழிநடாத்தலாம் :
ஒன்றன் பின் ஒன்றாக வினாக்களை கரும்பலகையில் எழுத வேண்டும்.
கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அருகருகில் இருக்கும் இரண்டு மாணவர்களை ஒருவரையொருவர் பங்கேற்கச் சொல்வது நல்லது.
தமது பதில்களை ஏனையவர்களுக்குக் காட்டுவதற்காக எழுமாறாக சில மாணவர்களைத் தெரிவு செய்யவும்.
தவறாக பதிலளிக்கும் மாணாக்கரிடத்தில் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் எடுத்துக்காட்டுமாறு வேண்டுதல் சிறந்தது.
கே 1 : ---.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் தாம் கற்றுக்கொண்டதை தத்தமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி, தம் மூலம் அவர்களும் வாழ்க்கையில் நேர்வழி பெற பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட தகவல்களை அவர் பொருத்தமானதாகக் கருதும் எந்த வகையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டும்.
நான்காம் பாடம் : நஸ்ர் மற்றும் மஸத் அத்தியாயங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அப்வாஜா)கூட்டங் கூட்டமாக - ( -ஹப்லும் மிம்மஸத் )முறுக்கேறிய ஈச்சங்கயிறு).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - புனித மிக்க அந்த இரு ஸூராக்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ)
புனித மிக்க அந்த இரு ஸூராக்களும்.
கற்பித்தல் உத்திகள்:
(உரையாடல், விவாதித்தல் - கதை கூறும் முறை - படிப்பினை பெறும் வழிமுறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கிடைப்பதையிட்டு மகிழ்வுரல்.
முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வைத் துதித்தல், பாவமன்னிப்புக் கோருதல் ஆகியவற்றின் அவசியத்தை முக்கியத்துவப்படுத்தல்.
வணக்க வழிபாடுகளில் உளத்தூய்மையைக் கடைபிடித்தல்
அல்லாஹ்வை நம்பி, நற்செயல்களில் ஆர்வங்கொள்ளல்.
பாட அறிமுகம்:
நீண்ட கயிற்றில் கட்டப்பட்ட விறகுக்கட்டை எடுத்துச் செல்லும் பெண்ணின் படமொன்றை அனைவருக்கும் காண்பித்து, இது போன்ற ஒரு பெண்ணின் சம்பவம் அல்குர்ஆனின் ஓர் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது, அப்பெண் கூறப்பட்டுள்ள அத்தியாயத்தை யாரால் கூற முடியும்? யாருக்கு அச்சம்பவத்தைக் கூற முடியும்? என வினவுதல்.
பிறகு 'இந்த ஸூராவின் விளக்கம் மூலம் அதற்கான விடையைத் தெரிந்து கொள்வோம்' என்று மாணவர்களிடம் கூறவும்.
பாடத்தை முன்வைத்தல் :
படி முறை : இல (1)
பாடத்தின் இரண்டு ஸூராக்களையும் ஏதாவதொரு ஓடியோ மூலமாக கேட்கும்படி ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அவ்விரு அத்தியாயங்களையும் தமது நண்பர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்காக திறமையாக ஓதும் இரு மாணவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
படி முறை : இல (2):
ஆசிரியர் ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஸூராவையும் பாடத்தில் தனித்தனியாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
அந்த ஸுறாக்கள் குறித்த விளக்கங்களையும் தெளிவுரைகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, மாணவர்களிடம் கேட்கவும் அவர்களுடன் விவாதிக்கவும் பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தவும்:
கே : மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு ஏன் கூட்டங்கூட்டமாக நுழைந்தார்கள் ?
கே : அபூ லஹபைப் பற்றி உமக்கு என்ன தெரியும் ?
கே : நஸ்ர், மஸத் ஆகிய இரு ஸூராக்களிலிருந்தும் பெறப்பட்ட முக்கிய படிப்பினைகள் என்ன ?
இறுதிச் சுருக்கம் :
தாம் பாடத்திலிருந்து கற்றுக் கொண்டவற்றையும், அதை தனது வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுத்தப் போகின்றார் என்பதையும் விளக்க இரண்டு மாணவர்களைத் தேர்வுசெய்யவும். அவர்களைப் பின்தொடர்ந்து மீதமுள்ள மாணவர்களை மதிப்பீடு செய்யவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, பாவமன்னிப்புக் கோருவதன் சிறப்பு, மற்றும் அவசியத்தை விளக்குதல்.
நோக்க இலக்கம் 3
முதலாம் செயற்பாட்டிற்கு விடையளிக்கும் பணியில் ஒத்துழைக்க மாணவர்களை ஜோடிகளாக நியமியுங்கள்.
ஒரு முஸ்லிம் பாவம் செய்யும் போது மாத்திரமல்லாது தனது அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதை ஸூரா நஸ்ரிலிருந்து எவ்வாறு ஆதாரமெடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய ஒவ்வொரு குழுவையும் அவர்களின் சிந்தனாத் திறமைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும்.
ஒவ்வொரு குழுவின் பதிலையும் அவதானிக்கவும். ஒரு குழு, மற்ற குழுக்கள் முன்வைத்தவற்றைப் பற்றி கருத்து தெரிவிக்க ஒரு வாய்ப்பை விட்டு, அதனுடன் உடன்பட அல்லது முரண்பட முடியுமான விடயங்களைத் தெளிவுபடுத்தல்
மாணவர்களுக்கு தகுந்த பின்னூட்டல்களை வழங்கவும்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, இஸ்லாத்தில் நீதத்தின் பெறுமதியை அறிதல்
நோக்க இலக்கம் 3, 4
நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது போல் இஸ்லாத்தில் நீதத்தின் பெறுமதியை விளக்க, பள்ளி இமாம்களிடத்தில் வினவுதல் போன்ற தம்மால் முடிந்த வழிகளில் தேடுமாறு அனைத்து மாணவர்களையும் பணிக்கவும். ஒவ்வொரு மாணவரும் தான் பெற்றுக்கொண்டதை தனியான ஓர் அட்டையில் எழுத வேண்டும்.
அட்டைகளை சேகரித்து, மாணவர்களின் செயற்திறனை மதிப்பீடு செய்து, பின்னர் அவர்களுக்கு தகுந்த ஊக்கத்தை அளிக்கவும்.
மதிப்பீடு :
கணிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிப்பதற்கு பின்வரும் படிமுறைகளை கடைப்பிடிக்க மாணவர்களை வழிப்படுத்துங்கள்.:
ஒன்றன் பின் ஒன்றாக வினாக்களை கரும்பலகையில் எழுத வேண்டும்.
கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அருகருகில் இருக்கும் இரண்டு மாணவர்களை ஒருவரையொருவர் பங்கேற்கச் சொல்வது நல்லது.
தமது பதில்களை ஏனையவர்களுக்குக் காட்டுவதற்காக எழுமாறாக சில மாணவர்களைத் தெரிவு செய்யவும்.
விடைகளை தவறாக எழுதியவர்களை பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான விடைகளை கண்டறிய ஆலோசனை வழங்குங்கள்.
கே 1 : --- .
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அல்லாஹ்வைத் துதித்தல் மற்றும் பாவமன்னிப்புக் கோருதலில் ஈடுபடவும், அதனை பரவச்செய்து, தம்மைச் சூழவுள்ளோரிடமும் அமுல்படுத்த வைக்க மாணவர்களை ஊக்குவித்தல்.
ஐந்தாம் பாடம் : ஸூரா இஃலாஸ் மற்றும் முஅவ்விததை ஸூறாக்களுக்கான தப்ஸீர் விளக்கம்.
கால அளவு: இரு பாடவேளைகள்
புதிய சொற்கள் : ((அஸ்ஸமத்)தேவையற்றவன் - நிகர் - விடியற்காலை - இரவு - நுழைந்தால் - முடிச்சுகளில் ஊதும் பெண்கள் - பொறாமைக்காரன் - வீண் சந்தேகங்கள் - பதுங்கியிருப்பவன் - ஜின்கள்)
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - குறித்த ஸூராக்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
கற்பித்தல் உத்திகள்:
( கருத்துதிர்ப்பு (சிந்தனைக் கிளரல் )- கண்டுபிடிப்பு முறை - கதை கூறும் முறை - கூட்டு கற்கைமுறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வை மாத்திரம் நம்பிக்கை கொள்ளல், அவனுக்கு இணையோ, மனைவி, குழந்தையோ இல்லை.
அல்லாஹ்விடம் அடைக்களம் தேடுவதில் ஆர்வம் கொள்ளுதல் .
வணங்கப்படத் தகுதியான,ஒரே ஆட்சியாளனான இரட்சகன் அல்லாஹ்வை மாத்திரம் பற்றிப்பிடித்தல்.
மனித, ஜின் ஷைதான்களை விட்டும் தூரமாகுதல்.
சூனியம், பொறைமை என்பவற்றின் இருப்பையும், யதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளல்.
அல்லாஹ்வை நினைவுகூர்ந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளல். ஏனெனில் அதுவே பொறாமை மற்றும் ஷைதானை விட்டும் பாதுகாக்கும்.
பாட அறிமுகம்:
பின்வரும் சந்தர்ப்பத்தைக் மாணவர்களிடம் குறிப்பிடுங்கள் : "யூஸுப் என்ற ஒரு நபர் தான் எப்போதும் காணும் பதற்றமான கனவு பற்றி தந்தையிடம் கூற, வுழூவுடன் "முஅவ்விததைன்" ஸூராக்களை ஓதிக் கொண்டு உறங்குமாறு அவர் அறிவுறுத்துகின்றார். அப்போது யூஸுப், "அவ்விரண்டினதும் சிறப்புக்கள் என்ன? ஏன் குறிப்பாக அவ்விரு ஸூராக்கள்? ஏன் ஓத வேண்டும் " என்று தனது மனதுள் கேட்டுக்கொள்கின்றார்." இதற்குரிய பதிலை இப்பாடத்தினூடாக மாணவர்கள் அறிந்து கொள்வார்கள் என அவர்களுக்குக் கூறிவிட்டு, கரும்பலகையில் தலைப்பையும் இந்த ஸுறாக்களின் வசனங்களையும் எழுதவும்..
பாடத்தை முன்வைத்தல்.:
முதல் கட்டம்:
இவ்வசனங்களிலுள்ள கருத்துக்களை அறிவதற்காக இவற்றை மௌனமாக வாசிக்குமாறு மாணவர்களைப் பணிக்கவும். பின்னர் ஒவ்வொரு மாணவரும் இவ்வசனங்களிலிருந்து தான் கற்க விரும்புவதைக் கேள்வியாகத் தொடுக்க வேண்டும்.
நீங்கள் அவ்வசனங்களை அவர்களுக்கு சப்தமாக ஓதிக் காண்பித்து விட்டு, பின்பு ஒரு மாணவரைத் தம் நண்பர்கள் முன்னிலையில் ஓதிக்காட்டுமாறு பணிக்கவும்.
சிரமமான சொற்களை தெளிவுபடுத்தி விவாதித்தல்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் கணினி இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு ஸூராவையும் தனித்தனியாக முன்வைக்க வேண்டும், கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி அதை விளக்கி தெளிவுபடுத்துவதன் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்
பின்னர் தமக்குக் கிடைத்த படிப்பினைகளை முன்வைக்க ஒரு மாணவரைத் தெரிவு செய்ய வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கண்டுபிடிப்பு முறையைப் பயன்படுத்தி, அல்லாஹ் தனது அடியார்களைப் பாதுகாத்ததற்கான சில உதாரணங்களைக் கேட்க வேண்டும்.
சில உதாரணங்களைத் தெரிவு செய்து அவற்றை கரும்பலகையில் எழுத வேண்டும். அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவதன் கருத்தாழத்தை உணர்த்தும் முஅவ்விததைன் ஸூராக்களின் தாக்கத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவதுடன், அது பற்றி அவர்களுடன் விவாதிக்கவும் வேண்டும்.
அந்த இந்த ஸுறாக்களின் வசனங்களுக்கிடையிலுள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கவும், ஸூரா இறங்கியதன் பின்னனிக் காரணிகளை அறியவும் வழிகாட்ட வேண்டும்.
இறுதிச் சுருக்கங்கள் : (பெறுபேறுகள் :)
பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதையும், அதை அவர் தனது வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுத்துவார் என்பதையும் சமர்பிக்க இரண்டு மாணவர்களைத் தேர்வுசெய்யலாம்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஸூரா இஃலாஸ் மற்றும் முஅவ்விததைன் ஸூராக்களை பேணி ஓதுவதன் சிறப்பை அறிதல்.
நோக்க இலக்கம் 4
ஒவ்வொரு மாணவரும் பின்வரும் செயல்பாட்டிற்கு தனித்தனி தாளில் தனித்தனியாக பதிலளிக்குமாறு கேளுங்கள்.
நீங்கள் அவர்களுக்கு பதிலளிக்க போதுமான நேரத்தை கொடுங்கள் , முடித்த பிறகு, அவர்களுடன் வாய்மொழியாக விவாதியுங்கள்.
சக நண்பர்களிடம் பதில் அளிக்க ஒருவர் பின் ஒருவராக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரது செயல்திறனையும் மதிப்பீடு செய்யவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் குழு முறை , சூனியம் மற்றும் அதன் விபரீதத்தை விட்டும் பாதுகாக்கும் முறையை அறிதல்.
நோக்க இலக்கம் 3
பின்வரும் செயல்பாட்டிற்கு நடைமுறை வழியில் பதிலளிக்க மாணவர்களை குழுக்களாக செயற்படுமாறு பணிக்கவும்.
உங்கள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் கீழ் அதை மதிப்பிடுவதற்கு, ஒவ்வொரு குழுவும் பக்கத்து குழுவுடன் சுற்றை பரிமாறிக் கொள்வர்.
மதிப்பீடு
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிப்படுத்தவும். :
பின்வரும் கேள்விகளை அவர்களின் புத்தகங்களிலிருந்து கவனமாகப் படித்துவிட்டு, தனித்தனி அட்டைகளில் பதிலளிக்கும்படி அவர்களிடம் கேட்கவும். ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை சக நண்பரின் அட்டையுடன் மாற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
அட்டைகளைச் சேகரித்து, மாணவர்களின் முன்னிலையில் அவற்றை மதிப்பீடு செய்ய எழுமாறாக சிலவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான பதில்களையும், தவறான பதில்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்துதல்..
அட்டைக்குரிய மாணவரின் பெயரையும், அதனைத் திருத்தியவரையும் கூறுங்கள்.
கே 1 : ----- .
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த பின்வருமாறு வழிப்படுத்தவும்:
காலையிலும் மாலையிலும் தொழுகைகளுக்குப் பின்னரும் மற்றும் உறங்க முன்னரும் ஸூரா இஃலாஸ், முஅவ்விததைன் ஸூராக்களைத் தொடர்ந்து ஓதுதல்.
நெருக்கடியான, பலவீனமான நேரத்தில் மட்டுமல்லாது, அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்விடம் அல்லாஹ்விடம் புகழிடம் தேடிச்செல்லுதல்.
ஈமானும் தஸ்கியாவும் (ஆன்மீக உளவள மேம்பாடும்.)
ஈமானும் அதன் முக்கியத்துவமும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (இஸ்லாம் - ஈமான் - இஹ்ஸான்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம்- கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள் (கூட்டு கற்றல் முறை - கருத்துதிர்ப்பு - சுய கேள்வி முறை).
பெறுமானங்கள் மற்றும் போக்குகள்:
இஸ்லாம் மார்க்கத்தின் பரிபூரணத்தில் பெருமிதம் கொள்ளல்.
இரு சாட்சியங்களை (ஷஹாதா) மொழிவதன் மூலம் உள நம்பிக்கையை வெளிப்படுத்துதல்.
இஸ்லாத்தின் ஆதாரங்கள், சான்றுகளை அதிகம் அறிவதன் மூலம் உள்ளத்தில் ஈமான் அதிகரிக்கும் என்பதை உறுதி கொள்ளல்.
ஈமானுக்கும் நற்செயலுக்கும் இடையிலான பலமான தொடர்பினை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
எனது சகோதர ஆசிரியரே, பின்வரும் சூழ்நிலையை மாணவர்களிடம் கூறவும் : (முஹம்மது தனது ஆசிரியரிடம், சொர்க்கவாசிகள் ஒருவருக்கொருவர் இன்பங்களில் வேறுபடுவதற்கான காரணத்தைக் கேட்டார், அதற்கு ஆசிரியர் இவ்வாறு கூறினார்: "அவர்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் செயல்களின் அளவைப் பொறுத்தும், மார்க்கத்தின் படித்தரங்களை நிலைநாட்டும் அளவைப் பொறுத்தும் வேறுபடுகிறார்கள்." அப்போது மாணவர், "மார்க்கத்தின் படித்தரங்கள் எவை?" எனக் கேட்டார்.) பின்பு அதற்கான பதிலை அவர்களுடன் விவாதிக்கவும். பின்னர், இப்பாடத்தினூடாக அவர்கள் பதிலை அறிந்துகொள்வார்கள் எனக் கூறி, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல் (முன்வைத்தல்):
முதல் கட்டம்: (படிமுiறை -இலக்கம் - (1)
பாடத்தின் முக்கிய கூறுகளை கரும்பலகையில் எழுதி அவற்றை தெளிவுபடுத்தி விளக்கவும்.
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, கருத்துதிர்ப்பு (சிந்தனை கிளர்தல்) மூலம், இஸ்லாம், ஈமான் மற்றும் இஹ்ஸான் ஆகியவற்றின் கருத்தை வரையறுக்க ஒவ்வொரு குழுவையும் பணிக்கவும் .
ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கில், ஒவ்வொரு குழுவும் தாம் பெற்ற படிப்பினைகளை கரும்பலகையில் எழுதவும். பின்னர் சரியானதை நீங்கள் அவர்களுக்குக் காட்டவும்.
இரண்டாம் கட்டம்: (படிமுறை -இலக்கம் - (2) )
கூட்டு கற்கை முறை உத்தியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவும் ஈமானுக்கும் நற்செயலுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்தல்.
ஒவ்வொரு குழுவும் தாம் கண்ட முடிவுகளை சமர்ப்பிக்கவும், அவற்றிற்கான மதிப்பீட்டைப் பெறவும் தங்களில் ஒருவரை தெரிவு செய்தல் வேண்டும் .
மூன்றாம் கட்டம்: ((படிமுறை -இலக்கம் - (3 )
சுய கேள்வி முறையைப் பயன்படுத்துங்கள். அதாவது ஈமானின் தூண்களைத் தெளிவுபடுத்துவது பதிலாக அமையும் விதத்தில் ஒவ்வொரு குழுவும் ஒரு கேள்வியை உருவாக்குவதற்கு பணிக்கப்பட வேண்டும், பின்னர் அவற்றைப் பற்றி விவாதித்த பிறகு கரும்பலகையில் அவர்களின் பதில்களை எழுத வேண்டும்.
இறுதிச் சருக்கம் :
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் பாடத்தின் கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து அவர் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தும்படி கேட்க வேண்டும்.
தங்கள் பதில்களை வழங்குவதற்கு சில மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, மார்க்கத்தின் படித்தரங்களுக்கு இடையில் வித்தியாசம் காணல்.
நோக்க இலக்கம் 3
பின்வரும் செயல்பாட்டிற்கு தனித்தனியாக பதிலளிக்குமாறு அனைத்து மாணவர்களையும் வேண்டவும்.
பிழைத்திருத்தங்களுக்காக அந்தப் பதில்களைத் தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுங்கள்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் குழுமுறை , வார்த்தைகளுக்கும் அவற்றின் அர்த்தங்களுக்கும் இடையில் தொடர்புபடுத்த மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 4
செயற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள உரைகளின் சான்றுகளைக் கூறும் சில அட்டைகளை ஆசிரியர் மாணவர்களுக்கு விநியோகிக்கலாம், பின்னர் அவர்களில் மூவரைத் தேர்வுசெய்து, ஒவ்வொரு மாணவரும் குறித்த உரையைக் குறிக்கும் அட்டையை உயர்த்துவார். தவறு ஏற்பட்டால், அட்டை திரும்பப் பெறப்பட்டு மற்றொருவருக்குக் கொடுக்கப்படும்.
செயற்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, உபதேசிக்கும் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 5
கடமையான வணக்கங்களைச் செய்யாமல் இருந்துகொண்டு, "தமது உள்ளம் ஈமானால் நிரம்பியுள்ளது" என வாதிடுவோருக்கு ஓர் உபதேசத்தை எழுத மாணவர்களுக்கு ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.
மாணவர்கள் முன்மொழிந்தவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீட்டிற்காக அவர்கள் தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்க வேண்டும்.
மதிப்பீடு :
விடைகளை சரிகாண மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிப்படுத்தவும்.
மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, கேள்விகளுக்கு விடையளிக்க ஒவ்வொரு குழுவும் ஒத்துழைக்குமாறு வேண்டவும்.
பதில்களை முன்வைப்பதற்காக இரண்டிரண்டு குழுக்களாகத் தெரிவு செய்ய வேண்டும்.
அவற்றை மதிப்பீடு செய்து, சிறந்த பதிலைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான மதிப்பெண்ணை வழங்குக.
அதிக புள்ளிகள் கொண்ட குழுவைக் கண்டறிந்து, சக குழுக்கள் விட்ட தவறுகளைத் திருத்திக்கொடுக்கும் பொறுப்பை அக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
கே 1 : -- .
கே 2 : ஆறு - இஹ்ஸான் - இதயம் .
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் சார் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த அவர்களை பின்வரும் விடயங்களினூடாக வழிப்படுத்துக:
புத்தகங்கள், ஆடியோ பாடங்கள் அல்லது மின்னணு ஆதாரங்கள் என பல்வேறு மூலாதாரங்கள் மூலம் நம்பிக்கையின் (ஈமானின் ) முக்கியத்துவத்தையும் அதன் தூண்களையும் (அர்கான்களையும்) விரிவான முறையில் அடையாளம் காணுதல் .(அறிதல்)
நற்செயல் செய்ய அக்கறை கொள்வதுடன், நற்செயல்களுடன் ஈமானுக்குள்ள தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்தல்.
இரண்டாம் பாடம் : அல்லாஹ்வை நம்புதலும், அதன் தாக்கங்களும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அல்பித்ரா-) இயல்புணர்வு - (பவாஇகூஹு) அநீதிகள் - ( அல்கஹ்ஹார்) அடக்கியாள்பவன் - அல் காபீ -போதுமானவன் - (அல் வகீல்- )பொறுப்பாளன் - (அல் ஜவாரிஹ்) உறுப்புக்கள்).
கற்பித்தல் சாதனங்கள்:(ஊடகங்கள்)
(கணினி இயந்திரம் - காட்சித் திரை - பாடத்தில் இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ - குர்ஆன் பிரதி - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(பரஸ்பர கற்பித்தல் முறை - முன்கணிப்பு முறை - கேள்வி கேட்கும் முறை - விளக்கல் முறை - சாரம்ச முறை - சொற்பொருள் வரைபடங்கள் - சிந்தனை கிளர்தல் முறை ).
மதிப்புகளும்(பெருமானங்களும் ), வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வை நம்புவதால் தனிநபர் மற்றும் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை மதித்தல்.
அல்லாஹ்வின் பெயர், பண்புகளை கண்ணியப்படுத்துதல்.
அல்லாஹ்வின் பெயர், பண்புகளை வைத்து அவனிடம் பிரார்த்திப்பதில் அக்கறை கொள்ளல்.
அல்லாஹ்வின் பெயர், பண்புகளைக் கொண்டு அவனை வணங்குவதன் முக்கியத்துவத்தை உணர்தல்.
நம்பிக்கையாளர்களின் பண்புகள் மற்றும் நடத்தைகளைக் கடைபிடித்தல்.
பாட அறிமுகம்:
கரும்பலகையில் பாடத்தின் தலைப்பை எழுதிவிட்டு, "ஈமானின் தூண்கள் ஆறு, அதில் முதலாவதும், மகத்தானதும் அல்லாஹ்வை நம்புதல், இதுதான் எமது இன்றைய பாடத்தின் கருப்பொருள்" எனத் தெளிவுபடுத்தவும்.பின்னர் மாணவர்களிடம் இப்பாடத்தின் உப தலைப்புகளை கூறி இப்பாடத் தலைப்பை முழுமையாக உள்ளடக்கும் வகையில் அவர்களின் எதிர்பர்ப்புகளையும்கருத்துக்களையும் பெறுவதற்கு முயற்சி செய்க.
பாடத்தை விளக்குதல்:
படி முறை இல (1)
நீங்கள் சொற்பொருள் வரைபடங்கள் முறையைப் பயன்படுத்தலாம். மேலும் காட்சித் திரையின் மூலம், பாடத்தின் உள்ளடக்கத்தில் உள்ள பொதுவான கூறுகள் மற்றும் சிந்தனைகளை உள்ளடக்கிய ஓர் விளக்க உருவை மாணவர்களுக்குக் காட்டலாம். ஒவ்வொரு ஜோடி மாணவர்களும் அந்த கூறுகளைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி வெவ்வேறு கேள்விகளைக் கேட்கும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களின் கேள்விகளைச் சேகரித்து, அடுத்த கட்டத்தில் விவாதிப்பதற்காக முரண்பாடானவற்றை பலகையில் எழுதுங்கள்.
படிமுறை (2)
பாடத்தின் வெவ்வேறான கூறுகளை விளக்கித் தெளிவுபடுத்துவதற்காக, கலந்துரையாடலில் மாணவர்கள் கேட்ட கேள்விகளை அவர்களோடு இணைந்து விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் வார்த்தைகளை மாற்றியமைத்து, நீங்களாகவே உருவாக்கிய வேறு கேள்விகளையும் இணைத்து கலந்துரையாடுக.பின்வரும் கேள்விகளை உதவியாகக் கொண்டு மாணவர்களுடன் விவாதிக்குக. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, பதில்களோடு தொடர்பான குர்ஆன் வசனங்களை ஆடியோ ஊடகத்தின் மூலம் கேட்கும்படி மாணவர்களை வழிப்படுத்துக. அதே நேரத்தில் அவற்றைச் சிந்திக்கவும் அவற்றிற்கான விளக்கததைக் கூற முயற்சி செய்யவும் அவர்களை ஊக்குவிக்குக:
கே : அல்லாஹ்வை ஈமான் கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்குகின்றது, அவற்றைத் தெளிவுபடுத்துக.
கே : அல்லாஹ்வின் இருப்பை நம்புவதற்கான மிகப் பலமான ஆதாரம் எது?
கே : முஸ்லிமின் நற்செயல்களில் ஈமான் எற்படுத்தும் தாக்கத்தை விளக்குக.
கே : வணக்கங்களை முறையாகச் செய்வதில் ஈமான் எற்படுத்தும் தாக்கத்தை விளக்குக.
கே : அடியார்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில் ஈமான் எற்படுத்தும் தாக்கத்தை விளக்குக.
படிமுறை இல :3
சிந்தனைக்கிளர்தல் முறை மூலம், அல்லாஹ்வை நம்புவதன் பலன்களை அடையாளம் காண மாணவர்களை நீங்கள் வழிநடத்தலாம். அதிக எண்ணிக்கையிலான பதில்களை வழங்க அவர்களை ஊக்குவிக்கவும். மேலும், அவர்கள் முன்வைப்பதை மதிப்பிட்டு நெறிப்படுத்தி, ஈமானின் சரியான பலன்களை அவர்களுடன் சேர்ந்தே கண்டுபிடிக்கவும். மார்க்க ஆதாரங்களிலிருந்து அவற்றை விளக்கி, அவற்றுடன் தொடர்பானதை தெளிவுபடுத்த வேண்டும்.
சாரம்சம் :
பாடத்தின் பொதுவான மற்றும் துணை கூறுகளை ஒழுங்கமைக்கும் சொற்பொருள் வரைபடத்தை ஆசிரியர் மாணவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது தொடர்பாக அவர் புரிந்துகொண்டதை சுருக்கமாகக் கூற வேண்டும். துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாதவர்களை, புத்தகத்தில் உள்ள கூறுகளை படித்து மீண்டும் சுருக்கமாகச் சொல்லும்படி வழிநடத்துங்கள்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, அல்லாஹ்வை ஈமான் கொள்வதன் தாக்கங்கள் மற்றும் பிரதிபலன்கள்.
நோக்க இலக்கம் 2
செயற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு மார்க்க ஆதாரத்தையும் நீங்கள் பல அட்டைகளில் எழுதி, அவற்றை மாணவர்களுக்கு எழுமாறாக விநியோகிக்கலாம். பின்னர் ஒவ்வொரு ஆதாரத்தையும் தொடராக வாசிக்கவும். அப்போது குறித்த ஆதாரத்தை உள்ளடக்கிய அட்டையை கையில் வைத்திருப்பவர், அவ்வாதாரம் உணர்த்தும் தாக்கங்களையும் பலன்களையும் விளக்குவார்.
மாணவர்களின் பதில்களைக் கண்டறிந்து, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, அவர்களுடன் ஈமானின் சரியான தாக்கங்கள் மற்றும் பலன்களை அடையாளம் கண்ட பின், அவர்கள் தங்கள் புத்தகங்களில் அவற்றை உரிய இடங்களில் எழுதலாம்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அல்லாஹ்வை நம்பி, உறுதியான கொள்கையில் அக்கறை செலுத்துதல்.
நோக்க இலக்கம் 4
பின்வரும் செயல்பாட்டை தனித்தனியாக நிறைவேற்ற ஒவ்வொரு மாணவரையும் பணிக்குக.
அவர்களில் சிலரை தங்கள் பதில்களை முன்வைக்க தெரிவு செய்வதுடன், சிறந்த பதில்களைக் கொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் வழங்குங்கள்.
மற்றவர்களின் பதில்களில் இருந்து அவர்கள் அடையாளம் கண்டுகொண்டதன் அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் பதிலை பூரணப்படுத்தச் சொல்லுங்கள்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாணவர்களை வழிநடத்துக:
ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்குமாறு கட்டளையிடுவது நல்லது.
மாணவர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள். அவற்றைப் பற்றி விவாதியுங்கள். அவர்களின் பதில்களைக் கண்டறியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான புள்ளிகளைத் தீர்மானிக்கவும்.
ஒவ்வொரு மாணவரும் தனது பதிலைத் தானாக சரிசெய்து, தகுந்த மதிப்பெண்ணைக் கொடுக்கப் பணியுங்கள்.
சில மாணவர்களைத் தெரிவுசெய்து, தாங்கள் செய்த தவறுகளையும் அவற்றை எவ்வாறு சரிசெய்வார்கள் என்பதையும் விளக்க வையுங்கள்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவரைக் கண்டறிந்து, தகுந்த வலுவூட்டல் வழங்கவும்.
கே 1 : அல்லாஹ்வின் இருப்பு - ஈமானுக்கும் நற்செயலுக்கும் இடையிலான தொடர்பு - அல்லாஹ்வை அவனது பெயர்களைக் கொண்டு அழைத்தல்.
கே 2 :
ஓர் அடியான் அல்லாஹ்வின் இருப்பு , அவனது பரிபாலணக் கோட்பாடு, அவன் மாத்திரமே வணங்கப்படத் தகுதியாக உள்ளமை, மற்றும் அவனது பெயர்கள், பண்புகளை நம்பும் வரை முஸ்லிமாக மாட்டான்.
ஈமான் உள்ளம் சார்ந்த ஒரு செயல், உறுப்புக்களில் அது பிரதிபலிப்பது அவசியமாகும்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
பாடத்தில் கற்றுக்கொண்டதை அமுல்படுத்துவது பற்றி மாணவர்களுக்கு பின்வருவன ஊடாக ஆசிரியர் அறிவுறுத்த வேண்டும் :
அல்லாஹ்வை அவனது பெயர்கள் மற்றும் பண்புகளால் வணங்க முயற்சி செய்தல். மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அவ்வாறு செய்ய ஊக்குவித்தல். ஒவ்வொரு மாணவரும் அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகள் உள்ளடங்கிய சில குர்ஆன் வசனங்களைக் கொண்ட ஒரு கையேட்டை எழுதி, அவற்றை வைத்து அல்லாஹ்வை அழைத்துப் எப்படி பிரார்த்திப்பது என்பது பற்றி விளக்குதல். இதனை வழிகாட்டுதலுக்கு ஒரு முன்மாதிரியாக மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், அன்பு, பயம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பொறுப்புச் சாட்டுதல் ஆகியவற்றில், இதயத்தை எல்லாம் வல்ல இறைவனிடம் இணைத்துவிடவும், நாவை எல்லாம் வல்ல இறைவனை நினைத்து அவனது வேதத்தை ஓதவும், உறுப்புக்களை வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் நன்மைகளைச் செய்து, பாவங்களைத் தவிர்ந்துகொள்ளவும்ஒவ்வொரு மாணவனையும் ஊக்குவித்தல்.
மூன்றாம் பாடம் : வானவர்களை நம்பிக்கை கொள்வதும் அதன் தாக்கங்களும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (வானவர்கள் - பலமிக்கவர் - பாதுகாக்கப்பட்டவர்கள்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கற்பித்தல் பலகைகள் - கணினி இயந்திரம் - காட்சித்திரை- கரும்பலகை - பாடத்தில் இடம்பெறும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
கற்பித்தல் உத்திகள்:
( மாறுபாடான முறைகள் - மனக் காட்சிப்படுத்தல் - கண்டுபிடிப்பு முறை - "குமிழி வரைபடம்" சிந்தனை வரைபடங்கள் - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
வானவர்களைப் பின்பற்றி அல்லாஹ்வை வழிப்படுவதில் முயற்சித்தல்
அல்லாஹ்வை அஞ்சியும், பின் வானவர்களைப் பார்த்து வெட்கித்தும் அவன் தடுத்தவைகளை விட்டும் தூரமாகுதல்.
நற்செயலை வைத்து மமதை, தற்பெருமை கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.
பாட அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்கு முன்வைக்கவும்: (நாத்திகரிடம் வானவர்கள் மீதான நம்பிக்கையைப் பற்றி பேசும்போது, அவர் அவர்களைப் பார்க்கவில்லை என்ற காரணத்திற்காக அதை நிராகரிக்கிறார். அத்துடன் அவர் பார்க்காத பல விஷயங்களை அவர் நம்புகிறார்).
நாத்திகர்களுக்கு பதிலளிப்பதற்காக அவர்கள் பார்க்காமலேயே நம்பும் ஒன்றைக் குறிப்பிடும்படி அவர்களிடம் கேளுங்கள். அவர்களின் பதில்களைக் கண்டறிந்து சரியானவற்றை ஆதரிப்பதுடன், பாடத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு தொடக்க புள்ளியாக இதனைப் பயன்படுத்தவும்.
உதாரணமாக, நாத்திகர் புவியீர்ப்பு சக்தி மற்றும் மின்சாரத்தை பார்க்காமலேயே நம்புகிறார்.அதேபோல், விஞ்ஞானிகள் தீர்மானித்த அறிவியல் உண்மைகளையும், தானே நேரடியாக ஆய்வகத்தில் ஆதாரங்களை ஆய்வு செய்யாமல் நம்புகிறார்.
பாடத்தை விளக்குதல் :
படிமுறை -இல (1) :
மனக் காட்சிப்படுத்தல் முறையின் மூலம், மாணவர்களை இரண்டு நிமிடங்களுக்கு கண்களை மூடிக்கொள்ளுமாறு கூறிவிட்டு, வானவர்கள் யார் என்பதை தொடர்ந்து விளக்கலாம். இதன் போது வானவர்களின் பண்புகள் தொடர்பான மார்க்க ஆதாரங்களை ஒலி ஊடகம் மூலம் உங்களது விளக்கவுரையுடன் செவிமடுப்பர். அல்லாஹ்வின் வல்லமை, வானவர்களின் மகத்துவம் பற்றி தாம் உணர்ந்த விடயங்களை தமது மொழிநடையில் வார்த்தையால் விளக்க இரு மாணவர்களைத் தெரிவு செய்யுங்கள்.
படிமுறை -இல (2)
பின்வரும் இறைவசனம் மற்றும் நபிமொழியை மாணவர்களுக்குக் கேட்க வைக்கலாம். அவ்விரு வார்த்தைகளையும் அவர்கள் புரிந்து கொண்டபடி, வானவர்களை ஈமான் கொள்வதன் சட்டத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : "(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை". (அல் பகரா : 285)
ஈமானைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள் : "நீர் அல்லாஹ்வையும், அவனது வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள் ஆகியவற்றை நம்பிக்கை கொள்வதுடன், விதியின் நன்மை, தீமைகள் அனைத்தையும் நம்பிக்கை கொள்வதாகும்". (முஸ்லிம் 102)
படிமுறை -இல (3):
சிந்தனை வரைபடங்களைப் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக குமிழி வரைபடம் மூலம் வானவர்களின் செயல்களை மாணவர்களுக்கு முன்வைத்தல். காட்சித் திரையின் மூலம், ஒரு மைய வட்டம் உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி வானவர்களின் பணிகளைக் காண்பிக்கும் பல வட்டங்கள் உருவாக்கப்பட்டு, மேலும், ஒவ்வொரு பணியும் அதனுடன் தொடர்புடைய மார்க்க ஆதாரங்களுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த பணி மற்றும் ஆதாரங்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டு தெளிபடுத்தப்பட்டு, அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதைப் பற்றி வினவ அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
படிமுறை இல (4)
கருத்துதிர்ப்பு(சிந்தனை கிளர்தல் ) மூலம், வானவர்கள் மீதான நம்பிக்கையின் விளைவுகளை அடையாளம் காண மாணவர்களைக் வேண்டிக்கொள்ளவும், அவர்களுடைய பதில்களை விவாதித்து அவற்றினூடாக சரியான விடையைத் தெரிவு செய்யுங்கள். இந்த விளைவுகளைப் பற்றி அவர்களின் புத்தகங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்துப் பார்க்கவும், அவற்றை அவர்கள் முன்மொழிந்தவற்றுடன் ஒப்பிடவும் அவர்களிடம் கேளுங்கள்.
இறுதிச் சுருக்கம் :(சாரம்சம் )
பாடத்தில் தாம் பெற்றுக்கொண்ட பயன்கள், வழிகாட்டல்களில் மூன்று அம்சங்களைக் கூறுவதில் ஒத்துழைக்க இரண்டு இரண்டு மாணவர்களாக நியமிக்கலாம். ஒவ்வொரு குழுவின் பதில்களையும் கண்டறிந்து, அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்து, மேலும் அவர்கள் முன்வைத்தவற்றிற்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை விளக்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர்/ இரட்டையர் முறை, வானவர்களின் பணிகளைத் தெளிவுபடுத்துதல்.
நோக்க இலக்கம் 4
செயல்பாட்டில் இடம்பெற்றுள்ள வசனத்தை சக நண்பர்களுக்கு ஓதிக்காட்டி, அவர்களுடன் அதன் கருத்துக்கள், படிப்பினைகளை விவாதிக்க ஒரு மாணவரைத் தெரிவு செய்யலாம், பின்னர் அவ்வசனத்திலிருந்து அறிந்து கொண்டதற்கேற்ப வானவர்களின் பணிகளை ஒவ்வொரு மாணவரும் பதிய வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் முன்வைப்பதை மதிப்பீடு செய்துகொள்ள முடியும். மாணவர்களின் முன்வைப்புக்களை கவனித்து, சரியான பதில்களை அடையாளப்படுத்திக் கொடுங்கள்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, கண்ணியமிக்க வானவர்கள் மீதான மதிப்பை மாணவர்கள் உணர்தல்.
நோக்க இலக்கம் 4
நீங்கள் மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கலாம், மேலும் ஒவ்வொரு குழுவும் இரண்டாவது செயல்பாட்டிற்கான பதிலைப் பற்றி தமக்கிடையில் விவாதிக்க வழிகாட்டுக. அதன் பதிலை அவர்கள் தனியான ஓர் அட்டையில் எழுதிக்கொள்வது அவசியம்.
குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்த பிறகு, ஒரு மாணவன் வானவர்களை எவ்வாறெல்லாம் மதிக்கின்றான் என்பதைப்பற்றி தன் குழு உறுப்பினர்களின் உணர்வுகளை அழகாக, மனதைத் தொடும் வகையில் வெளிப்படுத்தும் திறன் கொண்ட குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஏனையொருக்கு வாசித்துக் காட்டச் செய்யவும்.
செயற்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் / சோடி , வானவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தெளிவுபடுத்துதல்.
நோக்க இலக்கம் 6
மாணவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து, மூன்றாவது செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸை சக நண்பர்களிடம் படித்துக் காட்டச் செய்து, அவர்களுடன் அதன் பொருள் மற்றும் படிப்பினைகளை கலந்துரையாடலாம். பின்னர் ஒவ்வொரு மாணவரும் ஹதீஸிலிருந்து கற்றுக்கொண்டவற்றின் படி வானவர்கள் விடயத்தில் தன் மீதுள்ள செயல்ரீதியான கடமையை எழுத வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வழிப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் முன்வைப்பதை மதிப்பீடு செய்துகொள்ள முடியும். மாணவர்களின் முன்வைப்புக்களை கவனித்து, சரியான பதில்களை அடையாளப்படுத்திக் கொடுங்கள்.
வானவர்களுக்கு தொந்தரவு ஏற்படாதிருக்க பள்ளிக்குள் நுழையும் போது வெங்காயம், பூண்டு, லீக்ஸ் மற்றும் விரும்பத்தகாத வாசனையுள்ள எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாணவர்களை வழிப்படுத்துக:
மாணவர்களிடம் முதல் மற்றும் இரண்டாவது கேள்விகளை நீங்கள் முன்வையுங்கள். அவர்களில் சிலரை அவற்றுக்கு பதிலளிக்க தேர்வு செய்யுங்கள். அவர்களின் சக நண்பர்கள் அவர்களது பதில்களை மதிப்பீடு செய்து அவர்கள் விடும் தவறுகளை சரிசெய்தல் வேண்டும்.
கே 1 : - - - .
மூன்றாவது கேள்விக்கு தனித்தனியாக பதிலளிக்க ஒவ்வொரு மாணவரையும் நீங்கள் வழிப்படுத்துக., மேலும் அவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து சக நண்பர்களுக்கு அவர் அளித்த பதிலை வாசிக்க வைக்கவும். அவர்கள் அந்த பதிலை மதிப்பீடு செய்து, அதனுடன் எந்தளவு உடன்படலாம் என்பதைத் குறிப்பிடவேண்டும்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நன்மையான விடயங்களை அவர்களின் வாழ்க்கையிலும் நடைமுறைகளிலும் பின்பற்றி ஒழுகவும் குறிப்பாக அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் வானவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுதல், செயற்பாட்டில் ஆணவம் மற்றும் பெருமையைத் தவிர்த்தல் போன்ற விடயங்களில் ஆசிரியர் மாணவர்களை தூண்ட வேண்டும்.
மேலும், அல்லாஹ் தடைசெய்தவற்றை அவனுக்குப் பயந்தும், மனிதனை விட்டு விலகாத வானவர்களைப் பார்த்து வெட்கித்தும், விலகி இருக்க முயற்சி செய்ய மாணவர்களைத் தூண்டும் அதே வேளையில், அவர்களைச் சூழாக உள்ளவர்களுக்கும் இந்த வழிகாட்டல்களை கற்றுக்கொடுத்து, செயற்படுத்தத் தூண்டவேண்டும்.
பாடம் நான்கு : வேதங்கள் மற்றும் இறைத்தூதர்கள் மீதான நம்பிக்கை மற்றும் அவற்றின் தாக்கங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (ஸுஹுபி இப்ராஹீம் )இப்ராஹீம் நபியின் ஏடுகள் - (ஸபூர் )ஸபூர் வேதம் -(அத்தஸ்தீக்) உண்மைப்படுத்துதல் - அல்லாஹ் (அஸமஹூமுல்லாஹ்) அவர்களைப் பாதுகாத்துள்ளான் - பாவம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(பதிவு செய்யப்பட்ட ஓடியோ - கற்பித்தல் பலகைகள் - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - குர்ஆன் பிரதி).
கற்பித்தல் உத்திகள்:
(மேம்பட்ட ஒழுங்கமைப்புகள் - சுய கேள்வி முறை - கூட்டுக் கற்றல் முறை).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
இறைத்தூதர்களை நேசித்து, அவர்களை மகத்துவப் படுத்தி, புகழ்தல்.
நபிமார்களின் நற்குணங்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி ,அவர்களின் நற்பண்புகளுக்கு ஒப்பாக நடந்து, அவர்களை முன்மாதிரியாக் கொள்ளுதல்.
வேதங்களை இறக்குதல், இறைத்தூர்களை அனுப்புதல் போன்ற அருட்கொடைகளை உணர்தல்.
நபிமார்களின் நற்பண்புகளையும், செயல்களையும் பின்பற்றுதல்.
பாட அறிமுகம் :
ஓடியோ பதிவு மூலமாக பின்வரும் இறைவசனத்தை ஆசிரியர் மாணவர்களுக்கு செவிமடுக்க வைக்க வேண்டும். "(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்". (ஆல இம்ரான் : 3).
பின்னர் ததவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதங்கள் எந்த நபிமார்களுக்கு இறக்கியருளப்பட்டது என்பதை மாணவர்களிடம் வினவவும். பின், வேதங்களை நம்புவதும், இறைத்தூதர்களை நம்புவதும் ஈமானின் பிரதான இரு தூண்கள், அவ்விரண்டுமின்றி ஈமான் செல்லுபடியாகாதென தெளிவுபடுத்தவும்.
பின் வேதங்கள் மற்றும் தூதர்களை ஈமான் கொள்வதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது ? அதன் விளைவுகள் என்ன ? எனும் இருவினாக்களையும் மாணவர்களிடம் வினவுக.
பாடம் முடிவுறும் வரை இவ்விரு வினாக்களுக்குமான விடைகளைத் தாமதப்படுத்துவதாக அவர்களுக்குக் கூறிட வேண்டும்.
பாடத்தை விளக்குதல் :
படிமுறை இல (1) :
பாடத்தின் உள்ளடக்கத்தைப் பிரட்டிப் பார்க்கவும், அதன் பொது மற்றும் துணை கூறுகளை விரைவாக உள்வாங்கிக் கொள்ளவும் மாணவர்களை நீங்கள் வழிநடத்தலாம். பாடத்தின் கூறுகள் மற்றும் சிந்தனைகளில் தெளிவில்லாமல் இருப்பவற்றைப் புரியவைக்கும் விதமான கேள்விகளை உருவாக்குமாறு மாணவர்களை இவ்விருவராக நியமித்து வழிகாட்டுங்கள். அவர்களது பாடப்புத்தகத்தில், இக்கேள்விகளை முன்வைப்பதில் உள்ள நடைமுறை நோக்கங்களாக கூறப்பட்டுள்ளவற்றை அவர்கள் துணைக்கு எடுக்கலாம். பின்பு, ஒவ்வொரு குழுவின் பதில்களையும் பார்த்து, கரும்பலகையில் எழுதவும்.
படிமுறை: (2) :
மாணவர்கள் எழுப்பிய கேள்விகளை மீள் ஒழுங்கமைத்த பிறகு, ஆசிரியர் அவற்றை விவாதத்திற்கு (கலந்துரையாடலுக்கு )எடுப்பார். மாணவர்கள் முன்வைத்தவற்றில் விடுபட்டவற்றை நிறைவு செய்ய, ஆசிரியரும் சில கேள்விகளை முன்வைப்பார். கேள்விகளை எடுத்துக் காட்டும் போது, சில பதில்களுடன் தொடர்புபடும் மார்க்க ஆதாரங்களையும் கூறி, ஆசிரியர் அவற்றை விளக்கவும், அதன் அர்த்தங்களை கூறவும் முடியும். அவ்வாறு கேட்கப்படும் கேள்விகளில் பின்வருபவை அடங்கலாம் :
கே : வேதங்களை நம்புவதன் அர்த்தம் என்ன?
கே : அல்லாஹ் இறக்கிய அனைத்து வேதங்களையும் நம்புவது அவசியமா?
கே : அல்குர்ஆனே அல்லாஹ்வின் வேதங்களில் மகத்தானதும், இறுதியானதுமாகும். அதற்கான ஆதரத்தைக் காட்டவும்.
கே : இறைத்தூதர்களை நம்புவதன் அர்த்தம் என்ன?
கே : நாம் பொதுப்படையாக அனைத்து நபிமார்களையும் - பெயர், எண்ணிக்கைகளை அறியாவிட்டாலும் - நம்புவது அவசியமா?
கே : அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் எண்ணிக்கை யாது?
படிமுறை : (3):
நீங்கள் கூட்டு கற்றல் முறையைப் பயன்படுத்தி, வேதங்கள் மற்றும் தூதர்கள் மீதான நம்பிக்கையின் அதிக எண்ணிக்கையிலான பலன்களை கண்டுபிடிக்க ஒத்துழைக்குமாறு ஒவ்வொரு குழுவையும் நியமிக்கலாம். ஒவ்வொரு குழுவிற்கும் சென்று அவர்களின் ஒத்துழைப்பையும் அவர்களின் பதில்களின் துல்லியத்தையும் கவனிக்கவும்.
இறுதிச் சுருக்கம் :
பாட அறிமுகத்தில் முன்வைக்கப்பட்ட இரு வினாக்களையும் மாணவர்கள் மீண்டும் ஆராய்ந்து, ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக அவ்விரண்டிற்கும் விடையளிக்க வேண்டும். அவர்களில் சிலரைத் தெரிவு செய்து தமது பதில்களை முன்வைக்கச் செய்யுங்கள். நீங்கள் அவற்றை மதிப்பீடு செய்து, தாம் கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தமுடியுமான அம்சங்களை எந்தளவு கண்டுபிடித்துள்ளார்கள் என்பதை வரையறுத்துக்கொள்ளுங்கள்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் / சோடி முறை , அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்களை வரையறுத்தல்.
நோக்க இலக்கம் 2
ஒவ்வொரு மாணவருக்கும் குர்ஆனை எடுத்து, ஸூரா அன்ஆமுக்குச் சென்று, பதினெட்டு நபியமார்களின் பெயர்கள் குறிப்பிடும் வசனங்களை (83-86) படிக்க வழிகாட்டவும். மாணவர்களால் எவ்வளவு தூரம் அடையாளம் காண முடிந்தது என்பதைக் கண்காணிக்கவும். பின்னர் சக நண்பர்களுக்கு விடைகளை வாசித்துக்காட்ட அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்யவும்.
திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற ஏழு நபிமார்களின் பெயர்களை எழுதுவதில் ஒத்துழைக்க மாணவர்களிலிருந்து இவ்விருவராக நியமியுங்கள். பின் அப்பெயர்களை கரும்பலகையில் எழுதுங்கள். ஒவ்வொரு அணியும் தாம் கொண்டுவரும் சரியான பெயருக்கான மதிப்பெண்ணைத் தமக்குத்தாமே அளிப்பதுடன், ஆசிரியர் அவர்களுக்குத் தகுந்த வலுவூட்டலை வழங்க வேண்டும்.
ஆதம், இத்ரீஸ், ஹூத், ஷுஐப், ஸாலிஹ், துல் கிப்ல், முஹம்மத் - அலைஹிமுஸ் ஸலாம்-.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் / கூட்டு முறை, நபிமார்களின் பண்புகள் மற்றும் அவர்களது செயல்களைப் பின்பற்றுதல்.
நோக்க இலக்கம் 5
இரண்டாவது செயற்பாட்டை கவனமாக படிக்கும்படி மாணவர்களுக்கு நீங்கள் வழிகாட்டலாம். மற்றும் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையை முழுமைப்படுத்தஎழுமாறாக சில மாணவர்களை தேர்வு செய்யலாம்.
மாணவர்களின் பதில்களை ஒப்பிட்டு, எது மிகவும் துல்லியமானது என்பதைத் தீர்மானியுங்கள். அதை அவர்களின் புத்தகங்களில் அதற்குரிய இடத்தில் எழுதும்படி அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாணவர்களை நீங்கள் வழிநடத்தலாம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும். குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் பாடநூலில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம், அனைத்துக் கேள்விகளுக்குமான பதில்களை அடைவதில் குழுவினர் தமக்கு மத்தியில் ஒத்துழைப்பர்.
பதிலளித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதில் அவர்கள் எந்தளவு ஒத்துழைப்புடனும் ஈடுபாட்டுடனும் இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிய குழுக்களைப் பார்வையிடவும்.
குழுக்களின் பதில்களைச் சேகரித்து, அவற்றை மதிப்பீடு செய்து, அவற்றை அவர்களுக்கு வழங்குவதுடன், அவர்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் குறிப்பிடவும்.
பதிலளித்த சிறந்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
கே 1 : - - - .
கே 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
(புத்திக் கூர்மை) - (நூஹ் நபி மற்றும் ஈஸா நபி) - (அய்யூப் நபி) - (திரிபிலிருந்து பாதுகாக்கப்பட்டது).
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட பயன்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் செயற்படுத்த ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும், குறிப்பாக தூதர்களை மகிமைப்படுத்தி, அவர்களைப் புகழ்ந்து, அவர்களைப் பின்பற்றி, அவர்களின் வாழ்க்கையிலும் நடத்தைகளிலும் அவர்களின் நற்குணங்களையும் பண்புகளையும் பின்பற்றவும் ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இந்த நற்குணங்கள் மற்றும் பண்புகளைப் பற்றி கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுதல். மேலும், இந்த அறநெறிகள் மற்றும் குணங்களைக் குறிக்கும் குர்ஆன் வசனங்களை சுருக்கமான மற்றும் கண்கவர் வெளியீடுகளில் சமூக ஊடக தளங்களில் வெளியிடுவதன் மூலம் இது சாத்தியப்படலாம்.
பாடம் ஐந்து : மறுமை நாளை நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் அவற்றின் தாக்கங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (இறுதி நாள் - மண்ணறை சோதனை - மீள எழுப்பப்படல் - ஒன்று சேர்த்தல் - ஸிராத் பாலம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(பாடத்தில் இடம்பெறும் அல்குர்ஆன் வசனங்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ - கரும்பலகை - கற்பித்தல் பலகைகள் - குர்ஆன் பிரதி).
கற்பித்தல் உத்திகள்:
(முன் அனுமானம் - கண்டுபிடிப்பு மூலம் கற்றல் - சொற்பொருள் வரைபடங்கள் - கதையூடாக அறிமுகம் - கருத்துதிர்ப்பு(சிந்தனை கிளர்தல் ).
போதனைகளும் , வழிகாட்டல்களும் :
மறுமை நாளை நம்புவதன் அவசியத்தை உணர்தல்.
நரகிலிருந்து பாதுகாப்புப் பெற்று, சுவனத்தை அடைய முயற்சித்தல்.
மறுமை கூலிகளை அடைவதற்காக நன்மைகள் செய்வதில் அதிக ஆர்வங்காட்டுதல்.
மறுமையின் இன்பங்கள் மற்றும் கூலிகளை நாம் எதிர்பார்ப்பதால் உலக இன்பங்களுக்கு குறைவாகவே விருப்பம் காட்டல்.
பாட அறிமுகம்:
பின்வரும் வாசகத்தை மாணவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றி சிந்திக்க வைக்கவும். மேலும், அதைப் பற்றிய அவர்களின் புரிதலின் அடிப்படையில் பாடம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்க வைக்கவும். பின்னர் பாடத்தின் தலைப்பை விளக்கி கரும்பலகையில் எழுதவும்.
( எமது இவ்வுலக வாழ்க்கை நாம் பயிர்செய்யும் நிலம் போன்றது. இவ்வுலகில் நன்மையை விதைப்பவன் மறுமையில் நல்லதையே அறுவடை செய்வான், தீமையை விதைப்பவன் தீமையை அறுவடை செய்வான். மறுமையில் கிடைக்கும் கூலி, ஒன்றில் சுவர்க்கம் அல்லது நரகமே!)
பாடத்தை விளக்குதல்:
படிமுறை : (1)
இறுதி நாளுக்கான பின்வரும் பெயர்களை நீங்கள் பலகையில் எழுதலாம்: (உதாரணமாக, யவ்முல் கியாமா, யவ்முல் பஸ்ல், யவ்முத்தீன், அல்காரிஆ .), இவை குறித்து நிற்கும் அர்த்தத்தைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுங்கள். அவர்களுடைய பதில்களை மறுமை நாளை நம்புவதன் அர்த்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஓர் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
படிமுறை : (2) :
மறுமை நாளின் கட்டங்களைத் தெளிவுபடுத்தும் விளக்கப்படத்தை உள்ளடக்கிய ஒரு பதாகையை நீங்கள் மாணவர்களுக்குக் காட்டலாம். பின்னர் ஒவ்வொரு கட்டத்தையும் கவர்ச்சிகரமான கதை வடிவத்தில் முன்வையுங்கள். குரல், முன்வைப்பு விதம், சிந்தனை, முகபாவணை ஆகியவற்றின் ஊடாக கதைக்கூறும் திறன்களைப் பேணிக்கொள்வது அவசியம்.
விளக்கக்காட்சியின் போது, குறித்த இந்த கட்டங்களுக்கு ஆதாரமாகக் கொள்ளப்படும் இறைவசனங்களைக் செவிமாடுக்குமாறு நீங்கள் அறிவுறுத்துவதுடன், அவ்வசனங்களை விளக்கிக் கொடுங்கள்.
படிமுறை : (2) :
கருத்துதிர்ப்பு (சிந்தனை கிளர்தல் )உத்தியின் உதவியுடன் மறுமை நாளை நம்புவதன் நன்மைகளை அறிவதற்கு மாணவர்களை வழிநடத்தலாம். அதிகளவிலான நன்மைகளைக் கூற அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் முன்மொழிந்தவற்றை மதிப்பிட்டு, சரியான நன்மைகளை இணங்கண்டு கொண்டதன் பின்னர் , மாணவர்கள் பொதுவாக அறிந்துகொள்வதற்காக அவை ஒரு பதாகையில் காட்சிப்படுத்தப்படவேண்டும்.
சாரம்சம் :
ஒவ்வொரு மாணவரும் தான் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதையும், கற்றுக்கொண்டதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் விளக்கி ஒரு பந்தியை எழுதச் சொல்லுங்கள். சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தாம் எழுதியதை சக நண்பர்களிடம் வாசித்துக் காட்ட வைப்பதுடன் அவர்களுக்கு தகுந்த பின்னூட்டங்களையும் வழங்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, மறுமை நாளின் பெயர்களை வரையறுத்தல்.
நோக்க இலக்கம் 1
செயற்பாட்டை தீர்ப்பதில் ஒத்துழைப்பு வழங்க ஆசிரியர் அனைத்து குழுக்களுக்கும் வழிகாட்ட வேண்டும். அவர்கள் குர்ஆன் பிரதியை எடுத்து, அதிலிருந்து ஸூரா காரிஆவை ஓதி, அதனடிப்படையில் செயற்பாட்டில் இடம்பெற்றுள்ள அட்டவணையை பூரணப்படுத்துவதில் பங்கெடுக்க வேண்டும்.
அட்டவணையின் ஒவ்வொரு உறுப்பையும் வரிசையாகக் முன்வைத்து, அதில் ஒவ்வொரு குழுவும் அளித்துள்ள பதிலைக் கண்டறிந்து, தகுந்த புள்ளிகளை வழங்குங்கள். இறுதியில் உயர்புள்ளி பெற்ற குழுவை கண்டறிந்து, அதன் உறுப்பினர்களுக்கு தகுந்த வலுவூட்டல் வழங்குங்கள். தமது குழு பெற்றுக் கொண்ட பதில்களை சக நண்பர்களுக்கு வாசித்துக் காட்ட ஒருவரை நியமியுங்கள்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, - மறுமை நாளை நம்புவதன் தாக்கங்களை உணர்தல்.
நோக்க இலக்கம் 3
ஒரு மாணவரைத் தெரிவு செய்து இரண்டாவது செயற்பாட்டில் இடம்பெற்றுள்ள கதையை சக மாணவர்களுக்குப் படிக்கச் செய்யலாம். கூட்டு கலந்துரையாடலினூடாக கதைக்குத் தலைப்பொன்றிட்டு, அக்கதையிலிருந்து மறுமைநாளை நம்புவதன் தாக்கங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களிடம் வேண்டுங்கள். மாணவர்களின் பதில்களைப் பார்த்த பின், அவர்களுடன் இணைந்து சரியான பதிலைத் கண்டடையவும். அதை அவர்கள் தங்கள் புத்தகங்களில் உரிய இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
செயற்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை - மறுமையில் மீள எழுப்பப்படுவதற்கான ஆதாரங்களைத் தெளிவுபடுத்தல்.
நோக்க இலக்கம் 2
பின்வரும் செயல்பாட்டை புத்தகத்தில் திறக்குமாறு ஆசிரியர் மாணவரிடம் கோர வேண்டும்.
சக நண்பர்களுக்கு அதனை வாசிக்க ஒருவரைத் தெரிவு செய்யவும்.
அதனைத் தொடர்ந்து வரும் வினாக்கள் மற்றும் பயிற்சிகளுக்கு விடையளிக்க அனைவரையும் ஏவவும்.
மாணவர்களின் விடைகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்து, தவறு விட்டவர்கள் அவற்றைத் திருத்த அறிவுறுத்துங்கள்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
பாதி ஒரு அடையாளத்தையும், மற்ற பாதி வேறு அடையாளத்தையும் கொண்ட சில அட்டைகளை ஆசிரியர் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். பின்னர் அவர் முதல் கேள்வியின் வசனங்களை முன்வைக்க, மாணவர்கள் அவ்வசனத்துக்குப் பொருத்தமான அட்டையை உயர்த்த வேண்டும், ஆசிரியர் தவறிழைத்தவரை இனங்கண்டு, அது பற்றி அவருடன் கலந்துரையாடவேண்டும்.
கே1 : - - - .
இரண்டாவது கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொன்றுக்கும் விடையளிக்க நான்கு மாணவர்களை ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும். அவற்றில் ஏதேனும் தவறு இருந்தால், பாடத்தின் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்து, பதிலைப் பிரித்தெடுக்கும்படி அவர் அவரை வழிநடத்த வேண்டும்.
1. மண்ணறைதான் மறுமையின் முதல் வீடு.
2. ஸிராத் என்பது நரகத்திற்கு மேல் போடப்பட்டுள்ள பாலமாகும்.
3. ஹஷ்ர் என்பது விசாரணைக்காக மக்களை ஒன்று சேர்த்தல்.
4. பஃஸ் என்பது மரணித்தோரை மண்ணறையிலிருந்து உயிர்ப்பித்தலாகும்.
ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக மூன்றாவது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். மேலும், ஆசிரியர் இரண்டு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பதில்களை முன்வைக்கச் செய்து, அவற்றிற்கிடையில் ஒப்புநோக்கி, சரியான பதிலைத் தீர்மானிக்க வேண்டும்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம் :
தான் சுவனத்தை வெல்வதற்கும், நரகத்திலிருந்து தப்புவதற்குமான எல்லாவற்றையும் செய்தல், நன்மைகளைச் செய்யவும், பாவத்திலிருந்து விலகி இருக்கவும் தன்னையும் மற்றவர்களையும் தூண்டுதல். இவை இறுதி நாள் மீதான நம்பிக்கையின் பலன்கள். ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கையிலும், பிறருடனான உறவாடல்களிலும் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆறாம் பாடம் : விதியை நம்புதலும், அதன் தாக்கங்களும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (விதியை நம்புதல் - நாட்டம் - வெறுத்தல்).
கற்பித்தல் சாதனங்கள்: (கரும்பலகை - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கண்டுபிடிப்பு மூலம் கற்றல் - சிந்தனை வரைபடங்கள் - தவறான புரிதல்களை சரி செய்தல் - முக்கோண கற்றல் - தீர்க்கமான ஆய்வு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொள்ளல், பொறுமை காத்தல், வெறுப்பு மற்றும் பதற்றத்தை விட்டு விடுதல்.
முஸ்லிமின் வாழ்க்கையில் விதியை நம்புவதன் அவசியத்தை உணர்தல்.
எவ்வளவு பெரிய விடயங்களையும் மனவுறுதியுடன் முன்னோக்குதல், அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடல்.
பாட அறிமுகம்:
நாம் ஈமானின் இறுதித் தூணில் உள்ளோம் என்பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தி, ஏனைய தூண்களை நினைவுகொள்ளுமாறும், தமது அப்பியாசப் புத்தகத்தில் அவற்றை காட்சிப்பட எழுதுமாறும் வேண்டவும். அவர்கள் எழுதியதைக் கண்டறிந்து, மதிப்பீடு செய்யவும்.
இன்றைய பாடத்தின் தலைப்பை அனுமானிக்கும் படி மாணவர்களிடம் வேண்டவும். அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு, வித்தியாசமான பதில்களை கரும்பலகையில் எழுதவும். பாடத்தை விளக்கி முடிக்கும் வரை அவர்களது பதில்களை மதிப்பீடு செய்வதை ஒத்திவைப்பதாக மாணவர்களுக்கு கூறவும்
பாடத்தை விளக்குதல்:
படிமுறை : (1)
கண்டுபிடிப்பு கற்றல் முறையின் மூலம், ஆசிரியர் மாணவர்களுக்கு பின்வரும் வாக்கியத்தைக் காட்டி, அது எதைக் குறிக்கிறது என்பதை விளக்கி, அவர்களின் பதில்களை விதியின் மீதான நம்பிக்கையின் அர்த்தத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளலாம்.
(பிரபஞ்சத்தில் நிகழும் நலவு, கெடுதி அனைத்தும் அல்லாஹ் அறிந்து, எழுதி வைத்து, அவன் நாடியதாகும் என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்தல் )
படிமுறை :(2):
சிந்தனை வரைபட முறையைப் பயன்படுத்தி, விதியின் மீதான நம்பிக்கையின் படிநிலைகளை மாணவர்களுக்கு வழங்கலாம். விதியின் படித்தரங்களையும், அதன் அர்த்தங்களையும், அதன் ஆதாரங்களையும் வாசிக்க நான்கு மாணவர்களைத் தேர்வு செய்யுங்கள். அவற்றை விளக்கவும், கருத்துக்களை அறிமுகப்படுத்தவும் அவர்களுடன் அவ்வாதாரங்கள் விடயத்தில் கலந்துரையாடுங்கள்.
படிமுறை :(3)
ஆசிரியர் பின்வரும் இரண்டு சூழ்நிலைகளை மாணவர்களுக்கு முன்வைத்து, அவற்றைப் பற்றிய தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்படி கேட்க வேண்டும். அவர்களது பதில்களை விதியை நம்புவதற்கும் காரண காரியங்களை கைக்கொள்வதற்கும் இடையிலான தொடர்பை அவர்களுக்கு விளக்க ஓர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ளவும். அதனை விளக்கி, தெளிவுபடுத்தக் கூடிய நபிமார்கள், நல்லடியார்களின் சரிதைகளில் இருந்து கதைகளைக் கூற வேண்டும்.
ஒரு மனிதர் உள்ளார், அவருக்கு பிள்ளைகள் உள்ளனர். தனது முயற்சியின்றியும் அல்லாஹ் தனது பிள்ளைகளுக்கு வாழ்வாதாரம் அளிப்பான் என்ற நம்பிக்கையில் அவர் தொழில் புரியாமல் சோம்பலாக இருக்கின்றார்.
ஒரு பெண் உள்ளார், அல்லாஹ்தான் நோய் நிவாரணியை வழங்குபவன், வைத்தியரின்றியே அவன் தன்னைக் குணப்படுத்துவான் எனக் கருதி அவள் வைத்தியரிடம் செல்ல மறுக்கின்றாள்.
படிமுறை : ( 4)
முக்கோண செவிமடுப்பு உத்தியை ஆசிரியர் பயன்படுத்தலாம். மாணவர்கள் மும்மூவர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் மாணவர், விதியின் மீதான நம்பிக்கையின் தாக்கங்களைப் பற்றி தனக்குத் தெரிந்ததை முன்வைப்பார், இரண்டாவது மாணவர் அதைக் கவனமாகக் கேட்டு, மேலதிக விளக்கங்களைப் பெரும் நோக்கில் முதலாமாவரிடம் சில கேள்விகளைக் கேட்பார். மூன்றாவது மாணவர் தனது இரண்டு சக நண்பர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்பதை எழுதி ஆசிரியரிடம் ஒப்படைப்பார்.
ஆசிரியர் குழுக்களின் செயற்பாடுகளைக் கவனிப்பார். ஒவ்வொரு குழுவும் என்ன எழுதியுள்ளது, அவர்கள் கண்டடைந்த பதில் என்ன? என்பவற்றைப் பார்த்து தனது கருத்துரைகளை வழங்கி, இறுதியில் துல்லியமான பதிலை அடைவதுடன், சிறந்த முறையில் பணியாற்றிய குழுவையும் அடையாளப்படுத்துவார்.
இறுதிச் சுருக்கம் :
- விளக்கப்படும் பாடத்துடன் தொடர்புடைய கூறுகளில் ஒன்றை அவரவர் பாணியிலும், பாடத்திலிருந்து அவர் புரிந்துகொண்ட அடிப்படையிலும் உரையாற்றுவதற்காக ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அக்கூறுகளாவன : (விதியை நம்புவதன் அர்த்தம் - விதியை நம்புவதன் படிமுறைகள் - விதியை நம்புதலும் காரணிகளை மேற்கொள்வதும் - விதியை நம்புவதன் தாக்கங்கள்). ஏனைய மாணவர்கள் இவர்களுடைய பதில்களைக் கவனித்து, அவற்றை வலுவூட்ட கருத்துரை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொள்ள ஊக்குவித்தல்.
நோக்க இலக்கம் 4, 5
ஏதாவதொரு விருதைப் பெற ஒரு நண்பர் முயற்சித்தார், நாட்கள் கடந்து சென்றன. முயற்சித்தும் அவருக்கு அவ்விருது கிடைக்கவில்லை. அதனால் அவர் கடும் கவலை அடைந்தார். இத்தகைய ஒரு நண்பருக்கு உபதேசிக்குமாறு ஒவ்வொரு மாணவரிடமும் வேண்டவும்.
இப்பாடத்தில் கற்ற பிரகாரம் அவ்வுபதேசத்தை (அறிவுரையை )எழுத வேண்டும். மாணவர்களின் உபதேசங்களைக் கண்டறிந்து, வசனம் அமைப்பு, கருத்து மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் சிறந்த உபதேசத்தைத் தெரிவு செய்ய வேண்டும். சிறந்த உபதேசங்களையும் அவற்றை எழுதியவர்களின் பெயர்களையும் உள்ளடக்கிய ஒரு கையேட்டைத் தயாரிக்கவும். வகுப்பறை வாசிகசாலையில் அதனைப் பாதுகாத்து வைக்கவும்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்களைத் தேடுதல்.
நோக்க இலக்கம் 2, 3
செயல்பாட்டில் உள்ள உரையைப் படிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் அதன் அர்த்தத்தைப் பற்றி விவாதிக்கவும். கூட்டு தேடலின் மூலம், இரண்டு செயல்பாட்டுக் கேள்விகளை ஆராய ஒவ்வொரு குழுவையும் வழிநடத்துங்கள். இதனை இலத்திரனியல் அல்லது எழுத்து மூலாதாரங்களை நாடுதல் அல்லது ஏனைய மனிதர்களை நாடுதல் போன்றவற்றின் மூலம் ஆராயலாம். மாணவர்களின் பதில்களைக் கண்டறிந்து, சிறப்பாக முயற்சித்து, செயல்பட்ட குழுவைப் பாராட்டுங்கள்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
பின்வரும் கேள்விகளுக்கு ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்துங்கள், பின்னர் அவர்களுடன் தமது பதில்களைப் பற்றி விவாதிக்கவும். ஒவ்வொரு மாணவரும் தனது சரியான பதிலுக்கு தானே ஒரு மதிப்பெண்ணைக் கொடுக்க வேண்டும். பின்பு, மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கே 1: தூண்கள் - நலவு, கெடுதி - காரணிகளைப் பயன்படுத்துவதுடன் முரண்பட மாட்டாது
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வருவற்றினூடாக வழி காட்டலாம் :
விதியின் மீதான நம்பிக்கை மற்றும் அதில் திருப்தி கொள்வதுடன் முரண்படும் எதிர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்தும் நபர்களை வாழ்க்கையில் சந்தித்தல். உதாரணமாக : பொறாமை, குரோதம், சோம்பல், வெறுப்பு, பதற்றம் போன்றன. பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட அறிவு, தகவல்கள், வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலான ஓர் ஒழுக்க வழிகாட்டலை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சிக்கலாம். அல்லது மஸ்ஜிதின் இமாமை நாடுவதன் மூலம் அவர்களுக்கு அல்குர்ஆன் வகுப்புக்கள் மற்றும் பாடங்களில் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கலாம்.
நபியவர்களின் வர்ணணைகள் மற்றும் வழிமுறைகள்
முதலாம் பாடம்: நபி ﷺ அவர்களும் அவரின் முக்கிய பண்புகளும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (ரஸூல், முஃஜிஸா, ஆமுல் ஃபீல், நடுத்தரமான உயரம்கொண்டவர் , அகன்ற நெஞ்சுடையவர், விரிந்த தோல்பட்டையுடையவர், அடர்த்தியான தாடியுடையவர்).
கற்பித்தல் சாதனங்கள்:
(வெண்பலகை - கணினி - ஸ்மார்ட் போர்ட் - ஃபிளாஷ் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(சொற்பொருள் வரைபடம் - கதை நடைக் கற்பித்தல் - கூட்டுறவுக் கற்றல் - தீர்வுகாண் கற்பித்தல்)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
1. மக்கள் நபிமார்களின் பக்கம் தேவையுள்ளவர்கள் என்பதை நம்பிக்கை கொள்ள வைத்தல்.
2. அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் பொறுமையை கடைபிடிக்க வைத்தல்.
3. நபி ﷺ அவர்களின் நற்பண்புகளை கடைபிடிக்க வைத்தல்.
4. அழைப்புப் பணியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தேவையான நற்பண்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்தல்.
5. நபி ﷺ அவர்களை நேசிப்பதற்கு ஆர்வமூட்டுதல்.
பாடத்தின் அறிமுகம்:
இப்பாடத்தை கதை வடிவில் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அப்ரஹாவின் யானை வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். அவ்வருடத்தில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். இதன்போது கதைக்குத் தேவையான சப்தம், மொழி,நடை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சரியாக புரிந்துள்ளனரா? என்பதைப் பரீட்சிக்க ஒரு மாணவரைத் தெரிவு செய்து மற்றவர்களுக்கு அச்சம்பவத்தைக் கூறச் சொல்ல வேண்டும். பின்னர் இச்சம்பவத்துக்கான பொறுத்தமான தலைப்பை வெண்பலகையில் எழுதச் செய்ய வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
இதற்காக ஆசிரியர் சொற்பொருள் வரைபடத்தைப் பயன்படுத்த வேண்டும். நபி ﷺ அவர்கள் பற்றிய அறிமுகம், அவர்களின் சில முக்கிய குணங்கள் போன்றவற்றை வெண்பலகையில் எழுதி, மாணவர்களுக்கு அவற்றை உன்னிப்பாக கவனிக்க வைக்க வேண்டும்.
வெண்பலகையில் உள்ளவற்றையும், அதன் அர்த்தங்களையும் மாணவர்கள் அறிந்துவைத்துள்ளார்களா? என்பதை பரீட்சிக்க வேண்டும்.
மாணவர்களின் கருத்துக்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகள், புரிதல்கள் போன்றவை பற்றியும் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
நபி ﷺ அவர்கள் பற்றிய அறிமுகத்தையும், அவர்களின் பரம்பரை பற்றியும் ஆசிரியர் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவற்றை தெளிவான ஆதாரங்கள் அடிப்படையில் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக பொருத்தமான, சரியான ஹதீஸ்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் போது ஆசிரியர் சிந்தனைகிளர்தல் கற்பித்தல் முறையை உபயோகிக்க வேண்டும். நபி ﷺ அவர்களின் அறிமுகம் பற்றி மாணவர்களின் புரிதல்களை உறுதிசெய்வதற்கு பின்வரும் கேள்விகளை அவர்களிடம் கேட்க வேண்டும்:
கேள்வி 1: நபி ﷺ அவர்களின் முக்கிய பெயர்கள் எவை?
கேள்வி 2: நபி ﷺ அவர்கள் எப்போது பிறந்தார்கள்? எங்கு வளர்ந்தார்கள்? எங்கு மரணித்தார்கள்?
கேள்வி 3: நபி ﷺ அவர்களின் மனைவியர்கள் சிலரின் பெயர்களையும், அவரின் பிள்ளைகளின் பெயர்களையும் குறிப்பிடுக.
கேள்வி 4: நபி ﷺ அவர்களின் பண்புகள் பற்றி ஆதாரத்துடன் கலந்துரையாடுக.
மூன்றாம் கட்டம்:
மேற்கூறப்பட்ட முறையில் தீர்வுகளைக் கண்ட பிறகு ஆசிரியர் மாணவர்களுக்கு பின்வரும் சந்தர்ப்பங்களைப் பற்றி கூற வேண்டும்.
1. புதிதாக கேள்விகளை கேட்கச் சொல்லி, அவற்றுக்கான தீர்வுகளையும், அவற்றை கையாளும் முறைகளையும் கூட்டாக செய்யுமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும்.
2. பாடத்தில் கூறப்பட்ட நபி ﷺ அவர்களின் பண்புகளோடு பின்வரும் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்துமாறு பணிக்க வேண்டும்:
ஒரு யாசகர் எனது நண்பரிடம் வந்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். எனது நண்பரோ அவரை அடித்து விரட்ட முனைகிறார்.
ஹாலிதின் தந்தை மரணித்துவிட்டார். இதற்காக தனது கண்களின் ஒளி மங்கும் வரை அழுது, கடுமையாக துக்கப்பட்டார்.
இரு நண்பர்களுக்கு மத்தியில் ஃபிக்ஹ் தொடர்பான கேள்வி ஒன்றில் காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றவே ஒருவர் மற்றவரை அடித்து விட்டார்.
அஹ்மத் வயோதிபர் ஒருவரை தவறுதலாக தனது காரால் மோதி கொன்றுவிட்டார். கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அஹ்மதையும் அதே பாதையில், அதே பாணியில் கொல்ல வேண்டுமென பிடிவாதமாக உள்ளனர்.
படிப்பினைகள்:
இதற்காக கூட்டுறவு கற்றல் முறையைப் பயன்படுத்த வேண்டும். பின்வரும் குறிப்புகளை நிரப்புவதன் மூலம் தமக்கு மத்தியில் கலந்தாலோசனை செய்து, பாடத்திலிருந்து சில படிப்பினைகளை பெறுமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும்.
மனிதர்களை ................................................ இருந்து வெளிவேயற்றுவதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான்.
அனைத்து நபிமார்களையும் விசேடமாக தயார் செய்துதான் அல்லாஹ் அனுப்பியுள்ளான். மேலும் அவர்களை ..............................பலப்படுத்தியுள்ளான்
நபி ﷺ அவர்களின் பெயர், முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் .................................................................................
நபி ﷺ அவர்கள் ஆமுல் ஃபீல் வருடம் ................................ நாளன்று, ............................................. வில் பிறந்தார்கள்.
ஆமுல் ஃபீல் வருடம் என்பது ..................................................................................... வருடமாகும்.
நபி ﷺ வடிவத்திலும் தோற்றத்திலும் மிக அழகான ஒருவராக இருந்துள்ளார்கள். வெள்ளை நிறத்தவராகவும், ......................................., எப்போதும் மக்களோடு புன்முறுவலுடன் இருப்பார்கள். நடுத்தர ........................... கொண்ட இவர் விசாலமான ..........................................., ............................................., அடர்த்தியான தாடியும் கொண்டிருப்பார்கள்.
நபி ﷺ அவர்களின் சில குணங்கள் வருமாறு: ......................................., ............................................, ........................................
ஒப்படைகள்/செற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது, நபி ﷺ அவர்களின் பெயர்களையும், அதன் அர்த்தங்களையும் அறிந்துகொள்ளல்
நோக்க இல. 1
மேலதிக தாள் ஒன்றைப் பயன்படுத்தி பின்வரும் ஒப்படைகளுக்கான விடைகளை எழுதுமாறு மாணவர்களை பணிக்கவும்.
எழுதிய விடைகளை ஒன்று சேர்த்து, சரிபார்த்து, சரியாக எழுதியவர்களுக்கு சன்மானம் வழங்கவும்.
ஒப்படை 1:
பெயர் பெயருக்கான காரணம்
முஹம்மத் அவரது நற்பண்புகள் காரணமாக முன்சென்றோர், பின்வந்தோர் அனைவருமே அவரைப் புகழ்ந்தமையே அதன் காரணம்
அஹ்மத் ஏனைய நபிமார்களை விடவும் உயரிய அந்தஸ்த்தைப் பெற்றவர். மேலும் தனது ரப்பை ஏனையோரை விட அதிகம் புகழ்ந்தவர்.
நபிய்யுத் தவ்பா அல்லாஹ்விடம் அதிகமாக பாவமன்னிப்புக் கேட்கும் மனிதராக இருந்துள்ளார்.
ஆகிப் நபிமார்களில் இறுதியானவர். அவருக்குப் பின் வேறு நபிமார்கள் வரமாட்டார்கள்.
நபிய்யுர் ரஹ்மா உலக மக்கள் அனைவருக்குமான அருட்கொடையாக அல்லாஹ் அவரை அனுப்பியுள்ளான்.
ஒப்படை இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டுச் செயற்பாடு, நபி ﷺ அவர்களின் பண்புகளை ஆராய்ந்தெடுத்தல்.
நோக்கம் 4,5
மாணவர்களில் நான்கு பேரைத் தேர்வு செய்யவும்.
ஒப்படையில் வந்துள்ள உரைகளில் ஒன்றை கணினி ஊடாக ஒவ்வொரு மாணவரும் வாசிப்பர்.
அவ்வுரையில் இருந்து ஒவ்வொரு மாணவரும் நபி ﷺ அவர்களின் ஒவ்வொரு பண்புகளைக் கூற வேண்டும்.
சக நண்பர்கள் கூறிய விடையை சரிபார்க்க மேலும் ஐந்து பேரைத் தேர்வு செய்யவும்.
நபி ﷺ அவர்களின் குணங்கள்
இரக்கம் காட்டுதல்
மென்மையாக நடத்தல்
கொடை வழங்கல்
வீரம்
மதிப்பீடு
விடைகளை சரிகாண மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும்.
முதலாவது கேள்விக்கு பதிலளிக்க: கையில் இருக்கும் வார்த்தைகளை எழுமாறாக அவர்களிடம் கூறி, அவற்றுக்கு விடையளிப்பதற்காக சில மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். அவற்றில் சரியானவை எவை? தவறானவை எவை என்பதை கண்டறியுமாறு அவர்களைப் பணிக்க வேண்டும்.
கேள்வி 1: ( ) -- ( ) - ( )
இரண்டாம் மூன்றாம் கேள்விகளுக்கு பதிலளிக்க: தனித்தனியாக விடையளிக்குமாறு மாணவர்களைப் பணித்து, அவ்விடைகளை அப்பியாசப் புத்தகத்தில் எழுதுமாறு கூற வேண்டும்.
மாணவர்கள் பயிற்சிகள் செய்வதை உறுதிப்படுத்த வகுப்பில் நகர்ந்தவாறு இருக்க வேண்டும். அதில் ஒரு மாணவரைத் தேர்வு செய்து தான் எழுதியவற்றை வாசிக்குமாறு பணிக்க வேண்டும்.
கேள்வி 2: (571) - (ஆகிப்) - (63 வருடங்கள்)
தர்பியாவின் போது கவணிக்க வேண்டியவை:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நபி ﷺ அவர்களது வம்சத்தின் சிறப்பு பற்றி வந்துள்ள பாடத்தில் இடம்பெறாத வேறு சரியான ஹதீஸ் ஒன்றைத் தேடுமாறு மாணவர்களை உற்சாகமூட்ட வேண்டும். அதை அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கச் செய்ய முயல வேண்டும்.
நபி ﷺ அவர்களின் குணங்கள், பண்புகள் பற்றிய ஆழமான அறிவை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றுக்காக இவை சார்ந்த புத்தகங்கள், மார்க்க அறிஞர்களின் உரைகள், இலத்திரணியல் மூலதாரங்கள் போன்ற பல்வேறு மூலாதாரங்களை பயன்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் நபியவர்களது குணங்களின் பெறுமதியைை உணர வைத்து, அவற்றை தம்மிடமும், தன்னைச் சார்ந்த குடும்பம், சமூகம் போன்றவற்றிலும் பிரதிபலிக்க செய்வதற்கு ஆர்வமூட்ட வேண்டும்.
இரண்டாம் பாடம்: நபி ﷺ அவர்களின் தனிச் சிறப்பம்சங்கள்.
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(மனிதர்களின் தலைவர் - சிறப்பிக்கப்பட்டுள்ளேன் - பொருட் பெருக்கமான சொற்கள் - அச்சம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப் பட்டுள்ளது - போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன)
கற்பித்தல் சாதனங்கள்:
(வெண்பலகை - கணினி - ஸ்மார்ட் போர்ட் - ஃபிளாஷ் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(சொற்பொருள் வரைபடம் - சுய வினாத் தொடுப்பு - தவறான புரிதல்களை சரிசெய்தல்)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
1. நபி ﷺ அவர்களின் அந்தஸ்த்தை மதித்தல்.
2. நபி ﷺ அவர்களை நேசிப்பதற்கு ஆர்வமூட்டல்.
3. நபி ﷺ அவர்களின் சிறப்புகள், பிரத்தியேக அம்சங்கள் போன்றவற்றை மதித்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் ஹதீஸை மாணவருக்கு வாசித்துக் காட்டுக. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "நான் மறுமை நாளில் ஆதமின் பிள்ளைகளுக்கு தலைவன் ஆவேன்" (நூல்: புஹாரி 4712, முஸ்லிம் 2278). அடுத்து, பின்வரும் இரு கேள்விகளை அவர்களிடம் கேட்க வேண்டும்:
எவ்வாறு நபி ﷺ அவர்கள் இந்த அந்தஸத்தைப் பெற்றார்கள்?
நபி ﷺ அவர்களின் வேறு சிறப்பம்சங்கள் பற்றி நீர் அறிந்துள்ளீரா?
இப்பாடத்தின் மூலம் அவற்றை விபரித்து, பாடத்தின் தலைப்பை வெண்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
இதற்காக சொற்பொருள் வரைபட முறையைப் பயன்படுத்த வேண்டும். பாடத்தின் பிரதான கூறுகள் மனத்தில் சரியாக பதியும் விதத்தில், ஒரு பதாகை ஊடாக இவ்வுலகில் நபி ﷺ அவர்களுக்கு உள்ள சிறப்புகள், தனித்துவங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு விளக்க உருவைக் காட்டவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
சுய வினாத் தொடுப்பு முறையைப் பயன்படுத்தி, நபி ﷺ அவர்களின் சிறப்பு பற்றி மாணவர்கள் அறிய விரும்புபவற்றை கேள்வியாக கேட்குமாறு அவர்களைப் பணிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளையும் வெண்பலகையில் எழுதி, அவற்றோடு மேலதிக வினாக்களையும் இணைத்து பாடத்தின் கருப்பொருளை விரிவு செய்ய வேண்டும். மேலதிக வினாக்களோடு பின்வருபவற்றையும் இணைக்கலாம்:
கேள்வி: ஏன் நபி ﷺ அவர்கள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக அனுப்பப்பட்டார்கள்?
கேள்வி: எவ்வாறு நபி ﷺ அவர்களுக்கு பொருட் பெருக்கம் கொண்ட சொற்கள் வழங்கப்பட்டன?
கேள்வி: மண்ணால் தயம்மும் செய்வதன் சட்டம் யாது?
கேள்வி: எவ்வாறு எதிரிகளின் உள்ளத்தில் நபி ﷺ அவர்கள் பற்றிய அச்சம் ஊட்டப்பட்டு, உதவிசெய்யப்பட்டுள்ளது? போரில் கிடைக்கும் செல்வங்கள் எவ்வாறு அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன?
மூன்றாம் கட்டம்:
மறுமையில் நபி ﷺ அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் சிறப்புகள் பற்றி தெளிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் ஹதீஸ்களை தேர்வு செய்து, திரையில் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் அதை வாசிக்குமாறு கூறி, அவற்றின் அர்த்தங்களையும், படிப்பினைகளையும் விளக்க வேண்டும்.
படிப்பினைகள்:
பாடத்தில் தாம் கற்றவற்றிலிருந்து முக்கிய படிப்பினைகளை ஒரு பந்தியில் எழுதுமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும்.
சில மாணவர்களைத் தேர்வு செய்து, தாம் எழுதியவற்றை அடுத்தவர்களுக்கு வாசித்துக் காண்பிக்குமாறு கூற வேண்டும். அத்துடன் பொருத்தமான வலுவூட்டல்களை வழங்கவேண்டும்.
ஒப்படைகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது. அரபு மொழியைக் கற்பதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்துகொள்ளல்.
நோக்கம் 3
முதலாம் ஒப்படையை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, மேலதிக அட்டை ஒன்றில் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் துல்லியமான, சரியான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவித்துப் பாராட்டவேண்டும்.
1. மேற்கூறப்பட்ட அனைத்தும் சரியானவை.
ஒப்படை இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது, நபி ﷺ அவர்களது நீர்த்தடாகத்தின் தன்மைகள் பற்றிக் கண்டறிதல்.
நோக்க இல. 4
மேலதிக தாள் ஒன்றில் பின்வரும் ஒப்படைக்கான விடையை எழுத மாணவர்களைப் பணிக்கவும்.
விடைகளை சேகரித்து, திருத்தவும். அவற்றில் சரியான விடையை எழுதியவருக்கான பிரதிஉபகாரமாக, அதை ஓர் அட்டையில் எழுதித் தருமாறு அவரிடமே கேட்டு, அதை சமூக வளைத்தளங்களில் பகிரவும்.
மதிப்பீடு
மதிப்பீட்டுக் கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களைப் பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும்.
கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக வெண்பலகையில் எழுதவும். அருகருகே அமர்ந்திருக்கும் இவ்விரு மாணவர்களிடம் பின்வரும் வினாக்களுக்கு கூட்டாக சேர்ந்து விடையளிக்குமாறு பணிக்கவும்.
பின்னர் எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்து, தமது பதில்களை எனையோரிடம் வாசித்துக் காட்டுமாறு கூற வேண்டும்.
பிழையாக விடையளிப்பவருக்கு பாடத்தை மீண்டும் வாசிக்குமாறு பணிப்பது நல்லது.
அதிலிருந்து சரியான பதில்களை கண்டு பிடித்து எழுதுதல்
கேள்வி 2: பரிந்துரை செய்பவர் என்பவர், பரிந்துரை செய்யுமாறு அல்லாஹ்வால் அனுமதி வழங்கப்படுபவரைக் குறிக்கும். பரிந்துரை ஏற்கப்படுபவர் என்பவர் அல்லாஹ்வால் தான் செய்யும் பரிந்துரைகள் ஏற்கப்படுபவரைக் குறிக்கும். ( )
தர்பியாவின் போது கவணிக்க வேண்டியவை:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்விலும் உறவாடல்களிலும் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நபி ﷺ அவர்களின் சிறப்புகள், தனித்துவங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும், பாடத்தில் இடம்பெறாத மேலதிக அல்குர்ஆன் வசனங்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் போன்றவற்றை சேகரிக்குமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும். அவற்றை ஒரு பதாகையில்எ ழுதி, பள்ளியில் தொங்கவிட வேண்டும்.
மூன்றாம் பாடம்: அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் கேள்விகளை மாணவர்களிடம் தொடுத்து, அவர்கள் அளிக்கும் விடைகளுக்கும், பாடத்தின் நோக்கம் மற்றும் தலைப்பிற்கும் இடையிலான தொடர்பை விபரிக்குமாறு அவர்களைப் பணிக்கவும்.
கேள்வி: வெறுமனே எழுத்துக்களையும், சொற்களையும் வாசிப்பது மாத்திரம் அல்குர்ஆனை ஓதுவதாக அமையாது. அப்படியானால் அல்குர்ஆனை ஓதுவதன் யதார்த்தமான புரிதல் யாது?
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
கண்டறிதல் எனும் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி பின்வரும் வாக்கியத்தையும், அது பொதிந்துள்ள வினாவையும் மாணவர்களிடம் கேட்கவும். (மக்களை உண்மை மற்றும் நன்மையின் பக்கம் வழிநடாத்துவதற்காக அல்லாஹ்வால் நபி ﷺ அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதம் அல்குர்ஆன் ஆகும். எனவே அதை நாம் ஓதுவதற்கு ஆர்வம் காட்ட வேண்டும். அதை ஓதுவதன் சிறப்பு யாது?)
(சுவனத்தை அடைதல், ஒரு நன்மையைப் பெறல், பன்மடங்கு நன்மைகளைப் பெறல்) போன்ற விடைகளை அவர்கள் தெரிவுக்கு விட்டு, அதில் சரியான விடையைத் தெரிவு செய்யுமாறு அவர்களைப் பணிக்க வேண்டும். பின்பு சரியான விடையை அவர்களுக்கு அடையாளப்படுத்தவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு பற்றி கூறும் ஹதீஸை மாணவர்கள் செவிமடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக ஒலிப்பதிவு நாடாக்களைப் பயன்படுத்த முடியும். இதன் போது ஒவ்வொரு வசனத்துக்குமான அர்த்தம் பற்றி கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, அல்குர்ஆனை எவ்வாறு ஓத வேண்டும் என்பது பற்றி தாம் அறிந்துவற்றை கூறுமாறு மாணவர்களைக் கேட்கவேண்டும்.அவர்களின் விடைகளைக் கவனித்து, ஓர் விளக்கப் படத்தின் மூலம் அல்குர்ஆனை ஓதும் சரியான முறையை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நான்காம் கட்டம்:
பாடத்தில் கூறப்பட்ட அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்புகளை போஸ்டர் வடிவில் அழகாக வடிவமைத்து, ஒவ்வொரு சிறப்புகளிலிருந்தும் பெறப்படும் படிப்பினைகளை விளக்கிக் கருத்துரை வழங்குங்கள். மாணவர்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அவை பற்றிக் கருத்துக் கூற இரு மாணவர்களை தெரிவுசெய்யவும்.
படிப்பினைகள்:
பாடத்தை புரிந்து கொண்ட பின்னர் தாம் பெற்ற படிப்பினைகள் ஒவ்வொன்றை, ஒவ்வொரு மாணவராக கூற வைத்து, அவற்றை வெண்பலகையில் எழுதி, அவை பாடத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை அவர்களுக்கு விளக்கிக் கருத்துரைக்கவும்.
ஒப்படைகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் சார்ந்தது, அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பை தெளிவுபடுத்துதல்.
நோக்க இலக்கம் : 6
ஒப்படை 1ல் இடம்பெற்ற இரு ஹதீஸ்களையும் வாசிக்குமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும். அவ்விரு ஹதீஸ்களிலும் உள்ள சொற்களின் அர்த்தங்களை விளக்கத்திற்கு எடுத்து, வசனத் தொடரின் ஊடாக கருத்துக்களை சொல்வதற்கு உற்சாகமூட்டல். பின்னர் அவற்றின் விளக்கங்கள் பற்றி கலந்தாலோசனை செய்ய வேண்டும். ஒரு மாணவரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு ஹதீஸிலிருந்தும் அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு பற்றி கூறுமாறு பணிக்க வேண்டும். மாணவர்கள் அவற்றை தமது புத்தகத்தில் எழுதும் பொருட்டு, வெண்பலகையில் அவற்றை எழுத வேண்டும்.
அல்குர்ஆன் தன்னை ஓதுபவருக்கு மறுமையில் சிபாரிசு செய்தல்.
அல்குர்ஆனை ஓதுபவரின் அந்தஸ்த்து மறுமையில் உயர்த்தப்படுகிறது.
ஒப்படை இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் குழு சார்ந்தது, அல்குர்ஆனை மீட்டி, திறம்பட நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிகளை முன்மொழிதல்.
நோக்க இலக்கம் : 4
ஒப்படையில் இடம்பெற்ற ஹதீஸை சில அட்டைகளில் எழுதி, இரு மாணவருக்கு ஒரு அட்டை விகிதம் பகிர்ந்தளிக்கவும். அல்குர்ஆன் மனனத்தை மீட்டவும், அவை மறக்காமல் இருக்கவும் செய்ய வேண்டியவற்றை அவற்றில் எழுதுமாறு பணிக்கவும். பின்னர் அவற்றை சேகரித்து, மதிப்பீடு செய்யவும். பிழையான விடைகளை உணர்த்திக் காட்டி அவர்களையே திருத்தப் பணிக்கவும். சரியான விடை எழுதியவர்களை வாழ்த்தவும்.
ஒப்படை இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் குழு சார்ந்தது, அல்குர்ஆனை ஓதுவதற்கு தூண்டுதல்.
நோக்கம் 4
ஒப்படை நான்கில் வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகளை ஒவ்வொரு அட்டையிலும் எழுதவும். இரு மாணவர்களைத் தெரிவு செய்து தமது சக மாணவர்கள் முன் நிற்கச் செய்து, செயற்பாட்டை வாசித்து விளங்கப்படுத்தி, எதிர்பார்க்கப்படும் பயிற்சியை கூறுமாறு கேட்க வேண்டும். மற்றைய மாணவர்கள் இவர்கள் இருவரையும் கவனித்து, இவர்களுக்கான மதிப்பீடுகளை வழங்க வேண்டும்.
மதிப்பீடு
பின்வரும் முறைகளில் மதிப்பீட்டுக் கேள்விகளை மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும்:
பாடத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளை மாணவர்களிடம் ஒன்றன் பின் ஒன்றாக கேட்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிப்பதற்காக இரு மாணவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவர்களின் விடைகளை ஏற்று, அவற்றிற்கு இடையில் ஒப்பிட்டுப் பார்த்த பின், அவற்றை மதிப்பீடு செய்வதற்காக ஏனைய மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
மாணவர்கள் விடையளித்து முடிந்ததும், அவற்றைத் தமது புத்தகங்களுக்குள் வைக்குமாறும், ஏதாவது கேள்விகளுக்கு பதில் தெரியாத பட்சத்தில் தம்மிடம் கேட்குமாறும் பணிக்கவும்.
கேள்வி 1: ----
கேள்வி 2: கஃபா - தினம் - பன்மடங்கு நன்மைகள்.
தர்பியாவின் போது கவனிக்க வேண்டியவை:
கற்பித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு மாணவர்களை வழிநடாத்த வேண்டும்:
அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு பற்றி கூறி, இரவு பகலாக தொடர்ந்தும் குர்ஆனை ஓத மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.
அதை நிறைவேற்றுவதற்கு உதவியாக உள்ள அனைத்து செயற்பாடுகளையும் செய்வதற்கு முயல வேண்டும்.
நான்காம் பாடம்: பாவங்களுக்கான பரிகாரங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை - ஒரு ரமழானில் இருந்து மறு ரமழான் வரும் வரை - பரிகாரங்கள் - பெரும்பாவங்கள்)
கற்பித்தல் சாதனங்கள்:
(கேட்டல் உபகரணம் - கணினி - காட்சித் திரை - வெண்பலகை - ஸ்மார்ட் போர்ட்)
கற்பித்தல் உத்திகள்:
(கட்டமைப்பியல் கற்றல் - தீர்வுகாண் கற்பித்தல் - தவறான புரிதல்களை சரிசெய்தல் - மீன்தொட்டிக் குழு முயற்சி - பகுப்பாய்வு சிந்தனை முறை)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
1. வணக்க வழிபாடுகளை உரிய நேரத்திலும், தொடராகவும் பேணி வருதல்.
2. இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு போன்றவற்றின் அந்தஸ்த்தை உணர்தல்
3. பெரும்பாவங்களில் வீழ்வதிலிருந்து தவிர்ந்திருத்தல், அதன் விபரீதங்களை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை கேட்டல் உபகரணத்தின் உதவியுடன் மாணவர்களை செவிமடுக்கச் செய்து, அதை மீண்டும் மீண்டும் ஓதுபவருடன் இணைந்து ஓதச் செய்ய வேண்டும். பின்னர் அது கூற வரும் செய்தியை விவாதித்து, அதற்கும் பாடத்தின் ஹதீஸிற்குமான தொடர்பை விபரிக்கவும்.
அல்லாஹ் கூறுகிறான்: "பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும்" அல்குர்ஆன் (11:114)
பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு, அதை வெண்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
காட்சித் திரையைப் பயன்படுத்தி ஹதீஸை மாணவர்களுக்கு காண்பிக்கவும். நீங்கள் வாசிக்க உங்களை அடுத்து அவர்களையும் வாசிக்க வைக்கவும். மாணவர்கள் சிலரைத் தேர்வு செய்து, சிறந்த உச்சரிப்புடனும், சப்தத்துடனும் மற்றவர்களுக்கு வாசித்துக் காண்பிக்குமாறு பணிக்கவும்.
இரண்டாம் கட்டம்:
கட்டமைப்பியல் முறையைப் பயன்படுத்தி ஹதீஸின் அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரழி) அவர்களைப் பற்றிய மாணவர்களின் புரிதல்களை பரீட்சிக்கவும். பொருத்தமான வலுவூட்டல்களை வழங்கவும். மேலதிக தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்காக பின்வரும் துணுக்குகளையும் சேர்த்துக்கொள்ளவும்: (அவரின் பெயர், புனைப்பெயருக்கான காரணம், இஸ்லாத்தை ஏற்ற முறை, அவரின் சிறப்பம்சங்கள், அவரின் மரணம்). இரு மாணவர்களைத் தெரிவு செய்து, அபூஹுரைரா (ரழி) அவர்கள் பற்றி தாம் அறிந்துள்ளவற்றையும், தம்மை ஆச்சரியப்படுத்திய அவரது சிறப்புக்களையும் சுருக்கமாக கூறுமாறு கேட்கவும்.
மூன்றாம் கட்டம்:
பின்வரும் பிரச்சினைக்குரிய சந்தர்ப்பத்தை மாணவர்களுக்குக் கூறி, அதை உன்னிப்பாக கவனிக்குமாறு அவர்களைப் பணித்து, அது பற்றிய அவர்களின் கருத்துக்களைக் கேட்கவும். அவர்களது பதிலை தொடக்கப் புள்ளியாக எடுத்து, ஹதீஸின் அர்த்தங்களையும் அதன் வழிகாட்டல்களையும் தெளிவுபடுத்தவும்.
(அஹ்மத் ஒழுக்கமுள்ள திறமையான மாணவன். தொழுகையையும், நோன்பையும் பேணிவரும் அவன் உண்மை பேசக் கூடிய சிறுவன். ஆனால் ஒரு தடவை அவனுக்கு ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரு நாள் காற்பந்து விளையாடிய காரணத்தால் தாமதமாகி வீட்டிற்கு வந்தான். அவனின் தாமதித்திற்கான காரணத்தை தந்தை கேட்டபோது, பாடசாலையில் மேலதிக ஒரு பாடவேளை இருந்ததால் தாமதமாகியது எனக் கூறிவிட்டான். இது தனது வாழ்நாளில் அஹ்மத் கூறும் முதல் பொய்யாகும். இதற்காக அவன் கவலைப்பட்டான். அடுத்த நாள் அவனது நண்பன் ஹஸனை சந்தித்த போது நேற்று நடந்த சம்பவத்தைக் கூறி, இதற்கான பரிகாரத்தை செய்து விடயத் தான் விரும்புவதாகக் கூறினான். அதற்கு அவனின் நண்பன், "நீ மாபெரும் பாவம் ஒன்றை செய்துவிட்டாய். இதற்காக நீ விசேடமாக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறினான்.)
நான்காம் கட்டம்:
பின்வரும் சந்தர்ப்பத்தை மாணவர்களுக்குக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்கவும். தாம் கற்ற ஹதீஸின் அடிப்படையில் இது சரியா? அல்லது பிழையா? என்பதைக் கூறுமாறு கேட்கவும். அவர்கள் பதில்கள் தொடர்பாக விவாதித்து விட்டு, அந்த ஹதீஸ் உணர்த்தும் அடிப்படையில். சரியான பதிலை அவர்களுக்குத் தெளிவுபடுத்தவும்.
(நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவர் லஞ்சம், வட்டி போன்ற தடுக்கப்பட்ட விடயங்களில் ஈடுபடுகிறார். தான் தினந்தோறும் நேரத்திற்கு தொழுகையைப் பேணிவருவதும், வாராந்தம் ஜும்ஆவை நிறைவேற்றுவதும் இதற்கான பரிகாரங்களாகி விடும் எனக் கூறி தனது செயலை நியாயப்படுத்தவும் செய்கின்றார்.)
படிப்பினைகள்:
மாணவர்கள் முன்னிலையில் ஒரு பலகையை வைத்து, அந்த ஹதீஸ் உணர்த்தும் ஏதாவது ஒரு பயனைக் கண்டுபிடித்து எழுதுமாறு பணிக்கவும். பின்னர் தமது புத்தகத்தைத் திறந்து அதிலுள்ள வழிகாட்டல்கள், பயன்கள் என்பவற்றுடன் தாம் பலகையில் எழுதியவற்றை ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறவும்.
ஒப்படைகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் இருவர் சார்ந்தது, ஐநேரத் தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதன் அவசியத்தை தெளிவுபடுத்தல்.
நோக்கம் 4 -5
திறமையான ஒரு மாணவரைத் தேர்வு செய்து, ஒப்படையில் வந்துள்ள ஹதீஸை வாசிக்குமாறு கூறுக.
அதன் அர்த்தம் பற்றி விவாதித்த பின்னர், தமது பகுப்பாய்வு மற்றும் கண்டுபிடிப்புத் திறன்கள் ஊடாக, இந்த ஹதீஸிற்கும் பாடத்திலுள்ள ஹதீஸிற்கும் மத்தியில் இணைத்துப் பார்த்து, பெறமுடியுமான முக்கிய படிப்பினைகளை தெளிவான, சுருக்கமான வார்த்தைகளில் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பதற்கு இரண்டிரண்டு மாணவர்களை நியமித்தல்.
அவர்களில் மூன்று குழுக்களைத் தெரிவுசெய்து, தாம் புரிந்துகொண்ட படிப்பினைகளைக் கூறுமாறு பணித்து, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்த்து மிகத் துல்லியமான பதில்களை அடியாளப்படுத்தல். அவற்றைக் கூறியவருக்கு பொருத்தமான உற்சாகமூட்டலை வழங்கவும்.
ஒப்படை இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் குழுசார்ந்தது, ஒரு முஸ்லிமிடம் வணக்க வழிபாடுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை வரையறை செய்தல்.
நோக்கம் 3
இதற்காக மீன்தொட்டி குழு முயற்சி முறையைப் பயன்படுத்த வேண்டும். மீன் தொட்டி போன்ற வட்ட வடிவில் சில மாணவர்களை உட்காரவைத்து, மற்றையவர்களை வட்டத்திற்கு வெளியிலும் அமரச் செய்யவும்.
வட்டத்திற்கு உள்ளே இருக்கும் மாணவர்களிடம் ஒப்படையில் உள்ள இரு படங்களையும் காண்பித்து, வணக்க வழிபாடுகள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி புத்தாக்க முறையில் கலந்தாலோசிக்குமாறு கூறவும். அவர்கள் கூறும் கருத்துக்களை எழுதிக்கொள்ளவும். வட்டத்திற்கு வெளியில் இருக்கும் மாணவர்கள் இவற்றைக் கண்காணித்துக் கொண்டிருப்பர்.
பின்னர் வட்டத்தில் உள்ளவர்கள் இடம்மாறிக்கொள்ள வேண்டும். புதிதாக வட்டத்திற்கு உள்ளே வந்தவர்களிடம் அதே முறையைக் கையாள வேண்டும். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து தாம் கண்டடைந்த தாக்கங்கள் பற்றி விவாதிக்க வேண்டும். அவர்களது செயற்பாட்டில் ஆசிரியரும் கருத்துக்களைக் கூறி, துல்லியமான பதில்களைக் கண்டறியவேண்டும்.
ஒப்படை இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனித்தனியானது, அல்லது இரட்டையரானது, ஹதீஸைப் பலதடவைகள் கூறி, மனனமிடல்.
நோக்கம் 6
முதலில் தனித்தனியாக ஹதீஸைக் கூறி மனனம் செய்யுமாறு மாணவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். பின்னர் இருவர் இருவராக ஒன்றிணைத்து ஒருவர் மனனத்தில் ஹதீஸைக் கூற மற்றவர் அதை செவிமடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் சக நண்பரின் மனனம் பற்றிய தமது குறிப்புக்களைப் பதிவதன் மூலம், இருவரும் பயனடையலாம். மாணவர்கள் எவ்வாறு செய்கின்றார்கள் என்பதைப் பார்த்து, வழிகாட்டுவதற்காக ஆசிரியர் அவர்களிடம் செல்ல வேண்டும். பின்னர் ஒருவரைத் தெரிவு செய்து அனைவர் முன்னிலையிலும் ஹதீஸைக் கூற வைத்து அவரது மனனத்தைப் பரிசீலிக்கவேண்டும்.
மதிப்பீடுகள்:
பின்வரும் முறையில் மாணவர்களுக்கான மதிப்பீட்டுக் கேள்விகளை அமைத்துக்கொள்ளவும்:
முதலாம் கேள்விக்கு விடையளிக்க, மாணவர்களுக்கு அதன் ஒவ்வொரு வாசகத்தையும் தொடராக வாசித்துக் காட்டவும். விடை தெரிந்த மாணவர் கையை உயர்த்த வேண்டும். அவரின் விடையை மதிப்பீடு செய்து, சரியான விடையை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தவும்.
கேள்வி 1: ---
சில மாணவர்களைத் தெரிவு செய்து, இரண்டாம் கேள்வியின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவரை பதில்கூற வைக்கவேண்டும். அவர்கள் பிழை விடும் சந்தர்ப்பத்தில் புத்தகத்தை மீண்டும் வாசிக்கச் செய்து, தானாகவே சரியான விடையைக் கண்டுபிடிக்குமாறு கூறவும்.
கேள்வி 2: (அறிவைக் கற்பித்தல் - பாவங்கள் மன்னிக்கப்படும் - சிறிய பாவங்கள் - ரமழான் மாதம்)
மூன்றாம் கேள்விக்கு விடையளிக்க ஒரு மாணவரைத் தெரிவு செய்து ஹதீஸை முழுமையாக வெண்பலகையில் எழுதுமாறு பணிக்க வேண்டும். அவர் தவறு விடும் பட்சத்தில் மீண்டும் புத்தகத்தைப் பார்த்து, ஹதீஸை முழுமையாக எவ்வாறு எழுத வேண்டும் என்பதை பரீட்சிக்குமாறு கூறவும்.
நான்காம் கேள்விக்கு தனித்தனியாக பதிலளிக்குமாறு மாணவர்களைப் பணிக்கவும். அதில் சிலரைத் தேர்வு செய்து அவர்கள் எழுதிய விடையை வாசிக்குமாறு கூறவும். அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, மிகச் சரியான விடைகள் எவை என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தவும்.
தர்பியாவின் போது கவனிக்க வேண்டியவை:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஹதீஸில் கூறப்பட்டுள்ள வழிகாட்டல்களை தனது வணக்கங்களில் எடுத்துநடக்கவும், குறிப்பாக உரிய நேரத்தில் வணக்கங்களை நிறைவேற்றவும், நற்கருமங்களை செய்யவும், பெரும்பாவங்களைத் தவிர்க்கவும் மாணவரை ஊக்குவித்தல்.
அறிஞர்கள், இலத்திரணியல் கருவிகள், புத்தகங்கள் என பலதரப்பட்ட மூலங்களை நாடுமாறு மாணவர்களுக்குக் கூற வேண்டும். அவற்றின் மூலம் பாடத்தின் ஹதீஸ் வலியுறுத்தும் தொழுகையின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் மேலும் சில ஆதாரங்களை அறியச் செய்ய வேண்டும். தாம் பெற்ற ஆதாரங்களை ஒவ்வொருவரும் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளுமாறு பணிப்பதன் மூலம் நிறைய ஆதாரங்களை அறிந்துகொள்ளலாம்.
ஐந்தாம் பாடம்: அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் (நிரப்பியது - சாண் - முழம் - இருகை நீளம் அளவு - ஓடி வருதல்)
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - டிஜிட்டல் திரை - வெண்பலகை - ஸ்மார்ட் போர்ட் - கற்பித்தல் படங்கள் - ஃபிளாஷ் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(கல்விப் புதிர்கள் - தீர்வு காண் கற்பித்தல் - அபிநயம் - முக்கோண உரையாடல் உத்தி)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
1. நற்செயல்கள் செய்வதுடன் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல்.
2. இரகசியமாகவும், பகிரங்கமாகவும் அல்லாஹ்வை நினைவு கூரல்.
3. தன் படைப்பினங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள விசாலமான அருட்கொடைகளையும் சிறப்பசங்களையும் உணர்தல்.
4. வணக்க வழிபாடுகள் செய்யவும், அவற்றில் இஸ்திரமாக இருக்கவும் அழைப்புப் பணியில் ஈடுபடுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் வாக்கியத்தை வெண்பலகையில் எழுதவும். அதை வாசித்து, தெளிவுபடுத்துமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளவும். அவர்களின் விடைகளைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, ஹதீஸிற்கும், ஹதீஸுல் குத்ஸிக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்தவும்.
(இவை அல்லாஹ் கூறியதாக நபி ﷺ அவர்கள் அறிவிக்கும் செய்திகளாகும். இவை குர்ஆன் கிடையாது. அப்படியென்றால் இவை என்ன?)
பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு, அதை வெண்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
டிஜிட்டல் திரையின் மூலம் அல்லது ஸ்மார்ட் போர்ட் மூலம் ஹதீஸை மாணவர்களுக்கு காண்பித்து, வாசித்துக் காட்டவும். உங்களைத் தொடர்ந்து வாசிக்குமாறும் அவர்களைப் பணிக்கவும். அவர்களில் மூன்று பேரைத் தெரிவு செய்து சக நண்பர்களுக்கு பிழையின்றி சரியாக வாசித்துக் காட்டுமாறு கூறவும்.
இரண்டாம் கட்டம்:
அறிவிப்பாளரின் பெயர், வளர்ப்பு, ஹிஜ்ரத், சிறப்புகள், இறப்பு போன்றவற்றை நினைவுபடுத்திப் பார்க்குமாறு மாணவர்களைப் பணிக்கவும். அவர்களில் இருவரைத் தெரிவு செய்து அறிவிப்பாளர் பற்றித் தாம் அறிந்தவற்றை சுருக்கமாக கூறி, அவரிடமுள்ள, தமக்கு விருப்பமான, தாம் பின்பற்ற விரும்பும் முக்கிய சிறப்புக்களைக் கூறுமாறு பணிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
பின்வரும் சந்தர்ப்பத்தை மாணவர்களுக்குக் கூறவும். இது சிலர் சந்திக்க வாய்ப்புள்ள பிரச்சனையாகும். இதை உன்னிப்பாக கவனித்து, இது பற்றிய அவர்களின் கருத்தையும், இதன் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ற முறைமையையும் தெளிவுபடுத்துமாறு ஏவவும். அவர்களின் விடைகளின் ஊடாக ஹதீஸ் பற்றிய அறிமுகத்தையும், அதன் சொற்களுக்கான அர்த்தங்களையும், அது தரும் படிப்பினைகள் தொடர்பாகவும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தவும்.
(ஸஈத் பொய்ச்சாட்சி சொல்லிவிட்டார். ஆனாலும், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்ட அவர், அல்லாஹ்வை கோபமூட்டும் செயல்களிலிருந்து விடுபட வேண்டுமென முடிவு செய்தார். ஆனால் அல்லாஹ் தன்னை மன்னிக்க மாட்டான் எனவும், தனது பாவமன்னிப்பை ஏற்கமாட்டான் எனவும் உணர்கின்றார்.)
நான்காம் கட்டம்:
அடியான் அல்லாஹ்வை நினைகூரும் மற்றும் நெருங்கும் விதங்கள், அவனோடு அல்லாஹ் நடந்துகொள்ளும் முறைகள் போன்றவை தொடர்பாக ஹதீஸ் கூறும் விடயங்களை மாணவர்களுக்கு கவர்ச்சியான விதத்தில் வர்ணிக்க வேண்டும். அதன் போது, "ஷிப்ர், திராஉ, பாஉ" போன்றவற்றின் அர்த்தங்களை விளக்கும் விளக்கப் படங்களையும் காட்டவேண்டும்.
இவற்றை வர்ணித்து முடித்ததும், இரு மாணவர்களைத் தெரிவு செய்து, வர்ணனையின் போது தாம் உணர்ந்ததையும், அவற்றை அறிந்து கொண்ட பின்னர் தம் மீதுள்ள கடமைகளையும் கூறுமாறு பணிக்க வேண்டும்.
படிப்பினைகள்:
ஹதீஸின் ஒவ்வொரு படிப்பினையாகக் கூறுமாறு ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் பணிக்க வேண்டும். மாணவர்களின் பதில்களைப் பார்த்து, தானும் சில பயன்களை இணைத்துக் கூறவேண்டும். பின்பு ஹதீஸோடு தொடர்புபட்ட எல்லாப் பயன்களையும் ஒரு பலகையில் உள்ளடக்கி அவர்களுக்குக் காட்டவேண்டும்.
ஒப்படைகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் குழு சார்ந்தது, மரணிக்கும் போது அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதன் காரணத்தையும், அதற்கு துணைபோகக் கூடியவற்றையும் ஆராய வேண்டும்.
நோக்கம் 4
மாணவர்களை குழுக்களாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒப்படையில் உள்ள குர்ஆன், ஹதீஸைக் காண்பித்து, வாசித்துக் காட்ட வேண்டும். அதை வைத்து அடுத்துள்ள வினாக்களுக்கு விடை தேட வைக்க வேண்டும்.
இதன் போது முக்கோண உரையாடல் உத்தியைக் கையாழ வேண்டும். குழுவில் இருக்கும் ஒருவர் கேள்வியைக் கேட்க வேண்டும். இரண்டாமவர் அதை செவியேற்றுவிட்டு அதற்கான தெளிவான விடையை குறிப்புகளோடும், காரணங்களோடும் கூற வேண்டும். மூன்றாமவர் மற்றைய இருவரின் உரையாடலையும் எழுதி வைத்து, ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுக்களும் முன்வைக்கும் முறையை ஆசிரியர் கவனிப்பதுடன், அவர்கள் பெற்றுக்கொண்ட விடைகளையும் சேகரித்து, அனைவருக்கும் தக்க பின்னூட்டல்களை வழங்குவார். பின்னர் அவர்களோடு இணைந்து மிகச் சரியான விடைகளைக் கண்டெடுத்து, சிறப்பாக செயற்பட்ட குழுவைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒப்படை இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனித்தனியானது/குழுவானது, சில சந்தர்ப்பங்களை விளக்கி, அவற்றில் அல்லாஹ்வின் மீது கொள்ள வேண்டிய நல்லெண்ணம் தொடர்பாக கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
நோக்கம் 4 - 5
ஒப்படையில் உள்ள சந்தர்ப்பங்களை பல அட்டைகளில் எழுதிக்கொள்ள வேண்டும். அவற்றை எழுமாறாக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வாசித்துக் காண்பிக்க வேண்டும். தமக்கு வழங்கப்பட்டுள்ள அட்டையில் உள்ள சந்தர்ப்பத்தை மாணவர்கள் அறிந்துகொண்டு தமது கருத்துக்களை காரணத்தோடு கூற வேண்டும். பின்னர் குறிப்பிட்ட சந்தர்ப்பத்துடன் தொடர்புபட்ட அனைத்து விடைகளையும் இணைத்துப் பார்த்து, துல்லியமான விடையைத் தெரிவுசெய்யவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் செய்ய வேண்டும்.
ஒப்படை இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனித்தனியானது, தொடர்ந்து பேணி வரவேண்டிய வணக்கங்களைக் கூறுமாறு மாணவர்களைப் பணிக்கவும்.
நோக்கம் 3 - 5
ஒவ்வொரு மாணவரிடமும் மேலதிக தாள் ஒன்றில் நன்மையை வேண்டி, தாம் தொடர்ந்து செய்யும் 3 வணக்கங்களை எழுதுமாறு பணிக்கவும். அவர்களின் தாள்களை சேகரித்து, மதிப்பீடு செய்து, அனைவரும் செய்யும் பொதுவான வணக்கம் எது என்பதைக் கண்டறியவும். அவற்றையும், அது தவிர்ந்த ஏனைய வணக்கங்களையும் தொடர்ந்து செய்யுமாறு அவர்களை உற்சாகமூட்ட வேண்டும்.
மதிப்பீடுகள்:
பின்வரும் முறையில் மாணவர்களின் மதிப்பீட்டுக் கேள்வியை அமைத்துக்கொள்ளவும்:
முதலாம், இரண்டாம் கேள்விகளுக்கு விடையளிக்க: கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை மாணவர்களுக்கு வாசிக்கவும். அதற்கான விடையை அவர்களிடம் கூறச் சொல்லி, ஏனையோருக்கு மதிப்பீடு செய்யுமாறு கூறவும்.
கேள்வி 1: (√), (√), (x)
கேள்வி 2: (அல்லாஹ் - மலக்குகள் - மரணம்)
மூன்றாவது கேள்விக்கு வெண்பலகையில் விடையளிப்பதற்காக ஒரு மாணவரைத் தெரிவு செய்யவும். அவர் தவறு விடும் பட்சத்தில் புத்தகத்தில் உள்ள ஹதீஸை மீண்டும் வாசித்து, சரியாக எழுதும் முறையை அறிந்தபின்னர் மீண்டும் எழுதுமாறு கூற வேண்டும்.
நான்காம் கேள்விக்கு தனித்தனியாக பதிலளிக்குமாறு மாணவர்களைப் பணிக்கவும். அதில் சிலரைத் தேர்வு செய்து அவர்கள் எழுதிய விடையை வாசிக்குமாறு கூறவும். அவற்றில் சரியான விடைகள் எவை என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தவும்.
தர்பியாவின் போது கவனிக்க வேண்டியவை:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டலை நடைமுறைப்படுத்துமாறு மாணவர்களுக்கு ஆசையூட்ட வேண்டும். குறிப்பாக நல்ல செயல்களைச் செய்து அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல், அவனை நெருங்கி, கூலியையும், நன்மைகளையும் பெற்றிட அவனை சரிவர வணங்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துமாறு கூற வேண்டும்.
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதற்கு முரண்பாடான நடத்தைகளைப் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் ஒவ்வொரு மாணவரும் தன் குடும்பத்தாருடன் காலந்தாலோசிப்பதுடன், அது பற்றிய அறிவூட்டலையும் வழிகாட்டலையும் எவ்வாறு வழங்கலாம் என்பதையும் சிந்திக்கவேண்டும்.
ஆறாம் பாடம்: அல்லாஹ்வின் நிழலைப் பெறும் ஏழு பேர்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் (தனது நிழல் - அழைத்தாள் - கண்கள் கண்ணீர் சிந்தின)
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - டிஜிட்டல் திரை - வெண்பலகை - ஃபளாஷ் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(முன்னுரை வழங்கல் முறை - சொற்பொருள் வரைபடம் - கூட்டாக கற்றல்)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
1. வணக்கவாளிகளை அல்லாஹ் சிறப்பிப்பான் எனவும், மறுமையில் ஏனைய படைப்பினங்களுக்கு முன்னால் அவர்களை கண்ணியப்படுத்துவான் எனவும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
2. மறுமையின் பயங்கரத் தன்மையை குறைக்கும் விதமான அமல்கள் மூலம் முஃமின்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளதை உணர்தல்.
3. வாலிபப் பருவத்தை அல்லாஹ்வை வணங்குவதில் செலவழிக்குமாறு ஆசையூட்டல்.
4. தர்மம் செய்வதிலும், சமூகப் பணிகள் செய்வதிலும் உளத்தூய்மையைப் பேணுவது சிறந்ததாகும்.
5. மறுமையின் மகத்தான நற்கூலிகளை எதிர்பார்த்து, தடுக்கப்பட்ட ஆசைகளை விட்டும் தவிர்ந்திருத்தல்.
பாடத்தின் அறிமுகம்:
இதற்காக ஆக்க முன்னறிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்களிடம் பின்வரும் சந்தர்ப்பத்தைக் கூறி, அதை அடுத்து வரும் வினாக்களையும் கேட்க வேண்டும். அவர்களின் விடைகளைக் கேட்டு, அவற்றில் வேறுபட்டவற்றை வெண்பலகையில் எழுதிவைத்துவிட்டு, பாடத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமெனக் கூற வேண்டும். அப்போது தான் அவர்களாகவே சரியான விடைகளைக் கண்டுபிடிக்கலாம்.
(முஹம்மத் ஐநேரத் தொழுகைகளையும் பள்ளிக்குச் சென்று தொழுது வருவதில் ஆர்வம் உள்ளவர். ஊரில் உள்ள ஏழைகளுக்கு தர்மங்களை பகிர்ந்தளிப்பதில் உதவி செய்பவர். இதனால் பள்ளி இமாம் இவரைப் பார்த்து, "நல்ல செயல் முஹம்மத், மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலை உனக்கு வழங்குமாறு நான் அவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறினார். அதற்கு முஹம்மத், "ஷேக், இதன் அர்த்தம் என்ன? அர்ஷ் என்றால் என்ன?" என கேள்வி கேட்டான்)
வெண்பலகையில் பாடத்தின் தலைப்பை எழுத வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
ஹதீஸை பார்த்து, அமைதியாக மனதுக்குள் வாசிக்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் திரையில் ஹதீஸைக் காண்பித்து, அவர்களுக்கு வாசித்துக் காண்பிக்க வேண்டும். அதில் உள்ள கடினமான சொற்களைக் கண்டறிந்து, அவற்றின் அர்த்தங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஏனையோருக்கு முன் சரியான முறையில் வாசிப்பதற்காக ஒரு மாணவரைத் தெரிவு செய்ய வேண்டும். அவரது வாசிப்பில் தவறிருப்பின் திருத்திக்கொடுக்கவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
(பெயர், புனைப் பெயர், வாழ்வு, சிறப்புகள், இறப்பு) போன்ற குறிப்புகளைப் பயன்படுத்தி ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றிய தெளிவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மாணவர் ஒருவரைத் தெரிவு செய்து, ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றி தனது பாணியில் கூறுமாறு பணிக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
சொற்பொருள் வரை பட முறையை உபயோகித்து, ஆசிரியர் ஹதீஸை விளங்கப்படுத்த வேண்டும்.
பாடத்தின் பிரதான கருப்பொருளை உள்ளடக்கிய தெளிவொன்றை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதில் மாணவர்களுடன் பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்க வேண்டும்: (மறுமையில் அல்லாஹ்வுடைய நிழலைப் பெறுபவர்கள்)
மேலுள்ள சிந்தனையை மாணவர்களுக்கு வழங்கி, ஹதீஸோடு இதற்கு உள்ள தொடர்பையும் தெளிவுபடுத்துவதோடு, மாணவர்கள் அறிந்து கொள்ளவும், விளங்கிக் கொள்ளவும் விரும்பும் கேள்விகளை வரவேற்கவேண்டும்.
நான்காம் கட்டம்:
இதற்காக குழு முயற்சியைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவும் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைப் பெறும் ஏழு கூட்டத்தாரின் செயல்களையும், அவர்களின் பண்புகளையும் கண்டெடுக்கவேண்டும். அதிகமான பல்வகைப்பட்ட பதில்களை வழங்க மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு குழுத் தலைவரும் தனது குழுவின் முடிவுகளை வாசிக்க வேண்டும். ஆசிரியர் பொருத்தமான வலுவூட்டலை வழங்குவார். ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுக்களின் பதில்களில் இருந்து அறிந்துகொண்டவற்றைக் கொண்டு தமது பதில்களை முழுமைப் படுத்திக்கொள்ளவேண்டும்.
படிப்பினைகள்:
சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒவ்வொருவரும் ஹதீஸிலிருந்து கற்றுக்கொண்ட வழிகாட்டல்கள் மற்றும் பலன்களில் ஒன்றைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் கூறவும், அதைத் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கூறுமாறும் பணிக்கவும். பின்னர் அவர்களுக்கு பொருத்தமான கருத்துக்களை வழங்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பண்புகளுக்கு இடையில் தொடர்புபடுத்த மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 3
பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கிய கற்பித்தல் அட்டையை ஒவ்வொரு மாணவருக்கும் விநியோகித்து, அவர்கள் விடையளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைத் திருத்தவும். சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களிடம் அவற்றை முன்வைத்து விளக்கவும்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, அல்லாஹ்வுக்காக நேசிப்பதன் சிறப்பை விளக்குதல்.
நோக்க இலக்கம் 2, 3
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஹதீஸைத் திரும்பத் திரும்ப வாசிக்க ஒரு குழுவையும், மற்ற குழுவை செயற்பாடுகளுக்கு வாய்மூலம் பதிலளிக்கவும் சாட்டவும். இரு குழுக்களையும் நீர் நேரடியாகப் பின்தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்கவும்.
பின்னர் இரண்டு குழுக்களும் பணிகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும், இரண்டாவது குழு மனப்பாடம் செய்ய, முதல் குழு அவற்றைத் திருத்த வேண்டும். ஆசிரியர் பின்தொடர்ந்து அவர்களை வழிநடத்த வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க, பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்:
"ஆம்" என்ற வார்த்தையைக் கொண்ட சில அட்டைகளையும், "இல்லை" என்ற வார்த்தையைக் கொண்டுள்ள சில அட்டைகளையும் மாணவர்களுக்கு விநியோகிக்கவும். பின்னர் முதல் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களை தொடராக முன்வைத்து, அவ்வாசகத்திற்கு பொருத்தமான அட்டையை உயர்த்த வைக்கவேண்டும். தவறு செய்த மாணவர்களை அடையாளம் கண்டு அதுபற்றி அவர்களுடன் விவாதிக்கவும்.
நான்கு மாணவர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொருவரையும் இரண்டாவது கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு கூறுகளுக்கும் பதிலளிக்குமாறு கூறவும். அவர்களில் யாராவது தவறு செய்தால், புத்தகத்திலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்கும்படி அவர்களை வழிநடத்தவும்.
ஒவ்வொரு மாணவரும் மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க வேண்டும். சிலரைத் தேர்வு செய்து, தமது பதில்களை வாசிக்க வைக்கவும். ஏனைய மாணவர்கள் அவற்றை மதிப்பீடு செய்து, பிழை ஏற்பட்டால் சரியான பதிலைச் சொல்ல வேண்டும்.
கே 1 : (ஆம்) - (இல்லை) - (இல்லை) (ஆம்) - (இல்லை)
கே 2 : நீதிபதிகள் - கற்பொழுக்கம் - அல்லாஹ்வின் மீதான பயம்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வரும் விதத்தில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்:
வாழ்வை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் கழிப்பதில் பயன்படுத்திக் கொள்ளல், பாடத்தில் முன்வைக்கப்பட்ட வழிமுறைகளை அதற்குத் துணையாக எடுத்துக் கொள்ளல், அறிஞர்களிடம் ஆலோசனை பெறுவதுடன் தனியாக, கூட்டாகவோ அவற்றை அமுல்படுத்த முயற்சித்தல் போன்றவற்றுக்கு வழிகாட்டுதல்.
இஸ்லாமிய சட்டதிட்டங்கள்:
முதல் பாடம் : சுத்தம் மற்றும் வுழூ செய்யும் முறை
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (பெருந்தொடக்கு - சிறுதொடக்கு - பாதி).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கதை கூறும் முறை - முன்னுரை வழங்கல் முறை - கண்டுபிடிப்பு முறை - நடிப்பு முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
சுத்தம் மற்றும் வுழூவின் சிறப்பை உணர்த்தல்
முஸ்லிமின் வாழ்வில் சுத்தத்தின் அவசியத்தை உணர்தல்.
அசுத்தத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்தையும் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை அவர்கள் முன் வழங்குவதன் மூலம் நீங்கள் பாடத்தைத் துவக்கலாம். (இப்ராஹிம் மூன்று வயதுடைய தனது மகனின் சிறுநீரால் அசுத்தமாகிவிட்ட ஆடையுடன் தொழுதார். அவருடைய தொழுகையின் தீர்ப்பு என்ன?)
பின்னர் நீங்கள் அவர்களின் பதில்களைப் பற்றி விவாதித்து, அதனூடாக பாடத்தின் தலைப்பிற்கு வாருங்கள், பின்னர் அதை பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
முன்னுரை வழங்கல் முறை (பழைய தகவல்களை புதிய தகவல்களுடன் தொடர்புபடுத்தும் திறன்) மூலம் பாடத்தின் துணைக் கூறுகளைக் கொண்ட அமைப்பை உள்ளடக்கிய வரைபடத்தை நீங்கள் கணினியில் மாணவர்களுக்குக் காட்டலாம்.
வரைபடத்தை நன்கு அவதானித்து அவற்றுக்குப் பொருத்தமான தலைப்பிடுமாறு வேண்டுங்கள்.
முன்னுரை வழங்கல் முறை முன்வைக்கும் வுழூவின் செயற்பாடுகள் பற்றி மாணவர்களிடமுள்ள பழைய தகவல்களைக் கேட்டறிந்து, அச்செயல் ஒழுங்கு முறையில் யாராவது தவறிழைத்துள்ளாரா? என்ன செய்துள்ளார்? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
கண்டுபிடிப்பு முறையின் உதவி மூலம் பின்வரும் வசனங்களை முன்வைத்து, பொருத்தமானதை வைத்து அவற்றைப் பூரணப்படுத்துமாறு வேண்டுங்கள்.
அவர்களின் பதில்களை அறிந்த பிறகு, தூய்மையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் அவர்களுக்கு விளக்கவும்:
சுகாதார மற்றும் சமூக நலன்கள் அதில் உள்ளதால் இஸ்லாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் அதைக் கோருகிறது. மற்றும் தொழுகை செல்லுபடியாக இரு நிபந்தனைகளை விதித்துள்ளது. அது என்ன?
குற்றப்பரிகாரமாகவும், ஈமானின் பாதியாகவும் அது உள்ளது. அது என்ன?
முழு உடலையும் கழுவுவதன் (குளிப்பு) மூலமும் வுழூச் செய்வதன் மூலமும் அது நிகழும். அது என்ன?
மூன்றாம் கட்டம்:
செய்துகாட்டல் முறையின் உதவியுடன் வுழூவின் செயல்முறைகளை ஒரு மாணவர் செய்து காட்ட வேண்டும். அதனை ஏனைய மாணவர்கள் பின்தொடர்ந்து நெறிப்படுத்த வேண்டும்.
பின் அவற்றில் நிகழ்ந்த தவறுகளை எடுத்துக் காட்டி அனைத்திற்கும் ஆசிரியர் கருத்துரை வழங்குவார். பின்னர் அவர் செய்துகாட்டல் முறை எதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதன் சுருக்கத்தை, (வுழூவின் சரியான முறை) உள்ளடக்கிய ஒரு ஓவியத்தின் மூலம் முன்வைக்க வேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்திலிருந்து தாம் பெற்ற பயன்களை எழுதும் படி ஆசிரியர் மாணவர்களிடம் கோர வேண்டும்.
அவர்கள் எழுதியதை அல்குர்ஆன் வசனம், நபிமொழிகளைக் கொண்டு வலுப்படுத்த வேண்டும். பின்னர் ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து எழுதப்பட்டதைப் படித்து, அவற்றில் சரியானதையும் அவர்கள் உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டதையும் உறுதிசெய்ய கருத்து தெரிவிக்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, வுழூ செய்ய விரும்பத்தக்க சந்தர்ப்பங்களை ஆராய்தல்.
நோக்க இலக்கம் 2
முதல் செயல்பாட்டின் இரண்டு கேள்விகளையும் வாசிக்க மாணவர்களில் ஒருவரை ஆசிரியர் தேர்வு செய்யலாம்.
அவற்றின் அர்த்தத்தையும் படிப்பினைகளையும் அவர்களுடன் விவாதித்து, பின்னர் மாணவர்களை இருவர் இருவாராக நியமித்துஅவற்றுக்கு பதிலளிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
தனது குழுவின் பதிலை வழங்க ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவரைத் தேர்வு செய்து, எது சரியானது என்பதைத் தீர்மானிக்க பதில்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
(தொழுகைக்கு முன் - குர்ஆனைத் தொட முன்)
(அல்லாஹ்வை நினைவுகூரும் போது - தூங்கும் போது)
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, சரியான வுழூ முறையைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 4
ஆசிரியர் செயல்பாட்டின் சொற்றொடர்களை சில அட்டைகளில் எழுத வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் எழுமாறியாக அட்டைகளில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.
அட்டையில் உள்ளதை தெளிவான உரத்த குரலில் சக மாணவர்களுக்கு வாசிக்க வேண்டும்.
வசனத்தை விளக்கி, சரியான வுழூ முறையை அதிலிருந்து எடுக்க வேண்டும்.
சரியான விடையை அறிவதற்காக சக நண்பர்களுக்கு அதனை மதிப்பிட வாய்ப்பளிக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, வசனங்களுக்கு இடையில் தொடர்புபடுத்த பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 3
பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கிய கற்பித்தல் அட்டையை ஒவ்வொரு மாணவருக்கும் விநியோகிக்கவும். அவர்கள் விடையளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிபார்க்கவும். பின்பு, அவற்றில் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களிடத்தில் அவற்றை முன்வைத்து விளக்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
வினாக்களுக்கு கொப்பிகளில் பதிலளிக்குமாறு மாணவர்களிடம் வேண்டுங்கள்.
கொப்பிகளை மாணவர்களிடமிருந்து சேர்த்து, வாய்மூலம் பதிலளிக்க அக்கேள்விகளை அவர்களுக்கு முன்வையுங்கள்.
அவர்களுக்கு தகுந்த வலுவூட்டலை வழங்கவும். பின்னர் கொப்பிகளை சரிசெய்து ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான மதிப்பெண்ணை வழங்கவும்.
கே 1 : - - - .
கே 2 : வுழூவின் செயல்கள் ஒழுங்குமுறை முகத்தை கழுவுதல் 5 வாய் கொப்பளித்தல் 3 முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல் 6 மூக்கினுள் நீர் செலுத்தி, சிந்தி விடுதல் 4 இரு காதுகளையும் நீரினால் தடவுதல் 8 இரு பாதங்களையும் கழுவுதல் 9 தலையில் நீரினால் தடவுதல் 7 கைகளை மணிக்கட்டு வரையில் கழுவுதல் . 2 நிய்யத் வைத்து, பிஸ்மில்லாஹ் என்று கூறுதல் 1
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்விலும் உறவாடல்களிலும் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரிடமும் தாம் கற்றுக்கொண்ட மிக முக்கியமான சட்ட திட்டங்களைச் சுருக்கமாகக் கூறவும், அதனை அவரது குடும்பத்தினருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கேட்டுக்கொள்வது நல்லது.
தயம்மும் மற்றும் திரைகளில் மஸ்ஹு செய்தல்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (தயம்மும் - இரு பாதணிகள் - பெண்டேஜ்)
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கதை கூறும் முறை - வினாக்களைத் தொடுத்தல் - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
சலுகையுடையோருக்கு மார்க்க சட்டம் இலகுபடுத்தப்பட்டிருப்பதை உணர்த்துதல்
முஸ்லிமின் வாழ்வில் நீரின் அவசியத்தை உணர்தல்.
இஸ்லத்தின் மகத்துவத்தையும், தூய்மையின்பால் அது அழைப்பதையும் உணர்தல்
அசுத்தத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்தையும் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
கற்பித்தல் அட்டையில் பின்வரும் இரண்டு மாதிரிகளை மாணவர்களுக்குக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் பாடத்தை அறிமுகப்படுத்தலாம்:
(கடங்குளிர் காலநிலையில், இப்ராஹிம் வுழூவின் போது தனது காலுறை (சாக்ஸ்) இல் மஸ்ஹு (நீரினால் தடவுதல்) செய்வதுடன் போதுமாக்கிக் கொள்கின்றார்).
(முஹம்மதின் கை உடைந்ததால், மருத்துவரிடம் சென்றார். அவர் தோலில் தண்ணீர் படாமல் தடுக்கும் ஒரு வலுவான பொருளைக் கொண்டு கைக்குக் கட்டிட்டார். எனவே அவர் வுழூச் செய்ய விரும்பும் போதெல்லாம், அதன் மீது நீரினால் தடவுகின்றார்). முதல் உதாரணத்தில் இப்ராஹீம் என்ன செய்தார் என்றும், இரண்டாவது உதாரணத்தில் இந்த பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்றும் அவர்களிடம் கேட்டு, அவ்வாறு மஸ்ஹு செய்வதன் சட்டத்தையும் கேட்க வேண்டும். பின் அதனூடாக பாட உள்ளடக்கத்திற்க்குச் சென்று, தலைப்பை கரும்பலகையில் எழுத வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
மாணவர்களை பாடத்தைப் பிரட்டி, அதன் கூறுகள் மற்றும் உள்ளடக்கத்தை அறிய வழிகாட்டவும். பின்னர் பாடத்தின் உள்ளடக்கத்தின் மூலம் பதிலளிக்கக்கூடிய கேள்விகளைக் கூட்டாகக் கேட்க அவர்களில் இருவரை நியமிக்கவும்.
மாணவர்களின் கேள்விகளைப் பெற்று, அவற்றை மீள்வடிவமைத்து, அவர்களுக்கு முன்னால் ஒரு பலகையில் எழுதி, பதில்களை விளக்கவும்.
இந்தக் கேள்விகளுடன் பின்வருவன போன்ற வேறு சில கேள்விகளையும் இணைத்துவிடலாம்
கே : தயம்மும் என்றால் என்ன?
கே : ஒரு முஸ்லிம் தயம்மும் செய்வதை அனுமதிக்கும் காரணிகள் யாவை?
கே : தயம்மும் செய்வதன் சரியான முறையை விளக்கவும்.
கே : வுழூவின் போது பாதணிகள் மற்றும் பெண்டேஜ்களை கழுவுவதற்கு பதிலாக, சில நிபந்தனைகளின் கீழ் அவற்றின் மீது மஸ்ஹு செய்ய புனித ஷரீஅத் சட்டம் அனுமதிக்கிறது. இதை விளக்குங்கள்.
இரண்டாம் கட்டம்:
முன்னைய வினாக்களை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி விளக்கவும்.
இதைச் செய்ய, நீங்கள் ஒரு காட்சித் திரையைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் (தயம்மும் - பாதணி மற்றும் பெண்டேஜ் மீது மஸ்ஹு செய்தல்) ஆகிய மூன்று சலுகைகளில் ஒவ்வொன்றும் தொடராக காட்டப்பட வேண்டும்.
இச்சலுகைகளுக்கான ஆதாரங்களைக் காட்டும் விளக்கப் படங்களைக் காண்பித்தல். ஒவ்வொரு சலுகையையும் காண்பிக்கும் போது அவற்றுடன் தொடர்பான குர்ஆன், ஸுன்னா ஆதாரங்களையும் கூறி தெளிவுபடுத்தி விளக்க வேண்டும்.
அவ்வாதாரங்கள் அறிவிக்கும் விடயங்களைத் தெளிவுபடுத்தி, இஸ்லாமிய சட்டதிட்டங்களுடன் அவற்றைத் தொடர்புபடுத்த மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரண முறைகளை ஆசிரியர் துணைக்குப் பயன்படுத்தலாம்.
மாணவர்களுக்கு பின்வரும் நிலைப்பாடுகளை முன்வைத்து, தயம்மம் மற்றும் திரைகளில் மஸ்ஹு செய்தல் தொடர்பான பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுடன் இவை எந்தளவு முரண்படவோ, உடன்படவோ செய்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துமாறு கேட்கவும்:
தயம்மும் என்பது நிலத்தில் இரு கைகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்துதல் என ஒருவர் நினைக்கின்றார்.
சலுகையுடையோருக்கு இலகுபடுத்துவதற்காக தயம்மும் என்ற இச்சலுகையை எடுப்பது கட்டாயம் என ஒருவர் உபதேசிக்கின்றார்
மக்கள் வழமையாக்கிக் கொள்ளாதிருக்க, சிலர் பாதணிகளில் மஸ்ஹு செய்வதை மறுக்கின்றனர்.
மஸ்ஹு செய்ய அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டாமலிருக்கும் வரை பாதணியுடன் ஒரு மனிதனுக்குத் தொழலாம்.
பெண்டேஜ் கட்டப்பட்டுள்ளதால் அவர் வுழூ செய்யவேண்டியதில்லை என்றொரு நியாயத்தைக் கூறி, பெண்டேஜில் மஸ்ஹு செய்ய முடியாது என ஒருவர் கூறுகின்றார்.
இறுதிச் சுருக்கம் :
தலைப்புக்கள் ஊடாகப் பாடத்தைப் பற்றி மாணவர்கள் என்ன எதிர்பார்த்திருந்தார்கள் என்பதை மீட்டிப் பார்க்குமாறு ஆசிரியர் அறிவுறுத்த வேண்டும்.
பிரதான கூறுகளை பாடம் எந்தளவு பூர்த்தி செய்துள்ளது? குறிப்பிடப்பட்டதைத் தவிர வேறு என்ன புதிய தலைப்புகள் மற்றும் கூறுகளைக் கற்றுக்கொண்டார்கள்? என்பவை பற்றிய சுருக்கமாகாகக் கருத்து தெரிவிக்க வேண்டும்.
தயம்மம் மற்றும் திரைகளில் மஸ்ஹு செய்தல் ஆகியவை தொடர்பாக தாம் புரிந்துகொண்ட ஒரு படிப்பினையை சுருக்கமாகக் கூற சில மாணவர்களை ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, இரு விடயங்களுக்கு மத்தியில் உன்னிப்பாக அவதானித்து, வேறு பிரிப்பதற்கு மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 3
மாணவர்கள் செயல்பாட்டு கொப்பியைத் திறக்குமாறு ஆசிரியர் பணித்து, அதனை வாசிக்க ஒரு மாணவரைத் தெரிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தங்கள் குறிப்பேட்டில் உள்ள செயல்பாட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேளுங்கள்.
அவர்களில் சிலரைத் தெரிவு செய்து, தங்கள் பதில்களை வாய்மொழியாக முன்வைக்குமாறு கூறி, அவற்றைப் பற்றி விவாதிக்கவும். சரியான காரணத்தைத் தெளிவுபடுத்தி வெளிப்படையான பதிலை வழங்கும் மாணவர்களைப் பாராட்டவும்
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, பாதணிகளில் மஸ்ஹு செய்ய மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 3
செயல்பாட்டிலுள்ள நபிமொழியை மாணவர்களுக்குக் காண்பித்து, வாசிக்க வைக்கவும், பின் அச்செயல்பாட்டிற்கான விடையை தேடுமாறு ஒவ்வொரு மாணவரையும் பணிக்கவும். பின்னர், அவர்கள் எழுதியதை அவர்களுடன் கலந்துரையாடி, சரியான விடையின்பால் அவர்களைக் கொண்டு செல்லவும். பின்னர், விடையைக் கரும்பலகையில் எழுதி, தங்களது கொப்பிகளில் அதனை எழுதிக் கொள்ளுமாறு கூறவும்.
செயல்பாடு 2 : பயணிக்கு மூன்று நாட்களும், ஊரிலிருப்பவருக்கு ஒரு நாளும் அவகாசமுண்டு.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, பாதணிகள் மற்றும் பெண்டேஜில் மஸ்ஹு செய்வதை செயன்முறையில் செய்து காட்டுதல்
நோக்க இலக்கம் 4
மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் அதன் உறுப்பினர்களிடமிருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முன்னால் பாதணிகள் மற்றும் பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்யும் முறைகளை செய்து காட்ட வேண்டும்.
ஒவ்வொரு குழுவையும் மதிப்பீடு செய்ய வேண்டும். சிறந்த முறையில் செய்துகாட்டும் குழுவே வெற்றி பெற்ற குழுவாகும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
மாணவர்களிடம் முதல் கேள்வியைக் கேளுங்கள், அவர்களில் ஐவரை எழுமாறியாகத் தேர்ந்தெடுத்து, கேள்வியின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பதிலளிக்கச் செய்யுங்கள். அதேநேரம், சகநண்பர்கள் இவர்களைக் கவனித்து மதிப்பிடுவார்கள்.
கே1 : - - -
இரண்டாவது வினாவுக்கு விடையளிக்க மும்மூவராக தமக்கிடையில் ஒத்துழைக்க வேண்டும். அதனை மதிப்பீடு செய்ய ஒவ்வொரு குழுவும் பிற குழுவுடன் விடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து குழுவில் கண்ட தவறுகளை முன்வைக்க ஒவ்வொரு குழுவுக்கும் ஆசிரியர் வாய்ப்பளிக்க வேண்டும். பின் சரியான விடையை அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
மாணவர்களுக்கு மூன்றாம் வினாவை முன்வைத்து, அதற்கு விடையளிக்க மூவரைத் தேர்வு செய்யவும், அவர்கள் தவறு செய்து, ஒப்பீட்டைக் குறிப்பிட முடியாமல் இருக்கும் பட்சத்தில், பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து சுயமாக அதைப் பிரித்தெடுக்க அவர்களை வழிநடத்துங்கள்.
இரண்டு மாணவர்கள் நான்காவது கேள்விக்கு பதிலளிக்கத் தேர்ந்தெடுக்கவும். தமது சக நண்பர்களின் பதிலை மதிப்பீடு செய்ய மேலும் இருவரைத் தேர்வுசெய்யவும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
தர்பியாவின் போது கவணிக்க வேண்டியவை:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நடைமுறையில் தயம்முமை செயற்படுத்துவது பற்றி தெளிவடையும் நோக்கில், ஒவ்வொரு மாணவரும் தயம்மும் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்களை ஆராயவேண்டும். அவர்கள் ஏதாவது தவறான நடைமுறைகளைக் காணும் பட்சத்தில், சரியான விதிகளை செயல்படுத்துவதற்கான வழிகளைத் தேடலாம். உதாரணமாக : சமூக ஊடகப் பக்கங்களில் வழிகாட்டல்களை எழுதுதல், அல்லது மஸ்ஜிதின் இமாமிடம் தயம்மும், திரைகளில் மஸ்ஹு செய்தல் பற்றிய விளக்கத்தையும், அதன் நிபந்தனைகள் மற்றும் செயன்முறை பற்றியும் பேசச் சொல்லுதல்.
பாதணிகளில் மஸ்ஹு செய்வதற்கும், பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்வதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு உணர்த்துதல்.
மூன்றாம் பாடம் : குளித்தல்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (குளித்தல் - மாதவிடாய் - பிரசவ இரத்தம் - விந்து).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(பிரசினங்களை தீர்க்கும் முறை - "நான் அறிவேன் - நான் அறிய விரும்புகிறேன் - நான் அறிந்து கொண்டேன்" (K.W.L) என்ற உத்தி - கருத்துதிர்ப்பு முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
மார்க்கம் தூய்மையில் கவனம் செலுத்தியுள்ளதை உணர்த்துதல்
எப்போதும் சுத்தமாக இருக்க அக்கறை கொள்ளல்.
அசுத்தத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்தையும் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
மாணவர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டு பாடத்தைத் தொடங்கலாம்: "ஒருவரை அசுத்தமாக, துர்நாற்றம் வீசும் நிலையில் நீங்கள் கண்டால் எப்படி உணருவீர்கள்? இதனால் நீங்கள் நோவினைப்படுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாம் ஒரு முஸ்லிமின் சுத்தம் மற்றும் தூய்மையின் மீதும் ஏனையோரை தொந்தரவு செய்யாமல் இருப்பதிலும் அக்கறை கொண்டுள்ளதால், குளிப்பதை மார்க்கமாக்கியுள்ளது. குளிப்பு என்றால் என்ன? அதன் சட்டங்கள் என்ன? இதைத்தான் எங்கள் பாடத்தில் நாங்கள் கற்றுக்கொள்கிறோம்'' என்று கூறிவிட்டு, பின்னர் பலகையில் தலைப்பை எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
"நான் அறிவேன் - நான் அறிய விரும்புகிறேன் - நான் அறிந்து கொண்டேன் " என்ற உத்தியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
தனது கொப்பியின் ஒரு பக்கத்தை மூன்றாகப் பிரிக்குமாறு ஒவ்வொரு மாணவருக்கும் பணியுங்கள்.
முதல் பகுதியில் குளிப்பின் வரைவிலக்கணம் மற்றும் அதற்குரிய சந்தர்ப்பங்கள் ஆகியவற்றில் தமக்குத் தெரிந்தவற்றை எழுத வேண்டும். இரண்டாவது பகுதியில் குளிப்பின் அவசியம் பற்றி தான் அறிய விரும்புவதை எழுத வேண்டும். மூன்றாம் பகுதியை வெறுமையாக விட வேண்டும்.
இது பற்றி தாம் முன்கூட்டியே அறிந்தவற்றையும், பாடத்திலிருந்து தாம் அறிய விரும்புவதையும் முன்வைக்க சில மாணவர்களைத் தேர்வு செய்யவும். அவை பற்றிய கருத்துக்களை வழங்கி, அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை தெளிவுபடுத்தவும்.
பாடத்தின் பிரதான கூறுகளை அவர்களுக்கு முன்வைத்து, அவற்றை கூர்ந்து நோக்கவும், தாம் எழுதிவைத்துள்ளவற்றுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும் வையுங்கள்.
இரண்டாம் கட்டம்:
சில மாணவர்களைத் தேர்வுசெய்து, தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு பாடத்தை உரக்கப் படிக்க வைப்பது சிறந்தது.
ஒவ்வொரு பந்தியையும் வாசித்து முடித்த பிறகு, அதில் உள்ள கடினமான வார்த்தைகளின் அர்த்தங்களின் விளக்கத்துடன் அது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவைும் குளிப்பு முறை மற்றும் வகைகளை தெளிவுபடுத்த பணியுங்கள்.
தாம் பெற்றுக் கொண்டவற்றை முன்வைக்க ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பொருத்தமான கருத்துக்களை வழங்கவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதை வைத்து, ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது குறிப்பேட்டில் உள்ள மூன்றாவது பகுதியை பூர்த்தி செய்ய பணிக்கவும்.
பாடத்திலிருந்து தான் கற்றுப் பயனடைந்தவற்றை சுருக்கமாக எழுதவும்.
தாம் குறித்து வைத்துள்ளவற்றை சக நண்பர்களுக்கு வாசித்துக் காட்ட மூவரைத் தேர்வு செய்யவும். ஒவ்வொருவரும் மூன்றாம் பகுதியில் குறித்தவற்றைப் பற்றிக் கருத்துரைப்பதுடன் இப்பாடத்தைக் கற்க முன்னும் பின்னும் உள்ள பதில்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, மாணவர்களை சரியான குளிப்பு முறைக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 2
செயல்பாட்டில் உள்ள கிளிப்பை மாணவர்களுக்குக் காட்டுங்கள். அதைக் கூர்ந்து கவனித்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒவ்வொரு மாணவரும் செயல்பாட்டிற்கான பதிலைத் தேடும்படி பணித்து, முடித்த பிறகு, அவர்கள் எழுதியதைப் பற்றி அவர்களுடன் விவாதித்து, அதனூடாக சரியான கருத்துக்குச் செல்லவும். பின் சரியான பதிலைக் கரும்பலகையில் எழுதி, அதனை தத்தமது கொப்பிகளில் எழுதிக் கொள்ளுமாறு பணிக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டுமுறை, குளிப்பின் காரணிகளை அறிதல்.
நோக்க இலக்கம் 3
செயல்பாட்டில் உள்ள இரண்டு பந்திக்கள் அடங்கிய அட்டையை இரண்டிரண்டு மாணவர்களுக்கு விநியோகிக்கவும். அவ்விரு உரைகளிலிருந்து அவர்கள் புரிந்து கொண்ட படி குளிப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் தமக்கிடையே ஒத்துழைக்கச் சொல்லுங்கள். அட்டைகளைகளை சேர்த்து அவற்றை மதிப்பீடு செய்யுங்கள். தவறுகளை மாணவர்களிடம் காட்டி, அவர்களே திருத்திக்கொள்ளச் செய்யுங்கள். விடைகளில் தவறுவிடாத மாணவர்களைப் பாராட்டுங்கள்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, குளிப்பின் ஸுன்னத்துக்களை அறிதல்.
நோக்க இலக்கம் 4
செயல்பாட்டை சக நண்பர்களிடம் வாசித்துக் காட்ட ஒரு மாணவரைத் தெரிவு செய்து, பின்னர் அது பற்றி அவர்களுடன் விவாதியுங்கள். பாடத்தில் கற்றுக் கொண்டதிலிருந்து குளிப்பு ஸுன்னத்தாகக் கூடிய இரு சந்தர்ப்பங்களைக் கூறுமாறு ஒவ்வொரு மாணவரையும் பணியுங்கள்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
முதலிரு வினாக்களுக்கும் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக விடையளிக்க வேண்டும். பின்னர் ஆசிரியர் சரியான விடையை கரும்பலகையில் எழுதவும். தத்தமது விடைகளுக்குப் பொருத்தமான புள்ளிகளை வழங்குமாறு அவர்களிடமே கோர வேண்டும். அத்துடன் பொருத்தமான வலுவூட்டலை வழங்க வேண்டும்.
கேள் 1 : - - - .
மூன்றாவது வினாவுக்கு தனித்தனியே விடையளிக்க மாணவர்களை வழிநடத்தவும். ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பரின் பதிலுடன் பரிமாறிக் கொள்வதுடன், ஒவ்வொருவரும் மற்றவரின் பதிலைத் திருத்தவும் வேண்டும். ஒவ்வொரு குழுவையும் நீர் கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தனிப்பட்ட தூய்மையில் கவனம் செலுத்துதல், குளித்தல் மற்றும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துதல்.
சரியான குளிப்பு முறையை அமுல்படுத்துவதில் அனைத்து மாணவர்களும் அக்கறை கொள்ளுவதுடன், குளிப்பு ஸுன்னத்தான சந்தர்ப்பங்களில் கவனம் செலுத்துதல்
நான்காம் பாடம் : தொழுகையின் மகிமை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (உடன்படிக்கை - அவருடைய அழுக்கு - பதற்றம் ஏற்பட்டால்)
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
( கருத்துதிர்ப்பு - உரையாடல் - சொற்பொருள் வரைபடங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்குர்ஆன், ஸுன்னாவிலிருந்து தொழுகையின் மகிமையை உணர்த்துதல்
தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்ற அக்கறை கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்கு முன்வைப்பதன் மூலம் நீங்கள் பாடத்தைத் தொடங்கலாம்: (தான் எப்போதும் சோகமாக இருப்பதாக ஹம்ஸா தனது ஆசிரியரிடம் கூறினார், அதற்கு ஆசிரியர் "நீங்கள் தவறாமல் தொழுகையைப் பேணுகிறீரா?" எனக் கேட்க, அவர் "இல்லை." என்றார். அப்போது ஆசிரியர் சரியான நேரத்தில் தவறாமல் தொழுமாறு அறிவுறுத்தினார். தொழுகைக்கும் சோகத்திற்கும் கவலைக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் நம் பாடத்தில் நாம் கற்கப் போவது." இவ்வாறு கூறிவிட்டு, கரும்பலகையில் பாடத்தின் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறை மூலம் மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும்.
தொழுகையின் மகிமையைத் தெளிவுபடுத்துமாறு ஒவ்வொரு மாணவக் குழுக்களுக்கும் பணிக்கவும்.
ஒவ்வொரு குழுவும் மேலதிகத் தாள் ஒன்றில் தங்கள் விடைகளை எழுதி, தமக்கு மத்தியில் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்க, ஆசிரியர் பின்வரும் வாசகத்தை கரும்பலகையில் எழுதலாம்: (அல்லாஹ்வின் முன்னிலையில் நின்றுகொண்டு, ஓர் அடியான் தன் கவலைகளை மறந்து, ஆன்மாவுக்கு நிம்மதியை உணரும் சந்தர்ப்பம் அது... அது என்ன?).
அது உணர்த்தும் விடயம் என்ன என்பதை கண்டுபிடிக்குமாறு மாணவர்களைக் கேட்டு, தொழுகையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக அவர்களின் பதில்களைப் பயன்படுத்த வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
தொழுகையின் மகிமையை விளக்கும் சொற்பொருள் வரைபடமொன்றை ஆசிரியர் மாணவர்களுக்கு முன்வைக்க வேண்டும்.
ஆசிரியர் ஒவ்வொரு சிறப்பையும், அதைக் குறிக்கும் நபிமொழிகளை விளக்கிக் கூறி தெளிவுபடுத்தவேண்டும்.
பின்வரும் வினாக்களை மாணவர்களுக்கு முன்வைத்து, தொழுகையின் மகிமை, மற்றும் அதனை விடுவது அல்லது அலட்சியமாக இருப்பதன் பாரதூரம் என்பவற்றை அவற்றின் ஊடாக விவாதிக்கலாம்.
கே : இஸ்லாத்தில் நிலைத்திருப்பதன் அடையாளம் என்ன?
கே : தொழுகைதான் மறுமையில் ஓர் அடியானிடம் முதலில் விசாரிக்கப்படும் அம்சம் என்பதைக் குறிக்கும் ஒரு நபிமொழியைக் கூறுக.
கே : தொழுகை ஒரு முஸ்லிமை பாவங்களை விட்டும் தூரமாக்கும் என்பதன் அர்த்தத்தை விளக்குக.
கே : தொழுகை எவ்வாறு மன நிம்மதியாக இருக்கும்?
இறுதிச் சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் தங்கள் புத்தகத்திலிருந்து பாடத்தின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள்.
அதன் பிரதான கூறுகள் மற்றும் சிந்தனைகளை உன்னிப்பாகப் பார்க்குமாறு கூறுங்கள்.
பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட மூன்று பிரதான கூறுகளை எழுதிக்கொள்ளுமாறு கூறிவிட்டு, பின்பு அவர்கள் எழுதும் விடைகளைக் கண்டறியவும். பின்னர் அவற்றில் வெவ்வேறான பதில்களை கரும்பலகையில் எழுதி, மாணவர்களையும் தங்கள் கொப்பிக்களில் எழுதிக்கொள்ளுமாறு பணிக்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, மன அமைதியில் தொழுகையின் பங்களிப்பை விளக்குதல்.
நோக்க இலக்கம் 2
இரண்டாவது செயல்பாட்டுக்கான பதிலை சிந்திக்குமாறு ஒவ்வொரு மாணவரையும் கேளுங்கள். பின்னர் தான் தொழுகையில் கவனம் செலுத்தக் காரணியாக இருந்த ஒரு சூழ்நிலையை ஒரு தனிக் காகிதத்தில் எழுதும்படி கோருங்கள்.
தனது சூழ்நிலையை வாசித்துக் காட்ட ஒருவரைத் தெரிவுசெய்யவும். ஏனையோர் அது பற்றி தமது அபிப்பிராயத்தை காரணத்துடன் விளக்கவேண்டும்.
தொடர்ந்து ஆசிரியர் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தொழுகையின் சிறப்புக்களையும், அவற்றை அடைந்து கொள்வதற்கான நிபந்தனைகளையும் விளக்குதல்.
நோக்க இலக்கம் 2, 4
ஒவ்வொரு மாணவருக்கும் பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை (பிலேஷ் கார்ட்) விநியோகிக்கவும். அவர்கள் பதிலளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்யவும். பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்துங்கள்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தொழுகையை விடுவதன் அல்லது அதனை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருப்பதன் விபரீதத்தை விளக்குதல்
நோக்க இலக்கம் 3
அறிதல் முறைகளில் ஏதாவதொன்றின் உதவிகொண்டு, செயற்பாட்டிற்கு வீட்டில் பதிலளித்து வருமாறு ஒவ்வொரு மாணவரையும் பணியுங்கள்.
அடுத்த சந்திப்பின் போது அவர்களின் பதில்களைப் பற்றி விவாதித்து, எது சரியானது என்பதைக் கண்டறியவும், பின்னர் சரியாக பதிலளித்தவர்களைப் பாராட்டி, தவறாகப் பதிலளித்தவர்களை திருத்திக்கொடுக்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
முதல் கேள்விக்கு பதிலளிக்க, அதில் உள்ள ஒவ்வொரு பிரதான கூறுகளையும் மாணவர்களிடம் வாசித்துக் காட்டவும். வசனம் சரியாக இருந்தால், மாணவர் தனது கையை உயர்த்தவும். மாணவர்களின் பதில்களை மதிப்பீடு செய்து, சரியான மற்றும் தவறான வார்த்தைகளை அடையாளப்படுத்திக் கொடுக்கவேண்டும்.
கேள் 1 : - - .
இரண்டாவது வினாவுக்கு தனித்தனியே விடையளிக்க மாணவர்களை வழிநடத்தவும். ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பரின் பதிலுடன் பரிமாறிக் கொள்வதுடன், ஒவ்வொருவரும் மற்றவரின் பதிலைத் திருத்தவும் வேண்டும். ஒவ்வொரு குழுவையும் நீர் கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
மூன்றாம் கேள்வியில் வந்துள்ள வாசகத்தை கரும்பலகையில் எழுதவும். சில மாணவர்களைத் தெரிவுசெய்து, கூட்டாக, தொழுகையின் மகிமை மற்றும் அதில் தமது கரிசனை பற்றி மூன்று வரிகள் எழுதுமாறு பணிக்கவும். அவர்கள் எழுதியவற்றைப் பற்றிக் கருத்துரை வழங்கி, மிகச் சிறந்தமுறையில் எழுதியவரைப் பாராட்டுங்கள்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தொழுகையில் அக்கறை செலுத்துவதில் நபிவழியைப் பின்பற்றுவதுடன், அதனை முறையாக நிறைவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தூண்டுதல்.
தொழுகையை விடுவது அல்லது அதில் அலட்சியமாக இருப்பதன் விபரீதங்களை உள்ளடக்கிய ஓர் அறிவித்தல் பலகையை உருவாக்குவதில் பங்கெடுக்க மாணவர்களைத் தூண்டுதல்.
ஐந்தாம் பாடம் : தொழுகை முறை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அவ்ரத் - உள்ளச்சம் - இறுதி அமர்வு).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள் (நடித்துக் காட்டும் முறை - கூட்டு கற்கை - விவாத முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
தொழுகையில் உள்ளச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தல்.
உள்ளத்தில் அல்லாஹ்வின் மகத்துவத்தை வரவழைத்தல்.
தொழுகையில் நிகழ வாய்ப்புள்ள தவறுகளைத் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
ஒவ்வொருவரும் வெவ்வேறான விதத்தில் தொழுகின்றனர். சரியான தொழுகை முறையைக் கற்காதிருப்பது அதன் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். நபிமொழியில் வந்துள்ள பிரகாரம் சரியாக தொழுகையை நிறைவேற்ற இப்பாடத்தை கூர்ந்து அவதானியுங்கள் என மாணவர்களிடம் கூறுங்கள்.
பின்னர் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம்:
பாடத்தின் தலைப்பு மற்றும் நோக்கத்தை மாணவர்கள் அறிந்துள்ளதன் அடிப்படையில், அதில் உள்ளடங்க வாய்ப்புள்ள கூறுகள் மற்றும் கருத்துக்கள் பற்றிய தமது கணிப்புகளைக் கூறும்படி அவர்களிடம் கேளுங்கள்.
அவர்களது பதில்களைக் கண்டறிந்து, அவற்றில் வெவ்வேறானவற்றை கரும்பலகையில் எழுதுங்கள்.
இரண்டாம் கட்டம்:
நடிப்பு முறையைப் பயன்படுத்தவும். ஒரு மாணவரிடம் தொழுகையின் ஒரு ரக்அத்தைத் தொழுது காட்டும் படி கோரி, ஏனைய மாணவர்கள் அவரது நிறைவேற்று முறையை மதிப்பீடு செய்யக் கூறவும். பின்னர் நீங்கள் அதுபற்றி கருத்துரை வழங்கவும்.
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களுக்கு முன்வைக்கவும். மேலும் விவாத முறையின் மூலம், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பதிலான சரியான தொழுகை முறையை அடையாளப்படுத்தவும். இந்த முறையை இன்னும் விரிவாக அறிமுகப்படுத்த, இதை ஒரு தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தவும்:
தனது வேலைப்பளுவைக் காரணம் கூறி ஒருவர் வேகமாகத் தொழுகிறார்.
ஒருவர் தொழும் போது ருகூஃவில் முறையாகக் குனிவதில்லை.
ஒருவர் தொழும்போது ஸுஜூதில் முறையாக பூமியுடன் நெற்றியைப் பதியவைப்பதில்லை.
அஹ்மத் தொழுகையைப் பேணி வருகிறார். என்றாலும் குர்ஆன் மற்றும் திக்ருகளை சிந்திக்காமல் வேகமாக ஓதுகிறார்.
இறுதிச் சுருக்கம் :
ஆசிரியர் சில மாணவர்களைத் தெரிவு செய்து, தொழுகை முறை பற்றி தாம் அறிந்து கொண்டதை சுருக்கமாக உதாரணங்களுடன் விவரிக்க செய்யவும். பின்னர் அம்மாணவரின் விடைகள் பற்றி கருத்துரைக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, சரியான முறையில் தொழுகையை நிறைவேற்ற மாணவர்களைப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் 4
ஒவ்வொரு மாணவரும் தம் குடும்பத்துடன் இணைந்து வீட்டில் பின்வரும் செயல்பாட்டிற்கு தனித்தனியாக பதிலளிக்குமாறு நீங்கள் கேட்கலாம். பூர்த்தியான செயல்பாடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும், பின்னர் அடுத்த சந்திப்பில் அப்பதில்கள் உமக்குக் காண்பிக்கப்பட வேண்டும். அதனை அவர்களுடன் விவாதித்து, திறமையாக செயல்பட்டவருக்கு பரிசளித்து, சக நண்பர்கள் முன்னிலையில் அவரைப் பாராட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தொழுகை முறையை விளக்குதல்.
நோக்க இலக்கம் 1
செயல்பாட்டில் உள்ள ஹதீஸை காட்சித் திரை மூலம் மாணவர்களுக்குக் காட்டுங்கள். திறமையான ஒருவரை அதனை வாசிக்கத் தேர்வு செய்ய வேண்டும், பின்னர் அதன் கலைச் சொற்களை விளக்கி, அதன் வழிகாட்டல்களை அவர்களோடு இணைந்து ஆராய்ந்தெடுக்கவும்.
செயல்பாட்டுக் கேள்விகளை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றின் பதில்களை மாணவர்களோடு கலந்துரையாடி, சரியான பதில்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தவும். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் அதை அவரவர் கொப்பியில் எழுத வேண்டும். எழுதியவர்கள் அதை சமூக ஊடக தளங்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தவும்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தொழுகையின் தவறுகளைத் திருத்த மாணவர்களை பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 2
செயல்பாட்டில் இடம்பெறும் ஒவ்வொரும் நிலைகளையும் கற்பித்தல் அட்டையில் ஆசிரியர் குறிக்கவேண்டும். சில மாணவர்கலைத் தெரிவுசெய்து, அதில் உள்ள நிலைகளுக்கு பதிலளிக்க, எழுமாறாக அட்டைகளில் ஒன்றை எடுக்குமாறு பணிக்கவேண்டும். சக நண்பரின் பதிலை மதிப்பீடு செய்ய மற்றுமொரு மாணவரைத் தேர்வு செய்ய வேண்டும். அதனை ஆசிரியர் தொடர்ந்து கண்கானித்து, வழிகாட்ட வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் தங்கள் புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் தமக்கு மத்தியில் ஒத்துழைக்க வேண்டும் .அதாவது, ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு கேள்விக்கு பதிலளிக்க, ஏனையோர் அதனைக் கண்காணிக்கவேண்டும்.
பதில் மற்றும் மதிப்பீட்டில் அனைவரும் பங்கேற்பதை உறுதிசெய்ய குழுக்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும்.
குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றைத் திருத்தவும். பின்னர் சிறந்த பதிலலளித்த குழுவைத் தேர்ந்தெடுத்து அதன் உறுப்பினர்களைப் பாராட்டிவிட்டு, தவறு செய்த குழுக்களின் தவறுகளைத் திருத்திக் கொடுக்குமாறு கூறவும்.
கே 1 : - - - - .
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தம்மைச் சுற்றியருப்பவர்களிடம் காணப்படும் தொழுகையின் தவறுகளைத் தாம் தவிர்ந்து கொள்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான தொழுகை முறையைக் காட்ட மாணவர்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்.
தொழுகையை நிறைவேற்றுவதிலும், அதில் உள்ளச்சத்தைப் பேணுவதிலும் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
ஐந்தாம் அலகு: நற்பண்புகள்
பாடம் ஒன்று : உண்ணல், பருகலின் ஒழுங்குகள்
கால அளவு: ஒரு பாடவேளை
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்).
கற்பித்தல் உத்திகள்:
(நடைமுறைப்படுத்தல் - தவறான புரிதல்களை சரி செய்தல் - குறிப்புகளை எடுத்துக்கொள்ளல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உண்ணல், பருகலின் ஒழுக்கங்களை செயல்படுத்துவதில் அக்கறை கொள்ளல்.
திக்ருகளைத் தொடர்ந்து செய்வதன் அவசியத்தை உணர்தல்.
ஒரு தனிநபரின் அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்தியிருப்பதில் இஸ்லாத்தின் பங்களிப்பை உணர்த்தல்.
பாடத்தின் அறிமுகம்:
வாழ்க்கை நடைமுறைகள் முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாணவரும் உண்ணும்போதும் பருகும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை முன்வைக்க பணியுங்கள். ஒவ்வொரு மாணவரும் இரண்டு ஒழுக்கங்களைக் கூற வேண்டும். அவர்கள் பாடத்தைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம் மேலும் பல ஒழுங்குகளை அறியலாம் என்பதை அவர்களுக்கு அறிவியுங்கள்.
பாடத்தலைப்பை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தி கரும்பலகையில் பதியவும்.
பாடத்தை முன்வைக்கும் படிநிலைகள் :
முதலாம் கட்டம்:
உண்ணல், பருகலின் ஒழுங்குகளுடன் முரண்படக்கூடிய சில படங்களை மாணவர்களுக்கு முன்வைக்கலாம், உதாரணமாக : (அசுத்தமான கையினால் உண்ணும் ஒருவரின் படங்கள், இடது கையினால் உண்ணும் ஒருவரின் படம், உணவிலே ஊதக்கூடிய ஒருவரின் படம்).
இவற்றில் அவர்களது அபிப்பிராயத்தைத் தெளிவுபடுத்தக் கோருங்கள், அவர்களுடைய பதில்களை உண்ணல், பருகலின் ஒழுங்குகளையும், தடுக்கப்பட்ட விடயங்களையும் கற்பிக்க ஒரு தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தொடர்பான மார்க்க ஆதாரங்களையும் கூறி, விளக்குங்கள்.
இரண்டாம் கட்டம்:
உண்ணல் பருகலின் ஒழுங்குகளை செயல்படுத்தும் போது சிலர் விடும் தவறுகள் பற்றி மாணவர்களுடன் விவாதியுங்கள்.
பின்பு, பல்வேறுபட்ட மார்க்க ஆதாரங்களை மேற்கோள்காட்டி உண்ணல் பருகலின் ஒழுங்குகளில் தடுக்கப்பட்ட செயல்களை அவர்களுக்கு முன்வையுங்கள்.
இறுதிச்சுருக்கம்:
குறிப்புகளை எடுத்துக்கொள்ளல் முறையை நீர் பயன்படுத்தலாம், பாடம் தொடர்பான தனது குறிப்புக்களைக் கொப்பிகளில் பதியுமாறு ஒவ்வொரு மாணவர்களையும் பணிக்கவும். இந்த குறிப்புகளில் தலைப்புகள் மற்றும் முக்கிய கருத்துக்களின் கீழ் கோடிடுவது, உள்ளடக்கத்திலிருந்து தெளிவான பதில்களைக் கொண்ட பல கேள்விகளை எழுதுவது, மற்றும் பாடத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான முடிவுகளை அடையாளம் காண்பது ஆகியவை அடங்கும். தாங்கள் எழுதியதை முன்வைப்பதற்காக சில மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பொருத்தமான வலுவூட்டலையும் வழங்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, உண்ணல் ஒழுங்குகளைக் கற்றல்.
நோக்க இலக்கம் 1
ஒவ்வொரு மாணவரையும் முதல் செயல்பாட்டைத் தனியாகச் செய்ய நீங்கள் பணிப்பது நல்லது. மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் தனது பதிலை மற்றவருடன் பரிமாறிக்கொண்டு அதைப் பரிசோதித்து, எந்தளவு உடன்படவும், முரண்படவும் செய்துள்ளார்கள் எனப் பார்க்கவேண்டும். அவர்களில் சிலரைத் தெரிவுசெய்து, தங்கள் சக நண்பர்களின் பதில்களோடு தாம் உடன்படும், முரண்படும் அம்சங்கள் பற்றியும், அவற்றில் தாம் கண்ட பயன்கள் பற்றியும் கருத்துரைக்கச் செய்யவும். மேலும் சிறந்த பதில்களை பாராட்டவும்.
செயற்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, ஓடியோப் பதிவுகளிலிருந்து உண்ணலின் ஒழுங்குகளைக் கண்டறிய மாணவர்களைப் பயிற்றுவித்தல்
நோக்க இலக்கம் 3
மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, வட்ட அமைப்பில் அவர்களை உட்கார வைக்கவும். இரண்டாவது செயல்பாட்டிற்க்கு விடையளிக்க ஒவ்வொரு குழுவும் ஒத்துழைக்க வேண்டும். தமது குழுவுக்குக் கிடைத்த விடையை அறிவிக்க ஒவ்வொரு குழுவும் ஒருவரை நியமிக்க வேண்டும். அனைவராலும் ஏகோபித்து எடுக்கப்படும் விடைகளை ஒரு மாணவர் மூலம் கரும்பலகையில் எழுத வேண்டும். கருத்து வேறுபட்ட விடயங்கள் உமக்கு முன்னிலையில், உமது மேற்பார்வையில் விவாதிக்கப்பட்டு. சரியான கருத்தைக் கண்டறிந்து கரும்பலகையில் எழுத வேண்டும்.
செயற்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் இரட்டையர் முறை, உண்ணல் மற்றும் பருகல் ஒழுங்குகளை கடைபிடிக்க ஒரு கற்பித்தல் நிகழச்சிநிரலை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
நோக்க இலக்கம் 4
இருவர் இருவாராக மாணவர்களை நியமித்து மூன்றாவது செயல்பாட்டைச் செய்ய ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும், பதில் அளிப்பதில் அவர்களின் ஒத்துழைப்பையும், ஈடுபாட்டையும் விளங்கிக்கொள்ள அவர்களுக்கு மத்தியில் செல்லுங்கள்.
தமது பதில்களை முன்வைக்க மாணவர்களை இரண்டிரண்டு குழுக்களைத் தேர்வுசெய்யவும். அவற்றிற்கு மத்தியில் ஒப்பிட்டு, மிகவும் துல்லியமான பதிலைத் தீர்மானிக்கவும்.
சிறந்த விடையளிக்கும் குழுவிற்கு தகுந்த ஆதரவை வழங்கவும். அதற்கு "முன்னோடிக் குழு" என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்து, அதனிடம் மற்ற அணிகளைக் கவனித்து, அவற்றின் பதில்களைத் திருத்தி, சரிசெய்து கொடுக்குமாறு வேண்டவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும்.
கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க மாணவர்களைக் கோருங்கள்.
மாணவர்களிடமிருந்து பதில்களைச் சேகரித்து, பின்பு அக்கேள்விகளை வாய்வழியாகக் கேட்டு, பதிலளிக்கச் செய்யுங்கள். மேலும், அவர்களுக்குப் பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
விடைகளைத் திருத்தி, ஒவ்வொரு வினாவுக்குமான பொருத்தமான புள்ளியை இடவும்.
உயர் புள்ளியைப் பெற்றவரை இனங்கண்டு, பொருத்தமான ஊக்குவிப்பை அவருக்கு வழங்கவும்.
கே 1 : (√) - (×) - (×).
கே 2 : (தடுக்கப்பட்டது) - (தடுக்கப்பட்டவை) -(ஆகுமானது).
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
உண்ணல் மற்றும் பருகல் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும், அவற்றை சரியான முறையில் பயன்படுத்தவும், அவற்றுக்குரிய திக்ருகளைப் பேணவும், மேலும் இந்த ஒழுக்கங்களைப் பரப்பவும், குடும்பம் மற்றும் சமூகத்தின் கட்டமைப்பிற்குள் அவற்றை போதிக்க மாணவர்களை ஊக்குவியுங்கள்.
பாடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குகளுடன் முரண்படும் நடத்தைகளை பின்வரும் விதத்தில் எதிர்கொள்வது: அவ்வாறு செய்பவர்களுக்கு, அவற்றில் உள்ள பிழைகள் மற்றும் குறைபாடுகளையும், அவற்றை எவ்வாறு திருத்திக்கொள்வது என்பதையும் கூறுதல், அல்லது தவறுகளை அவர்களே தாமாக அடையாளம் கண்டு, திருத்திக் கொள்வதற்காக, இந்த நபர்கள் பார்க்கக்கூடிய இடங்களில் அறிவித்தல் பதாகைகளை வைத்தல்.
பாடம் இரண்டு : அனுமதி கோரலின் ஒழுங்குகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (நுழைகின்றேன் - அனுமதி பெற்று - மிகத் தூய்மையானது - பருவமடையும் வரை - மூன்று அந்தரங்க வேளைகள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(மார்க்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஊடகம் - கணினி - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(கதை கூறும் முறை - பரஸ்பர கற்பித்தல் முறை - "முன்கணிப்பு - கேள்வி எழுப்புதல் - தெளிவுபடுத்துதல் - சுருக்கம்" - கூர்ந்தாராய்தல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அனுமதி கோரலின் சிறப்பை உணர்தல்
பிறரின் உரிமைகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை உணர்தல்.
சமுதாயத்தை மேம்படுத்துவதில் அனுமதி கேட்பதன் முக்கியத்துவத்தைக் கொண்டு பெருமிதம் அடைதல்.
பிறரிடம் நுழையுமுன் அனுமதி கேட்பதில் அக்கறை செலுத்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சம்பவத்தை மாணவர்களிடம் கூறி, அது பற்றிய தமது கருத்துக்களைத் தெளிவுபடுத்துமாறு அவர்களிடம் கோரவும், மேலும் அவர்களது பதில்களுக்குக் கருத்துரையும் வழங்கவும் : (அலி காலிதை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றார். பல முறை அழைப்பு மணி அடித்தும், யாரும் பதிலளிக்கவில்லை. அதனால் அலி கோபமாக திரும்பி வந்தார். அவர் காலிதை சந்தித்தபோது, தனக்காக கதவைத் திறக்கவில்லை என்று கடிந்துகொண்டார். அதற்கு, காலித் அவரிடம், அவரை வரவேகற்பதற்கு வீடு அப்போது பொருத்தமானதாக இருக்கவில்லை என்று கூறினார். உங்கள் கருத்துப்படி: கோபப்படவும், கண்டிக்கவும் அலிக்கு உரிமை இருக்கிறதா?).
பாடத்தலைப்பை மாணவர்களுக்குக் கூறி, கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடத்தின் தலைப்பில் மாணவர்களுக்கு உள்ள அறிமுகத்தைக் கருத்தில் கொண்டு, அதில் என்ன கூறுகள் இருக்கலாம் என்று கணிக்கச் சொல்லுங்கள். அவர்களின் பதில்களைக் கரும்பலகையில் எழுதுங்கள், பின்னர் பாடத்தின் பொதுவான மற்றும் துணை கூறுகளை உள்ளடக்கிய பலகையை அவர்களுக்குக் காட்டவும். அவர்கள் அதனை அவதானித்து, தமது பதில்களை கரும்பலகையில் காட்டப்பட்டுள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
இரண்டாம் கட்டம்:
பாடம் தொடர்பான கேள்விகளைக் கேட்பதில் ஒத்துழைக்க மாணவர்களை இவ்விருவர்களாக ஆசிரியர் நியமிக்க வேண்டும், அதற்கான பதில்களினூடாக பாடத்தின் கூறுகள் மற்றும் உள்ளடக்கங்கள் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு குழுவின் கேள்விகளையும் கண்டறிந்து, அவற்றை மறுவடிவமைத்து, அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் பாடத்தின் வெவ்வேறு கூறுகளை விளக்குவதற்கும் தயார்படுத்துவதற்காக கரும்பலகையில் எழுதவும். கேள்விகள் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதற்காக மேலும் சில கேள்விகளால் அதை நீங்கள் செறிவூட்டலாம், மேலும் பின்வரும் கேள்விகளையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்:
கே : அனுமதி கோரலின் சட்டத்தைத் தெளிவுபடுத்தவும்.
கே : அல்லாஹ் அனுமதி கோரலை மார்க்கமாக்கியதன் காரணம்.......... (பூரணப்படுத்துக).
கே : அனுமதி கோரலின் நோக்கத்தை அடைய அல்லாஹ் பல ஒழுங்குகளை மார்க்கமாக்கியுள்ளான். அவற்றைக் கூறுக.
கே : வீடுகளில் சிறார்கள் அனுமதி கோரும் அமைப்பைத் தெளிவுபடுத்துக்க.
கே : அந்தரங்க நேரங்கள் மூன்றையும் கூறுக.ஏன் அல்லாஹ் அந்நேரங்களில் அனுமதி கோரலை மார்க்கமாக்கியுள்ளான்?
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் முந்தைய கேள்விகளை விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, அவை தொடர்பான ஆதாரங்களை ஆடியோ மூலமாகவோ அல்லது காட்சித் திரையைப் பயன்படுத்தியோ காட்டுவதில் கவனம் செலுத்தவேண்டும். அதை வாசித்துக்காட்ட மாணவர்களை பணித்து, பின்பு அதன் நோக்கம் மற்றும் வழிகாட்டல்களைக் கண்டெடுக்கும் நோக்கில், அதன் அர்த்தங்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
பரஸ்பர கற்பித்தல் மூலோபாயத்தின் நான்காவது கட்டமாகிய "சுருக்கம் எழுதுதல்" கட்டத்தை சரியாக செய்வதற்கு, பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான வழிகாட்டல்கள் மற்றும் அவற்றைக் கற்றுகொண்ட பின் அவர்களுக்குள்ள பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பந்தியை எழுத ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தங்கள் சக நண்பர்களுக்கு தாம் எழுதியதை வாசித்துக் காட்ட அவர்களில் சிலரைத் தேர்வு செய்து, தகுந்த ஆதரவுடன் ஊக்கப்படுத்த வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அனுமதி கோரலை விடுவதால் ஏற்படும் தீங்குளை விளக்கி, அனுமதி கோரலின் ஒழுங்குகளை மக்கள் மயப்படுத்தும் வழிகளை பரிந்துரைத்தல்.
நோக்க இலக்கம் 2, 4
ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகச் செயல்பாட்டிற்கு பதிலளிக்குமாறு நீங்கள் வழிநடத்தலாம். அதே நேரத்தில் அனுமதி கேட்பதான் சிறப்பை வாசித்து, முதல் கூறை சரியாகக் கண்டுபிடிக்க ஊக்கப்படுத்தவேண்டும். அதேபோன்று அனுமதி கேட்கும் ஒழுங்குகளைப் பரப்புவதற்கு அதிக எண்ணிக்கையிலான பொருந்தக்கூடிய முன்மொழிவுகளை முன்வைப்பதில் அவர்களின் ஆக்கப்பூர்வமான திறன்களைப் பயன்படுத்துதல்.
மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தமது பதில்களை முன்வைக்கச் செய்து, அவற்றிற்க்கிடையில் ஒப்பிட்டு, சிறந்த பதிலைக் காரணத்துடன் விளக்கிவிட்டு, அவற்றைக் கொண்டு படிப்பினை பெற அனைவரையும் ஏவவும்.
பிறரின் மறைவுகளைக் காணுதல்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அனுமதி கோரல் மார்க்கமாக்கப் பட்டதற்குரிய காரணத்தை அறிதல்.
நோக்க இலக்கம் 5
இரண்டாவது செயல்பாட்டிற்கான பதிலைப் பெற ஒவ்வொரு மாணவரையும் தீர்க்கமாக ஆராய ஆசிரியர் வழிகாட்டுவது விரும்பத்தக்கது. அவர் மாணவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதோடு, பல்வேறு மூலாதாரங்களை அணுகி, ஆய்வில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள அவர்களை ஊக்குவித்து, பின்னர் சரியான விடைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனி அட்டையில் பதிலளிப்பதற்கு ஒவ்வொரு குழுவும் ஒத்துழைப்பாகச் செயற்படச் சொல்லுங்கள், குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கேள்விக்கு பதிலளிப்பார்கள். சகநண்பர்கள் அவரைக் கவனித்து, திருத்திக்கொடுப்பார்கள்.
மாணவர்களிடமிருந்து அட்டைகளை சேகரித்து, அவற்றைத் திருத்தவும்.
மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு அவர்களின் பதில்களைப் பெறுங்கள். ஒவ்வொரு குழுவின் பதிலுக்கும் வழங்கப்பட்ட பதிலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை அவர்களுக்கு விளக்கவும்.
சிறந்த விடையளிக்கும் குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களின் செயல்திறனை பாராட்டுங்கள்.
கே 1 : . . . . .
கே 2 : (திரும்பிச் செல்லல்). (இஷா நேரம்). (குடும்ப அந்தரங்கங்களைப் பாதுகாத்தல்).
உள்ளார்ந்த பயன்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் தனது குடும்ப உறுப்பினர்களின் நிலமையை ஆராய்ந்து, அனுமதி கேட்கும் நெறிமுறைகளை எந்த அளவுக்கு கடைப்பிடித்து, அமுல்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறியவேண்டும். மேலும் தாம் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதை அவர்களுக்குக் கூறி, தாம் கண்டறிந்த குறைபாடுகளை அவர்களுடன் காலந்தாலோசிக்கவேண்டும். அதன் மூலம், அவற்றை அவர்கள் திருத்திக்கொள்வார்கள்.
சமூகத்தில் அனுமதி கேட்கும் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த மாணவர்கள் பாடத்தின் மூலம் அடைந்த ஆலோசனைகளைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இதில் வெற்றிபெற, மஸ்ஜிதின் இமாம் அல்லது குடும்பங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் போன்ற, முக்கிய நபர்களின் உதவியை நாடலாம்.
பாடம் மூன்று : உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (ஸலாத்தைப் பரப்புதல் - புறம் பேசுதல் - கோல் சொல்லுதல் - இரகசியம் பேசுதல் - இடம்கொடுத்தல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - சில மார்க்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஊடகம்).
கற்பித்தல் உத்திகள்:
(கண்ணோட்டங்கள் பகுப்பாய்வு - ஆராய்ந்தெடுத்தல் முறை - மன வரைபடங்கள் - கற்றல் வட்டங்கள் - கேட்கும் முக்கோண முறை - கதாபாத்திர முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உரையாடல் மற்றும் சபை ஒழுங்குகளைப் பேணுதல்.
சமூகத்தை மேம்படுத்துவதில் உரையாடல் மற்றும் சபை ஒழுங்குகளின் அவசியத்தை உணர்த்துதல்.
ஸலாத்தைப் பரப்புவதன் சிறப்பில் கண்ணியத்தை உணர்தல்.
தடுக்கப்பட்ட வீண் சபைகளை விட்டும் விலகி இருப்பதில் அக்கறை கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
கண்ணோட்டப் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி மாணவர்களிடம் பின்வரும் நிலைப்பாட்டை முன்வைத்து, அதுபற்றிய அவர்களுடைய கருத்துக்களைக் கோரவும். (சிலர் சபை ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்காமல் தங்கள் கூட்டங்களைத் தொடங்கி முடிப்பார்கள். இது இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு முரணானது.)
அவர்களின் பதில்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்த பின், இப்பாடத்தைத் கற்பதன் மூலம், அவர்கள் உரையாடல் மற்றும் சபையின் ஒழுங்குகளைக் கற்றுக்கொள்வார்கள் என்று அவர்களுக்கு விளக்கவும். பின்னர், பாடத் தலைப்பை மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி, கரும்பலகையில் பதியவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடத்தின் கூறுகளை உள்ளடக்கிய மன வரைபடத்தை மாணவர்களுக்குக் காண்பிப்பது நல்லது. பாடத்தின் உள்ளடக்கத்தை பல நிமிடங்கள் உன்னிப்பாக அவதானித்து, ஒவ்வொரு மாணவரும் பாடத்திலிருந்து தாம் கற்றுக்கொள்ள விரும்பும் விடயங்கள் பற்றி மூன்று கேள்விகளைக் கேட்குமாறு கூறுங்கள். மாணவர்களின் கேள்விகளைப் பெற்று, கரும்பலகையில் அவற்றை எழுதவும்.
இரண்டாம் கட்டம்:
உரையாடல் நெறிமுறைகள் தொடர்பான மார்க்க ஆதாரங்களை மாணவர்களுக்கு முன்வைத்து, ஒவ்வோர் ஆதாரத்தையும் விவாதித்து, விளக்கி, தெளிவுபடுத்தவும். பின் ஒவ்வோர் ஆதாரத்திலிருந்தும் உரையாடலின் நெறிமுறைகளை ஆய்வுசெய்து எடுக்குமாறு கோரி, பாட உள்ளடக்கத்தில் இடம்பெற்றுள்ளவற்றுக்கும் அவர்களது பதில்களுக்கும் இடையில் ஒப்பிட வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கற்றல் வட்டங்கள் முறை மூலம், கற்பவர்கள் ஒரு வட்டமாக அமர்ந்து, ஒத்துழைப்புடன் சிந்தித்து, ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய சபை நெறிமுறைகளைக் கண்டெடுக்கலாம். வட்டத்தின் மத்தியில் ஆசிரியர் நின்று, அவர்களது பதில்களைப் பெற்று, அவற்றில் சரியானதை ஆதாரங்கள் கொண்டு வலுவூட்டி, தவறுகளைத் திருத்திக் கொடுத்து, ஒட்டுமொத்த நெறிமுறைகளையும் அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் பாடத்தின் முதல் கட்டத்தில் தான் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதிலளிக்குமாறு நீங்கள் அறிவுறுத்தலாம். தமது கேள்விகளையும், பதில்களையும் முன்வைப்பதற்காக சில மாணவர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம், கற்றுக் கொண்டவற்றை தாம் எந்தளவு நுணுக்கமாக, ஆர்வத்தோடு புரிந்துள்ளார்கள் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, ஸலாம் கூறுவதன் படித்தரங்களையும், அவை ஒவ்வொன்றுக்குமான கூலியையும் வரையறுத்தல் நோக்க இலக்கம் 1
கேட்கும் முக்கோண உத்தியை ஆசிரியர் பயன்படுத்தலாம். மாணவர்களை மூவர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கலாம்.
முதலாம் மாணவர் செயல்பாட்டையும், அதில் கோரப்பட்டுள்ளதையும் விளக்குவார், இரண்டாமவர் நல்ல முறையில் செவிமடுத்து, அவர் முதல் மாணவரிடம் செயல்பாட்டைப் பற்றி மேலும் விரிவாகவும் அவரது கருத்தை தெளிவுபடுத்தவும் கேள்விகளைக் கேட்பார், மூன்றாவது மாணவர் தனது இரண்டு சக நண்பர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களுக்கு கருத்துகளை வழங்குவதோடு, அவர்களின் செயல்திறனை பதிய முயற்சிப்பார். அத்தோடு, மாணவர்களுக்கு இடையே நடப்பவற்றை எழுதி, ஆசிரியரிடம் முன்வைப்பார்.
குழுக்களின் செயல்திறனை ஆசிரியர் கண்காணித்து, ஒவ்வொரு குழுவும் பதிவு செய்தவற்றையும், கிடைத்த பதில்களையும் வாசித்து, அனைத்திற்கும் கருத்துரை வழங்கி, தவறிழைத்தவர்களுக்கு திருத்திக்கொள்ள வழிகாட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, சபைகளுடன் தொடர்பான சில தவறான செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல். நோக்க இலக்கம் 3, 4
செயல்பாட்டில் உள்ள சூழ்நிலைகளை தமது வகுப்பு தோழர்களுக்கு முன் நடித்துக்காட்டிட நான்கு மாணவர்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
வேறு சிலரைத் தெரிவுசெய்து, குறிப்பிட்ட சூழ்நிலைகள் தொடர்பான அவர்களது கண்ணோட்டம் பற்றியும், அவை தொடர்பாக அவர்கள் வழங்கும் உபதேசங்கள் பற்றியும் விவாதிக்கவும்.
பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் உபதேசங்களை வழங்கி, சரியாகப் பதிலளிப்பவர்களைப் பாராட்டவும்,
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
மாணவர்கள் இவ்விருவாராக முதலிரு கேள்விகளுக்கும் பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். ஆசிரியர் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்களுக்கு மத்தியில் செல்ல வேண்டும். சிறந்தமுறையில் பதிலளிக்கும் குழுவைத் தெரிவு செய்து, ஏனையோருக்கு அவற்றை வாசித்துக்காட்டச் செய்யவேண்டும். பின்னர், ஒவ்வொரு குழுவும் தமது தவறுகளை திருத்திக்கொள்வர்.
கே1 : . . . .
ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் மூன்றாவது கேள்விக்கு பதிலளிப்பதில் ஒத்துழைக்க வேண்டும், குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க, சக நண்பர்கள் அதனைக் கவனித்துக்கொள்ளவேண்டும். நீங்கள் குழுக்கள் வழியாகச் சென்று அவர்களின் பதில்களைக் கண்டறியுங்கள். அவர்களில் சிறந்த பதில் குழுவைத் தேர்ந்தெடுத்து, தமது பதில்களை ஏனையோரிடம் வாசிக்கவைக்கவும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாழலாம்:
பாடத்தின் மூலம் கற்றுக்கொண்ட உரையாடல் மற்றும் சபை நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றி, அதைப் போதிக்கவும், சுற்றியுள்ளவர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தவும் முயற்சி செய்தல்.
ஸலாம் மற்றும் சபைகளின் ஒழுங்களில் இஸ்லாமிய ஷரியா அங்கீகரித்தவற்றுடன் முரண்படும் செயல்கள் மற்றும் நடத்தைகளைத் தவிர்த்தல். இந்த ஒழுங்குகள் தொடர்பான சட்ட ஆதாரங்களைப் பற்றி மேலும் அறிய, இலத்திரனியல் ஆய்வு மூலங்கள், மார்க்கப் புத்தகங்கள் மற்றும் அறிஞர்களை நாடவும்.
பாடம் நான்கு : கழிப்பறை ஒழுங்குகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (மமதை - பெருமை).
கற்பித்தல் சாதனங்கள்: (கரும்பலகை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(பிரச்சினைகளைத் தீர்த்தல் - தொடர்புகளின் பிணைய பகுப்பாய்வு - நேர்மறை உதாரணங்கள், எதிர்மறை உதாரணங்கள் - அனுமான சிந்தனை - தனிப்பட்ட இணைப்புகள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
மலசலகூட ஒழுங்குகளை அமுல்படுத்துவதில் அக்கறை கொள்ளல்.
தூய்மையின்பால் அழைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு சிறப்பை உணர்தல்.
தனிப்பட்ட தூய்மையின் அவசியத்தை உணர்த்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்குக் காட்டுங்கள். அதைப் பற்றி அவர்களின் கருத்தைச் கோரி, பதில்களைப் பெறுங்கள், பின்னர் பாடத்தினூடாக பதிலைக் கற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவியுங்கள்.
(ஒரு சிறுவன் கழிவறைக்குள் நுழைந்தான். அதான் ஒலிப்பதைக் கேட்டதும் முஅத்தினுக்கு பதில் கூறினான்).
பாடத்தின் நோக்கத்தையும், தலைப்பையும் மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி, கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
நீங்கள் கரும்பலகையில் கழிப்பறை ஒழுங்குகளின் பிரிவுகளை உள்ளடக்கிய வரைபடத்தை வரையலாம். மேலும் அதைப் பற்றி சிந்திக்கவும், இந்த ஒழுங்குகள் பற்றிய அவர்களின் முந்தைய அறிமுகத்தைக் கூறவும் மாணவர்களிடம் கேட்கவும். அதனூடாக பாடத்தை விளக்க ஆரம்பிக்கலாம்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் பின்வரும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஓர் அட்டையில் எழுதலாம். இவை கழிவறை ஒழுங்குகள் தொடர்பான நேர்மறை மற்றும் எதிர்மறையான உதாரணங்களை உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு சூழ்நிலையை வாசித்து, கருத்துத் தெரிவிக்கும் விதத்தில் அவ்வட்டைகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். அவர்களது பதில்களில் ஆசிரியர் அவர்களுடன் விவாதித்து, சரியான ஒழுங்குகளை வலுப்படுத்தி, தவறான ஒழுங்குகளைத் திருத்த வேண்டும்.
அல்குர்ஆன் பிரதியொன்றுடன் ஒருவர் கழிவறையில் நுழைந்து விட்டார்.
கழிவறைக்குள் ஒருவர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தார்.(திக்ர் செய்தார்)
ஒருவர் நீரோடையில் மலசலம் கழித்தார்.
சிறுநீர் கழித்து சுத்தம் செய்யும் போது ஒரு மனிதர் வலது கையைப் பயன்படுத்தினார்.
கழிவறையை ஒருவர் அசுத்தமாக விட்டுச் சென்றார்.
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் கழிப்பறை ஒழுங்குகளை விவரிக்கும் கிராஃபிக் கட்டம் கொண்ட விளக்கப்படத்தை மாணவர்களுக்குக் காட்டவேண்டும். மாணவர்கள் அதனை உன்னிப்பாக அவதானித்து வாசித்து, முந்தைய கட்டத்தில் விளக்கப்பட்டவற்றுடன் இதில் உள்ள ஒழுங்குகளை ஒப்பிடவேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட கழிவறை நெறிமுறைகளில் ஒன்றைக் குறிப்பிடும்படி கேட்கிறார். முதல் மாணவர் முதல் ஒழுங்கைக் கூற, சக நண்பர்கள் ஒழுங்கு முறைப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்குகளைக் கூற வேண்டும். ஒரு நண்பர் கூறியதை இன்னொருவர் மீண்டும் கூறலாகாது.
கழிவறை ஒழுங்குகளில் தான் எவ்வளவு அக்கறையாக உள்ளேன் என்பதை அவதானிக்கும்படி ஒவ்வொரு மாணவரிடமும் ஆசிரியர் கோரி, பின் தான் கடைபிடிக்காததை கண்டறிந்து, அதனைத் தொடர்ந்து செய்ய உறுதி கொள்ள வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, கழிவறை ஒழுங்குகளினூடாக மனிதனை கண்ணியப்படுத்துவதன் வெளிப்பாடுகளை தெளிவுபடுத்தல். நோக்க இலக்கம் 1, 3
ஆசிரியர் வீடியோ கிளிப்பைக் காட்டி, பின்னர் சில மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவரும் கழிப்பறைக்குள் நுழையும் ஒழுங்குகள் மூலம் இஸ்லாம் மனிதர்களை சிறப்பித்துள்ள விதங்களை விளக்க வேண்டும்.
பாடத்தில் கற்றுக்கொண்டவற்றின் ஒளியில் , சக நண்பரின் பதிலை மதிப்பீடு செய்யும்படி ஆசிரியர் மற்றொரு மாணவனைக் கோர வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் / கூட்டு முறை, மலசலம் கழிப்பதால் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை விளக்குதல்.
நோக்க இலக்கம் 3, 4
ஆசிரியர் செயல்பாட்டின் வாசகங்களை அட்டைகளில் எழுதி, அவற்றை மாணவர்களுக்கு எழுமாறாக விநியோகிப்பார். பின்பு, மாணவர்களிடம் செயல்பாட்டில் கூறப்பட்டுள்ள சூழ்நிலைகளை தொடராகக் கூறுவார். அப்போது, ஒவ்வொரு மாணவரும் அந்த சூழ்நிலையின் விளைவைப் பற்றி சிந்தித்து, அதற்குப் பொருத்தமான அட்டையை மேலே உயர்த்துவார்.
ஆசிரியர் மாணவர்களின் பதில்களைக் கவனிப்பார். தவறு செய்யும் மாணவர்களிடமிருந்து அட்டை திரும்பப் பெறப்படும். அவருக்கு சரியான பதில் கூறப்பட்ட பின்னர், சக நண்பர்களின் பதில்களைக் கவனிப்பார்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
ஒவ்வொரு மாணவரும் தனது புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்கிவேண்டும்.
ஆசிரியர் மாணவர்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, ஒவ்வொருவருக்கும் தகுந்த மதிப்பெண்களைக் கொடுத்து, உயர் மதிப்பெண்களை எடுத்த மாணவரைக் கண்டறிய வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களின் பதில்களை அவர்களுக்கு மீண்டும் விநியோகித்து, அவர்கள் செய்த தவறுகளைப் பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும், மேலும் அவற்றை எவ்வாறு திருத்துவது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு மாணவரும் தனது தவறான பதிலைத் திருத்திக் கொள்வார்கள்.
கே 1 : (பழம் தரும் மரம் - தடை செய்யப்பட்ட - மறைவுகள் - குர்ஆன்).
கே 3 :
- மலசலம் கழித்த பின் இடது கையால் அசுத்தத்தை நீக்குவேன்.
கழிவறையில் இருந்து வெளியேறியதும் "குஃப்ரானக" எனக் கூறுவேன்.
மலசலம் கழிக்கும் போது அதான் ஒலித்தால் பதில் கூற மாட்டேன்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கும், அதிலிருந்து பயனடையவும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
மலசலம் கழிக்கும் போது தாம் புரிந்துகொண்டிருந்த தவறான நடத்தைகளை ஒவ்வொரு மாணவரும் சரிசெய்தல்.
அவர்கள் ஒவ்வொருவரும் கழிப்பறை ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதில் சரியாக இருத்தல், அதே நேரத்தில் தனது குடும்பத்திற்கு அந்த ஒழுங்குகளை அறிமுகப்படுத்தி, அவற்றை செயல்படுத்தவும் கடைபிடிக்கவும் செய்தல்.
வெளியீட்டுரை-(பதிப்புரை)
மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவையும், தெளிவுகளையும் வழங்கி, அல்குர்ஆன் ஹதீஸ் மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக .
ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள், மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இறைவாழ்த்துக்குப் பின் : ஒரு நற்செயலை செய்வதற்கு முன் அது பற்றி கற்றுக்கொள்வது ஒரு அடியானின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். '(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத்தகுதியான வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்'.
(முஹம்மத் : 19).
இஸ்லாமிய அறிவு என்பது இச்சமூகத்தின் மிகப்பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும், இஸ்லாமிய ஆளுமைக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாகவும் காணப்படுகிறது.
ஆகையால், இஸ்லாமிய அறிவின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையமானது மக்களை விவேகம் மற்றும் அழகிய உபதேசத்தின் மூலம் இஸ்லாத்தின் பால் அழைத்தல், மேலும் வெளிநாட்டவர்களுக்கு அறிவூட்டல், மற்றும் ஷரீஆ ரீதியாக அவர்களைத் தகுதிப்படுத்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுடன் இயங்கிவருகிறது. அந்த வகையில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களில் ஓர் அங்கமாக (எனது மார்க்கத்தில் எனக்கு விளக்கத்தைத் தருவாயாக) எனும் தொனிப்பொருளில் 07 மொழிகளில் கருத்தரங்குகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தை மேம்பாடுத்தும் நோக்கில், மார்க்கக் கல்விக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்துவதில் புலமை கொண்ட, 'பஸாஇர் - கல்வி ஆலோசனை நிறுவன' த்துடன் தொடர்புகொண்டு, சங்கத்தினால் வழங்கப்படும் தரவுகள் அடங்கலாக, இப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அது கைச்சாத்திட்டுள்ளது. இதனடிப்படையில், ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்றவகையில் மாணவர் நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதலாம் தரம் 40 பாடங்களை உள்ளடக்கியுள்ளது
- இரண்டாம் தரம் - இது 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
- மூன்றாம் தரம் - இது 30 பாடங்களைக் கொண்டுள்ளது.
பாடங்களை வினைத்திறனுடன் கற்பிப்பதற்கு உதவும் வகையில், மாணவருக்கான ஒவ்வொரு பாடநூலுடனும் ஆசிரியருக்கான வழிகாட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட ஆவணத்தை மேம்படுத்தல், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளைத் தயாரித்தல் ஆகியன, மார்க்கக் கல்விப் பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவால் தீர்க்கமான தயாரிப்பு மற்றும் நுணுக்கமான மதிப்பாய்வு போன்ற செயல்முறைகளினூடாக கடந்து வந்துள்ளன.
இறுதியாக, இச்செயற்திட்டத்தின் மூலம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நல்ல பல நன்மைகள் கிட்ட வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம். இப்புத்தகத்தை அழகிய முறையில் வெளிவர பங்களிப்புச்செய்த அனைவருக்கும் நற்பாக்கியமும், சுவனமும் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக்கொள்வதோடு, இப்புத்தகம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எமது சமூகவலைத்தளத்தின் மூலமும், தொடர்பு இலக்கம் மூலமும் தெரிவிப்பதை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக!
அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்
முன்னுரை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! ஸலாதும் ஸலாமும் இறுதி நபி முஹம்மத் பின் அப்துல்லாஹ், மற்றும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தவர், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக.
மதிப்பிற்குரிய ஆசிரியரே, கற்பித்தல் பணி மிக கண்ணியமிக்க பணிகளில் ஒன்றாகும். இது நபிமார்கள், சீர்திருத்தவாதிகளின் பணிகளில் ஒன்றாகும். பொதுவாக சமூகத்தையும், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தையும் மேம்படுத்துவதில் இதற்குப் பாரிய பங்களிப்புண்டு.
உங்களது மாபெரும் பங்களிப்பை மதித்து, பணியை செவ்வனே நிறைவேற்றிட உதவும் இவ்வழிகாட்டியை நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.
இதன் மூலம் கற்பித்தல் பணி அதிக சுவாரஸ்யமுள்ளதாகவும், தனித்துவமான பெறுபேறுகளைத் தரக்கூடியதாகவும் இருக்கும். மாணவர்களின் தரங்கள் மற்றும் சூழலுக்குப் பொருந்தும் வகையில் பாடங்களுக்கான திட்டவரைபுகளை இவ்வழிகாட்டி கொண்டுள்ளது. இது மாணவர்களின் புத்தகம், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு முறைகள் ஆகியவற்றின் இலக்குகள் மற்றும் நோக்கங்களுடன் பிணைந்ததாக உள்ளது.
ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள பாடக் கூறுகள்
இந்த வழிகாட்டி நூல் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பிரதான பல தலைப்புக்களை உள்ளடக்கியது. அவையே கற்பித்தல் முறையின் மிக முக்கியமான பகுதிகளாகும். பின்வருவன இப்பிரதான கூறுகளில் முக்கியமானவையாகும் :
தரவு பெட்டி:
இதில் பாடத்திற்கான உத்தேச நேரம், கற்க வேண்டிய புதிய சொற்கள், பயன்படுத்தப்படும் பாடவிதானங்கள், பாடம் குறிப்பிடும் மதிப்புகள், போக்குகள் மற்றும் முன்மொழியப்பட்ட கற்பித்தல் உத்திகள் ஆகியன உள்ளன.
பாடத்தைக் கொண்டுசெல்லும் படிமுறைகள் :
இது பின்வரும் படிமுறைகளை உள்ளடக்கியுள்ளன :
1. பாடத்திற்கான நுழைவு : மாணவரை பாடத்தின்பால் ஈர்க்கும் நோக்கில் இது பல முறைகளைக் கொண்டு அமையும் : பாடத்தின் நுழைவாக அமையும் வகையில் சிறு சிறு வினாக்கள், பாடத்துடன் தொடர்பான நடைமுறைச் சம்பவம், சென்ற பாடத்துடன் இன்றைய பாடத்தைத் தொடர்புபடுத்துதல், நவீன கற்பித்தல் வழிகளைப் பயன்படுத்துதல் ஆகியன இவற்றுள் சிலவாகும்.
2. இறுதிச் சுருக்கம் (சாரம்சம்) : ஒரு மாணவர் குறித்த தலைப்பில் கற்ற பின் அவர் பெற்றுக்கொள்ளும் அறிவுகள், விளக்கங்கள், யதார்த்தங்களையே இதன் மூலம் நாம் நாடுகிறோம். மாணவர்களின் புரிதல்களாக இருக்கவேண்டிய பதில்களை இவ்வழிகாட்டி உள்ளடக்கியுள்ளது. அதில் கவனம் செலுத்தி, மாணவர்களுக்கு அதனைத் தமது அப்பியாசப் புத்தகங்களில் எழுத வழிகாட்டுவது ஆசிரியரின் கடமையாகும்
3. செயல்பாடுகள் : தான் கற்றுப் புரிந்துகொண்ட பாடங்களை புதிய சூழல்களில் நடைமுறைப்படுத்த மாணவனைப் பயிற்றுவிப்பதை இது குறிக்கும். பாடத்தின் உள்ளடக்கத்தில் ஏற்பட வாய்ப்புள்ள குறைகளை நிரப்பும் நோக்கில் அந்த செயற்பாடுகள் அமைக்கப்பட்டிருக்கும். தனது மேற்பார்வையில் இச்செயல்பாடுகளை அமுல்படுத்த மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியருக்கு அவசியமாகும். இந்த செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் இணைக்கப்பட்டு அதை அடைவதற்கு பங்களிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாடங்களில் இருந்து கற்றுக்கொண்ட அறிவை நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவது என்பது குறித்து தங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
4. மதிப்பீடு : பாடத்தின் நோக்கங்கள் எந்த அளவிற்கு அடையப்பட்டுள்ளன, மற்றும் எதை அடையவில்லை என்பதை அளவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, பாடத்தில் உள்ள ஒவ்வொரு கேள்வியும் அதன் நோக்கங்களுடன் எந்த அளவிற்கு தொடர்புடையது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசிரியரின் கல்வியறிவை மேம்படுத்தும் முயற்சியில் பாடங்களின் கேள்விகளுக்கான சில பதில்களை இந்த வழிகாட்டி உள்ளடக்கியது.
5. உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்: இது மாணவர் பாடத்தில் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களை செயற்படுத்தவும், அதை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் நடைமுறைப்படுத்தவும் உள்ளதாகும்.
இந்த வழிகாட்டி அமைக்கப்படுள்ள பண்படுத்தல் அடிப்படைகள்
முதலாவது : பாடத்திட்டத்தின் நோக்கங்கள் :
ஒவ்வொரு பாடத்திற்கும் நடைமுறை நோக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நோக்கங்களை வகுப்பதில் பின்வருபவை கவனிக்கப்பட்டுள்ளன:
இது ஆவணத்தின் திறன்களை நடைமுறையில் கொண்டுவருவதாக இருக்க வேண்டும்.
அறிவு, உணர்வு, திறமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும் விதத்தில் பால்வகைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
அது நடைமுறைச் சாத்தியமுள்ளதாகவும், அடையக்கூடியதாகவும், மாணவர்களின் நிலைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
கற்றல் நோக்கங்களின் நிலைகளுக்கு இடையே படிமுறை பேணல் (நினைவு செய்தல் - புரிந்து கொள்ளுதல் - அமுல்படுத்தல் - பகுப்பாய்வு செய்தல் - ஒருங்கிணைத்தல் - மதிப்பீடு செய்தல்).
ஒரு நல்ல இலக்கை உருவாக்குவதற்கான நிபந்தனைகளைப் பயன்படுத்துதல். அது அளவிடக்கூடிய மற்றும் கவனிக்கக்கூடிய நடத்தை விளைவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கற்பவரின் நடத்தையை விவரிப்பதில் கவனம் செலுத்தக் கூடியதாக இலக்கு இருப்பதோடு, அனுபவம் என்ற பிரயோகம் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
இரண்டாவது: உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் ஒழுங்கமைத்தல்:
பாடத்திற்கு வைக்கப்பட்டுள்ள நோக்கங்கள், அதை சரியாக நடைமுறைப்படுத்தல், மேலும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகுதிகளுக்கு பொருந்தும் வகையில் இருத்தல், மாணவர்களின் தரத்திருக்குப் பொருந்துதல், உள்ளடக்கத்தை எளிமையில் இருந்து ஆழத்திற்கு படிமுறையாகச் முன்வைத்தல், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்பதை உறுதி செய்வதன் மூலம் உள்ளடக்கத்தின் உண்மைத்தன்மையில் கவனம் செலுத்துதல், குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி உள்ளடக்கத்தை முன்வைத்தல், மாணவர்களுக்கு வசதியாக உள்ளடக்கத்தில் உள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் உள்ள கடினமான பதங்களை விளக்குதல், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் இடம்பெறும் அத்தியாயம், கிரந்தம் என்பவற்றைக் குறித்தல் என்பவற்றின் அடிப்படையில் உள்ளடக்கம் நிறுவப்பட்டுள்ளது.
மூன்றாவது: கல்வியியல் செயல்பாடுகளைக் கையாள்தல் :
கல்வியியல் செயல்பாடுகளில் பல தரநிலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றுள் சில :
அச்செயல்பாடுகளை பாடத்தின் நோக்கங்களுடன் தொடர்படுத்தி, அந்நோக்கங்களை அடைவதில் அவற்றின் பங்களிப்பைக் கவனத்திற்கொள்ளல்.
மாணவர் தனது ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் அவரது இயல்புநிலை மற்றும் பிற செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் சக மாணவர்களுடன் அவர் ஒத்துழைப்பது போன்றவற்றை கவனித்தல்.
கற்பித்தல் செயற்பாடுகளில் பன்முகத்தன்மை பேணல். செவிமடுத்தல் செயல்பாடுகள், ஆசிரியர் கூறுவதைப் போன்றே திரும்பத் திரும்ப கூறுதலின் அடிப்படையிலான செயல்பாடுகள், ஒரு தலைப்பைப் பற்றிய குறிப்பிட்ட விஷயங்களைச் சேகரிப்பது தொடர்பான செயல்பாடுகள், விளக்குதல், சுருக்கம், வகைப்படுத்துதல் மற்றும் மீள் வடிவமைத்தல் தொடர்பான செயல்பாடுகள், மனப்பாடம் செய்தல், கேட்டல் மற்றும் வாசித்தல் போன்றவற்றுடன் தொடர்பான செயற்பாடுகள், ஒழுங்கமைத்தல் செயற்பாடுகள், கணித செயற்பாடுகள் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.
நான்காவது: பின்வருவனவற்றை உள்ளடக்கிய கற்பித்தல் வழிமுறைகள்:
விவரணப்படங்கள், உதாரணங்கள் உள்ளடக்கிய பாடப்புத்தகங்கள்.
வகுப்பறையில் தொங்கவிடப்படும் பெரிய காட்சிப் பலகைகள்
குழுநிலை செயல்பாடுகளுக்கான அட்டைகள்
ஒலிப்பதிவு சாதனங்கள்
ஐந்தாவது: மதிப்பீட்டு முறைகளின் பன்முகத்தன்மை :
பாட உள்ளடக்கத்தின் வினாக்களை வடிவமைப்பதில் அவை பாட நோக்கங்களுடன் தொடர்புபட்டிருப்பதும், கிரகித்தல் அளவை மதிப்பதற்கான கேள்விகளில், சரி, பிழை அடையாளமிடும் கேள்விகள், இணைத்தல், பல தேர்வு வினாக்கள், பூரணப்படுத்தல் மற்றும் வரிசைப்படுத்துதல் ஆகிய அமைப்பில் பன்முகத்தன்மையும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. கற்றவற்றை மாணவர் பின்பற்றும் நடத்தைகளாக மாற்ற முயற்சிப்பதன் மூலம் உணர்ச்சி மற்றும் திறன் அம்சங்களை அளவிடவும் இது பயன்படுத்தப்பட்டது. உணர்ச்சி மற்றும் திறன் அம்சங்களை அளவிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வகுப்பறையில் ஆசிரியர்களால் கண்காணிக்கும் முறையும், அத்துடன் வீட்டில் பெற்றோர்களது கண்காணிக்கும் முறையும் தான் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆறாவது: கற்பித்தல் உத்திகள்:
இங்கே - அன்புள்ள ஆசிரியரே! - இந்த வழிகாட்டியில் பயன்படுத்தப்பட்ட சில கற்பித்தல் முறைகள் உள்ளன. அதைப் பற்றியும், அதன் நடைமுறைகள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான படிமுறைகளையும் அறிந்து கொள்வதற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
1. கூட்டாக கற்றல் முறை
இது ஒரு கற்பித்தல் முறையாகும். அது (2 முதல் 6 மாணவர்கள் கொண்ட)சிறிய மாணவர் குழுக்களுக்குள் கற்றலை அடிப்படையாகக் கொண்டது. இதனால் மாணவர்கள் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். ஒருவர் மற்றவரின் தரத்தை உயர்த்தவும், பொதுவான கற்றல் இலக்கை அடையவும் இம்முறையில் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவரைக் கொண்டு, குழுவிற்குள் பணி பிரிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குழு உறுப்பினர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களின் பதில்களைச் சேகரித்து, ஆசிரியரிடம் வழங்குவார்.
2. கருத்துதிர்ப்பு :
இது சிந்தனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையாகும். மேலும் கருத்துதிர்ப்பு பல்வேறு கல்வி மற்றும் வாழ்க்கை சிக்கல்களைத் தீர்ப்பதில் குழு அல்லது தனிப்பட்ட சிந்தனைக்கான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மன திறன்கள் மற்றும் செயல்முறைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு, மிகப் பெரிய அளவிலான பரிந்துரைகள், தீர்வுகள் அல்லது தகவல்களை வழங்குதல், பின்னர் சரியான தீர்வு அல்லது கருத்தைப் பெறுவதற்காக அவற்றைச் செம்மைப்படுத்துதல் ஆகியன அவசியமாகும்.
3. சிக்கலைத் தீர்க்கும் முறை :
இந்த வழிமுறையில், ஒரு மாணவர் தனது அறிவையும் திறமையையும் பயன்படுத்தி, ஏற்கனவே சந்தித்துப் பழக்கமற்ற புதிய வடிவிலான ஒரு சூழ்நிலையை சமாளித்து, அதற்கான தீர்வை அடையலாம்.
சிக்கலை உணர்தல், அதை வரையறுத்தல், அது தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், தீர்வுகளை முன்மொழிதல், அவற்றை ஆராய்ந்து மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தல் என்பவை இதன் படிமுறைகளாகும்.
4. சொற்பொருள் வரைபடங்கள்:
வரைபடங்கள், மன வரைபடங்கள், கருத்து வரைபடங்கள் மற்றும் தகவல் வரைபடங்கள் என்றும் இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. இது ஒரு தலைப்பை அதன் பகுதிகள் ஊடாக பகுப்பாய்வு செய்து, அட்டவணைகள், வட்டங்கள் அல்லது முக்கோணிகள் போன்ற பல்வேறு வடிவங்களிலான வரைபடங்கள் மற்றும் திட்ட வரைபுகள் மூலம் வெளிப்படுத்தப்படும். தகவல்களைப் படிப்பதை எளிதாக்கி, அவற்றுக்கிடையில் இணைத்து, நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டுள்ளன.
5. சமச்சீர் உத்தி :
இந்த மூலோபாயம் மன திறன்களை செயல்படுத்தி, கூறுகள் மற்றும் பொருட்களுக்கு இடையே உள்ள உறவுகளை தெளிவுபடுத்துவதற்கும், ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காணவும் பகுத்தறிவைப் பயன்படுத்த உற்சாகமூட்டுகின்றது. அத்தகைய சிந்தனைக்கு அதிக படைப்பாற்றல் தேவைப்படுகிறது. ஏனெனில் பதில் எப்போதும் பிரதான கூறுகளுக்கு இடையே ஒரு புதிய பார்வையை வேண்டி நிற்கிறது.
6. கதைகூறும் முறை :
உற்சாகம், கவர்ச்சி மற்றும் மாணவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தல் என்பவை கதை கூறும் முறையில் தனித்துவங்களாகும். கதை கற்பனையை வளர்க்கிறது, உணர்ச்சிகளைத் தூண்டுகிறது, முடிவுகளுடன் அறிமுகங்களை இணைக்கச் செய்கின்றது. மற்றும் வெறும் ஒரு கருத்தை புலனுறுப்புக்களால் உணர முடியுமான யதார்த்தமாக மாற்றுகிறது. கதை, நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்பைச் சார்ந்தது. அதே நேரத்தில் மாணவர் அவற்றுடன் ஊடாடவும், தான் கற்பவற்றுடன் அவற்றை இணைத்துப் பார்க்கவும் தூண்டுகிறது. கதையை முன்வைக்கும் மொழி, பாணி மற்றும் மாணவர்களுக்கு அது பொருத்தமாக இருப்பது என்பவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
7. வாழ்க்கை பயன்பாட்டு முறை :
இந்த முறையானது, தகவலை வாழ்க்கை சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளுடன் இணைக்க முயற்சிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாணவர் உள்ளடக்க பாடங்களை ஆர்வத்துடன் படிக்க உதவும். ஏனெனில் அதில் சில தவறுகள் மற்றும் எதிர்மறையான விடயங்கள் திருத்தப்படுவதையும், நேர்மறையான விடயங்கள் ஆர்வமூட்டப்படுவதையும், மேலும், இஸ்லாம் கொண்டு வந்த சட்டத் தீர்ப்புகள் மற்றும் ஒழுக்க விதிகளுடன் இணைக்கப்படுவதையும் காண்பார், எனவே இஸ்லாம் தனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது என்று அம்மாணவர் உணர்வார்.
"சிந்தி-ஒருங்கிணை-பகிரு" எனும் உத்தி:
சிந்தி-ஒருங்கிணை-பகிரு எனும் உத்தி மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு கூட்டு விவாத உத்தி ஆகும்: முதலாவதாக, கேள்விக்கு பதிலளிக்கவோ, செயல்பாட்டைச் செய்யவோ மாணவர் தனியாக சிந்திக்கும் வாய்ப்பை ஆசிரியர் கொடுப்பார். பின்னர், அவர் தனது பதிலை தனது சக நண்பர் ஒருவருடன் விவாதிப்பார். இது இரண்டாவது கட்டமாகும். மூன்றாவதும், இறுதியானதுமான கட்டத்தில், குழு உறுப்பினர்கள் எட்டப்பட்ட பதில்களைப் பற்றி தங்கள் கருத்துக்களைப் பரிமாறி, விவாதித்து, குழுவின் பொதுக் கருத்தாக அமையும் ஒரே ஒரு பதிலை நோக்கி நகர்வார்கள்.
கற்றல் செயல்பாட்டில் இந்த உத்தி மிகவும் முக்கியமானது. மாணவர்கள் தகவல்களை திறம்பட செயலாக்க உதவுவதால், அவர்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்து, அவர்களின் சிந்தனையை மேம்படுத்துகிறது.
9. முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் :
முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் என்பது, கற்பித்தல் சூழ்நிலையின் தொடக்கத்தில், தலைப்பின் அமைப்பு மற்றும் கையாளப்பட வேண்டிய தகவல்கள் பற்றிய சுருக்கமான, அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதாகும். இதன் நோக்கமாவது, கருத்தாக்கங்கள், சிந்தனைகள் மற்றும் தலைப்புடன் தொடர்புடைய விவகாரங்களைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குவதும், மாணவர் ஏற்கனவே அறிந்ததை அவர் தெரிந்து கொள்ள வேண்டியவற்றுடன் இணைப்பதுமாகும்.
முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: அவை எழுதப்பட்ட முன்கூட்டிய அமைப்புகள் மற்றும் எழுதப்படாத முன்கூட்டிய அமைப்புகள் ஆகும். எழுதப்பட்ட அமைப்புகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன: அவை விளக்க ஒழுங்கமைப்புகள் மற்றும் ஒப்பீட்டு ஒழுங்கமைப்புகள் ஆகும்.
எழுதப்படாதவற்றைப் பொறுத்தவரை, அவை ஆடியோ, காட்சி, ஆடியோ-காட்சி மற்றும் வரைபு அமைப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வரைபு அமைப்புக்கள்,தோற்றப்பாடுகளின் சில பகுதிகளை வரைபுகளில் காட்சிப்படுத்தும். இது ஒரு வரைபு அட்டவணையாகவும் இருக்கலாம். பாடத்தின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு இது காட்டப்படும்.
10. முன்னனுமானம்
இந்த முறையில், கற்பிப்பவர் கருதுகோள்களை உருவாக்குவார். அல்லது தலைப்பில் என்ன விவாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கூறுவார். இது கற்பவருக்கு ஒரு இலக்கை வழங்குகிறது. மற்றும் உள்ளடக்கத்தைக் கற்கும் போது, தனது அனுமானங்கள் சரியானதா? பிழையானதா? என அறிந்துகொள்ளும் நோக்கில் கவனம் செலுத்த வழிவகுக்கின்றது. கற்றவர் ஏற்கனவே தன்னிடம் உள்ள தகவல்களுடன் புதிய தகவலை இணைக்கும் வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.
படிக்கப்படும் தலைப்பு என்ன என்பதை அனுமானிக்க, பின்வருவனவற்றின் மூலம் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு உதவலாம் :
தலைப்பை வாசித்தல், பாடத்தின் நோக்கங்களைக் கற்றுக்கொள்ளல், அல்லது கேள்விகளைப் பயன்படுத்துதல்.
11. சுய கேள்வி (கேள்விகளை உருவாக்குதல்)
இம்முறையானது, கற்றல் செயல்முறையின் போதும், அதற்கு முன்னரும், பின்னரும் தலைப்பைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், சுய விழிப்புணர்வை உருவாக்குதல், உள்ளடக்கத்துடன் ஊடாடுவதை எளிதாக்குதல், புரிந்துகொள்ளுதல் மற்றும் நினைவுபடுத்திக்கொள்ளல் செயல்முறையை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, கற்கும் ஹதீஸ்களை அணுகும் போது, மாணவர் தனக்குள்ளேயே பல்வேறு கேள்விகளை தொடுத்துக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இது அவர் கற்றுக் கொள்ளும் தகவல்கள் மற்றும் அவர் அடையும் அறிவு ஆகியவற்றுடன் அவரை மேலும் நெருக்கமாக்கிவிடுகின்றது. மேலும் சிந்தனை செயல்முறைகள் பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது.
12. எனக்குத் தெரியும் - நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன் (KWL) என்ற உத்தி:
இந்த மூலோபாயம், மாணவர்கள் தலைப்பில் உள்ள தகவல்களை அனுமானிக்கவும், அவற்றை ஏற்கனவே அறிந்துள்ளவற்றுடன் இணைக்கவும் உதவுகிறது.
குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அந்தத் தலைப்பைப் பற்றிய மாணவர்களின் புரிதல் மற்றும் அவர்களின் புரிதல் பிழைகளை மதிப்பிடுவதற்கும் ஆசிரியர் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த உத்திக்கு KWL எனக் குறிக்கப்படுகிறது, இது பின்வரும் சொற்றொடர்களின் சுருக்கமாகும்:
(K): know (தெரியும்), (W): Want (தெரியவேண்டும்), (L): Learned (கற்றது).
முதல் வார்த்தை கற்பவர் பாடத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்ததை குறிக்கின்றது. இரண்டாவது வார்த்தை, அவர் பாடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவவற்றைக் குறிக்கின்றது. மூன்றாவது வார்த்தை, மாணவர் பாடத்தைப் பற்றி பின்னர் கற்றுக்கொண்டதை குறிக்கின்றது.
13. முன்னோக்குகளை பகுப்பாய்தல் உத்தி :
இந்த மூலோபாயம் கற்பவர் தனது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது. மேலும் பல்வேறு சூழ்நிலைகளில் அவர் ஏற்றுக்கொண்டுள்ள, விவகாரங்களைப் பற்றிய அவரது பார்வையிலும், நிகழ்வுகளுடனான அவரது எதிர்வினையாற்றலிலும் தாக்கம் செலுத்துகின்ற கருத்துக்கள், சிந்தனைகள், கொள்கைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கண்ணோட்டங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது. இந்த மூலோபாயம் அவரது கண்ணோட்டங்களைப் பற்றி மேலும் ஆழமாக சிந்தித்து, அது எந்தளவு சரியானது, குறிப்பிட்ட சூழ்நிலைக்கோ, அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்கோ எந்தளவு பொருத்தமானது என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை அவருக்கு வழங்கும். கண்ணோட்டத்தை பகுப்பாய்வு செய்வதன் விளைவாக, (அது பொருத்தமானது மற்றும் சரியானது என்றால்) அதனை ஆதரித்து ஏற்றுக்கொள்ளவோ, அல்லது (தேவைப்பட்டால்) அதில் மாற்றங்கள் செய்யவோ அல்லது (அது பொருத்தமற்றது மற்றும் தவறானது என்றால்) அதனை நிராகரிக்கவோ வழிகாட்டுகின்றது.
முடிவில், என் மதிப்பிற்குரிய ஆசிரியரே :
இந்த வழிகாட்டி உங்கள் கைகளில் உள்ள ஒரு கருவியாகும். அது நன்றாகப் பயன்படுத்தப்பட்டால் அது பலனைத் தரும். இல்லையெனில் அது எப்பயனையும் தரமாட்டாது. உங்கள் திறன்களை மட்டுப்படுத்துவதோ அல்லது உங்கள் படைப்பாற்றலை தடுப்பதோ இதன் நோக்கமல்ல.
அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் பகுதி
முதல் பாடம் : அல்குர்ஆன் ஓதலின் ஒழுங்குகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அல்குர்ஆன் - கண்ணியமிக்க தூதுவர்கள் - சிரமபப்படுகின்றார்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - சில அல்குர்ஆன் வசனங்கள் ஓடியோ பதிவு)
சில குர்ஆன் வசனங்கள்.
கற்பித்தல் உத்திகள்:
(கூட்டு கற்கைமுறை - உரையாடல் - கருத்துதிர்ப்பு)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்குர்ஆனின் மகத்துவம் மற்றும் தனித்துவங்களை உணர்த்துதல்.
அல்குர்ஆனை மகத்துவப்படுத்தி, அதற்குரிய கடமைகளை மேற்கொள்ளல்.
அல்குர்ஆனையும் அதனுடையவர்களையும் நேசித்தல்
பாடத்தின் அறிமுகம்:
அல்குர்ஆனைத் தினமும் பேணி ஓதிவரும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் அவ்வாறு ஓதுவதில் அக்கறை கொள்வதற்கான காரணத்தைக் கேட்கவும். அவர்களுகடை பதில்களைப் பாராட்டி, இதில் அவர்கள் பிறருக்கு முன்மாதிரியாகப் பார்க்கப்படுவார்கள் என்பதைத் தெளிவுபடுத்தவும். பின்னர் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்களை பாடத்தை மௌனமாக வாசிக்கச் சொல்லுங்கள், பிறகு சத்தமாக வாசிக்க ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும்.
பாடத்தின் முக்கிய கூறுகளை ஒன்றன் பின் ஒன்றாக விவாதித்து முடிப்பதற்காக அவற்றை கரும்பலகையில் எழுத சிலரைப் பணியுங்கள்.
இரண்டாம் கட்டம்:
கூட்டு கற்கைமுறையைப் பயன்படுத்தி மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, அல்குர்ஆனின் சிறப்புக்களைத் தெளிவுபடுத்த தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அனைத்துக் குழுக்களையும் கோருங்கள்.
தாம் அடைந்த முடிவுகளை எழுத ஒவ்வொரு குழுவிலும் ஒரு உறுப்பினரை நியமிக்கவும். பின்னர் அவர்களின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
உரையாடல் முறையைப் பயன்படுத்தி பின்வரும் இரு வினாக்களையும் மாணவர்களுடன் விவாதிக்கவும்.
அல்குர்ஆனை ஓதுவதனால் கிடைக்கும் கூலி என்ன?
அல்குர்ஆன் ஓதும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ன?
அவர்களது விடைகளினூடாக படிப்பினைகளைக் கண்டறிந்து, அவற்றை கரும்பலகையில் எழுதவும். பின்வருவன அவற்றில் மிக முக்கியமானதாகும் :
இறுதிச் சுருக்கம் :
1. ஒவ்வொரு முஸ்லிமும் தனது தொழுகையை நிறைவேற்றவும், தனது மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் போதியளவு புனித குர்ஆனிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
2. அல்குர்ஆன் ஓதுதுல் மிகச் சிறந்த திக்ராகும், அல்லாஹ்விடம் அதற்காக மகத்தான கூலியுண்டு.
3. ஒரு முஸ்லீம் புனித குர்ஆனை ஓதும்போது சில ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் : வுழூச் செய்தல் மற்றும் ஆடை மற்றும் இடத்தின் தூய்மை போன்றன அவற்றில் அடங்கும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, அல்குர்ஆன் ஓதுவதன் ஒழுங்குகளை அமுல்படுத்துதல்
நோக்க இலக்கம் 4
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் முதல் செயல்பாட்டிற்கு விடையளிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் ஒவ்வொரு குழுவும் தாங்கள் பதிலை தனியான ஓர் அட்டையில் எழுத வேண்டும்.
ஆசிரியர், குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, சரியான பதிலைக் கண்டறிவதிலும், மிக முக்கியமான பாராயண ஒழுங்குகளை தீர்மானிப்பதிலும் மிகவும் திறமையாக செயல்பட்ட குழுவை அடையாளம் காண வேண்டும். மேலும், தவறிழைத்தவர்களுக்கு திருத்திக்கொடுக்கவேண்டும். நுணுக்கமான விடைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதியவர்களிடம் சக நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுமாறு கூறவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, அல்குர்ஆனைத் தொடர்ந்து ஓதுவதன் பயனைத் தெளிவுபடுத்துதல். நோக்க இலக்கம் 1, 3
செயல்பாட்டை நிறைவேற்ற மாணவர்களை இருவரிருவாராக நியமிக்கவும்.
செயல்பாட்டின் ஒவ்வொரு கூறுகளையும் நீங்கள் கூறவும். பின்னர், ஒவ்வொரு குழுவின் பதிலையும் பார்த்து, ஒவ்வொரு அணிக்கும் பொருத்தமான மதிப்பெண்ணைக் கொடுத்து, அதிக மதிப்பெண் பெற்ற அணியை அடையாளப்படுத்தவும்.
ஏனைய குழுக்களின் தவறான பதில்களைத் திருத்திக்கொடுக்க இந்த அணியை நியமித்து கௌரவப்படுத்தவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:
1. கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும்.
2. ஒவ்வொரு குழுவும் கற்பித்தல் அட்டையில் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.
3. மதிப்பீட்டிற்காக, ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவுடன் பதில்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
4. சரியான பதிலைக் கூறிய குழுவைப் பாராட்ட வேண்டும்.
கேள்வி 1 : - - - .
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அல்குர்ஆனை ஓதுதல், உன்னிப்பாக அதனை செவிமடுத்தல் மற்றும் சூழ உள்ளவர்களிடமும் அதனை அமுல்படுத்த வழிகாட்டுதல்.
குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கும் அதை சரியாக ஓதப் பயிற்சி பெறுவதற்கும், குர்ஆன் வகுப்புக்கள் போன்றவற்றில் சேருவதில் ஆர்வம் காட்டல்.
பாடம் இரண்டு : கண்ணியமிகு குர்ஆன் பிரதியும், அதனைக் கையாளும் ஒழுங்குகளும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (குர்ஆன் பிரதி - மதித்தான் - அவமதித்தான்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கண்டுபிடிப்பு கற்றல் - கட்டமைப்பியல் கற்றல் - தவறான கருத்துக்களை சரிசெய்தல் - கண்ணோட்டங்களை பகுப்பாய்வு செய்தல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
குர்ஆன் பிரதியை கண்ணியப்படுத்துதல்.
குர்ஆன் பிரதியை இழிவுபடுத்துவதை எச்சரித்தல்.
குர்ஆன் பிரதியின் மகத்துவத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
கரும்பலகையில் இந்த சொற்றொடரை எழுதிவிட்டு, அதன் அர்த்தம் தொடர்பாக அவர்களுடன் விவாதிக்கவும். (குர்ஆன் பிரதியை மகிமைப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். ஏனெனில் அதில் அல்லாஹ்வின் வார்த்தைகள் உள்ளன. யார் புனித குர்ஆனை மதிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் வல்ல இறைவனை மதிக்கிறார்கள், குர்ஆன் பிரதியை அவமதிப்பவர் எல்லாம் வல்ல இறைவனை அவமதிக்கிறார்.) பின்னர் பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
கண்டுபிடிப்பு கற்றல் முறையினூடாக பின்வரும் சொற்றொடரை கரும்பலகையில் எழுதவும், அதனை அவர்கள் உன்னிப்பாக அவதானித்து, பின்னர் அதன் கருத்தை அடையாளப்படுத்துவார்கள்.
(இது அல்குர்ஆன் வசனங்களை ஒன்று சேர்த்துள்ள ஒரு நூலின் பெயர்... அது என்ன?)
ஆசிரியர் ஒரு பெரிய குர்ஆன் பிரதியின் படத்தை காட்சித் திரையில் காட்டி, கட்டமைப்பியல் கற்றல் முறை ஊடாக, குர்ஆன், அதன் ஸூராக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் ஜுஸ்உகள் பற்றிய மாணவர்களின் முந்தைய அறிமுகப் பின்னணியை அடையாளம் காண வேண்டும். இந்த கூறுகளுக்கான அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்த பிறகு, அவர் அவற்றை அவர்களுக்கு விளக்கி, ஒழுங்கமைக்கப்பட்ட விளக்க வரைபடத்தின் வடிவத்தில் அவற்றைக் காட்ட வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
பின்வரும் சொற்றொடரைக் கரும்பலகையில் எழுதவும். பின்னர், சக நண்பர்களுக்கு வாசித்துக் காட்ட ஒரு மாணவரைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாசகத்திலிருந்தும் தாம் உணர்ந்ததை ஒரு வாக்கியத்தில் கூறும் வகையில், அதைப் பற்றி கவனமாக சிந்திக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
குர்ஆன் பிரதியை மகத்துவப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
அல்குர்ஆனை மதித்தவர் அல்லாஹ்வை மதித்தவராவார்.
அல்குர்ஆனை அவமதித்தவர் அல்லாஹ்வை அவமதித்தவராவார்.
மூன்றாம் கட்டம்:
பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களுக்குக் காட்டி, அவற்றில் என்ன தவறு உள்ளது மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கண்டறியும்படி அவர்களிடம் கேளுங்கள்:
ஒருவர் கழிவறையிலிருந்து வெளியேறியதும், வுழூ இன்றி குர்ஆன் பிரதியைத் தொட்டார்.
தனது குர்ஆன் பிரதி காணாமல் போய்விடுமோ என்று அஞ்சி ஒருவர் கழிவறைக்குச் செல்லும் போதும் அதனை உடன் எடுத்துச் சென்றார்.
பள்ளியில் ஒருவர் குர்ஆன் பிரதியைத் தலையணையாக வைத்துத் தூங்கினார்.
பாதிமா தனது குர்ஆன் பிரதியை எழுந்து சென்று நூலகத்தில் வைப்பதற்காக, தற்காலிகமாக தரையில் வைத்தாள்.
அலீயின் தாய் குர்ஆன் வசனங்கள் உள்ளடக்கப்பட்ட சில தாள்களில் சில உணவுகளைப் பொதி செய்தாள்.
ஹுஸைனின் குர்ஆன் பிரதி சேதமாகிவிட்டது. எனவே, அவர் ஒரு பெட்டியில், தனது பழைய நூற்களுக்கு இடையில் அதை வைத்துவிட்டார்.
பின்னர் அவர்களிடம் குர்ஆன் பிரதியை மகத்துவப் படுத்துவதின் பல்வேறு வடிவங்களைக் கூறுமாறு வேண்டவும். அவர்கள் கூறுவதைக் கரும்பலகையில் எழுதி விட்டு, அவர்கள் தாம் முன்மொழிந்ததை பாடநூலில் வழங்கப்பட்டவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, பாடத்தின் உள்ளடக்கத்தில் வழங்கப்பட்ட குர்ஆனை மகிமைப்படுத்தும் படங்களை உள்ளடக்கிய சொற்பொருள் வரைபடத்தை அவர்களுக்குக் காட்டவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தில் தாம் கற்றுக்கொண்ட, குர்ஆன் பிரதியை மகத்துவப்படுத்தும் வடிவங்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு மாணவரும் விளக்கத்துடன் கூறி, அதற்கு முரண்படும் விதத்தில் தான் கண்ட ஒரு சந்தர்ப்பத்தையும் கூறும்படி வேண்டுங்கள்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, குர்ஆன் பிரதியை மகத்துவப்படுத்தும் வடிவங்களைக் கண்டறிதல். நோக்க இலக்கம் 4
முதல் செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு கேள்விகளையும் மாணவர்களுக்குக் காட்டி, அவற்றுக்கான அவர்களின் பதில்களைக் கண்டறியவும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை அவர்கள் அறியும்பட்சத்தில் அவற்றைத் தம் கொப்பிகளில் பதிய வைக்கவும். பதில் தெரியாத கேள்விக்கான சரியான பதிலைப் பெறுவதற்கு, மனித, இலத்திரனியல் மற்றும் புத்தக மூலங்களை அணுகும் படி அவர்களிடம் கோரவும். அந்தப் பதில்களை அடுத்த பாடத்தில் பார்க்கவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, இலத்திரனியல் குர்ஆன் பிரதியைத் தொடுவதற்கு வுழூச் செய்வதன் சட்டத்தை அறிதல் நோக்க இலக்கம் 3
இன்று கணினிகள் மற்றும் தொலைபேசிகள் மூலம் மின்னணு குர்ஆன்கள் பரவலாக உள்ளன என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவும். மேலும், சுத்தம் போன்றவற்றைக் நிபந்தனையிடுவதில் சாதாரண குர்ஆன் பிரதியின் சட்டத்தை அது பெறுமா? என்பது பற்றிய அவர்களின் கருத்தை விளக்குமாறு கேளுங்கள். மாணவர்களின் பதில்களைக் கண்டறிந்து மதிப்பீடு செய்த பிறகு, இந்தச் செயல்பாடு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பார்க்க, அவர்களின் புத்தகங்களில் உள்ள இணைப்பைப் பார்க்கச் சொல்லுங்கள்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, குர்ஆன் பிரதி பற்றி மேலதிகமாக அறிதல்
நோக்க இலக்கம் 1, 2
ஆசிரியர் ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் மூன்றாவது செயல்பாட்டிற்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் அதன் கூறுகளில் ஏதேனும் ஒன்றைப் பதிலளித்ததும், சக நண்பர்கள் அதைக் கவனித்து மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஆசிரியர் செயல்பாட்டின் ஒவ்வொரு கூறுகளையும் வரிசையாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும், அதற்கு பதிலளித்த குழுவில் உள்ள நபரையும் அடையாளம் கண்டு, ஒவ்வொரு குழுவிற்கும் பொருத்தமான தரத்தை வழங்க வேண்டும்.
ஆசிரியர் அதிக மதிப்பெண் பெற்ற குழுவைத் தீர்மானித்து, அவர்களைப் பாராட்டி, ஒவ்வொரு குழுவிலும் சரியாகப் பதிலளித்தவர்களின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்.
மதிப்பீடு :
முதல் கேள்விக்கு பதிலளிக்க, மாணவர்களுக்கு ஒரு பாதியில் (✓) குறியும், மற்ற பாதியில் (✖) குறியும் உள்ள கற்பித்தல் அட்டைகளை விநியோகிக்கவும். பின்பு நீங்கள் தொடராக கேள்வி வாசகங்களை வாசிக்க, ஒவ்வொரு மாணவரும் அவ்வாசகங்களுக்குப் பொருத்தமான அட்டையை உயர்த்த வேண்டும். பின்னர் அவற்றை மதிப்பீடு செய்து, பொருத்தமான பின்னூட்டல்களை வழங்கவும்.
கேள்வி 1 : (✓) - (✓) - (×) - (✓) - (✓)
மூன்றாவது கேள்விக்கு தனித்தனியாக பதிலளிக்க ஒவ்வொரு மாணவருக்கும் கட்டளையிடுங்கள். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் சக நண்பரின் பதிலுடன் தனது பதிலைப் பரிமாறி, அதை மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும். தாங்கள் மதிப்பீடு செய்த பதில்கள் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்காக சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பாடத்தில் பங்கேற்பதற்கு முன்முயற்சி எடுக்காத மாணவர்களில் சிலரைத் தேர்வுசெய்து, அவர்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கேள்வியில் உள்ள துணைக் கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க கோரவும். அவர்கள் தவறாக பதிலளிக்கும் பட்சத்தில், வேறு சிலரைத் தெரிவு செய்து, சரியான பதிலைக் கூறவைக்கவும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
பாடத்தில் கற்றுக் கொண்ட, குர்ஆன் பிரதியை கண்ணியப்படுத்தும் வடிவங்களை அமுல்படுத்தவும், சூழவுள்ளவர்களும் அவற்றைக் கடைபிடித்து ஒழுக அவர்களுக்கும் கற்றுக் கொடுக்கவும் ஆர்வம் காட்டுதல்.
திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்ற அல்லது அதனை மகிமைப்படுத்துவதுடன் முரண்படக்கூடிய சில நபர்களின் தவறான நடத்தைகள் அல்லது செயல்களை சரிசெய்ய முயற்சித்தல்.
பாடம் மூன்று : ஆயதுல் குர்ஸீ விளக்கம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அனைத்திற்கும் பொறுப்பாக இருப்பவன் - சிறு தூக்கம் - அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்துவதில்லை).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - ஆயதுல் குர்ஸி பதிவு செய்யப்பட்ட ஓடியோ)
ஆயதுல் குர்ஸீ).
கற்பித்தல் உத்திகள்:
(கூட்டுறவு கற்றல் - சூடான இருக்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வை நேசிப்பதும், மகத்துவப்படுத்துவதும், அஞ்சுவதும்.
ஆயதுல் குர்ஸீ வசனத்தின் சிறப்பை கண்ணியப் படுத்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட ஆயதுல்குர்ஸியுடன் கூடிய கற்பித்தல் பலகையை மாணவர்களுக்குக் காட்டுங்கள். பின்னர் அதனை வாசித்துக் காட்டி, அவ்வசனம் எவ்வத்தியாயத்தில் வருகின்றது என வினவுங்கள். அவர்கள் ஸூரா பகராவில் என அறிந்திருக்க வாய்ப்புள்ளது. பின் இவ்வசனத்தின் பெயரைப் பற்றி வினவுங்கள். அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்று, பின் "இந்த மகத்தான வசனத்தைப் பற்றித்தான் எமது இன்றைய பாடத்தில் கற்கப் போகிறோம்" என அவர்களுக்குக் கூறுங்கள். பின் கரும்பலகையில் பாடத்தின் தலைப்பை எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
அந்த வசனத்தை அவதானித்து விட்டு, ஓடியோ மூலம் ஓதுவதை செவிமடுப்பதற்காக மௌனித்திருக்குமாறு மாணவர்களைக் கோரவும்.
இரண்டாம் கட்டம்:
அவ்வசனத்தின் சாராம்சத்தை விளக்கிவிட்டு, அதன் கலைச்சொற்களின் கருத்துக்களை விரிவாக மாணவர்களுடன் கலந்துரையாடவும்.
மூன்றாம் கட்டம்:
கூட்டு கற்கை முறையைப் பயன்படுத்தி, மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, அயதுல்குர்ஸியில் உள்ள அல்லாஹ்வின் பண்புகளைப் பிரித்தெடுக்க ஒத்துழைக்க ஒவ்வொரு குழுவையும் கேளுங்கள்.
தாம் கண்டறிந்த அப்பண்புகளை கரும்பலகையில் எழுத குழுவிலிருந்து ஒருவரைப் பணித்து, அவர்களுடைய செயல்திறனுக்குக் கருத்துரை வழங்கவும்.
இறுதிச் சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் அவர் அடைந்த முடிவுகளில் ஒன்றைக் கூறச் சொல்லுங்கள்.
அவர்களுடைய பதில்களை கரும்பலகையில் பதிந்து, கருத்துரை வழங்குங்கள்.
பாடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்க்க புத்தகத்தைப் பார்க்கச் சொல்லவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அல்லாஹ்வின் பண்புகளை அறிவிக்கும் சொற்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் 3
பாடப்புத்தகத்தில் உள்ள முதல் செயல்பாட்டைத் திறக்குமாறு மாணவர்களுக்குக் கூறவும்.
அதற்குரிய பதிலை சிந்திக்குமாறு அவர்களிடம் கோரி, கண்டறிந்த பதில்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, ஆயதுல் குர்ஸியின் சிறப்பைக் கண்டறிந்து, அதனை ஓதும் நேரங்களையும் வரையறுத்தல். நோக்க இலக்கம் 2, 4
ஹதீஸை வாசிக்க மாணவர்களுக்கு வழிகாட்டி, இருக்கை உத்தியை பின்வருமாறு பயன்படுத்தவும் :
மாணவர்களை ஒரு வட்டத்தில் உட்கார வைக்கவும், வட்டத்தின் மையத்தில் ஒரு நாற்காலியை வைக்கவும்.
மாணவர்களில் ஒருவரை சூடான நாற்காலியில் உட்காரத் தேர்ந்தெடுக்கவும்.
சக நண்பர்கள் அவரிடம் பின்வருவன போன்ற சில கேள்விகளைக் கேட்பார்கள்:
1. ஆயதுல் குர்ஸியின் சிறப்பைக் கூறுங்கள்.
2. ஆயதுல் குர்ஸீ ஓதுவது ஸுன்னத்தாகும் சந்தர்ப்பங்களை கூறவும்.
மாணவர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு வழிகாட்டவும். பின்னர் துல்லியமான பதிலை அடையாளப்படுத்தவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
ஒவ்வொரு மாணவரும் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க வேண்டவும்.
ஒவ்வொருவரும் மற்றவருடைய பதிலை மதிப்பீடு செய்வதற்காக, ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பருடன் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, சக நண்பரின் பதிலில் தாம் அடையாளம் கண்டு மாற்றியதைக் காண்பிக்கச் செய்யுங்கள்.
ஒருவருக்கொருவர் முன்வைக்கும் கருத்துக்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவும். பின்னர் மாணவர்களின் செயல்திறனைப் பற்றி கருத்து தெரிவிப்பதோடு, கேள்விகளுக்கான பொருத்தமான பதிலைத் தெளிவுபடுத்தவும்.
கேள்வி 1 : - - - .
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தொழுகைகளுக்குப் பின்னர், தூங்க முன், காலை, மாலையில் ஆயதுல் குர்ஸியை ஓதுவதில் ஆர்வம் செலுத்தவும்.
ஆயதுல் குர்ஸீயின் சிறப்பையும், அது உள்ளடக்கியுள்ள அல்லாஹ்வின் பண்புகள் பற்றியும் குடும்பத்தினர், சூழ உள்ளவர்களுக்கு அறியப்படுத்துதல்.
தகாஸுர் மற்றும் அஸ்ர் அத்தியாயங்களின் விளக்கம்
பாடம் நான்கு :
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(பராக்காக்கி விட்டது - செல்வத்தைப் பெருக்கும் ஆசை - நஷ்டம் - ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தார்கள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - அவ்விரு அத்தியாயங்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
கற்பித்தல் உத்திகள்:
(உரையாடல், விவாதித்தல் - குறியீட்டு அமைப்புக்கள் - கூட்டு கற்கைமுறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உலக மோகத்தை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
அல்லாஹ்வின் அருட்கொடையை மதித்தல்
மறுமை நாளின் மகத்துவத்தை உணர்தல்
ஸூரா அஸ்ரின் தாத்பரியத்தை மதித்தல்
காபிர்கள், பாவிகளின் பண்புகளில் வீழ்வதைத் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் வினாக்களை மாணவர்களிடம் முன்வையுங்கள் : உலக இன்பங்கள் பற்றி முஸ்லிமின் நிலைப்பாடு என்ன? கடமையான வணக்கங்களை விட்டு விட்டு வாழ்வாதாரத்தைத் தேடுவதில் ஈடுபடுவதா? இந்தக் கேள்விகளைப் பற்றி விவாதிப்பதன் மூலம், அவர்களை ஸூரா தகாஸுருக்குக் கொண்டு வந்து, பின்னர், தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஆசிரியர் தகாஸுர் மற்றும் அஸ்ர் அத்தியாயங்களை மாணவர்களுக்கு ஓதிக் காண்பித்து, தன்னைத் தொடர்ந்து அவர்களும் ஓதுமாறு கோருங்கள்.
திறமையான இருவரைத் தெரிவு செய்து சக நண்பர்களுக்கு முன்னிலையில் அவ்விரு அத்தியாயங்களையும் ஓத வைத்து, ஏனையவர்கள் அவ்விருவரையும் உன்னிப்பாக கவனிக்கச் செய்யுங்கள்.
இரண்டாம் கட்டம்:
மாணவர்களுடன் தகாஸுர் மற்றும் அஸ்ர் ஆகியவற்றின் அர்த்தங்களைப் பற்றி விவாதித்து, அவற்றில் தெளிவற்ற வசனங்களை விளக்குவதில் கவனம் செலுத்தவும்.
வசனத் தொடருக்கு ஏற்ப வார்த்தைகளின் அர்த்தங்களை ஊகிக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது பின்வரும் கேள்விகளை எடுத்து, அவற்றுக்கு பதில்களை தெளிவுபடுத்தவும். அதேபோன்று, அவற்றை குறிப்பிடப்பட்ட வசனங்களுடன் இணைத்து, பொருள்களை விளக்கித் தெளிவுபடுத்தவும்.
கே : ஸூரா அஸ்ரில் எதன் மீது சத்தியம் செய்யப்படதோ அதற்கும், எதற்காக சத்தியம் செய்யப்பட்டதோ அதற்குமிடையிலான தொடர்பைக் கண்டறியுங்கள்.
கே : ஸூரா அஸ்ரில் வந்துள்ள அடிப்படையில், விசுவாசிகளின் வெற்றிக்கான காரணிகள் எவை?
இறுதிச் சுருக்கம் :
மாணவர்களை இவ்விருவாராக நியமித்து, வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் மற்றும் வழிகாட்டல்களைக் கண்டெடுப்பதில் ஒத்துழைக்குமாறு ஆசிரியர் வழிநடத்த வேண்டும்.
பயன்கள் தொடர்பாக அவர்களின் புத்தகங்களில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்குமாறு அவர்களிடம் கோரப்பட வேண்டும்.
அதற்கும் அவர்கள் முன்வைத்ததற்கும் இடையில் ஒப்பிட்டு, அவர்களது செயல்திறனுக்கு ஏற்ற வகையில் ஊக்கம், பாராட்டுகளை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, உலக விடயங்களில் எவற்றை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது, மற்றும் எவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது என்பதனை தேடிக் கண்டறிதல். நோக்க இலக்கம் 2
ஆசிரியர் மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, செயல்பாட்டின் இரு பகுதிகளுக்கும் பதிலளிக்க ஒவ்வொரு குழுவையும் ஏவவேண்டும்.
அவர் இரு குழுக்களினதும் பதில்களைப் பார்த்து, தகுந்த வலுவூட்டலை வழங்க வேண்டும். மேலும், அவர்கள் கண்டறிந்தவை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி, பொருத்தமான பதில்களை அனைவரும் கண்டடையச் செய்யவேண்டும்.
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அல்லாஹ்வின் அருட்கொடைகள் விடயத்தில் எமது கடமைகளை அறிதல். நோக்க இலக்கம் 3
ஒவ்வொரு மாணவரும் இரண்டாவது செயற்பாட்டைத் தனியாகச் செய்யுமாறு அறிவுறுத்தி, தமது பதிலை தனியான ஓர் அட்டையில் எழுத வையுங்கள். பின்னர் மாணவர்களிடமிருந்து அட்டைகளை சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான பதில்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கூறியவர்களைப் பாராட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஸூரா அஸ்ரின் சிறப்பை விளக்குதல் நோக்க இலக்கம் 4
மூன்றாவது செயல்பாட்டை பலகையில் காட்டி, அதைப் படிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். விவாத அமைப்பில், செயல்பாட்டின் கேள்வியை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் அதற்கு பதிலளிக்கவேண்டும். துரிதமாக செயல்படாதோரையும் பதிலளிப்பதில் பங்கெடுக்க உற்சாகப்படுத்தவும். பின்னர் சரியான விடையை அனைவரும் கொப்பியில் எழுதுமாறு கூறவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
வினாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக கரும்பலகையில் எழுதப்பட வேண்டும்.
அவ்வினாக்களுக்கு விடையளிக்க அருகருகில் இருக்கும் இவ்விரு மாணவர்களைக் கோரவும்.
தமது விடைகளை ஏனைய மாணவர்களுக்குக் காண்பிக்க, எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
தவறிழைத்தவரிடம் பாடப்புத்தகத்தை மீண்டும் வாசித்து, சரியான விடையைத் தேடி எடுக்குமாறு பணிக்கவும்.
கே1 : (×) - (✓)-(×) - (✓)
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அல்லாஹ் எமக்களித்துள்ள அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த முயற்சித்தல்.
ஸூரா அஸ்ரில் இடம்பெற்றுள்ள ஈமான் கொள்தல், நற்செயல் புரிதல், அல்லாஹ்வின்பால் அழைத்தல், அதில் பொறுமை காத்தல் போன்றவற்றை அமுல்படுத்துதல்.
பாடம் ஐந்து : ஹுமஸா மற்றும் ஃபீல் அத்தியாயங்களின் விளக்கம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(குறைசொல்வோர் - புறம் பேசுவோர்- எறியப்படுவான் - ஹுதமா - உள்ளங்கள் - சூழ்ந்து மூடப்படும் - அவர்களின் சூழ்ச்சிகள் - கூட்டங்கூட்டமாக - சுடப்பட்ட - வைக்கோல் - மென்று உண்ணப்பட்ட - நியாயத் தீர்ப்பு - அநாதையை விரட்டுவான் - பிறருக்குக் காண்பிக்க செய்வோர் - அற்பமான பொருள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - அவ்விரு அத்தியாயங்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
கற்பித்தல் உத்திகள்:
(கதை கூறும் முறை - கருத்துதிர்ப்பு - கலந்துரையாடல் - கூட்டு கற்கைமுறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
மக்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் புறம், கோல் சொல்வதை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
அல்லாஹ்விடம் கஃபாவிற்குள்ள சிறப்பை மதித்தல்.
அல்லாஹ்வின் புனிதமான தடைகளை மீறக் கூடியவர்களை அழிக்கும் ஆற்றல் அவனுக்குள்ளது என்பதை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
யானைப்படையின் சம்பவத்திலும், அதிலிருந்து பெறப்படும் படிப்பினை பற்றியும்- குறிப்பாக அல்லாஹ்விடம் புனித கஃபாவிற்குள்ள மகத்துவம் பற்றி- மாணவர்கள் அறிந்துள்ளதைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும். பின்னர் பாடத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி அவர்களுக்குக் கூறிவிட்டு, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஓடியோப் பதிவு மூலம் பாடத்தின் இரு அத்தியாயங்களையும் ஆசிரியர் மாணவர்களுக்கு செவிமடுக்க வைக்க வேண்டும்.
திறமையான இருவரைத் தெரிவு செய்து நண்பர்களுக்கு முன்னிலையில் அவ்விரு அத்தியாயங்களையும் ஓத வைக்கவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
மாணவர்களுடன் சிரமமான கலைச்சொற்களின் அர்த்தங்களைப் பற்றி விவாதித்து, வசனஅமைப்பை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம் அக்கருத்துக்களை விளங்க ஊக்குவித்தல்.
வசனங்களை விளக்கத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக, அவற்றை கரும்பலகையில் எழுத சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்றாம் கட்டம்:
பாடத்தின் கூறுகளைஅவர்கள் புரிந்துள்ளதை உறுதிப்படுத்த, பின்வருமாறு கலந்துரையாடல் முறையைப் பயன்படுத்தவும் :
யானைப்படைக்கு வழங்கப்பட்ட தண்டனை யாது?
யானைப்படை சம்பவத்திற்கும் நபியவர்களின் பிறப்பிற்கும் இடையில் உள்ள தொடர்பை தெளிவுபடுத்துக.
ஸூரா ஹுமஸாவில் கூறப்பட்டிருப்பது போன்று பரிகசிப்பதன் தண்டனையைத் தெளிவுபடுத்தவும்.
முந்தைய வினாக்களுக்கான விடைகளை மாணவர்களிடமிருந்து பெற்று, அவற்றுக்குக் கருத்துரை வழங்கி, சரியாக பதிலளித்தவரைப் பாராட்டவும்.
இறுதிச் சுருக்கம் :
மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து, கருத்துதிர்ப்பு உத்தியைக் கையாளவும்.
இரண்டு ஸூராக்களிலிருந்து ஒழுக்க மற்றும் நடத்தை பயன்பாடுகளைப் பிரித்தெடுக்குமாறு அவர்களைப் பணிக்கவும். பின்னர் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் பெற்ற பயன்களை முன்வைக்கச் செய்யவேண்டும். ஆசிரியர் அவற்றை மதிப்பீடு செய்து, சரியான பதிலைத் தெரிவிக்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, பிறரைப் பரிகாசிப்பது தடுக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அறிதல். நோக்க இலக்கம் 2, 3
மாணவர்களின் ஒவ்வொரு குழுவும் முதல் செயல்பாட்டைச் செய்வதில் ஒத்துழைக்குமாறு வழிநடத்துங்கள். மேலும் ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்ய குழுக்களைக் கண்காணிக்கவும். பின்னர், ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தனது குழுவின் பதிலை முன் வைக்கச் செய்யவேண்டும். அவர்களுக்கு மத்தியில் ஒப்பிட்டுப் பார்த்து, மிகச் சரியாக பதிலளித்த குழுவை அடையாளப்படுத்தி அவர்களைப் பாராட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, யானைப்படை சம்பவத்தில் ஆதாரப்பூர்வமானதை அறிந்துகொள்ளல். நோக்க இலக்கம் 2, 4
பின்வரும் செயல்பாட்டிற்கான பதிலை ஒவ்வொரு மாணவரும் தனது குறிப்பேட்டில் எழுதுமாறு அறிவுறுத்துங்கள்.
தமது பதிலைக் காண்பிக்க சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
ஏனைய மாணவர்கள் மேற்கண்ட பதில்களுக்குக் கருத்துரை வழங்கி, ஒவ்வொரு மாணவரும் தமக்கு விடுபட்டதை நண்பரிடமிருந்து பூரணப்படுத்திக்கொள்ளவேண்டும்.
உண்மையான, வேறுபட்ட மற்றும் நடைமுறைச் சாத்தியமான பதில்களை ஊக்குவிக்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரித்துவிடுங்கள். ஒவ்வொரு குழுவும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்க வேண்டும்.
குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் அவரது இரண்டு சக நண்பர்கள் அவரைக் கண்காணித்து, அவர் தவறிழைக்கும் பட்சத்தில் திருத்திக்கொடுக்க வேண்டும்.
தமது பதில்களைக் காண்பிப்பதற்காக, இவ்விரு குழுக்களாகத் தேர்வு செய்யவும்.
அவ்விரு குழுக்களிலும் சிறந்த குழுவை அடையாளப்படுத்தி, மதிப்பீடு செய்து, பொருத்தமான மதிப்பெண்ணை வழங்கவும்.
உயர் மதிப்பெண் பெற்ற குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்டி ஊக்குவிக்கவும்.
கே1 : () - ()-()
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தானும் புறம், கோல், பரிகாசம் போன்றவற்றைத் தவிர்ந்துகொண்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் எச்சரித்தல்.
புனித கஃபாவின் கண்ணியத்தைப் பேணுதல், இறைத் தூதுத்துவத்தின் பெறுமதியை உணர்தல்.
பாடம் ஆறு : குறைஷ் மற்றும் மாஊன் அத்தியாயங்களின் விளக்கம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி வைப்பதற்காக - அநாதையை விரட்டுவான் - பிறருக்குக் காண்பிக்க செய்வோர் - அற்பமான பொருள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - .
அவ்விரு அத்தியாயங்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
கற்பித்தல் உத்திகள்:
(கதை கூறும் முறை - கருத்துதிர்ப்பு - கலந்துரையாடல் - கூட்டு கற்கைமுறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
எப்போதும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்.
இச்சமூக்திற்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடையை மதித்தல்
முகஸ்துதி மற்றும் தொழுகையை விடுதல் அல்லது நியாயமான காரணமின்றி பிற்படுத்துதலின் விபரீதத்தை உணர்தல்.
மறுமையைப் பொய்ப்பிப்போரது மற்றும் அலட்சியமாக இருப்போரது பண்புகளை விட்டும் தவிர்ந்திருத்தல்.
அநாதைகள், ஏழைகளுக்கு உபகாரம் புரிதல்.
பாடத்தின் அறிமுகம்:
அல்லாஹ்வின் அருட்கொடைகள் பற்றி - குறிப்பாக பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகிய அருட்கொடைகள்- மாணவர்களுடன் கலந்துரையாடி, இவை குறைஷிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகள், இருப்பினும் அவர்கள் அவற்றுக்கு நன்று மறுத்து விட்டனர் என்பதைக் கூறி, பாடத்தின் உள்ளடக்கத்தை அவர்களுக்குக் கூறி, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஓடியோப் பதிவு மூலம் பாடத்தின் இரு அத்தியாயங்களையும் ஆசிரியர் மாணவர்களுக்கு செவிமடுக்க வைக்க வேண்டும்.
திறமையான இருவரைத் தெரிவு செய்து சக மாணவர்கள் முன்னிலையில் அவ்விரு அத்தியாயங்களையும் ஓத வைக்கவும்.
மாணவர்களுடன் சிரமமான கலைச்சொற்களின் அர்த்தங்களைப் பற்றி விவாதித்து, வசனத் தொடரை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம் அக்கருத்துக்களை விளங்க ஊக்குவித்தல்.
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு உத்தியைக் கையாளவும். வசனங்களின் கூறுகளை விளக்கித் தெளிவுபடுத்துவதற்காக, சில மாணவர்களைத் தெரிவு செய்து அவற்றைக் கரும்பலகையில் எழுதிய வைக்கவும்.
அவ்வசனங்களை விளக்குவதிலும், சில சொற்களின் கருத்துக்களை தெளிவுபடுத்துவதிலும் மாணவர்களுடன் கலந்துரையாடவும்.
மூன்றாம் கட்டம்:
பாடத்தின் கூறுகளைப் பற்றிய அவர்களின் புரிதலை உறுதிப்படுத்த, பின்வருமாறு கலந்துரையாடல் முறையைப் பயன்படுத்தவும் :
அல்லாஹ் குறைஷியருக்கு அளித்த மிகப் பிரதான அருட்கொடைகளைக் கூறவும்.
ஈமானுக்கும் , அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிலைத்திருப்பதற்கும் இடையிலான தொடர்பு என்ன?
அல்லாஹ் புனித கஃபாவைப் பாதுகாத்ததற்கும், அங்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அருளியதற்கும் இடையில் தொடர்புபடுத்துக.
பொய்யர்களின் நிலையை வர்ணிக்கும் வசனங்களை ஸூரா மாஊனிலிருந்து கூறுக.
முந்தைய வினாக்களுக்கான விடைகளை மாணவர்களிடமிருந்து பெற்று, அவற்றுக்குக் கருத்துரை வழங்கி, சரியாக பதிலளித்தவரைப் பாராட்டவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடமீட்டலுக்கு இலகுவாக, சிந்தனைகள் மற்றும் கூறுகள் அமைப்பில் பாடத்தை தங்கள் குறிப்பேடுகளில் எழுதுமாறு ஒவ்வொரு குழுவையும் பணியுங்கள்.
சில மாணவர்களை வசனங்களில் இருந்து பெற்ற மிக முக்கியமான விஷயங்களை முன்வைக்கச் சொல்லி அவர்களுக்குத் தகுந்த வலுவூட்டலையும் வழங்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயற்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, குறைஷியரின் பிரதான வணிகப் பயணங்களையும், இந்த அருட்கொடை பற்றிய அவர்களது நிலைப்பாட்டையும் கண்டறிதல். நோக்க இலக்கம் 1, 2
முதல் செயல்பாட்டில் உள்ள வரைபடத்தைப் பார்க்குமாறு மாணவர்களிடம் கூறுங்கள். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, அதைத் தங்கள் சக நண்பர்களுக்குப் படிக்க வைத்து, அதுபற்றி அவர்களுடன் விவாதிக்கவும். பின்னர் ஒவ்வொரு மாணவரிடமும் குறைஷிகளின் வணிகப் பயணங்களின் இடங்களையும், அந்த அருட்கொடைகள் பற்றிய குரைஷிகளின் நிலைப்பாட்டையும் அடையாளம் காணச் சொல்லுங்கள். சரியாகக் கூறுவோரைப் பாராட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஸூரா மாஊனிலிருந்து பொய்ப்பிப்பவர்களின் நிலையைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் 3, 4
ஓடியோப் பதிவு மூலம் மாணவர்களுக்கு ஸூரா மாஊனின் வசனங்களைக் கேட்க வைக்கவும். திறமையான ஒருவரைத் தேர்வு செய்து அதனை ஓத வைக்கவும். பின்னர் ஸூரா மாஊனிலிருந்து பொய்ப்பிப்பவர்களின் நிலையை எழுதுமாறு கோரவும்.
மாணவர்களுடன் சேர்ந்து சரியான விடையைக் கண்டறிய அவர்களது விடைகள் பற்றி விவாதிக்கவும். பின்னர் அனைவரும் அதனை செயற்பாட்டு அட்டவணையில் பதிய வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்களை பின்வரும் முறைகளில் வழிநடாத்தவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்கச் செய்யவேண்டும்.
குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் அவரது இரண்டு சக நண்பர்களும் அவரைக் கவனித்து, தவறு செய்தால் திருத்திக்கொடுக்க வேண்டும்.
தமது பதில்களைக் காண்பிப்பதற்காக இவ்விரு குழுக்களாகத் தேர்வு செய்யவும்.
அவ்விரு குழுக்களிலும் சிறந்த குழுவை வரையறுத்து, மதிப்பீடு செய்து, பொருத்தமான மதிப்பெண்ணை வழங்கவும்.
உயர் மதிப்பெண் பெற்ற குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்டி ஊக்குவிக்கவும்.
கே1 : () - () - () - ()
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
புனித கஃபாவை கண்ணியப்படுத்தல், மேலும் அல்லாஹ்விடம் அதற்குள்ள மகத்துவத்தை உணர்தல்.
அருட்கொடைகளுக்கு என்றும் நன்றி செலுத்துதல், அநாதைகள், எளியவர்களுக்கு உபகாரம் செய்தல்.
அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி, அநாதைகள், எளியவர்களுக்கு உபகாரம் செய்ய குடும்பத்தினர், உறவினர்களை ஊக்குவித்தல்.
ஈமான் மற்றும் தஸ்கியா (பரிசுத்தப்படுத்தல்) பகுதி
பாடம் ஒன்று : ஓரிறைக் கொள்கையின் சிறப்பும் முக்கியத்துவமும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (ஓரிறைக் கொள்கை - அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை - அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(சுயகேள்வி - சொற்பொருள் வரைபடங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
ஓரிறைக் கொள்கையின் அந்தஸ்தை மதித்தல்
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதன்பால் மக்களை அழைத்தல்.
ஓரிறைக் கொள்கைதான் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்த ஓரே இலக்காகும் என்பதை உறுதியாக நம்புதல்.
பாடத்தின் அறிமுகம்:
என் சகோதர ஆசிரியரே, இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதுதான், அதை நோக்கியே நபியவர்கள் உட்பட அனைத்து நபிமார்களினதும் அழைப்பு இருந்தது, அல்லாஹ் அவனை ஒருமைப்படுத்தியோருக்கு சுவனத்தைக் கூலியாகவும், இணைவைப்பாளர்களுக்கு நரகத்தைத் தண்டனையாகவும் ஆக்கியுள்ளான், ஒரு முஸ்லிம் அந்த தவ்ஹீதை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும்? என்ற கருத்தை மாணவர்களுக்கு அறியப்படுத்துவதன் மூலம் பாடத்தை ஆரம்பம் செய்யுங்கள்.
இதுதான் பாடத்தின் உள்ளடக்கம் என்பதை அவர்களுக்குக் கூறி, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், பாடத்தின் கூறுகளைப் பற்றி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புரிதலை வழங்குவதற்காக, தவ்ஹீத், அதன் சிறப்பு மற்றும் மகத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை ஒரு பலகையில் ஆசிரியர் காட்ட வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
சுய-கேள்வி முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர், இந்த கூறுகளைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் சில கேள்விகளைக் கேட்க கோர வேண்டும். அவர்களது கேள்விகளை சேகரித்து, கரும்பலகையில் எழுத வேண்டும். பாடத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கும் விதமாக, ஆசிரியரும் மேலும் பல கேள்விகளை சேர்த்துக்கொள்ளலாம். கேட்கப்படும் கேள்விகளில் பின்வருபவை இருக்கலாம்:
கே : தவ்ஹீதின் அர்த்தம் என்ன?
கே : தவ்ஹீதின் முக்கியத்துவம் என்ன?
கே : தவ்ஹீதின் சிறப்பு என்ன?
கே : நற்செயல்கள் ஏற்கப்படுவதில் தவ்ஹீதுக்கு உள்ள தொடர்பு என்ன?
மூன்றாம் கட்டம்:
முந்தைய கேள்விகளையும் இணைத்து, தவ்ஹீதின் சிறப்பு, மகத்துவத்தை ஆசிரியர் விளக்கி, தெளிவுபடுத்த வேண்டும். அதன் போது காட்சித் திரையில் தவ்ஹீதின் சிறப்புக்கான ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும். பாடத்தில் உள்ள கலைச் சொற்களைத் தெளிவுபடுத்துவதிலும், பயன்பாடுகளைக் கூறுவதிலும் மாணவர்களைப் பங்கெடுக்கக் கோர வேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
பாடமீட்டலுக்கு இலகுவாக, சிந்தனைகள் மற்றும் கூறுகள் அமைப்பில் பாடத்தை தங்கள் குறிப்பேடுகளில் எழுதுமாறு ஒவ்வொரு குழுவையும் பணியுங்கள்.
சில மாணவர்களிடம் பாடத்தை வாய்மொழியாகச் சுருக்கச் சொல்லுங்கள், அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் அளிக்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தவ்ஹீதின் முக்கியத்துவத்தை விளக்குதல்
நோக்க இலக்கம் 2
பாடத்தின் உள்ளடக்கத்தை வாசித்துவிட்டு, முதல் செயல்பாட்டைத் தனித்தனியாகச் செய்யுமாறு ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்துங்கள். சில மாணவர்களைத் தேர்வு செய்வது, தமது பதில்களைக் காண்பிக்கச் செய்து, சக நண்பர்களை அவற்றை மதிப்பிடச் செய்யுங்கள்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தவ்ஹீதின் சிறப்பை தெளிவுபடுத்தல்.
நோக்க இலக்கம் 2
ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டாவது செயற்பாட்டை தனியாகச் செய்யும்படியும், தமது பதிலை ஒரு தனியான அட்டையில் எழுதவும் அறிவுறுத்தவும். பின்னர் மாணவர்களிடமிருந்து அட்டைகளை சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்யவும். மிகவும் துல்லியமான பதில்களை அடையாளம் கண்டு, உரியவர்களைப் பாராட்டுங்கள்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
முதலிரு கேள்விகளைப் பொறுத்தவரை, தனித்தனியாக ஒவ்வொரு மாணவரும் தனது புத்தகத்தில் உள்ள அவ்விரண்டிற்கும் பதிலளிக்க வேண்டும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்யவும்.
கே1 : ()- ()-()
மாணவர்களில் ஒவ்வொரு குழுவும் மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு குழுவும் செய்த தவறைக் கண்டறியவும். பின்னர் அதை மாணவர்களுக்குக் காட்டி, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்கவும். பின்னர் சிறந்த பதில் குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தவ்ஹீதின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தைக் காட்டும் வாசகங்களை ஒவ்வொரு மாணவரும் மீண்டும் வாசித்து, தவ்ஹீதின் சிறப்பும் அதனை நிலைநிறுத்துவதன் அவசியமும் உறுதியாகப் பதிவதற்காக வேறு மூலாதாரங்களின் ஊடாகவும் இது பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தவ்ஹீத் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய தமது அறிவைத் தமது குடும்பத்தினர், சூழ உள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுத்தல்.
பாடம் இரண்டு : பரிபாலணக் கோட்பாட்டில் (அல்லாஹ்வை) ஒருமைப்படுத்தல்.
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (தவ்ஹீதுர் ருபூபிய்யா - உயிர்ப்பித்தல் - மரணிக்கச் செய்தல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(முன்கணிப்பு முறை - தர்க்கவியல் முறை - கற்பனை முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்து, பரிபாலிக்கும் உரிமையாளன் என்பதை உறுதியாக நம்புதல்.
தவ்ஹீதுர் ருபூபிய்யாவை (பரிபாலணக் கோட்பாடு) நிலைநாட்டுவதில் அக்கறை கொள்தல்.
பரிபாலணக் கோட்பாட்டில் இணைவைப்பதன் விபரீதத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
என் சகோதர ஆசிரியரே, “தவ்ஹீத் மூன்று வகைப்படும், ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மாஃ வஸ்ஸிபாத் ஆகியனவே அவை, இந்தப் பாடம் தவ்ஹீதுர் ருபூபிய்யாவைப் பற்றிப் பேசுகிறது” என்ற கருத்தை மாணவர்களுக்கு அறியப்படுத்துவதன் மூலம் பாடத்தை ஆரம்பம் செய்து, தலைப்பைக் கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடத்தின் தலைப்பு மற்றும் நோக்கத்தை மாணவர்கள் அறிந்திருப்பதால், அதில் உள்ள கூறுகள் மற்றும் சிந்தனைகள் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகளை முன்வைக்குமாறு அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் அளிக்கும் பதில்களை கவனித்து, அவற்றில் வெவ்வேறானவற்றை கரும்பலகையில் எழுதவும்.
இரண்டாம் கட்டம்:
கரும்பலகையில் பின்வரும் வாக்கியத்தை எழுதவும்:
(இது படைத்தல், வாழ்வாதாரமளித்தல், திட்டமிட்டு நிர்வகித்தல் போன்ற அல்லாஹ்வின் பிரத்தியேகமான செயல்களைக் கொண்டு அவனை ஒருமைப் படுத்தல்.)என்ன பெயர் கொண்டு அழைக்கப்படும்?
அவர்களது பதில்களை விவாதித்த பின் தவ்ஹீதுர் ருபூபிய்யாவின் அர்தத்தையும், அதை நிலைநிறுத்தும் முறையையும் தெளிவுபடுத்தவும்.
மூன்றாம் கட்டம்:
தவ்ஹீதுர் ருபூபிய்யாவுடன் முரண்படும் சில உதாரணங்களைத் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு முன்வைத்து, கற்பித்தல் பலகையினூடாக அதற்குரிய ஆதாரங்களையும் முன்வைக்கவும். பின்னர் அதன் கருத்துக்கள், பயன்பாடுகள் பற்றி அவர்களுடன் விவாதிக்கவும். தாம் அறிய விரும்பும் விடயங்கள் பற்றி வினா எழுப்ப மாணவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் கூறுகளை மீட்டிப் பார்க்க ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்துங்கள். மேலும், தமது பதில்களை முன்வைக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பாடத்தின் மிக முக்கியமான கருத்துக்கள் மற்றும் கூறுகளைப் பற்றி அவர்களுடன் விவாதிப்பதோடு, அவற்றோடு அவர்கள் மேலதிகமாக இணைத்தவற்றையும் கேட்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தவ்ஹீதுர் ரபூபிய்யாவின் வெளிப்பாடுகளை விளக்குதல்.
நோக்க இலக்கம் 2, 4
ஒவ்வொரு மாணவரும் பாடத்தின் உள்ளடக்கத்தை வாசித்துவிட்டு, முதல் செயல்பாட்டைத் தனியாகச் செய்யுமாறு அறிவுறுத்துங்கள். சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தாம் முன்மொழிந்த பதில்களை முன்வைக்கச் செய்து அவற்றை மதிப்பீடு செய்யுங்கள்.
அல்லாஹ் கூறினான் "அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் : “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று கூறினார்; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்றார் (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை".
(பகரா : 258)
அந்த மன்னனின் பெயர் : நம்ரூத் இப்னு கன்ஆன், உயிர்ப்பித்தல் மற்றும் மரணிக்கச் செய்வதில் அவன் அல்லாஹ்வுடன் தர்க்கித்தான், எனவே நபி இப்ராஹீம் (அலை) சூரியனை மேற்கிலிருந்து உதிக்கச் செய்யுமாறு கோரி அவனுக்கெதிராக ஆதாரத்தை நிறுவினார்கள்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, வாழ்வாதாரத்தைத் தேடும் முறையை அறிதல்.
நோக்க இலக்கம் 3
ஒவ்வொரு மாணவரும் இரண்டாவது செயல்பாட்டை தனியாகச் செய்யுமாறு அறிவுறுத்தி, தமது பதிலை தனியான ஓர் அட்டையில் எழுதக் கோரவும். பின்னர் மாணவர்களிடமிருந்து அட்டைகளை சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான பதில்களைக் குறிப்பிட்டு, அதற்குரியவர்களைப் பாராட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, இணைவைப்பின் வகைகளுக்கிடையில் வேறுபிரித்து, அவற்றை எதிர்கொள்ளும் முறையை அறிதல்.
நோக்க இலக்கம் 5, 6
ஆசிரியர் ஒவ்வொரு மாணவக்குழுவிற்கும் மூன்றாவது செயல்பாட்டிற்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் அதன் கூறுகளில் ஏதேனும் ஒன்றுக்குப் பதிலளிக்க, சக தோழர்கள் அதைக் கவனித்து, மதிப்பீடு செய்யவேண்டும்.
ஆசிரியர் செயல்பாட்டின் ஒவ்வொரு கூறுகளையும் வரிசையாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும், அதற்கு பதிலளித்த குழுவில் உள்ள தனிநபரையும் அடையாளம் கண்டு, ஒவ்வொரு குழுவிற்கும் பொருத்தமான தரத்தை வழங்க வேண்டும்.
ஆசிரியர் அதிக மதிப்பெண் பெற்ற குழுவைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பாராட்டுவதோடு, ஒவ்வொரு குழுவிலும் சரியாகப் பதிலளித்தவர்களின் செயல்திறனையும் மெச்சவேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
ஒவ்வொரு மாணவரும் தனது புத்தகத்தில் உள்ள முதலிரு கேள்விகளுக்கும் தனித்தனியாக பதிலளிக்க வேண்டும். ஆசிரியர் அவர்களுக்கிடையில் சென்று, அவர்களின் பதில்களைக் கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்வார்.
கே1 : ()- ()-()
கே 2 : அவனது செயல்களைக் கொண்டு - அல்லாஹ் மாத்திரம் - மறைவான அறிவை வாதிடல்
மாணவர்களில் ஒவ்வொரு குழுவும் மூன்றாவது கேள்விக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு குழுவும் செய்த தவறைக் கண்டறியவும். பின்னர் அதை மாணவர்களுக்குக் காட்டி, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்கி, பின்னர் சிறந்த பதில் குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தவ்ஹீதுர் ருபூபிய்யாவை நிலைநிறுத்துவதன் அவசியத்தை உணர்வதற்காக தவ்ஹீதுர் ருபூபிய்யாவின் ஆதாரங்களை ஒவ்வொரு மாணவரும் மீண்டும் வாசிக்க வேண்டும்.
தவ்ஹீதுர் ருபூபிய்யாவிற்கு முரண்படும் விடயங்களை விட்டும் ஒவ்வொரு மாணவரும் தமக்குச் சூழ உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும்.
பாடம் மூன்று: தவ்ஹீதுல் உலூஹிய்யா
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (தவ்ஹீதுல் உலூஹிய்யா - உள்ளம் சார்ந்த வணக்கங்கள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(முன்கணிப்பு முறை - ஒப்புமை முறை - கற்பனை முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வின் உலூஹிய்யாவை (வணக்கத்திற்கு தகுதியான ஒரே ஒருவன் என்பதை) விசுவாசங்கொள்ளுதல்.
தவ்ஹீதுல் உலூஹிய்யாவை நிலைநிறுத்துவதில் அக்கறை கொள்ளல்.
தவ்ஹீதுர் ருபூபிய்யா மற்றும் தவ்ஹீதுல் உலூஹிய்யாவிற்கிடையில் தொடர்புபடுத்தல்.
உலூஹிய்யாவில் ஏற்படும் இணைவைப்பின் வெளிப்பாடுகளை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
பாடத்தின் அறிமுகம்:
என் சகோதர ஆசிரியரே, அல்லாஹ்தான் படைத்து, வாழ்வாதரமளிப்பவன் என்பதை அரேபியர் ஏற்றிருந்தும், அவர்கள் நிராகரிப்பாளர்களானதற்கு என்ன காரணம் என்பதை மாணவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் பாடத்தை ஆரம்பம் செய்து, பாடத்தின் உள்ளடக்கத்திற்குள் சென்று, தலைப்பைக் கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடத்தின் தலைப்பு மற்றும் நோக்கத்தை மாணவர்கள் அறிந்த பின், அதில் உள்ள கூறுகள் மற்றும் சிந்தனைகள் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகளை வழங்குமாறு அவர்களிடம் கேளுங்கள். அவர்களது பதில்கள் பற்றி அவர்களோடு விவாதித்த பின்னர், அவற்றில் முக்கியமானவற்றை கரும்பலகையில் எழுதுங்கள்.
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி மாணவர்களிடம் தவ்ஹீதுல் உலூஹிய்யாவின் கருத்தையும், வணக்கத்தின் வகைகளையும் வரையறுக்குமாறு கோரவும். சரியான விடையைக் கண்டறிய மாணவர்களின் விடைகள் தொடர்பாக அவர்களுடன் விவாதியுங்கள்.
தவ்ஹீதுர் ருபூபிய்யா மற்றும் தவ்ஹீதுல் உலூஹிய்யாவிற்கிடையில் தொடர்பை வரையறுக்குமாறு மாணவர்களிடம் வேண்டவும், சிறந்த பதில்களுடைய மாணவர்களுக்கு ஆதரவையும் பாராட்டையும் வழங்கவும்.
மூன்றாம் கட்டம்:
கற்பித்தல் பலகையினூடாக தவ்ஹீதுல் உலூஹிய்யாவிற்கு முரண்படும் விடயங்களுக்கான உதாரணங்களை தொடர்ச்சியாக முன்வைக்கவும். சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை வாசிக்க வைத்து, அவர்களுக்கு அதன் அர்த்தத்தை தெளிவுபடுத்தி விளக்கவும். மேலும் தாம் தெரிந்து கொள்ள விரும்புவதைப் பற்றிய கேள்விகளைக் கேட்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
இறுதிச் சுருக்கம்:
அறிமுகக் கேள்விக்கான பதிலை மறுபரிசீலனை செய்யவும், பாடம், அதன் கூறுகள் மற்றும் அதில் வழங்கப்பட்ட எடுத்துக்காட்டுகள் பற்றிய அவர்களின் அறிவின் அடிப்படையில் அதை அவதானிக்கவும் ஒவ்வொரு மாணவரையும் அறிவுறுத்துங்கள். சிலமாணவர்களைத் தெரிவு செய்து, தமது பதில்களை முன்வைக்கச் செய்து, கருத்துத் தெரிவியுங்கள்,
முதல் கட்டத்தில் தாம் பாடத்தின் கூறுகள் மற்றும் சிந்தனைகள் பற்றி முன்வைத்த எதிர்பார்ப்புகளை ஆராய்ந்து, பாடம் எந்தளவு அவற்றை உள்ளடக்கியிருந்தது, மேலும் அவர்கள் மேலாதிகமாகக் கண்ட பலன்கள் என்ன என்பவற்றை மாணவர்கள் தெளிவுபடுத்துவார்கள்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை : தவ்ஹீதுல் உலூஹிய்யாவையும் அதிலுள்ள முக்கிய வணக்கங்களையும் அறிதல்.
நோக்க இலக்கம் 2, 3
மாணவர்கள் இவ்விருவராக முதல் செயல்பாட்டைச் செய்ய ஒத்துழைக்குமாறு ஆசிரியர் அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்கள் முடித்த பிறகு, ஒவ்வொரு குழுவின் பதிலையும் அவர் கண்டறிய வேண்டும். பிறகு மாணவர்களிடம் பலகை ஒன்றை எடுத்துக் காட்டி, அதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்; முதல் பகுதி தவ்ஹீதின் வகையைக் குறிப்பிடுவதை உள்ளடக்கியும், இரண்டாவது பகுதி அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டிய நான்கு வணக்கங்களை எழுதுவதை உள்ளடக்கியும் காணப்படும்.
ஆசிரியர் சரியான பதில்களை எடுத்து பலகையில் வைத்து விட்டு, அவற்றைப் புகைப்படம் எடுத்தோ, எழுதியோ பாதுகாத்து, சுற்றியுள்ளவர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு ஒவ்வொரு மாணவனையும் கோர வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தவ்ஹீதின் வகைகளை பிரித்தரிந்து கொள்ளல்
நோக்க இலக்கம் 5
பாடத்தின் உள்ளடக்கத்தை வாசித்துவிட்டு, முதல் செயல்பாட்டைத் தனித்தனியாகச் செய்யுமாறு ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்துங்கள். சில மாணவர்களைத் தேர்வு செய்வது, தமது பதில்களைக் காண்பிக்கச் செய்து, சக நண்பர்களை அவற்றை மதிப்பிடச் செய்யுங்கள்.
செயல்கள் தவ்ஹீதுர் ருபூபிய்யாவில் உள்ளது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் உள்ளது
முஹம்மத் அஸர் தொழுதார் : (இது) தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் உள்ளது
அல்லாஹ் சூரியனைப் படைத்தான் என்பதை ஏற்றுக் கொள்ளல் : தவ்ஹீதுர் ருபூபிய்யாவில் உள்ளது
ஸைத் தனது இரட்சகனை அழைத்தார் : தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் உள்ளது
அல்லாஹ் விலங்குகளை மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான் : தவ்ஹீதுர் ருபூபிய்யாவில் உள்ளது
ஹஸன் அல்லாஹ்வுக்காக ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட நேர்ந்தார் : தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் உள்ளது
அல்லாஹ்தான் படைப்பினங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்றான் என பாதிமா நம்பிக்கை கொண்டாள் : தவ்ஹீதுர் ரபூபிய்யாவில் உள்ளது
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, தவ்ஹீதுல் உலூஹிய்யாவுடன் முரண்படும் நடத்தைகளை வரையறுத்தல் நோக்க இலக்கம் 4
இவ்விரு மாணவர்களாக மூன்றாவது செயல்பாட்டிற்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். பின்னர் இரண்டு அணிகளைத் தேர்ந்தெடுத்து, தமது பதில்களை முன்வைக்கச் செய்து விட்டு, மீதமுள்ள அணிகளிடம் அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கோருங்கள்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
முதலிரு கேள்விகளையும் பொறுத்தவரை, ஒவ்வொரு மாணவரும் தனது புத்தகத்தில் உள்ள அவ்விரு கேள்விகளுக்கும் தனித்தனியாக பதிலளிக்க வேண்டும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்ய அவர்களிடம் சென்று பார்க்கவும்.
கே1 : (நேசம் - இறந்தவர்களிடம் பிரார்த்தித்தல் - அல்உலூஹிய்யா)
மாணவர்களில் ஒவ்வொரு குழுவும் மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு குழுவும் செய்த தவறைக் கண்டறியவும். பின்னர் அதை மாணவர்களுக்குக் காட்டி, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்கவும். பின்னர் சிறந்த பதில் குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தவ்ஹீதுல் உலூஹிய்யாவிற்கு முரணான மேலும் வடிவங்களைத் தேடுவதில் மாணவர்கள் ஒத்துழைத்து, பின்னர் அவர்கள் கண்டறிந்ததை மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்காக ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.
தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்கு முரணான செயல்களிலிருந்து ஒவ்வொரு மாணவரும் தம்மைச் சூழ உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும்.
பாடம் நான்கு : பெயர்கள் மற்றும் பண்புகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் ( தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் )
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் - உடன்பாட்டு பண்புகள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கனிணி - காட்சித் திரை - கற்பித்தல் பலகை - ஓடியோ பதிவு - கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் - முன்கணிப்பு முறை - சிந்தனை வரைபடங்கள் - சுய கேள்வி முறை - முரண்பாடானவை - பூரணப்படுத்தல் - சூடான இருக்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வின் பெயர், பண்புகளை நம்பிக்கை கொள்ளல்.
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் கேள்வியை கருபலகையில் எழுதவும். பின்பு, மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, சக நண்பர்களிடம் அதை வாசிக்க வைத்து, அவர்கள் அனைவரும் அதைப் பற்றி சிந்தித்து, அது தொடர்பான பதில்களை வழங்குமாறு கூறவும். பாடத்தின் அனைத்துப் படிமுறைகளையும் நிறைவு செய்யும் வரை அவற்றை மதிப்பிடுவதை ஒத்திவைக்கவும்.
கே : அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்களும், உயரிய பண்புகளும் உள்ளன. அல்லாஹ்வின் விடயத்தில் பெயருக்கும் பண்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
முந்தைய வழிகாட்டல் அடிப்படையில், பாடத்தின் தலைப்பு மற்றும் அது எதைப் பற்றியது என்பதைக் கணிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்களின் பதில்களை அறிந்து, பாடத்தின் தலைப்பை அவர்களுடன் இணைந்து அடையாளப்படுத்தி, அதை கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
சிந்தனை வரைபட முறையைப் பயன்படுத்தவும்; காட்சித் திரை அல்லது பலகை மூலம் பாடத்தின் கூறுகளைக் காட்டவும். அந்தக் கூறுகளைப் பற்றி என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுக்கொள்ள, மாணவர்களை இருவர் இருவராக இணைந்து ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள்.
மாணவர்களின் கேள்விகளைப் பாருங்கள். அவற்றில் வெவ்வேறானவற்றைக் கரும்பலகையில் எழுதி, அவைபற்றி விவாதித்துத் தெளிவுபடுத்துங்கள். மேலும் சில கேள்விகளையும் அவர்களிடம் முன்வைத்து, அவை மூலமாகவும், அவற்றின் வசனவடிவமைப்பின் மூலமாகவும் பயன்பெற வழிகாட்டுங்கள்.
இரண்டாம் கட்டம்:
கலந்துரையாடலின் போது மாணவர்கள் கேட்ட கேள்விகள் ஊடாக, பாடத்தின் கூறுகளை விளக்கித் தெளிவுபடுத்துங்கள். தலைப்பின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கும் விதமாக, வேறு சில மேலதிக கேள்விகளையும் இணைத்துக்கொள்ளுங்கள். பின்வரும் கேள்விகளை துணையாக எடுத்து விவாதிக்கலாம்:
கே : தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் என்றால் என்ன?
கே : அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அழகியவை என்றால் என்ன?
கே : அல்லாஹ்வின் பெயர்கள் அவனது பண்புகளை அறிவிக்கின்றனவா? அதனைத் தெளிவுபடுத்தவும்.
கே : கஃபூர் எனும் அல்லாஹ்வின் பெயர் .............. எனும் பண்பைக் காட்டுகின்றது, ரஹீம் எனும் பெயர் .......... எனும் பண்பைக் காட்டுகின்றது.
கே : அல்லாஹ்வின் பண்புகள் என்றால் என்ன?
பதிலின் போது, அதனுடன் தொடர்புடைய வசனங்களை ஓடியோ மூலம் கேட்குமாறு அறிவுறுத்துங்கள். அதே நேரத்தில் அவை கற்றுத்தரும் பாடங்களைப் பெரும் நோக்கில், அவர்களுடன் அவற்றின் அர்த்தங்கள் பற்றி விவாதிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
மாணவர்கள் சிந்திக்க, அல்லாஹ்விடம் உள்ள பண்புகள் மற்றும் தன்னிடம் இல்லையென அவன் கூறிய பண்புகளை விளக்கும் ஒரு வரைபடத்தைக் (ஒப்பீட்டு வடிவ வரைபடம்) காட்டுங்கள். பண்புகளின் இரண்டு வடிவங்களையும் விளக்கி, அவை தொடர்பான வாசகங்களை விளக்கிய பிறகு, அவ்விரண்டிற்கிடையிலான வேறுபாட்டைக் கண்டறிய வரைபடத்தைப் பார்க்க மாணவர்களை அறிவுறுத்துங்கள்.
இறுதிச் சுருக்கம் :
பின்வரும் வாசகங்களை மாணவர்களுக்குக் காட்டுங்கள். பாடத்தின் சிந்தனைகள் மற்றும் கூறுகள் பற்றிய அவர்களின் புரிதலின் அடிப்படையில் அவற்றை முழுமைப்படுத்தும் படி அவர்களிடம் கேளுங்கள்:
தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் மூலம் நாடப்படுவது ............................................
அல்லாஹ்வின் பண்புகள் இரு வகைப்படும், அவை : ............................................
................................................ அல்லாஹ் தனக்கு இருப்பதாக உறுதிப்படுத்திய பண்புகளில் ஒன்றாகும்.
.................................................... அல்லாஹ்வுக்கு இணைத்துக்கூற முடியாத பண்புகளில் ஒன்றாகும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, ஆயதுல் குர்ஸியில் இருந்து அல்லாஹ்வின் பெயர், பண்புகளைக் கண்டறிதல். நோக்க இலக்கம் 2, 3
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனத்தை ஆடியோ ஊடகத்தின் மூலம் கேட்கும்படி மாணவர்களை அறிவுறுத்துங்கள். மேலும் அதன் அர்த்தத்தையும் அது உணர்த்தும் விடயங்களையும் அவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
மாணவர்களை மும்மூன்றுபேராக வகுத்து, தங்கள் புத்தகங்களில் உள்ள அட்டவணையை பூர்த்தி செய்வதில் ஒத்துழைத்து, அந்த வசனத்திலிருந்து அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனிடமுள்ள பண்புகளையும், அவன் தன்னிடம் இல்லையெனக் கூறிய பண்புகளையும் அடையாளம் காண அறிவுறுத்துங்கள்.
ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். அவர்கள் தங்கள் சக நண்பர்களுக்கு முன்னால் வரிசையாக நின்று, அவரவர் குழு என்ன முடிவுகளைக் கண்டது என்பதை முன்வைக்கவேண்டும. நீங்கள் அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, சரியான பதிலைக் கண்டறியும் திறன் கொண்ட அணி எது என்பதைத் தீர்மானிக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அல்லாஹ்வின் பெயர்களை எழுதி, கற்றுக்கொடுத்தல். நோக்க இலக்கம் 6
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரும் தனது குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் அல்லாஹ்வின் பத்து பெயர்களை உள்ளடக்கிய ஒரு ஓவியத்தை வடிவமைக்க அறிவுறுத்த வேண்டும். அதே நேரத்தில் கவர்ச்சிகரமான வடிவமைப்பில் அதனை உருவாக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பின்பு, அதன் ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் அவர்கள் பகிரவேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
முதலிரு கேள்விகளை மாணவர்களுக்கு வாசியுங்கள். மேலும் அவற்றின் கூறுகளில் ஏதேனும் ஒன்றுக்குப் பதிலளிக்க இவ்விரு மாணவர்களாகத் தேர்வு செய்யுங்கள். சக நண்பர்கள், பதில்களை ஒப்பிட்டு, அவற்றில் எது சரியானது என்பதைத் தீர்மானிப்பர்.
கே1 : ()- ()-()
கே 2 : (கைப்பற்றுபவன் - மரணம் - வல்லமை)
இரு மாணவர்களை மூன்றாவது கேள்வியில் ஒரு பகுதியை வாசிக்கச் செய்யுங்கள். அதற்கான பதிலைக் கூற மற்றொரு மாணவரைத் தெரிவுசெய்யுங்கள். அவற்றை மதிப்பீடு செய்யவும். ஆசிரியர் இவற்றைக் கவனிப்பதோடு, சக மாணவர்களும் கவனித்து, பதில்கள் பற்றிய தமது கருத்துக்களைக் கூறவேண்டும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை அறிந்து கொள்ளவும், அவற்றை ஏற்று நம்பிக்கை கொள்வதன் முக்கியத்துவத்தை உணரவும், அவருடைய செயல்கள் மற்றும் அல்லாஹ்வுடனான அவரது நெருக்கத்தில் அவை பிரதிபலிக்கவும் அக்கறை கொள்வது அவசியமாகும்.
பல்வேறுபட்ட மூலாதாரங்களின் துணையுடன் அல்லாஹ்வின் பெயர்களடங்கிய ஒரு கற்றல் மரத்தை ஒவ்வொரு மாணவரும் உருவாக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் மரத்தைத் தயாரிப்பதிலும் வடிவமைப்பதிலும் தனது வடிவமைப்பு மற்றும் படைப்பாற்றல் திறன்களைப் பயன்படுத்தி கடுமையாக உழைக்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களின் செயல்திறனைக் கண்காணித்து, சிறப்பாக வடிவமைத்தவர்களைப் பாராட்ட வேண்டும்.
பாடம் ஐந்து : வணக்கம் மற்றும் அதன் வகைகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (வணக்கம் - சொல் சார்ந்த வணக்கம் - செயல் சார்ந்த வணக்கம் - பணம் சார்ந்த வணக்கம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கூட்டுகற்கை முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
வணக்கத்தை மகத்துவப்படுத்தல்
வணக்கங்களை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளுதல்
வணக்கத்தின் ஈருலக தாக்கத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதில் சிறந்த முன்மாதிரியாக இருப்பது பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும். வணக்கத்தில் நடுநிலையாக தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு மத்தியிலும், மக்களின் உரிமைகள், கடமைகளில் அலட்சியமின்றி இருப்பதற்கு மத்தியிலும் நபி (ஸல்) ஒன்றிணைத்துள்ளார்கள். எனவே நபியவர்கள்தான் படைப்புகளில் அல்லாஹ்வை உண்மையாக அஞ்சக்கூடிய இறையச்சமுள்ளவராக இருந்தார்கள் என்பதைக் கூறி அவர்களை பாடத்திற்குள் அழைத்துச் சென்று, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடப்புத்தகத்தைத் திறக்குமாறு மாணவர்களிடம் கூறிவிட்டு சப்தமாக பாடத்தை வாசிக்க ஒருவரைத் தேர்வு செய்யவும். ஏனைய மாணவர்கள் அதனைக் கவனித்து, விளக்கம் தேவைப்படும் பகுதிகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமானவற்றை அவர்களுடன் விவாதிக்கவும் ...............???
இரண்டாம் கட்டம்:
கூட்டு கற்கை முறையைப் பயன்படுத்தி மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்கவும்.
வணக்கத்தின் அர்த்தத்தையும், அதன் வகைகளையும் வரையறுக்க ஒவ்வொரு குழுவையும் பணித்து விட்டு, அக்கருத்தை விளக்கி, ஒவ்வொரு வகைக்கும் வரைவிலக்கணம் கூற ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்வு செய்யவும்.
அவர்களை மதிப்பீடு செய்து, சரியான பதிலை அவர்களுக்குக் கூற வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி உள்ரங்க, வெளிரங்க வணக்கங்களுக்கு இடையிலான தொடர்பைக் கணிக்க ஒவ்வொரு குழுவையும் கோரவும்.
வணக்கங்களின் முக்கியமான பயன்பாடுகளைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுங்கள்.
அவற்றை கரும்பலகையில் எழுத சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் சில கூறுகளை ஆராய்ந்தெடுக்குமாறு மாணவர்களைக் கோரி, அவற்றிலுள்ள தவறுகளைத் திருத்துவது சிறந்தது.
பின்பு அவற்றை கரும்பலகையில் எழுத வேண்டும். பின்வருவனவற்றை அவை உள்ளடக்கியிருக்கும் :
இபாதத் (வணக்க வழிபாடு) என்பது : வெளிப்படையான, மறைவான வார்த்தைகள் மற்றும் செயல்களில் அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமான ஒரு பொதுவான பெயராகும்.
வணக்கம் உள்ரங்கமான வணக்கம், வெளிப்படையான வணக்கம் என இரு வகைப்படும்.
நாவினால் ஓர் அடியான் நிறைவேற்றும் வணக்கம் சொல்சார்ந்த வணக்கமாகும்.
உடலால் ஓர் அடியான் நிறைவேற்றும் வணக்கம் செயல்சார்ந்த வணக்கமாகும்.
பொருளாதாரத்தை செலவளிப்பதுடன் தொடர்பான வணக்கம் பணம் சார்ந்த வணக்கமாகும்.
உள்ரங்கமான வணக்கம் : இவை உள்ளத்திற்கு மாத்திரமானவை என்பதால் உள்ளம் சார்ந்த வணக்கம் என்றும் இதற்குக் கூறப்படும். வணக்கங்களில் இதுவே பிரதானமானதும் மகத்துவமிக்கதாகும்.
வெளிப்படையான வணக்கம் உள்ரங்கமான வணக்கத்தை விட்டும் தனித்து நிற்கமாட்டாது.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, வணக்கம், மற்றும் அதனைப் பேணுவதன் முக்கியத்துவத்துவத்தை விளக்குதல்.
நோக்க இலக்கம் 3
பின்வரும் செயல்பாட்டை வீட்டுவேலையாக பதிலளிக்க ஒவ்வொரு மாணவரையும் பணியுங்கள்.
மதிப்பீடு செய்து, புத்தாக்கக் கருத்துக்களை முன்வைத்தவர்களை பாராட்டுவதற்காக, அடுத்த சந்திப்பில் பதில்கள் உங்களுக்குக் காட்டப்படவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, வணக்கத்தின் வகைகள், வடிவங்களை வித்தியாசப்படுத்துதல்
நோக்க இலக்கம் 2
மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவும் இரண்டாவது செயற்பாட்டிற்கு தனித்தனி தாளில் பதிலளிக்க வேண்டும்.
முடிந்த பிறகு, ஒவ்வொரு குழுவும் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து, அவர் ஊடாக செயல்பாடு பற்றி வாய்மொழியாக பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவையும் மதிப்பீடு செய்ய வேண்டும். சரியான பதிலளித்த குழுவே சிறந்த பதில்குழுவாகும்.
வணக்கம் இரண்டிற்கு இடையில் நடுநிலையாக நடந்துகொள்கின்றது. சொல்சார்ந்தது செயல் சார்ந்தது
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தொழுகையை உரிய நேரத்தில் நிறைவற்றுவதில் தொடர்ந்து நிலைத்திருக்கத் துணைபுரியும் மூன்று வழிமுறைகளை முன்மொழியவும். நோக்க இலக்கம் 6
ஒவ்வொரு மாணவருக்கும் மூன்றாவது செயலை தனியாகச் செய்யுமாறு அறிவுறுத்தி, அவரது பதிலை தனியான ஓர் அட்டையில் எழுதக் கூறவும். பின்னர் மாணவர்களிடமிருந்து அட்டைகளை சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, அவற்றில் மிகவும் துல்லியமான பதில்களைக் அடையாளப்படுத்தி, அதற்குரியவர்களைப் பாராட்டவும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
நீங்கள் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் பின்வரும் கேள்விகளைத் தீர்ப்பதில் பங்கேற்கச் சொல்லுங்கள்.
ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை மற்றொரு நண்பரின் அட்டையுடன் மாற்றி மதிப்பீடு செய்ய வேண்டும்.
உங்கள் மாணவர்கள் பதிலளிப்பதில் ஒத்துழைக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நீங்கள் அவர்களுக்கு மத்தியில் நடந்துகொண்டிருக்கவேண்டும்.
ஒவ்வொரு குழுவும் தங்கள் பதிலை வழங்குவதற்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறுங்கள். நீங்கள் அவற்றை மதிப்பீடு செய்யவேண்டும்.
கே1 : (உள்ளம் சார்ந்தது - பணம் சார்ந்தது - வணக்கத்தின் பலன்கள்).
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள் :
பாடத்தில் கற்றதன் படி, பின்வருவனவற்றை மாணவர்களுக்கு உணர்த்துவது விரும்பத்தக்கது:
கடமையான வணக்கங்களை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளுதல், மற்றும் ஸுன்னத்தான வணக்கங்களை நிறைவேற்றுவதில் முயற்சி செய்தல்.
அல்லாஹ்வை மென்மேலும் நெருங்குவதற்காக வணக்கங்களின் வகைகள், ஆதாரங்களை இன்னும் விரிவாகக் கற்றுக் கொள்ளல்.
பாடம் ஆறு : வணக்கத்தின் நிபந்தனைகள் மற்றும் கடமைகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (உளத்தூய்மை - நபியைப் பின்பற்றுதல் - நூதனங்களை உருவாக்குதல் - நேசம் - ஆதரவு - அச்சம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(ஆராய்ந்து அறியும் முறை - கருத்துதிர்ப்பு - கூட்டுக் கலந்துரையாடல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உள்ரங்க, வெளிரங்க அனைத்து சொல், செயல்களிலும் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடுதல்.
வணக்கம், அதன் அமைப்பு மற்றும் நேரம் அனைத்திலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு உடன்படுவதில் அக்கறை செலுத்துதல்.
அல்லாஹ்வின் நேசத்தை உணர்தல்.
அல்லாஹ்வின் அருளை அடைய முயற்சிப்பதும், அவனது கொடை, உதவியைக் கொண்டு நற்செய்தி பெறுதலும்
அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது தண்டனையைப் பயப்படல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை முன்வைத்து மாணவர்களுக்குப் பாடத்தை அறிமுகம் செய்யவும் : (அஹ்மத் பாடசாலைக்குச் சென்ற போது வகுப்புத் தோழர்கள் தொழுகையில் அதிகம் ஈடுபடக்கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய தமது நண்பர் காலிதைப் புகழ்வதைக் கேட்டார். அவனும், இவர்களது பேச்சால் மதிமயங்கி, பெருமிதம் கொண்டு, 'இரவில் நீண்ட நேரம் தஹஜ்ஜுத் தொழுததால் தூங்கவே இல்லை' என சத்தியமிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான்.)
பின்பு இந்த நிகழ்வு பற்றி தமது நிலைப்பாடென்ன? என மாணவர்களிடம் கலந்துரையாடி, அதனூடாகப் பாடத்திற்குச் செல்லவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் பாடத்தைப் படிப்பதில் பங்கேற்கச் சொல்லுங்கள். மேலும் ஒவ்வொரு குழுவும் பாடத்தின் மிக முக்கியமான கருத்துகளைப் பற்றி தமக்குள் விவாதிக்க வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
கூட்டுக் கலந்துரையாடல் முறையைப் பயன்படுத்தி வணக்கத்தின் நிபந்தனைகள் மற்றும் அவற்றிற்கான ஆதாரங்கள் பற்றி மாணவர்களுடன் விவாதிக்கவும்.
பின்னர், ஊகித்து அறியும் முறையைப் பயன்படுத்தி, மாணவர்கள் வணக்கத்தில் உளத்தூய்மை அல்லது நபிவழியை விடுவதன் தாக்கத்தைக் கண்டறிய வேண்டும். இதன் போது, அவர்களுக்கு உதவி, சரியாக பதிலளித்தவர்களைப் பாராட்டவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, வணக்கத்தின் தூண்களான நேசம், அச்சம், ஆதரவு ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு பற்றி சிந்திக்கக் கூறவும்.
பின், அவர்கள் கண்டறிந்தவற்றைப் பற்றி விவாதிப்பதுடன், அத்தூண்களின் ஆதாரங்களையும் அவர்களுக்கு விளக்கவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடக் கூறுகளின் ஒரு சொற்பொருள் வரைபடத்தின் மூலம் மாணவர்களுடன் பாடத்தின் முக்கிய சிந்தனைகளை மீட்டவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, நரகத்திற்குச் செல்லும் காரணிகளைக் கண்டறிதல், அந்த நிலை எமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? நோக்க இலக்கம் 1
ஒவ்வொரு மாணவரும் பின்வரும் செயல்பாட்டிற்கு தனித்தனியாக ஒரு தனித் தாளில் பதிலளிக்க வேண்டும். பின்னர் நீங்கள் பதில்களைத் திருத்த வேண்டும்.
சிறப்பாக செயல்பட்டவரிடம் தமது செயற்பாட்டை பெரியதொரு பலகையில் வடிவமைத்துத் தருமாறு கேட்டு, வகுப்பறையில் அதைத் தொங்கவிட வேண்டும்.
வணக்கத்தில் உளத்தூய்மையைக் கடைபிடிக்க வில்லை. எனவே, அவரது வணக்கம் ஏற்கப்பட வில்லை. அதாவது, தான் ஓர் அறிஞர் என்றோ, காரீ என்றோ கூறப்படுவதற்காக குர்ஆனைக் கற்று ஓதினார்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, வணக்கத்தின் தூண்களுக்கான ஆதாரத்தை அறிதல்.
நோக்க இலக்கம் 2
உங்கள் மாணவர்களுக்கு பின்வரும் செயல்பாட்டை வாய்மொழியாக வழங்கிவிட்டு, பின்னர் ஒவ்வொரு மாணவரிடமும் அதற்கான பதிலைப் பற்றி சிந்திக்கச் சொல்லுங்கள்.
அவர்களுக்கு குறிப்பிட்ட காலஅளவு வழங்கவும், முதலில் சரியான பதிலளிப்பவரே வெற்றியாளராவார்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
கரும்பலகையில் கேள்விகளை ஒவ்வொன்றாக எழுதுவது நல்லது.
பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க, அருகருகில் அமர்ந்திருக்கும் இவ்விரண்டு மாணவர்களாகப் பங்கு கொள்ளச் சொல்லுங்கள்.
பின்னர் எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்து, தமது பதில்களை ஏனையோர் முன்னிலையில் சமர்ப்பிக்குமாறு கூறுங்கள்.
தவறு செய்தவர்களிடம், பாடத்தின் உள்ளடக்கத்தைப் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க சொல்லுங்கள்.
கே 1 : (X) - (√) - (√)
வளமூட்டும் மேலதிக ஒரு செயல்பாடு:
ஒவ்வொரு மாணவரும் வணக்கத்தில் உளத்தூய்மையைக் கடைபிடிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.
பாடத்திலிருந்து தாம் கற்றவற்றை ஒவ்வொரு மாணவரும் தம்மைச் சூழ உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
வணக்கத்தின் நிபந்தனைகள், தூண்களை உள்ளடக்கிய பதாகைகளை வடிவமைக்க மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்
பாடம் ஏழு : ஈமானின் அதிகரிப்பும், குறைவும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (ஏற்றத் தாழ்வு - பெரும்பாவங்கள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - ஓடியோ பதிவு).
கற்பித்தல் உத்திகள்:
(கண்ணோட்டங்களை பகுப்பாய்வு செய்தல் - முந்தைய அமைப்புகள் - கருத்துதிர்ப்பு - சொற்பொருள் வரைபடங்கள் - நேர்எதிர் சிந்தனை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
ஈமானின் உயர்தரத்தை அடைய முயற்சியில், நற்காரியங்களை செய்வதில் கடுமையாக உழைத்தல்.
ஈமானை அதிகரிக்கும் செயல்களை நிறைவேற்றத் தூண்டல்.
ஈமானைக் குறைக்கக்கூடிய செயல்களைத் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
கரும்பலகையில் பின்வரும் வாக்கியத்தை எழுதுங்கள்: (ஈமான் என்பது ஒரு நிலையான விடயம்; அது அதிகரிக்கவோ குறையவோ மாட்டாது). பின்னர், மாணவர்களிடம் இதுபற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கச் சொல்லுங்கள். வாக்கியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் அவரவர் நோட்டுப் புத்தகத்தில் அவரவர் கருத்தை எழுதுமாறு பணிக்கும் அதேவேளை, பாடம் முடியும் வரை அவர்களது கருத்துக்களை மதிப்பிடுவதை ஒத்திவைப்பதாகவும் உணர்த்துங்கள்.
பாடத்தின் உள்ளடக்கத்தை மாணவர்களுக்கு விளக்கி, பின்பு, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பின்வரும் இரண்டு வாசகங்களை கரும்பலகையில் எழுதவும். மேலும் மாணவர்கள் இவைபற்றி அறிந்துள்ளவற்றை விளக்குமாறு கேட்கவும். அதேநேரம், இவவாசகம் மற்றும் அதன் உள்ளடக்கத்துடன் பொருந்திப் போகும் சில நடைமுறை உதாரணங்களையும் எடுத்துக்காட்டவும்.
(ஈமான் என்பது நம்பிக்கை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஆகியவையாகும்) - (ஈமான் கீழ்ப்படிதலால் அதிகரிக்கிறது, பாவத்தால் குறைகிறது).
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு உத்தி மூலம்; ஈமானை அதிகரிக்கும் செயல்களைக் குறிப்பிடுமாறு மாணவர்களைக் கேளுங்கள். மேலும் அவர்களைத் தமது ஆக்கத்திறனைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும். அவர்களது பதில்களை எடுத்து விவாதிக்கவும். பின்னர் அச்செயல்களை உள்ளடக்கிய சொற்பொருள் வரைபடத்தைக் காண்பித்து, அதனை விளக்கி, அதனுடன் தொடர்பான ஆதாரங்களையும் தெளிவுபடுத்தவும்.
மூன்றாம் கட்டம்:
நேர்எதிர் சிந்தனை உத்தியைப் பயன்படுத்தி, ஈமானைக் குறைக்கக் கூடிய செயல்களைக் கண்டறிய மாணவர்களை அறிவுறுத்தவும். அவைபற்றி அவர்களுடன் கலந்துரையாடி, சரியான பதில்களைக் குறிப்பிடுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களையும் விளக்கவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் அறிமுகத்தின் போது வழங்கப்பட்ட வாக்கியத்தைப் பற்றிய தமது கருத்தை மீளாய்வு செய்யுமாறு ஆசிரியர் மாணவர்களை அறிவுறுத்தவேண்டும். அவர் தனது அனுபவங்களைக் கடந்துவந்த பிறகும், பாடத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி அறிந்த பிறகும் பதிலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்களின் பதில்களை அவர் அடையாளம் கண்டு அவர்களுக்கு பொருத்தமான கருத்துக்களை வழங்க வேண்டும்.
தாம் பாடத்திலிருந்து கற்றதை சுருக்கமான மூன்று வார்த்தைகளில் வடிக்குமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கோர வேண்டும். அதில் தாம் கற்றுக்கொண்டவையும், கற்றுக்கொண்ட பின் தாம் செய்யவேண்டியவைகளும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். தமது பதில்களை காண்பிப்பதற்காக சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கருத்துரை வழங்குவதுடன், பதில்களுக்கு மத்தியில் ஒப்பிட்டுக் காட்டவும்வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் இரட்டையர் முறை, ஈமான் அதிகரிப்பதையும் குறைவதையும் அறியும் முறை
நோக்க இலக்கம் 1, 2
ஆசிரியர் சில திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு செயல்பாட்டில் இடம்பெற்றுள்ள, முன்னைய அறிஞரின் கூற்றை (அஸர்) வாசிக்கச் சொல்லி, அதன் அர்த்தம் பற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அந்தக் கூற்றின் படி, ஒரு முஸ்லிம் தனது ஈமான் அதிகரிக்கின்றதா அல்லது குறைகின்றதா என்பதைக் கண்டறியும் விதத்தை, தமது பகுப்பாய்வு மற்றும் ஆராய்ந்தறியும் திறமைகளைப் பயன்படுத்தி அறியுமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும். மாணவர்களின் பதில்களைப் பெற்று ஆசிரியர் அவை தொடர்பாக விவாதித்து, அதனூடாக சரியான பதில்களை அடைய வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஈமானை அதிகரிக்கும் சில செயல்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் 2
ஈமான் அதிகரிப்பதற்காகத் தொடர்ந்து தாம் செய்ய வேண்டிய சில நற்செயல்களைக் கூறுமாரு ஆசிரியர் மாணவர்களிடம் கோர வேண்டும். அவர் ஒவ்வொரு மாணவரின் பதிலையும் பெற்று, அவற்றிறக்கிடையில் ஒப்பிட்டு, மிகவும் பொதுவான மற்றும் அதிகம் கூறப்பட்டுள்ள செயல்களை அடையாளம் காட்ட வேண்டும். அதேபோன்று தனித்துவமான அமல்களையும் அடையாளப்படுத்தி, அதனைக் கூறியவர்களைப் பாராட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஈமானை அதிகரிக்கும் முறையில் பயற்சியளித்தல்.
நோக்க இலக்கம் 5
மூன்றாவது செயல்பாட்டைத் தனியாகச் செய்ய ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்துவதோடு, வீடியோவில் உள்ளதையும் பார்க்குமாறு அவர்களுக்குக் கூறுங்கள். சில மாணவர்களைத் தேர்வு செய்து பதில்களை முன்வைக்கச் செய்து, அவற்றை மதிப்பீடு செய்யவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
முதலிரு கேள்விகளுக்கும் பதிலளிக்க இவ்விரு மாணவர்களாக நியமியுங்கள். இரண்டு குழுக்களைத் தெரிவு செய்து, தங்கள் பதில்களை முன்வைக்க வையுங்கள். நீங்கள் அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்த்து, மிகச் சரியான பதிலை அடையாளப்படுத்திக் கொடுக்கும் அதே நேரத்தில், ஒவ்வொரு குழுவும் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வழிகாட்ட வேண்டும்.
கே 1: (×) - (✓) - (×) - (✓)
கே 2 : அதிகரிக்கும், குறையும் - அதிகமாக பாவமன்னிப்புக் கோருதல் - பெரும்பாவங்கள்.
எழுமாறாக இரண்டு மாணவர்களைத் தேர்வுசெய்து, மூன்றாவது கேள்வியின் கூறுகளில் ஒன்றுக்குப் பதிலளிக்கக் கூறுங்கள். மேலும் இருவரைத் தேர்வுசெய்து, ஒவ்வொருவரையும் தனது சக நண்பர்களில் ஒருவரின் பதிலை மதிப்பீடு செய்யுமாறு கூறுங்கள்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஈமானைக் குறைக்கும் விடயங்களைத் தவிர்ந்து கொள்வதுடன் அதனை அதிகரிக்கும் நற்செயல்களைப் பற்றிப்பிடிக்க மாணவர்களை ஊக்குவிப்பது, அதனை நிலைநாட்ட தமக்கிடையே போட்டி போட மாணவர்களை ஊக்குவித்தல்.
ஒவ்வொரு மாணவரும் தனது திட்டமிடல் மற்றும் ஆக்கத்திறன்களைச் சார்ந்து, ஈமானை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் அதைக் குறைக்கும் செயல்கள் அடங்கிய சிற்றேட்டைத் தயாரித்து, அதை அவர் தனது நண்பர்களுக்கு பரிசாக வழங்கி அவர்களும் அவற்றை அறியவும் கடைப்பிடிக்கவும் செய்யவேண்டும்.
ஸுன்னா மற்றும் குணாதிசயப் பகுதி
பாடம் ஒன்று : தனது உறவினர்களுடன் நபிகளாரின் வழிமுறை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (கூடப்பிறந்த சகோதரன் - மகிழ்கின்றேன் - அவர்களுடைய பொறுப்பாளி).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் பலகை - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் ).
கற்பித்தல் உத்திகள்:
("நான் அறிவேன் - நான் அறிய விரும்புகிறேன் - நான் அறிந்து கொண்டேன் K.W.L" என்ற உத்தி - கதை கூறும் முறை - கருத்துதிர்ப்பு - பிரசினங்களை தீர்க்கும் முறை - சூடான இருக்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உறவினர்களுக்கு உபகாரம் புரிவதில் இஸ்லாம் காட்டும் முக்கியத்துவத்தை உணர்த்துதல்.
உறவினர்களுடன் நடந்து கொள்ளும் முறையில் நபிவழியைப் பின்பற்றுதல்.
உறவினர்களுடன் மென்மையாக நடந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
ஆசிரியர் பின்வரும் வார்த்தையை மாணவர்களுக்குக் காண்பிக்க வேண்டும் : (உறவினர்களுக்கு இஸ்லாத்தில் பல உரிமைகள் உண்டு. நபி (ஸல்) அவர்கள் இந்த உரிமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள்.) நபி (ஸல்) அவர்கள் தமது உறவினர்களுடன் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி இப்பாடத்தில் குறிப்பாகப் பேசுவதற்கான காரணத்தை ஆராயுமாறு அவர்களிடம் கூறவும்.
பாடத்தைப் பற்றிய ஒரு மனப் படத்தை உருவாக்குவதற்காக அதன் கூறுகளின் விளக்க உருவொன்றை மாணவர்களுக்குக் காட்ட வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட கற்பித்தல் அட்டையொன்றை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்:
முதல் பகுதி K எழுத்தைக் கொண்டிருக்கும் (know அறிகிறேன்)
இரண்டாம் பகுதி W எழுத்தைக் கொண்டிருக்கும் (want நான் அறிய விரும்புகிறேன்)
மூன்றாம் பகுதி L எழுத்தைக் கொண்டிருக்கும் (learn கற்றுக் கொண்டேன்).
ஒவ்வொரு பகுதியின் அர்த்தத்தையும் ஆசிரியர் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பின்னர் தங்களுக்குத் தெரிந்த முந்தைய தகவல்களை முன்வைத்து, நபி (ஸல்) அவர்கள் உறவினர்களுடன் நடந்து கொண்ட முறை குறித்து முதல் பகுதியில் எழுதுமாறு கோர வேண்டும். அவ்விடயத்தில் அவர்களுடைய அறிவுப் பின்னணியை அறிந்து கொள்ள அதுபற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் அவர்கள் பாடத்தில் தெரிந்துகொள்ள விரும்பும் தகவலை முன்வைத்து, அதை இரண்டாம் பாகத்தில் எழுதும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் கதை முறையைப் பயன்படுத்தி, நபி(ஸல்) அவர்கள் தனது முஸ்லிம் உறவினர்களுடன் நடந்துகொண்ட முறையை முன்வைக்கவேண்டும். அவற்றைக் குறிக்கும் ஹதீஸ்களையும் முன்வைத்து, அவற்றை விளக்கி, அவை கற்றுத் தரும் பாடங்களையும் விளக்கவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறை மூலம், ஒரு முஸ்லீம் தனது முஸ்லிமல்லாத உறவினர்களுடனான தொடர்புகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவர்களின் கருத்துக்களைக் கூறுமாறு மாணவர்களிடம் கூறவும். அவர்களின் பதில்களைக் கண்டறிந்த பின்னர், நபி (ஸல்) அவர்களின் முஸ்லிமல்லாத தனது உறவினர்களுடனான தொடர்பின் வெளிப்பாடுகளை, அது தொடர்பான ஹதீஸ்களை வைத்து அவர்களுக்கு விளக்கவும்.
நான்காம் கட்டம்:
பிரசினங்களைத் தீர்க்கும் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் பிரசினத்தை மாணவர்களிடம் கேளுங்கள். அதை எவ்வாறு தீர்ப்பது என்பதை விளக்கச் சொல்லுங்கள். மேலும் அவர்களின் பதில்களை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அம்சங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தவும் : (ஒரு மனிதனுக்கு தந்தையின் நான்கு சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உள்ளனர். அவர் தனது தந்தையின் சகோதரர்களுடன் தொடர்பைப் பேண ஆர்வமாக உள்ளார். ஆனால் அவர் தனது தந்தையின் சகோதரிகளுடன் உறவைப் பேணித் தொடரவில்லை. இந்த மனிதனின் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரை என்ன செய்ய அறிவுறுத்துகிறீர்கள்?)
இறுதிச் சுருக்கம் :
மாணவர்கள் தங்களிடம் உள்ள அட்டையின் மூன்றாவது பகுதியை முழுமைப்படுத்துமாறு அறிவுறுத்துங்கள். இது பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை பொது கூறுகளின் வடிவத்தில் எழுதுவது தொடர்பான பகுதி (L) ஆகும். சில அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மாணவர்கள் என்ன எழுதியுள்ளனர் என்பதைப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, உறவினர்களுடனான நபியவர்களின் வழிமுறையைக் காட்டும் ஆதாரங்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் 2
மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பது நல்லது. அவர்கள் ஒவ்வொருவரும் முதல் செயல்பாட்டிலிருந்து ஒவ்வொரு ஹதீஸை சகநண்பர்களுக்கு வாசிக்க வேண்டும். பின்னர் அவர்கள் தமக்கிடையில் அவ்விரு ஹதீஸ்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஹதீஸும் குறிப்பிடுவதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு மின்னணு ஆதாரங்களை நாடுவதன் மூலம் செயல்பாட்டைப் பற்றிய முழுமையான அறிவைப் பெறுவதற்கு வழிநடத்தப்பட வேண்டும். அதில் அக்குழுக்களின் செயல்திறனையும், அவர்கள் கண்டறிந்தவற்றையும் அடுத்த சந்திப்பில் கவனிக்கவேண்டும்.
அது அறிவிக்கும் அம்சங்கள்:
தனது முஸ்லிமல்லாத உறவினர்கள் மீதான நபி (ஸல்) அவர்களின் கருணை .
தனது முஸ்லிம் உறவினர்களின் பிள்ளைகள் மீதான நபி (ஸல்) அவர்களின் கவனிப்பு.
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, முஸ்லிமல்லாதவர்களை (இஸ்லாமிற்கு) அழைப்பதற்கான பிரதான வழிமுறைகளைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் 4
சூடான இருக்கை மூலோபாயத்தைப் பயன்படுத்துதல்; மாணவர்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்திருக்க வேண்டும். வட்டத்தின் மையத்தில் ஒரு நாற்காலி வைக்கப்படும். ஆசிரியர் மாணவர்களில் ஒருவரை சூடான நாற்காலியில் உட்காரச் சொல்லவேண்டும்.
அவரிடம் ஆசிரியர் பின்வரும் வாசகத்தை தனது வகுப்பு தோழர்களுக்குப் படிக்குமாறு அறிவுறுத்துவார். பின்னர் மாணவர், ஆசிரியர் மற்றும் வகுப்பு தோழர்களிடமிருந்து இவ்வாசகத்தை தெளிவுபடுத்துதல் மற்றும் புரிந்துகொள்வது குறித்த கேள்விகளைப் பெறத் தொடங்குகிவார். அதன் மூலம், உங்கள் சமூகத்தில் உள்ள முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்திற்கு அழைக்க மூன்று வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
மாணவரின் பதிலை ஆசிரியரும் சகநண்பர்களும் கவனித்து, அதை மதிப்பீடு செய்து, சரியான பதிலைக் கண்டெடுக்க அம்மாணவருடன் தகவல்கள் மற்றும் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
முதல் கேள்விக்கு பதிலளிக்க, அதில் உள்ள கூறுகளை அடுத்தடுத்து மாணவர்களிடம் வாசிக்கவும். அவ்வாசகம் சரியாக இருந்தால், மாணவர் தனது கையை உயர்த்த வேண்டும். மாணவர்களின் பதில்களை மதிப்பீடு செய்து, அவர்களோடு இணைந்து சரியான மற்றும் தவறான பதில்களைப் பிரித்தரியவும்.
கே 1: (×) - (✓) - (✓) - (×) - (✓)
ஒவ்வொரு மாணவரும் இரண்டாவது கேள்விக்கு தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பர் ஒருவரின் பதிலுடன் பரிமாறி, தத்தமது பதில்களைத் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் ஒவ்வொரு குழுவையும் கண்காணித்து வழிநடத்துங்கள்.
கே 2 : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), ஹம்ஸா (ரலி).
மூன்றாவது கேள்வியில் உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் கரும்பலகையில் எழுதவும். பின்பு, மூன்று மாணவர்களைத் தேர்வுசெய்து, ஒவ்வொருவரையும் அதற்குப் பதிலளிக்க வைக்கவும். யாராவது தவறு செய்தால் சரியான பதிலை அவரே கண்டுபிடிக்க, பாடத்தை மீண்டும் படிக்கும்படி அவருக்கு அறிவுறுத்துங்கள் .
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
முஸ்லிமான, முஸ்லிமல்லாத தமது உறவினர்களுடன் நபியவர்கள் நடந்து கொண்ட முறையைப் பின்பற்றி, அவர்களுடன் பழகும் போது நல்ல பண்பாடுகள், நற்குணங்களை கடைபிடித்தல்.
உறவினர்களுடன் பழகும் போது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடன் பொருந்தாத எதிர்மறை வெளிப்பாடுகளில் விழுபவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் அவற்றை எதிர்கொள்வதுடன், நபியின் வழிகாட்டுதலைப் பின்பற்ற அவர்களைத் தூண்டுவது.
பாடம் இரண்டு : தனது அயலவர்கள் விடயத்தில் நபிகளாரின் வழிமுறை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அயலவர் - உபதேசம் - அனந்தரமாக்கி விடுவார் - அவர்களுக்கும் கொடுங்கள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் பலகை - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
("நான் அறிவேன் - நான் அறிய விரும்புகிறேன் - நான் அறிந்து கொண்டேன் K.W.L" என்ற உத்தி - கதை கூறும் முறை - கருத்துதிர்ப்பு - பிரசினங்களை தீர்க்கும் முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அயலவர்களுக்கு உபகாரம் புரிவதில் நபியவர்களைப் பின்பற்றுதல்.
அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்ந்து கொள்தல்.
பாடத்தின் அறிமுகம்:
ஆசிரியர் பின்வரும் ஹதீஸை காட்சித் திரையின் மூலம் மாணவர்களுக்கு காண்பித்து, அதைப் வாசிக்கவும், அவதானிக்கவும் அறிவுறுத்த வேண்டும். மேலும் அது உணர்த்துபவற்றை முன்வைக்க அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அர்த்தமும் பாடத்துடனான தொடர்பும் தெளிவுபடுத்தப்படவேண்டும்: "ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவரைப் பற்றி எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள், எந்தளவுக்கெனில், அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணிவிட்டேன்".
பாடத்தின் கூறுகளை விளக்கும் விளக்கப்படத்தை மாணவர்களுக்குக் காட்டுங்கள்; இது பாடம் உள்ளடக்கியுள்ள அம்சங்களைப் பற்றி பொதுவான மனப் படத்தை உருவாக்கும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட கற்பித்தல் அட்டையொன்றை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்:
முதல் பகுதி K எழுத்தைக் கொண்டிருக்கும் (know அறிகிறேன்)
இரண்டாம் பகுதி W எழுத்தைக் கொண்டிருக்கும் (want நான் அறிய விரும்புகிறேன்)
மூன்றாம் பகுதி L எழுத்தைக் கொண்டிருக்கும் (learn கற்றுக் கொண்டேன்).
ஒவ்வொரு பகுதியின் அர்த்தத்தையும் ஆசிரியர் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அயலவர்களுடன் நடந்து கொண்ட முறை குறித்து தங்களுக்குத் தெரிந்த முந்தைய தகவல்களை முன்வைத்து, அதை முதல் பகுதியில் எழுதுமாறு கோர வேண்டும். அவ்விடயத்தில் அவர்களுடைய அறிவுப் பின்னணியை அறிந்து கொள்ள அதுபற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் அவர்கள் பாடத்தில் தெரிந்துகொள்ள விரும்பும் தகவல்கள் மற்றும் சிந்தனைகளை முன்வைத்து, அதை இரண்டாம் பாகத்தில் எழுதும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
கதை முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் நபி(ஸல்) அவர்கள் தனது அயலவர்களுடன் நடந்துகொண்ட முறையை முன்வைக்கவேண்டும். அந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக அமையும் ஹதீஸ்களையும் காட்சித் திரை ஊடாக முன்வைத்து, அவை உணர்த்தும் அர்த்தங்களையும் விளக்கவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறை மூலம், ஒரு முஸ்லிம் தனது அயலவர்களுடனான தொடர்புகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிந்த பின்னர், நபி (ஸல்) அவர்களின் அயலவர்களுடனான தொடர்பின் வெளிப்பாடுகளை, அது தொடர்பான ஹதீஸ்களை வைத்து அவர்களுக்கு விளக்கவும்.
நான்காம் கட்டம்:
பிரசினங்களைத் தீர்க்கும் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் பிரசினத்தை மாணவர்களிடம் முன்வைத்து, அதை பாடத்தோடு இணைத்து எவ்வாறு தீர்ப்பது என்பதை விளக்கச் சொல்லுங்கள். (ஒரு பணக்காரன் தன் பிள்ளைகளுக்கு உணவும் பழமும் கொண்டு வருகிறான். அவனது அயல்வீட்டில் தன் பிள்ளைகளுக்குப் போதிய உணவைக் கொண்டு வர முடியாத ஒரு ஏழை இருக்கிறான். பணக்காரன் தன் பிள்ளைகளிடம், ஏழையின் பிள்ளைகளுக்கு எதையும் கொடுக்கக் கூடாது என்று தடை விதித்திருந்தான். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அவருக்கு என்ன உபதேசம் வழங்குவீரகள்?)
இறுதிச் சுருக்கம் :
மாணவர்கள் தங்களிடம் உள்ள அட்டையின் மூன்றாவது பகுதியை முழுமைப்படுத்துமாறு அறிவுறுத்துங்கள். இது பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை பொது கூறுகளின் வடிவத்தில் எழுதுவது தொடர்பான பகுதி (L) ஆகும். சில அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மாணவர்கள் என்ன எழுதியுள்ளனர் என்பதைப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, அயலவர்களுக்கு உபகாரம் அல்லது நோவினை செய்வதன் வடிவங்களை அறிதல்.
நோக்க இலக்கம் 3
ஒவ்வொரு குழு மாணவர்களும் அட்டவணையை நிரப்புவதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்வுசெய்து, சகநண்பர்கள் முன்னிலையில் நிற்குமாறு கூறவும். ஆசிரியர் அட்டவணையின் உறுப்புக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்வைக்கும்போது, ஒவ்வொரு குழுவின் பிரதிநிதியும் அந்த உறுப்புக்களுக்கான தனது குழுவின் பதிலை முன்வைக்க வேண்டும். குழுக்களின் செயல்திறனை ஒப்பிட்டு, மிகவும் துல்லியமாக யதார்த்தத்தை விளக்கிப் பகுப்பாய்வு செய்த குழுவை அடையாளம் காண வேண்டும்.
அயலவருக்கு ஏசுதல், அவர்களுடன் மோசமாக பேசுதல்.
அயலவர்களுக்குத் தேவையானவற்றை அன்பளிப்புச் செய்தல்.
அவருடைய மானம் மற்றும் உரிமைகளில் அத்துமீறுதல்.
அவருக்குப் பயனுள்ள, நலவுள்ள விடயங்களை செய்ய இடமளித்தல்.
நோக்க இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, உபகாரத்தின் சில வடிவங்களை முன்மொழிதல்.
நோக்க இலக்கம் 2
இரண்டாவது செயல்பாட்டிலுள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அயலவருக்கு வழங்க முடியுமான சில உபகார வகைகளை முன்மொழிவது பற்றி ஒவ்வொரு மாணவரும் தனது சக நண்பர்களுடன் காலந்துரையாடுமாறு அறிவுறுத்துங்கள். அடுத்த சந்திப்பில், மாணவர்கள் என்ன செய்தார்கள் மற்றும் சக நண்பர்களுடன் இணைந்து அவர்கள் எட்டிய முடிவுகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ளவும்.
நோக்க இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அயலவர்களுடன் நடந்துகொள்ளும் முறையை மதிப்பிட பயிற்சியளித்தல்.
நோக்க இலக்கம் : 3
ஆசிரியர் சில அட்டைகளை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். ஒவ்வொரு அட்டையும் பின்வரும் வார்த்தைகளில் ஒன்றைக் கொண்டிருக்கும்: (எப்போதும் - சில நேரங்களில் - அரிதாக) அவர் செயல்பாட்டிலிருந்து ஒவ்வொரு சொற்றொடரையும் தொடர்ச்சியாகப் படித்து, அந்த சொற்றொடருக்குப் பொருத்தமான அட்டையை உயர்த்தும்படி அவர்களிடம் கேட்கவேண்டும். மேலும் அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு அவற்றை மதிப்பிட வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
முதல் கேள்விக்கு பதிலளிக்க, அதன் கூறுகளை அடுத்தடுத்து படிக்கவும். வாசகம் சரியாக இருந்தால், மாணவர் தனது கையை உயர்த்த வேண்டும். மாணவர்களின் பதில்களை மதிப்பீடு செய்து, அவர்களோடு இணைந்து எந்த வாசகங்கள் சரியானவை மற்றும் தவறானவை என்பதை கண்டடையவும்.
கே1: (✓) - (✓) - (×) - (×)
ஒவ்வொரு மாணவரும் இரண்டாவது கேள்விக்கு தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பர் ஒருவரின் பதிலுடன் பரிமாறி, தத்தமது பதில்களைத் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் ஒவ்வொரு குழுவையும் கண்காணித்து வழிநடத்துங்கள்.
கே 2 : அயலவர்களைத் துன்புறுத்துவது கூடாது - உணவைக் கொண்டு - அவர்களை நோவினை செய்தல்
மூன்றாவது கேள்வியை கரும்பலகையில் எழுதவும். மூன்று மாணவர்களைத் தேர்வுசெய்து, ஒவ்வொருவரையும் அயலவருக்கு செய்யும் உபகாரங்களின் வடிவங்களில் ஒன்றைக் கூற வைக்கவும். மாணவர்கள் யாராவது தவறு செய்தால் சரியான பதிலை அவரே கண்டுபிடிக்கும் நோக்கில், பாடத்தை மீண்டும் படிக்கும்படி அவருக்கு அறிவுறுத்துங்கள் .
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அயலவர்களுடன் நபியவர்கள் நடந்து கொண்ட முறையைப் பின்பற்றி, அவர்களுடன் பழகும் போது நல்ல பண்பாடுகள், நற்குணங்களை கடைபிடித்தல்.
சுற்றியுள்ள சமூகத்தில் மக்கள் அயலவர்களுடன் நடப்பதில் விடும் தவறுகளை ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் எதிர்கொள்வதுடன், குறித்த விடயத்தில் பாடத்தில் கற்ற அம்சங்களை அவர்களுக்கு அறியத்தருதல்.
பாடம் மூன்று: சிறார்களுடன் நடந்து கொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (குடும்பத்தவர் - என்னை அணைத்தார் - வயோதிபர்கள் - முடியில் சிலதை வைத்து சிலதை சிரைத்தல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(ஓடியோ பதிவு- காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை ).
கற்பித்தல் உத்திகள்:
(கூட்டு கற்கை முறை - பிரசினங்களைத் தீர்த்தல் - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
நபி (ஸல்) அவர்கள் சிறார்கள் விடயத்தில் கவனம் செலுத்தியதை உணர்த்துதல்.
சிறார்களிடம் அன்பு செலுத்துவதில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
சிறார்களிடம் அன்பு காட்டுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சிக்கலான சூழ்நிலையைக் கூறி மாணவர்களுக்கு பாடத்தை ஆரம்பிக்கவும்: (காலிதும் அவரது குழந்தைகளும் உல்லாசத்திற்காக வெளியே சென்றனர். அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து அரட்டை அடித்தும், விளையாடிக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர். அங்கே அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் அஹ்மத் தனது குழந்தைகளுடன் உல்லாசித்திற்க்கு வெளியே வந்திருந்தார், அவர்கள் இவருக்கு ஸலாம் கூறினர். ஆனால், அவருடைய குழந்தைகளில் யாராவது ஒருவன் விளையாடச் செல்லும் போதெல்லாம், அவனுடைய தந்தை அவனைக் கண்டித்து, எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதையும், இந்நிலை உல்லாசப்பயணம் முழுவதும் தொடர்ந்ததையும், இறுதியாக குழந்தைகள் அழுதுகொண்டே உறங்கத் தயாரான போதும், அவர் அவர்களை மீண்டும் ஏசி, சபித்ததையும் அவர்கள் கவனித்தனர். எந்தவொரு சந்தோசத்தையும் அனுபவிக்காமல் அவர்கள் வீடு திரும்பினர். இந்நிலையைப் பார்த்து காலிதும், அவரது குழந்தைகளும் கோபப்பட்டனர். காலித் : "இரக்கம் காட்டாதவன் இரக்கம் காட்டப்பட மாட்டான்" எனக் கூறிக்கொண்டே இருந்தார்).
இந்த சூழ்நிலையை மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கும்படி கேளுங்கள். அதனூடாக பாடத்தின் தலைப்பில் நுழைந்து, அதை கரும்பலகையில் எழுதுங்கள்
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, கூட்டு கற்றல் உத்தியைப் பயன்படுத்துங்கள். மேலும் கருணையின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் வரையறுக்க ஒவ்வொரு குழுவையும் பணியுங்கள்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் அடைந்த முடிவுகளை முன்வைக்கச் செய்து, பின்பு மிகவும் துல்லியமான பதில்களை காட்டிக்கொடுங்கள்.
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, குழந்தைகளோடு நடந்துகொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் ஊகித்தெடுக்க மாணவர்களை வேண்டவும். பின்னர் அவர்களில் சிலரைத் தெரிவுசெய்து, தாம் கண்ட முடிவுகளை முன்வைத்து, கரும்பலகையில் எழுதவைக்கவும்
மூன்றாம் கட்டம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் குழந்தைகளை வளர்ப்பதிலும் கற்பிப்பதிலும் எப்படி அக்கறை கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிடவும், அதற்கு நபியவர்கள் கூறியவற்றைக் கொண்டு ஆதாரங்களை வழங்கவும் பணியுங்கள்.
தாம் பெற்றுக் கொண்டவற்றை முன்வைக்க ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பொருத்தமான கருத்துக்களை வழங்கவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடமீட்டலுக்கு இலகுவாக, சிந்தனைகள் மற்றும் கூறுகள் அமைப்பில் பாடத்தை தங்கள் குறிப்பேடுகளில் எழுதுமாறு ஒவ்வொரு குழுவையும் பணியுங்கள்.
எழுதப்பட்ட தாள்களின் உதவியின்றி பாடத்தின் சுருக்கத்தை வாய்வழியாக வழங்க சில மாணவர்களைக் கேளுங்கள், மேலும் அதில் திறமையானவர்களை பாராட்டுங்கள்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
செயல்பாட்டு இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, நபி (ஸல்) அவர்கள் சிறார்களுடன் நடந்து கொண்ட முறையை ஆராய்ந்தறிதல்.
நோக்க இலக்கம் : 2, 3
இவ்விரு மாணவர்களாக முதல் செயல்பாட்டைச் செய்வதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். பின்னர் செயல்பாட்டில் வந்துள்ள சூழ்நிலைகளை காட்சித் திரையின் மூலம் ஒவ்வொன்றாகக் காண்பிக்கவும். அதற்கான ஒவ்வொரு குழுவின் பதிலையும் நீங்கள் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையும் எதை உணர்த்துகின்றது என்பதைக் கண்டறிந்து, அதனை அழகான வார்த்தைகளில் வடிவமைக்க சிறப்பாக முயற்சித்த குழுவை அடையாளப்படுத்தவும். மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் எழுதிக்கொள்வதற்காக, சிறந்த வார்த்தை வடிவமைப்பை அடையாளப்படுத்திக் கொடுக்கவேண்டும்.
சிறார்களை அன்புடனும் நேசத்துடனும் முத்தமிடல்.
சிறார்களுடன் மென்மையாக பரிவுடன் கொஞ்சி விளையாடுதல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, நடத்தை வெளிப்படுத்தும் உணர்வை விவரித்தல்.
நோக்க இலக்கம் : 4, 5
செயற்பாட்டைத் தனித்தனியாகச் செய்யுமாறு ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்துவதோடு, பாடத்தின் உள்ளடக்கத்தை படிக்குமாறும் உணர்த்தவேண்டும். மேலும், சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை முன்வைக்கக் கூறி, அவற்றை மதிப்பீடு செய்யவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
1. முதலிரு வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களும் தமது கொப்பியில் பதிலளித்தல் வேண்டும்.
2. பதில்களை மதிப்பீடு செய்ய அருகில் இருக்கும் நண்பருடன் கொப்பியாப் பரிமாரிக் கொள்ள வேண்டும்.
3. சக நண்பர்களுக்கு முன் தனது பதிலை முன்வைக்க ஓரு மாணவரைத் தேர்வு செய்து, அவரது பதிலை மதிப்பீடு செய்யவும்.
4. மூன்றாவது வினாவுக்கு வீட்டு வேலையாக பதிலளிக்குமாறு அனைத்து மாணவர்களிடமும் கோரவும்.
5. ஒரே பதிலைப் பல தடவைகள் கூறாத சிறந்த பதிலுடையவரைப் பாராட்டவும்.
கே 1 : () - ()- () - () - ()
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வருவற்றினூடாக வழி காட்டலாம் :
சிறார்களுக்கு இரக்கம் காட்டுவதன் வடிவங்களை சேகரிப்பதில் மாணவர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, அதனை வகுப்பறை வாசிகசாலையில் பாதுகாத்து வைக்கப்படல் வேண்டும்.
பாடம் நான்கு : முஸ்லிமல்லாதவர்களுடன் நடந்து கொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (நேர்வழி - வழிகேடு - அதிகமாக சாபமிடக்கூடியவர் - மக்காவிலுள்ள இரு பாரிய மலைகள் - நீங்கள் நீதமாக நடக்கின்றார்கள் - தேடுகின்றார்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள்- கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(சுய கேள்வி - தவறான கருத்துக்களை சரிசெய்தல் - சொற்பொருள் வரைபடங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
நபி (ஸல்) அவர்களின் அன்பை உணர்தல்.
முஸ்லிமல்லாதோருடன் நடந்து கொள்ளும் முறையில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
இஸ்லாமிய நெறிமுறைகள், கொள்கைகள் மற்றும் நடத்தைகளை கண்ணியப்படுத்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
சிலர் செய்யும் தவறை உள்ளடக்கிய பின்வரும் வாசகத்தை மாணவர்களுக்குக் காட்டி, அதனை அவதானித்து அவர்களால் எந்தளவு உடன்படவோ, முரண்படவோ முடியும் என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரவும். அவர்களுடைய பதில்களை பாடத்திற்கான தொடக்கப்புள்ளியாக எடுத்து, பாடத்தின் நோக்கங்களைத் அறியப்படுத்தவும் :
(மதவேறுபாடு என்பது மாற்றக்கருத்துடையோருடன் மோசமாக நடக்கவும், அவர்களுக்கு அநீதமிழைப்பதை அனுமதிக்கவுமான ஒரு காரணம் என சிலர் நினைக்கிறார்கள்.)
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி, பாடத்தின் கூறுகளைச் சுற்றி மன அறிவை ஒழுங்கமைக்கும் நோக்கில், முஸ்லிமல்லாதவர்கள் விடயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் வெளிப்பாடுகளின் ஒரு விளக்க உருவை ஆசிரியர் காட்சிப்படுத்த வேண்டும்.
சுய கேள்வி முறையைப் பயன்படுத்தி; இந்த தோற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள விரும்பும் சில கேள்விகளைக் கேட்கும்படி ஆசிரியர் கோர வேண்டும். அவர்களின் கேள்விகளைச் சேகரித்து அவற்றை கரும்பலகையில் எழுத வேண்டும். பாடத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கும் விதமாக, ஆசிரியரும் மேலும் பல கேள்விகளை சேர்த்துக்கொள்ளலாம். கேட்கப்படும் கேள்விகளில் பின்வருபவை இருக்கலாம்:
கே : கொள்கைச் சுதந்திரம் என்றால் என்ன?
கே : நபியவர்கள் யாரையாவது இஸ்லாத்தில் நுழைய வற்புறுத்தினார்களா?
கே : நபியவர்கள் காபிர்களுடன் இரக்கமாக நடந்தார்களா?
கே : இணைவைப்பாளர்களால் தனக்கு இழைக்கப்பட்ட உடலியல் மற்றும் உளவியல் நோவினைகளை நபியவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
கே : முஸ்லிம்களுடன் களத்தில் போரிடாத காபிர்கள் விடயத்தில் அத்துமீறுவதை சுவனத்தை இழக்கச் செய்யும் பெரும்பாவமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள், அதனைத் தெளிவுபடுத்தவும்.
கே : நபியவர்கள் எவ்வாறு உடன்படிக்கையை நிறைவேற்றினார்கள்?
கே : முஸ்லிமல்லாதோரை சந்திப்பதையும், நோய் நலம் விசாரிப்பதையும், அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கவும் இஸ்லாம் அனுமதித்துள்ளதா?
கே : முஸ்லிமல்லாதோருடன் நடந்து கொள்வதில் நபிவழியை வெளிக்காட்டும் நிகழ்வுகள் என்ன?
இரண்டாம் கட்டம்:
முஸ்லிமல்லாதவர்களுடன் நடந்து கொள்ளும் முறையில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் வெளிப்பாடுகளை ஆசிரியர் எடுத்துரைக்க வேண்டும். அவற்றுடன் முந்தைய கேள்விகளையும் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். இதன்போது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாதவர்களை நல்ல முறையில் நாடாத்தினார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஹதீஸ்களையும் ஆதாரங்களையும் காட்சித் திரை மூலம் ஆசிரியர் காட்சிப்படுத்த வேண்டும். அதனை வாசித்து, கிரகித்து, அதன் அர்த்தங்களையும், படிப்பினைகளையும் விளக்கும் விடயத்தில் மாணவர்களின் பங்களிப்பையும் ஆசிரியர் கோருவார்.
மூன்றாம் கட்டம்:
தவறான புரிதல்களை சரிசெய்யும் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் இரண்டு சூழ்நிலைகளை மாணவர்களுக்கு முன்வைத்து, அவர்களின் கருத்தை தெரிவிக்கும்படி கேளுங்கள். அவர்களின் பதில்களை மதிப்பீடு செய்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்கவும், அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாதவர்களைக் கையாள்வதில் நபிகளாரின் வழிகாட்டுதலின் வெளிப்படுகளையும் இதனுடன் இணைக்கவும்.
சில முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோருடன் பழகுவதைத் தவிர்ந்து கொள்கின்றனர், அவர்களது அன்பளிப்புகளை ஏற்பதுமில்லை, அவர்களுக்கு விற்பனை செய்வதுமில்லை, அவர்களிடமிருந்து வாங்குவதுமில்லை.
முஸ்லிமல்லாதோருடன் நீதமாக நடந்து, அவர்களது உரிமைகளைக் கொடுப்பதென்பது, அவர்களது தவறான கொள்கையை அங்கிகரிப்பதாக சிலர் நினைக்கின்றனர்.
இறுதிச் சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் பாடத்தின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட வாசகத்தை மறுபரிசீலனை செய்து, அதை மீண்டும் சிந்தித்து, பாடவிளக்கத்திற்குப் பின்னர் அந்த வாசகத்தைப் பற்றிய அவரது கருத்து மாறியதா? அது ஏன்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தமது பதில்களை வழங்க ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து. பொருத்தமான வலுவூட்டலை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, முஸ்லிமல்லாதவர்களுடன் நபியவர்கள் நடந்துகொண்ட முறைகளுக்கான அதிகாரங்களைப் பெறல்.
நோக்க இலக்கம் 2, 3
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
ஒவ்வொரு அட்டையிலும், முதல் செயல்பாட்டின் ஆதாரங்களில் ஒன்றை எழுதி, எழுமாறாக ஒவ்வொரு அட்டையைத் தேர்ந்தெடுக்க இவ்விரு மாணவர்களாகத் தெரிவு செய்யவும். இவ்விரு மாணவர்களாக முஸ்லிம் அல்லாதவர்களோடு நடப்பதற்கான வழிகளைப் பற்றி அட்டையில் உள்ள ஒவ்வொரு ஆதாரத்தையும் குறிப்பிட வேண்டும். அவ்விருவரின் பதில்களையும் சக நண்பர்கள் கவன்னித்து மதிப்பீடு செய்வதுடன், ஆசிரியரும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
அவற்றின் அர்த்தங்கள்
அவர்களது நேர்வழியில் அக்கறை கொண்டு அழகிய முறையில் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தல்.
உடன்படிக்கைகளை நிறைவேற்றி, களத்தில் போரிடாத காபிர்கள் விடயத்தில் அத்துமீறாமலிருத்தல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, முஸ்லிமல்லாதவர்களுடன் நடந்து கொள்வதுடன் தொடர்பான சூழ்நிலைகள் பற்றி கருத்துக் கூறுதல்.
நோக்க இலக்கம் 4, 5
ஆசிரியர் ஒரு தொகை அட்டைகளைத் தயாரிக்க வேண்டும். அவற்றில் சிலதில் "நான் உடன்படுகிறேன்" என்று எழுதப்பட்டிருக்கும். மற்ற சிலதில் "நான் உடன்படவில்லை" என்று எழுதப்பட்டிருக்கும். பின்பு மாணவர்களுக்கு அவ்வட்டைகளை விநியோகிக்க வேண்டும்.
ஆசிரியர் செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளை ஒவ்வொன்றாக முன்வைக்க, மாணவர் அந்நிலைகளில் தனது கருத்துக்கு ஒத்த அட்டையை உயர்த்த வேண்டும். தமது கருத்துக்களுக்கான காரணங்களைக் கூற ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலை வழங்க வேண்டும்.
சூழ்நிலை உடன்படுகிறேன் உடன்படவில்லை காரணம்
உங்கள் முஸ்லிம் அண்டை வீட்டார் அநியாயமாக முஸ்லிமல்லாத ஒருவருக்கு அடிப்பதை நீங்கள் பார்த்தீர்கள் ஏனெனில் உரிமையின்றி பிறரிடம் அத்துமீறுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
முஸ்லிமல்லாத நண்பர் ஒருவர் உங்களுக்கு அன்பளிப்பு வழங்கி, அவருடைய மதத்தைப் பற்றி அறிய உங்களை அழைக்கிறார்: ஏனென்றால் இந்த பரிசு என் மதத்தை விட்டு வெளியேறும் நோக்கத்தைக்கொண்டது. அது என் உள்ளத்தைப் பாதிக்கலாம்.
ஒரு நண்பர் தனது தேவாலயம் அல்லது கோவிலில் ஒரு மத விழாவுக்காக உங்களை அழைத்தார் ஏனெனில் அதற்கு நான் சமூகமளிப்பது அவருடைய கொள்கையை ஒப்புக் கொள்வதாகும்.
பணியில் இருக்கும் உங்களது முஸ்லீம் அல்லாத நண்பர் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் செல்வதற்கு ஒருவர் உங்களை அழைத்தார் இதில் அவர்களுக்கு உபகாரம் செய்து, இஸ்லாத்தின்பால் அவர்களை ஈர்க்கும் வழியுள்ளது.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
ஒவ்வொரு மாணவரும் மதிப்பீட்டில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க வேண்டும்.
ஒருவரையொருவர் மதிப்பீடு செய்து தங்கள் தவறுகளைக் கண்டறிய, ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை ஒரு நண்பரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சிலர் விட்ட தவறுகளை ஆசிரியர் இனங்கண்டு அவை திருத்தப்பட்ட விதத்தையும் பார்க்கவேண்டும்.
தமது மதிப்பீட்டில் எத்தவறும் விடாத மாணவர்களின் பெயர்களை ஆசிரியர் கூறி, அவர்களைப் பாராட்ட வேண்டும்.
கே 1 : (✓) - (✖) - (✖) - (✖)
கே : 2
முஸ்லிமல்லாதோருக்கு அழைப்பு விடுப்பதோடு, தெரிவு செய்யும் உரிமையை அவர்களுக்கே விட்டுவிடுதல்.
இஸ்லாத்தைத் தவிர ஏனைய அனைத்து மதங்களும் அசத்தியமானவையே.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
முஸ்லிமல்லாதவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு அறிவுறுத்துதல்.
ஒவ்வொரு மாணவரும் தனது சமூகத்தில் உள்ள முஸ்லிமல்லாதவர்களுடன் நடந்துகொள்வது தொடர்பான அணுகுமுறைகளைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அவை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருந்தால், அதைச் செய்பவர்களுக்கு அதனை அறிவுறுத்த வேண்டும்.
பாடம் ஐந்து : முஸ்லிமின் உரிமைகள்
பாடத்தின் கால அளவு : ஒரு பாட வேளை
இடம் : வகுப்பறை
புதிய வார்த்தைகள்: (அழைப்புக்கு பதிலளித்தல் - தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் கூறினால் பதிலளித்தல்).
தேவையான கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
முஸ்லிமின் உரிமைகளின் பெறுமதியை மகத்துவப்படுத்தல்.
முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில் சாதகமான போக்கை உருவாக்குதல்.
முஸ்லிமின் உரிமைகளை, மார்க்கம் மகத்துவப்படுத்தியுள்ளதை உணர்த்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
உங்கள் மாணவர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேளுங்கள்:
உங்கள் நண்பர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் அல்லது அவருக்கு துன்பமொன்று ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் மாணவர்களின் பதில்களை கரும்பலகையில் எழுதவும். பதில்கள் பெரும்பாலும் பின்வருமாறு இருக்கும்:
அவரை நலம் விசாரித்து, நோயிலிருந்து குணமடையும் வரை அருகிலிருத்தல், அத்துன்பம் நீங்கும் வரை அவருக்கு உதவுதல்.
பின்னர் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளைக் கூறி அவர்களது பதில்களைப் பூரணப்படுத்தவும். அவற்றை கரும்பலகையில் எழுதி, பாடத்தின் தலைப்பையும் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்களிடம் ஹதீஸை அமைதியாக வாசிக்கச் சொல்லுங்கள். அதன் அர்த்தத்தையும் அதன் நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள அவர்களைத் தூண்டுவதுடன், தாம் அர்த்தத்தை அறிய விரும்பும் கடினமான வார்த்தைகளை அடையாளம் காணச் சொல்லுங்கள்.
இரண்டாம் கட்டம்:
அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றி அறிமுகப்படுத்தவும். அவருடைய செயல்களில் பெறும் படிப்பனைகள் மற்றும் அவரைப் பின்பற்றும் சந்தர்ப்பங்களைப் பற்றி, மாணவர்களுடன் விவாதிக்கவும்.
மாணவர்களுக்கு ஹதீஸின் சாரம்சத்தையும், அதன் பொது நோக்கத்தையும் தெளிவுபடுத்துவதுடன், அதில் இடம்பெற்றுள்ள கடின வார்த்தைகளின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுங்கள்.
மூன்றாம் கட்டம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, பாடத்திலிருந்து பெறப்பட்ட உரிமைகளைப் பிரித்தெடுக்க ஒவ்வொரு குழுவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். பின்னர், குழுவில் உள்ள மாணவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து தாம் குழுவில் அடைந்த முடிவை எழுதுவதற்கு நியமிக்கவும். மேலும் அவர்களின் செயல்திறனைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவும்.
இறுதிச் சுருக்கம் :
ஹதீஸிலிருந்து பெறமுடியுமான படிப்பினைகள் மற்றும் ஒழுக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு ஒத்துழைக்குமாறு இவ்விரு மாணவர்களை நியமிக்கவும். ஒவ்வொரு குழுவும் தாம் அடைந்த முடிவுகளைக் காண்பிக்க வேண்டும். நீங்கள் மிகவும் துல்லியமான மற்றும் சிறந்த வார்த்தைகளைக் கொண்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கரும்பலகையில் எழுதுங்கள். அதை அவர்கள் தங்கள் குறிப்பேடுகளில் எழுதிக் கொள்ளட்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர்முறை, முஸ்லிமின் உரிமைகளை அறிவதற்கு மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 3
ஒவ்வொரு மாணவருக்கும் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு கற்பித்த அட்டையை விநியோகிக்கவும். அவர்கள் பதிலளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்து, பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அவற்றை அறியப்படுத்தவும்.
ஹதீஸ் அதை சுட்டிக் காட்டுகின்றது : ஹதீஸ் அதை சுட்டிக் காட்டவில்லை :
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, முஸ்லிமின் உரிமைகளுக்கு ஆதாரம் காட்டுதல்.
நோக்க இலக்கம் 1, 4
பின்வருவனவற்றை உள்ளடக்கிய கற்பித்தல் பலகையை மாணவர்களுக்குக் காட்டுங்கள். பின்னர் மாணவர்களுக்கு வாசகங்களைப் படித்து விட்டு, திறமையான சிலரைத் தேர்ந்தெடுத்து தமது நண்பர்களுக்கு மீண்டும் வாசிக்கச் சொல்லவும். பின்னர் அவ்வாசகங்களின் கருத்தை விளக்கி, தெளிவுபடுத்தவும். இச்செயல்பாட்டிற்கான பதில்களைத் தமது கொப்பியில் எழுதுமாறு மாணவர்களைப் பணித்து, அப்பதில்களை முன்வைப்பதற்கு சிலரைத் தேர்வு செய்து அவர்களை மதிப்பீடு செய்யவும் :
முஸ்லிமின் உரிமைகள்
(4)
(2)
(1)
(3)
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்:
முதல் கேள்விக்கு பதிலளிக்க, அதில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களையும் மாணவர்களிடம் வாசிக்கவும். வாசகம் சரியாக இருந்தால், மாணவர் தனது கையை உயர்த்த வேண்டும். மாணவர்களின் பதில்களை மதிப்பீடு செய்து, எந்த வாசகம் சரியானது மற்றும் எது தவறானது என்பதை அவர்களோடு இணைந்து கண்டடையவும்.
கே 1 : (×) - (✓) - (×) - (✓)
இரண்டாவது வினாவுக்கு தனித்தனியே விடையளிக்க மாணவர்களை வழிநடத்தவும். ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பரின் பதிலுடன் பரிமாறிக் கொள்வதுடன், ஒவ்வொருவரும் மற்றவரின் பதிலைத் திருத்தவும் வேண்டும். ஒவ்வொரு குழுவையும் நீர் கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
கே 2 : அவர் நோயுற்றால் நலம் விசாரித்தல் - அவருக்கு அநீதி எற்படாமல் தடுத்தல் - அவையிரண்டும்.
மூன்றாவது கேள்வியில் உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் கரும்பலகையில் எழுதவும். பின்பு, மூன்று மாணவர்களைத் தேர்வுசெய்து, ஒவ்வொருவரையும் அதற்குப் பதிலளிக்க வைக்கவும். யாராவது தவறு செய்தால் சரியான பதிலை அவரே கண்டுபிடிக்க, பாடத்தை மீண்டும் படிக்கும்படி அவருக்கு அறிவுறுத்துங்கள் .
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
இப்பாடத்தில் வந்துள்ள உரிமைகளை நிறைவேற்றுவதற்கு மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
முஸ்லிமின் உரிமைகளைத் தெளிவுபடுத்தும் அட்டைகளை ஒவ்வொரு மாணவரும் தயாரிக்க வேண்டும்.
பாடம் ஆறு: குடும்ப உறவுகளைப் பேணுதல்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (விரிவாக்கப்பட - தாமதப்படுத்தப்பட - என்னுடன் சேர்ந்து நடந்தான் - ஆயுள்காலம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(ஓடியோ பதிவு - காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(கூட்டு கலந்துரையாடல் - பிரசினங்களைத் தீர்த்தல் - கற்றல் வட்டங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உறவைப் பேணுவதன் சிறப்பை உணர்ததுதல்.
உறவைத் துண்டிப்பதைத் தவிர்ந்து கொள்ளுதல்.
உறவைப் பேணுவதன்பால் மக்களைத் தூண்டுதல்.
பாடத்தின் அறிமுகம்:
உறவினர்கள் மற்றும் குடும்பத்தவர்களின் உரிமைகளைப் பற்றி தமக்குத் தெரிந்தவற்றைப் பற்றி கூட்டாக விவாதம் செய்ய வையுங்கள். அவர்களுக்கு ஆதரவளித்து, சரியான ஊக்கத்தை வழங்குங்கள். பின்னர் இன்றைய பாடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்களிடம் ஹதீஸை அமைதியாக வாசிக்கச் சொல்லுங்கள். அதன் அர்த்தத்தையும் அதன் நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள அவர்களைத் தூண்டுவதுடன், தாம் அர்த்தத்தை அறிய விரும்பும் கடினமான வார்த்தைகளை அடையாளம் காணச் சொல்லுங்கள்.
இரண்டாம் கட்டம்:
அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றி அறிமுகப்படுத்தவும். அவருடைய செயல்களில் பெறும் படிப்பனைகள் மற்றும் அவரைப் பின்பற்றும் சந்தர்ப்பங்களைப் பற்றி, மாணவர்களுடன் விவாதிக்கவும்.
மாணவர்களுக்கு ஹதீஸின் சாரம்சத்தையும், அதன் பொது நோக்கத்தையும் தெளிவுபடுத்துவதுடன், அதில் இடம்பெற்றுள்ள கடின வார்த்தைகளின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுங்கள்.
மூன்றாம் கட்டம்:
பின்வரும் பிரச்சனையை மாணவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றிய அவர்களின் கருத்தையும் , அதை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமாளிப்பது என்பதையும் விளக்கும் படி கோரவும். அவர்களின் பதில்கள் ஊடாக, குடும்ப உறவுகளைப் பேணுவதன் சிறப்பை அவர்களுக்கு விளக்கவும்.
(காலிதின் பெற்றோர் இறந்துவிட்டனர். தான் மிகவும் அதிக வேலைப்பளுவில் இருப்பதாக சாக்குப்போக்குச் சொல்லி, அவர் தனது சகோதரிகளுடனான உறவைத் துண்டித்துவிட்டார். விசேஷ சந்தர்ப்பங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் கூட அவர் அவர்களைப் பற்றி கேட்கவில்லை.)
மூன்றாம் கட்டம்:
கற்றல் வட்ட முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களை வட்டங்களில் உட்கார வைத்து, உறவுகளைத் துண்டிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்களை எச்சரிப்பது எப்படி என்று தங்களுக்குள் விவாதிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்களின் செயற்திறனைக் கண்காணிக்கவேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு உறுப்பினரை நியமித்து, அவர்கள் என்ன முடிவை அடைந்தார்கள் என்பதை முன்வைக்கக் கோர வேண்டும். அது பற்றி அவர்களுடன் விவாதிக்கவும் வேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் மூலம் தாம் அடைந்துகொண்ட மூன்று பயன்களையும் மற்றும் வழிகாட்டல்களையும் கூறுவதில் ஒத்துழைக்குமாறு, இவ்விரு மாணவர்களாக அறிவுறுத்துங்கள்.
ஒவ்வொரு குழுவின் பதில்களையும் கண்டறிந்து கருத்துத் தெரிவிக்கவும். அவர்களுக்கிடையில் எந்தளவு ஒத்த, எதிர் கருத்துக்கள் உள்ளன என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, உறவுகளைச் சேர்ந்து நடப்பதினதும், துண்டிப்பதினதும் விளைவுகளை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 1, 4
செயல்பாட்டில் உள்ள வாசகங்களை ஆடியோ ஊடகம் மூலம் மாணவர்களுக்குக் காட்டுங்கள். அவற்றை வாசிக்க திறமையான ஒருவரைத் தேர்வுசெய்து, பின்னர் அவர்களுக்குக் கலைச் சொற்களை விளக்கி தெளிவுபடுத்தி, அவ்வாசகங்கள் தரும் பாடங்களைக் கண்டெடுக்கவும்.
செயல்பாட்டிலிருந்து ஒவ்வொரு உரையையும் வாசித்து, சரியான பதிலைத் தெரிவிக்குமாறு, இரண்டு மாணவர்களை நியமிக்கவும். மாணவர்களுடன் அவ்விருவரின் பதில்களைப் பற்றி விவாதித்து, சரியான பதில்களை அவர்களுக்குக் கூறவேண்டும். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் அதை அவரவர் புத்தகத்தில் எழுத வேண்டும்.
உறவைப் பேணுவதன் சிறப்பு : உறவைத் துண்டிப்பதன் தண்டனை தனது உறைவைச் சேர்ந்து நடப்பவனுடன் அல்லாஹ் அனைத்து நலவுகள் மூலம் சேர்ந்து நடக்கின்றான். தர்மத்தின் கூலி பன்மடங்காகும்.
சுவனத்திற்குச் செல்லும் வாய்ப்பை இழத்தல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, உறவுகளைப் பேணுவதன் வடிவங்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4
ஒவ்வொரு மாணவனையும் தனியாகச் செயல்பாட்டைச் செய்யப் பணியுங்கள். அவர்களை புத்தாக்க சிந்தனைகளை வெளிப்படுத்தவும், ஏனையோர் கூறாத தனியான பதில்களை கூறவும் ஊக்குவிக்கவும்.
பல மாணவர்களைத் தேர்வுசெய்து, இருஇருவாராக தங்கள் பதில்களை ஒப்பிட்டுப் பார்கக்கவேண்டும். எது சிறந்த பதில் என்பதைத் தீர்மானித்து, சிறந்ததை பதிலளித்தவர்களைப் பாராட்டுங்கள்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளின்படி மாணவர்களிடம் மதிப்பீட்டுக் கேள்விகளைக் கேட்கவும்:
மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும். குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் சகநண்பர்கள் கண்காணிக்க, பாடநூலில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம், அனைத்துக் கேள்விகளுக்குமான பதில்களை அடைவதில் குழுவினர் தமக்கு மத்தியில் ஒத்துழைப்பர்.
பதில் மற்றும் மதிப்பீட்டில் அனைவரும் பங்கேற்பதை உறுதிசெய்ய குழுக்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும்.
குழுக்களின் பதில்களைச் சேகரித்து, அவற்றைச் சரிசெய்து, அவர்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து அவற்றை அனைவருக்கும் காண்பித்து, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்கவும்.
சிறந்த விடையளிக்கும் குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்டி, அவர்களிடம் தவறு செய்த குழுக்களைக் கவனித்து, திருத்திக் கொடுக்கச் சொல்லுங்கள்.
கே 1 : பிழை - சரி - சரி - பிழை
கே 2 : வாழ்வாதாரத்தில் விஸ்தீரணம் - வாழ்நாள் நீடிக்கப்படும்
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
குடும்ப உறவுகளைப் பேணுவதற்கான வழிமுறைகளையும், அவர்களைத் துண்டிப்பது அல்லது பகிஷ்கரிப்பதை விட்டும் எச்சரிப்பதையும் விளக்கும் ஓவியங்களை வடிவமைப்பதில் மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும், அடுத்த சந்திப்பில் அவற்றை உங்களுக்கு வழங்கியதும், நீங்கள் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து வகுப்பறையில் தொங்கவிடலாம்.
தமது குடும்பத்தினரிடமும் உறவுகளைத் துண்டிப்பதை எச்சரித்து, அவர்களுடன் சேர்ந்து நடப்பதன் அவசியத்தை விளக்குதல்.
பாடம் ஏழு: இரக்கமும் மரியாதையும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (எங்களைச் சார்ந்தவர் அல்லர்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் - முன்கணிப்பு முறை - பிரசினங்களைத் தீர்த்தல் - குழு ஆய்வு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
குறிப்பாக சிறார்களுடன் இரக்கமாக இருப்பதன் அவசியம் பற்றி உணர்தல்.
வயது முதிர்ந்தோர் மற்றும் உயர்பதவியிலுள்ளோரை மரியாதை செய்வதில் அக்கறையாக இருத்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களிடம் முன்வைக்கவும் : "நீங்கள் தெருவில் செல்லும் போது, ஓர் இளைஞன் ஒரு முதியவரை சப்தமாக ஏசுவதைப் பார்த்தீர், நீங்கள் அவருக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்? அந்த அறிவுரைக்கு இந்த உன்னத ஹதீஸிலிருந்து நீங்கள் பயனடையலாம்." பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
கரும்பலகையில் ஹதீஸை எழுதுங்கள். அதைப் பற்றி சிந்திக்கவும், ஹதீஸ் எதைப் பற்றிப் பேசுகின்றது என்று எதிர்வு கூறவும் மாணவர்களைக் கேளுங்கள். அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு, பொருத்தமான கருத்துக்களை வழங்கவும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் ஹதீஸின் பொதுவான அர்த்தத்தையும் அதன் பொது நோக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். மேலும் அதில் உள்ள கடினமான கலைச் சொற்களின் அர்த்தங்களை அவர்களுக்கு அறியப்படுத்த வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றி அறிமுகப்படுத்தவும். அவருடைய செயல்களில் பெறும் படிப்பனைகள் மற்றும் அவரைப் பின்பற்றும் சந்தர்ப்பங்களைப் பற்றி, மாணவர்களுடன் விவாதிக்கவும்.
நான்காம் கட்டம்:
அறிவு மர முறையைப் பயன்படுத்தவும். அதாவது, மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை உள்ளடக்கிய அறிவு மரத்தை வரையவும். ஒவ்வொரு மாணவரும் ஹதீஸின் பயன்களில் ஒன்றை முன்வைத்து, அதை ஒவ்வொரு கிளையிலும் எழுதவேண்டும். இறுதியில் அவர்கள் மர உருவத்தைக் கூர்ந்து கவனித்து, அது எந்த அளவிற்கு முழுமையாகவும், ஹதீஸின் அனைத்து வழிகாட்டல்களையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது என்பதை கண்டறியவேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் பாடத்தைப் புரிந்துகொண்ட பிறகு, அவர் அடைந்த பயன்களில் ஒன்றைக் கூற அறிவுறுத்தவும். மேலும் அவர்கள் முன்மொழிந்தவற்றை கரும்பலகையில் எழுதி, அது தொடர்பாகக் கருத்துரைத்து, அது பாடத்துடன் எந்தளவு தொடர்புடையது என்பதையும் விளக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வரும் விதத்தில் செயற்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, செயல்பாட்டு ஹதீஸிற்கும் பாடத்தின் ஹதீஸுக்கும் இடையில் தொடர்பு படுத்துதல்.
நோக்க இலக்கம் 3, 4
செயல்பாட்டிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்வதில் ஒத்துழைக்க ஒவ்வொரு மாணவர் குழுவையும் அறிவுறுத்துங்கள். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு தனிநபரைத் தேர்வுசெய்து, சகநண்பர்களுக்கு முன்னிலையில் நிற்குமாறு கூறுங்கள். ஆசிரியர் படத்தில் உள்ள ஒவ்வொரு கூறுகளையும் முன்வைக்க வேண்டும். அதேநேரம், ஒவ்வொரு குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் அதற்கான தனது குழுவின் பதிலை வழங்க வேண்டும். மேலும் குழுக்களின் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்த்து, யதார்த்தத்தைத் துல்லியமாக விளக்கிப் பகுப்பாய்வு செய்த குழுவை அடையாளப்படுத்தவேண்டும்.
பாடத்தின் ஹதீஸுடன் பின்வரும் விடயத்தில் உடன்படுகிறது : இரக்கம் என்ற பண்பை வலியுறுத்தி, ஊக்கப்படுத்தல்.
பாடத்தின் ஹதீஸை விட பின்வரும் விடயங்களில் மேலதிகமாக அமைகின்றது :
1. இரக்கத்தின் நன்மை மற்றும் கூலியை விளக்குதல்.
2. இரக்கம் என்பது சிறார்களுக்கு மாத்திரமின்றி, அனைவருக்கும் பொதுவானது.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர்முறை, சிறார்களுக்கு இரக்கம் காட்டும் முறையை விளக்குதல்.
நோக்க இலக்கம் 5
ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக இரண்டாவது செயற்பாட்டைச் செய்யும்படி அறிவுறுத்துங்கள். மேலும் அவர்களின் பதில்களை மதிப்பீடு செய்ய அவர்களிடம் செல்லவும். தவறுகள் இன்றி, சரியாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருக்கும் விதத்தில் சிறந்த பதிலை வழங்கியவர்களை தெரிவுசெய்து, சகநண்பர்களுக்கு வாசித்துக்காட்டச் செய்யுங்கள். அதன் மூலம், அவர்கள் தமது பதில்களை திருத்தி ஒழுங்கமைத்துக்கொள்ளலாம்.
செயல்பாடு 2 : குழந்தையின் பலவீனம் மற்றும் அநீதியைத் தடுக்க இயலாமை.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, நடத்தைகளை வகைப்படுத்தும் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் 5
ஆசிரியர் மாணவர்களுக்கு சில அட்டைகளை விநியோகிப்பார். ஒவ்வொரு அட்டையும் பின்வரும் வார்த்தைகளில் ஒன்றைக் கொண்டிருக்கும் : (சிறார்களுக்கு இரக்கம் காட்டும் நோக்கில் - பெரியவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் நோக்கில்) மேலும் அவர் செயல்பாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் வாசித்து, சொற்றொடருக்கான பொருத்தமான அட்டையை உயர்த்தும்படி அவர்களிடம் கேட்கவேண்டும். அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு அவற்றை மதிப்பீடு செய்து, பொருத்தமற்ற பதிலை அளித்தவருடன் கலந்துரையாடி, சரியான பதிலை நியாயத்துடன் அடையாளம் காட்ட வேண்டும்.
சிறார்களுடன் இரக்கம் பெரியவர்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்
மதிப்பீடு :
கீழ்கண்டவற்றைச் செய்வதன் மூலம் மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்களிடம் முதலிருகேள்விகளைக் கேட்பது நல்லது. மேலும் அவர்களில் சிலரைத் தேர்வுசெய்து, இரண்டு கேள்விகளின் கூறுகளில் ஏதேனும் ஒன்றிற்கு ஒவ்வொருவராக பதிலளிக்கக் கூறுங்கள். சகநண்பர்கள் அவர்களைக் கவனித்து, அவர்களின் பதில்களை மதிப்பீடு செய்யவேண்டும்.
கே 1 : ()- ()- ()
கே 2 : நோன்பு - நமது ஒழுக்கங்கள் - இரக்கம்
மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க ஒவ்வொரு மாணவருக்கும் கூறுங்கள். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து பதில்களைச் சமர்ப்பிக்கச் செய்து, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்க்கவும். சரியாகப் பதிலளித்தவருக்குத் தகுந்த ஊக்கத்தை அளித்து, மற்ற மாணவர்களின் பதில்களை அவர்கள் செவிமடுத்ததன் அடிப்படையில் திருத்த வழிகாட்டவும்.
கேள்வி 3 :
பெரியோரை மதிப்பதில் உள்ளது
அவருக்கு முன்னால் நடக்காதிருத்தல்
அவரிடம் செல்ல முன் அனுமதி கோருதல்
அவருடன் உரையாடும் போது ஒழுக்கமாக உரையாடுதல்
அவருடைய கருத்தை கவனத்தில் எடுத்தல்
சிறார்களுக்கு இரக்கம் காட்டுவதில் உள்ளது :
அவர்களுக்கு நோவினை ஏற்படாது பாதுகாத்தல்
அவர்களுக்கு அடிக்காமல், நோவினை செய்யாமல் இருத்தல்.
அவர்களுடன் விளையாடுதல்.
அவர்களை முறையாக வளர்த்து, கல்வி புகட்டுதல்
உள்ளார்ந்த பயன்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வரும் விதத்தில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்:
ஹதீஸில் இடம்பெற்றுள்ள வழிகாட்டல்களை அமுல்படுத்த ஆர்வங்கொள்ளல், வயோதிபர், உயர் அந்தஸ்திலுள்ளோரை கண்ணியப்படுத்தி மதித்தல், அத்துடன் குடும்ப உறுப்பினர்கள், சுற்றியுள்ளோருக்கும் அந்த வழிகாட்டல்களை அறியப்படுத்தி, கடைப்பிடிக்க வைக்க முயற்சித்தல்.
பாடம் எட்டு: அண்டை வீட்டாரையும் விருந்தினர்களையும் கௌரவித்தல்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (அவர் மௌனமாக இருக்கட்டும் - அவர் தனது அண்டை வீட்டாரை மதிக்கட்டும்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் பலகை - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
("நான் அறிவேன் - நான் அறிய விரும்புகிறேன் - நான் அறிந்து கொண்டேன் (K.W.L)" என்ற உத்தி - கதை கூறும் முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அயலவர், விருந்தினருடன் நபியவர்கள் நடந்து கொண்ட முறையை மெச்சுதல்.
பயனுள்ள நல்ல வார்த்தைகளைப் பேச ஆர்வமூட்டுதல்.
அயலவர்களுக்கு உபகாரம் செய்வதன் அவசியம்
விருந்தினரை கண்ணியப்படுத்துவதன் சிறப்பை மெச்சுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பாடம் என்ன உள்ளடக்கியது என்பதற்கான பொதுவான மனப் படத்தை உருவாக்க பாடத்தின் கூறுகளை விளக்கும் விளக்கப்படத்தை மாணவர்களுக்குக் காட்டுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட கற்பித்தல் அட்டையொன்றை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்:
முதல் பகுதி K எழுத்தைக் கொண்டிருக்கும் (know அறிகிறேன்)
இரண்டாம் பகுதி W எழுத்தைக் கொண்டிருக்கும் (want நான் அறிய விரும்புகிறேன்)
மூன்றாம் பகுதி L எழுத்தைக் கொண்டிருக்கும் (learn கற்றுக் கொண்டேன்).
ஒவ்வொரு பகுதியின் அர்த்தத்தையும் ஆசிரியர் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அயலவர், விருந்தினர்களுடன் நடந்து கொண்ட முறை குறித்து தங்களுக்குத் தெரிந்த முந்தைய தகவல்களை முன்வைத்து, அதை முதல் பகுதியில் எழுதுமாறு கோர வேண்டும். அது தொடர்பான அவர்களது அறிவுப் பின்னணியை அறிந்து கொள்ள, அதுபற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் அவர்கள் பாடத்தில் தெரிந்துகொள்ள விரும்பும் தகவல்கள், சிந்தனைகளைக் கூறி, அதை இரண்டாம் பாகத்தில் எழுதும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் கதை முறையைப் பயன்படுத்தி, நபி(ஸல்) அவர்கள் அயலவர், விருந்தினர்களுடன் நடந்து முறையை முன்வைக்கவேண்டும். அத்தோடு, அவற்றைக் குறிக்கும் ஹதீஸ்களையும் காட்சித் திரை மூலம் முன்வைத்து, அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்கவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறை மூலம், ஒரு முஸ்லிம் அயலவர் விருந்தினர்களுடனான தொடர்புகளில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவர்களின் கருத்துக்களைக் கூற மாணவர்களை அறிவுறுத்தவும். அவர்களின் பதில்களைக் கண்டறிந்த பின்னர், நபி (ஸல்) அவர்களின் அயலவர், விருந்தினர்களுடனான தொடர்பின் வெளிப்பாடுகளை, அது தொடர்பான ஹதீஸ்களை வைத்து அவர்களுக்கு விளக்கவும்.
இறுதிச்சுருக்கம் :
மாணவர்கள் தங்களிடம் உள்ள அட்டையின் மூன்றாவது பகுதியை முடிக்குமாறு அறிவுறுத்துங்கள். இது பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை பொது கூறுகளின் வடிவத்தில் எழுதுவது தொடர்பான பகுதி (L) ஆகும். சில அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பதைப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அயலவர், விருந்தினர்களை கண்ணியப்படுத்தும் முறைகளை அறிதல்.
நோக்க இலக்கம் : 4
மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தனது நண்பர்களுக்குச் செயல்பாட்டை வாசிக்கவைக்கவும். பின்னர் அவர்களுடன் அதுபற்றி விவாதிக்கவும். மேலும் செயற்பாட்டில் வினவப்பட்டுள்ள அர்த்தத்தை, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அடையாளப்படுத்த ஒவ்வொரு மாணவரையும் கட்டாயப்படுத்தவும்.
ஹதீஸ் அதை சுட்டிக் காட்டுகின்றது :
ஹதீஸ் அதை சுட்டிக் காட்டவில்லை :
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டுமுறை, மாணவர்களை ஒத்துழைப்பு மற்றும் இணக்கப்பாடிற்கு பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 3
ஒவ்வொரு குழு மாணவர்களும் அட்டவணையை நிரப்புவதற்கு தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்வுசெய்து, சகநண்பர்கள் முன்னிலையில் நிற்குமாறு கூறவும். ஆசிரியர் அட்டவணையின் உறுப்புக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்வைக்கும்போது, ஒவ்வொரு குழுவின் பிரதிநிதியும் அந்த உறுப்புக்களுக்கான தனது குழுவின் பதிலை முன்வைக்க வேண்டும். குழுக்களின் செயல்திறனை ஒப்பிட்டு, மிகவும் துல்லியமாக யதார்த்தத்தை விளக்கிப் பகுப்பாய்வு செய்த குழுவை அடையாளம் காண வேண்டும்.
ஹதீஸில் அதற்குப் பொருத்தமான வார்த்தை:
பேசினால் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும்.
தனது விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, நாவின் விபரீதத்தை அறிதல்.
நோக்க இலக்கம் : 4
நாவின் விபரீதத்தைப் புரிந்துகொள்ள, செயல்பாட்டில் உள்ள இணைப்பில் சென்று பார்க்க ஒவ்வொரு மாணவரையும் அறிவுறுத்துங்கள். பின்னர் அவர்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களைச் சுருக்கமாகக் கூறச் சொல்லவும். அடுத்த சந்திப்பில் மாணவர்கள் என்ன செய்தார்கள் மற்றும் என்ன முடிவை அடைந்தார்கள் என்பதைக் கண்டறியவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு பதிலளிக்க, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:
முதல் கேள்விக்கு பதிலளிக்க, அதில் உள்ள கூறுகளை அடுத்தடுத்து மாணவர்களிடம் வாசிக்கவும். அவ்வாசகம் சரியாக இருந்தால், மாணவர் தனது கையை உயர்த்த வேண்டும். மாணவர்களின் பதில்களை மதிப்பீடு செய்து, அவர்களோடு இணைந்து சரியான மற்றும் தவறான பதில்களைப் பிரித்தரியவும்.
கே 1: (×) - ((✓- () - (✓) - (×)
ஒவ்வொரு மாணவரும் இரண்டாவது கேள்விக்கு தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பர் ஒருவரின் பதிலுடன் பரிமாறி, தத்தமது பதில்களைத் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் ஒவ்வொரு குழுவையும் கண்காணித்து வழிநடத்துங்கள்.
ம
நடத்தை :
அண்டை வீட்டாரின் ரகசியங்களை அறிய விரும்புவது: தவறான ஒரு நடத்தையாகும்.
வீட்டில் இல்லாத அண்டை வீட்டாரின் குழந்தைகளைப் பற்றி விசாரித்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்: சரியான நடத்தையாகும்.
அண்டை வீட்டாரின் ரகசியங்களைப் பற்றி பேசுவது மற்றும் அவரது தனிப்பட்ட விவகாரங்களை பகிரங்கப்படுத்துவது: தவறான ஒரு நடத்தையாகும்.
அண்டை வீட்டார் முன் குப்பைகளை வீசுதல்: தவறான ஒரு நடத்தையாகும்.
விருந்தினருக்காக செலவழித்ததற்கு அல்லாஹ்விடம் கூலி எதிர்பார்த்தல் : சரியான நடத்தையாகும்.
உங்கள் ஒரு நண்பரிடம், நேற்று மற்றொரு சக நண்பர் அவரை ஏசியதாகக் கூறுவது : தவறான ஒரு நடத்தையாகும்.
யாராவது விருந்தினரை தாக்கினால், அவர்களைப் பாதுகாத்தல்: சரியான நடத்தையாகும்.
அண்டை வீட்டாரைத் தொந்தரவு செய்யுமாளவு தொலைக்காட்சி ஒலியை உயர்த்துதல்: தவறான ஒரு நடத்தையாகும்.
மூன்றாவது கேள்விக்கு ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக பதிலளிக்குமாறு ஆசிரியர் அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்களுக்கு அருகாமையில் செல்வதுடன், தவறுவிட்டுள்ளவர்களுக்கு சரியான பதிலைக் காட்டிக்கொடுக்கவேண்டும்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அயலவர் மற்றும் விருந்தாளிகளுடன் பழகுவதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதில் அக்கறை செலுத்துதல், "பொய் சொல்வதை விட மௌனமாக இருப்பது சிறந்தது" என்ற விதியைக் கடைப்பிடித்தல்.
சுற்றியுள்ள சமூக உறுப்பினர்களிடம் அயலவர், விருந்தாளிகளுடன் நடப்பதில் உள்ள தவறான நடத்தைகளை ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் எதிர்கொள்வதுடன், குறித்த விடயத்தில் பாடத்தில் கற்ற அம்சங்களை அவர்களுக்கு அறியத்தருதல்.
பாடம் ஒன்பது: நடுநிலை மற்றும் சமநிலை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (நடுநிலை - சமநிலை).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(முன்னுரை வழங்கல் முறை - சொற்பொருள் வரைபடம் - கூட்டாக கற்றல்)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உரிமைகளில் சமநிலை பேணுவதன் அவசியத்தை உணர்தல்.
வணக்கத்தில் சக்திக்கப்பாற்பட்டதை வருத்திச் செய்வதைத் தவிர்ந்து கொள்தல்.
மனிதனின் இயல்புணர்வு, அவனது உளவியல், உடலியல் தேவைகளை இஸ்லாம் கவனித்திருப்பதை உணர்தல்.
இஸ்லாத்தையும், அதன் தூதுத்துவத்தையும் நபித்தோழர்கள் ஆழமாகப் புரிந்திருப்பதை உணர்த்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
முன்னுரை வழங்கல் முறையைப் பயன்படுத்தி, மாணவர்களிடம் பின்வரும் சந்தர்ப்பத்தைக் கூறி, அதை அடுத்து வரும் வினாக்களையும் கேட்க வேண்டும். அவர்களின் விடைகளைக் கேட்டு, அவற்றில் வேறுபட்ட விடைகளைக் கரும்பலகையில் எழுதிவைக்கவேண்டும். பாடத்தை உன்னிப்பாக கவனிக்குமாறும், அப்போதுதான் சரியான விடையை சுயமாகவே கண்டுபிடிக்கலாம் எனவும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
(ஒரு பெண் உரிய நேரத்தில் தொழுகிறாள். ஆனால் அவள் தன் கணவனுக்குக் கீழ்ப்படிவதில்லை, அவருடைய உரிமைகளைக் கொடுப்பதில்லை, மற்ற எல்லா உரிமைகளையும் விட அல்லாஹ்வின் உரிமைகள்தான் முக்கியம் என்று கூறுகிறாள். அதற்கு என்ன தீர்ப்பு? அவளுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்?)
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்களிடம் ஹதீஸை அமைதியாக வாசிக்கச் சொல்லுங்கள். அதன் அர்த்தத்தையும் அதன் நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள அவர்களைத் தூண்டுவதுடன், தாம் அர்த்தத்தை அறிய விரும்பும் கடினமான வார்த்தைகளை அடையாளம் காணச் சொல்லுங்கள்.
இரண்டாம் கட்டம்:
(பெயர், புனைப் பெயர், வாழ்வு, சிறப்புகள், இறப்பு) போன்ற குறிப்புகளைப் பயன்படுத்தி ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றிய தெளிவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மாணவர் ஒருவரைத் தெரிவு செய்து, ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றி தனது பாணியில் கூறுமாறு பணிக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
சொற்பொருள் வரைபடங்களின் முறை மூலம்; ஹதீஸை விளக்கித் தெளிவுபடுத்தவும்.
பின்வரும் சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு விளக்கப்படத்தை ஒரு பலகை மூலம் காட்சிப்படுத்தி, மாணவர்களுடன் விவாதிக்கவும். அவை: (அல்லாஹ்வின் உரிமை - குடும்பத்தின் உரிமை - ஆன்மாவின் உரிமை).
இந்த சிந்தனைகளையும் மற்றும் அவை ஹதீஸ் உடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதையும் மாணவர்களுக்கு விளக்கவும். மேலும், அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.
நான்காம் கட்டம்:
கூட்டு கற்கை முறையைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் தொடர்பான விஷயங்களில் எவ்வாறு சமநிலை பேணுவது என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு மாணவர் குழுவையும் நியமித்து, பலவிதமான மற்றும் மாறுபட்ட பதில்களை வழங்க மாணவர்களை ஊக்குவிக்கவும்.
ஒவ்வொரு குழுத் தலைவரும் தனது குழுவின் முடிவுகளை வாசிக்க வேண்டும். ஆசிரியர் பொருத்தமான வலுவூட்டலை வழங்குவார். அத்துடன், ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுக்களின் பதில்களில் இருந்து அறிந்துகொண்டவற்றைக் கொண்டு தமது பதில்களை முழுமைப் படுத்திக்கொள்ளவேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரிடமும், ஹதீஸைப் புரிந்துகொண்ட பின் கண்ட, வழிகாட்டுதல்கள் மற்றும் பயன்களில் ஒன்றை தன் பாணியில் வெளிப்படுத்தவும், அதை அவரது வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுத்துவது என்பதைக் கூறவும் வைக்கவும். பின்னர் அவர்களுக்கு தகுந்த கருத்துக்களை வழங்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, அனுமதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பொழுதுபோக்கு முறைகளை கண்டெடுத்தல்.
நோக்க இலக்கம் : 3, 4
ஒவ்வொரு மாணவருக்கும் பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை (பிலேஷ் கார்ட்) விநியோகிக்கவும். அவர்கள் பதிலளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்யவும். பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்துங்கள்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிகள் மற்றும் உறவினர்களுடன் நடந்து கொண்ட முறையை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 3
இரண்டாவது செயல்பாட்டை ஒரு பலகையில் காண்பித்து, அதனை வாசிக்க ஒரு மாணவரைத் தேர்வு செய்யவும். விவாதங்கள் மூலம்; மாணவர்களிடம் செயல்பாட்டுக் கேள்வியைக் கேட்டு, பதிலளிக்க வையுங்கள். அதேநேரம், பங்கேற்காத மாணவர்களையும் பதிலளிக்க ஊக்கப்படுத்துங்கள். பின்னர் சரியான விடையை சுருக்கி தமது கொப்பிகளில் எழுத வழிகாட்டுங்கள்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, கடமைகளுக்கு மத்தியில் சமநிலை பேணும் முறையைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 4, 5
மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். முதல் குழுவை அல்குர்ஆன் வசனங்களை பல தடவைகள் ஓதப் பணிக்கவும். அவர்களுக்கு ஏற்படும் தவறுகளை திருத்த இரண்டாவது குழுவை நியமிக்கவும். இரு குழுவினரையும் நீங்கள் கவனித்து வழிகாட்ட வேண்டும். பின்பு, கடமைகளில் சமநிலை பேணுவதன் வகைகள் பற்றி அவ்வசனங்கள் கூறுவதைத் தெளிவுபடுத்தவும்.
இறைவசனம் : அவர்கள் செலவு செய்தால், வீண்விரயம் செய்யவும் மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள். (அல் ஃபுர்கான் : 67).
இது குறிப்பது : செலவு செய்வதில் சமநிலை பேணல்.
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! ” (என்றும் கூறினார்கள்). (அல்கஸஸ் : 77). இது குறிப்பது : மறுமைக்காக நற்செயல் புரிவதற்கும், உலக இன்பங்களை அனுபவிப்பதற்கும் இடையில் சமநிலை பேணல்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:
பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் மதிப்பீட்டிற்காக மற்ற குழுவுடன் பதிலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சரியாக பதிலளித்த குழுவைப் பாராட்ட வேண்டும்.
கே 1 : கடமைகளில் சமநிலை பேணல் - ஹதீஸின் ஒரு பகுதியை அமுல்படுத்தல் - நான் முஸ்லிம்களுக்கு உபதேசம் வழங்குகின்றேன்.
கே : 2
1- தன்னால் செய்ய முடியாத வழிபாட்டைச் செய்யும்படி தன்னைத் தானே கட்டாயப்படுத்துவது வெறுக்கப்பட்டது.
2- ஒரு முஸ்லிம் தனது குழந்தைகளின் உரிமைகளைக் கருத்தில் கொள்வதுடன், அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றவும் வேண்டும்.
3- இஸ்லாம் உளவியல் மற்றும் உடலியல் பகுதிகள் இரண்டிலுமே அக்கறை கொண்டுள்ளது.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்விலும், எனையோருடனான தொடர்புகளிலும் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுப்பதற்கும் எந்த உரிமையிலும் கவனயீனமின்றி இருப்பதற்கும் முயற்சித்தல்.
அனைத்து உரிமைகள் மற்றும் கடமைகளில் சமநிலை பேணுவதன் முக்கியத்துவத்தை விளக்கும் சிற்றேட்டை உருவாக்குவதில் ஒத்துழைத்து, அதனைப் போதித்து அறியப்படுத்துவதற்கு முயற்சித்தல். அதன் மூலம் எனையோரிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, பயபக்தியுடையோருக்கான கூலிகளை அடையச் செய்யும் நற்கருமங்களை செய்யத் தூண்டலாம்.
இஸ்லாமிய சட்டவியல் பகுதி
பாடம் ஒன்று : வுழூவின் சட்டங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (தொடர்ச்சியாக செய்தல் - வுழூவின் ஸுன்னத்துகள் - வுழூவை முறிப்பவை - வுழூவைப் பூரணப்படுத்துதல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள்- கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(பிரச்சினைகளைத் தீர்க்கும் முறை - K.W.L - நடைமுறை விளக்கக்காட்சிகள் - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
தூய்மையின் அவசியத்தை உணர்தல்.
சரியான முறையில் வுழூச் செய்ய ஆர்வங்கொள்ளல்.
உடல், இட சுத்தங்களில் இஸ்லாம் கொண்டுள்ள அக்கறையை மெச்சுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் பிரச்சனையை மாணவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றியும், அதை அவர்கள் கையாளும், தீர்க்கும் முறைகள் பற்றியும் கேளுங்கள். பாடத்தை தொடர்ந்து படிப்பதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும் என்பதையும் அவர்களுக்கு விளக்கவும்.
(அலி வுழூச் செய்து ளுஹர்த் தொழுகையை தொழுதுவிட்டு தூங்கிவிட்டார், விழித்ததும் எழுந்து சென்று உடனே அஸர்த் தொழுகையை நிறைவேற்றினார் . அவரது சகோதரர் வுழூச் செய்யாதது பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் தூங்குவதற்கு முன்பு வுழூச் செய்ததாகவும், அதன்பின் மலசலம் கழிக்கச் செல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.)
பின்பு பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கற்பித்தல்அட்டையை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கிறார்: முதல் பகுதியில் K என்ற எழுத்தும், இரண்டாவது பகுதியில் W எழுத்தும், மூன்றாம் பகுதியில் L என்ற எழுத்தும் அடங்கும்.
அவர் ஒவ்வொரு பகுதியின் அர்த்தத்தையும் அவர்களுக்கு விளக்க வேண்டும், பின்னர் பாடம் பற்றி அவர்கள் அறிந்துள்ள முந்தைய தகவல்கள் மற்றும் அதன் நோக்கங்கள் தொடர்பாக அவர்கள் சிந்தித்து உணர்ந்தவைகளை முன்வைத்து, அதை முதல் அட்டையில் எழுதுமாறு அவர்களிடம் கேட்பார். பாடம் தொடர்பான அவர்களின் முந்தைய அறிவாற்றல் அனுபவத்தை அடையாளம் காண அவர் அதை அவர்களுடன் விவாதித்து, பின்னர் பாடத்தின் மூலம் அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் தகவல் மற்றும் யோசனைகளை இரண்டாவது அட்டையில் எழுதுமாறு அறிவுறுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமிருந்து வுழூவின் போது அவர்கள் செய்யும் கடமைகள் மற்றும் ஸுன்னாக்களைக் கேட்டறிவார், மேலும் விளக்கப்படப் போவதைக் கவனிப்பதன் மூலம், அவர்கள் ஒவ்வொருவரும் சரியான வுழூச் செய்யும் முறையைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் .
ஆசிரியர் மாணவர்களை வுழூச் செய்யுமிடத்திற்கு அழைத்துச் சென்று, ஒவ்வொரு செயன்முறையையும் விளக்கி, வுழூவின் கடமைகள் மற்றும் ஸுன்னாக்கள் பற்றிய நடைமுறை விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். தான் செய்து காட்டியதை நடைமுறைப் படுத்திக் காட்டுவதற்காக இரண்டு மாணவர்களைத் தேர்வுசெய்து, சக நண்பர்களை மதிப்பீடு செய்ய வைக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறை மூலம், வுழூவை முறிக்கும் விடயங்களை அடையாளப்படுத்துமாறு கூறுங்கள். அவர்கள் வழங்கும் பதில்களைக் கண்டறிந்து, அவை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அதேநேரம் சரியான பதிலை அவர்களுக்குக் கூறி, அது தொடர்பான மார்க்க ஆதாரங்களையும் தெளிவுபடுத்துங்கள்.
இறுதிச்சுருக்கம்:
மாணவர்கள் தங்களிடம் உள்ள அட்டையின் மூன்றாவது பகுதியை முடிக்குமாறு அறிவுறுத்துங்கள். இது பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை பொது கூறுகளின் வடிவத்தில் எழுதுவது தொடர்பான பகுதி (L) ஆகும். சில அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மாணவர்கள் எழுதியுள்ளவை பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் செயற்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் கூட்டாக செயல்படுதல், வுழூவின் கடமைகள், ஸுன்னாக்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 1
செயல்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஹதீஸை காட்சித் திரையில் காட்டவும். மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நண்பர்களுக்கு அதை வாசிக்க வைக்கவும். அவர்களுடன் அதன் அர்த்தத்தையும் பயன்பாடுகளையும் விவாதிக்கவும்.
ஹதீஸ் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இவ்விரு மாணவர்களாக ஒத்துழைக்க நியமிக்கவும். ஒவ்வொரு கேள்வியையும் அடுத்தடுத்துக் கூறி, அதற்கான ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, குழுக்களின் பதில்களை ஒப்பிட்டு, சிறந்த பதில் குழுவைத் தீர்மானித்தல் வேண்டும். இறுதியில், ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட சரியான பதில்களுக்கு ஏற்ப தமது பதிலைச் சரிசெய்ய வேண்டும்.
கடமைகள் : முகத்தைக் கழுவுதல் - முழங்கை வரை இரு கைகளையும் கழுவுதல் - தலையை மஸ்ஹு செய்தல் - இரு கால்களையும் கழுவுதல்.
ஸுன்னாக்கள் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல் - வாய்கொப்பளித்தல் - மூக்கை சிந்து விடுதல் - ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்மூன்று தடவை கழுவுதல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, சரியான முறையில் வுழூச் செய்தல்
நோக்க இலக்கம் : 4
மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, வுழூவை எவ்வாறு சரியாகச் செய்வது என்பதை விளக்குமாறு அவரிடம் கேளுங்கள். சக நண்பர்கள் அவரது செய்முறையைக் கவனித்து, அதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் கண்டறிய வேண்டும். அவ்வாறு தவறு ஏற்படும் பட்சத்தில், வுழூவை சரியாக செய்து காட்ட மற்றொரு மாணவரைப் பணிக்க வேண்டும். இதன் மூலம், தவறுகள் நீங்கி அனைவர் மனதிலும் சரியான முறை பதிந்துவிடும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, வுழூவை முறிப்பவற்றை அறிதல்.
நோக்க இலக்கம் : 2, 4
மூன்றாவது செயல்பாட்டைப் பலகையில் காட்டி, அதை வாசிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். விவாதங்கள் மூலம் அவர்கள் பதிலளிக்கும் வகையில், செயல்பாட்டின் கேள்விகளை தொடராக அவர்களிடம் கேட்கவும். பங்கேற்க முன்வராத மாணவர்களையும் ஊக்குவிக்கவும். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் புத்தகத்தில் சரியான பதிலை, காரணத்தை விளக்கி எழுதவேண்டும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்களிடம் முதல் கேள்வியைக் கேளுங்கள். அவர்களில் எழுமாறாக இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒவ்வொருவரும் கேள்வியின் கூறுகளில் ஏதேனும் ஒன்றுக்குப் பதிலளிக்க வேண்டும், அவர்களை சக நண்பர்கள் கவனித்து மதிப்பீடு செய்ய வேண்டும்.
கே 1 : () - ()
இவ்விரு மாணவர்களாக இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு குழுவும் அதன் பதிலை மற்றொரு குழுவுடன் பரிமாறி, மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும், மற்ற குழுவில் கண்டறிந்த பிழைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்குவதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும்.
கே 2 : (கடமைகள்) - (ஸுன்னத்துக்கள்) - (சிறுநீர் வெளிப்படல்).
மூன்றாவது கேள்வியை மாணவர்களிடம் கேட்டு, அவர்களில் மூன்று பேரை அதற்குப் பதிலளிக்கத் தேர்வு செய்யவும். அவர்கள் தவறு செய்து, மார்க்க ஆதாரங்களை மேற்கோள் காட்ட முடியாமல் போனால், பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து அதைப் பிரித்தெடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தவும்.
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
பாடத்திலிருந்து கற்றுக்கொண்டது போல், வுழூவின் கடமைகள் மற்றும் அதன் ஸுன்னாக்களை சரியாகச் செய்ய மாணவர்களை வலியுறுத்துதல். அத்துடன், குடும்ப உறுப்பினர்களுக்கு அதை அறிமுகப்படுத்தி, அவர்கள் வுழூச் செய்யும் போது கவனித்து, அவர்கள் விடும் தவறுகளைக் திருத்த ஊக்குவிக்க வேண்டும்.
பாடம் இரண்டு : தொழுகையின் நிபந்தனைகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (அவரது அழுக்குகள் - பாவங்கள் - ஆன்மாவை தூய்மைப்படுத்துதல் - அந்தரங்க உறுப்புகள் - கிப்லாவை முன்நோக்குதல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் படங்கள் - கரும்பலகை - கற்பித்தல் பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(பரஸ்பர கற்பித்தல் முறை "முன்கணிப்பு - கேள்வி எழுப்புதல் - தெளிவுபடுத்துதல் - சுருக்கம்" - நடைமுறை விளக்கக்காட்சிகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
தொழுகையின் சட்டதிட்டங்களைக் கற்பதன் அவசியத்தை உணர்தல்.
தொழுகையின் நிபந்தனைகளைப் பேணுவதில் அக்கறை கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
மாணவர்களிடம் "நான் தொழுவதை நீங்கள் பார்த்தது போல் தொழுங்கள்" என்ற ஹதீஸை முன்வைத்து, அதை நன்கு கூர்ந்து கவனித்து, தொழுகை முறை மற்றும் அதன் சட்டங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை கண்டறியச் சொல்லவும். தான் கண்டெடுத்த விடயங்களை தமது அப்பியாசப் புத்தகத்தில் எழுதிக்கொள்ளுமாறு கூறுவதோடு, பாடம் முடியும் வரை அவர்களின் பதில்களை மதிப்பிடுவதை ஒத்திவைப்பதாகவும் உணர்த்தவும்.
பாடத்தின் நோக்கங்களை மாணவர்களுக்கு அறியப்படுத்தி, பாடத்தின் தலைப்பைக் கண்டறியுமாறு அவர்களிடம் கோரி, அதனைக் கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்கள் பாடத்தின் நோக்கங்களையும் தலைப்புகளையும் அறிந்திருப்பதன் அடிப்படியில், பாடத்தின் கூறுகளைக் கணிக்கச் சொல்லுங்கள். பின்னர் பாடத்தின் கூறுகளுக்கான ஒரு விளக்க வரைபடத்தைக் காட்டவும். அவர்கள், தாம் முன்மொழிந்தவற்றையும், வரைபடத்தில் உள்ளவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
நடைமுறை விளக்கக்காட்சி முறை மூலம்; தொழுகையின் நிபந்தனைகளை நடைமுறையில் மாணவர்களுக்குக் காட்டுங்கள். மேலும் சில விளக்கப் படங்களையும் இதனுடன் இணைத்துக்கொள்ளவும். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் முறையாக வுழூச் செய்துள்ளதை உறுதி செய்த பின், முன்பு உங்களிடம் கற்றபடி தொழுகையின் நிபந்தனைகளை நிறைவேற்ற வைக்கவும். மேலும் அவர்களின் செயல்திறனின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள, அவர்களின் வகுப்பு தோழர்கள் அவர்களைக் கவனிக்கவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
நேர்மறை மற்றும் எதிர்மறை எடுத்துக்காட்டுகள் முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் பின்வரும் நிலைகளை மாணவர்களுக்கு முன்வைக்க வேண்டும். அவற்றிற்கிடையில் அவர்கள் வேறுபிரித்துப் பார்த்து, பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழுகையின் நிபந்தனைகள் தொடர்பான சட்டத்துடன் அவை எந்தளவு உடன்படவோ, முரண்படவோ செய்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
பைத்தியகாரர் தொழுகையை நிறைவேற்றுவதில் குற்றமில்லை என ஒருவர் கருதுகிறார்.
தொழுகை நேரங்களில் சில முஸ்லிம்கள் அலட்சியமாக உள்ளனர், அனைத்து தொழுகைகளையும் கடைபிடிப்பதில்லை.
சில இளைஞர்கள் தொழுகைக்கும் அதன் புனிதத்திற்கும் பொருந்தாவிட்டாலும், கிடைக்கும் ஆடைகளை அணிந்துகொள்கின்றனர்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் ஆரம்பத்தில் தாம் முன்வைத்த, தொழுகையின் பயன்கள் பற்றிய எதிர்பார்த்த அம்சங்களை மீட்டிப்பார்க்குமாறு மாணவர்களை ஆசிரியர் அறிவுறுத்தவேண்டும். சில மாணவர்கள் பாடத்தைக் கற்பதற்கு முன்பும் பின்பும் அளித்த பதில்களை பார்க்கவும்.
ஒவ்வொரு மாணவரும் பாடத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதையும், அந்த அறிவின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதையும் சுருக்கமாக ஒரு பந்தியில் தெரிவிக்கச் சொல்லவும். ஒரு நடைமுறை வடிவத்தை அழகான வாக்கியங்களில் கூறும் பதில்களை ஊக்குவிக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் செயற்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, தொழுகையின் நிபந்தனைகளில் சில செயல்பாடுகள்.
நோக்க இலக்கம் : 1
ஒரு பலகையில் முதல் செயல்பாட்டைக் காட்டி, அதை வாசிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். விவாதங்கள் மூலம் அவர்கள் பதிலளிக்கும் வகையில், செயல்பாட்டின் செயல்களை அவர்களுக்குத் தொடராக வழங்கவும். அதே நேரத்தில் பங்கேற்பைத் தொடங்காத மாணவர்களையும் பதிலளிக்க ஊக்குவிக்கவும். பின்னர், ஒவ்வொருவரும் அவரவர் புத்தகத்தில் சரியான பதிலை எழுதுமாறு அறிவுறுத்துங்கள்.
செயல் சரி தவறு நிபந்தனை
தொழுகைக்காக முஅத்தின் அதான் கூற முன் ஒருவர் தொழுதார்.
கிப்லாவை முன்னோக்கி ளுஹர் தொழ நிய்யத் வைத்தார்.
மலசல கூடம் சென்றுவிட்டு வுழூவின்றி தொழுதார்.
ருகூஃவின் போது கிப்லாவின் எதிர்திசைக்குத் திரும்பினார்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் கூட்டு முறை, தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுதல்.
நோக்க இலக்கம் : 3
மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, அவர்களில் முதல் குழு செயல்பாட்டின் முதல் பகுதிக்கும், மற்ற குழு இரண்டாவது பகுதிக்கும் பதிலளிக்கவும் கூறுங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் கவனித்து வழிநடத்துங்கள்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, குர்ஆனுக்கும் நேரம் நுழைதல் எனும் நிபந்தனைக்கும் இடையில் தொடர்புபடுத்துதல்.
நோக்க இலக்கம் : 1, 2
செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை ஒவ்வொரு மாணவருக்கும் விநியோகிக்கவும். அவர்கள் பதிலளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்து, பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும்.
செயல்பாட்டு இலக்கம் : 4 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர், சரியான சட்டத்தை எழுத மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 5
'அல்லாஹ்வுக்காக நான்கு ரக்அத்களுடன் கடமையாக்கப்பட்ட ளுஹர்த் தொழுகையை நான் உரிய நேரத்தில் தொழ நிய்யத் வைத்தேன்' என்று உரத்த குரலில் கூறிய ஒருவருக்குரிய சட்டத்தை தனியான ஓர் அட்டையில் எழுதுமாறு ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை சக மாணவர் ஒருவரது அட்டையோடு மாற்றிக்கொண்டு, ஒருவரையொருவர் மதிப்பிட்டு, தமது தவறுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். நீங்கள் மாணவர்கள் விட்ட தவறுகளை அடையாளம் கண்டு, சரியான தீர்ப்பை அவர்களுக்கு விளக்கவும். அவர்கள் அதைப் புரிந்துகொண்டு தமது புத்தகங்களில் எழுதிக்கொள்வார்கள்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
வினாக்களுக்கு தமது கொப்பிகளில் பதிலளிக்குமாறு மாணவர்களிடம் கோரவும்.
மாணவர்களிடமிருந்து கொப்பிகளை சேகரிக்கவும். பின்னர் அக்கேள்விகளை வாய்மொழியாகக் கேட்டு, அவர்களையே தீர்க்க வைக்கவும். அவர்களுக்குப் பொருத்தமான வலுவூட்டலையும் வழங்கவும்.
கொப்பிகளை திருத்தி, ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான புள்ளிகளை வழங்கவும்.
உயர் புள்ளி பெற்ற மாணவரைக் கண்டறிந்து, தகுந்த ஊக்கத்தை வழங்குங்கள்.
கே 1 : (×) - (✓) - (✓) - (×)
கே 2 : புத்தி - (நிபந்தனைகள்) - தூய்மையற்றது - தவறானது - தவறானது
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தொழுகையை, அதன் நிபந்தனைகளை சரியாக அமுல்படுத்திக் கடைபிடித்தல், மற்றும் அந்த நிபந்தனைகளை குடும்ப உறுப்பினர்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் அறியப்படுத்தல். தாம் பெற்றுக்கொண்டுள்ள அறிவின் மீதுள்ள ஒரு கடமையாக, ஒரு சிற்றேட்டைத் தயாரித்து, அவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் அதை செயற்படுத்தலாம்.
சுற்றியுள்ள மக்களிடையே காணநேரிடும் தொழுகை தொடர்பான தவறான நடத்தைகளைச் சரிசெய்தல். தவறுகளை அவர்களுக்கு உணர்த்துவதுடன் மற்றும் சரியான ஒழுங்கு முறையில் அவற்றை எவ்வாறு கையாளுவது என்பதிலும் கவனம் செலுத்துதல்.
பாடம் மூன்று : தொழுகையின் தூண்கள் மற்றும் கடமைகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள் : (அடிப்படை கடமைகளுக்கு மத்தியில் ஒழுங்கு முறை பேணுதல் - அமைதியாக இருத்தல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் படங்கள் - கரும்பலகை - கற்பித்தல் பலகை).
கற்பிக்கும் உத்திகள்:
(பரஸ்பர போதனை "முன்கணிப்பு - கேள்வி எழுப்புதல் - தெளிவுபடுத்துதல் - சுருக்கம்" - நடைமுறை விளக்கக்காட்சிகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
தொழுகையை அதன் தூண்கள் மற்றும் கடமைகளுடன் சேர்த்து நிறைவேற்றுதல்.
கடமையான தொழுகையின் மகத்துவத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வருவனவற்றின் மூலம் பாடத்தை ஆரம்பியுங்கள்:
தொழுகையில் மார்க்கமாக்கப்பட்டுள்ள செயல்கள் ருக்ன்கள், வாஜிப்கள், ஸுன்னத்கள் என வகைப்படுகின்றன :
அர்கான்கள் (தூண்கள்) இல்லாமல் தொழுகை செல்லாது. இது வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ விடப்படமுடியாது. அவை பதினான்கு தூண்கள்.
வாஜிப் (கடமை)களை அவசியம் நிறைவேற்ற வேண்டும், எனவே அவற்றில் ஒன்றை வேண்டுமென்றே புறக்கணிப்பவரின் தொழுகை செல்லுபடியாகாது. மறதியாக விட்டவர் மறதிக்காக ஸஜ்தா செய்ய வேண்டும். அதன் எண்ணிக்கை எட்டாகும்.
ஸுன்னாக்களை செய்வது விரும்பத்தக்கது. அது விடப்பட்டாலும் தொழுகை செல்லும். அவை அதிகம் உள்ளன.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடத்தை பிரட்டிப் பார்க்கவும், அதன் தலைப்புகளை எடுத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு மூன்று நிமிடங்கள் அவகாசம் அளிக்கவும். பின்னர், பாடத்தின் உள்ளடக்கம் குறித்த கேள்விகளைக் கேட்குமாறு அவர்களிடம் கோரவும். அவர்களின் கேள்விகளைப் பெற்று, அவற்றை விவாதத்திற்கு எடுக்கவும். இதன் போது, பதிளுடன் தொடர்பான மார்க்க ஆதாரங்கள் விளக்கப்பட வேண்டும். முன்வைக்கப்படும் கேள்விகளில் சில:
கே : தொழுகையின் ருகூன்களை விளக்கவும்.
கே : தொழுகையின் வாஜிப்களை குறிப்பிடுக.
இரண்டாம் கட்டம்:
நடைமுறை விளக்க முறையின் மூலம், மாணவர்களுக்கு தொழுகையின் அடிப்படை கடமைகளை நடைமுறையில் காட்டவும். மேலும் சில விளக்கப் படங்களையும் இதனுடன் இணைத்துக்கொள்ளவும். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் உங்களிடம் பார்த்தது போன்று தொழுகையின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வைக்கவேண்டும். எந்த அளவு சரியாக செய்கிறார்கள் என்பதை மதிப்பிட, அவர்களின் வகுப்புத் தோழர்கள் அதனைக் கவனிக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
நேர்மறை மற்றும் எதிர்மறை எடுத்துக்காட்டுகளின் முறையைப் பயன்படுத்துதல் மூலம், ஆசிரியர் பின்வரும் நிலைகளை மாணவர்களுக்கு முன்வைக்க வேண்டும். அவர்கள் அவற்றுக்கிடையில் வேறுபிரித்துப் பார்த்து, தொழுகையின் வாஜிப்கள் தொடர்பாக பாடத்தில் வந்த சட்டங்களோடு அவை எந்தளவு உடன்படவோ, முரண்படவோ செய்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
தொழுகையை வேகமாக நிறைவேற்றுவதில் குற்றமில்லை என ஒருவர் கருதுகிறார்.
ருகூஃவின் போது தனது இரு முழங்காலிலும் கைகளை வைக்க முடியுமானளவு தொழுபவர் குனிவார்.
சில பெற்றோர் தமது பிள்ளைகளை தொழுகைக்காக வற்புறுத்துகின்றனர்.
இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் உட்காருவது தொழுகையின் ஸுன்னாக்களில் உள்ளதாக சிலர் கருதுகின்றனர்.
ருகூஃவுக்குச் செல்லும் போது தக்பீர் கூறுவது தொழுகையின் ருகூன் என சிலர் கருதுகின்றனர்.
இறுதிச்சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் பாடத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதையும், அந்த அறிவின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதையும் சுருக்கமாக ஒரு பந்தியில் தெரிவிக்கச் சொல்லவும். ஒரு நடைமுறை வடிவத்தை அழகான வாக்கியங்களில் கூறும் பதில்களை ஊக்குவிக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, தொழுகையின் ருகூன்களைக் கண்டறிதல், வேகமாகத் தொழுபவருக்கு நல்லுபதேசம் வழங்குதல்.
நோக்க இலக்கம் : 2, 5
மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தமது புத்தகத்தில் உள்ள ஹதீஸைத் தனது சக நண்பர்களுக்கு வாசிக்க வைக்கவும். அவர்கள் அனைவரிடமும் ஹதீஸைக் கவனித்து, அதன் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்குமாறு கேட்கவும். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள தொழுகையின் அடிப்படை கடமைகளான பர்ழுகளை பிரித்தெடுக்க அறிவுறுத்தவும். தனது நண்பர்களுக்கு சரியான பதிலை வாசிக்க ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆரம்ப தக்பீர் - ருகூஃ - ருகூஃவிலிருந்து எழுதல் - ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருதல் - நடுஇருப்பு - அமைதி
ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில், தொழுகையை வேகமாகத் தொழும் ஒருவருக்கு ஓர் உபதேசத்தை எழுதுமாறு ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்துங்கள். அவர்கள் அருகே சென்று எழுதுபவற்றைக் கவனிக்கவும். தாக்கம் ஏற்படுத்துமளவு நல்ல சிந்தனைகளால் வடிவமைக்கப்பட்ட உபதேசங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தங்கள் சக நண்பர்களுக்கு வாசிக்குமாறு பணிக்கவும். மேலும் மாணவர்கள் அவற்றைத் தங்களுக்குள் பரிமாறி, ஏனையோருக்கும் பகிருமாறு பணியுங்கள்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர்/ இரட்டையர் முறை, தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுதல்.
நோக்க இலக்கம் : 4, 5
மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தொழுகையின் முதல் ரக்அத்தை விவரிக்கச் சொல்லுங்கள். அவரது சக நண்பர்கள் அவரைக் கவனித்து, அவரது செய்முறையில் உள்ள தவறுகளைத் தெளிவுபடுத்தவேண்டும். அவ்வாறு தவறுகள் இருக்கும் பட்சத்தில், சரியான முறையைக் காட்ட மற்றொரு நபரைத் தேர்ந்தெடுக்கவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
வினாக்களுக்கு தமது கொப்பிகளில் பதிலளிக்குமாறு மாணவர்களிடம் கோரவும்.
கொப்பிகளை சேகரித்து, பின்னர் கேள்விகளை வாய்மொழியாகக் கேட்டு, அவர்களைத் தீர்க்கச் செய்வதுடன் பொருத்தமான வலுவூட்டலையும் வழங்கவும்.
கொப்பிகளை திருத்தி, ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான புள்ளிகளை வழங்கவும்.
உயர் புள்ளி பெற்ற மாணவரைக் கண்டறிந்து, தகுந்த ஊக்கத்தை வழங்குங்கள்.
கே1: (×) - (√) – (√) - (×) - (√)
கே 2: (தொழுகையின் கடமைகள்) - (தூண்கள்) - (ஏழு உறுப்புக்கள்).
உள்ளார்ந்த பயன்படுத்தல் வழிகாட்டல்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தொழுகையின் நிபந்தனைகள், தூண்கள் மற்றும் கடமைகளை சரியாகப் பேணிக் கடைபிடித்து, அந்த நிபந்தனைகள், தூண்கள் மற்றும் கடமைகளைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தெரிவிக்க ஊக்கப்படுத்தல். தாம் பெற்றுக்கொண்டுள்ள அறிவின் மீதுள்ள ஒரு கடமையாக, ஒரு சிற்றேட்டைத் தயாரித்து, அவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் அதை செயற்படுத்தலாம்.
பாடம் நான்கு : தொழுகையின் ஸுன்னத்கள் மற்றும் அதனை முறிப்பவை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (ஆரம்ப துஆ - அஊது கூறுதல் - சிரிப்பு).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் படங்கள் - கரும்பலகை - கற்பித்தல் பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(பரஸ்பர போதனை "முன்கணிப்பு - கேள்வி எழுப்புதல் - தெளிவுபடுத்துதல் - சுருக்கம்" - நடைமுறை விளக்கக்காட்சிகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
தொழுகையையும், அதன் ஸுன்னாக்களையும் பேணிவருதல்.
தொழுகையை முறிப்பவற்றைத் தவிர்ந்து கொள்ளுதல்.
தொழுகையில் நபிவழியைப் பின்பற்றுதல்.
பாடத்தின் அறிமுகம்:
எனது சகோதர ஆசிரியரே, முந்தைய பாடத்துடன் (தொழுகையின் விதிகள்) இன்றைய பாடத்தை இணைத்து பாடத்தைத் ஆரம்பிக்கவும். எனவே, நாங்கள் முன்பு தொழுகையின் தூண்கள், கடமைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி கற்றோம், அவற்றை யார் நமக்கு நினைவூட்ட முடியும்? என்று அவர்களிடம் கேட்கவும். அவர்களிடமிருந்து நீங்கள் பதிலைப் பெற்று, இன்றைய பாடத்தில் நாம் தொழுகையின் ஸுன்னத்கள், அதனை முறிப்பவை பற்றி தொடர்ந்து பேசுவோம் எனக் கூறி, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
மாணவர்கள் பாடத்தின் நோக்கங்களையும் தலைப்புகளையும் அறிந்திருப்பதன் அடிப்படியில், பாடத்தின் கூறுகளைக் கணிக்கச் சொல்லுங்கள். பின்னர் பாடத்தின் கூறுகள் மற்றும் சிந்தனைகளுக்கான ஒரு விளக்க வரைபடத்தைக் காட்டவும். அவர்கள், தாம் முன்மொழிந்தவற்றையும், வரைபடத்தில் உள்ளவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
பாடத்தைப் பிரட்டிப் பார்த்து, அதன் கூறுகளை உள்வாங்கிக்கொள்ள மாணவர்களுக்கு மூன்று நிமிடங்கள் அவகாசம் அளிக்கவும். பின்னர், பாடத்தின் உள்ளடக்கம் குறித்த கேள்விகளையும், பாடம் மூலம் தாம் அறிய விரும்புபவற்றையும் முன்வைக்குமாறு கோரவும். அவர்களின் கேள்விகளை ஒரு பலகையில் எழுதி, பின்னர் விவாதத்திற்கு எடுக்கவும். அத்துடன் பாடத்தின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கும் விதத்தில், உம்மிடமிருந்து மேலும் சில கேள்விகளை சேர்த்துக் கொள்ளவும். இதன் போது, அககேள்விகளுக்கான பதில்களுடன் தொடர்பான மார்க்க ஆதாரங்கள் விளக்கப்பட வேண்டும். முன்வைக்கப்படும் கேட்கப்பட்ட கேள்விகளில் சில:
கே: தொழுகையின் ஸுன்னாக்களின் வகைகளைக் குறிப்பிடவும்.
கே: .......,.........,........,.........,..... ... என்பன தொழுகையின் சொல் ரீதியான சில ஸுன்னாக்களாகும்.
கே: .......,.........,........,.........,..... ...என்பன தொழுகையின் செயல்ரீதியான சில ஸுன்னாக்களாகும்.
கே: தொழுகையை முறிப்பவற்றைக் கூறவும்.
மூன்றாம் கட்டம்:
நடைமுறை விளக்கக்காட்சி முறை மூலம், தொழுகையின் ஸுன்னாக்களை நடைமுறையில் மாணவர்களுக்குக் காட்டுங்கள். மேலும் சில விளக்கப் படங்களையும் இதனுடன் இணைத்துக்கொள்ளவும். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் முறையாக வுழூச் செய்துள்ளதை உறுதி செய்த பின், முன்பு உங்களிடம் கற்றபடி தொழுகையின் ஸுன்னாக்களை நிறைவேற்ற வைக்கவும். மேலும் அவர்கள் எந்த அளவு நுணுக்கமாக நிறைவேற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள, அவர்களின் வகுப்பு தோழர்கள் அவர்களைக் கவனிக்கவேண்டும்.
நான்காம் கட்டம்:
நேர்மறை மற்றும் எதிர்மறை எடுத்துக்காட்டுகள் முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் பின்வரும் நிலைகளை மாணவர்களுக்கு முன்வைக்க வேண்டும். அவற்றிற்கிடையில் அவர்கள் வேறுபிரித்துப் பார்த்து, பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் தொடர்பான சட்டத்துடன் அவை எந்தளவு உடன்படவோ, முரண்படவோ செய்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இரண்டு ஸஜ்தாக்களில் ஒன்று போதுமானதாக இருக்கும் என்று ஒருவர் கருதுகிறார்.
சில முஸ்லிம்கள் தஸ்பீஹ், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ, தஹ்மீத் ஆகியவற்றை அலட்சியமாகக் கைவிடுகின்றனர்.
சில இளைஞர்கள் தொழுகையில் உள்ள நிலையில் சில உணவுகளை மெல்லுகின்றனர்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் ஆரம்பத்தில் தாம் முன்வைத்த, தொழுகையின் பயன்கள் பற்றிய எதிர்பார்த்த அம்சங்களை மீட்டிப்பார்க்குமாறு மாணவர்களை ஆசிரியர் அறிவுறுத்தவேண்டும். சில மாணவர்கள் பாடத்தைக் கற்பதற்கு முன்பும் பின்பும் அளித்த பதில்களை பார்க்கவும்.
ஒவ்வொரு மாணவரும் பாடத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதையும், அந்த அறிவின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதையும் சுருக்கமாக ஒரு பந்தியில் தெரிவிக்கச் சொல்லவும். ஒரு நடைமுறை வடிவத்தை அழகான வாக்கியங்களில் கூறும் பதில்களை ஊக்குவிக்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, தொழுகையை முறிப்பவற்றுக்கு மத்தியில் வேறுபிரிக்க மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 4
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் செயல்பாட்டைச் செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். குழுக்கள் செயற்பாட்டை முடித்த பிறகு, செயல்கள் அட்டவணையை மாணவர்களிடம் முன்வைத்து, அது பற்றிய ஒவ்வொரு குழுவினதும் பதிலைக் கண்டறியவும். சிறந்த பதிலளித்த குழுவை அடையாளம்காட்டி, அதன் உறுப்பினர்களுக்கு தகுந்த பாராட்டை வழங்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர்முறை, தொழுகையை முறிப்பவற்றைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4, 5
மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இரண்டாவது செயல்பாட்டின் ஹதீஸைப் படிக்கச் சொல்லவும். அவரது வகுப்பு தோழர்கள் அவரைக் கவனித்து, தொழுகையை முறிப்பவற்றைக் கண்டறியவேண்டும். அவர் தவறு விடும் போது, சரியான பதிலைக் கண்டறிய மற்றொரு நபரைத் தேர்ந்தெடுக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகை மற்றும் நோக்கம்: கூட்டு முறை, தொழுகையின் சில செயல்களின் சட்டத்தை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 2
ஒவ்வொரு குழுவும் மூன்றாவது செயல்பாட்டைச் செய்வதற்கும், அதில் உள்ள செயல்களுக்குத் தீர்ப்பளிக்கவும் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். ஒவ்வொரு செயலையும் தொடராக முன்வைத்து, அது பற்றிய ஒவ்வொரு குழுவின் தீர்ப்பையும் அடையாளம் காணவும்.
குழுக்களின் பதில்களை ஒப்பிட்டு, எந்தக் குழு சரியான பதிலுக்கு மிகச் சமீபமாக உள்ளது என்பதைத் தீர்மானிக்கவும்.
செயல் நிபந்தனை ருக்ன் ஸுன்னா வாஜிப்
ஆடைத் தூய்மை
ரப்பனா வலகல் ஹம்து எனக் கூறுதல்
ஸூறா அல் பாத்திஹாவை ஓதுதல்.
ஆமீன் கூறுதல்
ஸுஜுதில் 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல்.
ஸுஜூது செய்யும் இடத்தை நோக்குதல்:
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்கள் கேள்விகளுக்கு தங்கள் கொப்பிகளில் பதிலளிக்கச் சொல்லவும்.
கொப்பிகளை சேகரித்து, பின்னர் கேள்விகளை வாய்மொழியாகக் கேட்டு, அவர்களைத் தீர்க்கச் செய்வதுடன் பொருத்தமான வலுவூட்டலையும் வழங்கவும்.
கொப்பிகளை திருத்தி, ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான புள்ளிகளை வழங்கவும்.
உயர் புள்ளி பெற்ற மாணவரைக் கண்டறிந்து, தகுந்த ஊக்கத்தை வழங்குங்கள்.
கே 1 : (இல்லை) - (ஆம்) - (ஆம்) - (ஆம்).
கே 2 : (ரக்அத்) - (கைகளை உயர்த்துதல்) - (செல்லுபடியானது).
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தொழுகையின் ஸுன்னாக்களை சரியாகப் பேணிக் கடைபிடித்துத் தொழவும், அதனை முறிப்பவைகளை அறிந்து வைத்திருக்கவும் மாணவர்களைத் தூண்டல், மேலும், அந்த ஸுன்னாக்கள், மற்றும் முறிப்பவைகளைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுக்க ஊக்கப்படுத்தல். தமது கல்விக்கான ஸகாத்தாக அவற்றை உள்ளடக்கிய ஒரு சிற்றேட்டைத் தயாரித்து, அவர்களுக்கு விநியோகிபபதன் மூலம் அதை செயற்படுத்தலாம்.
சுற்றியுள்ள மக்களிடையே காணநேரிடும் தொழுகை தொடர்பான தவறான நடத்தைகளைச் சரிசெய்தல். தவறுகளை அவர்களுக்கு உணர்த்துவதுடன் மற்றும் சரியான ஒழுங்கு முறையில் அவற்றை எவ்வாறு கையாளுவது என்பதிலும் கவனம் செலுத்துதல்.
பாடம் ஐந்து : கூட்டுத் தொழுகை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (கூட்டம் - தனித்து - நாளை - மன்னிக்கப்பட்டு விட்டது).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(கண்டுபிடிப்பு மூலம் கற்றல் முறை - சொற்பொருள் வரைபடங்கள் - கற்றல் வட்டங்கள் முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
தொழுகையைக் கூட்டாகத் தொழவதன் மகத்துவத்தை உணர்தல்.
தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்துதல்.
அந்தஸ்துகளை உயர்த்திக் கொள்வதிலும், தவறுகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் அக்கறை செலுத்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
முந்தைய பாடங்களில் படித்தவற்றை (தொழுகையின் நிபந்தனைகள், தூண்கள், ஸுன்னாக்கள் மற்றும் முறிப்பவை) மீட்டிப்பார்க்கவும், அவற்றை தற்போதைய பாடத்துடன் இணைக்கவும், மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். புத்தகத்தில் உள்ள படத்தை கரும்பலகையில் காண்பித்து, அது பற்றிக் கருத்துத் தெரிவித்து, முந்தைய பாடங்களில் படித்தவை மற்றும் தற்போதைய பாடத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அடையாளம் காணவும். "ஒரு முஸ்லிம் சுவர்க்கத்தில் நுழைவதற்கான மிகப்பெரிய வழிகளில் ஒன்று கூட்டுத் தொழுகை. இன்றைய பாடத்தில் அதன் பயன்கள் மற்றும் நல்லொழுக்கங்கள் சிலவற்றை விளக்குவோம்" என்று நீங்கள் அவர்களிடம் கூறி, பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஆசிரியர், கண்டுபிடிப்பு கற்றல் முறையைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு பின்வரும் ஹதீஸ் மற்றும் அதில் உள்ள கேள்வியை முன்வைக்க வேண்டும்:
(யார் காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்கிறாரோ, அவர் காலையில் செல்லும்போதோ அல்லது மாலையில் செல்லும்போதோ அவருக்காக இறைவன் சுவர்க்கத்தில் ஓர் இடத்தைத் தயார் செய்வான். அதன் மிக முக்கியமான சட்டங்கள் என்ன?)
அவர்களுக்கு பதில் தொடர்பான தெரிவுகளின் தொகுப்பை முன்வைக்க வேண்டும், உதாரணமாக: (கூட்டுத் தொழுகை புத்தியுள்ள, பருவ வயது வந்த ஆண்களுக்குக் கட்டாயமாகும். கூட்டுத் தொழுகைக்கான குறைந்தபட்ச எண்ணிக்கை இமாமுடன் இரண்டு ஆண்கள்) அவர்கள் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்த பிறகு, கூட்டுத் தொழுகைக்கான சரியான சட்டங்களை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் நான்கு கற்பித்தல் அட்டைகளைக் காட்ட வேண்டும், ஒவ்வொரு அட்டையும் கூட்டாக தொழுவதன் சிறப்புக்களில் ஒன்றை உள்ளடக்கியிருக்கும். மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு அட்டையை கூர்ந்து கவனித்து, அதில் உள்ளதை விளக்கி, அவ்வட்டை குறிப்பிடும் சிறப்பைக் கூற வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கற்றல் வட்டங்கள் முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களை வட்டங்களில் உட்கார வைத்து, கூட்டுத் தொழுகைக்கான மகத்தான வெகுமதியைப் பற்றி தங்களுக்குள் விவாதிக்க வைக்கவேண்டும்.ஆசிரியர் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் தமது குழுவின் முடிவுகளை முன்வைக்குமாறு கூறி, அவர்களின் பதில்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இந்த நன்மையைப் பற்றிய யதார்த்தத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். சில மாணவர்களைத் தேர்வு செய்து, அதை சக நண்பர்களின் முன் வாய்மொழியாகக் கூற வைக்கவேண்டும்.
இறுதிச் சுருக்கம் :
ஆசிரியர் மாணவர்களுக்கு பாடத்தின் கூறுகளுக்கான வெற்று சொற்பொருள் வரைபடத்தை வழங்கவேண்டும். பின்னர் அவர்களில் ஒருவரைத் தெரிவுசெய்து, அதில் சேர்க்கப்பட வேண்டிய கூறுகளில் ஒன்றை எழுதவைத்து, நீங்கள் அதை விளக்கவேண்டும். அவரால் அவ்வாறு கண்டுபிடிக்க முடியவில்லையானால் வேறு ஒருவர் பதிலளிக்க வேண்டும். முதலாமவர் சரியான பதிலைக் கண்டறிய, புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குச் செல்லவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும்: குழு சார்ந்தது, பள்ளிவாசலுடன் அதிக தொடர்பைப் பேணுவதன் சிறப்பை விளக்கல்.
நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் ஒவ்வொரு மாணவர் குழுவையும் செயல்பாட்டைச் செய்ய ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவேண்டும். பின்னர், ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, ஹதீஸையும் பாடத்தையும் இணைப்பதிலும், ஹதீஸின் பயன்களைக் கண்டடைவதிலும் அவரது குழு அடைந்த முடிவுகளை முன்வைக்கச் செய்யவேண்டும்.
குழுவின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர் கருத்து தெரிவித்து, துல்லியமாக பகுப்பாய்வு செய்ய முடிந்த குழுவை அடையாளம் காட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும்: தனிநபர் முறை, கூட்டுத் தொழுகையில் அக்கறை செலுத்துதல்.
நோக்க இலக்கம் : 3, 4
பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கிய கற்பித்தல் அட்டையை ஒவ்வொரு மாணவருக்கும் விநியோகித்து, அவர்கள் விடையளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைத் திருத்தவும். சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களிடம் அவற்றை முன்வைத்து விளக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும்: கூட்டுமுறை, கூட்டுத் தொழுகையை விடுவதற்குரிய காரணங்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4
ஒவ்வொரு குழுவிற்கும் மூன்றாவது செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்க அறிவுறுத்துங்கள். மேலும் ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்ய, குழுக்களைக் கவனிக்கவும். பின்னர் தனது குழு என்ன செய்திருக்கிறது என்பதைச் சமர்ப்பிக்க ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, மிகவும் துல்லியமான பதிலையும், ஜமாஅத் தொழுகையைக் கைவிடுவதற்கு பொருத்தமான தீர்வை வழங்குவதற்கான திறனையும் கொண்ட குழுவைத் அடையாளப்படுத்தவேண்டும். மேலும் இந்த தீர்வு முறைகளை சமூகத்தில் அறிமுகப்படுத்தி அவற்றைப் பரப்ப முயற்சிக்குமாறு உற்சாகப்படுத்தவேண்டும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
பாடத்தில் உள்ள கேள்விகளை ஒவ்வொன்றாக மாணவர்களிடம் கேளுங்கள்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களின் பதில்களைப் பெற்று, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்ப்பதோடு, அவர்களின் பதில்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை சக நண்பர்களுக்கும் வழங்கவும்.
பதிலை முடித்த பிறகு, அவற்றைப் புத்தகங்களில் எழுதிவைக்குமாறு அறிவுறுத்தவும். மேலும் அவர்களுக்கு ஏதேனும் கேள்வியில் தடுமாற்றம் ஏற்பட்டால் உங்களை அனுகும்படி கூறவும்.
கே1: (X) - (√) - (X) - (√)
கே 2: குழந்தை - கட்டாயம் - நள்ளிரவில்
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
கற்றுக்கொள்ளப்பட்டவற்றின் படி, பின்வருவனவற்றை மாணவர்களுக்கு உணர்த்துவது விரும்பத்தக்கது:
ஒவ்வொரு மாணவரும் பாடத்தில் உள்ள, கூட்டுத் தொழுகையின் சிறப்பைக் குறிப்பிடும் மார்க்க ஆதாரங்களை மீண்டும் வாசிப்பதுடன், புத்தகங்கள், மார்க்க அறிஞர்களின் கூற்றுக்கள் அல்லது மின்னணு மூலங்கள் போன்ற வெவ்வேறான ஆதாரங்களையும் அணுகி, அவற்றைக் கிரகித்து, அவையூடாக கூட்டுத் தொழுகையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். மேலும், இதனைக் கடைப்பிடித்து, செயற்படுத்தும் முறைகள் பற்றித் தம்மோடு இருப்பவர்களுக்கும் வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி, அவர்கள் ஊடாக ஏனையோருக்கும் கற்பிக்கவேண்டும். இவ்வாறுதான் அறிவு பரப்பப்படும்.
பாடம் ஆறு: ஜும்ஆத் தொழுகை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (நறுமணம் - சிறுகற்களைத் தொடுதல் -வீணடித்து விட்டார்).
கற்பித்தல் சாதனங்கள்:
(ஓடியோ பதிவு - காட்சித் திரை- கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(முந்தைய அமைப்புகள் முறை - கண்டுபிடிப்புக் காற்றல் முறை - நேர்மறை மற்றும்
எதிர்மறை உதாரணங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
ஜும்ஆத் தொழுகையின் சிறப்பை கண்ணியப்படுத்தல்.
ஜும்ஆத் தொழுகையில் அக்கறை செலுத்துதல்.
வெள்ளிக்கிழமையின் ஒழுக்கங்களைக் கடைபிடித்தல்.
பாடத்தின் அறிமுகம்:
வெள்ளிக்கிழமையன்று ஒரு மஸ்ஜிதில் மக்கள் அமர்ந்து பிரசங்கத்தைக் கேட்கும் படத்தை மாணவர்களுக்குக் காட்டுங்கள். பின்னர் அவர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேளுங்கள்: "வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் செய்யவேண்டும் என எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா?" அவர்களிடமிருந்து பதிலைப் பெற்று, பாடத்தின் உள்ளடக்கத்திற்குள் நுழைந்து, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
முந்தைய அமைப்புக்களின் முறையைப் பயன்படுத்தி, பாடத்தின் கூறுகளின் விளக்கப்படத்தை காட்சித் திரையில் மாணவர்களுக்குக் காண்பிக்கவும். அதை அவதானித்து, ஒவ்வொரு உறுப்புகளின் உள்ளடக்கத்தையும் கணிக்குமாறு அவர்களிடம் கோரவும்.
ஜும்ஆத் தொழுகை மற்றும் அதன் சட்டங்கள் தொடர்பாக மாணவர்களுக்குத் தெரிந்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடவும். இதற்கு முன்பு யாராவது வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்திருக்கிறார்களா? அவர்கள் எதைப் பற்றி பேசினார்கள்? மேலும் மார்க்க சட்டங்களை எந்த அளவிற்கு அதில் செயற்படுத்தினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கேட்கவும்.
இரண்டாம் கட்டம்:
கண்டுபிடிப்பு கற்றல் முறை மூலம், ஆசிரியர் பின்வரும் வாக்கியத்தை மாணவர்களுக்கு முன்வைத்து, அது எதைக் குறிக்கிறது என்பதை விளக்குமாறு அவர்களிடம் கேட்கவும். மேலும் ஜும்ஆத் தொழுகையின் முறை பற்றி அவர்களுடன் விவாதிக்கவும்.
(இது நண்பகல் (ழுஹர் தொழுகையுடைய) நேரத்தில் செய்யப்படுகிறது. இதன் போது இமாம் இரண்டு பிரசங்கங்களை நிகழ்த்துவார். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி, அதில் சப்தமிட்டு ஓதுவார்.)
மூன்றாம் கட்டம்:
நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்களின் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களுக்கு முன்வையுங்கள். மேலும் அவை குறித்த அவர்களின் கருத்தையும் பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றின் படி, இது கூடுமா? என்பதையும் விளக்குமாறு அவர்களிடம் கேளுங்கள்:
உஸாமா தனது வீடு மஸ்ஜிதிக்கு அடுத்ததாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டி, மஸ்ஜிதில் ஜும்ஆத் தொழுகையைத் தொழாமல் வீட்டில் இருந்துகொண்டே இமாமின் பின்னால் தொழுவார்.
வெள்ளிக்கிழமை தூங்கவும் ஓய்வெடுக்கவும் வைக்கப்பட்டுள்ள விடுமுறை தினமென ஒரு நண்பர் கருதுகின்றார்.
காலித் ஜும்ஆத் தொழுகைக்காகவும், குத்பாப் பிரசங்கத்திற்கு சமூகளிப்பதற்காகவும் குளித்து, நறுமணமிட்டு, அழகிய ஆடையை அணிந்துகொண்டார்.
அஹ்மத் உட்கார்ந்து, குத்பாப் பிரசங்கத்தை செவிமடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அருகிலுள்ளவர் ஸலாம் கூறியதும் பதில் கூறி, அவரோடு கைகுழுக்கிக் கொண்டார்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்திலிருந்து தெரிந்து கொண்ட, ஜும்ஆத் தொழுகையின் விதிகள் மற்றும் அதன் ஒழுங்குகள் ஆகியவற்றை விளக்குவதற்காக ஒவ்வொரு மாணவரும் ஒரு ஒழுங்குமுறை வரைபடத்தை உருவாக்கக் கோரவும். மாணவர்களின் அருகாமையில் சென்று, அவர்களது வடிவமைப்புகளைப் பார்த்து, மிகவும் துல்லியமான, கவர்ச்சிகரமான மற்றும் தெளிவான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் அதைக் காட்டவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஜும்ஆவின் ஒழுக்கங்களை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 1
சில அட்டைகளை மாணவர்களுக்கு ஆசிரியர் விநியோகிக்க வேண்டும். ஒவ்வொரு அட்டையும் (நான் அதைத் தொடர்ந்து செய்கிறேன் - சில நேரங்களில் செய்கிறேன் - நான் செய்வேன்) ஆகிய வார்த்தைகளில் ஒன்றைக் கொண்டிருக்கும். பின்னர், ஆசிரியர் செயல்பாட்டிலிருந்து ஒவ்வொரு வாசகத்தையும் படிக்கும் போது, அவ்வாசகத்திற்குப் பொருத்தமான அட்டையை உயர்த்துமாறு கூறவேண்டும், அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு அவற்றை மதிப்பீடு செய்வதோடு, பொருத்தமற்ற பதிலளித்தவர்களுடன் கலந்துரையாடி, காரணத்துடன் சரியானதை அறியப்படுத்தவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, குத்பாப் பிரசங்கத்தை ஆற்றும் முறையை அறிதல்.
நோக்க இலக்கம் : 3
மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் உள்ள பின்வரும் செயல்பாட்டைப் படிக்க அறிவுறுத்துங்கள். பின்பு செயல்பாட்டைத் தொடர்ந்து வரும் கேள்விகளை அவர்களுக்கு முன்வைக்கவும்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருடைய பதில்களைப் பெற்று, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, சரியான பதிலைப் பெறவும். பின்பு ஒவ்வொருவரும் அதை தங்கள் புத்தகங்களில் உரிய இடத்தில் எழுதச் சொல்லவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஜும்ஆத் தொழுகையை விடுவதன் விபரீதத்தையும், அதற்கான தீர்வையும் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4, 5
செயல்பாட்டில் உள்ள ஹதீஸை கரும்பலகையில் எழுதுவது விரும்பத்தக்கது. அதை வாசிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து, பின்னர் அவர்களுடன் கலந்துரையாடவும். பின்னர் ஒவ்வொரு மாணவரையும் வெள்ளிக்கிழமை தொழுகையை புறக்கணிப்பதால் ஏற்படும் ஆபத்து மற்றும் அதை நிறைவேற்றுவதில் சில இளைஞர்களின் அலட்சியத்திற்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு மின்னணு ஆதாரங்களை அணுகுவதன் மூலம் செயல்பாட்டைப் பற்றிய முழு அறிவைப் பெற வழிகாட்டவும். இந்த விஷயத்தில் மாணவர்களின் செயல்திறன் மற்றும் அவர்கள் என்ன கண்டறிந்தார்கள் என்பதை அடுத்த சந்திப்பில் பார்க்கவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
முதலிரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பதிலளிக்க வேண்டும். பின்னர் ஆசிரியர் சரியான பதிலை மாணவர்களுக்கு வழங்கி, தமக்குத் தாமே தகுந்த மதிப்பெண்ணை வழங்குமாறு கோரவேண்டும். மேலும் அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் அவர்கள் செய்த தவறுகளை கண்டறிய வேண்டும்.
கே1: () - () - ()
கே 2 : ஜும்ஆ - குளித்து நறுமணமிடுதல் - நபியவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்.
இவ்விரு மாணவர்களாக மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கு பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு குழுவும் அதன் பதிலை மற்றொரு குழுவுடன் பரிமாறி மதிப்பிட வேண்டும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியில் கண்ட தவறுகளை ஆசிரியர் அடையாளம் கண்டு அதை சரிசெய்து, பிழையைத் தவிர்க்கும் விதத்தில் பதிலை மீண்டும் எழுதுமாறு தவறு விட்ட குழுவிற்கு அறிவுறுத்துவார்.
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவனும் தனது சமூகத்தின் நிலையை ஆராய்ந்து, ஜும்ஆத் தொழுகையின் விதிகள் மற்றும் நெறிமுறைகளை சமுதாயம் எந்த அளவிற்குக் கடைபிடிக்கிறது என்பதை பரிசீலிக்க வேண்டும். மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவதோடு, அது தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் விவாதிக்க வேண்டும்.
பாடம் ஏழு : ஸுன்னத்தான தொழுகைகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(ஸுன்னத்தான தொழுகை - பொதுவான ஸுன்னத் தொழுகை - வித்ர் தொழுகை - தாராவிஹ் தொழுகை - ழுஹா தொழுகை).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சி திரை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(கருத்துதிர்ப்பு - மன வரைபடம் - சுருக்குதல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
ஸுன்னத்தான தொழுகையின் முக்கியத்தும் மற்றும் சிறப்பை மெச்சுதல்.
ஸுன்னத்தான தொழுகைகளைப் பேணிவருதல்.
ஸுன்னத்தான அமல்கள் மூலம் அல்லாஹ்வைத் தொடர்ந்து நெருங்குதல்
உள்ரங்கமான, வெளிப்படையான பாவங்களைத் தவிர்ந்து கொள்ளல்.
ஸுன்னத்தான தொழுகையின் சிறப்பை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் ஹதீஸை மாணவர்களுக்கு முன்வைப்பதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்க வேண்டும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் “மறுமை நாளில் மக்களின் செயல்களில் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையாகும். எங்கள் இரட்சகன் தம்முடைய வானவர்களிடம் -அவனுக்கு நன்றாகத் தெரிந்த நிலையில்- : என் அடியானின் தொழுகையைப் பாருங்கள், அவர் அதை பூரணப்படுத்தியுள்ளாரா? அல்லது குறை வைத்துள்ளாரா? என்று கூறுகிறான். அது முழுமையென்றால் அது அவருக்கு முழுமையாக எழுதப்படும். அதில் குறையிருந்தால், "என் அடியான் ஸுன்னத்தாக ஏதாவது செய்கிறானா?" என்று அவன் கூறுவான். அவனுக்கு ஸுன்னத்துத் தொழுகைகள் இருந்தால், "என் அடியானுக்கு அவனுடைய ஸுன்னத்துக்களை வைத்து அவனுடைய கடமைகளை நிவர்த்தி செய்யுங்கள்" என்று அவன் கூறுவான். அதன் படியே ஏனைய செயல்களும் எடுக்கப்படும்." (அபு தாவூத் 864, திர்மிதி 413) .
ஹதீஸில் இருந்து ஸுன்னத் தொழுகையின் முக்கியத்துவத்தை சிந்தித்து எடுக்கச்சொல்லி, அவர்களின் பதில்களைப் பற்றி விவாதிக்கவும், பின்னர் பாடத்தின் உள்ளடக்கத்திற்கு அவர்களைக் கொண்டு சென்று, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, ஸுன்னத் தொழுகை மற்றும் அதன் வகைகளை வரையறுக்க ஆசிரியர் மாணவர்களை வழிநடத்த வேண்டும், அவர்களின் பதில்களைப் பெற்று, பின்னர் இந்த வகைகளை உள்ளடக்கிய ஒரு மன வரைபடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் அதனைக் கூர்ந்து கவனித்து, அதிலுள்ள கூறுகளுடன் தமது பதில்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
இரண்டாம் கட்டம்:
பாடத்தை வாசித்து, அதன் உறுப்புக்களை அறிய ஆசிரியர் மாணவர்களை வழிநடத்த வேண்டும்.
இரு மாணவர்களை நியமித்து, பாடத்தின் கூறுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பான தெளிவின்மைக்குத் தெளிவு கிடைக்கும் விதத்தில், கேள்விகளைக் கேட்பதில் தமக்கிடையில் ஒத்துழைக்கக் கோர வேண்டும். ஒவ்வொரு குழுவின் கேள்விகளையும் கண்டறிந்து, அவற்றைக் கரும்பலகையில் எழுதுங்கள்.
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் மாணவர்களின் கேள்விகளின் வாசகங்களை சரிசெய்து, பாடத்தின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதற்காக, தன்னிடமிருந்தும் சில கேள்விகளை இணைத்துக்கொள்ளவேண்டும்.
அவற்றைக் குறிக்கும் மார்க்க ஆதாரங்களையும் கூறி, மாணவர்களுடன் அவற்றைப் பற்றி விவாதித்து, விளக்கவேண்டும். பின்வரும் கேள்விகளும் அவற்றில் இருக்கலாம்:
கே: வித்ர் தொழுகை என்றால் என்ன?
கே: ராதிபான ஸுன்னத் தொழுகை என்றால் என்ன?
கே: ராதிபான ஸுன்னத் தொழுகைகளைக் கூறவும்.
கே: அஸருக்கு முன் 4 ரக்அத்கள், மஃரிபுக்கு முன் 2 ரக்அத்கள், இஷாவுக்கு முன் 2 ரக்அத்கள், இந்த தொழுகைகள் எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன?
கே: தராவீஹ் தொழுகை எப்போது தொழப்படுகின்றது? அதன் சட்டம் என்ன? அதன் முறை என்ன?
கே: பொதுவான ஸுன்னத் தொழுகை என்றால் என்ன?
நான்காம் கட்டம்:
ஆசிரியர் பின்வரும் இரு சொற்றொடர்களை கரும்பலகையில் எழுத வேண்டும்:
(இது சூரியன் சற்று உயர்ந்த பிறகு - சூரிய உதயத்திலிருந்து சில நிமிடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு ஸுன்னத் தொழுகை).
(இது நன்மையா, தீமையா என அறியப்படாத ஒரு விஷயத்தில், நல்லதை ஏற்படுத்தித் தருமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு முஸ்லிம் கேட்கும் ஒரு பிரார்த்தனைத் தொழுகை.)
ஒவ்வொரு சொற்றொடருக்கும் என்ன அர்த்தம் என்பதை விளக்குமாறு மாணவர்களிடம் கேட்கவேண்டும். அவர்கள் முன்வைப்பதை அவர்களுடன் விவாதித்து, சரியான பதிலை, அது தொடர்பான மார்க்க ஆதாரங்களுடன் விளக்கவேண்டும்.
இறுதிச்சுருக்கம் :
பாடத்தில் தாம் கற்றவற்றிலிருந்து முக்கிய படிப்பினைகளை ஒரு பந்தியில் எழுதுமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும்.
அவர்களில் சிலரைத் தேர்வு செய்து, தமது சக நண்பர்களுக்கு தாம் எழுதியதை வாசிக்கச் செய்து, அவர்களுக்குப் பொருத்தமான ஆதரவை வழங்கவும் வேண்டும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஸுன்னத்தான தொழுகைகள் வைக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 5
முதல் செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸை செவிதாழ்த்திக் கேட்கும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, அதைத் தங்கள் சக நண்பர்களுக்கு வாசிக்கவைத்து, அவர்களுடன் அதன் பொருள் மற்றும் விளக்கம் தொடர்பாக விவாதியுங்கள். பின்னர் ஒவ்வொரு மாணவரும் செயற்பாட்டின் இரு கேள்விகளுக்கும் பதிலளிக்கச் சொல்லுங்கள். புத்தாக்கத் திறமையுடன் பதிலளித்தவர்களைப் பாராட்டவும்.
கடமையான தொழுகைகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்தல்.
கடமையான தொழுகைகளில் மனிதன் குறைபாடுகளுக்கு ஆளாகிறான். இறைவன் தன் கருணையினால், இந்தக் குறையை நிறைவு செய்யக்கூடிய ஒன்றாக அடியார்களுக்கு ஸுன்னத் தொழுகையை விதித்துள்ளான்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் தனிநபர் முறை, ஸுன்னத் தொழுகைகளை விடுவதன் பாதகங்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 6
செயல்பாட்டில் உள்ள சொற்றொடரை மாணவர்களுக்கு வாசிக்கவும். திறமையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அதை வாசிக்க வைக்கவும். பின்பு, அதன் பயன்களைக் கண்டறிவதற்காக, அதன் கலைச் சொற்களை விளக்கித் தெளிவுபடுத்தவும்.
செயல்பாட்டுக் கேள்விக்கான பதிலை மாணவர்களுடன் விவாதித்து, சரியான பதிலை அவர்களுக்கு வழங்கி, அதைத் தமது கொப்பிகளில் எழுதுமாறு கூறவேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:
பாடத்தில் வந்துள்ள கேள்விகளை மாணவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக முன்வைக்கவும்.
முதலிரு கேள்விகளுக்கும் பதிலளிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களது பதில்களைப் பெற்று, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்ப்பதோடு, அவர்களின் பதில்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை சக நண்பர்களுக்கும் வழங்கவும்.
கே 1: (✖) - (√) - (X) - (√)
கே 2: வலியுறுத்தப்பட்ட ஸுன்னா - எட்டு ரக்அத்கள் - பதினொரு ரக்அத்கள்
பதிலை முடித்த பிறகு, அவற்றைப் புத்தகங்களில் எழுதிவைக்குமாறு அறிவுறுத்தவும். மேலும் அவர்களுக்கு ஏதேனும் கேள்வியில் தடுமாற்றம் ஏற்பட்டால் உங்களை அனுகும்படி கூறவும்.
ஒவ்வொரு குழுவும் ஒத்துழைப்புடன், மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கு பதிலளிக்க பணிக்கவும். குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்யவும். துல்லியமாக பதிலளித்த குழுவை அடையாளப்படுத்தவும். பின்பு, அதன் உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து, தவறிழைத்தவர்கள் திருத்திக்கொள்வதற்காக, சரியான பதிலை சக நண்பர்களுக்குப் படிக்க வைக்கவும்.
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஸுன்னத்தான தொழுகைகளைத் தொழ மாணவர்களை ஊக்கப்படுத்துதல். ஸுன்னத் தொழுகை மற்றும் அதன் வகைகள் தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை, தம்மைச் சுற்றியுள்ள நபர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
பாடம் எட்டு : ஸகாத்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(ஸகாத் - ஆண்டு - நிர்ணய அளவு - கால்நடைகள் - வஸக் - ஸாவு - இஸ்லாத்தின் பால் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் - அடிமைகள் - கடனாளிகள் - வழிப்போக்கர் - ஸுன்னத்தான தர்மம்.
கற்பித்தல் சாதனங்கள்:
(பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில அல்குர்ஆனிய வசனங்களைக் கொண்ட ஆடியோ பதிவு - கற்பித்தல் பலகை - கரும்பலகை - கோதுமை, பார்லி, அரிசி, பேரீச்சம் பழங்கள் மற்றும் திராட்சைகள் போன்ற சில பயிர்கள் மற்றும் பழங்கள் - கற்பித்தல்படங்கள்).
கற்பித்தல் உத்திகள் :
(கண்டுபிடிப்பு மூலம் கற்றல் - கதை அணுகுமுறை - முன்கணிப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
ஸகாத் பெறத் தகுதியானவர்களை இஸ்லாம் கவனத்திற் கொண்டிருப்பதை வைத்து பெருமைப்படல்
ஸுன்னத்தான தர்மத்தின் சிறப்பை மெச்சி, அதனை வழங்க அக்கறை கொள்ளுதல்.
ஸகாதை உரிய நேரத்தில் நிறைவேற்ற அக்கறை கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
கரும்பலகையில் பின்வரும் சொற்றொடரை எழுதுங்கள்:
(இது இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகும். மேலும் ஷரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அளவு சொத்து உள்ள எவருக்கும் இது கடமையாகும்.)
இதனை அவர்கள் புரிந்துள்ள அடிப்படையில், பாடத்தின் தலைப்பு மற்றும் அதில் உள்ளடங்கும் கூறுகளைக் கணிக்குமாறு கூறுங்கள். அவர்களின் பதில்களைப் பெற்று, தகுந்த பின்னூட்டல்களை அவர்களுக்கு வழங்கவும். பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
குழு விவாதத்தைப் பயன்படுத்தி, ஸகாதின் சட்டம், மற்றும் இஸ்லாத்தில் அதன் இடம் பற்றி மாணவர்களுடன் விவாதித்து, அவர்களுக்கும் வாய்ப்பளித்து, ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்கவும்.
இரண்டாம் கட்டம்:
ஸகாத் மார்க்கமாக்கப்பட்டுள்ளதன் நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு படத்தை மாணவர்களுக்குக் காட்டவும். கண்டறியும் முறையைப் பயன்படுத்தி, ஸகாத்தை நடைமுறைப்படுத்துவதன் பலன்கள் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம் பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும்.
பின்னர் புத்தகத்தில் உள்ள பந்தியை அவர்களுக்குக் காட்டி, அதில் உள்ள முக்கியமானவற்றைப் பிரித்தெடுக்கச் செய்யுங்கள்.
மூன்றாம் கட்டம்:
பின்வரும் வசனத்தை ஒலி ஊடகம் மூலம் கேட்க மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். அதன் சொற்களின் அர்த்தங்களை அவர்களுடன் கலந்துரையாடவும். பின்னர் அல்லாஹ்வின் கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஸகாத் பெறத் தகுதியுள்ள நபர்களின் வகைகளை அவர்களுக்கு விளக்கவும்: (‘ஸகாத்' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தின் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கட்டாய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான். (தவ்பா : 60).
இறுதிச் சுருக்கம் :
இரண்டு இரண்டு மாணவர்களைக் கொண்ட பல குழுக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு மாணவரும் பாடத்தின் உள்ளடக்கம் தொடர்பான கேள்விகளில் ஒன்றை மற்றவரிடம் கேட்க, அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் பதிலைப் பெற்று அதை மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் வழிகாட்டுதல் மற்றும் கவனிப்புடன் சக நண்பர்களும் அவர்களின் பதில்களைக் கவனித்து மதிப்பீடு செய்ய வேண்டும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும்: கூட்டு முறை, மார்க்க சட்ட மூலாதார வசனங்கள் குறிக்கும் ஸகாதின் சட்டங்களைக் கண்டறிதல்
நோக்க இலக்கம்: 1, 3
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பலன்களையும் இரண்டு அட்டைகளில் எழுதி, மாணவர்களுக்கு எழுமாறாக அட்டைகளை விநியோகிக்கவும். பின்னர் ஒவ்வொரு பலனுக்கும் தொடர்புடைய அட்டையை வைத்திருக்கும் இரண்டு மாணவர்களின் பதிலையும் நீங்கள் பார்த்து, மதிப்பீடு செய்யவும். சக நண்பர்களுக்கும் அவற்றை மதிப்பீடு செய்து, சரியான பதிலைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதை அவர்களின் புத்தகங்களில் உள்ள அட்டவணையில் எழுத வைக்கவும்.
பயன்கள் இறைவசனங்களில் அவற்றை சுட்டிக்காட்டும் இடங்கள்
செலவு செய்ததற்காக இரட்டிப்பு வெகுமதி: "ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது".
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோரின் பண்புகள் : "அவர்கள் செலவழித்த பின் அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருப்பார்கள்".
மறுமையில் செலவு செய்வோருக்குரிய அந்தஸ்து : "அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்".
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும்: தனிநபர் முறை, பிக்ஹ் தொடர்பான சட்டப் பிரச்சனைகளுக்குரிய காரணிகளை விவரிக்கப் பயிற்றுவித்தல்
நோக்க இலக்கம் 5
தனது நண்பர்களிடம் செயல்பாட்டை வாசிக்க ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்களுடன் அது பற்றி கலந்துரையாடவும். பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதன் படி, இஸ்லாம் பணக்காரர்களுக்கு ஸகாத் கொடுக்க கட்டளையிடவில்லை என்றால், இஸ்லாமிய சமுதாயத்தின் நிலை எவ்வாறு இருக்குமென கணிக்குமாறு ஒவ்வொரு மாணவரையும் பணிக்கவும்.
மூன்றாவது செயல்பாட்டில் உள்ள சட்டப் பிரச்சனைகள் பற்றிய விவாதத்தில் ஒவ்வொரு மாணவரும் தனது குடும்பத்தினரையும் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, மாணவர்களை எதிர்வு கூறப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 2
அடுத்த சந்திப்பில் செயல்பாட்டுக்கு பதிலளிப்பது தொடர்பாக மாணவர்கள் என்ன செய்தார்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் என்ன கலந்துரையாடினார்கள் என்பதைக் கண்டறியவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் தங்கள் புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க தமக்கிடையில் ஒத்துழைக்கச் சொல்லவும். குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க, அவரது இரண்டு சக நண்பர்களும் அவரைக் கவனித்து வழிநடத்தவும்.
இரு மாணவக் குழுக்களைத் தெரிவுசெய்து, தமது பதில்களை முன்வைக்கச் செய்யவும். மற்ற குழுக்கள் அவ்விரு குழுக்களின் பதில்களையும் மதிப்பீடு செய்து, எந்தளவு அவற்றுடன் உடன்படவோ, முரண்படவோ முடியும் என்பதை விளக்கவேண்டும்.
ஒவ்வொரு பதிலுக்கும் தகுந்த மதிப்பெண்ணைத் தீர்மானிக்கவும். ஒவ்வொரு குழுவும் தனக்குத்தானே தகுந்த மதிப்பெண்ணைக் கொடுக்கவேண்டும். இறுதியாக, அதிக மதிப்பெண் பெற்ற குழுவைத் தேர்ந்தெடுத்து, அதன் உறுப்பினர்களுக்கு தகுந்த பாராட்டை வழங்கவும்.
கே 1 : (√) - (√) - (×) - (×)
கே 2 : ஸகாத்தின் நுட்பம் - ஒவ்வொரு தனிநபர் மீதுமான கடமை - கடனை செலுத்த முடியாத ஒருவர்.
உள்ளார்ந்த பண்படுத்தல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வரும் விதத்தில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்:
ஸகாத்தைச் செலுத்துவதில் தகுதியானவர்களைக் கவனிப்பது முக்கியம் என்பதால், அதில் மிக அக்கறையாக இருக்குமாறு மாணவர்களை வலியுறுத்துதல். அத்துடன் நன்மைகளைப் பெறுவதற்காக ஸுன்னத்தான தர்மம் வழங்குவதற்கான வழிகளைப் பற்றி மேலும் அறிய முயற்சித்தல்
ஸகாத் எந்த பிழையும் குறைபாடுகளும் இல்லாமல் சரியான வடிவத்தில் செய்யப்பட, பாடத்தில் உள்ள தகவல்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரிவிக்க முயற்சி செய்தல்.
பாடம் ஒன்பது: நோன்பு
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (நன்மையை நாடி - விந்து - வாந்தி - கப்பிங்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - பதிவு சாதனம்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டு கற்கை முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
நோன்பின் மகத்துவம் மற்றும் அதன் சிறப்பை மெச்சுதல்.
ரமழான் மாதம் மற்றும் அதில் நற்செயல் புரிவதன் மகத்துவத்தை உணர்தல்.
ரமழான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற அக்கறை கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் இறைவாசகம் பதிவுசெய்யப்பட்ட ஓடியோப் பதிவைக் கேட்கும்படி மாணவர்களைக் கேட்டு உங்கள் பாடத்தை ஆரம்பிப்பது விரும்பத்தக்கது: ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான்ன தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! (பகரா : 185).
பிறகு, அதை ஓத அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அதன் அர்த்தத்தை அவர்களுடன் விவாதித்து, பாடத்தின் தலைப்புக்குக் கொண்டு வாருங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
உங்கள் மாணவர்களிடம் பாடப்புத்தகத்தைத் திறக்கச் சொல்லி, பின்னர் பாடத்தை உரக்கப் படிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்யுங்கள். பின்பு, பாடத்தின் கூறுகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கம் தேவைப்படும் அம்சங்களை எழுதச் சொல்லுங்கள்.
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, மேலும் ஒவ்வொரு குழுவிற்கும் நோன்பின் சிறப்பு மற்றும் நிபந்தனைகளை வரையறுக்கக் கோரவும்.
ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, ஒவ்வொரு குழுவும் தாம் கண்டறிந்ததை கரும்பலகையில் எழுத வேண்டும், பின்னர் நீங்கள் சரியான பதில்களை முன்வைத்து, அவற்றுடன் தொடர்புடைய ஆதாரங்களையும் விளக்குங்கள்.
மூன்றாம் கட்டம் :
நீங்கள் உங்கள் மாணவர்களுடன் ஒரு கூட்டுகற்கை உத்தியைப் பயன்படுத்தி, அவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் நோன்பின் ஸுன்னாக்கள் மற்றும் அதனை முறிப்பவை பற்றி ஆராயவைக்கவும்.
ஒவ்வொரு குழுவும் தாம் கண்டறிந்தவற்றை முன்வைக்கவும், மதிப்பீடு செய்யவும் தம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இறுதிச் சருக்கம் :
பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய கருத்துக்கள் மற்றும் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவை உட்பட, பாடத்தைப் பற்றிய அவர்களின் அவதானிப்புகளை எழுதுமாறு ஒவ்வொரு மாணவரிடமும் கேளுங்கள்.
தாம் எழுதியவற்றை முன்வைக்க சில மாணவர்களைத் தேர்வு செய்து, அவற்றைத் திருத்தவும்.
பின்னர் வாய்மூலமாக பாடத்தின் சுருக்கத்தை முன்வைக்க ஒரு மாணவரைத் தேர்வு செய்து, அதற்குப் பின்குறிப்பு வழங்கவும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, ரமழான் மாத்தில் செய்ய வேண்டிய நற்செயல்களை ஆராய்தல்.
நோக்க இலக்கம் : 4, 5
அட்டவணையைப் பூர்த்தி செய்வதில் ஒத்துழைக்க ஒவ்வொரு மாணவர் குழுவையும் அறிவுறுத்துங்கள். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு தனிநபரைத் தேர்வுசெய்து, சகநண்பர்களுக்கு முன்னிலையில் நிற்குமாறு கூறுங்கள். ஆசிரியர் அட்டவணையில் உள்ள ஒவ்வொரு ஆதாரத்தையும் முன்வைக்க வேண்டும். அதேநேரம், ஒவ்வொரு குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் அதற்கான தனது குழுவின் பதிலை வழங்க வேண்டும். மேலும் குழுக்களின் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்த்து, யதார்த்தத்தைத் துல்லியமாக விளக்கிப் பகுப்பாய்வு செய்த குழுவை அடையாளப்படுத்தவேண்டும்.
செயல்பாடு 1 :
நற்செயல்
அதிக தர்மம் கொடுத்தல்
அல்குர்ஆன் ஓதுதல்.
இரவுத் தொழுகை
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நோன்பை முறிப்பவற்றுக்கும் முறிக்காதவற்றுக்கும் இடையில் வேறுபிரித்தல்.
நோக்க இலக்கம் : 3, 4
ஆசிரியர் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் செயல்பாட்டிற்கு விடையளிக்க தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு வழிநடத்த வேண்டும். குழுக்களின் பதில்களைக் கண்டறிந்து, மிகவும் துல்லியமான பதிலை வழங்கிய குழுவுக்குப் பொருத்தமான வலுவூட்டலை வழங்க வேண்டும்.
நற்செயல் அவர் நோன்பு நோற்பதன் சட்டம் அவர் செய்ய வேண்டியது
ரமழான் பகல்வேளையில் மறதியாக பழரசம் பருகி விட்டார்.
ஒரு நரம்புக்குள் ஊட்டச்சத்து ஊசியை எடுத்துக் கொண்டார்
பரிசோதனைக்காக சிறிதளவு இரத்தம் குத்தி எடுத்தார்.
செயல்பாட்டு இலக்கம் 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ரமழானில் காணப்படும் மோசமான வழமைகளைப் பட்டியலிடுதல் நோக்க இலக்கம் : 5
மின்னணு ஆதாரங்களை அணுகுவதன் மூலம், நண்பர்கள் தங்கள் நடத்தைகளில் செய்யும் தவறுகளைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற்று, செயல்பாட்டைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்தவும். இது சம்பந்தமாக மாணவர்களின் செயல்திறன் மற்றும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளை அடுத்த சந்திப்பில் நீங்கள் பார்க்கவேண்டும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
ஒன்றன் பின் ஒன்றாக வினாக்களை கரும்பலகையில் எழுத வேண்டும்.
அருகருகில் இருக்கும் இவ்விரு மாணவர்களாக இணைந்து அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பங்கெடுக்குமாறு கோரவும்.
தமது பதில்களை சக நண்பர்களுக்கு முன்வைப்பதற்காக எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
தவறு செய்பவர்கள் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டவும்.
கே 1 : நிய்யத் - கப்பிங் - கனிந்த பேரீத்தம் பழத்தால் நோன்பு துறத்தல்.
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
- ரமழான் மாதத்தில், குறிப்பாக கடைசிப் பத்து நாட்களிலும், லைலத்துல் கத்ர் இரவிலும் வணக்க வழிபாடுகளில் விடாமுயற்சியுடன் இருக்க ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் அதில் வணங்குவது, ஆயிரம் மாதங்கள் வணங்குவதை விட சிறந்தது.
பாடம் பத்து: ஹஜ்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (பாவம் - தடைசெய்யப்பட்டது - சக்தி).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டுகற்கை முறை - "எனக்குத் தெரியும் - நான் அறிய விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன்" - கருத்துதிர்ப்பு).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
ஹஜ், உம்ராவின் மகத்துவத்தை மெச்சுதல்
இஸ்லாத்தின் தாராளத்தன்மை மற்றும் அல்லாஹ் தன் அடியார் மீது கொண்டுள்ள அருளை உணர்தல்.
சக்தியுள்ளவர்களை ஹஜ் செய்ய விரையத் தூண்டுதல்.
பாடத்தின் அறிமுகம்:
புனித கஃபாவின் படத்தை மாணவர்களுக்குக் காட்டுங்கள். அதைப் பற்றிய அவர்களது உணர்வுகள் எவ்வாறுள்ளன? என்று அவர்களிடம் கேட்கவும். அவர்களின் பதில்களைப் பெற்று, பின்னர் பாடத்தின் உள்ளடக்கத்துக்கு அவர்களைக் கொண்டு வாருங்கள். பின்னர் பாடத்தின் தலைப்பை எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
பாடத்தில் உள்ள அடிப்படைக் கருத்துக்களை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன், மாணவர்களை பாடத்தை அமைதியாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளவும்.
ஒவ்வொரு பந்தியையும் வாசித்து முடித்த பிறகு, கடினமான கலைச் சொற்களின் அர்த்தங்களின் விளக்கத்துடன் அது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
(எனக்குத் தெரியும் - நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன்) என்ற முறையைப் பயன்படுத்தவும்.
ஒவ்வொரு மாணவரும் தனது கொப்பியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கச் சொல்லவும்:
முதல் பகுதியில் இஸ்லாத்தில் ஹஜ் செய்வதன் சட்டம் மற்றும் அதன் சிறப்பை எழுத வேண்டும்.
இரண்டாவது பகுதியில் ஹஜ்ஜின் நிபந்தனைகளில் தான் கற்க விரும்புவதை எழுத வேண்டும்.
தான் கற்றுக்கொண்ட ஹஜ்ஜின் நிபந்தனைகள் எனத் தலைப்பிட்டு மூன்றாவது பகுதியை வைக்கவும்.
தாங்கள் எழுதியதை வாசிக்க சில மாணவர்களைத் தேர்வு செய்யவும். மேலும் அவர்கள் சொல்வதில் சிலவற்றை கரும்பலகையில் எழுதவும்.
மூன்றாம் கட்டம் :
கூட்டுகற்றல் உத்தியைப் பயன்படுத்தி, மாணவர்களை குழுக்களாக பிரிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் ஹஜ்ஜின் ருகூன்களை விளக்குமாறு பணிக்கவும்.
தாம் அடைந்துகொண்டவற்றை முன்வைக்க ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பொருத்தமான பின்னூட்டல்களை வழங்கவும்.
இறுதிச் சுருக்கம் :
கருத்துதிர்ப்பு உத்தியைப் பயன்படுத்தவும். மிக முக்கியமான முடிவுகளை கண்டெடுப்பதில் மாணவர்களை பங்கேற்கச் சொல்வதுடன், பின்னர் அவற்றை கரும்பலகையில் எழுதவும். அவற்றில் மிக முக்கியமானவை:
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது தூணாகும். மேலும் இது மார்க்க சட்டங்கள் கடமையாக்கப்பட்டுள்ள, சக்தியுள்ள ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவையாவது செய்யவேண்டிய கடமையாகும்.
ஹஜ்ஜுக்கான வெகுமதி மிகப்பெரியது. அல்லாஹ்விடம் அதன் வெகுமதி நிரப்பமாக உள்ளது. அதன் சிறப்புக்களில் வறுமை ஒழிப்பு, பாவ மன்னிப்பு மற்றும் சுவர்க்கத்தில் நுழைதல் ஆகியவை அடங்கும்.
அல்லாஹ்வுக்கு அடிபணிவதைக் காட்டுவது, உலக மோகத்திலிருந்து விலகி இருப்பது என்பவை ஹஜ் மார்க்கமாக்கப்பட்ட நுட்பங்களில் சிலவாகும்.
மக்கா வெற்றிக்கு ஓர் ஆண்டிற்குப் பின் ஹிஜ்ரி 9ம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப்பட்டது.
பருவமடைதல், சுய புத்தி, (உடல், பொருளாதார) சக்தி மற்றும் பெண்ணுக்கு ஒரு மஹ்ரம் இருப்பது ஆகியவை ஹஜ் கடமையாவதற்கான சில நிபந்தனைகளாகும்.
ஹஜ் என்பது இஹ்ராம் நிய்யத்துடன், குறித்த முறையில் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரபாவில் தரித்தல், ஏழு தடவை கஃபாவைத் தவாப் செய்தல், ஸபா மர்வாக்கிடையில் ஏழு தடவை நடத்தல் ஆகியனவாகும்.
செயற்பாடுகள் :
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, ஹஜ்ஜின் நிபந்தனைகளை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 3
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, அவர்களை வட்டங்களாக உட்கார வைக்கவும். ஒவ்வொரு குழுவும் முதல் செயல்பாட்டிற்கு பதிலளிப்பதில் தமக்கிடையில் ஒத்துழைத்து, அதன் உறுப்பினர்களில் ஒருவரை தனது குழுவின் முடிவுகளை அறிவிக்க நியமிக்க வேண்டும். அனைவராலும் ஏகோபித்துக் கூறப்பட்டவற்றை ஒரு மாணவர் மூலம் கரும்பலகையில் எழுதவும். கருத்து வேறுபாடானவற்றை உங்கள் முன்னிலையில், உங்கள் மேற்பார்வையின் கீழ் சரியான தீர்வு எட்டப்படும் வரை விவாதிக்கப்பட்டு, கரும்பலகையில் எழுதப்பட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, சக்தியுள்ளவரை ஹஜ் நிறைவேற்ற ஊக்கப்படுத்துதல்.
நோக்க இலக்கம் : 5
ஆசிரியர் இரண்டாவது செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஹதீஸ்களையும் திரையில் காட்டி, அவற்றை வாசிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அவற்றின் பொருள் மற்றும் நோக்கங்களை அவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
பின்பு, செயல்பாட்டில் கேட்கப்பட்டுள்ள ஆக்கத்தை எழுதுமாறு ஒவ்வொரு மாணவரையும் அறிவுறுத்தவும். தமது பதில்களை தனியான ஓர் அட்டையில் எழுதுமாறு கூறுங்கள். பின்னர் அட்டைகளை சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்யவதோடு, மிகத் துல்லியமான பதில்களை அடையாளப்படுத்தி, அதற்குரியவர்களைப் பாராட்டவும் வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஹஜ், உம்ராவுடைய நன்மைகளைப் பெற்றுத் தரும் வேறு நற்செயல்களை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 4
செயல்பாட்டை உள்ளடக்கிய கற்பித்தல் அட்டையை ஒவ்வொரு மாணவருக்கும் விநியோகித்து, அவர்கள் விடையளித்து முடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்யவும். பின்னர், சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களிடம் அவற்றை முன்வைத்து விளக்கவும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் கேள்விகளுக்கு விடையளிப்பதில் பங்கேற்கச் சொல்லுங்கள்.
உங்கள் மாணவர்கள் பதிலளிப்பதில் ஒத்துழைக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு அருகாமையில் சென்று பார்க்கவும்.
ஒவ்வொரு குழுவும் தங்கள் பதிலை முன்வைப்பதற்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்து, அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கே 1 : (√) - (×) - (×)
கே 2: (அவரது பாவங்களை மன்னித்தல்) - (அது சரியானது, ஆனால் நிறைவேறமாட்டாது) - (மஹ்ரம் (நெருங்கிய) உறவுகள் ) - (அவரது தாய்நாட்டிற்கு திரும்புதல்).
உணர்வு மற்றும் பண்பியல் வழிகாட்டல்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வருவற்றினூடாக வழி காட்டலாம் :
ஹஜ் செய்ய மக்களை ஊக்குவிப்பதற்கான பாடத்தில் கற்றுக்கொண்ட வழிமுறைகளை செயல்படுத்துதல். இதில் பள்ளிவாசல்கள் மற்றும் அழைப்பாளர்களின் பங்கு முக்கியமானது. இக்கடமையின் சிறப்பை மக்களுக்கு உணர்த்த, மாணவர்கள் தமக்கிடையில் ஒத்துழைப்புடன், கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை முன்வைக்கவும், மற்றும் சமூக தளங்களிலும் இணையத்திலும் வழிகாட்டல்களை எழுதவும் வேண்டும்.
பண்பாட்டு ஒழுக்கவியல் பகுதி
பாடம் ஒன்று : நற்பண்புகள்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நற்குணங்கள் - நல்ல ஒழுக்கம் - ஆபாசமான மற்றும் அநாகரீகமானவன் - புறமுதுகு காட்ட வேண்டாம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(சொற்பொருள் வரைபடங்கள் - சுயகேள்வி முறை - ஒப்புமை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
நற்குணங்களின் மகத்துவத்தை மெச்சுதல்.
•இறைநம்பிக்கை என்பது மக்களுடன் நற்பண்புகளோடு நடப்பதால் மட்டுமே அடையப்படும் என்ற உறுதி.
நற்பண்புகள் தனிநபர் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை மெச்சுதல்.
நற்பண்புகளின் வெளிப்பாடுகளை அமுல்படுத்த அக்கறை கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
எமது நபி (ஸல்) அவர்கள்தான் நற்பண்புகளில் சிறந்த முன்னுதாரணம் என்பதை மாணவர்களுக்கு அறிவிக்கவும். மக்களுடன் பண்பாக நடக்குமாறு நபி (ஸல்) அவர்கள் பின்வரும் தமது வார்த்தை மூலம் தூண்டியுள்ளார்கள்: "மக்களுடன் பண்பாகப் பழகுங்கள்". ஆதாரம் : திர்மிதீ (1987). அவர்களுடன் இதையெல்லாம் விவாதித்து, பாடத்தின் உள்ளடக்கத்துக்கு வந்து அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம் :
சொற்பொருள் வரைபட நுட்பத்தைப் பயன்படுத்தி, பாடத்தில் கற்பிக்கப்படும் அமசங்கள் பற்றிய மனப் படத்தை மாணவர்களுக்கு வழங்கவும்.
இந்த வரைபடத்தில் பாடத்தின் கூறுகளை எழுதவும், அதன் பிரதான தலைப்பு : (நற்பண்புகள்). அதில் (நற்குணத்தின் பொருள் - நற்குணத்தின் சிறப்புகள் - நம்பிக்கை மற்றும் நற்குணம் - நற்குணத்தின் சில வெளிப்பாடுகள் - நற்குணம் மற்றும் சுவர்க்கத்தில் நுழைதல்) ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இரண்டாம் கட்டம் :
சுய கேள்வி முறை மூலம்; மாணவர்களை இருவர் கொண்ட குழுக்களாக பிரித்து, பாடத்தின் உள்ளடக்கத்தினூடாக தாம் பதிலை எதிர்பார்க்கும் கேள்விகளை முன்வைப்பதில் ஒத்துழைக்குமாறு ஆசிரியர் கூறவேண்டும்.
கேள்விகளை சேகரித்து, மாணவர்கள் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் எழுதவும்.
இந்தக் கேள்விகளுடன், இதே கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மேலதிக சில கேள்விகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும்.
நற்குணம் என்றால் என்ன?
இஸ்லாத்தில் நற்குணத்தின் மகத்துவத்தைக் கூறவும்.
ஈமானுக்கும் நற்குணத்திற்கும் இடையிலுள்ள தொடர்பை விளக்கவும்.
நற்குணத்தின் சில வெளிப்பாடுகளைக் கூறவும்.
மூன்றாம் கட்டம் :
சமச்சீர் முறை மூலம்; ஆசிரியர் நற்குணத்தின் பின்வரும் வெளிப்பாடுகளை மாணவர்களுக்குக் காட்டி, தோற்றத்தையும் அதன் உருவத்தையும் அடையாளம் காணும்படி அவர்களிடம் கோர வேண்டும்.
சரியான விடையளித்தவர், அந்த வகையைப் பற்றி தான் அறிந்ததை சுருக்கமான ஒரு வசனத்தில் கூற வேண்டும்.
ஒருவர் தனது நண்பர்களைப் பற்றி நல்லதையே கூறுகின்றார், யாரையும் பற்றித் தவறாகப் பேசுவதில்லை.
அஹ்மத் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தனது நண்பருக்குப் பதவியுயர்வு கிடைத்த போது அவரை வாழ்த்தி, அவருக்காகப் பிரார்த்தித்தார்.
பாடசாலையில் இரு நண்பர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டது. உம்மிடம் சாட்சியம் கூறுமாறு கோரப்பட்ட போது, நயவஞ்சகத்தனமின்றி உண்மையை உரைத்தீர்.
முஹம்மத் எப்போதும் தனது நண்பர்களை புன்முறவலுடனேயே எதிர்நோக்குவார்.
ஒருவர் தனது வகுப்பு நண்பரின் விடயத்தில் ஒரு நல்ல வார்த்தையைக் கூறினார்.
காலித் வறியவர், தேவையுடையோருக்கு உணவு வழங்குவதில் அக்கறை கொள்கின்றார்.
இறுதிச் சுருக்கம்:
ஆசிரியர் மாணவர்களுக்கு மீண்டும் பாடத்தின் கூறுகளுக்கான வெற்று சொற்பொருள் வரைபடத்தை வழங்கி, பின்னர் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, உறுப்புகளில் ஒன்றை எழுதி அதனை விளக்குமாறு கூறவும். அவரால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மற்றொரு சக நண்பர் அவ்வாறு செய்வார். பாடத்தின் கூறுகள் முடியும் வரை இதே நிலை தொடர வேண்டும். அதேநேரம், ஆசிரியர் மாணவர்களுக்கு ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஆதாரங்களில் இருந்து நற்குணங்களின் வெளிப்பாடுகளை கண்டெடுத்தல்.
நோக்க இலக்கம் : 2
முதல் செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் படிக்கவும், சிந்திக்கவும், அதன் பொருளைக் கண்டறியவும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர் அறிவுறுத்த வேண்டும். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாதரங்களில் இருந்து நன்நடத்தைகளைக் கண்டறிய தங்கள் சிந்தனைத் திறன்களைப் பயன்படுத்துமாறு கேட்க வேண்டும். சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தாங்கள் எழுதியதை முன்வைக்கச் செய்து, அவற்றுக்கிடையில் ஒப்பிட்டு மிகவும் துல்லியமான பதில்களை அடையாளப்படுத்தவும்.
நற்குணங்கள்
மென்மை
இரக்கம்
வீரம், கொடை வழங்கல்
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, சிறந்த வார்த்தைகளை எழுத மாணவர்களைப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 3, 4
ஆசிரியர் மாணவர்களை ஒருவரையொருவர் முன்னோக்கும் விதத்தில், வட்டமாக உட்காரச் சொல்லி குழு விவாத அமர்வை நடத்த வேண்டும். இது, செயல்பாட்டில் உள்ள கூற்றுகளுக்குப் பொருத்தமான சிறந்த வார்த்தைகளை எழுதுவது தொடர்பான அமர்வென, அமர்வின் நோக்கத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க அவர்களிடம் கோரி, அத்துடன் ஒவ்வொரு சூழ்நிலையும் விளக்கி, தெளிவுபடுத்தி, தீர்வுகளையும் வழங்கவேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
முதல் கேள்விக்கான பதிலைப்பெறும் நோக்கில், ஆசிரியர் மாணவர்களிடம் அதன் வாசகங்களை ஒவ்வொன்றாகக் முன்வைத்து, வாசகம் சரியாக இருந்தால் கைகளை உயர்த்தச் சொல்லவேண்டும். அவர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களின் தவறுகளைத் திருத்த வேண்டும்.
கே 1 : (√) - (×) - (√)
இரண்டாவது கேள்விக்கான பதிலைப்பெறும் நோக்கில், ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்கள் அருகாமையில் செல்வதுடன், அவர்களில் தவறுவிட்டவர்களுக்கு சரியான பதிலுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களிடம் மூன்றாவது கேள்வியை முன்வைத்து, அவர்களில் மூன்று பேரை பதிலளிக்கவும், வேறு மூவரை மேற்கண்ட பதில்களை மதிப்பீடு செய்யவும் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக அவர்களின் புத்தகங்களில் எழுதுவதற்கான சரியான பதிலை அவர்களுடன் இனங்காண வேண்டும்.
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் நல்ல குணாதிசய வெளிப்பாடுகளைக் குறிக்கும் ஹதீஸ்களை மீண்டும் வாசிக்கவேண்டும். மேலும் அந்த ஹதீஸ்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், தனிநபர் மற்றும் சமூகத்தில் அவை ஏற்படுத்தும் மாற்றங்களை உணரவும் மார்க்கப் புத்தகங்கள், மார்க்க அறிஞர்கள் அல்லது மின்னணு ஆதாரங்கள் போன்ற பல்வேறு மூலங்களை அணுகி, மேலதிகமான நற்குணங்களை அறிந்து கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இவை பற்றிய அறிவுறுத்தல்களையும் அவதானங்களையும் வழங்கி, அவர்கள் வாயிலாக ஏனையோருக்கும் அறிவிப்பதற்காக முயற்சிக்க வேண்டும். இவ்வாறுதான் அறிவுஞானம் பரவலடையும்.
பாடம் இரண்டு : உண்மை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (உண்மை - உயிர்த்தியாகிகள் - நன்மை - அமைதி).
கற்பித்தல் சாதனங்கள்:
(ஓடியோ பதிவு- காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை ).
கற்பித்தல் உத்திகள்:
((K.W.L) முறை - கண்டுபிடிப்பு முறை - சூடான இருக்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
உண்மை என்பது, சுவனத்தில் நுழைவதற்கான ஒரு காரணி என்பதை உறுதி கொள்ளல்.
சொல், செயல்களில் உண்மையைக் கடைபிடித்தல்.
உண்மையையும், உண்மையாளர்களையும் நேசிப்பதில் ஆர்வம் காட்டல்.
சிறார்களை உண்மை பேசுவதன் அடிப்படையில் வளர்ப்பதன் அவசியத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டுள்ள நற்குணங்களில் உண்மையும் ஒன்று என்பதை மாணவர்களுக்குச் சொல்லி பாடத்தை ஆரம்பிக்கவும். பின்னர் உண்மைக்கும் ஈமானுக்கும் இடையிலுள்ள தொடர்பு, முஸ்லிம்களின் வாழ்வில் அது செலுத்தும் தாக்கம் என்பன பற்றி அவர்களிடம் கேட்டு, விடைகளையும் பெற்றுக் கொள்ளவும். பின்பு, இப்பாடத்தினூடாக அக்கேள்விகளுக்கான பதில்களை அறிவோம் எனக் கூறி, தலைப்பைக் கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கல்வி அட்டையை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொடுப்பார்: முதல் பகுதியில் K என்ற எழுத்தும், இரண்டாவது பகுதியில் W எழுத்தும், மூன்றாம் பகுதியில் L என்ற எழுத்தும் அடங்கும்.
அவர் ஒவ்வொரு பகுதியின் இலக்கையும் அவர்களுக்கு விளக்கி, பின்னர் பாடத்தின் குறிக்கோள்களைப் பற்றிய அவர்களின் அவதானிப்பின் அடிப்படையில், உண்மையைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்த முன்னைய தகவல்களை முன்வைக்குமாறு அவர்களிடம் கேட்க வேண்டும். அவை அனைத்தும் முதல் பகுதியில் எழுதப்படவேண்டும்.
பாடத்தில் இருந்து அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் தகவல் மற்றும் கூறுகளை முன்வைத்து, அதை இரண்டாம் பாகத்தில் சேர்க்குமாறு கூறுங்கள். பாடத்தைப் பற்றிய அவர்களின் கடந்தகால அனுபவத்தைப் பற்றி அறிய, அவர்கள் எழுதியவற்றுக்குக் கருத்துரையும் வழங்குங்கள்.
இரண்டாம் கட்டம் :
கண்டுபிடிப்பு கற்றல் முறையின் மூலம், ஆசிரியர் பின்வரும் வாக்கியத்தை மாணவர்களுக்கு முன்வைத்து, அது எதைக் குறிக்கிறது என்பதை விளக்குமாறு கேட்கவேண்டும். அவர்களின் பதில்கள் மூலம், உண்மை மற்றும் அதற்குரிய இடங்களை விளக்க வேண்டும்.
(சொல் செயலோடும், வெளிரங்கம் உள்ரங்கத்தோடும், பேச்சு யதார்த்தத்தோடும் பொருந்திப் போதல்
மூன்றாம் கட்டம் :
சூடான இருக்கை மூலோபாயத்தைப் பயன்படுத்துதல்; மாணவர்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்திருக்க வேண்டும். வட்டத்தின் மையத்தில் ஒரு நாற்காலி வைக்கப்படும். ஆசிரியர் மாணவர்களில் ஒருவரை சூடான நாற்காலியில் உட்காரச் சொல்ல வேண்டும்.
ஆசிரியர் பின்வரும் சிறப்புகளைத் தனது சக நண்பர்களிடம் வாசிக்குமாறு அறிவுறுத்தவேண்டும். பின்னர் அம்மாணவர் இந்த சிறப்புக்களைத் தெளிவுபடுத்துவது மற்றும் அவற்றை நன்கு புரிந்துகொள்வது குறித்த ஆசிரியர் மற்றும் சக நண்பர்களது கேள்விகளைப் பெற வேண்டும்.
ஆசிரியரும் சகநண்பர்களும் மாணவரின் பதிலை அவதானித்து, அதை மதிப்பீடு செய்வதுடன், சரியான பதிலை அடையாளம் காண, அம்மாணவருடன் தகவல் மற்றும் யோசனைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
1. உண்மை சுவனத்தில் நுழைவதற்கான காரணிகளில் ஒன்று.
2. உண்மை இறைத்தூதர்களின் பண்புகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களைப் பின்பற்றுமாறு எம்மை ஏவியுள்ளான்.
3. உண்மை ஒரு முஸ்லிமுக்கு உள்ளத்தில் அமைதியையும், மன நிம்மதியையும் பெற்றுத் தரும்.
4- உண்மை என்பது ஆளுமைப் பலம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம்.
5. உண்மை ஒரு முஸ்லிமைத் தனது சமூகத்தில் நேசிக்கப்படுபவனாகவும், மக்களிடையே நல்லவராகவும் அறியப்பட வழிவகுக்கும்.
இறுதிச்சுருக்கம் :
ஆசிரியர் மாணவர்களின் கைகளில் உள்ள, (L) எழுத்து உள்ள அட்டையின் மூன்றாவது பகுதியை முடிக்குமாறு அறிவுறுத்துவார. மேலும் இது பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை பொது மற்றும் துணைக் கூறுகள் வடிவில் எழுதுவது தொடர்பானது.
சில அட்டைகளைத் தெரிவு செய்து, கருத்துரை வழங்கி, அவை எந்தளவு துல்லியமாக உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும் :
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, உண்மை பேசுவதைப் பயிற்றுவிப்பதன் அவசியத்தை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 3
முதல் செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை பல அட்டைகளில் எழுதி, மாணவர்களுக்கு எழுமாறாக அவற்றை விநியோகிக்கவும். பின்னர் அதை வாசிக்க அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் அதன் பொருள் மற்றும் அதன் வழிகாட்டல்கள் பற்றி விவாதிக்கவும். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வசனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், நீங்களும் சக மாணவர்களும் மதிப்பீடு செய்யவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, உண்மையின் சிறப்புக்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 2
மாணவர்கள் தத்தம் குழுக்களுக்கிடையில் இரண்டாவது செயல்பாட்டைச் செய்வதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். மேலும் ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்ய, குழுக்களைக் கண்காணிக்கவும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருடைய குழுவின் செயல்பாட்டை முன் வைக்கச் செய்யவேண்டும். அவர்களுக்கு இடையில் ஒப்பிட்டுப் பார்த்து, மிகத் துல்லியமான பதிலை அடையாளப்படுத்தவும்.
உண்மையின் சிறப்பு
உண்மையாளர்களின் மகத்தான கூலி
உண்மை இறையச்சத்தின் அடையாளம்
உண்மை வாழ்க்கை செழிப்பாவதற்கான காரணிகளில் ஒன்று.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, அல்லாஹ்வுடன் உண்மையாக நடப்பதன் கூலி
நோக்க இலக்கம் : 1
செயல்பாட்டில் வழங்கப்பட்ட இணைப்பில் உள்ள பதிவில் இருந்து அவர் புரிந்துகொண்டதன் மூலம், அல்லாஹ்விடம் உண்மையாக இருப்பதன் பலனை ஒவ்வொரு மாணவரும் அவரவர் பாணியில் வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தவும். தாம் கண்டறிந்த பலன்களை சக நண்பர்களுக்கு வாசிக்கக் கோரி, மிகவும் பயனுள்ள மற்றும் சிறந்த வாசகத்திற்கு பாராட்டுத் தெரிவிப்பதுடன், காலைக் கூட்டத்தில் அதை வாசிக்க ஒருவரைத் தேர்வு செய்யவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
தனித்தனியாக ஒவ்வொரு மாணவரும் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் மற்றவரின் பதிலை மதிப்பீடு செய்வதற்காக தத்தமது பதிலை சக நண்பரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தமது சக நண்பரின் பதிலை மதிப்பீடு செய்த முறை, கண்டுபிடித்த தவறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை முன்வைக்குமாறு கூறுங்கள்.
இறுதியாக, ஒவ்வொருவரும் தங்கள் தவறை சரிசெய்ய, சிறந்த முன்மாதிரி பதிலை அறியப்படுத்தவும்.
கே 1 : (×) - (✓) - (×) - (✓) - (✓)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், பின்வருவனவற்றிற்கு மாணவர்களை விழிப்பூட்டுவது விரும்பத்தக்கது:
உண்மையைக் கடைப்பிடிப்பதிலும், பாடத்தின் மூலம் கற்றுக்கொண்ட அதன் சிறப்புக்களை அடைவதிலும், அவற்றை குடும்பத்திற்குள்ளும் பணிபுரியும் இடங்களிலும் அமுல்படுத்துவதிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாடம் மூன்று : நேர்மை , நம்பகத்தன்மை
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (குவியல் - மழையால் நனைந்தது - ஏமாற்றுதல் - நயவஞ்சகத்தனம்).
கற்பித்தல் சாதனங்கள் :
(ஓடியோ பதிவு - காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(முந்தைய அமைப்புகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள் - கண்டுபிடிப்பு கற்கை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
நேர்மை நபிமார்கள், இறைத்தூதர்களின் பிரதான பண்புகளில் உள்ளது என்பதை உறுதி கொள்ளல்.
நேர்மையைக் கடைபிடித்து, துரோகத்தை தவிர்ந்து கொள்ளல்.
நேர்மை இல்லாததால் சமூகங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் ஹதீஸை மாணவர்களுக்குக் காட்டவும்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவு (தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 102).
"இந்த ஹதீஸைச் சிந்தித்துப் பார்த்த பிறகு; உங்களில் யார் ஒரு முஸ்லிம் வியாபாரியின் மிக முக்கியமான பண்புகளை எங்களுக்கு பட்டியலிட முடியும்?" என்று கேட்டு, அவர்களிடமிருந்து பதிலைப் பெற்று, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம்:
முந்தைய அமைப்புகள் முறையைப் பயன்படுத்தி; பாடத்தின் கூறுகளுடன் ஒரு காட்சி வரைபடத்தைக் காட்டி, வரைபடத்தைக் கூர்ந்து கவனித்து அதற்குப் பொருத்தமான தலைப்பைக் கொடுக்கும்படி அவர்களிடம் கோரவும்.
இரண்டாம் கட்டம் :
கண்டுபிடிப்பு கற்றல் முறையைப் பயன்படுத்தி; பின்வரும் சொற்றொடர்களை மாணவர்களுக்குக் காட்டி, அவை எதைக் குறிப்பிடுகின்றன என்பதை விளக்கச் சொல்லவும். மேலும் அவர்களின் பதில்களைத் தெரிந்துகொண்ட பிறகு, அங்கு நாடப்பட்ட பண்பு, அதன் வடிவங்கள் மற்றும் அவை பற்றி மார்க்கத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை அவர்களுக்கு விளக்கவும்:
அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றல், உடன்படிக்கைகள், அமானிதங்கள், இரகசியங்கள் மற்றும் மானங்களைப் பாதுகாத்தல், உறுப்புக்களை அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் பாதுகாத்தல்..... இவை என்ன?
நேர்மை, அமானிதத்திற்குப் பல வடிவங்கள் உள்ளன, அவற்றில் சிலதைக் குறிப்பிடவும்.
மூன்றாம் கட்டம் :
நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்களின் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளை மாணவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி, பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றின் படி, அவை குறித்த அவர்களின் கருத்தை விளக்குமாறு கேட்கவும் :
ஒரு தொழிலாளி தனது வேலையில் நன்றாக இருக்கிறார். ஆனால் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் சில ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
ஒரு வியாபாரி காலாவதியான உணவுகளை விற்பனை செய்கின்றார்.
ஸஈத் தனது உறவினர் தன்னிடம் வைத்துள்ள அமானிதங்களை அவர்களின் அனுமதியின்றி செலவு செய்கின்றார்.
இறுதிச்சுருக்கம் :
பாடத்திலிருந்து தெரிந்து கொண்ட நேர்மையின் வடிவங்கள் மற்றும் அதன் சிறப்புக்கள் ஆகியவற்றை விளக்குவதற்காக ஒவ்வொரு மாணவரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வரைபடத்தை உருவாக்கக் கோரவும். மாணவர்களின் வடிவமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர்கள் அருகாமையில் சென்று பார்க்கவும். மிகவும் துல்லியமான, கவர்ச்சிகரமான மற்றும் தெளிவான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் அதனைக் காட்டவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, நேர்மை அமானிதத்தின் வடிவங்களை அறிதல்.
நோக்க இலக்கம் : 2
செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை ஒவ்வொரு மாணவருக்கும் விநியோகிக்கவும். அவர்கள் பதிலளித்து முடித்த பிறகு, நீங்கள் அட்டைகளை சேகரித்து அவற்றைச் சரிசெய்து, சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, தொழிலில் நேர்மையாக இருக்கத் துணைபுரியும் வழிமுறைகளைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4, 5
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, அவர்களை வட்டங்களில் உட்காரச் சொல்லவும். ஒவ்வொரு குழுவும் செயல்பாட்டுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைத்து, தனது குழு கண்டறிந்ததை சமர்ப்பிக்க அதன் உறுப்பினர்களில் ஒருவரை நியமிக்கவேண்டும். மாணவர்களில் ஒருவர் அதைக் கரும்பலகையில் எழுதுவார். கருத்து வேறுபாடான பதில்கள் உங்கள் மேற்பார்வையின் கீழ் விவாதிக்கப்பட்டு, சரியானது கண்டடையப்பட்டு, கரும்பலகையில் எழுதப்படவேண்டும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் தமது புத்தகத்திலுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்கச் செய்யவேண்டும்.
குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றில் எது சரி எது தவறு என்பதைத் அடையாளம் காண்பதோடு, கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒவ்வொரு குழு உறுப்பினரின் பங்களிப்பையும் அறிந்துகொள்ளவும்.
ஒவ்வொரு குழுவின் தவறுகளைப் பற்றியும் கருத்துத் தெரிவித்து, அவற்றைத் திருத்தவும்.
முன்வைக்கப்பட்டவற்றின் அடிப்படையில் அவற்றைச் சரிசெய்து, மாற்றியமைக்க ஒவ்வொரு குழுவிடமும் அவர்களது விடைத் தாள்களை ஒப்படைக்கவும்.
கே 1 : () - () - ()
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கற்றுக்கொள்ளப்பட்டவற்றின் படி, பின்வருவனவற்றிற்கு மாணவர்களை விழிப்பூட்டுவது விரும்பத்தக்கது:
நேர்மை எனும் பண்பையும் அதன் பல்வேறு வடிவங்களையும் கடைப்பிடிப்பதில், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதில் அக்கறை கொள்ளுதல்.
தனிநபர்களுக்கு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலமும், பாடத்தின் ஊடாகப் படித்தவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமும் சுற்றியுள்ள சமூகத்தில் நேர்மை, நாணயத்திற்கு முரணான வெளிப்பாடுகளை எதிர்கொள்வது.
பாடம் நான்கு : பொறுமை
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (முதல் அதிர்ச்சி).
கற்பித்தல் சாதனங்கள்:
(ஓடியோ பதிவு - காட்சி திரை- கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - கரும்பலகை).
கற்பித்தல் உத்திகள்:
((K.W.L) முறை - கண்டுபிடிப்பு கற்றல் முறை - சூடான இருக்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
பொறுமை என்பது அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதன் மூலம் உருவாகின்றது என்பதை உறுதி கொள்ளல்.
துன்பங்களின் போது பொறுமையைக் கடைபிடித்தல்.
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் பொறுமை கொள்ள அக்கறை கொள்ளல்.
பொறுமையின் சிறப்பைப் புரிந்துகொள்ளல்
பாடத்தின் அறிமுகம்:
பொறுமை என்பது துன்பக் காலங்களில் பொறுமை கொள்தல் மட்டும் அல்ல, மாறாக பல விஷயங்களை உள்ளடக்கியது என்பதை விளக்கி பாடத்தை ஆரம்பிக்கவும். இதனைத் தான் இன்றைய பாடத்தில் நாம் கற்கப் போகிறோம் எனக் கூறி பொறுமை எனும் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம் :
ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் மூன்றாகப் பிரிக்கப்பட்ட ஒரு கல்வி அட்டையைக் கொடுப்பார்: முதல் பகுதியில் K என்ற எழுத்தும், இரண்டாவது பகுதியில் W எழுத்தும், மூன்றாம் பகுதியில் L என்ற எழுத்தும் அடங்கும்.
அவர் ஒவ்வொரு பகுதியின் இலக்கையும் அவர்களுக்கு விளக்கவேண்டும். பின்னர் பாடத்தின் குறிக்கோள்களைப் பற்றிய அவர்களின் அவதானிப்பின் அடிப்படையில், பொறுமையைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்த முன்னைய தகவல்களை முன்வைக்குமாறு அவர்களிடம் கேட்க வேண்டும். அவை முதல் பகுகியில் எழுதப்படவேண்டும்.
பாடத்தில் இருந்து அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் தகவல் மற்றும் கூறுகளை முன்வைத்து, அதை இரண்டாம் பாகத்தில் சேர்க்குமாறு கூறவேண்டும். பாடத்தைப் பற்றிய அவர்களின் கடந்தகால அனுபவத்தைப் பற்றி அறிய, அவர்கள் எழுதியவற்றுக்குக் கருத்துரை வழங்க வேண்டும்.
இரண்டாம் கட்டம் :
கண்டுபிடிப்பு கற்றல் முறையின் மூலம், ஆசிரியர் பின்வரும் வாக்கியத்தை மாணவர்களுக்கு முன்வைத்து, அது எதைக் குறிக்கிறது என்பதை விளக்குமாறு கேட்டு, அவர்களின் பதில்கள் மூலம், பொறுமை மற்றும் அதன் வகைகளை விளக்க வேண்டும்.
(பொறுமை, அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து கொள்தல், அவன் கடமையாக்கியவற்றை நிறைவேற்றுதல், அவன் நிர்ணயித்த விதியைப் பொருந்திக் கொள்தல் அனைத்தின் மூலமும் உருவாகும்).
மூன்றாம் கட்டம்:
சூடான இருக்கை மூலோபாயத்தைப் பயன்படுத்துதல்; மாணவர்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்திருக்க வேண்டும். வட்டத்தின் மையத்தில் ஒரு நாற்காலி வைக்கப்படும். ஆசிரியர் மாணவர்களில் ஒருவரை சூடான நாற்காலியில் உட்காரச் சொல்வார்.
ஆசிரியர் பின்வரும் பொறுமையின் வகைகளை தனது சக நண்பர்களிடம் வாசிக்குமாறு அறிவுறுத்துவார். பின்னர் மாணவர் இந்த நற்பண்புகளின் விளக்கம் மற்றும் புரிதல் குறித்து ஆசிரியர் மற்றும் சக நண்பர்களிடமிருந்து கேள்விகளைப் பெற வேண்டும்.
ஆசிரியரும் சகநண்பர்களும் மாணவரின் பதிலை அவதானித்து, அதை மதிப்பீடு செய்வதுடன், சரியான பதிலை அடையாளம் காண, அம்மாணவருடன் தகவல் மற்றும் யோசனைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்வது.
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாமலிருப்பதில் பொறுமை கொள்வது.
துன்பத்தின் போது பொறுமை கொள்ளுதல்.
இறுதிச்சுருக்கம் :
ஆசிரியர் மாணவர்களின் கைகளில் உள்ள, (L) எழுத்து உள்ள அட்டையின் மூன்றாவது பகுதியை முடிக்குமாறு அறிவுறுத்துவார். மேலும் இது பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை பொது மற்றும் துணைக் கூறுகள் வடிவில் எழுதுவது தொடர்பானது.
சில அட்டைகளைத் தெரிவு செய்து, கருத்துரை வழங்கி, அவை எந்தளவு துல்லியமாக உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வாசித்து, தொடர்புபடுத்த மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 4
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை பல அட்டைகளில் எழுதி, மாணவர்களுக்கு எழுமாறாக அவற்றை விநியோகிக்கவும். பின்னர் அதை வாசிக்க அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் அதன் பொருள் மற்றும் அதன் வழிகாட்டல்கள் பற்றி விவாதிக்கவும். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் வசனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அறிவுறுத்துவதுடன், நீங்களும் சகமாணவர்களும் அவற்றை மதிப்பீடுசெய்யவேண்டும்.
பொறுமைக்குத் துணைபுரியும் வழிவகைகள்
நலவு சிலவேளை மனிதன் வெறுக்கும் விடயத்திலும் இருக்கலாம்.
பொறுமையின் சிறப்பு
வணக்கங்களை நிறைவேற்றுதல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பொறுமையைக் கடைபிடிப்பதில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
நோக்க இலக்கம் 5, 6
ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டாவது செயற்பாட்டைத் தனியாகச் செய்யும்படியும், தமது பதிலை ஒரு தனியான அட்டையில் எழுதவும் அறிவுறுத்தவும். பின்னர் மாணவர்களிடமிருந்து அட்டைகளை சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான பதில்களை அடையாளம் கண்டு, உரியவர்களைப் பாராட்டுங்கள்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பிறரின் நோவினைகளின் போது பொறுமைகாக்கும் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 6
ஒவ்வொரு மாணவரும், தாம் தீங்குகளை எதிர்கொண்டு அதில் பொறுமையாக இருந்ததால், அல்லாஹ் அவருக்கு விதித்ததில் நல்லதைக் கண்டறிந்த சூழ்நிலையை நினைவகத்திலிருந்து நினைவுபடுத்தி செயல்பாட்டைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற வழிநடத்தவும். இதற்காக மின்னணு ஆதாரங்களையும் அணுகலாம். இந்த விஷயத்தில் மாணவர்களின் செயல்திறன் மற்றும் அவர்கள் அடையும் முடிவுகளை அடுத்த சந்திப்பில் நீங்கள் பார்க்கவேண்டும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
தனித்தனியாக ஒவ்வொரு மாணவரும் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் மற்றவரின் பதிலை மதிப்பீடு செய்வதற்காக தத்தமது பதிலை சக நண்பரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தமது சக நண்பரின் பதிலை மதிப்பீடு செய்த முறை, கண்டுபிடித்த தவறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை முன்வைக்குமாறு கூறுங்கள்.
இறுதியாக, ஒவ்வொருவரும் தங்கள் தவறை சரிசெய்ய, சிறந்த முன்மாதிரி பதிலை அறியப்படுத்தவும்.
கே 1 : (×) - (√) - (√)
கே 2 : பாவம் - அருட்கொடைக்கு நன்றி செலுத்துதல் - பொறுமையின் வழிகள்
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கற்றுக்கொள்ளப்பட்டவற்றின் படி, பின்வருவனவற்றிற்கு மாணவர்களை விழிப்பூட்டுவது விரும்பத்தக்கது:
பாடத்தில் வழங்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முயற்சித்து, அல்லது சுற்றியுள்ள நபர்கள் அல்லது மார்க்க அறிஞர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று, தங்கள் சமூகத்தில் பரவலாக இருக்கும் பொறுமையின்மையின் வடிவங்களை நீக்குதல், அந்த பொறுமையின்மையின் உருவங்களையும் வடிவங்களையும் நீக்கி; பொறுமையைக் கடைப்பிடிக்கும் சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்பதுவே இதன் நோக்கமாகும்.
பாடம் நான்கு : வெட்க குணம்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (வெட்கம் - மற்றும் அது உள்ளடக்கியது - மற்றும் அடங்கியது - மற்றும் இத்துப்போதல் - இரண்டு குணங்கள் - ஒரு கிளை).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(சுய கேள்வி - தவறான கருத்துக்களை சரிசெய்தல் - சொற்பொருள் வரைபடங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
வெட்க உணர்வைக் கடைபிடித்தல்.
அல்லாஹ்விடம் வெட்கிப்பதை உணர்தல்.
மனசாட்சி மற்றும் மக்களிடம் வெட்கப்படுவதில் அக்கறை கொள்ளுதல்.
வெட்க உணர்வில் நபியவர்களைப் பின்பற்றுதல்.
பாடத்தின் அறிமுகம்:
என் அன்பான ஆசிரியரே, பின்வரும் ஹதீஸை வாசித்துக் காட்டி பாடத்தை ஆரம்பம் செய்யுங்கள்: "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'' என்பது" ஆதாரம் : புஹாரி (6120).
பின்னர் மாணவர்களை ஹதீஸைப்பற்றியும், வெட்கம் ஒரு முஸ்லிமைப் பாவம் செய்வதிலிருந்து எவ்வாறு தடுக்கிறது? என்பதைப் பற்றியும் சிந்திக்கக் கோரவும். அவர்களிடமிருந்து பதிலைப் பெற்று அதைப் பற்றி கருத்துரைத்து, பின்னர் பாடத்தின் உள்ளடக்கத்திற்கு அவர்களைக் கொண்டு வந்து தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி, புரிதலை சீரமைக்கும் நோக்கில், வெட்கத்தின் வரைவிலக்கணம், வகைகள் மற்றும் சிறப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை ஆசிரியர் படங்கள் ஊடாகக் காட்டவேண்டும்.
சுய-கேள்வி முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர், இந்தபிரிவுகளைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் சில கேள்விகளைக் கேட்க கோர வேண்டும். அவர்களது கேள்விகளை சேகரித்து, கரும்பலகையில் எழுத வேண்டும். பாடத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கும் விதமாக, ஆசிரியரும் மேலும் பல கேள்விகளை சேர்த்துக்கொள்ளலாம். கேட்கப்படும் கேள்விகளில் பின்வருபவை இருக்கலாம்:
கே: வெட்கம் என்றால் என்ன?
கே : வெட்கம் எனும் பண்பின் வகைகள் எவை?
கே: அல்லாஹ்விடம் வெட்கப்படுவது எவ்வாறு?
கே: மனிதர்கள் மற்றும் மனசாட்சியிடம் ஒருவர் வெட்கப்படுவது எவ்வாறு?
இரண்டாம் கட்டம் :
ஆசிரியர், வெட்கத்தின் வகைகளைத் தெளிவுபடுத்துவதோடு, முந்தைய கேள்விகளுக்கான பதில்களையும் விளக்கத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும். இதன் போது, ஆசிரியர் வெட்கத்தின் சிறப்பைக் காட்டும் சான்றுகளை காட்சித் திரை மூலம் காண்பிக்க வேண்டும். சொற்களின் அர்த்தங்கள் மற்றும் அவற்றின் பலன்களைத் தெளிவுபடுத்துவதில் மாணவர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
தவறான புரிதல்களை சரிசெய்யும் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் இரண்டு சூழ்நிலைகளை மாணவர்களிடம் முன்வைக்கவும், அவை தொடர்பாக அவர்களின் கருத்தைத் தெரிவிக்கும்படி அவர்களிடம் கோரவும். அவர்களின் பதில்களை மதிப்பிடுவதன் மூலம், சரியான பதிலை அவர்களுக்கு விளக்கவும். அதேநேரம், வெட்கமின்மைக்கு தீர்வு காணும் சில வழிகளையும் பரிந்துரைக்கவும்.
மார்க்க ஹிஜாப் முறையை முழுமையாகக் கடைபிடிக்காமல் சில பெண்கள் வெளியில் செல்லுதல்.
சில ஆண்கள் தாம்பத்திய இரகசியங்களைப் பிறருடன் கதைத்தல்.
இறுதிச்சுருக்கம் :
ஒவ்வொரு குழுவும் பாடத்தை, மீட்டலின் போது உதவியாக இருக்கும் விதத்தில், தங்கள் கொப்பிகளில் கூறுகள் மற்றும் சிந்தனைகளின் வடிவத்தில் எழுதச் சொல்லவும்.
சில மாணவர்களை எழுதப்பட்ட தாள்களைப் பயன்படுத்தாமல் வாய்மொழியாக பாடத்தை சுருக்கமாகக் கூறப் பணிக்கவும். மேலும் அதில் திறமையானவர்களப் பாராட்டவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வெட்கத்தின் வடிவங்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 2
செயல்பாட்டில் உள்ள இரண்டு ஆதாரங்களையும் காட்சித் திரையின் மூலம் மாணவர்களுக்குக் காட்டி, அவற்றை வாசிக்க திறமையானவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். பின்பு அவர்களோடு இணைந்து, அதன் சொற்களை விளக்கித் தெளிவுபடுத்தி, அவற்றின் வழிகாட்டல்களைக் கண்டறியவும்.
மாணவர்களுடன் செயல்பாட்டுக்கான பதிலைப் பற்றி விவாதித்து அவர்கள் ஊடாகவே சரியான பதிலைக் கண்டறியவும். அவர்கள் ஒவ்வொருவரும் அதை அவரவர் புத்தகத்தில் எழுத வேண்டும்.
வெட்கத்தின் வடிவங்கள்
நடை மற்றும் இதர அனைத்து நிலைகளிலும் பெண் வெட்க உணர்வுடன் இருத்தல்.
தனிமையில் இருந்தாலும் அவசியம் மறைக்க வேண்டிய பகுதி அவ்ரத்தை மறைத்தல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, முறையான வெட்கத்திற்கும் முறையற்ற வெட்கத்திற்குமிடையில் ஒப்பீடு செய்தல்.
நோக்க இலக்கம் : 2, 4
மாணவர்களின் ஒவ்வொரு குழுவும் இரண்டாவது செயல்பாட்டைச் செய்வதில் தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். மேலும் ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்ய குழுக்களைக் கண்கானிக்கவும். பின்னர், ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருடைய குழுவின் செயல்பாட்டை முன் வைக்கச்செய்ய வேண்டும், அவர்களிடையில் ஒப்பிட்டுப் பார்த்து, மிகத் துல்லியமாக பதிலளித்து, முறையான மற்றும் முறையற்ற வெட்கத்திற்கு மத்தியில் துல்லியமாக ஒப்பீடு செய்துள்ள குழுவை அடையாளப்படுத்தவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:
முதலிரு கேள்விகளுக்கும் பதிலளிக்க, ஆசிரியர் மாணவர்களிடம் அவற்றின் வசனங்களை வாசித்துக் காட்டி, அவற்றுக்கு பதிலளிக்க சில மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களில் ஒருவர் தவறு செய்தால், பிழையை சரிசெய்ய மற்றொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கே 1 : ()-() - ()-()
மாணவர்களில் ஒவ்வொரு குழுவும் மூன்றாவது கேள்விக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்துங்கள். மேலும் குழுக்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு குழுவும் செய்த தவறைக் கண்டறியவும். பின்னர் அதை மாணவர்களுக்குக் காட்டி, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்கி, பின்னர் சிறந்த பதில் குழுவைக் கண்டறிந்து, அதன் உறுப்பினர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம் :
அல்லாஹ்வுக்கு முன்பாக ஒரு முஸ்லிம் எவ்வாறு வெட்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி பாடத்தில் கற்றுக்கொண்டவற்றை செயற்படுத்த மாணவர்களை ஊக்கப்படுத்துதல். ஒவ்வொருவரும் அவரவர் திறன்கள் மற்றும் ஆற்றல்களுக்கு ஏற்ப அதை தங்கள் வாழ்க்கையில் அமுல்படுத்த முயற்சிக்கவும்.
வெட்கத்தின் சிறப்பு, மற்றும் அதன் வகைகளைத் தமது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துதல்.
பாடம் ஆறு : நீதம்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (நீதி - அநீதி).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கருத்துதிர்ப்பு- மன வரைபடம் - உரையாடல் மற்றும் விவாதம்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
நீதியின் அவசியத்தை- குறிப்பாக பரிவர்த்தனைகளில்- உணர்தல்.
நீதம் எனும் குணத்தைக் கடைபிடிக்க அக்கறை கொள்ளல்.
அநீதி, மற்றும் அநியாயக்காரர்களை விட்டும் விலகி இருத்தல்.
பாடத்தின் அறிமுகம் :
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்கு முன்வைப்பதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கவும்: நீங்கள் தெருவில் செல்லும்போது, உங்கள் உறவினர்களில் ஒருவர் வெளியூர்க்காரர் ஒருவருக்கு தீங்கு விளைவிப்பதைக் கண்டீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் உங்கள் உறவினருடன் நிற்பீர்களா? அல்லது அவர் செய்வதிலிருந்து அவரைத் தடுப்பீர்களா? அவர்களிடமிருந்து பதிலைப் பெற்று, அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவும். அதன் மூலம் பாடத்தின் உள்ளடக்கத்திற்குச் சென்று, பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுத வேண்டும். (நீதியெனும் பண்பு).
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி, நீதி என்றால் என்ன என்பதையும், அதன் வடிவங்களையும் விளக்குமாறு ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவர்களின் பதில்களைப் பெற்று, பின்னர் அதன் வரைவிலக்கணம் மற்றும் வடிவங்களை உள்ளடக்கிய ஒரு மன வரைபடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்கள் அதில் காட்டப்பட்டுள்ள கூறுகளோடு தமது பதில்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள்.
இரண்டாம் கட்டம்:
பாடத்தைப் புரட்டிப் பார்த்து, அதன் உறுப்புக்களை அறிய ஆசிரியர் மாணவர்களை அறிவுறுத்தவேண்டும்.
மாணவர்களை சோடிகளாக நியமித்து பாடத்தின் கூறுகள் மற்றும் சிந்தனைகள் தொடர்பான கேள்விகளைக் கேட்பதில் தமக்கிடையில் ஒத்துழைத்து, தம்மிடமுள்ள தெளிவின்மையைத் நீக்கிக்கொள்ள முயற்சிக்கவேண்டும். ஒவ்வொரு குழுவின் கேள்விகளைக் கண்டறிந்து அவற்றை கரும்பலகையில் எழுதுங்கள்.
மூன்றாம் கட்டம் :
ஆசிரியர் மாணவர்களின் கேள்விகளின் வாசகங்களை சரிசெய்து, பாடத்தின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதற்காக, தன்னிடமிருந்தும் சில கேள்விகளை இணைத்துக்கொள்ளவேண்டும்.
அவற்றைக் குறிக்கும் மார்க்க ஆதாரங்களையும் கூறி, மாணவர்களுடன் அவற்றைப் பற்றி விவாதித்து, விளக்கவேண்டும். பின்வரும் கேள்விகளும் அவற்றில் இருக்கலாம்:
கே: நீதி எவ்வாறு அடையப்படுகிறது?
கே: இன, நிற வேறுபாட்டை வைத்து மக்களை பிரித்துப்பார்ப்பதன் சட்டமென்ன?
கே: நீதியை நிலைநாட்டும் சில வழிமுறைகளைக் கூறவும்.
நான்காம் கட்டம் :
குழு விவாத முறை மூலம்; நீதியின் மிக முக்கியமான சிறப்புகளை முன்வைக்க மாணவர்களை அறிவுறுத்தவும். மேலும் அவர்கள் முன்மொழிந்தவற்றுக்கு கருத்துரை மற்றும் விளக்கம் வழங்கவும்.
இறுதிச்சுருக்கம் :
பாடத்தில் தாம் கற்றவற்றிலிருந்து முக்கிய படிப்பினைகளையும் வழிகாட்டல்களையும் எழுதுமாறு மாணவர்களைப் பணிக்க வேண்டும்.
சில மாணவர்களைத் தேர்வு செய்து, தாம் எழுதியவற்றை அடுத்தவர்களுக்கு வாசித்துக் காண்பிக்குமாறு கூற வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான வலுவூட்டலையும் வழங்கவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டவும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை. நீதம் செலுத்துதல், அநீதியைத் தவிர்ந்து கொள்ளுதல் என்பவற்றின் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 1, 3
செயல்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஹதீஸ் குத்ஸியை (அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறும் ஹதீஸ்) மாணவர்களுக்குக் காட்டி, அதைப் படிக்க மிகவும் திறமையான ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். மேலும், அவர்களுக்கு அதன் கலைச் சொற்களை விளக்கித் தெளிவுபடுத்தி, அதன் படிப்பினைகளைக் கண்டறியவும்.
செயல்பாட்டுக் கேள்விகளுக்கான பதில்களை மாணவர்களுடன் விவாதித்து, சரியான பதிலை அவர்களுக்கு வழங்கி, அதைத் தமது கொப்பிகளில் எழுதுமாறு கூறவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நீதத்தின் வடிவங்கள் மற்றும் அதிலிருந்து பயனடையும் வழிமுறையை அறிதல்.
நோக்க இலக்கம் : 2
ஆசிரியர் செயல்பாட்டு ஹதீஸை ஒரு பலகையில் காட்டி, அதைச் சரியாக வாசிக்க ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . பின்னர் அவர் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் செயல்பாட்டிற்கு பதிலளிக்க தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவேண்டும். மேலும் குழுக்களின் பதில்களை அடையாளம் கண்டு, மிகவும் துல்லியமாக பதில் அளித்தவர்களுக்கு பொருத்தமான பாராட்டலை வழங்கவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பிறருக்கு அநீதியிழைப்பவருக்கு ஒரு மடலை வரைய மாணவர்களைப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 4, 5
அநீதி இழைக்காமலிருக்கவும், அவ்வாறு நடந்தால் அதற்காக வருந்தவும், பாவமன்னிப்புக் கோரவும் தன்னைத் தானே தூண்டி ஒவ்வொரு மாணவரும் ஒரு சிறு கடிதத்தை எழுதுமாறு ஆசிரியர் அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடையே சென்று பார்த்து, அழகான பாணியில், தாக்கமேற்படுத்தும் விதத்தில் சிந்தனைகளை வடிவமைத்துள்ள சிறந்த பதில்களைக் கண்டறிந்து, அவற்றில் மிகச் சிறந்ததைத் தெரிவுசெய்யவும். அனைத்து மாணவர்களும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் அதை எழுதி, எழுத்தாளர்களையும் கூறுமாறு கோர வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம் :
முதல் கேள்விக்கு ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்துங்கள். பின்னர் அவர்களுடன் தமது பதில்களைப் பற்றி விவாதிக்கவும். ஒவ்வொரு மாணவரும் தனது சரியான பதிலுக்கு தானே ஒரு மதிப்பெண்ணைக் கொடுக்க வேண்டும். பின்பு, மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கே 1: (நீதி - அநீதி - அல்லாஹ்வை அஞ்சுதல் - நான் அதைத் தடுக்கிறேன்)
மும்மூன்று மாணவர்களாக இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்க ஒத்துழைப்பதுடன், ஆசிரியர் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்களைக் கடந்து செல்ல வேண்டும். சிறந்த பதில் குழுவைத் தேர்வு செய்து, சக நண்பர்களுக்கு சரியான பதிலைப் படிக்கவைத்து, ஒவ்வொரு குழுவும் தாம் விட்ட பிழைகளைத் திருத்தச்செய்ய வேண்டும்.
மூன்றாவது கேள்வியை மாணவர்களிடம் கேட்டு, அவர்களில் இருவரைப் பதில் சொல்லத் தெரிவுசெய்யவும். அவர்கள் தவறு செய்து, பதில் சொல்ல முடியாமல் போனால், பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து அதைத் தாங்களே கண்டறியும் படி அவர்களுக்கு அறிவுறுத்தவும்.
பயிற்றுவுப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நீதியை நிலைநாட்டுதல் மற்றும் அநீதியைக் கைவிடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பரப்புதல், குறிப்பாக (சமூக வலைதளங்கள் மற்றும் இணையத் தளங்கள், இதில் மஸ்ஜிதுகள் மற்றும் மார்க்க அறிஞர்களின் பங்கு முக்கியமானது). நீதி முறை, அநீதிக்கான தண்டனை மற்றும் அதை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபர்களுக்குத் தெரிவிக்க, சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் பதிவுகள் மற்றும் கருத்துக்களை வழங்குவதிலும், வழிகாட்டல் ஆக்கங்களை எழுதுவதிலும் மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அழைப்புப் பணித்துறை
பாடம் ஒன்று : அறிவுரையின் (உபதேசம்) மகத்துவம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (அறிவுரை - உறுதிமொழி).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டு கற்றல் -பிரசினங்களைத் தீர்க்கும் முறை - சொற்பொருள் வரைபடம்).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
- சமூகத்தில் உபதேசத்தின் பயனை உணர்த்துதல்
உபதேசத்தின் அவசியம், முக்கியத்துவத்தை உணர்தல்.
உபதேசம் செய்ய அக்கறை கொள்வதில் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களைப் பின்பற்றுதல்.
பாடத்தின் அறிமுகம்:
(மார்க்கம் என்பது நலவுநாடுதல்) என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை மாணவர்களுக்கு நினைவூட்டுவதுடன், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு நலவுநாடுவதையும், அது ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமை என்றும் நினைவூட்டவும். இது அவரை நேசிப்பதனதும், அவருக்கு நலவு நாடுவதனதும் அடையாளமாகும். மார்க்கத்தில் இதற்குப் பாரிய இடமுண்டு. சமூகத்தில் நேசத்தை வளர்ப்பதிலும், மக்களிடையே ஒத்துழைப்பு உணர்வை விதைப்பதிலும் இது பாரிய தாக்கம் செலுத்துகின்றது. எனவே, உபதேசத்தின் முக்கியத்துவம் மற்றும் இஸ்லாத்தில் அதற்குரிய இடம் பற்றி கற்க இந்த பாடத்தை ஒதுக்கியுள்ளோம் எனக் கூறி, பின்னர் பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம் :
மாணவர்களை பாடப்புத்தகத்தைத் திறந்து, பாடத்தை அமைதியாக வாசிக்குமாறு கூறவும். பிறகு பாடத்தைப் பற்றி எந்தக் கேள்விகளைக் கேட்குமாறு கேட்டு, அவை பற்றி விவாதித்து, அதனூடாக பாடத்தின் கூறுகளை அவர்களுக்குத் தெளிவாக்கிக் கொடுக்கவும்.
இரண்டாம் கட்டம் :
பிரசினங்களைத் தீர்க்கும் உத்தியைப் பயன்படுத்தி, பின்வரும் சிக்கல் சூழ்நிலையை மாணவர்களுக்கு வழங்கவும். (நீங்கள் மஸ்ஜிதுக்கு தொழச் செல்கிறீர் என்று வைத்துக் கொள்ளவும். உமது சக நண்பர் தனது வேலையைத் தொடர்வதைக் கண்டு, தொழுகைக்கு உங்களுடன் வருமாறு நீங்கள் அவரிடம் கேட்டபோது, அவர் "நான் வேலையை முடித்த பிறகு வருகிறேன்" என்று கூறிவிட்டார். இப்போது நீர் என்ன செய்வீர்?).
மாணவர்களின் பதில்களைப் பெற்று, இந்த நண்பருடன் நடந்து கொள்வதற்கான சிறந்த வழிகளை அவர்களுடன் விவாதிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
பாடத்தின் கூறுகளை உள்ளடக்கிய சொற்பொருள் வரைபடத்தை அவர்களுக்குக் காட்டவும், பின்னர் அவற்றை விளக்கி அவற்றுடன் தொடர்புடைய ஆதாரங்களையும் விளக்கவும்.
இறுதிச்சுருக்கம் :
அனைத்து மாணவர்களிடமும் குறித்த பாடத்தைச் சுருக்கி, அதிலிருந்து பெற்ற முக்கிய பயன்களை விளக்குமாறு கோரவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, அல்லாஹ்வுக்கும், அவனது வேதம், தூதர், முஸ்லிம் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் நலவு நாடும் முறைகளை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 1, 3
ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் செயல்பாட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உபதேசம் பதியப்பட்ட அட்டைகளில் ஒன்றைக் கொடுக்கவும். முதல் மாணவர் தன்னிடமுள்ள உபதேசத்தை வாசித்துவிட்டு, சகநண்பர் ஒருவரிடன் முதலாவது விதத்திற்கு பதிலளிக்குமாறு கூறி, அப்பதில் பற்றிய தனது அபிப்பிராயத்தையும் முன்வைப்பார். இரண்டாவது மாணவர் இரண்டாம் விதத்திற்கு பதிலளிக்க இன்னுமொரு நண்பரைத் தெரிவுசெய்வார். இவ்வாறே இறுதிவரை தொடரும். ஆசிரியர் அனைவரையும் மதிப்பீடு செய்வார்.
அல்லாஹ்வுக்கு நலவு நாடுதல் (அதன் விதம்:) அல்லாஹ்வை நம்புதல், அவனுக்கு இணை கற்பிக்காமல் அமல்கள் அனைத்தையும் அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல்.
அல்லாஹ்வின் வேதத்திற்கு நலவு நாடுதல். (அதன் விதம்:) அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என ஈமான் கொண்டு, அதனை அமுல்படுத்தி, அதனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுத்தல்.
நபி (ஸல்) அவர்களுக்கு நலவு நாடுதல். (அதன் விதம்:) நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்ததை ஈமான் கொண்டு, அன்னாரை நேசித்து, அன்னாரின் வழிமுறையைப் பின்பற்றி, மக்களுக்கு மத்தியில் அவற்றைப் பரவச் செய்தல்.
முஸ்லிம் தலைவர்களுக்கு நலவு நாடுதல் (அதன் விதம்:) சத்தியத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து, அதில் அவர்களுக்குக் கட்டுப்படுவதோடு, அவர்களுக்கும் சத்தியத்தைக் கொண்டு ஏவுதல்.
பொதுமக்களுக்கு நலவு நாடுதல் அவர்களை நேசித்து, உரிமைகளைக் கொடுத்து, ஆலோசனை வழங்கி, உபதேசித்தல் .
செயல்பாட்டு இலக்கம் 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, தொடர்புபடுத்தி, பகுப்பாய்வு செய்வு, முடிவை அடைய மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 2, 4
ஒரு பலகையில் இரண்டாவது செயல்பாட்டைக் காட்டி, அதை வாசிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும், விவாதங்கள் மூலம் அவர்கள் பதிலளிக்கும் வகையில் செயல்பாட்டின் இரு வினாக்களையும் அவர்களுக்குத் தொடராக வழங்கவும். அதே நேரத்தில் பங்கேற்பைத் தொடங்காத மாணவர்களை பதிலளிக்க ஊக்குவிக்கவும். பின்பு ஒவ்வொருவரும் அவரவர் புத்தகத்தில் சரியான பதிலை எழுதுமாறு அறிவுறுத்துங்கள்.
1. நபி நூஹ் அவர்கள் தனது மகனைக் காப்பாற்ற முயற்சித்து, நிராகரிப்பை விட்டு, கப்பலில் ஏறிக் கொள்ளுமாறு உபதேசித்தார்கள். மகன் பதிலிளித்திருந்தால் அழிவிலிருந்து தப்பியிருப்பார். என்றாலும் தனது தந்தைக்கு மாறுசெய்து , அவருடைய உபதேசத்தை ஏற்காது நீரில் மூழ்கி, நிராகரிப்பாளர்களுடன் அழிந்து போனான்.
2. மக்களுக்கு உபதேசம் வழங்குதல், அவர்கள் வெற்றியடைய அக்கறை கொள்தல் - உபதேசத்தை அலட்சியப்படுத்தாமல் அதனை ஏற்றுக் கொள்ளல்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
பாடப்புத்தகத்தில் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க உங்கள் மாணவர்களை பணிக்கவும்.
வாய்மொழியாகப் பதிலளிக்க சில மாணவர்களைத் தேர்வுசெய்து, சரியான பதில்களைப் பாராட்டவும்.
தவறுவிட்டவர்களை, திறமையான மாணவர்களில் ஒருவரின் உதவியுடன் பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க அறிவுறுத்தவும்.
கே 1 : (√) - (X) - (X) - (X) - (√)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், பின்வருவனவற்றிற்கு மாணவர்களை விழிப்பூட்டுவது விரும்பத்தக்கது:
மார்க்க விடயங்களில் அறிவுரையின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவம் பற்றி பல்வேறு அறிவு மூலாதாரங்களில் ஆராய்ச்சி செய்து, அடுத்த சந்திப்பில் அதை உங்களுக்கு வழங்க ஒவ்வொரு மாணவரையும் பணிக்கவும். மிகச் சிறந்தமுறையில் எழுதப்பட்ட ஒன்றைத் தெரிவுசெய்து, ஏனைய மாணவர்களுக்கு வாசித்துக் காட்டவும்.
பாடம் இரண்டு : அறிவுரையின் ஒழுங்குகள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (உளத்தூய்மை - மென்மை - மார்க்க விளக்கம் - பெருமை).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
( கருத்துதிர்ப்பு - ஆராய்ந்தெடுத்தல் முறை - கூட்டு கற்கைமுறை).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
அறிவுரையின் ஒழுங்கைக் கடைபிடிப்பதன் அவசியத்தை உணர்தல்.
அறிவுரையின் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தல்.
சமூகத்திற்கு வழிகாட்டவும், சமூகத்தை சீர்திருத்தவும் அக்கறை கொள்தல்.
அறிவுரை வழங்கும் போது உளத்தூய்மை, பொறுமை என்பவற்றைக் கடைபிடித்தல்.
பாடத்தின் அறிமுகம்:
உஸ்மானும் அப்துல்லாவும், தொழிற்சாலையில் இருந்த சக ஊழியர் ஸஈத் பணியை விட்டு தொலைபேசியில் மூழ்கியிருப்பதைக் கண்டனர். தனது பணியில் ஸஈத் கவனம் செலுத்துவதற்காக உரத்த குரலில் உஸ்மான் கத்த, அப்துல்லாஹ்வோ ஸஈதிடம் சென்று தொலைபேசியை கீழே வைத்து தனது பணியை முடிக்குமாறு அமைதியாக அவருக்கு உபதேசம் செய்தார்.
உஸ்மானும் அப்துல்லாவும் செய்தவை பற்றி உங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடுவதோடு, அச்செயலுக்குரிய தீர்ப்பையும், அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில் அதன் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குமாறும் கூறுங்கள். பின்னர் அவர்களின் பதில் மற்றும் இரண்டு சூழ்நிலைகளில் என்ன செய்யப்பட்டது என்பது பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றி கருத்துரைத்து, பாடத்தின் உள்ளடக்கத்திற்க்கு அவர்களை அழைத்துச் சென்று, தலைப்பை பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம் :
நீங்கள் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, கருத்துதிர்ப்பு மூலம், அறிவுரை வழங்குவோரின் சில ஒழுக்கங்களைத் தெளிவுபடுத்த ஒவ்வொரு குழுவையும் பணிக்கவேண்டும். பின்னர் ஒவ்வொரு குழுவும் தாம் கண்டறிந்ததை ஒரு தாளில் எழுத வேண்டும்.
பின்னர் மாணவர்கள் கண்டறிந்தவை பற்றி அவர்களுடன் விவாதித்து, சரியாக தகவல்களைத் தெளிவுபடுத்தவும்.
இரண்டாம் கட்டம் :
கூட்டு கற்கை முறையினூடாக ஒவ்வொரு குழுவும் அறிவுரை வழங்கப்படுபவரின் ஒழுங்களை ஆராய வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் தாம் கண்டறிந்தவற்றை முன்வைத்து, மதிப்பீடு செய்துகொள்ள தம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
இந்த கட்டத்தில், ஆராய்ந்தறியும் முறையைப் பயன்படுத்தி, உங்கள் மாணவர்களுக்கு பின்வரும் கூற்றை வழங்கவும்:
அல்-ஃபுதைல் பின் இயாழ் (ரஹ்) கூறினார்: (நம்பிக்கையாளர் மறைத்து அறிவுரை கூறுவார், அதே சமயம் தீயவர் அவமதித்து நிந்திப்பார்.)
அதை வாசிக்கும்படியும், அது எதைக் குறிக்கிறது என்பதைக் கண்டறிய முயற்சிக்கும் படியும் அவர்களிடம் கோரி, அதை அவர்களுடன் விவாதிக்கவும்.
இறுதிச்சுருக்கம் :
பாடத்தின் சுருக்கத்தை சிந்தனைகள், கூறுகள் வடிவில் வகுக்குமாறு மாணவர்களிடம் வேண்டவும்.
பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை அவர்களிடம் வாய்மொழிமூலம் பெற்று, கரும்பலகையில் எழுதவும்.
சக நண்பர்களுக்கு சுருக்கமாக வாசிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்வருவனவற்றின் மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, அறிவுரையின் ஒழுங்குகளை அறிதல்.
நோக்க இலக்கம் : 1, 2
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் முதல் செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் கூறுகளைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
அறிவுரையின் ஒழுங்குகள்
மென்மையாக நடத்தல்
நன்மையில் பால் அழைத்தல், அறிவுரை வழங்கப்படுபவருக்குப் பரிவுகாட்டுதல்.
உளத்தூய்மை
மறைத்தல் மற்றும் இரகசியம்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, செவிமடுத்து, சுருக்கம் எடுக்க மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 4, 5
வீடியோப் பதிவைப் பார்த்து, சிந்தித்து, அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றை விளக்குமாறு ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்தவும். தாம் கண்டறிபவற்றை மாணவர்கள் தமக்கிடையில் பரிமாறிக்கொள்வார்கள். பின்பு, அச்செயற்பாட்டை வீட்டிற்குச் சென்று, வீட்டாரின் உதவியுடன் காணொளியிலிருந்து பெற்றபடிப்பினைகளை எழுதி, முழுமைப்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மாணவர்களின் புத்தகங்களிலிருந்து பின்வரும் கேள்விகளை கவனமாகப் படிக்கச் சொல்லி, தனித்தனி அட்டைகளில் பதிலளிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தவும்.
ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை மற்றொரு நண்பரின் அட்டையுடன் மாற்றி, மதிப்பீடுசெய்துகொள்ள வேண்டும். பின்பு அட்டைகள் ஒன்றுசேர்க்கப்படவேண்டும்.
மாணவர்கள் முன்னிலையில் மதிப்பீடு செய்ய அவற்றில் சிலதை தோராயமாக தேர்வு செய்யவும். அதனூடாக அவர்களுக்கு சரியான பதில்களையும் தவறான பதில்களையும் அடையாளப்படுத்தவேண்டும்.
அட்டைக்குரிய மாணவரின் பெயரையும், அதனை மதிப்பீடு செய்தவரின் பெயரையும் கூறவேண்டும்.
Q1: (அறிவுரையின் குறிக்கோள்) - (அறிவுரையில் இரகசியம் பேணல்) - (அறிவுரையை ஏற்காமல் பெருமை கொள்ளுதல்).
பயற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வருவற்றினூடாக உணர்த்தலாம் :
அறிவுரை வழங்குவோர் மற்றும் அறிவுரை வழங்கப்படுவோரின் ஒழுங்குகள் எந்தளவு அமுல்படுத்தப்படுகின்றன என்பதை அறிய, ஒவ்வொரு மாணவரும் தனக்கு நெருக்கமான மனிதர்களது தொடர்பாடல்களின் யதார்த்த நிலையை ஆராய வேண்டும். ஏதாவது எதிர்மறையானவற்றைக் கவனித்தால், அறிவுரையின் ஒழுங்கைப் பேணி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
பாடத்தில் வந்துள்ள ஒழுக்கங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்தல்.
வெளியீட்டுரை-பதிப்புரை
மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவையும், தெளிவுகளையும் வழங்கி, அல்குர்ஆன் ஹதீஸ் மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக .
ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள் மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இறைவாழ்த்துக்குப் பின் : அறிவைத் தேடுவதென்பது, அமல் (நற்செயல்) செய்வதற்கு முன் ஒரு அடியானின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். '(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத்தகுதியான வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்'.
முஹம்மத் (19)
மார்க்க அறிவு என்பது இச்சமூகத்தின் மிகப்பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும் , இஸ்லாமிய ஆளுமையை அடையாளப்படுத்தும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
ஆகையால், மார்க்க அறிவின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மக்களை விவேகம் மற்றும் அழகிய உபதேசத்தின் மூலம் இஸ்லாத்தின் பால் அழைத்தல், மேலும் வெளிநாட்டவர்களுக்கு அறிவூட்டல், மற்றும் ஷரீஆ ரீதியாக அவர்களைத் தகுதிப்படுத்தல்; போன்ற நிகழ்ச்சித் திட்டங்களுடன் இயங்கிவருகிறது. அந்த வகையில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களில் ஓர் அங்கமாக (எனது மார்க்கத்தில் எனக்கு விளக்கத்தை தருவாயாக) எனும் தொனிப்பொருளில் ஏழு மொழிகளில் பாடநெறிகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், மார்க்கக் கல்விக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்துவதில் புலமை கொண்ட, 'பஸாஇர் - கல்வி ஆலோசனை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, சங்கத்தினால் வழங்கப்படும் தரவுகள் அடங்கலாக, இப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அது கைச்சாத்திட்டுள்ளது. இதனடிப்படையில், ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்றவகையில் மாணவர் நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன:
முதலாம் தரம் 40 பாடங்களை உள்ளடக்கியுள்ளது
இரண்டாம் தரம்; 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
மூன்றாம் தரம் - இது 30 பாடங்களைக் கொண்டுள்ளது.
பாடங்களை வினைத்திறனுடன் கற்பிப்பதற்கு உதவும் வகையில், மாணவருக்கான ஒவ்வொரு பாடநூலுடனும் ஆசிரியருக்கான வழிகாட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட ஆவணத்தை மேம்படுத்தல், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளைத் தயாரித்தல் ஆகியன, மார்க்கக் கல்விப் பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவால் தீர்க்கமான தயாரிப்பு மற்றும் நுணுக்கமான மதிப்பாய்வு போன்ற செயல்முறைகளினூடாக கடந்து வந்துள்ளன.
இறுதியாக, இச்செயற்திட்டத்தின் மூலம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நல்ல பல நன்மைகள் கிட்ட வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம். இப்புத்தகத்தை அழகிய முறையில் வெளிவர பங்களிப்புச்செய்த அனைவருக்கும் நற்பாக்கியமும், சுவனமும் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக்கொள்வதோடு, இப்புத்தகம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எமது சமூகவலைத்தளத்தின் மூலமும், தொடர்பு இலக்கம் மூலமும் தெரிவிப்பதை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக!
அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்
முகவுரை
புகழனைத்தும் தனித்தவனாகிய அல்லாஹ்வுக்கே! ஸலாதும் ஸலாமும் இறுதி நபி முஹம்மத் பின் அப்துல்லாஹ், மற்றும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தவர், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக. மதிப்பிற்குரிய ஆசிரியரே, கற்பித்தல் பணி மிக கண்ணியமிக்க பணிகளில் ஒன்றாகும். இது நபிமார்கள், சீர்திருத்தவாதிகளின் பணிகளிலுள்ளதாகும். பொதுவாக சமூகத்தையும், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தையும் மேம்படுத்துவதில் இதற்குப் பாரிய பங்களிப்புண்டு.
உமது பாரிய பங்களிப்பை மெச்சி, உமது பணியை செவ்வனே நிறைவேற்றிட உதவும் இவ்வழிகாட்டியை நாம் உமக்கு வழங்குகிறோம்.
இதன்மூலம், கற்பித்தல் பணி அதிக சுவாரஸ்யமுள்ளதாகவும், சிறந்த பெறுபேறுகளை கொண்டதாகவும் அமையமுடியும். மாணவர்களின் தரங்கள் மற்றும் சூழலுக்குப் பொருந்தும் வகையில் பாடங்களுக்கான திட்டவரைபுகளை இவ்வழிகாட்டி கொண்டுள்ளது.
மேலும் பாடநூலின் நோக்குகள், இலக்குகளுடனும், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளுடனும் தொடர்புடையதாகவும் இது உள்ளது.
ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள பாடக் கூறுகள்
இந்த வழிகாட்டி நூல் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பிரதான பல தலைப்புக்களை உள்ளடக்கியது. அவையே கற்பித்தல் முறையின் மிக முக்கியமான பகுதிகளாகும். பின்வருவன இப்பிரதான கூறுகளில் முக்கியமானவையாகும் :
தரவு பெட்டி:
இதில் பாடத்திற்கான உத்தேச நேரம், கற்க வேண்டிய புதிய சொற்கள், பயன்படுத்தப்படும் பாடஅலகுகள், பாடம் குறிப்பிடும் பெறுமானங்கள் மற்றும் நோக்குகள் மற்றும் முன்மொழியப்பட்ட கற்பித்தல் உத்திகள் ஆகியன உள்ளன.
பாடத்தை கற்பிக்கும் படிமுறைகள் :
இவை பின்வரும் படிமுறைகளை உள்ளடக்கியுள்ளன :
1. பாடத்தின் அறிமுகம்: மாணவரை பாடத்தின்பால் ஈர்க்கும் நோக்கில் இது பல முறைகளைக் கொண்டு அமையும்: பாடத்தின் நுழைவாக அமையும் வகையில் சிறு சிறு வினாக்கள், பாடத்துடன் தொடர்பான நடைமுறைச் சம்பவம், சென்ற பாடத்துடன் இன்றைய பாடத்தைத் தொடர்புபடுத்துதல், நவீன கற்பித்தல் வழிகளைப் பயன்படுத்துதல் ஆகியன இவற்றுள் சிலவாகும்.
2. இறுதிச்சுருக்கம் : ஒரு தனி மாணவர் குறித்த தலைப்பில் கற்ற பின் அவர் பெற்றுக்கொள்ளும் அறிவுகள், விளக்கங்கள், யதார்த்தங்களையே இதன் மூலம் நாம் நாடுகிறோம். மாணவர்களின் புரிதல்களாக இருக்கவேண்டிய பதில்களை இவ்வழிகாட்டி உள்ளடக்கியுள்ளது. அதில் கவனம் செலுத்தி, மாணவர்களுக்கு அதனைத் தமது அப்பியாசப் புத்தகங்களில் எழுத வழிகாட்டுவது ஆசிரியரின் கடமையாகும்
3. செயற்பாடுகள் : பாடத்தின் உள்ளடக்கத்தில் இருக்க வாய்ப்புள்ள குறைபாடுகளை நிரப்பும் நோக்கில், மாணவர் படித்த பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதை புதிய சூழ்நிலைகளில் நடைமுறைப்படுத்த பயிற்சி அளிப்பதை இது குறிக்கின்றது. ஆசிரியர் தனது மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் இணைக்கப்பட்டு அதை அடைவதற்கு பங்களிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பாடங்களில் இருந்து கற்றுக்கொண்ட அறிவை நடைமுறையில் உள்ள எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
4. மதிப்பீடு : பாடத்தின் நோக்கங்கள் எந்த அளவிற்கு அடையப்பட்டுள்ளன, மற்றும் எந்தளவு அடையப்படவில்லை என்பதை அளவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, பாடத்தில் உள்ள ஒவ்வொரு கேள்வியும் அதன் நோக்கங்களுடன் எந்த அளவிற்கு தொடர்புடையது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசிரியரின் கல்வியறிவை மேம்படுத்தும் முயற்சியில் பாடங்களின் கேள்விகளுக்கான சில பதில்களை இந்த வழிகாட்டி உள்ளடக்கியது.
5. பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் : இது மாணவர் பாடத்தில் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களை செயற்படுத்தவும், அதை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் நடைமுறைப்படுத்தவும் உள்ளதாகும்.
இந்த வழிகாட்டி அமைக்கப்படுள்ள பண்படுத்தல் அடிப்படைகள்
முதலாவது : பாடத்திட்டத்தின் நோக்கங்கள் :
ஒவ்வொரு பாடத்திற்கும் நடைமுறை நோக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நோக்கங்களை வகுப்பதில் பின்வருபவை கவனிக்கப்பட்டுள்ளன:
இது ஆவணத்தின் திறன்களை நடைமுறையில் கொண்டுவருவதாக இருக்க வேண்டும்.
அறிவு, உணர்வு, திறமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும் விதத்தில் பல்வகைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
அது நடைமுறைச் சாத்தியமுள்ளதாகவும், அடையக்கூடியதாகவும், மாணவர்களின் நிலைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
கற்றல் நோக்கங்களின் நிலைகளுக்கு இடையே படிமுறை பேணல் (நினைவு செய்தல் - புரிந்து கொள்ளுதல் - அமுல்படுத்தல் - பகுப்பாய்வு செய்தல் - ஒருங்கிணைத்தல் - மதிப்பீடு செய்தல்).
ஒரு நல்ல இலக்கை உருவாக்குவதற்கான நிபந்தனைகளைப் பயன்படுத்துதல், அது அளவிடக்கூடிய மற்றும் கவனிக்கக்கூடிய நடத்தை விளைவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இலக்கு கற்பவரின் நடத்தையை விவரிப்பதில் கவனம் செலுத்தக் கூடியதாகவும் அனுபவத்தை வரையறுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவது: உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் ஒழுங்கமைத்தல்:
பாடத்திற்கு வைக்கப்பட்டுள்ள நோக்கங்கள், அதை சரியாக நடைமுறைப்படுத்தல், மேலும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகுதிகளுக்கு பொருந்தும் வகையில் இருத்தல், மாணவர்களின் தரத்திருக்குப் பொருந்துதல், உள்ளடக்கத்தை எளிமையில் இருந்து ஆழத்திற்கு படிமுறையாகச் முன்வைத்தல், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்பதை உறுதி செய்வதன் மூலம் உள்ளடக்கத்தின் உண்மைத்தன்மையில் கவனம் செலுத்துதல், குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி உள்ளடக்கத்தை முன்வைத்தல், மாணவர்களுக்கு வசதியாக உள்ளடக்கத்தில் உள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் உள்ள கடினமான பதங்களை விளக்குதல், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் இடம்பெறும் அத்தியாயம், கிரந்தம் என்பவற்றைக் குறித்தல் என்பவற்றின் அடிப்படையில் உள்ளடக்கம் நிறுவப்பட்டுள்ளது.
மூன்றாவது: கல்வியியல் செயல்பாடுகளைக் கையாள்தல் :
கல்வியியல் செயல்பாடுகளில் பல தரநிலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் சில :
அச்செயல்பாடுகளை பாடத்தின் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தி, அந்நோக்கங்களை அடைவதில் அவற்றின் பங்களிப்பைக் கவனத்திற்கொள்ளல்
மாணவர் தனது ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் அவரது இயல்புநிலை மற்றும் பிற செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் சக மாணவர்களுடன் அவர் ஒத்துழைப்பது போன்றவற்றை கவனித்தல்.
கற்பித்தல் செயற்பாடுகளில் பன்முகத்தன்மை பேணல். செவிமடுத்தல் செயல்பாடுகள், ஆசிரியர் கூறுவதைப் போன்றே திரும்பத் திரும்ப கூறுதலின் அடிப்படையிலான செயல்பாடுகள், ஒரு தலைப்பைப் பற்றிய குறிப்பிட்ட விஷயங்களைச் சேகரிப்பது தொடர்பான செயல்பாடுகள், விளக்குதல், சுருக்கம், வகைப்படுத்துதல் மற்றும் மீள் வடிவமைத்தல் தொடர்பான செயல்பாடுகள், மனப்பாடம் செய்தல், கேட்டல் மற்றும் வாசித்தல் போன்றவற்றுடன் தொடர்பான செயற்பாடுகள், ஒழுங்கமைத்தல் செயற்பாடுகள், கணித செயற்பாடுகள் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.
நான்காவது: கற்பித்தல் சாதனங்கள் , அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
விவரணப்படங்கள், உதாரணங்கள் உள்ளடங்கிய பாடப்புத்தகங்கள்.
வகுப்பறையில் தொங்கவிடப்படும் பெரிய காட்சிப் பலகைகள்
குழுநிலை செயல்பாடுகளுக்கான அட்டைகள்
பதிவு சாதனங்கள்
ஐந்தாவது: மதிப்பீட்டு முறைகளின் பன்முகத்தன்மை :
உள்ளடக்க பாட கேள்விகளை உருவாக்குவதில், அவை பாடத்தின் நோக்கங்களுடன் பொருந்திப் போவது பேணப்பட்டுள்ளது. மேலும் மாணவரின் கிரகித்தல் திறமையை அளவிட, சரி, பிழை கேள்விகள், இணைத்தல், பல தேர்வு, இடைவெளி நிரப்பல் மற்றும் வரிசைப்படுத்துதல் ஆகிய அமைப்பில் கேள்விகளில் பன்முகத்தன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிவை மாணவர் பின்பற்றும் நடத்தைகளாக மாற்ற முயற்சிப்பதன் மூலம் உணர்ச்சி மற்றும் திறன் அம்சங்களை அளவிடவும் இது பயன்படுத்தப்பட்டது. உணர்ச்சி மற்றும் திறன் அம்சங்களை அளவிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வகுப்பறையில் ஆசிரியர்களாலும், வீடுகளில் பெற்றோராலும் கண்காணிக்கும் மற்றும் பின்தொடரும் முறை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆறாவது: கற்பித்தல் உத்திகள்:
இங்கே - அன்புள்ள ஆசிரியரே! - இந்த வழிகாட்டியில் பயன்படுத்தப்பட்ட சில கற்பித்தல் முறைகள் உள்ளன. அதைப் பற்றியும், அதன் நடைமுறைகள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான படிமுறைகளையும் அறிந்து கொள்வதற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
1. கூட்டுக் கற்பித்தல் முறை
இது ஒரு கற்பித்தல் முறையாகும். அது (2 முதல் 6 மாணவர்கள் கொண்ட)சிறிய மாணவர் குழுக்களுக்குள் கற்றலை அடிப்படையாகக் கொண்டது. இதனால் மாணவர்கள் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். ஒருவர் மற்றவரின் தரத்தை உயர்த்தவும், பொதுவான கற்றல் இலக்கை அடையவும் இம்முறையில் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவரைக் கொண்டு, குழுவிற்குள் பணி பிரிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குழு உறுப்பினர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களின் பதில்களைச் சேகரித்து, ஆசிரியரிடம் வழங்குவார்.
2. கருத்துதிர்ப்பு :
இது சிந்தனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையாகும். மேலும் கருத்துதிர்ப்பு பல்வேறு கல்வி மற்றும் வாழ்க்கை சிக்கல்களைத் தீர்ப்பதில் குழு அல்லது தனிப்பட்ட சிந்தனைக்கான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மன திறன்கள் மற்றும் செயல்முறைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது.
அதற்கு, மிகப் பெரிய அளவிலான பரிந்துரைகள், தீர்வுகள் அல்லது தகவல்களை வழங்குதல், பின்னர் சரியான தீர்வு அல்லது கருத்தைப் பெறுவதற்காக அவற்றைச் செம்மைப்படுத்துதல் ஆகியன அவசியமாகும்.
3. சிக்கலைத் தீர்க்கும் முறை :
இந்த வழிமுறையில், ஒரு மாணவர் தனது அறிவையும் திறமையையும் பயன்படுத்தி, ஏற்கனவே சந்தித்துப் பழக்கமற்ற புதிய வடிவிலான ஒரு சூழ்நிலையை சமாளித்து, அதற்கான தீர்வை அடையலாம்.
சிக்கலை உணர்தல், அதை வரையறுத்தல், அது தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், தீர்வுகளை முன்மொழிதல், அவற்றை ஆராய்ந்து மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தல் என்பவை இதன் படிமுறைகளாகும்.
4. சொற்பொருள் வரைபடங்கள்:
வரைபடங்கள், மன வரைபடங்கள், கருத்து வரைபடங்கள் மற்றும் தகவல் வரைபடங்கள் என்றும் இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. இது ஒரு தலைப்பை அதன் பகுதிகள் ஊடாக பகுப்பாய்வு செய்து, அட்டவணைகள், வட்டங்கள் அல்லது முக்கோணிகள் போன்ற பல்வேறு வடிவங்களிலான வரைபடங்கள் மற்றும் திட்ட வரைபுகள் மூலம் வெளிப்படுத்தப்படும். தகவல்களைப் படிப்பதை எளிதாக்கி, அவற்றுக்கிடையில் இணைத்து, நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டுள்ளன.
5. சமச்சீர் உத்தி :
இந்த மூலோபாயம் மன திறன்களை செயல்படுத்தி, கூறுகள் மற்றும் பொருட்களுக்கு இடையே உள்ள உறவுகளை தெளிவுபடுத்துவதற்கும், ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காணவும் பகுத்தறிவைப் பயன்படுத்த உற்சாகமூட்டுகின்றது. அத்தகைய சிந்தனைக்கு அதிக படைப்பாற்றல் தேவைப்படுகிறது. ஏனெனில் பதில் எப்போதும் பிரதான கூறுகளுக்கு இடையே ஒரு புதிய பார்வையை வேண்டி நிற்கிறது.
6. கதைகூறும் முறை :
உற்சாகம், கவர்ச்சி மற்றும் மாணவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தல் என்பவை கதை பாணியின் தனித்துவங்களாகும். கதை கற்பனையை வளர்க்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. முடிவுகளுடன் அறிமுகங்களை இணைக்கச் செய்கின்றது. மற்றும் வெறும் ஒரு கருத்தை புலனுறுப்புக்களால் உணர முடியுமான யதார்த்தமாக மாற்றுகிறது. கதை, நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்பைச் சார்ந்தது. அதே நேரத்தில் மாணவர் அவற்றுடன் ஊடாடவும், தான் கற்பவற்றுடன் அவற்றை இணைத்துப் பார்க்கவும் தூண்டுகிறது. கதையை முன்வைக்கும் மொழி, பாணி மற்றும் மாணவர்களுக்கு அது பொருத்தமாக இருப்பது என்பவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
7. வாழ்க்கை பயன்பாட்டு முறை :
இந்த முறையானது, தகவல்களை வாழ்க்கை சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளுடன் இணைக்க முயற்சிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாணவர், உள்ளடக்க பாடங்களை ஆர்வத்துடன் படிக்க உதவும். ஏனெனில் அதில் சில தவறுகள் மற்றும் எதிர்மறையான விடயங்கள் திருத்தப்படுவதையும், நேர்மறையான விடயங்கள் ஆர்வமூட்டப்படுவதையும், மேலும், இஸ்லாம் கொண்டு வந்த சட்டத் தீர்ப்புகள் மற்றும் ஒழுக்க விதிகளுடன் இணைக்கப்படுவதையும் காண்பார். எனவே இஸ்லாம் தனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது என்று அம்மாணவர் உணர்வார்.
சிந்தி-ஒருங்கிணை-பகிரு எனும் உத்தி:
சிந்தி-ஒருங்கிணை-பகிரு எனும் உத்தி மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு கூட்டு விவாத உத்தி ஆகும்: முதலாவதாக, கேள்விக்கு பதிலளிப்பது அல்லது செயல்பாட்டைச் செய்வது பற்றி மாணவர் தனியாக சிந்திக்கும் வாய்ப்பை ஆசிரியர் வழங்குவார். இரண்டாவதாக, அவர் தனது பதிலை தனது சக நண்பர் ஒருவருடன் விவாதிப்பார். மூன்றாவதும் இறுதியானதுமான கட்டத்தில் குழுவின் கருத்தை வெளிப்படுத்தும் பொதுவான பதிலைக் கண்டறிய, குழு உறுப்பினர்கள் எட்டப்பட்ட பதில்களைப் பற்றி தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதிலும் அவற்றைப் பற்றி விவாதிப்பதிலும் ஒத்துழைப்பார்கள்.
கற்றல் செயல்பாட்டில் இந்த உத்தி மிகவும் முக்கியமானது. மாணவர்கள் தகவல்களை திறம்படக் கையாள உதவுவதால், அவர்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்து, அவர்களின் சிந்தனையை மேம்படுத்துகிறது.
9. முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் :
முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் என்பது, கற்பித்தல் சூழ்நிலையின் தொடக்கத்தில், தலைப்பின் அமைப்பு மற்றும் கையாளப்பட வேண்டிய தகவல்கள் பற்றிய சுருக்கமான, அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதாகும். இதன் நோக்கமாவது, கருத்தாக்கங்கள், சிந்தனைகள் மற்றும் தலைப்புடன் தொடர்புடைய விவகாரங்களைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குவதும், மாணவர் ஏற்கனவே அறிந்ததை அவர் தெரிந்து கொள்ள வேண்டியவற்றுடன் இணைப்பதுமாகும்.
முன்கூட்டிய ஒழுங்கமைப்புகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: அவை, எழுதப்பட்ட முன்கூட்டிய அமைப்புகள் மற்றும் எழுதப்படாத முன்கூட்டிய அமைப்புகள் ஆகும். எழுதப்பட்ட அமைப்புகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன: அவை விளக்க ஒழுங்கமைப்புகள் மற்றும் ஒப்பீட்டு ஒழுங்கமைப்புகள் ஆகும்.
எழுதப்படாதவற்றைப் பொறுத்தவரை, அவை ஆடியோ, காட்சி, ஆடியோ-காட்சி மற்றும் வரைபு அமைப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வரைபு அமைப்புக்கள்,தோற்றப்பாடுகளின் சில பகுதிகளை வரைபுகளில் காட்சிப்படுத்தும். இது ஒரு வரைபு அட்டவணையாகவும் இருக்கலாம். பாடத்தின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு இது காட்டப்படும்.
10. முன்கணிப்பு :
இந்த முறையில், கற்பிப்பவர் கருதுகோள்களை உருவாக்குவார். அல்லது தலைப்பில் என்ன விவாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கூறுவார். இது கற்பவருக்கு ஒரு இலக்கை வழங்குகிறது. மற்றும் உள்ளடக்கத்தைக் கற்கும் போது, தனது அனுமானங்கள் சரியானதா? பிழையானதா? என அறிந்துகொள்ளும் நோக்கில் கவனம் செலுத்த வழிவகுக்கின்றது. கற்றவர் ஏற்கனவே தன்னிடம் உள்ள தகவல்களுடன் புதிய தகவலை இணைக்கும் வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.
படிக்கப்படும் தலைப்பு என்ன என்பதை அனுமானிக்க, பின்வருவனவற்றின் மூலம் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு உதவலாம் :
தலைப்பை வாசித்தல், பாடத்தின் நோக்கங்களைக் கண்டறிதல், அல்லது கேள்விகளைப் பயன்படுத்துதல்.
11. சுய கேள்வி (கேள்விகளை உருவாக்குதல்)
இம்முறையானது, கற்றல் செயல்முறையின் போதும், அதற்கு முன்னரும், பின்னரும் தலைப்பைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், சுய விழிப்புணர்வை உருவாக்குதல், உள்ளடக்கத்துடன் ஊடாடுவதை எளிதாக்குதல், புரிந்துகொள்ளுதல் மற்றும் நினைவுபடுத்திக்கொள்ளல் செயல்முறையை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, கற்கும் ஹதீஸ்களை அணுகும் போது, மாணவர் தனக்குள்ளேயே பல்வேறு கேள்விகளை தொடுத்துக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இது அவர் கற்றுக் கொள்ளும் தகவல்கள் மற்றும் அவர் அடையும் அறிவு ஆகியவற்றுடன் அவரை மேலும் நெருக்கமாக்கிவிடுகின்றது. சிந்தனை செயல்முறைகள் பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது.
12. எனக்குத் தெரியும் - நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன் (KWL) என்ற உத்தி:
இந்த உத்தி மாணவர்கள் தலைப்பில் உள்ள தகவலை முன்கூட்டியே அறிந்து, அதை அவர்களின் முந்தைய அறிவோடு இணைக்க உதவுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அந்தத் தலைப்பைப் பற்றிய மாணவர்களின் புரிதல் மற்றும் அவர்களின் கருத்தியல் பிழைகளை மதிப்பிடுவதற்கும் ஆசிரியர் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த உத்திக்கு KWL எனக் குறிக்கப்படுகிறது, இது பின்வரும் சொற்றொடர்களின் சுருக்கமாகும்:
(K): know (தெரியும்), (W): Want (தெரியவேண்டும்), (L): Learned (கற்றது).
முதல் வார்த்தை கற்பவர் பாடத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்ததை குறிக்கின்றது. இரண்டாவது வார்த்தை, அவர் பாடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவற்றைக் குறிக்கின்றது. மூன்றாவது வார்த்தை, மாணவர் பாடத்தைப் பற்றி பின்னர் கற்றுக்கொண்டதை குறிக்கின்றது.
13. முன்னோக்குகளை பகுப்பாய்தல் உத்தி :
இந்த மூலோபாயம் கற்பவர் தனது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது. மேலும் அவர் ஏற்றுக்கொண்டுள்ள, விவகாரங்களைப் பற்றிய அவரது பார்வையிலும், நிகழ்வுகளுடனான அவரது எதிர்வினையாற்றலிலும் தாக்கம் செலுத்துகின்ற கருத்துக்கள், சிந்தனைகள், கொள்கைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கண்ணோட்டங்கள் ஆகியவற்றை பல்வேறு சூழ்நிலைகளில் வெளிப்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது. இந்த மூலோபாயம் அவரது கண்ணோட்டங்களைப் பற்றி மேலும் ஆழமாக சிந்தித்து, அது எந்தளவு சரியானது, குறிப்பிட்ட சூழ்நிலைக்கோ, அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்கோ எந்தளவு பொருத்தமானது என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை அவருக்கு வழங்கும். கண்ணோட்டத்தை பகுப்பாய்வு செய்வதன் விளைவாக, (அது பொருத்தமானது மற்றும் சரியானது என்றால்) அதனை ஆதரித்து ஏற்றுக்கொள்ளவோ, அல்லது (தேவைப்பட்டால்) அதில் மாற்றங்கள் செய்யவோ அல்லது (அது பொருத்தமற்றது மற்றும் தவறானது என்றால்) அதனை நிராகரிக்கவோ வழிகாட்டுகின்றது.
இறுதியாக, மதிப்பிற்குரிய ஆசிரியரே:
இந்த வழிகாட்டி உங்கள் கைகளில் உள்ள ஒரு கருவியாகும். அது நன்றாகப் பயன்படுத்தப்பட்டால் அது பலனைத் தரும். இல்லையெனில் அது எப்பயனையும் தரமாட்டாது. உங்கள் திறன்களை மட்டுப்படுத்துவதோ அல்லது உங்கள் படைப்பாற்றலை தடுப்பதோ இதன் நோக்கமல்ல.
அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் பகுதி
பாடம் ஒன்று: அல்குர்ஆனைக் கற்றுக்கொள்வதினதும், கற்பிப்பதினதும் சிறப்பு
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(புனித குர்ஆன் - கெளரவமான தூதர்கள் - தட்டுத் தடுமாறுகிறார்.)
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - சில குர்ஆன் வசனங்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ)
சில குர்ஆன் வசனங்கள்.
கற்பித்தல் உத்திகள்:
(கூட்டு கற்கைமுறை - உரையாடல் - கருத்துதிர்ப்பு)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
புனித அல்குர்ஆனின் மகிமையை மகத்துவப்படுத்தல்.
அல்குர்ஆனைக் கற்கவும், கற்பிக்கவும் ஆர்வங்கொள்ளுதல்.
குர்ஆனுடையோரை கண்ணியப்படுத்துதல்.
அல்குர்ஆனையும் அதனுடையவர்களையும் நேசித்தல்
அல்குர்ஆனின் அர்த்தங்களை ஆராய்தல்.
பாடத்தின் அறிமுகம்:
நபி (ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸை விளக்கி, மாணவர்களை திருக்குர்ஆனைப் படிக்கத் தூண்டுவதனூடாக, பாடத்தை ஆரம்பிக்கவும் : "எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒர் எழுத்தை ஒதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை அதைபோன்ற பத்து மடங்காகும் .அலிப்,லாம், மீம் என்பது ஒர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒர் எழுத்து, லாம் ஒர் எழுத்து, மீம் ஒர் எழுத்தாகும்".
பின்னர், அல்குர்ஆனைக் கற்பதினதும், கற்பிப்பதினதும் கூலி அதனை ஓதுவதன் கூலியை விட பாரியது என்பதை அவர்களுக்குக் கூறி, பாடத்தின் உள்ளடக்கத்திற்கு அவர்களைக் கொண்டு சென்று, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
பாடத்தை அமைதியாக வாசிக்கும்படி மாணவர்களைக் கோரி, ஒவ்வொன்றும் விரிவாக விவாதிக்கப்பட, பாடத்தின் முக்கிய கூறுகளை கரும்பலகையில் எழுதுமாறு ஒருவரைப் பணிக்கவும்.
இரண்டாம் கட்டம் :
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, கூட்டு கற்றல் முறையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.
பின்னர் ஒவ்வொரு குழுவும் புனித குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு கோரவும்.
கிடைத்த பெறுபேற்றை கரும்பலகையில் எழுத குழுவில் உள்ள மாணவர்களில் ஒருவரை நியமிக்கவும்.
அவர்களின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
உரையாடல் மற்றும் விவாதித்தல் முறையைப் பயன்படுத்தி, பின்வரும் கேள்விகளை மாணவர்களுடன் விவாதிக்கவும்:
அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பதன் சிறப்பு என்ன?
அல்குர்ஆன் ஓதுவதன் கூலியென்ன?
இறுதிச்சுருக்கம் :
அவர்களின் பதில்கள் மூலம்; பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட முடிவுகளை நீங்கள் அடைந்து, பின்னர் அவற்றை கரும்பலகையில் எழுதுங்கள்.
1. ஒவ்வொரு முஸ்லிமும் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது இல்லாமல் தொழுகை செல்லாது.
2. ஒரு முஸ்லிம் புனித குர்ஆனைப் ஓதக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதுடன், அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
3. திருக்குர்ஆனைக் கற்கவும் ஆராயவும் ஒன்று சேருபவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பெரும் சிறப்புகளை வாக்களித்துள்ளார்கள்.
4. திருக்குர்ஆனைக் கற்று மற்றவர்களுக்குக் கற்பிப்பவர்களுக்கு அல்லாஹ் உயர் பதவியை வழங்குகிறான்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தெளிவுபடுத்துதல். நோக்க இலக்கம் : 2
ஒவ்வொரு மாணவரும் முதல் செயல்பாட்டை தனித்தனியாகச் செய்யுமாறு அறிவுறுத்தவும். அதே சமயம் பாடத்தின் உள்ளடக்கத்திற்குச் செல்லுமாறும், குறிப்பாக புனித குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்வதற்குக் கிடைக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பான பகுதிக்குச் செல்லுமாறு வழிகாட்டவும். தாம் கற்றுக் கொண்டவற்றை முன்வைக்க சில மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை மதிப்பீடு செய்யவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 வகை மற்றும் நோக்கம்: தனிநபர் முறை, குர்ஆனைக் கற்க சிறந்த பொருத்தமான நுட்பங்களை அடையாளம் காணுதல். நோக்க இலக்கம் : 4
இரண்டாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, தனியான அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் துல்லியமான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரைப் பாராட்டவேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க, பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்:
1. கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும்.
2. ஒவ்வொரு குழுவும் ஏதேனும் ஒரு கேள்விக்குக் கற்பித்தல் அட்டையில் பதிலளிக்க வேண்டும்.
3. மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவுடன் பதில்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
4. சரியான பதிலைக் கூறிய குழுவைப் பாராட்ட வேண்டும்.
கே 1 : () - ()- ()- ()
கே 2: (இரண்டும் - அதிகமாக ஓதுதல் - ஓதப்பட்ட வசனம்)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அல்குர்ஆனைக் கற்கவும், கற்பிக்கவும் வகுப்புகளை நிறுவுதல்.
அல்குர்ஆன் ஓதல் முறையை ஒவ்வொரு மாணவரும் தமது குடும்ப உறுப்பினர்களுக்குக் கற்றுக்கொடுத்து, சில அத்தியாயங்களை மனனமிட வைத்தல்.
பாடம் இரண்டு : ஸூரா பகராவின் இறுதி வசனங்களின் விளக்கம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நாம் வேறுபடுத்துவதில்லை - மீளுதல் - அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை - அவருடைய சக்திக்குட்பட்டது - எங்களைக் குற்றம்பிடிக்காதே - சுமை).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - குர்ஆன் வசனங்களின் ஆடியோ பதிவு - புனித குர்ஆன் பிரதி - கற்பித்தல் படங்கள்).
கற்பித்தல் உத்திகள்:
(முன்கணிப்பு முறை - சொற்பொருள் வரைபடங்கள் - கதை முறை - ஆராய்ந்தறிதல் முறை - விவாத முறை)
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
இஸ்லாமிய ஷரீஆ இலகுவானது எனும் அருட்கொடையை உணர்தல்.
நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் மகத்துவத்தை கண்ணியப்படுத்தல்.
அனைத்து நபிமார்கள், இறைத் தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுதல்.
இஸ்லாமிய ஷரீஆ இலகுவானது என உறுதிகொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
முன்கணிப்பு முறையைப் பயன்படுத்தி பாடத்தை ஆரம்பிக்கவும். ஸூரா பகராவின் கடைசி இரண்டு வசனங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் கணிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். மேலும் அவர்களின் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு பொருத்தமான பின்னூட்டல்களை வழங்கவும்.
பின்னர் அவர்களிடம், அதில் இரண்டு விஷயங்கள் உள்ளன என்று கூறவும் : முதலாவது : நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்கள் ஈமானின் தூண்களை உண்மைப்படுத்தியதாக சாட்சி பகர்தல். இரண்டாவது : அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் முறையை விளக்குதல், பின்பு தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஆசிரியர் மாணவர்களை ஆடியோ ஊடகம் மூலம் பாடத்தின் வசனங்களைக் கேட்கும்படி அறிவுறுத்த வேண்டும், பின்னர் அதனை ஓதுவதற்காக அவர்களில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விடும் பிழைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பின்னர் மாணவர்கள் அவ்வசனங்களை அமைதியாக ஓதி, அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான வார்த்தைகளை அடையாளம் கண்டு, வசனங்களின் தொடர் மூலம் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அடையாளம் காண முயற்சிக்கவும். அப்பக்கத்தின் அடிக்குறிப்பில் அதனை எழுதவும்.
இரண்டாம் கட்டம்:
வசனங்களின் சிந்தனைகளை உள்ளடக்கிய சொற்பொருள் வரைபடத்தை மாணவர்களுக்கு நீங்கள் காட்டி, மேலும் அதை விளக்குவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் தயாராவதற்காக அதைப் பற்றி சிந்திக்கும்படி அவர்களிடம் கேட்கவும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களை ஈமான் கொள்வது தொடர்பான வசனங்களை ஆசிரியர் தெளிவுபடுத்தி எடுத்துரைப்பதோடு, மாணவர்கள் இந்தப் பகுதியைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவை பற்றிய கேள்விகளைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
கதைகூறும் முறையைப் பயன்படுத்தி, வசனங்களில் அல்லாஹ் கூறியுள்ள பிரார்த்தனையை மாணவர்களுக்கு விளக்கவும்.
இறுதிச்சுருக்கம் :
மாணவர்களை மும்மூன்று பேராகப் பிரித்து, அவ்வசனங்களில் இருந்து பெறமுடியுமான படிப்பினைகளைப் பெற தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். ஒவ்வொரு குழுவும் தாங்கள் பெற்றவற்றைக் கரும்பலகையில் எழுதுமாறு கூறவும். குழுக்களுக்கிடையில் ஒப்பிட்டு, மிகத் துல்லியமான பதில்களை அடையாளப்படுத்தி, அவற்றை தங்கள் குறிப்பேடுகளில் எழுத வைக்கவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஸூரா பகராவின் இறுதி வசனங்களின் சிறப்பை அறிதல்.
நோக்க இலக்கம் : 2
முதலாவது செயல்பாட்டிலுள்ள ஹதீஸை பலகையில் காட்டி, மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அதை வாசிக்கச் செய்யவும். விவாதங்கள் ஊடாக, செயல்பாட்டின் கேள்வியை அவர்களிடம் முன்வைத்து, அதற்கான பதில்களைப் பெறவும். அத்துடன் பதிலில் பங்கெடுக்காதோரை பங்கெடுக்க உற்சாகப்படுத்தவும். பின்னர் சரியான விடையை அனைவரும் கொப்பியில் எழுத வழிகாட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, அல்லாஹ் இச்சமூகத்திற்கு வழங்கியுள்ள சிறப்பையும், மன்னிப்பையும் தெளிவுபடுத்துதல். நோக்க இலக்கம் : 4
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் செயற்பாட்டைச் செய்வதில் தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு வழிநடத்தவும். குழுக்கள் செயற்படும்போது, அவர்கள் ஒத்துழைப்பதையும், செயல்பாட்டுக்கான பதிலை ஹதீஸில் தேடுவதையும் உறுதிசெய்ய அவர்களைக் கண்காணிக்கவும்.
செயல்பாட்டிற்கான ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, குழுக்களிடையே ஒப்பிட்டு, மிகவும் சரியான பதில்களை அடையாளம் காணவும். பின்னர் ஒவ்வொரு குழுவும் தாம் விட்ட தவறுகளை சரிசெய்யவேண்டும். சிறந்த முறையில் பதிலளித்த குழுவைப் பாராட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் உள்ள இலகுபடுத்தல் பற்றி விவாதித்தல். நோக்க இலக்கம் : 4
மாணவர்களின் முந்தைய அறிவைச் சார்ந்து, இஸ்லாமிய சட்டத்தின் இலகு மற்றும் எளிமை பற்றி அவர்களுக்குத் தெரிந்ததை நினைவுபடுத்தும்படியும், தொழுகை, ஸகாத், நோன்பின் சட்டங்களிலிருந்து அதற்கான உதாரணங்களைக் காட்டும் படியும் அவர்களிடம் கேட்கலாம். அவர்களின் பதில்களைக் கண்டறிந்து, மதிப்பீடு செய்து, சரியான பதிலைத் தெளிவுபடுத்தவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
முதல் கேள்விக்கு ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்துங்கள். பின்னர் அவர்களுடன் தமது பதில்களைப் பற்றி விவாதிக்கவும். ஒவ்வொரு மாணவரும் தனது சரியான பதிலுக்கு தானே ஒரு மதிப்பெண்ணைக் கொடுக்க வேண்டும். பின்பு, மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கே 1 : - -
இரண்டாவது கேள்வியில் சரியான தேர்வை கரும்பலகையில் எழுத மூன்று மாணவர்களைத் தேர்வு செய்யவும், அவர்களின் வகுப்பு தோழர்கள் அவர்களை மதிப்பீடு செய்து சரியான பதிலை தமது புத்தகங்களில் எழுத வேண்டும்.
கே 2 : மறதி - அவர்கள் மோசமாக அநீதி இழைத்தமை - இரவுத் தொழுகை
மூன்றாம் மற்றும் நான்காம் கேள்விகளுக்கு பதிலளிக்க இவ்விரு மாணவர்களாக ஒத்துழைப்பதுடன், ஆசிரியர் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்களிடம் செல்ல வேண்டும். சிறந்த பதில் குழுவைத் தேர்வு செய்து, சக நண்பர்களுக்கு சரியான பதிலைப் படிக்க வைத்து, ஒவ்வொரு குழுவினதும் தவறுகளை சரி செய்யப் பணிக்கவேண்டும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நபித்தோழர்களின் சிறப்புகள் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவதன் அவசியத்தைப் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்காக, மூலதாரங்களில் ஒன்றை அணுகி, அதில் புரிந்துகொண்டதைத் தொகுத்து அடுத்த சந்திப்பில் வழங்குதல்.
இஸ்லாமிய சட்டத்தின் இலகுபடுத்தல் மற்றும் எளிமைக்கான எடுத்துக்காட்டுகளை அதிக எண்ணிக்கையில் சேகரிப்பதில் மாணவர்கள் ஒத்துழைப்பதுடன், அதே நேரத்தில் அதனுடன் தொடர்புடைய மார்க்க ஆதாரங்களையும் பயன்படுத்துதல்.
பாடம் மூன்று: ழுஹா, ஷர்ஹ் மற்றும் தீன் அத்தியாயங்களின் விளக்கம்
கால அளவு: இரு பாடவேளைகள்
புதிய சொற்கள்:
(ஒடுங்கிக் கொண்டது - வெறுத்தான் - அரவணைத்தான் - வழிகாட்டினான் - தன்னிறைவாக்கினான் - முதுகை முறித்தது - கீர்த்தி - சிரமப்படவும் - அத்தி - ஆலிவ்கள் - மற்றும் தூர்ஸினா மலை - அபய நகரம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள் - அந்த ஸூராக்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ)
-
கற்பித்தல் உத்திகள்:
(பரஸ்பர போதனை: "முன்கணித்தல் - கேள்வி எழுப்புதல் - விளக்குதல் - சுருக்கம்").
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை மகிமைப்படுத்துதல்.
• அநாதைகள், பலவீனர்கள், வறியவர்களுக்கு உபகாரம் செய்தல்.
• அல்லாஹ் தனது அனைத்துப் படைப்பினங்களுடனும் இரக்கமுள்ளவன் என்பதை உறுதியாக நம்புதல்.
• புனித நகரமாகிய மக்காவின் மகிமையை கண்ணியப்படுத்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
அல்குர்ஆனை எடுத்து ழுஹா, ஷர்ஹ், தீன் ஆகிய அத்தியாயங்களை ஓதுமாறு மாணவர்களிடம் வேண்டவும். பின்பு, அந்த ஸூராக்கள் பேசும் ஏதாவது மூன்று கருத்துக்களை கண்டறிய அவர்கள் ஒவ்வொருவரையும் பணிக்கவும். மேலும் ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை தனது கொப்பியில் எழுத வேண்டும். பாடம் முடியும் வரை அதை மதிப்பிடுவதை ஒத்திவைத்து, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
மாணவர்கள் ஓடியோ பதிவின் மூலம் மூன்று ஸூராக்களையும் கேட்டு, அவற்றைப் பற்றி சிந்தித்து, அவற்றில், விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய சொற்களை அடையாளம் காண வேண்டும்.
இரண்டாம் கட்டம் :
மாணவர்கள் வசனங்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்பதுடன், ஆசிரியரும் பின்வருவன போன்ற மேலும் சில கேள்விகளை இணைத்துக்கொள்ளவேண்டும் :
கே : இவ்வசனங்களில் இடம்பெற்றிருப்பது போல், அல்லாஹ்விடத்தில் நபி (ஸல்) அவர்களுக்குள்ள மதிப்பைத் தெளிவுபடுத்தவும்.
கே: ஸூரா ழுஹாவில் உள்ள இறைக் கட்டளைகள் என்ன?
கே: ஸூரா ஷர்ஹில் இடம்பெற்றிருக்கும் நபி (ஸல்) அவர்களின் சிறப்பைக் கண்டறியவும்.
கே: நபி (ஸல்) அவர்கள் விடயத்தில் ஒரு முஸ்லிமின் கடமை என்ன?
கே: (தூர்ஸீனா - அபய நகரம் - அழகிய தோற்றம்) ஆகியவற்றின் அர்த்தம் என்ன?
பின்னர் கற்பித்தல் உத்தியின் மூன்றாம் கட்டத்தை அடைய, ஆசிரியர் இந்த கேள்விகளை விளக்கி, தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் கேள்விகளை குர்ஆன் வசனங்களுடன் இணைத்து, போதுமான விளக்கத்தை அவ்வசனங்களுக்கு வழங்கவேண்டும்.
இறுதிச்சுருக்கம் :
(பரஸ்பர கற்பித்தல்) உத்தியின் நான்காவது கட்டத்தை அடைவதற்கு - இது சுருக்கம் தொடர்பானது - புனித வசனங்களிலிருந்து மிக முக்கியமான அறிவுறுத்தல்கள் மற்றும் நன்மைகளை எழுத ஆசிரியர் மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
எழுதியதை வாசிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவ்வசனங்களின் பிரதான பயன்பாடுகள் உள்ளடங்கியிருப்பதை உறுதி செய்ய அவற்றுக்குக் கருத்துரை வழங்க வேண்டும்.
ஆசிரியர், மற்றும் எஞ்சிய நண்பர்கள் மூலம் அவற்றுக்குக் கருத்துரை வழங்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ழுஹா, ஷர்ஹ், தீன் அத்தியாயங்களிலிருந்து பெறப்படும் பயன்பாடுகளைக் கண்டறிதல். நோக்க இலக்கம் : 2
முதலாவது செயல்பாட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு இறைவசனத்தையும் கற்பித்தல் அட்டைகளில் ஆசிரியர் எழுத வேண்டும்.
அதில் உள்ள கேள்விக்கு பதிலளிக்க சில அட்டைகளை எழுமாறாகத் தேர்வு செய்வதற்காக சில மாணவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
தனது நண்பரின் பதிலை ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் மதிப்பீடு செய்ய மற்றுமொரு மாணவனைத் தெரிவு செய்ய வேண்டும்.
"(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை".
"திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்".
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். "யாசிப்போரை விரட்டாதீர்".
"ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக". "மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக".
"மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக".
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் வழிகளை ஆராய்ந்தெடுத்தல். நோக்க இலக்கம் : 2
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் முதல் செயல்பாட்டைச் செய்ய ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
முதலிரு கேள்விகளுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு மாணவரும் பதிலளிக்க வேண்டும்.
ஆசிரியர் சரியான பதிலை கரும்பலகையில் காண்பிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தத்தமது பதில்களுக்குப் பொருத்தமான மதிப்பெண்ணை வழங்குமாறு அவர்களிடம் கோர வேண்டும்.
அவர்களது மதிப்பெண்களைக் கண்டறிந்து, பொருத்தமான பாராட்டை வழங்க வேண்டும்.
கே 1 : ()- () - ().
இவ்விரு மாணவர்களாக மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கு பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும்.
மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு குழுவும் தமது பதில்களை அடுத்த குழுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர் சரியான பதிலை அளிப்பதுடன், ஒவ்வொரு குழுவிற்கும் , தாம் மற்ற அணியில் கண்ட தவறுகளை முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
பலவீனர்களுக்கு இரக்கம் காட்டுவதன் அவசியத்தை சமூக வலைத்தளங்களில் பதிவுகளாக எழுதுதல்.
இந்த அத்தியாயத்தின் விளக்கத்திலிருந்து தாம் பெற்ற பிரதான பயன்பாடுகளைத் தமது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் அறிவிக்குமாறு மாணவர்களைப் பணித்தல்.
பாடம் நான்கு : ஸூரா அலக் மற்றும் கத்ரின் விளக்கம்
கால அளவு: இரு பாடவேளைகள்
புதிய சொற்கள்:
(ஒட்டிக் கொள்ளும் இரத்தக் கட்டி - மீளுதல் - கடுமையாகப் பிடிப்போம் - அவனது சகாக்கள் - லைலத் அல்-கத்ர் - ஜிப்ரீல் (அலை)).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - அவ்விரு அத்தியாயங்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
-
கற்பித்தல் உத்திகள்:
(உரையாடல் மற்றும் விவாதித்தல் - கண்டுபிடிப்பு கற்றல் - கூட்டு கற்கை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• கல்வியின் பெறுமதியை மெச்சுதல்.
• பணிவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்பை உணர்தல்.
• அல்குர்ஆனை ஓத ஆர்வங்கொள்ளல்.
• புனித லைலதுல் கத்ர் இரவை கண்ணியப்படுத்தி, அதன் மகத்துவத்தை அறிதல்.
பாடத்தின் அறிமுகம்:
அலக் மற்றும் கத்ர் அத்தியாயங்களையும் அவற்றின் வசன எண்ணிக்கைகளையும் ஆசிரியர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கணினி மூலம் இரண்டு ஸூராக்களையும் முழுமையாக அவர்களுக்கு முன்வைக்க முடியும். பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுத வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
ஆசிரியர் பாடத்தின் இரண்டு ஸூராக்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து: முதல் பகுதி: ஸூரா அலக்கின் வசனங்களைக் கொண்டதாகவும், இரண்டாவது பகுதி: ஸூரா கத்ரின் வசனங்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
குறித்த ஓடியோ பதிவு மூலம் ஸூராவின் முதல் பகுதியைக் கேட்கும்படி ஆசிரியர் மாணவர்களைக் கோர வேண்டும்.
குறைந்த ஓசையில் அதனை மீண்டும் மீண்டும் ஓதி, அதன் கருத்துக்களை விளங்க முயலுமாறு அவர்களிடம் கோர வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
படிப்பினை பெறவும், அல்லாஹ்வின் ஆற்றலை நம்பிக்கை கொள்ளவுமாக, தன்னைப் படைத்திருப்பது பற்றியும், தனது வாழ்கைக் கட்டங்கள் பற்றியும் எப்போதும் சிந்திக்கக் கூடிய மாணவர்களைக் கண்டறியவும்.
அவர்களின் செயல்திறனைப் பாராட்டி, வசனங்களைக் கையாள்வதற்கும் விளக்குவதற்கும் அதை ஒரு தொடக்கப் புள்ளியாக ஆக்கவும்.
மாணவர்கள் வசனங்களைப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையில், பின்வரும் கேள்விகளை முன்வைத்து அவர்களை பதில் அளிக்க வைக்கலாம்.
கே : ஸூரா அலக்கினூடாக, நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்க ஆரம்பித்த நிகழ்வைத் தெளிவு படுத்தவும்.
கே :செல்வம் என்ற அருட்கொடையைக் கொண்டு மனிதன் அத்துமீறி, பெருமை கொள்வதற்கும், கூலிகளை அடைந்து கொள்ள தனது இறைவனிடம் மீள வேண்டும் என ஸூரா அலக் கூறியிருப்பதற்கும் இடையில் தொடர்பு படுத்தவும்.
கே : அபூ ஜஹ்லின் கதை பற்றியும், நபி (ஸல்) அவர்களுடனான அவனது கடும் விரோதம் பற்றியும் உமக்கு என்ன தெரியும்?
மூன்றாம் கட்டம்:
கண்டுபிடிப்பு கற்றலினூடாக மாணவர்களுக்கு பின்வரும் இறைவசனங்களை முன்வைக்கவும் : "நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்".
அதைப் பற்றிய தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்படி அவர்களிடம் கோரி, புனித ஸூராவின் வசனங்களை விளக்குவதற்கு அவர்களின் பதில்களை ஒரு தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தவும்.
ஒவ்வொரு வசனத்தையும் அதன் சொற்களைத் தெளிவுபடுத்தி, வசனத்தை விளக்கி தனித்தனியாக அவர்களுக்கு முன்வைக்கவும்.
இறுதிச்சுருக்கம் :
வசனங்களின் படிப்பினைகள் மற்றும் வழிகாட்டல்களை அறிய இவ்விரண்டு மாணவர்களாக ஒத்துழைக்க அறிவுறுத்தவும் .
மாணவர்களுக்கு ஒரு பலகையைக் காட்டி, அதில் பயன்பாடுகளில் ஒன்றை எழுத அவர்களில் சிலரைத் தேர்வு செய்யவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர்முறை, அறிவினதும் கற்பதனதும் அவசியத்தை விளக்குதல். நோக்க இலக்கம் : 2
பின்வரும் செயற்பாட்டை வீட்டுப் பயிற்சியாக நிறைவேற்ற ஒவ்வொரு மாணவரையும் வழிநடத்துங்கள்.
அடுத்த சந்திப்பில் சில மாணவர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொருவரையும் தான் கண்டடைந்தவற்றை முன்வைக்க பணிக்கவும்.
உமது கண்கானிப்பு, மேற்பார்வையின் கீழ் மற்றவர்கள் இவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, புனித லைலதுல் கத்ரில் செய்ய வேண்டிய மகத்தான நற்செயல்களை அறிந்து கொள்தல். நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் இரண்டாவது செயல்பாட்டில் உள்ள ஹதீஸை வாசிக்குமாறு அறிவுறுத்தி, மேலும் அதில் உள்ள கலைச் சொற்களின் அர்த்தங்களின் விளக்கத்தை அவர்களுடன் விவாதிக்க வேண்டும். அதே நேரத்தில் வசனத் தொடர் மூலம் அர்த்தங்களை முன்வைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பின்னர் அவர் அவர்களுடன் அதன் விளக்கம் மற்றும் வழிகாட்டலைப் பற்றி விவாதிக்க வேண்டும். மேலும் செயல்பாட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்க சில மாணவர்கள் தேர்வு செய்து, நீங்கள் அவற்றை திருத்திக்கொடுத்து, பின்னர் அவற்றை தங்கள் புத்தகங்களில் எழுதிக்கொள்வதற்காக, கரும்பலகையில் எழுதவும்.
லைலதுல் இரவின் நற்செயல்கள்
ரமழானின் இறுதிப்பத்தில் நற்செயல்கள் மூலம் லைலதுல் கத்ரைத் தேடுதல்.
"அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன், துஹிப்புல் அஃப்வ பfஃபு அன்னீ" எனும் துஆவை லைலதுல் கத்ர் இரவில் அதிகமாக ஓத வேண்டும். (பொருள் : இறைவா! நீ மன்னிக்கக் கூடியவன், மன்னிப்பை விரும்பக் கூடியவன், எனவே என்னை மன்னிப்பாயாக!).
லைலதுல் கத்ர் இரவை உள்ளடக்கியுள்ள, ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல்.
லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குதல்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
பின்வரும் கேள்விகளை தமது புத்தகங்களிலிருந்து கவனமாகப் படித்து, தனித்தனி அட்டைகளில் பதிலளிக்க வைக்கவும்.
மதிப்பீடு செய்ய ,ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை மற்றொரு நண்பரின் அட்டையுடன் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அட்டைகளை சேகரித்து, சக நண்பர்களுக்கு முன்னால் அவற்றை மதிப்பீடு செய்ய எழுமாறாக சிலவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான பதில்களையும், தவறான பதில்களையும் அவர்களுக்கு அறியப்படுத்துதல்.
அட்டைக்குரிய மாணவரின் பெயரையும், அதனைத் திருத்தியவரையும் கூறுங்கள்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
கல்வியைக் கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் முயற்சி செய்தல், மேலும் குடும்ப உறுப்பினர்களையும் சுற்றியுள்ளவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தல்.
அல்லாஹ்வின் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள லைலதுல் கத்ரில் அதிகமாக வணக்கம், பாவமன்னிப்புக் கோரலில் ஈடுபடுதல்.
பாடம் ஐந்து : பய்யினா மற்றும் ஸல்ஸலா அத்தியாயங்களின் விளக்கங்கள்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(விலகுபவர்கள் - தெளிவான ஆதாரம் - படைப்புகள் - பல பிரிவினர்களாக - அணுவளவு).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - அவ்விரு அத்தியாயங்களும் பதிவு செய்யப்பட்ட ஓடியோ).
-
கற்பித்தல் உத்திகள்:
(உரையாடல் மற்றும் விவாதம் - கற்பனை செய்தல் - சொற்பொருள் வரைபடங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்கத்தை உளத்தூய்மையாக செய்வதில் அக்கறையாக இருத்தல்.
• சொல், செயலில் உண்மையைக் கடைபிடித்தல்.
• நற்செயல் புரியும் விசுவாசிகளைப் பின்பற்றுதல்.
• மறுமை நாளுக்காகத் தயாராகுதல்.
பாடத்தின் அறிமுகம்:
நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி குறித்தும், நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் அல்லாஹ்வை வணங்க அழைத்தார்கள்? இந்த அழைப்பில் அவரது மக்களின் நிலைப்பாடு என்ன? இத்தூதை நம்பாதவர்களின் கதி என்ன? போன்ற விடயங்கள் குறித்தும் மாணவர்களுடன் விவாதிக்கவும். அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்று, அவற்றுக்குக் கருத்துரை வழங்கி, அதனூடாக பாடத்தின் உள்ளடக்கத்திற்குள் செல்லவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
ஓடியோப் பதிவு மூலம் பாடத்தின் இறைவசனங்களை ஆசிரியர் மாணவர்களுக்கு செவிமடுக்க வைக்க வேண்டும்.
அப்பதிவில் ஓதுபவருக்குப் பின்னால் மாணவர்களும் திரும்பத் திரும்ப அவ்வசனங்களை ஓதவேண்டும். பின்பு ஆசிரியர் அவற்றை சக நண்பர்களுக்கு ஓதிக்காட்ட ஒரு மாணவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்டம் :
வசனங்களின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் விவாதித்து, பின்னர் மீதமுள்ள வசனங்களின் விளக்கம் மற்றும் விரிவுரைகளை வழங்கவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
வசனங்களில் உள்ள இறைக்கட்டளைகளை விளக்கும் சொற்பொருள் வரைபடத்தை மாணவர்களுக்குக் காட்டவும்.
ஒவ்வொரு விஷயமும் அவ்வசனங்களில் அதன் இடத்துடன் இணைக்கப்பட்டும் விதத்தில் அவர்களுடன் கலந்துரையாடவும்.
இறுதிச்சுருக்கம் :
ஒவ்வொருவரும் அவ்வசனங்களை மீண்டும் கூர்ந்து கவனித்து, அவற்றின் பலன்களைக் கண்டெடுக்குமாறு கூறவும். அவற்றை மாணவர்கள் தம் புத்தகங்களில் எழுதிக்கொள்ளவேண்டும். அவர்கள் எழுதியவற்றை நீங்கள் பாருங்கள்.
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் பயன்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பற்றிய முழுமையான விளக்கத்தை பலகையில் அவர்களுக்குக் காட்டவும்.
ஒவ்வொரு மாணவரும் தாங்கள் எழுதியதை பலகையில் காட்டப்பட்டுள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, விசுவாசிகள் மற்றும் நிராகரிப்பாளர்க்கு மத்தியில் ஒப்பீடு செய்யும் முறையை அறிதல்.
நோக்க இலக்கம் : 2
ஒவ்வொரு மாணவரும் புத்தகத்திலிருந்து முதல் செயல்பாட்டை வாசித்து, பின்னர் பதிலை தனியான ஒரு தாளில் எழுதுமாறு கூறவும்.
அவர்கள் விடையை எழுதி முடித்ததாகக் கூறிய பிறகு, சில மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களது பதில்கள் தொடர்பாக விவாதித்து, சரியான பதிலை கரும்பலகையில் எழுதவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வசனங்களுக்கு இடையில் தொடர்புபடுத்த பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 3, 4
இரண்டாவது செயல்பாட்டை உள்ளடக்கிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, ஒருவருக்குப் பின் ஒருவராக இரு மாணவர்களைத் தேர்வு செய்து, செயல்பாட்டின் இரண்டு கூறுகளையும் அவர்களது வகுப்புத் தோழர்களுக்கு வாசித்துக் காட்ட பணிக்கவும்.
ஒவ்வொரு கூறினதும் விளக்கத்தை மாணவர்களுடன் கலந்துரையாடவும். மேலும் அந்த உறுப்புக்கான சரியான பதிலையும், அதற்குரிய காரணத்தையும் பெறுவதற்கு ஒவ்வொரு மாணவரும் தனது ஆராய்ந்தறியும் திறன்களைப் பயன்படுத்தக் கோரவும். அவர்களின் பதில்களைப் பெற்று அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்குவதோடு, அவர்கள் கொப்பிகளில் எழுதிக்கொள்ள இலகுவாக, அதைக் கரும்பலகையில் எழுதவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் தங்கள் புத்தகங்களில் உள்ள மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்கப் பணிக்கவேண்டும்.
மாணவர் அருகே சென்று, ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் பதிலில் பங்கேற்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
மாணவர்கள் இவ்விரு குழுக்களாக தங்கள் பதில்களை பரிமாறி, ஒவ்வொரு அணியும் மற்ற அணியின் பதிலைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவில் கண்டுகொண்ட தவறுகளையும், அவற்றை அவர்கள் எவ்வாறு சரிசெய்தார்கள் என்பதையும் நீங்கள் கண்டறியவும்.
பொருத்தமான பதிலை இறுதியில் அவர்களுக்கு முன்வைக்கவும்.
கே 1 : () - ()-()-()- ().
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நேர்மறையான விளைவுகளைப் பெறவும், வாழ்க்கையில் அவற்றின் பலன்கள் தரும் மகிழ்ச்சியை உணரவுமாக, நல்ல செயல்களைச் செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்துதல்.
பாடத்திலிருந்து தாம் கற்றுக் கொண்ட ஈமான், மற்றும் நற்செயல்களினால் தனிநபர், சமூகத்தில் எற்படும் மாற்றங்களை தமது குடும்ப, சமூக வட்டத்திற்குள் போதிக்க மாணவர்களை வழிகாட்டுதல்.
பாடம் ஆறு : ஆதியாத் மற்றும் காரிஆ அத்தியாயங்களின் விளக்கங்கள்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(விரைந்து ஓடும் குதிரைகள் - மூச்சுத் தினற - நெருப்புப் பறக்கச் செய்யும் குதிரைகள் - அதிகாலையில் விரைந்து செல்லும் குதிரைகள் - நன்றி கெட்டவன் - திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி - பரத்தப்பட்ட - ஹாவியா எனும் நரகம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம் - கற்பித்தல் பலகைகள் - பதிவு செய்யப்பட்ட ஓடியோ
-
கற்பித்தல் உத்திகள்:
(விவாதம் - கற்பனை முறை - கூட்டுகற்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
அல்லாஹ்வின் அருட்கொடையை மதித்தல்
மறுமை நாளின் மகத்துவத்தை உணர்தல்
சத்தியத்தைப் பற்றிப்பிடித்து, அதன்பால் அழைப்பு விடுத்தல்.
காபிர்கள் மற்றும் பாவிகளின் பண்புகளில் வீழ்வதைத் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
மாணவர்களிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கவும் : இறுதி நாளின் பெயர்கள் என்ன? அதன் நிகழ்வுகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? பதில் மூலம், பாடத்தின் உள்ளடக்கத்திற்குள் செல்லவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
ஆசிரியர் பாடத்தின் இரு அத்தியாயங்களையும் மாணவர்களுக்கு ஓதிக் காண்பித்து, தன்னைத் தொடர்ந்து அவர்களும் ஓதுமாறு கோர வேண்டும்.
தமது சக நண்பர்களுக்கு ஓதிக்காண்பிக்க திறமையான இரண்டு மாணவர்களைத் தேர்வுசெய்க. ஏனையோர் தாம் கேட்டதைச் உன்னிப்பாகத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும் .
இரண்டாம் கட்டம் :
மாணவர்களை ஊக்கப்படுத்த, பின்வரும் கேள்வியை அவர்களிடம் கேட்டு, அவர்களின் பதில்களைப் பெறுங்கள். கேட்பவரிடம் விடயத்தை உறுதிப்படுத்திக் கூற, சத்தியம் செய்வார் என்பதும் பதில்களில் அடங்கும்.
கே: நீங்கள் கூறும் ஒரு விடயத்தை நம்பாத ஒருவரிடம் எவ்வாறு அதை உறுதிபடக் கூறுவீர்கள்?
ஸூரா ஆதியாதை ஆசிரியர் விளக்கி, தெளிவுபடுத்துவார்.
ஒவ்வொரு வசனத்தையும் தொடர்ச்சியாக முன்வைத்து, அதன் தெளிவற்ற கருத்துக்களை விளக்கவும்.
முன்வைக்கப்பட்டுள்ள வசனத் தொடருக்கு ஏற்ற வகையில் அதன் அர்த்தங்களைத் தெளிவுபடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
பின்பு ஆசிரியர் கற்பனைக் காட்சிப்படுத்தல் முறையின் மூலம் ஸூரா காரிஆவையும், அதில் கூறப்பட்டுள்ள மறுமை நாளின் பயங்கரங்களையும் விளக்கவேண்டும்.
இறுதிச்சுருக்கம் :
தொடக்கம் முதல் பாடம் தொடர்பாக மாணவர்கள் முன்வைத்த கருத்துகளை ஆசிரியர் அவர்களோடு மீளாய்வு செய்ய வேண்டும்.
அவ்வசனங்களை அவர்கள் கற்றிருப்பதன் அடிப்படையில் சுயமாகவே அவற்றை மதிப்பீடு செய்யுமாறு கோர வேண்டும்.
வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் மற்றும் வழிகாட்டல்களை அடையாளம் காண்பதில் இவ்விருவராக ஒத்துழைக்குமாறு அவர்களுக்கு ஆசிரியர் அறிவுறுத்தவேண்டும்.
பயன்கள் தொடர்பாக அவர்களின் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை பார்க்கும் படி அவர்களிடம் கோரப்பட வேண்டும்.
அதற்கும் அவர்கள் முன்வைத்ததற்கும் இடையில் ஒப்பிட்டு, அவர்களது செயல்திறனுக்கு ஏற்ற வகையில் ஊக்கம், பாராட்டுகளை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஒரு முஸ்லிம் தனது நன்மைத் தட்டில் அவசியம் காண வேண்டிய பிரதான நற்செயல்களை வரையறுத்தல். நோக்க இலக்கம் : 2
முதல் செயல்பாட்டுடன் கூடிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு நற்செயலின் வகையை வாசித்துக்காட்ட ஒருவருக்குப் பின் ஒருவராக மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வகையின் விளக்கத்தையும் மாணவர்களுடன் கலந்துரையாடி, ஒவ்வொரு மாணவரும் தனது ஆராய்ந்தறியும் திறன்களைப் பயன்படுத்தி நற்செயல்களின் தட்டைக் கனமாக்கக் கூடிய செயலுக்கான உதாரணத்தைக் கொண்டு வருமாறு கூறவும். அவர்களின் பதில்களைப் பெற்று அவற்றுக்குக் கருத்துரை வழங்கி, சரியான பதிலைத் தெளிவுபடுத்துவதோடு, அதை அவர்கள் தமது கொப்பிகளில் எழுதுவதற்காக, கரும்பலகையில் எழுதவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வசனங்களுக்கு இடையில் இணக்கப்படுத்த பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 2, 3
ஆசிரியர் இரண்டாவது செயல்பாட்டில் உள்ள ஆதாரங்களைத் திரையில் காண்பிக்கவேண்டும். அவற்றை வாசிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து , பின்னர் அவர்களுடன் அவற்றின் பொருள் மற்றும் நோக்கங்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
இரண்டாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, தனியான அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றை மதிப்பீடு செய்து, அவற்றில் மிகவும் சரியான, துல்லியமான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.
"இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்".
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில் (இருப்பார்) ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
ஒன்றன் பின் ஒன்றாக வினாக்களை கரும்பலகையில் எழுதுவது நல்லது.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அடுத்தடுத்து இருக்கும் இவ்விரு மாணவர்களாகப் பங்கேற்கச் சொல்வது விரும்பத்தக்கது.
தமது பதில்களை ஏனையவர்களுக்குக் காட்டுவதற்காக எழுமாறாக சில மாணவர்களைத் தெரிவு செய்யவும்.
தவறு செய்பவர்கள் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டுவது சிறந்தது.
கே 1 : (✓)-(×) - (✓)- (✓)- (×).
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
எச்சரிக்கை வசனங்களை அல்குர்ஆன் கூறுவதன் நோக்கம், அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரி, நற்செயல்களில் விரைவது என்பதை வழிகாட்டலாக எடுத்தல்.
மறுமை நாளில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர் என்பதை குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தி மற்றும் விளக்குதல்: ஒரு குழுவின் நற்செயல்கள் கனமாக இருக்கும். அதனால் அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். மற்ற குழுவின் கெட்ட செயல்கள் கனமானதாக இருக்கும். எனவே அவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். மேலும் அவர்களை நல்ல செயல்களைச் செய்யவும் தீய செயல்களை கைவிடவும் தூண்டுதல்.
ஈமான் மற்றும் பரிசுத்தப்படுத்தல் பகுதி
பாடம் ஒன்று: ஓரிறைக் கொள்கையை முறிப்பவை (நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு)
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நிராகரிப்பு - இணைவைப்பு - நயவஞ்சகம் - மத மாற்றம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(பாடத்தில் இடம் பெறும் அல்குர்ஆன் வசனங்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ - கணினி இயந்திரம் - காட்சித் திரை - கற்பித்தல் பலகை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(தவறான புரிதல்களைச் சரிசெய்தல் - சொற்பொருள் வரைபடங்கள் - சுயகேள்வி - ஒப்புமை - கூட்டுகற்கை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- நிராகரிப்பு மற்றும் இணைவைப்பின் அனைத்து வகைகள், வடிவங்களையும் கண்டித்தல்.
- நிராகரிப்பு மற்றும் இணைவைப்பினால் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்தல்.
- நிராகரிப்பு மற்றும் இணைவைப்பின் அனைத்து வடிவங்களையும் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
கரும்பலகையில் பின்வரும் சொற்றொடரை எழுதவும்: (அல்லாஹ்வின் இருப்பை மறுப்பது மட்டுமே நிராகரிப்பு என்று சிலர் கருதுகின்றனர்). பின்னர் அதைப் பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்குமாறும், அது எந்த அளவிற்கு சரியானது என்பதை தீர்மானிக்குமாறும் அவர்களிடம் கோரி, பாடம் மற்றும் அதன் நோக்கங்களை அறிமுகப்படுத்த ஒரு தொடக்கப் புள்ளியாக அவர்களின் பதில்களைப் பயன்படுத்தவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
பாடத்தின் கூறுகள் பற்றிய மாணவர்களின் அறிமுகத்தை, அவை உள்ளடக்கியுள்ள கருத்துக்கள் மற்றும் கூறுகள், பெரிய மற்றும் சிறிய நிராகரிப்பு மற்றும் அவற்றின் வகைகளுடன் தொடர்புடைய சொற்பொருள் வரைபடத்தைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் ஒழுங்கமைக்க முடியும். வரைபடத்தைப் பற்றி சிந்திக்கும்படி அவர்களிடம் கேட்கவும்.
இரண்டாம் கட்டம் :
சுய கேள்வி முறை மூலம்; பாடத்தின் உள்ளடக்கத்தினூடாக பதிலைப்பெற விரும்பும் கேள்விகளை முன்வைப்பதில் தமக்கிடையில் ஒத்துழைக்க இவ்விரு மாணவர்களை ஆசிரியர் நியமிக்கலாம்.
கேள்விகளை சேகரித்து மாணவர்களுக்கு முன்னால் தொங்கவிடப்பட்டுள்ள பலகையில் எழுதவும். இந்தக் கேள்விகளுடன், இதே கட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ள வேறுபல கேள்விகளையும் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
கே: நிராகரிப்பு என்பதன் விளக்கம் என்ன?
கே: பெரிய நிராகரிப்பு மற்றும் சிறிய நிராகரிப்புக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டைக் கூறவும்.
கே: பெரிய நிராகரிப்பு மற்றும் சிறிய நிராகரிப்புக்கு சில உதாரணங்களைக் கூறவும்.
கே: பெரிய நிராகரிப்பு மற்றும் சிறிய நிராகரிப்பின் தாக்கங்களைக் கூறவும்.
கே: இணைவைப்பின் வகைகள், அவை ஒவ்வொன்றுக்குமான வரைவிலக்கணம், உதாரணம் என்பவற்றைக் கூறவும்.
கே: சிறிய இணைவைப்பினால் ஏற்படும் விபரீதங்கள் என்ன?
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் பெரிய நிராகரிப்பு மற்றும் சிறிய நிராகரிப்பை விளக்கி, தெளிவுபடுத்த வேண்டும். அதன்போது அதனுடன் தொடர்பான மார்க்க ஆதாரங்களை முன்வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் செவிமடுக்கும் விதத்தில் அல்குர்ஆன் வசனங்களை ஓடியோ பதிவு மூலமே முன்வைக்கப்பட வேண்டும். அவற்றை ஆசிரியர் தெளிவுபடுத்தி, அவற்றின் கருத்துக்கள் பற்றி விவாதித்து, அதன் வழிகாட்டல்களையும், நிராகரிப்புடைய வடிவுங்களுக்கு ஆதாரமாகக் கொள்வதில் இவ்வசனங்களுக்கு எந்தளவு தொடர்புள்ளது என்பதையும் தெளிவுபடுத்த அவற்றை முழுமையாக விளக்க வேண்டும்.
நான்காம் கட்டம்:
ஒப்புமை முறையின் மூலம், ஆசிரியர் இணைவைப்பின் பின்வரும் வெளிப்பாடுகளை மாணவர்களுக்கு முன்வைத்து, இணைவைப்பின் வகை மற்றும் வடிவத்தை அடையாளம் காணும்படி அவர்களிடம் கேட்கலாம். மேலும் சரியான பதிலைக் கொடுப்பவர் அந்த வகையைப் பற்றி தனக்குத் தெரிந்ததை ஒரு சுருக்கமான வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறவேண்டும்.
அல்லாஹ் மறைவான அறிவை அறிவான் என்பதில் ஒருவர் சந்தேகம் கொள்கின்றார்.
இறைக்கட்டளைகளைப் பின்பற்ற ஒரு பெண் பெருமை, விதண்டாவாதத்தால் மறுக்கின்றாள்.
ஒருவர் தனது மகனை குழந்தை பெறாத ஒரு ஆணுடைய பிள்ளை எனக் கூறிவிட்டார்.
இருவருக்கிடையில் இடம்பெற்ற தர்க்கத்தில் ஒருவர் அல்லாஹ் அல்லாத ஒருவர் மீது சத்தியம் செய்தார்.
இறுதிச் சுருக்கம் :
ஆசிரியர் மாணவர்களுக்கு பாடத்தின் கூறுகளின் வெற்று சொற்பொருள் வரைபடத்தைக் காட்டவேண்டும். பின்பு, கூறுகளில் ஒன்றை எழுதி அதை விளக்க அவர்களில் சிலரைத் தேர்வு செய்ய வேண்டும். அவரால் முடியவில்லை என்றால், மற்றொரு மாணவர் செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு பாடத்தின் அனைத்து கூறுகளும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை நடக்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, பெரிய மற்றும் சிறிய வகை நிராகரிப்பு, இணைவைப்பிற்கிடையில் ஒப்பீடு செய்தல். நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பீட்டு முறைகளை சில அட்டைகளில் எழுதி, அவற்றை மாணவர்களுக்கு எழுமாறாக விநியோகிக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு முறையையும் ஆசிரியர் அடுத்தடுத்து வாசிக்க, இந்த முறைக்கான அட்டைகளைக் கொண்ட முதல் குழு சரியான ஒப்பீட்டை கூறுவதுடன், இரண்டாவது குழு அதனை மதிப்பீடு செய்வதுடன், இரண்டாவது ஒப்பீட்டைக் கூற வேண்டும். பின்னர் அவர் அவர்களின் புத்தகங்களில் சரியான ஒப்பீட்டை எழுதும்படி அறிவுறுத்தவேண்டும்.
பெரிய வகை நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு ஓப்பீட்டு முறை சிறிய வகை நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு
இறைத்தூதர்களைப் பொய்ப்பித்து, மார்க்கத்தை பரிகாசித்தல். இதன் சில வடிவங்கள் : முஸ்லிமுடன் போரிடுவது, சந்ததியில் குறை கூறுவது.
அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி விடும் அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றுதல் அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்ற மாட்டாது
நரகில் அவரை நிரந்தரமாக்கி விடும் நரகில் அவரை நிரந்தரமாக்குதல் நரகில் அவரை நிரந்தரமாக்க மாட்டாது
அதைச் செய்பவரை விட்டும் விலகியிருக்க வேண்டும். அதைச் செய்பவரை விட்டும் விலகியிருத்தல் அதைச் செய்பவரை விட்டும் விலகியிருக்க வேண்டியதில்லை.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, இணைவைப்பு அல்லது நிராகரிப்பின் வகையைத் தெளிவுபடுத்தல்.
நோக்க இலக்கம் : 2
இரண்டாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறும், தனியான அட்டை ஒன்றில் விடைகளை எழுதுமாறும் மாணவர்களைப் பணிக்கவேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் சரியான, துல்லியமான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, மார்க்கத்தையோ குர்ஆனையோ பரிகாசிப்பதை விட்டும் எச்சரித்தல்.
நோக்க இலக்கம் : 5
அல்லாஹ்வின்மார்க்கத்தை கேலி செய்பவர்களுக்கு ஒரு மடலை எழுத ஒவ்வொரு மாணவரையும் அறிவுறுத்தவும். பின்னர் அம்மடல் அடங்கிய ஒரு அட்டையை வடிவமைக்க அவர்களை பணிக்கவும். பின்னர், அட்டைகளை சேகரித்து, மாணவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதோடு, அவர்களுக்குப் பொருத்தமான ஊக்கத்தையும் வழங்கவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
முதல் கேள்விக்கு பதிலளிக்க, ஆசிரியர் மாணவர்களிடம் அதன் வாசகங்களை ஒவ்வொன்றாகக் முன்வைத்து, வாசகம் சரியாக இருந்தால் கைகளை உயர்த்தச் சொல்லவேண்டும். அவர்களின் செயல்திறனைக் கண்காணித்து, அவர்களின் தவறுகளைத் திருத்த வேண்டும்.
கே 1 : (✖) - (✖) - (✓) - (✖) - (✓)
இரண்டாவது கேள்விக்கான பதிலைப்பெறும் நோக்கில், ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்கள் அருகாமையில் செல்வதுடன், அவர்களில் தவறுவிட்டவர்களுக்கு சரியான பதிலுக்கு வழிகாட்ட வேண்டும்.
நிராகரிப்பு நற்செயல்களை வீணாக்கி விடும்.
பெருமையடித்தல்
தாயத்துகளைத் தொங்கவிடல்
ஜோசியர்கள் மறைவானவற்றை அறிவதாக நம்புதல்.
நற்செயல்களை அழித்தல்
ஆசிரியர் மாணவர்களிடம் மூன்றாவது கேள்வியைக் கேட்டு, அவர்களில் இருவரை பதிலளிக்கவும், வேறு இருவரை மேற்கண்ட பதில்களை மதிப்பீடு செய்யவும் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக அவர்களின் புத்தகங்களில் எழுதுவதற்கான சரியான பதிலை அவர்களுடன் இனங்காண வேண்டும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
பெரிய மற்றும் சிறிய வகை நிராகரிப்பு, இணைவைப்புக்கு ஆதாரமாக பாடத்தில் இடம்பெற்றுள்ள இறைவசனங்களை மீண்டும் வாசித்து, அவ்வசனங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள வேறு பல மூலாதாரங்களுக்கும் செல்லுதல். அதனூடாக நிராகரிப்பு, இணைவைப்பின் விபரீதங்களை உணர்ந்து, அனைவரும் அறிந்து கொள்வதற்காக தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவை பற்றிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
பாடம் இரண்டு : ஓரிறைக் கொள்கையை முறிப்பவை (நயவஞ்சகம் மற்றும் மதமாற்றம்)
பாடத்தின் கால அளவு : ஒரு பாட வேளை
புதிய சொற்கள்: (நயவஞ்சகம் - மதமாற்றம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் பலகைகள் - காட்சி திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - ஓடியோ ஊடகம்).
கற்பித்தல் உத்திகள்:
(முந்தைய அமைப்புக்கள் - உரையாடல் மற்றும் விவாதம் - உதாரணங்கள் மற்றும் உதாரணங்கள் அல்லாதவை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- நயவஞ்சகம் மற்றும் மதமாற்றத்தின் விபரீதத்தை உணர்தல்.
- நயவஞ்சகம் மற்றும் மதமாற்றத்தின் தோற்றங்கள், வகைகளைத் தவிர்ந்து கொள்ளுதல்.
- அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடல்.
பாடத்தின் அறிமுகம்:
முந்தைய அமைப்புக்கள் முறையைப் பயன்படுத்தி, மாணவர்களிடம் பின்வரும் சந்தர்ப்பத்தைக் கூறி, அதை அடுத்து வரும் வினாக்களையும் கேட்க வேண்டும். அவர்களின் விடைகளைக் கேட்டு, அவற்றில் வித்தியாசமான விடைகளைக் கரும்பலகையில் எழுதுவதோடு, அதைக் கூறியவர்களைக் கண்டறிந்து “பாடத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அப்போதுதான் சரியான விடையை சுயமாகவே கண்டுபிடிக்கலாம்” எனக் கூற வேண்டும்.
(சிலர் ஷரிஆ சட்டத்தை கேலி செய்வதையும், முஸ்லிம்களை கேவலப்படுத்துவதையும், இஸ்லாத்தின் விரோதிகளை புகழ்வதையும் பார்க்கிறோம். இவர்களுக்கான மார்க்கத் தீர்ப்பு என்ன? குர்ஆன் மற்றும் சுன்னாவில் இவர்களுக்கான தீர்ப்பு என்ன?)
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம் :
கரும்பலகையில் பின்வரும் சொற்றொடரை எழுதி, அதன் பொருள் மற்றும் நோக்கத்தை மாணவர்களுடன் விவாதிக்கலாம்:
(ஒரு நபர் தான் உள்ளத்தில் மறைத்து வைப்பத்திருப்பதற்கு முரணானதை வெளிப்படுத்துதல். அது இஸ்லாமியக் அடிப்படைக் கோட்பாட்டுடன் தொடர்புடையது என்றால், அது பெரிய நயவஞ்சகமாகும். சில செயல்களுடன் தொடர்புடையதாக இருந்தால், அது சிறிய நயவஞ்சகமாகும்).
பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள கூறுகளின் விளக்கப்படத்தை மாணவர்களுக்குக் காட்டி, அவர்கள் இந்த விளக்கப்படத்துக்கும் முந்தைய வாசகத்திலிருந்து அவர்கள் புரிந்துகொண்டதற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டம் :
உரையாடல் மற்றும் விவாத முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டு, அவர்களுடன் கலந்துரையாடி, மேலும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கும்போது, அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்:
கே: நம்பிக்கை சார்ந்த நயவஞ்சகம் என்றால் என்ன?
கே: நம்பிக்கை சார்ந்த நயவஞ்சகத்திற்கு சில உதாரணங்களைக் கூறவும்.
கே: நம்பிக்கை சார்ந்த நயவஞ்சகத்தின் சட்டம் என்ன?
கே: செயல் சார்ந்த நயவஞ்சகம் எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது?
கே: நம்பிக்கை சார்ந்த, செயல் சார்ந்த நயவஞ்சகங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடென்ன?
மூன்றாம் கட்டம் :
உதாரணம் மற்றும் உதாரணம் அல்லாத முறையைப் பயன்படுத்துதல்; மதமாற்றம் மற்றும் அதன் வரையறை தொடர்பான பின்வரும் உதாரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆசிரியர் மாணவர்களுக்கு முன்வைக்க, மாணவர்கள் அவற்றை வேறுபடுத்த வேண்டும் :
ஒரு நபர் தொழுது, நோன்பு நோற்கின்றார், இருப்பினும் அல்லாஹ்வுக்கு இணை இருப்பதாக நம்புகின்றார்.
தான் வேண்டுமென்றே செய்வதில்லை என்று கூறிக்கொண்டு ஒரு நபர் மார்க்கத்திற்கு அதிகமாக ஏசுகின்றார்.
மக்களுக்கு சிகிச்சை செய்வதாகக் கூறி ஒரு நபர் சூனியத்தைக் கற்றுக் கொண்டார்.
இறுதிச்சுருக்கம் :
இஸ்லாத்தில் இருந்துகொண்டு, ஷரீஆ சட்டத்தை கேலி செய்பவர்களுக்கான மார்க்க அடிப்படையிலான பெயர் தொடர்பான கேள்வி பற்றி பாடத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட பதிலை ஒவ்வொரு மாணவரும் மீள வாசிக்கும் படி ஆசிரியர் கோர வேண்டும். மேலும் அவர்கள் பாடத்தின் மூலம் எவ்வளவு பயனடைந்தார்கள் என்று பார்க்க, அவர் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் .
ஒவ்வொரு மாணவரும் தனது கொப்பியில் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டதை சுருக்கமாக ஒரு பந்தியில் எழுதுவதுடன், மேலும் நயவஞ்சகம் மற்றும் மதமாற்றத்தைக் கண்டிக்கும் ஒரு சொற்றொடரை எழுத வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நயவஞ்சகத்தின் வகைகளை அறிந்து கொள்ளுதல்.
நோக்க இலக்கம் : 2
செயல்பாட்டை வாசித்துக் காட்டுங்கள். அதற்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்குமாறு மாணவர்களைக் கோரவும். மேலும் ஒவ்வாரு குழுவும் தாம் கண்டறிந்ததை முன்வைக்க ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களின் பதில்களை ஒப்பிட்டு, சரியாக பதிலளிக்கும் திறன் கொண்ட, பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை சிறந்தமுறையில் பகுப்பாய்வுசெய்து, அமுல்படுத்துகின்ற குழுக்களை அடையாளம் காணவும் .
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஒரு மனிதர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் காரணமாக அமையும் செயல்களை வரையறுத்தல். நோக்க இலக்கம் : 5
பின்வரும் செயல்பாட்டிற்கு வீட்டிலேயே ஒரு தனியான தாளில் தனித்தனியாக பதிலளிக்க மாணவர்களைக் கோரவும். பதில்கள் அடுத்த பாடத்தில் உங்களிடம் காட்டப்படவேண்டும். நீங்கள் அவர்களுடன் அவை பற்றி கலந்துரையாடி, மிகவும் ஆக்கத்திறன் மிக்க நபருக்கு பரிசு வழங்கி, சக நண்பர்களுக்கு முன்னால் அவரைக் கௌரவிக்க வேண்டும் .
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்களுக்கு பாதி (✓) அடையாளத்தையும் மற்ற பாதி (✖) அடையாளத்தையும் கொண்ட கற்பித்தல் அட்டைகளை விநியோகிக்கவும். பின்னர், முதல் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்களை ஒவ்வொன்றாக அவர்களிடம் முன்வைக்கவும். மாணவர்கள் சொற்றொடருக்கான பொருத்தமான அட்டையை உயர்த்த வேண்டும், தவறு செய்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று விவாதிக்க வேண்டும்.
கே 1 : (✓) - (×) - (×) - (✓) - (✓)
இரண்டாவது கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புகளில் ஒவ்வொன்றாக பதிலளிக்க மூன்று மாணவர்களைத் தெரிவு செய்யவும். அவர்களில் யாராவது தவறிழைத்தால், புத்தகத்திலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்குமாறு அறிவுறுத்தவும்.
கே 2 : அதன் வடிவங்களிலிருந்து எச்சரிக்கை - சிலைக்கு சிரம்பணிதல் - நம்பிக்கை சார்ந்தது
ஒவ்வொரு மாணவரும் மூன்றாவது கேள்விக்கு தனித்தனியாக பதிலளிக்க வேண்டும். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பதிலைப் படிக்கச் செய்யவும். அவர்களின் வகுப்பு தோழர்கள் அவர்களை மதிப்பீடு செய்து, அவர்கள் தவறு செய்தால் சரியான பதிலைச் சொல்ல வேண்டும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாழலாம்:
தமது சமூகத்தில் காணும் நயவஞ்சகம் மற்றும் மதமாற்றத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து, மக்கள் அவற்றில் வீழ்ந்திடாமல் தனிப்பட்ட ரீதியிலோ, கூட்டமைப்பாகவோ, சுற்றுச் சூழலில் உள்ளோர் அல்லது அறிஞர்களின் வழிகாட்டல் பெற்றோ எச்சரிக்க வேண்டும்.
பாடம் மூன்று : பித்அத்தும் அதன் வகைகளும்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(புதுமை - தட்டப்பட்டது - அதன் புதுமைகள் - வழிகேடு).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(முந்தைய அமைப்புகள் - முன்கணிப்பு - சொற்பொருள் வரைபடங்கள் - சுய கேள்வி - விவாதம்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
பித்அத்தின் விபரீதத்தில் கவனமெடுத்தல்.
அல்லாஹ் மார்க்கமாக்காத முறையில் அவனை வணங்குவதைத் தவிர்த்தல்.
பித்அத் செய்தல், மார்க்கத்தில் பித்அத் உருவாக்குதல் என்பவற்றின் விபரீதங்களை உணர்தல்.
பித்அத்தை அறிவதன் வரையறைகளைப் பற்றிப்பிடிப்பதில் அக்கறை செலுத்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
அன்புள்ள ஆசிரியரே, காட்சித் திரையைப் பயன்படுத்தி பின்வரும் பந்தியை மாணவர்களுக்குக் காண்பிப்பதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கலாம். அதைக் கூர்ந்து கவனித்து, அது பற்றிய தமது உணர்வுகளை விளக்குமாறு கோருங்கள். பாடம் எதைப் பற்றியது என்பதைக் கணிக்க அவர்களின் ஊகிக்கும் திறன்களைப் பயன்படுத்தவும் கோரவும்.
(இமாம் மாலிக் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: இஸ்லாத்தில் தான் நல்லதாகக் கருதி ஒரு பித்அத்தை உருவாக்குபவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதுக்கு மோசடி செய்து விட்டார் என்று கூறிவிட்டார். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான் : "இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டேன்" (மாஇதா : 3). எனவே அன்றைய தினம் மார்க்கமாக இல்லாதது இன்று மார்க்கமாக ஆக மாட்டாது. (இமாம் ஷாதிபீயின் அல்இஃதிஸாம் 1/49).
இமாம் மாலிக் பித்அத்தின் அபாயத்தைப் பற்றி கூறிய வார்த்தையின் அர்த்தம் என்ன?).
பின்னர் அதனூடாக மாணவர்களை பாடத்தின் உள்ளடக்கத்தை அறியப்படுத்தக் கொண்டு செல்லுங்கள்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி, பித்அத்தின் கருத்து, அதன் வகைகள் மற்றும் அதன் சட்டம் ஆகியவற்றின் வரைபடத்தை உள்ளடக்கிய ஒரு பலகையை ஆசிரியர் மாணவர்களுக்குக் காட்ட வேண்டும். அவர்கள் அதைப் பற்றி சிந்தித்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமெனக் கோரவும். அதற்குப் பதிலளிப்பதன் மூலம், அது தொடர்பான தகவல்கள் அவர்களுக்குத் தெளிவாகவும் வெளிப்படும்.
ஆசிரியர் மாணவர்களின் கேள்விகளைப் பெற்று கரும்பலகையில் ஒரு பகுதியில் எழுத வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் முந்தைய கட்டத்தில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளைப் பயன்படுத்துவதோடு, மேலும் சில கூடுதல் கேள்விகளையும் அவற்றுடன் இணைக்கலாம். இவற்றிற்கான பதில்கள் மூலம், பித்அத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள் மற்றும் அதன் சட்டம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் தெளிவாகவேண்டும். அவற்றில் பின்வரும் கேள்விகள் இருக்கலாம். :
கே: பித்அத்தை வரையறுக்கவும்.
கே: மார்க்கத்தில் உருவாக்கப்படும் பித்அத் பல வகைகளைக் கொண்டது. அவற்றில் பிரதானமானதை வரையறுக்கவும்.
கே: பாடத்திலிருந்து நீர் புரிந்து கொண்ட படி பித்அத்களுக்கு உதாரணம் கூறவும்.
கே: பித்அத்தின் சட்டத்தை உதாரணத்துடன் விளக்கவும்.
மூன்றாம் கட்டம் :
பித்அத்களை அடையாளம் காண்பதற்கான வரையறைகளை முன்வைத்து, மார்க்கத்தில் நூதனங்களுக்கு எதிராக எச்சரிப்பது எப்படி என்று ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கித் தெளிவுபடுத்தவேண்டும். இந்த வரையறைகளை வெளிக்காட்டும் சில படங்களை மாணவர்களுக்குக் ஒரு காட்சித் திரை மூலம் காண்பித்து இதனை செய்யலாம்.
இறுதிச்சுருக்கம் :
ஆசிரியர் பலகையில் ஒரு வட்டத்தை வரைந்து அதன் உள்ளே "அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்" என்று எழுத வேண்டும். மேலும் அதிலிருந்து பல அம்புகளை வெளிப்புறம் நோக்கி வரைந்துவிட்டு, ஒவ்வோர் அம்புக்கருகிலும் பாடத்திலிருந்து தாம் கற்ற அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களை எழுதிய சில மாணவர்களைத் தெரிவுசெய்யவேண்டும். திருப்திகரமாக, திறமையாக எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பித்அத்தின் வகைகளுக்கு இடையில் வேறுபிரிக்க மாணவர்களைப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் முதலாவது செயல்பாட்டில் உள்ள பித்அத்களை திரையில் காண்பித்து, அவற்றை வாசிக்க சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் அவர்களுடன் அவற்றின் பொருள் மற்றும் அவை எதை நோக்காகக் கொள்கின்றது ஆகியவற்றை விவாதிக்க வேண்டும்.
இரண்டாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, தனியான அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றை மதிப்பீடு செய்து, அவற்றில் மிகவும் சரியான, துல்லியமான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பித்ஆத் செய்தல், பித்அத் உருவாக்குதல் பற்றி எச்சரித்தல். நோக்க இலக்கம் : 2
செயல்பாட்டில் உள்ள ஹதீஸை காட்சித் திரையின் மூலம் மாணவர்களுக்குக் காட்டி, அதை வாசிக்க திறமையான ஒருவரைத் தேர்வுசெய்யவேண்டும். பின்னர், செயல்பாட்டின் இரண்டு கேள்விகளையும் விளக்கித் தெளிவுபடுத்தி, பதில்களைப் பெறவும். சரியாக பதிலளிப்பவர்களை வலுப்படுத்தவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, பித்அத்தின் விபரீதத்தை அறிதல்
நோக்க இலக்கம் : 2, 5
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் மூன்றாவது செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் கூறுகளைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
ஒன்றன் பின் ஒன்றாக வினாக்களை கரும்பலகையில் எழுதுவது நல்லது.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அடுத்தடுத்து இருக்கும் இவ்விரு மாணவர்களாகப் பங்கேற்கச் சொல்வது விரும்பத்தக்கது.
பின்னர் எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்து, தமது பதில்களை ஏனையோரிடம் வாசித்துக் காட்டுமாறு கூற வேண்டும்.
தவறு செய்பவர்கள் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டுவது சிறந்தது.
கே 1 : (✓) - (×) - (✓).
கே 2 : தட்டப்பட்டது - புதிதாக உருவாக்குதல் - மண்ணறைகளை உயர்த்துதல் - தாராவிஹ் தொழுகை
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
பித்அத் பற்றித் தாம் கற்றதை மாணவர்கள் தமது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதுடன் ஸுன்னாவைப் பற்றிப்பிடத்தல், அல்லாஹ்வை வணங்குவதில் குர்ஆன், ஸுன்னாவின்பால் மீளுதல் என்பதன் அவசியத்தை உணர்த்துதல்.
பாடம் நான்கு: ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதன் சிறப்பு
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(பரிசுத்தப்படுத்தல் - நேர்வழி, பொறுப்புணர்வு - முகஸ்துதி).
கற்பித்தல் வழிமுறைகள்: (கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கதை முறை - ஒப்புவமை முறை - கூட்டுகற்கை முறை).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
- ஆன்மவைப் பரிசுத்தப்படுத்தவதன் அவசியத்தைப் புரிதல்.
- ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதில் முயற்சித்து ஆராவங்கொள்ளல்.
- இணைவைப்பு, முகஸ்துதி போன்ற உளவியல் நோய்களைத் தவிர்ந்து கொள்ளல்.
- ஆன்மைவைப் பரிசுத்தப்படுத்துவதில் நபிமார்கள், நல்லடியார்களைப் பின்பற்றுதல்.
பாடத்தின் அறிமுகம் :
ஆன்மாவைத் பரிசுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்துவதில் ஸலப் அறிஞர்களின் கரிசனை பற்றி உமது மாணவர்களுக்குச் சொல்லவும். உலக மோகமற்றிருத்தல், நற்பண்புகள் பற்றி அவர்கள் தனித்தனி புத்தகங்களை எழுதியுள்ளனர். மேலும் ஸலப் இமாம்கள் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நடத்தை மற்றும் நற்பண்புகளை அடிப்படைக் கொள்கை சார்ந்த புத்தகங்களுக்குள் சேர்த்துள்ளனர். பின்னர் அதிலிருந்து பெறமுடியுமான பாடம் என்ன? என்று அவர்களிடம் கேட்டு, அது தொடர்பாக அவர்களுடன் விவாதித்து, அதனூடாக பாடத்தின் உள்ளடக்கத்திக்குச் செல்லவும். பின்னர் பலகையில் தலைப்பை எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
கூட்டுகற்கை உத்தியுடன் தொடங்கி, மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, பின்னர் ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் பரிசுத்துப்படுத்துவதன் அர்த்தத்தையும் அதை எவ்வாறு அடைவது என்பதையும் வரையறுக்க அறிவுறுத்தவும்.
பின்னர், அவர்கள் கண்டறிந்ததை வாய்வழியாக விவாதித்து, அவற்றை மதிப்பீடு செய்து, சரியான பதிலைத் தெரிவிக்கவேண்டும்.
இரண்டாம் கட்டம் :
ஆன்மாவை பரிசுத்தப்படுத்துவதன் பலனைக் கண்டறிந்து அவற்றை விளக்குவதற்காக ஒப்புவமை முறையைப் பயன்படுத்தி ஆன்மாவை பரிசுத்தப்படுத்துதல், மற்றும் அதனை அடிக்கடி நினைவில் கொள்வன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுடன் விவாதிக்கவும்.
அவற்றை கரும்பலகையில் எழுத சில மாணவர்களை நியமிக்கவும்.
மூன்றாம் கட்டம்:
பாடத்தின் முடிவில், பாடம் மற்றும் அதன் அடிப்படைக் கூறுகள் பற்றி திறந்த ஓர் உரையாடலை நடத்தவும்.
மாணவர்கள் அதனை நடத்த, நீர் அதனை கண்கானித்து, மேற்பார்வை மாத்திரம் செய்ய வேண்டும்.
இறுதிச்சுருக்கம் :
முந்தைய உரையாடலில் இருந்து கண்டறியப்பட்ட பாடத்தின் சில அடிப்படைக் கூறுகளை மாணவர்கள் கரும்பலகையில் எழுதுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கூறுகளை பின்வருவனவற்றில் குறிப்பிடலாம்:
பரிசுத்தப்படுத்தல் என்றால்: தீமை மற்றும் பாவத்திலிருந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலாகும்.
பரிசுத்தப்படுத்துதல் இரண்டு விஷயங்களால் அடையப்படுகிறது: இதயத்தின் நோய்களிலிருந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்.
ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்துவது நபிமார்களின் பணிகளில் ஒன்றாகும் - பரிசுத்தப்படுத்துதல் வெற்றிக்கு ஒரு காரணம்.
ஆன்மாக்களைப் பரிசுத்தப்படுத்துவது உயர் அந்தஸ்துகளை அடைய ஒரு காரணமாகும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, சுயபரிசோதனை முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் செயல்பாட்டில் உள்ள ஹதீஸை வாசிக்குமாறு அறிவுறுத்தி, மேலும் அதில் உள்ள கலைச் சொற்களின் அர்த்தங்களின் விளக்கத்தை அவர்களுடன் விவாதிக்க வேண்டும். அதே நேரத்தில் வசனத் தொடரின் மூலம் அர்த்தங்களை முன்வைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பின்னர் அவர் அவர்களுடன் அதன் விளக்கம் மற்றும் வழிகாட்டலைப் பற்றி விவாதிக்க வேண்டும். மேலும் செயல்பாட்டின் இரு கேள்விகளுக்கும் பதிலளிக்க சில மாணவர்கள் தேர்வு செய்து, நீங்கள் அவற்றை சரிசெய்து, பின்னர் அவற்றை தங்கள் புத்தகங்களில் எழுதிக் கொள்வதற்காக, கரும்பலகையில் எழுதவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்த மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 3
ஒவ்வொரு மாணவருக்கும் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை விநியோகிக்கவும். அவர்கள் பதில்களை எழுதிமுடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்து, பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
பின்வரும் கேள்விகளை கவனமாகப் படித்து, தனித்தனி அட்டைகளில் பதிலளிக்க வைக்கவும்.
மதிப்பீடு செய்ய ,ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை மற்றொரு நண்பரின் அட்டையுடன் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் முன்னிலையில் மதிப்பீடு செய்து, அவர்களுக்கு சரியான பதில்களையும் தவறான பதில்களையும் தெரியப்படுத்த அவற்றில் சிலதை தோராயமாக தேர்வு செய்யவும்.
அட்டைக்குரிய மாணவரின் பெயரையும், அதனை மதிப்பீடு செய்தவரின் பெயரையும் கூறவேண்டும்.
கே 1 : (X) - (√) - (√) - (√) - (X)
பயற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
அவர் இந்த யோசனைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள மேலதிக புத்தகங்கள், கட்டுரைகள் அல்லது விரிவுரைகளை அணுகுவதன் மூலம் பாடத்தின் கூறுகள் பற்றிய அறிவு அதிகரிக்கும். மேலும் அதன் மூலம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அத்துடன் ஆன்மாவின் தீங்குகள், ஆபத்துகளிலிருந்து விடுபடுவதன் ஊடாக அவ்வாறான பரிசுத்தத்தை அடைய அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்.
பாடம் நான்கு: ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் வழிகள்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(பரிசுத்தப்படுத்தல் - நேர்வழி, பொறுப்புணர்வு - முகஸ்துதி).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(சுய கேள்வி முறை - கூட்டுகற்கை முறை).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
- மனித ஆன்மைவைப் பரிசுத்தப்படுத்துவதன் அவசியத்தை உணர்தல்.
- ஆன்மாவின் குறைகளை சீர்செய்ய ஆர்வங்கொள்ளல்.
- ஆன்மைவைப் பரிசுத்தப்படுத்துவதிலுள்ள தடைகளைத் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம் :
இந்த சூழ்நிலையை மாணவர்களுக்குச் சொல்லி பாடத்தை ஆரம்பிக்கவும் : "அப்துல்லாவும் முஹம்மதுவும் தங்கள் சமுதாயத்தை சீர்திருத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பின்வரும் இறைவசனத்தில் அதற்கான தீர்வைக் கண்டார்கள்: "எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை". (ரஃத் : 11). அவர்கள் தங்களைச் சீர்திருத்தத் தொடங்க முடிவு செய்தனர், ஆனாலும், "ஒரு முஸ்லிம் தன்னை எப்படி மாற்றிக் கொள்வது?" என்ற கேள்வி அவர்களிடம் எழுந்தது." பிறகு, இன்றைய பாடம் இதைத்தான் விளக்கும் என்று சொல்லி, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
நீங்கள் கூட்டுகற்கை உத்தியுடன் தொடங்கி, பாடத்தை பகுதிகளாகவும் பிரிவுகளாகவும் பிரிக்கவும். பின்னர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியைப் படிக்கபணிக்கவும்.
ஆன்மாவை சீர்திருத்தும் வழிகளில் ஒன்றை விளக்குதல், இது ஒவ்வொரு குழுவுக்குமானது.
அவர்கள் கண்டறிந்ததை வாய்வழியாக விவாதித்து, மனதில் பதிவதற்காக சரியானதை கரும்பலகையில் எழுதவும்.
இரண்டாம் கட்டம் :
சுய-கேள்வி முறை பயன்படுத்தி, சில மாணவர்களைத் தேர்வு செய்து, பாடத்திலிருந்து தாம் தெரிந்து கொள்ள விரும்புவதைப் பற்றி ஒவ்வொருவரும் இரண்டு கேள்விகளைக் கேட்குமாறு பணியுங்கள்.
நீங்கள் அவர்களின் கேள்விகளை கரும்பலகையில் எழுதி, பின்னர் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று அவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
இறுதிச்சுருக்கம் :
பாடமீட்டலின் போது உதவியாக இருக்கும் நோக்கில், ஒவ்வொரு குழுவும் பாடத்தை தங்கள் கொப்பிகளில் கூறுகள் மற்றும் படிக்கும் போது பயன்படுத்த வேண்டிய சிந்தனைகளின் வடிவத்தில் எழுதச் சொல்லவும்.
எழுதப்பட்ட தாள்களின் உதவியின்றி பாடத்தின் சுருக்கத்தை வாய்வழியாக வழங்க சில மாணவர்களைக் கேளுங்கள், மேலும் அதில் திறமையானவர்களை பாராட்டுங்கள்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பரிசுத்தப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 1
முதல் செயல்பாடு அடங்கிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, செயல்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகையான அட்டையையும் மாணவர்களுடன் விவாதித்து விளக்கவும். அட்டைக்குப் பொருத்தமான சரியான பரிசுத்தப்படுத்தும் வழிமுறையைக் கொண்டு வர ஒவ்வொரு மாணவரும் அவருடைய ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தச் சொல்லவும். அவர் அவர்களின் பதில்களைப் பெற்று அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்கி, நீங்கள் அதைக் கரும்பலகையில் எழுதி, கொப்பிகளில் எழுதுமாறு அவர்களிடம் சொல்லுங்கள்.
நோன்பு நோற்றல்.
ஸகாத் வழங்கல்.
அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, தொழுகையை நிறைவேற்றுதல்.
மரணத்தை நினைவுகூர்தல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, பரிசுத்தப்படுத்துவதைத் தடுப்பவற்றைக் கண்டறிய மாணவர்களை பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் கூறுகளைக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
பெருமை, அத்துமீறல், அநீதி, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தல், சத்தியத்தை மறுத்து, ஏற்காமலிருத்தல்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
கரும்பலகையில் கேள்விகளை ஒவ்வொன்றாக எழுதுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அருகருகில் இருக்கும் இரண்டு மாணவர்களை ஒருவரையொருவர் பங்கேற்கச் சொல்வது நல்லது.
பின்னர் எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்து, தமது பதில்களை ஏனையோரிடம் வாசித்துக் காட்டுமாறு கூற வேண்டும்.
தவறு செய்பவர்கள் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டவும்.
கே 1 : (√) - (√) - (X)
கே 2 : (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) - (முயற்சித்தல்) - (மண்ணறைகள்)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
உங்கள் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து ஆன்மாவைச் சீர்திருத்துவதற்கான வழிகளின் பட்டியலையும், ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கான சில தடைகளின் பட்டியலையும் உள்ளடக்கிய ஒரு பெரிய பதாகையை வடிவமைப்பதில் ஒவ்வொரு குழுவையும் பங்கேற்கச் சொல்லவும். சிறந்த பதாகையைத் தேர்ந்தெடுத்து வகுப்பறையில் மாட்டி வைக்கவும்.
பாடம் ஆறு: உள்ளம் சார்ந்த நற்செயல்கள்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நேசம் - ஆதரவு - பயம்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கதை கூறும் முறை - கருத்துதிர்ப்பு - கூட்டு கற்கைமுறை).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
- உள்ளம் சார்ந்த நற்செயல்களின் அவசியத்தை உணர்தல்.
- அனைத்து விதமான நற்செயல்கள் மூலமும் அல்லாஹ்வை நெருங்குதல்.
- அல்லாஹ் உள்ரங்கம், வெளிரங்கம் அனைத்தையும் அறிகின்றான் என்பதை உறுதி கொள்தல்.
- அல்லாஹ்வின் உபகாரம், அருட்கொடைகளை ஏற்றுக் கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம் :
புத்தகத்தில் உள்ள முன்னுரையை மாணவர்களுக்கு வழங்கி பாடத்தை துவங்கவும். அதாவது, நபி (ஸல்) அவர்கள் உள்ளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று கூறி, பின்வரும் நபிமொழியையும் கூறுங்கள்: 'உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு, அது சீராகிவிட்டால் உடல் அனைத்தும் சீராகிவிடும். அது கெட்டுவிட்டால் உடல் அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் உள்ளமாகும்'. நபி (ஸல்) அவர்கள் இதயத்திற்கு ஏன் இந்த இடத்தை அளித்தார்கள்? மாணவர்களுடன் அவர்களது பதில்களைப் பற்றி விவாதிக்கவும். பின்னர் புதிய பாடத்தின் உள்ளடக்கத்திற்குக் கொண்டு வந்து தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம் :
கருத்துதிர்ப்பு உத்தியைப் பயன்படுத்தி; மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாணவர் குழுவையும் நிய்யத்தின் அர்த்தத்தையும் அதன் சட்டத்தையும் வரையறுக்க பணிக்கவும்.
ஒவ்வொரு குழுவும் மேலதிகத் தாள் ஒன்றில் தங்கள் விடைகளை எழுதி, தமக்கு மத்தியில் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
இரண்டாம் கட்டம் :
உள்ளம் சார்ந்த சில நற்செயல்களை உள்ளடக்கிய ஒரு பலகையைக் காண்பிக்க சில மாணவர்களை நியமிக்கவும்.
அவர்களுடன் அதைப் பற்றி விவாதித்து, பின்னர் இந்த பலகையை வகுப்பறைச் சுவரில் தொங்க விடவும்.
மூன்றாம் கட்டம்:
கூட்டுகற்கை உத்தியைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு குழுவும் பாடத்தை மீட்டி, பல கேள்விகளைத் தயாரிக்கச் சொல்லவும்.
அதை ஒரு வெளிப்புற காகிதத்தில் எழுதவும். பின்னர் ஒவ்வொரு குழுவும் தான் தேர்ந்தெடுக்கும் மற்றொரு குழுவிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேன்டும். இவ்வாறே கேள்விகள் குழுக்களிடையே தொடர்ந்து பரிமாறப்படவேண்டும். நீர் அவற்றைச் செவிமடுத்து மதிப்பீடு செய்ய வேண்டும்.
அவற்றை மற்ற விவாதங்களுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தவும். மேலும் இந்தக் கேள்விகளில் மிக முக்கியமானவை பின்வருவனவாகும்:
நேசம், பயம் மற்றும் ஆதரவு ஆகிய ஒவ்வொன்றினதும் அர்த்தம் என்ன ?
அச்சத்தை வரைவிலக்கணப்படுத்தி, அதற்கு ஆதாரமொன்று கூறுக.
பொறுப்புச் சாட்டுதல் மற்றும் மீளுதலின் அர்த்தம் என்ன ?
அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் முறையைத் தெளிவுபடுத்தவும்.
பொறுமை, நன்றி செலுத்துதல் என்பவற்றுக்கு இடையிலான தொடர்பைத் தெளிவுபடுத்தவும்.
மாணவர்களின் பதில்களைப் பெற்று, அவர்களிடம் தெளிவற்றிருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து விளக்குவதற்காக அவர்களுடன் கலந்துரையாடவும்.
இறுதிச்சுருக்கம் :
பாடத்தைப் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் அவதானிப்புகளை எழுதுமாறு உங்கள் மாணவர்களைக் கேட்பது விரும்பத்தக்கது.
குறிப்புகளில் பாடத்தின் முக்கிய யோசனைகள் மற்றும் அதிலிருந்து கற்றுக்கொண்டவை அடங்க வேண்டும்.
தாம் எழுதியதை சமர்பிக்க சிலரைத் தேர்வு செய்யவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பயம். ஆதரவு என்வற்றின் மகத்துவத்தை அறிதல்.
நோக்க இலக்கம் : 1
ஒவ்வொரு மாணவருக்கும் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை விநியோகிக்கவும். அவர்கள் பதில்களை எழுதிமுடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்து, பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும்.
செயல்பாடு 1 : அல்லாஹ்விடம் ஆதரவு வைக்காமல் அச்சம் மாத்திரம் கொள்வது அவனது அருளில் நிராசையடைய வைத்து விடும். அல்லாஹ்வை அஞ்சாமல் ஆதரவு மாத்திரம் வைப்பது மமதை கொண்டு பாவங்கள் செய்ய வைத்துவிடும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, உள்ளம் சார்ந்த நற்செயல்களைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 2
சில அட்டைகளில் உள்ள செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை காட்சித் திரையின் மூலம் ஆசிரியர் காண்பிக்க வேண்டும். எழுமாறாக அட்டைகளை மாணவர்களுக்கு விநியோகித்து, ஒவ்வொரு மாணவரையும் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட வசனத்தைக் கூறவைக்கவேண்டும். மாணவர்களின் பதில்களைப் பெற்று அவற்றை மதிப்பீடு செய்து, பின்னர் அவர்களின் புத்தகங்களில் சரியான பதில்களைப் பதிவுசெய்ய அறிவுறுத்தவேண்டும்.
உள்ளம் சார்ந்த நற்செயல்கள்
பொறுமை
நன்றி செலுத்துதல்
உளத்தூய்மை
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, தொழுகையில் உள்ளச்சத்தை உருவாக்கும் வழிமுறைகளை அறிதல். நோக்க இலக்கம் : 3
ஒவ்வொரு மாணவரும் தொழுகையில் உளத்தூய்மையை அடைய உதவும் ஐந்து மிக முக்கியமான வழிகளைப் பற்றி சிந்திக்கும்படி அறிவுறுத்தவும். தான் எழுதியதைத் தனது நண்பர்களுக்கு வாசித்துக் காட்டும் படி அவர்களிடம் கோரவும். எழுதப்பட்ட வார்த்தைகளில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பாராட்டி, காலைக்கூட்டத்தில் அதனை வாசிக்க ஒருவரைத் தேர்வு செய்யவும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் பின்வரும் கேள்விகளைத் தீர்ப்பதில் பங்கேற்கச் சொல்லவும்.
மாணவர்கள் பதிலளிப்பதில் ஒத்துழைக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்களிடம் செல்லவும்.
ஒவ்வொரு குழுவும் தங்கள் பதிலை முன்வைக்க ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறவும். நீங்கள்அவற்றை மதிப்பீடு செய்யவும் வேண்டும்.
கே 1 : (பயம்) - (அச்சம் மற்றும் மீளுதல்) - (அடையாளச் சின்னங்களை மகிமைப்படுத்துதல்).
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
உங்கள் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை எவ்வாறு மகிமைப்படுத்துவது என்பது குறித்த உரையாடலைத் தயாரிப்பதில் ஒரு குழுவும், தொழுகையில் உள்ளச்சம் குறித்த உரையாடலைத் தயாரிப்பதில் இரண்டாவது குழுவும், அச்சம் மற்றும் ஆதரவு வைத்தல் குறித்த உரையாடலைத் தயாரிப்பதில் மூன்றாவது குழுவும் பங்கேற்க வைப்பது சிறந்தது. பின்னர் அவர்கள் தயாரிக்கும் கேள்விகள் மற்றும் பதில்களைக் கவனித்து, காலைக்கூட்டத்தில் இந்த உரையாடலைச் செய்ய சிறந்த குழுவிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸுன்னா மற்றும் குணாதிசயப் பகுதி
பாடம் ஒன்று : நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (மறுப்பவர்களைத் தவிர - நபியவர்களை மதித்து, கண்ணியப்படுத்துதல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம்- கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கருத்துதிர்ப்பு - ஆராயந்தறியும் முறை - சொற்பொருள் வரைபடங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது சமூகம் செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்துதல்
• நபி (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவோருக்கான கூலியின் மகத்துவத்தை உணர்தல்.
• வாழ்வின் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வங் கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
நபி (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகளைப் பற்றி தாங்கள் முன்பு கற்றுக்கொண்டதை நினைவுபடுத்தும்படி மாணவர்களிடம் கேளுங்கள். அதன் அடிப்படையில், அவர்கள் தற்போதைய பாடத்தில் உள்ளடக்கப்பட முடியுமான கூறுகள் பற்றிய தங்கள் எதிர்வுகூறல்களை முன்வைக்க வேண்டும். பின்னர் பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம்:
சொற்பொருள் வரைபடங்களைப் பயன்படுத்துதல்.
பாடத்தின் கூறுகள் மற்றும் உள்ளடக்கத்தின் அமைப்பை மாணவர்களுக்கு பலகையில் காட்டவும்.
அந்த கூறுகளைப் பற்றி அவர்களுக்கு என்ன முன் அறிவு இருக்கிறது என்பதைக் கண்டறியவும்.
அவர்களது பதில்களைக் கண்டறிந்து, பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
இரண்டாம் கட்டம் :
கருத்துதிர்ப்பு முறை மூலம்; நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய அதிக எண்ணிக்கையிலான கடமைகளை முன்வைக்கும் விதமாக ஆசிரியர் மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும்.
அவர் அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு, பொதுவாக அவற்றைப் பற்றி விவாதிக்கவேண்டும்.பின்னர், பொதுவாக அந்த உரிமைகளை உள்ளடக்கிய ஒரு படத்தை அவர்களுக்கு வழங்கி, அதை விரிவாக விவாதிப்பதற்கு முன் அவர்கள் அதைப் பற்றி சிந்திக்க வைக்கவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
இதில் ஆராய்ந்தறியும் முறையைப் பயன்படுத்த வேண்டும். சக நண்பர்களுக்கு முன்னால் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றிய சில ஆதாரங்களை மேற்கோள் காட்டுமாறு மாணவர்களில் ஒருவரைக் கேட்க வேண்டும்.
தனிநபர் மற்றும் சமூகத்தின் மீதான இந்த கடமைகளின் தாக்கத்தைக் கண்டறியவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இது அவர்களுக்கு உதவுகிறது.
இறுதிச்சுருக்கம் :
ஒவ்வொரு மாணவரும் தாம் பாடத்திலிருந்து பயனடைந்த மூன்று விடயங்களைத் தத்தமது கொப்பிகளில் எழுத வேண்டும்.
தாம் பதிந்ததை சமர்ப்பிக்க ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மற்றவர்கள் முன்வைத்த வெவ்வேறான கூறுகளை அறிந்து கொண்டு, அவற்றினூடாக தாம் எழுதியதை மெருகூட்டுவதற்காக, வெவ்வேறான பதில்களை கரும்பலகையில் எழுத வேண்டும்.
மாணவர்கள் பாடத்தின் ஆரம்பத்தில் தாம் முன்வைத்த எதிர்பார்க்கைக் கூறுகளை தற்போது மீள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
பாடத்தில் குறிப்பிடப்படாத, தாம் அறிய விரும்பும் அமசங்களை அடையாளப்படுத்த அவர்கள் அதை மதிப்பீடு செய்ய வேண்டும்.
அதைத் தேடி பார்க்க பின்னர் முயற்சிக்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, நபி (ஸல்) அவர்களை நேசிப்பதையும், மறுமை நாளில் அவரை நேசிப்பவர்களின் வெகுமதியையும் விவரித்தல். நோக்க இலக்கம் : 2
பின்வரும் செயல்பாட்டை தனித்தனியாக நிறைவேற்ற ஒவ்வொரு மாணவரையும் பணிக்கவும்.
பதில்களை வழங்குவதில் ஆக்கப்பூர்வமாகவும் சரளமாகவும் இருக்க அவர்களைத் தூண்டவும்.
கற்றல் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள, இவ்விரு மாணவர்களாக தங்கள் பதில்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் .
தாங்கள் கண்டறிந்ததை முன்வைக்க அவர்களில் சிலரைத் தேர்வு செய்து, அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவரது பதிலுக்கு வழங்கிய கருத்துரையையும் விளக்க வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, பங்கேற்கவும் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் மாணவர்களைப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 4
பாடப்புத்தகத்தில் அடுத்த செயல்பாட்டைத் திறக்க மாணவர்களைக் கோரவும்.
ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து, ஒரு தனித்தாளில் அதற்கு பதிலளிக்க அவர்களைக் கேட்கவும்.
செயல்பாட்டை ஒருவர் வாசிக்கவும், மற்றவர் பதிலளிக்கவுமாக, இரு மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
இருவரும் சரியாக பதிலளித்தால் பாராட்டவும். தவறிழைத்தால் வேறு இருவரைத் தேர்வு செய்யவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
பின்வரும் வினாக்களுக்கு கொப்பிகளில் பதிலளிக்குமாறு மாணவர்களிடம் வேண்டவும்.
மாணவர்களைக் கடந்துசென்று அவர்களைக் கண்காணிப்பதோடு, மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்கவும்.
அவர்களின் பதில்களைப் பெற்று, அவர்களுக்குத் தகுந்த வலுவூட்டலை வழங்குவதோடு, ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான மதிப்பெண்ணைத் குறிப்பிடவும்.
தமது பதிலைத் திருத்தி, பொருத்தமான மதிப்பெண்ணை வழங்குமாறு ஒவ்வொரு மாணவரிடமும் கோரவும்.
அவர்களைக் கவனித்து, அவர்கள் நுணுக்கமாக திருத்தியுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
கே 1 : () - () - ()- () - ()
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடும் எல்லாவற்றிலும் அவர்களை முன்மாதிரியாகப் பின்பற்றத் தூண்டியும், மறுமையில் அவ்வாறு செய்பவர்களின் வெகுமதியின் மகத்துவத்தை உணர்த்தியும் மக்களுக்கு அறிவுரைகளை வழங்க மாணவர்களை பணிக்கவும்.
நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து, அவற்றை ஆராய்வதிலும், தமது குடும்பத்தினர், சமூக மக்களிடையே பரவச் செய்வதிலும் முயற்சி எடுத்தல்.
பாடம் இரண்டு : நபியின் குடும்பத்தினரின் (அஹ்லுல் பைத்) சிறப்புக்கள், மற்றும் உரிமைகள்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(அசுத்தம் - மானக்கேடானவை - அவதூறு - பெரும்பங்கு - அவதூறு - மிகைப்படுத்தல்).
கற்பித்தல் சாதனங்கள்:
(பாடத்தில் இடம் பெறும் அல்குர்ஆன் வசனங்கள் பதிவு செய்யப்பட்ட ஓடியோ - கணினி இயந்திரம் - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(கதையூடாக அறிமுகம் - உரையாடல் மற்றும் விவாதம் - சொற்பொருள் வரைபடங்கள் - தவறான புரிதல்களை சரிசெய்தல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- நபியின் குடும்பத்தாரை நேசித்தல்.
- அஹ்லுல் பைத்தினருக்கான பிரத்தியேக சிறப்புகள் சிலதைப் புரிந்துகொள்ளல்.
அஹ்லுல் பைத்தினரின் உரிமைகளை நிறைவேற்றுவதில் கவனமெடுத்தல்.
அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் அளவுகடந்து செல்வதைத் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கவும் : மஸ்ஜிதின் இமாம் தொழுகையின் போது பின்வரும் இறைவசனத்தை ஓதுவதை ஓமர் கேட்டுள்ளார்: "(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்" (அஹ்ஸாப் : 33). தொழுகைக்குப் பிறகு அவர் இமாமிடம், "அஹ்லுல் பைத்தினர் யார் ? அல்லாஹ் ஏன் அவர்களை உன்னத வசனத்தில் தனித்துவப்படுத்தியுள்ளான்? அவர்களுக்கு பிரத்தியேக உரிமைகள் உள்ளதா?" எனக் கேட்டார்.
பின்னர் மாணவர்களின் பதில்களைப் பற்றி விவாதித்து, பாடத்தின் உள்ளடக்கத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
முதலாவது "அஹ்லுல் பைத்தினரை வரையறுத்தல்" மற்றும் இரண்டாவது "அஹ்லுல் பைத்தினரின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு விளக்கப்படத்தை கரும்பலகையில் வரையவும். அவ்விரண்டு தலைப்புகளையும் விளக்கி, தெளிவு படுத்தவும்.
நபியவர்களின் குடும்பத்தின் சிறப்புக்கள் தொடர்பான குர்ஆன் வசனங்களை ஆடியோ ஊடகம் மூலம் கேட்கும்படி மாணவர்களிடம் கேட்டு, அவற்றின் அர்த்தத்தை அவர்களுடன் கலந்துரையாடி, அவற்றை விளங்கச் செய்யவும்.
இரண்டாம் கட்டம்:
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி; நபிகள் நாயகத்தின் குடும்பம் தொடர்பான சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றிய வரைபடத்தை உள்ளடக்கிய பலகையை ஆசிரியர் மாணவர்களுக்குக் காட்ட வேண்டும். அவற்றை அவதானிக்கக் கூறி, பின்னர் அந்த சட்டதிட்டங்களைத் தொடராக விளக்கி, தெளிவுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் சில மாணவர்களைத் தேர்வு செய்து, தமது புத்தகங்களில் உள்ள நபியவர்களின் குடும்பத்தின் சட்டங்கள் தொடர்பான குர்ஆன் ஆதாரங்கள் மற்றும் நபிமொழிகளை வாசிக்குமாறு கூறி, நீங்கள் அவற்றை விளக்கி, அவற்றின் வழிகாட்டல்களைத் தெளிவுபடுத்தவேண்டும்.
மூன்றாம் கட்டம் :
தவறான புரிதல்களை சரி செய்யும் உத்தி மூலம்; ஆசிரியர் பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களுக்கு முன்வைத்து, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்கலாம் :
சிலர் நபிகள் நாயகத்தின் குடும்பத்தாரின் சமாதிகளுக்குச் செல்வதை நாடுகிறார்கள். அதன் நோக்கம் நேசமோ மண்ணறைகளைத் தரிசித்தலோ அல்ல; மாறாக இவ்வாறான தரிசிப்புக்கள் அவர்களின் விதியை சிறப்பாக மாற்றும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அபு பக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரை விட அஹ்லுல் பைத்தினரை சிறப்பிக்கும் சில பிரிவுகள் உள்ளன.
இறுதிச் சுருக்கம் :
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் பாடத்தின் கூறுகளில் ஒன்றைத் தேர்வு செய்து, அதிலிருந்து தான் கற்றுப் பயனடைந்ததை தனது சொந்தப் பாணியில் வெளிப்படுத்துமாறு கேட்க வேண்டும். தங்களின் பதில்களை வழங்க சில மாணவர்களைத் தேர்வு செய்து, தகுந்த ஆதரவை வழங்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, அஹ்லுல் பைத்தினரின் சிறப்புக்களை வரையறுத்து, அதற்கான ஆதாரங்களை முன்வைத்தல்.
நோக்க இலக்கம் : 2
மாணவர்களின் முந்தைய அறிவை நீங்கள் சார்ந்திருந்து, முதல் செயல்பாட்டில் உள்ள ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபிகள் நாயகத்தின் குடும்பத்தின் சிறப்புக்களை நினைவுபடுத்தும்படி அவர்களிடம் கேட்கலாம். அஹ்லுல்த்தின் சிறப்புக்கள் மற்றும் உரிமைகள் தொடர்பான அவர்களின் உணர்வுகளைக் கண்டறிந்து அவர்களை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு சரியான பதிலை விளக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, அஹ்லுல்பைதினருக்கு அவதூறு கூறுவோருக்கு பதிலளித்தல்.
நோக்க இலக்கம் : 6
செயல்பாட்டை நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க இவ்விரு மாணவர்களாக நியமிக்கவும். பின்னர் செயல்பாட்டில் உள்ள ஆதாரங்களை காட்சித் திரையின் மூலம் வரிசையாகக் காண்பிக்கவும். ஒவ்வொரு குழுவின் பதிலையும் அடையாளம் கண்டு, பதிலளிப்பதில் சிறப்பாக செயல்பட்ட, சிறந்த வார்த்தைகளால் பதிலளித்த குழுவை அடையாளம் காணவும். மேலும் மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் எழுதிக்கொள்வதற்காக, சிறந்த வார்த்தை வடிவமைப்பை அடையாளப்படுத்திக் கொடுக்கவும்.
மதிப்பீடு :
பின்வரும் முறைகளில் மதிப்பீட்டுக் கேள்விகளை மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும்:
முதலிரு கேள்விகளுக்கும் ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு சரியான பதிலை அறியப்படுத்தி, ஒவ்வொருவருக்கும் அவர்களின் பதிலுக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணை வழங்க வேண்டும். மாணவர்களின் புள்ளிகளையும், அவர்கள் விட்ட தவறுகளையும் ஆசிரியர் கண்டறிய வேண்டும்.
கே 1 : (✓) - (✖) - (✓)
Q2: நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் - கதீஜா மற்றும் அலி - ஸகாத் பெறுவதிலிருந்து தடுத்தல்.
மாணவர்களிடம் மூன்றாவது கேள்வியைக் கேட்டு, கேள்வியின் கூறுகளுக்குப் பதிலளிக்க அவர்களில் மூன்று பேரைத் தேர்வு செய்யவும். மேலும் இருவரை இவர்களது பதில்களை மதிப்பீடு செய்யத் தேர்வு செய்யவும். இரு குழுக்களையும் நீங்கள் மதிப்பீடு செய்யவும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
பாடத்தில் கற்றதன் படி, பின்வருவனவற்றை மாணவர்களுக்கு உணர்த்துவது விரும்பத்தக்கது:
மார்க்க நூல்கள், அறிஞர்கள், மின்னணு மூலாதாரங்கள் போன்ற பல்வேறு மூலங்களை அணுகி, அஹ்லுல்பைத்தின் சிறப்புக்களை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் அறிந்து கொள்ளுதல். அவர்கள் மீதான நேசத்தை உணர்ந்து, அவர்களுக்குரிய உரிமைகளை நிறைவேற்ற ஆர்வங்கொள்ளல். தம்மைச் சூழ உள்ளோர்க்கும், தமது சமூகத்திற்கும் அச்சிறப்புக்களைக் கூறி, அவ்வுரிமைகளை அறியத்தருதல்.
பாடம் மூன்று : நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல்.
கால அளவு: இரு பாடவேளைகள்
புதிய சொற்கள்:
(அளவு கடத்தல் - குறைவைத்தல் - உதவி தேடல் - நடுநிலை - தவறிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் - மறைவான விடயம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள் - கணினி இயந்திரம்).
கற்பித்தல் உத்திகள்:
(உரையாடல் மற்றும் விவாதம் - சொற்பொருள் வரைபடங்கள் - தவறான புரிதல்களை சரிசெய்தல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை உணர்த்துதல்.
• அனைத்திலும் நடுநிலை, நீதத்தைக் கடைபிடிப்பதில் ஆர்வங்கொள்ளல்.
• நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தலைத் தவிர்ந்து கொள்ளல்.
• அஹ்லுல் பைத்தினர் மற்றும் நபித்தோழர்களைத் தொடர்ந்து மதித்து கண்ணியப்படுத்தல்.
பாடத்தின் அறிமுகம்:
இந்த ஹதீஸை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கவும்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்பா (ரலி) கூறினார் : முஆத் (ரலி) அவர்கள் ஷாம் பிரதேசத்திலிருந்து வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு ஸுஜூது செய்தார்கள், அப்போது நபியவர்கள், "இது என்ன முஆத்?" என்று கேட்க, அவர் "நான் ஷாமிற்கு சென்ற போது, அவர்கள் தங்கள் பிஷப்கள் மற்றும் மதகுருக்களுக்கு ஸுஜூது செய்வதைப் பார்த்தேன் (அதாவது, அவர்கள் தங்கள் அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கு சாஷ்டாங்கமாக வணங்குவதை நான் கண்டேன்), அதை உங்களுக்குச் செய்ய நான் விரும்பினேன்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்" என்றார்கள்.
ஹதீஸை வாசித்த பிறகு, ஹதீஸ் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி விவாதித்து, எல்லைமீறுதலின் ஆபத்தையும், அது பலரைத் வழிதவறச் செய்தது என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், பின்னர் பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு விளக்கப்படத்தை கரும்பலகையில் வரையவும்; முதல் பகுதி "அளவுகடத்தல் மற்றும் குறைவைத்தலின் அர்த்தம்" என்ற தலைப்புடனும் இரண்டாவது பகுதி, "நபி (ஸல்) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவு கடந்து செல்வதன் வெளிப்பாடுகள்" என்ற தலைப்புடனும் இருக்க வேண்டும்.பின்னர் இவ்விரண்டு தலைப்புகளையும் விளக்கி, தெளிவுபடுத்தவும்.
இரண்டாம் கட்டம் :
சொற்பொருள் வரைபடத்தின் முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களுக்கு (நபி (ஸல்) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் குறை சொல்வதன் வெளிப்பாடுகள்) என்ற தலைப்பிட்ட ஒரு வரைபடத்தை உள்ளடக்கிய பலகையை வழங்க வேண்டும். மேலும் அதை அவதானிக்கும்படி கோரி, அவற்றை விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த வெளிப்பாடுகள் தொடர்பான குர்ஆனிய வசனங்கள் மற்றும் நபிமொழிகளை தமது பாடப்புத்தகங்களில் இருந்து வாசிக்க சில மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர் அவற்றை விளக்கி, அவை உணர்த்தும் பாடங்களையும் கூறவேண்டும்.
மூன்றாம் கட்டம்:
தவறான புரிதல்களைத் திருத்தும் உத்தியின் மூலம், ஆசிரியர் நபியவர்கள் விடயத்தில் எல்லைமீறல் மற்றும் குறைவைத்தல் பற்றிய பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களிடம் முன்வைத்து, அவற்றைப் பற்றிய தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும், அவர்களின் ஆய்வின் பிரகாரம் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்றும் கூறவும் மாணவர்களிடம் கோரவும்.
நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிகின்றார்கள், அன்னார் ஒளியினால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்று சிலர் வாதாடுகின்றனர்.
அண்டைவீட்டார் ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு நோயாளரைக் குணப்படுத்த உதவி தேடுகின்றார்.
அஹ்லுல் பைத்தினர் மற்றும் நபித்தோழர்கள் விடயத்தில் ஓர் அறிவீனர் குறைசொல்வதைக் கேட்டீர்கள்.
இறுதிச்சுருக்கம் :
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் பாடத்தில் வழங்கப்பட்ட கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றி அவர் கற்றுக்கொண்டதையும், அதனால் அடைந்த பயன்களையும் தனது சொந்த பாணியில் வெளிப்படுத்தும்படி கேட்க வேண்டும்.
தங்கள் பதில்களை வழங்குவதற்கு சில மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, நபி (ஸல்) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடத்தல் மற்றும் குறைவைத்தல் ஆகியவற்றுக்கிடையில் வேறுபிரித்தல். நோக்க இலக்கம் : 2
ஒவ்வொரு மாணவரும் தங்கள் கொப்பியில் பின்வரும் செயல்பாட்டிற்கு பதிலளிக்குமாறு கோரவும்.
தான் எழுதியதை வாசிக்க ஒருவரைத் தேர்வு செய்து, அதனை மதிப்பீடு செய்யவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நபி (ஸல்) அவர்களுடன் பேணவேண்டிய ஒழுக்கங்களை அல்குர்ஆனிலிருந்து கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4
இரண்டாம் செயல்பாட்டை இவ்விரு மாணவர்களாகச் செய்ய அறிவுறுத்தவும்.
செயல்பாட்டிலுள்ள குர்ஆன் வசனத்தை கணினித் திரை மூலம் காண்பிக்கவும்.
ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறியவும். நபி (ஸல்) அவர்களிடம் பேண வேண்டிய ஒழுக்கங்களைப் பிரித்தெடுப்பதில் சிறந்தமுறையில் முயற்சிக்கும் குழுவை அடையாளம் காணவும்.
மாணவர்கள் தமது கொப்பிகளில் எழுதிக் கொள்வதற்காக சிறந்த பதில்களை வரையறுத்துக் கொடுக்கவும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
பின்வரும் வினாக்களுக்கு கொப்பிகளில் பதிலளிக்குமாறு மாணவர்களிடம் வேண்டவும்.
அக்கேள்விகளை மாணவர்களுடன் விவாதிக்கவும்.
தங்கள் பதில்களைக் காட்ட அவர்களில் சிலரைத் தேர்வு செய்யவும். ஒவ்வொரு பதிலுக்கும் பொருத்தமான மதிப்பெண்ணைத் தீர்மானிக்கவும்.
ஒவ்வொரு மாணவரும் தத்தமது பதில்களைத் திருத்தி, தமக்கே புள்ளி வழங்கிக் கொள்ளப் பணிக்கவும்.
பதிலின் துல்லியம் மற்றும் திருத்தத்தின் துல்லியத்தை அறிய, மாணவர்கள் தங்கள் கொப்பிகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
கே 1: நபியவர்களின் பெயரைக் கொண்டு சத்தியம் செய்வது - அவரது வரலாற்றை அறியாமை - கஞ்சன் - அல்லாஹ்வை மட்டுமே வணங்குதல்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
மார்க்க நூல்கள், அறிஞர்கள், மின்னணு மூலாதாரங்கள் போன்றவற்றின் துணையுடன் நபி (ஸல்) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடத்தல் மற்றும் குறைவைத்தலின் வெளிப்பாடுகளை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் அறிந்து கொள்ளுதல். அவர்கள் மீதான நேசத்தை உணர்ந்து, அவர்களுக்குரிய உரிமைகளை நிறைவேற்ற ஆர்வங்கொள்ளல், தம்மைச் சூழ உள்ளோர்க்கும், தமது சமூகத்திற்கும் அச்சிறப்புக்களைக் கூறி, அவ்வுரிமைகளை அறியத்தருதல்.
பாடம் நான்கு : நபித்தோழர்களின் சிறப்புக்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நபித்தோழர் - தேடுவார்கள் - அவர்களது அடையாளம் - எனது காலப் பிரிவினர் - குறை கூறுதல் - அவர்களை அடுத்து வருவோர் - வீட்டை அமைத்துக் கொண்டவர்கள் - பிறரைத் தேர்ந்தெடுப்பார்கள் - கடும்தேவை - பாதுகாக்கப்படுகிறாரோ - உலோபித்தனம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகைகள் - பாடத்தில் இடம்பெற்றுள்ள சில அல்குர்ஆன் வசனங்களை உள்ளடக்கிய ஓடியோப்பதிவு).
கற்பித்தல் உத்திகள்:
(கண்டுபிடித்தல் கற்கை முறை - "எனக்குத் தெரியும் - நான் அறிய விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன்" (K.W.L.) முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- நபித்தோழர்களின் தகவல்கள், வாழ்க்கை நிலைகள், அவர்களுடைய வரலாறு என்பவற்றைக் கற்று, முஸ்லிம்கள் மத்தியில் பரவச் செய்ய முயற்சித்தல்.
- நபித்தோழர்களின் நற்செயல்களைப் பின்பற்றுதல்.
நபித்தோழர்களின் சிறப்பை மதித்தல்.
பாடத்தின் அறிமுகம்:
கரும்பலகையில் பின்வரும் வாக்கியத்தை எழுதவும் : (நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவரை நம்பி, இஸ்லாத்தைப் பின்பற்றி இஸ்லாத்திலேயே இறந்த ஒவ்வொரு நபரும் ஆவர்). மாணவர்களில் ஒருவரை அதைப் படிக்கத் தேர்வுசெய்யும், பின்பு அவர்களிடம் அதைப் பற்றி சிந்தித்து, அது எதைக் குறிக்கிறது என்பதைக் கண்டறியப் பணிக்கவும். அவர்களின் பதில்களைப் பார்க்கவும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
முதல் பகுதியில் எழுத்து (K), இரண்டாவது பகுதியில் எழுத்து (W), மற்றும் மூன்றாவது பகுதியில் எழுத்து (L) ஆகியவை அடங்கும் வகையில் தனது கொப்பியின் பக்கங்களில் ஒன்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும்படி ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் கோர வேண்டும் .
பின்னர் அவர் நபித்தோழர்களைப் பற்றி ஏற்கனவே தெரிந்த தகவல்களை முன்வைக்குமாறு கேட்டு, அவற்றை முதல் பெட்டியில் எழுதக் கோரவும். அவை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் முந்தைய அறிமுகத்தைக் கண்டறியவும்.
பின்னர் அவர்கள் பாடத்திலிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் தகவல்களையும் யோசனைகளையும் எழுதி இரண்டாவது பெட்டியில் சேர்க்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு மூலம், ஆசிரியர் மாணவர்களுடன் உரையாடி, நபித்தோழர்களின் அதிக எண்ணிக்கையிலான சிறப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகளை முன்வைக்கச் செய்யவேண்டும். அவர்களின் பதில்களைக் கண்டறிந்து அவை பற்றி அவர்களுடன் பொதுப்படையாக விவாதிக்க வேண்டும்.
பின்னர் அதை விரிவாக விவாதிப்பதற்கு முன், அவர்கள் சிந்திப்பதற்காக அவர் இந்த சிறப்புகள் மற்றும் உரிமைகளை பொதுவாக உள்ளடக்கிய ஒரு படத்தைக் காட்ட வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
ஆசிரியர் நபித்தோழர்களின் சிறப்புகள் மற்றும் உரிமைகளை ஒவ்வொன்றாக விளக்கத் தொடங்குவார். இடையில், அந்த சிறப்புகள் மற்றும் உரிமைகள் தொடர்பான பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை மாணவர்களுக்குக் கேட்க வைக்கலாம்.
ஆசிரியர் பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களையும் மாணவர்களுக்கு காண்பித்து, அவற்றை விளக்கி, கலந்துரையாடி, அவற்றின் அர்த்தங்களை தெளிவுபடுத்தவேண்டும்.
பின்வரும் கேள்விகளை மாணவர்களுடன் விவாதிப்பதன் மூலம் நபித்தோழர்களின் சிறப்புகள் மற்றும் உரிமைகளை ஆசிரியர் விளக்கலாம் :
கே: அல்லாஹ் நபித்தோழர்களை அவர்களின் நல்ல பண்புகள் மற்றும் நல்ல செயல்களுக்காகப் புகழ்ந்ததற்கான சான்றுகளைக் கூறவும்.
கே: நபித்தோழர்கள் ஏன் இச்சமூகத்தின் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்?
கே: சுவர்க்கவாதி என்று நற்செய்தியளிக்கப்பட்ட பத்து பேர்: ........................ (பின்னர் ஆசிரியர் பத்து பேரின் பெயர்களை உள்ளடக்கிய ஒரு விளக்கப்படத்தை மாணவர்களுக்கு வழங்கி வேண்டும்).
கே: நபித்தோழர்களை நேசிப்பதும், மரியாதை செய்வதும், மதிப்பதும் ஏன் அவசியம்?
கே: நபித்தோழர்களை ஏசுவது, அவர்களைத் தூற்றுவது , அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது ஆகியவற்றின் சட்டம் என்ன?
கே: நபித்தோழர்களுக்கு எதிராக குறை கூறுவது மார்க்கத்திற்கு எதிராக குறை கூறுவதாகக் கருதப்படுவது ஏன்?
இறுதிச் சுருக்கம் :
பாடத்தில் இருந்து கற்றுக்கொண்டதை பொதுவான கருத்துக்கள் மற்றும் கூறுகளின் வடிவத்தில் எழுதுவது தொடர்பான, அவர்களின் குறிப்பேடுகளின் மூன்றாவது பகுதியை முடிக்க மாணவர்களை நீங்கள் அறிவுறுத்தலாம். தாங்கள் எழுதியதை முன்வைக்க சில மாணவர்களைத் தெரிவு செய்து, அதற்குக் கருத்துத் தெரிவித்துப் பொருத்தமான வலுவூட்டலை வழங்கவும்.
செயற்பாடுகள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, முஹாஜிர், அன்ஸாரிகளின் நற்செயல்கள், பண்புகளை அறிந்து கொள்ளல். நோக்க இலக்கம் : 3
ஒவ்வொரு மாணவருக்கும் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு கற்பித்தல் அட்டையை விநியோகிக்கவும். அவர்கள் பதில்களை எழுதிமுடித்த பிறகு, அட்டைகளைச் சேகரித்து அவற்றைச் சரிசெய்து, பின்னர் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நபித்தோழர்களின் சிறப்பைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 2, 3
இரண்டாவது செயல்பாட்டில் உள்ள ஆதாரங்களை வாசிக்க மாணவர்களை அறிவுறுத்தவும். மேலும் தங்கள் சக மாணவர்களுக்கு வாசித்துக்காட்ட அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றின் அர்த்தத்தையும் அவை குறிப்பிடுவதையும் அவர்களுடன் விவாதிக்கவும். பின்னர் செயல்பாட்டின் இரண்டாவது பகுதியைத் தொடர்ந்து காண்பித்து, அதன் ஒவ்வொரு புள்ளிக்கும் பதிலளிக்க இவ்விருவராகத் தேர்ந்தெடுக்கவும். அவர்களின் பதில்களைப் பெற்று, அவற்றிற்கிடையில் ஒப்பிடுவதன் மூலம், சரியான பதிலைப் பெற்று, ஒவ்வொருவரும் அதை தங்கள் புத்தகங்களில் அதன் இடத்தில் எழுதச் சொல்லவும்.
நபித்தோழர்களின் சிறப்பு
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் அறிவின் சிறப்பு.
பத்ர் போராளிகளுக்கான பாவமன்னிப்பு.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிக்காட்டவும் :
ஒவ்வொரு மாணவரும் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் மற்றவரின் பதிலை மதிப்பீடு செய்வதற்காக தத்தமது பதிலை சக நண்பரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தமது சக நண்பரின் பதிலை மதிப்பீடு செய்த முறை, கண்டுபிடித்த தவறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை முன்வைக்குமாறு கூறுங்கள்.
இறுதியாக, ஒவ்வொருவரும் தங்கள் தவறை சரிசெய்ய, சிறந்த முன்மாதிரி பதிலை அறியப்படுத்தவும்.
கே 1 : (✖) - (✓) - (✖) - (✓)
கே 3 : (நபித்தோழர்களுக்காகப் பிரார்த்திப்பது விரும்பத்தக்கது - இந்த சமுதாயத்தில் நபிதோழர்களை மேம்படுத்துதல்)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வரும் விதத்தில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்:
நபித்தோழர்களின் தகவல்கள், வாழ்க்கை நிலைகள், அவர்களுடைய வரலாறு என்பவற்றைக் கற்று, தமது குடும்பத்தினர், சமூகத்தவர் மத்தியில் பரவச் செய்ய முயற்சித்தல்.
பாடம் ஐந்து : நிய்யதும் அதன் முக்கியத்துவமும்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(செயல்கள் - நிய்யத் (எண்ணம்) - ஹிஜ்ரத் பயணம் - உலகை அடைவதற்காக).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம்- கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(ஒப்பீட்டு முறை - கருத்துதிர்ப்பு - கூட்டுகற்கை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• அனைத்து செயல்களிலும் உளத்தூய்மைக்குள்ள பெறுமதியை உணர்தல்.
மோசமான எண்ணத்தினால் ஒரு முஸ்லிமின் மார்க்கத்திற்கு உள்ள விபரீதத்தை அளவிடுதல்.
எண்ணங்களை அல்லாஹ்வுக்கென தூய்மைப்படுத்துவதில் அக்கறை கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கவும் : (ஒரு மஸ்ஜிதின் இமாம் குர்ஆனை மனப்பாடம் செய்ய ஒரு கட்டிடத்தை நிறுவ நன்கொடை கேட்டார். உங்கள் அண்டை வீட்டாரில் இருவர் மக்கள் முன்னிலையில் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கினர். முதலாமவரின் எண்ணம் அயலவர்கள் தன்னை தனவந்தராக போற்ற வேண்டும் என்பதாகவும் இரண்டாமவரின் எண்ணம், மக்கள் அவரைப் பின்பற்றி ஒரு பெரிய தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்பதாகவும் இருந்தது.)
இந்த நிலைமை பற்றி நீர் என்ன நினைக்கிர்? இருவரும் ஒரே மாதிரியான நற்செயலை செய்திருந்தாலும், இருவருக்குள்ளும் என்ன வித்தியாசம்? அவர்களுடன் இதைப் பற்றி விவாதித்து, பாடத்தின் உள்ளடக்கத்திற்கு அவர்களைக் கொண்டு வரவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
மாணவர்கள் பாடம் மற்றும் அதன் முக்கிய கூறுகளை விரைவாக, மேலோட்டமாக படிக்கச் செய்யவும்.
பிரதான கூறுகளை கரும்பலகையில் எழுத சில மாணவர்களைத் தேர்வுசெய்யவும்.
இக்கூறுகளிலும், அவற்றின் அர்த்தங்களிலும் அவர்களுடன் விவாதிக்கவும்.
இரண்டாம் கட்டம்:
ஒரு கூட்டுகற்கை உத்தி பயன்படுத்தப்பட வேண்டும். பாடத்தின் பகுதிகள் மாணவர்களின் பல குழுக்களிடையே பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை வாசிக்கும்படி கேட்கப்படவேண்டும்.
ஒவ்வொரு குழுவும் தாம் கண்டறிந்தவற்றை ஏனைய குழுக்ககளுக்குக் காண்பிக்க வேண்டும்.
அவர்களுடைய பதில்களை மதிப்பீடு செய்து, சரியான பதில்களை மாணவர்களின் உள்ளங்களில் பதிவதற்காக, கரும்பலகையில் எழுத வேண்டும்.
மூன்றாம் கட்டம்:
ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தி, நிய்யத் மற்றும் செயல்களில் அதன் தாக்கம் தொடர்பான சில மார்க்க ஆதாரங்களை முன்வைக்க அவர்களைப் பணிக்க வேண்டும்.
ஒரு முஸ்லிமின் மார்க்கத்தில் மோசமான எண்ணம் ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவவும்.
அதனைக் கரும்பலகையில் எழுத சில மாணவர்களைப் பணிக்கவும்.
இறுதிச்சுருக்கம் :
பாடமீட்டலுக்கு இலகுவாக, சிந்தனைகள் மற்றும் கூறுகள் அமைப்பில் பாடத்தை தங்கள் குறிப்பேடுகளில் எழுதுமாறு ஒவ்வொரு குழுவையும் பணியுங்கள்.
குறித்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்களை முன்வைக்க சில மாணவர்களைக் கோரவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, செயல்களைக் நல்ல நிய்யத்துடன் அணுகும் முறைகள்.
நோக்க இலக்கம் : 5
பின்வரும் செயல்பாட்டை தனித்தனியாக நிறைவேற்ற ஒவ்வொரு மாணவரையும் பணிக்கலாம்.
தமது பதில்களை முன்வைக்க சிலரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆக்கத்திறன் மற்றும் சிறந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்டவர்களைப் பாராட்டவும்.
அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் பதிலில் தாம் அறிந்தவற்றை வைத்து, தங்கள் பதிலை முடிக்கச் சொல்லவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் விரிவுபடுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
நோக்க இலக்கம் : 5, 6
பின்வரும் செயல்பாட்டை நிறைவேற்ற இவ்விரு மாணவர்களாக ஒத்துழைக்கப் பணிப்பது நல்லது.
செயல்பாட்டின் ஒவ்வொரு கூறுகளையும் நீங்கள் கூறவும். பின்னர், ஒவ்வொரு குழுவின் பதிலையும் பார்த்து, ஒவ்வொரு அணிக்கும் பொருத்தமான மதிப்பெண்ணைக் கொடுத்து, அதிக மதிப்பெண் பெற்ற அணியை அடையாளப்படுத்தவும்.
அதிக மதிப்பெண் பெற்ற அணியை நீர் தீர்மானித்து, அவ்வணியைப் பாராட்டி, ஏனைய குழுக்கள் செய்த தவறுகளைக் கவனித்து சரிசெய்யும் பொறுப்பை வழங்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வாசித்து, பிரித்தெடுப்பது எப்படி என்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல். நோக்க இலக்கம் : 6
செயல்பாட்டை நன்கு வாசித்து, சிந்தித்து, அதில் வினவப்பட்டுள்ளதைத் துல்லியமாக அடையாளம் காணுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். தாம் கண்டறிபவற்றை மாணவர்கள் தமக்கிடையில் பகிர்ந்துகொள்ளவேண்டும். பின்பு அவர்களிடம், வீட்டில் சென்று குடும்பத்தினரின் உதவியுடன், அவ்விடயங்களை காரண காரியங்களுடன் அடையாளம் கண்டு, செயற்பாட்டை முழுமைப்படுத்தி வருமாறு கூறுங்கள்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிக்காட்டவும் :
பின்வரும் கேள்விகளை தமது புத்தகங்களிலிருந்து கவனமாகப் படித்து, தனித்தனி அட்டைகளில் பதிலளிக்குமாறு கூறவும்.
மதிப்பீடு செய்ய ,ஒவ்வொரு மாணவரும் தனது அட்டையை மற்றொரு நண்பரின் அட்டையுடன் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அட்டைகளைச் சேகரித்து, பின்னர் மாணவர்களின் முன்னிலையில் அவற்றை மதிப்பீடு செய்ய, எழுமாறாக சிலவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான பதில்களையும், தவறான பதில்களையும் அவர்களுக்கு அறியப்படுத்துதல்.
அட்டைக்குரிய மாணவரின் பெயரையும், அதனை திருத்தம் செய்தவரின் பெயரையும் கூறவேண்டும்.
கே 1 : அல்-ஃபாரூக் - அனைத்து செயல்களும் - பாவியாவார், அவரது செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தனிநபராகவோ, குழுவாகவோ எந்தவொரு செயலைச் செய்யும் போதும் நல்ல எண்ணத்தைக் கடைபிடிக்க அவர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், அனுமதிக்கப்பட்ட செயல்களிலும் இஃக்லாஸ் எனும் உளத்தூய்மையைக் கடைபிடிப்பதன் அவசியத்தை உணர்த்துவதுடன், தடுக்கப்பட்ட அனைத்தையும் தவிர்ந்து கொள்ள ஊக்களித்தல்.
பாடம் ஆறு : நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் அவசியம்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (புதிதாக உருவாக்கினால் - எமது மார்க்கத்தில் - தட்டப்பட்டதாகும்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி இயந்திரம்- கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கருத்துதிர்ப்பு - கூட்டுகற்கை முறை - விவாதித்தல்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• சமூகத்தில் மூடநம்பிக்கைகள் பரவுவதில் பித்ஆத்தின் தாக்கத்தை உணர்தல்.
• நற்செயல்கள் எப்போதும் நபிவழிக்கு உடன்பட்டதாக இருப்பதில் அக்கறை செலுத்துதல்.
தூய்மையான மார்க்கத்தில் புதிதாக உருவாக்கும் துணிவைத் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
இன்றைய பாடத்தை சென்ற பாடத்துடன் உமக்குத் தொடர்புபடுத்தி ஆரம்பிக்கலாம், அதாவது, "செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான முதல் நிபந்தனை 'இஃக்லாஸ்' எனும் உளத்தூய்மை பற்றி சென்ற பாடத்தில் நாம் கற்றோம், இன்றைய பாடத்தில் அதன் இரண்டாவது நிபந்தனையான நபிவழிக்கு உடன்படுவதைப் பற்றி கற்போம்" என மாணவர்களிடம் கூறி, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
வீட்டில் மீட்டல் செய்ததை நினைவுகூரும் விதத்தில், பாடத்தை வாசிப்பதில் பங்கெடுக்க அனைத்துக் குழுக்களையும் கோரவும்.
பாடத்தின் உள்ளடக்கத்தை குழுவின் அங்கத்தவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வரை, அக்குழுக்கள் புரிந்து கொண்டது பற்றி அவர்களுடன் விவாதிக்கவும்.
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையை உமக்குப் பயன்படுத்தலாம்.
மாணவர்கள் ஸுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தறிய வேண்டும்.
தாம் அறிந்தவற்றைக் கரும்பலகையில் எழுதுவதற்காக சில மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்றாம் கட்டம்:
மாணவர்களுடன் கூட்டுகற்கை உத்தியைப் பயன்படுத்தவேண்டும். அதாவது, அவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொருவரும் சமுதாயத்தில் நபியின் ஸுன்னாவைப் பரப்புவதற்கான சிறந்த வழியைத் தேடச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் தாம் கண்டறிந்தவற்றை முன்வைத்து, மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்ள தம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இறுதிச்சுருக்கம் :
கடினமான கலைச் சொற்களின் அர்த்தங்கள், பாடத்தில் உள்ள முக்கிய கருத்துகள் மற்றும் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவை உட்பட பாடத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதுமாறு ஒவ்வொருவரும் மாணவர்களிடம் கோரவும்.
தாம் எழுதியதை முன்வைக்க சில மாணவர்களைத் தேர்வு செய்து, அவற்றைத் திருத்தவும்.
செயற்பாடுகள்
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, அறிவை ஆழமாக்குவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் நோக்க இலக்கம் : 3
செயல்பாட்டில் உள்ள ஹதீஸை நீங்கள் சரியாக வாசிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
செயல்பாட்டை உள்ளடக்கிய ஓர் அட்டையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கவும்.
தமது பதில்களை சக நண்பர்களுக்குக் காண்பிக்க மாணவர்களில் சிலரைத் தேர்வுசெய்யவும்.
அவர்களின் சக நண்பர்களின் மதிப்பீட்டின் உதவியுடன் அவர்களை மதிப்பீடு செய்தல்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, தமது சமூகத்தில் பரவியிருக்கும் பித்அத்களை ஆவணப்படுத்தி, அதன் தாக்கத்தை அறியப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 6
பின்வரும் செயல்பாட்டை ஒரு பலகையில் காண்பித்தல்.
அதற்கு பதிலளிக்க குழுக்களாக செயல்படுமாறு மாணவர்களிடம் கோரவும்.
அப்பலகையில் உள்ள செயல்பாட்டிற்கு பதிலளிக்க குழுக்களில் இருந்து சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிக்காட்டவும் :
வினாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக கரும்பலகையில் எழுதப்பட வேண்டும்.
பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க, அருகருகில் அமர்ந்திருக்கும் இவ்விரண்டு மாணவர்களாகப் பங்கு கொள்ளச் சொல்லவும்.
தமது விடைகளை ஏனைய மாணவர்களுக்குக் காண்பிக்க எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
தவறு செய்பவர்கள் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டவும்.
கே 1 : () - () - () - () - ()
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஹராமான பித்அத்களைத் தவிர்ந்து கொள்ள மாணவர்களை ஊக்குவித்தல், பாடத்தில் கற்ற விடயத்திற்கு முரண்படக்கூடிய ஏதாவதொரு பித்அத்தை யாராவது எதிர்நோக்கினால் அல்லது தவறுதலாக செய்ய நேரிட்டால் அவ்விடயத்தை முறையாகக் கையாண்டு, விட்ட தவறை சரிசெய்ய முயற்சிக்கவும்.
கற்ற விடயங்கள் வாழ்கையுடன் தொடர்புபடுவதைக் கருத்திற்கொண்டு : ஒவ்வொரு மாணவரும் பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட தகவல்களை அவர் பொருத்தமானதாகக் கருதும் எந்த வகையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் குடும்பத்தினரும், நண்பர்களும் தமது வாழ்வில் நேர்வழி பெறுவதற்காக, தான் கற்றுக்கொண்டதை அவர்களுக்கும் அறிமுகப்படுத்துதல்.
பாடம் ஏழு : நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸிற்கு செய்த உபதேசம்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள், அவன் உன்னைப் பாதுகாப்பான் - அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய் -பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன - ஏடுகள் காய்ந்து விட்டன).
கற்பித்தல் சாதனங்கள் :
(கணினி - காட்சி திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - ஆடியோ பதிவு).
கற்பித்தல் உத்திகள் :
(சிக்கலைத் தீர்த்தல் முறை - தவறான கருத்துக்களை சரிசெய்தல் - "சிந்தனை செய் - இணைத்துப்பார் - பங்குகொள்" முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்தித்து, அவனிடம் தேவைகளை முன்வைத்தல்.
- படைப்பினங்களின்றி அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி, அவனையே சார்ந்திருப்பதன் அவசியம்.
- இறைவிதியை ஈமான் கொள்வதன் அவசியம்.
நல்லதை அடையவும், தீயதை விட்டுத் தூரமாகவும் முயற்சித்தல்.
பாடத்தின் அறிமுகம் :
கடுமையான உடல்நலக் குறைபாட்டிற்கு ஆளான ஒருவர் தொடர்பான பிரச்சனையை ஆசிரியர் மாணவர்களிடம் முன்வைக்க வேண்டும். அவருடைய நண்பர் சமாதிகளுக்குச் சென்று அங்கு பிரார்த்திக்குமாறு ஆலோசனை வழங்குகின்றார். ஏனெனில் சமாதியில் அடங்கப்பட்டுள்ளவர் பிரச்சினையைத் தீர்ப்பதிலும், முகங்கொடுக்கும் துன்பங்களிலிருந்து வெளியேறவும் காரணியாக இருக்கின்றார்.
பின்னர் அதுபற்றிய மாணவர்களின் நிலைப்பாடு மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவர்களின் கருத்தை தெரிவிக்கும்படி கேட்டு, அவர்களின் பதில்களை அறியவும். பின்னர் பாடம் முடியும் வரை பதில்களை மதிப்பிடுவது ஒத்திவைக்கப்படும் என்று அவர்களுக்கு விளக்க வேண்டும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
காட்சித் திரை மூலம் மாணவர்களுக்கு ஹதீஸைக் காட்டி, அதை அமைதியாகப் படிக்கவும், அதன் அர்த்தத்தை சிந்திக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான கலைச் சொற்களை அடையாளம் காணவும் அவர்களிடம் கோரவும். பின்னர் அதை அவர்களுக்கு வாசித்துக் காட்டிவிட்டு, தங்கள் சக நண்பர்களுக்கு வாசித்துக் காட்ட அவர்களில் இருவரைத் தேர்வுசெய்யவும்.
இரண்டாம் கட்டம் :
ஹதீஸ் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களையும், அவர்களது சிறப்பையும் மாணவர்களுக்கு அறியத்தரவும். அச்சிறப்புகள் பற்றி தாம் உணர்வதை வார்த்தைகளை வடிக்கக் கோரவும். தமது உணர்வுகளை சுருக்கமாக முன்வைக்க இருவரைத் தேர்வு செய்யவும். கல்வியைத் தேடுவதிலும், அல்குர்ஆன் விளக்கவுரையிலும் அவர்களைப் பின்பற்ற ஊக்குவிக்கவும்.
மூன்றாம் கட்டம் :
பொதுவாக ஹதீஸை முன்வைத்து, அதில் உள்ள கலைச் சொற்களின் அர்த்தங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள தொடரைப் பொறுத்து அந்த அர்த்தங்கள் மற்றும் கருத்துக்களை வரையறுப்பதில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கவும். ஹதீஸை நீர் விளக்கியதிலிருந்து அவர்கள் உள்வாங்கிய மற்றும் புரிந்து கொண்டதை முன்வைக்க இரண்டு மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
மாணவர்கள் குழுக்களாக இணைதகு கூட்டு ஒத்துழைப்புடன், ஹதீஸின் பயன்கள் மற்றும் பாடங்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு குழுவும் தனியான ஓர் அட்டையில் கண்டறிவதை எழுதும் விதத்தில் அறிவுறுத்தவும். அட்டைகளைச் சேகரித்து, குழுக்களின் பதில்களைக் கண்டறியவும். பின்பு, மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, பலன்கள் மற்றும் வழிகாட்டல்களில் வித்தியாசமானவற்றை நீங்கள் வாயால் கூற, அவரைக் கரும்பலகையில் எழுதவைக்கவேண்டும். அப்போது, ஏனைய மாணவர்கள் அதனைச் சிந்திக்கவேண்டும்.
நான்காம் கட்டம் :
பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களுக்குக் காட்டி, அவை அவர்கள் சந்திக்கக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலைகள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும். மேலும் அவற்றைப் பற்றிய தங்கள் கருத்தையும், ஹதீஸின் வழிகாட்டலுடன் அவை எந்தளவு உடன்படவோ முரண்பாடவோ செய்கின்றன என்பதையும் தெரிவிக்கும்படி அவர்களிடம் கேட்கவும் :
ஒரு மஸ்ஜிதின் இமாம் மக்களுக்கு மார்க்கத்தைக் கற்பிக்கும் போது அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்கின்றார்.
ஒரு பெண்மணி தனது மகனுக்கு நிவாரணம் வேண்டிப் பிரார்த்திப்பதற்காக ஒரு சமாதிக்குச் செல்கின்றாள்.
ஒரு மாணவன் பரீட்சை நேரத்தில் மாத்திரம்தான் அல்லாஹ்வைத் தொழுது, அவனிடம் பிரார்த்திக்கின்றான்.
ஒரு வியாபாரி தான் மேற்கொள்ளும் எந்தொரு செயலுக்கும் முன்னால் பரகத் பெறும் நோக்கில் சமாதிகளுக்கு அருகில் பிராணிகளை அறுத்துப் பலியிடுகின்றார்.
மறைவான விடயங்களை அறிந்து அதனை மாற்றிக் கொள்ளும் நோக்கில் ஒரு பெண் ஜோசியனிடம் செல்கின்றாள்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் அறிமுகத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிய மாணவர்களின் கருத்தை ஆசிரியர் மதிப்பாய்வு செய்து, மேலும் ஹதீஸைக் கற்றுக்கொள்வதற்கு முன்னும் பின்னும் அவர்களின் கருத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வளர்ச்சியின் அளவை அவர்களுடன் அடையாளம் காணவேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் ஹதீஸிலிருந்து கற்றுக்கொண்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளில் ஒன்றைக் குறிப்பிடும்படி நீங்கள் அறிவுறுத்தலாம். அதை அவர் தனது வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். மேலும் அதை சுருக்கமான ஒரு வாக்கியத்தில் கூறவேண்டும். மாணவர்களின் பதில்களை அடையாளம் கண்டு, நல்ல முடிவுகளை, அழகான வார்த்தைகள் கொண்டு வடிவமைப்பவர்களுக்கு பாராட்டு வழங்கவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபம் / இரட்டையர் முறை, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பது பற்றி குர்ஆனில் மற்றும் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள தடைகளைத் தொடர்புபடுத்துதல்.
நோக்க இலக்கம் : 5
செயல்பாட்டில் உள்ள அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்ட ஒரு மாணவரைத் தேர்வு செய்யவும். அவ்வசனத்தையும் தாம் கற்ற ஹதீஸையும் தொடர்புபடுத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும். தமது பதில்களை முன்வைக்க இருவரைத் தேர்வு செய்து, அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து, சரியான விடையை அடையாளப்படுத்திக் கொடுக்கவும்.
அல்லாஹ் அல்லாதோரை அழைப்பதை விட்டும் தடுப்பதில் இறைவசனமும், இந்த நபிமொழியும் பங்கெடுக்கின்றன.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் / கூட்டு முறை, ஹதீஸின் பயன்பாடுகளை வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்கில் அமுல்படுத்துதல். நோக்க இலக்கம் : 5, 6
இரண்டாவது செயல்பாட்டை செய்ய "சிந்தனை செய் - இணைத்துப்பார் - பங்குகொள்" முறையைப் பின்பற்றுவது சிறந்தது. செயல்பாட்டில் வந்திருக்கும் நிலைமைகளை ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாகக் கையாண்டு, அது பற்றிய கருத்தையும், ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்களுடன் எந்தளவு உடன்படுகின்றது என்பதையும் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர் ஒரு சக நண்பருடன் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை மதிப்பிட்டு, பின்னர் மும்மூன்று மானவர்களாக தங்களுக்குள் ஒத்துழைத்து பதில்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியர் மாணவர்களைக் கவனித்து , அவர்களின் செயல்திறனின் துல்லியத்தையும் பதிலளிக்கும் திறனையும் அறிந்து, சரியாக, அவர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்குதல் வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
முதல் கேள்விக்கு பதிலளிக்க: அதில் உள்ள ஒவ்வொரு வாசகங்களையும் மாணவர்களிடம் வாசிக்கவும். அந்த வாசகம் சரியாக இருந்தால், மாணவர் தனது கையை உயர்த்த வேண்டும். மாணவர்களின் பதில்களை மதிப்பிட்டு, அவர்களுடன் தவறான மற்றும் சரியான வாசகங்களை அடையாளம் காணவும்.
கே 1 : )). .)). ..
இரண்டாவது வினாவுக்கு தனித்தனியே விடையளிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். ஒவ்வொரு மாணவரும் தனது பதிலை சக நண்பரின் பதிலுடன் பரிமாறிக் கொள்வதுடன், ஒவ்வொருவரும் மற்றவரின் பதிலைத் திருத்தவும் வேண்டும். ஒவ்வொரு குழுவையும் நீர் கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
கே 2 : (விதிகளை எழுதுதல்) - (குர்ஆனின் மொழிபெயர்ப்பாளர்) - (நபி (ஸல்) அவர்களுக்கு கருத்துச் செரிவுள்ள சொற் சுருக்கமான வார்த்தைகள் வழங்கப்பட்டன).
மூன்றாவது கேள்வியை காட்சித் திரையில் காட்டவும். மேலும் கேள்வியில் உள்ள ஒவ்வொரு வெற்றிடத்தையும் நிரப்ப சில மாணவர்களைத் தேர்வு செய்யவும். மாணவர் தவறு செய்தால், அவரது புத்தகத்தில் எழுதப்பட்ட ஹதீஸை அணுகி, சரியான விடையை அறிந்துகொள்ளவைக்கவும்.
நான்காவது கேள்விக்கு பதிலளிப்பதில் இவ்விரு மாணவர்களாக ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். தமது பதில்களை முன்வைக்க அவர்களிடமிருந்து இரண்டு குழுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்த்து, மிகவும் சரியான பதில்களைத் தீர்மானிக்கவும். ஒவ்வொரு குழுவும் அவற்றை செவிமடுத்து, தமது தவறை சரிசெய்யட்டும்.
பயற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
அனைத்து செயல்களிலும் ஹதீஸின் வழிகாட்டலை எடுத்துக் கொள்தல், குறிப்பாக அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்தித்து, அவனிடம் தேவைகண்டு, அவனிடமே பொறுப்புச் சாட்டல், இறைவிதியை ஏற்றுக் கொள்ளல், ஹதீஸிற்கும் அதன் வழிகாட்டல்களுக்கும் முரண்படும் அனைத்தையும் விட்டுத் தூரமாகுதல்.
சுற்றியுள்ளவர்களின் நடத்தையில் ஹதீஸுக்கு முரணான அம்சங்களை எதிர்கொண்டு, அவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, ஹதீஸிலிருந்து பெறப்பட்டவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
பாடம் எட்டு : உறுதிப்பாட்டின் அவசியம்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நலவு நாடுதல் - முஸ்லிம் தலைவர்கள் - பொதுமக்கள் - அல்லாஹ்வை ஈமான் கொண்டுவிட்டேன் - உறுதிப்பாட்டுடன் இருப்பீராக).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கணினி இயந்திரம்- கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(ஆய்வுசெய்து அறியும் முறை - கருத்துதிர்ப்பு - உரையாடல் மற்றும் விவாதம்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
• மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற மார்க்கத்தில் உறுதிப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியத்தை உணர்தல்.
உறுதிப்பாட்டின் அர்தத்தையும், அதன்படி செயல்படுவதையும் உணர்த்துதல்
பயனுள்ள கல்வியைக் கற்கவும், அதைப்பற்றிக் கேட்கவும் அக்கறை கொள்ளல்.
அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்தையும் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் வாக்கியத்தை மாணவர்களுக்குக் காண்பிக்கவும் : 'நான் அல்லாஹ்வை விசுவாசித்து விட்டேன்’ என்று கூறி அதில் உறுதியாயிருங்கள்! அதைப் பற்றி சிந்திக்கச் சொல்லிவிட்டு, அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவும், அதை வாசிக்கும்போது அவர்கள் மனதில் தோன்றியதைக் கூறவும் அவர்களில் சிலரைத் தேர்வு செய்யவும். முந்தைய வாக்கியத்தின் அர்த்தத்தை மாணவர்கள் கற்றுக்கொண்டவுடன், பாடத்தில் இருக்கவேண்டுமென தாம் எதிர்பார்க்கும் கூறுகள் மற்றும் யோசனைகளை ஒவ்வொருவரும் தனது கொப்பியில் எழுதுமாறு அறிவுறுத்தவும். மேலும் அவை தொடர்பாக கருத்துத் தெரிவிப்பது பாடம் முடியும் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதலாம் கட்டம்:
கணினி மூலம் ஹதீஸைக் கேட்க மாணவர்களை வழிநடத்தவும்.
ஹதீஸின் சாரம்சத்தை சுருக்கமான வரிகளில் கூறவும்.
இரண்டாம் கட்டம் :
பின்வரும் விதத்தில் நீங்கள் பாடத்தை கேள்விகளின் வடிவத்தில் வழங்கவும் :
கே: ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி நீங்கள் அறிந்துள்ளதென்ன?
கே: உறுதிப்பாட்டின் அர்த்தத்தை விளக்கவும்.
கே: உறுதிப்பாட்டிற்கு இட்டுச்செல்லும் வழிமுறைகள் எவை?
மூன்றாம் கட்டம்:
பின்வருவனவற்றை ஆராய்ந்தறிய கருத்துதிர்ப்பு முறையை பயன்படுத்தவும் :
ஹதீஸ் அறிவிப்பாளரின் வாழ்விலிருந்து பெறப்படும் படிப்பினைகள்.
ஹதீஸ் வலியுறுத்தும் உறுதிப்பாட்டை அடைவதற்கான மிக முக்கியமான வழிமுறைகள்.
ஈமான், நற்செயல்களில் உறுதிப்பாட்டுடன் இருப்பதில் உள்ள சில நுட்பங்கள்
தகுந்த கருத்துக்களை அவர்களுக்கு வழங்கவும்.
நான்காம் கட்டம்:
இறுதிச்சுருக்கம் :
பாடஅறிமுகத்தின் போது, இப்பாடத்தில் முன்வைக்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்த்த யோசனைகளை நினைவுபடுத்துமாறு ஆசிரியர் மாணவர்களை கேட்டுக்கொள்ள வேண்டும்.
பாடத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி அவர்கள் அறிந்ததன் அடிப்படையில் அவர்கள் எழுதியதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க சிலரைத் தேர்வு செய்யவும்.
பாடத்திலிருந்து பெற்றுக்கொண்ட மிக முக்கியமான பயனைப் பற்றி ஒரு சுருக்கமான வாக்கியத்தை எழுத மாணவர்களைக் கோரவும்.
சில மாணவர்களின் வாக்கியங்களை கண்டறிந்து அவற்றில் கருத்து தெரிவித்து, மிகவும் துல்லியமான மற்றும் அழகான வாக்கிய அமைப்பைக் கொண்டவற்றை அடையாளம் காணவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, தொடர்புபடுத்தி, பகுப்பாய்வு செய்வு, முடிவை அடைய மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 5
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனத்தை கணினி வழியாக மாணவர்களுக்குக் காட்டவும்.
திறமையான ஒருவரை அதை வாசிக்கத் தேர்ந்தெடுக்கவும்.
அக்குர்ஆன் வசனத்தின் வழிகாட்டல்களைக் கண்டறிவதற்காக அதன் கலைச் சொற்களை விளக்கி, தெளிவுபடுத்தவும்.
செயல்பாட்டுக் கேள்வியைக் குறிப்பிட்டு, மாணவர்களுடன் அதன் பதிலைப் பற்றி விவாதித்து, சரியான பதிலை அறிமுகப்படுத்திக் கொடுக்கவும். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் அதை அவரவர் புத்தகத்தில் எழுத வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 4
இரண்டாம் செயல்பாட்டை செய்வதில் தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு ஒவ்வொரு குழுவையும் அறிவுறுத்தவும்.
அச்செயல்பாட்டைச் செய்வதில் உறுப்பினர்கள் பங்கெடுப்பதை உறுதிசெய்ய குழுக்களைத் தொடர்ந்து கவனிக்கவும்.
தனது குழு மேற்கொண்டதை முன்வைக்க ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்வு செய்யவும்.
அவற்றை ஒப்பிட்டு, மிகவும் துல்லியமான பதிலையும், இந்த பயனுள்ள பணிகளைத் தேர்வுசெய்து, ஒழுங்கமைத்து, செயல்படுத்தும் திறனையும் கொண்ட குழுவைக் கண்டறிந்தல்
உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வழிமுறைகளை முன்மொழிந்து, சமூகத்தில் அவற்றைப் பரவச் செய்வதற்கான முயற்சிக்கு ஒரு திட்டமிடலை வகுக்கத் தூண்டுதல்.
உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வழிமுறைகள்
அல்லாஹ் ஹராமாக்கியதைத் தவிர்ந்து கொள்ளல்.
அல்லாஹ் கடமையாக்கியதை நிறைவேற்றல்.
நல்ல நட்பு
எப்போதும் பாவமீட்சி பெறல், பாவமன்னிப்புக் கோரலில் நிலைத்திருத்தல்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
முதல் கேள்விக்கான பதிலைப் பெற, அதில் வந்திருக்கும் வசனங்களை தொடர்ச்சியாக வாசிகக்கவும். பதில் சரியாக இருந்தால் கையை உயர்த்துமாறு மாணவர்களிடம் கூறவும். மேலும் மாணவர்களின் செயல்திறனைக் கவனித்து, அவர்களின் பிழைகளைக் கண்டறிந்து அவற்றை உணர்த்தவும்.
கே 1 : - -
பதிலில் பங்கேற்க முன்முயற்சி எடுக்காத இரண்டு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, இரண்டாவது கேள்வியில் உள்ள உறுப்புகளைக் காண்பித்து, அவர்களின் பதில்களைக் கண்டறிந்து, அவற்றை சக நண்பர்களால் மதிப்பீடு செய்ய வைக்கவும்.
மூன்றாவது கேள்விக்கு பதிலளிக்க மும்மூன்று மாணவர்களாக ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். மேலும் தமது பதில்களை முன்வைக்க மூன்று குழுக்களைத் தேர்வு செய்யவும். அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, சரியான பதிலைத் அடையாளப்படுத்திக் கொடுத்தவுடன், ஒவ்வொரு அணியும் தம் தவறை சரி செய்யவும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
பாடத்தில் கற்றுக்கொண்ட உறுதிப்பாட்டை அடைவதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவித்தல்.
தமது குடும்ப உறுப்பினர்களை உறுதிப்பாட்டில் வளர்க்கவும், அதற்குத் துணைபுரியவும் ஊக்குவித்தல்.
பாடம் எட்டு : தேவையில்லாதவற்றில் தலையிடுவதைத் தவிர்த்தல்.
கால அளவு: ஒரு பாடவேளை
(தனக்கு அவசியமானது).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கண்ணோட்டங்களைப் பகுப்பாய்வு செய்தல் - ஆராய்ந்தறியும் முறை - நடிப்பு முறை - கேட்கும் முக்கோணம் - தவறான புரிதல்களை சரிசெய்தல் - விளக்க உருவங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- ஒருவர் தனக்கு அவசியமானதில் கவனம் செலுத்துதல்.
- தனக்குத் தேவையற்றை விட்டுவிடுவதில் முஸ்லிம் அக்கறை செலுத்துதல்.
- நேரத்தை பயனுள்ளவற்றில் கழிக்க ஊக்குவித்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்குக் காண்பிக்கவும். அதைப் பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்டு, அவர்களின் பதில்களை கண்டறியவும். ஹதீஸைப் படிக்கும் வரை பதில்களை மதிப்பிடுவது ஒத்திவைக்கப்படும் என்பதையும் கூறிவைக்கவும்.
(ஒரு பெண், தனது அண்டை வீட்டுப் பெண் ஒருவர் வீட்டின் பால்கனியில் அமர்ந்து, தனது மகளுடன் அவளது கணவர் தொடர்பான விஷயங்களைப் பற்றி பேசுவதைக் கண்டார். உடனே அந்தப் பெண் தனது அண்டை வீட்டுப் பெண்ணைத் தொடர்புகொண்டு, அவரது மகளின் கணவரின் நிலை குறித்து அவரிடம் கேட்டார்.)
ஹதீஸின் தலைப்பை கரும்பலகையில் பதிந்து, மாணவர்களிடம் அதனை அவதானிக்கும்படி கோரவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
ஹதீஸை அமைதியாக வாசிக்கவும், அதன் அர்த்தத்தையும் அதன் பயன்களையும் அறிய முயற்சிக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தவும்.
ஒரு முன்மாதிரியான, வெளிப்படையான அமைப்பில், கருத்தை உவமைப்படுத்துவதைக் கவனிப்பதுடன் மாணவர்களுக்கு ஹதீஸை வாசிக்கவும். பின்னர் அதை தங்கள் சக நண்பர்களுக்கு வாசிக்க அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுக்கவும். தவறில்லாமல் சரியாக வாசிக்க அவர்களை அறிவுறுத்தவும்.
இரண்டாம் கட்டம் :
ஹதீஸ் அறிவிப்பாளரைப் பற்றிய அவர்களின் முன் அறிவை மீட்டிப் பார்க்குமாறு மாணவர்களைக் கோரவும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிந்து பொருத்தமான கருத்துக்களை வழங்கவும்.
ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றிய மாணவர்களின் அறிவை வளப்படுத்துவதை உறுதிசெய்து, குறிப்பாக ஸூன்னாவின் மீது அவருக்குள்ள பற்று பற்றி நபி (ஸல்) அவர்களின் சாட்சியத்தை ஒரு கவர்ச்சியான கதை வடிவில் முன்வைக்கவும். அந்நிலைமை குறித்து மாணவர்களுக்கு தங்கள் கருத்தை தெரிவிக்கவும், அபு ஹுரைரா (ஸல்) அவர்களின் சிறப்புகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கவும் வாய்ப்பை வழங்கவும்.
மூன்றாம் கட்டம்:
ஹதீஸின் அர்த்தங்களையும் அதன் வழிகாட்டல்களையும் மாணவர்களுக்கு விளக்கவும். தனிப்பட்ட மற்றும் முழு சமூகத்திலும் சாதகமாகப் பிரதிபலிக்கக்கூடிய, ஹதீஸ் அழைக்கும் விதியைப் ஆராய்ந்து பெறுமாறு அவர்களிடம் சொல்லவும். மேலும் மாணவர்களின் பதில்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பொருத்தமான கருத்துக்களை வழங்கவும்.
நான்காம் கட்டம்:
ஒவ்வொரு குழுவிலும் மூன்று மாணவர்கள் அடங்கும் விதத்தில் மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும். குழுவின் முதலாம் நபரிடம் ஒருவர் தனது விடயத்தில் மாத்திரம் ஈடுபடுவதால் ஏற்படும் பயன்களை விளக்குமாறு கூறவும். நண்பரின் பதிலை செவிமடுத்து, அப்பயன்களைப்பற்றி மென்மேலும் விளக்கும் விதத்தில் மேலதிக கேள்விகளை முன்வைக்க இரண்டாம் மாணவரையும், தனது இரு நண்பர்களின் செயல்பாட்டைக் கண்காணித்து ஆசிரியருக்குக் காண்பிப்பதற்காக அவ்விருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலைப் பதிவதற்கு மூன்றாம் மாணவரையும் வழிநடத்தவும்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட சூழ்நிலையை நினைவுகூரும்படி மாணவர்களைக் கோரவும். மேலும் ஹதீஸ் பற்றிய அவர்களின் அறிவின் அடிப்படையில் தாமே தமது பதிலை மதிப்பிடச் செய்யவும். பாட செயற்பாடுகளுக்கு முன்னரான மற்றும் பின்னரான தங்கள் பதில்களை முன்வைக்க அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுக்கவும். மற்றும் அவற்றைப் பற்றி கருத்து தெரிவித்து, அவர்களுக்கு பொருத்தமான பின்னூட்டல்களை வழங்கவும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் / கூட்டு முறை, பாடத்தில் வந்துள்ளதன் அடிப்படையில் உபதேசித்தல்.
நோக்க இலக்கம் : 4
நேருக்கு நேர் நிற்கும் விதத்தில் இவ்விரு மாணவர்களைத் தொடராகத் தெரிவு செய்வது சிறந்தது.
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிலையையும் வரிசையாக முன்வைத்து, இரண்டிரண்டு மாணவர்களாக பதிலளிக்க வைக்கவும். அதாவது, கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் அந்நிலையுடன் தொடர்புடைய நபருக்கு அவர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
மாணவர்களின் பதில்களைப் பெற்று, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டு, ஹதீஸிலிருந்து கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி வழங்ப்பட்ட சிறந்த அறிவுரையை அடையாளம் காட்டவும். அத்தோடு, மாணவர்களுக்குத் தகுந்த வலுவூட்டலை அளிக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, மனித உறுப்புக்கள் செய்யும் பயனற்ற செயல்களை வரையறுத்தல். நோக்க இலக்கம் : 2, 3
ஒவ்வொரு மாணவர் குழுவும் செயல்பாட்டிற்கு பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். அதில் உள்ள அட்டவணையை அவர்கள் ஒவ்வொருவரும் தனியான ஓர் அட்டையில் வடிவமைத்து, அதற்கு அவ்வட்டையில் பதிலளிக்க வேண்டும்.
மாணவர்களது அட்டைகளை சேகரித்து, ஒவ்வொரு குழுவின் சாதக, பாதகங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் குழுக்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யவும். இதனால் குழுக்கள் ஒருவருக்கொருவர் செயல்திறனில் பயனடையலாம்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்பாடுகளை வரையறுத்தல்.
நோக்க இலக்கம் : 2
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் இணையதளத்திற்குள் நுழையச் சொல்லி, வீடியோ கிளிப்பைப் பார்க்க வைக்கவும். அதிலிருந்து கற்றுக்கொண்டவற்றை ஆசிரியர் விவாதித்து, கொப்பிகளில் அவற்றை எழுதிக்கொள்வதற்காக அதை கரும்பலகையில் எழுதவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
ஒவ்வொரு மாணவரும் தனது புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்கவும்.
ஒவ்வொருவரும் மற்றவரை மதிப்பீடு செய்து அவருடைய தவறுகளைக் கண்டுபிடிக்கும் விதத்தில், ஒவ்வொரு மாணவரும் ஒரு சக நண்பரின் பதிலுடன் தனது பதிலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களின் ஒருவரையொருவர் மதிப்பீட்டைக் கண்காணித்து, எவ்வாறு சரியாகச் செயல்படுவது என்று அவர்களுக்கு வழிகாட்டவும்.
தங்கள் மதிப்பீட்டின் தன்மை, அவர்கள் கண்டறிந்த பிழைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதைத் தங்கள் சக நண்பர்களுக்கு விளக்க சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
வகுப்புத் தோழர்கள் தங்கள் பதில்களில் பிழையைக் கண்டறியாத மாணவர்களைக் குறிப்பிட்டு, தகுந்த ஊக்கத்தை அளிக்கவும்.
கே 1 : (தனக்கு அவசியமானது - நேரத்தையும் மார்க்கத்தையும் பாதுகாத்தல் - மனன சக்தி - இஸ்லாத்தின் முழுமை - கலைத்துறையினர்களின் செய்திகளைக் கண்காணிப்பது)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
தமது வாழ்க்கையிலும் பரிவர்த்தனைகளிலும், தனக்குத் தேவையானவற்றில் கவனம் செலுத்தி, தேவையற்றதை விடுவதில் ஹதீஸ் வழங்கும் வழிகாட்டல்களை அமுல்படுத்துவதில் அக்கறை கொள்ளுதல், மற்றவர்களுடன் நடந்து கொள்வதில் வீணாகப் பேசுவதையும், அநாவசியமாகத் தலையிடுவதையும் தவிர்த்தல்.
ஒவ்வொரு மாணவனும் தன்னைச் சுற்றியிருக்கும் நபர்களின் நிலையா ஆராய்ந்து, ஹதீஸ் கூறியவற்றின் படி செயல்படுவதில் எந்தளவு ஆர்வமாக உள்ளனர் என்பதையும், அதற்கு முரணான எதிர்மறை அம்சங்களையும் அடையாளம் காணவேண்டும். அவரது அவதானிப்புகளையும், மற்றும் அவர் கண்டறிந்தவைகளையும் பற்றி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடுதல்.
இஸ்லாமிய சட்டவியல் பகுதி
முதலாம் பாடம் : ஹலாலான சம்பாத்தியமும் (பொருளீட்டலும்)ஹராமான சம்பாத்தியமும்
கால அளவு : ஒரு பாடவேளை.
புதிய சொற்கள்:
(ஹலாலான சம்பாத்தியம் - ஹராமான சம்பாத்தியம் - பதுக்கல் - ஏமாற்று - லஞ்சம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கதை அணுகுமுறை - கண்டுபிடிப்பு கற்றல்முறை - கருத்துதிர்ப்பு - கூட்டு கற்கை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- ஹலாலான சம்பாத்தியத்தை ஊக்குவித்தல்.
- ஹராமான சம்பாத்தியத்தை விட்டும் தூரமாகுதல்.
- ஹராமான சம்பாத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் புறந்தள்ளி, விலகிக் கொள்ளுதல்.
பாட அறிமுகம்:
இரு சகோதர வியாபாரிகளுடைய சம்பவத்தை மாணவர்களுக்கு முன்வைக்கவும். அவர்களில் ஒருவர் மார்க்கம் அனுமதித்த வழிகளில் பணம் சம்பாதிப்பதில் ஆர்வமாக இருந்ததால், அல்லாஹ்வுக்குப் பயந்து, உரிமைகளைக் கவனித்து கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகின்றார். எனவே அல்லாஹ்வும் அவருடைய வாழ்வாதாரம் மனைவி, பிள்ளைகளில் பரகத் செய்தான். அவர் மகிழ்ச்சியான திருப்தியான வாழ்க்கை வாழ்கின்றார். மற்றவரோ தனது வியாபாரத்தில் பதுக்கல் மற்றும் வட்டியையே சார்ந்திருக்கிறார். அது அவருடைய வாழ்வு, வாழ்வாதாரத்தில், வாழ்க்கையில் மோசமான நிலையை ஏற்படுத்தி, பணத்தில் அபிவிருத்தியைக் குறைத்தது மாத்திரமல்லாமல், வங்குரோத்து நிலையில் இருக்கிறார் என்று அறிவிக்கப்படும் அளவுக்கு அவருடைய வியாபாரமும் செயலிழந்துவிடுகிறது .
ஆசிரியர் நல்ல கதை பாணியில் இதைக் கூறிவிட்டு, கதையைப் பற்றிய தங்கள் கருத்தைப் கூறவும், இன்றைய பாடம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்கவும் மாணவர்களைக் கேட்க வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
கண்டுபிடிப்பு கற்றல் முறையின் மூலம், நீங்கள் பின்வரும் இரண்டு வாசகங்களையும் கரும்பலகையில் எழுதலாம். ஒவ்வொரு வாசகங்களையும் கூர்ந்து ஆவதானித்து, அவை எதைக் குறிப்பிடுகிறன என்பதைக் கண்டறியுமாறு மாணவர்களிடம் சொல்லவும்.
இது மார்க்கம் அனுமதித்த வழிகளிலும், முறைகளிலும் பணம் சேர்ப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
மார்க்கம் அனுமதிக்காத வழிகளிலும், முறைகளிலும் பணம் சேர்ப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு முறையைப் பயன்படுத்தி ஹலாலான சம்பாத்தியத்தின் சிறப்புகளை முன்வைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். அவர்களின் பதில்களைக் கண்டறிந்து, அவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, காட்சித் திரையின் மூலம் இந்த பயன்களை நீங்கள் அவர்களுக்குக் காட்டலாம், அவற்றை வலுப்படுத்தும் அல்குர்ஆன், நபிமொழி ஆதாரங்களை முன்வைத்து, அவற்றை விளக்கி, அவற்றின் வழிகாட்டல்களையும் விளக்கலாம்.
மூன்றாம் கட்டம் :
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் முறைகேடான சம்பாத்தியத்தின் வடிவங்களை விளக்குவதற்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தவும். ஒவ்வொரு குழுவும் தமது பதிலை ஓர் அட்டையில் எழுதவேண்டும். அட்டைகளை சேகரித்து, குழுக்களின் பதில்களை அறிந்து அவற்றைப் பற்றி கருத்து தெரிவிக்கவும்.
தாம் முன்வைத்தவை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவற்றை வாசிப்பதற்காக ஒருவரைத் தேர்வு செய்யவும், மேலும் அதனைத் தெளிவுபடுத்தி விளக்கவும்.
இறுதிச் சுருக்கம் :
- நீங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் பின்வரும் கூறுகளை உள்ளடக்கிய அட்டைகளை விநியோகித்து, அவற்றை முழுமைப்படுத்துமாறு கேட்கலாம். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்களுக்கிடையே செல்லவும். தவறான பதிலளித்தவரை, பாடத்தின் உள்ளடக்கத்தை மீட்டி, பதிலைக் கண்டுபிடிக்க வழிகாட்டலாம்:
ஹலாலாக சம்பாதிப்பதென்பது ........................
ஹலாலாக சம்பாதிப்பதன் சிறப்புகள் ........................
ஹராமாக சம்பாதிப்பதென்பது ........................
ஹராமாக சம்பாதிக்கும் வழிகள் ........................
ஹலாலான, மற்றும் ஹராமான சம்பாத்தியத்தை நீர் அறிந்த பின் உமது பங்களிப்பு ........................
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, சம்பாதிப்பதற்கும் செலவு செய்வதற்கும் இஸ்லாமிய சட்டம் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது, மற்றும் முறையாக சம்பாதிப்பதில் அது காட்டும் அக்கறை பற்றி விளக்குதல்.
நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் செயல்பாட்டில் உள்ள ஹதீஸை கரும்பலகையில் எழுத வேண்டும். பின்னர் அதை வாசிக்க மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அதன் அர்த்தத்தையும் அது என்ன வழிகாட்டுகின்றது என்பதையும் அவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தனது குறிப்பேட்டில் உள்ள ஹதீஸ் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அறிவுறுத்தவும். தமது பதில்களை முன்வைக்க அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, ஹலாலான சம்பாத்தியத்தில் எந்தளவு அக்கறை கொள்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறும் விதத்திலான சரியான பதிலை வழங்கக்கூடியவர்களைப் பாராட்டுவேண்டும்.
ஏனெனில் செல்வத்திற்கு இரு பகுதிகள் உண்டு : ஒன்று அதனை சம்பாதிப்பது, மற்றொன்று அதனை செலவளிப்பது
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, சில வாழ்க்கை சூழ்நிலைகளில் பணம் சம்பாதிப்பதற்கான மார்க்க சட்டத்தைக் காரணத்துடன் விளக்குதல்.
நோக்க இலக்கம் : 3
இவ்விரண்டு மாணவர்களாக இரண்டாவது செயல்பாட்டைச் செய்வதற்கு ஒத்துழைக்குமாறும், அதில் வழங்கப்பட்ட ஒவ்வொரு உதாரணத்திலும் பணம் சம்பாதிப்பதற்கான தீர்ப்பை நியாயத்துடன் விளக்கவும் வழிகாட்டவும்.
ஒவ்வொரு உதாரணத்தையும் தொடராக வாசித்து, ஒவ்வொரு குழுவினது பதிலையும் கண்டறிந்து, பொருத்தமான மதிப்பெண் வழங்கவும்.
சிறந்த பதிலை வழங்கிய குழுவைத் தீர்மானித்து, பாராட்டவும். தவறிழைத்த குழுவினர் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காக, சிறந்த பதிலை வழங்கிய குழுவிலுள்ள ஒருவரைத் தனது நண்பர்களுக்கு அனைத்து பதில்களையும் மீண்டுமொருமுறை வாசித்துக்காட்டப் பணிக்கவும்.
சம்பாத்தியத்திற்கான உதாரணம் குறித்த சம்பாத்தியத்தின் சட்டம் காரணம்
ஒரு மனிதர் மரணித்துவிட்டார் அவரின் பிள்ளைகள் தங்களுக்கு மத்தியில் அம்மனிதர் விட்டுச்சென்ற அனந்தரச்சொத்தை பகிர்ந்துகொண்டனர் ஹலால் -அனுமதிக்கப்பட்டது. காரணம் அது வாரிசுச் சொத்தாகும்.
ஒரு மனிதர் தனது அண்டைவீட்டாருக்கு அவரின் செல்வத்தில் சில பகுதிகளை வஸிய்யத் (மரண சாசனம்) செய்தார். ஹலால் -அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் இது அனுமதிக்கப்பட்ட வஸிய்யத்தாகும்.
மருத்துவர் ஒருவர் பொது மருத்துவமனையிலிருந்து கருவிகளை தனது தனியார் சிகிச்சை நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். ஹராம். ஏனெனில் இது ஓரு மோசடி மற்றும் அபகரிப்பாகும்.
ஒரு நபர் இலாபத்தை அதிகரித்துக்கொள்வதற்காக பாலில் நீரைக் கலக்கிறார். ஹராம். காரணம் இது ஓரு மோசடியாகும்.
ஒரு நபர் கால்நடைகளை வளர்ப்பதில் ஈடுபட்டு அதன் பாலை விற்பனை செய்கிறார். ஹலால் -அனுமதிக்கப்பட்டது. இது ஒரு வியாபாரம்.
ஒரு இளைஞன் ஒருவரின் செல்வங்களை பலவந்தமாக எடுத்துக் கொண்டான். ஹராம். காரணம் இது ஓரு அபகரிப்பும் கொள்ளையுமாகும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
முதல் கேள்விக்கு பதிலளிக்க, ஆசிரியர் ஒவ்வொரு வாசகத்தையும் மாணவர்களிடம் தொடராக முன்வைக்க வேண்டும். வாசகம் சரியாக இருக்கும் பட்சத்தில் தமது கரங்களை உயர்த்துமாறு பணிக்கவும். அவர்களது செயல்திறனைக் கண்காணித்து, தவறிழைத்த ஒவ்வொருவரையும் சரியான பதிலை அறிவதற்கு வழிகாட்டவும்.
கே 1 : (✖) - (✖) - (✓)
ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்களின் பதில்களைக் கண்டறிய அவர்கள் அருகாமையில் சென்று, தவறுகளைத் திருத்த வேண்டும்.
வியாபாரம் - மோசடி - ஏமாற்றுதல் - லஞ்சம்
மூன்றாவது கேள்வியில் கேட்கப்பட்டுள்ள மார்க்க ஆதாரங்களில் ஒன்றை எழுதுவதற்காக ஆசிரியர் இரண்டு மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தவறிழைக்கும் போது புத்தகத்திலிருந்து சரியான ஆதாரத்தைக் கண்டறிய இருவரும் முயற்சிக்க வேண்டும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
ஆசிரியர் மாணவர்களை ஹலாலான சம்பாதிப்பிற்கு ஊக்கமளிக்க வேண்டும். இதனால் அவர்கள் இந்த சம்பாதிப்பின் நேர்மறையான விளைவுகளையும் நன்மைகளையும் அனுபவிக்க முடியும், மேலும் அதன் பலன்களின் மகிழ்ச்சியை அவர்களின் வாழ்க்கையில் உணர முடியும்.
அத்துடன் ஹலாலான, ஹராமான சம்பாத்தியத்தினால் தனிநபர், சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகளில் பாடத்தில் தாம் கற்றதைத் தமது குடும்ப வட்டத்திற்குள் பரவச் செய்ய வழிகாட்ட வேண்டும்.
இரண்டாம் பாடம் : வியாபார சட்டதிட்டங்கள்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (ஏமாற்று).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கற்பித்தல் அட்டை - கரும்பலகை - ஓடியோப் பதிவு - கற்பித்தல் படங்கள்).
கற்பித்தல் உத்திகள்:
(அனுமான சிந்தனை - சிக்கல் தீர்க்கும் முறை - வரையப்பட்ட குறியீடுகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள் - குழு விவாதங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- வியாபார சட்டங்களைக் கடைபிடிப்பதில் அக்கறை கொள்தல்.
- ஹலாலான சம்பாத்தியத்தைப் பற்றிய பொறுப்புணர்வை உணர்தல்.
- மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்காக வேண்டி வியாபார நிபந்தனைகளை அங்கீகரிப்பதில் இஸ்லாத்தின் மகத்துவத்தை உணர்த்துதல்.
பாடத்தின் அறிமுகம்:
மதிப்பிற்குரிய ஆசிரியரே: பின்வரும் இறைவசனத்தை மாணவர்களுக்குக் காட்டுங்கள். அல்லாஹ் கூறுகின்றான் : "வியாபாரத்தை அல்லாஹ் ஹலாலாக்கி உள்ளான்". அல்லாஹ் வியாபாரத்தை அனுமதிக்கவில்லை எனின் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும் படி அவர்களிடம் வேண்டி, அவர்களுடைய பதில்களைப் பெற்று, அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கியதன் காரணிகளைத் தெளிவுபடுத்தவும்.
பின்னர் பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
பின்வரும் பிரசினத்தை மாணவர்களிடம் முன்வைத்து, அது பற்றிய அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்கவும். அவர்களது பதில்களைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, வியாபாரம் நடைபெறும் முறையையும், அதன் நிபந்தனைகளையும் அறியப்படுத்தவும்.
(ஹஸன் ஒரு மனிதரிடமிருந்து ஒரு வீட்டை வாங்கினார், பின்னர் அம்மனிதர், தனியாக வாங்கவும் விற்கவும் அனுமதிக்கப்படாத மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக் கண்டறிந்தார். அந்த வீடும் அவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையிலான பொதுச் சொத்தாக இருந்தது. தனது சகோதரர்களிடம் கூறாமலேயே ஹஸனுடன் அவர் விற்பனையை முடித்தார். இந்த விற்பனையை ரத்து செய்யுமாறு கூறி இந்த நபரின் சகோதரர்கள் ஹஸனிடம் சென்றனர்).
இரண்டாம் கட்டம் :
விற்பனை விதிமுறைகள் தொடர்பான பின்வரும் சில வரையப்பட்ட குறியீடுகளை ஆசிரியர் காட்சித் திரையில் காட்ட வேண்டும் : (ஒரு நபர் மற்றொருவரை ஒரு விடயத்தின் பால் நிர்ப்பந்திக்கும் படம் - கடையில் விற்பனை செய்யும் சிறுவனின் படம் - மதுபான விற்பனை நிலையத்தின் படம் - லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்யும் நபரின் படம்), ஒவ்வொரு படமும் குறிக்கும் விடயத்தை மாணவர்கள் கண்டுபிடிக்கக் கோர வேண்டும்.
மாணவர்களுடன் பதில்களை விவாதித்து, அவற்றினூடாக வியாபாரத்திற்குரிய சரியான நிபந்தனைகளைக் கண்டறிந்து, அவற்றை விளக்க வேண்டும், இடையில் கற்பித்தல் பலகை அல்லது ஓடியோ பதிவின் மூலம் அவற்றுடன் தொடர்பான ஆதாரங்களையும் முன்வைத்து, அவற்றின் அர்த்தம் மற்றும் அவை சுட்டிக்காட்டும் விடயத்தையும் விவாதிக்கவும்.
மூன்றாம் கட்டம் :
பின்வரும் சூழ்நிலைகளை மாணவர்களிடம் முன்வைத்து, அவற்றைப் பற்றிய தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும், அவற்றில் உள்ள விற்பனைச் செயல்பாடு எந்தளவு செல்லுபடியானது என்பதைத் தீர்மானிக்கவும், மேலும் அவை எந்த அளவிற்கு கூறப்பட்ட விற்பனை நிபந்தனைகளுடன் ஒத்துப்போகின்றன அல்லது முரண்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கவும் மாணவர்களிடம் கோரவும்.
ஒரு நபர் கடைக்குச் சென்று ஒரு பொருளைப் பார்த்தார். விற்பனையாளரிடம் பேசாமலேயே பணம் செலுத்தி அதை எடுத்துக் கொண்டார்.
பன்றியிறைச்சி வாங்க ஒருவர் செல்கின்றார்.
தனது சகோதரரின் உடமையை அவர் பொறுப்புச் சாட்டாமலேயே விற்பனை செய்யும் நபர்.
ஓர் இளைஞர் தனது தந்தையின் அனுமதியின்றி தனது காரை விற்பனை செய்து விட்டார்.
நிலத்தின் பயிர்களை நடுவதற்கு முன்பே விளைச்சலை விற்றவர்.
இறுதிச் சுருக்கம் :
கரும்பலகையில் அல்லது பலகையில் விற்பனை விதிமுறைகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கப்படத்தை வடிவமைக்கவும். சில மாணவர்களைத் தெரிவு செய்து, படிவத்திடம் வந்து அதில் விற்பனைக்கான நிபந்தனைகளில் ஒன்றைச் சேர்த்து, அந்த நிபந்தனையைப் பற்றி அவரவர் பாணியில் தமது சக நண்பர்களுக்கு விளக்கி, அது தொடர்பான ஆதாரங்களையும் குறிப்பிடவேண்டும். அத்தோடு, இந்த நிபந்தனைகளை அறிந்த பின்னர், ஒரு சுருக்கமான வாக்கியத்தில் வாங்குதல் மற்றும் விற்கும் போது செய்ய வேண்டியவற்றையும் ஒவ்வொருவரும் விளக்கவேண்டும்.
செயற்பாடுகள்
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை மாணவர்கள் அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகை மற்றும் நோக்கம் : கூட்டு முறை, விற்பனையின் விதிகளைப் பயன்படுத்துவதன் விளைவுகளைக் கண்டறிதல். நோக்க இலக்கம் : 2
செயல்பாட்டில் உள்ள வார்த்தையை வாசித்து விட்டு, இவ்வார்த்தைக்கான காரணத்தை அறியப்படுத்துவதற்காக கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்கவும். வியாபாரிகள் விற்பனையின் விதிமுறைகளை அறிவதன் விளைவுகளை அனுமானிக்கும் படி அவர்களிடம் கோரவும். முடிந்தவரை அதிகளவிலான விளைவுகளைக் கண்டெடுக்க, அவர்களின் ஆய்வு மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும்.
மாணவர்களின் பதில்களைப் பெற்று, அவர்களின் உரையாடல் மற்றும் பதில்களை ஒழுங்கமைக்கவும். அவர்கள் கேட்பதை அவர்களுடன் விவாதிக்கவும். அத்தோடு, தமது கொப்பிகளில் எழுதிக் கொள்வதற்காக சரியான பதில்களை சுருக்கமாக கரும்பலகையில் எழுதவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : இரட்டையர் சார்ந்தது, பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் வியாபாரம் செல்லுபடியற்றதாவதற்கான காரணிகளைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 1
சகநண்பர்கள் முன்னிலையில் நிற்பதற்காக இவ்விருவராகத் தெரிவு செய்யவும்.
செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு சூழ்நிலையையும் இரு தரப்பினருக்கும் வாசித்துக் காட்டி, அச்சூழ்நிலைகளில் வியாபாரம் செல்லுபடியற்றதாக மாறி விடுவதற்குரிய காரணத்தைக் கண்டறிய கூட்டாக செயல்படுமாறு கோரவும்.
ஒவ்வொரு குழுவின் பதிலையும் பெற்று, அவர்களின் சக நண்பர்களுக்கு மதிப்பீடு செய்து சிறந்த பதிலைத் தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்கவும். செயல்பாட்டிலுள்ள அனைத்து சூழ்நிலைகளும் நிறைவடையும் வரை இவ்வாறே ஏனைய குழுக்களுடனும் செயல்படவும்.
ஏனெனில் அப்பொருள் வியாபாரிக்குச் சொந்தமானதல்ல.
விற்பனை பொருள் அறியப்படாததாகும்.
போதைப் பொருட்களை விற்பது தடுக்கப்பட்டதாகும், பொருள் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியமாகும்.
விற்பனையாளர் விவரம் அறியாத சிறு பிள்ளை.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வியாபார நிபந்தனைகள் முழுமையடைந்தமை தொடர்பான சில உதாரணங்களைக் கூறுதல்.
நோக்க இலக்கம் : 2
முதலாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, தனியான அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, மதிப்பீடு செய்து, அவற்றில் மிகவும் துள்ளியமான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மதிப்பீட்டுக் கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
ஒவ்வொரு மாணவரும் மதிப்பீட்டில் உள்ள கேள்விகளுக்கு தனித்தனியாக பதிலளிக்கவும்.
ஒவ்வொருவரும் மற்றவரை மதிப்பீடு செய்து அவருடைய தவறுகளைக் கண்டுபிடிக்கும் விதத்தில், ஒவ்வொரு மாணவரும் ஒரு சக நண்பரின் பதிலுடன் தனது பதிலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களின் ஒருவரையொருவர் மதிப்பீட்டைக் கண்காணித்து, எவ்வாறு சரியாகச் செயல்படுவது என்று அவர்களுக்கு வழிகாட்டவும்.
தனது நண்பர்களை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள் என்பதையும், என்ன தவறுகளைக் கண்டுபிடித்தார்கள், அதனை எவ்வாறு திருத்த வேண்டும் என்பதையும் விளக்க சில மாணவர்களைத் தெரிவு செய்யவும்.
பதிலில் எத்தவறும் ஏற்படாத மாணவர்களின் பெயர்களைக் காண்பித்து, அவர்களுக்குத் தகுந்த ஊக்குவிப்பை வழங்கவும்.
கே 1 : () - () - (ஸல்)
கே 2 : (அனுமதிக்கப்பட்ட பலன் - புத்திசாலித்தனம் - தூய்மையானது)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றின் படி, ஆசிரியர் மாணவர்களுக்கு பின்வருவனவற்றை உணர்த்த வேண்டும் :
மாணவர்கள் வாங்குதல் மற்றும் விற்பதில் கற்றுக்கொண்ட விதிகளைப் பயன்படுத்த ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.
மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள வாங்குதல் மற்றும் விற்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, விற்பனையின் நிபந்தனைகள் எந்த அளவிற்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அதைக் கையாள்வது பற்றி அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விவாதிக்க வேண்டும்.
மூன்றாம் பாடம் : வட்டியும் தடைசெய்யப்பட்ட வியாபாரமும்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(வட்டி - மேலதிக வட்டி - தவணை முறை வட்டி - கடன் வட்டி - வங்கியல் வட்டிகள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள் - ஓடியோப் பதிவு -கணினி - காட்சித் திரை ).
கற்பித்தல் உத்திகள்:
(சிக்கல் தீர்க்கும் முறை - ஆராய்ந்தறியும் முறை - சிந்தனை வரைபடங்கள் - வரையப்பட்ட குறியீடுகள் - தவறான கருத்துக்களை சரி செய்தல் - குழு விவாதங்கள்).
மதிப்புகளும், வழிகாட்டல்களும்:
- தனிநபர் மற்றும் சமூகத்தின் மீதான வட்டியின் ஆபத்தை உணர்தல்.
- வட்டியின் அனைத்து வடிவங்களையும் புறந்தள்ளுதல்.
- ஹலாலான சம்பாத்தியத்தைக் கடைபிடித்தல்.
- தனிமனிதனையும் சமூகத்தையும் பாதுகாப்பதில் இஸ்லாமிய சட்டத்தின் பங்கை மகத்துவப் படுத்துதல்.
- வட்டி மற்றும் தடுக்கப்பட்ட வியாபார முறைகளைத் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களிடம் முன்வைத்து, அதைப் பற்றிய தங்கள் கருத்தைக் கேட்கவும். அவர்களில் ஒருவரை அந்த சூழ்நிலையில் உள்ளவரின் நிலையில் வைத்தால் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதையும் தெரிவிக்க அவர்களை வழிநடத்துவதன் மூலம் சிக்கலைத் தீர்க்கும் முறையைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மற்றும் அவர்களின் பதில்களைப் பெற்று, பாடத்தின் படிமுறைகளைக் கடந்து செல்லும் வரை அவற்றை மதிப்பிடுவதை ஒத்திவைப்பதை அவர்களுக்கு உணர்த்தவும்.
(ஸாலிஹ் பொருளாதா நெருக்கடிக்கு உள்ளாகி, தனது ஊரில் உள்ள ஒருவரிடம் கடன் வாங்கச் சென்றார். அவர் பெரும் செல்வம் வைத்திருந்ததால், பலருக்குக் கடன் கொடுத்தார். இந்த நபர் அவருக்கும் பணத்தைக் கடனாகத் தருவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர் அதைத் திருப்பிச் செலுத்தும்போது அவருக்கு, அதன் தொகையை 10% அதிகமாகத் தரவேண்டும் என்று கூறிவிட்டார், எனவே, ஸாலிஹ் தனது துயரத்தை நிவர்த்திசெய்வதற்காக இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா?என்ற தடுமாற்றத்தில் இருந்தார்!).
- இதனூடாக மாணவர்களைத் தலைப்பிற்கு அழைத்துச் சென்று, அதனை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
பின்வரும் சொற்றொடரைப் கரும்பலகையில் எழுதி, மாணவர்களிடம் அதைப் பற்றி சிந்திக்கவும், அது எதை உணர்த்துகின்றது என்பதை ஒரே வார்த்தையில் விளக்கவும் கோரவும். அவர்களின் பதில்களைப் பற்றி விவாதித்த பிறகு, வட்டி என்றால் என்ன என்பதை அவர்களுக்கு விளக்கவும்.
(சில பரிவர்த்தனைகளில் இது தடைசெய்யப்பட்ட நிதி அதிகரிப்பு முறை ...அது என்ன?)
இரண்டாம் கட்டம்:
ஒப்பீட்டு சிந்தனை வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி; இரண்டு வகையான வட்டி முறைகளை உள்ளடக்கிய ஒரு படத்தை மாணவர்களுக்குக் காட்டி, ஒவ்வொரு வகையையும் அறிமுகப்படுத்தி, அவற்றை ஒப்பிட்டு, அவை தொடர்பான எடுத்துக்காட்டுகள் மற்றும் மாதிரிகளை முன்வைக்கவும்.
மூன்றாம் கட்டம் :
பின்வரும் ஹதீஸைப் வாசிக்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். அதன் அர்த்தத்தை அவர்கள் சிந்தித்துப் பார்த்த பிறகு, வட்டியின் இரு வகை மீதான தீர்ப்பைக் கண்டறியச் சொல்லுவதோடு, அதை அவர்களுடன் விவாதிக்கவும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 'ஒரே மாதிரியாக, சரிநிகராக,உடனுக்குடன் கையகப்படுத்திக்கொள்ளும் நிலையில் தங்கத்திற்குத் தங்கத்தையோ,வெள்ளியை வெள்ளிக்கோ, கோதுமையை கோதுமைக்கோ, வாற்கோதுமையை வாற்கோதுமைக்கோ, ஈத்தம் பழத்தை ஈத்தம் பழத்திற்கோ உப்பை உப்பிற்கோ விற்பனை செய்யுங்கள்! இவ்வினங்கள் வித்தியாசப்பட்டால் நேரடியாக, உடனுக்குடன் விரும்பியவாறு விற்பனை செய்யுங்கள்'
நான்காம் கட்டம் :
(வட்டி) எனப்படும் அதிகரிப்பு பிழையற்றது, மார்க்கத்தோடு அது முரண்படவில்லை என எண்ணிக்கொண்டு, அதை அடைய தங்கள் பணத்தை வங்கிகளில் வைப்பிலிட ஆர்வமாக இருக்கும் சில மனிதர்கள் பற்றிய மாணவர்களின் கருத்தை அறிய முயற்சிக்கலாம். இந்த விவகாரத்தில் மாணவர்களின் கருத்துக்களைப் பெற்று, அது பற்றிய ஷரிஆ சட்டத்தின் தீர்ப்பை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
ஐந்தாம் கட்டம் :
கரும்பலகையில் பின்வரும் ஹதீஸை எழுதவும் : "உங்களில் சிலர் மற்றும் சிலரின் வியாபாரத்தில் குறுக்கிட்டு வியாபாரம் செய்யவேண்டாம்", பின்பு அது பற்றி அவர்கள் சிந்தித்து, தடுக்கப்பட்ட பிரபலமான வியாபார முறைகளைக் கண்டறிய முயற்சிக்குமாறு அவர்களிடம் கோர வேண்டும். தடை செய்யப்பட்ட வியாபார முறைகளை மாணவர்கள் அறிய உதவும் வகையில் இது தொடர்பான சில வரையப்பட்ட குறியீடுகளைக் காட்ட காட்சித் திரையைப் பயன்படுத்தலாம்
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் அறிமுகத்தின் போது வழங்கப்பட்ட சிக்கலுக்கான தீர்வுகளை ஆசிரியர் மாணவர்களுடன் மதிப்பாய்வு செய்வதுடன், அவர்கள் கற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் கூறுகளுக்கு ஏற்ப அவர்களின் ஒவ்வொரு பதிலையும் மதிப்பீடு செய்ய அவர்களை வழிநடத்த வேண்டும்.
பாடத்தில் இருந்து கற்றுக்கொண்டதையும், வட்டி மற்றும் அதன் வடிவங்களைப் பற்றி அவர்கள் கற்றுக்கொண்டதையும் வரையறுக்க ஒத்துழைக்குமாறு ஆசிரியர் இரண்டிரண்டு மாணவர்களாக அறிவுறுத்த வேண்டும். அதே நேரத்தில் செயல்படுத்த முடியுமான மற்றும் நடைமுறைத் தன்மையைக் கொண்டிருக்கும் விதத்தில், நன்கு வடிவமைக்க ஊக்குவித்து, ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த வலுவூட்டலை வழங்க வேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, மாணவர்களை சிந்தித்து, முடிவெடுக்கப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 5
மாணவர்களிடமுள்ள முந்தைய அறிவைச் சார்ந்து, வட்டி மற்றும் தடைசெய்யப்பட்ட விற்பனைகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்ததை நினைவுபடுத்தக் கோரவும். அவர்களின் பதில்களை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்கவும்.
மேலதிக தகவலுக்காக மின்னணு ஆதாரங்களை அணுகி, செயல்பாட்டைப் பற்றிய முழுமையான அறிவை ஒவ்வொரு மாணவரும் பெற வழிநடத்துவது விரும்பத்தக்கது. மேலும் இதில் மாணவர்களின் செயல்திறன், மற்றும் அவர்கள் கண்டறிந்தவற்றை அடுத்த சந்திப்பில் ஆராய்வது நல்லது.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, வட்டி உண்பதன் விளைவுகள் மற்றும் அதிலிருந்து மீளும் முறைகளைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4 - 5
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு இறைவசனங்களையும் ஆடியோ மூலம் கேட்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். பின்னர் வட்டியை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிலிருந்து எப்படி திருந்துவது என்பதை அவர்களுக்கு அறியப்படுத்த அவர்களுக்கிடையில் குழு விவாதத்தை ஏற்பாடு செய்யவும். தாம் முன்வைக்கும் வாதங்களில் அவ்விரு வசனங்கள் மற்றும் அவற்றின் வழிகாட்டல்களை அவர்கள் சார்ந்திருக்கவேண்டும். திறமையாக ஆராய்ந்து ஆதாரமெடுக்கவும், துல்லியமாக காட்சிப்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும். அத்தோடு கலந்துரையாடலில் ஒவ்வொருவரும் தன் பங்கை முறையாக நிறைவேற்றி, பிறரின் கருத்தை மதித்து, செவிமடுக்கவேண்டும்.
1. வட்டியானது வாழ்வாதாரத்தில் அருள்வளத்தை –பரகத்தை- நீக்கி வறுமைக்கும் வேலையின்மைக்கும் வழிவகுத்திடும்.
2. வட்டி உண்டவர் தௌபாச் செய்து மீண்டுவிட்டால் அவர் தனது மூலதனத்தை மாத்திரமே எடுத்துக்கொள்ள முடியும்.அதற்கு மேலதிகமாக எடுப்பது கூடாது.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, வட்டிப் பாவனையாளருக்கு வந்துள்ள கடும் எச்சரிக்கையை எச்சரித்தல்.
நோக்க இலக்கம் : 3 - 4
ஒவ்வொரு மாணவரும் செயல்பாட்டில் உள்ள ஹதீஸைப் படிக்கவும், அதன் பொருளைப் பற்றி சிந்திக்கவும், அது என்ன வழிகாட்டலை வழங்குகின்றது என்பதை விளக்கவும் அறிவுறுத்தவும். அவை பற்றி அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
பின்னர் ஒவ்வொரு மாணவரும் வட்டி வியாபாரம் செய்பவர்களை எச்சரித்து, உன்னதமான ஹதீஸில் உள்ளதை மேற்கோள் காட்டி ஒரு பேச்சை எழுதச் சொல்லவும். மாணவர்கள் திருப்திகரமான முறையில் அதனை உருவாக்க ஊக்குவிக்கவும். அவர்களுக்கு சரியான ஊக்குவிப்பையும் வழங்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
மாணவர்களிடம் முதலிருகேள்விகளைக் கேட்பது விரும்பத்தக்கது. மேலும் அவர்களில் சிலரைத் தேர்வுசெய்து, இரண்டு கேள்விகளின் கூறுகளில் ஏதேனும் ஒன்றிற்கு பதிலளிக்க வைத்து, நண்பர்கள் அவர்களைக் கண்காணித்து, அவர்களின் பதில்களை மதிப்பீடு செய்யக் கோரவும்.
கே 1 : (ஸல்) - () - () - ()
கே 2 : (பகை - தடை - கடன் வட்டி)
மூன்றாவது கேள்விக்கு தனித்தனியாக பதிலளிக்க ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்தவும். இரு மாணவர்களைத் தெரிவுசெய்து, தமது பதில்களை முன்வைக்கச் செய்து, அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக பதிலளித்த நபருக்கு பொருத்தமான ஊக்கத்தை வழங்கவும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றைப் பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் பாடத்தில் வரும் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதில் ஆர்வங் கொள்ளல், குறிப்பாக, பலனளிக்கும் தொழிலில் ஈடுபட முயற்சிப்பதுடன், வட்டி மற்றும் அதன் பல்வேறு வடிவங்கள் போன்ற பாவங்கள் கலந்துள்ள சம்பாத்தியத்தைத் தவிர்த்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தனது குடும்பத்திற்குள் அல்லது அதற்கு வெளியே தன்னைச் சுற்றியுள்ள தனிநபர்களின் நிதி பரிவர்த்தனை நடைமுறை பற்றி சிந்திக்க வேண்டும். குறிப்பாக வட்டியின் சமகால வடிவங்கள் பற்றிக் கண்டறிய வேண்டும். அது தொடர்பான சில எதிர்மறை அம்சங்கள் இருப்பது தெரியவந்தால், அவற்றில் விழுவதற்கான காரணங்களையும் அதிலிருந்து விடுபடுவது பற்றியும் அவர்களுடன் கலந்துரையாடலாம்.
நான்காம் பாடம் - இஜாரா (குத்தகை) ஒப்பந்தம்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (குத்தகை - பயன்பாடுகளை குத்தகைக்கு விடுதல் - அவக்களின் பிரதிவாதி).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - கற்பித்த அட்டைகள் - காகித பதாகைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கண்ணோட்டங்களின் பகுப்பாய்வு - சிந்தனைகளின் வரைபடங்கள் - சுய-கேள்வி - நேர்மறை மற்றும் எதிர்மறை உதாரணங்கள் - சூடான நாற்காலி).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- குத்தகைக்கு விடுபவர், எடுப்பவர் இருவரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதில் இஸ்லாத்தின் பங்களிப்பை மதித்தல்.
- தடுக்கப்பட்ட பரிவர்த்தனைகளைத் தவிர்ந்து கொள்ளுதல்.
- குத்தகையின் நிபந்தனைகளைக் கடைபிடித்தல்.
தனிநபர், சமூகத்திற்கு குத்தகையின் அவசியத்தை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்குக் காட்டி, சிக்கலை எவ்வாறு சமாளிப்பது? என்று அவர்களின் கருத்தைக் கேட்கவும். அவர்களின் பதில்களைக் கண்டறிந்து, பாடத்தின் படிமுறைகள் முடியும் வரை அவர்களின் மதிப்பீட்டை ஒத்திவைக்கவும்.
(திறமையான ஒரு விவசாயி இருக்கிறார் ஆனால் அவருக்குச் சொந்தமான நிலம் கிடையாது. உமது கருத்தில் அவரின் பிரச்சினைக்கு தீர்வாக குத்தகை ஒப்பந்தம் எவ்வாறு அமைய முடியும் என்பதை விவரிக்குக).
பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, பின்னர் அதை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
பாடத்தின் கூறுகளின் வரைபடத்தை உள்ளடக்கிய பலகையை நீங்கள் மாணவர்களுக்குக் காட்டலாம். மேலும், பலகையில் உள்ள கூறுகளை தெளிவாகப் படிக்க திறமையான மாணவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்யலாம்.
இரண்டாம் கட்டம்:
மாணவர்கள் பாடத்தின் கூறுகளை அவதானித்த பிறகு; சுய-கேள்வி முறை மூலம் இவ்விருவர்களிடம் பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து பதில்களை எதிர்பார்க்கும் அதிக எண்ணிக்கையிலான கேள்விகளைக் கேட்பதற்கு ஒத்துழைக்குமாறு கோரவும். மாணவர்களின் கேள்விகளைப் பெற்று அவற்றை கரும்பலகையில் எழுதவும்.
மூன்றாம் கட்டம் :
பாடத்தின் கூறுகளை விளக்கித் தெளிவுபடுத்தவும். உதவியாக, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளையும், வேறு சில மேலதிக கேள்விகளையும் விவாதத்திற்கு எடுக்கவும். கேள்விகள் பாடத்தின் அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும். கேள்விகளையும், பதில்களையும் சரியாகப் பயன்படுத்துவதற்கான திறன்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவும். பின்வரும் கேள்விகளை முன்வைக்கலாம்:
கேள்வி : குத்தகை என்றால் என்ன என்பதை விளக்கவும்.
கேள்வி : குத்தகை ஒப்பந்தத்தில் பயனாளி யார்? குத்தகைக்கு விடப்பட்ட பொருளின் உரிமையாளரா அல்லது குத்தகைதாரரா?
கேள்வி : குத்தகை வகைகளைக் குறிப்பிடவும்.
கேள்வி : பயன்பாடுகளை குத்தகைக்கு விடுதல் என்றால் என்ன?
கேள்வி : குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் என்ன?
நான்காம் கட்டம் :
பாடத்தின் கூறுகள் தொடர்பான பின்வரும் வாசகங்களை மாணவர்களுக்குக் காட்டி, அவற்றில் அவர்களின் கருத்தையும், அவற்றில் குத்தகை ஒப்பந்தங்கள் எந்தளவு சரியாக உள்ளன என்பதையும் விளக்குமாறு அவர்களிடம் கேளுங்கள். மேலும் குத்தகையின் விதிமுறைகளை அவர்களுக்கு விளக்கி அவர்களின் பதில்களைப் பற்றி விவாதிக்கவும்.
ஒருவர் மது விற்பனைக்காகக் கடையொன்றை குத்தகைக்கு எடுத்தார்.
ஹுஸைன் சிறுவன் ஒருவனிடமிருந்து காரொன்றை குத்தகைக்கு எடுத்தான்.
தனக்கு உரிமையில்லாத ஒரு நிலத்தில் விவசாயம் செய்ய அலீ ஒருவனைக் கூலிக்கமர்த்தினான்.
ஸஈத் கூலி பற்றி பேசித் தீர்மானிக்காமல் ஒரு பணியாளை வேலைக்கமர்த்தி விட்டு, பின்னர் அற்பமான கூலியைக் கொடுத்தான்.
இறுதிச் சுருக்கம் :
பாடத்தின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட அறிமுகக் கேள்விக்கான தமது பதில்களை மீட்டிப் பார்த்து, அவற்றை மதிப்பீடுசெய்துகொள்ளும் படி ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவர்களில் சிலரைத் தெரிவுசெய்து, தமது பதில்களை முன்வைக்கச் செய்து, பாட அனுபவங்களைக் கடந்துவந்த பின்னர் அவற்றில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்தக் கூறவும். நீங்கள் அவர்களுக்குத் தகுந்த பின்னூட்டல்களை வழங்குதல் வேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : இரட்டையர் முறை, குத்தகை விதிமுறைகளை மீறுவதன் சட்டத்தைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 4 - 5
செயல்பாட்டில் உள்ள ஹதீஸை மாணவர்களுக்கு காண்பித்து, அதனை வாசிப்பதற்காக ஒருவரைத் தேர்வு செய்து, அதன் கருத்தைக் கலந்துரையாடவும்.
ஹதீஸ் சுட்டிக் காட்டும் விடயத்தைத் தெரிந்துகொள்வதில் இவ்விரு மாணவர்களாக ஒத்துழைக்குமாறும், நோக்கத்தோடு பொறுந்திப் போகும் வகையில் அழகாக அதனை வார்த்தைகளில் அதைக் கூறுமாறும் அறிவுறுத்தவும். ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, மிகவும் துல்லியமான பதிலை அடையாளப்படுத்தவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : இரட்டையர் முறை, வியாபாரம், குத்தகை என்பவற்றுக்கு இடையில் ஒப்பிடுதல் நோக்க இலக்கம் : 1
மாணவர்களில் இவ்விருவர் கொண்ட இரு குழுக்களைத் தேர்வு செய்து, நண்பர்களுக்கு முன்னால் நிற்க வைக்கவும். ஒவ்வொரு அணிக்கும் ஒரு பலகையைக் கொடுக்கவும், ஒன்றில் “வியாபாரம்” என்றும், மற்றொன்று “குத்தகை” என்றும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
வியாபாரத்திற்கும் வாடகைக்கு விடுவதற்கும் இடையே உள்ள ஒப்பீடுகளைத் தொடராக முன்வைக்கவும். ஒவ்வொரு குழுவும் சரியான பதிலைத் தீர்மானிப்பதற்காக கலந்தாலோசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழுவின் பதிலையும் பெற்று, அவர்களுடன் ஒப்பிட்டு, மற்ற மாணவர்களையும் அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இறுதியில், சிறந்த பதில் குழு தீர்மானிக்கப்பட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர்/கூட்டு முறை, குத்தகை ஒப்பந்தங்களில் உள்ள பிழைகளை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 2
இச்செயல்பாட்டைச் செய்ய சூடான நாற்காலி உத்தியைப் பயன்படுத்தலாம். மாணவர்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்து, ஒரு நாற்காலி (சூடான நாற்காலி) வட்டத்தின் மையத்தில் வைக்கப்படும்.
ஆசிரியர் நான்கு மாணவர்களை சூடான நாற்காலியில் ஒருவர் பின் ஒருவராக உட்காரச் சொல்ல வேண்டும். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தம் தொடர்பான வாசகங்களில் ஒன்றைப் படித்து, அதில் உள்ள பிழையை முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
ஆசிரியரும் சக நண்பர்களும் மாணவர்களின் பதில்களைப் பெற்று, அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டும். மற்றும் பிழையைத் தீர்மானிப்பதற்கும் அதை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் குறிப்பிடுவதற்கும் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
மதிப்பீடு :
பின்வரும் படிமுறைகளின்படி மாணவர்களிடம் மதிப்பீட்டுக் கேள்விகளைக் கேட்கவும்:
ஆசிரியர் மாணவர்களிடம் முதலிரு கேள்விகளின் கூறுகளையும் முன்வைக்கவேண்டும். அவர்களில் சிலரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும் ஒரு கூறுக்குப் பதிலளிக்கச் செய்ய வேண்டும். அவர்களில் ஒருவர் தவறுவிட்டால், மற்றொருவர் அவரது தவறைத் திருத்த வேண்டும்.
கே 1 : (×) - (×) - ()
கே 2 : (அனுமதிக்கப்பட்டது - செல்லாதது - வாடகை)
மூன்றாவது கேள்விக்கு பதிலளிப்பதில் இவ்விரு மாணவர்களாக ஒத்துழைக்க வேண்டும். அவ்வருவரில் ஒருவர் அதன் கூறுகளில் ஒன்றுக்குப் பதிலளிப்பார், மற்றவர் கண்காணித்து அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். தமது பதில்களையும், தாம் என்ன செய்தோம் என்பதையும் முன்வைக்க மூன்று குழுக்களைத் தேர்வு செய்யவும். அவற்றிற்கிடையில் ஒப்பிட்டுப் பார்த்து, மிகவும் சரியான பதில்களைத் தீர்மானித்தல் வேண்டும். இதனால் மீதமுள்ள அணிகள் தாங்கள் செய்த பிழைகளை சரிசெய்ய முடியும்.
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கற்றதன் படி, பின்வருவனவற்றிற்கு மாணவர்களை வழிநடத்துவது விரும்பத்தக்கது:
குத்தகையில் இஸ்லாமிய ஷரிஆவின் விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு கற்பித்தல்.
அவர்களின் சமூக நடைமுறைகளைக் கண்காணித்து, சில உறவினர்கள் அல்லது நண்பர்கள் குத்தகையின் விதிகள் தொடர்பாக செய்யக்கூடிய தவறுகளைத் திருத்தி, அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும்.
ஐந்தாம் பாடம் : சமகால வியாபார பரிவர்த்தனைகளில் சில:
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(உடனடி டெபிட் கார்டு - கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு - வணிக காப்பீடு - தக்காஃபுல் காப்பீடு - தவணை விற்பனை - டிஜிட்டல் வர்த்தகம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(கணிப்பு முறை - சொற்பொருள் வரைபடங்கள் - சுய கேள்வி - விவாத முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
புதுப்புது நிகழ்வுகள், பிரசினங்களுக்கான தீர்வுகளை ஷரீஆ உள்ளடக்கியிருப்பதை உணர்த்துதல்.
ஹலாலான சம்பாத்தியத்தை மகத்துவப்படுத்தல்.
பிறரை ஏமாற்றுதல், மோசடி என்பவற்றை எச்சரித்தல்.
அனைத்து பரிவர்த்தனைகளிலும் ஹலாலானதைத் தேடுவதில் அக்கறை கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
நடப்பு மற்றும் முந்தைய பாடத்தை பின்வருவனவற்றின்படி இணைப்பதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கவும்: வட்டி, தடைசெய்யப்பட்ட விற்பனை மற்றும் குத்தகையின் விதிகள் பற்றி முந்தைய இரண்டு பாடங்களில் மாணவர்களுக்கு வழங்கியதை அவர்களுடன் நினைவுபடுத்தவும். அவர்களின் பதில்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் குறிப்பிட்டுள்ளதையும் இன்றைய பாடத்தின் மூலம் என்ன வழங்கப்படவுள்ளது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க காத்திருக்குமாறு அவர்களிடம் கேளுங்கள்.
நவீன பொருளாதார நடைமுறையில் புதிய புதிய பல ஒழுங்குகள் தோன்றியுள்ளன. எனவே அவை பற்றிய ஷரிஆ சட்டத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய நாம் அவற்றைப் படிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்தப் பாடத்தில் அவற்றில் ஐந்தைப் படிப்போம் என்று கூறி, பின்னர் பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்துதல்; தற்கால பரிவர்த்தனைகளின் மிக முக்கியமான வடிவங்களின் வரைபடத்தை உள்ளடக்கிய பலகையை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்குவார். மேலும் அதைப் பற்றி சிந்திக்கும்படி கேட்கவேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் இந்த வடிவங்கள் ஒவ்வொன்றைப் பற்றிய தகவல்கள் தெளிவாகவும் வெளிப்படும் விதத்தில் பதில் அமையும் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களின் கேள்விகளைப் பெற்று கரும்பலகையில் ஒரு பகுதியில் எழுத வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் முந்தைய படிமுறையில் மாணவர்கள் கேட்ட கேள்விகளைப் பயன்படுத்துவதோடு, மேலும் சில கேள்விகளையும் இணைத்துக்கொள்ளலாம். அவ்வாறான கேள்விகளுள் சில :
கே: வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதற்கான மார்க்கத் தீர்ப்பை விளக்குங்கள்.
கே: வணிகக் காப்பீடு மற்றும் கூட்டுறவுக் காப்பீடு ஆகியவற்றுக்கான தீர்ப்பின் வேறுபாடுகளைக் காட்டுங்கள்.
கே: தவணை முறை வியாபாரத்தின் சட்டத்தைத் தெளிவுபடுத்தவும்.
கே: டிஜிடல் வியாபாரத்தின் முக்கிய சட்டங்களைத் தெளிவுபடுத்தவும்.
மூன்றாம் கட்டம் :
ஹலாலான சம்பாத்தியத்தைத் தேடுவதன் மதிப்பை ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும், அதே நேரத்தில் ஷரிஆ புதுப்புது நிகழ்வுகள் மற்றும் நடைமுறைகளுக்கான சட்டங்களை உள்ளடக்கி இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும், அவற்றின் அர்த்தங்களையும் காட்சித் திரையில் விளக்க வேண்டும்.
இறுதிச் சுருக்கம்:
ஆசிரியர் பலகையில் ஒரு வட்டத்தை வரைந்து அதன் உள்ளே (அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்) என்று எழுத வேண்டும். மேலும் அதிலிருந்து பல அம்புகளை வெளிப்புறம் நோக்கி வரைந்து, ஒவ்வோர் அம்புக்கருகிலும் பாடத்திலிருந்து தாம் கற்ற, வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மாணவர்கள் எழுத வேண்டும். திருப்திகரமாக, திறமையாக எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, சில பரிவர்த்தனைகளுக்கு உரிய காரணம் மற்றும் சட்டங்களை விளக்கும் முறையைப் பயிற்றுவித்தல். நோக்க இலக்கம் : 1, 2, 3
முதலாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, மேலதிக அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் சரியான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.
தீர்ப்பு அல்லது சட்ட நிலை காரணம்
ஹராம். ஏனெனில் இது தடைசெய்யப்பட்ட வர்த்தக காப்புறுதி வடிவங்களில் ஒன்றாகும்
அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் இது அனுமதிக்கப்பட்ட தவணைமுறை வியாபாரமாகும்
அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் இது அன்பளிப்பு ஒப்பந்தங்களில் உள்ளதாகும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, உடனடி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுக்கு இடையிலான ஒப்பிடுதல். நோக்க இலக்கம் : 1
செயல்பாடு அடங்கிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, செயல்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகையான அட்டையையும் விளக்குவதில் மாணவர்களுடன் விவாதிக்கவும். அட்டைக்குப் பொருத்தமான சரியான ஒப்பீட்டு வழிமுறையைக் கொண்டு வர ஒவ்வொரு மாணவரும் அவருடைய ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தச் சொல்லவும். அவர்களின் பதில்களைப் பெற்று அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்கி, அதை அவர்கள் கொப்பிகளில் எழுதிக்கொள்வதற்காக கரும்பலகையில் எழுதவும்.
டெபிட் கார்ட்: இவை வங்கி அட்டைகளாகும் ((cards)) இதில் வாடிக்கையாளர்- அட்டை உரிமையாளர் பணத்தை வைப்பிலிடுவார். அப்பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுக்கவோ அல்லது விரும்பியதை வாங்கிக்கொள்ளவோ இதனால் முடியும். ஆனால் வங்கியானது இவ்வட்டையை வைத்திருப்பவருக்கு அவரின் கணக்கிலிருக்கும் தொகையை விட மேலதிக கடன்களை வழங்க மாட்டாது. இதன் அர்த்தம் ஓப்பீட்டு முறை இதன் சட்டம் : ஆகுமாகும்.
கடன் அட்டை (credit card) : இதுவும் வங்கியினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு அட்டையாகும.; இவ்வட்டையை வைத்திருப்பவர்; தனது கணக்கில் உள்ள தொகையை எடுக்க முடிவதோடு, தனது கணக்கில் உள்ள தொகைக்கு மேலதிகமாக குறிப்பிட்ட காலவரையரையுடன் வங்கி கடனையும் வழங்கும்.
இதன் சட்டம் : கூடாது.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கலாம். மேலும் ஒவ்வொரு குழுவையும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒத்துழைக்கச் சொல்லவும்.
மாணவர்களின் செயல்திறனைக் கண்காணிக்க அவர்களது அருகாமையில் சென்று அவர்களின் பதில்களைப் அவதானிக்கவும். அவர்கள் அனைவரும் பதிலளிப்பதில் பங்கேற்பதையும் உறுதிசெய்யவும்.
மாணவர்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான பதில் குழுக்களை அடையாளம் காணவும்.
சரியான பதிலை மாணவர்களுக்குக் காட்ட, அவர்களுடன் கேள்விகளைப் பற்றி வாய்மொழியாக விவாதிக்கவும்.
குழுக்களுக்கு தகுந்த கருத்துக்களை வழங்கவும், கலந்துரையாடலில் அவர்கள் கற்றுக்கொண்ட பதில்களுக்கு ஏற்ப அவர்களின் பதில்களை மாற்றியமைக்கும்படி அவர்களிடம் கோரவும்.
கே 1 : (×) - - (×).
கே 2 : வணிக காப்பீடு - நன்கொடை ஒப்பந்தம்.
கே 3 : பின்வரும் வசனத்தின் அடிப்படையிலாகும். "அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கினான்". (பகரா : 275).
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கற்றுக்கொள்ளப்பட்டவற்றின் படி, பின்வருவனவற்றை மாணவர்களுக்கு உணர்த்துவது விரும்பத்தக்கது:
நவீன பரிவர்த்தனை முறைகளில் மார்க்கம் அங்கீகரித்த நிலைப்பாடுகளை பற்றிப்பிடித்துக் கொள்ளல், அச்சட்டங்களுக்கு முரண்படும் எந்தவொரு நபருக்கும் அழகிய முறையில் சரியானதன் பக்கம் வழிகாட்டுதல்.
சரியான மார்க்க அறிவைப் பரப்புதல் எனும் அடிப்படையில், பாடத்தில் கற்ற சமகால பரிவர்த்தனைகள் பற்றிய தீர்ப்புகள் பற்றி தங்கள் நண்பர்களுக்கு அறிவுறுத்துவதற்காக தமது சமூக வலைதள பக்கங்களில் பதாகைகள் அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்தல் .
ஆறாவது பாடம்: திருமணச்சட்டங்கள்
கால அளவு: ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(திருமணம் சட்டபூர்வமாதல் - திருமணம் செய்து கொள்ளுங்கள் - பாதுகாவலர் - மனமகளுக்கான திருமண அன்பளிப்பு - சான்றிதழ்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கற்பித்தல் பலகை - கரும்பலகை - ஓடியோ பதிவு - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கணிப்பு முறை - கருத்துதிர்ப்பு - ஆராய்ந்தறியும் முறை - சிக்கல் தீர்க்கும் முறை - மன வரைபடங்கள் - சூடான நாற்காலி).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- இஸ்லாமிய சட்ட திட்டங்கள், போதனைகளை மகத்துவப்படுத்தல்.
- திருமண ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைக் கடைபிடிக்கத் தூண்டுதல்.
- திருமண சட்டதிட்டங்களில் உள்ள மார்க்க நுட்பங்களை உணர்தல்.
பாடத்தின் அறிமுகம்:
பாடத்தலைப்பை கரும்பலகையில் எழுதவும். பாடத்தின் போது அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று கூறுகளை முன்வைக்குமாறு மாணவர்களைக் கேட்கவும். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் கண்டறிந்த கூறுகளை தமது கொப்பியில் எழுத வேண்டும். இந்த கூறுகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்வது பாடத்தின் படிமுறைகள் முடியும் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
பின்வரும் இறைவசனத்தை ஓடியோ பதிவு மூலம் செவிமடுத்து, அவதானித்து, அது சுட்டிக்காட்டுவதைக் கண்டறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தவும். அவர்களின் பதில்களை, திருமணம் மார்க்கமாவதை அறியப்படுத்துவதற்கான தொடக்கப்புள்ளியாக ஆக்கிக் கொள்ளவும்.
அல்லாஹ் கூறுகிறான்: "உங்களுக்குப் பிடித்தமான பெண்களிலிருந்து இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ திருமணம் செய்து கொள்ளுங்கள்". (நிஸாஃ : 3).
இரண்டாம் கட்டம்:
கருத்துதிர்ப்பு அமர்வைப் பயன்படுத்துவதன் மூலம் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதன் நுட்பத்தை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்துடன் கூடிய அதிக எண்ணிக்கையிலான பதில்களைக் கொண்டு வர, அவர்களின் ஆக்கத்திறனைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும். அவர்கள் முன்மொழிந்தவை பற்றி அவர்களுடன் விவாதித்த பிறகு, திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான நியாயங்களையும் அதன் பின்னால் உள்ள நுட்பங்களையும் உள்ளடக்கிய பலகையை அவர்களுக்குக் காட்டவும்.
மூன்றாம் கட்டம் :
பின்வரும் பிரச்சனையில் மாணவர்களின் கருத்தைக் கேட்கவும். மேலும் அவர்களின் பதில்களை திருமண விதிமுறைகளை அறிமுகப்படுத்த ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தவும்.
(ஒரு தந்தை தனது மகளை அவரது சகோதரனின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். ஏனென்றால் அவள் அவனைத் தன் சகோதரனாகக் கருதினாள். ஆனால் அவளுடைய தந்தை தனது சகோதரர் கோபப்படாதிருக்க அவளைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்).
நான்காம் கட்டம் :
திருமணத்தின் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகளின் மன வரைபடத்தை மாணவர்களுக்குக் காட்டி, ஒவ்வொரு நிபந்தனையையும் விளக்கித் தெளிவு படுத்தவும். தமக்கு மூடலான விடயங்களைக் கேட்டுத் தெளிவுபெற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
படிப்பினைகள்:
உள்ளடக்கத்தை அறிய விரும்பி, அறிமுகத்தின் போது தாம் முன்வைத்த கூறுகளை மீள்பரிசீலனை செய்து, அக்கூறுகளை பாடம் எந்தளவு உள்ளடக்கியுள்ளது என்பதை மதிப்பாய்வு செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள். பாடம் உள்ளடக்காத மேலதிக கூறுகள் இருந்தால் அவற்றை அறிந்து புரிவதற்காக பல்வேறுபட்ட மேலதிக மூலாதாரங்களை வழங்கவும்.
ஒவ்வொரு மாணவரையும் பாடத்தின் ஒரு அங்கத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுருக்கமாக விளக்கக் கோரவும். மாணவர்களின் வாய்மொழி செயல்திறனை ஊக்குவித்து, விளக்கக்காட்சியின் போது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர்/கூட்டு முறை, திருமண ஒப்பந்தம் தொடர்பான சில சிக்கல்களை மதிப்பீடு செய்தல். நோக்க இலக்கம் : 2
சூடான நாற்காலி உத்தியைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது. அதாவது, மாணவர்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்து, வட்டத்தின் மையத்தில் ஒரு நாற்காலியை வைக்கவேண்டும்.
ஆசிரியர் மூன்று மாணவர்களை தொடர்ச்சியாக அந்நாற்காலியில் உட்காரச் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் செயல்பாட்டில் உள்ள ஒரு பிரசினத்தை செவிமாடுக்குமாறு கூறி, அதற்கான தனது தீர்ப்பை காரணத்துடன் கூறுமாறு அறிவுறுத்த வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களுடன் இணைந்து அவர்களது வகுப்பு தோழர்களின் பதில்களைப் பற்றி விவாதித்து, சரியான பதிலைப் பெறவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர்/கூட்டு முறை, திருமணத்தின் நிபந்தனைகளுக்கு ஆதாரம் எடுத்தல்.
நோக்க இலக்கம் : 1, 2
செயல்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆதாரத்தையும் ஒவ்வொரு அட்டையில் எழுதவும். பின்னர் ஒவ்வொரு மாணவரையும் எழுமாறாக அட்டைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யச் செய்து, அதில் உள்ள ஆதாரத்தைப் படித்து, அது குறிப்பிடும் திருமணத்தின் நிபந்தனையை கண்டுபிடிக்கச் சொல்லவும்.
சக நண்பரின் பதிலை மதிப்பிடுவதற்கு மற்றொரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் எந்தளவு உடன்படவோ, அல்லது முரண்படவோ செய்கிறார் என்பதைக் குறிப்பிடுமாறு கூறவும். மேலும் சரியான பதில்கள் பற்றி அவர்களுடன் விவாதித்து, தங்கள் புத்தகங்களில் அவற்றை எழுத வைக்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஓர் எண்ணைக் கொடுங்கள். மேலும் பதிலளிக்க ஒத்துழைக்குமாறு ஒவ்வொரு குழுவிற்கும் சொல்லவும். குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க, மற்ற இரண்டு நண்பர்கள் அவரைக் கவனித்து, வழிநடத்த வேண்டும்.
எழுமாறாக இரண்டு குழுக்களைத் தேர்வு செய்யவும். ஒரு குழு ஒற்றைப்படையாகவும் மற்றொன்று இரட்டையாகவும் இருக்கும். ஒவ்வொரு குழுவும் அதன் பதிலை முன்வைத்தவுடன், மிகச் சரியான பதிலைத் தீர்மானிக்க அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
கே 1 : - (×) -
கே 2 : (இரண்டு ஆண்கள் - மத வேறுபாடு - செல்லாது)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
கீழ்க்கண்டவற்றைச் செய்வதன் மூலம் பாடத்தில் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்த மாணவர்களை வழிநடத்துங்கள்:
ஒவ்வொரு மாணவரும் தனது குடும்பத்தில் திருமண விதிகள் எந்தளவு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதை அவதானித்து, அறிந்துகொள்ளவேண்டும். பின்பு தான் கண்டு, அடைந்த முடிவுகள் தொடர்பாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் விவாதித்து, அவை பற்றிய அவர்களது அபிப்பிராயத்தையும் அறிந்துகொள்ளவேண்டும்.
ஏழாம் பாடம் : இல்லற வாழ்க்கை
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(கனிவுடன் பழகுதல், குடும்ப நிர்வாகம், மஹர் தொகை, ஜீவனாம்சம்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கணினி - காட்சித் திரை - கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள்)
கற்பித்தல் உத்திகள்:
(முந்தைய அமைப்புக்கள் - சொற்பொருள் வரைபடம் - கூட்டாக கற்றல்)
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- இஸ்லாமிய சட்டதிட்டங்களை மதித்தல்.
- கணவனின் உரிமைகளைக் கடைப்பிடிப்பதில் அக்கறை கொள்ளல்.
- தவறுகளை மன்னிப்பதன் சிறப்புகளை உணர்தல்.
- முழுமையான ஈமான் நற்குணங்கள் மூலமே.
- தவறான சூழ்நிலைகள் மற்றும் அலட்சியம் ஆகியவற்றை தவறாகக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருத்தல்.
பாடத்தின் அறிமுகம்:
முந்தைய பாடத்தில் மாணவர்கள் கற்றுக்கொண்ட திருமணத்தின் மிக முக்கியமான விதிகளை நினைவுபடுத்தவும். பின்னர், "திருமணம் வெற்றிபெற, தம்பதியினர் ஒவ்வொருவரும் மற்றவரின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும், இன்றைய பாடத்தில் அந்த உரிமைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்" என்று அவர்களிடம் கூறி, பின்னர் அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுங்கள்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மனைவி கணவனுக்குச் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளின் வரைபடத்தை உள்ளடக்கிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றி சிந்திக்கும்படி கேட்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் இந்த உரிமைகள் ஒவ்வொன்றையும் பற்றி ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். அதற்கு பதிலளிப்பதன் மூலம், அது தொடர்பான தகவல்கள் அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படும்.
ஆசிரியர் மாணவர்களின் கேள்விகளைப் பெற்று கரும்பலகையில் ஒரு பகுதியில் எழுத வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் முந்தைய படிமுறையில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளைப் பயன்படுத்துவதோடு, மேலும் சில கூடுதல் கேள்விகளையும் அவற்றுடன் இணைக்கலாம். இவற்றுக்குப் பதிலளிப்பதன் ஊடாக முக்கிய கடமைகள் பற்றிய பல தகவல்கள் தெளிவாகும். அவற்றில் பின்வரும் கேள்விகள் இருக்கலாம். :
கே: மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகள் என்ன?
கே: கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகளை விளக்குக.
கணவன், மனைவியின் உரிமைகள் பற்றி சில ஆதாரங்களைக் கூறுக.
மூன்றாம் கட்டம் :
காட்சித் திரை ஊடாக, நல்ல இல்லற வாழ்க்கையின் வடிவங்களை ஆசிரியர் விளக்கி, தெளிவுபடுத்துவதுடன், அதன் முக்கியத்துவம் மற்றும் அது செயற்படுத்தப்படவேண்டிய சந்தர்ப்பங்களை பறைசாற்றும் ஆதாரங்களை விளக்கி, அவை என்ன வழிகாட்டல்களைத் தருகின்றன என்பதையும் விளக்க வேண்டும்.
இறுதிச் சுருக்கம்:
ஆசிரியர் பலகையில் ஒரு வட்டத்தை வரைந்து அதன் உள்ளே (அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்) என்று எழுத வேண்டும். மேலும் அதிலிருந்து பல அம்புகளை வெளிப்புறம் நோக்கி வரைந்து, ஒவ்வோர் அம்புக்கருகிலும் பாடத்திலிருந்து தாம் கற்ற, வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மாணவர்கள் எழுத வேண்டும். திருப்திகரமாக, திறமையாக எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, உபதேசிக்கும் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 1
முதல் செயல்பாட்டுடன் கூடிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு செயல்பாட்டின் சூழ்நிலைகளை வாசித்துக்காட்ட ஒருவருக்குப் பின் ஒருவராக மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சூழ்நிலையையும் மாணவர்களுடன் கலந்துரையாடி, விளக்கவும். மேலும் ஒவ்வொரு மாணவரும் சரியான உபதேச முறையைப் பெறுவதற்கும், அதற்குரிய காரணத்தைக் கூறுவதற்கும் அவரது யூகித்தறியும் திறன்களைப் பயன்படுத்தக் கோரவும். அவர்களின் பதில்களைப் பெற்று அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்கி, அதை கொப்பிகளில் எழுதுவதற்காக கரும்பலகையில் எழுதவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர்/ கூட்டு முறை, வாழ்க்கைத் துணைகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தின் பெறுமதியை விளக்குதல்.
நோக்க இலக்கம் : 4
வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குடும்பத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை விளக்கி ஒவ்வொரு மாணவரும் ஓர் உரையை எழுதி, முன்வைக்க வழிகாட்டவேண்டும். பாடத்தில் கற்ற பிரகாரம் மார்க்க ஆதாரங்களைக் கொண்டு அவ்வுரையை வலுவூட்ட வேண்டும். தமது சக நண்பர்கள் முன்னிலையில் அவ்வுரையை ஆற்ற மாணவர்களில் சிலரைத் தேர்வு செய்து, திறமையாக உரையாற்றியவர்களைப் பாராட்ட வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
ஒன்றன் பின் ஒன்றாக இரு வினாக்களையும் கரும்பலகையில் எழுத வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அடுத்தடுத்து உள்ள இரண்டு மாணவர்களை கூட்டாகப் பங்கேற்கச் சொல்வது விரும்பத்தக்கது.
பின்னர் எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்து, தமது பதில்களை ஏனையோரிடம் வாசித்துக் காட்டுமாறு கூற வேண்டும்.
தவறு செய்பவர்களிடம் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டுவது சிறந்தது.
கே 1 : வீட்டில் தங்குவது - கணவரின் சொத்தைப் பாதுகாப்பது - அவளுக்கு நலவு செய்வது
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
கணவன் மீதான மனைவியின் உரிமைகளையும், மனைவி மீதான கணவனின் உரிமைகளையும் இணைத்து இரண்டு வடிவங்களை மாணவர்கள் வடிவமைத்து சமூக ஊடகங்களில் வெளியிடவேண்டும்.
எட்டாம் பாடம்: தலாக்கின் சட்டங்கள் (விவாகரத்து சட்டங்கள்)
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(மீளத்தக்க விவாகரத்து - மீள முடியாத விவாகரத்து - வெளிப்படையான விவாகரத்து - சைக்கினை விவாகரத்து - உடனடி விவாகரத்து - தொடர்பு படுத்தப்பட்ட விவாகரத்து).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கற்பித்தல் பலகை - கற்பித்தல் அட்டைகள்).
கற்பித்தல் உத்திகள்:
(கல்வி புதிர்கள் - கணிப்பு முறை - வாழ்க்கை சூழ்நிலைகள் - முரண்பாடுகள் - சிக்கல் தீர்க்கும் முறை - பூரணப்படுத்தல் - உறவுகளின் பிணைய பகுப்பாய்வு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- விவாகரத்து சட்டத்தில் உள்ள நுட்பத்தை உணர்த்தல்.
- விவாகரத்து தொடர்பான தவறுகளை எச்சரித்தல்.
- விவாகரத்து விடயத்தில் அலட்சியப்போக்கைத் தவிர்ந்து கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
மாணவர்களிடம் பின்வரும் சொற்றொடர்களைத் தொடராக முன்வைத்து, ஒவ்வொரு சொற்றொடருக்கும் பிறகு அவை அறிவிக்கும் விடயத்தைக் கூறுமாறு வேண்டவும். அவர்களுக்குத் தெரியாவிட்டால், விவாகரத்து என்ற வார்த்தையைக் கொண்டு வரும் வரை அடுத்தடுத்த சொற்றொடருக்குச் செல்லவும்.
தம்பதியினரிடம் இல்லற வாழ்க்கை சாத்தியமற்றுப் போகும் போது அல்லாஹ் அதனை சட்டபூர்வமாக்கியுள்ளான்.
அதனை மார்க்கம் ஆணின் கையிலேயே வைத்துள்ளது.
தனக்கு வரும் கெடுதிகளை நீக்குவதற்காக மனைவிக்கும் அதனைக் கோரலாம்.
பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, பின்னர் அதை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல்:
முதல் கட்டம் :
மாணவர்கள் பாடத்தின் அறிமுக செயற்பாடுகளைக் கடந்துவந்திருப்பதன் அடிப்படையில், பாடத்தில் என்னென்ன கூறுகள் இருக்கலாம் என்று கணிக்குமாறு அவர்களிடம் கோரவும். அவர்களின் பதில்களைக் கண்டறிந்து, பின்னர் பாடத்தின் பொதுவான கூறுகளை உள்ளடக்கிய ஒரு விளக்க பதாகையை அவர்களுக்குக் காட்டுங்கள். இதன் மூலம், அவர்கள் தாம் முன்மொழிந்த பதில்களை பதாகையில் இருப்பவற்றுடன் ஒப்பிடலாம்.
இரண்டாம் கட்டம்:
பின்வரும் இரண்டு சூழ்நிலைகளை மாணவர்களுக்குக் காட்டி, மீளத்தக்க, மீள முடியாத ஆகிய இரண்டு வகையான விவாகரத்துகளில் பின்வரும் சூழ்நிலைகள் எதைக் குறிக்கின்றன என்பதை விளக்கச் சொல்லவும், ஒவ்வொரு வகையின் வரைவிலக்கணத்தையும் அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தையும் அவர்களுக்கு விளக்கவும்.
ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு, பின்னர் கவலைப்பட்டு புதிய ஒப்பந்தமின்றியே தன்னிடம் அவளை மீட்டிக் கொண்டார்.
ஒருவர் தனது மனைவியை விவாகரத்துச் செய்து விட்டார். என்றாலும் அவள் வேறொரு ஆணைத் திருமணம் செய்து விவாகரத்துப் பெறும் வரை முதலாமவருக்கு அவளை மீளப் பெறமுடியாது.
மூன்றாம் கட்டம் :
பின்வரும் சூழ்நிலையை மாணவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றி சிந்தித்து, இந்த சூழ்நிலையில் எப்படி விவாகரத்து ஏற்படும் என்பதைத் அடையாளப்படுத்தக் கோரவும். அத்துடன் வெளிப்படையான மற்றும் சைக்கினையான விவாகரத்து பற்றியும் அவர்களுடன் கலந்துரையாடவும்.
(ஒரு மனிதன் தன் மனைவியுடன் சண்டையிட்டு, பின்னர் அவளை அவளுடைய வீட்டிற்குச் செல்லும்படி கூறிவிட்டான். அவளோ, கணவன் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு சென்றாள். ஆனால் அவளுடைய தந்தை அவளிடம், "கணவன் சொன்னது வெளிப்படையான விவாகரத்து அல்ல" என்று கூறினார்)
நான்காம் கட்டம் :
பின்வரும் வாசகத்தை மாணவர்களிடம் காண்பித்து, சரியான முறையில் அதனைப் பூரணப்படுத்துமாறு வேண்டவும், பின்னர் அவர்களுடைய பதில்களை விவாதித்து, உடனடி விவாகரத்து, ஏதாவதொன்றுடன் தொடர்புபடுத்தப்பட்ட விவாகரத்து என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டையும் விளக்கவும்.
ஒருவன் தன் மனைவியிடம் : "அனுமதி கேட்காமல் உன் தந்தையின் வீட்டிற்குச் சென்றால், நீ விவாகரத்து செய்யப்பட்டு விட்டாய்". என்று சொன்னான். அனுமதியின்றி மனைவி இவ்வீட்டிற்குள் நுழைந்தால் அவள் .............................. , அவள் அவ்வாறு நுழையா விட்டால் ......................... .
இறுதிச் சுருக்கம் :
ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் அட்டையைக் கொடுத்து, பாடத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட விவாகரத்து வகைகளை, ஒவ்வொரு வகையின் சுருக்கமான வரையறையுடன், பிணைய வரைபடத்தின் மூலம் உருவாக்கச் சொல்லவும். அட்டைகளை ஒன்று சேர்த்து, மதிப்பீடு செய்து, அவற்றில் மிகத் துல்லியமான, சிறந்த அட்டையை அடையாளப்படுத்தவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர்/கூட்டு முறை, விவாகரத்து வகையைக் குறிப்பிடுதல்.
நோக்க இலக்கம் : 4
ஆசிரியர் மாணவர்களுக்கு செயல்பாட்டில் உள்ள ஏதேனும் பிரசினங்கள் எழுதப்பட்ட ஒரு தொகை அட்டைகளை விநியோகிக்க வேண்டும்.
செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு பிரசினத்தையும் மாணவர்களுக்குக் கூற, அவர்கள் அப்பிரசினத்துக்குப் பொருத்தமான விவாகரத்து வகையைத் தீர்மானித்து, அதற்குப் பொருத்தமான அட்டையை உயர்த்த வேண்டும்
ஆசிரியர் மாணவர்களின் செயல்திறனைக் கண்காணித்து மதிப்பீடு செய்வதுடன், தவறாகப் பதிலளிப்பவர்களிடமிருந்து அட்டைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, விவாகரத்து செய்ய சிந்திக்கும் ஒருவருக்கு உபதேசம் வழங்குதல்.
நோக்க இலக்கம் : 5
செயல்பாட்டில் உள்ள ஹதீஸை ஆசிரியர் வாசித்து, அதன் கருத்து பற்றி மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும். பின்னர், தமது மனைவியருடன் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் விவாகரத்து செய்ய சிந்திக்கும் ஆண்களுக்கு ஓர் உபதேசம் செய்யுமாறு அவர்களிடம் கோர வேண்டும். அவர்கள் முன்வைக்கும் உபதேசம் பற்றி விவாதித்து, பொருத்தமான கருத்துக்களை வழங்க வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, தமக்கு முன்வைக்கப்படும் பிரசினங்களில் விவாகரத்தின் சட்டத்தை விளக்குதல். நோக்க இலக்கம் : 3, 4
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். முதலாம் குழு செயல்பாட்டில் உள்ள பிரசினத்தை வாசிக்க வேண்டும். இரண்டாம் குழு அப்பிரசினத்துக்குரிய சரியான தீர்வைத் தெளிவுபடுத்த வேண்டும். இரு தரப்பினரையும் நீர் கண்காணித்து, வழிகாட்ட வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டுக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்:
முதல் கேள்வியின் கூறுகளுக்குப் பதிலளிக்க இவ்விரு மாணவர்களாகத் தேர்வு செய்வது சிறந்தது. இருவருடைய பதில்களையும் ஒப்பிட்டு, மிகச் சரியான பதிலைத் தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவது கேள்வியில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வகையான விவாகரத்துக்கும் ஒரு உதாரணத்தைக் கூற மூன்று மாணவர்களைத் தேர்வுசெய்யவும். ஒருவர் தவறு செய்தால், அவருடைய சக நண்பர்களில் ஒருவரிடமிருந்து சரியான பதிலைக் கண்டறிய அவருக்கு அறிவுறுத்துங்கள்.
இவ்விரு மாணவர்களாக மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டவும். மேலும் ஒவ்வொரு குழுவின் பதிலின் தன்மையைக் கண்டறிய அவர்கள் அருகாமையில் செல்லவும். முன்மாதிரியாக பதிலளித்த ஓரணியைத் தேர்வுசெய்து, மற்ற அணிகளுக்கு தமது பதிலை வழங்கச்செய்யவும்.
கே 1 : - (×) - (×)
பண்படுத்தல் மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் தங்கள் சமூகத்தில் உள்ள சில நபர்களுக்கு ஏற்பட்ட விவாகரத்து நிகழ்வுகள் பற்றி தனது குடும்ப உறுப்பினர்களுடன் விவாதித்து, அவை பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்பதோடு, ஒவ்வொரு சம்பவமும் எந்த விவாகரத்து வகையில் வருகின்றன என்பதையும் அடையாளப்படுத்தவேண்டும்.
ஓன்பதாம் பாடம் : தடைசெய்யப்பட்ட உணவு, குடிபானம் மற்றும் உடை வகைகள்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(போதைப்பொருள் - இறந்த பிராணி - கழுத்து நெறித்துச் செத்தது - அடிபட்டுச் செத்தது - கீழே விழுந்து செத்தது - கொம்பால் முட்டப் பட்டுச் செத்தது - ஓட்டப்பட்ட இரத்தம் - கரண்டைக் காலுக்குக் கீழால் ஆடை அணிதல்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கதை நடை - சுய கேள்வி - கூட்டு கற்கை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- தடுக்கப்பட்ட உணவு, பானங்களைத் தவிர்ந்து கொள்ளல்.
- அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள அருளை உணர்தல்.
- இஸ்லாத்தின் இலகுத் தன்மை, முஸ்லிம்களுக்கு நன்மையுள்ள விடயங்களில் அக்கறை கொண்டிருத்தல் என்பவற்றை உணர்தல்.
- சில உணவு வகைகளைத் தடுத்திருப்பதன் நுட்பத்தை உணர்த்துதல்.
ஆடைகளில் நபிவழியைப் பின்பற்றுதல்.
பாடத்தின் அறிமுகம் :
பின்வரும் வாசகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் மாணவர்களுக்கு பாடத்தை அறிமுகப்படுத்தலாம்: (உணவு, பானம், உடை அனைத்திலும் அடிப்படை - மார்க்கம் குறித்துத் தடுத்தவற்றைத் தவிர - அவை அனுமதிக்கப்பட்டவை என்பதாகும். உடலுக்கும் உயிருக்கும் பலனளிக்கும் அனைத்து வித உணவு, பானம், உடை என்பவற்றை அல்லாஹ் தன்னை வழிபடுவதற்குத் துணையாக அமைவதற்காக அனுமதித்துள்ளான். கெடுதியுள்ள அனைத்தையும் அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான். மேற்கூறிய அடிப்படைக்கு அல்குர்ஆனும் ஸுன்னாவும் ஆதாரமாக உள்ளன).
உங்கள் விளக்கத்தின் மூலம், பாடத்தின் உள்ளடக்கத்துக்கு அவர்களை கொண்டுசென்று, பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
மாணவர்களிடம் பாடப்புத்தகத்தைத் திறக்கக் கூறி, பாடத்தைத் திறந்து, அது உள்ளடக்கியிருக்கும் பிரதான கூறுகளை அறிய, மௌனமாக வாசிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
இரண்டாம் கட்டம்:
தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு பாடத்தை உரக்கப் படிக்க சில மாணவர்களைத் தேர்வுசெய்யவும்.
அவர்களுக்குப் புரியச் சிரமமாக இருக்கும் கலைச் சொற்களைத் தெளிவுபடுத்தவும்.
மூன்றாம் கட்டம் :
சுய-கேள்வி முறை பயன்படுத்தவும். பாடத்திலிருந்து தாம் தெரிந்து கொள்ள விரும்புவதைப் பற்றி ஒவ்வொருவரும் இரண்டு கேள்விகளைக் கேட்க சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
அவர்களது கேள்விகளை கரும்பலகையில் எழுதிவிட்டு, அவசியம் அறிய வேண்டிய, அவர்கள் கேட்காத மேலும் சில கேள்விகளையும் இணைத்துக் கொள்ளவும்.
அக்கேள்விகளை அவர்களுடன் விவாதிக்கவும். அவ்வாறான கேள்விகளுள் சில :
தடுக்கப்பட்ட உணவு வகைகளைக் கூறி, அவை ஒவ்வொன்றின் சட்டத்தையும் விளக்குக.
உண்பது தடுக்கப்பட்ட, அல்லது வெறுக்கப்பட்ட பிராணிகளுக்கு சில உதாரணங்கள் கூறுக.
சில உணவுகள் தடுக்கப்பட்டதற்கான நுட்பத்தைத் தெளிவுபடுத்தவும்.
முஸ்லிமல்லாதோர் அறுத்தவற்றை உண்பதன் சட்டம் என்ன?
தடுக்கப்பட்டவற்றை நிர்ப்பந்தத்தின் போது உண்பதன் சட்டம் என்ன?
ஆடை அலங்காரங்களில் தடுக்கப்பட்டவை என்ன?
இறுதிச் சுருக்கம்:
பாடத்தைப் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் அவதானிப்புகளை எழுதுமாறு உங்கள் மாணவர்களைக் கேட்பது விரும்பத்தக்கது.
குறிப்புகளில் பாடத்தின் முக்கிய யோசனைகள் மற்றும் அதிலிருந்து கற்றுக்கொண்டவை அடங்க வேண்டும்.
தாம் எழுதியதை சமர்பிக்க சிலரைத் தேர்வு செய்யவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, சில உணவுகளின் ஹராம், ஹலால் சட்டத்தை விளக்குதல். நோக்க இலக்கம் : 2, 3
முதலாம் செயல்பாட்டைத் தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, மேலதிக அட்டை ஒன்றில் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் துல்லியமான, சரியான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவித்துப் பாராட்டவேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, ஆண், பெண் இருபாலரும் அணிவது, அலங்கரிப்பது ஹராமான ஆடைகளை வரையறுத்தல். நோக்க இலக்கம் : 3
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் இரண்டாம் செயல்பாட்டைச் செய்ய ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் கூறுகளைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு, அதற்கான ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
அணிவது தடுக்கப்பட்டவை யாரின் மீது ஹராமாகும் :
பட்டாடை, பட்டுத் துணி ஆண்கள்
ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாக அணிதல், பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாக அணிதல். ஆண்களும் பெண்களும்.
கரண்டைக்காலை தாண்டி ஆடை அணிதல் ஆண்கள்
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் கேள்விகளுக்கு விடையளிப்பதில் பங்கேற்கச் சொல்லவும்.
மாணவர்கள் பதிலளிப்பதில் ஒத்துழைக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்களிடம் செல்லவும்.
ஒவ்வொரு குழுவும் தங்கள் பதிலை வழங்குவதற்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்து, அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கே 1 : (×) - (√) - (×) - (√) - (×)
கே 2 : மின்சார அதிர்ச்சியால் கொல்லப்பட்டது - அனுமதிக்கப்பட்டது - கட்டாயமானது - தடைசெய்யப்பட்டது - மூன்று நாட்கள்
பயற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
ஒவ்வொரு மாணவரும் தடைசெய்யப்பட்ட மற்றும் வெறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் ஆடைகளைப் பயன்படுத்துவதிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதுடன், அத்தகைய செயலில் ஈடுபடும் ஒருவரைக் கண்டால், அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஏனெனில், ஒரு முஸ்லிம் மக்களுக்கு நல்லதை விரும்பி, அவர்களை நல்வழிப்படுத்த முற்படுவார்.
பத்தாம் பாடம் : மதுவும் போதைப்பொருட்களும் அவ்விரண்டினதும் அழிவுதரும் விபரீதங்களும்
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள் : (மதுப்போதை - போதைவஸ்து - தீமைகள்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - கணினி - காட்சி திரை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகை).
கற்பித்தல் உத்திகள்:
(தனிப்பட்ட இணைப்புகள் - முன்கணிப்பு முறை - சிந்தனை வரைபடங்கள் - வகைப்பாடு மற்றும் வகைகளாக பிரித்தல் - ஆராய்ந்தறியும் முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- மது, மற்றும் போதைப்பொருட்களினால் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்துக்களை உணர்தல்.
மது, போதைப்பொருட்களைத் தவிர்ந்து கொள்ளல்.
- பகுத்தறிவு எனும் அருட்கொடையின் பெருமதியுணர்ந்து, அதனைப் பாதுகாத்தல்.
- ஹலாலான வழிகளில் பணம் செலவிடுவதில் அக்கறை கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் வாசகத்தை மாணவர்களுக்கு முன்வைப்பதன் மூலம் பாடத்தை ஆரம்பிக்கலாம் : (ஆதாரபூர்வமாக தடுக்கப்பட்டதைத் தவிர அனைத்து விதப் பானங்களையும் அனுமதித்திருப்பதன் மூலம் அல்லாஹ் தன் அடியார்கள் மீது அருள் புரிந்துள்ளான். அசுத்தமான அல்லது போதைப்பொருள் போன்ற மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு பானமும் இவ்வாறு தடுக்கப்பட்டவைகளில் உள்ளவையாகும். நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "நபி (ஸல்) அவர்கள் போதையேற்படுத்தும் அனைத்தையும் தடை செய்தார்கள்".
பின்னர் போதைப்பொருட்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்று அவர்களுடன் விவாதித்து, அதனூடாகபாடத்தின் உள்ளடக்கத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
பாடத்தின் தலைப்பு பற்றிய அறிமுகத்தையும், முன்வைக்கப்பட்ட அறிமுக வாசகத்தையும் முன்னிறுத்தி, முன்கணிப்பு முறையூடாக, பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள கூறுகளைக் கணிக்குமாறும், மேலும் ஒவ்வொருவரும் பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து என்ன எதிர்பார்க்கப் படுகிறது என்பதைப் பற்றி சில குறிப்புகள் மற்றும் துணை கூறுகளை அவரது புத்தகத்தில் எழுதுமாறும் அவர்களிடம் கோரவும். மாணவர்களின் பதில்களைக் கண்டறிந்து தகுந்த வலுவூட்டலை வழங்கவும்.
இரண்டாம் கட்டம்:
தடைசெய்யப்பட்ட பானங்கள் தொடர்பாக பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொதுவான கூறுகளை காட்சித் திரை அல்லது சிந்தனை வரைபடத்தின் மூலம் மாணவர்களுக்குக் காட்டவும். அவர்கள் இதுபற்றி அறிந்த விடயத்தையும் கூறச் சொல்லவும். இதனுடன் தொடர்பான சூழ்நிலைகளை அவர்களில் யாராவது கடந்து வந்திருக்கிறாரா? என வினவவும். அவர்களது பதில்களைப் பெற்று, அவை பற்றி விவாதிக்கவும்.
மூன்றாம் கட்டம் :
நீங்கள் பின்வரும் விவகாரங்களை மாணவர்களிடம் முன்வைத்து, சிந்தனை வரைபடத்தில் காட்டப்படும் தடைசெய்யப்பட்ட பானங்களின் கீழ் அவற்றின் மீதான தீர்ப்பை விளக்குமாறு அவர்களிடம் கேட்கலாம். மேலும் சரியான தீர்ப்பைக் கூறிய பிறகு, ஒவ்வொரு விவகாரத்தையும் முன்வைத்து விளக்கத் தொடங்குங்கள்:
குறைவான மதுவில் தடையில்லை என்று நினைத்து ஒருவர் கொஞ்சம் மது அருந்தினார்.
ஒரு நபர் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, போதைப்பொருளை, அற்பமானது, அதில் எந்தத் தீங்கும் இல்லை என நினைத்து பயன்படுத்தினார்.
ஒரு நபர் தனது பணத்தை மதுபானம் மற்றும் போதைப்பொருள் வாங்குவதற்கு நிறைய செலவு செய்தார்.
இந்தச் சிக்கல்களை முன்வைக்கும்போது, இந்த பானங்களின் தடையை உறுதிப்படுத்தும் மார்க்க ஆதாரங்களை காட்சித் திரை மூலமாகவோ அல்லது கணினி மூலமாகவோ காட்டலாம். அதே சமயம் மாணவர்களுடன் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்து, அவை குறிப்பிடுவதைக் கண்டறியும்படி அவர்களை வழிநடத்தலாம்.
இறுதிச் சுருக்கம்:
ஆசிரியர் பலகையில் ஒரு வட்டத்தை வரைந்து அதன் உள்ளே (அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்) என்று எழுத வேண்டும். மேலும் அதிலிருந்து பல அம்புகளை வெளிப்புறம் நோக்கி வரைந்து, ஒவ்வோர் அம்புக்கருகிலும் பாடத்திலிருந்து தாம் கற்ற, வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மாணவர்கள் எழுத வேண்டும். திருப்திகரமாக, திறமையாக எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, மது மற்றும் போதைப் பொருட்களை தடை செய்வதற்கான ஆதாரங்களை முன்வைத்தல்.
நோக்க இலக்கம் : 1
முதல் செயல்பாட்டுடன் கூடிய பலகையை மாணவர்களுக்குக் காட்டி, தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு செயல்பாட்டின் ஹதீஸை வாசித்துக்காட்ட ஒருவருக்குப் பின் ஒருவராக மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மதுபானம் மற்றும் போதைப்பொருட்களின் தடைசெய்யப்பட்டமைக்கான சரியான ஆதாரத்தைப் பெற ஒவ்வொரு மாணவரும் தங்கள் ஆராயும் திறன்களைப் பயன்படுத்தச் சொல்லவும். அவர் அவர்களின் பதில்களைப் பெற்று அவற்றைப் பற்றி கருத்துத் தெரிவித்து, சரியான பதிலை அவர்களுக்கு விளக்கவேண்டும். பின்னர், அதை கொப்பிகளில் எழுதிக் கொள்வதற்காக, கரும்பலகையில் எழுதவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, போதைப்பொருட்கள் பற்றிய மார்க்கத் தீர்ப்பையும், அவற்றின் தீங்குகளையும் தெளிவுபடுத்துதல்.
நோக்க இலக்கம் : 3
போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவுரைகளை எழுதுமாறு ஒவ்வொரு மாணவரையும் அறிவுறுத்துங்கள், அறிவுரையில் போதைப்பொருள் பற்றிய தீர்ப்பு மற்றும் அவை தனிநபருக்கும் சமூகத்திற்கும் விளைவிக்கும் தீங்கு என்பவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். எழுதும் போது, மொழி மற்றும் பாணி சரியாக இருக்கவேண்டும். பாடத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட ஆதாரங்களைப் பயன்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும்.
மாணவர்கள் தாம் எழுதியதை தங்கள் நண்பர்களுக்கு வாசித்துகாட்டவேண்டும். நீங்கள் அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான மற்றும் திருப்திகரமான அறிவுரைகளை அடையாளம் கண்டு, உரியவர்களைப் பாராட்டி, அவற்றை தமது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர ஊக்குவிக்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு குழுவையும் பின்வரும் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க ஒத்துழைக்கச் சொல்லவும்.
மாணவர்கள் அனைவரும் பதிலளிப்பதில் பங்கேற்பதை உறுதிசெய்வதற்காக, அவர்கள் அருகாமையில் சென்று, அவர்களின் செயற்திறனையும், பதில்களையும் கவனிக்கவும்.
மாணவர்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான பதில் குழுக்களை அடையாளம் காணவும்.
சரியான பதிலைக் காட்ட மாணவர்களுடன் அவ்விரு கேள்விகளைப் பற்றி வாய்மொழியாக விவாதிக்கவும்.
குழுக்களுக்கு தகுந்த கருத்துக்களை வழங்கவும். கலந்துரையாடலில் அவர்கள் கற்றுக்கொண்ட பதில்களுக்கு ஏற்ப அவர்களின் பதில்களை மாற்றியமைக்கும்படி அவர்களிடம் கோரவும்.
கே 1 : () () () ()
கே 2 : புத்தி - மது
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பின்வருவற்றினூடாக உணர்த்தலாம் :
மார்க்கம் அங்கீகரித்தவற்றையும், போதைப்பொருள் மற்றும் மதுப் பொருட்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பானங்கள் பற்றிய அதன் நிலைப்பாட்டையும் ஏற்று நடப்பதோடு, தம்மைச் சூழ உள்ளவர்கள் இந்த பானங்கள் தொடர்பான ஷரிஆ சட்டத்தை மீறும் போது அவர்களை சிறந்த முறையில் திருத்துதல்.
பாடத்தில் கற்றவற்றை தங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்கவும், சரியான மார்க்கஅறிவு மற்றும் தகவல்களைப் பரப்பவும் சமூக வலைதளங்களில் பதாகைகள் அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்தல் .
அழைப்புப் பணித்துறை
முதலாம் பாடம் : தஃவாவின் (அழைப்பணியின்) அவசியமும் அதன் சிறப்பும் :
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (அல்லாஹ்வின் பால் அழைத்தல் - நேர்வழி - அவரைப் பின்பற்றினார்).
கற்பித்தல் சாதனங்கள்:
(கரும்பலகை - காட்சித் திரை - கற்பித்தல் பலகைகள் - கற்பித்தல் படங்கள்)
கற்பித்தல் உத்திகள்:
(சிக்கல் தீர்க்கும் முறை - சொற்பொருள் வரைபடங்கள் - சுய கேள்வி - விவாத முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுப்பதன் அவசியத்தை மெச்சுதல்.
- அழைப்புப்பணி நபிமார்கள், நல்லடியார்களின் பணி என்பதை உணர்தல்.
- இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிப் பிடிக்க ஆர்வங்கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம்:
பின்வரும் சிக்கலை மாணவர்களுக்கு முன்வைப்பதன் மூலம் பாடத்தை ஆரம்பித்து, அதைப் பற்றிய அவர்களின் கருத்தையும் அதை எவ்வாறு தீர்ப்பது என்பதையும் விவாதிக்கவும்:
உனது அபிப்பிராயப் படி, இஸ்லாமிய ஷரீஆவை எத்திவைக்கும் பிரச்சாரகர்கள் இல்லாது விட்டால் என்ன நிகழும் என நினைக்கிறீர்?
பின் அவர்களைப் பாடத்தின் உள்ளடக்கத்திற்குக் கொண்டு சென்று, கரும்பலகையில் தலைப்பை எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
சொற்பொருள் வரைபடங்களின் முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களுக்கு பாடத்தின் கூறுகள் அடங்கிய பலகையைக் காட்டி, பின்னர் ஒவ்வொரு உறுப்பையும் பற்றி இரண்டு கேள்விகளைக் கேட்கும்படி அவர்களைப் பணிக்க வேண்டும். அதற்கான பதில்கள் ஊடாக, அவை தொடர்பான தகவல்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெளிவாக புரியவேண்டும்.
ஆசிரியர் மாணவர்களின் கேள்விகளைப் பெற்று கரும்பலகையில் ஒரு பகுதியில் எழுத வேண்டும்.
இரண்டாம் கட்டம்:
ஆசிரியர் முந்தைய படியில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளைப் பயன்படுத்துவதோடு, மேலும் சில கூடுதல் கேள்விகளையும் அவற்றுடன் இணைத்துக்கொள்ளலாம். இவற்றுக்கு பதிலளிப்பதன் மூலம் அழைப்புப்ணி பற்றிய பல தகவல்கள் அவர்களுக்குத் தெளிவாகும். அவற்றில் பின்வரும் கேள்விகள் இருக்கலாம். :
கே: அழைப்புப்பணியின் வரைவிலக்கணத்தை விளக்கவும்.
கே: அழைப்புப்பணியின் முக்கியத்துவம் என்ன?
மூன்றாம் கட்டம் :
அழைப்புப்பணியின் சிறப்புகளை ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடி, விளக்கவேண்டும். அதே நேரத்தில், காட்சித் திரை மூலம் அதை வலுப்படுத்தும் ஆதாரங்களைக் காண்பித்து, அவை எதனை உணர்த்துகின்றன என்பதையும் விளக்க வேண்டும்.
இறுதிச் சுருக்கம்:
ஆசிரியர் பலகையில் ஒரு வட்டத்தை வரைந்து அதன் உள்ளே (அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்) என்று எழுத வேண்டும். மேலும் அதிலிருந்து பல அம்புகளை வெளிப்புறம் நோக்கி வரைந்து, ஒவ்வோர் அம்புக்கருகிலும் பாடத்திலிருந்து தாம் கற்ற, வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மாணவர்கள் எழுத வேண்டும். திருப்திகரமாக, திறமையாக எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, அழைப்புப்பணியின் சிறப்புகளைக் கண்டறிதல்.
நோக்க இலக்கம் : 3
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் முதல் செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் கூறுகளைக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, அழைப்புப்பணியில் ஆர்வமூட்டுவதற்கான வழிமுறைகளை முன்மொழிதல்.
நோக்க இலக்கம் : 2
ஆசிரியர் ஒரு குழு விவாத அமர்வை நடத்த வேண்டும். அங்கு மாணவர்களை ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு வட்டத்தில் உட்காரச் செய்து, அழைப்புப் பணியில் கவனம் செலுத்த மக்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளுடன் தொடர்புடையதே அமர்வின் இலக்கு என்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விவாதத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சரியாகச் செய்பவர்களை பாராட்டவும்.
செயல்பாட்டு இலக்கம் : 3 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, அழைப்புப்பணியால் கிடைக்கும் பயன்களைத் தெளிவுபடுத்தல்.
நோக்க இலக்கம் : 5
செயல்பாட்டில் உள்ள காணொளியை காட்சித்திரை மூலம் ஆசிரியர் காண்பித்து, செயல்பாட்டிலுள்ள கேள்விக்கு பதிலளிக்குமாறு அனைத்து மாணவர்களையும் கோர வேண்டும். மாணவர்களின் பதில்களைப் பெற்று, அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
ஒன்றன் பின் ஒன்றாக இரு வினாக்களை கரும்பலகையில் எழுத வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அடுத்தடுத்து உள்ள இரண்டு மாணவர்களை கூட்டாகப் பங்கேற்கச் சொல்வது விரும்பத்தக்கது.
தமது விடைகளை ஏனைய மாணவர்களுக்குக் காண்பிக்க எழுமாறாக சில மாணவர்களைத் தேர்வு செய்யவும்.
தவறு செய்பவர்களிடம் பாடத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் படித்து, அதிலிருந்து சரியான பதிலைப் பிரித்தெடுக்க வேண்டுவது சிறந்தது.
கே 1 : (✓) - (×) - (✓) - (✓) - (×)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றைப் பின்வருமாறு கையாளலாம்:
மாணவர்கள் அழைப்புப்பணியின் அவசியம், சிறப்புகளைப் பற்றி தாம் கற்றவற்றைச் சுருக்கி, சமூக வளைத்தளங்கள் போன்றவற்றில் பகிர வேண்டும்.
இரண்டாம் பாடம் : நபியவர்களின் மக்கா கால தஃவாப் பணி குறித்த ஒரு சிறு குறிப்பு
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(நபித்துவத்தின் தடயங்கள் - ஹிரா குகை - துக்க ஆண்டு - அகபா ஒப்பந்தம்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டு கற்கை முறை - கருத்துதிர்ப்பு).
மதிப்புகள் மற்றும் போக்குகள்:
- அழைப்புப்பணியில் நபி (ஸல்) அவர்களினதும், ஸஹாபக்களினதும் உறுதி மற்றும் பொறுமையைப் புருந்துகொள்ளல்.
செயற்படல், மற்றும் பொறுப்பை சுமத்தல் என்பவற்றில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
அழைப்புப் பணியில் நபி (ஸல்) அவர்களது நடைமுறை, பண்பாடுகளைக் கடைபிடித்தல்.
பாடத்தின் அறிமுகம் :
இன்றைய பாடத்தை அவர்களின் முந்தைய அறிவோடு இணைத்து ஆரம்பிக்கலாம். அரேபியர்களை மாற்றியமைப்பதிலும், சிலை வணக்கத்தைக் கைவிடுவதிலும் நபி (ஸல்) அவர்களின் அழைப்பின் தாக்கம் குறித்து விவாதிக்கலாம். பின்னர் அவர்களைப் பாடத்தின் உள்ளடக்கத்திற்கு அழைத்துச் சென்று, தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதல் கட்டம் :
பாடப்புத்தகத்தை திறந்து பாடத்தை மௌனமாக வாசிக்குமாறு மாணவர்களிடம் வேண்டவும்.
பாடத்தில் உள்ள திட்டத்தைக் கூர்ந்து கவனிக்குமாறு வேண்டவும்.
திட்டவரைபை வர்ணித்து, அதன் உறுப்புக்களை குறிப்பு வடிவில் கூற முயற்சிக்க வேண்டும்.
இரண்டாம் கட்டம் :
கருத்துதிர்ப்பு முறை பயன்படுத்தப்பட்டு, மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் திட்டத்தின் ஒரு உறுப்பைத் தேர்ந்தெடுத்து, தெளிவுபடுத்த வேண்டும்.
கண்டறிந்ததை முன்வைக்கவும், அதைப் பற்றிய உரையாடலை நடத்தவும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்றாம் கட்டம் :
கூட்டு கற்றல் முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவிடமும் மக்காவில் அழைப்புப் பணியின் வளர்ச்சிப் படிநிலைகளைக் குறிப்பிடும்படி கேட்கவும்.
தமது குழு எழுதியதைக் குறிப்பிட ஒவ்வொரு குழுவும் அதன் உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நீர் கருத்து தெரிவித்து, மதிப்பீடு செய்யவும்.
நான்காம் கட்டம் :
பாடத்தின் சாரம்சத்தை தெளிவுபடுத்தவும்.
பாடத்திலிருந்து தாம் கற்றுக் கொண்ட படிப்பினைகளைக் கண்டறிய மாணவர்களை அறிவுறுத்தவும்.
இறுதிச் சுருக்கம்:
- கூறுகள் மற்றும் புள்ளிகளின் வடிவத்தில் பாடத்தைச் சுருக்குமாறு மாணவர்களைக் கேட்கவும். அவற்றைக் கரும்பலகையில் எழுத அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுக்கவும், அவை பின்வரும் வடிவத்தில் இருக்கலாம்:
ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த, மனிதர்களில் சிறந்தவரான முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் புனித மக்காவில் பிறந்தார்கள்.
நபியவர்கள் தனது சிறுபிராயத்தில் ஆடு மேய்ப்பில் ஈடுபட்டார்கள்.
தனது 12வது வயதில் பெரிய தந்தை அபூதாலிபுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்.
நபியவர்கள் தனது வாலிபப்பருவம் முதல் நற்குணமுடையவராகவும், விக்கிரக வணக்கத்தை ஏற்காதவராகவும் பிரபலமடைந்திருந்தார்கள்.
நாற்பது வயதை அண்மித்த போது ஹிராக் குகையில் இறைத் தியானம் செய்வதற்காக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.
மூன்று வருடங்கள் இரகசியமாக அழைப்புப்பணி தொடர்ந்தது.
அழைப்புப் பணியின் வட்டம் விரிவடைந்து, நபியவர்களின் அனைத்து பனூ ஹாஷிம் உறவுகளையும் உள்ளடக்கியது.
அழைப்புப்பணிக்கு- குறிப்பாக நபித்தோழர்களில் ஒரு சாரார் இஸ்லாத்தை ஏற்ற செய்தியை குரைஷியர் அறிந்தவுடன்- முதற்கட்ட எதிர்ப்பு வெளியாகியது.
நபியவர்கள் அர்கம் பின் அபில் அர்கமின் வீட்டில், குரைஷியர் பார்வையை விட்டும் தூரத்தில் தனது தோழர்களை சந்திக்கலானார்கள்.
குரைஷியர் தனது தோழர்களைக் கடுமையாக வேதனை செய்வதைக் கண்ட நபியவர்கள் அபீஸீனியாவிற்கு இடம்பெயர்ந்து செல்ல அனுமதித்தார்கள்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
ஒப்படை இலக்கம் 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, அழைப்புப்பணியின் கட்டங்களை அறிதல்.
நோக்க இலக்கம் : 3
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் முதல் செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் இரு கூறுகளையும் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய பண்புகளை அறிதல்.
நோக்க இலக்கம் : 6
இரண்டாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, தனியான அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் துல்லியமான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அத்தோடு அவற்றை எழுதியவரைப் பாராட்டவேண்டும்.
அவர்களை மேற்பார்வை செய்து, சரியான பதில்களை அறியப்படுத்துவதோடு, மதிப்பீடு செய்து, செயல்திறனை வலுப்படுத்தவும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் கேள்விகளுக்கு விடையளிப்பதில் பங்கேற்கச் சொல்லவும்.
மாணவர்கள் பதிலளிப்பதில் ஒத்துழைக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள் அருகாமையில் செல்லவும்.
ஒவ்வொரு குழுவும் தங்கள் பதிலை முன்வைப்பதற்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்து, அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கே 1 : (×) - (✓) - (×) - (✓) - (✓)
கே 2 : மக்கா மக்களின் பிடிவாத குணம் - இரு அகபா உடன்படிக்கைகள் - பிலால் பின் ரபாஹ் (ரலி)
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, அழைப்பின் அறிமுகம் மற்றும் ஆரம்பம் பற்றிய பல்வேறு அறிவு ஆதாரங்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாணவரையும் பணிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை அடுத்த அவர்கள் சந்திப்பில் உம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மிகச் சிறந்த ஆக்கத்தைத் தேர்வு செய்து ஏனைய மாணவர்களுக்கு அதனைக் காண்பிக்க வேண்டும்.
நபிகளாரின் மக்கா வாழ்க்கையிலிருந்து பண்படுத்தல் மற்றும் மார்க்க பயன்பாடுகள், வழிகாட்டல்களைக் கண்டறிய மாணவர்களை வழிநடத்துதல்.
மூன்றாம் பாடம் : நபி (ஸல்) அவர்களின் மதீனாப் பிரச்சாரம் குறித்த சுருக்கவுரை.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்:
(அவ்ஸ் - கஸ்ரஜ் - போர்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டுகற்கை முறை - "எனக்குத் தெரியும் - நான் அறிய விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன்" ).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
நபி (ஸல்) அவர்களினதும் அவர்களின் தோழர்களினதும் அறப்போரின் பெறுமதியை உணர்த்துதல்.
இஸ்லாத்தில் பள்ளிவாயிலின் மகத்துவம் மற்றும் அதன் அவசியத்தை உணர்த்துதல்.
அழைப்புப்பணியிலும், தேச உருவாக்கத்திலும் அன்ஸாரித் தோழர்களின் பங்களிப்பை மகத்துவப்படுத்தல்.
உண்மையான ஈமான், மனஉறுதி என்பவற்றில் அக்கறை கொள்ளல்.
பாடத்தின் அறிமுகம் :
முந்தைய பாடத்துடன் இப்பாடத்தைத் தொடர்புபடுத்தி ஆரம்பிக்கலாம். நபி (ஸல்) அவர்களின் மதீனாவுக்கான ஹிஜ்ரத் பயணம் மற்றும் அதன் காரணிகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது பதில்களைப் பெற்று விவாதிக்கலாம். பின்னர் பாடத்தின் தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
பாடப்புத்தகத்தை திறந்து பாடத்தை மௌனமாக வாசிக்குமாறு மாணவர்களிடம் வேண்டவும்.
பின்னர் மூடலான, கடினமான கலைச்சொற்களின் கருத்தைத் தெளிவுபடுத்தவும்.
அவற்றின் கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்காக, அச்சொற்களை வைத்து சுயமாக வசனம் அமைக்கக் கோரவும்.
இரண்டாம் கட்டம் :
கூட்டு கற்கை முறையைப் பயன்படுத்தி மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்கவும்.
ஒவ்வொரு குழுவும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த பிறகு மேற்கொண்ட செயல்களில் ஒவ்வொன்றைக் கூறும்படி பணிக்கவும்.
தாம் கண்டறிந்தவற்றைக் கரும்பலகையில் எழுதுவதற்காக ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தெரிவு செய்யவும்.
அவர்களை மதிப்பீடு செய்து சரியான பதிலை அறியப்படுத்தவும்.
மூன்றாம் கட்டம் :
"எனக்குத் தெரியும் - நான் அறிய விரும்புகிறேன் - நான் கற்றுக்கொண்டேன்" முறையைப் பயன்படுத்தி, பயிற்சிக் கொப்பியை மூன்றாகப் பிரித்துக் கொள்ளுமாறு மாணவர்களைக் கோரவும்.
முதல் பகுதியில் மஸ்ஜிதுந் நபவி நிர்மாணம் மற்றும் இணைவைப்பாளர்களுடனான போர்கள் பற்றி தாம் அறிந்தவற்றை எழுத வேண்டும்.
இரண்டாவது பகுதியில் மக்கா வெற்றிக்குப் பின்னர் நபியவர்கள் மேற்கொண்ட பிரதான பணிகளில் தாம் அறிய விரும்புவதை எழுத வேண்டும்.
மூன்றாவது பகுதியை : "பாடத்தின் மூலம் கற்றுக்கொண்டவை" எனத் தலைப்பிட்டு வைக்கவும்.
தாம் எழுதியவற்றைக் கூற சில மாணவர்களைத் தெரிவு செய்யவும்.
அவர்கள் கூறுவதைக் கரும்பலகையில் எழுதவும்.
இறுதிச் சுருக்கம்:
- கூறுகள் மற்றும் புள்ளிகளின் வடிவத்தில் பாடத்தை சுருக்கமாகக் கூறுமாறு மாணவர்களிடம் கேட்கவும். அவை உங்களால் திருத்தப்பட வேண்டும்.
- அவர்கள் தங்கள் கொப்பிகளில் பதிவதற்காக, கரும்பலகையில் பாடத்தின் கூறுகளின் சுருக்கத்தை எழுதவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, மக்கா மற்றும் மதீனாவில் நபியவர்கள் அழைப்புப்பணி மேற்கொண்ட முறையைக் கண்டறிந்து, மஸ்ஜிதுன்நபவியின் பங்களிப்பையும், நமது சமகால நடைமுறையில் மஸ்ஜிதிகளின் பங்களிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தல்.
நோக்க இலக்கம் : 1, 3
சக நண்பர்கள் முன்னிலையில் பின்வரும் செயல்பாட்டிற்குப் பதிலளிப்பதில் ஒத்துழைக்க உங்கள் மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும்.
உங்கள் மேற்பார்வை மற்றும் கவணிப்பின் கீழ் தமது பதிலை கரும்பலகையில் எழுத ஒவ்வொரு குழுவிலிருந்தும் அதன் மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, மாணவர்களுக்கு தங்களுக்குள் உள்ளதை வெளிப்படுத்தவும், கட்டுரைகளை சரியாக எழுதவும் பயிற்சி அளித்தல்.
நோக்க இலக்கம் : 5
வீட்டில் மேலதிக தாள் ஒன்றில் பின்வரும் செயல்பாட்டுக்கான விடையை எழுத மாணவர்களைப் பணிக்கவும்.
பதில்களை உரையாடல் மற்றும் விவாதம் வடிவில் திருத்தம் செய்ய அடுத்த கூட்டத்தில் உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சரியாக எழுதியவரின் பதிலைக் காலைக்கூட்டத்தில் காண்பித்து பாராட்டவும்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒவ்வொரு குழுவையும் பங்கேற்கச் சொல்லவும்.
உங்கள் மாணவர்கள் பதிலளிப்பதில் ஒத்துழைக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்களது அருகில் செல்லவும்.
ஒவ்வொரு குழுவும் தங்கள் பதிலை முன்வைப்பதற்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்து, அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கே 1 : ()(×)() (×)()
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
இப்பாடத்தில் தாம் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவற்றை பின்வருமாறு கையாளலாம்:
மஸ்ஜிதுன்நபவியின் சிறப்புகளை மார்க்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தி ஒரு கட்டுரை வரையுமாறும், அக்கட்டுரையின் இறுதியில், அல்லாஹ்வின் மாளிகையை கண்ணியப்படுத்த மக்களைத் தூண்டும் ஓர் உபதேசத்தை இணைக்குமாறும் ஒவ்வொரு மாணவரிடமும் கோருவது நல்லது.
நபிகளாரின் மதீனா வாழ்க்கையிலிருந்து பண்படுத்தல் மற்றும் மார்க்க பயன்பாடுகள், வழிகாட்டல்களைக் கண்டறிய மாணவர்களுக்கு அறிவுறுத்துதல்.
நான்காம் பாடம் : நன்மையை ஏவித் தீமையை தடுத்தல் பணியின் அந்தஸ்து
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (நன்மை - தீமை - சாபம்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டு கற்கை முறை - கல்வி புதிர்கள் - கருத்துதிர்ப்பு).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதை விட்டுவிடுவதால் ஏற்படும் ஆபத்தை உணர்தல்.
- தனிநபர் மற்றும் சமூகங்கள் சீராக இருப்பதன் அவசியத்தை உணர்த்துதல், ஏனெனில் அதுவும் இஸ்லாத்தின் ஒரு தூதாகும்.
- நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதில் அக்கறை கொள்தல்.
- ஊழல், தீங்கு அதிகரித்தல் என்பவற்றைத் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம் :
நீங்கள் ஒரு புதிரைச் சொல்லி பாடத்தைத் தொடங்கலாம்: சில மனிதர்கள் உள்ளனர், அவர்களுக்கு தாம் செய்யாதவற்றுக்கும் அல்லாஹ் நன்மைகளை எழுதுகின்றான். இன்னும் சில மனிதர்கள் உள்ளனர், அவர்களுக்கு தாம் செய்யாதவற்றுக்கும் அல்லாஹ் தீமைகளை எழுதுகின்றான், அவர்கள் யார் ? பின்னர் மாணவர்களுடன் சரியான விடையைக் கண்டறிந்து, பின் பாடத்தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
வீட்டில் மீட்டல் செய்ததை நினைவுகூரும் விதத்தில், பாடத்தை வாசிப்பதில் பங்கெடுக்க அனைத்துக் குழுக்களையும் கோரவும்.
பாடத்தின் பிரதான சிந்தனைகளைக் கண்டறிந்து அவற்றைக் கரும்பலகையில் எழுத வேண்டும்.
இரண்டாம் கட்டம் :
ஒவ்வொரு குழுவும் கண்டடைந்த முக்கிய யோசனைகளின் பட்டியல் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடவும்.
ஒவ்வொரு யோசனையையும் விவாதித்த பிறகு; அதற்குரிய பந்தியை வாசிக்குமாறு ஒருவரைக் கேட்பது நல்லது.
மூன்றாம் கட்டம் :
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதன் சிறப்புகளைக் கண்டறியும் முகமாக கருத்துத்துதிர்ப்பு முறையை மேற்கொள்ள மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரிக்கவும்.
இது வரை கண்டறிந்தவற்றை வாய்மூலம் விவாதித்து, பின்னர் அவற்றை மீட்டிக்கொள்ள இலகுவாம, கொப்பிகளில் எழுதவும்.
நான்காம் கட்டம் :
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதை விடுவதால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறியுமாறு ஒவ்வொரு குழுவிடமும் கோரவும்.
சில குழுக்களிடம் தமது பதிலைக் காண்பிக்கச் சொல்லி, பிறகு பாடத்தின் மன வரைபடத்தை வரையவும்.
இறுதிச் சுருக்கம்:
ஒவ்வொரு மாணவரும் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை மேலதிக ஓர் அட்டையில் எழுதி, மதிப்பீட்டிற்காக உங்களிடம் வழங்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் அடைந்த பயன்களை அவர்களுடன் விவாதித்து, பிழைகளைத் திருத்திக் கொடுக்கவும்
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதன் நல்ல விளைவுகளை விளக்குதல். நோக்க இலக்கம் : 2
ஆசிரியர் ஒவ்வொரு குழு மாணவர்களையும் முதல் செயல்பாட்டைச் செய்ய தமக்கிடையில் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி, பின்னர் செயல்பாட்டின் கூறுகளைக் குறிப்பிட்டு, அதற்கு ஒவ்வொரு குழுவின் பதிலையும் கண்டறிந்து, சரியான பதிலைப் பெற அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். பின்னர் சிறந்தமுறையில் பதிலளித்த குழுவைக் கண்டறிந்து அதன் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : கூட்டு முறை, நன்மையை ஏவுவதில் நபித்தோழர்களைப் பின்பற்றுதல்.
நோக்க இலக்கம் : 3
செயல்பாட்டில் வந்துள்ள இரு வாசகங்களையும் வாசிக்க இரு மாணவர்களைத் தெரிவு செய்யவும். இருவரில் யாராவது ஏதாவது புதிய சொற்களைக் கண்டால், அவர் அதைக் கூற, நீர் விளக்கி தெளிவுபடுத்த வேண்டும். பின்னர் செயல்பாட்டுக்கு பதிலளிப்பதில் ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும். தங்கள் பதில்களை முன்வைப்பதற்கு இரண்டு குழுக்களைத் தேர்ந்தெடுக்கவும், மேலும் மிகவும் சரியான மற்றும் துல்லியமான பதில்களைத் தீர்மானிக்க அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
ஒருவர் தான் மட்டும் நேர்வழியை அடைந்து, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் நிலையாக இருந்துவிட்டால், மற்றவர்கள் ஒழுக்கக்கேடுகளில் திழைத்திருக்க அவற்றை கண்டுகொள்ளாது, அவர்களை அத்தீமையிலிருந்து தடுக்காது இருப்தால் அவருக்கு எந்த பாதிப்புமில்லை.
அவர்களின் புரிதலில் காணப்பட்ட தவறை தெளிவுபடுத்தி, தீமையை தடுப்பதை விட்டுவிடுவதால் ஏற்படும் தண்டணைக்கான ஆதாரத்தையும் நினைவுபடுத்தினார்.
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
பின்வரும் கேள்விகளை ஒவ்வொன்றாக கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தில் அதிகம் பங்கேற்காத மாணவர்களில் ஒரு தொகையினரைத் தேர்வு செய்யவும்.
அக்கேள்விகளுக்கு கரும்பலகையில் பதிலளிக்குமாறு அவர்களைக் கோரவும்.
அவர்களது பதில்களை மதிப்பீடு செய்து, சக நண்பர்களையும் மதிப்பீட்டில் பங்கெடுக்க வைக்கவும்.
கே 1 : (கடமை) - (உங்களுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் நேர்வழியில் சென்றால் வழிதவறிச் செல்பவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள்) - (ஒரு அநியாய ஆட்சியாளர்).
பயிற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள் :
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதன் சிறப்புகளை ஆதாரத்துடன் எழுதி சமூக வலைத்தளங்களில் பகிருமாறு ஒவ்வொரு மாணவரிடமும் கோருவது சிறந்ததாகும்.
ஐந்தாம் பாடம் : நன்மை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான சட்ட ஒழுங்குகள்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய வார்த்தைகள்: (நன்மை - தீமை - நலவுகள் மற்றும் கெடுதிகள்).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டு கற்கை முறை - உரையாடல் மற்றும் விவாதம் - கதை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் அவசியத்தை உணர்தல்.
- மார்க்க விதிமுறைகளைப் பேணி நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் அக்கறை கொள்ளுதல்.
- நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
தீமை மற்றும் அதன் காரணிகளுக்கு இட்டுச் செல்லும் அனைத்தையும் தவிர்ந்து கொள்ளுதல்.
பாடத்தின் அறிமுகம் :
புதிய பாடத்தை முந்தைய பாடத்துடன் இணைத்து, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் மிக முக்கியமான சிறப்புகளையும் விளைவுகளையும் மதிப்பாய்வு செய்து பாடத்தை ஆரம்பிக்கவும். பின்னர், ஷரிஆ சட்டத்தின் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலமே தவிர நன்மையை ஏவுவதன் பலன் அடையமுடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்தி, பின்னர் பாடத்தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் அதில் ஒரு பகுதியை வாசிக்குமாறு கூறுவது சிறந்ததாகும்.
நன்மையை ஏவுபவர்கள் மற்றும் தீமையைத் தடுப்பவர்களுக்கான விதிமுறைகளைக் கண்டறிவதில் மாணவர்களை பங்கேற்கச் சொல்லவும்.
இந்த விதிமுறைகளை ஒரு பட்டியலில் எழுதி, மற்ற மாணவர்களுக்குக் காட்டவும்.
நீங்கள் பதிலை மதிப்பீடு செய்து, சரியான பதில்களை கரும்பலகையில் எழுதுங்கள்.
குழுக்களின் சுய கற்றலை ஊக்குவிக்கவும்.
இரண்டாம் கட்டம் :
பாடம் தொடர்பாக உங்கள் மாணவர்களுடன் நீங்கள் விவாதிக்கவும். மேலும், ஒவ்வொரு குழுவும் வாசித்த பகுதியிலிருந்து பல கேள்விகளைப் பிரித்தெடுக்கும் விதத்தில் வகுப்பில் எஞ்சியவர்களையும் சேர்த்து விவாதிக்கலாம்.
வகுப்பில் எஞ்சியவர்களுக்கு அக்குழு தம் கேள்விகளை முன்வைக்கவேண்டும். பின்னர் நீங்கள் விவாதங்களை செவிமடுத்து, தெளிவுபடுத்துவதற்காக இடையில் குறுக்கீடு செய்யலாம்.
தீமையைத் தடுப்பதின் படிமுறைகளுக்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை கரும்பலகையில் எழுதலாம்.
கண்டறியும் முறையை அவர்களுக்குக் கற்பிக்கவும்.
இறுதிச் சுருக்கம்:
விவாத முறையைப் பயன்படுத்தி நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் வரையறைகளை மாணவர்களுடன் விவாதிக்கவும்.
பாடத்தில் தாம் கற்றதை கொப்பியின் இறுதிப் பகுதியில் பதியுமாறு அனைத்து மாணவர்களையும் பணிக்கவும்.
தாம் கண்டறிந்த இறுதிச் சுருக்கங்களில் ஒன்றை கரும்பலகையில் எழுத மாணவர்களில் ஒருவரைத் தேர்வு செய்யவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, மாணவர்களை சரியான பகுப்பாய்வு முறைக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 2
ஆசிரியர் திரையில் முதல் செயல்பாட்டில் உள்ள அட்டவணையைக் காட்டி, அதில் உள்ளதை வாசிக்க சில மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதுபற்றி அவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
இரண்டாம் செயல்பாட்டை தனித்தனியாக செய்யுமாறு மாணவர்களைப் பணித்து, மேலதிக அட்டை ஒன்றில் அவர்களின் விடைகளை எழுதுமாறு கூற வேண்டும். பின்னர் அனைத்து அட்டைகளையும் சேகரித்து, அவற்றில் மிகவும் சரியான விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றை எழுதியவரின் பெயரையும் அறிவிக்க வேண்டும்.
ஒரு நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ தீய செயல் செய்வதைப் பார்த்தார்.√
அஹ்மதிற்கு 12 வயதையுடைய ஒரு மகன் இருக்கிறான்.அவன் தொழுகையை விடுவதில் பிடிவாதமாக இருக்கிறான். √
ஒரு பள்ளி இமாம், கிப்லாத்திசையிலிருந்து விலகி தொழும் ஒருவரை காண்கிறார் .√
பாடசாலையில் சில மாணவர்கள் ஸிகரட் புகைப்பதை ஓர் ஆசிரியர் காண்கிறார். √√
பொலிஸ்,(காவல் துறையினர்) சில குற்றவாளிகள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவதைக் கண்டனர். √
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, கலந்துரையாடி இறுதிச் சுருக்கத்தை எட்டுவதற்கு மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 1, 5
செயல்பாட்டை நன்கு வாசிக்கவும், சிந்திக்கவும், அதில்ல வினவப்பட்டுள்ளதை துல்லியமாக வரையறுக்கவும் ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்தவும். மாணவர்கள் கண்டறிந்ததை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும். பின்னர் செயல்பாட்டில் உள்ள விடயங்களை காரணத்துடன் அடையாளப்படுத்துவதற்காக குடும்பத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள, செயற்பாட்டின் மிகுதியை வீட்டில் சென்று செய்யுமாறு அறிவுறுத்தவும்.
ஒரு தீமையை காணும் ஒருவர் அவரின் எண்ணத்தில், தனது பிரச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படவிமாட்டாது எனக் கருதினாலும் அத்தீமையை தடுப்பது கடமையாகும்
மதிப்பீடு :
பாடத்தின் இலக்குகளை அடைய, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒவ்வொரு மாணவர் குழுவையும் ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவரும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க, அவர்கள் ஒருவரையொருவர் மற்றவரைப் கவனிக்கவேண்டும்.
அவர்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும், அவர்களின் பதில்களை அவர்களுடன் விவாதிக்கவும் நீங்கள் அவர்கள் அருகில் செல்ல வேண்டும்.
கே 1 : √ - X- √ - √ - √
பயற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
தீமையைத் தடுத்தலின் படிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதன் அவசியத்தையும், தீமையை தடுப்பதற்கான மார்க்க வரையறைகளை கடைப்பிடிக்காமை தொடர்பாக, அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் அவர்கள் அடையாளம் காணும் எந்தத் தவறையும் திருத்த முயற்சி செய்வதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அச்சட்டங்களையும் நிபந்தனைகளையும் முறையாக அமுல்படுத்துவதற்காக, அவர்களுக்கு அவற்றை அறியப்படுத்துவதினூடாகவே இது சாத்தியமாக முடியும்.
ஆறாம் பாடம் : நன்மை ஏவித் தீமையைத் தடுப்போர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.
கால அளவு : ஒரு பாடவேளை
புதிய சொற்கள்: (உளத்தூய்மை - மென்மை - படிப்படியாக).
கற்பித்தல் சாதனங்கள் :
(கரும்பலகை - கற்பித்தல் அட்டைகள் - கற்பித்தல் பலகைகள்).
கற்பித்தல் உத்திகள் :
(கூட்டு கற்கை முறை - உரையாடல் மற்றும் விவாதம் - கதை முறை).
மதிப்புகளும், வழிகாட்டல்களும் :
- நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதில் மென்மையின் அவசியத்தை உணர்த்துதல்.
- நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களில் அக்கறை கொள்தல்.
- பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக உபதேசம் செய்வதில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
வெறுப்பு, துண்டிப்புக்கு வழிவகுக்கும் அனைத்தையும் தவிர்ந்து கொள்தல்.
பாடத்தின் அறிமுகம் :
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் சட்ட ஒழுங்குகள் மற்றும் வரையறைகளை மாணவர்களுடன் கலந்துரையாடுவதன் ஊடாக, புதிய பாடத்தை முந்தைய பாடத்துடன் இணைக்கவும். பின்னர் மார்க்கம் விதித்துள்ள ஒழுங்குகளைக் கடைபிடிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு அறியப்படுத்தி, பாடத்தலைப்பை கரும்பலகையில் எழுதவும்.
பாடத்தை விளக்குதல் :
முதலாம் கட்டம் :
பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் அதில் ஒரு பகுதியை வாசிப்பப் பணிப்பது சிறந்ததாகும்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கண்டறிவதில் மாணவர்களை பங்கேற்கச் சொல்லவும்.
இந்த ஒழுங்குகளை ஒரு பட்டியலில் எழுதி, மற்ற மாணவர்களுக்குக் காட்டவும்.
நீங்கள் பதிலை மதிப்பீடு செய்து, சரியான பதில்களை கரும்பலகையில் எழுதவும்.
இரண்டாம் கட்டம் :
பாடம் தொடர்பாக உங்கள் மாணவர்களுடன் நீங்கள் விவாதிக்கவும். மேலும், ஒவ்வொரு குழுவும் வாசித்த பகுதியிலிருந்து பல கேள்விகளைப் பிரித்தெடுக்கும் விதத்தில் வகுப்பில் எஞ்சியவர்களையும் சேர்த்து விவாதிக்கலாம்.
வகுப்பில் எஞ்சியவர்களுக்கு அக்குழு தம் கேள்விகளை முன்வைக்கவேண்டும். பின்னர் நீங்கள் விவாதங்களை செவிமடுத்து, தெளிவுபடுத்துவதற்காக இடையில் குறுக்கீடு செய்யலாம்.
பாடத்திலுள்ள இந்த ஒழுக்கங்களுக்கு ஆதாரமாக கரும்பலகையில் சில ஹதீஸ்களை எழுதவும்.
கண்டறியும் முறையை அவர்களுக்குக் கற்பிக்கவும்.
இறுதிச் சுருக்கம்:
விவாத முறையைப் பயன்படுத்தி, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் ஒழுக்கங்களை மாணவர்களுடன் விவாதிக்கவும்.
பாடத்தில் தாம் கற்றதை கொப்பியின் இறுதிப் பகுதியில் பதியுமாறு அனைத்து மாணவர்களையும் பணிக்கவும்.
தாம் கண்டறிந்த இறுதிச் சுருக்கங்களில் ஒன்றை கரும்பலகையில் எழுத மாணவர்களில் ஒருவரைத் தேர்வு செய்யவும்.
செயற்பாடுகள்
மாணவர்கள் இப்பாடத்தில் தாம் கற்றவற்றை அமுல்படுத்துவதற்கு பின்வரும் முறைகளில் வழிகாட்டுவது சிறந்ததாகும்:
செயல்பாட்டு இலக்கம் : 1 அதன் வகையும், நோக்கமும் : கூட்டுமுறை, நன்மையை ஏவுபவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைத் தெளிவுபடுத்தல்.
நோக்க இலக்கம் : 1
ஆசிரியர் ஒரு குழு கலந்துரையாடல் அமர்வை நடத்த வேண்டும். அங்கு மாணவர்களை ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் விதத்தில் வட்டமாக உட்காரச் சொல்லி, செயல்பாட்டில் உள்ள ஆதாரங்களிலிருந்து நன்மையை ஏவுபவருடை ஒழுக்கங்களை வரையறுப்பது என்ற அமர்வின் இலக்கை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
செயல்பாட்டு இலக்கம் : 2 அதன் வகையும், நோக்கமும் : தனிநபர் முறை, பிறருக்கு சரியான உபதேசத்தை வழங்கும் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்.
நோக்க இலக்கம் : 3, 4
மனைவியைத் தண்டிக்கும் படிமுறைகளை விளக்கும் அறிவுரையொன்றை எழுதுமாறு ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுறுத்தவும். மேலும் அதில் அவர்களது மொழி மற்றும் முன்வைக்கும் பாணி சரியாக இருக்கவும், பாடத்திலிருந்து கற்றுக்கொண்ட ஆதாரங்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும்.
மாணவர்கள் தாம் எழுதியதை தங்கள் நண்பர்களுக்கு வாசித்துக் காட்டி, அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான மற்றும் திருப்திகரமான அறிவுரைகளை அடையாளம் காணக் கோரவும். அவற்றை எழுதியவர்களை தமது சமூக ஊடகப் பக்கங்களில் அவற்றை வெளியிட ஊக்குவிக்கவும்.
மதிப்பீடு :
மதிப்பீட்டு வினாக்களுக்கு விடையளிக்க பின்வரும் முறைகளைப் பின்பற்ற வழிகாட்டவும் :
மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு குழுவையும் பின்வரும் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க ஒத்துழைக்கச் சொல்லவும்.
மாணவர்கள் அருகே சென்று, அவர்களது பதில்களையும், செயல்திறனையும் கண்காணிக்கவும். அவர்கள் அனைவரும் பதிலில் பங்கேற்பதை உறுதிசெய்யவும்.
மாணவர்களின் பதில்களைச் சேகரித்து அவற்றை மதிப்பீடு செய்து, மிகவும் துல்லியமான பதில் குழுக்களை அடையாளம் காணவும்.
சரியான பதிலை அறியப்படுத்துவதற்காகவேண்டி, மாணவர்களுடன் அவ்விரு கேள்விகளைப் பற்றி வாய்மொழியாக விவாதிக்கவும்.
குழுக்களுக்கு தகுந்த கருத்துக்களை வழங்கவும். கலந்துரையாடலில் அவர்கள் கற்றுக்கொண்ட பதில்களுக்கு ஏற்ப அவர்களின் பதில்களை மாற்றியமைக்கும்படி அவர்களிடம் கோரவும்.
கே 1 : X - X - √.
கே 2 : பொறுமை - கடமையானது - ஒரு தவறை அறியப்படுத்தல்
பயற்றுவிப்பு மற்றும் உணர்வியல் அவதானங்கள்:
நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் தொடர்பான ஒழுங்குகளில் இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதன் அவசியத்தையும், அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் அவர்கள் அடையாளம் காணும் எந்தத் தவறையும் திருத்த முயற்சி செய்வதன் அவசியம் என்பவற்றையும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அச்சட்டங்களையும் நிபந்தனைகளையும் முறையாக அமுல்படுத்துவதற்காக அவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவேண்டும்.
அறிமுகம்
மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவையும், பேச்சாற்றலையும் வழங்கி கண்ணியப்படுத்தியதோடு, அல்குர்ஆன் ஹதீஸ் மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக .
ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள் மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இறைவாழ்த்துக்குப் பின் : ஒரு நற்செயலை செய்வதற்கு முன் அது பற்றி கற்றுக்கொள்வது ஒரு அடியானின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். "(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்". முஹம்மத் : 19
மார்க்க அறிவு என்பது இச்சமூகத்தின் மிகப்பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும் , இஸ்லாமிய ஆளுமையை அடையாளப்படுத்தும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
ஆகையால், இஸ்லாமிய அறிவின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையமானது மக்களை விவேகம் மற்றும் அழகிய உபதேசத்தின் மூலம் இஸ்லாத்தின் பால் அழைத்தல், மேலும் வெளிநாட்டவர்களுக்கு அறிவூட்டல், மற்றும் ஷரீஆ ரீதியாக அவர்களைத் தகுதிப்படுத்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுடன் இயங்கிவருகிறது. அந்த வகையில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களில் ஓர் அங்கமாக (எனது மார்க்கத்தில் எனக்கு விளக்கத்தைத் தருவாயாக) எனும் தொனிப்பொருளில் 07 மொழிகளில் கருத்தரங்குகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், மார்க்கக் கல்விக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்துவதில் புலமை கொண்ட, 'பஸாஇர் - கல்வி ஆலோசனை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, சங்கத்தினால் வழங்கப்படும் தரவுகள் அடங்கலாக, இப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அது கைச்சாத்திட்டுள்ளது. இதனடிப்படையில், ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்றவகையில் மாணவர் நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன:
முதலாம் தரம் 40 பாடங்களை உள்ளடக்கியுள்ளது
இரண்டாம் தரம் 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
மூன்றாம் தரம் - இது 30 பாடங்களைக் உள்ளடக்கியுள்ளது.
பாடங்களை வினைத்திறனுடன் கற்பிப்பதற்கு உதவும் வகையில், மாணவருக்கான ஒவ்வொரு பாடநூலுடனும் ஆசிரியருக்கான வழிகாட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட ஆவணத்தை மேம்படுத்தல், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளைத் தயாரித்தல் ஆகியன, மார்க்கக் கல்விப் பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவால் தீர்க்கமான தயாரிப்பு மற்றும் நுணுக்கமான மதிப்பாய்வு போன்ற செயல்முறைகளினூடாக கடந்து வந்துள்ளன.
இறுதியாக, இச்செயற்திட்டத்தின் மூலம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நல்ல பல நன்மைகள் கிட்ட வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, இப்புத்தகத்தை அழகிய முறையில் வெளிவர பங்களிப்புச்செய்த அனைவருக்கும் நற்பாக்கியமும், சுவனமும் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் க்கொள்கிறோம். மேலும் இப்புத்தகம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எமது சமூகவலைத்தளத்தின் மூலமும், தொலைபேசி இலக்கங்கள் மூலமும் நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக!
அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்
முன்னுரை
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் என்றென்றும் உண்டாகட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின்,
மதிப்பிற்குரிய ஆசிரியரே! உமது கரங்களில் இருப்பது பாடத்திட்டத்தின் இரண்டாவது நூலாகும். இந்தப் பாடவிதானங்கள்
முஸ்லிம் தமது மார்க்கத்தில் தேவைகாணும் விடயங்களைப் போதிப்பதையும், பலமான இஸ்லாமிய அறிவை நிறுவுவதையும் இஸ்லாமிய அறிவுக்கட்டமைப்பின் பிரகாரம் மாணவரின் ஆளுமையைக் கட்டியெழுப்புவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய கல்விசார் துறைகளை மையமாகக் கொண்டு இப்புத்தகம் பின்வருமாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- குர்ஆன் மற்றும் தர்ஸீர் பிரிவு : இது அல்குர்ஆன் ஓதும் ஒழுங்குகள், சில சிறிய அத்தியாயங்களுக்கான விளக்கங்கள், அவ்வசனங்களிலிருந்து பெறப்படும் முக்கிய கல்வி மற்றும் ஒழுக்கப் பயன்பாடுகளை உள்ளடக்கியிருக்கின்றது.
- ஈமான் மற்றும் உளத்தூய்மை பிரிவு : இது ஓரிறைக் கொள்கையின் சிறப்பு, வகைகள், வணக்கத்தின் நிபந்தனைகள், தூண்கள் என்பவற்றை உள்ளடக்கி இருப்பதுடன், ஈமானின் அடிப்படையையும் அதன் பலன்களையும் மாணவர் ஒன்றிணையப் பெற்றுக் கொள்வதற்காக ஈமான் அதிகரிப்பது குறைவது போன்றவற்றை விளக்குவதையும் உள்ளடக்கியுள்ளது.
- ஸுன்னா மற்றும் குணாதிசியங்கள் பிரிவு : இதில் நபியவர்கள் தனது உறவினர்கள், அயலவர்கள், சிறார்கள், முஸ்லிமல்லாதவர்கள் போன்றோருடன் நடந்த கொண்ட வழிமுறையை அறிவுடனும் தெளிவுடனும் பின்பற்றுவதற்காக விளக்குகின்றது. பின்னர் முஸ்லிம்களின் உரிமைகளில் குறிப்பாக உறவினர்கள், வயோதிபர்கள், சிறார்கள், அயலவர்கள், விருந்தாளிகள் போன்றோரின் உரிமைகளை உள்ளடக்கிய ஐந்து ஹதீஸ்களை மாணவர்கள் கற்பர். அத்துடன் அல்லாஹ்வுடைய கடமைகள், அடியார்களுடைய கடமைகள், தனக்குத் தானே செய்யவேண்டிய கடமைகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் நடுநிலை பேணுவதன் அவசியத்தை உணர்த்துதல்.
- மார்க்க சட்டங்கள் பிரிவு : தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு ஆகிய முக்கிய வணக்கங்களின் சுருக்கமான சட்டதிட்டங்களை உள்ளடக்கியுள்ளதுடன், அச்சட்டங்களுக்கான வாழ்க்கை நடைமுறைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது.
- நற்குணங்கள் பிரிவு : இது ஒரு முஸ்லிமின் ஆளுமை நிலைபெறும் இஸ்லாமிய அடிப்படை நற்குணங்களை உள்ளடக்கியுள்ளது, அவை :
அழகிய குணம், உண்மை, அமானிதம், பொறுமை, வெட்கம், நேர்மை.
- அழைப்புப் பணிப் பிரிவு : இது முஸ்லிம்களுக்கு நலவு நாடுதல், இஸ்லாத்தில் அதன் முக்கியத்துவம், உபதேசம் பலனளித்து, நன்மையை பரப்பி, தீமையைக் குறைப்பதில் இலக்கை அடைய அதனைச் செய்பவர், உபதேசிக்கப்படுபவர் ஆகியோரிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
அறிவு அடிப்படைகள் மற்றும் நவீன கல்வித் தரங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இந்தப் புத்தகங்களைத் தயாரிக்க நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். மேலும் அவற்றைத் தயாரிப்பதில் பின்வருவனவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டோம்:
- தேவையேற்படும் இடங்களில், பாடங்களில் கவனத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு பீடிகையுடன் -முற்குறிப்புடன்- பாடத்தை ஆரம்பித்தல்-
- பாடத்தை நினைவில் வைக்கும் வண்ணம் படங்கள், அட்டவணைகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளமை.
செயல் வழிக் கற்றல் உத்திகளுக்கு அமைவாக கற்பித்தலின் நோக்கங்களை எய்துகொள்ளும் நோக்கில் பாடரீதியிலான சில பயிற்சிகளை வழங்கல். போன்ற விடயங்களுடன்
இவற்றில் பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுத்துள்ளோம்:
பாடத்தின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் பாடத்திட்டத்தின் இயல்பு நிலையோடு தொடர்புபடுத்தி அதன் உள்ளடக்கம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
நனிநபர் ஆளுமைப் பண்புகள் உட்பட பல்வேறுபட்ட திறன்களை விருத்தி செய்தல்
தனிநபர் முறை மற்றும் குழு முறை என, அது செயல்படுத்தப்படும் விதத்தில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் அதைச் செயல்படுத்தும் இடத்தின் பன்முகத்தன்மை மற்றும் எழுதப்பட்ட, வாய்மொழி, இயக்கம் மற்றும் மன செயல்பாடு உட்பட அதன் வடிவங்களின் பன்முகத்தன்மை.
பாடம் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதையும், அதன் நோக்கம் அடையப்பட்டிருப்பதையும் பரீட்சிப்பதற்காக ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் மதிப்பீட்டுக் கேள்விகளை வழங்கல்.
இந்த புத்தகத்தை நாங்கள் வழங்கும் இச்சந்தர்ப்பத்தில், இலகு பாடப் பொருள், தெளிவான முன்வைப்பு முறை, வினைத் திறன் மிக்க செயற்பாடுகள், மற்றும் மதிப்பீட்டின் பரந்த தன்மை ஆகிய, நாம் எதிர்பார்க்கும் அடைவுகளை இது அடையும் என்று நம்புகிறோம்.
இந்த அறிவு மாணவர்களுக்குப் பயன் அளிக்கவும், எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவன் அனைத்தையும் செவியேற்பவன், அனைத்தையும் அறிந்தவன்.
நபி ( ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாவதாக.
அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் பகுதி
முதல் பாடம் : அல்குர்ஆன் ஓதலின் ஒழுங்குகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
அல்குர்ஆன் ஓதுவதற்குரிய நன்மைக்கான ஆதாரத்தைக் கூற வேண்டும்.
அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்குகளைக் கூற வேண்டும்.
அல்குர்ஆன் ஓதுவதன் சட்டதிட்டங்களைக் கற்க முன்வர வேண்டும்.
அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்குகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு:
குர்ஆனின் சில பிரதிகள் தூசியால் மூடப்பட்டிருப்பதைக் காணும் அளவு, பல முஸ்லிம்கள் புனித குர்ஆனைப் பேணி ஓதுவதைத் தவறிவிடுகிறார்கள். இந்த பாடத்தில் நீங்கள் கற்றுக்கொள்பவற்றின் அடிப்படையில் இவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.
அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு :
அல்குர்ஆன் ஓதுவது மகத்தான ஒரு வணக்கமாகும். அது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மிகச் சிறந்த வகையாகும். அல்லாஹ்விடம் அதற்கு மகத்தான கூலியுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. அது பத்துமடங்காக மாறுகிறது. 'அலிஃப் லாம் மீம்' என்பதை ஒரு எழுத்து எனக் கூறமாட்டேன். மாறாக 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து ஆகும்." (ஆதாரம் : திர்மிதி 2910).
அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்குகள் :
அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் ஓதுதல், அல்குர்ஆன் ஓதுவதன் நோக்கம் அல்லாஹ்வின் திருப்தியும், அவனுக்குக் கட்டுப்படுவதுமாகவே இருக்க வேண்டும்.
வுழூச் செய்வதுடன், உடை இடம் ஆகியன சுத்தமாக இருக்க வேண்டும்.
முடியுமானால் கிப்லாத் திசையை முன்னோக்குதல்.
ஷைதானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல், ஓதுவதற்கு முன்னர் "அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்" எனக் கூறுவது விரும்பத்தக்கது. அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!". (அன்நஹ்ல் : 98).
அல்குர்ஆன் ஓதப்படும் சபையை கண்ணியப்படுத்துதல்.
தஜ்வீத் சட்டங்களைப் பேணி நடைமுறைப் படுத்துதல்.
அழகாக ஓதுதல், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் அழகிய குரல்களால் அல்குர்ஆனை அழகுபடுத்துங்கள்". (ஆதாரம் : அபூதாவூத் 1470).
அல்குர்ஆன் வசனங்களின் கருத்துக்களை ஆராய முயற்சித்தல்.
குர்ஆன் வகுப்புகளில் ஸலாத்திற்கு பதில் கூறுதல், தும்மியவருக்கு பதிலளித்தல், அதானுக்கு பதில் கூறுதல் போன்ற தேவைக்காக அன்றி, வீண் பேச்சுக்களை விட்டு விடுதல்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : நான் ஒழுங்குகளை நடைமுறைப் படுத்துவேன் :
உங்கள் ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ், ஓதுவதற்கான ஒழுங்குகளைப் பேணி, நீங்களும் உங்கள் நண்பர்களும் குறுகிய சூராக்களை ஓதுவதற்கும், அதில் தவறிழைப்பவர்களை திருத்தவும் ஒரு அமர்வை நடத்தவும்.
செயல்பாடு (2) : நான் பரிந்துரைக்கிறேன்:
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார் : "குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் உன்னதமான மற்றும் நேர்மையான வானவத் தூதர்களுடன் இருக்கிறார். மேலும், குர்ஆனை சிரமப்பட்டு, திக்கித்திக்கி ஓதுபவனுக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு". (ஆதாரம் : புஹாரி 2856, முஸ்லிம் 30).
இந்த நபிமொழி குர்ஆன் ஓதும் அனைவரினதும் சிறப்பை அறிவிக்கின்றது. இருப்பினும் திறமையானவர்கள் ஏனையோரை விட உயர்ந்தவர்களாகும். இதனடிப்படையில் தஜ்வீதை திறன்படக் கற்பதற்குரிய சிறந்த வழிமுறைகள் பற்றி உமது ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் ஆலோசிக்கவும். உதாரணமாக :
பள்ளிவாயில்களில் இடம்பெறும் குர்ஆன் ஓதல் மற்றும் மனனமிடல் வகுப்புகளில் இணைதல்.
திறமையான ஓர் ஆசானுடன் தஜ்வீத் கற்றுக் கொள்ள பேசி உடன்பட்டுக்கொள்ளல்.
மின்னனு செயலிகளைப் பயன்படுத்துதல்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
திக்ர் செய்வது குர்ஆன் ஓதுவதை விடச் சிறந்ததாகும்.
ஸலாத்திற்கு பதிலளிப்பதற்காக குர்ஆன் ஓதுவதை இடைநிறுத்தலாம்.
குர்ஆன் ஓதும்போது வுழூச் செய்து, தூய்மையான ஆடைகளை அணிவேன்.
குர்ஆன் ஓதலின் கூலி அதன் சட்டதிட்டங்களில் திறமையானவர்களுக்கு மாத்திரமே கிடைக்கின்றது.
கேள்வி 2: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு ........................ எழுதப்படும், அந்த ஒரு ...................... மடங்காகும்.
கேள்வி 3 : அல்குர்ஆன் ஓதும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் மூன்று எழுதுக.
பாடம் இரண்டு : குர்ஆன் பிரதியும், அதனைக் கையாளும் ஒழுங்குகளும்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
அல்குர்ஆன் பிரதியை வரைவிலக்கணப்படுத்த வேண்டும்.
குர்ஆன் பிதியை கண்ணியப்படுத்துவதன் சட்டத்தை விளக்க வேண்டும்.
குர்ஆன் பிரதிகளைக் கையாளும் ஒழுங்குகளைக் கூற வேண்டும்.
குர்ஆன் பிரதியைக் கண்ணியப்படுத்த வேண்டும்.
குர்ஆன் பிரதியை அவமதிப்பதை விட்டும் பிறரை எச்சரிக்க வேண்டும்.
குர்ஆன் பிரதியை வரைவிலக்கணப்படுத்துதல்
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும்.
குர்ஆன் பிரதி என்பது அந்தக் குர்ஆனை உள்ளடக்கியுள்ள நூலாகும்.
குர்ஆன் பிரதி 114 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
ஸூரா பாதிஹாவில் ஆரம்பித்து ஸூரா நாஸில் முடிவுருகின்றது.
குர்ஆன் பிரதியை கண்ணியப்படுத்துவதன் அவசியம்
குர்ஆன் பிரதியை மகிமைப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும். ஏனெனில் அதில் அல்லாஹ்வின் வார்த்தைகள் உள்ளன. யார் புனித குர்ஆனை மதிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் வல்ல இறைவனை மதிக்கிறார்கள். குர்ஆன் பிரதியை அவமதிப்பவர் எல்லாம் வல்ல இறைவனை அவமதிக்கிறார்.
அசுத்தமான இடங்களில் வீசுதல், காலால் மிதித்தல் போன்று வேண்டுமென்றே அல்குர்ஆன் பிரதியை அவமதிப்பவர் அல்லாஹ்வை நிராகரித்தவர் ஆவார்.
குர்ஆன் பிரதியைக் கையாளும் ஒழுங்குகள்
குர்ஆன் பிரதியைப் பாதுகாத்து, தூய்மையாக வைத்திருத்தல்.
குர்ஆன் பிரதியை எடுக்கும் போதும், கொடுக்கும் போதும் அழகான முறையில் வலது கையைப் பயன்படுத்துதல்.
தண்ணீரில் போடுதல், சிறு குழந்தைகளிடம் விட்டுவிடுதல் போன்ற அல்குர்ஆன் பிரதியை சேதப்படுத்தும் செயல்களை விட்டும் பாதுகாப்பது அவசியமாகும்.
வுழூவின்றியும், குளிப்பு கடமையான நிலையிலும் குர்ஆன் பிரதியைத் தொடுவது ஹராம் என்ற அடிப்படையில் சுத்தமில்லாமல் அதனைத் தொடாமலிருத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "சுத்தமானவர்களைத் தவிர குர்ஆனைத் தொட வேண்டாம்". (ஆதாரம் : முவத்தா மாலிக் 469).
தவறிவிடும் என அஞ்சினாலே தவிர கழிப்பறைகளுக்குள் குர்ஆனைை எடுத்துச் செல்வது ஹராமாகும். அப்போது மாத்திரம் ஒரு பையிலிட்டு எடுத்துச் செல்லலாம்.
குர்ஆன் பிரதியை அவமதிப்பது ஹராமாகும். பின்வருவன அதில் அடங்கும் :
கால்களுக்கு மிதிபடும் வகையில் எப்போதும் அதனை தரையிலேயே விட்டுவைத்தல்.
அதில் ஊன்றி நிற்றல், அல்லது அதன் மேல் ஏறுதல்.
குர்ஆனை வீசி எறிதல்.
அதன் தாள்களில் பொருத்தமில்லாத வார்த்தைகளை எழுதுதல் அல்லது வரைதல்
சுத்தப்படுத்தல் போன்ற தேவைகளுக்காக அதன் தாள்களைப் பயன்படுத்துதல்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) : சிந்தித்து முடிவுகளை கண்டறிவேன்.
நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், பின்வரும் பிரசினங்களில் உங்கள் நிலைப்பாட்டை சிந்தித்து தீர்மானிக்கவும், பின்னர் மதிப்பீட்டிற்காக அதை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கவும்:
குர்ஆனின் பக்கங்கள் சேதமடைந்தால், அவற்றை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்கப்படுகிறது. (உடன்படுகிறேன் - உடன்படவில்லை)
மார்க்கப் புத்தகங்களை குப்பையில் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. (உடன்படுகிறேன் - உடன்படவில்லை)
குர்ஆன் வசனங்களைக் கொண்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பொதியிட அனுமதிக்கப்படுகிறது. (உடன்படுகிறேன் - உடன்படவில்லை)
செயல்பாடு (2) : யோசித்து பதிலளிப்பேன் :
இன்று, மின்னணு குர்ஆன்கள் கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் பரவியுள்ளன. தொடுவதற்கு முன்பு சுத்தமாக வேண்டும் என்ற காகித குர்ஆன்களுக்கான சட்டம் இவற்றுக்கும் பொருந்துமா?
பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும் :
செயல்பாடு (3) : ஆராய்ச்சி செய்து பதிலளிப்பேன்:
குர்ஆனைப் பற்றிய உங்கள் அறிவை அதிகரிக்கும் நோக்கில், பின்வரும் சொற்றொடர்களை பூரணப்படுத்த உங்கள் சக நண்பருடன் ஒத்துழைக்கவும்:
அல்குர்ஆனில் மிக நீண்ட அத்தியாயம் ................................
ஸூரா .................. அல்குர்ஆனின் மத்தியில் உள்ளது, வெள்ளிக்கிழமைகளில் அதனை ஓதுவது விரும்பத் தக்கது.
ஹிஜ்ரத் பயணத்திற்கு முன்னர் அருளப்பட்ட அத்தியாயங்களுக்குக் கூறப்படும் பெயர் .................................
ஹிஜ்ரத் பயணத்திற்குப் பின்னர் அருளப்பட்ட அத்தியாயங்களுக்கு ................................. என்று கூறப்படும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
குர்ஆனின் கிழிந்த பக்கங்களை எரிப்பது அனுமதிக்கப்படுகிறது. (✓)
குர்ஆனின் மேல் எதுவும் வைக்கப்படாமல் இருப்பது அதனை கண்ணியப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். ✓
ஸூரா அல்-பகரா குர்ஆனின் முதல் ஸூரா ஆகும். (×)
மின்னணு குர்ஆனைத் தொட சுத்தமாக இருக்கத் தேவையில்லை. (✓)
மார்க்கப் புத்தகங்களை அவமதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. (✓)
கேள்வி 2: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "................................ தவிர குர்ஆனைத் தொட வேண்டாம்".
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
அல்குர்ஆனுக்கும் அல்குர்ஆன் பிரதிக்கும் இடையில் உள்ள வேறுபாடென்ன?
குர்ஆன் பிரதியை அவமதிக்கும் மூன்று வடிவங்களைத் தெளிவுபடுத்துக.
பாடம் மூன்று : ஆயதுல் குர்ஸீ விளக்கம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஆயதுல் குர்ஸியை சுருக்கமாக விளக்க வேண்டும்.
ஆயதுல் குர்ஸியின் சிறப்பைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆயதுல் குர்ஸியிலுள்ள அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறிய வேண்டும்.
ஆயதுல் குர்ஸியில் இருந்து பெறப்படும் பயன்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆயதுல் குர்ஸியின் மகத்துவத்தை மெச்ச வேண்டும்.
ஆயதுல் குர்ஸீ
அல்லாஹ் கூறுகிறான் : "அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை சிறு தூக்கமோ, பெருந் தூக்கமோ பீடிக்கமாட்டாது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய 'குர்ஸி' வானங்களையும், பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்". (பகரா : 255).
விளக்கமும் விரிவுரையும்:
ஆயதுல் குர்ஸி அல்குர்ஆனின் மகத்தான வசனமாகும். அதை ஓதவதற்குப் பல மகத்தான சிறப்புண்டு, ஷைதான் மற்றும் தீங்குகளை விட்டும் அது மனிதனைப் பாதுகாக்கும், அதன் அர்த்தங்களின் விளக்கம் பின்வருமாறு:
"அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை". உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
ஜீவித்திருப்பவன். அவனது பூரணத்துவத்துக்கு தகுதியான முறையில் பரிபூரணமான வாழ்வைக் கொண்டவன்.
என்றென்றும் நிலைத்திருப்பவன். தனது படைப்பினங்களின் அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு செய்யும் நிலைத்திருப்பவன்.
அவனை சிறு தூக்கமோ, பெருந் தூக்கமோ பீடிக்கமாட்டாது அவனை சிறு தூக்கமோ, பெருந் தூக்கமோ பீடிக்கமாட்டாது
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அனைத்து படைப்பினங்களும் அவனது அதிகாரத்தில், கட்டுப்பாட்டில் உள்ளன.
அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? யாருக்காக வேண்டியும் மன்னிப்புக்கோர யாரும் அவனது அனுமதியின்றி சக்தி பெற மாட்டார்கள்.
(படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அல்லாஹ்வின் அறிவு அனைத்து வஸ்துக்களையும் எல்லா காலங்கள், இடங்களிலும் முழுமையாக சூழ்ந்து கொள்ளக்கூடியதாகும்.
அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அறிவில் எதனையும் யாரும் அவனது நாட்டமின்றி அறிய முடியாது.
அவனுடைய 'குர்ஸி' வானங்களையும், பூமியையும் வியாபித்திருக்கின்றது. குர்ஸி என்பது வானங்கள் பூமியைச் சூழ்ந்துள்ள பிரமாண்ட படைப்பாகும்.
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை. வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவற்றைப் பாதுகாப்பதில் அவனுக்கு எவ்வித இயலாமையோ சிரமமோ ஏற்படுவதில்லை.
அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன் அவன் தன்னிலேயும், தனது பண்புகளிலும் அனைத்து படைப்பினங்களை விடவும் உயர்ந்தவன், அவனது ஆட்சி, அதிகாரத்தில் மகத்தானவன்.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
ஆயதுல் குர்ஸி அல்குர்ஆன் வசனங்களில் மகத்தான சிறப்புக் கொண்டதாகும்.
அல்லாஹ் அனைத்து பரிபூண பண்புகளுக்கும் உரியவன், அனைத்து வித குறைகளை விட்டும் தூய்மையானவன்.
அல்லாஹ்வின் அறிவு அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது.
குர்ஸி அல்லாஹ்வின் படைப்புகளில் மிகப் பிரமாண்டமானதாகும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) ஆராய்ந்து வெளிப்படுத்துகிறேன்.
ஆயதுல் குர்ஸியிருந்து பின்வரும் அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறியவும்.
பண்பு ஆயதுல் குர்ஸியில் அதை அறிவிக்கும் வார்த்தை
அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு நிலைத்திருப்பவன்.
அல்லாஹ்வின் அறிவு அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது.
அல்லாஹ்வுக்கு இயலாத எதுவுமில்லை.
அல்லாஹ் ஓய்வெடுக்கவோ, தூங்கவோ மாட்டான்.
செயல்பாடு (2) : அடையாளம் கண்டு பிரித்தெடுப்பேன் :
தொழுகைகளுக்குப் பின்னர், உறங்க முன்னர், காலை, மாலை போன்ற சந்தர்ப்பங்களில் ஆயதுல் குர்ஸி ஓதுவது ஸுன்னத்தாகும். அதனடிப்படையில் பின்வரும் ஹதீஸில் இடம்பெற்றுள்ள நேரத்தை வரையறுக்கவும். இந்த நேரத்தில் ஆயதுல் குர்ஸி ஓதவதால் கிடைக்கும் நன்மையையும் தெளிவு படுத்தவும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸியை ஓதுபவரை, மரணத்தைத் தவிர வேறெதுவும் சொர்க்கத்தில் நுழைவதைத் தடுக்காது." (ஆதாரம் : நஸாஈயின் ஸுனன் குப்ரா 9848).
ஓத வேண்டிய நேரம் : ...........................................
ஓதுவதற்கான கூலி : ...........................................
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் ஆயத்துல் குர்ஸியை ஓதுமாறு கட்டளையிட்டார்கள்.
யாருடைய பரிந்துரையும் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஏற்கப்பட மாட்டாது.
அல்லாஹ்வின் அறிவு மனித, ஜின்களுக்கு மாத்திரம் தொடர்புபட்டதாகும்.
உறங்க முன்னரும், தொழுகைக்குப் பின்னரும் ஆயதுல் குர்ஸி ஓதுவது ஸுன்னத்தாகும்.
கே 2 : ஆயதுல் குர்ஸியின் பின்வரும் பகுதிகளின் அர்த்தத்தை எழுதவும்:
அல்ஹய்யுல் கய்யூம்.
லா தஃகுதுஹூ ஸினதுன் வலா நவ்ம்.
வலா யஊதுஹூ ஹிஃப்ழுஹுமா.
Q3: அயதுல் குர்ஸி என்பது புனித குர்ஆனின் மகத்தான வசனமாகும். இதை விளக்கவும்.
பாடம் நான்கு : தகாஸுர் மற்றும் அஸ்ர் அத்தியாயங்களின் விளக்கம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
இவ்வசனங்களை சுருக்கமாக விளக்கவேண்டும்.
இவ்வசனங்களில் இருந்து பெறப்படும் படிப்பினைகளை விளக்குதல் வேண்டும்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
தகாஸுர் மற்றும் அஸ்ர் அத்தியாயங்களின் கண்ணியத்தை மகத்துவப்படுத்தவேண்டும்.
அத்தியாயம்: அத்தகாஸுர் (அதிகம் தேடுதல்)
அத்தியாயம்: அத்தகாஸுர் (அதிகம் தேடுதல்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- 2. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. 3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). 6. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
7. பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள். 8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (தகாஸுர் : 1 - 8)
விளக்கமும் விரிவுரையும்:
மறுமையின் விசாரணை, கூலி என்பதை சிந்திப்பதை விட்டு உலகில் மூழ்கி விடுவதை அல்லாஹ் எமக்கு எச்சரிக்கின்றான். அவன் கூறுகின்றான் :
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. நீங்கள் மரணித்து மண்ணறையில் அடக்கம் செய்யப்படும் வரை, செல்வங்கள், பிள்ளைகளை வைத்துப் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வை வழிப்படுவதை விட்டும் பராக்காக்கி விட்டது.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உலக விடயங்களில் பராக்கானதன் விளைவை மறுமையில் அறிந்து கொள்வீர்கள், மறுமைதான் உங்களுக்கு சிறந்ததாகவும், நிலையானதாகவும் இருந்தது என்பதை அப்போது உணர்ந்து கொள்வீர்கள்.
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). அல்லாஹ் உங்களை நிச்சயம் விசாரணை செய்வான் என்பதை அறிந்திருந்தால் மறுமையை விட்டு உலகில் பராக்காகி இருக்க மாட்டீர்கள்.
நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள். பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள். நிச்சயமாக நீங்கள் நரகை மறுமையில் காண்பீர்கள், அதனை உறுதிப்படுத்துவதற்காக திரும்பத்திரும்ப அதனைப் பார்ப்பீர்கள்.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். பின் அல்லாஹ் இவ்வுலகில் உங்களுக்களித்த அனைத்து இன்பங்கள், அருட்கொடைகள் பற்றியும் உங்களிடம் கேட்பான்.
அத்தியாயம்: அல்அஸ்ர் (காலம்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
(அஸ்ர் : 1-3).
விளக்கமும் விரிவுரையும்:
இவ்வாழ்கையின் உண்மையான இலாப, நட்டங்களை இவ்வத்தியாயம் எமக்கு விளக்குகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் :
காலத்தின் மீது சத்தியமாக! அஸர் நேரம் அல்லது அனைத்து காலங்களின் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). நான்கு சாராரைத் தவிர அனைத்து மனிதர்களும் நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறுகின்றான். அவர்கள் :
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோர்.
நற்செயல்கள் புரிந்தோர்.
இஸ்லாமிய மார்க்கம் எனும் சத்தியத்தில் உறுதியாக இருப்பதற்குத் தங்களுக்கிடையில் உபதேசித்துக் கொண்டோர்.
முந்தை அனைத்து விடயங்களிலும் தங்களுக்கு இடையில் பொறுமையை உபதேசித்துக் கொண்டோர்.
இந்த நான்கு பண்புகளையும் கொண்டவர்களே மறுமையில் வெற்றி பெற்றவர்களாகும்.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
மறுமைக்காக நற்செயல்கள் மூலம் தயாராவதற்காக, அல்லாஹ் தனது அடியார்களுக்கு அதன் கோர நிகழ்வுகளை எச்சரிக்கின்றான்.
அல்லாஹ் தனது அருட்கொடைகள் பற்றி மறுமையில் மனிதர்களிடம் விசாரணை செய்வான். அவற்றுக்கு நன்றி செலுத்துவதும், அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் அவற்றைப் பயன்படுத்துவதும் தான் அவர்களைப் பாதுகாக்கும்.
மறுமை வேதனைகளைக் கண்களால் காண முன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனே மதிநுட்பமுடையவனாகும்.
அல்லாஹ் தனது படைப்பினங்களில் தான் நாடியதை வைத்து சத்தியம் செய்வான். ஆனால் அடியார்களுக்கு அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்ய முடியாது.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்து, சத்தியம் மற்றும் நலவின் பால் அழைப்பு விடுத்து, அதில் பொறுமையாக இருந்தவர்களைத் தவிர அனைத்து மக்களும் நஷ்டத்திலேயே உள்ளனர்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) : நண்பர்களுடன் கலந்துரையாடுகிறேன் :
மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும் :
அதிகம் செய்வது வரவேற்கப்படும் ஏதாவது மூன்று உலக விடயங்களை வரையறுப்பதில் முதல் குழு கலந்துரையாட வேண்டும்.
அதிகம் செய்வது கண்டிக்கப்படும் ஏதாவது மூன்று உலக விடயங்களை வரையறுப்பதில் இரண்டாம் குழு கலந்துரையாட வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு குழுவும் தாம் எழுதியதை விவாதிப்பதற்காக ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும். எழுதப்பட்டதில் அனைவரும் விவாதிக்கப்பட வேண்டும்.
செயல்பாடு (2) : படித்து விளக்குவேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உணவு சாப்பிட்டதுவும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்". (ஆதாரம் : முஸ்லிம் 2734).
இந்த நபிமொழியினூடாக, அல்லாஹ்வின் அருட்கொடைகள் மீதான எமது கடமையைத் தெளிவுபடுத்தவும்.
செயல்பாடு (3): விவாதித்து தெளிவுபடுத்துவேன் :
ஸூரா அஸ்ர் பற்றி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) பின்வருமாறு கூறினார்கள் : "மக்கள் இந்த அத்தியாயத்தை ஆராய்ந்து புரிந்தால் அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்".
ஸூரா அஸ்ருக்கு அந்தச் சிறப்பு இருப்பதற்கான காரணங்களை உமது ஆசிரியருடன் விவாதிப்பதுடன் இவ்வத்தியாயம் பொதிந்துள்ள வழிபாடுகள், பண்புகளையும் விளக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
ஒரு முஸ்லீம் தனது நேரம் முழுவதும் பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுவது அனுமதிக்கப்படுகிறது. (×)
அருட்கொடைகளுக்கான விசாரணைக்கு நீங்கள் தயாராகுவது அவசியமாகும் (✓)
ஒரு முஸ்லிம் காலத்தின் மீது சத்தியம் செய்வது அனுமதிக்கப்படுகிறது; ஏனென்றால் அல்லாஹ் அதன் மீது சத்தியம் செய்துள்ளான். (×)
பணம், அதை முறையாக சம்பாதித்து, முறையாக செலவழித்தவருக்குத் தவிர ஏனையோருக்கு அது ஒரு சாபமே (✓)
கே 2 : பின்வரும் வசனங்களின் பொருளை சுருக்கமாக விளக்கவும்:
- அல்ஹாகுமுத் தகாஸுர். ஹத்தா ஸுர்துமுல் மகாபிர்
வல் அஸ்ர்.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
அல்லாஹ்வின் அருட்கொடைகள் மீதான எமது கடமை என்ன?
ஸூரா அஸ்ரின் விளக்கத்திலிருந்து நீர் பெற்ற பயன்பாட்டைத் தெளிவுபடுத்தவும்.
பாடம் ஐந்து : ஹுமஸா மற்றும் ஃபீல் அத்தியாயங்களின் விளக்கம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
இவ்வசனங்களை சுருக்கமாக விளக்குதல் வேண்டும்.
இவ்வசனங்களில் இருந்து பெறப்படும் படிப்பினைகளை விளக்குதல் வேண்டும்.
புறம், கோள் சொல்லுதல் போன்றவற்றை விட்டும் உமது குடும்பத்தை எச்சரிக்கை செய்யவும்.
புனித மக்காவின் கண்ணியத்தை மகத்துவப்படுத்த வேண்டும்.
அத்தியாயம்: அல்ஹுமஸா (புறம் பேசுதல்)
அத்தியாயம்: அல்ஹுமஸா (புறம் பேசுதல்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும். (ஹுமஸா : 1 -9).
விளக்கமும் விரிவுரையும்:
விசுவாசிகளிடம் பெருமையடித்து, பரிகசிப்போருக்கு இந்த அத்தியாயத்தில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் :
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். செயல் மூலம் மக்களை குறைகூறக்கூடிய, அல்லது விசுவாசிகளைப் பற்றிப் புறம் பேசுதல், அவர்களது மார்க்கத்திலும் மானத்திலும் குறைகூறுதல் போன்று வார்த்தைகள் மூலம் பலிக்கக் கூடிய அனைவருக்கும் தண்டனையும் அழிவும் உண்டென அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். செல்வத்தை சேர்த்து எண்ணிக் கொண்டிருப்பவன், மரணம் அதற்குப் பின்னாலுள்ள விசாரணை மற்றும் கூலி என்பவற்றை விட்டும் அந்த செல்வம் அவனைப் பாதுகாக்கும் என நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஆனால் அது இந்த மனிதன் நினைப்பது போன்றல்ல. அவனது செல்வம் அவனைத் தண்டனையில் இருந்து பாதுகாக்க மாட்டாது, தன்னில் வீசப்படும் அனைத்தையும் உடைத்துத் தகர்க்கக் கூடிய நரகில் அவன் வீசப்படுவான்.
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். இந்த நெருப்பின் யதார்த்தம் என்ன என்று உமக்கு அறிவித்தது எது? இது பற்றி எறியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும். அதன் கடுமையான தீச்சுவாளை உடல்களை ஊடறுத்து இதயங்களைச் சென்றடையக் கூடியதாகும்.
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும். இந்த நரகில் அவர்கள் உள்ளே வைத்து மூடப்படுவார்கள், சங்கிலிகள், விலங்குகளால் அவர்கள் கட்டப்படுவார்கள், அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியாது.
அத்தியாயம்: அல்பீல் (யானை)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?
அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்பீல் : 1 - 5).
விளக்கமும் விரிவுரையும்:
புனித கஃபா ஆலயத்தை அல்லாஹ் யானைப்படையிடம் இருந்து பாதுகாத்ததை இந்த அத்தியாயம் எமக்கு நினைவூட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் :
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அபீஸினியாவைச் சேர்ந்த அப்ரஹா மற்றும் அவனது படையினர் கஃபாவை உடைப்பதற்காக யானைப்படையைக் கொண்டு வந்த நேரத்தில் அவர்களை அல்லாஹ் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா? அவர்கள் திட்டமிட்ட சதியை அல்லாஹ் வீணாக்கி விட்டான். எனவே கஃபாவை அவர்களால் உடைக்கவோ, புனித ஆலயத்தை கண்ணியப்படுத்துவதை விட்டும் மக்களைத் திசை திருப்பவோ முடியவில்லை.
அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான். அல்லாஹ் அவர்கள் மீது தொடரான கூட்டங்கூட்டமாக பறவைகளை அனுப்பி வைத்தான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது அவை எறிகின்றன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். மிருகங்கள் தின்று மென்ற காய்ந்த வைக்கோல் போன்று அவர்கள் மாறி விட்டனர்.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
புறம், கோல், பரிகாசம் ஆகியன மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்க்கின்றன.
புறம், கோல், பரிகாசம் என்பவற்றில் ஈடுபடுவோருக்கு மறுமையில் தண்டனையுள்ளதாக எச்சரிக்கை வந்துள்ளது.
அல்லாஹ்விடம் கஃபாவிற்குள்ள மகத்துவத்தை மெச்சுதல்.
பெருமையடித்து, அல்லாஹ்வின் புனிதங்களை மீறுவோரை அழிக்க அல்லாஹ் சக்தியுள்ளவன்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): இணைத்து விளக்குவேன் :
அல்லாஹ் கூறுகிறான் : "முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்". (ஹுஜுராத் : 11).
இவ்வசனத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஓதி, பின்வரும் விடயங்களை விளக்க அவர்களுடன் ஒத்துழைக்கவும் :
விசுவாசிகளான ஆண், பெண்களை பரிகாசிப்பதைத் தடுப்பதற்கான காரணமென்ன?
இந்தச் செயல்களைத் தொடர்ந்து செய்து, பாவமீட்சி பெறாதவர்களுக்கான தீர்ப்பென்ன?
செயல்பாடு (3) : ஆராய்ச்சி செய்து பதிலளிப்பேன்:
யானைப்படையினரின் கதையைப் பற்றிய விரிவுரைகள் அல்லது வீடியோ கிளிப்களில் ஒன்றைக் கேட்டு விட்டு, பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
அப்ரஹா யார்?
அப்ரஹா தனது படையை மக்காவுக்கு எடுத்து வருவதற்கான காரணம் என்ன?
இப்படையின் விடயத்தில் மக்காவாசிகளின் நிலைப்பாடு என்ன?
இந்த சம்பவம் அரேபியர்களிடையே குரைஷிகளின் அந்தஸ்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
யானைப்படை சம்பவம் நபித்துவத்திற்குப் பல மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.
பரிகாசிப்பதும், குறைகூறுவதும் விசுவாசிகளின் பண்புகளல்ல.
புறம் மற்றும் கோல் சிறுபாவங்களில் உள்ளதாகும்.
கே 2 : பின்வரும் வசனங்களின் பொருளை சுருக்கமாக எழுதவும்:
1- வைலுல் லிகுல்லி ஹுமஸதில் லுமஸஹ். 2. அல்லதீ ஜமஅ மாலன் வஅத்தஹ்
4. தர்மீஹிம் பிஹிஜாரதின் மின் ஸிஜ்ஜீல். 5. பஜஅலஹும் கஅஸ்பிம் மஃகூல்.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
பாடத்தில் நீர் கற்றது போன்று யானைப்படை சம்பவத்தை சுருக்கமாகக் கூறுக.
மக்களைப் பரிகாசித்து, அவர்களது மானத்தைப் போக்குவோருக்கு ஓர் உபதேசத்தை முன்வைக்கவும்.
பாடம் ஆறு : குறைஷ் மற்றும் மாஊன் அத்தியாயங்களின் விளக்கம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
இவ்வசனங்களை சுருக்கமாக விளக்குதல் வேண்டும்.
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருட்கொடைகள் விடயத்தில் குரைஷியரின் நிலைப்பாட்டை விளக்கவும்.
இவ்வசனங்களில் இருந்து பெறப்படும் படிப்பினைகளை விளக்குதல் வேண்டும்.
மறுமையைப் பொய்ப்பித்து, அதில் அலட்சியமாக இருப்போரின் பண்புகளை விட்டும் தூரமாகுதல்.
அத்தியாயம்: அல்குறைஷ் (குறைஷிகள்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, 2. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். 4. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
(குரைஷ் : 1 - 4).
விளக்கமும் விரிவுரையும்:
அல்லாஹ் மக்காவாசிகளுக்கு வழங்கிய அருள்களை விளக்குவதை இந்த அத்தியாயம் முழுமைப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- குளிர்காலத்தில் யமனுக்கும், கோடையில் ஷாம் பகுதிக்கும் வணிகப் பயணங்களை குறைஷியர் பழகியிருப்பதால்.
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். எனவே, அந்தப் பயணங்களை அவர்களுக்கு இலகுபடுத்திக் கொடுத்த இப்புனித மாளிகையின் இரட்சகனை மாத்திரம் அவர்கள் வணங்குவது அவசியமாகும்.
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். தமது ஊர்களில் அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பளித்தவன்.
அத்தியாயம்: அல்மாஊன் (அற்பப் பொருள்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1. (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? 2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. 4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். 7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். (மாஊன் : 1 - 7).
விளக்கமும் விரிவுரையும்:
நாம் எச்சரிக்கையாக இருக்கவும், தவிர்ந்திருக்கவும் மறுமையைப் பொய்ப்பிப்பவர்களின் பண்புகளை இந்த அத்தியாயம் விவரிக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் :
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? மீளெழுப்பப்படல், மறுமையில் கூலி வழங்கப்படல் என்பவற்றைப் பொய்ப்பிப்பவனின் நிலையை நீர் அறியவில்லையா?
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். அவன்தான் அநாதையைக் கடுமையாக விரட்டி, இழிவுபடுத்துபவன்.
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்க ஏவவும் மாட்டான், அதற்காக ஒத்துழைக்கவும் மாட்டான்.
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே கடுமையான வேதனை தொழுகையில் அலட்சியமாக இருந்து, உரிய நேரத்தில் அதை நிறைவேற்றாதோருக்கே உண்டு.
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். அவர்கள் நற்செயல்களையும் வணக்கங்களையும் முகஸ்துதிக்காக மக்கள் முன் காண்பிக்கின்றனர்.
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். மக்களுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள் போன்ற பொருட்களை அவர்கள் பயன்படுத்தவோ, அவர்களுக்கு இரவல் கொடுக்கவோ மாட்டார்கள். அவர்கள் தங்கள் இரட்சகனை வணங்குவதிலும் முறையாக நடக்கவில்லை, அவனது படைப்பினங்களுடனும் முறையாக நடக்கவில்லை.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
பாதுகாப்பு, உணவு, பான வசதிகள் இருப்பது அல்லாஹ் எமக்களித்துள்ள மிகப்பெரிய அருட்கொடைகளில் உள்ளதாகும்.
அருட்கொடைகள் அவற்றுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் நீடிக்கும், நன்றி மறுப்பதன் மூலம் நீங்கி விடும்.
மறுமையைப் பொய்ப்பித்து, அதில் அலட்சியமாக இருப்பவர்கள் அல்லாஹ்வுடைய கடமைகளையோ, அடியார்களுடைய உரிமைகளையோ முறையாக நிறைவேற்ற மாட்டார்கள். மக்களுக்கு நலவு நடப்பதைத் தடுப்பார்கள், அநாதைகள், பலவீனமானவர்களை மதிக்கவும் மாட்டார்கள்.
முகஸ்துதி மற்றும் தொழுகையை விடுதல், அல்லது நியயமான காரணமின்றி பிற்படுத்தலின் விபரீதம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): கவனித்து விளக்குவேன் :
குரைஷிகளின் வணிகப் பயணங்களின் இருப்பிடங்களை அறிய அடுத்த பக்கத்தில் உள்ள வரைபடத்தைப் பாருங்கள் .
அந்த அருட்கொடைகள் தொடர்பாக குரைஷியரின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துக.
செயல்பாடு (2) : வேறு பிரிப்பேன் :
அட்டவணையில் கேட்கப்படுவதற்கேற்ப நிராகரிப்பவர்களின் நிலையை விவரிக்கும் வசனங்களை ஸூரா மாஊனிலிருந்து எழுதவும் :
அநாதைகளுடனான அவர்களின் நிலை : பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
ஏழைகளுடனான அவர்களின் நிலை : மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
தொழுகையின் அவர்களின் நிலை : (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
உளத்தூய்மையில் அவர்களின் நிலை : அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
இஸ்லாத்திற்கு முன் மக்காவிற்கும் அதன் மக்களுக்கும் பெரிய அந்தஸ்து இருந்தது.
மறுமை வாழ்வின் மீதான நம்பிக்கை, பலவீனர்களிடம் கருணை காட்ட விசுவாசியைத் தூண்டுகிறது.
தொழுகையை விடுவது உண்மையான இறைநம்பிக்கையுடன் முரண்பட மாட்டாது.
முகஸ்துதி நற்செயலை அழித்து, மறுமையில் வேதனைக்குக் காரணமாகிவிடுகின்றது.
கே 2 : பின்வரும் வசனங்களின் பொருளை சுருக்கமாக எழுதவும்:
ஃபல் யஃபுதூ ரப்ப ஹாதல் பைத்.
அல்லதீன ஹும் யுராஊன. வயம்னஊனல் மாஊன்
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
அல்லாஹ் குரைஷியருக்கு அருளிய அருட்கொடைகளையும், அவற்றில் அவர்களது நிலைப்பாட்டையும் விளக்குக.
ஸூரா மாஊனில் கூறப்பட்டுள்ள பிரகாரம் மறுமையைப் பொய்ப்பிக்கூடியோரின் செயல்களை விவரிக்குக.
ஈமான் மற்றும் பரிசுத்தப்படுத்தல் பகுதி
பாடம் ஒன்று : ஓரிறைக் கொள்கையின் சிறப்பும் மகத்துவமும்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: ( இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஓரிறைக் கொள்கையின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்தல் வேண்டும்.
ஓரிறைக் கொள்கையின் சிறப்புகளைக் கூற வேண்டும்.
ஓரிறைக் கொள்கையின் மக்ததுவத்தை மெச்ச வேண்டும்.
மக்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைக்க வேண்டும்.
ஓரிறைக் கொள்கை :
அதன் வரைவிலக்கணம்
அதன் சிறப்பு மற்றும் மகத்துவம்
அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை
படைக்கப்படுதல், தூதர்கள் அனுப்பப்படுதல் என்பவற்றின் இறுதியிலக்கு
நற்செயல்கள் ஏற்கப்பட நிபந்தனையாகும்.
பாவங்கள் மற்றும் குற்றங்களுக்குப் பரிகாரமாகும்.
ஓரிறைக்கொள்கைதான் அடியார்கள் மீதான முதல் கடமை. அதற்காக வேண்டித்தான் அல்லாஹ் தூதர்களை அனுப்பி, வேதங்களையும் இறக்கினான். ஓரிறைக்கொள்கையை நிலைநாட்டுவோருக்கு கூலியாக அல்லாஹ் சுவனத்தையும், இணைவைப்பாளர்களுக்குத் தண்டனையாக நரகையும் வைத்துள்ளான்.
எனவே ஓரிறைக் கொள்கை என்றால் என்ன? அதன் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் என்ன?
இதுவே நாம் இப்பாடத்தில் கற்கப்போகிறோம்.
முதலாவதாக : ஓரிறைக் கொள்கையின் வரைவிலக்கணம் :
ஓரிறைக் கொள்கை : அல்லாஹ்வை அவனுக்கு மாத்திரமுள்ள அவனது பரிபாலனம்(ருபூபிய்யா), இறைமை (உளூஹிய்யா), பெயர் மற்றும் பண்புகளில் ஒருமைப் படுத்துவதாகும்.
எனவே படைத்து, வாழ்வாதாரமளித்து, திட்டமிட்டு நிர்வகிப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவன் பரிபூரணமான அனைத்துப் பண்புகளையும் கொண்டுள்ளவன், அனைத்து குறைகளை விட்டும் தூய்மையானவன், அவனுக்கு மாத்திரமே அழகிய திருநாமங்களும், உயரிய பண்புகளும் உள்ளன என்று முஸ்லிம் உறுதியாக நம்பிக்கை கொள்வது அவசியமாகும்.
இரண்டாவதாக : ஓரிறைக் கொள்கையின் சிறப்பு மற்றும் மகத்துவம் :
ஓரிறைக் கொள்கைக்கு மகத்தான சிறப்பும், பாரிய முக்கியத்துவமும் உண்டு, பின்வருவனவற்றினூடாக அதனை நாம் அறியலாம் :
ஓரிறைக் கொள்கை என்பது அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையாகும் :
நபி (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "'முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் செய்யவேண்டிய கடமை என்ன? மக்களுக்கு அல்லாஹ் செய்யவேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதில் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு மக்கள் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். மக்களுக்கு அல்லாஹ் செய்யவேண்டிய கடமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்'' என்று பதில் கூறினார்கள்". (ஆதாரம் : புஹாரி 2856, முஸ்லிம் 30).
ஓரிறைக் கொள்கைதான் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தன் நோக்கமாகும் :
அல்லாஹ் கூறுகிறான் : "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை". (ஸாரியாத் : 56).
ஓரிறைக் கொள்கையின்பால் அழைப்பு விடுப்பதே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமாகும் :
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) "நிச்சயமாக என்னைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாறுமில்லை எனவே என்னையே வணங்குங்கள்.’ என நாம் உமக்கு முன்னர் எந்தத் தூதருக்கும் வஹி அறிவிக்காமல் அவரை நாம் அனுப்பியதில்லை". (அன்பியாஃ : 25).
ஓரிறைக் கொள்கை நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனையாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : "எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன". (இஸ்ராஃ : 19),
இணைவைப்பு அனைத்து நற்செயல்களையும் அழித்து விடுமென அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குக் கூறியுள்ளான் : "(நபியே!) உமக்கும், (நபிமார்களில்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்". (ஸுமர் : 65).
ஓரிறைக் கொள்கை பாவங்களுக்குப் பரிகாரமாகும் :
ஹதீஸுல் குத்ஸியில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "மனிதா, பூமி நிரம்ப பாவங்களுடன் நீ என்னிடம் வந்து, பின்பு எனக்கு எவ்வித இணையும் வைக்காத நிலையில் என்னை சந்தித்தால் அதேயளவு பாவமன்னிப்புடன் நான் உன்னிடம் வருவேன்".. (ஆதாரம் : திர்மிதி 3540).
ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகளின் சான்றுகள் இன்னும் ஏராளமாக உள்ளன. எனவே தான், இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்காக நாம் இணைவைப்பு, முகஸ்துதி மற்றும் பிற தீயவைகளிலிருந்து ஓரிறைக் கொள்கையைக் கவனமாக பாதுகாக்க வேண்டும்.
செயல்பாடுகள்
செயல்பாடு (1): நான் நுணுக்கமாக கவனிக்கிறேன் மற்றும் தேர்ந்தெடுக்கிறேன்:
நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறுகின்றார்கள் : "நீர் வேதக்காரர்கள் இருக்கும் சமூகத்திற்குச் செல்கின்றீர், நீர் முதலில் அழைப்பு விடுக்கும் விடயம் ஓரிறைக் கொள்கையாக இருக்கட்டும்". (ஆதாரம் : புஹாரி 7372).
இந்த நபிமொழி ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவத்தை அறிவிக்கின்றது. அது எவ்வாறெனில் (சரியான விடையைத் தெரிவு செய்க):
குற்றங்களுக்கு பரிகாரமாகின்றது.
மக்களை முதலில் அழைக்கும் விடயமாகும்.
நற்செயல் ஏற்கப்பட நிபந்தனையாகும்.
செயல்பாடு (2) : படிப்பினை கூறுவேன் :
பின்வரும் இறைவசனம், மற்றும் நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு ஓரிறைக் கொள்கையின் சிறப்பு பற்றி மூன்று வரிகள் எழுதுக : "நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிரவுள்ள ஏனையவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான்". (நிஸா : 48). நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : "அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் மரணித்தவர் சுவனம் நுழைவார். அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்" (ஆதாரம் : முஸ்லிம் 93).
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவை சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
வணங்கப்படுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தகுதியில்லை.
மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் உலக இன்பங்களை அனுபவிக்கவாகும்.
அல்லாஹ் விசுவாசிகள், நிராகரிப்பாளர்கள் அனைவரிடமிருந்தும் தர்மத்தை ஏற்றுக் கொள்கின்றான்.
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
தொழுகைதான் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையாகும்.
மக்களுக்கு மேய்ச்சல், உற்பத்தி போன்ற விடயங்களைக் கற்றுக் கொடுக்கவே அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான்.
மறுமையில் அல்லாஹ் அனைத்து மனிதர்களையும் மன்னிப்பான்.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
ஓரிறைக் கொள்கையை வரைவிலக்கணப்படுத்துக.
ஓரிறைக் கொள்கை சுவனம் நுழைவதற்கான காரணம் என்பதற்கான ஆதாரம் ஒன்றை எழுதுக.
பாடம் இரண்டு : பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தல் (அர்ருபூபிய்யாஹ்)
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்துவீர்கள்
பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலுக்கான ஆதரங்களைக் கூறுவீர்கள்.
அல்லாஹ்வால் மாத்திரம் செய்ய முடியுமான மூன்று செயல்களைக் கூறுவீர்கள்.
பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலுக்கு முரணான விடயத்திற்கு உதாரணம் கூறுவீர்கள்.
பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலில் இணைவைப்பதன் விபரீதத்தை உணர்வீர்கள்.
பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலில் ஏற்படும் இவைப்பு முறைகளை நுணுக்கமாக எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அறிவீர்.
அறிமுகம்
அறிந்துகொள்! - அல்லாஹ் உமக்கு நேர்வழி காட்டட்டும்- ஓரிறைக் கொள்கை மூன்று வகையாகும், தவ்ஹீதுர் ருபூபிய்யா (பரிபாலனக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தல்), தவ்ஹீதுல் உலூஹிய்யா (இறைமைக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தல்) , தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் (பெயர்கள் மற்றும் பண்புகளில் ஒருமைப்படுத்தல்) . இந்தப் பாடம் தவ்ஹீதுர் ருபூபிய்யா பற்றிப் பேசுகிறது.
ஓரிறைக் கொள்கையின் அடையாளமாக
தவ்ஹீதின் வகைகள் :
அர்ருபூபிய்யா
அல்உலூஹிய்யா
அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்
முதலாவது : தவ்ஹீதுர் ருபூபிய்யாவின் வரைவிலக்கணம் :
தவ்ஹீதுர் ருபூபிய்யா : இது படைத்தல், வாழ்வாதாரமளித்தல், திட்டமிட்டு நிர்வகித்தல் போன்ற அல்லாஹ்வின் பிரத்தியேகமான செயல்களைக் கொண்டு அவனை ஒருமைப்படுத்தல்.
இது, அல்லாஹ்தான் அனைத்து வஸ்துக்களினதும் இரட்சகன், ஆட்சியாளன், படைப்பாளன், வாழ்வாதாரமளிப்பவன், அனைத்து படைப்பினங்களும் அவனது அதிகாரம், கட்டுப்பாடு, பலத்திற்குக் கீழே உள்ளன என உறுதியாக நம்புவதாகும்.
இரண்டாவது : தவ்ஹீதுர் ருபூபிய்யாவை நம்பிக்கை கொள்ளும் முறை :
சரியாக அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாட்டை நம்பிக்கை கொள்ள , பின்வருவன அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானது என நம்பிக்கை கொள்வது அவசியமாகும் :
படைத்தல் மற்றும் வாழ்வாதாரமளித்தல் :
எனவே அல்லாஹ்வைத் தவிர படைப்பாளனோ வாழ்வாதரமளிப்பவனோ இல்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வே அனைத்து வஸ்துக்களையும் படைத்தவன்". (ஸுமர் : 62).
மேலும் அல்லாஹ் கூறுகிறான் : "இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை". (ஹூத் : 6).
ஆட்சியதிகாரம் மற்றும் திட்டமிடல் :
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் சொந்தக்காரன், அவற்றைத் திட்டமிட்டு நிர்வகிப்பவன் அல்லாஹ் மாத்திரமே. அல்லாஹ் கூறுகின்றான் : "அவனே உங்களது இரட்சகன். அவனுக்கே ஆட்சியதிகாரமுண்டு". (பாதிர் : 13). மேலும் அல்லாஹ் கூறுகிறான் : "விடயங்களை அவனே நிர்வகிப்பவன்". (ரஃத் : 2).
நலவு, கெடுதிக்கு சொந்தக்காரன் :
அல்லாஹ்வே முழுமையாக நலவையும், தீங்கையும் சொந்தமாக்கிக் கொண்டவன். நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள் : "அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தத் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன". (ஆதாரம் : திர்மிதி 2516).
உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல் :
அவ்விரண்டும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வே உயிர்கொடுக்கின்றான், இன்னும் மரணிக்கச் செய்கின்றான்". (ஆல இம்ரான் : 156).
மூன்றாவது: தவ்ஹீதுர் ருபூபிய்யாவிற்கு முரண்படும் விடயங்கள் :
அல்லாஹ்வின் இருப்பை மறுத்தல் :
உதாரணமாக அல்லாஹ்வின் இருப்பை மறுத்து, பிரபஞ்சம் இயற்கையாக உருவானதெனக் கூறும் நாத்திகர்களைக் கூறலாம்.
மறைவான அறிவை வாதாடுதல் :
ஜோசியன், சாஸ்திரக்காரன் போன்று மறைவான அறிவை வாதிடுபவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான் : "(இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்". (நம்லு : 65).
அல்லாஹ் அல்லாதோர் பிரபஞ்சத்தை இயக்கி, வாழ்வாதாரத்தைக் கொண்டு வருவதாக வாதாடுதல்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : வாசித்து, விடையளிக்கிறேன்.
குர்ஆன் பிரதியைப் பார்த்து ஸூரா பகராவின் 258ம் வசனத்தை எழுதிவிட்டு, பின்னர் பின்வருவனவற்றுக்கு பதிலளிக்குக :
அந்த மன்னன் வாதாடிய ருபூபிய்யத்தின் வெளிப்பாடென்ன?
நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மன்னருக்கு எதிராக எவ்வாறு ஆதாரங்களை நிறுவினார்கள்?
இந்தச் சம்பவத்திலிருந்து நீர் பெற்ற படிப்பினையென்ன?
அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று கூறினார். (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை". (பகரா : 258).
அந்த மன்னனின் பெயர் : நம்ரூத் பின் கன்ஆன், உயிர்ப்பித்தல் மற்றும் மரணிக்கச் செய்வதில் அவன் அல்லாஹ்வுடன் தர்க்கித்தான், எனவே நபி இப்ராஹீம் (அலை) சூரியனை மேற்கிலிருந்து உதிக்கச் செய்யுமாறு கோரி அவனுக்கெதிராக ஆதாரத்தை நிறுவினார்கள்.
செயற்பாடு (2) : பார்த்து விடையளிப்பேன்
வாழ்வாதாரம் என்பது மக்களின் சிந்தனையை பராக்காக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும். மேலும், அல்லாஹ் மட்டுமே வாழ்வாதாரம் வழங்குபவன் என்பதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள், எனவே அவனிடமிருந்து நாம் எவ்வாறு வாழ்வாதாரத்தைப் பெறுவது?
உங்கள் சக நண்பர்களுடன் வாழ்வாதாரத்தைக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கவும். அவற்றில் முக்கியமானவை: பிரார்த்தனை மற்றும் அல்லாஹ்விடம் பொறுப்பாச்சட்டுதல்.
செயல்பாடு (3): கண்காணித்து மதிப்பீடு செய்வேன்:
ருபூபிய்யாவில் இணை ஏற்படும் பல இணை ஏற்படும் பல வழிமுறைகள் உள்ளனஉள்ளன, பின்வரும் வழிமுறைகளில் எது உங்கள் சூழலில் உள்ளது? அதை மதிநுட்பத்தால் எப்படி எதிர்கொள்வது?
இறைநேசர்கள் மற்றும் நல்லடியார்கள் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை.
ஜின்களைப் பயந்து, அவர்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடுதல், அவர்களுக்காக அறுத்துப் பலியிடல்.
ஜோசியம் மற்றும் மறைவான அறிவை வாதாடுதல்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நம்ரூத் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் திறன் தன்னிடம் இருப்பதை ஆதாரம் கொண்டு வெளிப்படுத்தினான். (✖)
மருத்துவர்கள் நோய்களிலிருந்து மக்களைக் குணப்படுத்துகிறார்கள். (✖)
நாத்திகம் தவ்ஹீதுர் ருபூபிய்யாவுடன் முரண்படுகின்றது. (✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
தவ்ஹீதுர் ருபூபிய்யாவில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் விடயம் :
(கீழ்ப்படிதலால் - வணக்க வழிபாடுகளால் - அவனது செயல்களால்) ஆகும்.
இறைநம்பிக்கையாளர் தனது வாழ்வாதாரத்திற்காக நம்பியிருப்பது :
(அவரது பெற்றோரை - அல்லாஹ்வை மட்டுமே - பணியில் தனது மேலாளரை)
தவ்ஹீதுர் ருபூபிய்யாவிற்கு முரண்படும் விடயங்கள் :
(மறைவான அறிவை வாதாடுதல் - இறந்தவர்களை தரிசித்தல் - நல்லவர்களை அணுகி வஸீலா தேடல்)
கேள்வி 3: பின்வருவன ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்களைக் குறிப்பிடுக.
நலவு, கெடுதி அல்லாஹ்வின் கைகளில் மாத்திரமே.
மறைவான அறிவை வாதாடுதல் ஹராமாகும்.
பாடம் மூன்று : தவ்ஹீதுல் உலூஹிய்யா
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: ( இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
இறைமைக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தல் என்றால் என்னவென்று தெளிவுபடுத்துவீர்கள்.
இறைமைக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலுக்கு ஆதாரங்களைத் தருவீர்கள்
வணக்க வழிபாடுகளின் வகைகளைக் கூறுவீர்கள்
இறைமைக் கோட்பாட்டில் ஒருமைப்படுத்தலுக்கு முரணானவற்றிற்கு உதாரணம் கூறுவீர்கள்.
தவ்ஹீதுர் ருபூபிய்யா மற்றும் உலூஹிய்யாவிற்கிடையில் தொடர்புபடுத்துவீர்கள்.
உலூஹிய்யாவில் இணை வைப்பதன் விபரீதத்தை உணர்வீர்கள்.
உலூஹிய்யாவில் ஏற்படும் இணைவைப்பின் வெளிப்பாடுகளை மதிநுட்பத்துடன் எதிர்கொள்வீர்கள்.
அறிமுகம்
அரேபியர்கள் அல்லாஹ்வை படைப்பாளன், வாழ்வாதாரமளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டிருந்தும் சிலைகளை வணங்கினார்கள். அப்படியெனில் அவர்களின் நிராகரிப்பின் காரணமென்ன?
இதனைத் தான் இப்பாடத்தில் நாம் கற்கப் போகின்றோம்.
தவ்ஹீதின் வகைகள் :
ருபூபிய்யா
உலூஹிய்யா
அஸ்மாஉ வஸ்ஸிபாத்
முதலாவது : தவ்ஹீதுல் உலூஹிய்யாவின் வரைவிலக்கணம் :
தவ்ஹீதுல் உலூஹிய்யா என்பது : அனைத்துவித வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்தல்.
இதன் அர்த்தம், அல்லாஹ் மாத்திரம் அனைத்துவித வணக்கங்களுக்கும் உண்மையாகத் தகுதியானவன் என்பதையும், அல்லாஹ் அல்லாதோருக்கு எந்த வணக்கத்தை செலுத்துவதும் இணைவைப்பாகும் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுதலாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "எனது தொழுகை, எனது குர்பானிகள் (அறுத்துப் பலியிடல்கள்) , எனது வாழ்வு, எனது மரணம் ஆகியவை அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது என நபியே நீர் கூறுவீராக". (அன்ஆம் : 162).
வணக்கத்திற்குப் பல வகைகள் உள்ளன. அவற்றில் எதனையும் அல்லாஹ் அல்லாதோருக்கு செலுத்த முடியாது, அவற்றுள் சில :
அச்சம், ஆதரவு வைத்தல், பொறுப்புச் சாட்டுதல், உதவி தேடுதல் போன்ற உள்ளம் சார்ந்த வணக்கங்கள்.
பிரார்த்தனை, திக்ரு, தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல் போன்ற வார்த்தை சார்ந்த வணக்கங்கள்.
தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத் போன்ற உடல் சார்ந்த வணக்கங்கள்.
இரண்டாவது : தவ்ஹீதுல் உலூஹிய்யா மற்றும் தவ்ஹீதுர் ருபூபிய்யா என்பவற்றுக்கிடையிலான தொடர்பு :
தவ்ஹீதுல் உலூஹிய்யா தவ்ஹீதுர் ருபூபிய்யா என்பவற்றுக்கிடையிலான தொடர்பை பின்வருமாறு புரிந்து கொள்ளலாம் :
தவ்ஹீதுர் ருபூபிய்யாவை ஏற்றவர் தவ்ஹீதுல் உலூஹிய்யாவையும் ஏற்றே ஆக வேண்டும் :
அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாட்டை ஏற்றவர் அவனை மாத்திரம் வணங்குவது கட்டாயமாகும். ஏனெனில் இரட்சகனான, படைப்பாளனான, ஆட்சி அதிகாரமுள்ள, அனைத்தையும் திட்டமிட்டு நிர்வகிக்கும் ஒருவன் தான் வணங்கப்பட முடியும். அல்லாஹ் கூறுகின்றான் : "மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்". (பகரா : 21)
ருபூபிய்யாவை ஏற்றுக் கொள்வதால் உலூஹிய்யா அவசியமில்லை என்றாகமாட்டாது.
ருபூபிய்யாவை ஏற்றுக் கொண்டு விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்கத்தை செலுத்தினால் அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்கத்தை செலுத்தும் வரை, அவர் ருபூபிய்யாவை ஏற்றிருப்பது அவருக்குப் பயனளிக்காது.
நபி ஸல் அவர்கள் இணைவைப்பாளர்களிடம், “வானங்கள், பூமியைப் படைத்தவனும், சூரிய, சந்திரனை வசப்படுத்தியவனும் யார் ?” என்று கேட்ட போது “அல்லாஹ்” என்றே பதிலளித்தார்கள். இருப்பினும் அவர்கள் காபிர்களாகவே இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வணக்கங்களை அல்லாஹ் அல்லாத வர்களுக்குத் திருப்பி, அல்லாஹ்வுடன் அவர்களையும் வணங்கினார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? (அன்கபூத் : 61).
மூன்றாவது : தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்கு முரண்படக்கூடியவை :
அல்லாஹ் அல்லாதோரை வணங்குதல். உதாரணம் : சிலைகள், மாடுகள், போன்றவற்றையோ, ஈஸா (அலை) போன்றோரையோ வணங்குவது.
அல்லாஹ் அல்லாதோரை அழைத்துப் பிரார்த்தித்தல். உதாரணமாக, மண்ணறையிலுள்ள மரணித்தோரிடம் நிவாரணம், வாழ்வாதாரம் போன்றவற்றை வேண்டுதல்.
அல்லாஹ் அல்லாதோருக்கு நேர்ச்சை வைத்தல், அறுத்துப் பலியிடல்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) மற்றவர்களுடன் ஒத்துழைத்து முடிவுகளைப் கண்டறிவேன்;.
அல்லாஹ் கூறுகிறான் :4 "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை". (தாரியாத் : 56), மேற்கண்ட வசனத்தினூடாக பின்வருவனவற்றுக்கு பதிலளிக்குக :
வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓரிறைக் கொள்கையின் வகையைத் தீர்மானிக்கவும்.
அல்லாஹ்வுக்காக நீர் நிறைவேற்றக்கூடிய நான்கு வணக்கங்களை எழுதவும்.
செயல்பாடு (2): ஓரிறைக் கொள்கையின் இரண்டு வகைகளையும் வேறுபடுத்திக் காட்டுவேன் :
பொருத்தமான புலத்தில் (√) குறிப்பதன் மூலம் பின்வரும் செயல்களுக்குடையில் வேறுபடுத்தவும்:
செயல்கள்
முஹம்மத் அஸர் தொழுகையை நிறைவேற்றினான்.
அல்லாஹ் சூரியனைப் படைத்ததை ஏற்றுக் கொள்ளுதல்.
ஸைத் தனது இரட்சகனை அழைத்துப் பிரார்த்தித்தான்
அல்லாஹ் மனிதனுக்கு விலங்குகளை வசப்படுத்திக் கொடுத்தான்.
ஹஸன் அல்லாஹ்வுக்காக ஆடொன்றை அறுத்துப் பலியிட நேர்ச்சை வைத்தான்.
அல்லாஹ்தான் படைப்பினங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்றான் என பாதிமா நம்பிக்கை கொண்டாள் : தவ்ஹீதுர் ருபூபிய்யாவில் உள்ளது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் உள்ளது
செயல்பாடு (3): கண்காணித்து சரிசெய்வேன்:
உமது சூழலில் தவ்ஹீதுல் உலூஹிய்யாவுடன் முரண்படும் நடத்தைகளில் மூன்றை உமது நண்பருடன் விவாதித்து, பின்னர் அவற்றைத் திருத்தவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
உள்ளம் சார்ந்த வணக்கங்களின் எடுத்துக்காட்டுகள்:
(நேசம் - தஸ்பீஹ் - நோன்பு)
தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்கு முரண்படக்கூடிய ஒன்று :
(தொழுகை - மறைவான அறிவை வாதாடுதல் - இறந்தவர்களிடம் பிரார்த்தித்தல்)
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவது ஓரிறைக் கொள்கையின் எந்த வடிவம்:
(உலூஹிய்யா - ருபூபிய்யா - பெயர்கள் மற்றும் பண்புகள்)
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
தவ்ஹீதுர் ரபூபிய்யா என்பது வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்வதாகும்.
சமாதிகளை வலம் வருவது (தவாப் செய்வது) தவ்ஹீதுல் உலூஹிய்யாவுடன் முரண்பட மாட்டாது.
ஸகாத் அல்லாஹ்வுக்காக அவசியம் செய்ய வேண்டிய உடல் சார்ந்த வணக்கமாகும்.
ருபூபிய்யாவை ஏற்றுக் கொண்டால் உலூஹிய்யாவை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
அனைத்து வித வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செலுத்துவது அவசியம் என்பதற்கு ஓர் ஆதாரம் எழுதுக.
தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்கு முரண்படும் இரண்டு செயல்களை எழுதுக.
பாடம் நான்கு : அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் ஒருமைப்படுத்துதல்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் என்பதன் அர்த்தத்தை விளக்குவீர்கள்.
அல்லாஹ்வின் பெயர்கள் உள்ளடக்கியுள்ள பண்புகளை சிந்தித்து எடுப்பீர்கள்.
அல்லாஹ்வின் பண்புகளின் வகைகளுக்கு மத்தியில் வேறுபிரித்து அறிவீர்கள்.
தவ்ஹீதின் மூன்று வகைகளுக்கும் மத்தியில் வேறுபிரித்து அறிவீர்கள்.
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை நம்பிக்கை கொள்வதன் அவசியத்தை உணர்வீர்கள்.
அல்லாஹ்வின் பெயர்கள் கொண்ட ஒரு பதாகையை வடிவமைக்க உங்களால் முடியுமாக இருக்கும்.
தவ்ஹீதின் ருபூபிய்யா, உலூஹிய்யாவின் வகைகளை நாம் கற்ற பின், மூன்றாம் வகையான தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்தை இப்பாடத்தில் நாம் கற்போம்.
தவ்ஹீதின் வகைகள் :
ருபூபிய்யா
உலூஹிய்யா
அஸ்மாஇ வஸ்ஸிபாத்
முதலாவது : தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாதின் அர்த்தம் :
தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் என்றால், அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் வந்துள்ள அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை நம்பிக்கை கொள்ளுதலாகும்.
அல்லாஹ்வின் அனைத்து பெயர்களும் மிக அழகானவை, பரிபூரணமானவை என்பதை ஈமான் கொள்வது இதில் அடங்கும். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன, அவற்றைக் கொண்டு அவனை நீங்கள் அழையுங்கள்". (அஃராப் : 180). அவ்வாறே, அல்லாஹ்வின் பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது என்பதை நம்பிக்கை கொள்வதும் அதனுள் அடங்கும். அல்லாஹ் கூறுகின்றான் : "அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்". (ஷூரா : 11).
இரண்டாவது : அல்லாஹ்வின் பெயர்கள் :
வரைவிலக்கணம் :
அல்லாஹ்வின் பெயர்கள் என்பது : அல்லாஹ் தனக்கென பிரத்தியேகமாக குறிப்பாக்கியுள்ள பெயர்களாகும், அவையனைத்தும் அல்லாஹ்வைப் புகழும் பெயர்களாகும். உதாரணமாக பின்வரும் வசனத்தைக் கூறலாம் : "அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன". (ஹஷ்ர் : 24).
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : "நிச்சயமாக அல்லாஹ்வே படைப்பவன், தடுத்துக்கொள்பவன், வாரி வழங்குபவன், வாழ்வாதாரமளிப்பவன்". (ஆதாரம் : திர்மிதி 1314).
அல்லாஹ்வின் பெயர்கள் அவனது பண்புகளைக் குறிக்கின்றன :
அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரும் அது குறிக்கும் பண்பை உள்ளடக்குகின்றது. உதாரணமாக "கஃபூர்" என்ற பெயர் அல்லாஹ்வின் மன்னிக்கும் பண்பைக் குறிக்கின்றது, "ரஹ்மான்" என்ற பெயர் அல்லாஹ்வின் இரக்கம் என்ற பண்பைக் குறிக்கின்றது. இவ்வாறுதான் அனைத்து பெயர்களும்.
மூன்றாவது : அல்லாஹ்வின் பண்புகள் :
இவை அல்லாஹ் தனக்கு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ள பண்புகளாகும். இவை பரிபூரணத்தைக் குறிப்பவையாகும். அவற்றை அல்லாஹ்வின் கண்ணியத்துக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொள்வது அவசியமாகும். உதாரணமாக “ஹயாத்” எனும் பண்பைக் கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; நன்கு நிர்வகிப்பவன்". (பகரா : 255).
அல்லாஹ்விடம் இல்லாத எதிர்மறைப் பண்புகள்:
மரணம், தூக்கம் போன்ற குறைகளுள்ள பண்புகளை அல்லாஹ் தன்னை விட்டும் மறுத்துள்ளான். அவன் கூறுகின்றான் : "மரணிக்காத என்றும் ஜீவித்திருப்பவனிடமே நீங்கள் பொறுப்புச் சாட்டுங்கள்". (ஃபுர்கான் : 58).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் உறங்க மாட்டான், அவனுக்கு உறங்கத் தேவையுமில்லை". (ஆதாரம் : முஸ்லிம் 179).
அநீதியை தன்னை விட்டும் மறுத்துள்ளான் : "உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் இழைக்கமாட்டான்". (கஹ்ஃப் : 49).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): பிரித்தெடுத்து வகைப்படுத்தவேன்:
அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், நன்கு நிர்வகிப்பவன்; அவனை ;சிறு தூக்கமோ, பெருந் தூக்கமோ பீடிக்கமாட்டாது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய 'குர்ஸி' வானங்களையும், பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்". (பகரா : 255).
உங்கள் இரண்டு சக நண்பர்களின் உதவியுடன், அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் மற்றும் அவன் தன்னைப் பற்றி மறுத்த பண்புகளை வசனத்திலிருந்து பிரித்தெடுக்கவும்:
அல்லாஹ்வின் பெயர்கள்
அல்லாஹ்வின் பண்புகள்
(அல்லாஹ்விடம் இல்லாத) எதிர்மறைப் பண்புகள்
செயல்பாடு (2) : ஒத்துழைத்து வடிவமைப்பேன் :
அல்லாஹ்வின் பத்து பெயர்களை எழுதும் பதாகை ஒன்றை வடிவமைக்க உங்கள் சக நண்பர்களில் ஒருவருடன் ஒத்துழைக்கவும், பின்னர் அதன் படத்தை சமூகதளங்களில் வெளியிடவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அல்லாஹ்வுக்கு நாம் எந்த நல்ல பெயரையும் சூட்டலாம்.
“அலீம்” என்ற அல்லாஹ்வின் பெயர் அறிவு எனும் பண்பை உள்ளடக்கியுள்ளது.
"சிறு தூக்கமோ, பெருந்தூக்கமோ அவனைப் பீடிக்காது" என்ற வசனம் (அல்லாஹ்விடம் உள்ள) ஒரு நேர்மறை பண்பை உள்ளடக்கியுள்ளது.
கே 2 : அடைப்புக்குறிக்குள் இருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
நபிகளாரின் ஸுன்னாவில் அல்லாஹ்வுக்கு இருப்பதாக கூறப்பட்ட பெயர்களில் உள்ளவை :
(கைப்பற்றுபவன் - நன்கு நிர்வகிப்பவன் - மகத்தானவன்)
அல்லாஹ் மறுத்த எதிர்மறைப் பண்புகளில் உள்ளவை :
(கேட்டல் - இறப்பு - அறிவு)
அல்லாஹ்வின் பெயர்களில் உள்ளவை :
(ஆதியற்றவன் - பார்ப்பவன் - சக்தி)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் என்பதன் அர்த்தம் என்ன?
அல்லாஹ்வைப் போன்று எப்பொருளும் இல்லை என்பதற்கு ஆதரமொன்று எழுதுக.
பாடம் ஐந்து : வணக்கம் மற்றும் அதன் வகைகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
வணக்கம் என்றால் யாது? என்பதை வரையறுக்க வேண்டும்.
வணக்கங்களின் வகைகள், அதன் வடிவங்களுக்கு மத்தியில் வேறுபிரித்து அறிவீர்கள்.
வணக்கத்தின் அவசியத்தை ஆதாரத்துடன் கூற வேண்டும்.
வணக்கத்தின் பயனை ஆதாரத்துடன் கூற வேண்டும்.
வணக்கத்தின் முக்கியத்துவத்தை மகத்துவப்படுத்த வேண்டும்.
உம் மீது கடமையான வணக்கங்களை நிறைவேற்ற அக்கறை கொள்ளல் வேண்டும்.
அறிமுகம்
தவ்ஹீதுல் உலூஹிய்யா என்றால் அல்லாஹ்வை வணக்க வழிபாடுகளில் ஒருமைப்படுத்துதல் என்பதை ஏற்கனே கற்றீர், எனவே வணக்கம் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் முக்கியத்துவம் மற்றும் பயன் என்ன?
இதைத்தான் பின்வரும் குறிப்புகளில் கற்கவுள்ளோம்:
வணக்கம்
வரைவிலக்கணம்
அதன் வகைகள் :
உள்ரங்கமானவை
வெளிப்படையானவை : உள்ளம் சார்ந்தவை, சொல் சார்ந்தவை, செயல் சார்ந்தவை, பணம் சார்ந்தவை
அதன் முக்கியத்துவம்
அதன் பயன்
முதலாவது : வணக்கத்தின் வரைவிலக்கணம் :
இபாதத் (வணக்க வழிபாடு) என்பது : வெளிப்படையான, மறைவான வார்த்தைகள் மற்றும் செயல்களில் அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமான ஒரு பொதுவான பெயராகும்.
இரண்டாவது : வணக்கத்தின் வகைகள் :
முதலாவது : உள்ரங்கமான வணக்கங்கள் :
இது உள்ளத்துடன் மாத்திரம் தொடர்புபடுவதால் இதற்கு உள்ளம் சார்ந்த வணக்கமென்றும் கூறப்படுகின்றது. இது வணக்கங்களில் மிக மகத்தானதும், முக்கியமானதுமாகும். ஏனெனில் உள்ளமே உண்மைப்படுத்தல் மற்றும் உறுதியான நம்பிக்கைக்குரிய இடமாகும்.
அல்லாஹ்வை நேசித்தல், அவனிடம் ஆதரவு வைத்தல், அவனை அஞ்சுதல், பொறுப்புச் சாட்டுதல், அவனிடமே உதவி கோரல் அவன் பக்கமே மீளுதல் போன்றன இதற்குரிய சில உதாரணங்களாகும். நபி ஸகரிய்யா (அலை) அவர்களின் குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்". (அன்பியாஃ : 90).
இரண்டாவது : வெளிப்படையான வணக்கங்கள் :
இது மூன்று வகைப்படும் :
சொல் ரீதியான வணக்கங்கள் : இரு சாட்சியங்களை மொழிதல், திக்ரு, குர்ஆன் திலாவத், அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுத்தல் போன்றன இதற்கு உதாரணமாகும்.
செயல் ரீதியான வணக்கங்கள் : நோன்பு, தொழுகை, ஹஜ், ஜிஹாத், பலவீனமானவர், தேவையுடையோருக்கு உதவுதல், அநீதியைத் தடுத்தல் போன்றன இதற்கு உதாரணமாகும்.
பண ரீதியான வணக்கங்கள் : ஸகாத், தர்மம், குடும்பத்தினருக்கு செலவு செய்தல், உழ்ஹிய்யா போன்றன இதற்கு உதாரணமாகும்.
மூன்றாவது : வணக்கத்தின் அவசியம் :
மனிதன் படைக்கப்பட்டதன் இறுதி இலக்கே வணக்கம்தான். அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை". (ஸாரியாத் : 56).
தூதர்கள் அனுப்பட்டதன் இறுதி இலக்கும் வணக்கம்தான். நபியவர்களை நோக்கி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "நிச்சயமாக என்னைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாறுமில்லை. எனவே என்னையே வணங்குங்கள். என (நபியே!) நாம் உமக்கு முன்னர் எந்தத் தூதருக்கும் வஹி அறிவிக்காமல் அவரை அனுப்பியதில்லை". (அன்பியாஃ : 25).
நான்காவது : வணக்கத்தின் பயன் :
அல்லாஹ்வை வணங்குதல் இவ்வுலக வெற்றிக்கும், மறுமையின் இன்பத்திற்கும் காரணமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஆணோ அல்லது பெண்ணோ நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம்.அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை அவர்களுக்கு வழங்குவோம்". (நஹ்ல் : 97).
மேலும் அல்லாஹ் கூறுகிறான் : "எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பர்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்". (gஃகாபிர் : 40).
செயற்பாடுகள்
செயற்பாடு: (2)அவதானித்து- பதிலளிக்கிறேன்
அல்லாஹ் கூறுகிறான்: "எவன் என் உபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்வு உண்டு". (தாஹா : 124).
இந்த வசனம் என்ன கூறுகின்றது?
இந்த வசனத்திற்கும் பாடத்தின் தலைப்புக்கும் என்ன தொடர்பு?
செயல்பாடு (2): அடையாளம் கண்டு வகைப்படுத்தவேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "மனிதர்களின் ஒவ்வொரு மூட்டுக்கும் தினமும் ஏதாவது ஒரு தர்மம் செய்தாக வேண்டும். இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை பாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்". (ஆதாரம் : புஹாரி 2989, முஸ்லிம் 1009).
உங்கள் ஆசிரியருடன் பங்கெடுத்து, ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள வணக்க முறைகளை பொருத்தமான இடத்தில் ஒரு குறி (√) வைப்பதன் மூலம் செயல் மற்றும் சொல் சார்ந்த வணக்கங்களாக வகைப்படுத்தவும் :
வணக்கம் சொல்சார்ந்தது செயல்சார்ந்தது
இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது. சொல் சார்ந்தது
செயல்பாடு (3): வழிமுறைகளைப் பரிந்துரைப்பேன் :
தொழுகை என்பது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும். அதனை உரிய நேரத்தில் நிறைவேற்ற உதவும் மூன்று வழிகளை பரிந்துரைக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
அச்சம் மற்றும் ஆதரவு வைத்தல் எந்த வணக்க வகையைச் சேர்ந்தது :
(பணம் சார்ந்தது - உள்ளம் சார்ந்தது - செயல் சார்ந்தது)
உழ்ஹிய்யா எந்த வணக்க வகையைச் சேர்ந்தது :
(செயல் சார்ந்தது - சொல் சார்ந்தது -பணம் சார்ந்தது)
சுவனம் நுழைவதும், உள அமைதியும் வணக்கத்தின் :
(வணக்கத்தின் வகையாகும் - வணக்கத்தின் பயனாகும் - வணக்கத்தின் கடமைகளாகும்)
கே 2 : பின்வரும் இரண்டு வாக்கியங்களை முடிக்கவும்:
இபாதத் (வணக்க வழிபாடு) என்பது : ..................................................... வார்த்தைகள் மற்றும் செயல்களில் அல்லாஹ் ..........................., அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமான ஒரு பொதுவான பெயராகும்.
வணக்கமே மனித படைப்பின் நோக்கம். இவ்வசனம் அதற்கு ஆதாரமாகும்: (.........................).
கேள்வி 3 : பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
சொல் சார்ந்த வணக்கங்களே, இதர வணக்கங்களின் அடிப்படையாகும்.
வணக்கத்தைப் பேணி வருவது சடைவு, நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
பாதையை சுத்தம் செய்வதற்கு நற்கூலி ஏதுமில்லை.
பாடம் ஆறு : வணக்கத்தின் நிபந்தனைகள் மற்றும் கடமைகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
வணக்கத்தின் நிபந்தனைகளைத் தெளிவுபடுத்தல் வேண்டும்.
வணக்கத்தின் கடமைகள்ளை கூற வேண்டும்.
வணக்கத்தின் நிபந்தனைகள் மற்றும் கடமைகளுக்கான ஆதரங்களைக் கூற வேண்டும்.
வணக்கத்தின் நிபந்தனை இல்லாமல் போவதன் தாக்கத்தைக் கூற வேண்டும்.
வணக்கத்தின் நிபந்தனைகள் மற்றும் கடமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர வேண்டும்.
உங்கள் வணக்கத்தில் உளத்தூய்மை மற்றும் நபிவழி என்ற நிபந்தனைகளைப் பேணவேண்டும்.
அச்சம், ஆதரவு வைத்தல் என்பவற்றிற்கிடையில் சமநிலை பேண வேண்டும்.
முதலாவது : வணக்கத்தின் நிபந்தனைகள்
அல்லாஹ் தனது வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொரு முஸ்லிமும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வணக்கத்திலும் இரண்டு அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாலன்றி இதை அடைய முடியாது. அவை : உளத்தூய்மை மற்றும் நபிவழியைப் பின்பற்றல் ஆகும்.
முதல் நிபந்தனை: உளத்தூய்மை:
அடியான் தன் எல்லா செயல்களாலும், வார்த்தைகளாலும் தனது உள்ளத்தில் அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை". (பய்யினா : 5).
அல்லாஹ்வைத் தவிர வேற நோக்கங்கள் வணக்கம் அழிக்கப்பட வழிவகுக்கும் மற்றும் அதன் வெகுமதியை இழக்க வைக்கும். அல்லாஹ் கூறுகின்றான் : “நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்”. (ஸுமர் : 65).
இரண்டாவது நிபந்தனை : நபிவழி :
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒரு முஸ்லிம் தனது இறைவனை வணங்குவதன் மூலம் இது அடையப்படுகிறது. அல்லாஹ் கூறுகின்றான் : " (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்". (ஹஷ்ர் : 7).
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்றி வேறு வழியில் வழிபடுவது, வணக்க வழிபாடுகள் அழியவும் அதன் பலனை இழக்கவும் செய்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்'. (ஆதாரம் : புஹாரி 2697).
இரண்டாவது: வணக்கத்தின் கடமைகள்
வணக்கம் :
நேசம்
ஆதரவு வைத்தல்
அச்சம்
முதல் கடமை : அல்லாஹ்வை நேசித்தல் :
நேசம் என்பது நேசிக்கப்படுபவரிடம் இதயம் சாய்வதாகும். மேலும் அல்லாஹ்வின் மீதான நேசம், அவனிடம் உள்ளதை விரும்புவது, கீழ்ப்படிதல் மற்றும் பாவங்களைத் தவிர்ப்பதன் மூலம் அவனைத் திருப்திப்படுத்த உழைப்பதும் ஆகும்.
இது ஈமானுடன் இணைபிரியாத ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வும் அவனது தூதரும் மற்ற எதையும் விட அவருக்கு மிகவும் பிரியமானவர்களாக இருக்கும் வரை உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ள மாட்டீர்கள்." (ஆதாரம் : அஹ்மத் 12739).
அல்லாஹ்வின் நேசத்துடன் நபி (ஸல்) அவர்கள் மீதான நேசம், புனித குர்ஆன் மற்றும் முஸ்லிம்களை நேசித்தல், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு நன்மையையும் உயர்வையும் தரும் அனைத்தையும் நேசித்தல் என்பனவும் இணைகின்றன.
இரண்டாவது தூண் : ஆதரவு வைத்தல் :
இதன் பொருள்: அல்லாஹ்வின் கருணையின் மீதான பற்றுதல், அவனுடைய நன்மை மற்றும் அருளை எதிர்பார்த்தல், அவனுடைய கருணை மற்றும் கொடையை ஆசைப்படுவதுடன், முயற்சி செய்து, அல்லாஹ்வின் மீது அழகாக பொறுப்புச் சாட்டுதல் என்பதாகும்.
எனவே விசுவாசி தனது இரட்சகனிடம் தனது பாவங்களை மன்னிப்பதை எதிப்பார்ப்பான். நபி இப்ராஹீம் (அலை) கூறினார்கள் : "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்". (ஷுஅராஃ : 82).
மூன்றாவது கடமை : அச்சம் :
இதன் பொருள்: அல்லாஹ்வையும், அவனுடைய கோபம் மற்றும் வேதனை என்பவற்றையும் அஞ்சுவதுடன், அவனை மகத்துவப்படுத்தி நேசிப்பதாகும். விளைவாக, அடியான் அல்லாஹ் தனக்குக் கட்டளையிட்டதைச் செய்யவும், அவன் தடுத்ததை விடவும் விரைய வேண்டும். இது பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது : "என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சகிறேன்" என்று (நபியே!) நீர் கூறும். (அன்ஆம் : 15).
பயத்திற்கும் ஆதரவுக்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். அல்லாஹ் நபி ஸகரியாவையும் அவரது குடும்பத்தினரையும் புகழ்ந்து பின்வருமாறு கூறுகின்றான் : "நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்". (அன்பியாஃ : 90).
செயற்பாடுகள்
செயற்பாடு: (1) அவதானித்து- பதிலளிக்கிறேன்
மறுமையில் முதலாவது தீர்ப்புச் செய்யப்படுபவர் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் : "கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)”அறிஞர்" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "அழகாக ஓதுபவர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்". (ஆதாரம் : முஸ்லிம் 1905).
மேற்கண்ட ஹதீஸைக் கருத்தில் கொண்டு, பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
இந்த மனிதர் நரகிற்குச் செல்வதற்கான காரணத்தை ஹதீஸில் இருந்தே கண்டறியுங்கள்.
வணக்கத்தில் உளத்தூய்மையைக் கடைப்பிடிக்கவில்லை, எனவே அவரது வணக்கம் ஏற்கப்பட வில்லை. தான் ஓர் அறிஞர், காரீ எனக் கூறப்படுவதற்காக குர்ஆனைக் கற்று ஓதினார்.
இந்த நபிமொழியை நீர் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வைக் விவரிக்கவும். பின்னர் இந்த மனிதரைப் போன்று நாம் ஆகிவிடாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தவும்.
செயற்பாடு (2) : பார்த்து விடையளிப்பேன்
அல்லாஹ் கூறுகிறான்: "எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா?" (ஸுமர் : 9).
இந்த வசனத்திலிருந்து பெறப்படும் படிப்பினையைத் தெளிவுபடுத்தவும்.
பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ கிளிப்பைப் பார்க்கவும். அதிலுள்ள முக்கியமானவற்றை சுருக்கவும்:
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுவதுடன், பிழையைத் திருத்துக.
உளத்தூய்மையை விட்டுவிடுவது நற்கூலி குறைவதற்கு வழிவகுக்கிறது. (X)
நபிவழி என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அல்லாஹ்வை வணங்குவதை வேண்டி நிற்கின்றது. (√)
வணக்கத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அது செல்லுபடியாகவும் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கும் வழிவகுக்கிறது. (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஒரு முஸ்லிம் பயத்துடன் சமநிலை வேண்டிய மற்ற விடயம்:
(மகிழ்ச்சி - கவலை - ஆதரவு வைத்தல்)
அல்லாஹ்வுடன் பயத்துடன் மட்டுமே நடந்து கொள்வது இதற்கு வழிவகுக்கிறது:
(நிராசை - வெற்றி - நற்சகுனம்)
அல்லாஹ்வின் நேசத்துடன் இணைய வேண்டிய நேசம் :
(முஸ்லிம்கள் - பாவிகள் - காபிர்கள்)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை எண்ணம் அவசியம் என்பதைக் குறிக்கும் அல்குர்ஆன் வசனமொன்றை எழுதவும்.
பின்வருவன ஒவ்வொன்றின் பொருள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குங்கள்: (நேசம் - ஆதரவு வைத்தல் - பயம்).
பாடம் ஏழு : ஈமானின் அதிகரிப்பும், குறைவும்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஈமான் எனும் நம்பிக்கை அதிகரிக்கவும் குறையவும் செய்யும் என்பதற்கான ஆதாரத்தைக் கூற வேண்டும்.
எது ஈமானை அதிகரிக்கிறது, எது குறைக்கிறது என்பதைக் கூறவேண்டும்.
விசுவாசிகளிடையே ஏற்றத் தாழ்வு ஏற்படுவதற்கான காரணத்தைக் கூறவும்.
ஈமான் குறைவதன் விபரீதத்தைக் குறிப்பிடவேண்டும்.
உமது ஈமானை அதிகரிக்க அக்கறை கொள்ளவேண்டும்.
ஆரம்ப செயற்பாடு:
ஒரு நண்பர் சொன்னார்: "ஈமான் என்பது ஒரு நிலையான விஷயம், அது அதிகரிக்கவோ குறையவோ மாட்டாது." நல்ல செயல்கள் ஈமானுடன் தொடர்புபட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்த பிறகு இதற்கான உமது பதில் என்ன?
இந்தப் பாடத்தைப் படித்த பிறகு உமது பதிலை மதிப்பிடவும்.
ஈமான் அதிகரித்தலும் குறைதலும் :
அதன் ஆதாரங்கள்
ஈமானை அதிகரிக்கும் செயல்கள்
ஈமானைக் குறைக்கும் செயல்கள்
விசுவாசிகளிடையிலான ஏற்றத் தாழ்வு
முதலாவது: ஈமான் அதிகரிக்கும் மற்றும் குறையும் என்பதற்கான ஆதாரங்கள் :
ஈமான் என்பது நம்பிக்கை, வார்த்தைகள் மற்றும் செயல்களாகும். எவ்வளவு அதிகமாக விசுவாசியின் உள்ளம் உறுதியடைகிறதோ, அவ்வளவு அதிகமாக அவனது ஈமானும் அதிகரிக்கும். மேலும் அவனது நாவு மற்றும் உறுப்புக்கள் எவ்வளவு அதிகமாக வழிபடுகிறதோ, அவ்வளவு அதிகமாக அவனது ஈமான் அதிகரிக்கும். எனவே, வணக்கங்களால் ஈமான் அதிகரிக்கிறது மற்றும் பாவங்களால் குறைகிறது.
இதயத்தில் உறுதியும் நம்பிக்கையும் அதிகரிப்பதை பின்வரும் இறைவசனம் சுட்டிக் காட்டுகின்றது. "இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன், “நீர் (இதை) நம்பவில்லையா?” எனக் கேட்டான்; அதற்கு அவர், “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார்". (பகரா : 260).
வழிப்படுதல்கள் மூலம் ஈமான் அதிகரிக்கும் என்பதற்கான ஒரு ஆதாரம்: "நம்பிக்கை கொண்டோர் யார் எனில், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்." (அன்ஃபால் : 2).
இரண்டாவது: ஈமானை அதிகரிக்கும் செயல்கள்:
வணக்கங்களைச் செய்வதன் மூலம் ஈமான் அதிகரிக்கிறது, எடுத்துக்காட்டாக:
அல்லாஹ்வை அறிதல். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வளவு அறிகின்றானோ அவ்வளவு ஈமானும் உள்ளச்சமும் அதிகரிக்கும். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக தனது அடியார்களில் அல்லாஹ்வை அஞ்சுவதெல்லாம் அறிஞர்களே" (பாதிர் : 28).
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல், இதனை பின்வரும் நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது : ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமான் எனும் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது'' (ஆதாரம் : புஹாரி 16, முஸ்லிம் 43).
நற்குணங்கள் : இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : ''முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே, இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்''. (ஆதாரம் : திர்மிதி 1162).
மூன்றாவது : ஈமானைக் குறைக்கும் செயல்கள் :
எல்லா பாவங்களும் ஈமானில் குறை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் பெரிய பாவங்களைச் செய்வதால் மேலும் அதிகமாக குறைகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை.'' (ஆதாரம் : புஹாரி 2475, முஸ்லிம் 57).
நான்காவது : விசுவாசிகளிடையிலான ஏற்றத் தாழ்வு :
விசுவாசிகள் தங்கள் செயல்கள் மற்றும் உளத்தூய்மைக்கு ஏற்ப ஈமானில் வேறுபடுகிறார்கள். எனவே, சுவர்க்கத்தில் விசுவாசிகளின் அந்தஸ்துகள், அவர்களின் நம்பிக்கை மற்றும் செயல்களுக்கு ஏற்ப மாறுபடும்.
ஒரு முஸ்லிம், ஈமானின் மிக உயர்ந்த நிலைக்கு உயர்வதற்காக வழிபாடுகளையும் நற்செயல்களையும் செய்ய முயல வேண்டும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): விவாதித்து புரிந்து கொள்வேன் :
அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார் : 'உண்மையில், அடியான் தனது நம்பிக்கையை (ஈமானை) அதிகரித்ததும், குறைத்ததும் எவை என்பதை அறிவது அவனிடமுள்ள மார்க்க விளக்கத்தின் ஒரு பகுதியாகும்'. (ஆதாரம் : அல்கல்லாலின் அஸ்ஸுன்னா 1585).
ஒரு முஸ்லிம் தனது நம்பிக்கை (ஈமான்) அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை எப்படி அறிவார் என்பதை உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடவும்.
செயல்பாடு (2) : சிந்தித்து அடையாளம் காணுவேன் :
நீங்கள் செய்யும் பல நற்செயல்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பதாக நீங்கள் கருதும் ஐந்து நல்ல செயல்களை அடையாளம் காணவும்.
செயல்பாடு (3) : பார்த்து சுருக்குவேன்:
பின்வரும் காணொளியைப் பார்த்து விட்டு, பின்பு, நீங்கள் புரிந்துகொண்டதை ஐந்து வரிகளில் சுருக்கவும்:
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
கீழ்ப்படிதலால் ஈமான் அதிகரிக்கிறது, ஆனால் பாவத்தால் அது குறைவதில்லை. (×)
அறிவைப் பெறுவது நம்பிக்கையை (ஈமானை) அதிகரிக்க வழிவகுக்கிறது. (✓)
முஃமின்கள் அனைவரும் சுவர்க்கத்தில் சமமாக இன்பம் பெருவார்கள். (×)
மக்களுக்கு அநீதியிழைப்பது பலவீனமான நம்பிக்கையைக் குறிக்கிறது. (✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
மார்க்க ஆதாரங்கள் கூறும் விதத்தில் நம்பிக்கை என்பது :
(கூடுகிறது ஆனால் குறையாது - அதிகரிக்காது ஆனால் குறையும் - அதிகரிக்கிறது மற்றும் குறைகிறது)
நம்பிக்கையை அதிகரிப்பதற்கான காரணிகளில் ஒன்று:
(அடிக்கடி மன்னிப்பு தேடுதல் - மோசமான நடத்தை - குர்ஆனை கைவிடுதல்)
எல்லா பாவங்களும் ஈமானைக் குறைக்கின்றன, அவற்றில் மிகக் கடுமையானவை:
(பெரிய பாவங்கள் - சிறிய பாவங்கள் - லமம் எனும் சிறிய பாவங்கள்).
கே 3 : பின்வரும் இரண்டு ஆதாரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதை விளக்கவும் :
அல்லாஹ் கூறுகின்றான்: "மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்''.
ஸுன்னா மற்றும் குணாதிசயப் பகுதி
பாடம் ஒன்று : தனது உறவினர்களுடன் நபிகளாரின் வழிமுறை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: ( இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நபி (ஸல்) அவர்கள் தனது உறவினர்களுடன் நடந்து கொண்ட வழிமுறையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தனது உறவினர்களுடன் அழகாக நடந்து கொண்டதற்கு ஆதாரம் காட்டவேண்டும்.
நபியவர்களைப் பின்பற்றி உமது உறவினர்களைச் சேர்ந்து நடக்கவேண்டும்.
உறவினர்களுக்கு உபகாரம் செய்வதில் இஸ்லாம் எடுத்திருக்கும் கரிசனையை மெச்சவேண்டும்.
நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகளை மெச்ச வேண்டும்.
தனது முஸ்லிமான உறவினர்களுடன் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை :
தனது உறவினர்களை நபி (ஸல்) அவர்கள் கண்ணியப்படுத்தியமை.
அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் மகிழ்ந்தமை, அவர்களுக்காக கவலைப்பட்டமை.
அவர்களது பிள்ளைகளை நபி (ஸல்) அவர்கள் பராமரித்தமை.
உறவினர்களுக்கு இஸ்லாத்தில் பல உரிமைகள் உண்டு. நபி (ஸல்) அவர்கள் இந்த உரிமைகளை முழுவதுமாக நிறைவேற்றினார்கள். இதை அவர்கள் தமது முஸ்லிமான உறவினர்களுடன் நடந்த முறையை விளக்குவதன் மூலம் தெளிவுபடுத்துவோம்.
தனது உறவினர்களை நபி (ஸல்) அவர்கள் கண்ணியப்படுத்தியமை :
நபி (ஸல்) அவர்கள் தனது உறவினர்கள் அனைவரையும் மதித்தார்கள். அவர் தனது சித்தப்பா அப்பாஸ் (ரலி) அவர்களுடன் தனது தந்தையைப் போன்று நடந்து கொண்டார்கள். தனது நபிமொழியில் இதை விளக்கினார்கள் : "ஒரு மனிதரின் தந்தையின் சகோதரர் அவரது தந்தையைப் போன்றவராவார்". (ஆதாரம் : முஸ்லிம் 983).
தனது தாயார் அமினா பின்த் வஹ்பின் சித்தப்பாவின் புதல்வராவாரான ஸஃத் பின் அபி வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறினார்கள்: "இவர் எனது தாய்மாமனாகும், இது போன்ற தாய்மாமன் யாருக்காவது இருந்தால் காட்டட்டும்". (ஆதாரம் : திர்மிதி 3752).
அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் மகிழ்ந்தமை, அவர்களுக்காக கவலைப்பட்டமை.
நபி (ஸல்) அவர்கள், அபிசீனியாவிலிருந்து வந்த ஜஃபர் பின் அபி தாலிப் (ரலி) அவர்களை முத்தமிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: "கைபருடைய வெற்றியைப் பார்த்தா, ஜஃபருடைய வருகையைப் பார்த்தா, எதைப் பார்த்து நான் மகிழ்வேன் என்று விளங்கவில்லை" (ஆதாதரம் : ஹாகிம் 4249).
ஹிஜ்ரி 3ஆம் ஆண்டு உஹதுப் போரில் சிற்றப்பா ஹம்ஸா (ரலி) அவர்கள் வீரமரணம் அடைந்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் மிகவும் வருந்தினார்கள்.
அவர்களது பிள்ளைகளை நபி (ஸல்) அவர்கள் பராமரித்தமை.
நபி (ஸல்) அவர்கள் தனது உறவினர்களின் குழந்தைகளைப் பராமரித்தார்கள். தனது பெரியதந்தையின் மகனாகிய அலி பின் அபீ தாலிப் (ரழி) அவர்களை நபியவர்களே வளர்த்தார்கள். ஹிஜ்ரி 8ல் முவத்தா போரில் அதே பெரிய தந்தையின் புதல்வர் ஜஃபர் (ரலி) வீரமரணம் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் அவரது குழந்தைகளை கவனித்துக் கொண்டார்கள். மேலும் கூறினார்கள் : "ஈருலகிலும் நானே அவர்களுக்குப் பொறுப்பாளி". (ஆதாரம் : அஹ்மத் 1750).
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத தனது உறவினர்களுடன் நடந்து கொண்ட முறை :
அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதில் அக்கறை கொள்ளல்.
அவர்களது துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ளல்.
அவர்களுக்கு இரக்கம் காட்டுதல்
அவர்களை சேர்ந்து நடத்தல்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத தனது உறவினர்களுடன் கருணை மற்றும் நல்லுபகாரம் புரிதல் என்ற கொள்கையின் அடிப்படையில் கையாண்டுள்ளார்கள் என்பது பின்வருவனவற்றின் மூலம் புலப்படுகின்றது :
அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதில் அக்கறை செலுத்துதல் :
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்காத தனது உறவினர்களின் நோவினையைத் தாங்கிக் கொள்வார்கள். இஸ்லாத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் சட்டங்களை அவர்களுக்கு விளக்குவதற்காக அவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள்.
ஒரு சமயம், நபி (ஸல்) அவர்கள், ஒரு விருந்து தயாரித்து, அதற்கு பனூ ஹாஷிமிலிருந்து நாற்பது பேரை அழைத்தார்கள். அதில் அவரது சிற்றப்பாக்கள், பெரியப்பாக்களான அபூதாலிப், ஹம்ஸா, அல்-அப்பாஸ் மற்றும் அபு லஹப் போன்றோரும் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள்.
நபியவர்கள் தனது பெரிய தந்தை அபூ தாலிபை அவரது இறுதி நாள் வரை இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தீங்கிழைத்த போது பொறுமையாக இருந்தமை:
நபி (ஸல்) அவர்களை அவர்களது முஸ்லிமல்லாத உறவினர்கள் துன்புறுத்தியபோது பொறுமையாக இருந்தார்கள். உதாரணமாக, சந்தைகளில் அவர்களின் பின்னால் நடந்து, அவரைப் பொய்பித்து, அவர் சொல்வதைக் கேட்காமலிருக்க மக்களைப் பயமுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்ட அன்னாரின் பெரியப்பா அபூ லஹபின் நோவினையையும் சகித்துக் கொண்டார்கள்.
அபூ லஹபின் மனைவி உம்மு ஜமீலும் நபியவர்களைத் துன்புறுத்தி, அன்னாருக்கு ஏசக் கூடியவளாக இருந்தாள். அன்னாரது வீட்டிற்கு முன்னால் கழிவுகளை வீசுவாள். அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.
அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டி, அவர்களுக்காக பிரார்த்தனைகளும் செய்வார்கள் :
உஹதுப் போரின் போது அம்மக்கள் தன்னைக் கொன்றுவிட வேண்டுமென விடாப்பிடியாக இருந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தித்து பின்வருமாறு கூறினார்கள் : "அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள். எனவே, அவர்களை மன்னித்திடுவாயாக". (ஆதாரம் : புஹாரி 3477, முஸ்லிம் 1792).
நபி (ஸல்) அவர்கள் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடந்தமை:
நபி (ஸல்) அவர்கள் தனது முஸ்லிமல்லாத உறவினர்களுடன் சேர்ந்து நடப்பார்கள். அதுபற்றி பின்வருமாறு கூறினார்கள் : "அவர்களுடன் உறவுமுறை இருக்கின்றது. அதை வைத்து அவர்களுடன் சேர்ந்து நடப்பேன்". (ஆதாரம் : புஹாரி 5990).
செயற்பாடுகள்:
செயல்பாடு (1): ஒத்துழைத்து இறுதிச் சுருக்கத்தைப் பெறுவேன் :
உங்கள் நண்பர்களுடன் ஒத்துழைத்து, பின்வரும் ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்களின் உறவினர்களுடனான வழிகாட்டுதலைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் கண்டறியவும் :
ஹதீஸ் அது உணர்த்தும் அர்த்தம்
நபி (ஸல்) அவர்களுக்கு குரைஷியர் கடுமையாக நோவினை செய்த போது : ''முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று மலைகளுக்குப் பொறுப்பான வானவர் கூறினார். "உடனே, '(வேண்டாம்;) மாறாக, இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்" என்று கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 3231, முஸ்லிம்1795). தனது முஸ்லிமல்லாத உறவினர்கள் மீதான நபி (ஸல்) அவர்களின் இரக்கம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னைத் தம் மார்போடு அணைத்துக் கொண்டு கூறினார்கள்: "இறைவா இவருக்கு நீ அறிவு ஞானத்தைக் கொடுத்து விடு". (ஆதாரம் : புஹாரி 3756, முஸ்லிம் 2477).
தனது முஸ்லிம் உறவினர்களின் பிள்ளைகளை நபி (ஸல்) அவர்கள் கவனித்தமை.
செயற்பாடு :(2)கலந்துரையாடி அபிப்பிராயங்களை கூறுவேன்:
உங்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரியருடன் கலந்துரையாடி, உங்கள் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு அழைக்க மூன்று வழிகளைப் பரிந்துரைக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உறவினர்களை மட்டுமே சேர்ந்து நடப்பார்கள். (✖)
உறவினர்களை நன்மையின் பால் அழைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். (✓)
நபி (ஸல்) அவர்கள் தம் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது மகிழ்ச்சியாகவும், அவர்கள் சோகமாக இருக்கும்போது வருத்தமாகவும் இருந்தார்கள். (✓)
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத தனது உறவினர்களுடன் பழகுவதைத் தவிர்த்தார்கள். (✖)
நபி (ஸல்) அவர்கள் தமது உறவினர்களின் பிள்ளைகளை அவர்களின் மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் கவனித்துக் கொண்டார்கள். (✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நபி (ஸல்) அவர்கள் ..................................................க்குப் பிரார்த்தித்தார்கள். பின்னர், அவர் குர்ஆனில் தேர்ச்சி பெற்ற அறிஞரானார்.
(அலி பின் அபி தாலிப் (ரலி) - அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) - ஸஃத் பின் அபி வக்காஸ் (ரலி))
நபி (ஸல்) அவர்கள் தனது சிற்றப்பா .................................................. உஹதுப் போரில் வீரமரணம் அடைந்த போது கவலைப் பட்டார்கள்.
(ஹம்ஸா (ரலி) - அப்பாஸ் (ரலி) - அபூ தாலிப்)
கே 3 : உறவினர்களுடனான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில், பின்வரும் விடயங்களுக்கு ஒவ்வோர் உதாரணத்தைக் குறிப்பிடவும்:
அவர்களது நேர்வழியில் நபியவர்கள் கொண்டிருந்த அக்கறை.
அவர்களது துன்புறுத்தல்களின் போது நபியவர்களின் பொறுமை.
தனது குடும்பத்தில் இருந்த சிறார்களை நபியவர்கள் கவனித்தமை.
பாடம் இரண்டு : தனது அயலவர்களுடன் நபிகளாரின் வழிமுறை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
தனது அயலவர்களுடன் நபிகளாரின் வழிமுறையின் முக்கிய அம்சங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இஸ்லாத்தில் அயலவர்களுக்கு உபகாரம் செய்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அயலவர்களுடனான நபியவர்களின் அழகிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அயலவர்களைத் துன்புறுத்துவது ஹராம் என்பதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட வேண்டும்.
அறிமுகம் :
அல்லாஹ் நம் நபி (ஸல்) அவர்களுக்கு அண்டை வீட்டாரை உபசரிக்கும்படி பலமுறை உபதேசித்துள்ளான். மேலும் அவர்களுக்குச் செய்ய வேண்டி பல கடமைகளையும் விதித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு, அவர்களைப் பற்றி ஜிப்ரீல் (அலை) எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்". (ஆதாரம் : புஹாரி 6014, முஸ்லிம் 2625).
நபி (ஸல்) அவர்கள் அந்தக் கட்டளையை முழுமையாகவே நிறைவேற்றினார், பின்வருவன அதற்கு ஆதாரமாக உள்ளன:
தனது அயலவர்களுடன் நபிகளாரின் வழிமுறை :
அயலவர்களுக்கு உபகாரம் செய்தல்
அயலவர்களுக்கு உதவுதல்
அவர்களுக்கு நலவு நாடுதல்
அவர்களது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்தல்
அவர்களது துன்புறுத்தல்களை சகித்துக் கொள்தல்.
அயலவர்களைத் துன்புறுத்தாதிருத்தல்.
அயலவர்களுக்கு உபகாரம் செய்தல் :
அயலவர்களை மதித்து, உபகாரம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன், அதை அல்லாஹ்வைப் பரிபூரணமாக ஈமான் கொண்டதற்கான ஒரு சான்றாகவும் ஆக்கியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வையும், மறுமையையும் ஈமான் கொள்பவர் தனது அயலவருக்கு உபகாரம் செய்யவும்". (முஸ்லிம் : 48).
அயலவர்களுக்கு உதவுதல் மற்றும் அவர்களுக்கு நலவு நாடுதல் :
நபி (ஸல்) அவர்கள் தம் அண்டை வீட்டாரின் நிலைமைகளைக் கேட்டறிந்து, அவர்களின் அன்றாட விவகாரங்களில் உதவி செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "தனது அயல்வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்புபவன் பரிபூரண விசுவாசியல்ல". (ஆதாரம் : பைஹகி 20160). அதாவது : அவர் பசியாக இருப்பதை அறிந்து, அவருக்கு உதவ முடியுமாக இருந்தும், அவர் அவருக்கு உதவவில்லை என்றாலே இந்த எச்சரிக்கை.
நபி (ஸல்) அவர்கள், அயல் வீட்டாருக்கு நலவு நாடுமாறு உபதேசித்துள்ளார்கள். மேலும் அன்னார் கூறினார்கள் : "தான் விரும்புபவற்றை தனது அயலவருக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவரும் உண்மை விசுவாசியாக மாட்டார்". (ஆதாரம் : முஸ்லிம் 45).
அயலவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளுதல்:
அயலவர் தனது வீட்டுத் திருமணம், அகீகா மற்றும் சித்தியடைதல் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும், அதே போல் நோய்வாய்ப்பட்ட நேரம் அல்லது உறவினரின் மரணம் போன்ற துன்பத்தின் போது அவருக்கு ஆதரவாக நிற்கவும் ஒருவரை எதிர்பார்ப்பார்.
அவர்களது துன்புறுத்தல்களை சகித்துக் கொள்தல் :
நபி (ஸல்) அவர்கள் மக்காவில்- குறிப்பாக பகிரங்கமாக அழைப்புப் பணியை ஆரம்பித்த போது - தனது காஃபிரான அயலவர்களின் தீங்கைத் தாங்கினார்கள். அபூ லஹப் நபியை தூற்றியதுடன், பொய்யர் எனவும் குற்றம் சுமத்தினான். மற்றும், அவரது மனைவி உம்மு ஜமீல், நபியவர்களின் வீட்டின் முன் முட்களை வைப்பாள். எனினும், நபியவர்கள் அந்த நோவினைக்குப் பதிலீடாகப் பழிதீர்க்கவில்லை.
அயலவர்களைத் துன்புறுத்தாதிருத்தல்:
நபி (ஸல்) அவர்கள் அயலவர்களை நோவினைப் படுத்த மாட்டார்கள், ஏனையோருக்கும் அவ்வாறு அயலவர்களை நோவினைப் படுத்த வேண்டாமென ஏவினார்கள். அன்னார் கூறினார்கள் : "யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது அயலவர்களை நோவினை செய்ய வேண்டாம்". (ஆதாரம் : புஹாரி 6018).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): கண்டெடுத்து, வார்த்தைகளில் கொண்டுவருவேன் :
உங்கள் சக நண்பர்களுடன் ஒத்துழைத்து, அயலவர்களிடம் கருணை காட்டுவது அல்லது அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பது போன்ற வடிவங்களை பின்வரும் ஆதாரங்களில் இருந்து பிரித்தெடுக்கவும் :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் உபகாரத்தின் வடிவம் அல்லது நோவினையின் வடிவம்
ஒரு மனிதர் கூறினார்: அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்ணுடைய அதிக தொழுகைகள், நோன்புகள் மற்றும் தர்மங்கள் பற்றிப் பேசப்படுகின்றது. தவிர, அவள் தனது நாவினால் அயலவர்களுக்கு தீங்கு விளைவிப்பாள். அப்போது நபியவர்கள் : "அவள் நரகில்" என்றார்கள். (ஆதாரம் : அஹ்மத் 9675). அயலவருக்கு ஏசுதல், அவர்களுடன் மோசமாகப் பேசுதல்
அபு தர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் நண்பர் நபி (ஸல்) பின்வருமாறு எனக்கு அறிவுரை கூறினார்: "நீங்கள் குழம்பு சமைக்கும்போது, அதிக தண்ணீர் சேர்க்கவும். பின்னர் உங்கள் அயலவர்களைப் பார்த்து, அவர்களுக்கும் கொடுத்து உதவி செய்யுங்கள்." (ஆதாரம் : முஸ்லிம் 2625).
அயலவர்களுக்குத் தேவையானவற்றை அன்பளிப்புச் செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றி குறிப்பிடுகையில் : "உமது அயலவரின் மனைவியுடன் விபச்சாரம் புரிவது" என்று கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 4477, முஸ்லிம் 86).
அவருடைய மானம், கண்ணியத்தில் அத்துமீறுதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் தனது மரக்கட்டையை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' (ஆதாரம் : புஹாரி 2463, முஸ்லிம் 1609).
அவருக்குப் பயனுள்ள, நலவுள்ள விடயங்களை செய்ய இடமளித்தல்.
செயல்பாடு (2) : ஒத்துழைத்து ஒப்பிடுவேன் :
பின்வரும் ஒவ்வொரு வடிவத்திலும் உங்கள் அயலவருக்கு நீங்கள் வழங்கக்கூடிய சில வகையான உபகாரங்களைப் பரிந்துரைப்பதில் உங்கள் சக நண்பர்களுடன் ஒத்துழைக்கவும்:
ஒப்படை (3): என்னை பரீட்சித்துக்கொள்கிறேன்.
மொத்த மதிப்பெண் (15) புள்ளிகள் என்று குறிப்பிட்டு, உங்களுக்குப் பொருத்தமான தேர்வுக்கு அடுத்ததாக ஒரு அடையாளத்தை வைப்பதன் மூலம், உங்கள் அயலவர்களுடனான உங்கள் தொடர்புகளின் அடிப்படையில் உங்களை மதிப்பீடு செய்யுங்கள். புள்ளி வழங்கல் முறை பின்வருமாறு: (3 புள்ளிகள்) "எப்போதும்" என்ற தெரிவிற்கு, (2 புள்ளிகள்) "சில நேரங்களில்" என்ற தெரிவிற்கு, மற்றும் (1 புள்ளி) "அரிதாக" என்ற தெரிவிற்கு.
இல வசனம் பதிலின் தரம் :
எப்போதும் சில நேரங்களில் அரிதாக :
1. எனது அயலவருக்கு உபகாரம் செய்கிறேன்.
எனது அயலவர்களுக்கு நலவு நாடுகின்றேன்.
3. எனது அயலவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குகின்றேன்.
4- தேவைப்படும்போது என் அயலவருக்கு உதவுகிறேன்.
5 - அயலவரை நன்றாக நடத்துவதில் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறேன்.
மொத்த புள்ளி
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அயலவரின் உணர்வுகளில் கவனம் செலுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (✓)
நபி (ஸல்) அவர்கள் தம் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது மகிழ்ச்சியாகவும், அவர்கள் சோகமாக இருக்கும்போது வருத்தமாகவும் இருந்தார்கள். (✓)
நபி (ஸல்) அவர்கள் அயலவரை நோவினை செய்யாமல் இருக்க, அவர்களுடன் பழகுவதைத் தவிர்த்தார்கள். (✖)
அயலவருக்கு அன்பளிப்பு வழங்கத் தேவையில்லை, மாறாக தீங்கு செய்வதைத் தவிர்க்கவும். (✖)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹதீஸ் "யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது அயலவர்களை நோவினை செய்ய வேண்டாம்". இது குறிப்பது :
(அயலவரை இழிவுபடுத்துதல் கூடாது - அயலவருக்கு உபகாரம் செய்தல் - அயலவருக்கு நலவு நாடுமாறு ஏவுதல்)
ஹதீஸ் "தனது அயல்வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்புபவன் பரிபூரண விசுவாசியல்ல". அயலவருக்கு பின்வருமாறு உதவ வலியுறுத்துகிறது:
(தண்ணீர் மூலம் - உணவு மூலம் - துக்கப்படுதல் மூலம்)
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், அயலவரிடம் சகித்துக் கொள்ள வேண்டியது:
(அவர்களின் பாவங்களை - அவர்களின் நம்பிக்கையை - அவர்களின் தீங்குகளை)
கே 3 : அயலவருக்கு உபகாரம் செய்யும் வடிவங்களில் மூன்று உதாரணங்களை எழுதவும்.
பாடம் மூன்று: சிறார்களுடன் நடந்து கொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நபி (ஸல்) அவர்கள் சிறார்களுடன் நடந்து கொண்ட வழிமுறையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் சிறார்களுடன் அழகான முறையில் நடந்துகொண்டமைக்கு ஆதாரம் காட்டவும்.
நபியவர்களைப் பின்பற்றி சிறார்களுடன் அழகிய முறையில் நடக்க வேண்டும்.
இஸ்லாம் சிறார்களை வளர்ப்பதில் எடுத்திருக்கும் கரிசனையைப் புரிந்துகொள்ளவேண்டும்.
சிறார்களை வளர்ப்பதில் முழுமுயற்சியுடன் ஈடுபடல் வேண்டும்.
சிறார்களுடன் நடந்து கொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் :
பிறந்தது முதல் அவர்கள் விடயத்தில் கவனம் செலுத்துதல்.
மென்மை, இரக்கத்துடன் அவர்களை நடத்துதல்.
அவர்களை கல்வி போதித்து வளர்ப்பதில் கவனம் செலுத்துதல்.
நபி (ஸல்) அவர்கள் சிறார்கள் மீது கருணை காட்டுதல், அவர்களுக்கு ஒழுக்கமூட்டுவதில் ஆர்வம் காட்டுதல், அவர்களை நல்ல முறையில் நடத்துதல் போன்றவற்றின் ஊடாக, அவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள். சிறியவர்களுடனான நபி (ஸல்) அவர்களின் தொடர்பு பின்வருமாறு தெளிவாகிறது:
முதலாவது : பிறந்தது முதல் அவர்கள் விடயத்தில் கவனம் செலுத்துதல் :
நபி (ஸல்) அவர்கள் புதிதாகப் பிறக்கும் குழந்தையில் கவனம் செலுத்தினார்கள். இதில் பின்வருவன அடங்கும்:
ஓரிறைக் கொள்கையை குழந்தையிடம் உறுதிப் படுத்தவும், ஷைதானை விட்டும் பாதுகாக்கவும் அதன் காதில் அதான் கூறுதல். ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் பிறந்ததும் அவரது காதில் நபி (ஸல்) அவர்கள் அதான் கூறியுள்ளார்கள்.
இனிப்புப் பண்டம் வைத்தல். அதாவது, பேரீத்தம் பழத்தை வாயில் மென்று பின்னர் குழந்தையின் வாயினுள்ளே தடவுதல், இவ்வாறு நபியவர்கள் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் பிறந்ததும் செய்து விட்டார்கள்.
ஷைதானை விட்டும் அல்லாஹ்விடம் அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டி, ஓதிப்பார்த்தல். நபியவர்கள் ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்கு இவ்வாறு பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.
இரண்டாவது: அவர்களை இரக்கம், பணிவு மற்றும் மரியாதையுடன் நடத்துதல்:
அனஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் : "நபி (ஸல்) அவர்களை விட குடும்பத்தினருடன் மிக இரக்கமான யாரையும் நான் காணவில்லை". (ஆதாரம் : முஸ்லிம் 2316).
நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் அழகிய முறையில் நடந்ததன் வெளிப்பாடுகள் பின்வருவனவற்றில் வெளிப்படுகின்றன:
நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தைகளை சுமப்பார்கள் :
ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி), அவரது மகள் ஸைனபின் மகள் உமாமா பின்த் அபில் ஆஸ் (ரலி) போன்ற அவரது பேரக்குழந்தைகளை இவ்வாறு சுமந்ததாக நபியவர்களைத் தொட்டும் பல முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் விளையாட்டில் பங்கெடுத்தல் :
இது நபி (ஸல்) அவர்களின் பணிவின் மிகப் பெரிய ஆதாரங்களில் ஒன்றாகும். தனது உறவுக்கார பிள்ளைகளை வரிசையாக நிறுத்தி விட்டு பின்வருமாறு கூறுவார்கள் : "முதலில் யார் என்னிடம் ஓடிவருகின்றாரோ, அவருக்கு இது இதுவெல்லாம் கிடைக்கும்".
அவர்களும் நபியவர்களிடம் ஓடிவந்து, அன்னாரின் முதுகிலும் மார்பிலும் வீழ்வார்கள். நபியவர்களோ அவர்களை முத்தமிட்டு மகிழ்வார்கள். (ஆதாரம் அஹ்மத் 1836).
உணவில் அவர்களுடன் பங்கெடுத்து, அதன் ஒழுக்கங்களை சுட்டிக்காட்டுவார்கள் :
உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அதிலுள்ளதாகும் : "சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு". (ஆதாரம் : புஹாரி 5376, முஸ்லிம் 2022).
அவர்களை மதித்து, அவர்களது உரிமைகளைப் பாதுகாத்தல் :
நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நிலைப்பாடு அதற்கோர் உதாரணமாகும் : அவர்கள் ஒரு கூட்டத்தில் இருந்தார்கள், அவருடைய வலதுபுறத்தில் ஒரு சிறுவன் இருந்தார், வயதானவர்கள் இடதுபுறத்தில் இருந்தனர், எனவே நபி (ஸல்) அவர்கள் சிறுவனிடம் இவ்வாறு கேட்டார்கள் : ''சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக் கூடிய என்னுடைய பங்கை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை'' என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்து விட்டார்கள். (ஆதாரம் : புஹாரி 2351, முஸ்லிம் 2030).
மூன்றாவது: அவர்களைக் கல்வியூட்டி, ஒழுக்கமூட்டி வளர்ப்பதில் அக்கறை கொள்தல் :
எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் :
பத்ர் போரில் கைதிகளில் விடுவிக்கும் தொகை கிடைக்காத சிலரை, பத்து முஸ்லிம் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க நபி (ஸல்) அவர்கள் நியமித்தமை இதையே சுட்டிக்காட்டுகிறது. (ஆதாரம் : இப்னு ஸஃதின் தபகாத் 2/22).
சரியான அடிப்படைக் கொள்கையைப் போதித்தல் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) கூறிய போதனையும் இதிலடங்கும் : "சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன்; நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள் . அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு". (ஆதாரம் : திர்மிதி 2516).
அவர்களுக்கு வணக்கங்கள், பண்பாடுகளைப் பயிற்றுவிக்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஏவியுள்ளார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உங்கள் பிள்ளைகள் ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையை ஏவுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அதற்காகத் தண்டியுங்கள், படுக்கையறையில் அவர்களைப் பிரித்து வையுங்கள்". (ஆதாரம் : அபூதாவூத் 495).
அதே போன்று உண்மை, அமானிதம், பெரியோரை மதித்தல் போன்ற இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை அவர்களுக்குப் போதிப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள், குழந்தைகள் காஃபிர்களைப் பின்பற்றுவதைத் தடை செய்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஆடை மற்றும் தோற்றம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக குழந்தைகளை வளர்ப்பதில் காஃபிர்களைப் பின்பற்றுவதை எச்சரித்தார்கள். உதாரணமாக, சிறுவர்களின் தலையில் சில முடிகளை மொட்டையடித்து விட்டு, அதில் சிலவற்றை விட்டுவிடுவதைத் தடுத்தார்கள். (ஆதாரம் : புஹாரி 5920, முஸ்லிம் 2120).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): ஒத்துழைத்து இறுதிச் சுருக்கத்தைப் பெறுவேன் :
பின்வரும் சூழ்நிலைகள் குழந்தைகளுடன் நபியவர்கள் நடந்துகொண்டதைப் பற்றி என்ன குறிப்பிடுகின்றன என்பதைக் கண்டறிய உங்கள் நண்பர்களுடன் ஒத்துழைக்கவும் :
நிலைமைகள் அவை உணர்த்தக் கூடியவை
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிடுவதை அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) கண்டு விட்டு , 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் : ''அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 5997, முஸ்லிம் 2318). சிறார்களை அன்புடனும் நேசத்துடன் முத்தமிடல்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய குணமுள்ளவராக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் : 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய ‘நுஃகைர்’ என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள். (ஆதாரம் : புஹாரி 6129, முஸ்லிம் 2150). நுஃகைர் என்பது சிறு பறவையாகும். சிறார்களுடன் மென்மையாக பரிவுடன் கொஞ்சி விளையாடுதல்.
செயல்பாடு (2): வாசித்து அடையாளம் காணுவேன்:
பின்வருவனவற்றில் உங்கள் நடத்தை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவற்றிற்கு முன்னர் அடையாளமொன்றை இடவும்:
இல நடத்தை அல்லது உணர்வு நடத்தை அல்லது உணர்வின் தரம்
பெரியது நடுத்தரமானது பலவீனமானது
1 - முஸ்லிம் குழந்தைகள் காஃபிர்களுக்கு ஒப்பாகுவதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
2. சிறார்கள் குர்ஆனைக் கற்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியடைகின்றேன்.
3. எனது சிறிய சகோதரிகளை நான் கவனிப்பதில்லை.
4. எனது பிள்ளைகளுக்கு நபியவர்களின் வழிமுறை, பண்பாடுகளைப் போதிப்பதில் கவனமெடுக்கின்றேன்.
5. எனது பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு தொழுகைக்குச் செல்வேன்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (/) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் விளையாடுவதைத் தவிர்த்தார்கள். (×)
சிறார்கள் மீதான அன்பின் காரணமாக, நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைத் தனது தோளில் சுமந்து செல்வார்கள். (✓)
நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளிடம் மிகவும் இரக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். (✓)
நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை முத்தமிடுவதைத் தடுத்தார்கள். (×)
ஒரு குழந்தை வாலிபப் பருவத்தை அடையும் வரை அடிப்படைக் கொள்கையைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதைத் தாமதப்படுத்த வேண்டும். (×)
கே 2 : பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்வதன் மூலம், சிறுவர்களை வெவ்வேறான வயதுக்கட்டங்களில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கவனித்தார்கள் என்பதை அடையாளப்படுத்தவும் :
வயது நிலை அதில் நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டிய விதங்கள்
அவர்களது பிறப்பின் போது
ஏழு வயதும் அதற்கு முன்னரும்
பத்து வயது
கே 3 : பின்வரும் ஒவ்வொரு நிலைக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து ஒவ்வொரு நடைமுறை உதாரணத்தை ஆதாரமாக வழங்கவும் :
1. சிறார்களுடன் விளையாடுதல்.
2. சிறார்களுக்குப் பயனுள்ளவற்றைப் போதித்தல்.
பாடம் நான்கு : முஸ்லிமல்லாதவர்களுடன் நடந்து கொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
முஸ்லிமல்லாதவர்களுடன் நடக்கும் முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிமல்லாதோருடன் நடக்கும் நபிவழி முறையின் சிறப்பம்சங்களைத் தெளிவுபடுத்தல் வேண்டும்.
மாற்றுக் கருத்துள்ளோருடன் நபி (ஸல்) அவர்கள் நடந்த அழகிய முறைக்கு ஆதாரம் கூற வேண்டும்.
முஸ்லிமல்லாதோருடன் நடக்கும் முறையில் பண்பாட்டு விழுமியங்களின் அவசியத்தை உணர வேண்டும்.
முஸ்லிமல்லாதோருடன் நடந்து கொள்ளும் முறையில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் வேண்டும்.
மத வேறுபாடுகள் எதிரிகளிடம் மோசமான நடக்கவும், அவர்களுக்கு அநீதியிழைக்கவும் நியாயமான காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள், இது தவறான ஓர் அபிப்பிராயம் என்பது முஸ்லிமல்லாதவர்களுடன் நபியவர்கள் நடந்த முறை மூலம் தெளிவாகும் :
முஸ்லிமல்லாதவர்களுடன் நடந்து கொள்வதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் :
அழகிய முறையில் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தல்.
அவர்களை நன்றாக நடத்துதல்.
அவர்களுடன் நீதமாக நடந்துகொள்ளல், அநீதியைத் தடை செய்தல்.
அவர்களுடைய தனிப்பட்ட உரிமைகளை நிறைவேற்றுதல்.
மார்க்கத்தில் அவர்களை வற்புறுத்தாமல் இருத்தல்.
முதலாவது: மதத்தில் வற்புறுத்தல் இல்லை:
நபி (ஸல்) அவர்கள் யாரையும் இஸ்லாத்தில் நுழைய வற்புறுத்தவில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "மார்க்கத்தில் வற்புறுத்தலில்லை, வழிகேட்டிலிருந்து சத்தியம் தெளிவாகி விட்டது". (பகரா : 256) நபி (ஸல்) அவர்களுக்கு யாரையும் வற்புறுத்தும் ஆற்றல் இருந்தால், அவர் தனது பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் குலத்தாரை வற்புறுத்தியிருப்பார்கள்.
கொள்கைச் சுதந்திரம் என்பது அவர்களது தவறான கொள்கையை அங்கிகரிப்பதல்ல. நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதன் பின் அல்லாஹ் மனிதர்களிடமிருந்து இஸ்லாத்தைத் தவிர வேறு எதனையும் மார்க்கமாக ஏற்க மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்". (ஆல இம்ரான் : 85).
இரண்டாவது : அழகிய முறையில் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தல் :
நபி (ஸல்) அவர்கள் மக்களை அழகிய உபதேசம், பலமான ஆதாரம் ஆகியவற்றைக் கொண்டு, உரையாடலின் ஒழுக்கத்தைப் பேணி அழைப்புவிடுத்தார்கள். பின்வரும் நிகழ்வுகள் அதற்கான சில உதாரணங்களாகும் : குரைஷியரான உத்பா பின் ரபிஆவுடனான நபியவர்களின் உரையாடல், மற்றும் நஜ்ரான் கிறிஸ்தவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுடனான உரையாடல்.
முஸ்லிமல்லாதவர்களை அழைப்பதில் நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறை தெளிவாகவும், மென்மையுடனும் விளங்கியது. ஒரு தடவை நபியவர்கள் மதீனத்து யூதர்களிடம் சென்று பின்வருமாறு அழைப்புவிடுத்தார்கள் : "யூதர்களே இஸ்லாத்தில் இணைந்திடுங்கள், ஈடேற்றமடைந்திடுவீர்". அப்போது அவர்கள் “அபுல் காஸிமே! நீர் எத்திவைத்து விட்டீர்” என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1765).
மூன்றாவது: அவர்களை நன்றாக நடத்துதல்:
நபி (ஸல்) அவர்கள், போர் புரியாத காஃபிர்களிடம் கருணையுடன் நடந்து கொண்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே, இணைவைப்பாளர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்கப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள் : "நான் சாபமிடுபவனாக அனுப்பப்பட வில்லை, மாறாக அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 2599).
இவ்வாறான பிரபல்யமான ஒரு நிகழ்வு நபியவர்களுக்கு நடந்தது, மலைகளுக்குப் பொறுப்பான வானவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே, நீங்கள் விரும்பினால் மக்காவில் உள்ள இரண்டு மலைகளை அவர்களுடன் சேர்த்து நான் மூடி அழித்து விடுவேன். என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 3231, முஸ்லிம் 1795).
ஹிஜ்ரி 8ம் ஆண்டு நபியவர்கள் மக்கா வெற்றியன்று அங்கு சென்ற போது மக்காவாசிகளை மன்னித்து விட்டார்கள்.
அவர்களுடன் நீதமாக நடந்துகொள்ளல், அநீதியைத் தடை செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு செல்வம், இரத்தம், மானம் அல்லது உடன்படிக்கை எந்த ஒன்றிலும் அநீதமிழைக்கவில்லை. ஹிஜ்ரி 6 ல் குரைஷியருடன் நடைபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையை முழுமையாகவே நிறைவேற்றி வந்தார்கள். அவர்களின் துரோகத்தின் காரணமாகவே தவிர நபியவர்கள் மக்காவைக் கைப்பற்றவில்லை, மதீனாவின் யூதர்களுடன் செய்த உடன்படிக்கைகளைப் பேணிவந்தார்கள். அவர்கள் துரோகம் செய்ததற்காகவே தவிர அவர்களை வெளியேற்றவில்லை.
ஐந்தாவது : அவர்களுடைய தனிப்பட்ட உரிமைகளை நிறைவேற்றுதல்:
உதாரணமாக : அவர்களில் நோயாளிகளை நலம் விசாரித்தல், அன்பளிப்புகளை வழங்குதல், அவர்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடல். நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி (ஸல்)) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள். (ஆதாரம் : புஹாரி 1356).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நான் இறுதிச் சுருக்கத்தைக் கண்டறிவேன் :
உங்கள் ஆசிரியரைப் பின்பற்றி, முஸ்லிமல்லாதவர்களைக் கையாள்வதற்கான வழிகளைப் பற்றி பின்வரும் சான்றுகள் என்ன குறிப்பிடுகின்றன என்பதைக் கண்டறியவும்:
ஆதாரம் அவை அறிவிக்கக் கூடியவை
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள இணைவைப்பவர்களைக் கடந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள் : "மக்களே, லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள், வெற்றி பெறுவீர்கள்". (ஆதாரம் : அஹ்மத் 16023). அவர்களது நேர்வழியில் அக்கறை கொண்டு அழகிய முறையில் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "(எம்முடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முஸ்லிமல்லாத) உடன்படிக்கையாளரைக் கொன்றவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்". (ஆதாரம் : புஹாரி 3166). உடன்படிக்கைகளை நிறைவேற்றல், களத்தில் போரிடாத காபிர்கள் விடயத்தில் அத்துமீறாமலிருத்தல்.
செயல்பாடு 2: உடன்படுகிறேன் அல்லது உடன்பட வில்லை :
முஸ்லிமல்லாத ஒருவருடன் நல்ல முறையில் நடப்பதற்கும் அவரது தவறான மதத்தை அங்கீகரிப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது, பின்வரும் சூழ்நிலைகளில் நீர் என்ன செய்வீர் என்பதை விளக்கவும் :
நிலைமைகள் உடன்படுகிறேன் உடன்படவில்லை காரணம்
உங்கள் முஸ்லிம் அண்டை வீட்டார் அநியாயமாக முஸ்லிமல்லாத ஒருவருக்கு அடிப்பதை நீங்கள் பார்த்தீர்கள் ஏனெனில் உரிமையின்றி பிறரிடம் அத்துமீறுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
முஸ்லிமல்லாத நண்பர் ஒருவர் உங்களுக்குப் பரிசு அளித்து, அவருடைய மதத்தைப் பற்றி அறிய உங்களை அழைக்கிறார்: ஏனென்றால் இந்த பரிசு என் மதத்தை விட்டு வெளியேறும் நோக்கத்திற்காக. அது என் உள்ளத்தைப் பாதிக்கலாம்.
ஒரு நண்பர் தனது தேவாலயம் அல்லது கோவிலில் ஒரு மத விழாவுக்காக உங்களை அழைத்தார் ஏனெனில் அதற்கு நான் சமூகமளிப்பது அவருடைய கொள்கையை ஒப்புக் கொள்வதாகும்.
உங்களோடு பணியில் இருக்கும் உங்களது முஸ்லீம் அல்லாத நண்பர் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் நலம்விசாரிக்கச் செல்ல ஒருவர் உங்களை அழைத்தார் இதில் அவர்களுக்கு உபகாரம் செய்து, இஸ்லாத்தின்பால் அவர்களை ஈர்க்கும் வழியுள்ளது.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நீதம் என்பது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அனைவருக்குமான ஒரு கடமையாகும். (✓)
உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது போரிடாத காபிர்களோடு மாத்திரமானதாகும். (✖)
நபி (ஸல்) அவர்கள், இணைவைப்பாளர்களை அழிப்பதற்கான மலைகளுக்குப் பொறுப்பான வானவரின் முன்மொழிவை ஒப்புக்கொண்டார்கள். (✖)
ஒரு முஸ்லீம் தேவாலய பண்டிகைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. (✖)
கே 2 : பின்வருவனவற்றிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்:
அல்லாஹ்வின் வசனம் : "மார்க்கத்தில் வற்புறுத்தலில்லை, வழிகேட்டிலிருந்து சத்தியம் தெளிவாகி விட்டது". மேற்கண்ட வசனம் எமக்குக் காட்டும் வழிமுறை :
முஸ்லிமல்லாதோருக்கு - தெரிவு செய்யும் உரிமையை அவர்களுக்கே விட்டுவிடுவதுடன் - அழைப்பு விடுத்தல்.
கொள்கைச் சுதந்திரத்தின் அடிப்படையை அமுல்படுத்தும் விதத்தில், முஸ்லிமல்லாதோருக்கு அழைப்பு விடுப்பதை விட்டு விடுதல்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கி, அவற்றை ஏற்றுக் கொள்ள காபிர்களை நிர்ப்பந்தித்தல்.
அல்லாஹ்வின் வசனம் : "யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாகத் தேடுகிறாரோ அது அவரிமிருந்து ஏற்கப்பட மாட்டாது". இது குறிப்பது :
பூமியில் இஸ்லாமல்லாத எந்தவொரு மதமும் கிடையாது.
இஸ்லாத்தைத் தவிர ஏனைய அனைத்து மதங்களும் அசத்தியமானவையே.
முஸ்லிமல்லாத அனைத்து மக்களையும் கொலை செய்வது கடமையாகும்.
கே 3 : முஸ்லீம் அல்லாத நோயாளியை நலம் விசாரிப்பதன் சட்டமென்ன? அதற்கான ஆதாரம் என்ன?
பாடம் ஐந்து : முஸ்லிமின் உரிமைகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
முஸ்லிமின் உரிமைகளைக் கூற வேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சொற்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பாடத்தில் இடம்பெறும் ஹதீஸ் சுட்டிக்காட்டும் முக்கிய விடயங்களை சுருக்கமாகக் கூற வேண்டும்.
முஸ்லிமின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஹதீஸை மனனம் செய்திருக்க வேண்டும்
அறிமுகம்
பின்வரும் ஒவ்வொரு சூழ்நிலை பற்றியும் உமது நிலைப்பாட்டைக் கூறவும்.
உமது அயலவருக்கு நீர் ஸலாம் கூறியும் அவர் பதிலளிக்க வில்லை.
நீர் நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டீர், உமது நண்பர்களில் யாரும் உம்மை நலம்விசாரிக்க வரவில்லை.
உமது நண்பர்களை விருந்துக்கு அழைத்தீர், அதிகமானோர் சமூகந்தரவில்லை.
ஹதீஸில் இடம்பெற்றுள்ளவற்றுடன் முன்னைய நடைமுறைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் :
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'. (ஆதாரம் : புஹாரி 1240, முஸ்லிம் 2162).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
நோயுற்றால் நலம் விசாரித்தல். நோயுற்றால் நலம் விசாரித்தல்.
விருந்துக்கழைத்தால் பதிலளித்தல் ஒரு முஸ்லிம் ஒரு விருந்திக்காக அழைத்தால் அங்கு செல்வது.
தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல் யர்ஹமுகல்லாஹ் என்ற வார்த்தை மூலம் அவருக்காக பிரார்த்தனை செய்தல்.
அறிவிப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு :
அவரது பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் அத்தௌஸீ (ரலி).
ஹிஜ்ரி 7ல் இஸ்லாத்தைத் தழுவிய இவர் நபியவர்கள் மரணிக்கும் வரை அவருடனே இருந்துள்ளார்கள்.
இவருக்கு மனன சக்தி அதிகரிக்க வேண்டும் எனவும், முஃமின்களுக்கு அதிக விருப்பத்திற்குரியவராக இவர் இருக்க வேண்டுமெனவும் நபி (ஸல்) இவருக்காக பிராத்தனை செய்துள்ளார்கள். இதன் காரணமாகவே ஸஹாபாக்களில் அதிக மனன சக்தியுள்ள ஒருவராகவும், அதிக ஹதீஸ்களை அறிவித்தவராகவும் காணப்படுகிறார். இவர் 5000 திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
ஸஹாபாக்களில் சிறந்த அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர் அதிகமாக அழைப்புப் பணியிலும், கற்பித்தல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.
ஹிஜ்ரி 59ல் இவர் மரணித்தார்.
ஹதீஸின் சுருக்கமான விளக்கம்:
இஸ்லாம் ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ஒரு முஸ்லிம் ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமைகளை வைத்துள்ளார்கள். இந்த ஹதீஸ் அந்த உரிமைகளில் மிக முக்கியமானவற்றை உள்ளடக்கியுள்ளது.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
முஸ்லிமின் உரிமைகளை மார்க்கம் மகத்துவப்படுத்தியுள்ளமை.
முஸ்லிமின் உரிமைகளை நிறைவேற்றுவதற்குத் தூண்டல்.
முஸ்லிம்களின் உள்ளங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் இஸ்லாம் எடுத்துள்ள அக்கறை.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் உள்ளவை :
தனக்கு ஸலாம் சொன்னால் அவருக்கு பதிலளித்தல்.
அவர் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்லல்.
அவர் மரணித்தால் ஜனாஸாவைப் பின்தொடர்தல்.
அகீகா போன்ற விருந்துகளுக்குத் தன்னை அழைத்தால் பதிலளித்தல்.
தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் 'யர்ஹமுகல்லாஹ்' என்று பதிலுரைத்தல்
செயற்பாடுகள்
செயல்பாடு (1): அவதானித்து அடையாளம் காணுவேன்:
பாடத்தின் ஹதீஸைப் பற்றிய உங்கள் புரிதலின் மூலம், பின்வரும் எந்த கருத்துக்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன, எவை குறிப்பிடப்படவில்லை என்பதை பொருத்தமான புலத்தில் ஒரு குறி (√) வைப்பதன் மூலம் குறிப்பிடவும்:
கருத்து ஹதீஸ் அதை குறிக்கின்றது ஹதீஸ் அதை குறிக்கவில்லை
முஸ்லிமின் உரிமைகள் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானதாகும்.
முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளில் இந்த ஐந்து அல்லாத கடமைகளும் உண்டு.
ஒரு முஸ்லிம் தனது நிகழ்வுகளுக்கு உம்மை அழைத்தால் அங்கு சமூகமளிப்பது அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளுள் உள்ளதாகும்.
செயல்பாடு (2) : வாசித்து, விடையளிக்கிறேன்.
ஹதீஸில் குறிப்பிடப்படாத முஸ்லிமின் உரிமைகள் சில உள்ளன. பின்வரும் ஆதாரங்களைக் கவனித்து, பின்னர் அவை ஒரு முஸ்லிமின் எந்த உரிமையைக் குறிக்கின்றது என்பதைத் தெரிவு செய்து, அவற்றைக் குறிக்கும் எண்ணை பின்வரும் அட்டவணையில் பதிவு செய்யவும்.
எதிரி அவனைக் கைது செய்தால் விடுவிக்க முயற்சி எடுத்தல்.
அவரைப் பற்றிப் புறம் பேசுதல், துருவி ஆராய்தல் என்பவற்றை விட்டுவிடுதல்.
அவருடன் வீண் தர்க்கத்தில் ஈடுபடாமல், இணைந்து செயற்படல்.
உரிமையில்லாமல் அவருடைய உடமையை எடுக்காதிருத்தல்.
இல அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் முஸ்லிமின் உரிமைகள்
1. அல்லாஹ் கூறுகிறான் "விசுவாசிகளே, உங்களுக்கிடையில் உங்கள் உடமைகளை முறையற்ற விதத்தில் உண்ண வேண்டாம்" (நிஸா : 29).
2. அல்லாஹ் கூறுகிறான் "நீங்கள் துருவி ஆராய வேண்டாம், ஒருவருக்கொருவர் புறம் பேசவும் வேண்டாம்". (ஹுஜுராத் : 12).
3. மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "கைதிகளை விடுவியுங்கள், பசித்தோருக்கு உணவளியுங்கள், நோயுற்றோரை நலம் விசாரியுங்கள்". (ஆதாரம் : புஹாரி 3046).
4. மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து கோபித்திருப்பது கூடாது". (ஆதாரம் : புஹாரி 6065, முஸ்லிம் 2559).
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
பாடத்தின் ஹதீஸ் ஒரு முஸ்லிமின் அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கியுள்ளது. (×)
ஒரு முஸ்லிம் தன் இஸ்லாமிய சகோதரனின் உணர்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். (√)
தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லாவிட்டாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டும். (×)
கல்வியில் ஆர்வம் காட்டும் விடயத்தில் ஹதீஸ் அறிவிப்பாளரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வேன். (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் உரிமைகளில் உள்ளது :
(வயதாகும்போது அவரை மதித்தல் - நோயுற்றால் நலம் விசாரித்தல் - அவரைப் பற்றி நல்லெண்ணம் வைப்பது)
ஹதீஸில் குறிப்பிடப்படாத ஒரு முஸ்லிமின் உரிமைகளில் உள்ளது :
(நோயுற்றால் நலம் விசாரித்தல் - அவரது ஸலாத்திற்கு பதிலளித்தல் - அநீதியிலிருந்து அவரைப் பாதுகாத்தல்)
ஒரு முஸ்லிம் இறந்தால் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் உள்ளது :
(அவரது ஜனாஸாவைப் பின்தொடர்தல் - அவருக்காக பிரார்த்தனை செய்தல் - முன்னைய இரண்டும்)
கே 3 : முஸ்லிமின் சில உரிமைகள் பற்றிய உங்கள் அறிவின் அடிப்படையில், பின்வருவனவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தீர்வைப் பரிந்துரைக்கவும்:
உமது மஸ்ஜிதில் தொழும் ஓர் ஏழை, தாழ்வான ஒரு தொழிலைச் செய்பவர்.
சில இளைஞர்கள் ஒரு மனிதனை அவரது பலவீனம் மற்றும் பழைய உடைகள் காரணமாக கேலி செய்கிறார்கள் .
ஒரு மனிதர் வேறு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரது அயலவர்கள் அவருக்கு அநீதமிழைக்கின்றனர்.
பாடம் ஆறு: குடும்ப உறவுகளைப் பேணுதல்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: ( இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
குடும்ப உறவுகளைப் பேணுவதன் சிறப்புக்களைப் பட்டியலிடவேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சொற்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சாரம்சத்தைச் சுருக்கவேண்டும்.
ஹதீஸ் சுட்டிக்காட்டும் பிரதான பயன்களைத் தெளிவுபடுத்தவேண்டும்.
ஹதீஸை மனனம் செய்யவேண்டும்.
உமது குடும்பத்தாருடன் சேர்ந்து நடக்கவேண்டும்.
இஸ்லாம் பெற்றோருக்கு உபகாரம் செய்வதைக் கடமையாக்கியுள்ளது, உபகாரம் என்பது பெற்றோருக்கு மட்டும்தானா? ஒரு முஸ்லிம் உபகாரம் செய்வது அவசியமான வேறு சாராரும் உள்ளனரா? அதற்காக ஒரு முஸ்லிமுக்கு வெகுமதி கிடைக்குமா?
இவைதான் பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் உமக்கு அறியத்தரக்கூடிய விடயங்களாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ''தனது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் குடும்ப உறவைப் பேணி வாழட்டும்''. (ஆதாரம் : புஹாரி 5986, முஸ்லிம் 2557).
அறிவிப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு :
பெயரும் புனைப்பெயரும் : அபூ ஹம்ஸா அனஸ் பின் மாலிக் பின் நழ்ர் அல்அன்ஸாரீ (ரலி).
அனஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்தார்கள்.
இவருக்காக நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் : "இறைவா, இவருடைய சொத்துக்களையும், பிள்ளைகளையும் அதிகரிப்பாயாக, நீ இவருக்கு வழங்கியதில் பரகத் செய்வாயாக". (ஆதாரம் : புஹாரி 6334, முஸ்லிம் 660). எனவே அனஸ் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் அதிக சொத்துக்கள், பிள்ளைகளைக் கொண்டவராக இருந்தார்கள்.
நீண்ட நேரம் தொழக்கூடியவராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிக நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரும் ஒருவராவார்.
பஸராவில் ஹிஜ்ரி 92ல் மரணித்தார்கள்.
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
விசாலமாக்கப்படுவதையும் அதிகரிக்கப்படுவதையும்
நீடிக்கபடுவதையும் நீளும், அல்லது பரகத் செய்யப்படும்.
வாழ்நாள் வாழ்நாள்
குடும்ப உறவு மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.
ஹதீஸின் பொதுவான அர்த்தம்:
குடும்ப உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் அதன் நல்ல பலன்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்குகிறார்கள். எனவே வாழ்வில் பரகத் செய்யப்படவும், வாழ்வாதாரம் பெருகவும் விரும்புபவர்கள் தங்கள் உறவைப் பேணி, அவர்களுக்கு நல்லுபகாரம் புரியவேண்டும். .
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
குடும்ப உறவைச் சேர்ந்துநடக்க ஆர்வமூட்டல்.
சமூக வாழ்வின் பல்வேறு கோணங்களையும் இஸ்லாத்தின் கவனித்துள்ளமை.
குடும்ப உறவுகளைப் பேணுவது பல சிறப்புகளையும் நல்ல பல விளைவுகளையும் கொண்டுள்ளது. அவை:
வாழ்நாளில் பரகத் செய்யப்படக் காரணமாக அமைகின்றது.
வாழ்வாதாரம் விசலமாகக் காரணமாக அமைகின்றது.
மரணத்திற்குப் பின் நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (2) : ஒத்துழைத்து ஒப்பிடுவேன் :
உங்கள் சக நண்பருடன் ஒத்துழைத்து, குடும்ப உறவுகளைச் சேர்ந்திருப்பது மற்றும் உறவுகளைத் துண்டிப்பதன் விளைவுகளுக்கு மத்தியில் பின்வரும் ஆதாரங்கள் ஊடாக ஒப்பிட்டுப் பாருங்கள்:
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் உறவைப் பேணுவதன் சிறப்பு உறவைத் துண்டிப்பதன் தண்டனை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்''. (ஆதாரம் : புஹாரி 5984, முஸ்லிம் 2556). சுவனத்திற்குச் செல்லும் வாய்ப்பை இழத்தல்.
அல்லாஹ் கூறியதாக ஹதீஸுல் குத்ஸியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "நான்தான் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்). அது ரஹிம் (குடும்ப உறவு), எனது பெயரிலிருந்து அதற்கு ஒரு பெயரை எடுத்துள்ளேன், அதனைச் சேர்ந்து நடப்பவருடன் நானும் சேர்ந்து நடப்பேன்". (ஆதாரம் : அபூதாவூத் 1696). தனது உறவைச் சேர்ந்து நடப்பவனுடன் அல்லாஹ் அனைத்து நலவுகள் மூலம் சேர்ந்து நடக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஏழைக்கு தர்மம் செய்வது ஒரு தர்மமாகும். உறவினருக்கு தர்மம் செய்வது இரண்டு நலவாகும்: தர்மமாகவும், உறவைச் சேர்ந்து நடப்பதாகவும் உள்ளது". (ஆதாரம் : நஸாஈ 2582). தர்மத்தின் கூலி பன்மடங்காகும்.
செயல்பாடு (2): வாசித்து அடையாளம் காணுவேன்:
குடும்ப உறவுகளைப் பேணுவதற்கான பல வடிங்கள் உங்கள் முன்னிலையில் உள்ளன. இவற்றில் நீர் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவற்றைத் தெரிவு செய்யவும் :
(உறவினர்களைத் தரிசிப்பது - உறவினர்களை உபசரிப்பது - உறவினர்களைப் பற்றிக் கேட்பது - உறவினர்களுக்கு பணம் கொடுப்பது - அவர்களில் பெரியவர்களை மதிப்பது - பலவீனமானவர்களிடம் கருணை காட்டுவது - அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பது - அவர்களில் நோயுற்றவர்களைப் பார்ப்பது - அவர்களின் ஜனாஸாக்களைப் பின்தொடர்வது - அவர்களை நேர்வழிக்கு அழைப்பது - அவர்களுக்கு நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது).
மதிப்பீடு :
கே 1 : பின்வருவனவற்றில் சரியான தேர்வை அடிக்கோடிட்டுக் காட்டுங்கள்:
உபகாரம் செய்ய வேண்டும் என்ற கட்டளை பெற்றோருக்கு மட்டுமே உண்டு, உறவினர்களுக்கு அல்ல. சரி - தவறு
உறவைப் பேணுவது என்பது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கருணை காட்டுவதும், அவர்களுக்கு நல்லுபகாரம் செய்வதும் ஆகும். சரி - தவறு
குடும்ப உறவுகளைத் துண்டிப்பதன் விளைவுகளில் ஒன்று சுவர்க்கத்தில் நுழைவது தடுக்கப்படுவதாகும். சரி - தவறு
குடும்ப உறவுகளைச் சேர்ந்து நடப்பதற்கும் வாழ்வாதாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சரி - தவறு
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நபி (ஸல்) அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தித்த விடயம் :
(அறிவில் தேர்ச்சி - வாழ்வாதாரத்தில் விசாலம் - உடலில் வலிமை)
"வாழ்நாள் நீடிக்கப்படுவது" என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றின் பொருள்:
(அவரது ஆயுள் நீண்டிருக்கும் - அவரது செல்வத்தில் பரகத் செய்யப்படும் - அவரது நினைவு நிலைத்திருக்கும்)
கே 3 : ஹதீஸின் மூன்று வழிகாட்டல்களை விளக்கவும்.
பாடம் ஏழு: இரக்கமும் மரியாதையும்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சுருக்கமாகக் கூறவேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சொற்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சாரம்சத்தைக் கூறவேண்டும்.
ஹதீஸின் படிப்பினைகளைத் தெளிவுபடுத்தவேண்டும்.
பெரியோரை மதித்து, சிறியோர்க்கு இரக்கம் காட்ட வேண்டும்.
ஹதீஸை மனனம் செய்ய வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு:
நீங்கள் தெருவில் செல்லும்போது, ஒரு இளைஞன் ஒரு முதியவருக்கு குரலை உயர்த்திப் பேசுவதைக் காண்கிறீர்கள். அவனுக்கு நீர் என்ன அறிவுரை கூறுவீர்?
அறிவுரை கூற, இந்த ஹதீஸை துணைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) கூறுகின்றார் : "எங்களில் சிறார்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியோரின் உரிமையை அறிந்து செயற்படாதவரும் எம்மைச் சார்ந்தவரல்லர்". (ஆதாரம் : அபூதாவூத் 4943, திர்மிதி 1920).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
எம்மைச் சார்ந்தவரல்லர் எமது ஸுன்னாவைப் பின்பற்றியவரல்லர், எமது நெறிமுறையைக் கடைபிடித்தவரல்லர்.
இரக்கம் காட்டுதல் மென்மையாகவும், இரக்கமாகவும் அவர்களை நடத்துதல்.
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் அல்குரஷீ (ரலி).
ஹிஜ்ரி 7க்குப் பின் இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்தார்கள், நபி (ஸல்) அவர்களுடன் சில போர்களில் கலந்து கொண்டார்கள்.
சிறந்த அறிஞரான இவர், நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் 700க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
இவர்கள் வணக்கம் புரிவதில் கடும் முயற்சி செய்வார்கள், நோன்பு, இரவுத் தொழுகையில் அதிகம் ஈடுபடுவார்கள்.
ஹிஜ்ரி 63ல் இவர் மரணித்தார்.
ஹதீஸின் விளக்கம்:
முஸ்லிம்களிடையே பரப்பப்பட வேண்டிய சில சிறந்த சில ஒழுக்கங்களை நபி(ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள் : பலவீனமானவர்களுக்கு, குறிப்பாக சிறார்களுக்கு கருணை காட்டுதல், முதியவர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மரியாதை செலுத்துதல் போன்றன இவற்றில் உள்ளதாகும். இவற்றைக் கடைபிடிக்காதவர் முஸ்லிம்களின் வழிமுறை, பண்பாடுகளை மீறியவராவார்.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
இரக்கத்தின் முக்கியத்துவம், குறிப்பாக சிறார்களுக்கு இரக்கம் காட்டுவதன் முக்கியத்துவம்.
முதியோரையும் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களையும் மதித்து மரியாதை செய்வதன் அவசியம்.
இரக்கமும் மரியாதையும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளப் பண்புகளாகும்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் நன்நடத்தைகள், நற்குணங்களைப் பின்பற்றுவதன் அவசியம்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : பகுப்பாய்வு செய்து, இறுதிச் சுருக்கத்தைக் கூறுவேன்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "இரக்கமுள்ளவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்". (ஆதாரம் : அபூதாவுத் 4943, திர்மிதி 1924).
இந்த நபிமொழி, பாடத்தின் நபிமொழியுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை உங்கள் சக நண்பரோடு இணைந்து விளக்கவும்.
பாடத்தின் ஹதீஸுடன் அது பின்வரும் விடயத்தில் உடன்படுகிறது : இரக்கம் என்ற பண்பை வலியுறுத்தி, ஊக்கப்படுத்தல்.
பாடத்தின் ஹதீஸை விட பின்வரும் விடயங்கள் அதில் மேலதிகமாக உள்ளன :
1. இரக்கத்தின் நற்கூலியை விளக்குகின்றது.
2. இரக்கம் என்பது சிறார்களுக்கு மாத்திரமின்றி, அனைவருக்கும் பொதுவானது.
செயல்பாடு (2): அவதானித்து இணைப்பேன் :
படத்தைப் பார்த்து, அதை ஹதீஸுடன் இணைப்பதன் மூலம், நபி (ஸல்) அவர்கள் சிறார்களுக்கு இரக்கம் காட்டுவதைக் குறிப்பாகக் கூறுவதற்கு மிகவும் பொருத்தமான காரணத்தைத் தேர்வுசெய்யவும் :
சிறுவனின் பலவீனம் மற்றும் அவனால் அநீதியைத் தடுக்க இயலாமை.
சிறுவனின் சிறிய உடலமைப்பு மற்றும் வளர்ச்சிக் குறைவு.
பணம், செலவினம் போன்வை சிறுவனின் தேவையாக இருத்தல்.
செயற்பாடு (3) வகைப்பத்துகிறேன்:
சரியான இடத்தில் ஒரு அடையாளமிடுவதன் மூலம், வினவப்பட்டுள்ள விதத்தில் பின்வரும் நடத்தைகளை வகைப்படுத்தவும் :
வடிவம் சிறார்களுடன் இரக்கம் பெரியவர்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்
ஒரு மனிதன் தன் அண்டை வீட்டார் ஒரு சிறுவனுக்கு அடிப்பதைத் தடுக்கிறான்
தெருவில் ஒரு முதியவர் ஓய்வெடுக்க ஒரு இளைஞன் ஒரு நாற்காலியை வைக்கிறான்.
விருந்தினர்களுக்கு உணவு தயாரிக்க ஒரு பெண் தன் சித்திக்கு உதவுகிறாள்
ஒரு முதியவர் அமர்வதற்காக பேருந்தில் ஒரு இளைஞன் தனது இருக்கையில் இருந்து எழுகிறான்.
மாணவன் தனது ஆசிரியரின் பையை சுமந்து செல்கிறான்.
ஒரு கைக்குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் இரவில் எழுந்தார்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவை சரியாயின் (/) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
பெரியவர்களுக்கு கருணை காட்டுமாறும், சிறியோரை மதிக்குமாறும் ஹதீஸ் போதிக்கிறது.
பெரியோரின் உபதேசத்தை ஏற்பது அவரை மதிப்பதன் ஓர் அடையாளமாகும்.
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுவது சிறார்களுக்கு இரக்கம் காட்டுவதில் உள்ளதாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
அப்துல்லாஹ் பின் அம்ரின் (ரலி) அவர்களின் முன்மாதிரியை நாங்கள் பின்வரும் விடயத்தில் பின்பற்றுகிறோம்:
(நோன்பு - பணம் சேர்த்தல் - ஏழைகளைக் கவனித்தல்)
"எம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றின் அர்த்தம் :
(எமது மதத்தில் - எமது நெறிமுறையில் -எமது இனத்தில்)
ஹதீஸின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், சமுதாயத்தில் உருவாகும் பண்பு :
(இரக்கம் - உண்மை - நீதி)
கே 3 : பின்வரும் சொற்றொடர்களை பொருத்தமான புலத்தில் வைத்து அட்டவணையை முழுமைப்படுத்தவும்:
(அவருடன் விளையாடுவது - அவரது கருத்தை எடுத்துக்கொள்வது - அவரிடம் நுழைவதற்கு முன் அனுமதி கேட்பது - அவருடன் உரையாடும் போது ஒழுக்கமாக உரையாடுதல் - அவரை முறையாக வளர்த்து, கல்வி புகட்டுதல் - அவரை காயப்படுத்துவதையும் அடிப்பதையும் தவிர்த்தல்)
- பெரியோரை மதிப்பதில் உள்ளது
அவருக்கு முன்னால் நடக்காதிருத்தல்
அவரிடம் நுழைவதற்கு முன் அனுமதி கோருதல்
அவருடன் உரையாடும் போது ஒழுக்கமாக உரையாடுதல்
அவருடைய கருத்தை கவனத்தில் எடுத்தல் சிறுவனுக்கு இரக்கம் காட்டுவதில் உள்ளது : அவனுக்கு நோவினை ஏற்படாது பாதுகாத்தல் அவனை அடிக்காமல், நோவினை செய்யாமல் இருத்தல். அவனுடன் விளையாடுதல். அவனை முறையாக வளர்த்து, கல்வி புகட்டுதல்
கே 4: பாடத்தில் உள்ள ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்குக் கருணை காட்டுமாறு ஏன் குறிப்பாகக் கூறினார்கள்?
பாடம் எட்டு: அயலவரையும் விருந்தினர்களையும் கௌரவித்தல்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: ( இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சுருக்கமாகக் கூறவும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சொற்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் சாரம்சத்தைக் கூறவேண்டும்.
அயலவர் மற்றும் விருந்தினர் விடயத்தில் ஹதீஸின் வழிகாட்டல்களை அமுல்படுத்தவும்.
ஹதீஸை மனனம் செய்ய வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு:
நீங்கள் உங்கள் நண்பர் ஒருவருடன் ஒரு திருமணத்திற்குச் சென்றீர்கள். அவர் தனது இடத்திலிருந்து எழுந்து, வேறொருவர் உட்காருவதற்காக இடம்கொடுப்பதைப் பார்த்தீர்கள். அவரோடு முகத்தில் புன்னகைத்து, 'வருக வருக, அபு முஹம்மதே! இதோ இங்கே உட்காருங்கள், அபு முஹம்மதே' என்று அழைத்துப் பேசுகின்றார். அதனால், அந்த மனிதன் விடயத்தில் இவ்வளவு கரிசனையுடன் செயற்படக் காரணம் என்னவென்று நீங்கள் வியப்புடன் கேட்டபோது, "அவர் என் அயலவர்' என்று கூறினார் அவர். எனவே, இதைச் செய்ய உங்கள் நண்பரைத் தூண்டியது எது?
இந்த நடத்தைக்கான விளக்கத்தை இந்த ஹதீஸ் கொண்டுள்ளது.
ஹதீஸ்:
நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்". (ஆதாரம் : முஸ்லிம் 47).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
மேலும் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றி, அவனுடைய திருப்திக்கு வழிவகுக்கும் முழுமையான நம்பிக்கை கொண்டவர்.
மௌனித்திருக்கட்டும் பேசாமல் மௌனித்திருக்கட்டும்.
தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும். அவர் தனது அயலவரை நன்றாக நடத்த வேண்டும். மேலும் அவரது உரிமைகளை வீணாக்கக் கூடாது.
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் பற்றிய சிறுகுறிப்பு முன்னர் கூறப்பட்டு விட்டது, அவரது வாழக்கை பற்றி மேலும் சில தகவல்களும் வந்துள்ளன:
அவர் பூனையை (ஹிர்ரா) சுமந்து வந்ததால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அபூ ஹுரைரா என்று செல்லப்பெயர் சூட்டினார்கள்.
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் வறுமையில் வாடினார். அவர் தன்னைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்கள் : உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பட்டினியின் கோரத்தால் தரையில் படுத்திருப்பேன், எனது வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டிருப்பேன்.
பின்னர் அவருடைய இறுதிக்காலத்தில் அல்லாஹ் அவரைத் தன்னிறைவடையச் செய்தான். அவர் செல்வந்தராகவும், வீடு, பிள்ளைகள் உடையவர்களாகவும் மாறினார்கள்.
ஹதீஸின் விளக்கம்:
இந்த ஹதீஸ் நம்பிக்கையாளர்களின் மூன்று பண்புகளை உள்ளடக்கியது: நல்லதைப் பேசுதல் அல்லது அமைதியாக இருத்தல், அயலவருக்கு உபகாரம் புரிதல், விருந்தினரைக் கௌரவித்தல் மற்றும் அவரது உரிமைகளை நிறைவேற்றுதல்.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
நல்ல வார்த்தைகள் பேசுவதும் அயலவரையும் விருந்தினர்களையும் கௌரவிப்பதும் ஈமான் கொண்டவர்களிடம் அவசியம் இருக்கவேண்டியவையாகும்.
பயனுள்ள நல்ல வார்த்தைகளைப் பேச ஆர்வமூட்டுதல்.
பொய் பேசுவதை விட மௌனத்தைக் கடைபிடிப்பது சிறந்தது.
சத்தியம், நலவுகளைப் பேசுவது மௌனித்திருப்பதை விட சிறந்தது.
அண்டை வீட்டாருக்கு உபகாரம் புரிதல் கடமையாகும். மற்றும் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பது கூடாது.
விருந்தினரை கண்ணியப்படுத்துவதன் சிறப்பு.
செயற்பாடுகள்
செயற்பாடு (3) வகைப்பத்துகிறேன்:
பின்வரும் கருத்துக்களை ஹதீஸ் உள்ளடக்கியுள்ளதா என்பதை, பொருத்தமான இடத்தில் ஒரு குறியீடு வைப்பதன் மூலம் வகைப்படுத்தவும்:
இல கருத்து ஹதீஸ் அதை அறிவிக்கின்றது ஹதீஸ் அதை அறிவிக்கவில்லை
1. அயலவரை கண்ணியப்படுத்துவது ஈமானின் அடையாளங்களில் உள்ளதாகும்.
2. விருந்தினரை கௌரவிப்பதன் அவசியம்.
3. அயலவர்களுக்கிடையேயான தொடர்பு என்பது ஈமானுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சமூக விவகாரம் மாத்திரமே.
4. ஈமான் ஒருவரிடம் இருப்பதை வெளிக்காட்டும் சில நடத்தைகளும் உள்ளன.
செயல்பாடு (2) : ஒத்துழைத்து இணைப்பேன் :
உங்கள் சக நண்பர்களுடன் ஒத்துழைத்து, ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதை பின்வருவனவற்றிலிருந்து பொருத்தமான ஆதாரங்களுடன் இணைக்குக.
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஹதீஸிலிருந்து அதற்குப் பொருத்தமான பகுதி
அல்லாஹ் கூறுகிறான் "(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.)" (காப் : 18)
பேசினால் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டையை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' (ஆதாரம் : புஹாரி 2463, முஸ்லிம் 1609).
தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : "(நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா?". (ஸாரியாத் : 24). தனது விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
செயல்பாடு (3) : மதிப்பாய்வு செய்து சுருக்கவேன்:
நாவின் ஆபத்து பற்றி நீங்கள் தெளிவுபெற, இந்த இணைப்பைப் பார்க்கலாம். பிறகு நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களைச் சுருக்கமாகக் கூறவும் :
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
(அவர் அமைதியாக இருக்கட்டும்) என்பதன் பொருள்: அவர் குரல் எழுப்பட்டும்.
நம்பிக்கையாளர் நன்மையை ஏவுவதை விட்டும் மௌனித்திருக்க மாட்டார்.
விருந்தினருக்கு உணவளிப்பது உண்மையான இறைநம்பிக்கையைக் குறிக்கிறது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ஏழ்மையிலும் துன்பத்திலும் பொறுமை காத்தார்.
அயலவரை மதிப்பதற்கும் ஈமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கே 2 : பின்வரும் நடத்தைகளை மதிப்பீடு செய்து, பொருத்தமான இடத்தில் ஒரு குறியீடு வைக்க.
இல நடத்தை நல்ல நடத்தை தவறான நடத்தை
1- அயலவரின் ரகசியங்களை அறிய முற்படுதல்.
வீட்டில் இல்லாத அயலவரின் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பதும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
3- அயலவரின் ரகசியங்களைப் பற்றி பேசுவது மற்றும் அவரது இரகசியங்களை வெளிப்படுத்துவது
4- அக்கம்பக்கத்தினரின் வீடுகளுக்கு முன்னால் குப்பைகளை வீசுதல்
5. விருந்தினருக்காக செலவழித்ததற்கு அல்லாஹ்விடம் கூலி எதிர்பார்த்தல் .
6- உங்கள் சக நண்பரிடம், நேற்று மற்றொரு சக நண்பர் அவரை ஏசியதாக சொல்லுதல்
7. விருந்தினரை யாராவது தாக்கினால் அவரைப் பாதுகாத்தல்
8- அயலவரைத் தொந்தரவு செய்ய தொலைக்காட்சி ஒலியை உயர்த்துதல்.
கே 3 : மக்களின் மானங்களைத் துருவி ஆராயும் சக நண்பருக்கு அறிவுரை வழங்கவும்.
பாடம் ஒன்பது: நடுநிலை மற்றும் சமநிலை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் பொதுவான அர்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் பயன்களைத் தெளிவுபடுத்தவேண்டும்.
உலக மற்றும் மறுமை விடயங்களுக்கு இடையில் சமநிலை பேணும் முறையைத் தெளிவுபடுத்தவேண்டும்.
கடமைகளில் சமநிலை பேணுவதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும்.
ஹதீஸை மனனம் செய்ய வேண்டும்.
எனது அன்பான மாணவரே, இந்த ஹதீஸைப் படித்த பிறகு, பின்வரும் படத்தில் உள்ள வெற்றிடங்களை பொருத்தமான கடமைகளைக் கொண்டு நிரப்பவும்:
அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமைகள்:
தனக்குச் செய்யவேண்டிய கடமைகள்:
குடும்பத்தினருக்கு செய்யவேண்டிய கடமைகள்:
ஸல்மான் பாரிஸீ (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள் : "உங்கள் இறைவனுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை உள்ளது, உங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை உள்ளது, உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை உள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை வழங்குங்கள்". அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸல்மான் உண்மையைச் சொன்னார்". என்று கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 1968).
ஹதீஸின் விளக்கம்:
இந்த ஹதீஸ் ஷரிஆ சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்றை நமக்குக் கற்பிக்கிறது, இது கடமைகளை நிறைவேற்றுவதில் சமநிலை பேணுவதாகும். எனவே நாம் ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு மற்றொன்றில் அலட்சியமாக இருக்கக்கூடாது. இதனால்தான், நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி) அவர்களின் வார்த்தைகளைக் கேட்டவுடன், அவர் அவர்களை ஆமோதித்து பின்வருமாறு கூறினார்கள்: "ஸல்மான் உண்மையைச் சொன்னார்". இங்கு அவர்கள் உரிமைகளை மூன்று பிரிவுகளாக பிரித்தார்கள் :
முதலாவது : அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமை, இது கடமைகளில் மிக முக்கியமானது. கட்டளைகளை நிறைவேற்றுவது மற்றும் தடைகளைத் தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இரண்டாவது: ஆன்மாவுக்கு செய்யவேண்டிய கடமை. உடை, உணவு, பானம், ஓய்வு போன்ற பாவமில்லாத, ஆன்மாவிற்கும் உடலுக்கும் அவசியமான அனைத்தையும் இது உள்ளடக்குகின்றது.
மூன்றாவது: - மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற - குடும்பத்திற்கு செய்யவேண்டிய கடமை. அவர்களை நல்லமுறையில் பார்ப்பதும் அவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதும் அவசியம்.
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றி, எக்கடமைகளிலும் குறைவைக்காமல் இருத்தல்.
வணக்கத்தில் சக்திக்கப்பாற்பட்டதை வருத்திச் செய்வதைத் தவிர்ந்து கொள்தல்.
உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையில் சமநிலை போணுவதன் அவசியம்
மனிதனின் இயல்புணர்வு, அவனது உளவியல், உடலியல் தேவைகளை இஸ்லாம் கவனித்துள்ளமை.
வணக்கத்தில் முயற்சி செய்வதற்கும், அல்லாஹ் அனுமதித்த விதத்தில் மனஆறுதல்படுத்திக்கொள்வதற்கும் மத்தியில் சமநிலை பேணுவதன் முக்கியத்துவம்.
இஸ்லாத்தையும், அதன் தூதுத்துவத்தையும் நபித்தோழர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டமை.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): கவனித்து பதிலளிப்பேன் :
பின்வரும் அட்டவணையில் அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கின் மூன்று வடிவங்களையும், அனுமதிக்கப்படாத பொழுதுபோக்கின் மூன்று வடிவங்களையும் பதிவு செய்யவும்:
அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கின் வடிவங்கள்
அனுமதிக்கப்படாத பொழுதுபோக்கின் வடிவங்கள்
செயல்பாடு (2): ஆராய்ந்து சுருக்குவேன் :
அழைப்புப்பணி, ஜிஹாத் என்ற சுமைகள் இருந்தபோதிலும், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிகளதும், உறவினர்களதும் உரிமைகளைப் புறக்கணிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இதைக் குறிக்கும் இரண்டு சூழ்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை உங்கள் குறிப்பேட்டில் சுருக்கமாக எழுதவும்.
செயல்பாடு (3): நான் இறுதிச் சுருக்கத்தைக் கண்டறிவேன் :
பின்வரும் வசனங்களைக் கருத்தில் கொண்டு, அவை குறிப்பிடும், கடமைகளுக்கு இடையே உள்ள சமநிலை வகைகளை விளக்குங்கள்:
வசனம்/அது குறிப்பது
"மேலும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள். (கஞ்சத்தனமாக) குறைக்கவும் மாட்டார்கள், இவற்றுக்கிடையே நடுத்தரத்திலானதாக இருக்கும்". (ஃபுர்கான் : 67). செலவு செய்வதில் சமநிலை பேணுதல்.
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே!". (கஸஸ் : 77). மறுமைக்காக நற்செயல் புரிதல், உலக இன்பங்களை அனுபவித்தல் என்பவற்றுக்கு இடையில் சமநிலை பேணுதல்.
மேலதிக செயல்பாடு:
நேர்மறை சிந்தனை, மற்றும் உண்மையைத் தேடி அதைப் பின்பற்றும் ஆர்வம் போன்ற பல பாடங்களை உள்ளடக்கியுள்ள நபித்தோழர் ஸல்மான் அல்-ஃபார்ஸி (ரலி) இஸ்லாத்திற்கு மாறிய கதையை தேடிப்படிக்குமாறு ஆசிரியர் தனது மாணவர்களைக் கோர வேண்டும்.
குறிப்பு: முழுக் கதையும் ஸியரு அஃலாமிந் நுபலாஃ (1/449) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹதீஸின் தலைப்பாக இருக்க மிகவும் பொருத்தமான சொற்றொடர்:
(அல்லாஹ்வின் உரிமைகளில் கவனம் செலுத்தல் - உரிமைகளில் சமநிலை பேணுதல் - குடும்ப உரிமைகள்)
ஒரு பெண் சரியான நேரத்தில் தொழுகிறாள். ஆனால் அவள் கணவனுக்குக் கீழ்ப்படிவதில்லை, அதனால் அவள்:
(ஹதீஸை செயல்படுத்துகிறாள் - ஹதீஸை செயல்படுத்தவில்லை - ஹதீஸின் ஒரு பகுதியை செயல்படுத்துகிறாள்).
ஸல்மான் (ரலி) அவர்களின் சம்பவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டது :
(முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறல் - இரகசியமாக தர்மம் செய்தல் - குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்தல்)
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
வணக்கத்தில் சக்திக்கப்பாற்பட்டதை வருத்திச் செய்வது விரும்பத்தக்கது.
செய்யமுடியாத வழிபாட்டைச் செய்யும்படி தன்னைத் தானே கட்டாயப்படுத்துவது வெறுக்கப்பட்டது.
முஸ்லிம் தனது குழந்தைகள் விடயத்தில் ஈடுபடாமல் அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவது அவசியமாகும்.
ஒரு முஸ்லிம் தனது குழந்தைகளின் உரிமைகளைக் கருத்தில் கொள்வதுடன், அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
இஸ்லாம் ஆன்மீகப் பகுதியில் மாத்திரமே அக்கறை கொண்டுள்ளது.
இஸ்லாம் உளவியல் மற்றும் உடலியல் இரண்டிலுமே அக்கறை கொண்டுள்ளது.
கேள்வி 3: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக
............................................ உங்கள் மீது உரிமை உள்ளது, .............................................. உங்கள் மீது உரிமை உள்ளது, ...................................... உங்கள் மீது உரிமை உள்ளது, எனவே .................................... அவரவர் உரிமையை வழங்குங்கள்
கேள்வி 4: பின்வரும் இரு கேள்விகளுக்கு விடை தருக.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் மூன்று வழிகாட்டல்களைத் தருக.
முஸ்லிமின் வாழ்வில் சமநிலை பேணும் முறையை மூன்று வரிகளில் தெளிவுபடுத்துக.
இஸ்லாமிய சட்டவியல் பகுதி
பாடம் ஒன்று : வுழூவின் சட்டங்கள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
வுழூவின் கடமைகள், ஸுன்னத்துக்களைப் பட்டியலிட வேண்டும்.
வுழூவை முறிக்கக் கூடியவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தூய்மையின் அவசியத்தை உணர வேண்டும்.
சரியான முறையில் வுழூச் செய்ய வேண்டும்.
தொழுகைதான் மார்க்கத்தின் தூணாகவும், இரு சாட்சியங்களுக்கு அடுத்து இஸ்லாத்தின் பிரதான தூணாகவும் உள்ளது. அதற்குத் தூய்மை நிபந்தனையிடப் படுகிறது. இதனால் தொழுகை சட்டங்களைக் கற்க முன் இதனைக் கற்க ஆரம்பம் செய்கின்றோம்.
முதலாவது : வுழூவின் பர்ழுகள் (கடமைகள்)
வுழூவின் பர்ழுகள் ஆறாகும். அவையின்றி அது செல்லுபடியாகாது. அவை :
முகத்தை முழுதும் கழுவுதல்.
வாய்கொப்பளிப்பதும், மூக்கினுள் நீர் செலுத்தி சிந்தி விடுதலும் இதில் அடங்கும், அவ்விரண்டையுமோ, இரண்டில் ஒன்றையோ விட்டவரின் வுழூ செல்லுபடியாக மாட்டாது.
முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்.
தலை முழுதும் மஸ்ஹு செய்தல் (தடவுதல்), நீரில் நனைக்கப்பட்ட தனது கையை தலையின் முற்பகுதிலியிருந்து பிடரி வரை கொண்டு சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டுவருவது தான் இதன் முழுமையான முறையாகும். தலையை மஸ்ஹு செய்வதுடன் சேர்த்து இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும்.
கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்.
உறுப்புகளிடேயே ஒழுங்குமுறை பேணுதல், முகத்தில் ஆரம்பித்து, பின்னர் இரு கைகள், பின்னர் தலையை மஸ்ஹு செய்தல், பின்னர் இரு கால்களையும் கழுவுதல் என்பதே இதன் ஒழுங்கு முறை.
தொடர்ச்சியாக செய்தல், இரு உறுப்புக்களைக் கழுவுவதற்கிடையில் நீண்ட இடைவெளி இருக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் : "முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)". (மாஇதா : 6)
வுழூவின் பர்ழுகளை பின்வரும் இணைப்பில் காணவும் :
இரண்டாவது : வுழூவின் ஸுன்னத்துகள்
வுழூவின் போது செய்வது விரும்பத்தக்க விடயங்களை வுழூவின் ஸுன்னத்துக்கல் எனப்படுகின்றது. அதற்காகக் கூலி வழங்கப்படும், அதனை விட்டாலும் அவருடைய வுழூ செல்லுபடியாகும்.
வுழூவின் ஸுன்னத்துக்கள் அதிகமுள்ளன, அவற்றுள் சில :
வுழூவின் ஆரம்பத்தில் மூன்று தடவை இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்.
முகம் கழுவ முன்னால் வாய்கொப்பளித்து, நீரை மூக்கினுள் செலுத்தி சிந்திவிடல். நோன்பாளியாக இல்லாத பட்சத்தில் இதனை சற்று அதிகமாகவே செய்தல்.
மிஸ்வாக் செய்தல், நபி (ஸல்) கூறினார்கள்: "எனது சமூகத்திற்கு சிரமம் இல்லையெனில் ஒவ்வொரு வுழூவின் போதும் அவர்களுக்கு மிஸ்வாக் செய்யுமாறு ஏவியிருப்பேன்". (ஆதாரம் : அஹ்மத் 7406).
தலையைத் தவிரந்த வுழூவின் ஏனைய உறுப்புக்களை மும்மூன்று தடவை கழுவுதல். தலையை ஒரு தடவை மாத்திரமே மஸ்ஹு செய்ய வேண்டும்.
இரட்டை உறுப்புக்களில் இடதுக்கு முன்னால் வலதை ஆரம்பித்தல். நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "நபி (ஸல்) அவர்களுக்கு பாதணி அணிதல், தலைவாருதல், வுழூச் செய்தல் மற்றும் அனைத்து விடயங்களிலும் வலதை முற்படுத்துவது மிகவும் விருப்பத்திற்குரியதாகும்". (ஆதாரம் : புஹாரி 168, முஸ்லிம் 268).
மூன்றாவது : வுழூவை முறிக்கக் கூடியவை
வுழூவை முறிக்கும் அனைத்து செயல்களும் இதிலடங்கும், அவையாவன :
விந்து, காமநீர், சிறுநீர், மலம், காற்று போன்ற ஏதாவது முன்பின் துவாரத்திலிருந்து வெளிப்பிடுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "சப்தம் கேட்கும் வரை, அல்லது காற்றை உணரும் வரை தொழுகையிலிருந்து வெளியேற வேண்டாம்". (ஆதாரம் : புஹாரி 137, முஸ்லிம் 361).
துணி போன்ற திரையேதுமில்லாமல் அபத்தைத் தொடுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யாரேனும் தன் மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் வுழூ செய்யட்டும்". (ஆதாரம் : அபூதாவுத் 181, திர்மிதி 82).
தூக்கம், மயக்கம், பைத்தியம் போன்றன மூலம் புத்தி நீங்குதல். சிறு தூக்கத்தின் மூலம் வுழூ முறிய மாட்டாது.
ஓட்டக இறைச்சி சாப்பிடல். ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) வுழூச் செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் விரும்பினால் வுழூச் செய்துகொள்க! விரும்பா விட்டால் வுழூச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அந்த மனிதர், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) வுழூச் செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் வுழூச் செய்துகொள்க! என்றார்கள்." (ஆதாரம் : முஸ்லிம் 360).
செயற்பாடுகள்
ஒப்படை (1): சிந்தித்து, இறுதிச் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறேன்:
'உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு இரு கைகளையும் முழங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் வுழூச் செய்வதை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, : "யார் என்னுடைய இந்த வுழூவைப் போன்று வுழூச் செய்து, பின் ஏதும் கதைக்காமல் இரு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் அறிவித்தார்கள். (ஆதாரம் : புஹாரி 164, முஸ்லிம் 226).
இந்த ஹதீஸின் அடிப்படையில்:
வுழூவின் பர்ழுகள் மற்றும் ஸுன்னாக்களைக் கண்டறியவும்.
பர்ழுகள் : முகத்தைக் கழுவுதல் - முழங்கை வரை இரு கைகளையும் கழுவுதல் - தலையை மஸ்ஹு செய்தல் - இரு கால்களையும் கழுவுதல்.
ஸுன்னாக்கள் : கைகளை மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல், மூக்கை சிந்திவிடுதல், ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று தடவை கழுவுதல்.
இந்த ஹதீஸ் வுழூவின் சிறப்புகளில் ஒன்றைக் குறிக்கிறது, அது என்ன?
செயல்பாடு 2: விளக்கி மற்றும் விவரிப்பேன்:
இந்த காணொளியைப் பயன்படுத்தி, நீங்கள் படித்தவற்றின் மூலம் உங்கள் குடும்பத்தினருக்கு வுழூவை எவ்வாறு முழுமையாகச் செய்வது என்று கற்றுக் கொடுங்கள்:
செயல்பாடு (3): அடையாளம் கண்டு பதிலளிப்பேன் :
பின்வரும் சூழ்நிலைகளில் சரியானது மற்றும் தவறானது யாது என்பதை வேறுபடுத்தி காரணத்துக் கூறி விளக்குங்கள் :
ஒரு மனிதன் வுழூவில் தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்கிறான்.
ஒரு இளைஞன் தனது முகத்தைக் கழுவி, பின் தலையை மஸ்ஹு செய்து, பின்னர் இரு கைகளையும் கழுவிவிட்டு, பின்னர் கால்களைக் கழுவினான்.
ஒரு யுவதி வுழூச் செய்து கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு வந்தது, சுமார் 20 நிமிடங்கள் பேசிவிட்டு வுழூவைப் பூரணப்படுத்தினாள்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
இரு கால்களையும் கரண்டைக்கால் வரை கழுவுதல் வுழூவின் பர்ழுகளில் உள்ளதாகும்.
வாய் கொப்பளித்து, மூக்கினுள் நீர் செலுத்துவது வுழூவின் ஸுன்னத்களில் உள்ளதாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
வுழூவைத் தொடர்ச்சியாக செய்வது :
(பர்ழு - விரும்பத்தக்கவை - ஸுன்னா)
வுழூவில் வலது மற்றும் இடது கைகளுக்கு இடையே உள்ள ஒழுங்கு :
(பர்ழு - ஸுன்னா - அனுமதிக்கப்பட்டது)
வுழூவை முறிக்கும் செயல்களில் உள்ளவை :
(சிறு தூக்கம் - சிறுநீர் கழித்தல் - அதிகம் சிரிப்பது)
கே 3 : வுழூவை முறிக்கும் மூன்று விஷயங்களை எழுதவும்.
பாடம் இரண்டு : தொழுகையின் நிபந்தனைகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகளைப் பட்டியலிடவும்.
தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகளுக்குரிய ஆதாரங்களைக் கூறுக.
தொழுகையில் ஆண் மறைக்க வேண்டியதற்கும், பெண் மறைக்க வேண்டியதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக் காட்டவும்.
தொழுகையின் கடமையின் மகத்துவத்தை உணர்தல்.
தொழுகையின் நிபந்தனைகளைக் கடைபிடித்தல்.
அறிமுகம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்". (ஆதாரம் : புஹாரி 631).
தொழுகையின் நிபந்தனைகளை நிறைவேற்றி, அதன் கடமைகள் மற்றும் ஸுன்னாக்களை நிறைவேற்றி, அதனை முறிப்பதைத் தவிர்ப்பதில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, தொழுகையின் விதிகளைக் கற்றுக்கொள்ள இது நம்மை அழைக்கிறது. இப்பாடத்தில் நாம் தொழுகையின் நிபந்தனைகளைக் கற்றுக்கொள்வோம்.
தொழுகையின் நிபந்தனைகள்
இஸ்லாம், காபிர்களின் நற்செயல்கள் செல்லுபடியற்றது என்ற வகையில் தொழுகையும் அவர்களிடமிருந்து செல்லுபடியாகாது.
புத்தி, பைத்தியகாரரிடமிருந்து அது செல்லுபடியாக மாட்டாது.
சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாக இருத்தல்.
ஜனாபத்து, மாதவிடாய், பிரசவ இரத்தம் போன்ற பெருந்தொடக்கிலிருந்து குளிப்பதன் மூலம் தூய்மையடையலாம்.
சிறுநீர் கழித்தல், மலம், காற்று போன்ற சிறு தொடக்கிலிருந்து வுழூ மூலம் தூய்மையடையலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "வுழூ இன்றி தொழுகை ஏற்கப்பட மாட்டாது". (முஸ்லிம் : 224).
தொழும் நபரின் உடல், ஆடை, தொழுமிடம் சுத்தமாக இருத்தல். தொழுபவரின் உடல், அல்லது ஆடை, அல்லது தொழுமிடத்தில் அசுத்தம் இருந்தால் தொழுகை செல்லுபடியாகாது. அல்லாஹ் கூறுகின்றான் : "உமது ஆடையைத் தூய்மைப்படுத்தவும்". (முத்தஸ்ஸிர் : 4).
தொழுகை நேரம் நுழைதல், உரிய நேரத்திற்கு முன் அது செல்லுபடியாகவும் மாட்டாது, உரிய நேரத்தை விடத் தாமதப்படுத்துவதும் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக தொழுகை விசுவாசிகள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது". (நிஸா : 103). அதாவது வரையறுக்கப்பட்ட நேரத்தில்.
அவ்ரத்தை (மறைக்க வேண்டியதை) மறைத்தல் : இது ஆண்களிடம் தொப்புள் முதல் முழங்கால் வரையிலும், பெண்களிடம் முகம், இரு மணிக்கட்டுகள் தவிர்ந்த முழு உடலுமாகும்.
கிப்லாவை முன்னோக்குதல், சக்தியிருந்தும் அதை முன்னோக்காவிட்டால் தொழுகை செல்லுபடியாக மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான் : "ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்". (பகரா : 144).
நிய்யத் (எண்ணம்) : இது அனைத்து வணக்கங்களுக்குமான நிபந்தனையாகும். இதன் இடம் உள்ளமாகும். பஜ்ர், ளுஹர் போன்ற தான் நிறைவேற்ற விரும்பும் தொழுகையை மனதால் எண்ண வேண்டும், வாயினால் மொழியக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்". (ஆதாரம் : புஹாரி 1, முஸ்லிம் 1907).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): வாசித்து தீர்ப்பு வழங்குவேன் :
பின்வரும் செயல்களின் சரியானதை விளக்கவும், பின்னர் தொழுகையின் நிபந்தனைகளிலிருந்து நீர் கற்றுக்கொண்டவற்றின் படி, ஒவ்வொரு செயலுக்கும் தொடர்புடைய நிபந்தனையைத் தீர்மானிக்கவும்:
செயல் சரி தவறு நிபந்தனை
தொழுகைக்காக முஅத்தின் அதான் கூற முன் தொழுதார். நேரத்தை அடைந்திருத்தல்.
கிப்லாவை முன்னோக்கி ளுஹர் தொழ நிய்யத் வைத்தார். கிப்லாவை முன்னோக்குதல் மற்றும் நிய்யத் வைத்தல்.
மலசலம் கழித்துவிட்டு வுழூவின்றி தொழுதார். தொடக்கிலிருந்து சுத்தமாகுதல்.
ருகூஃவின் போது கிப்லாவிற்கு எதிர்திசைக்குத் திரும்பினார். கிப்லாவை முன்னோக்குதல்
செயற்பாடு : (2) கலந்துரையாடி அபிப்பிராயங்களை கூறுவேன்:
உங்கள் நண்பருடன் பின்வரும் நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கவும், அவற்றின் தீர்ப்பை விளக்கவும், அவற்றிற்கு சில பொருத்தமான தீர்வுகளையும் முன்மொழியவும்:
மறைவிடம் தெரியும் படியான மென்மையான ஆடைகளை அணிந்தவாறு சில வாலிபர்கள் தொழுகையை நிறைவேற்றல்.
பிறருடன் நடந்து கொள்ளும் முறையில் சில தொழுகையாளிகளின் மோசமான பண்புகள்.
செயற்பாடு (3) : வாசித்து, இணைக்கிறேன்.
அல்லாஹ் கூறுகிறான் : "தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்". (பகரா : 238).
இவ்வசனத்தை வாசித்த பிறகு, அதை நேரம் நுழையும் நிபந்தனையுடன் இணைக்கவும்.
செயற்பாடு (4) சட்டத்தீர்ப்பை எழுதுவேன் :
நான் அல்லாஹ்வுக்காக ளுஹருடைய தொழுகை நான்கு ரக்அத்களை தொழ நிய்யத் வைத்தேன் என்று சத்தமாகச் சொன்ன ஒருவருக்கான தீர்ப்பை எழுதுங்கள் .
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
ஆரம்ப துஆ தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். (×)
தொப்புளிலிருந்து முழங்கால் வரை ஆணின் அவ்ரத்தாகும் (✓)
ஒருவரால் இயலாமல் போகும் போது கிப்லாவைத் தவிர வேறு திசையை நோக்கித் தொழுவது செல்லுபடியாகும்.(✓)
முஸ்லிமல்லாதவரின் தொழுகை செல்லுபடியாகும். (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
தொழுகையின் நிபந்தனைகளுள் உள்ளது :
(புத்தி - அமைதியாக இருத்தல் - ஒழுங்கு முறை)
தொழுகையில் அவ்ரத்தை மறைப்பது :
(நிபந்தனை - கடமை - ஸுன்னா)
தொழுகையின் நிபந்தனைகளில் "உமது ஆடையைத் தூய்மைப்படுத்தவும்" என்ற வசனம் குறிக்கும் தூய்மை :
(சிறு தொடக்கிலிருந்து - பெருந்தொடக்கிலிருந்து - அசுத்தத்திலிருந்து)
தொழுமிடத்தில் அசுத்தம் இருப்பதுடன் அங்கு தொழுவது :
(செல்லுபடியாகும் - செல்லுபடியாகாது - வெறுக்கத்தக்கது)
பிரயாணி கிப்லாத் திசையல்லாது வேறு திசை நோக்கி கடமையான தொழுகை தொழுவது :
(ஆகும் - வெறுக்கப்பட்டது - செல்லுபடியற்றது)
கே 3 : பின்வரும் இரண்டு ஆதாரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதை விளக்கவும் :
"நிச்சயமாக தொழுகை விசுவாசிகள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது".
"வுழூ இன்றி தொழுகை ஏற்கப்பட மாட்டாது".
கே 4 : தொழுகையின் போது ஒரு ஆணின் அவ்ரத்துக்கும் பெண்ணின் அவ்ரத்துக்கும் என்ன வித்தியாசம்?
பாடம் மூன்று : தொழுகையின் முதல் நிலைக் கடமைகள் மற்றும் இரண்டாம் நிலைக் கடமைகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
தொழுகையின் கடமைகளைக் கூற வேண்டும்.
தொழுகையின் கடமைகளுக்கு ஆதாரம் கூற வேண்டும்.
ருக்ன், வாஜிப் எனப்படும் கடமைகளுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை பிரிக்க வேண்டும்.
தொழுகையின் கடமையின் மகத்துவத்தை உணர்தல் வேண்டும்.
உள்ளச்சத்துடனும், அமைதியாகவும் தொழ வேண்டும்.
அறிமுகம்
தொழுகையில் மார்க்கமாக்கப்பட்டுள்ள செயல்கள் ருக்ன்கள் (முதல் நிலைக் கடமைகள் ), வாஜிப்கள் (இரண்டாம் நிலைக் கடமைகள்), மேலும் ஸுன்னத்கள் என வகைப்படுகின்றன :
ருக்ன்கள் (முதல் நிலைக் கடமைகள் ) இல்லாமல் தொழுகை செல்லாது. இது வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ தவிர்க்கப்பட முடியாது, அவை பதினான்கு கடமைகள்.
வாஜிப்கள் (இரண்டாம் நிலைக் )கடமைகளை அவசியம் நிறைவேற்ற வேண்டும், எனவே அவற்றில் ஒன்றை வேண்டுமென்றே புறக்கணிப்பவரின் தொழுகை செல்லுபடியாகாது, மேலும் அதை மறதியாக விட்டவர் மறதிக்காக ஸஜ்தா செய்ய வேண்டும். அதன் எண்ணிக்கை எட்டாகும்.
ஸுன்னாக்களை செய்வது விரும்பத்தக்கது, அது விடப்பட்டாலும் தொழுகை செல்லும். அவை அதிகமானதாகும்.
முதலாவதாக : தொழுகையின் ருக்ன்கள் (முதல் நிலைக் கடமைகள் )
சக்தியுள்ள போது கடமையான தொழுகையில் நின்று தொழுதல்.
நோயின் காரணமாக நிற்க முடியாவிட்டால் உட்கார்ந்தோ, பக்கவாட்டிலோ முடியான முறையில் தொழ வேண்டும்.
ஆரம்ப தக்பீர், இது அல்லாஹு அக்பர் என்று கூறுவதாகும்.
ஸூறா அல் பாதிஹாவை ஓதுதல்.
ஒவ்வொரு ரக்அத்திலும் ருகூஃ செய்தல், குனிந்து இரு கைகளையும் முழங்காலில் வைக்க வேண்டும்.
ருகூஃவிலிருந்து நடுநிலைக்கு வருதல்.
ஸுஜூது செய்தல், இதில் மூக்கு உட்பட நெற்றி, இரு மணிக்கட்டுகள், இரு முழங்கால்கள், இரு பாதங்கள் என ஏழு உறுப்புக்கள் தரையில் பட வேண்டும்.
ஸுஜூதிலிருந்து நடு இருப்பிற்கு வருதல்.
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல்.
இறுதி அத்தஹிய்யாத் ஓத அமர்தல்.
இறுதி அத்தஹிய்யாத் ஓதுதல்.
இறுதி அத்தஹிய்யாதில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லல்.
ருகூன்களுக்கிடையில் ஒழுங்கு முறை பேணுதல்.
ஸலாம் கூறுதல், அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ் எனக் கூறுவது சிறந்ததாகும்.
அனைத்து ருகூன்களிலும் அமைதியாக தரித்து நிற்றல்.
தொழுகையின் ருக்ன்களை (முதல் நிலைக் கடமைகள் ) இங்கே காணவும் :
இரண்டாவதாக : தொழுகையின் வாஜிப்கள் (இரண்டாம் நிலைக் கடமைகள் )
ஆரம்ப தக்பீர் தவிர்ந்த, ருகூஃ, ஸுஜூது ஆகியவற்றின் தக்பீர்களைப் போன்ற அனைத்து தக்பீர்களும் கடமையாகும்.
ருகூவில் (ஒரு தடவை) 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' என்று கூறுதல்.
ஸுஜுதில் (ஒரு தடவை) 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல்.
ருகூஃவிலிருந்து எழும்போது தனித்துத் தொழுபவர் மற்றும் தொழுகை நடத்துபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறுதல்.
ருகூஃவிலிருந்து நடுநிலைக்கு வந்ததும் ரப்பனா வலகல் ஹம்து எனக் கூறுதல்.
இரு ஸஜ்தாக்களுக்குமிடையில் ' ரப்பிஃபிர்லி ' என்று கூறுதல்.
முதல் அத்தஹிய்யாதுக்காக அமர்ந்து, அதில் அத்தஹிய்யாத் ஓதுதல் : "அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு". (பொருள் : சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்).
தொழுகையின் கடமைகளை இங்கே காணவும்:
https://www.youtube.com/watch?v=DcLXOhquuOQ
செயற்பாடுகள்
செயல்பாடு (1): கண்டறிந்து வார்த்தை அமைப்பேன் :
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறிவிட்டு, 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபியவர்கள் பதிலளித்து விட்டு 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார். ''நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சாரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 757, முஸ்லிம் 397).
இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள தொழுகையின் ருகூன்களைக் கண்டறியவும்.
ஆரம்ப தக்பீர் - ருகூஃ - ருகூஃவிலிருந்து எழுதல் - ஸுஜூத் - ஸுஜூதிலிருந்து நடுஇருப்புக்கு வருதல் - நடுஇருப்பு - அமைதி
இந்த நபிமொழியை ஆதாரமகக் கொண்டு வேகமாகத் தொழும் ஒருவருக்கு உபதேசமொன்று எழுதவும்.
செயல்பாடு (2): நான் பங்கேற்று மதிப்பீடு செய்கிறேன்:
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் முதல் ரக்அத் தொழுகையை விவரிக்க, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அவரது விளக்கத்தை மதிப்பீடு செய்து அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அல்-ஃபாத்திஹா ஓதுதல் தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். (×)
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்ந்திருப்பது தொழுகையின் ( பர்ழ் எனப்படும்) தூண்களில் ஒன்றாகும். (√)
அமைதியாக நிறைவேற்றுவது தொழுகையின் தூண்களில் ஒன்றாகும். (√)
ருகூஃவுக்குச் செல்லும் போது தக்பீர் சொல்வது தொழுகையின் தூண்களில் ஒன்றாகும். (×)
ஒரு முஸ்லிம் ஸஜ்தா செய்யும் போது தஸ்பீஹ் சொல்ல வேண்டும். (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
முதல் அத்தஹிய்யாத் :
(தொழுகையின் நிபந்தனை - தொழுகையின் தூண் - தொழுகையின் கடமை)
தொழுகையில் ஸலாம் கூறுவது :
(நிபந்தனை - தூண் - கடமை)
நபி (ஸல்) அவர்கள் ஸஜூது செய்யும் போது தரையில் பட வேண்டுமென பணித்த உறுப்புக்கள் :
(ஐந்து உறுப்புக்கள் - ஆறு உறுப்புக்கள் - ஏழு உறுப்புக்கள்)
கே 3 : பின்வரும் புள்ளிகள் உள்ள இடத்தை பொருத்தமான வார்த்தையுடன் முழுமைப்படுத்தவும் :
ஆரம்ப தக்பீர் தொழுகையின் .......................... .
தஸ்மீஈ எனப்படுவது : .......................................... எனக் கூறுவதாகும்.
இரண்டாம் ஸுஜூது தொழுகையின் .......................................... .
கே 4 : தொழுகையின் கடமைகளில் ஒன்றை வேண்டுமென்றே கைவிடுவது மற்றும் கவனக்குறைவாக கைவிடுவது பற்றிய சட்டத்தை ஒப்பிடுக.
பாடம் நான்கு : தொழுகையின் ஸுன்னத்கள் மற்றும் அதனை முறிப்பவை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
தொழுகையின் சொல், செயல் சார்ந்த ஸுன்னாக்களுக்கு இடையில் பிரித்துக்காட்ட வேண்டும்.
தொழுகையின் ஸுன்னாக்களை அமுல்படுத்த ஆர்வங்கொள்ளல் வேண்டும்.
உமது தொழுகையிஸ் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும்.
தொழுகையை முறிக்கக்கூடியவற்றைப் பட்டியலிட வேண்டும்.
தொழுகையை முறிப்பவற்றை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.
முதலாவதாக : தொழுகையின் ஸுன்னாக்கள்
இவை தொழுகையின் நன்மைகளை அதிகரிக்கும் சில சொல், செயல்களாகும். அவற்றை விட்டால் பாவமேதுமில்லை.
இவை சொல், செயல் சார்ந்த ஸுன்னாக்கள் என இரண்டாக வகைப்படுகின்றன :
முதலாவதாக : சொல் சார்ந்த ஸுன்னாக்கள் :
ஆரம்ப துஆ, இது ஆரம்ப தக்பீருக்கு பின்னர் பின்வருமாறு கூற வேண்டும் : "ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக". பொருள் : (உனக்கு தகுதியற்ற எல்லாக் குறைகளிலிருந்தும்) உன்னை நான் துதிக்கிறேன். உனது புகழைக்கொண்டு உன்னை போற்றியவனாகவே உள்ளேன். உனது பெயர் அருட்பேறு நிறைந்தாக உள்ளது. உன்னுடைய கண்ணியமும் மகத்துவமும் மேலோங்கிவிட்டது. உன்னையன்றி உண்மையாக வணங்கப்படுபவன் (வேறு எவறும், எதுவும்) இல்லை. (ஆதாரம் : முஸ்லிம் 399).
பாதிஹா ஓத முன் "அஊது பில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்" எனக் கூறி பாதுகாப்புத் தேட வேண்டும்.
ஸூரா பாதிஹாவுக்குப் பின் ஓர் அத்தியாயம் அல்லது சில வசனங்களை ஓதுதல்.
ஸூரா பாதிஹா ஓதியதன் பின் ஆமீன் என்று கூறல்.
ருகூஃ ஸுஜூதில் ஒன்றுக்கு மேலதிகமாக தஸ்பீஹ் கூறுதல்.
இறுதி அத்தஹிய்யாத்திற்குப் பின் பிரார்த்தனை செய்தல்.
இரண்டாவதாக : செயல் சார்ந்த ஸுன்னாக்கள் :
ஆரம்ப தக்பீர், ருகூஃவிற்குச் செல்லல், ருகூஃவிலிருந்து எழல், மூன்றாம் ரக்அத்திற்காக எழும்புதல் ஆகிய சந்தர்ப்பங்களில் இரு கைகளையும் உயர்த்துதல்.
நிலையில் இடது கைக்கு மேல் வலது கையை வைத்தல்.
ருகூஃவில் இரு கைகளையும் முழங்கால்களில் வைத்தல்.
இரு ஸஜ்தாக்களுக்குமிடையில் வலது கையை வலது தொடையிலும், இடது கையை இடது தொடையிலும் வைத்தல்.
ஸுஜூது செய்யும் இடத்தை நோக்குதல்.
தொழுகையின் ஸுன்னாக்களை இங்கே காணவும் :
இரண்டாவதாக : தொழுகையை முறிப்பவை
இரண்டாவதாக : தொழுகையை முறிப்பவற்றில் உள்ளவை :
ருகூஃ, ஸுஜூத் போன்ற (முதல் நிலைக் கடமைகள்) தூண்களில் ஒன்றை வேண்டுமென்றை விடுதல், அதனைத் தவறுதலாக விட்டு, அடுத்த ரக்அத்திற்கு எழ முன்னர் நினைவுக்கு வந்தால் உடனே செய்துவிட வேண்டும், அவரது தொழுகையும் செல்லும், அடுத்த ரக்அத்திற்கு வந்ததன் பின் நினைவுக்கு வந்தால் அந்த ரக்அத் செல்லுபடியற்றதாகி விடும், அடுத்த ரக்அத் முந்தைய ரக்அத்தின் இடத்தில் இருக்கும், இறுதியில் மறதிக்கான ஸுஜூத் செய்ய வேண்டும்.
தஸ்பீஹ், தஸ்மீஃ, தஹ்மீத் போன்ற தொழுகையின் கடமைகளை வேண்டுமென்றே விடுதல்.
தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றை விடுதல், உதாரணமாக : வுழூவின்றி தொழுதல்.
தொழுகையில் ருகூஃ, ஸுஜூத் போன்ற ருகூனை வேண்டுமென்றே அதிகரித்தல். மறதியாக அதிகரித்தால் தொழுகை முறிந்து விட மாட்டாது
வேண்டுமென்றே உண்ணல், பருகல், அது குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கலாம்.
தொழுகையின் தேவைக்கன்றி வேண்டுமென்றே பேசுதல்.
வேண்டுமென்றே சப்தமிட்டு சிரித்தல்.
தொழுகையுடன் தொடர்பற்ற செயல்களை அதிகமாகச் செய்தல்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நான் தீர்மானித்து வேறுபடுத்துகிறேன்:
பின்வருவனவற்றில் தொழுகையை முறிப்பவற்றுக்கும் முறிக்காதவற்றுக்கும் இடையில் பிரித்துக் காட்டவும் :
செயல் தொழுகையை முறிக்காது தொழுகையை முறிக்கும்
இமாம் ஒரு வசனத்தை மறந்தபோது பின்பற்றித் தொழுபவர் நினைவூட்டினார்.
தொழுகையில் மறந்து ஸூரா பாதிஹாவை இரு தடவைகள் ஓதிவிட்டார்.
வேண்டுமென்றே தொழுகையின் போது பருகினார்.
தொழுகையில் உரத்த குரலில் சிரித்தார்.
செயற்பாடு (2) ஆய்ந்து வெளிப்படுத்துகிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ருகூஃ, ஸுஜூதில் தனது முதுகெலும்பை நேராக வைக்காதவரின் தொழுகை செல்லுபடியாகாது". (ஆதாரம் : அபூதாவுத் 855, திர்மிதி 265).
மேற்கண்ட நபிமொழியில் தொழுகையை முறிக்கும் செயல்களைக் கண்டறியவும்.
செயல்பாடு (3) : ஒத்துழைத்து வகைப்படுத்தவேன் :
அட்டவணையின்படி பின்வரும் ஒவ்வொரு செயல்களையும் வகைப்படுத்த உங்கள் நண்பருடன் ஒத்துழைக்கவும்:
செயல் நிபந்தனை ருக்ன் ஸுன்னா (இரண்டாம் நிலைக்கடமை) வாஜிப்
ஆடைத் தூய்மை
ரப்பனா வலகல் ஹம்து எனக் கூறுதல்
ஸூறா அல் பாதிஹாவை ஓதுதல்.
ஆமீன் கூறுதல்
ஸுஜுதில் 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல்.
ஸுஜூது செய்யும் இடத்தை நோக்குதல்.
மதிப்பீடு :
கே 1 : பின்வரும் சந்தர்ப்பங்களில் தொழுகை முறியுமா? இல்லையா ? என்பதைத் தீர்மானிக்கவும்:
ஒரு நபர் தொழும் போது அல்லாஹ்வுக்குப் பயந்து அழுதார். (ஆம் - இல்லை)
அவன் தாயார் அவனை அழைத்தார், தான் தொழுவதை அறிய அவர் "அல்லாஹு அக்பர்" என்று குரல் எழுப்பினார். (ஆம் - இல்லை)
கடைசி அத்தஹிய்யாத்தின் போது அவர் சப்தமிட்டு சிரித்தார். (ஆம் - இல்லை)
அவர் வேண்டுமென்றே ஆரம்ப துஆவை விட்டார். (ஆம் - இல்லை)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஒருவர் வேண்டுமென்றே அதிகரித்தால் தொழுகை முறியும் செயல் :
(ஒரு ரக்அத்தை - ஒரு தஸ்பீஹை - பாதிஹாவிற்குப் பிறகு இரண்டாவது ஸூராவை)
தொழுகையின் செயல் ரீதியான ஸுன்னாக்களில் உள்ளது :
(ஆமீன் கூறுதல் - கைகளை உயர்த்துதல் - தஸ்பீஹ்)
ஒரு முஸ்லிம் தவறுதலாக முதல் அத்தஹிய்யாத்தை விட்டால், அவருடைய தொழுகை :
(செல்லுபடியற்றது - செல்லுபடியானது - மீட்டித் தொழ வேண்டும்)
கே 3 : தவறுதலாக ஸஜ்தாவை விடுவதன் சட்டம் என்ன?
பாடம் ஐந்து : கூட்டுத் தொழுகை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
கூட்டுத் தொழுகையின் சட்டங்களை விளக்க வேண்டும்.
கூட்டுத் தொழுகையின் சிறப்பிற்கு ஆதாரம் கூற வேண்டும்.
கூட்டுத் தொழுகைக்கான கூலியின் மகத்துவத்தை உணர்தல்.
கூட்டுத் தொழுகையைப் பேணுதல்.
அறிமுகம் :
அல்லாஹ் கூறுகிறான் : "இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்". (நூர் : 36).
இவ்வசனத்தில் இறையில்லங்கள் என்றால் என்ன?
முதலாவதாக : கூட்டுத் தொழுகையின் சட்ட திட்டங்கள்
புத்தியுள்ள, பருவமடைந்த ஆடவர் அனைவருக்கும் கூட்டுத்தொழுகை கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்". (நிஸா : 102).
கூட்டுத் தொழுகை நிறைவேறுவதற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை இரண்டாகும், இமாம் (தொழுகை நடத்துபவர்), மஃமூம் (பின்பற்றித் தொழுபவர்). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இருவர், அதற்கு மேற்பட்டவர் கூட்டமைப்பாகும்". (ஆதாரம் : இப்னுமாஜா 972).
இரண்டாவதாக : கூட்டுத் தொழுகையின் சிறப்புகள்
கூட்டுத் தொழுகையின் சிறப்புகள் :
தனித்துத் தொழுவதை விடச் சிறந்தது
சுவனம் நுழைதல்
இஷா மற்றும் பஜ்ர் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதன் சிறப்பு
பதவிகளை உயர்த்துதல், குற்றங்களுக்குப் பரிகாரமாகுதல்
கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதை விடச் சிறந்தது :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதை விட 27 மடங்கு சிறந்ததாகும்". (ஆதாரம் : புஹாரி 645, முஸ்லிம் 650).
சுவனம் நுழையக் காரணமாகும் :
பள்ளியில் கூட்டாகத் தொழுவோருக்கு அல்லாஹ் சுவனத்தில் பல விருந்துகளையும், வாழ்வாதாரங்களையும் தயார்படுத்தி வைத்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்கிறாரோ, அவர் காலையில் செல்லும்போதோ அல்லது மாலையில் செல்லும்போதோ அவருக்காக இறைவன் சுவர்க்கத்தில் ஓர் இடத்தைத் தயார் செய்வான்". (ஆதாரம் : முஸ்லிம் 669).
இஷா மற்றும் பஜ்ர் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதன் சிறப்பு :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "இஷாத் தொழுகையை கூட்டாகத் தொழுதவர் இரவின் பாதியை நின்று வணங்கியவரைப் போன்றவராவார், பஜ்ர் தொழுகையை கூட்டாகத் தொழுதவர் இரவின் முழுதையும் நின்று வணங்கியவரைப் போன்றவராவார்". (ஆதாரம் : முஸ்லிம் 656).
பதவிகள் உயர்த்துதல், குற்றங்களுக்குப் பரிகாரமாகுதல் :
தனது வீட்டில் வுழூச் செய்து, கூட்டுத் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்பவரின் ஒவ்வோர் எட்டுக்காகவும் அல்லாஹ் அந்த ஸ்தொன்றை உயர்த்தி, குற்றமொன்றுக்குப் பரிகாரமாக்குகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அதாவது, ஒருவர் வுழூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான்". (ஆதாரம் : புஹாரி 647, முஸ்லிம் 649).
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : ஒத்துழைத்து பதிலளிக்கிறேன்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ஏழு பேர் உள்ளனர், மறுமையில் எந்தவொரு நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு நிழலளிக்கிறான். .......................... மேலும் ஒரு மனிதர், அவருடைய உள்ளம் என்றும் பள்ளிகளுடனேயே தொடர்புபட்டிருக்கும்". (ஆதாரம் : புஹாரி 660, முஸ்லிம் 1031).
இந்த நபிமொழிக்கும் பாடத்தின் தலைப்பிற்கும் இடையில் தொடர்புபடுத்த உமது நண்பருடன் ஒத்துழைக்கவும்.
செயற்பாடு : (2)அவதானித்து பதிலளிக்கிறேன் :
நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை" என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு பதிலளிப்பிராக!" (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 653).
இந்தக் கதையால் கிடைக்கும் பலன் என்ன?
இச்சம்பவத்தினூடாக கூட்டுத் தொழுகையில் அலட்சியமாக இருப்போருக்கு ஓர் உபதேசத்தை முன்வைக்கவும்.
செயற்பாடு (3): கவனித்து பதிலளிப்பேன் :
கூட்டுத் தொழுகையை கைவிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணத்திற்கும் பொருத்தமான தீர்வை பரிந்துரைக்கவும் :
கூட்டுத்தொழுகையை விடுவதற்கான சில காரணிகள் பரிந்துரைக்கப்படும் தீர்வு
சோம்பல்
வேலைப்பளு
அதன் சிறப்பை அறியாதிருத்தல்
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
கூட்டுத் தொழுகைக்கான குறைந்தபட்ச எண்ணிக்கை இமாமுடன் இரண்டு ஆண்களாகும்.
தனித்து தொழுவதை விட கூட்டுத் தொழுகை இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது.
பெண்களுக்கும் கூட்டுத் தொழுகை கடமையாகும்.
கூட்டுத் தொழுகை இஸ்லாத்தின் மகத்தான அடையாளச் சின்னங்களில் உள்ளதாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
கூட்டுத் தொழுகைக்கு செல்ல அவசியமில்லாதோரில் உள்ளவர் :
(வியாபாரி - இளைஞன் - சிறுவன்)
ஆண்களுக்கான கூட்டுத் தொழுகையின் சட்டம் :
(கட்டாயம் - வலியுறுத்தப்பட்ட ஸுன்னா - விரும்பத்தக்கது)
இஷாத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றியவருக்குக் கிடைக்கும் கூலி :
(இரவின் மூன்றில் ஒரு பங்கு நின்று வணங்கியது - பாதி இரவு நின்று வணங்கியது - இரவு முழுவதும் நின்று வணங்கியது)
கே 3 : பின்வரும் ஹதீஸ் எதைக் குறிக்கிறது என்பதை விளக்கவும் :
"யார் காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்கிறாரோ, அவர் காலையில் செல்லும்போதோ அல்லது மாலையில் செல்லும்போதோ அவருக்காக இறைவன் சுவர்க்கத்தில் ஓர் இடத்தைத் தயார் செய்வான்".
பாடம் ஆறு : ஜும்ஆத் தொழுகை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஜும்ஆத் தொழுகையின் சட்டதிட்டங்களில் முக்கியமானதை விளக்க வேண்டும்.
ஜும்ஆத் தொழுகையின் சிறப்புக்கு ஆதாரம் கூற வேண்டும்.
ஜும்ஆத் தொழுகை முறையை விவரிக்க வேண்டும்.
ஜும்ஆத் தொழுகையின் அவசியத்தை உணர வேண்டும்.
ஜும்ஆத் தொழுகையைப் பேண வேண்டும்.
அறிமுகம் :
வார நாட்களில் வெள்ளிக்கிழமையே சிறந்த நாளாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களது நாட்களில் மிகச் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும்". (ஆதாரம் : அபூதாவூத் 1047, நஸாஈ 1374).
ஜும்ஆ தொழுகை :
ஜும்ஆ தொழுகையின் சிறப்பு
ஜும்ஆத் தொழுகையின் சட்டம்
ஜும்ஆத் தொழுகை முறை
ஜும்ஆத் தொழுகையின் ஒழுங்குகள்
ஜும்ஆ தொழுகையின் சிறப்பு :
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : "ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டால் இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன". (ஆதாரம் : முஸ்லிம் 857).
ஜும்ஆத் தொழுகையின் சட்டம் :
ஜும்ஆத் தொழுகை பருவமடைந்த, புத்தியுள்ள, ஊரிலிருக்கும் நோயாளியாக இல்லாத அனைத்து ஆடவர் மீதும் கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள்". (அல்ஜுமுஆ : 9).
ஜும்ஆத் தொழுகை முறை :
அல்லாஹ்வைப் புகழ்தல், இரு சாட்சியங்கள் கூறுதல், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுதல், இறையச்சத்தை உபதேசித்தல், குர்ஆனிலிருந்து சிலதை ஓதுதல் போன்றவற்றை உள்ளடக்கிய இரு உபதேசங்களை இமாம் தொழுகைக்கு முன்னர் நிகழ்த்த வேண்டும்.
ஜும்ஆத் தொழுகை பள்ளிவாயிலில் கூட்டாக இரண்டு ரக்அத்களாக நிறைவேற்றப்படும்.
முதலாம் ரக்அத்தில் ஸூரா ஜும்ஆவும், இரண்டாம் ரக்அத்தில் ஸூரா முனாபிகூனும், அல்லது முதலாம் ரக்அத்தில் ஸூரா அஃலாவும், இரண்டாம் ரக்அத்தில் ஸூரா காஷியாவும் ஓதுவது ஸுன்னாவாகும்.
ஜும்ஆவின் சட்டங்களை இங்கு காணவும் :
ஜும்ஆத் தொழுகையின் ஒழுங்குகள் :
குளித்து, நறுமணமிடுதல், அழகிய ஆடையை அணிதல், தொழுகைக்காக நேரகாலத்துடன் செல்லுதல்.
நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூறுதல்.
அதிகமாகப் பிரார்த்தனை புரிதல், ஏனெனில் வெள்ளிக்கிழமையில் ஒரு நேரமுண்டு, அதில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்கிறான்.
உபதேசத்தை காதுதாழ்த்திக் கேட்பதும், இடையில் வீணான காரியங்களில் ஈடுபடுவதை விடுவதும் அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டால் இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன. கற்களைத் தொட்டு விளையாடுபவர் வீணான காரியங்களில் ஈடுபட்டு விட்டார்". (ஆதாரம் : முஸ்லிம் 857).
ஜும்ஆத் தொழுகையின் ஒழுக்கங்களை இங்கு காணவும் :
செயற்பாடுகள்
செயல்பாடு (1): எனது வேலையை மதிப்பிடுவேன் :
வெள்ளிக்கிழமைக்கு பல ஒழுங்குகள் உள்ளன. பின்வரும் அட்டவணையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும், அதனை நீர் நிறைவேற்றும் அளவையும் தீர்மானிக்கவும்:
வெள்ளிக்கிழமையின் ஒழுக்கங்கள் தொடர்ந்து செய்கின்றேன் சில சமயம் செய்கின்றேன் செய்ய உள்ளேன்
குளித்தல்.
அழகிய ஆடை அணிதல்.
பள்ளிக்கு நேரகாலத்துடன் செல்லுதல்
வாசனை பூசுதல்.
அதிகமாக பிரார்த்தனை புரிதல்.
நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூறுதல்.
செயல்பாடு (2) : நான் நினைவுபடுத்தி பதிலளிக்கிறேன்:
நீர் இறுதியாக சமூகமளித்த குத்பாப் பேருரையின் தலைப்பை எழுதுக.
வெள்ளிக்கிழமை குத்பாப் பேருரை நிகழ்த்த வேண்டி ஏற்பட்டால் நீர் ஆற்ற விரும்பும் தலைப்பு என்ன?
செயற்பாடு (3) : அனுமாித்து தீர்வு முன்வைப்பேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: " மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! இல்லையேல் அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்". (ஆதாரம் : முஸ்லிம் 865).
ஜும்ஆத் தொழுகையை புறக்கணிப்பதால் ஏற்படும் ஆபத்தையும், அதை நிறைவேற்றுவதில் சில இளைஞர்களின் அலட்சியத்தையும் எவ்வாறு கையாளலாம் என்பதை விளக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
பிரயாணிக்கு ஜும்ஆத் தொழுகை கடமையாகும்.
ஜும்ஆத் தொழுகை வீட்டில் தொழலாம்.
குத்பாப் பேருரையைக் வாய்மூடிக் கேட்பது அவசியமாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஜும்ஆத் தொழுகையின் முதல் ரக்அத்தில் இமாம் ஓதுவது ஸுன்னத்தான ஸூரா :
(ஜுமுஆ - காஷியா - முனாபிகூன்)
ஜும்ஆத் தொழுகையின் ஒழுங்குகளில் உள்ளது :
(குழந்தைகளை அழைத்துச் செல்வது - குளித்து நறுமணம் பூசுதல் - பெண்கள் சமூகமளித்தல்)
ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமையில் அதிகம் செய்ய வேண்டியது :
(நோன்பு - நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லல் - பிரசங்கம்)
கே :3 :பின்வரும் வசனங்களின் உள்ள பிழைகளைத் திருத்தி மீண்டும் எழுதுக.
அனைத்து முஸ்லிம்களுக்கும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்.
ஜும்ஆத் தொழுகை மௌனமாகத் தொழும் நான்கு ரக்அத்களைக் கொண்டதாகும்.
குத்பாப் பிரசங்கம் தொழுகைக்குப் பின்னரே விரும்பத்தக்கது.
கே 4 : ஜும்ஆத் தொழுகை பாவ மன்னிப்புக்கு ஒரு காரணம் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.
பாடம் ஏழு : ஸுன்னத்தான தொழுகைகள்
நடைமுறை (செயல்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஸுன்னத்தான தொழுகையின் அர்த்தத்தை விளக்க வேண்டும்.
தராவீஹ் மற்றும் ழுஹாத் தொழுகையின் சிறப்புக்கு ஆதாரம் கூற வேண்டும்.
கடமையான தொழுகையின் முன், பின் ஸுன்னத்துகளைக் கூற வேண்டும்.
ஸுன்னத்தான தொழுகைகளுக்கு மத்தியில் வேறுபிரிக்க வேண்டும்.
ஸுன்னத் தொழுகையின் சிறப்பை உணர வேண்டும்.
உபரியான மற்றும் முன், பின் ஸுன்னத்துக்களைப் பேண வேண்டும்.
அறிமுகம்:
ஸுன்னத்தான தொழுகை என்பது கடமையான ஐவேளைத் தொழுகைகள் அல்லாத உபரியான தொழுகைகளாகும். இது பல வகைகளைக் கொண்டது. அவற்றுள் சில :
வித்ரு தொழுகை :
இது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும், இஷாத் தொழுகையுடன் அதன் நேரம் ஆரம்பித்து பஜ்ரு உதயமாவதுடன் முடிவடைகின்றது.
இதன் குறைந்தபட்ச அளவு ஒரு ரக்அத்தாகும், அதிக பட்சம் பதினொன்று அல்லது பதின்மூன்று ரக்அத்களாகும்.
இரண்டிரண்டாக அதனைத் தொழுதுவிட்டு, இறுதியாக ஒற்றைப்படையில் முடிக்க வேண்டும்.
முன்பின் ஸுன்னத் தொழுகைகள்
இவை கடமையான தொழுகைகளைத் தொடர்ந்து தொழப்படும் 12 ரக்அத்களாகும். இவை வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ளுஹருக்கு முன் இரண்டும், பின் இரண்டும், மஃரிபிற்கு பின் வீட்டில் இரண்டும், இஷாவிற்கு பின் வீட்டில் இரண்டும், பஜ்ருக்கு முன் இரண்டுமாக 10 ரக்அத்களைக் கற்றுக் கொண்டேன்". (ஆதாரம் : புஹாரி 1180).
தராவீஹ் (ரமதான் மாத இரவு) தொழுகை :
இது ரமழான் மாதத்தில் வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும், இது இஷாவுக்குப் பின், வித்ருக்கு முன் கூட்டாக நிறைவேற்றப்படுவது சிறந்ததாகும்.
இதன் எண்ணிக்கை 11 ஆகும், மேலதிகமாகத் தொழுதால் குற்றமேதுமில்லை, ஒவ்வொரு இரண்டு ரக்காத்துகளிலும் ஸலாம் கூற வேண்டும், ஒவ்வொரு நான்கு ரக்அத்களுக்கு இடையில் சற்று ஓய்வெடுக்க வேண்டும், இதன் சிறப்பை பின்வரும் நபி மொழி குறிக்கின்றது : "இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நின்று வணங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்". (ஆதாரம் : புஹாரி 37, முஸ்லிம் 759).
ழுஹா தொழுகை :
இதுவும் ஸுன்னத்தாகும், இதன் குறைந்தபட்ச அளவு இரண்டு ரக்அத்களாகும், அதிகபட்சம் எட்டு ரக்அத்களாகும், இதன் நேரம் சூரியன் உதித்து, சற்று உயர்ந்த பின் நடு உச்சியை அண்மிக்கும் வரையாகும். (லுஹர் நேரம் வரை)
இதன் சிறப்பு பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, (இரண்டு ரக்அத்கள்) ‘ழுஹா’ தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் (நபி ﷺ அவர்கள்) எனக்கு அறிவுறுத்தினார்கள். அவற்றை நான் இறக்கும்வரை கை விடமாட்டேன்." (ஆதாரம் : புஹாரி 1178, முஸ்லிம் 721).
பொதுவான நபில் தொழுகை :
இதில் மிகச் சிறந்தது இரவுத் தொழுகையாகும், ஏனெனில் இதுதான் உளத்தூய்மைக்கு மிக நெருக்கமானதாகும்.
தடுக்கப்பட்ட சில நேரங்களைத் தவிர ஏனைய அனைத்து நேரங்களிலும் நபில் தொழுவது விரும்பத்தக்கதாகும். அவை :
பஜ்ர் தொழுகை முதல் சூரியன் உதயமாகி சற்று உயரும் வரை.
சூரியன் உச்சிக்கு வந்து சற்று சாயும் வரை.
அஸர் தொழுகை முதல் சூரியன் மறையும் வரை.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): அனுமானித்துக் கூறுவேன் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அடியான் மறுமையில் முதலில் விசாரிக்ப்படுவது அவனது தொழுகை பற்றியதாகும், அதனை முழுமையாக நிறைவேற்றியிருந்தால் அவ்வாறே எழுதப்படும், அதனைப் பூரணப்படுத்தியிருக்காவிடில் அல்லாஹ் கூறுவான் எனது அடியானிடம் ஸுன்னத்தான தொழுகைகள் உள்ளனவா என்று பார்த்து, அதன் மூலம் அவனுடைய கடமையான தொழுகையை நிவர்த்தி செய்யுங்கள்". (ஆதாரம் : அஹ்மத் 16614, நஸாஈ 466).
இந்த ஹதீஸின் அடிப்படையில்:
ஸுன்னாத்தான வணக்கங்கள் மார்க்கமாக்கப் படுவதற்கான நோக்கத்தை கண்டறியவும்.
கடமையான தொழுகைகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்தல்.
இந்த நபிமொழியினூடாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்டுள்ள அருள் வெளிப்படுகின்றது, அதனைத் தெளிவுபடுத்தவும்.
கடமையான தொழுகைகளில் மனிதன் குறைபாடுகளுக்கு ஆளாகிறான். இறைவனின் கருணையினால் தான், ஸுன்னத் தொழுகையின் மூலம் இந்தக் குறையை நிறைவு செய்யக்கூடிய ஒன்றை அடியாருக்கு விதித்துள்ளான்.
செயல்பாடு (2) : யோசித்து பதிலளிப்பேன் :
தொழுகை என்பது அடியானை அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் சிறந்த வழிபாட்டுச் செயல்களில் ஒன்றாகும். இது அடியான் மீதான நேசத்திற்கான காரணமாகும், இதனூடாக ஸுன்னத்தான தொழுகைகளை விடுவதன் பாதகங்களைக் கண்டறியவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
வித்ரின் குறைந்தபட்ச ரக்அத்கள் மூன்றாகும்.
சூரியன் உதிக்கும் போது நபில் தொழுவது ஹராமாகும்.
ழுஹாத் தொழுகை ஆடவர்களுக்குக் கடமையாகும்.
பொதுவான நபில் தொழுகையில் சிறந்தது இரவுத் தொழுகையாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
வித்ரு தொழுகை :
(வலியுறுத்தப்பட்ட ஸுன்னா - விரும்பத்தக்கது - ஒரு சிலர் செய்தால் போதும் என்ற கடமை)
ழுஹாத் தொழுகையின் அதிகபட்ச அளவு :
(நான்கு ரக்அத்கள் - ஆறு ரக்அத்கள் - எட்டு ரக்அத்கள்)
தராவீஹ் தொழுகையின் ரக்அத்கள் :
(எட்டு ரக்அத்கள் - பதினைந்து ரக்அத்கள் - பதினொரு ரக்அத்கள்)
கே 3 : ழுஹா தொழுகை மற்றும் தாராவிஹ் தொழுகையை அட்டவணையில் உள்ளவற்றுடன் ஒப்பிடவும்:
ஓப்பீட்டு முறை ழுஹா தொழுகை தராவீஹ் (ரமதான் மாத இரவு) தொழுகை
சட்ட நிலை
நேரம்
கேள்வி 4: பின்வரும் இரு கேள்விகளுக்கு விடை தருக.
தராவீஹ் தொழுகையின் சிறப்பிற்கு ஆதாரம் தருக.
முன்பின் ஸுன்னத்களையும், அவை தொழ வேண்டிய சந்தர்ப்பங்களையும் கூறவும்.
பாடம் எட்டு : ஸகாத்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
இஸ்லாத்தின் ஸகாதின் சட்டநிலையை விளக்கவும்.
ஸகாத் சட்டபூர்வமாவதற்கான நோக்கத்தை கண்டறிய வேண்டும்.
ஸகாத் விதியாகும் பொருட்களைப் பட்டியலிட வேண்டும்.
ஸகாத் விநியோகிக்க வேண்டிய வர்க்கத்தினருக்கு மத்தியில் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
இஸ்லாத்தில் ஸகாதின் மகத்துவத்தை மதிக்க வேண்டும்.
உமது சொத்துக்குரிய ஸகாதை நிறைவேற்ற வேண்டும்.
அறிமுகம்:
ஸூரா முஃமினூனில் விசுவாசிகள் வெற்றிபெற்றவர்கள் என அல்லாஹ் வர்ணித்து, அவர்களது பண்புகளையும் கூறியுள்ளான். ஸகாதுடன் தொடர்பான விசுவாசியின் பண்பைக் குறிக்கும் வசனத்தை எழுதவும்.
அல்லாஹ் கூறுகிறான் : "ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்". (முஃமினூன் : 4).
ஸகாதின் சட்டநிலை :
ஸகாத் மார்க்கக் கடமைகளுள் ஒன்று, இது இஸ்லாத்தின் மூன்றாவது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது''. (ஆதாரம் : புஹாரி 8, முஸ்லிம் 16).
ஸகாத் சட்டபூர்வமாவதற்கான நோக்கம் :
கஞ்சத்தனம் போன்ற கெட்ட ஒழுக்கங்களிலிருந்து ஸகாத் கொடுப்பவரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதும், அவனது செயல்களைத் தவறான செயல்கள் மற்றும் பாவங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துவதும் ஆகும். அல்லாஹ் கூறினான் : "(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குகிறீர்". (தௌபா : 103).
அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, பிறரிடம் கையேந்துவதை விட்டும் தன்னிறைவடைய வைப்பதன் மூலம் ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களின் ஆன்மாக்களை தூய்மைப்படுத்துதல். இதில் அவர்களின் கௌரவத்தைக் காப்பதும் உள்ளது.
செல்வத்தைத் தூய்மைப்படுத்தி அதனை அழிவு, விரயத்திலிருந்து பாதுகாத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "தனது செல்வத்தின் ஸகாதை நிறைவேற்றியவரை விட்டும் அவரது தீங்குகள் நீங்கிவிடும்". (ஆதாதரம் : ஹாகிம் 1439).
ஸகாத் விதியாகும் பொருட்கள் :
தங்கம், வெள்ளி, நாணயங்கள் உள்ளிட்ட பணங்கள்.
வியாபாரப் பொருட்கள், ரியல் எஸ்டேட், கார்கள் மற்றும் அனைத்து வகையான பொருட்களின் வர்த்தகம் போன்றவை.
தானியங்கள் மற்றும் கனிவகைகள், உதாரணமாக கோதுமை, அரிசி, பேரீத்தம்பழம், காய்ந்த முந்திரிகை போன்றன.
ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகள்.
இவை ஒவ்வொன்றிலும் ஸகாத் விதியாக சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றை அறிய பின்வரும் பதிவை செவிமடுக்கவும் :
ஸகாத் பெறத் தகுதியானவர்கள் :
ஸகாத் பெறத் தகுதியானவர்கள் எட்டு கூட்டத்தினர் என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் : "(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்". (தௌபா : 60).
வறியவர்கள்: தங்களுக்குப் போதுமானதைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், அல்லது ஓரளவு மாத்திரம் பெறக்கூடியவர்கள்.
ஏழைகள்: தங்களுக்குப் போதுமானதில் அதிகமானதையோ அல்லது பாதியையோ பெறக் கூடியவர்கள். இவர்கள் வறியவர்களை விட ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர்கள்.
அதில் பணிபுரிபவர்கள்: ஸகாத் பணத்தை வசூலித்து தகுதியானவர்களுக்கு விநியோகம் செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள்.
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் : அவர்களுக்கு ஸகாத் வழங்கப்பட்டால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள எதிர்பாக்கப்படுவோர், அல்லது சமீபத்தில் இஸ்லாத்தில் நுழைந்தவர்கள், அவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஸகாத் வழங்கப்படுகிறது.
அடிமைகள் : அடிமைகளின் விடுதலை மற்றும் முஸ்லிம் கைதிகளின் மீட்பு.
கடனாளிகள்: கடனை அடைக்க முடியாதவர்கள்.
அல்லாஹ்வின் பாதையில் : அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்கள்.
வழிப்போக்கர் : இடைநடுவில் நிர்க்கதிக்குள்ளான அல்லது பணத்தைத் தொலைத்த பிரயாணி.
இவர்கள் தான் ஸகாத் பெற தகுதியுடையவர்கள், அதில் எதையும் ஏனையோருக்குச் செலவிடுவது அனுமதிக்கப்படாது. எனவே பள்ளிவாசல்கள், பாடசாலைகள் கட்டுவது போன்ற பொதுப் பணிகளில் செலவிட முடியாது.
ஸகாத் பெறத் தகுதியானவர்களை இங்கு காணவும் :
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : வாசித்து, விடையளிக்கிறேன்.
பின்வரும் வசனங்களை வாசித்து, பின்னர் அவற்றிலிருந்து, செலவு செய்வதற்கான கூலி பன்மடங்காக்கப்படுதல், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களின் பண்புகள் மற்றும் மறுமை நாளில் அவர்களின் தரம் என்பவற்றைக் கண்டறியவும் .
அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.
பயன்கள் இறைவசனங்களில் அவற்றை சுட்டிக்காட்டும் இடங்கள்
செலவு செய்ததற்காக பன்மடங்கு வெகுமதி "ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது".
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோரின் பண்புகள் "அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருப்பார்கள்".
மறுமையில் செலவு செய்வோருக்குரிய இடம் "அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்".
செயல்பாடு (2) : நான் எதிர்வுகூறுவேன் :
பணக்காரர்களுக்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை என்றால் இஸ்லாமிய சமுதாயத்தின் நிலையை கணிக்கவும்.
செயல்பாடு (3): காரணம் கூறுவேன் :
பின்வரும் விடயங்களில் பிழையை விளக்கவும் :
ஒரு மனிதன் தனது ஸகாத் பணத்தை பாடசாலைகள் கட்ட கொடுக்கிறான்.
ஒரு மனிதன் தனது பணக்கார சகோதரனுக்கு ஸகாத் பணத்தில் சிறிது கொடுக்கிறான்.
ஒரு மனிதன் தன் தந்தைக்கு ஸகாத் பணத்திலிருந்து கொடுக்கிறான்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
வழிப்போக்கர் :பணத்தை தொலைத்த ஒரு பயணி. (√)
ஸகாதின் நோக்கங்களில் ஒன்று ஏழைகளின் கண்ணியத்தைக் காப்பது. (√)
ஸகாத் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை. (×)
வறியவரை விட ஏழைக்கு தேவை அதிகம். (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நபியவர்களின் இவ்வார்த்தை குறிப்பது: "தனது செல்வத்தின் ஸகாதை நிறைவேற்றியவரை விட்டும் அவரது தீங்குகள் நீங்கிவிடும்". இது குறிப்பது :
(ஸகாதின் மதிநுட்பம் - ஸகாதின் சட்டநிலை - ஸகாத் பெறத் தகுதியானோர்)
நிர்ணயிக்கப்பட்ட அளவை உடமையாக்கியவர் ஸகாத் கொடுப்பது :
(வலியுறுத்தப்பட்ட ஸுன்னா - சமூகக் கடமை - தனிநபர் கடமை)
ஸகாத் பெறத் தகுதியானவர்களில் உள்ளவர் :
(ஏழை மனைவி - கடனை அடைக்க முடியாதவர் - பணக்கார நோயாளி)
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
பின்வரும் வசனம் எதைக் குறிக்கிறது : "(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குகிறீர்". (தௌபா : 103).
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் யார் ?
உமது சமூகத்தில் ஸகாத் பெறத் தகுதியான மூன்று சாராரை வரையறுக்கவும்.
ஸகாத் விதியாகும் பொருட்களை சுருக்கமாக எழுதவும்.
பாடம் ஒன்பது: நோன்பு
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நோன்பின் நிபந்தனைகள், ஸுன்னாக்களை விளக்க வேண்டும்.
நோன்பின் சிறப்புகளுக்கு ஆதாரம் கூற வேண்டும்.
நோன்பை முறிக்கும் செயல்களைக் கூற வேண்டும்.
ரமழான் நோன்பின் மகத்துவத்தை உணர வேண்டும்.
ரமழான் நோன்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
அறிமுகம்:
உண்ணல், பருகல், உறவுகொள்ளலைத் தவிர்த்து ஒருவர் நோன்பு நோற்கிறார், ஆனால் ஏனையோரின் விடயங்களில் தீய முறையில் பேசித் திரிகிறார். இவரின் விடயத்தில் உமது கருத்தென்ன ?
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள் :
ரமழானில் நோன்பு பிடிக்க பல சிறப்புக்கள் உள்ளன. அவற்றுள் சில : பாவமன்னிப்பு, குற்றப் பரிகாரம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்". (ஆதாரம் : புஹாரி 38, முஸ்லிம் 760).
ரமழானில் நோன்பு நோற்பதன் சிறப்புக்களை இங்கே காணவும் :
நோன்பின் நிபந்தனைகள் :
இஸ்லாம், எனவே காபிருக்கு நோன்பு கடமையில்லை, அவனிடமிருந்து செல்லுபடியாகவும் மாட்டாது.
பருவமடைதல், சிறுபிள்ளைக்கு அது கடமையாகாது, பிரித்தறியும் வயதை அடைந்த சிறுபிள்ளை நோற்றால் செல்லுபடியாகும், அவருக்கு அது உபரியான நோன்பாக அமையும்.
புத்தி, பைத்தியகாரர்களுக்கு அது கடமையாகாது.
நோன்பு நோற்க சக்தி பெறல், அதற்கு முடியாதவர்களுக்கு அது கடமையாகாது. அல்லாஹ் கூறுகின்றான் : "ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்". (பகரா : 184). வயோதிபம், நாட்பட்ட நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு தினத்திற்கும் பகரமாக உணவளிக்க வேண்டும்.
பெண்களில் மாதவிடாய், பிரசவ இரத்தம் நின்றுவிடல்.
நிய்யத், பஜ்ர் உதயமாக முன்னர் நோன்பு நோற்கப்போவதாக எண்ண வேண்டும், அதன் இடம் உள்ளமாகும். வாயினால் மொழிவதல்ல.
நோன்பின் ஸுன்னாக்கள் :
சூரியன் மறைந்ததை உறுதிப்படுத்திய பின்னர் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துதல்.
கனிந்த அல்லது காய்ந்த பேரீத்தம் பழம் அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறத்தல்.
பஜ்ர் நெருங்கும் வரை ஸஹர் செய்வதைப் பிற்படுத்தல்.
குர்ஆன் திலாவத், திக்ர், தர்மம் போன்ற நற்செயல்களை அதிகப்படுத்துதல்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பிரார்த்தனையில் ஈடுபடல்.
நோன்பை முறிப்பவை :
ரமழான் கால பகல்வேளையில் உடலுறவு கொள்ளுதல், இது காழாச் செய்தல், பரிகாரம் கொடுத்தல் இரண்டையும் கட்டாயமாக்கக் கூடியதாகும். விசுவாசியான ஓர் அடிமையை விடுதலை செய்தல், கிடைக்கா விட்டால் தொடரந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல், முடியா விட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல் ஆகியனவே இக்குற்றத்திற்காகன பரிகாரமாகும்.
முத்தமிடுதல், தொடுதல், சுயஇன்பம் போன்றவற்றால் விந்தை வெளியேற்றுதல். இது நோன்பைப் பாலாக்கி, கழாச் செய்வதையும் கடமையாக்குகின்றது.
வேண்டுமென்றே உண்ணல், பருகல். மறதியாக செய்தால் குற்றமேதுமில்லை.
மூக்கு வழியாக வயிற்றுக்கு தண்ணீர் போன்றவற்றை செலுத்துதல் மற்றும் ஊட்டச்சத்தை உட்செலுத்துதல்.
வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்.
இரத்தம் குத்தி எடுத்தல் (கப்பிங் தெரபி).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): பங்குபற்றி கண்டறிவேன் :
நோன்பு மாத்திரமல்ல ரமழான் மாதத்தில் செய்யும் நற்செயல். பின்வரும் ஆதாரங்கள் குறிக்கும் இதர நற்செயல்களை உமது நண்பனுடன் பங்குபற்றி கண்டறியவும்.
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் நற்செயல்
ஹதீஸ் "நபி (ஸல்) அவர்கள் மக்களில் அதிக கொடையாளியாக இருந்தார்கள். அவர்கள் ரமழானில் ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போதே அதிக கொடையாளியாக இருந்தார்கள்". (ஆதாரம் : புஹாரி 6, முஸ்லிம் 2308).
அதிக தர்மம் கொடுத்தல்
ஹதீஸ் "ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானில் ஒவ்வோர் இரவிலும் நபியவர்களை சந்தித்து, அல்குர்ஆனை பாராயணம் செய்வார்கள்". (ஆதாரம் : புஹாரி 6, முஸ்லிம் 2308).
அல்குர்ஆன் ஓதுதல்.
ஹதீஸ் "இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நின்று வணங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்". (ஆதாரம் : புஹாரி 37, முஸ்லிம் 759).
இரவுத் தொழுகை
செயல்பாடு (2): சட்ட நிலையை விளக்குவேன் :
நோன்பு செல்லுபடியாகுவதில் பின்வரும் செயல்களின் தாக்கம் யாது என்பதையும் மற்றும் நோன்பாளி என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கவும் :
செயல் அவர் நோன்பு நோற்பதன் சட்டம் அவர் செய்ய வேண்டியது
ரமழான் பகல்வேளையில் மறதியாக பழரசம் பருகி விட்டார். செல்லுபடியாகும் குற்றமேதும் இல்லை.
நரம்புக்குள் ஊட்டச்சத்து ஊசியை செலுத்தினார். செல்லுபடியற்றது கழாச் செய்ய வேண்டும்.
பரிசோதனைக்காக சிறிதளவு இரத்தம் குத்தி எடுத்தார். செல்லுபடியாகும் குற்றமேதுமில்லை.
செயல்பாடு (3) : யோசித்து பதிலளிப்பேன் :
ரமழானிலிருந்து விட்டுவிட ஒரு வாய்ப்பாக நீர் கருதும் சில கெட்ட பழக்கங்களை பட்டியலிடவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நோன்பின் நிபந்தனைகளுள் உள்ளது :
(ஸஹர் உணவு - எண்ணம் (நிய்யத்) - நோன்பை திறப்பதை துரிதப்படுத்தல்)
நோன்பை முறிப்பவற்றுள் உள்ளது :
(இரத்தம் குத்தி எடுத்தல் - இரவில் உடலுறவு - மறந்து சாப்பிடுதல்)
நோன்பின் ஸுன்னத்களில் உள்ளது :
(ரமழானில் பகலில் சாப்பிடுவதைக் கைவிடுதல் - கனிந்த பேரித்த பழத்தைக் கொண்டு நோன்பு திறத்தல் - அளவுகடந்து கடப்புச் செய்தல்)
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்தல் நோன்பின் கடமைகளுள் உள்ளதாகும்.
ரமழானில் பகல்வேளையில் தானாக வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடும்.
சிறுபிள்ளைக்கு நோன்பு கடமையாகும்.
ரமழான் பகலில் வேண்டுமென்றே உடலுறவு கொள்ளுதல் கழாச் செய்வதைக் கட்டாயமாக்கும்.
கே 3 : ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பிற்கு ஆதாரமொன்று எழுதவும்.
பாடம் பத்து: ஹஜ்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹஜ்ஜின் சட்டநிலையை விளக்கவும்.
ஹஜ்ஜின் சிறப்பிற்கு ஆதாரம் கூற வேண்டும்.
ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகள் மற்றும் அதன் கடமைகளை சுருக்கமாகக் கூற வேண்டும்.
இஸ்லாத்தில் ஹஜ்ஜின் மகத்துவத்தை மெச்சுதல்.
சக்திபெறும் போது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
அறிமுகம்:
கஃபாவைக் காணும் போது உம்மில் ஏற்படும் உணர்வை விவரிக்கவும்.
ஹஜ்ஜின் மார்க்க சட்டநிலை :
ஹஜ் இஸ்லாத்தின் பாரிய கடமைகளில் ஒன்றாகும். இது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். சக்தி பெறுவோருக்கு வாழ்வில் ஒரு முறை ஹஜ் செய்யுமாறு அல்லாஹ் கடமையாக்கி உள்ளான். "இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்". (ஆல இம்ரான் : 97).
ஹஜ்ஜின் சிறப்பு :
ஹஜ்ஜுக்கு பல சிறப்புக்கள் உள்ளன. அவற்றுள் சில :
பாவங்கள், குற்றங்களுக்குப் பரிகாரம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புவார்". (ஆதாரம் : புஹாரி 1521, முஸ்லிம் 1350).
(நபிமொழியில் இடம்பெற்றுள்ள ரபஸ் என்பது: உடலுறவு, அதன் முற்செயல்கள் அல்லது தீய வார்த்தைகள். பிஸ்க் என்பது : பாவகாரியங்கள்).
இது மார்க்கத்தின் மிகச் சிறந்த நற்செயல்களில் உள்ளதாகும். சிறந்த நற்செயல் பற்றி நபி (ஸல்) அவர்கள் வினவப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள் : "அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புதல் என்றார்கள். பின்பு எது? என்று வினவப்பட்ட போது அல்லாஹ்வின் பாதையில் போர்புரிதல் என்றார்கள். பின்பு எது? என்று வினவப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்" என்றார்கள். (ஆதாரம் : புஹாரி 26, முஸ்லிம் 83).
ஹஜ்ஜின் சிறப்பை இங்கே காணவும் :
ஹஜ்ஜின் நிபந்தனைகள் :
இஸ்லாம், எனவே காபிருக்கு ஹஜ் கடமையில்லை, அவனிடமிருந்து செல்லுபடியாகவும் மாட்டாது.
பருவமடைதல், அது சிறுவர்களுக்கு கடமையாகாது, அவர்களுடமிருந்து ஸுன்னத்தானதாக நிறைவேறும், ஆனால் இஸ்லாமிய ஹஜ்ஜாக நிறைவேற மாட்டாது.
புத்தி, பைத்தியகாரர்களுக்கு அது கடமையாக மாட்டாது, செல்லுபடியாகவும் மாட்டாது.
சக்தி பெறுதல், அதாவது ஹஜ் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கான உடலியல், பொருளியல் வசதிகள் இருத்தல்.
பெண்ணுடன் அவளது கணவர், சகோதரர், தந்தையின் சகோதரர் போன்ற நெருங்கிய உறுவுகளில் ஒருவர் இருத்தல்.
ஹஜ்ஜின் தூண்கள் :
இஹ்ராம் நிய்யத் வைத்தல், இது ஹஜ் வணக்கத்தில் நுழைவதற்கான எண்ணமாகும். அதுவன்றி ஹஜ் செல்லுபடியாகாது.
அரபாவில் தரித்தல், இதுதான் ஹஜ்ஜின் பிரதான கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஹஜ் என்பதே அரபாவில் தரிப்பதாகும்". (ஆதாரம் : திர்மிதி 889, நஸாஈ 3016).
ஏழு சுற்றுக்களைக் கொண்ட தவாபுல் இபாழா. அல்லாஹ் கூறுகின்றான் : "(அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்". (ஹஜ் : 29).
ஸபா, மர்வா குன்றுகளுக்கு இடையில் ஏழு சுற்றுக்கள் ஸஈ செய்தல்.
ஹஜ்ஜின் கடமைகளை இங்கு காணவும் :
செயற்பாடுகள்
செயற்பாடு (1) கண்டறிவேன் :
ஹஜ்ஜுக்கான நிபந்தனைகளை பின்வரும் ஆதாரங்களிலிருந்து கண்டறியவும்:
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் நிபந்தனை
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "சிறுவன் ஹஜ் செய்தால் பருவமடையும் வரை அது அவனுக்கான ஹஜ்ஜாகும். அவன் பருவமடைந்தால் பிறிதொரு ஹஜ் செய்வது கடமையாகும்". (ஆதாரம் : இப்னு ஹுஸைமா 3050).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது''. (ஆதாரம் : புஹாரி 1088, முஸ்லிம் 1339).
செயல்பாடு (2) : மடலொன்று எழுதுவேன் :
பின்வரும் நபிமொழிகளைப் பயன்படுத்தி ஹஜ், உம்ரா செய்ய சக்தியிருந்தும் அதில் அலட்சியமாக இருப்பவருக்கு மடலொன்று எழுதவும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ஹஜ், உம்ராச் செய்வோர் அல்லாஹ்வின் விருந்தாளிகளாவர், அவர்கள் அவனை அழைத்தால் அவர்களுக்கு பதிலளிப்பான், பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பான்". (ஆதாரம் : நஸாஈ 2625, இப்னு மாஜா 2892).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர கூலி கிடையாது". (ஆதாரம் : புஹாரி 1773, முஸ்லிம் 1349).
செயல்பாடு (3) : நான் தேடுகிறேன்:
ஹஜ்ஜுடைய கூலியைப் போன்று பாரிய கூலி கிடைக்கும் பல நற்செயல்களை அல்லாஹ் மார்க்கமாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ரமழான் மாதத்தில் நிறைவேற்றும் ஒரு உம்றா.ஒரு ஹஜ்ஜுக்கு அல்லது என்னுடன் நிறைவேற்றிய ஒரு ஹஜ்ஜுக்கு நிகராகும்". (ஆதாரம் : புஹாரி 1863, முஸ்லிம் 1256). அதாவது ஹஜ்ஜுடைய கூலிக்கு சமனாகும்.
ஹஜ் அல்லது உம்ராவின் கூலியைப் போன்று வேறொரு நற்செயல் பற்றி உமது பள்ளி இமாமிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
சக்திபெற்றவருக்கு வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்வது கடமையாகும். (√)
தவாஃப் என்பது ஹஜ்ஜின் மிகப்பெரிய கடமையாகும். (×)
காஃபிருக்கு ஹஜ் கடமையாகும். (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹஜ் செய்பவரைப் பற்றிய நபியவர்களின் இவ்வார்த்தை குறிப்பது: "அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார்".
குறிப்பது :
(அவரது இளம் வயது - அவரது தாயிடம் கருணை காட்டுதல் - அவரது பாவங்களை மன்னித்தல்)
சிறுபிள்ளை ஹஜ் செய்வதன் சட்டநிலை :
(செல்லுபடியானது மற்றும் நிறைவேறும் - செல்லுபடியாகும் ஆனால் நிறைவேறாது - செல்லுபடியற்றது)
பெண்களுக்கு மாத்திரமுள்ள ஹஜ்ஜின் நிபந்தனை :
(நெருங்கிய உறவுக்காரர் - கணவன் - சக்தி) இருக்க வேண்டும்.
ஹஜ் செய்பவரிடம் எதுவரை பராமரிப்பு செலவு இருக்க வேண்டும்:
(மக்கா சென்றடையும் வரை - ஹஜ் சடங்குகளை முடிக்கும் வரை - தனது தாய்நாட்டிற்கு திரும்பும் வரை)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
ஹஜ்ஜின் சிறப்புக்கு ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறவும்.
ஹஜ்ஜின் ருகுன்களை குறிப்பிடுக.
பண்பாட்டு ஒழுக்கவியல் பகுதி
பாடம் ஒன்று : நற்பண்புகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நற்பண்புகளின் அர்த்தத்தையும் அவசியத்தையும் தெளிவுபடுத்துதல்.
நற்குணத்தின் சிறப்பிற்கு ஆதாரம் கூறவேண்டும்.
நற்பண்புகளின் பெறுமதியை உணர வேண்டும்.
நற்குணங்களைக் கடைபிடித்தல் வேண்டும்.
அறிமுகம்:
நற்குணம் என்றால் மக்களுக்கு நலவு செய்வதும், சொல், செயல்கள் மூலம் அவர்களுக்கு நோவினை செய்யாதிருத்தலுமாகும்.
இஸ்லாம் எமக்கு நற்குணத்தை ஏவியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீர் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக. தீமையைத் தொடர்ந்து அதனை அழிக்கும் நன்மை ஒன்றையும் செய்துகொள்வீராக. இன்னும் மக்களிடம் அழகிய குணத்துடன் பழகுவீராக". (ஆதாரம் : திர்மிதி 1987).
நற்குணத்தின் சிறப்புகள் :
சுவனம் நுழையக் காரணமாகும்
பதவிகள் உயர்த்தப்படுதல்
ஈமானின் பரிபூரணத்திற்கான அடையாளம்
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதை உறுதிப்படுத்தல்.
மக்களை நேசிப்பதை உறுதிப்படுத்தல்.
சுவனம் நுழையக் காரணமாகும் :
மக்களை அதிகம் சுவனத்தில் நுழைவிக்கும் காரணிகள் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள் : "இறையச்சமும், நற்பண்புகளும்". (ஆதாரம் : திர்மிதி 2004).
ஏனெனில் இறையச்சம் அல்லாஹ்வின் உரிமைகளை நிறைவேற்றுவதாகும், நற்குணம் மனிதர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதாகும். அல்லாஹ்வுடைய உரிமையையும் மனிதனின் உரிமையையும் நிறைவேற்றிவயவர் சுவனத்தையும் அதன் இன்பங்களையும் அடைந்து கொள்வார்.
பதவிகள் உயர்த்தப்படுதல் :
நற்குணம் அதனுடையவர்களின் பதவிகளை அல்லாஹ்விடம் உயர்த்துகின்றது. அதன் நன்மை, கூலிகளை அதிகரிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நற் பண்புள்ள விசுவாசி தனது நற் பண்பின் மூலம் நோன்பாளி,மற்றும் இரவில்,நின்று வணங்கு வோனின் பதவியை அடைவான்". (ஆதாரம் : அபூதாவூத் 4798).
ஈமானின் பரிபூரணத்திற்கான அடையாளம் :
நற்பண்புகளை முழுமையாக்குவதன் மூலம் தவிர நம்பிக்கையின் பூரணத்துவத்தை அடைய முடியாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்''. (ஆதாரம் : அபூதாவுத் 4682, திர்மிதி 2612).
நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுதல் :
அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு நபி (ஸல்) அவர்களைப் புகழ்கின்றான் : "நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்" (அல்கலம் : 4).
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்) மிக்கவராக இருந்தார்கள். (ஆதாரம் : புஹாரி 6203, முஸ்லிம் 2310).
நபி (ஸல்) அவர்களது நேசத்தை உறுதிப்படுத்தி, மறுமையில் அவர்களை நெருங்குதல் :
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார் : "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமானவரும் உங்களில் நற்பண்புடையவர்களாகும்". (ஆதாரம் : திர்மிதி 2018).
மக்களை நேசித்து, அவர்களை மதித்தல் :
மக்கள் நற்குணமுடையவர்களைத் தான் நேசித்து, அவர்களுடைய உபதேசத்தைத் தான் ஏற்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் உங்கள் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சியுடையவர்களும் நற்குணமுடையவர்களுமே அவர்களின் ஆதரவைப் பெற முடியும்". (ஆதாதரம் : ஹாகிம் 428).
செயற்பாடுகள்
செயல்பாடு (1): சிந்தித்து, இறுதிச் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறேன்:
நல்ல குணாதிசயங்கள் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் பின்வரும் ஆதாரங்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்ல குணாதிசயங்களைப் பிரித்தெடுக்கவும் :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் நற்குணங்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார் : "அல்லாஹ் மென்மையானவன், மென்மையை நேசிக்கின்றான்". (ஆதாரம் : புஹாரி 6927, முஸ்லிம் 2593).
மென்மை
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார் : "இரக்கம் காட்டக்கூடியவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுகின்றான்". (ஆதாரம் : திர்மிதி 1847). இரக்கம்
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நபி (ஸல்) அவர்கள் மக்களில் அழகானவராகவும், துணிவுள்ளவராகவும், கொடை வள்ளலாகவும் இருந்தார்கள்". (ஆதாரம் : புஹாரி 2820, முஸ்லிம் 2307).
வீரம், தயாளம்
செயல்பாடு (2) : ஒத்துழைத்து அமுல்படுத்துவேன் :
இஸ்லாம் அதனைப் பின்பற்றுவோரை பண்பாடுகளில் அதிஉயர் தரத்திற்கே கொண்டு செல்ல முயற்சிக்கின்றது. அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான் : "வார்த்தைகளில் மிக அழகியதைப் பேசும் படி நபியே எனது அடியார்களுக்குக் கூறும்". (அல்இஸ்ராஃ : 53).
பின்வரும் சூழ்நிலைகளில் கூறக்கூடிய சிறந்த வார்த்தையை எழுத உமது நண்பருடன் ஒத்துழைக்கவும் :
ஒருவர் உம்மிடம் கூறினார் : காலை வணக்கம்.
நண்பர் ஒருவர் உமது இருக்கையில் அமரக் கண்டீர்.
நீ வேகமாகப் புரிந்து கொள்வதில்லை என உமது நண்பரொருவர் உம்மைப் பார்த்துக் கூறினார்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
சுவர்க்கத்தில் நுழைவதற்கு நல்ல குணமும் ஒரு காரணம். (√)
மென்மை என்பது ஆளுமையின் பலவீனத்தைக் குறிக்கிறது. (×)
நற்குணம் மக்களிடையே அன்பைப் பரப்பும். (√)
கே 2 : பின்வரும் வசனத்தையும் நபிமொழியையும் பூரணபடுத்துக :
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான் : "நிச்சயமாக நீர் ................................. குணத்தில் இருக்கின்றீர்".
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "மக்களுடன் .............................. பழகுங்கள்".
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
நற்குணம் என்றால் என்ன?
நற்குணத்துக்கும் ஈமானுக்கும் இடையிலுள்ள தொடர்பைத் தெளிவுபடுத்தவும்.
நீர் நடைமுறைப் படுத்த முயற்சிக்கும் மூன்று நற்பண்புகளைக் கூறவும்.
பாடம் இரண்டு : உண்மை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
எமது வாழ்வில் உண்மையின் பெறுமதியை விளக்க வேண்டும்.
உண்மையின் சிறப்பிற்கு ஆதாரத்தைக் கூற வேண்டும்.
சிறார்களை உண்மையுடன் வளர்ப்பதன் அவசியத்தை மெச்சுதல்.
உமது செயல்கள், சொற்களில் உண்மையாக நடக்க வேண்டும்.
உண்மை, அல்லாஹ் எமக்கு ஏவிய மகத்தான குணங்களில் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்". (தௌபா : 119).
விசுவாசிகளை உண்மையாளர்களுடன் இருக்குமாறு அல்லாஹ் ஏன் ஏவியுள்ளான்? உண்மைக்கும் ஈமானுக்கும் என்ன தொடர்பு?
இதற்கான பதில்களை இப்பாடத்தினூடாக அறிந்து கொள்வீர்.
உண்மை :
உண்மையின் அர்த்தம்
உண்மையை கடைபிடிக்கும் சந்தர்ப்பங்கள்
அல்லாஹ்வுடன் உண்மையாக நடத்தல்
வார்த்தையில் உண்மை
செயல்களில் உண்மை
உண்மையின் சிறப்புகள்
உண்மையின் அர்த்தம் :
உண்மை : செயலுக்கு வார்த்தையும், உள்ரங்கத்திற்கு வெளிரங்கமும், நடைமுறைக்கு பேச்சும் உடன்படுதல்.
உண்மை, எண்ணங்கள், சொல், செயல்கள் அனைத்திலும் இருக்க வேண்டும்.
முதலாவதாக : உண்மையை கடைபிடிக்கும் சந்தர்ப்பங்கள் :
உண்மையை கடைபிடிக்கும் சந்தர்ப்பங்கள் மூன்றுள்ளன. முஸ்லிம் அதனைத் தன்னிடம் எடுத்துக் கொள்ள வேண்டும் :
அல்லாஹ்வுடன் உண்மையாக நடத்தல் :
அல்லாஹ்வுக்காக எண்ணத்தை சீராக்கி, அவனது திருமுகத்தை நாடுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்". (ஆதாரம் : முஸ்லிம் 1909). தான் அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள ஈமான், பொறுப்புச் சாட்டல், அவன் மீது வைத்துள்ள நேசம் ஆகியவற்றில் ஒரு முஸ்லிம் உண்மையாக இருப்பதே உண்மையில் மகத்தானதாகும்.
வார்த்தையில் உண்மை :
பொய்யோ, மிகைப்படுத்தலோ இன்றி வார்த்தைக்கு செயல்பாடு நேர்பாடாக இருத்தல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக உண்மை பேசுதல் நற்செயலுக்கு வழிகாட்டுகிறது. நற்செயல் சுவர்கம் செல்ல வழிகாட்டுகிறது, ஒரு மனிதன் இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படும் வரை அவன் உண்மையே பேசிக்கொண்டிருப்பான்". (ஆதாரம் : புஹாரி 6094, முஸ்லிம் 2607).
செயல்களில் உண்மை :
தனது பேச்சுக்கு மாற்றமாக நடக்காமலிருப்பது ஒரு முஸ்லிமுக்கு அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக பிறரிடம்) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கிறது". (ஸப் : 2, 3).
உண்மையின் சிறப்புகள் :
உண்மை சுவனத்தில் நுழைவதற்கான காரணிகளில் ஒன்று.
உண்மை இறைத்தூதர்களின் பண்புகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களைப் பின்பற்றுமாறு எம்மை ஏவியுள்ளான்.
உண்மை ஒரு முஸ்லிமுக்கு உள்ளத்தில் அமைதியையும், மன நிம்மதியையும் பெற்றுத் தரும்.
உண்மை என்பது ஆளுமைப் பலம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம்.
உண்மை ஒரு முஸ்லிமைத் தனது சமூகத்தில் நேசிக்கப்படுபவனாகவும், மக்களிடையே நல்லவராகவும் அறியப்பட வழிவகுக்கும்.
உண்மை சமூகத்தின் உறுப்பினர்களிடையே அன்பையும் பாசத்தையும் பரப்புவதற்கு பங்களிக்கிறது.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : வாசித்து பகுப்பாய்வு செய்வேன் :
அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) கூறுகின்றார் :ஒரு தினம் நபி (ஸல்) அவர்கள் எமது வீட்டில் உட்கார்ந்திருக்கும் போது எனது தாயார் வாருங்கள் உமக்குத் தருகிறேன் எனக் கூறி என்னை அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தாயாரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்கள் : "அவருக்கு நீர் என்ன கொடுக்க இருந்தீர்?", அதற்குத் தாயார் பேரீத்தம்பழம் கொடுப்பேன் என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஆனால் நீர் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லையானால் உம்மீது ஒரு பொய் பாவமாக எழுதப்படும்". (ஆதாரம் : அபூதாவூத் 4991).
இந்த நபிமொழியினூடாக பிள்ளைகளை உண்மையைப் போதித்து வளர்ப்பதன் அவசியத்தையும், சமூகம் சீராவதில் அதன் தாக்கத்தையும் தெளிவுபடுத்தவும்.
செயல்பாடு (2): நான் இறுதிச் சுருக்கத்தைக் கண்டறிவேன் :
பின்வரும் ஆதாரங்களினூடாக உண்மையின் சில சிறப்புகளைக் கண்டறியவும் :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் உண்மையின் சிறப்பு
அல்லாஹ் கூறுகிறான்: "அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்". (மாஇதா : 119)
உண்மையாளர்களின் மகத்தான கூலி
அல்லாஹ் கூறுகிறான்: "உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்". (ஸுமர் : 33).
உண்மை இறையச்சத்தின் அடையாளம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "விற்பவரும், வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்!''ز (ஆதாரம் : புஹாரி 2082).
உண்மை வாழ்க்கை செழிப்பாவதற்கான காரணிகளில் ஒன்று.
செயல்பாடு (3) : படிப்பினை கூறுவேன் :
பின்வரும் இணைப்பிலுள்ள ஒலிப்பிதிவிலிருந்து நீர் புரிந்து கொண்டதினூடாக அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்துகொள்வதன் தாக்கத்தை உமது பாணியில் எழுதுக :
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
உண்மை என்பது வார்த்தைகள் நடைமுறை வாழ்வுடன் நேர்படுவதுடன் மாத்திரம் குறிப்பானதாகும். (×)
உண்மை என்பது தைரியம் மற்றும் நம்பிக்கையின் வலிமைக்கு சான்றாகும். (✓)
நல்ல நோக்கங்களுக்கான வெகுமதி அவற்றை அமுல்படுத்தியதன் பின்னரே கிடைக்கும். (×)
பொய், பரகத்தை இழந்து வாழ்வாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படக் காரணமாகின்றது. (✓)
சுவர்க்கத்தில் நுழைவதற்கு உண்மையும் ஒரு காரணமாகும். (✓)
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
உண்மையை வரைவிலக்கணப்படுத்துக.
அல்லாஹ்வுடன் உண்மையாக நடப்பது எவ்வாறென்பதைத் தெளிவுபடுத்தவும்.
நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை உண்மையின் படியே பயிற்றுவித்தார்கள். அதற்கான ஆதாரத்தைக் கூறுக.
பாடம் மூன்று : நேர்மை , நம்பகத்தன்மை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நேர்மையின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நேர்மையின் முக்கிய வடிவங்களைக் கூற வேண்டும்.
நேர்மையின் சிறப்புக்கு ஆதாரம் கூற வேண்டும்.
நேர்மை இல்லாமல் போவதால் சமூகங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்தல்.
உமது சகல விடயங்களிலும் நேர்மையைக் கடைபிடித்தல்.
அறிமுகம்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 102).
இந்த நபிமொழியை அவதானித்த பின் ஒரு முஸ்லிம் வியாபாரியிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளை எழுதவும்.
நேர்மை :
அதன் அர்த்தம்
அதன் வடிவங்கள்
அதன் சிறப்புக்கள்
முதலாவதாக : நேர்மையின் அர்த்தம் :
நேர்மை என்பது : அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றல், உடன்படிக்கைகள், அமானிதங்கள், இரகசியங்கள் மற்றும் மானங்களைப் பாதுகாத்தல், உறுப்புக்களை அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் பாதுகாத்தல்.
இரண்டாவதாக : நேர்மையின் வடிவங்கள் :
மார்க்கத்தில் நேர்மை, தனது இரட்சகனைக் காண்பது போன்று அவனை வணங்க வேண்டும்.
மானங்களில் நேர்மை, மக்களில் மானங்களைக் கிளறாமல் இருக்க வேண்டும்.
சொத்துக்களில் நேர்மை, கொடுக்கல், வாங்கல், அமானிதப் பொருட்களைப் பாதுகாத்தல் போன்றவற்றில் நேர்மை.
பணியில் நேர்மை, அதன் இரகசியங்களைப் பாதுகாத்தல், பொறுப்புக்களைத் திறன்படச் செய்தல்.
கல்வியில் நேர்மை, கல்வியைப் பரப்புவதில் நம்பகமானவனாக இருத்தல் வேண்டும்.
இரகசியங்கள், உடன்படிக்கைகளில் நேர்மை, இரகசியங்களைப் பரப்புதல் கூடாது, உடன்படிக்கைக்குத் துரோகம் செய்யக் கூடாது.
புலனுறுப்புக்களில் நேர்மை, தடுக்கப்பட்டவற்றைப் பார்த்தல் போன்ற ஹராமானவற்றில் அவ்உறுப்புக்களைப் பயன்படுத்தக் கூடாது.
மூன்றாவதாக : நேர்மையின் சிறப்புக்கள் :
நேர்மை நபிமார்கள், தூதர்களின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். நபித்துவத்திற்கு முன்னரே நபி (ஸல்) அவர்கள் "அல்அமீன்" (நம்பிக்கையாளர்) எனப் பெயர் சூட்டப்பட்டார்கள்.
நேர்மை ஈமானின் பரிபூரணத்துவத்தில் உள்ளதாகும், மோசடி நயவஞ்சகத்தின் செயல்களில் உள்ளதாகும். நபி (ஸல்) கூறினார்கள் : "நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், நம்பப்பட்டால் துரோகம் இழைப்பான்". (ஆதாரம் : புஹாரி 33, முஸ்லிம் 59).
நேர்மையான முஸ்லிமை அல்லாஹ்வும் நேசிக்கின்றான், மக்களும் நேசிக்கின்றனர்.
நேர்மை, மானங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமாவதை விட்டும் பாதுகாக்கின்றது. சமூகத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குகின்றது.
நேர்மையாளர்களுக்கு வெற்றியிருப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். வெற்றியாளர்களின் பண்பைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகின்றான் : "மேலும், அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்கள் வாக்குறுதியையும் பேணி நடப்பார்கள்". (முஃமினூன் : 8).
அமானித மோசடி மறுமையின் அடையாளங்களில் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பார்க்கவும்". (ஆதாரம் : புஹாரி 6496).
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : வாசித்து, விடையளிக்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உள்ளத்தில் ஈமான் நுழையாத நிலையில் நாவினால் ஈமான் கொண்டோரே முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசாதீர், அவர்களது குறைகளைத் துருவாதீர், ஏனெனில் அவர்களின் குறைகளைத் துருவுவோரின் குறைகளை அல்லாஹ் துருவுவான். அல்லாஹ் யாருடைய குறையைத் துருவுகின்றானோ அவனை வீட்டில் வைத்தே இழிவுபடுத்தி விடுவான்". (ஆதாரம் : அபூதாவூத் 4880).
உமது ஆசிரியரின் பங்களிப்புடன் பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும் :
இந்நபிமொழியிலிருந்து நாம் கற்பதென்ன?
இந்நபிமொழி நேர்மையின் எந்த வடிவத்தில் உள்ளடங்குகின்றது?
செயல்பாடு (2) : பங்குபற்றி வார்த்தை அமைப்பேன் :
பணியாளர்களின் செயல்திறனில் உள்ள நேர்மையின்மை குறித்து மக்கள் முறைப்படுகின்றனர். உமது சக நண்பர்களுடன் பங்குபற்றி பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும் :
பணியில் நேர்மையைக் கடைப்பிடிக்க என்ன வழிகள் உள்ளன?
உமது தொழிலைக் கூறி, அதில் நீர் எவ்வாறு நேர்மையைக் கடைபிடிக்க சிரத்தை எடுக்கின்றீர் என்பதை விளக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
இரகசியங்களைப் பரப்புவது நேர்மையைக் குறிக்கிறது. (×)
நம்பிக்கையாளன் முஸ்லிம்களின் மானங்களைக் கிளற மாட்டான். (√)
நம்பிக்கையான சமூகங்களே பாதுகாப்பான சமூகங்களாகும். (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
அமானிதங்கள் வீணாகுதல் எதன் அடையாளம் :
(உண்மை - நன்மை - மறுமை)
அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கங்களுள் ஒன்று :
(உலகை அனுபவித்தல் - அமானிதத்தைப் பாதுகாத்தல் - ஆசைகளை அடைந்து கொள்ளல்)
நம்பிக்கையான முஸ்லிம் :
(உடன்படிக்கைகளைப் பாதுகாப்பான் - சுய நலத்திற்காக பொய் கூறுவான் - இரகசியங்களைப் பரப்புவான்)
அல்லாஹ்வின் கண்காணிப்பு எமக்கு உதவும் விடயம் :
(நற்செயலை உதாசீனப்படுத்துதல் - நற்செயலைத் திறன்படச் செய்தல் - நற்செயலை விட்டுவிடுதல்)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
நேர்மைக்கு சுருக்கமான ஒரு வரைவிலக்கணத்தை எழுதுக.
கல்வியில் இருக்க வேண்டிய நேர்மையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தவும்.
பாடம் நான்கு : பொறுமை
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
பொறுமையின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பொறுமையின் சிறப்புக்கு ஆதாரம் கூற வேண்டும்.
பொறுமையின் முக்கிய வகைகளைக் கூற வேண்டும்.
பொறுமைக்குத் துணைபுரியும் முக்கிய விடயங்களை விளக்க வேண்டும்.
பொறுமையின் சிறப்பை மெச்ச வேண்டும்.
பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : “பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்”. (ஸுமர் : 10).
இந்தப் பாடத்தைக் கற்ற பின் அல்லாஹ் கணக்கின்றி கூலி வழங்கக் கூடிய பொறுமையின் சிறப்புக்கள் பற்றி சிந்திக்கவும்.
பொறுமை :
அதன் அர்த்தம்
அதன் வகைகள்
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்வது.
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாமலிருப்பதில் பொறுமை கொள்வது.
துன்பத்தின் போது பொறுமை கொள்ளுதல்.
அதன் சிறப்புக்கள்
முதலாவதாக : பொறுமையின் அர்த்தம் :
பொறுமை சிறந்த குணமாகும், அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், அவனது விதியைப் பொருந்திக் கொள்வதிலும் ஒரு முஸ்லிமை உறுதிப்படுத்து கின்றது, மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றது.
இரண்டாவதாக : பொறுமையின் வகைகள் :
பொறுமை மூன்று வகைப்படும் : அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்வது, அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாமலிருப்பதில் பொறுமை கொள்வது, துன்பத்தின் போது பொறுமை கொள்ளுதல்.
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்வது :
இது அவ்வழிபாடுகளை நிறைவேற்றி, அதில் உறுதியாக நிற்பதன் மூலம் சாத்தியமாகும், இதற்கு முயற்சி பொறுமை ஆகியன தேவையாகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : "உமது குடும்பத்தினருக்கு தொழுகையை ஏவி, அதில் பொறுமையாக இருப்பீராக". (தாஹா : 132).
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாமலிருப்பதில் பொறுமை கொள்வது :
அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் உள்ளத்தைத் தடுத்தல், தடுக்கப்பட்ட இச்சைகள், இன்பங்களை எதிர்த்தல் மூலம் இது உருவாகும்.
துன்பத்தின் போது பொறுமை கொள்ளுதல் :
சோதனை நலவு, கெடுதி இரண்டின் மூலமும் நிகழும். அல்லாஹ் கூறுகின்றான் : "பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம்". (அன்பியாஃ : 35).
கெடுதிகளால் சோதிக்கப்படும் போது கோபம், பொறுமையிழத்தல், முறைப்படுதல் போன்றவற்றை விட்டும் உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பொறுமை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "பொறுமையெல்லாம் சோதனையின் முதல் கட்டத்திலேயே நிகழ வேண்டும்". (ஆதாரம் : புஹாரி 1283).
நலவுகளைக் கொண்டு சோதிக்கப்படும் போது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல், அல்லாஹ் தனக்களித்துள்ள நலவுகளை வைத்து கர்வம் கொள்ளாமல், அவை அல்லாஹ் ஒருவனிடமிருந்து மாத்திரமே கிடைத்தது என்பதை நினைவுகூர்வதன் மூலம் பொறுமை கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக : பொறுமையின் சிறப்புக்கள் :
பொறுமையாளர்களுக்கு அல்லாஹ் கணக்கின்றி கூலிகளை வைத்துள்ளான்.
பொறுமை நபிமார்கள், தூதர்களின் பண்புகளில் உள்ளதாகும், அவர்களே மக்களில் அதிகம் சோதிக்கப்படுபவர்கள், அவர்களில் அதிகம் பொறுமையாளர்கள்.
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அவன் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்". (பகரா : 153).
பொறுமை ஈருலக வெற்றிக்கும் காரணமாகும்.
வழிப்படுவதிலும் பாவங்களை விடுவதிலும் பொறுமை காப்பது அல்லாஹ்வின் நேசம், திருப்திக்கு வழிசெய்யும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) : வாசித்து, இணைக்கிறேன்.
வணக்கங்களை நிறைவேற்றுதல், தான் வெறுக்கும் விடயத்திலும் சிலவேளை நலவு இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுதல், பொறுமையாளர்களுக்கான கூலி, சிறப்புக்களை எதிர்பார்த்தல் ஆகியன சோதனையின் போது பொறுமை காக்க ஒரு முஸ்லிமுக்கு உதவுகின்றன.
இந்த அட்டவணையில் உள்ள வசனங்களுடன் முந்தைய அர்த்தங்களை இணைக்கவும்:
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் பொறுமைக்குத் துணைபுரியும் வழிவகைகள்
அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் ஒரு விடயத்தை- அது உங்களுக்கு நலவாக உள்ள நிலையில்- வெறுக்கலாம்". (பகரா : 216). நலவு சிலவேளை மனிதன் வெறுக்கும் விடயத்திலும் இருக்கலாம்.
அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்". (அன்பால் : 46) . பொறுமையின் சிறப்பு.
அல்லாஹ் கூறுகிறான்: "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்". (பகரா : 153). வணக்கங்களை நிறைவேற்றுதல்.
செயல்பாடு (2) : ஆராய்ந்து கூறுவேன் :
நபி (ஸல்)அவர்கள் தம் வாழ்வில் பல இன்னல்களை எதிர்கொண்டு பொறுமை காத்து, சிறந்த ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அழைப்புப் பணியில் ஏற்பட்ட துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள், மனைவி குழந்தைகளை இழந்த போதும் பொறுமையாக இருந்தார்கள், பணப் பற்றாக்குறையின் போதும் பொறுமையாக இருந்தார்கள்.
பின்வரும் காணொளியைப் பார்த்து, அதிலிருந்து நீர் பெற்ற படிப்பினையைக் கூறுக :
செயல்பாடு (3) : மதிப்பாய்வு செய்து கூறுவேன் :
அல்லாஹ் பொறுமையாளர்களுக்கு நல்ல விடயங்களைப் பகரமாகக் கொடுப்பான். நீங்கள் கெட்டதைச் சகித்துக் கொண்டு, அல்லாஹ் உங்களுக்கு விதித்ததில் நல்லதைக் கண்டுகொண்ட ஒரு சூழ்நிலையை உங்கள் நினைவிலிருந்து நினைவுபடுத்தவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது எளிதானது. அதற்குப் பொறுமை தேவையில்லை. (×)
வழிபாடுகளை நிறைவேற்றல் ஒரு முஸ்லிம் பொறுமையாக இருக்க உதவுகிறது. (√)
உண்மையான பொறுமையாளி முறைப்படுவதை, பொறுமையிழந்து பேசுவதை கைவிடுவார். (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஆபாசப் படங்கள் மற்றும் கிளிப்களைப் பார்ப்பதிலிருந்து தன்னைத் தடுக்க, கடைபிடிக்கும் பொறுமையின் வகை :
(துன்பத்தில் பொறுமை - கீழ்ப்படிவதில் பொறுமை - பாவத்தை விடுவதில் பொறுமை)
நலவுகளால் ஏற்படும் சோதனையில் பொறுமை காக்கும் முறை :
(முறைப்படாமிலிருத்தல் - அருட்கொடைக்கு நன்றி செலுத்துதல் - மேலதிகமாகக் கேட்டல்)
பொறுமையாளர்களின் சிறப்புக்களை நினைவுகூர்வது :
(பொறுமையின் வழிகளில் - பொறுமையின் சிரமங்களில் - பொறுமையின் வகைகளில்) உள்ளதாகும்
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
பொறுமைக்கு சுருக்கமான வரைவிலக்கணம் ஒன்று எழுதுக.
நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் பல நிலைகள் முஸ்லிம்களுக்குப் பொறுமையைப் போதிக்கின்றது. இதனைத் தெளிவுபடுத்தவும்.
பொறுமையாளர்களின் மகத்தான கூலியைக் குறிக்கும் ஒரு இறை வசனத்தை எழுதுக.
பாடம் நான்கு : வெட்க குணம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
வெட்கத்தை வரைவிலக்கணப்படுத்த வேண்டும்.
வெட்கத்தின் வகைகளுக்கு மத்தியில் வேறு பிரிக்க வேண்டும்.
வெட்கத்தின் சிறப்புக்கு ஆதாரம் கூற வேண்டும்.
வெட்க குணத்தை நீரும் கடைபிடிக்க வேண்டும்.
அறிமுகம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்' என்பதாகும்". (ஆதாரம் : புஹாரி 6120).
இந்த நபிமொழியை அவதானித்து, பாவங்களிலிருந்து ஒரு முஸ்லிமை எவ்வாறு வெட்கம் தடுக்கின்றது என்பதை சிந்திக்கவும்.
வெட்கம் :
வெட்கத்தின் அர்த்தம்
வெட்கத்தின் வகைகள்
அல்லாஹ்விடம் வெட்கப்படுதல்
ஆன்மாவிடம் வெட்கப்படுதல்
மக்களிடம் வெட்கப்படுதல்
வெட்கத்தின் சிறப்புகள்
முதலாவதாக : வெட்கத்தின் அர்த்தம் :
வெட்கம் என்பது மனிதனை சொல், செயல்களில் நல்லதைச் செய்து, கெட்டதை விடுவதற்குத் தூண்டும் ஒரு குணமாகும்.
இரண்டாவதாக : வெட்கத்தின் வகைகள் :
அல்லாஹ்விடம் வெட்கப்படுதல் :
இதுவே வெட்கத்தில் மகத்தானது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்விடம் நீங்கள் உண்மையாக வெட்கப்படுங்கள்". அப்போது தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் வெட்கப்படுகின்றோம், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே' என்றனர். அதற்கு நபியவர்கள் : "அதுவல்ல உண்மையான வெட்கம், அல்லாஹ்விடம் உண்மையாக வெட்கப்படுவதென்பது தலையையும் அதனுடன் இருக்கும் உறுப்புக்களையும், வயிற்றையும் அதனுடன் இணைந்திருக்கும் உறுப்புக்களையும் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து) பாதுகாப்பதும், மரணத்தையும் அதன் பின் இத்துப்போவதையும் நினைவுகூர்வதுமாகும். மறுமையை விரும்புவோர் உலக அலங்காரத்தை விட்டுவிடுவர். இவற்றைச் செய்தவர் அல்லாஹ்விடம் உண்மையாக வெட்கப்பட்டவர் ஆவார்" என்றார்கள். (ஆதாரம் : திர்மிதி 2458).
அல்லாஹ்விடம் வெட்கப்படுவது என்பது பாவம் செய்யும் நிலையில் அவன் உன்னைக் காண்பதை விட்டும் நீர் வெட்கப்படுவதும், அவனது விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதும், மறுமையில் விசாரணைக்காக நீர் அவனுக்கு முன்னால் நிற்பீர் என்பதை நினைவுகூர்வதுமாகும்.
ஆன்மாவிடம் வெட்கப்படுதல் :
ஒரு முஸ்லிம் சுய கௌரவமுள்ளவனாகும், தன்னையும் தனது மானத்தையும் காப்பதற்காக தீய வார்த்தைகளைப் பேசுதல், தீய செயல்களைச் செய்தல் என்பவற்றிலிருந்து வெட்கப்படுவான்.
மக்களிடம் வெட்கப்படுதல் :
ஒரு முஸ்லிம் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க தன்னை மக்கள் தீய நிலையில் காண்பதை வெட்கப்படுவான், நல்ல நிலையில் காண்பதையே விரும்புவான். எனவே மக்களிடம் வெட்கப்படுபவன் அவர்கள் முன்னிலையில் தன் மீதுள்ள மதிப்பச்சத்தைக் குறைக்கும் தீய குணங்கள், மோசமான செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வான்.
மூன்றாவதாக : வெட்கத்தின் சிறப்புகள் :
வெட்கம் அல்லாஹ் விரும்பும் குணங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் ஒருவரைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள் : "அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை நிதானமும், வெட்கமுமாகும்". (ஆதாரம் : இப்னுமாஜா 4188).
வெட்கம் கண்ணியமிக்க இறைத்தூதரின் பண்பாகும். நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "தனது அறையில் முடங்கியிருக்கும் ஒரு குமரிப் பெண்ணை விட நபி (ஸல்) அவர்கள் வெட்கமுள்ளவர்களாக இருந்தார்கள்". (ஆதாரம் : புஹாரி 3562, முஸ்லிம் 2320).
வெட்கம் ஈமானின் கிளைகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வெட்கம் ஈமானின் கிளைகளில் ஒன்றாகும்". (ஆதாரம் : புஹாரி 9, முஸ்லிம் 35).
வெட்கம் நல்லதையே கொண்டு வரும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வெட்கம் நலவையே கொண்டுவரும்". (ஆதாரம் : புஹாரி 6117, முஸ்லிம் 37).
வெட்கம் ஒரு முஸ்லிமைத் தனது சமூகத்தில் நல்ல முன்மாதிரியாக ஆக்கும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) கண்டறிவேன் :
பின்வரும் ஆதாரங்களிலிருந்து வெட்கத்தின் வடிவங்களைக் கண்டறியவும் :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் வெட்கத்தின் வடிவங்கள்
அல்லாஹ் கூறுகிறான்: "அவ்விருவரில் ஒரு பெண் நாணத்துடன் அவரிடம் நடந்து வந்தாள்". (கஸஸ் : 25).
பெண் தனது நடை மற்றும் அனைத்து நிலைகளிலும் வெட்கத்தைக் கடைபிடித்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உமது மனைவி அல்லது அடிமைப் பெண்ணைத் தவிர உமது மறைவிடத்தைப் பாதுகாத்துக் கொள்". அல்லாஹ்வின் தூதரே, கூட்டத்தினர் ஒரே இனத்தவர்களாக இருந்தால்? என வினவப்பட்ட போது : "யாரும் அதனைக் காண முடியாதவாறு இருக்க முடியுமென்றால் நீ யாருக்கும் காட்டாதே" என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் தனிமையில் இருந்தால்? என வினவப்பட்ட போது : "மக்களை விட அல்லாஹ்விடமிருந்து வெட்கப்படுவதற்கு அவன் மிகத் தகுதியானவன்" என்றார்கள். (ஆதாரம் : திர்மிதி 2794).
தனிமையில் இருந்தாலும் அவசியம் மறைக்க வேண்டிய பகுதி அவ்ரத்தை மறைத்தல்.
செயற்பாடு (2) : ஒப்பீடு செய்கிறேன்.
வெட்கம் கண்டிக்கப்படும் சில சூழ்நிலைகள் உள்ளன. உதாரணமாக நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலில் வெட்கப்படுதல், கல்வித் தேடலின் போது கேள்வி கேட்பதிலிருந்து வெட்கப்படுதல் என்பதைக் குறிப்பிடலாம்.
பின்வரும் காணொளியின் உதவியுடன் பாராட்டப்படும் வெட்கத்திற்கும், கண்டிக்கப்படும் வெட்கத்திற்கும் இடையில் ஒப்பீடு செய்யவும் :
அதற்குப் பதிலாக இவ்விணைப்பை மாற்றவும், இது பேரறிஞர் உஸைமீன் அவர்களுக்குரியதாகும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
ஒரு நபரின் வுழூ முறிந்து விட்டது, அவர் தொழுகையை விட்டு வெளியேற வெட்கப்பட்டார். (×)
ஒரு நபர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் மலசலம் கழித்தார். (×)
ஒரு ஊழியர் தனது சக ஊழியர்களுக்கு முன்னால் தனது ஆடைகளை மாற்ற வெட்கப்படுகிறார்.
ஒரு மாணவன் தனக்குப் புரியாததைப் பற்றி ஆசிரியரிடம் கேட்க வெட்கப்படுகிறான். (×)
கே 2 : பின்வரும் ஆதாரங்களைப் பூரணப்படுத்துக :
"வெட்கம் .................................... கொண்டுவரும்".
"வெட்கம் .......................... கிளைகளில் ஒன்றாகும்".
"உனக்கு நாணம் இல்லையேல் ........................... செய்துகொள்"
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
வெட்கம் என்றால் என்ன?
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடமிருந்து எவ்வாறு வெட்கப்பட வேண்டும்?
பாடம் ஆறு : நீதம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நீதியின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நீதியின் முக்கிய வடிவங்களைக் கூற வேண்டும்.
நீதியின் சிறப்புக்கு ஆதாரம் கூற வேண்டும்.
நீதி இல்லாமல் போவதால் சமூகங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்தல்.
நீதியைக் கடைபிடித்தல்.
அறிமுகம் :
உமது மகன் அயல் வீட்டாரின் குழந்தைகளில் ஒருவரை கொடுமைப்படுத்துகிறான் என்பது உமக்குத் தெரிந்தால், நீர் என்ன செய்வீர்?
இப்பாடம் முடிந்ததன் பின்னர் உமது நிலைப்பாட்டை மதிப்பீடு செய்யவும்.
நீதமாக நடத்தல் :
அதன் அர்த்தம்
அதன் வடிவங்கள்
அதனை அமுல்படுத்தும் முறை
அதன் சிறப்புக்கள்
முதலாவதாக : நீதியின் அர்த்தம் :
நீதி என்பது அநியாயத்தின் எதிர்ப்பதமாகும், இது ஒவ்வொருவருக்கும் அவரவரது உரிமைகளைக் குறைவின்றிக் கொடுப்பதைக் குறிக்கின்றது. மக்களிடையே நடந்து கொள்ளும் பாரபட்சமின்றி நடுநிலையாக நடந்து கொள்வதை இது உள்ளடக்குகின்றது.
இரண்டாவதாக : நீதியின் வடிவங்கள் :
1. கடமைகளைச் செய்தல், உரிமைகளை நிறைவேற்றுதல் :
தன் மீது கடமையான உரிமைகளை முறைப்படி வழங்குதல், தனக்கு வர வேண்டிய உரிமைகளை பிறர் மீது அத்துமீறாமல் பெற்றுக்கொள்ளுதல் மூலம் இது சாத்தியமாகும்.
2. மக்களுக்கு மத்தியில் நீதமாகத் தீர்ப்பளித்தல் :
மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அல்லது ஒருவர் இன்னொருவர் மீது அத்துமீறினால் அவர்களிடையே நீதமாகத் தீர்ப்பளிப்பது அவசியமாகும். பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையைப் பெற்றுக் கொடுப்பதுடன், அநீதி இழைத்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.
அநீதி இழைத்தவன் தனது உறவினர், நண்பர்களில் ஒருவனாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டவருக்கு உரிமையைக் கொடுப்பான். நபியவர்கள் காலத்தில் பிரபலமான குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் திருடிய போது அவளுடைய கை துண்டிக்கப்படாதிருக்க நபித்தோழர்களில் ஒருவர் நபியிடத்தில் பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : "இந்த முஹம்மதின் மகள் பாதிமா திருடியிருந்தாலும் அவளுடைய கையையும் நான் துண்டிப்பேன்". (ஆதாரம் : முஸ்லிம் 1688).
மூன்றாவதாக : நீதியை நிலைநாட்டும் முறை :
நீதி என்பது பல விடயங்களின் மூலம் அடையப்படுகிறது, அவற்றுள் சில :
அல்குர்ஆன், ஸுன்னாவில் தரிபட்ட மார்க்க சட்ட திட்டங்களை அமுல்படுத்துதல்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையைக் கொடுத்து, மக்களிடையே பாரபட்சம் காட்டுவதை விட்டுவிடல்.
பிணக்குகளின் போது மக்களிடையே நீதமாகத் தீர்ப்புச் செய்தல்.
அல்லாஹ்வை அஞ்சுதல், மற்றும் மறுமையில் அநியாயக்காரனிடமிருந்து அவன் நிச்சயம் பழி தீர்ப்பான் என்பதை அறிந்து கொள்ளுதல்.
நான்காவதாக : நீதியின் சிறப்புக்கள் :
நீதம் என்பது ஓர் இறைக்கட்டளையாகும், அனைத்து விடயங்களிலும் அதனைக் கடைபிடிக்குமாறு அல்லாஹ் ஏவியுள்ளான். அவன் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ் நீதம் செலுத்துவதையும், உபகாரம் புரிவதையும் ஏவுகின்றான்". (நஹ்ல் : 90).
மக்களுக்கு மத்தியில் நீதமாகத் தீர்ப்ரளிக்குமாறு ஏவியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்". (நிஸா : 58).
அநீதியின் விபரீதத்திலிருந்து தப்புவதற்கான காரணமாக நீதம் உள்ளது : "மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்". (இப்ராஹீம் : 42).
சமூகத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி உறுதியளிக்கவும் நீதி ஒரு காரணமாகும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நான் நுணுக்கமாக கவனித்து தேர்ந்தெடுப்பேன்:
இது குறித்து அல்லாஹ் அல் ஹதீஸ் அல் குத்ஸியில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "எனது அடியார்களே, அநீதியை எனக்கே நான் ஹராமாக்கிக் கொண்டுள்ளேன். அதனை உங்களுக்கு மத்தியிலும் ஹராமாக்கியுள்ளேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்க வேண்டாம்". (ஆதாரம் : முஸ்லிம்2577).
பின்வரும் ஹதீஸ் குறிப்பிடுவதற்கு முன்னால் ஒரு குறி (√) வைக்கவும் :
நீதி அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். ( )
மக்களுக்கு அநீதியிழைக்காதவர் அநீதியிழைக்கப் படுவார் ( )
அல்லாஹ் அணுவளவேனும் அநீதியிழைக்க மாட்டான். ( )
செயல்பாடு (2) : ஒத்துழைத்து பதிலளிப்பேன் :
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் "நீங்கள் இதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பிவந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். (ஆதாரம் : புஹாரி 2587, முஸ்லிம் 1623).
ஹதீஸைப் புரிந்துகொள்வதில் உங்கள் சக நண்பருடன் ஒத்துழைத்து, பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
இந்த நபிமொழிக்கும் பாடத்தின் உள்ளடக்கத்திற்கும் இடையிலுள்ள தொடர்பை விளக்கவும்.
நபிமொழியிலிருந்து பெறப்படும் பாடத்தைத் தெளிவுபடுத்தவும்.
செயல்பாடு (3) : படிப்பினை கூறுவேன் :
எந்தவொரு நபரும் அநீதிக்கு ஆளாவதிலிருந்து விடுபடுவதில்லை, நீர் மற்றவர்களுக்கு அநீதி இழைத்ததற்காக நீர் வருந்திய ஒரு சம்பவத்தை நினைவில் கொண்டு, பின்னர் நீர் அநீதியிழைத்த அந்த நபருக்கு ஒரு மடலை அனுப்பவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
அநீதியிழைத்தவனைத் தண்டிப்பது எந்த வடிவில் சேரும் :
(நீதம் - அநீதி - அசத்தியம்)
மக்களை இன, நிற ரீதியில் பிரித்துப் பார்ப்பது :
(நீதமாகும் - சத்தியமாகும் - அநீதியாகும்)
நீதத்தை நிலைநாட்டும் வழிமுறைகளில் உள்ளது :
(அல்லாஹ்வின் அச்சம் - மார்க்க சட்டத்தை மறுத்தல் - மக்களிடையே பிரித்துப்பார்த்தல்)
எனது சகோதரன் அவனது நண்பனிடம் அத்துமீறுவதை நான் கண்டால் செய்ய வேண்டியது :
(அவனைத் தடுப்பேன் - உதவுவேன் - இருவரையும் விட்டுச் சென்று விடுவேன்)
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
உறவினர்கள் தவறிழைத்திருந்தாலும் அவர்களுக்கு சார்பாகத் தீர்ப்பளிப்பது உறவினர்களைச் சேர்ந்திருப்பதன் வெளிப்பாடுகளில் உள்ளதாகும்.
தண்டனைகளை நடைமுறைப்படுத்துவது குற்றங்கள் பெருக வழிவகுக்கும்.
நீதம் என்பது முஸ்லிம்களுடன் மாத்திரம் பேண வேண்டிய ஒன்றாகும்.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
நீதத்திற்கு சுருக்கமான ஒரு வரைவிலக்கணத்தை எழுதவும்.
மக்களிடையே நீதம் செலுத்துவது அவசியம் என்பதற்கு ஆதாரமொன்று எழுதுக.
அழைப்புப் பணித்துறை
பாடம் ஒன்று : அறிவுரையின் (உபதேசம்) மகத்துவம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
அறிவுரையின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அறிவுரையின் மகத்துவத்திற்கு ஆதாரம் கூற வேண்டும்.
சமூகத்தில் அறிவுரை செலுத்தும் தாக்கத்தைக் கண்டறிய வேண்டும்.
அறிவுரையின் அவசியத்தை உணர வேண்டும்.
அறிவுரை ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது அவனுடனான நேசத்தின் வெளிப்பாடாகும். இதற்கு மார்க்கத்தில் பாரிய இடமும், சமூகத்தில் நேசம், ஒத்துழைப்புப் பரவுவதில் பாரிய தாக்கமும் உண்டு.
முதலாவதாக : அறிவுரையின் அர்த்தம் :
அறிவுரை என்பது : அறிவுரை வழங்கப்படுபவருக்கு நலவு நாடி, அவருக்கு நலவுள்ள விடயத்தின்பால் அழைத்தல், தீங்குள்ள விடயத்தை விட்டும் அவரைத் தடுத்தல் ஆகிய அனைத்தையும் குறிக்கும் சொல்லாகும்.
இரண்டாவதாக : அறிவுரையின் மகத்துவம் :
அறிவுரையின் மகத்துவம் :
மார்க்கம் என்பது நலவு நாடுதலாகும்.
நபிமார்களின் பணியாகும்
சமூக சீர்திருத்தமாகும்.
வெற்றிக்கான விழியாகும்.
அறிவுரை ஓர் அறப்போராகும்.
வேதனையிலிருந்து பாதுகாப்பாகும்.
மார்க்கம் என்பது நலவு நாடுதலாகும் :
இஸ்லாம் அறிவுரை என்ற விடயத்தை உயர்த்தியுள்ளது, இது மார்க்கம் நிலைபெற்று, நிலைத்திருக்கவும், அது பரவவும் காரணியாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் இதனை மார்க்கத்தின் முழு வடிவமாகவே ஆக்கியுள்ளார்கள். அன்னார் கூறினார்கள் : ''மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்" என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம் அதற்கு அவர்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனது வேததிற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்'' எனக் கூறினார்கள். (ஆதாரம் : 55). இதன் விளக்கம் பின்வருமாறு :
அறிவுரை நபிமார்களின் பணியாகும் :
நபிமார்கள்தான் படைப்புகளில் மிக இரக்கமுள்ளவர்கள். இதனால் எந்தவொரு நல்ல விடயத்தையும் தமது சமூகத்திற்குக் காட்டிக் கொடுக்காமல் இருக்கவில்லை, எந்தவொரு தீங்கையும் விட்டு தமது சமூகத்தை எச்சரிக்காமல் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களை சுவனத்தின்பால் நெருக்கி, நரகை விட்டும் தூரமாக்கும் எந்தவொரு விடயத்தையும் நான் உங்களுக்கு ஏவாமாலிருந்ததில்லை. மேலும் உங்களை நரகத்தின்பால் நெருக்கி, சுவனத்தை விட்டும் தூரமாக்கும் எந்தவொரு விடயத்தை விட்டு உங்களை நான் தடுக்காமிலிருந்ததில்லை". (ஆதாரம் : அப்துர்ரஸ்ஸாக் 34332).
அறிவுரை சமூக சீர்திருத்தத்திற்கான வழியாகும் :
அறிவுரையின் நோக்கம் நபி ஷுஐப் (அலை) அவர்களின் கூற்றில் தெளிவாக உள்ளது : "என்னால் முடிந்தளவு சீர்திருத்தத்தைத் தவிர நான் நாடவில்லை". (ஹூத் : 88).
எனவே அறிவுரை சமூகத்தில் நல்ல நெறிமுறைகள் பண்பாடுகளைப் பரப்பவும், சீர்குலைவுகளைத் தடுக்கவுமான வழியாகும்.
அறிவுரை ஈருலக வெற்றிக்கான வழியாகும் :
அறிவுரை, மற்றும் சத்தியம், பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசிக்காமல் மனிதன் நட்டத்திலிருந்து தப்ப முடியாது. அல்லாஹ் கூறுகின்றான் : "காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)". (அஸ்ர் : 1-3).
அறிவுரை அறப்போரின் வகைகளில் ஒன்று :
அறப்போர் புரிய முடியாத நிலையில் ஒருவர் அறிவுரை மூலம் நலவுநாடினால் அவரும் அறப்போர் புரிந்தவரைப் போன்றாவார். அல்லாஹ் கூறுகின்றான் : "பலவீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நலவு நாடி உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்". (தௌபா : 91).
அறிவுரை வேதனையிலிருந்து பாதுகாப்பாகும் :
அறிவுரை வழங்குவது அல்லாஹ் நேசிக்கும் சீர்திருத்த முறைகளில் உள்ளதாகும். அதன் மூலம் அல்லாஹ் சோதனை, வேதனைகளை நீக்குவான். அவன் கூறுகின்றான் : "(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரை (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உமது இறைவன் அழித்துவிட மாட்டான்". (ஹூத் : 117).
செயற்பாடுகள்
செயல்பாடு (2) : பங்கு பற்றி பதிலளிப்பேன் :
அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்களின் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் நலவு நாடும் முறை பற்றிய கலந்துரையாடலில் உமது ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்கவும்:
நலவு நாடுதல் யாருக்கு ? அது எவ்வாறு அமைய வேண்டும்?
அல்லாஹ்வுக்கு நலவு நாடுதல் அல்லாஹ்வை நம்புதல், அவனுக்கு இணை கற்பிக்காமல் செயல்கள் அனைத்தையும் அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல் மூலம் உருவாகும்.
அல்லாஹ்வின் வேதத்திற்கு நலவு நாடுதல். அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சென ஈமான் கொண்டு, அதனை அமுல்படுத்தி, அதனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுத்தல்.
நபி (ஸல்) அவர்களுக்கு நலவு நாடுதல். நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்ததை ஈமான் கொண்டு, அன்னாரை நேசித்து, அன்னாரின் வழிமுறையைப் பின்பற்றி, மக்களுக்கு மத்தியில் அவற்றைப் பரவச் செய்தல்.
முஸ்லிம் தலைவர்களுக்கு நலவு நாடுதல் சத்தியத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து, அவர்களுடைய ஏவல்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல்.
பொதுமக்களுக்கு நலவு நாடுதல் அவர்களை நேசித்து, உரிமைகளைக் கொடுத்து, ஆலோசனை வழங்கி, உபதேசித்தல் .
செயல்பாடு (2) : பகுப்பாய்வு இறுதிச் சுருக்கத்தைக் கூறுவேன்:
நபி நூஹ் (அலை) தனது மகனுக்கு செய்த அறிவுரை அல்குர்ஆனில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "(அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார். அதற்கவன் ‘‘இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்'' என்று கூறினான். அதற்கவர் ‘‘அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது'' என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கிவிட்டான்". (ஹூத் : 42, 43).
வசனங்களில் உள்ள சூழ்நிலையை பகுப்பாய்வு செய்து, பாடத்துடன் இணைப்பதன் மூலம், பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
அறிவுரையின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியத்தைத் தெளிவுபடுத்தவும்.
நபி நூஹ் அவர்கள் தனது மகனைக் காப்பாற்ற முயற்சித்து, நிராகரிப்பை விட்டு, கப்பலில் ஏறிக் கொள்ளுமாறு உபதேசித்தார்கள். மகன் பதிலிளித்திருந்தால் அழிவிலிருந்து தப்பியிருப்பார், என்றாலும் தனது தந்தைக்கு மாறுசெய்து , அவருடைய உபதேசத்தை ஏற்காது நீரில் மூழ்கி, நிராகரிப்பாளர்களுடன் அழிந்து போனார்.
இச்சம்பவத்திலிருந்து பெறப்படும் பாடங்கள் எவை?
மக்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களது பாதுகாப்பில் அக்கறை கொள்ளுதல்.
அறிவுரையை உதாசீனம் செய்யாமல் ஏற்றுக் கொள்ளல்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அறிவுரை என்பது இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் விதிகளில் ஒன்றாகும். (√)
நூஹ் நபியின் மகன், தன் தந்தையின் அறிவுரையை ஏற்றுக்கொண்டார். (X)
அறிவுரைகள் மத விடயங்களில் மாத்திரம் சம்பந்தப்பட்டவை. (X)
அறிவுரை என்பது மற்றவர்களின் உரிமைகள் மீதானஅத்துமீறலாகும். (X)
அறிவுரை என்பது அறப்போரில் உள்ள ஒரு விடயம் ஆகும். (√)
கேள்வி 2: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''மார்க்கம் என்பது ..............................." என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம் அதற்கு அவர்கள்: "அல்லாஹ்வுக்கும், ............................., அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் ............................, இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் '' எனக் கூறினார்கள்.
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
அறிவுரையை வரைவிலக்கணப்படுத்துக.
முஸ்லிம் பொதுமக்களுக்கு நலவுநாடுதல் எவ்வாறு அமையும்?
சமூகத்தில் நல்ல விடயங்கள் பரவுவதில் அறிவுரையின் முக்கியத்துவத்தைக் கண்டறியவும்.
பாடம் இரண்டு : அறிவுரையின் ஒழுங்குகள்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
இப்பாடத்தை நிறைவு செய்ததும் நீங்கள்: (மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
அறிவுரையின் ஒழங்குகளுக்கு ஆதாரம் கூற வேண்டும்.
அறிவுரையின் ஒழுங்குகளுக்கும் அதனை ஏற்பதற்கும் இடையில் தொடர்புபடுத்த வேண்டும்.
அறிவுரை வழங்கப்படுபவரின் ஒழுங்குகளைக் கூற வேண்டும்.
அறிவுரையின் ஒழுங்குகளின் அவசியத்தை உணர வேண்டும்.
அறிவுரையின் ஒழுங்குகளைக் கடைபிடிக்க வேண்டும்.
சில சமயங்களில் அறிவுரைகள் மோசமாக கொடுக்கப்பட்டதாலோ அல்லது தவறான நேரத்தைத் தேர்ந்தெடுத்ததாலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவற்றின் இலக்குகளை அடைந்து, அவற்றிலிருந்து தனிநபரும் சமூகமும் பயனடைவதற்காக இந்த பாடத்தில் அறிவுரையின் ஒழுங்குகளை நாம் கற்றுக்கொள்கிறோம் .
முதலாவதாக : அறிவுரை வழங்குபவருக்கான பிரத்தியேக ஒழுங்குகள் :
அறிவுரை வழங்குபவரின் ஒழுங்குகள் :
உளத்தூய்மை
பொறுமை
நேர்மை
மென்மை
இரகசியம் பேணல்
இரக்கம்
நடைமுறைப்படுத்துதல்
அறிவு
மார்க்க விளக்கம்
உளத்தூய்மை, தனது அறிவுரையின் மூலம் அல்லாஹ்வின் திருமுகத்தையும், பின்னர் மக்களுக்கு பயனளிப்பதையும் நோக்காகக் கொள்ள வேண்டும்.
பொறுமை, ஏனெனில் சில வேளை நோவினைக்கு உள்ளாகலாம், அல்லது பலமுறை அறிவுரை செய்யவோ, அறிவுரை வழங்கப்படுபவரைத் தொடர்ந்து கவனிக்கவோ தேவைப்படும்.
நேர்மை, மற்றும் சிறந்த முறையில் அறிவுரையைச் சேர்ப்பதில் கடும் முயற்சி செய்தல்.
அறிவுரை வழங்கப்படுபவருடன் மென்மையாக நடந்து கொள்ளுதல் வன்முறை, கடுமையை விட்டுவிடுதல். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே இதனைச் செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : " (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்." (ஆல இம்ரான் : 159)
அறிவுரை வழங்கப்படுபவருக்கு நோவினையோ இழிவோ ஏற்படாமலிருக்க அறிவுரை வழங்கும் போது இரகசியம் பேண வேண்டும்.
அறிவுரை வழங்கப்படுபவருக்கு இரக்கம் காட்டி, அவருடைய ஆன்மீக, லௌகீக நலவுகளில் அக்கறை கொள்ளுதல்.
அறிவுரை வழங்கப்படுபவருக்கு நடைமுறை முன்மாதிரியாக இருப்பதற்காக அறிவுரை வழங்குபவர் தனது அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அறிவுரை வழங்கப்படுபவருக்கு தீங்கோ, சீர்குலைவோ ஏற்படாமலிருக்க தான் வழங்கும் அறிவுரை பற்றிய கல்வி, அறிவு இருக்க வேண்டும்.
அறிவுரையை ஏற்பதற்காக அது வழங்கப்படுபவரின் நிலை, பொருத்தமான நேரம் போன்றவற்றைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக : அறிவுரை வழங்கப்படுபவருக்கான பிரத்தியேக ஒழுங்குகள் :
அறிவுரை வழங்கப்படுபவருக்கான ஒழுங்குகள் :
அறிவுரை சரியானதென்பதை உறுதிப்படுத்துதல்.
அறிவுரையை ஏற்றல்.
அறிவுரையை நடைமுறைப்படுத்துதல்
அறிவுரை வழங்குபவரின் வார்த்தை சரியானதென்பதை உறுதிப்படுத்துதல் :
அறிவுரை நல்லதாகத் தோன்றவில்லையானால், அல்லது விசித்திரமான ஒன்றை உள்ளடக்கியிருந்தால், அல்லது நம்பமுடியாத நபரால் வழங்கப்பட்டதாகத் தோன்றினால், அறிவுறுத்தப்படும் நபர் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்பெருமை கொள்ளாமல் அறிவுரையை ஏற்றல் :
அறிவுரையைத் தட்டுவது தற்பெருமையின் அடையாளங்களில் உள்ளதாகும். இது மனிதனை விட்டும் நலவுகளைத் தடுத்துவிடும். நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. (ஆதாரம் : முஸ்லிம் 2021).
அறிவுரையை நடைமுறைப்படுத்தல் : அறிவரையை ஏற்ற பின் அறிவுறுத்தப்பட்டவர் அவ்வறிவுரையைத் தனது நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நான் இறுதிச் சுருக்கத்தைக் கண்டறிவேன் :
பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறிவுரையின் ஒழுங்குகளைக் கண்டறியவும் :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் அறிவுரையின் ஒழுங்குகள்
லுக்மான் (அலை) தனது புதல்வருக்குப் பின்வருமாறு கூறினார் : ''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக". (லுக்மான் : 17)
மென்மையாக நடத்தல்
பிர்அவ்னின் கூட்டத்தைச் சார்ந்த விசுவாசி கூறினார் : "என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள்". (gஃகாபிர் : 41).
நன்மையில் பால் அழைத்து, அறிவுரை வழங்கப்படுபவருக்குப் பரிவுகாட்டுதல்.
நபி நூஹ் (அலை) அவர்கள் தனது சமூகத்திற்குக் கூறினார்கள் : "அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை". (ஹூத் : 29). உளத்தூய்மை.
அல்-ஃபுழைல் பின் இயாழ் (ரஹ்) கூறினார்: (நம்பிக்கையாளர் மறைத்து அறிவுரை கூறுவார், அதே சமயம் தீயவர் அவமதித்து நிந்திப்பார்.)
மறைத்தல் மற்றும் இரகசியம் பேணல்.
செயல்பாடு (2): கேட்டு, சுருக்குவேன் :
இந்த ஒவிப்பதிவைக் கேட்டு, அதிலிருந்து நீர் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விடயங்களைச் சுருக்கமாகக் கூறவும் :
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நபி ஷுஐப் (அலை) அவர்களின் பின்வரும் கூற்று : "என்னால் முடிந்தளவு சீர்திருத்தத்தைத் தவிர நான் நாடவில்லை". இது குறிப்பது :
(அறிவுரையின் நோக்கம் - அறிவுரை நேரம் - அறிவுரை முறை)
(நம்பிக்கையாளர் மறைத்து அறிவுரை கூறுவார்) என்ற அல்-ஃபுழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் கூற்றிலிருந்து பெறப்படும் பாடம் :
(தீமைகளைப் பார்த்து மௌனித்தல் - தீயோருக்கு அறிவுரை வழங்குதல் - அறிவுரையில் இரகசியம் பேணுதல்)
பின்வரும் இறைவசனம் : "“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது" இது குறிப்பது :
(அறிவுரையில் பெருமிதம் கொள்வது - அறிவுரை ஏற்பதில் அகந்தை - அறிவுரையை ஏற்றுக்கொள்வது)
Q2: பின்வரும் அறிவுரைகளின் முடிவைக் கணிப்பதுடன், உமது கணிப்புக்கான காரணத்தையும் குறிப்பிடவும்:
அறிவுரை எதிர்பார்க்கப்படும் முடிவு ஏற்றுக் கொள்கின்றீர் ஏற்றுக் கொள்வதில்லை
காரணம்
ஒரு இளைஞன் தனது சக நண்பருக்கு மக்கள் முன்னிலையில் சத்தமாக போதைப்பொருளை விட்டுவிடுமாறு அறிவுறுத்துகிறான் .
ஒரு ஆசிரியர் தனது மாணவனை கடினமாக படிக்குமாறு அறிவுறுத்துகிறார்.
புகைபிடிக்கும் ஒரு மருத்துவர் நோயாளிக்கு புகைபிடிப்பதை விட்டுவிடுமாறு அறிவுறுத்துகிறார்.
பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த ஒரு இளைஞன், தன் பெற்றோரை மதிக்கும்படி தன் சகோதரனுக்கு அறிவுரை கூறுகிறான்.
ஒரு ஊழியர் தொழிலில் தனது முதலாளிக்கு தொழிலாளர்களுக்கு முன்பாக அறிவுறுத்துகிறார்.
Q3: அறிவுரை வழங்கப்படுபவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை சுருக்கமாகக் கூறவும்.
வெளியீட்டுரை-பதிப்புரை
மனிதனைப் படைத்து, அவனுக்கு அறிவையும், தெளிவுகளையும் வழங்கி, அல்குர்ஆன் ஹதீஸ் மூலம் அவனுக்கான ஆதாரத்தை நிலைநாட்டியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக .
ஸலாத்தும் ஸலாமும் எமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதும், அவரது குடும்பத்தார்கள் மதிப்பிற்குரிய தோழர்கள், மறுமை நாள் வரை அவரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இறைவாழ்த்துக்குப் பின் : ஒரு நற்செயலை செய்வதற்கு முன் அது பற்றி கற்றுக்கொள்வது ஒரு அடியானின் மீதுள்ள மிக முக்கிய கடமையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: ''(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத்தகுதியான வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்''.
(முஹம்மது : 19).
இஸ்லாமிய அறிவு என்பது இச்சமூகத்தின் மிகப்பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும்;இஸ்லாமிய ஆளுமையை அடையாளப்படுத்தும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
ஆகையால், இஸ்லாமிய அறிவின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையமானது மக்களை விவேகம் மற்றும் அழகிய உபதேசத்தின் மூலம் இஸ்லாத்தின் பால் அழைத்தல், மேலும் வெளிநாட்டவர்களுக்கு அறிவூட்டல்,மற்றும் ஷரீஆ ரீதியாக அவர்களைத் தகுதிப்படுத்தல் ; போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுடன் இயங்கிவருகிறது. அந்த வகையில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களில் ஒரு அங்கமாக (எனது மார்க்கத்தில் எனக்கு விளக்கத்தை தருவாயாக) எனும் தொனிப்பொருளில் 07 மொழிகளில் கருத்தரங்குகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் 'பஸாஇர் - கல்வி ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு, அழைப்பு மையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இப்பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதுடன் அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் நல்ல தரங்களைக் கொண்டதாக இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாம் தரம் 40 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
இரண்டாம் தரம்; 30 பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
மூன்றாம் தரம் - இது 30 பாடங்களைக் உள்ளடக்கியுள்ளது.
பாடங்களை திறம்பட கற்பிப்பதற்கு உதவும் வகையில் மாணவருக்கான ஒவ்வொரு பாடநூலுடனும் ஆசிரியருக்கான வழிகாட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட ஆவணத்தை மேம்படுத்தல், பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளைத் தயாரித்தல் ஆகியன அறிவியல் தயாரிப்பு மற்றும் நுணுக்கமான மதிப்பாய்வு செய்தல் ஆகிய செயல்முறைகளை கடந்து வந்துள்ளன. ஷரிஆ கல்வி பாடத்திட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவால் இவை மேற்கொள்ளப்பட்டன.
முடிவில், அல்லாஹ் இந்தப் பணி மூலம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பயனளிக்கவேண்டும் என்றும், இந்த அழகான அணுகுமுறையை வழங்குவதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்மை மற்றும் சுவர்க்கம் அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். சங்கத்தின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் இந்தக் கல்விப் பாடத்திட்டத்தைப் பற்றிய உங்கள் ஆலோசனைகள் மற்றும் மேம்பாட்டு யோசனைகளை வரவேற்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாவதாக!
அர்ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்.
முகவுரை
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் என்றென்றும் உண்டாகட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின்:
அன்பார்ந்த மாணவர்களே!உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகம் எமது பாடத்திட்டத்தின் முதலாவது புத்தகமாகும்.இந்நூலானது ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைப் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன்; சீரான இஸ்லாமிய கலாச்சாரத்தை விதைத்து, இஸ்லாமிய கல்வி அணுகுமுறையிற்கிணங்க மாணவனின் ஆளுமையை கட்டமைத்திடுவதையும் நோக்காகக்கொண்டுள்ளது.
இஸ்லாமிய கல்விசார் துறைகளை மையமாகக் கொண்டு இப்புத்தகம் பின்வருமாறு பல அலகுகலாக பிரிக்கப்பட்டுள்ளது. :
குர்ஆனின் மற்றும் அதன் விளக்கத்தின் அலகு : இது புனித குர்ஆனைக் கற்றுக்கொள்வதன் சிறப்பை பற்றிய விளக்கத்தையும், ஸூரா அல்-பகராவின் முடிவுகளின் சுருக்கமான விளக்கம் மற்றும் சில சிறிய ஸூராக்களின் விளக்கத்தை வசனங்களிலிருந்து மிக முக்கியமான அறிவியல் மற்றும் கல்விப் பலன்களைப் பிரித்தெடுப்பதுடன் அனைத்தையும் உள்ளடக்கிருக்கிறது.
நம்பிக்கை மற்றும் பரிசுத்தப்படுத்துதலின் அலகு: இது ஏகத்துவத்தை முறிக்கக்கூடியவைகளைக் கையாள்கிறது: நிராகரித்தல், இணைவைத்தல், நயவஞ்சகம்மற்றும் மதம் மாறுதல் (அதன் மிக முக்கியமான வடிவங்கள் மற்றும் அதற்கு எதிரான எச்சரிக்கைகள் பற்றிய விளக்கத்துடன், தன்னைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம், அதற்கான வழிகள் மற்றும் இதயத்தின் மிக முக்கியமான செயல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
ஸுன்னா மற்றும் ஷமாயிலின் அலகு: இது நபிகள் நாயகம், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்களை, மிகைப்படுத்தல் மற்றும் வெறுப்பை ஏற்படுத்துவதை எச்சரிப்பதுடன் உரிமைகள் பற்றிய விளக்கத்தைக் கொண்டுள்ளது. பின்னர், எண்ணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதில் உள்ள நேர்மையின் அவசியம் மற்றும் நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதன் நேர்மையைப் பற்றிய விரிவான ஐந்து ஹதீஸ்களைப் ஆய்வு செய்திருக்கிறோம், மேலும் அவர் எல்லாம் வல்ல இறைவனின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தினார். அவனுடைய ஆணை மற்றும் விதியில், அவனுக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாக இருத்தல், மேலும் இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்காதவற்றில் ஆர்வத்தையும் கைவிடுதல்.
பிக்குல் அஹ்காம் ( சட்டங்களை அறிதல்) அலகு: பரிவர்த்தனைகள், குடும்பம் மற்றும் உணவு தொடர்பான மிக முக்கியமான தீர்ப்புகளின் சுருக்கம் இதில் அடங்கும்.
சட்டங்கள்: விற்பனை மற்றும் குத்தகை, திருமணம் மற்றும் விவாகரத்து மீதான தீர்ப்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீதான தீர்ப்புகள்.
-அழைப்புப் பணியின் அலகு: அல்லாஹ்வின்பால் அழைக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கான ஒரு அறிவுறுத்தல் இதில் உள்ளது, இது நபி (ஸல்) அவர்களின் அழைப்பு பாதையின் சுருக்கம், அல்லாஹ்வின்பால் அழைப்பதன் மகத்துவம், நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுத்தல் மற்றும் அதன் வழிமுறைகளைத் தெளிவுபடுத்துதல். அதனால் மாணவர் தனது குடும்பத்திலும் சமூகத்திலும் அழைப்பு பணி செய்வதற்குத் தேவையான தத்துவார்த்த மற்றும் நடைமுறை அம்சங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவார்.
அறிவியல் கோட்பாடுகள் மற்றும் நவீன கல்வித் தரங்களுக்கு இசைவான வகையில் இந்தப் புத்தகங்களை உருவாக்க நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்.
மேலும் நாம் இப்புத்தகத்தை தயாரித்தளிப்பதில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்:
தேவையேற்படும் இடங்களில் பாடங்களில் கவனத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு பீடிகையுடன் -முற்குறிப்புடன்- பாடத்தை ஆரம்பித்தல்-
அறிவியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் வடிவங்கள் மற்றும் கருத்து வரைபடங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
செயலில் கற்றல் உத்திகளுக்கு இணங்க கல்வி நோக்கங்களை அடைவதற்கான கல்வி நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
மேலும் சில விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்:
பாடத்தின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் பாடத்திட்டத்தின் இயல்பு நிலையோடு தொடர்புபடுத்தி அதன் உள்ளடக்கம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் ஆளுமைப் பண்புகள் உட்பட பல்வேறுபட்ட திறன்களை விருத்தி செய்தல்.
தனிநபராகவும்,குழுவாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பல் வேறு வழிமுறைகளையும், வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விடயங்களையும் உள்ளடக்கியிருத்தல்.
எழுத்து, பேச்சு, செயற்பாடு, சிந்தனைத் திறன் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அவற்றைப் பயன்படுத்தல்.
பாடத்தின் அடைவையும், அதன் நோக்கத்தின் அடைவையும் பரீட்சிப்பதற்காக ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விகள் வழங்கல்.
இப்புத்தகத்தை உங்கள் முன் சமர்பிக்கும் இவ்வேளையில் இதன் பாட உள்ளடக்கம் இலகுவானதாகவும், அது முன்வைக்கும் முறை தெளிவானதாகவும் உள்ள நிலையில் சமர்பிக்குறோம்.
இப்புத்தகத்தை உங்கள் முன் சமர்பிக்கும் இவ்வேளையில் இதன் பாட உள்ளடக்கம் இலகுவானதாகவும், அது முன்வைக்கும் முறை தெளிவானதாகவும் உள்ளநிலையில் சமர்பிக்குறோம்.
இந்த அறிவு மாணவர்களுக்குப் பயன் அளிக்கவும், எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவன் அனைத்தையும் செவியேற்பவன், அனைத்தையும் அறிந்தவன்.
நபி ( ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாவதாக.
பஸாஇர் - கல்வி நடவடிக்கைகளுக்கான ஆலோசனை நிறுவனம்.
அல்குர்ஆன் மற்றும் தப்ஸீர் பகுதி
முதலாவது பாடம்: குர்ஆனைக் கற்று, கற்பித்தலின் சிறப்பு
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் உங்கலிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது :
திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்குர்ஆனை கற்று கற்றுக் கொடுப்பதின் சிறப்பிற்கு ஆதாரம் தேடுவதையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
புனித குர்ஆனைக் கற்றுக்கொள்வது மற்றும் கற்பிப்பது பற்றிய ஒரு உன்னத ஹதீஸை மனனம் செய்வதை எதிர்பார்க்கப்படுகிறது .
திருக்குர்ஆனைக் கற்பதையும் கற்பிப்பதின் பெயரில் முன்னோக்கி செல்வதையும் எதிர்பார்க்கப்படுகிறது .
அறிமுகம்
புனித குர்ஆனை ஓதுதல் என்பது வணக்க வழிபாடு மற்றும் சர்வவல்லமையுள்ள இறைவனுக்கு நெருக்கமான ஒரு செயலாகும், மேலும் அது ஒரு பெரிய வெகுமதியைக் கொண்டுள்ளது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் திரு வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் அவருக்கு அதன்மூலம் ஒரு நன்மைகிடைக்கும் , மேலும் ஒரு நல்ல செயல் பத்து மடங்கு பெருகும், நான் “அலிப்லாம்மீம்” ஒரு எழுத்து என்று சொல்லவில்லை, ஆனால் அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து , மற்றும் மீம் என்பது ஒரு எழுத்து. (ஆதாரம் : திர்மிதி 2910).
திருக்குர்ஆனை ஓதுவதற்கு இதுவே வெகுமதி என்றால், அதைக் கற்றுக்கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் கிடைக்கும் வெகுமதி அதிகம், இதைத்தான் இந்தப் பாடத்தில் கற்றுக்கொள்வோம்.
திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம்:
ஒவ்வொரு முஸ்லிமும் ஸூரத்துல் ஃபாத்திஹாவைப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது இல்லாமல் தொழுகை செல்லாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஸூரத்துல் பாத்திஹாவை ஓதாத ஒருவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது". (ஆதாரம் : புஹாரி 756, முஸ்லிம் 394).
ஒரு முஸ்லிம் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும், மற்றும் அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், இறைவன் குறிபிடுகிறான் : "(நபியே!) அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம்". (ஸாத்: 29).
திருக்குர்ஆனின் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் அமல் செய்வதற்கு திருக்குர்ஆனை விளங்குவது அதை படிப்பது அதை ஆய்வு செய்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
திருக்குர்ஆனைக் கற்பதன் சிறப்பு:
திருக்குர்ஆனைப் படிக்கக் கற்றுக்கொள்வது மறுமையில் பெரும் நற்கூலியைப் பெறுகிறது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் உன்னதமான மற்றும் நேர்மையான வானவர்களுடன் இருக்கிறார், மேலும், குர்ஆனை ஓதி, சிரமப்படும் போது அதில் தடுமாறி விடுபவனுக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு". (ஆதாரம் : முஸ்லிம் 798).
அஸ்ஸபரா என்பது வானவர்களை குறிப்பிடுகிறது, இரண்டு கூலி என்பதைக் கொண்டு நாடப்படுவது ஓதுவதற்கு உண்டான கூலியும், கஷ்டப்படுவதற்கு உண்டான கூலியும் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் புனித குர்ஆனைக் கற்கவும் படிக்கவும் கூடுபவர்களுக்கு சிறந்த நற்பண்புகளை வாக்களித்துள்ளார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை (பரஸ்பரம்) படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் மூடிக்கொள்கிறது அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூர்கிறான்". (ஆதாரம் : முஸ்லிம் 2699).
திருக்குர்ஆனைக் கற்பிப்பதன் சிறப்பு:
திருக்குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்குக் கற்பிப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயர்ந்த அந்தஸ்தை பரிசாகக் கொடுத்திருக்கிறான், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்". (ஆதாரம் : புஹாரி 5027).
எனவே, திருக்குர்ஆனைப் போதிப்பவரின் வெகுமதி மறுமையில் இரட்டிப்பாகும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இறைவனின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை கற்பிப்பவருக்கு அது ஓதப்படும் வரை அதன் வெகுமதி கிடைக்கும்." (கான்ஸ் அல்-உம்மால் 28885).
எனது அன்பான மாணவரே, நீங்கள் திருக்குர்ஆனை ஓதவும், கற்கவும், கற்பிக்கவும் முயற்சி செய்ய வேண்டும், மறுமை நாளில் குர்ஆனுடையவரின் அந்தஸ்தை தெளிவுபடுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம், 'நீர் ஓதுவீராக!, அதன் மூலம் உயர்ந்து கொண்டே செல்வீராக, உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும்' என்று அவரிடம் கூறப்படும்'. (ஆதாரம் : அபூதாவூத் 1464, திர்மிதீ 2914).
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : நான் எனது வகுப்பு நண்பர்களுடன் உரையாடுவேன் :
இக்காலத்தில் திருக்குர்ஆனைக் கற்கும் வழிமுறைகள் பல்வேறுபட்டிருக்கிறது, உங்கள் நன்பர்களுடன் உரையாடுவதின் மூலம், புனித குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்வதற்கு கிடைக்கக்கூடிய வழிகளைத் தீர்மானிக்கவும்.
செயல்பாடு (2): நான் நுணுக்கமாக கவனித்து, பரிந்துரைப்பேன் :
தற்கால தொழில்நுட்பம் விரிவடைந்து அதன் முறைகள் பல்வகைப்படுத்தப்பட்டுள்ளன, திருக்குர்ஆனைக் கற்க மிகவும் பொருத்தமான நுட்பங்களைக் கண்டறிந்து, இது வரை பாவிக்கப்படவில்லை என்று எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்தைப் பரிந்துரைக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின்(✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
ஸூரா அல்-ஃபாத்திஹாவைக் கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
திருக்குர்ஆனை ஓதுவதன் வெகுமதி விசேஷமாக ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குண்டானதாகும்.
திருக்குர்ஆனைப் படிப்பவர்களை எல்லாம் வல்ல இறைவன் பாராட்டுகிறான்.
திருக்குர்ஆனைச் சிந்திப்பது அதைச் செயல்படுத்த உதவுகிறது.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
புனித குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்காக ஒன்று கூடுபவர்களை :
(அல்லாஹ்வுடைய கருணைசூழ்ந்து கொள்கிறது- வானவர்கள் அவர்களுடன் சமூகமளிக்கிறார்கள் - இவ்விரண்டும் கிடைக்கும்)
குர்ஆனை ஓதுபவர்கள் சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை ஒரு விதத்தின் படி அடைந்து கொண்டிருப்பார்கள் :
(அவரது அதிகமான பணம் - அடிக்கடி ஓதுதல் - அவரது நீண்ட ஆயுள்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இறைவனின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை கற்பிப்பவருக்கு கிடைக்கும் வெகுமதி..... "
(அதை ஓதப்படும் காலமெல்லாம் _ அவர் வாழ்நாள் முழுவதும் _ அதை அவர் மனனம் செய்தால்)
கேள்வி3: புனித குர்ஆனைக் கற்றுக்கொள்வது மற்றும் கற்பிப்பது பற்றிய ஒரு ஹதீஸை எழுதுங்கள்.
பாடம் இரண்டு : ஸூரா பகராவின் இறுதி வசனங்களின் விளக்கம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
பாட வசனங்களை சுருக்கமாக விளக்க வேண்டும்.
பாடத்தின் வசனங்களிலிருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களை நீங்கள் விளக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மற்றும் அவர்களின் தோழர்கலின் நற்பண்பை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இஸ்லாமிய சட்டத்தின் எளிமையின் பாக்கியத்தை உணர வேண்டும்.
நீங்கள் ஒவ்வொரு இரவும் பாட வசனங்களை ஓத வேண்டும் .
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஆரம்பிக்கிறேன்)
"(மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும், ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள்.(285) அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக் கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்). ‘‘எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!). எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!"(286). (அல்பகரா : 285 - 286).
விளக்கமும் விரிவுரையும்:
இந்த இரண்டு உன்னத வசனங்கள் இரண்டு விஷயங்களை உள்ளடக்கியுள்ளது:
முதலாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவருடைய தோழர்களும், இறைநம்பிக்கையின் தூண்களை நம்பினார்கள் என்று சாட்சியமளித்தல்.
இரண்டாவது: சர்வவல்லமையுள்ள இறைவனிடம் எப்படி பிராத்தனைசெய்ய வேண்டும் என்பதை விளக்குவது.
அல்லாஹ் கூறினான்: "அந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அறிவிக்கப்பட்டதை நம்பினார், நம்பிக்கையாளர்களும் நம்பினர்". அதாவது: இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட வஹீயையும், அதில் அடங்கியுள்ள தீர்ப்புகளையும் நம்பினார்கள். மேலும் நபித்தோழர்கள் அதை உண்மைப்படுத்தினார்கள்.
"அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும் கூறுவர்", அவர்கள் அனைவரும் சர்வவல்லமையுள்ள இறைவனின் தெய்வீகத்தன்மையையும் , மலக்குகள், வேதங்களை இறக்கிவைதல், தூதர்களை அனுப்புதல், போன்றவைகளையும் நம்பினார்கள். அவனுடைய தூதர்களை வேறுபடுத்திப் பார்க்கவில்லை, இது முஸ்லிம்களின் சிறப்பம்சம். நபியவர்களை நம்பாத யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்த வேலையை அவர்கள் செய்யவில்லை.
‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள்". அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுவதை அறிவித்தார்கள். பாவமன்னிப்பையும் தேடினார்கள். நிச்சயமாக படைப்பினங்கள் மறுமை நாளில்அல்லாஹ்வின் பக்கமே மீள்வார்கள்.
"எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் அது சம்பாதித்த பலன் அதற்குரியது அது சம்பாதித்தன் விளைவும் அதற்குரியது". எல்லாம் வல்ல இறைவன் ஆன்மாவால் இயன்றதைத் தவிர வேறஎதையும் சிரமப்படுத்தமாட்டான் என்ற நற்செய்தியைத் தருகிறான். நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவனுக்கு வெகுமதி கிடைக்கும்.
பின்பு அல்லாஹ் அவனிடம் எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறான், எனவே அவன் எட்டு துஆக்களை குறிப்பிட்டிருக்கிறான், அவை:
"எங்கள் இறைவா, நாங்கள் மறந்துவிட்டாலோ அல்லது தவறு செய்தாலோ எங்களைப் குற்றம் பிடித்து விடாதே". எங்கள் ஆண்டவரே, நாங்கள் மறந்துவிட்டால் அல்லது தவறு செய்யும் போது எங்களை தண்டிக்காதே.
"எங்கள் இறைவா, எங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நீ சுமத்தியதைப் போன்ற சுமைகளை எங்கள் மீது சுமத்தாதே". எங்கள் இறைவா முன்னைய சமூகத்தினர்கள் அவர்களுடைய பிடிவாதத்தின் காரணமாகவும் அவர்களின் கர்வத்தின் காரணமாகவும் அவர்களை கஷ்டப்படுத்தியது போல் எங்களை கஷ்டப்படுத்தி விடாதே.
"எங்கள் இறைவா, எங்களிடம் தாங்கும் சக்தி இல்லாததை எங்கள் மீது சுமத்திவிடதே". எங்கள் ஆண்டவரே, எங்களால் தாங்க முடியாத தண்டனை மற்றும் சோதனைகளை எங்களுக்கு சுமத்திவிடாதே.
"எங்களை மன்னிப்பாயாக". எங்கள் இறைவா, நாங்கள் செய்த குறைகளை மன்னிப்பாயாக.
"எங்களை மன்னித்துவிடுவாயாக". எங்கள் இறைவா, நாங்கள் செய்த பாவங்களை அழித்துவிடு.
"எங்கள் மீது கருணை காட்டுவாயாக". இறைவா நாங்கள் வேறொரு பாவத்திலே விழாமல் இருப்பதற்காக வேண்டி எங்கள் மீது உன்னுடைய கருணையை காட்டுவாயாக.
"நீயே எங்கள் பாதுகாவலர், எனவே நம்ப மறுக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிவிடுவாயக". இறைவா, நீ எங்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பாளியாகவும், எங்கள் ஆதரவாளராகவும் இருக்கிறாய், எனவே காஃபிர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிடு.
இரண்டு உன்னத வசனங்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படுவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் அவர்களின் தோழர்களினதும் மகத்தான அந்தஸ்து.
எல்லா நபிமார்களையும் தூதர்களையும் நம்புவது அவசியம்.
எல்லாம் வல்ல இறைவனுக்கும் அவனது தூதருக்கும் செவிசாய்த்து கீழ்ப்படிவது கடமையாகும்.
இஸ்லாமிய சட்டத்தின் எளியமுறை.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நான் நுணுக்கமாக கவனித்து தேர்ந்தெடுப்பேன்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: "இரண்டு வசனங்களும் ஸூரத்துல் பகராவின் முடிவில் உள்ளன, அவற்றை யார் ஒரே இரவில் ஓதினாரோ அவருக்குப் அது போதுமானது." (ஆதாரம்: புஹாரி 3707, முஸ்லிம் 1914).
“அவருக்கு அது போதும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் அர்த்தம் என்ன?
இரவு தொழுகைக்கு பகரமாக போதும்.
அவ்விரெண்டையும் கொண்டு வழிபடுவது போதும்.
கெட்டது மற்றும் தீமை அனைத்துக்கும் போதுமானது.
மேலே உள்ள அனைத்தும்.
மேலே உள்ள அனைத்தும்.
செயல்பாடு 2: ஒத்துழைத்து பதிலளிப்பேன்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தில் ஏற்படக்கூடிய தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் வலுக்கட்டாயப் படுத்தப்பட்டு நிகழக்கூடிய ஒன்றையும் மன்னித்து விடுகிறான்". (ஆதாரம்: இப்னுமாஜா 2043).
பின்வரும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் உங்கள் நண்பருடன் ஒத்துழைக்கவும்:
இந்த ஹதீஸுக்கும் பாடத்தின் வசனங்களுக்கும் என்ன சம்பந்தம்?
பாடத்தின் வசனங்களில் கூறப்படாத ஹதீஸில் கூறப்பட்டுள்ள உறுப்பு எது?
செயற்பாடு (3) கலந்துரையாடுவேன்:
இஸ்லாமியச் சட்டம் முஸ்லிம்களுக்கு இலகுவாகவும், சிரமத்தை எளிதாக்கும் வகையிலும் உள்ளது என்பதை நாம் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டோம்.
தொழுகை, ஸகாத் மற்றும் நோன்பு போன்றவற்றிலிருந்து உதாரணங்களைப் பெற உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
பாடத்தின் வசனங்கள் நயவஞ்சகர்களின் குணாதிசயங்களைக் கையாண்டன. (×)
ஒரு முஸ்லிம் அனைத்து நபிமார்களையும் தூதர்களையும் நம்புகிறான். (✓)
ஷரியா விதிகளை செயல்படுத்துவது கடினம். (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஒரு முஸ்லீம் குற்றம்பிடிக்கப்படுவதில்லை என்ற வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளப்படும் விடயம் :
(வேன்றுமென்று - நினைவு - மறத்தல்)
சில சட்டங்கள் முந்தைய சமூகதிற்கு சுமையாக இருந்தன, ஏனெனில்:
(அவர்களின் அடக்குமுறையின் தீவிரம் - அவர்களின் உடலின் வலிமை - அவர்களின் நம்பிக்கையின் வலிமை)
ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு வசனங்களை ஓதுவது ஒரு முஸ்லிமுக்கு எந்தத் தொழுகைக்குப் பகரமாக போதுமானது:
(இஷா - வித்ர் - இரவு தொழுகை)
கேள்வி 3: பின்வரும் வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்குங்கள்:
(ما كسبتْ – ما اكْتَسَبَتْ - إصْراً)
கேள்வி 4: பாட வசனங்களிலிருந்து கற்றுக்கொண்ட இரண்டு பயன்களை எழுதுங்கள்.
பாடம் மூன்று: ஸூரத் அல்-லுஹா, அல்-ஷர்ஹ் மற்றும் அல்-தீன் ஆகியவற்றின் விளக்கம் (இரண்டு வகுப்பு)
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது:
பாடத்தின் ஸூராக்களை சுருக்கமாக விளக்ம் அளிக்க வேண்டும்.
பாட ஸூராக்களிலிருந்து கற்றுக்கொண்டதை விளக்குவதாகும்.
இறைவனுக்குக்கு முன்பாக நபிகள் நாயகத்தின் அந்தஸ்தைக் கண்டறிய வேண்டும்.
நபிகள் நாயகத்தின் மதிப்பை மகிமைப்படுத்துதல்.
அனாதைகள் மற்றும் ஏழைகளுக்கு தர்மங்கள் வழங்க வேண்டும் .
கண்ணியப்படுத்தப்பட்ட பூமியின் நிலையை நீங்கள் உணர வேண்டும் .
ஸூரா அல்-ழுஹா
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
முற்பகல் மீது சத்தியமாக மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை. இம்மையை விட மறுமை உமக்கு சிறந்ததாகும் உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர். உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா? திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான். தேவையுடைவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தன்னிறைவுள்ளவராக்கி வைத்தான். (அல்லவா?) ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர். யாசிப்போரை விரட்டாதீர். (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
(அல்-ழுஹா: 1-11).
விளக்கமும் விரிவுரையும்:
உன்னதமான ஸூரா, நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதான இறைவனின் அக்கறையையும், அவருடைய கண்ணியத்தின் மகத்துவத்தையும் குறிக்கிறது.
முற்பகல் மீது சத்தியமாக மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! சர்வவல்லமையுள்ள இறைவன் ழுஹா நேரத்தின் மீது சத்தியம் செய்கிறான், இது பகலின் ஆரம்பம் மற்றும் இரவைக் கொண்டும் சத்தியம் செய்கிறான், அது மிகவும் இருட்டாகும் போது.
(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை. இம்மையை விட மறுமை உமக்கு சிறந்ததாகும் உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர். குரைஷிக்காஃபிர்கள் கூறியது போல், அவன் நபி (ஸல்) அவர்களைக் கைவிடவில்லை, அல்லது அவரை வெறுக்கவில்லை என்று எல்லாம் வல்ல இறைவன் சத்தியம் செய்கிறான். இந்த உலகத்தை விட மறுவுலகம் அவருக்கு சிறந்தது, இறைவன் அவருக்கு அமைதியை வழங்குவான், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு விருப்பமானதை கொடுப்பான்.
உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா? திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான். தேவையுடையவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தன்னிறைவுள்ளவராக்கி வைத்தான். (அல்லவா?) அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு அனாதையாக கண்டு அவருக்கு உண்டான அனைத்து விடயங்களையும் ஏற்படுத்தி நபித்துவம் என்ற பிரகாசத்தின் மூலம் அவரை நேர்வழிப்படுத்தினான், மேலும் அவர் ஏழையாக இருக்கக் கண்ட போது அவருக்கு உண்டான அனைத்து வாழ்வாதாரங்களையும் கொடுத்து மக்களை விட்டும் அவரை தேவையற்றவராக ஆக்கி வைத்தான்.
ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர். யாசிப்போரை விரட்டாதீர். (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக! அனாதைக்கு அநியாயம் செய்ய வேன்டாம்,யாசகர்கலை விரட்ட வேண்டாம்,மேலும் உங்கள் இறைவனின் அருளைப் பற்றி பேசுங்கள்.
ஸூரா : அஷ்ஷரஹ்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா? உமது சுமையையும் உம்மை விட்டும் நாம் இறக்கி விட்டோம். அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். ஆதலின் நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது எனவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!.
(சூரா : அஷ்ஷரஹ்: 1-8).
விளக்கமும் விரிவுரையும்:
சர்வவல்லமையுள்ள இறைவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கௌரவிப்பது குறித்து சூரா அல்-ழுஹாவில் குறிப்பிடப்பட்டுள்ளதை இந்த சூரா பூர்த்தி செய்கிறது.
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா? உங்களுக்காக - நபியே - மார்க்க சட்டங்கள் மற்றும் எல்லாம் வல்ல இறைவனின் பக்கம் அழைப்பதற்கு, நாங்கள் உங்கள் இதயத்தை விரிவுபடுத்த வில்லையா?
உமது சுமையையும் உம்மை விட்டும் நாம் இறக்கி விட்டோம். அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது. உம் முதுகில் சுமந்திருந்த பாரத்தை இலகுவாக்கினோம்.
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். உலகங்களில் உங்கள் குறிப்பை நாங்கள் உயர்த்துகிறோம், எனவே தொழுகை, இகாமத் மற்றும் பிற விஷயங்களுக்கான அழைப்பில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. அல்லாஹ்விடமிருந்து விமோசனமும் இலகுவும் கடினத்துடனும் நெருக்கடியுடனும் தான் கிடைக்கும்.
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறை வழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. நீங்கள் ஒரு நல்ல செயலை முடித்திருந்தால், மற்றொரு செயலைச் செய்ய முயற்சி செய்யுங்கள், மேலும் எல்லாம் வல்ல இறைவனின் மகிழ்ச்சியை நோக்கமாகக் கொண்டு அவனிடத்தில் உள்ளதை விரும்புங்கள்.
அத்தியாயம்: அத்தீன் (அத்தி)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
அத்தியின் மீதும், ஸெய்தூனின் மீதும் சத்தியமாக! ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம். (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம். ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு. எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப் பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்? தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
(அத்தீன் : 1-8).
விளக்கமும் விரிவுரையும்:
ஒரு நபரின் மதிப்பு அவருடைய நம்பிக்கை மற்றும் நற்செயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஸூரா நமக்குக் கற்பிக்கிறது, எனவே சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:
அத்தியின் மீதும், ஸெய்தூனின் மீதும் சத்தியமாக! ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக, சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் அத்தி மற்றும் ஸெய்தூன் மரங்கள் மீது சத்தியம் செய்கிறான், மேலும் மூஸா நபியிடம் பேசிய தூர் மலையின் மீதும், பின்னர் அவன் புனித மக்கா மீதும் சத்தியம் செய்தான்.
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம். (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம். சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் மனிதனை சிறந்த வடிவத்தில் படைத்தான் என்று சத்தியம் செய்கிறான், பின்னர் அவன் செய்த பல தெய்வ வழிபாடு மற்றும் பாவங்களின் காரணமாக நரகத்தில் மோசமான விளைவுக்குத் திரும்புகிறான்.
ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடை படாத (நற்)கூலியுண்டு. எவர்கள் எல்லாம் வல்ல இறைவனை நம்பி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர, அவர்களுக்குச் சுவனத்தில் திட்டவட்டமான அல்லது தடை செய்யப்படாத வெகுமதி கிடைக்கும்.
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப் பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்? தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா? இறைவனையும் அவனுடைய செய்திகளையும் சுட்டிக்காட்டும் ஆதாரங்களை நீங்கள் அறிந்தவுடன், மனிதனே - உயிர்த்தெழுதலையும் வெகுமதியையும் மறுக்க உங்களைத் தூண்டுவது எது?! எல்லாம் வல்ல இறைவன் ஆட்சியாளர்களில் சிறந்தவன் அல்லவா?!
உன்னத ஸூராக்களிலிருந்து என்ன கற்றுக் கொள்ளப்படுவது:
அல்லாஹ் அவனுடைய தூதரை கண்ணியப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதை இந்த ஸூராக்கலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
அனாதைகள், பலவீனர்கள் மற்றும் ஏழைகளுக்கு நன்மை செய்ய வேண்டிய கடமை.
எல்லாம் வல்ல இறைவனின் அருளை பேசுவது நன்றியுள்ளவர்களின் பண்புகளில் ஒன்றாகும்.
இறைவன் நபியவர்களின் அந்தஸ்தை உயர்த்தி, மேலும் அவரது ஞாபகத்தை உலகில் உயர்த்தி வைத்திருக்கிறான்.
எல்லாம் வல்ல இறைவன் தன் படைப்பின் மீது கருணை உள்ளவன். அவன் துன்பத்துடன் கூடிய நிவாரணத்தை ஏற்படுத்துகிறான்
சர்வ வல்லமையுள்ள இறைவன் மனிதனைப் போற்றி, சிறந்த உருவத்தில் அவனை உருவாக்கினார்.
நம்பிக்கையும் நற்செயல்களும் ஒருவனின் இவ்வுலகிலும் மறுமையிலும் அந்தஸ்தை உயர்த்துகின்றன.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): வசனங்களை இணைப்பேன் :
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களின் அர்த்தங்களுடன் பொருந்தக்கூடிய ஸூரா அல்-ழுஹா, அல்-ஷர்ஹ் அல்லது அல்-தின் வசனங்களிலிருந்து கூறுங்கள்:
அத்தியாயங்கள் ஸூரா அல்-ழுஹா, அல்-ஷர்ஹ், அல்லது அல்-தீன் ஆகியவற்றிலிருந்து என்ன பொருந்துகிறது
அவர் தனது தோழரை நோக்கி, "வருத்தப்படாதே, அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்"என்று கூறிய போது (அத்தவ்பா: 40)
(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
அவன் தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான். (அல்-இன்பிதார்: 7).
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
(தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்.(அல்-பகரா: 263). ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர். யாசிப்போரை விரட்டாதீர். (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
உமக்கு ‘யகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (அல்ஹிஜ்ர் : 99).
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.(அல்பலத்:1) அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
செயல்பாடு (2): பங்கேற்று கண்டறிவேன்:
உங்கள் ஆசிரியரின் பங்கேற்புடன், ஸூரத் அல்-ஷர்ஹ் மற்றும் அல்-தினில் கூறப்பட்டுள்ளவற்றின் மூலம் ஒரு முஸ்லீம் இறைவனின் மகிழ்ச்சியை அடைவதற்கான வழிகளைக் கண்டறியவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வரும் வாக்கியங்களில் சரியானவற்றிற்கு (✓) அடையாளத்தையும் பிழையானவற்றிற்கு (×) அடையாளத்தையும் இடுக.
ஏழைகளிடம் கருணை காட்டுவது அருட்கொடைக்கு நன்றி செலுத்துவதன் சான்றாகும்.
அடியார்க்கு நற்செயல்கள் செய்து வெற்றி பெற இறையச்சம் ஒரு காரணம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் செல்வந்தர்களில் ஒருவர்.
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
அல்லாஹ் கூறுகிறான் : உமது சுமையையும் உம்மை விட்டும் நாம் இறக்கி விட்டோம். பொருள்: உங்கள் பாவத்தை மன்னிக்கிறோம்.
ஸூரத் அல்-ஷர்ஹ் மனித படைப்பின் நிலைகளை உள்ளடக்கியுள்ளது.
அபய பூமி புனித அல்-குத்ஸ் நகரமாகும்.
கேள்வி3: பின்வரும் ஒவ்வொன்றையும் குறிக்கும் வசனத்தை எழுதவும்:
ஒரு முஸ்லிம் எல்லாம் வல்ல இறைவனின் அருளை பேச வேண்டும்.
நம்பிக்கையாளர் எப்போதும் பயனுள்ள செயல்களில் ஈடுபடுகிறார்.
சொர்க்கத்தின் பேரின்பம் ஒருபோதும் நிற்காது.
கே 4: ஸூரத் அல்-ழுஹா மற்றும் அல்-ஷர்ஹ் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள படி, எல்லாம் வல்ல இறைவனிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை விளக்குங்கள்.
பாடம் நான்கு : அலக் மற்றும் கத்ர் ஸூராக்களின் விளக்கம்
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் எதிர் பார்க்கப்படுகிறது:
ஸூரத் அல்-அலக் மற்றும் அல்-கத்ர் ஒரு சுருக்கமான விளக்கத்தைத் குறிப்பிடுக.
அறிவியலின் மதிப்பை ஆதாரத்துடன் விளக்குங்கள்.
அனைத்து வசனங்களினதும் படிப்பினைகளை தெளிவாக குறிப்பிடுவீர்.
லைலத்துள் கத்ரின் இரவை மகிமைப்படுத்துதல்.
அத்தியாயம் அலக்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி! அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான். (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான். அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது, நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும். (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா? ஓர் அடியாரை - அவர் தொழும்போது, அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக் கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா? அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், (அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா? (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா? அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம். (நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
(அல் அலக் :1-19)
விளக்கமும் விரிவுரையும்:
ஸூரா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின் முதல் வசனங்களுடன் தொடங்குகிறது. மற்றும் எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்:
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக! வாசியுங்கள் - தூதரே - சர்வவல்லமையுள்ள இறைவன் உங்களுக்கு திருக்குர்ஆனிலிருந்து இறக்கியதை, படைப்பாளனான உங்கள் இறைவனின் பெயரால் உங்கள் வாசிப்பைத் தொடங்குங்கள்.
அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைக்கிறான். கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தவன், அது தாயின் வயிற்றில் உறைந்த இரத்தத்தின் ஒரு துண்டு.
(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி! அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான். மனிதனுக்கு பேனாவால் எழுதக் கற்றுக் கொடுத்தவனும், அவனது வாழ்க்கை மற்றும் மறுமை விஷயங்களில் அவனுக்குத் தெரியாததை அவனுக்குக் கற்றுத் தந்தவனும், பெருந்தன்மையும் கருணையும் நிறைந்த உன் இறைவனின் திருப்பெயரால் படியுங்கள்.
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான். அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது, இருப்பினும், மனிதன் அல்லாஹ்வின் வரம்புகளை மீரியவனாவான் . அவன் தனது பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் தேவையற்றவன் என்று உணர்ந்தால்.
நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும். மனிதனின் விதி சர்வவல்லமையுள்ள இறைவனிடம் உள்ளது, மேலும் அவர் செய்த ஒவ்வொன்றுக்கும் அவன் வெகுமதி அளிப்பான்.
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா? அபூஜஹ்ல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொழுவதைத் தடை செய்ததைப் பார்த்தீர்களா?!
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக் கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா? அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்வழியில் இருக்கிறார்கள், மேலும் சர்வவல்லமையுள்ள இறைவனுக்குக் கீழ்ப்படிவதைக் கட்டளையிடுகிறார்.
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா? (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா? அபூஜஹ்ல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை மறுத்ததையும், அதிலிருந்து விலகிச் செல்வதையும் நீங்கள் பார்த்தீர்களா?அவன் செயல்களை இறைவன் பார்க்கிறான் என்பது அவனுக்கு தெரியாதா?!
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, இந்த இணைவைபாளன் முடிவுக்கு வரவில்லை என்றால்; வார்த்தைகளில் பொய்யும், செயல்களில் தவறும் உள்ள அந்தத் தலையை, கடுமையான, அவமானகரமான முறையில் நெருப்புக்கு அழைத்துச் செல்வோம்.
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம். பின்னர் அவன் தான் உதவிக்கு அழைக்கும் தனது குடும்பத்தினரையும் குலத்தையும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்றால் அழைக்கட்டும், ஆனால் வேதனையின் வானவர்கள் மட்டுமே அவனிடம் வருவார்கள்.
(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக! தூதரே, அவருக்குக் கீழ்ப்படியாதீர்கள். உங்கள் இறைவனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள், மேலும் அவரை வணங்க முயற்சி செய்யுங்கள்.
அத்தியாயம்: அல்கத்ர் (மகத்துவமிக்கது)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம். (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா? கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். அவ்விரவு சாந்தமானது. (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
(அல்கத்ர் :1-5)
விளக்கமும் விரிவுரையும்:
லைலத்துல் கத்ரின் நற்பண்பு மற்றும் அதன் மகத்தான நிலையை விளக்குவதில் இந்த ஸூரா பிரத்தியேகமானது, பின்னர் இறைவன் கூறுகிறான்:
நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா? உண்மையில், நாம் குர்ஆனை அடிவானத்திற்கு இறக்கி வைத்தோம், மேலும் விதியின் இரவான ரமழான் மாதத்தில் ஒரு மகத்தான இரவில் நபி (ஸல்) அவர்களுக்கு அதை இறக்கி வைப்பதை தொடங்கினோம், உங்களுக்குத் தெரியுமா - நபியே - இந்த இரவில் என்ன நன்மையுமவளமும் இருக்கிறது என்று?!
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். நம்பிக்கையுடனும் நண்மையை ஆதரவு வைத்தும் நற்செயல் செய்பவருக்கு ஆயிரம் மாத வணக்கத்தை விட இந்த பரகத் பொருந்திய இரவில் வழிபடுவது சிறந்தது.
அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். லைலதுல் கத்ர் இரவில் ஜிப்ரயீல் (அலை) உட்பட வானவர்கள் அடிக்கடி இறங்குகிறார்கள், சர்வ வல்லமையுள்ள இறைவன் அந்த ஆண்டில் கட்டளையிட்ட ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டு இறங்குவர்.
அவ்விரவு சாந்தமானது. (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). எல்லாம் வல்ல இறைவன் ஆரம்பம் முதல் விடியும் வரை நல்ல மற்றும் அமைதியான இரவாக ஆக்கிவைப்பான்.
இரண்டு உன்னத ஸூராக்களிலிருந்தும் கற்றுக் கொள்ளப் படுவது:
இஸ்லாத்தில் அறிவுக்கு பெரும் இடம் உண்டு.
இறைவனின் அருட்கொடைகள் தன் மீது ஏராளமாக இருக்கும் போது விசுவாசி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான்.
புனித குர்ஆன் சிறந்த வானவர்களால், சிறந்த மனிதர்களுக்கு, சிறந்த இரவுகளில் இறக்கப்பட்டது.
லைலத்துல்-கத்ர் என்பது இறைவனின் அன்பளிப்பாகும், எனவே நாம் அதை நம்பிக்கையுடனும் நன்மையை ஆதரவு வைத்தவர்களாகவும் பயன் படுத்த வேண்டும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நான் கற்றுக்கொண்டு திட்டமிடுவேன்:
ஸூரத் அல்-அலக் அறிவு மற்றும் கற்றலுக்கான தெளிவான அழைப்பை உள்ளடக்கியது, இதன் மூலம்:
அறிவிற்கான இஸ்லாத்தின் அழைப்பு மற்றும் அதன் ஆர்வத்தின் வெளிப்பாடுகலை ஸூரத் அல்-அலக்கில் இருந்து வெளிக்கொண்டுவருக.
இந்த ஆண்டு நீங்கள் கற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள மூன்று விஷயங்களைக் கண்டறியவும்.
செயற்பாடு (2) சக மாணவர்களுடன் பங்குபற்றுதலுடன் முடிவுகளைப்பெருவேன் :
லைலதுல் கத்ரின் இரவில், இறைவன் ஒரு பெரிய வெகுமதியைக் கொண்ட பெரிய செயல்களைத் தொடங்கினான். இதன் அடிப்படையில், பின்வரும் ஹதீஸ்களை வாசிப்பதில் உங்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து, அவை குறிப்பிடும் செயல்களை கூறுக:
ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் இரவின் நற்செயல்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்." ஆதாரம் : புஹாரி (2020).
கடைசிப் பத்து நாட்களில் நல்ல செயல்களைச் செய்து லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்.
ஆஇஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: இறைத் தூதர் அவர்களே, எந்த இரவு லைலதுல்கத்ர் என்று எனக்குத் தெரிந்தால், அதில் நான் என்ன கூறுவேன் என்பதை நீங்கள் அறிவித்துதாருங்கள். நீங்கள் கூறுங்கள்:யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பவன், நீ மன்னிப்பை விரும்புகின்றாய். எனவே என்னை மன்னித்தருள்வாயாக ஆதாரம் : திர்மிதீ (3513)
"அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன், துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ" எனும் துஆவை லைலதுல் கத்ர் இரவில் அதிகமாக ஓத வேண்டும். (பொருள் : இறைவா! நீ மன்னிக்கக் கூடியவன், மன்னிப்பை விரும்பக் கூடியவன், எனவே என்னை மன்னிப்பாயாக!).
ஹதீஸ் "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில்இஃதிகாஃப் இருப்பார்கள்." (ஆதாரம் : முஸ்லிம் 1172). லைலத்துல் கத்ர் உட்பட கடைசி பத்து இரவுகளில் இஃதிகாஃப் (பள்ளியில் தரித்தல்) இருத்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வணங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும். (ஆதாரம்: புகாரி 37, முஸ்லிம் 759). லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குதல்.
மதிப்பீடு :
கேள்வி 1 : பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
திருக்குர்ஆனில் இருந்து முதலில் இறக்கப்பட்ட ஸூரா அல்-கத்ர் ஆகும்.
புனித குர்ஆன் ரமழான் மாதத்தின் முதல் இரவில் இறக்கப்பட்டது.
இறைவன் தனக்கு வழங்கிய பல அருட்கொடைகளின் காரணமாக நம்பிக்கையாளர் பெருமை கொள்கிறார்.
கேள்வி 2: பின்வருவனவற்றைக் குறிக்கும் ஒரு வசனத்தை எழுதுங்கள்:
இஸ்லாம் அறிவு மற்றும் கற்றலின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
ஆயிரம் மாதங்கள் வழிபடுவதை விட லைலதுல்கத்ர் இரவில் வழிபடுவது சிறந்தது.
அனைத்து படைப்புகளும் மறுமை நாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் திரும்பும்.
கேள்வி :3 பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடையளிக்குக :
ஸூரா அல்-அலாக் நபியைப் பாதுகாப்பதை உள்ளடக்கியது, அதை விளக்குங்கள்.
லைலத்துல் கத்ரின் தன்மையை சுருக்கமாகக் கூறுங்கள், அதன் போது ஒரு முஸ்லீம் செய்யக்கூடிய வழிபாடுகளை விளக்குங்கள்.
பாடம் ஐந்து : பய்யினா மற்றும் ஸல்ஸலா அத்தியாயங்களின் விளக்கங்கள். (இரு பாடவேளைகள்)
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் உங்கலிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது :
இவ்விரு ஸூறாக்களினதும் வசனங்களுக்கான விளக்கத்தை சுருக்கமாக கூறுவீர்.
விசுவாசிகளின் நிலைமைகளுக்கும் மறுமையில் நம்பிக்கையற்றவர்களின் நிலைமைகளுக்கும் இடையில் ஒப்பீடு செய்ய வேண்டும்.
இரண்டு ஸூராக்களிலிருந்தும் பெறப்படும் பயன்களை விளக்க வேண்டும்.
மறுமை நாளில் விசாரணைக்கு தயாராகுதல்.
அத்தியாயம்: அல்பய்யினா (தெளிவான சான்று)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர். (அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான். (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன. (அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர். (எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள். ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சுவர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.
(அல்-பய்யினா: 1-8).
விளக்கமும் விரிவுரையும்:
நபியவர்களின் தூதுச் செய்தியின் நிலை, அதை நம்புபவர்களின் சிறப்பு மற்றும் அதை நம்பாதவர்களின் தண்டனை பற்றி இந்த ஸூரா கூறுகிறது:
இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர். யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பலதெய்வவாதிகள் உட்பட காஃபிர்கள் அதன் செல்லுபடியாகாததற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரை தங்கள் அவநம்பிக்கையை கைவிடவில்லை.
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான். (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன. இந்த ஆதாரம் இறைவனின் தூதர் மற்றும் அவர் ஓதுகின்ற திருக்குர்ஆனின் தூய்மைப்படுத்தும் வசனங்கள் மற்றும் அவற்றிலுள்ள சத்தியத்திற்கான வழிகாட்டுதலுமாகும்.
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர். எல்லாம் வல்ல இறைவன் நபி (ஸல்) அவர்களை அனுப்புவான் என்பதில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. ஆனால் அவர் அவர்களில் ஒருவர் என்று நினைத்தார்கள், அவர் அரேபியர்களிடமிருந்து அனுப்பப்பட்டபோது, அவர்களில் சிலர் அவரை நம்பினர், வேறு சிலர் நம்ப மறுத்தனர்.
(எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் புனித குர்ஆனில் சர்வவல்லமையுள்ள இறைவனை மட்டுமே வணங்குவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் செலுத்துவது போன்றவற்றைப் பற்றி அவர்களின் புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதைத் தவிர வேறு எதுவும் ஏவப்படவில்லை, அதுவே உண்மையான இஸ்லாம் மார்க்கமாகும்.
ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள். வேதமுடையவர்களில் நிராகரித்தவர்கள் மற்றும் சிலை வழிபாட்டாளர்கள் நரக நெருப்புக்கு விதிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் மிக மோசமானவர்கள்.
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களே எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் சிறந்தவர்கள். எனவே, எல்லாம் வல்ல இறைவன் அவர்களைச் சுவர்க்கத்தில் அனுமதிப்பான், அவர்கள் அதை என்றென்றும் அனுபவிப்பார்கள், சர்வவல்லமையுள்ள இறைவன் அவர்களால் மகிழ்ச்சியடைந்து அவர்களைப் பிரியப்படுத்துவான், அந்த பேரின்பம் எல்லாம் வல்ல இறைவனுக்கு அஞ்சி பாவங்களைத் தவிர்க்கும் அனைவருக்கும் கிடைக்கும்.
அத்தியாயம்: அஸ்ஸல்ஸலா (அதிர்வு)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது, அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில், மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும். (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள். ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (அஸ்ஸல்ஸலா : 1-8).
விளக்கமும் விரிவுரையும்:
மறுமை நாளின் சில நிகழ்வுகளையும் அதற்கு முந்தைய பயங்கரங்களையும் இந்த ஸூரா விளக்குகிறது:
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது, அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில், அல்லாஹ் மறுமை நாளில் சில காட்சிகளை விவரிக்கிறான், அவற்றில்: பூமி கடுமையைக நகர்ந்து, தனக்குள் புதைக்கப்பட்ட இறந்தவர்களை வெளியே கொண்டு வருவதும் ஒன்றாகும்.
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான். அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும். (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
குறிப்பாக பூமி தனக்கு மேல் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்குமாறு அல்லாஹ் அதற்குக் கட்டளையிட்ட பிறகு அதனைத் தெரிவிக்கும் போது பூமியில் என்ன நடக்கிறது என்று மனிதன் ஆச்சரியப்படுகிறான்.
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள். அன்றைய தினம் இவ்வுலகில் தாம் செய்த செயல்களைக் காண மக்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து செல்வார்கள்.
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். மறுமை நாளில், ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நன்மை அல்லது தீமையைப் பார்ப்பான், அது சிறியதாக இருந்தாலும், அதற்கான வெகுமதியைப் பெறுவார்.
இரண்டு உன்னத ஸூராக்களிலிருந்தும் கற்றுக் கொள்ளப்படுவது:
எல்லாம் வல்ல இறைவனை மட்டுமே நேர்மையாக வழிபட வேண்டியதன் அவசியம்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மைத்தன்மையும், குர்ஆனின் மகத்துவமும் அவருடைய நபித்துவம் சரியானது என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.
நற்செயல்களைச் செய்யும் விசுவாசிகள் எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் சிறந்தவர்கள், அவர்களின் வெகுமதி சுவர்க்கம்.
மறுமை நாள் என்பது ஒரு மகத்தான, புனிதமான நாளாகும், அதில் ஒரு நபர் செய்யும் செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) : ஒப்பீடு செய்கிறேன்.
ஸூரத் அல்-பய்யினாவைப் பற்றிய உங்கள் புரிதலின் மூலம், விசுவாசிகளையும் காஃபிர்களையும் அட்டவணையில் உள்ளவற்றுடன் ஒப்பிடுங்கள்:
ஓப்பீட்டு முறை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு கட்டளையிட்ட விடயம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணையிலிருந்து அவர்களின் நிலை மறுமையில் அவர்களின் நிலை
விசுவாசிகள்
நிராகரிப்பாளர்கள்
செயல்பாடு (1): வசனங்களை இணைப்பேன் :
இறைவனின் வார்த்தைகளுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கவும் : மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான். அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும். (இவ்வாறே) உமது இறைவன் வஹி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே! ஒரு நாளை நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவற்றைப் பற்றி சாட்சியம் கூறும். (அந்நூர் : 24)
மறுமை நாளில் இந்த சாட்சியங்கள் அவனுக்கு எதிரானதாக ஆகாமல் அவனுக்கு சாதகமாவதற்கு ஒரு முஸ்லிம் என்ன செய்ய வேண்டும்?
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வரும் வாக்கியங்களில் சரியானவற்றிற்கு (✓) அடையாளத்தையும் பிழையானவற்றிற்கு (×) அடையாளத்தையும் இடுக.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யூதர்கள் நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் அவருடைய நேர்மையை சந்தேகித்தனர்.
எவர் இவ்வுலகில் எல்லாம் வல்ல இறைவனுக்கு அஞ்சுகிறாரோ, அவரை மறுமையில் எல்லாம் வல்ல இறைவன் மகிழ்விப்பான்.
(நிலையான சட்டங்களுக்குரிய மார்க்கம்) என்ற இறைவசனத்தின் பொருள்: வேதமுடையவர்களின் மதம்.
இறைவனுக்காக என்ற உளத்தூய்மை என்பது நல்ல செயல்களை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு நிபந்தனையாகும்.
விசுவாசிகளின் உடல்களை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையும் வரை பூமி பாதுகாக்கிறது.
கே 2 : பின்வரும் வசனங்களின் பொருளை சுருக்கமாக எழுதவும்:
அல்லாஹ் கூறினான் : (எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.
அல்லாஹ் கூறினான்: ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
கேள்வி 3: ஸூரத் அல்-பய்யினா மற்றும் அல்-ஸல்ஸலாவில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் நம்பிக்கையாளர்களின் நிலைமைகளையும், மறுமையில் நம்பிக்கையற்றவர்களின் நிலைமைகளையும் ஒப்பிடுக.
பாடம் ஆறு : ஆதியாத் மற்றும் காரிஆ அத்தியாயங்களின் விளக்கங்கள்.
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது:
இவ்விரு ஸூறாக்களினதும் வசனங்களுக்கான விளக்கத்தை சுருக்கமாக கூறுவீர்.
இரண்டு ஸூராக்களிலிருந்தும் பெறப்படும் பயன்களை விளக்க வேண்டும்.
மறுமையின் கொடூரங்களைக் குறிப்பிடும் சில மதிநுட்பங்களைக் கண்டறியவும்.
எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடைகளை மெச்சுதல்.
அத்தியாயம்: அல்ஆதியாத் (விரைந்து செல்லும் குதிரைகள்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
மூச்சுத் திணற அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக! (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும். இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும். பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும். (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான். நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான். நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான். அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான். (அல் -ஆதியாத் 1-11).
விளக்கமும் விரிவுரையும்:
இந்த ஸூரா ஒரு நபரின் குணாதிசயங்கள் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் அவற்றின் தாக்கத்தை விளக்குகிறது, மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
மூச்சுத் திணற அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக! இறைவனின் பாதையில் ஓடும் குதிரைகள், அவற்றின் ஓட்டத்தின் தீவிரத்திலிருந்து அவற்றின் ஒலியை வெளிப்படுத்தும் அத்தகைய குதிரைகள் மீது இறைவன் சத்தியம் செய்கிறான்.
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும். அவற்றின் தீவிர ஓட்டத்தின் காரணமாக அவற்றின் குளம்புகளிலிருந்து தீப்பொறிகள் வெளியேறுகின்றன.
இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும். அது விடியற்காலையில் சர்வவல்லமையுள்ள இறைவனின் எதிரிகளைத் தாக்குகிறது.
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும். சுற்றிலும் தூசியை எழுப்புகிறது.
பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும். மேலும் எதிரிகளின் கூட்டத்தின் நடுவில் இறைவனின் படைவீரர்களிடமிருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள்.
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான். நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான். நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான். மனிதன் இறைவனின் அருட்கொடைகளை மறுக்கிறான் என்று இறைவன் சத்தியம் செய்கிறான். மேலும் இந்த மறுப்பை மனிதனே ஏற்றுக் கொள்கிறான் என்றும், அவன் செல்வத்தின் மீது அதிக ஆசை கொண்டு, அதில் உலோபித்தனம் காட்டுகின்றான் என்றும் கூறுகின்றான்.
அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- பணத்தால் ஏமாற்றப்பட்ட ஒருவருக்கு மறுமை வந்து, இறந்தவர்கள் தங்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து, அவர்களின் செயல்களுக்கும் அவர்களின் நெஞ்சில் மறைக்கும் நன்மை தீமைகளுக்கும் கணக்குக் காட்டினால் என்ன நடக்கும் என்று தெரியாதா?
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான். இறைவன் அவர்களைப் பற்றி அனைத்தையும் அறிந்திருக்கிறான், மேலும் அவன் மறுமை நாளில் அவர்களுக்கு வெகுமதி அளிப்பான்.
அத்தியாயம்: அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்! (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன? (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா? அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா? (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும். (அல்காரிஅஹ்1-11).
விளக்கமும் விரிவுரையும்:
உன்னதமான ஸூரா உயிர்த்தெழுதலின் சில பயங்கரங்களையும், அவர்களின் செயல்களை எடைபோட்ட பிறகு மக்களைப் பிரிப்பதையும் விவரிக்கிறது, எனவே அல்லாஹ் கூறுகிறான் :
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்! (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன? (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா? இறைவன் தனது அடியார்களை உயிர்த்தெழுதல் நாளின் பயங்கரத்திலிருந்து பயமுறுத்துகிறான், அது இதயங்களைப் பயமுறுத்தும் அதைப் பற்றியும் அதன் பயங்கரங்களைப் பற்றியும்உமக்கு எது அறிவித்தது?
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள். அந்நாளில் மக்கள் சிதறி அங்குமிங்கும் பறக்கும் ஈதல்களைப் போல் இருப்பார்கள்.
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும். மலைகள் கையினால் பறித்து சிதறிய கம்பளி போல் இருக்கும், அதனால் அது ஒன்றுமில்லாமல், இல்லாதது போல் மறைந்துவிடும்.
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில், அந்த நாளில் மக்கள் இரண்டு வகையினர்: ஒருவரின் நற்செயல்கள் கனமாகி கெட்ட செயல்களை அது மிஞ்சிவிடும், இந்த மக்கள் சுவர்கத்தில் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். எவருடைய நற்செயல்கள் இலகுவானதாகவும், தீய செயல்கள் அதிகமாகவும் இருக்கின்றதோ, நரகத்தில் விழுவதே அவனது விதி.
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா? (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும். அந்தப் பள்ளத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? இது மிகவும் சூடான நெருப்பு.
இரண்டு உன்னத ஸூராக்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படுவது:
இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அதற்குரிய உரிமைகளை நிறைவேற்றுபவர்களை தவிர, பலர் அருட்கொடைகளை மறுக்கிறார்கள்.
இறைவன், அவனது தூதர் மற்றும் விசுவாசிகள் மீது நம்பிக்கை, உளத்தூய்மை மற்றும் நேசம் கொண்டு தனது இதயத்தை சீர்திருத்துபவர் வெற்றிபெற்றவர்.
மறுமைக்காக நற்செயல்கள் மூலம் தயாராவதற்காக அல்லாஹ் தனது அடியார்களுக்கு அதன் கோர நிகழ்வுகளை எச்சரிக்கின்றான்.
மறுமை நாளில் மக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுவார்கள்: ஒரு குழுவின் நற்செயல்கள் கனமாக இருக்கும், அதனால் அவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள், மேலும் ஒரு குழுவின் கெட்ட செயல்கள் கனமாக இருக்கும், எனவே அவர்களின் இலக்கு நரகமாகும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): நல்ல செயல்களை எழுதுவேன் :
ஒரு முஸ்லிம் தனது நல்ல செயல்களில் பார்க்க விரும்பும் செயல்களின் எடுத்துக்காட்டுகளுடன் பின்வரும் அட்டவணையை நிரப்பவும்:
நற்செயலின் வகை / நல்ல செயல்களின் அளவில் அதிக எடை கொண்ட வேலையின் உதாரணம்
மக்களுடன் பழகுவது
உள்ளம் சார்ந்த நற்செயல்
வார்த்தை சார்ந்த நற்செயல்
கையினால் செய்யும் நற்செயல்
கண்னினால் செய்யும் நற்செயல்
காதினால் செய்யும் நற்செயல்
செயல்பாடு (2): வசனங்களுக்கு இடையில் தொடர்பு படுத்துவேன் :
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களின் அர்த்தங்களுடன் பொருந்தக்கூடிய ஸூரா அல்-அதியாத் அல்லது அல்-காரியாவின் வசனங்களிலிருந்து கண்டுபிடிக்கவும்:
வசனங்கள் ஸூரா அல்-ஆதியாத் அல்லது அல் காரியாவில் இருந்து என்ன பொருந்துகிறது
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள். (அல்-ஃபஜ்ர்: 20). நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும். அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும். (அல் வாகிஆ : 5-6) கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) (அன்பியாஃ : 47).
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில், எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் () எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி வழங்குவதையும், பாவியை எச்சரிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது இந்த செய்தி.
அல்-காரிஆ சுவர்க்கத்தையும் அதில் உள்ள பேரின்பத்தையும் குறிக்கிறது. (×)
குதிரைகள் எல்லாம் வல்ல இறைவனின் பெரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
ஒரு முஸ்லிம் இறைவனின் அருட்கொடைகளை ஒப்புக்கொள்கிறார், மற்றும் அவனுக்கு நன்றி கூறுகிறார்.
எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான் : (வல்ஆதியாத்):அதாவது: வேகமான பறவைகள். (×)
கேள்வி 2: பின்வரும் வசனங்களின் அர்த்தங்களை சுருக்கமாக எழுதவும்:
அல்லாஹ் கூறினான் : அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான். அல்லாஹ் கூறினான்: அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள். கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
கேள்வி 3: மறுமை நாளின் கொடூரங்கள் ஏன் புனித குர்ஆனில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன?
ஈமான் மற்றும் பரிசுத்தப்படுத்தல் பகுதி
பாடம் ஒன்று: ஓரிறைக் கொள்கையை முறிப்பவை (நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு)
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது:
நிராகரிப்பு மற்றும் இணைவைப்பை விளக்குவது.
நிராகரிப்பு மற்றும் இணைவைப்பின் வகைகளைக் கூற வேண்டும்.
இது பெரிய மற்றும் சிறிய நிராகரிப்பு மற்றும் இணைவைப்பின் தோற்றங்களுக்கு உதாரணம் கூற வேண்டும்.
பெரிய மற்றும் சிறிய நிராகரிப்பு மற்றும் இணைவைப்புக்கு மத்தியில் வேறுபடுத்துதல்.
முஸ்லிமுக்கு நிராகரிப்பு மற்றும் இணைவைப்பால் ஏற்படும் ஆபத்தை உணர வேண்டும்.
அனைத்து வகையான நிராகரிப்பு மற்றும் இணைவைப்பையும் தவிர்க்க வேண்டும்.
அறிமுகம்:
இறை நம்பிக்கையே அடியார்க்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்கான வழி. எனவே, ஒரு முஸ்லிம் நம்பிக்கைக்கு முரணானவற்றில் விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கையை அழிக்கும் விஷயங்கள் எவை?
நம்பிக்கையை முறிப்பவைகள் :
நிராகரிப்பு
இணைவைப்பு
நயவஞ்சகம்
மதம் மாறுதல்
முதலாவது: நிராகரிப்பு
நிராகரிப்பின் வரையறை:
நிராகரிப்பு என்பது: இறைநம்பிக்கையின் அடிப்படையை அல்லது பூரணத்துவத்தை முறிக்கும் அனைத்து நம்பிக்கை, செயல், சொல் சார்ந்தவை நிராகரிப்பாகும்.
இறை மறுப்பின் வகைகள்:
பெரிய நிராகரிப்பு, அதுவே நம்பிக்கையின் அடித்தளத்தை முறிக்கக் கூடியது.
சிறிய நிராகரிப்பு, இது நம்பிக்கையின் பரிபூரணத்தை முறிக்கக் கூடியது.
பெரிய நிராகரிப்பிற்கு சில எடுத்துக்காட்டுகள்
இறைவன் உள்ளான் என்பதை மறுப்பது அல்லது ஈஸா நபியவர்கள் இறைவனெனக் கூறுவது.
தூதர்களை மறுப்பது, அல்லது கேலி செய்வது.
இறைத்தூதர் அல்லது திருக்குர்ஆனின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம்கொள்ளல்.
இப்லீஸ் நிராகரித்ததைப் போன்று இறைவனின் கட்டளைகளை நிராகரித்து, கர்வம் கொள்வது.
குப்ர் அல்-அக்பருக்கு உரிய மோசமான விளைவுகள்:
பெரிய இறைநிராகரிப்பு அமல்களை அழித்துவிடுகிறது, அதற்குரியவனை நிரந்தரமாக நரகத்தில் இருக்க வைக்கும், அதனைச் செய்பவனை விட்டும் விலகியிருக்க வேண்டும், அவனை நேசிப்பதும், அவனுக்கு உதவுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது, அவன் முஸ்லிம் உறவினர்களிடமிருந்து வாரிசு பெறமாட்டான், அவன் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் அவன் இறந்தால் , அவன் மீது தொழுவிக்கபடமாட்டாது, மேலும் அவன் முஸ்லிம் மைய்யவாடியில் அடக்கம் செய்யப்படமாட்டாது.
சிறிய குஃப்ரின் எடுத்துக்காட்டுகள்:
மார்க்கத்தில் "குப்ர்" என்று அழைக்கப்படும் அனைத்து பாவங்களும் ஆகும், அவை குற்றவாளியை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்ற மாட்டாது, உதாரணமாக :
முஸ்லிமுடன் சன்டை செய்தல் : இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகையில் : "ஒரு முஸ்லிமை அவமதிப்பது ஒழுக்கக்கேடு, அவருடன் சண்டையிடுவது குப்ர்." இந்த ஹதீஸை (ஆதாரம் : புஹாரி48 , முஸ்லிம் 64). இங்கே நிராகரிப்பு என்பது சிறிய நிராகரிப்பு ஆகும்.
பரம்பரையை குறைசொல்வது மற்றும் இறந்தவர்களுக்காக ஓலமிட்டு அழுவது: நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒருவரது பரம்பரையை குறைசொல்வது மற்றும் இறந்தவர்களுக்காக சத்தமிட்டு அழுவது." (ஆதாரம் : முஸ்லிம் 67).
சிறிய குப்ரின் மோசமான விளைவுகள்:
சிறிய குப்ர் அதன் குற்றவாளியை மதத்திலிருந்து வெளியேற்றாது, ஆனால் அது பெரிய பாவங்களில் ஒன்றாகும், மேலும் அதைச் செய்தவர் பாவமன்னிப்பு தேடவில்லையேன்றால், அவர் இறைவனின் நாட்டத்தின் கீழ் இருப்பார், அவன் விரும்பினால் அவரைத் தண்டிப்பான். அவன் விரும்பினால், அவரை மன்னிப்பான்.
இரண்டாவது: இணைவைத்தல்
பெரிய இணைவைத்தல் என்பது : பின்வருவனவற்றில் இறைவனுக்கு ஒரு நிகரை ஏற்படுத்தல் ஆகும் :
படைத்தல், வாழ்வாதாரம் அளித்தல் போன்ற அவனுடைய செயல்களில்.
அல்லது மறைவான அறிவு போன்ற அவனது பண்புகளில்.
அல்லது விக்கிரகங்களுக்கு ஸஜ்தா செய்வது போன்ற அவனை வழிபடுவதிலே.
சர்வவல்லமையுள்ள இறைவனுடன் ஒரு படைப்பாளி இருப்பதாகக் கூறுபவர், அல்லது எல்லாம் வல்ல இறைவனை தவிர வேறு யாரேனும் மறைவானவற்றை அறிந்திருப்பார் ، அல்லது - அறுப்பது , நேர்ச்சை, பிரார்த்தனை அல்லது சிரம் தாழ்த்துதல் போன்ற - வணக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதியை இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அர்ப்பணித்தாலும் இவைகளை செய்தவர் மிகப்பெரிய இணைவைத்தலை செய்து விட்டார். மற்றும் அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை, மேலும் பெரிய இறை நிராகரப்பின் விளைவுகள் அவருக்கு அமுலாகும்.
சிறிய இணைவைப்பு : புனித குர்ஆன் அல்லது நபியின் ஸுன்னாவில் பெரிய இணைவைப்பை அடையாத ஆனால் இணைவைப்பு என்று அழைக்கப்படும் ஒவ்வொரு பாவமும் ஆகும்.
சிறிய இணைவைப்பின் எடுத்துக்காட்டுகளில் சில : அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையாவதைக் கொண்டு சத்தியம் செய்வது, நல்லது செய்யும் போது பிறருக்கு காட்டுவதட்கு செய்வது அல்லது தாயத்து அணிவது ஆகியவை அடங்கும்.
சிறு இணைவைப்பின் விளைவுகளில்: இது ஒரு பெரிய பாவம், அதை செய்தவர் மனந்திரும்பவில்லை என்றால், மறுமை நாளில் அவர் இறைவனின் நாட்டத்தில் இருப்பார், அவன் விரும்பினால், அவனை தண்டிப்பான், அவர் விரும்பினால், அவன் மன்னிப்பான் என்ற சட்டம் அமுலாகும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) : ஒப்பீடு செய்வேன்.
பெரிய நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு மற்றும் சிறிய நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு என்பவற்றுக்கு இடையில் பின்வருமாறு ஒப்பிடுக:
பெரிய நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு ஓப்பீடு/ஓப்பாகும் முறை சிறிய வகை நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு
இறைத்தூதர்களைப் பொய்ப்பித்து, மார்க்கத்தை பரிகாசித்தல். இதன் வடிவங்களில் உள்ளவைதான் : முஸ்லிமுடன் போரிடுவது, சந்ததியில் குறை கூறுவது.
அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி விடும் அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றுதல் அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்ற மாட்டாது
நரகில் அவரை நிரந்தரமாக்கி விடும் நரகில் அவரை நிரந்தரமாக்குதல் நரகில் அவரை நிரந்தரமாக்க மாட்டாது
அதைச் செய்பவரை விட்டும் விலகியிருக்க வேண்டும். அதைச் செய்பவரை விட்டும் விலகியிருத்தல் அதைச் செய்பவரை விட்டும் விலகியிருக்க வேண்டியதில்லை.
செயல்பாடு (2) : யோசித்து பதிலளிப்பேன் :
பின்வரும் இரண்டு ஆதாரங்களும் குறிப்பிடும் இணைவைப்பு அல்லது நிராகரிப்பின் வகையை விளக்குங்கள்:
அல்லாஹ் கூறினான் : இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (அல்பகரா: 34).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்'. (ஆதாரம் : அபூதாவூத் 3251).
செயற்பாடு (3) : ஒரு கடிதத்தை அனுப்புவேன் :
சர்வவல்லமையுள்ள இறைவனின் மதத்தை அல்லது புனித குர்ஆனை கேலி செய்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் கூற்றை மேற்கோள் காட்டிஒரு செய்தியை அனுப்பவும் :
"(இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக. நீங்கள் காரணம் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள்". (அத்தௌபா : 65-66).
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக:
முஸ்லீம்களை அவமதிப்பதும் அவர்களை சபிப்பதும் பெரிய இறைநிராகரிப்பு. (×)
ஒரு காஃபிர் ஒரு முஸ்லிமிடமிருந்து வாரிசு பெறுகிறார், ஆனால் ஒரு முஸ்லம் அவனிடமிருந்து வாரிசு பெறுவதில்லை. (×)
நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்வது ஈமானின் அடித்தளத்தையே அழித்துவிடும். (✓)
சிறு இணைவைப்பு அனைத்து செயல்களையும் செல்லாததாக்குகிறது. (×)
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது சிறிய வகை ஷிர்க்காகும்.(✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
இறைவனின் கூற்று குறிப்பிடுகிறது: "மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும்" அது குறிப்பிடுவது :
(நிராகரிப்பு அமல்களை அழித்து விடுகிறது-சிறிய நிராகரிப்பின் விபரீதம்-காஃபிர்களின் செயல்களின் பற்றாக்குறை .)
இப்லீஸின் நிராகரிப்பு எந்த நிராகரிப்பிற்க்கு உதாரணம் :
(பொய்ப்பித்தல் - நயவஞ்சகம் - ஆணவம்)
சிறிய ஷிர்க்கின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
(அல்லாஹ் அல்லாதோரிடம் பிரார்த்தித்தல் - தாயத்து அணிதல் - அல்லாஹ் அல்லாதோருக்கு சிரம்பணிதல்)
பெரிய இணைவைப்புக்கு உதாரணம் பின்வருமாறு:
(தாயத்தை அணிதல் - ஜோதிடர்களுக்கு மறைவான அறிவு இருப்பதாக நம்புதல் - படைப்பினத்தின் மீது சத்தியம் செய்தல்)
நிராகரிப்பு மற்றும் இணைவைப்பின் விளைவுகளில் உள்ளது :
(அமலை அழித்தல் - பாவமன்னிப்பை ஏற்கத் தவறுதல் - வெகுமதி குறைதல்)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக :
பெரிய இணைவைப்பு மற்றும் சிறிய இணைவைப்புகளுக்கு மத்தியில் ஒப்பிடுக:
சிறிய இறை நிராகரிப்புக்கு ஒரு உதாரணம் தருக.
பாடம் இரண்டு : ஓரிறைக் கொள்கையை முறிப்பவை (நயவஞ்சகம் மற்றும் மதமாற்றம்)
செயன் முறை நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது:
நயவஞ்சகத்தை வரையறுக்கவும்.
நயவஞ்சகத்தின் வகைகளை வேறுபடுத்துங்கள்.
மதமாற்றத்தின் வெளிப்பாடுகளை கணக்கிடுதல்.
முஸ்லிம்களின் வாழ்வில் நயவஞ்சகத்தின் ஆபத்தை நீங்கள் உணர வேண்டும்.
நயவஞ்சகம் மற்றும் மதமாற்றத்தின் வெளிப்பாடுகளைத் தவிர்க்கவும்.
அறிமுகம்
நிராகரிப்பு மற்றும் இணைவைப்பு ஆகியவை நம்பிக்கையை அழிக்கும் விஷயங்களில் அடங்கும் என்று முந்தைய பாடத்தில் கற்றுக்கொண்டோம். இந்த பாடத்தில், மீதமுள்ள முரண்பாடுகளைப் படிக்கிறோம்، இந்தப் பாடத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் - சிறிய மற்றும் பெரிய நிராகரிப்பு மற்றும் சிறிய மற்றும் பெரிய இணைவைப்புகளுக்கு இடையிலான வேறுபாட்டை சுருக்கமாகக் கூறுங்கள்.
நம்பிக்கையை முறிப்பவைகள்:
நிராகரிப்பு
இணைவைப்பு
நயவஞ்சகம்
மதம் மாறுதல்
மூன்றாவது: நயவஞ்சகம்
நயவஞ்சகத்தின் வரையறை:
நயவஞ்சகம்: நிராகரிப்பை மறைத்து நம்பிக்கையைக் வெளிப்படுத்துவது ஆகும் .
நயவஞ்சகம் என்பது சமூகத்தின் வலிமையை பலவீனப்படுத்தும் ஒரு கொடிய நோய். நயவஞ்சகர்கள் விசுவாசத்தைக் காட்டுவதால், அவர்களுடைய தீமை நமக்குத் தெரியாது. எனவே, இறைவன் அவர்களை பின்வருமாறு அச்சுறுத்தினார்: "நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காணமாட்டீர்". (நிஸா : 145).
நயவஞ்சகத்தின் வகைகள்:
நம்பிக்கை சார்ந்த நயவஞ்சகம்
அந்நிபாகுல் அக்பர் (பெரிய நயவஞ்சகத்தனம்) என்பது உள்ளத்தில் (குப்ரை) இறைநிராகாரிப்பை மறைத்து வெளிப்படையில் இஸ்லாத்தை வெளிக்காட்டுவதாகும். அது அவரை மார்க்கத்திலிருந்து வெளியேற்றும், அதனுடையவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்.
அதற்கு உதாரணம் பின்வருமாறு: நபி (ஸல்) அவர்களின் மீதுள்ள வெறுப்பு, அல்லது இஸ்லாம் அல்லது குர்ஆன், அல்லது முஸ்லிம்களின் வெற்றியை வெறுப்பது மற்றும் காஃபிர்களின் வெற்றியில் மகிழ்ச்சி.
செயல் சார்ந்த நயவஞ்சகம்:
இது சிறிய நயவஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது நயவஞ்சகர்களின் நெறிமுறைகளைக் கொண்ட ஒரு முஸ்லிமில் ஏற்படுகிறது ، நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை போல: "நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், நம்பப்பட்டால் துரோகம் இழைப்பான்". (ஆதாரம் : புஹாரி 33 , முஸ்லிம் 58).
செயல் சார்ந்த நயவஞ்சகம் உள்ள நபர் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை, ஆனால் அவர் பாவமன்னிப்பு தேட வேண்டும், இல்லையெனில் அவர் மறுமை நாளில் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
நான்காவது :மதம் மாறுதல்
மதமாறுதலின் வரையறை :
ரித்தத் என்பது ஒரு முஸ்லீம் நம்பிக்கையிலிருந்து நிராகரிப்பிற்க்கு வார்த்தை, செயல் அல்லது நம்பிக்கை மூலம் மாறுவதாகும்.
மத மாறுதலின் வெளிப்பாடுகள்:
நம்பிக்கை மூலம் மதம் மாறுதல்:
இறைவனுடன் ஒரு பங்குதாரர் இருப்பதாக நம்புதல், அல்லது விபச்சாரம், மது மற்றும் வட்டி அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்புதல், அல்லது தொழுகை கடமையென்பதை மறுத்தல், அனுமதிக்கப்பட்டது, அல்லது தடைசெய்யப்பட்டது அல்லது கடமையானது என்று முஸ்லிம்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டதை மறுத்தல் போன்றன.
சொல்லின் மூலம் மதம் மாறுதல்:
எல்லாம் வல்ல இறைவன், அல்லது அவனது தூதர்,அல்லது அவனது மலக்குகள் அல்லது அவரது தூதர்களில் ஒருவரை ஏசுதல், அல்லது மறைவான அறிவை வாதிடல், அல்லது நபித்துவதை வாதிடுதல், அல்லது நோயைக் குணப்படுத்துவது போன்ற இறைவன் மட்டுமே செய்யக் கூடியவற்றிற்காக எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறொருவரை அழைப்பது போன்றனவாகும்.
செயலின் மூலம் மதம் மாறுதல்: சிலை அல்லது கல்லறைக்கு சாஷ்டாங்கமாக வணங்குவது, சூனியம் செய்வது மற்றும் அதனைக் கற்பித்தல் போன்றவை.
செயற்பாடுகள்
செயல்பாடு (1):ஒத்துழைத்து எழுதுவேன்:
பின்வரும் செயல்களில் நயவஞ்சகத்தின் வகையை காரணத்துடன் தீர்மானிக்கவும்:
செயல் நயவஞ்சகக்தின் வகை: காரணம்
தொழுகையை நிறைவேற்றுவதைவிட்டும் நிலையான சோம்பல்.
இஸ்லாத்தின் விதிகளை கேலி செய்வது.
நண்பர்களுக்கு துரோகம் செய்வது மற்றும் அவர்களின் ரகசியங்களை பரப்புவது.
முஸ்லிம்களைக் கொலை செய்யப்படுவதில் மகிழ்ச்சியடைதல்.
கீழ்ப்படிதல் செய்வதில் முகஸ்துதி.
செயல்பாடு (2): வாசித்து அடையாளம் காணுவேன்:
பின்வரும் செயல்களைப் படித்து, அவற்றைச் செய்தவர் எந்தச் செயலால் இஸ்லாத்தில் இருந்து தூரமானார் என்பதை அடையாளம் காணவும்:
ஒருவர் குரானை அசுத்தமான இடத்தில் எறிந்தார்.
ஒரு நபர் தனது முஸ்லிம் அண்டை வீட்டாரை கேலி செய்தார்.
சர்வவல்லமையுள்ள இறைவன் மது அருந்துவதைத் தடை செய்யவில்லை என்று ஒருவர் கூறுகிறார்.
ஒருவர் ஜோசியம் சொல்பவராக வேலை செய்கிறார்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
நம்பிக்கையின் செயல்களைப் படிப்பது ஒரு முஸ்லிமை மதம் மாறுதலிருந்து தூரமாக்குகிறது. (✓)
வாக்குறுதியை மீறுவது பெரிய நயவஞ்சகத்தின் வடிவங்களில் ஒன்றாகும். (×)
மதம் மாறுதல் என்பது வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நிகழ்கிறது. (×)
நயவஞ்சகம் சமூகத்தின் பலத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் அதை பிளவுபடுத்துகிறது. (✓)
திருக்குர்ஆனின் உண்மைத்தன்மையை யார் சந்தேகிக்கின்றாரோ அவர் மதம் மாறியவர் ஆவார். (✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
நயவஞ்சகம் பரவுவதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளில் உள்ளவை:
(அதன் வடிவங்களுக்கு எதிரான எச்சரிக்கை - நயவஞ்சகர்களுடன் கலந்திருப்பது - நயவஞ்சகர்களைக் கொல்வது)
செயல்களால் ஏற்படும் மதம் மாற்றத்தின் வெளிப்பாடுகள்:
(நோன்பை கைவிடுதல் - சிலைக்கு சிறைபணிதல் - மதத்தை அவமதித்தல்)
ஒருவரை மார்க்கத்தில் இருந்து வெளியேற்றும் நயவஞ்சகத்தனம் அந்த நயவஞ்சகம்:
(சிறியது - செயல் ரீதியானது - நம்பிக்கை)
கே: செயல் சார்ந்த நயவஞ்சகதின் மூன்று அடையாளங்களைக் கூறவும்.
பாடம் மூன்று : பித்அத்தும் அதன் வகைகளும்
செயன் முறை நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் எதிர் பார்க்கப்படுகிறது:
பித்அத் (நூதன அனுஷ்டானங்கள்) வரையறுக்கவும்.
பித்அத்தின் ஆபத்திற்கு ஆதாரம் கூற வேண்டும்.
பித்அத்தின் வரையறைகளை விளக்க வேண்டும்.
பித்அத்துடைய வகைகளைக் கூற வேண்டும்.
பித்அத் பற்றிய தீர்ப்பை விளக்க வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனுக்காக அவன் விதித்ததைத் தவிர வேறு எதிலும் வணங்குவதைத் தவிர்க்கவும்.
அறிமுகம்
இமாம் மாலிக் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டது : இஸ்லாத்தில் நல்லதாகக் கருதும் ஒரு பித்அத்தை உருவாக்குபவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதுக்கு மோசடி செய்து விட்டார் என்று கூறிவிட்டார். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான் : (இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன்) (அல்மாஇதா : 3).
எனவே அன்றைய தினம் மார்க்கமாக இல்லாதது இன்று மார்க்கமாக ஆக மாட்டாது.
(இமாம் ஷாதிபீயின் அல்இஃதிஸாம் 1/49).
இமாம் மாலிக் பித்அத்தின் அபாயத்தைப் பற்றி கூறியதன் முக்கியத்துவம் என்ன?.
நூதன அனுஷ்டானங்கள்
வரைவிலக்கணம்
அதை அறிவதின் வரையறைகள்
அதன் வகைகள்
அதன் சட்டங்கள்
மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்குவதற்கு எதிராக எச்சரிக்கை
முதலாவது: பித்அத்தின் வரையறை:
பித்அத் என்பது குர்ஆன், ஸுன்னா அல்லது சமூகத்தின் முன்னோர்களின் வழிமுறைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து நம்பிக்கைகள் மற்றும் வணக்க வழிபாடுகள் அனைத்துக்கும் பித்அத் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டாவது : மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்குவதற்கு எதிராக எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் புதுமைக்கு எதிராக எச்சரித்தார்கள், மேலும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "எவரேனும் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்வாராயின் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்". (ஆதாரம் : முஸ்லிம் 1718).
மற்றொரு அறிவிப்பில் 'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்'.
(ஆதாரம் : புஹாரி 2697).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "விடயங்களில் மிக மோசமானது மார்க்கத்தின் பெயரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களாகும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு விடயமும் ஒரு நூதன வழி முறையாகும், அனைத்து நூதன வழி முறைகளும் வழிகேடாகும்". (ஆதாரம் :நஸாஈ: 1578)
மூன்றாவது: பித்அத்களை அடையாளம் தாணுவதற்குண்டான வரையறைகள் :
ஒரு செயல் நூதனம் என்று தீர்பளிப்பதட்கு சில வரையறைகள் இருக்கிறன, அந்த கட்டுப்பாடுகள்:
புதிதாக உருவாக்குதல்، இது புதிய மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றைக் கொண்டு வருகிறது.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குதல்، எனவே இந்த உலக விவகாரங்களில் பித்அத் நுழையாது.
சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாமல் இருப்பது، சட்டப்பூர்வ ஆதாரங்களைக் கொண்ட ஒவ்வொரு செயலும் நூதனம் அல்ல.
நான்காவது: மார்க்கத்தில் உள்ள நூதனங்களின் வகைகள்:
நம்பிக்கை சார்ந்த பித்அத்கள்: நபித்தோழர்களை அவதூறாகப் பேசுவது அல்லது பெரும் பாவம் செய்பவருக்கு எதிராக நிராகரிப்பவர் (காபிர்) எனத் தீர்ப்பளித்தல் போன்றன.
செயல் சார்ந்த பித்அத்கள் : மஸ்ஜிதுகளில் சமாதிகளை கட்டுவது, அவற்றைச் சுற்றி வலம் வருவது போன்றன.
சொல்சார்ந்த பித்அத் : இறுதிச் சடங்கின் போது "அல்லாஹு அக்பர்" அல்லது "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்று சத்தமாகச் சொல்வது போன்றது.
ஐந்தாவது: பித்அத்தின் சட்டம்:
மார்க்கத்தின் ஒவ்வொரு புதுமையும் தடைசெய்யப்பட்டவை மற்றும் தவறானவை. இருப்பினும், பித்அத்தின் வகையை பொறுத்து தடை பின்வருமாறு மாறுபடும்:
அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு அறுத்துப் பலியிடல் மற்றும் நேர்ச்சை வைத்தல் போன்ற சில பித்அத்கள் அதனைச் செய்தவரை காஃபிராக ஆக்குகிறது .
கவாரிஜ்களின் நம்பிக்கைகள் போன்ற சில பித்அத்கள் அதனுடையவர்களை பாவியாக்கும்.
பிரமச்சாரம் மற்றும் அல்லாஹ்வை வணங்குவதற்காகத் திருமணத்தை கைவிடுதல் போலசில பித்அத்கள் அதனுடையவர்களை பாவியாக்கும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : கூர்ந்து கவனித்து வேறுபடுத்துவேன் :
பொருத்தமான இடத்தில் ஒரு அடையாளத்தை வைப்பதன் மூலம் பித்அத்களின் வகைகளை வேறுபடுத்துங்கள்:
பித்அத் செயல் சார்ந்தது நம்பிக்கை சார்ந்தது
கவாரிஜிகளின் பெரும்பாவிகளைக் காபிராக்கும் கொள்கை.
தடை செய்யப்பட்ட நேரங்களில் தொழுவதில் கவனம்செலுத்துதல்.
மனித செயல்கள் நிகழும் முன் அல்லாஹ் அதனை அறிந்திருப்பதை மறுப்பது.
வருடத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு நோற்றல்.
அல்லாஹ்வின் நேசர்கள் மற்றும்அஹ்லுல் பைத்தின் மூலம் அபயம் தேடுதல்
செயற்பாடு: (3)அவதானித்து- பதிலளிப்பேன்
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, ஒரு மனிதர் வெயிலில் நின்று கொண்டிருந்தார், அவரைப் பற்றி கேட்டார்கள்: இவர் அபூ இஸ்ராஈல், உட்காராமல், நிழல் பெறாமல் வெயிலில் நின்று கொண்டிருப்பதாகவும், பேசாமல் மௌன விரதம் இருப்பதாகவும் கூறினர். இறை தூதர் கூறினார்: "அவரைப் பேசவும், நிழல் தேடவும், உட்காரவும், நோன்பை பூர்த்திசெய்யவும் அவருக்கு அறிவுறுத்துங்கள்." (ஆதாரம் : அபூதாவூத் 3302). இந்த ஹதீஸைக் கருத்தில் கொண்டு, பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
இந்நபிமொழியிலிருந்து நாம் கற்பதென்ன?
இந்த ஹதீஸில் அந்த மனிதர் என்ன வகையான பித்அத்தை செய்தார்?
செயற்பாடு (3); கலந்துரையாடி மற்றவர்களை எச்சரிப்பேன்:
நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் மூலம் பித்அத் கொள்கையின் ஆபத்தைப் பற்றி உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுங்கள்: "யார் ஒரு தீய வழிமுறையை இஸ்லாத்தில் அறிமுகப்படுதி அதை செய்தால் அதன் தீமையும் அதன்படி செயற்படுவோரின் தீமையும் அவரையே சாரும். ஆனால் பின்பற்றியோரின் தீமையில் எந்தக் குறையும் ஏற்படாது".
(ஆதாரம் : முஸ்லிம் 1017 .)
பின்னர் ஐந்து வரிகளில் பித்அத்திலிருந்து எச்சரித்து எழுதுங்கள்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
ஷரியா மற்றும் மார்க் விவகாரங்களில் மாத்திரமே பித்அத் குறிப்பாகிறது.
ஷீஆக்கள் மற்றும் காரிஜித்களின் கருத்துக்கள் செயல் சார்ந்த பித்அத்களாகும்.
மார்க்கத்தின் பெயரிலுள்ள ஒவ்வொரு புதுமையும் தடைசெய்யப்பட்டவை மற்றும் வழிகேடானவை.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "எவரேனும் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்வாராயின்............" :
(கடமையானது - வெறுக்கப்பட்டது - நிராகரிக்கப்பட்டது)
பித்அத்தைக் கண்டறிவதற்கான கட்டுப்பாடுகளில் உள்ளது:
(புதுமை - அறிவு - அறியாமை)
கண்டிக்கத்தக்க பித்அத்களில் உள்ளவை:
(காரில் சவாரி செய்தல் - குர்ஆன் பிரதியில் குர்ஆனை ஒன்றுசேர்த்தல் - கல்லறைகளை உயர்த்துதல்)
சட்டப்பூர்வ ஆதாரங்களைக் கொண்ட மற்றும் புதுமைகளாகக் கருதப்படாத செயல்களில் உள்ளது:
(தாராவீஹ் தொழுகை -காலம் முழுதும் நோன்பிருத்தல் - விபச்சாரம் செய்தவனை காபிராக்குதல்)
கேள்வி 3: பித்அத்தின் வரையறையை குறிப்பிடுக.
நான்காம் பாடம் :உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்
செயன் முறை நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல் என்றால் என்ன என்பதை விளக்குதல்.
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் அதன் பலன்களின் முக்கியத்துவத்திற்கு ஆதாரம் கூற வேண்டும்.
உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர வேண்டும்.
உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதில் முயற்சிக்க வேண்டும்
மனிதன் தனது தோற்றத்தின் அழகை கவனித்துக்கொள்கிறான், இது ஒரு நல்ல விஷயம், ஆனால் அதைவிட முக்கியமானது என்னவென்றால், அவன் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் இந்த பாடத்தில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது, அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பழங்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வோம்.
முதலாவது :உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் அர்த்தம் :
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல் என்பதைக் கொண்டு நாடப்படுவது : தீய மற்றும் பாவப் போக்குகளிலிருந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, அதில் உள்ளார்ந்த நற்குணத்தை வளர்த்துக் கொள்ளுதல்; இது அதன் ஒருமைப் பாட்டிற்கும், நன்மை மற்றும் இறைவனின் கண்காணிப்பு நிலையை அடைவதற்கும் வழிவகுக்கிறது.
இரண்டாவது : ஆன்மவைப் பரிசுத்தப்படுத்தவதன் அவசியம்:
பரிசுத்தப்படுத்தல் நபிமார்களின் பணிகளில் ஒன்றாகும்
நபிமார்களின் அழைப்பு ஏகத்துவத்தின்பால் மட்டும் அல்ல, மாறாக ஆன்மாவைத் தூய்மைப்படுத்த மக்களைப் பயிற்றுவிப்பதும் இதில் அடங்கும். அல்லாஹ் கூறினான்: "அவ்வாறே, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து, உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்". (அல் பகரா : 151).
பரிசுத்தப்படுத்தல் வெற்றிக்கான காரணமாகும்:
அடியான் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதுடன் இணைத்தே மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் அவனுடைய வெற்றியை அல்லாஹ் உருவாக்கிருக்கியுள்ளான். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். (அஷ்ஷம்ஸ் : 9). மேலும் அல்லாஹ் குறிப்பிடுகையில்: எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார். (அல் அஃலா:14).
பரிசுத்தப்படுத்தல் அடியானின் நம்பிக்கையை அதிகரிக்கிறது:
எவர் நல்ல செயல்களைச் செய்து பாவங்களைத் தவிர்த்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறாரோ அவருடைய ஈமான் பெருகும், அதன் இனிமையை அவர் சுவைப்பார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று காரியங்களைச் செய்பவர் நம்பிக்கையின் சுவையைச் சுவைத்தவர்: எவர் அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறாரோ, ஏனெனில் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, மேலும் அவர் தனது செல்வத்தின் மீது ஸகாத்தை தனக்கு நன்மையாகக் கொடுக்கிறார், மேலும் ஒரு மனிதன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அப்போது அருகில் இருந்தவர்: இறைவனின் தூதரே, ஒரு நபர் தன்னைத் தூய்மைப்படுத்துவது என்றால் என்ன? அவர் கூறினார்: "அவர் எங்கிருந்தாலும் இறைவன் தன்னுடன் இருக்கிறார் என்பதை அவர் அறிவார்." (ஆதாரம் : பைஹகீ 7275).
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதில் நபி (ஸல்) அவர்களின் ஆர்வம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், அதற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் உதவி தேடவும் ஆர்வமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் பின்வரும் பிரார்த்தனையும் ஒன்று : யா அல்லாஹ், எனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி பயபக்த்தியை தந்தருள்வாயாக நீயே உள்ளத்தை தூய்மைப்படுத்துவோரில் மிகச்சிறந்தவனும் அதன் பொறுப்பாளானும் உரிமையாளனுமாக உள்ளாய். (ஆதாரம் : முஸ்லிம் 2722 .)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆன்மாவின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார் : யாஅல்லாஹ்! எனக்கு நேரான பாதையை மனதில் உதிக்கச் செய்வாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னை பாதுகாப்பாயாக (ஆதாரம் : திர்மிதி 3483).
மூன்றாவது : உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் பயன்:
தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு முஸ்லிம் மறுமையில் சொர்க்கத்தை அடைகிறான் .அல்லாஹ் கூறுகிறான் : எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ, அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான். (அந்நாஸிஆத் : 40- 41).
தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்பவன் சொர்க்கத்தில் உயர்ந்த பதவிக்கு ஏறுகிறான், அல்லாஹ் கூறுகிறான்: எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன. (மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும். (தாஹா : 75-76)
செயற்பாடுகள்
செயல்பாடு 1 :வாசித்து விவாதிக்கிறேன்:
உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : உங்களிடம் கேள்வி கேட்கப்பட முன்னால் நீங்கள் உங்களிடம் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், இன்னும் கியாமத் நாளுக்காக வேண்டி உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள், கியாமத்துடைய நாளில் யாருக்கு கேள்வி இலகுவாகும் என்றால் யார் உலகத்தில் தன் ஆத்மாவை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டாரோ அவருக்குத்தான். (ஆதாரம் : திர்மிதீ2459)
இதன் வெளிச்சத்தில், உங்கள் ஆசிரியர் மற்றும் சக நணபர்களுடன் பின்வருவனவற்றைப் பற்றி விவாதிக்கவும்:
தூய்மையை அடைவதில் சுய விசாரணையின் முக்கியத்துவம்.
ஒரு விசுவாசி தன்னில் அலட்சியம் அல்லது கீழ்ப்படியாமையைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
செயல்பாடு 2 :நான் விளக்கி சிந்திக்கிறேன்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்: யா அல்லாஹ், எனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி பயபக்த்தியை தந்தருள்வாயாக நீயே உள்ளத்தை தூய்மைப்படுத்துவோரில் மிகச்சிறந்தவனும் அதன் பொருப்பாளானும் உரிமையாளனுமாக உள்ளாய், (ஆதாரம் : முஸ்லிம் 2722 .)
ஹதீஸைக் கருத்தில் கொண்டு, சரியான விடைக்கு முன் ஒரு அடையாளம் இடவும்:
விளக்கதை தேடல் ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது இது ஹதீஸைக் குறிக்கவில்லை
எல்லா மக்களுக்கும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் பக்கம் தேவை.
பிரார்த்தனை என்பது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வழிகளில் ஒன்றாகும்.
பாவிகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் பக்கம் தேவையில்லை.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
பரிசுத்தப்படுத்தல் என்றால்: ஒரு நபர் தன்னை மக்கள் முன்னிலையில் புகழ்ந்து கொள்வது. (×)
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துல் என்பது நல்ல குணம் மற்றும் பேச்சின் நேர்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. (√)
(உண்மையில், அதைத் தூய்மைப்படுத்துபவர் வெற்றி பெற்றவர்) என்ற இறைவனின் கூற்று: தூய்மைப்படுத்துதலின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. (√)
சுத்தப்படுத்த வேண்டிய முதல் விஷயம் அல்லாஹ்வுக்கு இணைவைத்தலை விட்டாகும் . (√)
இதய நோய்கள் ஆன்மாவின் தூய்மையை பாதிக்காது. (×)
கேள்வி 2: பின்வருவனவற்றுக்கு ஆதாரங்களைக் குறிப்பிடுக.
ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்துவது நபிமார்களின் பணிகளில் ஒன்றாகும் .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆத்மாவின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடினார்கள்.
தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது சொர்க்கத்திற்குச் செல்லும் பாதைகளில் ஒன்றாகும்.
கேள்வி 3: "ஆன்மாவை பரிசுத்தப்படுத்துவது" என்பதின் விளக்கத்தை தெளிவுபடுத்துங்கள்.
ஐந்தாம் பாடம் : ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் வழிகள்
செயன் முறை நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
தன்னை சீர்திருத்த உள்ள பல வழிகளை குறிப்பிட வேண்டும்.
தன்னைத் தானே சீர்திருத்துவதற்கான வழிகளுக்கு ஆதாரம் கூற வேண்டும்.
சுய சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும்.
உங்கள் தவறுகளை நீங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.
அறிமுகம்:
அப்துல்லாவும் முஹம்மதுவும் தங்கள் சமுதாயத்தை சீர்திருத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளில் தீர்வு கண்டனர்: "எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை". (அா்ரஃத் : 11).
அவர்கள் தங்களைச் சீர்திருத்தத் தொடங்க முடிவு செய்தனர், ஆனால் அவர்கள் தங்களுக்கிடையே கேட்டுக் கொண்டனர்: ஒரு முஸ்லிம் தன்னை எப்படி மாற்றிக் கொள்வது? இதைத்தான் இந்தப் பாடம் விளக்குகிறது.
தன்னை சீர்திருத்த உள்ள வழிகள் :
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்
பாதுகாப்புத் தேடுதல் பிரார்த்தனை செய்தல்
பாவங்களைத் தவிர்த்தல்
கடமைகளை நிறைவேற்றுதல்.
திக்ர் மற்றும் புனித குர்ஆன் ஓதுதல்
சுய விசாரணை
நல்லோருடன் சேர்ந்திருத்தல்
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது கடமையாகும், இதற்கு உதவும் மிக முக்கியமான வழிகளில் ஒன்று:
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்
ஒரு அடியான் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் முதல் வழி இறைவனை ஒருமைப்படுத்துவது தான். இன்னும் அடியான் தன் இறைவனிடம் நேசத்துடனும், அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் தன்னை இணைத்துக் கொள்கிறான். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த விரும்புகிறானோ அவரது உள்ளத்தை விரிவாக்குவான். அவன் நல்ல வாழ்க்கை வாழ்வான்.
அல்லாஹ்விடம் உதவி தேடி பிராத்தித்தல்
ஒரு முஸ்லிம் தன்னைத் திருத்திக் கொள்ளவும் தூய்மைப்படுத்தவும் இறைவனிடம் திரும்ப வேண்டும்; சுய சுத்திகரிப்பு மற்றும் சீர்திருத்தம் இறைவனின் கைகளில் உள்ளது، அல்லாஹ் கூறினான் : அல்லாஹ்வுடைய அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக ஆகி இருக்க முடியாது. எனினும், அல்லாஹ், தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிபவன் ஆவான். (அந்நூர் : 21)
பாவங்களைத் தவிர்தல் :
இதயத்தின் பாவங்களோ அல்லது அவயவங்களின் பாவங்களோ ஒரு முஸ்லிம் அனைத்து பாவங்களையும் மீறல்களையும் தவிர்க்க வேண்டும்، அந்தரங்க உறுப்புகளைப் பார்ப்பதைக் கைவிடுவதன் விளைவைப் பற்றி எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்: "(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும்". (அந்நூர் : 30)
கடமைகளை நிறைவேற்றுதல் :
வணக்க வழிபாடுகளை சட்டம் இயற்றுவதில் உள்ள மிகப் பெரிய தீர்ப்பு, அது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதாகும்.ஸகத்தை பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குகிறீர்". (அத்தௌபா : 103).
ஸகாத் ஆன்மாவை பேராசை, கஞ்சத்தனம் மற்றும் உலக மோகம் மற்றும் அதன் மீதான அக்கறை ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துகிறது.
எல்லாம் வல்ல இறைவனை நினைவு கூர்தல் மற்றும் திருக்குர்ஆன் ஓதுதல்:
அல்லாஹ்வை நினைவு கூர்வதும், திருக்குர்ஆன் ஓதுவதும் ஆன்மாவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது، இறைவன் குர்ஆனை ஆன்மாவின் நோய்களுக்கு மருந்தாகவும், இதயத்திற்கு வழிகாட்டியாகவும் இறக்கி வைத்திருக்கிறான். அல்லாஹ் கூறினான் : மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன.(யூனுஸ் : 57)
சுய விசாரணை மற்றும் அறிவுரை :
அதனால் அல்லாஹ்வுக்குப் பிரியமானதைச் செய்ய முயற்சி செய்யலாம் ,அல்லாஹ் இது குறித்து பின்ருமாறு கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்ஹஷ்ர் : 18).
நல்லோருடன் கலந்து சேர்ந்திருத்தல்:
இறைவன் தன்னுடைய வார்த்தையில் இதைச் செய்யும்படி கட்டளையிட்டான்: (நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி, அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. (அல்கஹ்ஃப் : 28).
ஆன்மாவின் குறைபாடுகள் மற்றும் நிலைமைகளுடன் நேர்மையான மற்றும் நுண்ணறிவுள்ள நபருடன் செல்வது, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கும் அதை சரிசெய்ய முயற்சிப்பதற்கும் மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) கண்டறிவேன் :
பின்வரும் ஆதாரங்களிலிருந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பிரித்தெடுக்கவும்:
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் தூய்மைப்படுத்தும் வழிகள்
அல்லாஹ் கூறினான்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆக, உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்பகரா: 183)
நோன்பு நோற்றல்.
அல்லாஹ் கூறினான் : "இறையச்சமுடையவர் அதிலிருந்து தூரப்படுத்தப்படுவார்". அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்". ( அல்லைல் :17-18)
ஸகாத் வழங்கல்.
அல்லாஹ் கூறினான் : "எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார். அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்". (அல் அஃலா:14-15).
அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, தொழுகையை நிறைவேற்றுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "இன்பங்களை அழித்துவிடக்கூடிய மரணத்தை மிக அதிகமாக நினைவுகூருங்கள்'' (ஆதாரம் : திர்மிதீ 2307). மரணத்தை நினைவுகூர்தல்.
செயல்பாடு (2): பங்குபற்றி, பிரித்தெடுப்பேன்:
உளப்பரிசுத்ததிற்கு வழிகள் மற்றும் வழிமுறைகள் உள்ளன, அதற்கும் தடைகள் உள்ளன, அவற்றில் உள்ளது தான் எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை: நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும் படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும். (அல் அஃராப் :146).
உங்கள் ஆசிரியரின் பங்கேற்புடன், வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதற்கான தடைகளைப் பிரித்தெடுக்கவும்.
தற்பெருமை, பொறாமை, அநீதி, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தல், சத்தியத்தை மறுத்து, ஏற்காமலிருத்தல்.
மதிப்பீடு
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ((✓)) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நபிகளாரின் ஸுன்னாவைப் பின்பற்றுவது தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையாகும். (√)
தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்வது சமுதாயத்தை சீர்திருத்துவதற்கு வழிவகுக்கிறது. (√)
பரிசுத்தப்படுத்தல் என்பது வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படாத உள் விஷயம். (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் கீழ்ப்படிதலுக்கான மிக முக்கியமான செயல்கள் :
(நஃபில் தொழுகைகள் - ஏழைகளுக்கு தர்மம் செய்தல் - எல்லாம் வல்ல இறைவனை ஏகத்துவப்படுத்தல்).
ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வழிகளில் உள்ளது :
(முயற்சி - சலுகைகலை எடுத்துக்கொள்வது- பணத்தை அனுபவிப்பதைக் கைவிடுதல்)
தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்வதற்கான வழிகளில் ஒன்று, மரணத்தை நினைவுகூர்வது மற்றும் தரிசிப்பது:
(உறவினர்கள் - நண்பர்கள் -கப்ருகள் )
கேள்வி3: ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதில் பின்வரும் ஒவ்வொன்றின் விளைவுக்கான ஆதாரங்களை எழுதவும்:
தொழுகையை நிலை நாட்டல்.
அல்குர்ஆன் ஓதுதல்.
பாவங்களைத் தவிர்தல்.
கேள்வி 4: ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதிலும் அதன் தவறுகளைச் சரிசெய்வதிலும் ஸாலிஹீன்களுடன் அமர்ந்திருப்பதன் விளைவை விளக்குங்கள்.
பாடம் ஆறு : உள்ளம் சார்ந்த நற்செயல்கள்
செயன் முறை நோக்கங்கள் :
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
இதயத்தின் மிக முக்கியமான செயல்களைக் கணக்கிடுதல்.
இதயத்தின் செயல்களைக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
இதயத்தின் செயல்களின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும்.
இதயத்தின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அறிமுகம் :
நபி (ஸல்) அவர்கள் இதயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள், எனவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு, அது சீராகிவிட்டால் உடல் அனைத்தும் சீராகிவிடும், அது கெட்டுவிட்டால் உடல் அனைத்தும் கெட்டுவிடும் அதுதான் உள்ளமாகும்'. (ஆதாரம் : புஹாரி 52, முஸ்லிம் 1599).
நபி (ஸல்) அவர்கள் இதயத்திற்கு ஏன் இந்த மகிமையை அளித்தார்கள்?
கேள்விக்கு பதிலளிக்கவும், இந்த பாடத்தை முடித்த பிறகு உங்கள் பதிலை மதிப்பீடு செய்யவும்.
உள்ளம் சார்ந்த நற்செயல்களில் உள்ளது:
1. நிய்யத் (எண்ணம்)
2- இறைவனையும் இறைத்தூதரையும் நேசித்தல்.
3-அச்சம் மற்றும் ஆதரவு
4 - கண்காணிப்பு
5-பகரம் சாட்டுதல்
6- தவக்குல் (பாரம் சாட்டுதல்)
7-அல்லாஹ்வின் அடையளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்தல்.
இதயம் மிக முக்கியமான மனித உறுப்பு, ஏனெனில் இது உடலுறுப்புக்களை வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தூண்டும் உள்ளம் சார்ந்த செயல்களின் இடமாகும். இந்த செயல்களில் மிக முக்கியமானவை பின்வருமாறு:
நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்) மற்றும் அல்லாஹ்வுக்காக மாத்திரமே இப்பணியை செய்தல் என்ற தூய்மையான எண்ணம் இருத்தல்.
நிய்யத்: அனைத்து கீழ்ப்படிதல் செயல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்கும் எண்ணம், மேலும் இது அனைத்து செயல்களையும் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு நிபந்தனையாகும். அடியான் தன் எல்லா வழிபாடுகளிலும் கடவுளுக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார் : "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்". (ஆதாரம் : புஹாரி 1, முஸ்லிம் 1907).
இறைவனையும் இறைத்தூதரையும் நேசித்தல்.
இறைவனிடம் உள்ளதை விரும்பி, நல்ல செயல்களைச் செய்து, பாவங்களைத் தவிர்த்து, நபிகள் நாயகத்தைப் பின்பற்றி அவனைப் பிரியப்படுத்தப் பாடுபடுவதன் மூலம் இது உருவாகும். அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீதான அன்பு நம்பிக்கையில் உள்ளார்ந்ததாகும், நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வும் அவனது தூதரும் மற்ற எதையும் விட அவருக்கு மிகவும் பிரியமானவர்களாக இருக்கும் வரை உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ள மாட்டீர்கள்." (ஆதாரம் : அஹ்மத் 12739).
இறைவன் மற்றும் அவனது தூதரின் நேசத்துடன் பின்வருவன இணைகிறன : புனித குர்ஆனின் மீதான நேசம், முஸ்லிம்கள் மீதான நேசம், மற்றும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு நல்லது மற்றும் மேம்படுத்தும் அனைத்தையும் நேசிப்பது.
அச்சம் மற்றும் ஆதரவு:
பயம் என்பது: இறைவன் மற்றும் அவனது தண்டனைக்கு பயப்படுதல், அவனை மகிமைப்படுத்துதல் மற்றும் அவனை நேசித்தல் மற்றும் அவனுக்கு மாறுசெய்யாது இருத்தல், அல்லாஹ் கூறுகிறான் : (மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.'' (அல் அன்ஆம் : 15).
(அர்ரஜாஉ) ஆதரவு வைப்பது என்பது: இறைவனுக்குக் கீழ்ப்படிய முயற்சி செய்வதுடன், அவனது கருணையின் மீது பற்று, மற்றும் அவனது கருணைக்கான பேராசை கொள்வதாகும், நபி இப்ராஹீம்அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் : "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்". (அஷ்ஷுஅராஃ : 82).
கண்காணிப்பு
கண்காணிப்பு என்பது: இறைவன் தனது வெளித் தோற்றத்தையும் உள்ளான தோற்றத்தையும் அறிந்திருக்கிறான் என்பதை உறுதியாக அடியான் அறிவது, அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அந்நிஸா : 1).
பகரம் சாட்டுதல்:
அது பாவமீட்சி , இறைவனிடம் திரும்புதல், பல நல்ல செயல்களைச் செய்தல் என்பனவாகும், அல்லாஹ் கூறினான்: ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.(அஸ்ஸுமர் : 54).
தவக்குல்-பாரம்சாட்டுதல்-:
இறைவனை நம்புவதும், அவனுடைய சக்தி, ஞானம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பதும், இறைவனை யார் நம்புகிறாரோ அவனுக்கு இறைவன் போதுமானவன் என நம்புவதுமாகும் . அல்லாஹ் கூறினான் : "யார் அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைக்கிறானோ அவனே அவருக்கு போதுமானவன்" (அத்தலாக் : 3).
அல்லாஹ்வின் அடையளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்தல்:
இறைவனின் மகத்துவத்தை , அவனை வணங்குவதை , இறைவனின் கட்டளைகளின் நிலையை உயர்த்துவதை உணர்வதன் மூலம் ஆகிவிடும், அல்லாஹ் கூறினான்: இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது. (அல் ஹஜ் : 32).
செயற்பாடுகள்
செயற்பாடு: (1)அவதானித்து, பதிலளிப்பேன்:
அல்லாஹ் கூறுகின்றான் - ஸகரியா நபியையும் அவரது குடும்பத்தினரையும் புகழ்ந்து -: "நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்". (அன்பியாஃ : 90).
ஒரு நபர் ஆதரவு இல்லாமல் பயத்தின் பெயரில் சுருக்கிக்கொண்டால் என்ன நடக்கும்?
ஒரு நபர் பயமில்லாமல் ஆதரவின் பெயரில் சுருக்கிக்கொண்டால் என்ன நடக்கும்?
ஆதரவில்லாமல் பயத்தில் உங்களை மட்டுப்படுத்துவது எல்லாம் வல்ல இறைவனின் கருணையின் மீது நம்பிக்கை இழக்க வழிவகுக்கிறது.
பயமின்றி ஆதாரவுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்வது ஆணவத்திற்கும் பாவங்களுக்கும் வழிவகுக்கிறது.
செயல்பாடு (2) : கூர்ந்து கவனித்து முடிவுகளைப்பெறுவேன் :
பின்வரும் ஆதாரங்களை கவனித்து, பின்னர் அவை குறிப்பிடும் இதயங்களின் செயல்களை கண்டறியவும்:
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் உள்ளம் சார்ந்த நற்செயல்கள்
அல்லாஹ் கூறினான் (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும். (பகரா : 45)
பொறுமை
அல்லாஹ் கூறினான் இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. (யூஸுஃப்: 38).
நன்றி செலுத்துதல்
அல்லாஹ் கூறினான் (நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். (அஸ்ஸுமர் : 11). உளத்தூய்மை
செயற்பாடு (3) சிந்தித்து முடிவுகளை கண்டறிவேன்:
தொழுகையில் பணிந்து நடப்பதும் குர்ஆனை ஓதும்போது இதய விழிப்புடன் இருப்பதும் ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இதயத்தினால் அடிக்கடி செய்யும் செயல்களில் ஒன்றாகும். இதன் மூலம், தொழுகையில் உள்ளச்சம் ஏற்பட உதவும் ஐந்து மிக முக்கியமான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.
மதிப்பீடு:
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஆதரவு வைத்தலுடன் பெரும்பாலும் தொடர்புபடுவது:
(நேசம் -தவக்குல் - பயம்)
அல்லாஹ் கூறுகிறான் : எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகிறார்களோ... இது குறிப்பது :
(பயம் மற்றும் ஆதரவு- பயம் மற்றும் மனந்திரும்புதல் - உள்ளச்சம் மற்றும் உதவி தேடுதல்)
சரியான நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது குறிக்கிறது:
(ஆதரவு - அடையாளச் சின்னங்களை மகிமைப்படுத்துதல் -தவக்குல் )
கேள்வி 2: பின்வருவன ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்களைக் குறிப்பிடுக.
வணக்க வழிபாடுகளில் உளத்தூய்மையை கடைபிடித்தல்.
நம்பிக்கையின் மூலம் நேசத்தின் தொடர்பு.
பயத்தையும்ஆதரவையும் இணைத்தல்.
கேள்வி 3 : (பாவமீட்சி பெற்றுத் திரும்புதல் -கண்காணிப்பு ) என்பதன் பொருள் என்ன என்பதை விளக்குங்கள்.
ஸுன்னா மற்றும் குணாதிசயப் பகுதி
முதலாம் பாடம் : நபி (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
செயன்முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: ( இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது சமூகம் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிடல் வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது சமூகம் செய்ய வேண்டிய கடமைகளுக்கு ஆதாரம் கூறுதல் வேண்டும்
நபி (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளின் அவசியத்தை உணர வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
அறிமுகம் :
அல்லாஹ் கூறுகிறான் : "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்". (அஹ்ஸாப் : 6).
இவ்வசனத்தின் அர்த்தம் பற்றி உமது ஆசிரியருடன் கலந்துரையாடவும்.
நபி (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் :
நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்படுதல்
நபி (ஸல்) அவர்களை நேசித்தல்
நபி (ஸல்) அவர்களை மதித்து, கண்ணியப்படுத்தல்
நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவைப் பின்பற்றுதல்
நபி (ஸல்) அவர்களுக்கு ஸலவாதும் ஸலாமும் கூறுதல்
நபி (ஸல்) அவர்கள் விடயத்தில் அன்னாரை நம்பிக்கை கொள்வது மாத்திரமல்ல எமது கடமை. மாறாக, அல்குர்ஆன் ஸுன்னாவில் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதையும் அது உள்ளடக்குகின்றது. அவ்வாறான கடமைகளுள் பிரதானமானவை :
நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்படுதல் :
நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்படுதல் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் உள்ளதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "அந்தத் தூதருக்கு வழிப்பட்டவர் திடமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுவிட்டார்". (நிஸா : 80).
நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்படுதல் சுவனம் நுழைவதற்கான காரணிகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''என் சமுதாயத்தார் அனைவரும் சுவர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் நுழைவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள். (புஹாரி 7280).
நபி (ஸல்) அவர்களை நேசித்தல் :
நபி (ஸல்) அவர்களை நேசிப்பது கடமையாகும். அதுவன்றி ஈமான் நிறைவேறமாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் மிகவும் நேசத்துக்குரியவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது'. (ஆதாரம் : புஹாரி 15, முஸ்லிம் 44).
நபி (ஸல்) அவர்களை மதித்து கண்ணியப்படுத்தல் :
நபி (ஸல்) அவர்களை மதித்து அவர்களை மகத்துவப்படுத்தி, அவர்களுடன் ஒழுக்கத்துடன் நடப்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அவன் கூறுகின்றான் : முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். (ஹுஜுராத் : 2).
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அறிவிக்க நாடினால் அன்னாரின் செய்திகளுக்கு மதிப்பளித்து வுழூச் செய்து அழகான ஆடையை அணிந்து கொள்வார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுதல் :
நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவது அல்லாஹ்வையும் நபியவர்களையும் உண்மையாக நேசிப்பதன் ஆதாரமாகும். அத்துடன் அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்கான வழியுமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே! மனிதர்களை நோக்கி) : ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்'' என்று கூறுவீராக". (ஆல இம்ரான் : 31).
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுதல் :
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாதும் ஸலாமும் கூறுமாறு அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவன் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்". (அஹ்ஸாப் : 56).
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதனால் மகத்தான கூலி கிடைக்கின்றது. விடயங்களை இலகுவாக்கி தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதற்குத் தாக்கமுள்ளது. அதன் சிறப்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : "யார் என்மீது ஒரு முறை 'ஸலவாத்' கூறுகிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவைகள் ஸலவாத் கூறுவான்". (ஆதாரம் : முஸ்லிம் 384).
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : வாசித்து, விடையளிக்கிறேன்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் எனக்கு எனது ஆன்மாவை விட நேசத்திற்குரியவர். நீங்கள் எனக்கு எனது மனைவி, செல்வங்களை விட நேசத்திற்குரியவர். நீங்கள் எனக்கு எனது பிள்ளையை விட நேசத்திற்குரியவர். நான் வீட்டிலிருப்பேன், தாங்கள் நினைவு வந்தவுடன் தாங்களிடம் வந்து தாங்களைப் பார்க்கும் வரை என்னால் பொறுமையாக இருக்க முடியாது. எனது மரணத்தையும் உமது மரணத்தையும் நினைத்துப் பார்த்தால் நீங்கள் சுவனம் சென்றவுடன் நபிமார்களுடன் உயரத்தில் இருப்பீர்கள், நான் சுவனத்தில் நுழைந்தால் உங்களைக் காணக் கிடைக்காதோ என அஞ்சுகிறேன்' என்றார். அவருக்கு நபியவர்கள் எந்தவித பதிலும் கூறாமல் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் வசனத்தை இறக்கும் வரை இருந்தார்கள் : "யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்". (நிஸா : 69) , (ஆதாரம் : தப்ரானீயின் முஃஜமுல் அவ்ஸத் 477).
இந்தக் கதையைக் கருத்தில் கொண்டு, கதையின் சொற்றொடர்களை இந்த அட்டவணையில் குறிப்பிடும் அர்த்தங்களுடன் பொருத்தவும் :
வசனம் அது குறிப்பது
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் எனக்கு எனது ஆன்மாவை விட நேசத்திற்குரியவர். நீங்கள் எனக்கு எனது மனைவி, செல்வங்களை விட நேசத்திற்குரியவர். நீங்கள் எனக்கு எனது பிள்ளையை விட நேசத்திற்குரியவர்.
சுவனத்தில் நபியவர்க்குள்ள உயர்ந்த அந்தஸ்த்து
நீங்கள் சுவனம் சென்றவுடன் நபிமார்களுடன் உயரத்தில் இருப்பீர்கள்
நபி (ஸல்) அவர்களுடனான கடுமையான நேசம்.
"யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள்". அந்த நபித்தோழரைக் கலங்க வைத்த, நடக்க மாட்டுமோ என்று அஞ்சிய விடயம்.
நான் சுவனத்தில் நுழைந்தால் உங்களைக் காணக் கிடைக்காதோ என அஞ்சுகிறேன்.
நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவோருக்கான கூலி.
ஒப்படை (2): ஒத்துழைத்து, முன்மொழிவேன் :
நபி (ஸல்) அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான வழிகளை முன்மொழிவதில் உங்கள் சக நண்பர்களுடன் ஒத்துழைக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
நபி (ஸல்) அவர்களை அவர்களின் அழகிய பண்புகளுக்காகவும், அவர்கள் எமக்கு செய்துள்ள பேருபகாரங்களுக்காகவும் நேசிக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற குறிப்பிட்ட நேரங்கள் உண்டு.
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது நாம் அல்லாஹ்வை உண்மையாக நேசிக்கிறோம் என்பதை அறிவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்களை மதிப்பது அன்னாரைக் கண்ட நபித்தோழர்களுக்கு மாத்திரம் குறிப்பானதாகும்.
நபி (ஸல்) அவர்கள்தான் மனிதர்களில் பின்பற்றத் தக்க பூரணமானவராகும்.
கே 2 : பின்வருவனவற்றில் ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டுகின்ற நபி (ஸல்) அவர்களின் உரிமைகளை விளக்கவும் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எனக்கு வழிப்பட்டவர் சுவனம் நுழைந்து விட்டார், எனக்கு மாறு செய்பவர் மறுத்தவராவார்".
இமாம் மாலிக் (ரஹ்) நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் நபிமொழிகளை அறிவிக்க நாடினால் வுழூச் செய்து, அழகிய ஆடைகளை அணிவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும் வரையில் அவர் (உண்மையான) இறை நம்பிக்கை யாளராக மாட்டார்'.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக :
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய மூன்று கடமைகளைத் தெளிவுபடுத்தவும்.
நபி (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒரு முஸ்லிம் நிறைவேற்றுவதைப் பறைசாற்றும் மூன்று செயல்களை எழுதுங்கள்
பாடம் இரண்டு : நபியின் குடும்பத்தினரின் (அஹ்லுல் பைத்) சிறப்புக்கள், மற்றும் உரிமைகள்.
செயன்முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நபியவர்களின் குடும்பத்தார் என்றால் யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நபியவர்களின் குடும்பத்தினரின் சிறப்புகளுக்கு ஆதாரம் கூற வேண்டும்.
நபியவர்களின் குடும்பத்தாருக்குரிய பிரத்தியேக சட்டங்களைத் தெளிவுபடுத்தவேண்டும்.
நபியின் குடும்பத்தினரின் உரிமைகளைப் பட்டியலிட வேண்டும்.
நபியவர்களின் குடும்பத்தார் விடயத்தில் அன்னாரின் உபதேசத்தை அமுல்படுத்துதல் வேண்டும்.
நபியின் குடும்பத்தாரின் கண்ணியத்தை போற்ற வேண்டும்.
உமர், பள்ளி இமாமொருவர் தொழுகையில் பின்வரும் வசனத்தை ஓதுவதை செவிமடுத்தார்: "(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்" (அஹ்ஸாப் : 33).
தொழுகைக்குப் பிறகு அவர் இமாமிடம், "அஹ்லுல் பைத்தினர் யார் ? அல்லாஹ் ஏன் அவர்களை உன்னத வசனத்தில் தனித்துவப்படுத்தியுள்ளான்? அவர்களுக்கு பிரத்தியேக உரிமைகள் உள்ளதா?" எனக் கேட்டார்:
என் அன்பான மாணவரே, இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தப் பாடத்தில் நீங்கள் அறிவீர்கள்.
முதலாவதாக : அஹ்லுல் பைத் (நபியின் குடும்பத்தார்) யார்?
"ஆல்" மற்றும் "அஹ்ல்" என்ற பதம் ஒரு மனிதரின் மனைவி, பிள்ளைகளை உள்ளடக்கிய குடும்பத்தைக் குறிக்கின்றது.
அஹ்லுல் பைத் என்பதன் மூலம் இங்கு நாடப்படுவது : பனூ ஹாஷிம், பனுல் முத்தலிப் குடும்பத்தினரில் நபி (ஸல்) அவர்களை ஈமான் கொண்டோரும், அன்னாரின் மனைவியரும் ஆவார்கள்.
இரண்டாவதாக : அஹ்லுல் பைத்தினரின் சிறப்புகள் :
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அன்னாரை ஈமான் கொண்டதாலும், இரத்த உறவிருப்பதாலும் சிறப்பிக்கப்படத் தகுதியானவர்களாகும். அவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ள வடிவங்களில் சில :
மானக்கேடானவை மற்றும் ஷைதானின் அசுத்தங்களை விட்டும் அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்" (அஹ்ஸாப் : 33).
நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களின் குடும்பத்தாரை நேசித்து, உகப்பு வைக்குமாறு ஏவியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை". (ஷூரா : 23).
அதாவது : அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடம் நீர் கூறும் : மக்களே! எனது அழைப்புப் பணிக்காக, எனது குடும்பத்தை நேசித்து, அவர்களுடன் சேர்ந்து நடப்பதைத் தவிர வேறு எந்த கூலியையும் நான் உங்களிடம் கேட்கவில்லை.
அல்லாஹ் நபியவர்களின் மனைவியரை விசுவாசிகளின் தாய்மார்களாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பிக்கையாளர்களுக்கு தங்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார். அவரது மனைவியர் அவர்களின் அன்னையராவார்'." (அஹ்ஸாப் : 6).
மூன்றாவதாக : அஹ்லுல் பைதினருக்கான பிரத்தியேகமான சட்டதிட்டங்கள் :
அவர்களுக்கு ஸகாத் வழங்குவது ஹராமாக்கப்பட்டுள்ளது :
அஹ்லுல் பைதினரில் யாருக்கும் ஸகாத் கொடுப்பது ஹராமாகும். அவர்களது உயர்ந்த சிறப்பும், கண்ணியமுமே அதன் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக இந்த ஸகாத் தர்மங்கள் மக்களின் அழுக்குகளாகும். அவை முஹம்மதுக்கோ, முஹம்மதின் குடும்பத்தினருக்கோ ஹலாலாக மாட்டாது". (ஆதாரம் : முஸ்லிம் 1072).
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஸலவாத் சொல்லுதல்.
இது தொழுகையில் அத்தஹிய்யாத்திற்குப் பின்னரும் வேறு சந்தர்ப்பங்களிலும் கூற வேண்டும். அதனைப் பின்வருமாறு கூற வேண்டும் : "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்". (பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ அபிவிருத்தி(பரகத்து) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி(பரகத்து) செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்). (ஆதாரம் : புஹாரி 3370).
அவர்கள் விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த உபதேசம் :
அஹ்லுல் பைதினர் விடயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு உபதேசித்துள்ளார்கள். அன்னார் கூறினார்கள் : "எனது குடும்பத்தினரையும் விட்டுச் செல்கிறேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்". (ஆதாரம் : முஸ்லிம் 2408).
நான்காவதாக : அஹ்லுல் பைதினருக்கு செய்ய வேண்டிய கடமைகள் :
அஹ்லுல் பைதினருக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் :
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை விரும்பி, அவர்களுக்கு உதவி செய்து, நேசிப்பது அவசியமாகும்.
அவர்களை வெறுப்பது, விரோதிப்பது, அவர்களுக்கு தீங்கு நினைப்பது அனைத்தும் ஹராமாகும்.
அவர்களுடைய அந்தஸ்தை மதித்து, அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் இடம்பெற்றுள்ள அவர்களது சிறப்புகளை ஏற்பது அவசியமாகும்.
அவர்களை அவமதிப்பது, தூற்றுவது, சபிப்பது, அவர்கள் மீது இட்டுக்கட்டுவது போன்ற அனைத்தும் ஹராமாகும்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியரைத் திருமணம் செய்வது, அன்னாரின் சிறப்பைத் தனித்துவப் படுத்தி, அவர்களது மானத்தை கண்ணியப்படுத்தும் நோக்கில் ஹராமாக்கப்பட்டுள்ளது.
அன்னை ஆஇஷா (ரலி) அவர்களின் தூய்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் இறக்கிய பின்னர் அவ்வம்மையாரை விபச்சாரத்தைக் கொண்டு படுதூறு கூறியவன் காபிராகி விடுவான்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : வாசித்து கூறுவேன் :
பின்வரும் ஹதீஸ்களைப் வாசித்து, நபிகளாரின் குடும்பத்தின் சிறப்புகள் மற்றும் உரிமைகள் பற்றி அவை குறிப்பிடுவதை சுருக்கமாகக் கூறவும். பின்னர் அவற்றைப் பற்றிய உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்:
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்கள் : "மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) இருந்ததைப் போல் நீர் எனக்கு இருப்பதைப் பொருந்திக் கொள்ள மாட்டீரா? ஆனாலும், எனக்குப் பின் எந்தவொரு நபியும் இல்லை". (ஆதாரம் : புஹாரி 3706, முஸ்லிம் 2404).
நபி (ஸல்) அவர்கள் பாதிமா (ரலி) அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்கள் : "சுவனத்துப் பெண்களுக்குத் தலைவியாக நீர் இருப்பதைப் பொருந்திக் கொள்ளமாட்டீரா?". (ஆதாரம் : புஹாரி 3624, முஸ்லிம் 2450).
அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் உங்களுக்கு மிகப் பிரியமானவர் யார்? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் "ஆஇஷா" எனக் கூறினார்கள், ஆண்களில் யார்? எனக் கேட்க "அவரின் தந்தை" எனக் கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 3662, முஸ்லிம் 2384).
செயல்பாடு (2): சிந்தித்து ஆதாரம் கூறுவேன் :
அஹ்லுல் பைதினராக இருந்து ஈமான் கொள்ளா விட்டால் அந்த உறவுமுறை அவருக்குப் பயனளிக்குமா?
பின்வரும் வசனங்களுடன் இக்கருத்துக்கு என்ன தொடர்பு :
"அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும், அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை, விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்". (மஸத் : 1 - 3).
"(அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார், அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; அதற்கு அவர்கள், "இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை" என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்". (ஹூத் : 42, 43).
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
ஆஇஷா (ரலி) நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். (✓)
அஹ்லுல் பைதின் சிறப்புகள் பாத்திமா (ரலி) மற்றும் அவரது பிள்ளைகளுக்கு மட்டுமே. (×)
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவிமார்களைத் திருமணம் செய்வது கூடாது என அவர்களுக்கென பிரத்தியேக ஒரு சட்டம் உள்ளது. (✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
நபியவர்களின் குடும்பத்தில் நுழைபவர்களில் உள்ளவர்கள் :
(நபியவர்களின் தாய்வழி மாமன்கள் - நபியவர்களின் மனைவிகள் - நபியவர்களின் பாட்டன்கள்)
நபியவர்கள் மீது நம்பிக்கை கொண்ட முதல் நபர்:
(கதீஜா மற்றும் அலி - கதீஜா மற்றும் ஆஇஷா - கதீஜா மற்றும் பாத்திமா)
நபி (ஸல்) அவர்களின் குடும்பம் சிறப்பிக்கப்பட்டுள்ளதன் சில எடுத்துக்காட்டுகள்:
(அவர்களது குடும்பத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தல் - ஸகாத் பெற்றுக் கொள்வதைத் தடுத்தல் - அவர்கள் மக்களுடன் பழகுவதைத் தடுத்தல்)
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
அஹ்லுல் பைத் (நபியின் குடும்பத்தார்) யார்?
அஹ்லுல் பைதினருக்கு செய்ய வேண்டிய மூன்று கடமைகளை எழுதவும்.
அஹ்லுல் பைதினரின் இரண்டு சிறப்புகளை ஆதாரத்துடன் எழுதுக.
பாடம் மூன்று : நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல்.
செயன் முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
1. நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல் என்பவற்றின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்தல் வேண்டும்.
2. நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல் என்பவற்றின் வெளிப்பாடுகளை குறிப்பிடல் வேண்டும்.
3. நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல் என்பவற்றை எச்சரிக்கை செய்தல் வேண்டும்.
4. நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் நடுநிலை மற்றும் நீதத்தைக் கடைபிடிப்பதன்பால் அழைப்பு விடுக்க வேண்டும்.
அறிமுகம் :
அப்துல்லாஹ் பின் அபீ அவ்பா (ரலி) அவர்கள் கூறினார்கள் : முஆத் (ரலி) அவர்கள் ஷாம் பகுதியிலிருந்து வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு ஸுஜூது செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "இது என்ன முஆதே"? என வினவினார்கள். அதற்கு முஆத் அவர்கள் : "நான் ஷாமுக்குச் சென்ற போது அம்மக்கள் தமது மதகுருக்கள் மற்றும் துறவிகளுக்கு ஸுஜூது செய்வதைக் கண்டேன். அதை உங்களுக்கும் செய்ய வேண்டுமென ஆசை கொண்டேன்" என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் : "நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்" என்றார்கள். (ஆதாரம் : இப்னுமாஜா 1853).
ஹதீஸின் கருத்து பற்றி உமது ஆசிரியருடன் கலந்துரையாடவும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஸுஜூது செய்வதைத் தடுத்ததற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
முதலாவதாக : நபி (ஸல்) அவர்களது உரிமைகளில் அளவுகடந்து செல்வதன் வெளிப்பாடுகள்:
நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதில் அளவுகடந்து செல்லல் :
நபி (ஸல்) அவர்கள் தன்னை அளவுக்கதிகம் வர்ணித்துப் புகழ்வதை எமக்கு எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் இது எல்லை மீறலுக்கு செல்வதற்கு இட்டுச் செல்லும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "கிறிஸ்தவர்கள் மர்யமின் மகனை (ஈஸாவை) அளவுகடந்து உயர்த்தியதைப் போன்று நீங்கள் என்னை உயர்த்திட வேண்டாம். நானோ அல்லாஹ்வின் அடியானாகத் தான் உள்ளேன். எனவே அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதரும் எனக் கூறுங்கள்". (ஆதாரம் : புஹாரி 3445).
அதற்கான சில உதாரணங்கள் : நபி (ஸல்) அவர்கள் மறைவான விடயங்களை அறிவார் என்றோ, அன்னார் ஒளியினால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்றோ கூறுவது.
நபி (ஸல்) அவர்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடுதல் :
நோயாளிகளைக் குணப்படுத்துதல், பாவமன்னிப்பு போன்ற அல்லாஹ்வால் மாத்திரம் முடியுமானவற்றை நபியவர்களிடம் வேண்டுதல்.
அவ்வாறு அல்லாஹ் அல்லாதோரிடம் கேட்பதை விட்டும் நபி (ஸல்) அவர்கள் எம்மைத் தடுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீர் கேட்டால் அல்லாஹ்விடம் கேள், உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு". (ஆதாரம் : திர்மிதி 2516).
நபி (ஸல்) அவர்கள் மீது சத்தியம் செய்தல் :
அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு சத்தியம் செய்வதை விட்டும் நபி (ஸல்) அவர்கள் எம்மைத் தடுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் உங்களது பெற்றோர்களைக் கொண்டு சத்தியம் செய்வதை விட்டும் உங்களைத் தடுக்கின்றான். சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது செய்யட்டும், அல்லது மௌனித்திருக்கட்டும்". (ஆதாரம் : புஹாரி 6646).
நபி (ஸல்) அவர்கள் விடயத்தில் குறைவைத்தலின் வெளிப்பாடுகள் :
நபி (ஸல்) அவர்களைக் குறைவாக மதிப்பிடுதல் :
சிலர் நபி (ஸல்) அவர்களைத் தமது உள்ளங்களில் மகத்துவப்படுத்துவதில்லை, அவர்களின் நேர்வழியை மதிப்பதில்லை, அன்னாரைப் பற்றிப் பேசும் போது ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதில்லை, சில மனிதர்கள் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவில் இடம்பெற்றுள்ள நபியவர்களின் கட்டளைகளைக் கொச்சைப்படுத்துவர்.
ஏனைய மக்களுடன் நடப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்களுடன் நடப்பதையோ, ஏனையோருடன் பேசுவதைப் போன்று அன்னாருடன் பேசுவதையோ அல்லாஹ் எமக்குத் தடுத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்". (நூர் : 63).
நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவை மறுத்து, அன்னாரைப் பின்பற்றாதிருத்தல் :
இது பகுத்தறிவுடன் முரண்படுவதென்றோ, நடைமுறைக்குப் பொருந்தாது என்றோ நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை மறுப்பதன் மூலம் உருவாகின்றது. அதேபோன்றுதான் நபி (ஸல்) அவர்களின் நேர்வழியை ஏற்காமல் பெருமை அடித்தல், மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டோ, சமகால பிரபலங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்காகவோ நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட்டுவிடல்.
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் இருத்தல்:
நபி (ஸல்) அவர்களுக்கு நாம் நிறைவேற்ற முடியுமான விடயங்களில் அதிகுறைந்தளவே அன்னார் மீது ஸலவாத் கூறுவதுதான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவரிடம் எனது பெயர் கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் கூற வில்லையோ அவனே உலோபியாவான்". (ஆதாரம் : திர்மிதி 3546).
நபி (ஸல்) அவர்களது வரலாற்றையும், சிறப்புகளையும் அறியாதிருத்தல் :
நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை, வரலாறு, சிறப்புகளை அறிவது ஒரு முஸ்லிமிடம் அன்னார் மீதான நேசம், மரியாதை, ஒழுக்கம் என்பவற்றையும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதலையும் அதிகரிக்கின்றது.
மூன்றாவதாக : அஹ்லுல் பைதினர் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல்:
அஹ்லுல் பைதினரை மதித்து, கௌரவப்படுத்துவது நபி (ஸல்) அவர்களை மகத்துவப்படுத்துவதின் பரிபூரணத்தில் உள்ளதாகும். அஹ்லுல் பைதினரில் யாரையும் ஒரு முஸ்லிம் குறைகூறுவதோ, ஏசுவதோ, சபிப்பதோ கூடாது. நபி (ஸல்) அவர்கள் அதனை விட்டும் எம்மைத் தடுத்துள்ளார்கள்.
அதேபோன்றுதான் அஹ்லுல் பைதினர் விடயத்தில் அளவுகடந்து செல்வதும் கூடாது. அதன் வடிவங்களில் சில :
அஹ்லுல் பைதினர் தவறுகளிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் எனப் புனிதப்படுத்திக் கூறுதல் :
இது அல்குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் முரணானதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர் அத்தவறுகளிலிருந்து பாவமீட்சி பெறுவோராகும்". (ஆதாரம் : திர்மிதி 2499, அஹ்மத் 13049).
அவர்கள் மறைவான விடயங்களை அறிவார் என வாதிடுதல் :
இது அல்குர்ஆனுக்கு மாற்றமாகும். மறைவான விடயத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார். சில மறைவான விடயங்களை அறிவித்து சில நபிமார்களுக்கு இறைச் செய்தி இறங்கலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர". (அல்ஜின் : 26- 27).
அவர்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடுதல் :
மேலும் நலவைப் பெறவோ, தீங்கைத் தடுக்கவோ அவர்களை அழைத்தல். பிரார்த்தனை ஒரு வணக்கம் என்ற வகையில், அல்லாஹ்வால் மாத்திரம் முடியுமான விடயங்களில் அவனல்லாதோரை அழைத்தல் இணைவைப்பாகும்.
அவர்களுடைய சமாதிகளை வலம் வருதல் மற்றும் அவற்றுக்கு ஸுஜூது செய்தல் :
ஸுஜூது என்பது ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ் அல்லாதோருக்கு செலுத்த முடியாது. வலம் வருதல் புனித கஃபாவுக்கு மாத்திரம் பிரத்தியேகமானதாகும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : செயல்களுக்கு மத்தியில் வேறுபடுத்துவேன் :
பின்வருவனவற்றில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான செயலின் முன் ஒரு அடையாளம் இடவும் :
செயல் அளவு கடத்தல் குறைவைத்தல் ஸுன்னா
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பதற்கு பதிலாக (ஸ) என்று எழுதுதல். குறைவைத்தல்
மலசல கூடத்திற்குச் செல்லும் துஆவைப் பரிகாசித்தல். குறைவைத்தல்
உணவு, பானம், உடை என்பவற்றில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுதல். ஸுன்னா
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்திருப்பது நபி (ஸல்) அவர்களுக்காக என்று கூறுவது. அளவு கடத்தல்.
காலை, மாலை திக்ருகளில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுதல். ஸுன்னா
ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள் என ஒருவர் நம்பிக்கை கொள்கின்றார். ஸுன்னா
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் மறைவான விடயங்களை அறிகின்றார் என ஒருவர் நம்பிக்கை கொள்கின்றார். அளவுகடத்தல்.
ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதை நினைவுகூர்ந்து ஒரு வாலிபர் தன்னையே காயப்படுத்திக் கொள்கின்றார். அளவு கடத்தல்
செயற்பாடு (2) ஆராய்ந்து முடிவுகளைப் பெறுகிறேன்.
உங்கள் ஆசிரியர் மற்றும் உங்கள் குழுவின் ஒத்துழைப்புடன், பின்வரும் இறை வார்த்தைகளில் அடங்கியுள்ள நபி (ஸல்) அவர்களுடனான ஒழுக்கத்தின் வெளிப்பாடுகளைப் பிரித்தெடுக்கவும் : "நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்". "முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்". (ஹுஜுராத் : 1,2).
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
நபி (ஸல்) அவர்களது உரிமைகளில் அளவுகடந்து செல்வதன் ஒரு வெளிப்பாடு :
(நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசித்தல் - அவரது பெயரால் சத்தியம் செய்தல் - அவர் மீது காலை மற்றும் மாலையில் ஸலவாத் கூறுதல்)
நபி (ஸல்) அவர்கள் விடயத்தில் குறைவைத்தலின் ஒரு வெளிப்பாடு:
(அவரது வாழ்க்கை வரலாற்றை அறியாதிருத்தல் - அவரைப் பெயர் சொல்லி அழைப்பதைத் தவிர்த்தல் - அவர் மனிதர் என்று கூறுதல்)
நபி (ஸல்) அவர்களைக் கொண்டு பாதுகாப்புத் தேட முடியாது, ஏனெனில் அது :
(இறைநேசர்களுக்கு மாத்திரமானது - ஒரு கெட்ட பழக்கம் - அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கம்)
கேள்வி 2 : பின்வரும் வாக்கியங்களை பொருத்தமான வார்த்தைகளுடன் முடிக்கவும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை எல்லைமீறிப் புகழ்வதைத் தடைசெய்தார்கள், அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ............................ ...
வலம் வருதல் .......................................... க்கு மாத்திரம் சொந்தமானது.
ஸுஜூது செய்வது .................................க்கே தவிர வேறு யாருக்கும் செலுத்த முடியாது.
அஹ்லுல் பைதினர் விடயத்தில் அளவு கடந்து செல்வதன் வடிவங்களுள் உள்ளவை : ............................. , ...................................
கேள்வி 3 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அல்லது அவரைப் பற்றி பேசும் போது கண்ணியமாக நடந்துகொள்வது அவசியம் என்பதற்கான ஒரு ஆதாரத்தை எழுதவும்.
கேள்வி 4 : பின்வருவனவற்றிற்கான காரணங்களைக் கூறவும் :
அஹ்லுல் பைதினர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்.
அல்லாஹ்வுக்கு மாத்திரம் முடியுமான விடயங்களில் அஹ்லுல் பைதினரைக் கொண்டு பாதுகாப்புத் தேடுவது இணைவைப்பாகும்.
பாடம் நான்கு: நபித்தோழர்களின் சிறப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள்
செயன்முறை நோக்கங்கள்;
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
நபித்தோழர் என்றால் யார் என்பதை வரையறுக்க வேண்டும்.
நபித்தோழர்களின் சிறப்புகளுக்கு ஆதாரம் கூற வேண்டும்.
சில நபித்தோழர்களின் தனிச் சிறப்புகளை சுருக்கமாகக் கூற வேண்டும்.
முஸ்லிம்கள் நபித்தோழர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் பட்டியலிட வேண்டும்.
நபித்தோழர்களை- குறிப்பாக நேர்வழி பெற்ற கலீபாக்களை- பின்பற்ற வேண்டும்.
நபித்தோழர்களின் கண்ணியத்தை மதிக்கவேண்டும்.
அறிமுகம்:
ஈமான் கொண்ட நிலையில் நபி (ஸல்) அவர்களை சந்தித்து, இஸ்லாத்தில் மரணித்த அனைவரும் நபித்தோழர் ஆவர்.
நபித்தோழர்களின் சிறப்புகள்
நபித்தோழர்களுக்கு பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் சில :
நபித்தோழர்களின் சிறப்புகள் :
நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொள்ளுதல் எனும் சிறப்பை அவர்களுக்கு வழங்கி, சுவனத்தையும் நற்செய்தியாகக் கூறியுள்ளான்.
அவர்களுடைய பண்பாடுகள், செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளான்.
நபித்தோழர்கள்தான் இந்த சமூகத்தின் மிகச் சிறந்தவர்கள்.
அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் எமக்கு அறிவித்தவர்கள் அவர்களே.
நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் இணைந்து அறப்போரில் ஈடுபட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொள்ளுதல் எனும் சிறப்பை நபித்தோழர்களுக்கு வழங்கி, சுவனத்தையும் நற்செய்தியாகக் கூறியுள்ளான்:
அல்லாஹ் கூறுகிறான் : "இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்கள் மற்றும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப் படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்". (தௌபா : 100).
அவர்களுடைய பண்பாடுகள், செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளான் :
அல்லாஹ் கூறுகிறான்: "முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப் பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர் களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்க ளுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) இருக்கும் ஸுஜூதுடைய அடையாளமாகும்". (பத்ஹ் : 29).
நபித்தோழர்கள்தான் இந்த சமுதாயத்தின் மிகச் சிறந்தவர்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "மக்களில் சிறந்தவர்கள் எனது காலத்தில் வாழும் தோழர்களாகும், பின்னர் அவர்களை அடுத்து வரும் சந்ததியினராகும், பின்னர் அவர்களை அடுத்து வரும் சந்ததியினராகும்". (ஆதாரம் : புஹாரி 2652, முஸ்லிம் 2533).
அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் எமக்கு அறிவித்தவர்கள் நபித்தோழர்களாவர், அவர்கள் ஊடாகவே நாம் இஸ்லாத்தைக் கற்றோம்.
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் இணைந்து அறப்போரில் ஈடுபட்டார்கள். தமது மார்க்கத்தைப் பாதுகாக்க துன்பம், சிரமங்களை சகித்துக் கொண்டார்கள்.
முஸ்லிம்கள் நபித்தோழர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
முஸ்லிம்கள் நபித்தோழர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதிகமுள்ளன, அவற்றுள் முக்கியமானவை :
நபித்தோழர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்:
அவர்களை நேசித்து, மதித்து, கண்ணியப்படுத்த வேண்டும்.
அவர்களுக்காக பிரார்த்தித்து, பாவமன்னிப்புக் கோரி, இறைதிருப்திக்காக பிரார்த்திக்க வேண்டும்.
அவர்களைத் தூற்றுவது, ஏசுவது, குறைத்து மதிப்பிடுவது ஹராமாகும்.
அவர்களுடைய பொதுவான சிறப்புகளையும், தனிநபர் சிறப்புகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவர்களுக்காகப் பேசவும், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவோருக்கு மறுப்புக் கொடுக்கவும் வேண்டும்.
அவர்களை நேசித்து, மதித்து, கண்ணியப்படுத்த வேண்டும் :
ஏனெனில் இஸ்லாத்தின்பால் அவர்கள் முந்திக் கொண்டவர்கள். அவர்களே அறப்போர் புரிந்து, இப்பூமியில் இஸ்லாத்தைப் பரவச் செய்தவர்கள்.
அவர்களுக்காக பிரார்த்தித்து, பாவமன்னிப்புக் கோரி, இறைதிருப்திக்காக பிரார்த்திக்க வேண்டும்:
ஏனெனில் அல்லாஹ்வே முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளைப் பாராட்டியுள்ளான். அவன் கூறுகின்றான் : "அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக" எனக் கூறுவார்கள். (ஹஷ்ர் : 10).
அவர்களைத் தூற்றுவது, ஏசுவது, குறைத்து மதிப்பிடுவது ஹராமாகும் :
ஏனெனில் இது பெரும்பாவங்களில் உள்ளதாகும், நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "எனது தோழர்களைத் தூற்றாதீர்...." (புஹாரி 3673, முஸ்லிம் 2540).
அல்குர்ஆன், ஸுன்னாவில் இடம்பெற்றுள்ள அவர்களுடைய சிறப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் :
அது பொதுவான அல்லது தனிநபர் சிறப்புகளாக இருக்கலாம். அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை அறிவதில் கவனம் செலுத்துதல், அவர்களது வரலாறுகளைப் படித்து, முஸ்லிம்களுக்கு மத்தியில் அவற்றைப் பரவச்செய்தல், நற்செயல்களில் அவர்களைப் பின்பற்றுதல் போன்றனவும் இதில் அடங்கும்.
அவர்களுக்கு சார்பாகப் பேசி, அவர்களைக் குறைத்து மதிப்பிடுவோருக்கு மறுப்புக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் அவர்களைக் குறைகூறுவது மார்க்கத்தைக் குறைகூறுவதாகும், அவர்கள்தான் எமக்கு நபியவர்களைத் தொட்டும் மார்க்கத்தை அறிவித்தார்கள்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) : வாசித்து, இணைக்கிறேன்.
அல்லாஹ் கூறுகிறான் : "தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளியேற்றப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர். முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்)கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்கள் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர். "அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக" எனக் கூறுவார்கள். (அல்ஹஷ்ர் : 8 - 10).
முந்தைய வசனங்களின் அடிப்படையில், குழு (A) இலிருந்து ஒவ்வொரு வாசகத்தையும் குழு (B) இல் அதற்குப் பொருத்தமானதுடன் இணைக்கவும்:
வாசகம் (A)
(B) அதற்குப் பொருத்தமான வசனம்
முஹாஜிர்களின் பண்புகளும் நற்கருமங்களும்.
முஹாஜிர்களை நேசிப்பார்கள்- தம்மை விடப் பிறரை முற்படுத்துவார்கள்.
அன்ஸாரிகளின் பண்புகள் மற்றும் நற்செயற்கள். அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக!
முஸ்லிம்கள், முஹாஜிர்களுக்கும் அன்ஸார்களுக்கும் துஆ செய்தமை - அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் திருப்பொருத்தத்தையும் தேடுகின்றார்கள் - அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் உதவி செய்கின்றார்கள் - உண்மை
செயற்பாடு (2) மற்றவர்களுடன் ஒத்துழைத்து, கண்டறிவேன்:
உங்கள் சக நண்பரின் ஒத்துழைப்புடன், பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் நபித்தோழர்களின் நற்பண்பைக் கண்டறியவும் :
ஆதாரம் /நபித்தோழர்களின் சிறப்பு
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "எனது சமூகத்தில் ஹராம் ஹலாலை மிக அறிந்தவர் முஆத் பின் ஜபலாகும்". (ஆதாரம் : அஹ்மத் 12904). முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களது அறிவின் சிறப்பு.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களிடம் அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது, அல்லது உங்களை மன்னித்து விட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லாவா?". (ஆதாரம் : புஹாரி 3983, முஸ்லிம் 2494).
பத்ர் போராளிக்கான பாவமன்னிப்பு.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
நபித் தோழர்கள் என்போர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமகாலத்தவர்களாக இருந்தவர்கள் ஆகும். (×)
அல்லாஹ் முஹாஜிர்களின் உளத்தூய்மை மற்றும் மார்க்கத்திற்காக உதவி செய்ததைப் பாராட்டியுள்ளான். (✓)
ஒரு முஸ்லிம், நபித்தோழர்கள் தவறிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என நம்ப வேண்டும். (×)
அல்லாஹ் அன்ஸாரிகளை தன்னலமற்றவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வர்ணித்துள்ளான். (✓)
கேள்வி 2 : பின்வருவனவற்றில் ஒவ்வொன்றும் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
அல்லாஹ் கூறுகிறான் : “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக". இது குறிப்பது :
(நபித்தோழர்களின் அதிக வணக்க வழிபாடுகள் - நபித்தோழர்களுக்காகப் பிரார்த்தனை செய்வது விரும்பத்தக்கது - தோழர்களை இழிவுபடுத்துதல் ஹராமானது)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மக்களில் சிறந்தவர்கள் எனது காலத்தில் வாழும் தோழர்களாகும். பின்னர் அவர்களை அடுத்து வரும் சந்ததியினராகும்". இது குறிப்பது :
(நபித்தோழர்களின் அதிக எண்ணிக்கை - நபித் தோழர்கள் சுவானவாதிகள் என்ற நற்செய்தி - இந்த சமூகத்தில் நபித்தோழர்களின் சிறப்பு)
கேள்வி 3 : நபித்தோழர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் மூன்றை விளக்கவும்.
பாடம் ஐந்து : நிய்யதும் அதன் முக்கியத்துவமும்
செயன் முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹதீஸை மனனம் செய்ய வேண்டும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சுருக்கமாகக் கூற வேண்டும்.
நபிமொழியில் உள்ள கலைச் சொற்கள் சிலதின் கருத்தை விளக்க வேண்டும்.
நபிமொழியின் சாரம்சத்தை விளக்க வேண்டும்.
ஒவ்வொரு செயலிலும் உளத்தூய்மையின் பெறுமதியை உணர வேண்டும்.
மோசமான எண்ணத்தினால் முஸ்லிமின் மார்க்கத்திற்கு உள்ள விபரீதத்தை பிறருக்கு எச்சரிக்க வேண்டும்.
அறிமுகம்
ஒரு மஸ்ஜிதின் இமாம் குர்ஆனை மனப்பாடம் செய்ய ஒரு கட்டிடத்தை நிறுவ நன்கொடை கேட்டார். உங்கள் அண்டை வீட்டாரில் இருவர் மக்கள் முன்னிலையில் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கினர். முதலாமவரின் எண்ணம் அயலவர்கள் தன்னை தனவந்தராக போற்ற வேண்டும் என்பதாகவும், இரண்டாமவரின் எண்ணம், மக்கள் அவரைப் பின்பற்றி ஒரு பெரிய தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்பதாகவும் இருந்தது.
இந்த நிலைமை பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? ஒரே மாதிரி செயலைச் செய்யும் அவ்விருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
ஹதீஸ் வசனம் :
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் பின் கத்தாப் (ரலி) கூறினார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும் என்றிருந்தால். அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'. (ஆதாரம் : புஹாரி 1, முஸ்லிம் 1907).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
செயல்கள் ஒரு முஸ்லிம் மேற்கொள்ளும் சொல், செயல் அனைத்தையும் உள்ளடக்குகின்றது.
நிய்யத் அச்செயலை செய்யவதற்கான நோக்கமும் உந்துசக்தியுமாகும்.
“அவரது ஹிஜ்ரத்” இங்கு நாடப்பட்ட ஹிஜ்ரத் பயணம்: மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம்பெயர்ந்து செல்லல்.
“உலகை அடைவதற்காக” உலக நலன்களை அல்லது பயனை அடைவதற்காக.
“அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்,” அதாவது அவரது ஹிஜ்ரத் பயணத்தின் முடிவும், அதற்கான கூலியும் அப்பயணத்திற்கு அவரைத் தூண்டிய காரணியிலேயே தங்கியுள்ளது.
அறிவிப்பாளர் அறிமுகம் :
குரைஷிக் கோத்திரத்தின் பனூ அதிய் குடும்பத்தைச் சேர்ந்த அல்பாரூக் என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபூ ஹப்ஸ் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்.
நபித்துவம் ஆறாம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார்கள். இவருடைய பலம், வீரம், மக்காவில் இவருக்குள்ள செல்வாக்கு காரணமாக இவரது இஸ்லாம் அங்குள்ள பலவீனமான முஸ்லிம்களுக்கு உதவியாக அமைந்தது.
இரண்டாவது கலீபாவாகவும், சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட பத்துப் பேரில் ஒருவராகவும் உள்ளார்.
ஹிஜ்ரி 23ம் ஆண்டு, துல்ஹஜ் மாதம் இறுதியில் தொழுது கொண்டிருக்கும் போது இவர்கள் குத்தப்பட்டு, அதன் பின்னர் வீர மரணம் எய்தினார்கள்.
ஹதீஸின் சாரம்சம் :
எண்ணம் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதை இந்நபிமொழி வலியுறுத்துகின்றது. அல்லாஹ் அவனுக்கு மாத்திரம் தூய்மையாகச் செய்யப்பட்டவற்றைத் தவிர, வேறு எதனையும் ஏற்க மாட்டான். ஹிஜ்ரத் மற்றும் இதர செயல்கள் மூலம் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துவதாக அவனது எண்ணம் இருந்தால் அவனது செயல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அல்லாஹ்விடம் அவனுக்குக் கூலியுண்டு.
ஹிஜ்ரத் மற்றும் இதர செயல்கள் மூலம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதோ, பணம் சம்பாதிப்பதோ அல்லது வேறு உலக விடயங்களோ நோக்கமாக இருந்தால் அவனின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும். மறுமையில் அந்த ஹிஜ்ரத் பயணத்திற்கோ, நற்செயலுக்கோ கூலி வழங்கப்பட மாட்டார்.
மேலும், அல்லாஹ்வின் திருமுகத்தை நாடாமல் வணக்கம் நிறைவேற்றும் அனைவரும் தம்மை அல்லாஹ்வின் கோபத்திற்கு உட்படுத்திக் கொள்கின்றனர்.
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனையாகும்.
நற்செயல் புரியும் போது நல்ல எண்ணத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
நற்செயலுக்குரிய கூலியை ஒரு முஸ்லிம் அவனது உளத்தூய்மைக்கேற்ப பெற்றுக் கொள்வான்.
நற்செயல் குறைவாக இருந்தாலும் நல்ல எண்ணம் அதன் கூலியைப் பெரிதாக்கித் தரும்.
தீய எண்ணம் நற்செயலை வீணாக்கி, அதன் கூலியையும் போக்கி விடும்.
உண்மையான முஸ்லிம் தனது அனைத்து செயல்களிலும் உளத்தூய்மையைக் கடைபிடிப்பான்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : நான் பரிந்துரைக்கிறேன்:
நற்செயல்கள் ஏற்கப்படவும், அதன் கூலி அதிகரிக்கப்படவும் எண்ணம் ஒரு நிபந்தனை என்பதை அறிந்தீர். பின்வரும் செயல்களுடன் இணையப் பொருத்தமான நல்ல எண்ணத்தைப் பரிந்துரைக்கவும் :
நற்செயல் எண்ணம்
மனைவி, குழந்தைகளுக்கு செலவு செய்யும் நோக்கில் தொழில் புரிதல்.
அல்குர்ஆன் மனன வகுப்பொன்றை நடத்துவதில் பங்கெடுத்தல்.
கண்ணியமிக்க நபித்தோழர்களின் வாழ்க்கை பற்றி கட்டுரையொன்று எழுதுதல்.
மனிதன் தனது போசாக்கு, உடலாரோக்கியம் என்பவற்றில் கவனம் செலுத்துதல்.
செயல்பாடு 2: பகுப்பாய்வு செய்து விரிவாக்குவேன்:
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்". (ஆதாரம் : முஸ்லிம் 1914).
இந்த ஹதீஸின் அடிப்படையில்:
அம்மனிதன் செய்த வேலை என்ன?
இந்த செயலின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன ?
அல்லாஹ்வுக்காக என்ற நல்ல எண்ணத்துடன் இந்த நற்செயல் இணைந்ததால் கிடைக்கப்பெற்ற முடிவு என்ன?
செயல்பாடு (3) : வாசித்து பிரித்தெடுப்பேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக இந்த உலகமே நால்வருக்குத் தான் :
ஓர் அடியானுக்கு, அவனுக்கு அல்லாஹ் செல்வத்தையும், அறிவையும் கொடுத்தான். அவ்விடயத்தில் அவன் தனது இரட்சகனை அஞ்சி, உறவுகளுடன் சேர்ந்திருந்து, அதில் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையை முறையாகச் செய்கின்றான். இவன் மிகச்சிறந்த இடத்தில் இருப்பான்.
மற்றுமோர் அடியானுக்கு அல்லாஹ் அறிவைக் கொடுத்தான். செல்வத்தைக் கொடுக்கவில்லை, அவன் உண்மையான எண்ணத்துடன், “எனக்கு செல்வமிருந்தால் இன்ன நற்செயலை செய்திருப்பேன்” எனக் கூறுவான். அவன் தனது எண்ணத்துற்கேற்ப இருப்பான். இருவரது கூலியும் சமமாகும்.
மற்றுமோர் அடியானுக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்துள்ளான், அறிவைக் கொடுக்கவில்லை, அவன் அறிவின்றி தனது செல்வத்தில் அத்துமீறிச் செல்கிறான். அதில் தனது இரட்சகனுக்கு அஞ்சவில்லை, உறவனிரைச் சேர்ந்து நடக்கவில்லை. அதில் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து செய்யவில்லை. இவன் மிக மோசமான இடத்திலிருப்பான்.
மற்றுமோர் அடியானுக்கு, அல்லாஹ் செல்வத்தையோ, அறிவையோ கொடுக்கவில்லை. “எனக்கு செல்வம் இருந்திருந்தால் இன்னாரைப் போன்று இன்னின்னவெல்லாம் செய்திருப்பேன்” என்று (பாவம் செய்யும் ஆசையுடன்) கூறுவான். அவன் தனது எண்ணத்திற்கேற்ப இருப்பான். இருவரது பாவமும் சமமாகும். (ஆதாரம் : அஹ்மத் 18031, திர்மிதி 2325).
ஹதீஸிலிருந்து பின்வருவனவற்றிற்கான ஆதாரங்களைக் கண்டறியவும் :
யாராவது நன்மையைச் செய்ய உறுதியாக எண்ணி, அதனைச் செய்ய முடியவில்லை என்றால், அவனுக்கு ஒரு கூலி எழுதப்படும்.
யாராவது பாவத்தைச் செய்ய உறுதியாக எண்ணி, அதனைச் செய்ய முடியவில்லை, அவனுக்கு ஒரு பாவம் எழுதப்படும்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புப் பெயர் :
(அஸ்ஸித்தீக் - அல்பாரூக் - அல்ஆதில்)
எண்ணம் என்பது செயலுக்குப் பின்னாலுள்ள நோக்கமாகும். அது தொடர்புபடுவது :
(கடமைகளுடன் - ஸுன்னத்களுடன் - அனைத்து செயல்களுடனும்)
அல்லாஹ்வின் திருமுகத்தை நாடாமல் ஒரு முஸ்லிம் நற்செயல் புரிந்தால் அவன் :
(பாவியாவான், அவனது செயலும் ஏற்கப்பட மாட்டாது - அவனுடைய நல்ல பிரதிபலன்களுக்கு கூலி வழங்கப்படும் - ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது, பாவியாகவும் மாட்டான்)
கேள்வி 2: பின்வரும் ஹதீஸை பூரணப்படுத்துக :
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் .................................................................. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) ............................................................. நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் ............................................................................. அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும் என்றிருந்தால். அவரின் ஹிஜ்ரத் ................................................................'.
கே 3 : பின்வரும் ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஒரு கருத்துரை எழுதவும்:
நற்செயல்கள் ஏற்கப்பட நல்ல நோக்கம் மாத்திரம் போதாது.
தவறான எண்ணமுள்ளவன் உலகில் ஏமாற்றமடைந்தவன், மறுமையில் நஷ்டமடைந்தவன்.
நல்ல எண்ணம் நற்செயலின் கூலியைப் பெரித்தாக்கித் தரும்.
பாடம் ஆறு : நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் அவசியம்.
செயன் முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சுருக்கமாகக் கூற வேண்டும்.
நபிமொழியில் உள்ள கலைச் சொற்கள் சிலதின் கருத்தை விளக்க வேண்டும்.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குவதன் விபரீதத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பித்அத்தின் வகைகளுக்கு உதாரணம் கூற வேண்டும்.
சமூகத்தில் நபிகளாரின் ஸுன்னாவைப் பரவச்செய்ய முயற்சிக்க வேண்டும்.
சமூகத்தில் மூடநம்பிக்கை பரவுவதில் பித்அத்தின் தாக்கத்தை உணர வேண்டும்.
அறிமுகம்
செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே என்ற நபிமொழியில் செயல்கள் ஏற்கப்படுவதற்கான முதலாவது நிபந்தனையான, உளத்தூய்மை பற்றிக் கூறப்பட்டது. இப்பாடத்தில் செயல்கள் ஏற்கப்படுவதற்கான இரண்டாவது நிபந்தனை விளக்கப்படுகின்றது. அது, அச்செயல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு நேர்படுவதாகும்.
ஹதீஸ் :
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறினார்கள் : 'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை தட்டப்பட்டதாகும்'. (ஆதாரம் : புஹாரி 2697, முஸ்லிம் 1718).
சொற்களுக்கான பொருள்: சொல் பொருள்
உருவாக்கினான் புதிதாக ஒன்றை உருவாக்கினான்
எமது இந்த விடயம் மார்க்க விடயம். அதாவது, வணக்கங்கள், அடிப்படைக் கொள்கைகள், சட்டதிட்டங்கள் அனைத்துமாகும்.
தட்டப்பட்டதாகும் நிராகரிக்கப்படும், ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, கூலியும் வழங்கப்படமாட்டாது.
அறிவிப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு :
நபி (ஸல்) அவர்களின் மனைவியான, விசுவாசிகளின் அன்னையார் ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலி) அவர்களாவார். இவர் அஸ்ஸித்தீகா எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.
ஹிஜ்ரத்திற்கு ஒன்பது வருடங்களுக்கு முன் பிறந்து, சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றார்கள். ஹிஜ்ரி 58ல் மரணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கன்னிப்பெண்ணாக இவரை மாத்திரமே திருமணம் செய்தார்கள். அன்னாரது மனைவியரில் இவர்களே அன்னாருக்கு மிக நேசத்திற்குரியவராக இருந்தார்கள்.
தர்மம், கொடையில் பிரபலமாக இருந்ததுடன், மக்களில் சிறந்த சட்டமேதையாகவும், கூரிய கருத்துடையவராகவும் இருந்தார்கள். நபித்தோழர்கள் இவர்களிடம் மார்க்க சட்டங்கள் பற்றி கேட்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஹதீஸின் சாரம்சம் :
இத்தூய மார்க்கத்தில் துணிவு கொள்வதை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அன்னார் காட்டித்தராத புதிய விடயத்தைக் கொண்டு மார்க்கம் என்ற பெயரில் அல்லாஹ்வை வணங்குபவரின் அச்செயல் நிராகரிக்கப்படும், ஏற்கப்படமாட்டாது எனக் கூறியுள்ளார்கள்.
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
மார்க்கத்தில் புதிதாக பித்அத்களை உருவாக்குவது ஹராமாகும்.
மார்க்கத்தில் அடிப்படையில்லாத எந்தவொரு செயலும் ஏற்கப்படமாட்டாது.
பித்அத்தையும், அதன் விபரீதத்தையும் எச்சரித்தல்.
ஸுன்னா, நபிவழியைப் பேணுவதில் அக்கறை செலுத்த ஊக்குவித்தல்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): எனது அறிவை ஆழமாக்குவேன் :
நபி (ஸல்) அவர்கள் தனது குத்பாக்களில் பின்வருமாறு கூறுவார்கள் : “வார்த்தைகளில் மிக உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டல்களில் மிகச் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும். விடயங்களில் மிகக் கெட்டது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், பித்அத்கள் அனைத்தும் வழிகேடாகும்". (ஆதாரம் : நஸாஈ: 1578)
ஹதீஸைச் அவதானித்த பிறகு:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு சத்தியப் பாதையையும் அசத்தியப் பாதையையும் வேறுபடுத்திக் காட்டினார்கள் என்பதை விளக்கவும்.
நபியவர்கள் பித்அத்தை ஏன் வழிகேடென வர்ணித்தார்கள்?
ஒப்படை (2): ஒத்துழைத்து, முன்மொழிவேன் :
பித்அத் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில், மூடநம்பிக்கை மற்றும் அறியாமை பரவுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கின்றது. மேலும் ஒரு பித்அத் சமூகத்தில் தோன்றினால், நபியவர்களின் ஸுன்னாவொன்றை சமூகம் விட்டுவிடும். ஓர் அறிஞர் பின்வருமாறு கூறுகின்றார் : "எந்தவொரு சமூகமும் தனது மார்க்கத்தில் ஒரு பித்அத்தை உருவாக்கினால் அதன் காரணமாக அவர்களை விட்டும் ஒரு ஸுன்னாவை அல்லாஹ் நீக்கிவிடுவான்".
உங்கள் சமூகத்தில் பரவி வரும் சில பித்அத்களைக் கண்டறிவதில் உங்கள் சக நண்பர்களுடன் ஒத்துழைக்கவும். அவற்றின் எதிர்மறையான விளைவுகளைக் குறிப்பிடவும். அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில வழிகளையும் பரிந்துரைக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவைப் பரவச் செய்வதை விட்டுவிட்டு வணக்கத்தில் ஈடுபட்டார்கள்.
இஸ்லாம் கல்வி முன்னேற்றத்தையும், நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதையும் வரவேற்கின்றது.
பித்அத்கள் சமூகத்தில் அறியாமை மற்றும் மூடநம்பிக்கை பரவ வழிவகுக்கின்றன.
நபி (ஸல்) அவர்களின் "எமது இந்த விடயத்தில்" என்ற வார்த்தை மார்க்க விடயங்களைக் குறிக்கின்றது.
பித்அத் செய்பவர் அல்லாஹ்வை நெருங்குவதில் தனது நல்ல எண்ணத்திற்கான கூலியைப் பெறுவார்.
கேள்வி 3: பாடத்தின் ஹதீஸை நீர் மனனம் செய்து, எழுதவும்.
கே 3 : பித்அத்துகளையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் எதிர்கொள்வது நபிகளாரின் சரியான ஸுன்னாவைப் பரப்புவதன் மூலம் ஆகும். நபிகளாரின் ஸுன்னாவை உமது சமூகத்தில் பரப்புவதற்கான வழிகளை பரிந்துரைப்பதுடன் இதன் முக்கியத்துவத்தைக் கூறவும்.
பாடம் ஏழு : நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸிற்கு செய்த உபதேசம்
செயன் முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
பாடத்தின் ஹதீஸை மனனமிட வேண்டும்.
ஹதீஸில் உள்ள கடினமான சொற்களுக்கான அர்த்தங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு கூறவேண்டும்.
ஹதீஸின் சாராம்சத்தை விளக்க வேண்டும்.
ஹதீஸின் முக்கியமான படிப்பினைகளைத் தெளிவுபடுத்தவும்.
விதியை நம்புவதன் அவசியத்தை உணர வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு:
உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார், அவர் தனது வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். அத்தோடு, அவர் பாவங்களையும் செய்கிறார். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் கவனயீனமாக உள்ளார். பாடத்தின் ஹதீஸ் ஊடாக உமது நண்பருக்கு அறிவுரை கூறவும்.
ஹதீஸ்:
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது பின்வருமாறு கூறினார்கள் : "சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன்! நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன". (ஆதாரம் : அஹ்மத் 2669, திர்மிதி 2516).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள், அவன் உன்னைப் பாதுகாப்பான் : அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துவதைச் செய்வதன் மூலம் அவனைப் பாதுகாத்துக்கொள். அவன் உன்னை ஈருலகிலும் பாதுகாப்பான்.
அவனை உனக்கு முன் கண்டு கொள்வாய்: நல்ல விடயத்தில் உனக்கு உதவிசெய்வான், கெடுதிகளை உன்னை விட்டும் திருப்பி விடுவான்.
பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன: விதிகள் எழுதப்பட்டு விட்டன, எனவே அவை மாற மாட்டாது.
அறிவிப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி), நபி (ஸல்) அவர்களின் சிறியதந்தையின் புதல்வர் ஆவார்.
ஹிஜ்ரத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன் பிறந்தார்கள். இவரது 13வது வயதில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். இவருக்காக நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் : "இறைவா, மார்க்கத்தில் இவருக்கு விளக்கத்தைக் கொடுப்பாயாக, குர்ஆன் விளக்கத்தையும் கற்றுக் கொடுப்பாயாக". (ஆதாரம் : அஹ்மத் 2397).
கல்வி கற்பதில் அதிக சிரத்தை எடுத்து பேரறிஞராக மாறினார். இவருடைய பரந்த அறிவினால் அறிவுக்கடல் என்றும், தப்ஸீர் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் துர்ஜுமானுல் குர்ஆன் (குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்) என்றும் அழைக்கப் பட்டார்கள். நபித்தோழர்களில் இவர்கள்தான் அல்குர்ஆனுக்கு அதிக விளக்கம் கொடுத்தவர்கள் ஆகும்.
தாஇப் நகரில் தனது 70வது வயதில் ஹிஜ்ரி 68ல் மரணித்தார்கள்.
ஹதீஸின் சாரம்சம் :
ஏவல்களை எடுத்து நடப்பதன் மூலமும் விலக்கல்களைத் தவிர்ந்திருப்பதன் மூலமும் நீர் அல்லாஹ்வைப் பேணிப்பாதுகாத்துக் கொள், அவன் இவ்வுலகில் கெடுதிகளை விட்டும், மறுமையில் தண்டனையை விட்டும் உன்னைப் பாதுகாப்பான்.
நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள், அவனே கொடுப்பவன், படைக்கப்பட்ட ஒருவனிடம் அவனால் முடியுமான ஒன்றைக் கேட்டால் அவன் ஒரு காரணியே தவிர காரணகர்த்தா அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொள்.
படைக்கப்பட்ட ஒருவனிடம் அவனால் முடியுமான ஒன்றில் உதவி கேட்டால் அவன் ஒரு காரணியே, உண்மையான உதவி அல்லாஹ்விடம் இருந்துதான் என்பதை அறிந்து கொள்.
ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே எழுதியைதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. உனக்கு ஏற்கனவே எழுதியதைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. அனைத்தும் எழுதப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டு விட்டன.
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
நபி ஸல் அவர்கள் ஒருங்கிணைந்த சொற்றொடர்கள் வழங்கப்பட்டுள்ளார்கள், அவருடைய வார்த்தைகள் குறைவானவை, ஆனால் அதில் ஆழமான மகத்தான கருத்துக்கள் உள்ளன.
ஒரு முஸ்லிமின் ஆளுமையைக் கட்டியெழுப்புவதில் அடிப்படைக் கொள்கைக்குப் பாரிய தாக்கம் இருப்பதால் அதனை சிறார்களுக்குப் போதிப்பது அவசியமாகும்.
அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்தித்து, அவனிடம் தேவைகளை முன்வைத்தல் அவசியமாகும்.
காரணிகளை மேற்கொள்வதுடன் அல்லாஹ்விடம் தவக்குல் வைப்பது அவசியமாகும்.
விதியை நம்புவது கட்டாயமாக உள்ளதோடு, அதேநேரம், அதிலேயே சரணடைந்துவிடுவதும், நலவுகளைப் பெறுவதில் சோம்பலாக இருப்பதும் தவிர்க்கப்படவேண்டும்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): சிந்தித்து இணைப்பேன்:
பாடத்தின் ஹதீஸுடன் பின்வரும் இறை வசனத்தை இணைக்கவும் : "அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்". (ஜின் : 18).
இந்த நபிமொழியும், இறைவசனமும் அல்லாஹ் அல்லாதோரிடம் பிரார்த்திப்பதைத் தடுப்பதில் ஒன்றிணைகின்றது.
செயல்பாடு (2): சிந்தித்து காரணம் கூறுவேன் :
இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள விடயம் பின்வருவோருக்குப் பொருந்துமா? ஏன்?
நியாயமான காரணமின்றி ஓர் இளைஞன் தொழுகையைப் பிற்படுத்துகின்றான்.
நல்லடியார்களின் சமாதிக்குச் சென்று ஒரு நபர் தனது தேவைகளை அவர்களிடம் வேண்டுகின்றான்.
ஒருவர் தனக்கு துன்பமேதும் ஏற்பட்டால் பொறுமையிழந்து, கோபப்படுகின்றான்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
ஒருவன் தனது பிரச்சினைகளைத் தீர்க்க சூனியக்காரனின் உதவியை நாடுகின்றான்.
பிள்ளைகளை அகீதாவின் அடிப்படையில் வளர்ப்பது அவசியமாகும்.
காரணிகளை மேற்கொள்வது தவக்குலுடன் முரண்படுகின்றது.
சிகிச்சை செய்வது விதியை நம்புவதுடன் முரண்பட மாட்டாது.
மரணித்தோரிடம் பிரார்த்திப்பதும், அவர்களிடம் தேவைகளைக் கேட்பதும் இணைவைப்பாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
நபி (ஸல்) அவர்களின் பின்வரும் வார்த்தை : "பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன" சுட்டிக் காட்டுவது :
(விதிகள் எழுதப்பட்டுள்ளமை - அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்டல் - படைப்பினங்களிடம் உதவி தேடுவதை விட்டுவிடல்)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புப் பெயர் :
(பகீஹுல் உம்மா - ஹாபிழுல் ஹதீஸ் - துர்ஜுமானுல் குர்ஆன்)
பாடத்திலுள்ள ஹதீஸிலிருந்து பெறப்படும் பாடம் :
(அல்குர்ஆனை மனனம் செய்வதன் அவசியம் - நபி (ஸல்) அவர்கள் ஒருங்கிணைந்த சொற்றொடர்கள் வழங்கப்பட்டுள்ளார்கள் - மக்கள் ஒன்று சேர்வதை அஞ்சுதல்)
கே 3 : பின்வரும் ஹதீஸில் உள்ள வெற்றிடங்களை நிரப்பவும் :
"நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். .................................................................. நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் ....................................................... உதவி தேடினால் .....................................................................".
கேள்வி 4: பின்வரும் இரு வினாக்களுக்கும் விடை தருக.
"நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான்", மற்றும் "அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய்" ஆகிய நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் மூலம் நாடப்படுவதென்ன ?
நலவும், கெடுதியும் அல்லாஹ்விடமிருந்தே என்ற விடயம் இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் படிப்பினையாகும். இதனைத் தெளிவுபடுத்தவும்.
பாடம் எட்டு : உறுதிப்பாட்டின் அவசியம்.
செயன் முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹதீஸை மனனம் செய்ய வேண்டும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சுருக்கமாகக் கூற வேண்டும்.
உறுதிப்பாட்டின் கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.
மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியை அடையும் வரை உறுதிப்பாட்டைக் கடைபிடித்தல் வேண்டும்.
ஹதீஸ்:
ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “அல்லாஹ்வின் தூதரவர்களே! இஸ்லாத்தில் உங்களைத் தவிர வேறு யாரிடமும் கேட்டிராத ஒரு வார்த்தை எனக்குக் கூறுங்கள்” என்று நான் கேட்டேன். 'நான் அல்லாஹ்வை விசுவாசித்து விட்டேன்’ என்று கூறி அதில் உறுதியாயிருங்கள்!” என அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 38).
சொற்களுக்கான பொருள்:
சொல் பொருள்
உங்களைத் தவிர வேறு யாரிடமும் கேட்டிராத ஒரு வார்த்தை: வேறு யாரிடமும் கேட்கத் தேவைப்படாதவாறு தெளிவான, போதியளவு விளக்கமுள்ள வார்த்தை.
'நான் அல்லாஹ்வை விசுவாசித்து விட்டேன்’ என்று கூறுங்கள் : அல்லாஹ்வை நீர் ஈமான் கொண்டிருப்பதை அதன் அர்த்தங்களை உள்ளத்தில் வரவழைத்து, நாவினால் மொழிந்து பகிரங்கப்படுத்துவீராக.
அதில் உறுதியாயிருங்கள்! : வணக்கங்களைச் செய்வதிலும், பாவங்களைத் தவிர்ந்து கொள்வதிலும் தொடர்ந்து நிலையாய் இருங்கள்.
அறிவிப்பாளர் அறிமுகம் :
அபூ அம்ரா ஸுப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி).
நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்க வந்த தாஇஃப் நகரக் குழுவில் இவரும் இருந்தார்.
நபி (ஸல்) அவர்கள் மற்றும் உமர் (ரலி), அபூ அய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) போன்ற நபித்தோழர்களிடம் இருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தாஇஃப் நகரத்தின் கவர்னராக செயல்பட்டார்கள்.
ஹதீஸின் சாரம்சம் :
இது ஒருங்கிணைந்த சொற்றொடர்களை உள்ளடக்கிய நபிமொழியாகும். ஈமான், இஸ்லாம் ஆகிய இரண்டினதும் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அந்த நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு விடயத்தைப் பற்றி வினவிய போது, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு நாவினால் இஸ்லாத்தை பகிரங்கப்படுத்துமாறும், உள்ளத்தினால் புதிப்பிக்குமாறும், வணக்கங்களைச் செய்வதன் மூலமும், பாவங்களைத் தவிர்ந்து கொள்வதன் மூலமும் ஈமானில் உறுதிப்பாட்டுடன் இருக்க முயற்சிக்குமாறும் ஏவினார்கள்.
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
வணக்கங்களைக் கடைபிடித்து, பாவங்களை விட்டும் தூரமாவதன் மூலம் உறுதிப்பாட்டுடன் இருப்பது அவசியமாகும்.
உறுதிப்பாட்டின் சிறப்பும் மார்க்கத்தில் அதன் சிறப்பும் இங்கு கூறப்பட்டுள்ளது.
பயனுள்ள கல்வியைக் கற்கவும், அதைப்பற்றிக் கேட்கவும் அக்கறை கொள்ளல்.
ஒரு முஸ்லிம் தான் அல்லாஹ்வை ஈமான் கொண்டுள்ளது கொண்டும், தனது மார்க்கமாகிய இஸ்லாத்தை வெளிப்படுத்துவது கொண்டும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
திடகாத்திரம், உண்மை, அல்லாஹ்விடம் உதவி தேடல் போன்றவற்றின் மூலம் உறுதிப்பாட்டுடன் இருக்க முயற்சித்தல்.
செயற்பாடுகள்
செயல்பாடு (1): இணைத்து இறுதிமுடிவைக் கண்டறிவேன் :
அல்லாஹ் கூறுகிறான் : "நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்". (புஸ்ஸிலத் : 30). மேற்கண்ட வசனத்தின் படி உறுதிப்பாட்டுக்கான கூலி என்ன?
செயற்பாடு (2) மற்றவர்களுடன் ஒத்துழைத்து முடிவுகளைப் கண்டறிவேன்:
பின்வரும் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள, உறுதிப்பாட்டைப் பெறக்கூடிய வழிமுறைகளைக் கண்டறியவும்.
ஹதீஸ்கள் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வழிமுறைகள்
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "ஹராமானவற்றைத் அஞ்சித் தவிர்ந்து கொள், மக்களில் பெரும் வணக்கசாலியாவாய்" (ஆதாரம் : திர்மிதி 2305). அல்லாஹ் ஹராமாக்கியதைத் தவிர்ந்து கொள்ளல்.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எனது அடியானுக்கு நான் கடமையாக்கியதை விட எனக்கு மிக விருப்பமான எந்தவொன்றின் மூலமும் அவன் என்னை நெருங்கவில்லை." (ஆதாரம் : புஹாரி 6502). அல்லாஹ் கடமையாக்கியதை நிறைவேற்றல்.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "ஒரு மனிதன் தனது நண்பரின் வழிமுறையிலேயே இருப்பான். எனவே தான் யாருடன் நட்பு கொள்வது என்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்". (ஆதாரம் : திர்மிதி 2378). நல்ல நட்பு
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே, அவர்களில் சிறந்தவர் அத்தவறுகளிலிருந்து பாவமீட்சி பெறுவோராகும்". (ஆதாரம் : திர்மிதி 2499). எப்போதும் பாவமீட்சி பெறல், பாவமன்னிப்புக் கோரலில் நிலைத்திருத்தல்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
மார்க்க கட்டளைகளைப் பற்றிய அறிவு, உறுதிப்பாட்டின் அடித்தளங்களில் ஒன்றாகும். (✓)
வானவர்கள் உறுதிப்பாட்டுடன் இருப்போருக்கு சுவர்க்கத்தைப் பற்றிய நற்செய்தியை வழங்குகிறார்கள். (✓)
தோழமைக்கும் உறுதிப்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. (×)
கேள்வி 2: பாடத்தின் ஹதீஸை நீர் மனனம் செய்தது போன்று எழுதவும்.
கே 3 : ஹதீஸ் பற்றிய உமது புரிதலின் அடிப்படையில், பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்:
உறுதிப்பாட்டின் கருத்தைத் தெளிவுபடுத்தவும்.
உறுதிப்பாடு ஏவப்பட முன்னர், ஈமான் கொள்வது ஏவப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு விளக்குவீர்.
இந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் பயன்கள் இரண்டை எழுதுக.
பாடம் எட்டு : தேவையில்லாதவற்றில் தலையிடுவதைத் தவிர்த்தல்.
செயன் முறை நோக்கங்கள்:
மாணவர்களாகிய நீங்கள் இப்பாடத்தை நிறைவு செய்ததும்: (இப்பாடத்தை கற்றதன் பின் உங்களிடம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.)
ஹதீஸை சுருக்கமாக விளக்கவேண்டும்.
ஹதீஸின் முக்கியமான படிப்பினைகளை தெளிவுபடுத்த வேண்டும் .
முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விடயத்தை விடுவதன் பயன்களைக் கூற வேண்டும்.
உமக்குப் பயனளிக்கும் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
ஹதீஸை மனனம் செய்ய வேண்டும்.
அறிமுகம்:
பின்வரும் சூழ்நிலையைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்: (ஸஈத் அவரது குடும்பம் தொடர்பான தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அவரது நண்பர் அஹ்மத்திடம் கேட்டார், அஹ்மத் கோபமடைந்து: “உங்கள் விவகாரங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சம்பந்தமில்லாதவற்றில் தலையிடாதீர்கள்” என்று கூறிவிட்டார்).
அந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே நடந்ததைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? பாடத்தைப் படித்த பிறகு உமது பதிலை மதிப்பிடவும்.
ஹதீஸ்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'. (ஆதாரம் : திர்மிதி 2317, இப்னுமாஜா 3967).
அறிவிப்பாளர் பற்றிய குறிப்பு:
அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸி என்பது இவரின் முழுப்பெயராகும். இவர் எப்போதும் பூனையை கையில் சுமந்திருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இவருக்கு அபூஹுரைரா (பூனைக் குட்டியின் தந்தை) என புனைப் பெயர் சூட்டினார்கள்.
ஹிஜ்ரி 7ல் இஸ்லாத்தைத் தழுவிய இவர் நபியவர்கள் மரணிக்கும் வரை அவருடனே இருந்துள்ளார்கள்.
இவருக்கு மனன சக்தி அதிகரிக்க வேண்டும் எனவும், முஃமின்களுக்கு அதிக விருப்பத்திற்குரியவராக இவர் இருக்க வேண்டுமெனவும் நபி (ஸல்) இவருக்காக பிராத்தனை செய்துள்ளார்கள். இதன் காரணமாகவே ஸஹாபாக்களில் அதிக மனன சக்தியுள்ளவராகவும், அதிக ஹதீஸ்களை அறிவித்தவராகவும் காணப்படுகிறார். இவர் 5000 இற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
ஸஹாபாக்களில் சிறந்த அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர் அதிகமாக அழைப்புப் பணியிலும், கற்பித்தல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.
ஹிஜ்ரி 59ல் இவர் மரணித்தார்.
ஹதீஸின் சாரம்சம் :
இந்த ஹதீஸ் ஒரு முஸ்லீம் மற்றவர்களுடன் நடந்து கொள்வதில் ஒரு முக்கியமான விதியைக் குறிப்பிடுகிறது. ஒரு முஃமினின் இஸ்லாத்தின் முழுமையின் ஒரு பகுதி, அவர் தனது விவகாரங்களிலும், இந்த உலகத்திலும் மறுமையிலும் அவருக்கு நன்மை பயக்கும் விடயங்களிலும் அக்கறை காட்டுவதும், பிற மக்களின் விடயங்களில் தலையிடாமல் இருப்பதுமென நபி (ஸல்) அவர்கள் எமக்கு வழிகாட்டுகிறார்கள். சமூகம், தமக்குப் பயனளிக்கும், தமது இறைவனிடம் தம்மை நெருக்கமாக்கி வைக்கும் விடயங்களில் ஈடுபடுவேண்டும் இந்த நபிமொழி வழிகாட்டுகின்றது.
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
ஒரு மனிதனது இஸ்லாத்தின் பூரணத்தில் உள்ளது தனக்குத் தேவையானதில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகும்.
முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விடயங்களை விடுவது அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கும்.
வீண், சம்பந்தமில்லாத விடயங்களை விட்டுவிடுவது இஸ்லாம் மற்றும் புத்தியின் பூரணத்துவத்திற்கு சான்றாகும்.
ஒரு முஸ்லிம் தனக்குப் பயனளிக்கும் விடயத்தில் நேரத்தை கழிக்க ஊக்குவித்தல்.
ஹதீஸ் நன்மை செய்வதில் ஒத்துழைப்பதையோ, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அவர்களின் நிலைமைகளைப் பற்றி கேட்பதையோ தடை செய்யவில்லை. ஆனால் மக்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதுதான் இங்கு நாடப்படுகின்றது.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : ஆலோசனை வழங்குவேன்:
ஒரு மனிதன் தனது விடயத்தில் ஈடுபடுவது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஒருவரின் நல்ல செயல்களை அதிகரிக்கிறது. ஈடுபாடு மற்றும் செயற்படல் உணர்வைப் பரப்புகிறது. மேலும் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களைக் குறைக்கிறது. இதனடிப்படையில் பின்வருவோருக்கு ஓர் உபதேசத்தை முன்வைக்கவும் :
ஒரு யுவதி தனது தோழிகள் அணிவதைத் துருவி ஆராய்ந்து, அவர்களது தெரிவுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றாள்.
கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய செய்திகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்தும் ஓர் இளைஞன்.
தெரிந்தோ தெரியாமலோ தனக்கு முன் வரும் எந்த ஒரு தலைப்பையும் விவாதிப்பதில் கலந்து கொள்பவர்.
ஒருவர் தனது அயல் வீட்டாரிடம் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேட்கிறார்.
செயல்பாடு (2) : யோசித்து பதிலளிப்பேன் :
பயனற்றதைக் கைவிடுவதை ஹதீஸிலிருந்து கற்றுக்கொண்டோம். மேலும் இதில் அதுபற்றி சிந்திப்பது, பேசுவது, கேட்பது போன்றவையும் அடங்கும்.
பின்வரும் உறுப்புகள் செய்யும் பயனற்ற செயல்களின் உதாரணங்களை எழுதுவதில் உங்கள் சக நண்பர்களுடன் ஒத்துழைக்கவும் :
உறுப்பு இந்த உறுப்பு செய்யும் பயனற்ற செயல்
புத்தி
கண்
காது
நாவு
செயல்பாடு (3): நான் பார்த்து, விவாதிப்பேன்:
இந்த வீடியோவைப் பார்த்து, அதிலிருந்து பெறப்படும் பயன்களை உங்கள் ஆசிரியரிடம் விவாதிக்கவும்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் ........................................... விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.
(கிடைக்காததை - தேவையற்றதை - விரும்பாததை)
ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதை விட்டுவிடுவதால் கிடைக்கும் பயன் :
(நேர சேமிப்பு - மார்க்க பாதுகாப்பு - நேரத்தையும் மதத்தையும் பாதுகாத்தல்)
நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்காகக் கேட்ட பிரார்த்தனை :
(பலமான மனன சக்தி - அதிக பணம் - ஜிஹாதில் தைரியம்)
நபி (ஸல்) அவர்கள் "இஸ்லாத்தின் சிறந்த காரியம்" என்று கூறியதன் அர்த்தம்:
(இஸ்லாம் பற்றிய அறிவு - இஸ்லாத்தின் பரிபூரணம் - இஸ்லாத்தில் நுழைதல்)
தனக்குத் தேவையற்றதில் மனிதன் ஈடுபடுவதற்கு உதாரணம் :
(நடிகர்களின் தகவல்களைத் தொடர்ந்து பார்த்தல் - நோயாளிகளை நலம் விசாரித்தல் - முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்தல்)
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
பின்வரும் ஹதீஸை சுருக்கமாக விளக்குக : 'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.
நல்ல விடயத்தில் ஒத்துழைப்பது ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையில்லாத விடயத்தை விடுவதற்கு முரணாகாது. இதனைத் தெளிவுபடுத்தவும்.
இந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் பயன்கள் இரண்டை எழுதுக.
இஸ்லாமிய சட்டவியல் பகுதி
முதலாம் பாடம் : ஹலாலான சம்பாத்தியமும் (பொருளீட்டலும்)ஹராமான சம்பாத்தியமும்
கற்றல் பேறுகள் (செயன் முறை நோக்கங்கள்)
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின்
ஹலாலான சாம்பாத்தியம்; ஹராமான சம்பாத்தியம் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
ஹலாலான சம்பாத்தியத்தின் சிறப்பு குறித்த ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
ஹலாலான சாம்பாத்தியம்; ஹராமான சம்பாத்தியம் ஆகியவற்றிற்கிடையிலான வித்தியாசத்தை ஓப்பீடு செய்து காட்ட வேண்டும்.
ஹராமான சம்பாத்தியிலிருந்து விலகி நடத்தல் வேண்டும்.
அறிமுகம் (முற்குறிப்பு :)
மனிதத் தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு காரணமாக- அடிப்படையாக- உள்ள ஹலாலான சம்பாத்தியத்தை (பொருளீட்டலை) இஸ்லாம் ஊக்குவித்து அதனை வலியுறுத்துகிறது. இதன் மூலம் மனிதன் மக்களிடம் யாசித்து அவர்களிடம் தனது சுயகௌரவத்தை இழக்காது கௌரவமாகவும், தன்மானத்துடனும் வாழ முடியும்.
முதலாவது : ஹலாலான சம்பாத்தியம்
ஹலாலான சம்பாத்தியம் என்பது இஸ்லாமிய ஷரீஆ அனுமதித்த வியாபாரம், விவசாயம், கைத்தொழில்,வாரிசுரிமை,உயில் (வஸிய்யத்) போன்ற வழிமுறைகள் மற்றும் வழிகளினூடாக பொருளீட்டுவதைக் -பணத்தை திரட்டுவதைக்- குறிக்கும்.
ஹலாலான சம்பாத்தியத்தின் சிறப்பு:
உலகில் மகிழ்ச்சியும் மறுமையில் வெற்றியும் கிடைப்பதாகும்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகையில் : ''இஸ்லாத்தை ஏற்று,போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி அடைபவன் வெற்றி பெற்றான்''. ஆதாரம்: முஸ்லிம் :1054
'கபாபா' என்பது பிறரிடம் யாசிக்காத அளவிற்கான வாழ்வாதரம் பெற்றிருத்தல் என்பது கருத்தாகும்.
வாழ்வாதாரத்தை தேடி உழைப்பது அல்லாஹ்விடம் நெருக்கத்தை பெற்றுத் தரும் ஒரு வணக்கமாகும் :
ஹலாலான முறையில் பொருளீட்ட உழைப்பதை, பாடுபடுவதை இஸ்லாம் வணக்கமாக ஆக்கியுள்ளது இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியெங்கும் பயணம் செய்யும் ஒரு சிலரும்;. அல்லாஹ்வின் பாதையில் போராடும் இன்னும் சிலரும் இருப்பர்". அல் முஸ்ஸம்மில் :20
ஹராத்தை விட்டும் தூய்மையாக இருத்தல்.(விலகியிருத்தல்) :
ஒரு முஸ்லிம் ஹலாலான முறையில் சம்பாதிப்பதில் ஈடுபடுகையில் அதன் மூலம் அவனின் தேவை நிறைவேறிவிடுவதோடு ஹராமான முறையில் செல்வத்தை தேடுவதை-சம்பாதிப்பதை- விட்டும் அது அவனை தடுத்துவிடும்.
இரண்டாவது : ஹராமான சம்பாத்தியம்
ஹராமான சம்பாதிப்பு என்பது மோசடி, பதுக்கல், இலஞ்சம், சூதாட்டம், வட்டி, ஹராமானவற்றை-தடைசெய்யப்பட்ட பொருட்களை- வியாபாரம் செய்தல் போன்ற இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்காத – வழிமுறைகள் மற்றும் வழிகளினூடாக பணத்தைப் பெற்றுக்கொள்வதை குறிக்கும்.
இஸ்லாமிய ஷரீஆ -அனுமதிக்காத –வுக்கு முரணான சம்பாத்தியங்களுள் சில :
மோசடியும் -இருட்டடிப்பும்- (வியாரப்பொருட்களின் குறைகளை மறைத்து விற்றல் )
அதாவது வியாபாரி குறித்த பொருட்களின் குறையை மறைத்து விற்பது அல்லது அதன் உண்மை நிலைக்கு மாற்றமாக வெளித்தோற்றத்தை காண்பித்து வியாபாரம் செய்வதை இது குறிக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உணவுப்பண்டங்கள் விற்கும் ஒரு மனிதரின் அருகாமையால் கடந்து செல்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த உணவுப்ண்டத்தினுள் கையை இட்டுப் பார்த்தபோது அது ஈரமாக இருப்பதைக் காண்டார்கள் அப்போது அவர்கள் : உணவுப்பொருட்களை விற்பவரே இது என்ன? உணவுப்பொருட்கள் நனைந்துள்ளதே என்று கேட்க அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே இரவு மழைபெய்ததால் நனைந்து விட்டது என்று பதில் கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "மக்கள் தெரிந்து கொள்வதற்காக நனைந்த உணவுப்பொருட்களை மேலால் வைத்திருக்கலாம் அல்லவா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ- ஏமாற்றுகிறாரோ- அவர் எம்மை சார்ந்தவரல்லர்" என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்: 102
மோசடி மற்றும் ஏமாற்றுதலின்- மிகவும் மோசமான கண்டிக்கத்தக்க வடிவங்களில் ஒன்று குறித்த ஒரு தொழிலில் - வேலையில்- தேர்ச்சிபெறாது ஏமாற்றுவதாகும். அல்லது வேண்டுமென்றே அதில் சில குறைபாடுகளை விட்டுவிடுவது, அல்லது முதலாளியின் அறியாமையை சாதகமாகப் பயன்படுத்தி, தான் சரி செய்யாததை சரிசெய்ததாகக் கூறுவது போன்றன இதில் அடங்கும்.
அதிக விலைக்கு விற்றல்:
குறித்த வியாபாரப்பொருளின் விலையை அறியாத ஒருவருக்கு வழமையான விலையை விட அதிகமாக விற்றலையே இது குறிக்கிறது. ஒரு ஆடையின் விலை சாதாரணமாக 100 திர்ஹமாக இருக்கையில் அதனை 200 திர்ஹத்திற்கு விற்பதைக் குறிக்கும்.
பதுக்கல் :
விலை அதிகரிப்பை நோக்காகக் கொண்டு அத்தியவசிப்பொருட்களான உணவு, குடிபானம் போன்றவற்றை மக்களுக்கு கொடுக்காது பதுக்கி அதன் கேள்வி அதிகரிக்கும் போது அதிக விலையில் விற்பதை இது குறிக்கும்.
இலஞ்சம் :
தனக்கு உரிமையற்ற ஒன்றை பிழையான வழிகளினூடக பெற்றுக்கொள்ள பிறருக்கு வழங்கும் பணத்தை கையூட்டு -இலஞ்சம் என்பது குறிக்கிறது.
அதாவது நீதிபதி பிழையான –தவறான- தீர்ப்பை வழங்குவதற்காக ஒருவர் செலுத்தும் இலஞ்சம், அல்லது ஒரு அதிகாரி அவரின் தகுதிக்கு அப்பாற்பட்ட ஒரு பதவியை பெற்றுக்கொள்ள செலுத்தும் இலஞ்சம் இதற்கு உதாரணமாகும். இவை பெரும்பாவங்களில் ஒன்றாகும். இது குறித்து ஹதீஸில் பின்வரும் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது : ''அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இலஞ்சம் கொடுப்பவரையும் அதனை வாங்குபவரையும் சபித்தார்கள்'' (ஆதாரம் அபூதாவூத் 3580 திர்மிதி :1337).
தடுக்கப்பட்ட -ஹராமான- வற்றை விற்றல் அல்லது அதற்கு ஊதியம் பெறுதல்.
அதாவது அல்லாஹ் தடைசெய்த மதுபானம், போதைப் பொருட்கள், ஆபசமான காட்சிகள் மற்றும் வீடியேக்களை விற்றல் அல்லது அவ்வாறான காரியங்களை செய்து அதற்கான கூலியைப் பெறுவதைக் குறிக்கும்,
செயற்பாடுகள் :
செயற்பாடு (1) : நன்கு அவதானித்து விடையளிக்கிறேன்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "மறுமை நாளில் ஒரு அடியானிடம் அவனின் ஆயுள் குறித்தும், அதனை அவன் எவ்வாறு கழித்தான் என்பது பற்றியும், அவனின் அறிவு குறித்தும், அதனை எவ்வாறு செயலாற்றினான் என்றும், அவனின் செல்வம் குறித்தும், அதனை எங்கிருந்து சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தான் என்றும், அவனின் உடல் பற்றியும், அதனை எதில் ஈடுபடுத்தினான் என்றும் விசாரிக்கப்படாத வரையில் அவனின் இரு பாதங்களும் நகரமாட்டாது என்று குறிப்பிட்டார்கள் :
மறுமை விசாரணையில் கேட்கப்படும் இரு கேள்விகள் செல்வம் குறித்ததாகும். அதற்கான காணரத்தை குறிப்பிடுக.(கண்டறிக).
விடை: செல்வத்திற்கு இரு பகுதிகள் உண்டு, ஒன்று அதனை சம்பாதிப்பது மற்றொன்று அதனை செலவளிப்பது.
பாடத்தில் குறிப்பிடப்படாத ஹலாலாக செல்வத்தை சம்பாதிக்க முடியுமான மூன்று தொழில்களை எழுதுக.
செயற்பாடு (2) விவரித்து காரணம் கூறுவேன்:
பின்வரும் விடயங்களில் செல்வத்தை சம்பாதிப்பதன் சட்டத்தீர்ப்பை காரணத்துடன் எழுதுக :
சம்பாத்தியத்திற்கான உதாரணம் சம்பாத்தியத்திற்கான சட்ட நிலை காரணம்
ஒரு மனிதர் மரணித்துவிட்டார், அவரின் பிள்ளைகள் தங்களுக்கு மத்தியில் அம்மனிதர் விட்டுச்சென்ற அனந்தரச்சொத்தை பகிர்ந்துகொண்டனர் ஹலால் -அனுமதிக்கப்பட்டது. காரணம் அது வாரிசுச் சொத்தாகும்
ஒரு மனிதர் தனது அண்டைவீட்டாருக்கு அவரின் செல்வத்தில் சில பகுதிகளை வஸிய்யத் (மரண சாசனம்) செய்தார் ஹலால் -அனுமதிக்கப்பட்டது. காரணம் இதுஅனுமதிக்கப்பட்ட வஸிய்யத் முறையாகும்.
மருத்துவர் ஒருவர் பொது மருத்துவமனையிலிருந்து கருவிகளை தனது தனியார் -கிளினிக்கிற்கு-சிகிச்சை நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். ஹராம் ஏனெனில் இது ஒரு மோசடி மற்றும் அபகரிப்பாகும்.
ஒரு நபர் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பாலில் நீரைக் கலக்கிறார். ஹராம் காரணம் இது ஒரு மோசடியாகும்.
ஒரு நபர் கால்நடைகளை வளர்பதில் ஈடுபட்டு அதன் பாலை விற்பனை செய்கிறார். ஹலால் -அனுமதிக்கப்பட்டது. இது ஒரு வியாபாரம்.
ஒரு இளைஞன் ஒருவரின் செல்வங்களை –பணத்தை- பலவந்தமாக எடுத்துக் கொண்டான் ஹராம் காரணம் இது ஒரு அபகரிப்பும் கொள்ளையுமாகும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் () எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
வியாபாரத்தில் வியாபாரப்பொருளின் குறைகள் சிலதை மறைத்து விற்பது அனுமதிக்கப்பட்டதாகும் (✖)
'அல் கப்னு' என்பது விலை அதிகரிக்கும் வரை வியாபாரப் பொருட்களை தடுத்து வைப்பதைக் குறிக்கும்.
ஹராமக்கப்பட்ட (தடைசெய்யப்பட்ட) பொருட்களை வியாபாரம் செய்வது ஹராமாகும். (✓)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹலாலான பொருளீட்டளுக்கான உதாரணங்களில் ஒன்று :
(வியாரம்-ஜோதிடம்-பதுக்கல்) ஆகும்.
'யார் மோசடி செய்கிறாறோ அவர் என்னை சார்ந்தவரல்ல' என்ற ஹதீஸ் குறிப்பது :
(பதுக்கல் - சூதாட்டம் - ஏமாற்று மோசடி)
வியாபாரப்பொருளின் விலையை அறியாத ஒருவருக்கு அதன் வழமையான –சாதாரன விலையை விட அதிகமகான விலையில் விற்பது :
(அல்கிஷ் - அல் கிப்னு- அல் இஹ்திகார்) எனப்படும்.
தனக்கு தகுதியில்லாத ஒன்றை அடைந்து கொள்ள- பெற்றுக்கொள்ள- பணம் கொடுப்பது :
(ரிஷ்வா (லஞ்சம்) – கப்னு (அதிக விலைக்கு விற்றல்) – அத்தத்லீஸ் (வியாபாரப் பண்டத்தின் குறைகளை மறைத்து விற்றல்) எனப்படும்)
கேள்வி :3 பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடையளிக்குக.
ஹலாலான முறையில் பொருளீட்டுவதன் சிறப்புக்குறித்து ஆதாரமொன்றை எழுதுக
ஹலாலான வியாபரத்திற்கும் ஹராமான வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடுக.
இரண்டாம் பாடம் : வியாபார சட்டதிட்டங்கள்
செயன்முறை கற்றல் பெறுபேறுகள்
இப்பாடத்தை படித்தன் பின் நீங்கள்
வியாபாரம் நடைபெறும் முறையை விளக்கிக் கூற வேண்டும்.
வியாபாரம் செல்லுபடியாவதற்குரிய நிபந்தனைகளை ஒவ்வொன்றாக குறிப்பிட வேண்டும்.
ஹலாலான சம்பாத்தியத்தை (ஈட்டிக்கொள்வதற்கான) குறித்த பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
(கொடுக்கல் வாங்கலின்) வர்த்தக பரிவர்தணையின் போது வியாபாரத்தின் சட்டதிட்டங்களை பேணி நடக்க வேண்டும்.
முதலாவது : வியாபாரம் நடைபெறும் முறை
வியாபாரம் பின்வரும் இரண்டு விடயங்களில் ஒன்றின் மூலம் நிகழும், (நடைபெறும்) :
1-வார்த்தையின் மூலம் நிகழும் : உதாரணமாக வியாயபரி வாங்குபரிடம் இந்த வியாபாரப் பொருளை உனக்கு இன்ன விலைக்கு விற்று விட்டேன் என்று கூற, வாங்குபவர் நான் அதனை ஏற்றுக்கொண்டேன், அல்லது நான் வாங்கிவிட்டேன் என்று கூறுவார்.
2-செயலின் மூலம் நிகழும். உதாரணமாக வியாபாரியின் முன் வாங்குபவர் வியாபாரப் பொருளை –சரக்கை- பெற்றுக்கொண்டு பேசாது அதில் எழுதப்பட்ட –பொறிக்கப்பட்ட- பெறுமதியை வழங்குதல்.
இரண்டாவது: வியாபாரத்தின் நிபந்தனைகள்.
முதலாவது நிபந்தனை : கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் இருவரும் குறித்த வியாபாரத்தை திருப்தியுடன் ஏற்றுகொள்ளுதல் வேண்டும் :
வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்களான விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரில் ஒருவர் நிர்பந்திற்குள்ளான நிலையில் மேற்கொள்ளப்படும் வியாபாரம் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது- இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "ஈமான் கொண்டோரே! உங்களுக்கு மத்தியில் பொருத்தத்தின் அடிப்படையில் நடைபெறும் வியாபாரத்தைத் தவிர உங்கள் சொத்துக்களை உங்களுக்கிடையில் தவறான முறையில் உண்ணாதீர்கள்". அந்நிஸா :29
இரண்டாவது நிபந்தனை : வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் புத்திசுவாதீனம் உள்ளவராகவும், விவரமறியும் பருவத்தை அடைந்தவர்களாகவும், பொறுப்பணர்வு உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும் :
அதாவது வாங்குபவர் விற்பவர் இருவரும் புத்திசுவாதினமுடையோராகவும், தம்யீஸ் எனும் விவரம் அறியும் பருவத்தை அடைந்தவர்களாகவும் சுயமாக பொறுப்புக்களை நிறைவேற்றும் தகுதிபடைத்தோராகவும் இருத்தல் வேண்டும். புத்திபேதலித்தவர் அல்லது சிறுவன் அல்லது அறிவிலி ஆகியோரின் வியாபாரம் செல்லுபடியாக மாட்டாது.
மூன்றாவது நிபந்தனை : விற்கும் பொருளானது சொந்தமானதாக இருக்க வேண்டும் :
அதாவது விற்பவர் விற்கும் பொருளின் உரிமையாளராக இருக்கவேண்டும், தனக்கு சொந்தமில்லாத –உரிமம் அற்ற பிறிதொருவரின் பொருளை பொருள் சொந்தக்காரனின் அனுமதியின்றி விற்றல் கூடாது- அவ்வாறு விற்றால் அவ்வியாபாரம் செல்படியாகமாட்டாது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களிடம் : உன்னிடம் இல்லாத பொருளை விற்காதே என்று கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் 3503 திர்மிதி 1232.
இதன் கருத்து :உனக்கு சொந்தமில்லாததை விற்காதே என்பதாகும்.
நான்காவது நிபந்தனை : வியாபார பொருளானது விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் :
அதாவது மதூபானம், பன்றி போன்ற ஹராமாக்கப்பட்டவற்றை விற்பது கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதை தடை செய்தால் (ஹராமாக்கினால்) அதன் கிரயத்தையும் ஹராமாக்கிவிடுகிறான். ஆதாரம் :அஹ்மத் :2678
ஐந்தாவது நிபந்தனை : வியாபாரப்பொருள் மற்றும் அதன் விலை பற்றியும் அறிந்திருத்தல்.
அதாவது தெரியாத ஒன்றை வாங்குவது செல்லுபடியாகாது-கூடாது. உதாரணத்திற்கு வாங்குபவர் பார்க்காத ஒரு காரை வாங்குவது, அல்லது அதன் பண்புகளை அறியாது வாங்குவது, அல்லது தொகை –விலை எவ்வளவு என்று தெரியாது ஒரு காரை வாங்குவது போன்றன இதில் உள்ளடங்குகின்றன.
ஆறாவது நிபந்தனை : பொருளும் அதன் பெறுமதியும் ஒப்படைப்பதற்கு இயலுமானதாக இருத்தல் :
அதாவது ஒப்படைப்பதற்கு முடியாததை வியாபாரம் செய்வது இல்லாத ஒன்றை விற்பதற்கு நிகரான சட்ட நிலையில் உள்ளதாக கொள்ளப்படும். இல்லாத ஒன்றை வியாபாரம் செய்வது செல்லுபடியாகமாட்டாது. உதாரணத்திற்கு மீனை பிடிப்பதற்கு முன் நீரில் உள்ள மீனை விற்று விடுதல்.
செயற்பாடுகள் :
செயற்பாடு (1) கலந்துரையாடி பதிலளிக்கிறேன்.
உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : எமது சந்தையில் (கடைத்தெருக்களில்) மார்க்க சட்டதிட்டங்களை கற்றவர் தவிர வேறு எவரும் வியாபாரம் செய்ய வேண்டாம். ஆதாரம் : திர்மிதி:487
இக்கூற்றின் காரணத்தைக் கண்டறிக. மேலும் வியாபார சட்டதிட்டங்களை வியாபாரிகள் அறிந்துகொள்வதினால் கிடைக்கும் விளைவுகளை விவரிக்குக.
செயற்பாடு (2) சிந்தித்து முடிவுகளை கண்டறிவேன்.
பின்வரும் நிலைகளில் வியாபாரம் செல்லுபடியற்றதாக மாறுவதற்கான காரணத்தைக் கண்டறிக.
நிலைகள் வியாபாரம் செல்லுபடியாகாமல் போனதற்குக் காரணம் வியாபாரியிடம் வியாபாபரப் பொருள் சொந்தமாக காணப்படாமையினாலாகும்.
தனது அண்டைவீட்டாரின் வீட்டை அவரது அனுமதியின்றி ஒருவர் விற்றுவிட்டார் . ஏனெனில் விற்றகப்பட்ட பொருள் அறியப்படாததாகும்.
ஒரு நபர் மாட்டின் வயிற்றிலுள்ள சிசுவொன்றை விற்றார். ஏனெனில் போதைப்பொருட்களை விற்பது ஹராமாகும் குறித்த வியாபாரப்பொருளானது விற்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியமாகும்.
ஒருவர் வாலிபர்களுக்கு போதைப்பொருட்களை விற்கிறார். ஏனெனல் வியாபாரி தம்யீஸுடைய பருவத்தை அடையாதவர் ஆவார்
ஒரு நபர் சிறுவனிடத்திலிருந்து ஒரு காரை விலைக்கு வாங்குகிறார்
செயற்பாடு (3) வகைப்பத்துகிறேன்:
வியாபாரத்தின் நிபந்தனைகளை நீ அறிந்திருப்பதனால் அந்நிபந்தனைகளை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கான நிபந்தனைகள் மற்றும் வியாபாரப் பொருட்களுக்கான நிபந்தனைகள் என இரு பகுதிகளாக வகைப்படுத்திடுக
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கான நிபந்தனைகள், வியாபார பொருளின் மீது காணப்பட வேண்டிய நிபந்தனைகள்
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் ((✓)) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
பிறருக்கு சொந்தமான பொருளொன்றை அவரின் அனுமதிபெற்றதன் பின் விற்பது அனுமதிக்கப் பட்டதாகும்.
வியாபாரப்பண்டத்தை ஒப்படைப்பதற்கு இயலுமானதாக இருத்தல் வியாபாரத்தின் நிபந்தனையாகும்.
வியாபாரி ஒப்பந்தத்தின் வடிவம் குறித்து பேசுவது கட்டாயமாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
விற்கப்படும் பொருளுக்கு பின்வரும் நிபந்தனை காணப்படுவதால் மதுபானத்தை விற்பது கூடாது :
(தின்மமாக- அறியப்பட்டதாக – பயன் படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக) இருக்க வேண்டும்.
வியாபார ஓப்பந்தம் செய்பவரருக்கு பின்வரும் நிபந்தனை இருப்பதனால் புத்திசுவாதீனமற்றவர் வாங்கவோ விற்கவோ அனுமதிக்கப்படமாட்டார் :
(முஸ்லிமாக- புத்திசுவாதீனமுள்ளவராக- பருவவயதை எய்தவராக) இருக்க வேண்டும் .
விற்கப்படும் பொருளுக்கு பின்வரும் நிபந்தனை இருப்பதனால் மதுவை விற்பது கூடாது :
(உயிருள்ளதாக – சுத்தமானதாக – அறியப்பட்டதாக) இருக்க வேண்டும்.
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
வியாபாரம், வார்த்தையிலன்றி செயலின் மூலம் எவ்வாறு நிகழ்கிறது?
வியாபாரம் செல்லுபடியாவதற்கு விற்பவர் மற்றும் வாங்குபவரின் பொருத்தப்பாடு-திருப்தி தேவையென்பது நிபந்தனையாகும்;. இதனை தெளிவுபடுத்துக.
வட்டியும் தடைசெய்யப்பட் வியாபாரமும்
கற்றல் பேறுகள்
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின்
வட்டியின் வகைகளை தெளிவுபடுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட வியாபார முறைகளை ஒவ்வொன்றாக குறிப்பிட வேண்டும்.
வட்டி ஹராம் என்பதற்கான ஆதாரத்தை எடுத்துக்கூற வேண்டும்.
தனிமனிதன் மற்றும் சமூகத்தின் மீதான வட்டி மற்றும் தடைசெய்யப்பட்ட வியாபாரத்தின் ஆபத்தை உணர வேண்டும்.
வட்டி மற்றும் தடைசெய்யப்பட்ட வியாபாரங்களிலிருந்து விலகி நடக்க வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு:
வியாபரி ஒருவரிடமிருந்து கார் ஒன்றை குறித்த தொகைக்கு வாங்குவதற்கு அஹ்மத் இணக்கம் தெரிவித்தார்.பணத்தை வியாபாரிக்குக் கையளிக்க முன் இன்னொருவருவர் வியாபாரியிடம் வந்து குறித்த விலையை விட அதிகமான விலைக்கு தான் வாங்கிக் கொள்வதாக கூறினார். இவ்வாறு வியாபாரம் செய்வது அனுமதிக்கப்பட்டதா? இதற்கான விடையை பாடத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.
முதலாவது : வட்டி
வட்டி இரண்டு வகைப்படும் :
ரிபல் பழ்ல் (மேலதிக வட்டி)
ரிபன்னஸீஆ (தவணை முறை வட்டி)
ஒரே இனத்திலான வியாபாரப்பொருளை விற்று தாமதமாகக் கையகப்படுத்தல்
கடன்களுக்கான வட்டி
இஜ்மாவான (அறிஞர்களின் ஏகோபித்த) முடிவின் படி வட்டி ஹராமாகும் இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : ''அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து -ஹலாலாக்கி- வட்டியை ஹராமாக்கியுள்ளான்''. (அல்பகரா: 275)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வட்டியுடன் தொடர்பான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை சபித்தார்கள். வட்டி இரு வகைப்படும் :
முதலாவது: ரிபல் பழ்ல் : இது ஒரே இனத்தை சேர்ந்த ஒரு பொருளின் பண்டமாற்றின் போது கிடைக்கும் மேலதிகமான வருமானம் சார்ந்த வட்டியை குறிக்கும். இது ஆறுவகையான பொருட்களில் (இனங்களில்) நிகழும் என்பதை பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் : ''ஒரே மாதிரியாக, சரிநிகராக,உடனுக்குடன் கையகப்படுத்திக்கொள்ளும் நிலையில் தங்கத்திற்குத் தங்கத்தையோ,வெள்ளியை வெள்ளிக்கோ, வாட்கோதுமையை வாட்கோதுமைக்கோ, ஈத்தம் பழத்தை ஈத்தம் பழத்திற்கோ உப்பை உப்பிற்கோ விற்பனை செய்யுங்கள்! இவ்வினங்கள் வித்தியாசப்பட்டால் நேரடியாக, உடனுக்குடன் விரும்பியவாறு விற்பனை செய்யுங்கள்''. (ஆதாரம்:1587).
இதனடிப்படையில் 100g புதிய தங்கத்தை 110g பழையதங்கத்திற்கு விற்பது ஹராமாகும்.
இரண்டாவது : ரிபன்னஸீஆ (பிற்படுத்தி) காலம் தாமதித்து பெறும் வட்டி. இது இரண்டுவகைப்படும் :
1. வட்டி நிகழ்வதற்கு வாய்புள்ள ஆறு வகையான பொருட்களில், ஒரே இனத்திலான இரண்டு வகை பொருட்களை வியாபாரம் செய்து, அவ்விரு பொருட்களையோ அல்லது அப்பொருட்களின் ஒன்றையோ உடனே அல்லாது காலம் தாழ்த்தி பெற்றுக்கொள்ளுதலை ரிபன்னஸீஆ என்பது குறிக்கும். உதாரணத்திற்கு தங்கத்தை தங்கத்திற்கு விற்றதன் பின் அதனை காலம் தாமதித்து பெற்றுக்கொள்ளுதல்.இதனையே நபியவர்கள் : "ஒரே மாதிரியான,சரிசமமாக உடன் பெற்றுக்கொள்ளக் கூடியதாக குறித்த பொருளை விற்க வேண்டும்; இல்லாது விட்டால் அது வட்டியாகும் என்று குறிப்பிட்டார்கள்".
2. கடனுக்கான வட்டி : கடனை செலுத்துவதற்கான காலத்தை பிற்படுத்தி அதற்கான மேலதிகத் தொகையை கொள்வதை இது குறிக்கும். உதாரணமாக ஒருவர் இன்னொருவரிடமிருந்து கடன் பெற்றார், அதனை மீள்செலுத்த வேண்டிய காலம் நெருங்கியும் அதனை கடன் தந்தவருக்கு செலுத்த அவரால் இயலவில்லை. அப்போது கடன் வழங்கியவரிடம் : காலத்தை நீடித்துத் தா, அதற்கு நிகரான ஒரு தொகையை உனது கடனுடன் சேர்க்கிறேன் என்று கூறுவார். இதுவும் "ரிபன்னஸீஆ" எனப்படும்.
நவீன காலத்தில் வட்டி முறைமைகள் :
தற்காலத்தை பொறுத்தவரை வட்டிக்கான அதிக முறைமைகள் காணப்படுகின்றன. அவற்றுள் மிகவும் பிரபல்பயமானதும் யாவரும் அறிந்ததும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டியாகும். மக்களுக்கு கடன் கொடுத்துவிட்டு அதனை திரும்பப்பெரும்போது வழங்கப்பட்ட கடன்தொகையுடன் மேலதிகமான ஒரு தொகையை சேர்த்துவிடுகின்றன. இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
அல்லது குறித்த நபருக்கு அவரின் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டதற்காக ஒரு தொகை பணத்தை கொடுப்பதும் இதில் அடங்கும்.
இரண்டாவது :தடைசெய்யப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள்
ஒரு முஸ்லிம் தனது சகோதரனின் வியாபாரத்தில் குறுக்கிட்டு வியாபாரம் செய்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "உங்களில் சிலர் மற்றும் சிலரின் வியாபாரத்தில் குறுக்கிட்டு வியாபாரம் செய்யவேண்டாம்". (ஆதாரம் : புஹாரி 2150 முஸ்லிம் 1515).
இதற்கான உதாரணம் பின்வருமாறு: வியாபாரி ஒருவர் தன்னிடம் உள்ள ஒரு பொருளை வாங்கியவரிடம் இப்பொருளை 10 ரூபாய்க்கு தருகிறேன் என்கிறார், இன்னொருவர் அவ்வியாபாரத்தில் குறுக்கிட்டு இல்லை நான் அதே பொருளை 9 ரூபாய்க்குத் தருகிறேன் என்கிறார்.
ஒரு முஸ்லிம் தனது சகோதரன் வாங்கும் போது குறுக்கிட்டு அப்பொருளை தான் வாங்குவது:
பொருளை 9 ரூபாய்க்கு விற்ற வியாபாரியிடம் வாங்கியவர் உன்னிடமிருந்து நான் 10 ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறுவது போல
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமின் கொடுக்கல் வாங்கலில் தலையீடு செய்து அல்லது குறுக்கிட்டு வியாபரம் செய்வது தடைசெய்யப் பட்டதற்கான காரணம் யாதெனில் இவ்விவகாரமானது முஸ்லிம்களுக்கு மத்தியில் பகமையையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதினாலாகும்.
ஜும்ஆ அதானிற்கு பின் வியாபாரம் செய்தல் :
ஜும்ஆ தொழுகை கடமையானோர் அதாவது புத்திசுவாதினமுள்ள பருவவயதை அடைந்த ஊர்வசாசியான ஆரோக்கியமான முஸ்லிம் ஆண் ஜும்ஆ அதா கூறப்பட்டதன் பின் வியாபார -கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான். இங்கு அதான் என்பது இமாம் பிரசங்க மேடையில் ஏறியதன் பின் கூறப்படும் அதானைக் குறிக்கும் இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நம்பிக்கை கொண்டோரே!வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்புவிடுக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவுகூர்வதன்பால் விரைந்து செல்லுங்கள்.இன்னும் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' அல்ஜுமுஆ :9
செயற்பாடுகள் :
செயற்பாடு (2) சிந்தித்து முடிவுகளை கண்டறிவேன்.
பின்வரும் விடயங்களை பாடத்திலிருந்து கண்டறிந்து குறிப்பிடவும் :
கட்டாய கடமையொன்றை புறக்கணித்து –அலட்சியம் செய்து வியாபாரத்தில் ஈடுபடுவது கூடாது.
முஸ்லிம்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவல்ல அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்லாமிய ஷரீஆ தடுத்துள்ளது- ஹராமாக்கியுள்ளது.
செயற்பாடு (2) கலந்துரையாடி உள்ளார்ந்த முடிவுகளைகண்டறிவேன் :
பின்வரும் இரண்டு அல்குர்ஆன் வசனங்களும் குறிப்பிடும் வட்டியின் சட்டமுடிவுகளை கண்டறிக :
அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை விருத்திசெய்கிறான்". (பகரா : 276).
வட்டியானது வாழ்வாதாரத்தில் அருள்வளத்தை –பரகத்தை- நீக்கி வறுமைக்கும் வேலையின்மைக்கும் வழிவகுத்திடும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''நீங்கள் வட்டியை விட்டு தௌபாச் செய்து மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்குரியது. நீங்கள் அநியாயம் செய்யவும் மாட்டீர்கள் அநியாயத்திற்குட்படவும் மாட்டீர்கள்'' (பகரா : 279).
வட்டி உண்டவர் தௌபாச் செய்து மீண்டுவிட்டால் அவர் தனது மூலதனத்தை மாத்திரமே எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேலதிகமாக எடுப்பது கூடாது.
செயற்பாடு (3) அவதானித்து கூறுகிறேன்
வட்டி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்த எச்சரிக்கை குறித்து நன்கு அவதானித்து பின் வட்டியை எச்சரிக்கும் விதத்தில் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு உரையை எழுதுக. பின் அவ்வுரையை உனது குடும்பத்தாரிடம் நிகழ்த்திக் காட்டுக :
''அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வட்டி சாப்பிடுபரையும அதனை சட்பிடக்கொடுப்பவரையும் அதன் கணக்குகளை எழுதுபவரையும் அதற்கு சாட்சியாக இருப்போரையும் சபித்தார்கள்''. ஆதாரம் முஸ்லிம் :1598
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக:
ஜும்ஆ அதானின் பின் பெண்னொருவர் இன்னொரு பெண்ணுக்கு விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
வங்கி இலாபம் நவீன கால வட்டி முறைகளில் ஒன்றாகும்
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமின் கொள்வனவில் குறுக்கிட்டு குறிப்பிட்ட பொருளை வாங்குவது ஹராமாகும்.
வட்டியானது சமூகத்தில் அநீதியையும் வறுமையையும்-பஞ்சத்தையும் பரப்பிவிடும்
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
முஸ்லிம்களுக்கு மத்தியில் எதனைப் பரப்பிவிடும் வியாபார பரிவர்த்தனைகள் தடைசெய்யப் பட்டுள்ளன:
(ஒத்துழைப்பை –பகமையை-செல்வத்தை)
கட்டாயக்கடமைகளை வீணாக்கிவிடும் (பாழ்படுத்திடும் ) வியாபாரங்களின் சட்டம் :
(ஹராமாகும் - வெறுக்கத்தக்தாகும் அனுமதிக்கப்பட்டதாகும்)
கடன் மீள் செலுத்தும் காலத்தை பிற்படுத்துவதற்கு நிகராக மேலதிகமாகான தொகையொன்றை அறவிடுதலானது :
(தாமதக்கட்டணம் - மேலதிக வட்டி - கடன்களின் வட்டி)
கேள்வி :3 பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடையளிக்குக.
வட்டி ஹராம் என்பதற்கான ஆதாரத்தை எழுதுக.
ரிபல்பழ்ல், ரிபத்துயூன் ஆகியவற்றை ஒப்பிடுக.
நான்காம் பாடம் - இஜாரா (குத்தகை) ஒப்பந்தம்
கற்றல் பேறுகள்
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின்
இஜாரா ஒப்பந்தம் என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இஜாரா நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இஜாராவின் இரண்டு வகைகளையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும்.
தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இஜாராவின் தேவை எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.
ஹராமான வியாபார பரிவர்த்தனைகளை தவிர்ந்து நடக்க வேண்டும்.
ஆரம்ப செயற்பாடு :
திறமையான ஒரு விவசாயி இருக்கிறார், ஆனால் அவருக்குச்சொந்தமான நிலம் கிடையாது. உனது கருத்தில் அவரின் பிரச்சினைக்கு தீர்வாக குத்தகை ஒப்பந்தம் எவ்வாறு அமைய முடியும் என்பதை விவரிக்குக.
குத்தகை-வாடகைக்கு விடுதல்-என்பது மனிதர்களுக்கு மிகத்தேவையான விடயங்களில் ஒன்றாகும்.ஏனெனில் எல்லா மனிதர்களும் எல்லாவற்றையும சொந்தமாக வைத்திருக்க முடியாது, ஆகவே சொந்தமாக வைத்திராத வீடு அல்லது வாகனம் போன்றவற்றை பிறரிடமிருந்து பெற்று பயன்பெறுவதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமைவது மட்டுமல்லாது மக்களின் சுமையை நீக்கிடவும் இஜாரா முறையான வழிவகுக்கிறது. அதன் சட்ட திட்டங்களை இப்பாடம் விளக்குகின்றது.
இஜாரா –குத்தகை- :
வரைவிலக்கணம்
சட்ட நிலை
இஜாராவின் வகைகள்
நிபந்தனைகள்
முதலாவது : இஜாராவின் வரைவிலக்கணம் :
இஜாரா என்பது குறிப்பிட்ட காலம் அனுமதிக்கப்பட்ட நலனை பெற்றுக்கொள்வதற்கோ, அல்லது குறிப்பிட்ட சேவையை-வேலையை குறிப்பிட்ட கட்டணத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தைக் குறிக்கும்.
ஊதாரணம் : இப்ராஹீம் அஹ்மதிடமிருந்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை மாதம் 500 ரியால் வாடகைக்குப் பெற்றார். மாடிவீடு அஹ்மதிற்கு செந்தமானது. வாடகைக் காலத்தில் பயன்பெறுவதற்கான உரிமம் இப்ராஹீமிற்குரியது. இதனையே வாடைகைக்குப் பெருதல் எனப்படுகிறது.
இரண்டாவது : இஜாராவின் சட்ட நிலை
இஜாரா இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்காக செவியலர்களை அமர்தினால் அவர்களுக்குரிய கூலியை கொடுத்துவிடுங்கள்". (அத்தலாக் : 6).
இந்த வசனம் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கான கூலியை வழங்குவது குறித்து பேசுகிறது. நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு உரைகத் அவர்களை மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்ல வழிகாட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தினார்கள்.
மூன்றாவது : இஜாராவின் வகைகள் .இஜாரா இரு வகைப்படும் :
ஓன்று : நலன்களை பெற்றுக்கொள்வதற்கான இஜாரா : அதாவது குடியிருப்போருக்கு மாடிவீட்டை வாடகைக்கு விடுதல் அல்லது குறிப்பிட்ட காலத்திலற்கு பயன்படுத்த வாகனத்தை வாடகைக்குவிடுதல் போன்றவற்றை இது குறிக்கும்
இரண்டாவது : குறிப்பிட்ட ஒரு வேலையை செய்வதற்கு கூலிக்கு அமர்த்துதல்:தனக்கு ஒரு கதிரையை செய்து கொள்ள முஹம்மத் ஒரு தச்சனை கூலிக்கமர்த்துதலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
நான்காவது: இஜாராவுக்கான நிபந்தனைகள் :
இஜாரா ஒப்பந்தம் நிறைவேற பல நிபந்தனைகள் உண்டு, அவை பின்வருமாறு :
வாடகைக்கு விடும் பொருள் அல்லது கூலிக்காக பணிக்கப்படும் வேலை ஆகுமானதாக ஷரீஆவில் அனுமதிபெற்றதாக இருத்தல் வேண்டும். மதுபானத்தை விற்பதற்கு கடையை வாடகைக்கு விடுதல் அல்லது போதைப் பொருட்களை விற்பதற்காக ஒருவரை கூலிக்கமர்த்துதல் போன்றன அனுமதிக்கப்பட்டவைகள் அல்ல.
வாடகைக்கு விடப்படும் பொருளின் பயன்பாடு அறியப்பட்டதாக இருத்தல் வேண்டும். காரணம் குறித்த பொருளின் பயன்பாட்டிற்கே இங்கு ஒப்பந்தம் நிகழ்கிறது, எனவே அது அறியப்பட்டிருக்க வேண்டும்.
இரு தரப்பினரும் குறிப்பிட்ட பொருளின் வாடகைக்காலம் அறியப்பட்டதாகவும் அது ஒரு நாளா அல்லது மாதமாக அல்லது ஏதாவது குறிப்பிட்ட காலம் என இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ள வேண்டும்
வாடகை அல்லது கூலிப்பணம் அறியப்பட்டதாக இருத்தல் வேண்டும்
செயற்பாடுகள் :
ஒப்படை (1): வாசித்து, படிப்பினைகளைக் குறிப்பிடுகிறேன்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான்...." அவர்களில் ஒருவர் : "ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!". ஆதாரம் : புஹாரி (2227).
இந்த ஹதீஸை நன்றாக வாசித்து அதில் நீர் பெறக் கூடிய பயன்களை கண்டறிந்து குறிப்பிடுக.
செயற்பாடு (2) : ஒப்பீடு செய்கிறேன்.
பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருப்பதன் படி வியாபாரத்தையும்; வாடகையும் (கூலிக்கமர்த்துதல்) ஒப்பிடுக.
ஓப்பீட்டு முறை வியாபாரம் வாடகை
தீர்ப்பு அல்லது சட்ட நிலை
கொடுக்கலில் வாங்கலில் கலந்த இரு தரப்பினர்
செயற்பாடு (3) கலந்துரையாடி விமர்சிக்கிறேன் :
பின்வரும் குத்தகை-வாடகை ஒப்பந்தங்களில் உள்ள தவறுகளை புரிந்து கொள்ள உமது ஆசிரியருடன் கலந்துரையாடுக. (விவாதிக்குக) :
தவறு ஏற்படும் பகுதி வாடகை ஒப்பந்தம்
ஒருவர் இரவு கலியாட்ட விடுதியொன்றை நடாத்த கடையொன்றை வாடகைக்கு விடுகிறார்.
ஒருவர், கூலிவேலை செய்யும் ஒருவரை அவரின் வேலை நேரத்தை வரையறை செய்யாது பணிக்கமர்த்துகிறார்.
ஒருவர் தொழிலாளியை அவருக்கான கூலியை நிர்ணயம் செய்யாது வேலைக்கமர்த்துகிறார்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வரும் வாக்கியங்களில் சரியானவற்றிற்கு (✓) அடையாளத்தையும் பிழையானவற்றிற்கு (×) அடையாளத்தையும் இடுக :
இஜாராவானது (குத்தகை) அதன் பிரதியீட்டை (வாடகைப்பணத்தின் தொகை) தெரிந்து கொள்ளாமலேயே செல்லுபடியாகும். (×)
குத்தகையில் அதன் பயன்பாடு அனுமதிக்கப்படாததாக இருப்பினும் அது செல்லுபடியானதாகும் (×)
குத்தகையில் அதன் பயன்பாட்டை அறிந்திருப்பது நிபந்தனையாகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
இஜாராவில் (வாடகை) ஒப்பந்தம் செய்யப்படும் பயன்பாடு :
(அனுமதிக்கப்பட்டது – விரும்பத்தக்கது – வாஜிபானது)
குறிப்பிட்ட காலவரையின்றி ஒருவர் வீடொன்றை வாடகைக்கு விட்டால் அவரின் ஒப்பந்தம் :
(பிற்படுத்தப்பட்டது - செல்லுபடியானது- செல்லுபடியற்றது)
ஒருவரை கூலிக்கமர்த்தும் ஒப்பந்ததின் விளைவாக அத்தொழிலாளி பெற்றுக் கொள்ள முடியுமானது :
(வாடகைக்காகவிடப்பட்ட பொருளை - கூலியை – வேலையை விடுவதை)
கேள்வி :3 பின்வரும் இரு கேள்விகளுக்கும் விடையளிக்குக.
இஜாரா என்றால் என்ன?
இஜாராவின் இரண்டு வகைகளையும் வேறுபடுத்துக.
ஐந்தாம் பாடம் : சமகால வியாபார பரிவர்தனைகள் சில:
கற்றல் பேறுகள் (செயன் முறை நோக்கங்கள்)
இப்பாடத்தை நிறைவு செய்ததும் உங்களால்:
வங்கி அட்டைகளை பயன்படுத்துவதன் சட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
வணிகக் காப்புறுதி மற்றும் கூட்டுறவுக் காப்புறுதிக்கிடையிலான சட்ட நிலையை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டும்.
தவணை முறை வியாபாரத்தின் இஸ்லாமிய சட்ட நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
டிஜிட்டல் வர்த்தகம் குறித்த மிகமுக்கிய சட்டதிட்டங்களை சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.
ஹலாலான சம்பாத்தியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இஸ்லாமிய ஷரீஆ, நடை முறைசார்ந்ததும் புதிதாக உருவாகும் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சமகால பொருளியல் துறையில்; நவீன சில ஒழுங்குகள், மற்றும் முறைமைகள் பரவிக் காணப்படுகின்றன. அவை குறித்த ஷரீஆவின் நிலைப்பாடு யாது என்பதை அறிய நாம் அது குறித்து கற்றுக்கொள்வது அவசியமாகும்.
முதலாவது : வங்கி அட்டைகள் (Banks cards)
. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அட்டைகள் (cards) இரண்டு வகைப்படும் :
முதலாவது வகை : டெபிட் காட் (Debit Card)
இது ஒரு வங்கி அட்டையாகும், அதில் உரிமையாளர் ஒரு தொகையை வைப்பிலிட்டு; எப்போது வேண்டுமானாலும் குறித்த தொகையைத் திரும்பப் பெறலாம் அல்லது ஷாப்பிங் சென்டர்களில் (வியாபார நிலையங்களில்)அவர் வாங்குவதற்கு பணம் செலுத்தலாம், ஆனால் அவர் தனது வங்கிக்கணக்கில் உள்ள உண்மையான இருப்புத் தொகையை மட்டுமே செலுத்த முடியும்.
Debit Card – பயன்படுத்துவது ஷரீஆவில் அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில் அதனை வைத்திருப்பவர் அவரின் சொந்த வைப்பில் உள்ள பணத்தையே அட்டையைப் பயன்படுத்தி பெறுகிறார்.
இரண்டாவது : கடன் அட்டை (Credit Card)
இதுவும் வங்கியால் வழங்கப்படும் ஒரு வங்கி அட்டையாகும். இதனால் குறித்த அட்டை உரிமையாளர் பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவோ, அல்லது வியாபார நிலையங்களில் தான் வாங்கும் பொருட்களுக்கான கட்டணங்களை செலுத்தவோ முடியும். அத்துடன் அவரின் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் அவர் வாங்கிய பொருளுக்கான மேலதிகப்பணத்தை இவ்வட்டையைப் பயன்படுத்தி செலுத்தலாம். இதற்காக வங்கியானது அவருக்கு தவணையொன்றை நிர்ணயிக்கும். அதற்குள் அவர் அதனை செலுத்தல் வேண்டும். அக்காலப் பகுதிக்குள் செலுத்துவதற்கு முடியாமல் போனால் வங்கியானது அந்தத் தொகைக்கான வட்டியை அவரின் தொகையுடன் சேர்த்துவிடும்.
இந்த அட்டையானது வட்டியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இதனைப் பயன்படுத்துவது கூடாது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இதனை நிர்ப்பந்தின் அடிப்படையில் பயன்படுத்திடும் நிலை ஏற்பட்டால் பெற்ற கடனை வரையறுக்கப் பட்ட காலத்திற்குள் தாமதிக்காது செலுத்திடல் வேண்டும். என்றாலும் சில இஸ்லாமிய வங்கிகள் வழங்கும் வட்டியை உள்ளடக்கிடாத அட்டைகள் இதிலிருந்து விதிவிலக்குப்பெறுகிறது. அவ்வாறான அட்டைகளைப் பயன்படுத்திட அனுமதி உள்ளது.
இரண்டாவது:வர்த்தக காப்பீடு-காப்புறுதி
இது பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை ஈடுசெய்யுமுகமாக காப்புறுதி நிறுவனத்திற்கு காப்புறுதியை பெறுபவர் பணத்தை செலுத்துவதன் மூலம் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும்
இதற்கு உதாரணமாக வாகனங்களை காப்புறுதி செய்வதைக் குறிப்பிடலாம். அதாவது வாடிக்கையாளர் மாதாந்தம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகையை காப்புறுதி நிறுவனத்திற்குச் செலுத்துவார். குறித்த வாடிக்கையாளர் அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகி சேதமடைந்தால் அவரின் காப்புறுதிப் பணத்தில் பயனடைவார். அப்போது காப்புறுதி நிறுவனம் அவ்விபத்தினால் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கான காப்புறுதித் தொகையை வழங்கிவிடும்.
இவ்வகை காப்பீட்டு முறை ஷரீஆவில் தடைசெய்யப்பட்டதாகும். காரணம் இது மோசடி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்திடும் ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகின்றமை என்பதினாலாகும். அதாவது இங்கே வாடிக்கையாளர் (விபத்துக்கள் நடக்கவில்லையென்றால்) காப்புறுதி நிறுவனத்திற்கு செலுத்தும் பணத்தை திரும்பப்பெறுவாரா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது. அத்துடன் ஒப்பந்தத்தில் வாடிக்கையாளர் எவ்வளவு காலத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற தெளிவும் காணப்படவில்லை. இவ்வாறான நியாயங்கள் வர்த்தக காப்புறுதிகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.
மூன்றாவது : கூட்டுறவுக் காப்புறுதி –ஒத்துழைப்புக் காப்புறுதி
தங்கள் உறுப்பினர்கள் இடையில் பாதிப்பு ஏற்பட்ட அங்கத்தவருக்கு உதவிசெய்யும் நோக்கில் குறிப்பிட்ட நபர்கள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட ஒரு தொகையை காப்புறுதி நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் செய்துகொள்ளும் ஒப்பந்தமே கூட்டுக் காப்புறுதி என வழங்கப்படுகிறது.
இது இஸ்லாமிய ஷரீஆவில் அனுமதிக்கப்பட்ட ஒப்பந்தமாகும். ஏனெனில் இது நன்கொடையின் அடிப்படையில் அமைந்த ஒப்பந்தமாகும். அதாவது அங்கத்தவர் குறித்த தொகையை தன் சொந்த விருப்பத்தின் பேரில் செலுத்தி தேவைப்படுபருக்கு நன்கொடையாக செலுத்துகிறார்.
நான்காவது : தவணை கட்டண முறையிலான வியாபாரம்.
அதாவது பொருளை வாங்குபவர் உடன் பொருளை பெற்றுக்கொண்டு பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் பணத்தை தவணை அடிப்படையில் விற்றவருக்கு வழங்கும் ஒரு வியாபார முறைமையாகும்.
உதாரணம் : அஹ்மத் ஒரு வீட்டை 10000 திர்ஹங்களுக்கு வாங்கி அதற்கான கொடுப்பனவை ஒவ்வொரு வருடமும் 1000 ஆயிரம் திர்ஹம்களை வழங்குவதன் மூலம் 10 பத்து வருடத்திற்கு கொடுப்பதாகும்.
இது ஓர் அனுமதிக்கப்பட்ட வியாபார முறையாகும் . இது பின்வரும் அல்குர்ஆனின் பொதுவான வழிகாட்டலுக்குள் உள்ளடங்கிவிடும். அந்தக் குர்ஆன் வசனம் : ''வியாபாரத்தை அல்லாஹ் ஹலாலாக்கி உள்ளான்''. (பகரா : 275)
ஜந்தாவது : டிஜிட்டல் வர்த்தகம் -ஒன்லைன் வர்த்தகம்
டிஜிட்டல் வர்த்தகம் என்பது டிஜிட்டல் தொழிநுட்ப வலை தளங்களான கனினி வலை தளங்கள், இணையம் மற்றும் மின்னனு செயலிகள்; போன்றவற்றினூடாக பொருட்கள் மற்றும் சேவைகளை பரிவர்த்தனை செய்யும் செயன்முறைகள் யாவற்றையும் குறிக்கும்.
டிஜிட்டல் வர்த்தகத்தின் வகைகள் :
டிஜிட்டல் வர்த்தகம் பல வகைப்பபடும் அவற்றுள் சில பின்வருமாறு:
கருவிகள் போன்ற பொருட்கள் மற்றும் உற்பத்திகள் பரிமாற்றம். அதாவது நுகர்பவர் -கொள்வனவு செய்பவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்க்கு அந்நிறுவனத்தின் இணையதளத்தினூடாக பணத்தை செலுத்துவார், பின் நிறுவனமானது குறித்த பொருளை கப்பல் நிறுவனங்களினூடாக கொள்வனவு செய்தவருக்கு அனுப்பிவைக்கும்.
சேவைகள் பரிமாற்றம் : அதாவது பல்வேறுபட்ட வாகனங்களில் பயணிப்பதற்கான சேவைகள் வழங்கும் செயலிகள் மற்றும் பயண டிக்கட்டுகள் ஹோட்டல் முன்பதிவுகளுக்கான சேவைகள் பரிமாறிக்கொள்வதை இது குறிக்கும்.
டிஜிட்டல் உற்பத்திகள் பரிமாற்றம் : அதாவது Programs ,Applications, Films போன்றவைகளை வாங்குதல், விற்றல். அதாவது இவ்வாறானவற்றை வாங்குபவர் அதற்குரிய விலையை செலுத்தி அவரின் சொந்த கனினிகளில் தரவிறக்கம் செய்துகொள்வார் அல்லது அவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வார்.
டீஜிட்டல் அல்லது ஒன்லைன் வியாபாரம் பற்றிய சட்டநிலை:
இஸ்லாம் ஹராமாக்கிய விடயங்களில் ஏதும் காணப்படாது விட்டால் டிஜிட்டல் அல்லது ஒன்லைன் வியாபார முறை அனுமதிக்கப்பட்டதாகும்.
அதாவது ஏமாற்று மோசடி போன்றவை
அல்லது குறித்த பொருள் அல்லது சேவை பற்றிய தெளிவின்றி குறித்த பொருளை வாங்குதல் அல்லது சேவையைப் பெறுதல்
அல்லது உரிமங்கள் மீறப்படுதல், அதாவது பாதுகாப்பு உரிமை பெற்றுள்ள நிகழ்ச்சிகள் அல்லது நூல்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட உரிமையாளர்களின் அனுமதியின்றி பயன்படுத்தல் போன்ற இஸ்லாமிய வியாபாரத்தில் தடைசெய்யப்பட்ட அம்சங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறான விடயங்கள் இன்றி குறிப்பிட்ட வர்த்தக நடவடிக்கைகள் அமையுமாயின் அவை அனுமதிக்கப்பட்டதே.!
செயற்பாடுகள் :
செயற்பாடு (1) சட்டத்தீர்ப்பை எழுதி அதற்கான காரணங்களை குறிப்பிடுவேன் :
பின்வரும் வர்த்தக நடவடிக்கைகளின் சட்ட நிலையை காரணத்துடன் எழுதுக :
வர்த்தக நடவடிக்கை தீர்ப்பு அல்லது சட்ட நிலைசட்டநிலை காரணம்
அஹ்மத் வியாபரஸ்தளமொன்றை வாங்கி, அதனை தீ மற்றும் களவு போன்றவற்றிற்கு எதிராக காப்புறுதிசெய்து அதற்கு நிகராக காப்புறுதி நிறுவனத்திற்கு வருடாந்த தவணைக்கட்டணம் செலுத்துகிறார்.
ஹராம்
ஏனெனில் இது தடைசெய்யப்பட்ட வர்த்தக காப்புறுதி வடிவங்களில் ஒன்றாகும்
முஹம்மத் 10000 பத்தாயிரம் செலுத்தி ஒரு காரை வாங்கி, 10பத்து மாதங்களில் கட்டணத்தை செலுத்துவதாக வியாபரியுடன் இணங்கினார்.
அனுமதிக்கப்பட்டது
ஏனெனில் இது அனுமதிக்கப்பட்ட தவணைமுறை வியாபாரமாகும்
பாத்திமா தனது தொழிற்சாலையிலுள்ள சக ஊழியர்களுடன் கூட்டுறவு நிதியத்தில் பங்குகொண்டார் . அனுமதிக்கப்பட்டது. காரணம் இது நன்கொடை அடிப்படையிலான ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
செயற்பாடு (2) : ஒப்பீடு செய்கிறேன்.
பின்வரும் அட்டவணையில் கோரப்பட்டதிற்கு இணங்க சாதாரண டெபிட் காட் மற்றும் கடன் அட்டை ஆகியவற்றை ஒப்பீடு செய்க.
டெபிட் கார்ட் ஓப்பீடு/ஓப்பாகும் முறை கடன் அட்டை –credit card)
இவை வங்கி அட்டைகளாகும் (cards) இதில் வாடிக்கையாளர்- அட்டை உரிமையாளர் பணத்தை அவரது கணக்கில் பற்று வைப்பார். அப்பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுக்கவோ அல்லது விரும்பியதை வாங்கிக்கொள்ளவோ இதனால் முடியும். ஆனால் வங்கியானது இவ்வட்டையை வைத்திருப்பவருக்கு அவரின் பற்றிலிருக்கும் தொகையை விட மேலதிக கடன்களை வழங்க மாட்டாது.
இதுவும் வங்கியினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு அட்டையாகும. இவ்வட்டையை வைத்திருப்பவர் தனது கணக்கில் பற்றுவைத்த தொகையை எடுக்க முடிவதோடு, தனது கணக்கில் உள்ள தொகைக்கு மேலதிகமாக குறிப்பிட்ட காலவரையறையுடன் வங்கி கடனையும் வழங்கும்.
ஆகுமானது. சட்ட நிலை அனுமதிக்கப்பட்டதல்ல.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
நன்கொடையின் அடிப்படையிலான ஒப்பந்தம் என்ற வகையில் வர்த்தக காப்புறுதி அனுமதிக்கப்பட்டது. (×)
தவணை முறையிலான வியாபாரத்தில் குறிப்பிட்ட தவணைகளுக்கான காலத்தை குறிப்பிடுவது நிபந்தனையாகும் (✓)
டிஜிட்டல் சாதனங்களினூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மக்ரூஹ் ஆகும். (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஹதீஸ் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏமாற்று வியாபாரத்தை தடைசெய்தார்கள்' இந்த ஹதீஸ் குறிக்கும் ஹராமான பரிவர்த்தனை :
(பிணைப்பத்திரங்கள் (bonds) - தவணை முறை வியாபாரம் - வர்த்தக காப்புறுதி)
கூட்டுறவு –தகாபுல்- காப்புறுதி அனுமதிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக பின்வரும் விடயங்களில் ஒன்று காணப்படுகிறது. அது :
(நன்கொடை ஒப்பந்தம் - நிர்ப்பந்தமின்மை – மக்களிடம் பரவலாக காணப்படுவது)
டீஜிட்டல் வியாபாரம் பற்றிய சட்டநிலை :
(அனுமதிக்கப்பட்டது - மக்ரூஹ் - ஹராமான ஏதும் உள்ளடங்கியிருக்காதிருந்தால் அனுமதிக்கப்பட்டது)
கே : 3 : எதனை வைத்து தவணை கட்டண அமைப்பிலான வியாபாரம் அனுமதிக்கப்பட்டது எனக் கூறுவீர்?
பின்வரும் வசனத்தின் அடிப்படையிலாகும் : "அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கினான்" . அல்பகரா: 275
கேள்வி : 4 : இந்தப்பாடத்தை கற்ற பின் முஸ்லிம்களின் வாழ்வியலில் தோன்றக்கூடிய சமகாலப் பிரச்சினைகள், புதுப்புது விடயங்களுக்கான தீர்வுகளை ஷரீஆ உள்ளடக்கியுள்ளது என்பதற்கு எவ்வாறான ஆதாரத்தை முன்வைப்பீர்?
ஆறாவது பாடம்: திருமணச்சட்டங்கள்
கற்றல் பேறுகள்
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின்
திருமணம் சட்டபூர்வமான விடயம் என்பதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.
திருமண ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை விளக்கிக் கூற வேண்டும்.
இஸ்லாத்தின் சட்டதிட்டங்களையும் அதன் போதனைகளையும் மதித்து நடக்க வேண்டும்.
திருமணவாழ்வை எதிர்நோக்கியிருக்கும் அனைவரும் இது குறித்த ஷரீஆ சட்டதிட்டங்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். எனவே நாம் திருமணசட்டதிட்டங்கள் பற்றிய மிக முக்கிய விடயங்களை இப்பாடத்தில் கற்கவுள்ளோம்.
முதலாவது : திருமணத்தின் சட்டபூர்வத்தன்மை
அல்லாஹ் ஓவ்வொறு பொருளிலும் சோடியைப்; படைத்துள்ளான். அந்த வகையில் திருமணத்தை விரும்பி அதில் நாட்டம் கொள்ளும் வகையில் இயற்கையாகவே அவ்வுணர்வை மனிதனுள் அமைத்து சிருஷ்டித்தது மட்டுமல்லாது திருமணம் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : ''பெண்களில் உங்களுக்கு விருப்பாமானவர்களில் இரண்டிரண்டாக மும்மூன்றாக நந்நான்காக மணம் முடித்துக்கொள்ளுங்கள்''. அந்நிஸா : 3
மானத்தை பாதுகாத்தல், மனித இனத்தைப் பாதுகாத்தல், வாழ்க்கை சுமைகளில் பரஸ்பரம் ஒத்துழைத்தல் மற்றும் நல்ல சந்ததிகளால் பூமியை வளப்படுத்துதல் போன்றன திருமணம் மார்க்கக் கடமையாக ஆக்கப்பட்டிருப்பதன் பின்னனியில் உள்ள நுட்பங்களாகும்.
திருமணம் செல்லுபடியாவதற்குரிய நிபந்தனைகள்
முதலாவது நிபந்தனை : சம்மதம்
கணவனும் மனைவியும் திருமண ஒப்பந்தத்தை நடத்த இணக்கம் தெரிவிப்பதே சம்மதமாகும். பெண்ணையோ ஆணையோ திருமணம் முடிக்க நிர்ப்பந்திப்பது கூடாது.
இரண்டாவது நிபந்தனை : இரு துணைகளும் தாம் திருமணம் முடிக்கவிரும்புபவரை குறிப்பிடுதல் வேண்டும்.
இது திருமணம் முடிப்பவரை சுட்டிக்காட்டுவதன் மூலமோ அல்லது பெயரைக்குறிப்பிடுவதன் மூலமோ அல்லது வர்ணிப்பதன் மூலமோ நிகழ முடியும்.
மூன்றாம் நிபந்தனை : (பெண்தரப்பு)வலி (பொறுப்பாளர்)இருத்தல் :
வலி என்பவர் பெண்ணின் நெருங்கிய ஆண் உறவினர் ஆவார். அவள் சார்பாக திருமண ஒப்பந்தத்தை பொறுப்பேற்று நடத்துவார். ஒரு பெண் சுயமாக திருமணம் செய்து கொள்வதற்கோ, ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு வலியாக பொறுப்பேற்று மணம் முடித்துக் கொடுப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால் அந்த திருமணம் செல்லுபடியாக மாட்டாது. இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : எந்தவொரு பெண்னும் வலிய்யின் அனுமதிபெறாமல் திருமணம் முடித்தால் அவளின் திருமணம் செல்லுபடியாகாது என மூன்று முறை குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : திர்மிதி 1102).
பெண்ணும் அவளின் உரிமைகளும் பாதுகாப்பட வேண்டும் என்பதற்காக திருமண ஒப்பந்தத்தில் வலி கட்டாயம் இருப்பதை இஸ்லாம் நிபந்தனையாக விதித்துள்ளது. குறிப்பிட்ட ஒருவர் வலியாக இருப்பதற்கு பின்வரும் நிபந்தனைகள் அவசியமாகும் : ஆணாக இருத்தல், பருவவயதை அடைந்திருத்தல், புத்திசுவாதீனமுள்ளவராய் இருத்தல், நேர்மையானவராக இருத்தல், முதிர்ச்சி பெற்றவராக இருத்தல்.
நான்காம் நிபந்தனை : கணவன் மனைவி இருவரும் திருமணத்திற்கு தடையாக உள்ள விடயங்களிலிருந்து விடுபட்டிருத்தல் வேண்டும் :
வாழ்க்கைத் துணைகள் இருவருக்குமோ அல்லது அவர்களில் ஒருவருக்கோ திருமணத்தை தடுக்கும் விடயங்கள் எதுவும் இருக்கக் கூடாது. உதாரணமாக :
இரத்த உறவு அல்லது பால்குடி உறவின் மூலம் ஹராமாக்கப்பட்டிருத்தல், அதாவது உடன் பிறப்புக்களாவோ அல்லது பால்குடி உறவின் மூலமான சகோதரர்களாகவோ இருத்தல், இவ்வாறு இருப்பின் திருமணம் செல்லுபடியாக மாட்டாது.
மத வேறுபாடு இருக்கக்கூடாது, அதஅதாவது பெண் முஸ்லிமாகவும் ஆண் கிறிஸ்தவராகவும் இருத்தல்.
தற்காலிக ஒரு காரணத்தின் நிமித்தம் தடை செய்யப்பட்டிருத்தல். அதாவது பெண் தலாக்கின் நிமித்தம் இத்தா காலத்தில் இருத்தல், அல்லது கணவன் மரணித்த இத்தா காலத்தில் இருத்தல் போன்றன இதற்கான உதாரணங்களாகும்.
ஐந்தாவது நிபந்தனை: சாட்சி :
திருமண ஒப்பந்தின் போது நேர்மையான இரண்டு ஆண்களின் சாட்சியஙகள் இல்லாதிருந்தால் திருமணம் நிறைவேற மாட்டாது. இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : 'வலியும், இரண்டு நேர்மையான ஆண் சாட்சிகளும் இன்றி திருமணம் நிறைவேறாது' (ஆதாரம் : தாரகுத்னி -3531).
செயற்பாடுகள் :
செயற்பாடு (1) : காரணம் கூறி தீர்ப்பளிப்பேன் :
பின்வரும் பிரசினங்களில் திருமண ஒப்பந்தத்தின் மார்க்க சட்டநிலையை காரணத்துடன் விளக்குக :
சட்டப்பிரச்சினை (விடயம்) தீர்ப்பு அல்லது சட்ட நிலை காரணம் - நியாயம்
ஒரு முஸ்லிம் தனது மகள்களில் ஒருவளை பெயர் குறிக்காது –பொதுவாக –திருமணம் செய்து வைத்தார்.
கணவன் இறந்தமைக்கான இத்தாவின் போது ஒரு பெண் திருமணம் முடித்தாள்.
யுவதி ஒருத்தி தனது சக வகுப்பு நண்பனை தனது குடும்பத்திற்கு தெரியப்படுத்தாது திருமணம் முடித்தாள்.
செயற்பாடு (2) ஆய்ந்து முடிவுகளைப் பெறுகிறேன்.
பின்வரும் ஆதாரங்கள் உள்ளடக்கியிருக்கும் திருமணத்திற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக :
ஆதாரம் நிபந்தனை
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்வலிமூலம் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது". (ஆதாரம் : இப்னுமாஜா 1882).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''விதவை, அல்லது விவாக முறிவுப் பெற்ற பெண்கள் அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்கப்பட மாட்டார்கள், கன்னிப் பெண்ணிடம் அவளது அனுமதி பெரும் வரையில் திருமணம் செய்து வைக்கப்பட மாட்டாது''. ஆதாரம் :புஹாரி 5136 முஸ்லிம் 1419
அல்லாஹ் கூறினான் : ''இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும் வரையில் திருமணம் முடிக்க வேண்டாம்''. (பகரா : 221)
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
திருமணபந்தத்தில் இணையும் துணைகளைக் குறிப்பாக்குவது குறித்த நபரை சுட்டிக்காட்டுவதால் நிகழ்கிறது.
தந்தை தனது பருவ வயதை அடைந்த கன்னி மகளை திருமணம் முடிக்க நிர்ப்பந்திப்பது அனுமதிக்கப்பட்டதாகும். (×)
முஸ்லிம் வேதக்காரப் பெண்ணை திருமணம் முடிப்பது செல்லுபடியாகும் - அனுமதிக்கப்படும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
திருமணத்திற்கு இரு சாட்சிகள் இருப்பது நிபந்தனையாகும்.அவர்கள் :
(இரு ஆண்கள் - ஒரு ஆணும் இரு பெண்களும் - உறவினர்களில் இரு ஆண்கள்)
திருமணத்தை தடுக்கும் காரணங்களில் ஒன்று :
(வயது வேறுபாடு - மத வேறுபாடு - தேச வேறுபாடு)
ஓரு பெண் இன்னொரு பெண்ணை திருமணம் முடித்து கொடுத்தால் அத்திருமணம் :
(செல்லுபடியற்றது –மக்ரூஹ்- செல்லுபடியானது)
கே :3 :பின்வரும் வசனங்களின் உள்ள பிழைகளைத் திருத்தி மீண்டும் எழுதுக :
திருமணத்திற்கு வலிய்யாக –பொறுப்பாளராக- சிறுவன் இருந்தால் அத்திருமணம் செல்லுபடியாகும்.
முஸ்லிம் அல்லாத ஒருவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
கேள்வி 4: பின்வரும் இரு வினாக்களுக்கும் விடை தருக.
திருமணம் மார்க்க சட்டபூர்வமானது என்பதற்கான ஓர் ஆதாரத்தை எழுதுக.
திருமணம் நிறைவேற கணவன் மனைவியாக இணையவிருப்போர் சில தடைகளிலிருந்து விடுபட்டிருப்பது திருமணத்திற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.அவற்றை தெளிவு படுத்துக.
ஏழாம் பாடம் : இல்லற வாழ்க்கை
கற்றல் பேறுகள்
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின்
மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை தெளிவுபடுத்த வேண்டும்.
கணவன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை தெளிவுபடுத்த வேண்டும்.
தம்பதிகள் இருவருக்குரிய கடமைகள் தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
இஸ்லாமிய சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
அறிமுகம் (முற்குறிப்பு :)
கணவன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய மூன்று கடமைகளை குறிப்பிடுக. இப்பாடத்தை படித்த பின் உமது விடையை மதீப்பீடு செய்க.
மனைவி தன் (கணவனுக்கு செய்வேண்டிய) கடமைகள்
கணவனுக்கு கட்டுப்பட்டு நடத்தல் :
கணவன் குடும்பத் தலைவன் என்ற ரீதியில் இஸ்லாம், மனைவி தனது கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் குடும்பம் தொடர்பான கடமைகளில் கணவருக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளை பிரப்பித்துள்ளது. என்றாலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியங்களில் கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை கிடையாது.
வீட்டில் தங்கியிருத்தலும் அதை பராமரித்தலும் :
கணவனின் வீட்டில் மனைவி தங்கியிருப்பதை இஸ்லாம் வலியுறுத்துவதோடு அவனின் அனுமதியின்றி வெளியே செல்வதையும் தடைசெய்துள்ளது. இது குறித்து அல்லாஹ் பினவருமாறு குறிப்பிடுகிறான் : "உங்களின் வீடுகளிலே (பெண்களாகிய) நீங்கள் தங்கியிருங்கள்''. (அல்அஹ்ஸாப் : 33). மனைவி தனது பெற்றோரை நியாயமான முறையில் தரிசிக்கச் செல்வதை தடுப்பதற்கு எவ்வித உரிமையும் கணவனுக்கு இல்லை.
மனைவி கணவனின் வீட்டையும் சொத்துக்களையும் அவனின் பிள்ளைகளையும் நல்ல முறையில் பராமரிப்பது அவசியமாகும்.
பாதுகாப்பு, நிர்வகித்தல் உரிமை :
கவாமா என்பது : வீட்டில் ஆண்கள் பெற்றிருக்கும் அதிகாரமும் பொறுப்பும் ஆகும். இந்த வகையில் செலவு செய்தல், ஆடை வாங்கித் தருதல், மற்றும் தங்குவதற்கான மனையை ஒழுங்கு செய்தல் ஆகியவை கணவன் மீதுள்ள பொறுப்பாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "அவர்களில் சிலரை சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதினாலும் (ஆண்களாகிய ) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவளிப்பதாலும் பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோர் ஆகும்". (அந்நிஸா : 34)
இரண்டாவது : மனைவி மீதான கணவனின் கடமைகள்
மஹர் அல்லது ஸதாக் எனும் மணக் கொடை கொடுத்தல் :
திருமண ஒப்பந்தத்திற்கேற்ப ஒரு ஆண் பெண்ணுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய பணத்தொகை மஹர் அல்லது ஸதாக் என வழங்கப்படுகிறது. இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : ''பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடையை மனமுவந்து கொடுத்துவிடுங்ள்''. (அந்நிஸா : 4).
இம்மணக்கொடையானது பெண் மதிப்புக்கும் மரியாதைக்குமுரியவள் என்பதை அவளுக்கு உணர்த்தும்.
செலவு செய்தல்-ஜீவனாம்சம் :
செலவு செய்தல் (ஜீவனாம்சம்) என்பது உணவு குடிபானம் உடை வீடு ஆகியவற்றையும் அது அல்லாத அவளின் தேவைகளையும் உள்ளடக்கிக் கொள்ளும். (ஜீவனாம்சம்) கணவனின் வசதி நிலைக்கேற்ப மதிப்பிடப்படும். அல்லாஹ் கூறுகின்றான் : ''வசதி உள்ளவர் தமது வசதிக்கு ஏற்ப செலவிடட்டும். யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் தான் வழங்கியதற்கு மேல் யாரையும் சிரமப் படுத்தமாட்டான்''. (அத்தலாக் : 7).
நல்ல முறையில் -இணைந்து வாழ்தல்- வாழ்க்கை நடத்தல் :
மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் : ''அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்) ஏனெனில் நீங்கள் ஒன்றை வெறுக்க அல்லாஹ் அதில் அதிக நன்மைகளை வைத்திருக்கக் கூடும்''. (அந்நிஸா : 19). கணவன் தன் மனைவியிடம் விரும்பாத ஒன்றைக் கண்டாலும் அவளுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிக்கு சிறந்தவறே! நான் உங்களில் எனது மனைவிக்கு சிறந்தவனாக உள்ளேன்''. ஆதாரம் திர்மிதி :3895 இப்னு மாஜஹ் 1977
நல்ல- அழகிய- முறையில் பெண்களுடன் நடந்து கொள்வதன் முறைகளுள் சில :
சாதுர்யமாக உறவாடி இங்கிதமாக நடந்து கொள்ளல், புன்முறுவல் பூத்தல் மற்றும் முகமலர்ச்சியுடன் இருத்தல்.
மனைவியுடன் பேசி ஒப்புறவாட தேவையான நேரத்தை வழங்குதல்.
உபசரித்து அழகிய முறையில் நடந்து கொள்ளும் போதும், கச்சிதமாக கருமமாற்றும் போதும் அவளை பாராட்டுவது (அவளின் அழகிய செயல்களை பாராட்டுவது).
தவறுகளையும், பிழைகளையும் பொறுத்து அதனை பொருட்டாக கொள்ளாதிருப்பது.
தவறு மற்றும் அலட்சிய சூழ்நிலைகளை அழகிய முறையில் கையாள்வதும், கடிந்து பேசுதல், கொடுமை செய்தல் -ஈவிரக்கமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற விடயங்களிலிருந்து விலகி நடப்பதும்.
செயற்பாடுகள் :
செயற்பாடு : (1) அறிவுரை வழங்குவேன்.
பின்வரும் ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறவும் :
நிலைமைகள் காரணம்
தனது குடும்பத்திற்கு செலவு செய்யாது பணத்தை சேமிக்கும் ஒரு தந்தை.
கணவனின் அனுமதியின்றி வெளியே செல்லும் மனைவி.
இஸ்லாமிய நன்நெறிகளை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்காத தந்தை.
செயற்பாடு (2) நான் ஒரு உரை நிகழ்த்திக் காட்டுகிறேன்.
கணவன் மனைவிக்கிடையில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அமர்வொன்றிற்கு நீங்கள் அழைக்கப்பட்டீர்கள் என்பதாக கற்பனை செய்யவும். அவர்களுக்கு மத்தியில் சமரசத்தை ஏற்படுத்தவும், குடும்பத்தையும் அதன் ஸ்திரத்தன்மையையும் பேணி பாதுகாத்துக் கொள்ளவும், அவர்கள் ஒவ்வொருவரின் உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றி தெளிவுபடுத்தவும் ஒரு சொற்பொழிவு – உரை – நிகழ்த்துமாறு வேண்டப் படுகிறீர்கள்.
இச்சந்தர்ப்பத்தில் நீ கூறுவதுற்கு முடியுமான அனைத்தையும் எழுதி உமது உரையை சக நண்பர்களுக்கு மத்தியில் நிகழ்த்திக்காட்டுவீராக.
செயற்பாடு (3) முடிவுகளை வெளிப்படுத்துகிறேன் :
பின்வரும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை வாசித்து அது உள்ளடக்கியிருக்கும் கணவன் மனைவிக்குரிய கடமைகளை ஆராய்ந்து குறிப்பிடவும் :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் கணவன் மனைவி கடமைகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''ஒரு பெண், தன் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்". ஆதாரம் : புஹாரி (893).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "முஃமினான ஒரு ஆண் முஃமினான பெண்ணின் (மனைவி) மீது கோபப்படவேண்டாம் - வெறுப்புக் கொள்ளவேண்டாம்- அவளிடம் உள்ள ஒரு குணத்தை வெறுத்தால் இன்னொரு குணத்தின் மீது அவன் திருப்தி கொள்ள வேண்டும்''. ஆதாரம் முஸ்லிம் :1469
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
''பெண்களாகிய நீங்கள் உங்களின் வீடுகளில் தங்கியிருங்கள்'' என்ற அல்லாஹ்வின் திருவசனம் குறிப்பிடும் மணைவியின் கடமைகளில் ஒன்று :
(கட்டுப்படுதல் – வீட்டில் தங்கியிருத்தல் - ஜீவனாம்சம்).
மனைவி மீது கடமையான முக்கிய விடயங்களில் ஒன்று :
(தனது பெற்றோரை சந்திக்கச்செல்லல் - கணவனின் சொத்துக்களை பாதுகாத்தல் - பிள்ளைகளுக்கு செலவு செய்வது).
கணவன் தனது மனைவியிடத்தில் விரும்பாத ஒன்றை கண்டால்:
(அவளை விவாகரத்துச் (தலாக்) செய்வார் - அடிப்பார் - அவளுடன் நல்ல முறையில் நடந்து கொள்வான்).
கேள்வி 2: பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக :
கணவன் பணிக்கும் எல்லா விடயங்களிலும் அவனுக்கு கட்டுப்பட்டு நப்பது கடமையாகும்.
தாய் தனது பிள்ளைகளுக்கு செலவு செய்வது கடமையாகும்.
கேள்வி 3 :பின்வரும் இறைவசனங்கள் குறிப்பிடும் கருத்துக்களை தெளிவு படுத்துக.
1. "பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள்".
2. "வசயிலுள்ளவர்கள் அவரின் வசதிக்கேற்ப செலுவுசெய்யுங்கள்".
கே 4 : இஸ்லாத்தில் கவாமா என்பதன் கருத்தை விவரிக்குக.
எட்டாம் பாடம் : தலாக்கின் சட்டங்கள் (விவாகரத்து சட்டங்கள்)
கற்றல் பேறுகள் (செயன் முறை நோக்கங்கள்) :
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் :
தலாக்கை வரைவிலக்கணப்படுத்த வேண்டும்.
தலாக் ஷரீஆவில் அனுமதிக்கப்பட்டதன் நுட்பத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
தலாக்கின் சட்ட நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
தலாக்கின் வகைகளுக்கிடையில் உள்ள வேறுபாட்டை குறிப்பிட வேண்டும்.
தலாக் விவகாரத்தில் அலட்சியமாக இருப்பதை விட்டு எச்சரிக்க வேண்டும்.
தலாக்கின் வரைவிலக்கணம் : தலாக் என்பது திருமண பந்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ (முறித்துக்கொள்வதை) விடுவிடுப்பதை குறிக்கும். அதாவது திருமணபந்தத்தை பகுதியளவில் முறித்துக்கொள்ளுதல் என்பது ஒரு தடவை அல்லது இரு தடவைகள் தலாக் கூறி மீண்டும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையை குறிக்கும்.(தலாக் ரஜஈ).
தலாக் மார்கத்தில் அனுமதிக்கப்பட்டதன் (நுட்பம் )- பின்னனி :
இஸ்லாமிய ஷரீஆ திருமண பந்தத்தை பேணிப் பாதுகாப்பதில் அதீத கவனம் செலுத்துகிறது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகையில் "ஷைதான் .. தனது படைகளை (மக்களை வழிகெடுப்பதற்காக) அனுப்பி வைக்கிறான். அப்படையில் அவனுக்கு மிகவும் நெருக்கமானவன் அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியவனாவன். அப்படையில் உள்ள ஒருவன் நான் இன்னின்ன காரியங்களை செய்தேன் என்று கூறுவான். அதற்கு ஷைத்தான் 'நீ எதுவுமே செய்யவில்லை' என்று கூறுவான். அவனைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து 'நான் கணவனை அவனது மனைவியிடமிருந்து பிரித்து விட்டேன்' என்று கூற அவனை அருகில் அழைத்து : நீதான் மிகவும் சிறந்த வேலையை செய்தாய் எனக் கூறுவான்''. ஆதாரம் : முஸ்லிம் :2813
இந்த ஹதீஸானது ஷைதான் ஆதத்தின் சந்ததிகளை விவாகரத்தில்- தலாக்கில் உற்படுத்துவதில் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறான் என்பதையும், அதன் பாதிப்பினையும் எடுத்துக் காட்டுகிறது. அடிப்படையில் திருமணபந்தம் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டியதாகும். அதில் இடம் பெறும் பிரச்சினைகளுக்கு மிகத் துல்லியமாக –விவேகத்தினால் தீர்வு காணப்படல் வேண்டும். அதுவும் பயன்தராது திருமணபந்தம் உறவு தொடர்ந்து இருப்பதின் பாதிப்புகள் அதன் நலன்களை விட ஆபத்தானது என்ற நிலைக்கு செல்லுமாயின் தலாக் விவாகரத்து அனுமதிக்கப் பட்டதாகும்.
தலாக்கின் சட்ட நிலை
பெண்ணின் தீய குணங்கள் காணப்பட்டு அதன் மூலம் பாதிப்புகள் வருமென்று இருந்து கணவன் விவாகரத்து செய்ய வேண்டும் நிலை காணப்பட்டால் அது அனுமதிக்கப்படும்
தம்பதிகள் இருவரும் சீராக இருந்து எவ்வித தேவையுமின்றி தலாக் செய்வது மக்ரூஹ் - வெறுக்கத்தக்கதாகும்.
மாதவிடாய் அல்லது நிபாஸ் -பிள்ளைப்பேரு- போன்ற காலங்களில் அல்லது சுத்தமான காலத்தில் தாம்பத்தியில் ஈடுபட்டு தலாக் கூறுதல் அல்லது ஒரே வார்த்தையில் முத்தலாக் கூறி தலாக் செய்தல் போன்றவை ஹராமாகும்.
தம்பதிகள் மத்தியில் பிணக்கு ஏற்பட்டு பெண் தனது கணவனை விரும்பாத நிலையில் தலாக் செய்வது விரும்பத்தக்கது.
மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டு தௌபா செய்யாது விட்டால் தலாக் சொல்வது வாஜிபாகும்.
தலாக்கின் (விவாகரத்தின்) வகைகள் :
தலாக் (விவாகரத்து) பல வகைப்படும் அவை பின்வருமாறு:
தலாக் ரஜஈ, தலாக் பாஇன் :
தலாக் ரஜஈ(மீண்டும் இணைந்து கொள்வதற்கான தலாக்) என்பது கணவன் முதலாம் அல்லது இரண்டாம் தலாக் கூறிய காலப்பகுதியில் தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்வதையே இப்பெயர்கொண்டு அழைக்கப்டும். அவ்வாறு இணைந்து கொள்ள விரும்பும் கணவன் புதிய அக்த் (திருமண ஒப்பந்தம்) மற்றும் மஹ்ர் (மணக்கொடை) இன்றி மனைவியை சேர்த்துக் கொள்வார்.
அத்தலாக் அல் பாஇன், இது இரண்டு வகைப்படும்:
ஒன்று தலாக் பய்னூனா ஸுஃரா – (தற்காலிகமாக பிரிதல்) : அதாவது கணவன் தனது மனைவியை ஒரு தலாக் அல்லது இரு தலாக் கூறி, அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ளாது காத்திருப்புக் காலம் முடியும் வரை விட்டுவிடுவதாகும். இவ்வாறானவர் மீண்டும் அவளுடன் இணைந்து வாழ விரும்பினால் அவளின் உடன்பாட்டுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து மஹர் செலுத்தியே இணைய வேண்டும்.
தலாக் பாஇன் குப்ரா என்பது மூன்றாவது தலாக்கின் பின் நிகழும் முழுமையான தலாக் ஆகும். இவ்வாறு நிகழ்ந்தால் பெண்ணைப் பொருத்தவரை குறித்த கணவரை திருமணம் செய்ய இன்னொரு கணவரை முழுவிருப்பத்துடன் மணம் முடித்து அவர் தலாக் கூறிய பின்னரே முதல் கணவரை மணக்க அனுமதி உண்டு. முதல் கணவரை முடிக்க வேண்டும் என்பதற்காக தஹ்லீல் நிகாஹ் (ஹலாலாக்கிக் கொடுக்கும் நோக்கில் நிகாஹ் செய்தல்) செய்வது கூடாது. ''(மூன்றாம் முறையாக) அவளை அவன் விவாகரத்து செய்தால் அவள் வேறு கணவனை மணம் முடிக்கும் வரை இவனுக்கு அவள் ஆகுமானவளாக மாட்டாள்''. (அல்பகரா: 230).
உடன் நிறைவேறும் தலாக்கும் (விவாகரத்தும்) நிபந்தனையுடனான தலாக்கும் :
அத்தலாக்குல் முனஜ்ஜஸ் : மனைவியை பார்த்து உன்னை நான் தலாக் செய்து விட்டேன் என்று கூறி மனைவியை உடன் தலாக் சொல்வதைக் குறிக்கும்.
தலாக் முஅல்லக் : என்பது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு விடயத்துடன் இணைத்து குறிப்பிடுவதை இப்பெயர் கொண்டு அழைக்கப்படும். அதாவது கணவர் தனது மனைவியிடம் இன்னாரின் வீட்டிற்குச்சென்றால் உன்னை நான் தலாக் செய்துவிட்டேன் என்று கூறுவது போன்று. அவ்வாறு மனைவி குறித்த வீட்டிற்கு சென்றால் தலாக் நிகழ்ந்து விடும்.
தலாக்கின் (விவாகரத்தின்) வகைகள் :
மீண்டும் மனைவியை மீட்டிக்கொள்வதற்குரிய சாத்தியப்பாட்டின் அடிப்படையிலானது அவை
பாஇன்
ரஜஈ : பய்னூனா ஸுஃரா பய்னூனா குப்ரா
தலாக் நிகழ்வது ஒத்திவைக்கப்படுதல் அடிப்படையிலானது
முஅல்லக்
முனஜ்ஜஸ்
செயற்பாடுகள் :
செயல்பாடு (1): அடையாளம் காணுவேன் :
நீங்கள் கற்றுக்கொண்டதின் அடிப்படையில் பின்வரும் விடயங்களில் தலாக்கின் வகைகளை குறிப்பிடவும் :
சட்டப்பிரச்சினை (விடயம்) தலாக்கின் வகை
ஒரு நபர் தனது மனைவியை முதலாம் தடவை விவாகரத்து செய்தார், பின்னர் இரண்டாவது தடவையாகவும் விவாகரத்து செய்தார், பின்னர் மூன்றாவது தடவையாகவும் விவாகரத்து செய்தார்.
ஒரு நபர் தனது மனைவியிடம் நீ எனது கட்டளைக்கு கட்டுப்படாவிட்டால் உன்னை நான் தலாக் செய்து விடுகிறேன்.
ஒரு நபர் தனது மனைவியிடம் : உன்னை தலாக் செய்து விட்டேன் என்று கூறுகிறான்.
செயற்பாடு (2) : அறிவுரை கூறுகிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: 'ஒரு முஃமினான கணவர் ஒரு முஃமினான மனைவியை வெறுக்கமாட்டார். அவரில் -மனைவியிடத்தில்- வெறுக்கத்தக்க ஒரு குணத்தைக் கண்டால் அவளிடம் உள்ள நல்ல குணத்தில் திருப்தியடையவார்' (ஆதாரம் :முஸ்லிம் 1469
தமது மனைவியருடன் ஏதாவதொரு சாதாரண பிரச்சினை ஏற்பட்டாலும் தலாக் பற்றி சிந்திக்கும் நபர்களுக்கு இந்த ஹதீஸின் அடிப்படையில் அறிவுரையொன்றை முன்வைக்குக.
செயற்பாடு (3) கலந்துரையாடுவேன் :
பின்வரும் விடயங்களில் தலாக்கின் சட்ட நிலையை தெளிவுபடுத்துவது தொடர்பாக உனது சகநண்பருடன் கலந்துரையாடுக :
விடயம் தலாக்கின் சட்ட நிலை
ஒரு மனைவி தனது மான விடயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறாள்.
மாதவிலக்கின் போது தனது மனைவியை தலாக் செய்தான்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
மனைவி தொழுகை விடுவதாக விடாப்பிடியாக (பிடிவாதமாக) இருக்கிறாள். அவளை தலாக் செய்வது கடமையாகும்.
பிரசவ உதிரப்போக்கின் போது தலாக் செய்வது மக்ரூஹ் ஆகும் (×)
மூன்று தடவைகள் தலாக் கூறிய தன் மனைவியை மீண்டும் இணைத்துக்கொள்வது அனுமதிக்கப்பட்டது. (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஒரு பெண் தனது கணவனை விரும்பவில்லையெனில் தலாக்கின் சட்ட நிலையானது :
(அனுமதிக்கப்பட்டதாக – விரும்பத்தக்கதாக - விரும்பத்தகாதாக) இருக்கும்.
ஒருவர் தனது மனைவியை இரண்டு தடவைகள் தலாக் கூறி அதன் காத்திருப்புக் காலம் முடிவடைந்துவிட்டால் அத்தலாக்கானது :
(தலாக் ரஜஈ –பய்னூனா ஸுஃரா –பய்னூனா குப்ரா)
ஒரே வார்த்தையில்; மூன்று தடவைகள் தலாக் கூறுவது :
(முபாஹ் - மக்ரூஹ் - ஹராம்).
கேள்வி :3: பின்வரும் சட்டப் பிரச்சினைகளில் தலாக் நிகழ்தல் குறித்த சட்ட நிலையை தெளிவ படுத்துக.
ஒருவர் தனது மனைவிக்கு வீட்டைவிட்டு நீ சென்றால் நீ தலாக்விடப்பட்வளாக ஆகிவிடுவீர்; என்று கூறுகிறார. ஆனால் அவள் வெளியே செல்ல வில்லை.
ஒருவர் தனது மனைவிக்கு நீ தலாக் விடப்பட்டவள் என்று கூறுகிறான் .
கேள்வி : 4 : தலாக் அனுமதிக்கப்பட்டதன் மதிநுட்பம் என்ன?
ஓன்பதாம் பாடம் : உணவுகள் குடிபானங்கள் உடைகள் ஆகியவற்றில் தடைசெய்யப்பட்டவை
கற்றல் பேறுகள் (செயன் முறை நோக்கங்கள்) :
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் :
உணவுகள் மற்றும் குடிபானங்களின் அடிப்படை குறித்து விளக்க வேண்டும்.
உணவுகள் குடிபானங்களில் ஹராமானவற்றை ஒவ்வொன்றாக சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.
ஆடை மற்றும் அலங்காரத்தில் தடைசெய்யப்பட்டவைகள் குறித்து தெளிவுபடுத்திட வேண்டும்.
உணவு குடிபாணம் ஆடை போன்றவற்றில் தடைசெய்யப்பட்டவற்றிலிருந்து விலகி நடக்க வேண்டும்.
தனது அடியார்கள் மீதான அல்லாஹ்வின் அளப்பரிய அருளை உணர்ந்து நடக்க வேண்டும்.
அப்துர் ரஹ்மான் தனது நண்பர்களுடன் வேட்டையாடச் சென்றான், அவ்வேளை அவர்கள் ஒரு முயலைக் கண்டணர், உடனே அப்துர் ரஹ்மான் அதன் மீது ஒரு கல்லை எறிந்தான், அதை அவன் அறுப்பதற்கு முன்பே இறந்துவிட்டது! இந்த முயலை சாப்பிட அனுமதியுண்டா? இதைத்தான் இந்தப் பாடம் விளக்குகிறது.
முதாலவது : உணவுகள் குடிபானங்கள் தொடர்பான சட்டங்கள்
உணவுகள் மற்றும் குடிபானங்களின் அடிப்படை :
ஆதாரங்களின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட உணவுகளைத் தவிர அனைத்து உணவுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அனுமதித்துள்ளான்; இது குறித்து பின்வருமாறு அவனது திருமறையில் பிரஸ்தாபிக்கிறான் : ''மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள்''. (அல்பகரா: 168)
குடிபாணங்களில் போதையை அல்லது ஓரு வகை சோர்வை அல்லது பாதிப்பை ஏற்படுத்துபவை அனைத்தையும் தவிர மற்றவைகள் அனைத்தையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். போதை ஏற்படுத்துபவற்றுக்கு உதாரணமாக மதூபானத்தையும், ஒருவரில் சோர்வையும், பலவீனத்தையும் ஏற்படுத்துபவைக்கு உதாரணமாக போதைப்பொருட்களையும், பாதிப்பையும் தீங்கையும் ஏற்படுத்துபவைக்கு புகைப்பிடிப்பதையும் உதாரணங்ளாக குறிப்பிடலாம்.
தடைசெய்யப்பட்ட உணவுகள்
உணவுகளில் மனிதனுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியவை என உறுதிப்படுத்தப்பட்டவை, மற்றும் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஹராம் எனக் குறிப்பிடப்பட்டவைகளும் தடைசெய்யப்பட்டவை களாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : ''தானாக செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெறிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது''. (மாஇதா : 3)
தடைசெய்யப்பட்டவற்றின் விபரங்கள் பின்வருமாறு :
தானாக செத்தவை: ஷரீஆ முறைப்படி அறுக்கப்படாது உயிர்பிரிந்த மிருகங்கள் மற்றும் பறவைகளை இது குறிக்கும்.
அத்துடன் மின் அழுத்தத்தின் மூலம் அல்லது நீரில் அமிழ்த்துவதன் மூலம் கொல்லப்பட்ட ஷரீஆ முறைப்படி அல்லாத கொல்லாப்பட்டவை.
மற்றும் ஷரீஆ முறைப்படி அறுக்கப்படாது திடீரென செத்தவைகளும் இதில் உள்ளடங்குகிறது.
அல்முன்கனிகது : என்பது கழுத்து நெறிக்கப்பட்டு செத்தவை.
அல்மவ்கூதது: என்பது கல் போன்ற பாரமான பொருளொனறினால் தாக்கப்பட்டு –அடிக்கப்பட்டு மரணித்தவற்றை குறிக்கும்.
அல்முதரத்தியது : என்பது உயராமன இடத்திலிருந்து விழுந்து மரணித்தவை.
“அந்நதீஹது” என்பது ஒரு மிருகம் இன்னொன்றை குத்தி காயப்படுத்துவதன் ஊடாக மரணித்தவற்றைக் குறிக்கும்.
கொடிய விலங்குகளால் உணவுக்காக கொல்லப்பட்டு சாப்பிடப்பட்ட மிருகங்கள்
மிருகத்தை அறுக்கும் போது வெளியேறிய இரத்தம்.
பன்றியும் அதன் அனைத்துப் பகுதிகளும் ஹராமாகும்.
அல்லாஹ் அல்லாத சிலைகள் அல்லது நல்லடியார்கள் அல்லது படைப்பிணங்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை .
வீட்டுக் கழுதை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் வீட்டுக்கழுதையின் இறைச்சியை உண்ணுவதை உங்களுக்கு தடைசெய்துள்ளார்கள்'' (ஆதாரம் : புஹாரி 4119 முஸ்லிம் 1940).
வேட்டைப்பல் (கோரைப் பற்களைக் கொண்ட) உள்ள மிருகங்கள் அனைத்தும் அவை காட்டில் வாழும் சிங்கமாகவோ அல்லது மனிதர்களை அண்டி வாழும் நாய் போன்றவைகளாகவோ இருந்தாலும் சரியே அவை அனைத்தும் ஹராமாகும்.
கழுகு போன்ற வேட்டை நகங்களை கொண்ட பறவைகள் அனைத்தும் உன்பது ஹராமாகும். இது குறித்து பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது : 'மிருகங்களில் கோரைப்பற்கள் உடையவை களையும், பறவைகளில் வேட்டைநகங்கள் கொண்டவற்றையும் (சாப்பிடுவதை) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'. ஆதாரம்: முஸ்லிம் 1934
அல் ஜல்லாலா : அசுத்தமான உணவை அதிகம் உட்கொள்ளும் (உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட) மிருகங்கள் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிருகங்களை மூன்று தினங்கள் அடைத்து அவை சுத்தமான உணவை உண்டால் அவற்றை உண்பது அனுமதிக்கப்படும்.
தேல் போன்ற நபியவர்கள் கொல்லுமாறு ஏவியவை, எறும்பு மற்றும் தேன்பூச்சி போன்ற கொல்வதை தடுத்தவை போன்றவற்றை உணவாகக் கொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது.
நிர்ப்பந்த நிலையில் (சூழ்நிலையில்) ஹராமாக்கப்பட்டவை அனுமதிக்கப்பட்டிருத்தல் :
ஒருவர் பசி அல்லது தாகத்தினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானால் அவ்வாறான நிர்ப்பந்தமான நிலைகளில் ஹராமாக்கப்பட்ட உணவுகளையும் குடிபானங்களையும் (தேவைகேற்ப) பயன்படுத்துவது அனுமதிக்கப்படும். ''பாவம் செய்யும் நோக்கமில்லாமலும்,வரம்பு மீறாமலும் எவரேனும் உண்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை''. (பகரா : 173)
இரண்டாவது : ஆடை அலங்காரங்களில் தடைசெய்யப்பட்டவை
அவ்ரத்தை (அந்தரங்கத்தை) (உடலில் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதியை) காட்டும் ஆடைகள் :
அதாவது ஆடையின் இறுக்கம் காரணமாகவோ அல்லது மெல்லிய தன்மையின் காரணமாகவோ அல்லது குட்டையானது என்பதன் காரணமாகவோ அவ்ரத்தை காட்டும் ஆடைகளை அணிவது ஹராமாகும். ஆகவே ஆணாயினும் பெண்ணாயினும் அவ்ரத்தை வெளிக்காட்டாத ஆடைகளை அணிவது அவசியமாகும்.
ஆண்கள் பெண்களுக்கும் அல்லது பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பான ஆடைகளை அணிவது :
ஆடை அலங்காரங்களில் ஆண்கள் பெண்களை ஒத்த வகையில் அணிந்து சிங்காரிப்பதும் பெண்கள் ஆண்களை போல் ஆடைகள் அணிவதும் ஹராமாகும்.
பட்டாடையும் தங்கமும் ஆண்கள் அணிவது :
ஆண்கள் பட்டாடை அணிவதும் தங்க நகைகளை அணிவதும் ஹராமாகும் இவைகள் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் வேஷ்டியை (லுங்கியை) கரண்டைக்கு கீழ் அணிவது :
ஆணைப் பொறுத்தவரை கரண்டைக்காலுக்கு கீழ் ஆடைகளை அணிவது ஹராமாகும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் : ''கரண்டைக்காலுக்கு கீழ் செல்லும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும்''. (ஆதராம் புஹாரி : 5787).
செயற்பாடுகள் :
ஒப்படை (1): வாசித்து, இறுதிச் சுருக்கத்தைக் குறிப்பிடுவேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "இறந்தவைகள் இரண்டும் இரத்தங்கள் இரண்டும் உங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. இறந்தவைகள் ஆகின்றன வெட்டுக்கிளியும், மீனும் ஆகும். இரத்தங்களாகின்றன ஈரலும், மண்ணீரலும் ஆகும்". ஆதாரம் இப்னு மாஜஹ் 3314, அஹ்மத் 5723
இந்த ஹதீஸ் ....... ................ஆகியவை ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதையும் ............. ............... ................. ..........ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.
செயற்பாடு (2) ஆய்ந்து வெளிப்படுத்துவேன் :
பின்வரும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு அணிவதற்கு அல்லது அலங்கரிப்பதற்கு ஹராமானவற்றை குறிப்பிடுவதுடன் அவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாத்திரம் அணிவது ஹராமானவை எவை என்பதையும் இருவருக்கும் ஹராமானவை எவை என்பதையும் வரையரை செய்க.
ஹதீஸ் அணிவது தடுக்கப்பட்டவை யாரின் மீது ஹராமாகும்
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள். ஆதாரம் :புஹாரி 5837
சாதாரண பட்டு அலங்காரபட்டு ஆண்கள்
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ''ஆண்களில் பெண்களுக்கு ஒப்பாக ஒப்பணை செய்வோரையும், பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாக ஒப்பணை செய்வோரையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சபித்தார்கள்'' (அல்லது இதன் கருத்து ) பெண்கள் அணியும் ஆடையைப்போன்று அணியக் கூடிய ஆண்களையும் ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சபித்தார்கள். ஆதாரம் : திர்மிதீ(2785) ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல். ஆண்களும் பெண்களும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறினார்கள் : 'யார் தனது ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் (தனது அருள் பார்வையால்) பார்க்கமாட்டான்' ஆதாரம் புஹாரி 3665 முஸ்லிம் 2085
கரண்டைக்காலை தாண்டி ஆடை அணிதல் ஆண்கள்
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
ஒரு முஸ்லிமுக்கு கொல்வதற்கு தடைசெய்யப்பட்டவற்றை சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதாகும் (×)
அல் முதரத்தியது என்பது உயரமான ஒர் இடத்திலிருந்து விழுந்து மரணித்தவையாகும் (√)
அல்முன்கனிகது : என்பது அடித்ததின் விளைவாக மரணித்தவற்றை குறிக்கும் (×)
வீட்டுக்கழுதையின் இறைச்சியை சாப்பிடுவது ஹராமாகும் (√)
கழுகு சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதாகும் (×)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
தடைசெய்யப்பட்ட உணவுகளில் ஒன்று :
(மின் அதிர்வினால் கொல்லப்பட்டவை – வேதம் கொடுக்கப்படட்டோரின் உணவு - காட்டுக் கழுதை) ஆகும்.
பெண் தங்கம் அணிவது :
(வரவேற்கத்தக்கது - அனுமதிக்கப்பட்டது - ஹராமானது)
அவ்ரத்தை மறைக்கும் அளவு ஆடை அணிவதன் சட்ட நிலை :
(வாஜிபாகும் - முஸ்தஹப்பாகும் - முபாஹ் ஆகும்)
ஆண்கள் ஆடைகளை தரையில் படுமளவிற்கு நீண்டதாக அணிவதன் சட்டம் :
(ஹராம் - மக்ரூஹ்- முபாஹ்) ஆகும்.
அசுத்தங்களை அதிகம் உணவாகக் கொண்ட மிருகம் ஒரு குறிப்பிட்ட காலம் சுத்தமான உணவை உட்கொண்டால் அதனை உண்ணுவது அனுமதிக்கப்படும்.அக்குறிப்பிட்ட கால அளவு:
(அரை நாள் - ஒரு நாள்- மூன்று நாட்கள்)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக :
ஆடை அலங்காரங்களில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டவற்றை குறிப்பிடுக.
"உணவு மற்றும் குடிபானம் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும்" இக்கூற்றை விவரிக்குக
பத்தாம் பாடம்: போதையூட்டிகள் மற் றும் போதைப்பொருடகளின் நாசகார விளைவுகள்
கற்றல் பேறுகள் (செயன் முறை நோக்கங்கள்) :
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் :
போதையூட்டிகள் மற்றும் போதைப்பொருளின் சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
போதையூட்டிகள் மற்றும் போதைப்பொருளினால் விளையும் மோசமான விளைவுகளை குறிப்பிட வேண்டும்.
போதையூட்டிகள் மற்றும் போதைப்பொருளினால் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.
போதையூட்டிகள் மற்றும் போதைப்பொருட்களை பாவிப்பதை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும்.
அறிமுகம் (முற்குறிப்பு :)
பானங்கள் அனைத்தையும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு அனுமதித்து அருள் புரிந்துள்ளான். என்றாலும் ஹராம் என்று சான்றுகள் வந்தவற்றை தவிர. அவற்றுள் அருவறுக்க்கத்தக்க அனைத்து பானங்கள் அல்லது மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தவல்ல போதை மற்றும் போதைப்பொருட்கள் போன்றவையும் இதில் உள்ளடங்குகிறன.
உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : ''போதையூட்டக் கூடியவைகள் மற்றும் (உடலில்) சோர்வை ஏற்படுத்தக் கூடியவைகள் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள்''. (ஆதாரம் : அஹ்மத் 26634 அபூதாவூத் 3686).
போதையை ஏற்படுத்துபவை (முஸ்கிர்) என்பது மதூபானம் போன்றவற்றையும் (முபத்திர்) என்பது மனிதனில் சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும் போதைப்பொருட்கள் போன்றவற்றையும் குறிக்கும்.
இங்கே தடைசெய்யப்பட்ட குடிபானங்கள் பற்றி விரிவாக குறிப்பிடுகிறோம் :
மது அருந்துதல் (போதைப்பானங்கள்) :
மது தடைசெய்யப்பட்ட பானங்களில் மிகவும் கடுமையானதாகும். மதுவென்பதும் மதியை மறைத்து அதில் தாக்கம் செலுத்தும் அனைத்தையும் உள்ளடக்குவதோடு, மது எனும் பழைய பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கலாம் அல்லது நவீன காலத்தில் அல்கஹோல் கலந்த பானங்களாக இருக்கலாம் பெயர்கள் மாறினாலும் இவை அனைத்தும் ஹராமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : ''நம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவை களாகும். எனவே நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள்". (மாஇதா : 90)
புத்தியை –மழுங்கடித்து- போக்குவதினாலும் அதனை அருந்துவதன் விளைவாக தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு பாதிப்புகளை கொண்டு வந்து சேர்ப்பதினாலும் அல்லாஹ் மதூபானத்தைத் தடைசெய்துள்ளான். அதன் பாதிப்பானது மார்க்கம், உயிர், மானம், புத்தி, செல்வம் போன்றவற்றில் இருக்க முடியும்.
போதையை ஏற்படுத்தும்; அனைத்தும் ஹராமாகும். அது சிறிதளவாக அல்லது அதிகமானதாக இருப்பினும் சரியே! வடிவங்கள் மற்றும் நிறங்களில் வேறுபட்டிருப்பினும் சரியே! அதற்கு மக்கள் பல பெயர்களை பட்டப்பெயர்களை வைத்தாலும் சரியே. இவை அனைத்து ஹராமாகும்.
போதைபொருட்கள் :
இது மனிதனின் புத்தியிலும் புலன்களிலும் தாக்கம் செலுத்துவதோடு போதையைப் போன்று தற்காலிக உட்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.
போதைப்பொருட்கள் ஹராமாகும். அவை சிறிதளவாக அல்லது அதிகமாக இருந்தாலும் சரியே. அத்துடன் அவை ஹஷீஷ் மற்றும் அபினி போன்ற தாவரங்களாகவோ, அல்லது தயாரிக்கப் பட்ட மருந்துகளான மாத்திரைகள், ஊசிகள் மொபின், ஹெரோயின் கொக்கேயின் போன்றவைகளாகவோ இருக்க முடியும். இவை அனைத்தும் போதைப்பொருட்காளாகும்
ஷரீஆவின் இலக்குகளுடன் முரண்படுவதாலும், தீங்கானதாக இருப்பதாலும் போதைப்பொருட்கள் யாவும் ஹராமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : ''அவர் அவர்களுக்கு தூய்மையானவற்றை ஆகுமாக்கி தீங்கானதை அவர்களுக்கு தடுப்பார்''. (அல் அஃராப் : 157).
புத்தியை மழுங்கச்செய்து அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் மதுவை ஒத்த நிலையில் இது உள்ளது. சிலபோது அதன் பாதிப்பு போதைப்பானங்களை விட ஆபத்தானதாக இருப்பதுடன் இதிலிருந்து விடுபடுவது சிரமம் என்றளவிற்கு இதற்கு அடிமையாகும் நிலையை தோற்றுவித்துவிடும்.
போதை மற்றும் போதைப்பொருட்களினால் ஏற்பாடும் தீய விளைவுகள் :
மதி மறைந்து- அறிவு மறைந்து அதன் விளைவாக தனிமனிதர்கள் மற்றும் சமூகங்களை அச்சுறுத்தும் நிலையை தோற்றுவிக்கும்.
இஸ்லாமிய ஷரீஆ பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் ஜந்து இன்றியமையாத விடயங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் மார்க்கம் உயிர் பரம்பரை புத்தி செல்வம் ஆகியவற்றில் இது பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சுகாதார ரீதியிலான அதிகமான பிரச்சினைக்கு இது காரணமாக இருக்கும். உதாரணத்திற்கு ஞாபக சக்தி குறைதல், சுவாசக் குழாயில் கோளாறு ஏற்படுதல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
செல்வம் வீணாக்கப்படுவதோடு அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் செலவிடும் நிலை ஏற்படும்.
செயற்பாடுகள் :
செயற்பாடு (1) ஆதாரம் கூறுகிறுவேன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''. (ஆதாரம் : இப்னு மாஜஹ் :2340).
போதையூட்டிகள் போதைப்பொருள்கள் ஹராம் என்பதற்கு மேற்படி ஹதீஸ் ஆதாரமாக அமையும் முறையை தெளிவு படுத்துக.
செயற்பாடு (2) : அறிவுரை கூறுவேன் :
போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவுரை வழங்குக. குறித்த -ஆலோசனை-அறிவுரையானது போதைப்பொருளின்; சட்டத்தீர்ப்பு குறித்தும், அவை தனி நபருக்கும் சமூகத்திற்கும் எவ்வகையில் தீங்கு விளைவிக்கிறது என்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக :
அருவருக்கத்தக்க பானங்கள் அனைத்தும் ஹராமாகும்.
போதைப் பொருளின் அளவு குறைவாக இருந்தால் அதனைப் பயன்படுத்துவது ஆகுமாகும்.
பலவீனத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் பானம் ஹராமாகும்.
போதைப்பொருட்கள் சமூகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் அமைகிறது.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
போதையூட்டக்கூடிய பானங்கள் அனைத்தும் ஹராமாகும். ஏனெனில் அது :
(புத்தியை – புலன்களை- செல்வத்தை) அழித்துவிடுகிறது
அல்குர்ஆனில் பின்வருவனவற்றுள் ஒன்று ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரம் உள்ளது அது:
(மதுபானம் - போதைவஸ்துக்கள் - உடலைபலவீனப்படுத்தும்,சோர்வை ஏற்படுத்தும் வஸ்துக்கள்)
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
இஸ்லாம் ஏன் போதையூட்டிகளையும், போதைப் பொருட்களையும் ஹராமாக்கியுள்ளது ?
போதையூட்டிகளும், போதைப்பொருட்களும் தனிமனிதன் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் மூன்று முக்கிய விளைவுகளை விவரிக்குக.
இஸ்லாமிய அழைப்பியல்
முதலாம் பாடம் : தஃவாவின் (அழைப்பணியின்) அவசியமும் -முக்கியத்துவமும் அதன் சிறப்பும் :
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
அழைப்புப் பணி என்பதன் கருத்தை தெளிவு படுத்திட வேண்டும்.
அழைப்புப் பணியின் (தஃவாவின்) முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திட வேண்டும்.
அழைப்புப்பணியின் (தஃவாவின்) சிறப்பு குறித்த ஆதாரங்களை முன்வைப்பீர்.
அழைப்புப்பணியின் (தஃவாவின்) முக்கியத்தை உணர்ந்து நடந்து கொள்வீர்.
அழைப்புப்பணியின் (தஃவாவின்) சிறப்பை உம்மைச் சூழ இருப்போருக்கு எத்திவைப்பதில் ஆர்வம் காட்டுவீர்.
அறிமுகம்
உனது அபிப்பிராயப் படி, இஸ்லாமிய ஷரீஆவை –கொள்கையை –எத்திவைக்கும் பிரச்சாரகர்கள் இல்லாது விட்டால் என்ன நிகழும் என நினைக்கிறீர்?
அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்
அதன் கருத்து
அதன் முக்கியத்துவம்
அதன் சிறப்பு
அழைப்புப் பணி இறைத்தூதர்களினதும், நபிமார்களினதும் பணியாகும்.
அழைப்புப்பணியில் ஈடுபடுபவர் மனிதர்களில் மிக அழகிய வார்த்தை கூறியவர்.
அழைப்புப்பணி வெற்றிக்கான வழியாகும்
அழைப்பணியில் ஈடுபடுவருக்கு மிகப்பெரும் வெகுமதி-கூலி கிடைக்கின்றமை.
அழைப்பணியானது அழிவிலிருந்தும், நாசத்திலிருந்தும் பாதுகாக்கும் ஒரு கேடயமகும்.
முதலாவது : தஃவா –அழைப்பணி என்பதன் -அர்த்தம்.
அல்லாஹ்வின் பால் அழைத்தல் -அழைப்பணி என்பது இஸ்லாம் உள்ளடக்கியுள்ள அகீதா –கொள்கை -ஷரீஆ- சட்டதிட்டங்கள்- அஹ்லாக் -பண்பாடுகள் ஆகியவற்றை மக்களுக்கு எத்திவைப்பதை குறிக்கும்.
இரண்டாவது : தஃவாப் பணியின் அவசியம் :
இஸ்லாத்தில் அழைப்பணி மிகவும் உயர்வான ஒருபணியாகும். அதனை பின்வரும் விடயங்களின் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
தஃவா : இஸ்லாம் பரவுவதற்கான அடிப்படையாகும். இதன் விளைவாக தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒன்றறை பில்லியனை தாண்டி சென்றுள்ளது.
அல்லாஹ் மாத்திரம் வணங்கப்படவும், மக்கள் நேர்வழி பெறவும் தஃவாவே காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தங்கள் இறைவனை ஏகனாக ஏற்று அவனை வணங்கவும் ஹலால் ஹராமை தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள்.
தஃவாவின் மூலமே மனிதர்களின் நடை முறை விவகாரங்களான கொடுக்கல் வாங்கல் மற்றும் திருமண விவகாரங்கள் இது போன்ற ஏனைய விடயங்கள் சீர்பெறுகின்றன.
தஃவாவின் மூலமே மனிதர்களின் குடும்ப மற்றும் சமூக விவகாரகங்கள் சீர்பெறுகின்றன
தஃவாவின் மூலமே மனிதர்களின் பண்பாடுகள் மேம்பட்டு, அவர்களுக்கு மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறைந்து, குரோதம் பொறாமை போன்ற தீய குணங்கள் மறைந்து போகிறன.
மூன்றாவது : தஃவா செய்வதன் சிறப்பு
அழைப்புப் பணி இறைத்தூதர்களினதும், நபிமார்களினதும் பணியாகும்.
தஃவா, நபிமார்கள், ரஸுல்மார்கள் மற்றும் சீர்த்திருத்தவாதிகளனது பணியாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: "அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திற்கு நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்". (அன்நஹ்ல் :36)
அழைப்புப்பணியில் ஈடுபடுவர் மனிதர்களில் மிக அழகிய வார்த்தை கூறியவர்;.
இறை அழைப்பாளரே மனிதர்களில் மிக அழகிய வார்த்தை பேசுபவர். இதனைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் : "('எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் உள்ளார்?'' (புஸ்ஸிலத் : 33).
அழைப்புப்பணி வெற்றிக்கான வழியாகும்
தஃவா –அழைப்புப்பணி- மறுமையில் ஒரு மனிதனின் மிகப்பெரும் வெற்றிக்கும் விமோசனத்திற்குமான வழியாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்". (ஆல இம்ரான் : 104).
அழைப்பணியில் ஈடுபடுவருக்கு மிகப்பெரும் வெகுமதி-கூலி கிடைக்கின்றமை.
யாரெல்லாம்; அழைப்பாளர் போதித்த நன்மையான விடயங்களை பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் அந்த அழைப்பாளருக்கும் கிடைக்கும். இது மாபெரும் பேராகும். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: ''எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது". ஆதாரம் : முஸ்லிம் 2674.
அழைப்பணியானது அழிவிலிருந்தும், நாசத்திலிருந்தும் பாதுகாக்கும் ஒரு கேடயமகும்.
அழைப்புபணியில் ஈடுபடுவோர், சீர்திருத்தம், மார்க்கத்தை எத்திவைத்தல், நன்மை ஏவி தீமையை தடுத்தல் போன்ற பணிகளில் தங்களது பங்களிப்பை உரிய முறையில் மேற்கொண்டால் அல்லாஹ் இவ்வுலகில் அவர்களின் சமூகத்தை அழிவு தண்டனை போன்றவற்றிலிருந்து பாதுகபாப்பான் என்பதை பின்வரும் வசனத்தில் உத்தரவாதப்படுத்துகிறான் : "உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் ஆடம்பரத்தில் தொடர்ந்தும் இருந்ததோடு அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்". (ஹூத் : 116)
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தவிர- ஒரு முஸ்லிம் மக்களை அல்லாஹ்வின் பால் அழைத்து அவர்களுக்கு நேரான பாதையை காட்டுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகமான சிறப்புகள் உண்டு என்பதை கவனத்திற் கொள்க.
செயற்பாடுகள்
செயல்பாடு (1) : பங்கு பற்றி பதிலளிப்பேன் :
உமது சக நண்பர்களின் துணையுடன், பின்வரும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறிப்பிடும்; தஃவாவின் சிறப்புகளை தெளிவுபடுத்துக :
அல்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் தஃவாவின் சிறப்புகள்
அல்லாஹ் குறிப்பிடுகிறான் : காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (ஸுறா அல்-அஸ்ர் -1-3)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக. உம்மால்; ஒருவர் நேர் வழி பெறுவது, அது நீ சிவப்பு ஒட்டகங்களை வைத்திருப்பதை விட உமக்கு சிறந்ததாகும்' (ஆதாரம் : திர்மிதீ 2685).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''மக்களுக்கு நன்மையான விடயங்களை கற்றக்கொடுப்பவருக்கு அல்லாஹ்வும் வானவர்களும் பொந்தில் இருக்கும் எறும்பு, கடலில் உள்ள மீன்கள் கூட பிரார்த்தனை புரிகிறன". (ஆதாரம் : திர்மிதீ 2685).
செயற்பாடு : (2)கலந்துரையாடி அபிப்பிராயங்களை கூறுவேன்:
அழைப்பணியில் மக்களை ஈடுபடுத்துவதற்காக அவர்களை ஆர்வமூட்டும் சில வழிமுறைகள் பரிந்துரைக்க. இது குறித்து உமது சக நண்பர்களுடன் கலந்துரையாடுக.
செயற்பாடு (3) : பார்த்து விடையளிப்பேன்
பின்வரும் வீடியே கிளிப்பை பார்த்து அதில் அழைப்புப் பணி தொடர்பாக கற்றுக்கொள்ளக் கூடிய மிக முக்கிய விடயங்களை தெளிவு படுத்துக.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√ ) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
அழைப்புப்பணி, இஸ்லாம் பரவுவதற்கான அடிப்படையாகும்.
அழைப்புப்பணி- வணக்க வழிபாடுகள் தொடர்பான விடயங்களுக்கு மாத்திரம் உரியது. (×)
தாஇக்கு -அழைப்புப்பணி செய்வோருக்கு - கிடைக்கும் கூலி பண்மடங்காகும் .
தாஇகள் - இறை அழைப்பாளர்கள் நபிமார்களின் வழியில் செல்கிறார்கள்.
சமூக சீர்த்திருத்தம் அரசியல் வாதிகளுக்குரியது (×)
கேள்வி 2 : அடைப்புக்குள் குறிப்பிடப்பிடப்பட்ட விடயங்களுக்கு விடைதருக :
தஃவா – இறை அழைப்புப்பணி நபிமார்களின் மிக உன்னத பணியாகும். (இதனை விவரிக்குக)
இறை அழைப்புப்பணி இம்மை மறுமை வெற்றிக்கான காரணமாகும். (அல்குர்ஆன் - அல்ஹதீஸிலிருந்து ஆதாரம் தருக.
அழைப்புப்பணி மும்முரமாக மேற்கொள்ளப்படும் சமூகங்களை அல்லாஹ் பாதுகாக்கிறான் (காரணம் கூறுக.)
இரண்டாம் பாடம் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மக்கா கால தஃவாப் பணி குறித்த ஒரு சிறு குறிப்பு
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள் :
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது :
மக்காவில் அழைப்புப் பணியின் வளர்ச்சிக் கட்டங்களை அவதானத்தில் கொள்வீர்
அழைப்புப்பணி குறித்த இணைவைப்பாளர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திடுவீர்
மக்காவில் இஸ்லாமிய தஃவா (அழைப்பியலின்) வின் போக்கு, வழிமுறை குறித்த முடிவுகளைப் பெறுவீர்.
இஸ்லாமிய பிரச்சாரகர் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய மிக முக்கிய பண்புகளை ஒவ்வொன்றாகக் குறிப்பிடுவீர்.
தஃவாவில் -அழைப்புப்பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினதும், ஸஹாபக்களினதும் உறுதி மற்றும் பொறுமையை மதித்து நடந்து கொள்வீர்.
அழைப்புப்பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறை மற்றும் பண்பாடுகளை பின்பற்றி ஒழுகுவீர்.
அறபுகளிடத்தில் காணப்பட்ட மத சீர்கேடு, சமூகக் கொடுமை, அரசியல் பிளவுக்கு மத்தியில் மனிதர்களை அக்காரிருளிருந்து ஒளியின் பால் வழிப்படுத்த அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தூதராக அனுப்பி வைத்தான். இப்பாடத்தில் நபியவர்களின் மக்கா கால அழைப்பணி குறித்த ஒரு சுருக்கத்தை பார்க்கவிருக்கிறோம்
இரண்டாம் பாடம் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மக்கா கால தஃவாப் பணி குறித்த ஒரு சிறு குறிப்பு
1-அழைப்பணி குறித்த அறிமுகமும் ஆரம்பமும்.
2-இரகசியப்பிரச்சாரம்
3-பகிரங்கப் பிரச்சாரம்
4-பிரச்சாரம் குறித்த இணைவைப்பாளர்களின் நிலைப்பாடு
5-இணைவைப்பாளர்களின் தொல்லை-நோவினை- குறித்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நிலைப்பாடு.
6-தாஇப் வாசிகளுக்கான பிரச்சாரம் (அழைப்பு)
7-மதீனாவாசிகளுக்கான அழைப்பு
8-மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லல்
அழைப்பணி குறித்த அறிமுகமும் ஆரம்பமும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிறு பராயத்திலும் அவரின் வாலிபப்பருத்திலும் ஒழுக்கத்திலும் நற்குணத்திலும் பிரபல்யம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். அவரகள்; தம் நாற்பதாம் வயதை நெருங்கும் போது வணக்கத்திற்காகவும், மனித சமுதாயத்தின் மீட்சி குறித்து சிந்திப்பதற்காகவும் ஹிராக்குகையில் தனிமையில் இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் தம் நாற்பதாம் வயதில் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் ஜிப்ரீல் அலைஹிவஸல்லம் அவர்கள் ஸூறா அலக்கின் ஆரம்ப ஜந்து வசனங்களுடன் இறங்கி அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அல்லாஹ் நபித்துவத்தை அவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தினான்.
இரகசியப்பிரச்சாரம் :
நபி ஸல்லல்லாஹுஅலைஹிஸ்லாம் அவர்கள் ஒரிறைக்கொள்கையின் பால் மக்களை அழைக்க துவங்கினார்கள். அப்போது அவர்களின் பிரச்சார வழிமுறையானது இரகசியமானதும் தனிநபர் ரீதியிலானதுமாக இருந்தது. அகீதாவை சீர் செய்தல் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தல் இணைவைப்பாளர்களின் தொந்தரவு மற்றும் கெடுபிடிகள் அனைத்தையும் சகித்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துதல் போன்ற வற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இக்காலப்பிரிவில் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக முதலில் ஏற்றுக்கொண்டவர்களில்; நபியவர்களின் மனைவி அன்னை கதீஜாவும் அவர்களின் சிறிய தந்தையின் மகன் அலி இப்னு அபீதாலிபும் அவர்களின் தோழர் அபூபக்கரும், அவர்களின் அடிமை ஸைத் இப்னு ஹாரிஸாவும் இருந்தார்கள்.
பகிரங்கப் பிரச்சாரம் :
இரகசியப்பிரச்சாரத்தில் மூன்றாண்டு ஈடுபட்டதைத் தொடர்ந்து நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பகிரங்கப் பிரச்சாரச்சாரத்தை ஆரம்பித்தார்கள் .ஸபா குன்றின் மீதேறி குறைஷிக் கோத்திரங்கள் அனைத்தையும் அழைத்து இஸ்லாத்தை முன்வைத்தார்கள். அப்போது அவரின் பெரிய தந்தை அபூலஹபும், குறைஷித்தலைவர்களும் மறுத்து பொய்பித்தார்கள். என்றாலும் இவர்களின் எதிர்ப்பால் நபியவர்கள் சோர்வடையவில்லை. தொடர்ந்தும் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.
பிரச்சாரம் குறித்த இணைவைப்பாளர்களின் நிலைப்பாடு:
குறைஷித் தலைவர்கள் நபியவர்களின் பிரச்சாரத்தை தடுப்பதற்கு பல வழிகளிலும் முனைப்போடு செயற்பட்டார்கள். அவ்வாறு நபியவர்களின் பிரச்சாரத்தை தடுப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட சில வழிமுறைகள் பின்வருமாறு :
முதலாவது : நபியவர்களின் பெரிய தந்தையிடம் இப்பிரச்சாரத்தை நிறுத்துமாறு வேண்டிகொண்டமை. ஆனாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தஃவாவை முன்னெடுப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.
இரண்டாவது : நபியவர்களை பரிகாசம் செய்து அவரைப் புறக்கணித்தமையும், பைத்தியம் சூனியம் பொய் போன்ற அபத்தமான குற்றசாட்டுகளை முன்வைத்தமையும் .
நபியவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தியமை, குறிப்பாக பிலால் இப்னு ரபாஹ், ஹப்பாப் இப்னுல் அரத், அம்மார் இப்னு யாஸிர் போன்ற நலிவுற்றவர்கள் மற்றும் அடிமைகளை கொடுமைப்படுத்தியமை.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு உதவி செய்து ஓத்தாசை வழங்கும் உறவினர்களான பனூஹாஷிம் குடும்பத்தை ஒதுக்கி வைத்தமை. அதாவது குறைஷிக் காபிர்கள் பனூ ஹாஷிம்களுடன் எவ்விதக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடாது, திருமண உறவுகளையோ ஏற்படுத்திக் கொள்ளாது அவர்களை ஒதுங்கி இருந்தமை.இந்த ஊர் நீக்கம் மூன்று வருடங்கள் தொடர்ந்தன. பின் சில கோத்திரத் தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாக இப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
இணைவைப்பாளர்களின் தொல்லை-நோவினை- குறித்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நிலைப்பாடு.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும், அவர்களின் தோழர்களும் மார்க்கத்தில் நிலை குழையாது உறுதியாக இருந்தோடு, அல்லாஹ்வின் கட்டளைக்கு மிகவும் பொறுமையோடு கட்டுப்பட்டு நடந்து கொண்டார்கள்.
குறைஷிகள் காணாத வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களை அல் அர்கம் இப்னு அபில் அர்க்கம் அவர்களின் விட்டில் சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
இணைவைப்பாளர்கள் நபித்தோழர்களை கொடுமைப்படுத்தியதைக் கண்ட பின் நபியவர்கள் தூதராக அனுப்பப்பட்டு ஐந்தாம் வருடத்தில் தனது தோழர்களில் நலிவுற்றோரை ஹபஷாவிற்கு –அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செல்லுமாறு –புலம்பெயர்ந்து செல்லுமாறு – ஆணையிட்டார்கள்.
துக்க ஆண்டில் தாஇப் மக்களுக்கான பிரச்சாரம்
நபித்துவத்தின் பத்தாம் வருடம் துக்க ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்) என அறியப்படுகிறது. காரணம் இவ்வாண்டில் தான் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவி கதீஜாவும்,அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபும் மரணித்தார்கள். இதனால் குறைஷிக்காபிர்கள் நபியவர்களுக்கு நோவினை செய்யத் துணிந்தார்கள். இதே ஆண்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தாஇப் வாசிகளை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு தீர்மானித்து அங்கு செல்ல, அப்பிரதேசத்தினர் அவர்களின் அழைப்பை ஏற்காது அவர்களுக்கு நோவினை செய்தார்கள். இவ்வாறாக நபியர்வகள் எதிர்கொண்ட மிகப்பெரும் சோதனைகளைப் பின்னனியாகக் கொண்டே இவ்வாண்டை 'துக்க ஆண்டு' என அறிஞர்கள் வழங்குகிறார்கள்.
இவ்வாறான நிலையில் இருந்த நபியவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தி, அவர்களின் துக்கத்திற்கு ஆறுதல் அளிக்கவும், இஸ்லாமியப் பிரச்சாரத்தை முன்னெப்பதனை ஊக்குவிக்கவும். இஸ்ராஃ மிஃராஜ் எனும் விண்ணுலகப்பயணத்திற்கு அவர்களைத் தேர்வு செய்தான். இது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அற்புதங்களில் ஒன்றாகும்.
ஹஜ் காலங்களில் மதீனாவாசிகளுக்கான அழைப்பு.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பாக மக்காவிற்கு வரும் பிரமுகர்களை அழைப்பதில் கவனம் செலுத்தினார்கள். நபித்துவத்தின் 11 வது வருடம் மதீனாவிலிருந்து வந்த ஆறு வாலிபர்களை இஸ்லாத்தின் பால் அழைக்க, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு தமது சமூகத்தை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காக மதீனாவுக்கு திரும்பிச் சென்றார்கள்.
நபித்துவத்தின் பன்னிரெண்டாம் வருடம் 12 ஆண்கள் நபியர்வர்களுக்கு இஸ்லாத்தை தழுவி பைஅத் –உறுதிப்பிரமாணம் -செய்தார்கள். இதுவே முதலாம் அகபா உடன்படிக்கையாகும்.
நபித்துவத்தின் 13ம் வருடம் 73 ஆண்களும் இரண்டு பெண்களும் நபியவர்களை ஏற்று பைஅத் செய்தனர். அத்துடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மதீனாவிற்கு புலம்பெயர்ந்து -ஹிஜ்ரத் செய்து வந்தால் அவர்களுக்கு பூரண பாதுகாப்பும் உதவியும் வழங்குவதாக உறுதியளித்தனர். இது இரண்டாம் அகபா உடன் படிக்கை என வழங்கப்படுகிறது.
மதீனா ஹிஜ்ரத்
(இரண்டாம் அகபா உடன்படிக்கைக்குப் பின்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை மதீனாவுக்குப் (புலம் பெயர்ந்து) ஹிஜ்ரத் செல்லுமாறு கட்டளையிட, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டார்கள். அல்லலாஹ் தனது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஹிஜ்ரத் செய்ய அனுமதி வழங்கிய போது, நபியவர்கள் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று, அவர்கள் இருவரும் ஒன்றாக ஹிஜ்ரத் செய்வதாகக் கூறினார்கள். குறைஷியர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பித்து மக்காவிலிருந்து வெளியேறுவதற்கான துல்லியமான ஒருதிட்டத்தை தயார் செய்தார்கள், அத்திட்டம் என்னவென்றால் குறைஷிகளின் கண்களுக்கு காணாது தௌவ்ர் குகையில் மூன்று நாட்டகள் தங்கியிருந்தார்கள், பின்னர் இருவரும் குகையை விட்டு வெளியேறி வழமையான பதையினூடாக அன்றி மாற்றுப் பதையினூடாக மதீனாவுக்கு சென்றார்கள். பயண வழிகாட்டியாக அப்துல்லாஹ் பின் உரைகித் என்றழைக்கப்படும் ஒரு இறைமறுப்பாளன் இருந்தான், அவர்கள் எட்டு நாட்களுக்குப் பிறகு மதீனாவை வந்தடைநதார்கள். நபி (ஸல்) அவரகளின் வருகையால் பூரித்துப்போன மதீனா வாசிகள் அவர்களுக்கு அமோக வரவேற்பு வழங்கி கௌரவித்தனர்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) சக மாணவர்களின் பங்குபற்றுதலுடன் முடிவுகளைப்பெறுவேன்
நீ கற்றதை அடிப்படையாகக் கொண்டு உமது வகுப்பு தோழர்களின் பங்குபற்றுதலுடன் பின்வருவனற்றை தெளிவுபடுத்துவீராக :
எப்போது ஒரு தாஈ தனது பிரச்சாரத்தை இரகசியமாகச் செய்ய வேண்டும்? எப்போது அவர் பகிரங்கமாகச் வேண்டும்?
தஃவாவின்-பிரச்சாரம் -வெற்றியில் திட்டமிடலின் முக்கியத்துவம் என்ன?
செயற்பாடு (2) –ஒரு கடிதத்தை அனுப்புவேன் :
பொறுமையும், உறுதியும் தாஈக்கள் கடைப்பிடித்து ஓழுக வேண்ய மிக முக்கிய பண்புகளாகும். இதன் அடிப்படையில் :
நீர் இந்தப் பாடத்தை கற்றதின் அடிப்படையில் இக்கூற்று சரியானது என்பதற்கான ஆதாரத்தை குறிப்பிடுக.
பிரச்சார களத்தில் முதல் சோதனையை அல்லது பிரச்சினையை எதிர்கொண்ட உடனே தஃவாப் பிரச்சாரத்தைவிட்டும் விலகிக்கொள்ளும் பிரச்சாரகர்களுக்கு அவர்களை வழிப்படுத்து முகமாக கடிதம் ஒன்றை வரைக.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (√) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்கும் பணியை கூட்டாகவே ஆரம்பித்தார்கள் (×)
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இஸ்ரா மிஃராஜ் பயணத்தின் மூலம் கண்ணியப்படுத்தினான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை விவாதம் கருத்துப் பரிமாற்றம், உரையாடல் மூலம் இணைவைப்பாளர்கள் எதிர்கொண்டனர். (×)
ஹபஷாவிற்கான (அபீஸீனியாவிற்கான) ஹிஜ்ரத் நலிவுற்ற முஸ்லிம்களின் சுமையை குறைத்தது.
திட்டமிடலும், பொறுமையும் தஃவாவின் அடிப்படைகள் ஆகும்.
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தாஇப் வாசிகளை இஸ்லாத்தின் பால் அழைக்க சென்றதற்கான காரணம் :
(தாஇப் வாசிகள் மக்காவாசிகளை விட சிறப்புக்குறியவர்களாக காணப்பட்டமை – மக்காவாசிளின் பிடிவாதம்- தாஇப்வாசிகளின் பெருந்தன்மை)
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்ல அடிப்படையாக அமைந்த நிகழ்வுகளில் ஒன்று :
(இரு அகபா உடன்படிக்கைள்- தாஇப் பயணம் - இஸ்ரா மிஃராஜ் விண்ணுலகப் பயணம்-)
இஸ்லாத்தை முதன்முதலில் (தொடக்காலத்தில் ) ஏற்றுக்கொண்டோரில் ஒருவர் :
(பிலால் இப்னு ரபாஹ் - காலித் இப்னுல் வலீத் - முஆவியா இப்னு அபீ ஸுப்யான்) ரழியல்லாஹு அன்ஹும்.
கேள்வி 3: பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக:
பாடத்தில் இடம்பெற்ற நபியவர்களின் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மூன்று பயன்களை குறிப்பிடுக.
நபியவர்களின் மதீனா ஹிஜ்ரத் வெற்றிக்கான கரணங்களைத் தெளிவுபடுத்துக.
நுபுவத்தின் பத்தாம் வருடம் 'துயர ஆண்டு' என்ற பெயரால் அழைக்கப்டுவது ஏன்?
மூன்றாம் பாடம்; : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மதீனாப் பிரச்சாரம் குறித்த சுருக்கவுரை.
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
மதீனாவில் அரசொன்றை நிர்மானிக்க உதவிய காரணிகளை தெளிவுபடுத்துவீர்.
மதீனாக் காலப்பகுதியில் நிகழ்ந்த மிகமுக்கியமான போர்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிடுவீர்.
மக்கா மற்றும் மதீனாக் கால தஃவா வழிமுறைகளை ஒப்பீடு செய்வீர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினதும் அவர்களின் தோழர்களினதும் போராட்டத்தின் பெருமானத்தை மெச்ச வேண்டும்.
இறுதி ஹஜ்ஜில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் மிகப்பிரதான விடயங்களை சுருக்கமாக குறிப்பிடுவீர்.
நாம் முன்னைய பாடங்களில் மக்கா கால பிரச்சாரத்தின் சிறப்புப் பண்புகள் குறித்த விடயங்களைக் கற்றுக்கொண்டோம், இந்தப் பாடத்தில் மதீனாக்கால தஃவாவின் முக்கிய சிறப்புப் பண்புகளை பின்வரும் பிரதான தலைப்புகளினூடாக கற்கவிருக்கிறோம். அவை பின்வருமாறு :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மதீனாப் பிரச்சாரம் குறித்த சுருக்கவுரை.
1-இறை அழைப்பியலில் (தஃவாச் செய்வதில்) மஸ்ஜிதின் (பள்ளிவாயிலின்) பங்களிப்பு.
2-பிரச்சார (தஃவா) சூழலை ஸ்திரப்படுத்துவதற்காக உழைத்தல்.
3- பிரச்சார (தஃவா) த்தை பாதுகாப்பதில் இராணுவ நடவடிக்கைகளின் பங்கு.
4-இராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெற்றதன் பின் தஃவாவை பரப்புதல்.
5-நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மரணம்.
இறை அழைப்பியலில் (தஃவாச் செய்வதில்) மஸ்ஜி;தின் (பள்ளிவாயிலின்;) பங்களிப்பு.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் மதீனாவுக்குச் சென்று அங்கு முதல் வேலையாக மஸ்ஜிதுன்னபவியை நிர்மானிக்கும் பணியை ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் வாழ்வில் பள்ளிவாயில் பெற்றிருக்கும் முக்கியத்துவமே இதற்குக் காரணமாகும். பள்ளிவாயிலானது தொழுகை நிறைவேற்றும் தளமாக மாத்திரம் அல்லாது வரலாற்றில் அதிசிறந்த தலைமுறைகள் கற்று பயிற்றுவிக்கப்பட்ட இறையியல் பள்ளிக் கூடமாகவும் காணப்பட்டது. தீர்ப்புக் கூறும் நீதிமன் றமாகவும், மக்களுக்கு மத்தியில் நல்லலிணக்கத்தை ஏற்படுத்தும் தளமாகவும், பொதுவிவகாரஙகள் குறித்து ஆலோசனை செய்யும் மன்றமாகவும், தூதுக்குழுக்களை வரவேற்கும் தளமாகவும், புனிதப்போர்களுக்கு போராளிகளை அனுப்பும் இராணுவ மைய்யமாகவும் காணப்பட்டது.
பிரச்சார (தஃவா) சூழலை ஸ்திரப்படுத்துவதற்காக உழைத்தல் :
மதீனாவின் சூழல். பாதுகாப்பும்,ஸ்திரத்தன்மையும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடுமையாக உழைத்தார்கள். இதற்காக அவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
முதலாவது : இஸ்லாத்திற்கு முன்னிருந்தே பகையும் போருமாக இருந்த அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரத்திரத்தாரிடையே சமாதானம் செய்து வைத்தார்கள். இதனால் அவர்களுக்கிடையே பகை நீங்கி அன்பும் இஸ்லாமிய சகோதரத்துவமும் தலைத்தோங்கியது.
இரண்டாவது : முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளுக்கிடையில் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் பரம்பரை உறவு முறையை ஒத்த உரிமைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதன் மூலம் இரத்த மற்றும் பரம்பரை முறை உறவின் மூலம் ஏற்படும் சகோதரத்துவ உறவை விட இஸ்லாமிய கொள்கை உறவு மேலோங்கிக் காணப்பட்டது.
மூன்றாவது : முஸ்லிம் யூத உறவை ஒழுங்கு படுத்திடவும், அவர்களின் ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மதீனா நகர் பாதுகாப்பும் அமைதியும் நிறைந்ததாக இருக்கவும், முஸ்லிம்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் நோக்கிலும் மதீனாவில் வாழ்ந்த யூத கோத்திரங்களான பனூ கைனுகா,பனுன் நழீர், பனு குறைழா போன்றோருடன் ஒரு ஒப்பந்தத்தை நபியவர்கள் மேற்கொண்டார்கள்.
பிரச்சார (தஃவா) த்தை பாதுகாப்பதில் இராணுவ நடவடிக்கைகளின் பங்கு
மிக முக்கிய போர்கள்
தஃவாவைப்பாதுகாக்க ஒரு அதிகாரத்தின் தேவை காணப்பட்டது. மதீனாவில் முஸ்லிம்கள் அதிகாரமிக்க ஒரு சமூகமாக மாறிய போது தங்களின் எதிரிகளுக்கு எதிராக போர் புரிவதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கினான். அந்த வகையில் தங்களது எதிரிகளுக்கு எதிராக மேற்கொண்ட மிக முக்கிய போர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:
பத்ர் யுத்தம்
பனூகைனுகாஃ போர்
உஹுத் யுத்தம்.
பனுன்நழீர் போர்
ஹன்தக் (அகழிப்) போர்
பனு குரைழாப் போர்
ஹுதைபியாப் போர்
கைபர் போர்
மக்கா வெற்றி
ஹுனைன் போர்
ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ரமழான் 17 ல் பத்ருப் போர் நிகழ்ந்தது. இது முஸ்லிம்கள் கலந்து கொண்ட மிகப்பெரும் போர்களில் முதலாவதாகும்.
இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தும் குறைஷிக் காபிர்களுக்கெதிராக மிகப் பெரும் வெற்றியை அல்லாஹ் கொடுத்தான்.
ஹிஜ்ரி மூன்று ஷவ்வால் மாதம் உஹுத் போர் நடைபெற்றது. இந்தப் போர் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றியைக்கொடுத்தாலும் இறுதியில் தோல்வியில் முடிவடைந்தது. இப்போர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்;கும் முஸ்லிம்களக்கும் பெரும் துயரை ஏற்படுத்தியிருந்தது.
ஹிஜ்ரி 5 ஐந்து ஷவ்வால் மாதத்தில் அஹ்ஸாப் போர் நடைபெற்றது. மதீனாவைச் சுழ மிகப்பெரும் அகழியைத் தோன்றி இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றனர். அதன் பின் அல்லாஹ் காபிர்களுக்கு எதிராக மிகப்பெரும் காற்றை அனுப்பினான். இதனால் அவர்கள் தோல்வியுற்று மீண்டும் மக்கா நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டனர்.
ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ஷவ்வால் மாதத்தில் பனூகைனுகாஃ குலத்தை சேர்ந்த யூதர்கள் நபியவர்களுடனான ஒப்பந்தை –உடன்படிக்கையை முறித்துக்கொண்டனர். இதன் காரணமாக மதீனாவை விட்டும் அவர்கள் வெளியேற்றப் பட்டனர். அதே போல் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் புரிய குரைஷிகளை பனுன் நழீர் யூதர்கள் தூண்டியதன் காரணமாக அவர்களும்; ஹி 4 ல் வெளியேற்றப்பட்டனர். ஹி ஐந்தாம் வருடம் ஹன்தக் போரில் இணைவைப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களை தாக்க விழைந்ததன் காரணமாக பனூ குறைழாக்களும் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு துல்கதா மாதத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது. அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் தோழர்களும்; உம்ரா செய்வதற்காக மக்காவிற்குச் சென்றனர். அவர்கள் ஹுதைபிய்யா என்ற இடத்தை வந்தடைந்தபோது, அவர்களை குரைஷிகள் மக்காவுக்குச் செல்லாது தடுத்தனர். அவ்வேளை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கும் குரைஷிகளுக்கும் இடையிலான சண்டை பத்து வருடங்களுக்கு நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது
(ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் கைபர் வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்வு நடந்தேறியது. அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சண்டையிடத் தூண்டிய யூதர்களுக்கு தக்க பாடம் புகட்ட சென்றார்கள். முஸ்லிம்கள் அவர்களை முற்றுகையிட்டு, அவர்கள் சரணடையும் வரை அவர்களுடன் போரிட்டனர்.
ஹிஜ்ரி 8 ரமழான் மாதத்தில், குறைஷியர் ஹுதைபியா ஒப்பந்தத்தை –உடன்படிக்கையை- மீறியதை தொடர்ந்து மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக மக்கள் இஸ்லாத்தினுள் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர்.
ஹி 8 ம் வருடம் ஷவ்வால் மாதத்தில் ஹுனைன் போர் நிகழ்ந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹுனைன் பள்ளத்தாக்கில் ஹவாஸின் மற்றும் ஸகீப் கோத்திரத்தை எதிர்த்தார்கள். இந்த யுத்தத்தில் நபியவர்களுடன் 12000 முஸ்லிம்கள் இருந்ததோடு இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று அதிகமான போர்ப் பொருட்களையும் கைப்பற்றினர்.
இராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெற்றதன் பின் தஃவாவை பரப்புதல்.
இணைவைப்பாளர்கள் மற்றும் யூதர்களுடனான இராணுவ ரீதியான மோதல்களின் வெற்றியோடு, அரபு தீபகற்பத்தின் எஞ்சிய பகுதியிலும் அதற்கு வெளியேயும் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடிக்கி விடுவதில் அதீத கவனம் செலுத்தினார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கொண்ட விடயங்களில் பின்வருன முக்கியமான விடயங்களாகும். :
அரபுத் தீப கற்பத்தை சூழ உள்ள மிகப்பெரும் ராஜ்யங்களின் சக்கரவர்த்திகளுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். அந்தவகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாரசீக மன்னன் கிஸ்ரா, ரோம மன்னன் கைஸர், அபீஸீனிய நஜ்ஜாசிக்கும் எகிப்திய ஆட்சியாளர் முகவ்கிஸுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்தார்கள்.
மக்கா வெற்றியைத் தொடர்ந்து ஹிஜ்ரி 9 ல் அறபுத் தூதுக்குழுக்கள் பல இஸ்லாத்தை தழுவிக் கொண்டன. அவற்றுள் ஸகீப் நஜ்ரான் அஷ்அரிய்யீன் போன்ற பல தூதுக்குழுக்கள் முக்கியமானவையாகும்.
10ம் வருடம் நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விடை பெரும் ஹஜ் ஹஜ்ஜதுல் வதாவை நிறைவேற்றினார். இதன்போது நபியவர்கள் மக்களுக்கு ஹஜ் கிரிகைகளை கற்றுக் கொடுத்தார்கள். அறபா தினத்தில் பிரபல்யமிக்க ஹஜ்ஜதுல் வதா இறுதி உரையை மக்களுக்கு ஆற்றினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மரணம்
இந்த நீண்ட தஃவாப் பயணத்தைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோய் வாய்யப்பட்டு அது மிகவும் கடுமையாகியது. எனவே அபூபக்ர் (ரழி) அவர்களிடம் முஸ்லிம்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடாத்துமாறு ஆணையிட்டார்கள். ஹிஜ்ரி 11 ம் வருடம் ரபீஉனில் அவ்வல் மாதம் 12 ல், திங்கட் கிழமை நபியவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றார்கள்.
நம் சார்பாகவும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் சார்பாகவும் மிகச்சிறந்த நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கி வைப்பானாக. ஸலாத்தும் ஸலாமும் அன்னாரின் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் குடும்பத்தார் மீதும் ,அவர்களின் வழிமுறையை தூய முறையில் பின்பற்றி மறுமை நாள் வரை வாழும் அனைத்து நல்லோர் மீதிலும் உண்டாவதாக.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஒப்பீடு செய்வேன்
நீ கற்றவிடயங்களினூடாக உமது வகுப்புத் தோழர்களுடன் பின்வரும் விடயங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்வீராக ( உமது விடைகளை பின்வரும் அட்டவணையில் பதிவு செய்வீராக):
மக்கா மற்றும் மதீனா கால தஃவா வழிமுறைகளை ஒப்பீடு செய்வீராக.
தஃவாத் துறையில் மஸ்ஜிதுன்னபவியின் பங்களிப்பையும் நமது சமகால பள்ளிவாயில்களின் பங்களிப்பையும் ஒப்பீடுசெய்க.
மக்காவில் மதீனாவில்
தஃவா வழிமுறை
மஸ்ஜிதுன்னபவி -சமகால பள்ளிவாயில்கள்
மஸ்ஜிதின் பங்களிப்பு
செயற்பாடு (2) : அவதானித்து சுருக்கத்தை குறிப்பிடுவேன்.
குத்பதுல் வதாஃ- நபியவர்களின் இறுதி உரையில் -குறிப்பிடப்பட்ட விடயங்களில் பிரதான விடயங்களை சுருக்கமாக குறிப்பிடுக:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், நீங்கள் இருக்கும் இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே உங்கள் உயிர்களும், உடமைகளும், புனிதமானவைகளாகும், அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைக்கப்பப்பட்டு விட்டன. அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்). வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் தள்ளுபடி செய்கிறேன். பெண்கள் விடயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்..... உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ''நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ''இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!' என்று முடித்தார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1218).
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
ஸுல்ஹுல் ஹுதபியா சமாதான ஒப்பந்தம் இஸ்லாமிய பிரச்சாரத்திற்குக் கிடைத்த மிகத் தெளிவான வெற்றியாகக் கருதப்படுகிறது.
கன்தக் (அகழி) போர் ஹிஜ்ரி மூன்றாம் வருடம் நடைபெற்றது. (×)
இராணுவ வெற்றியை சார்ந்து தஃவாவின் வெற்றி காணப்படுகிறது.
மக்கா வெற்றியின் தாக்க விளைவானது தஃவாவில் உஹதுப் போரின் தாக்க விளைவை ஒத்திருக்கிறது. (×)
அல்லாஹ்வுடனான இறுக்கமான உறவு ஒரு தாஇயிக்குரிய மிக முக்கிய பண்புகளின் ஒன்றாகும்.
கேள்வி 2: பின்வரும் போர்களை அவைகளின் காலப்பகுதியைக் அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குபடுத்துக.
(ஹுனைன் போர்,பத்ருப் போர்,பனுன் நழீர் போர், பனு கைனுகாஃ போர், ஹைபர் போர் )
கேள்வி 3 : பின்வரும் வசனங்களில் பிழைகள் காணப்படின் அவற்றை சரி செய்து, மீண்டும் எழுதுக.
அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரத்தாரிடையே காணப்பட்ட பகை நபியவர்களின் வபாத் -மரணம் வரை தொடர்ந்தது.
அன்ஸாரிகள் மதீனாவின் எல்லைப்புறங்களில் முஹாஜிர்களுக்கென பிரத்தியேகமான தனிக்குடியிருப்புகளை கட்டினாரகள்.
யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தைத் நிறைவேற்றினார்கள்.
கேள்வி 4: பின்வரும் ஒவ்வொன்றினதும் நோக்கங்களைத் தெளிவு படுத்துக.
முஹாஜிர் அன்ஸாரிகளுக்கிடையிலான சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியமை.
மதீனாவில் யூத மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான உடன்படிக்கையொன்றை செய்து கொண்டமை.
நான்காம் பாடம் : நன்மையை ஏவித் தீமையை தடுத்தல் பணியின் அந்தஸ்து
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
நன்மையை ஏவி தீமையை தடுத்தலின் சட்ட நிலையை தெளிவு படுத்துவீர்.
நன்மையை ஏவி தீமையை தடுத்தலின் சிறப்புக்கள் ஒவ்வொன்றையும் விவரித்துக் கூறுவீர்.
நன்மையை ஏவி தீமையை தடுத்தலின் மேன்மை குறித்த ஆதாரங்களை முன்வைப்பீர்.
நன்மையை ஏவி தீமையை தடுத்தல் பணியை விட்டுவிடுவதன் ஆபத்தை உணர்ந்து நடப்பீர்
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பீர்
அல்லாஹ் கூறுகிறான் : "மனிதர்களுக்காக தோற்றுவிக்க்கப்பட்ட சிறந்த சமூகமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள், தீமையை தடுக்கின்றீர்கள், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஆல இம்ரான் : 110).
மேற்குறிப்பிட்ட வசனத்தை அவதானித்து விடை அளிக்குக.
இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் அந்தஸ்த்தால் உயர்த்தி, ஏனைய சமூகங்களை விட அதி சிறந்த சமூகமாக ஆக்கியுள்ளான். இந்த வகையில் இஸ்லாமிய சமூகமானது ஏனைய சமூதாயங்களிருந்து இரண்டு பிரதான பண்புகள் மூலம் தனித்துவம் பெற்றுள்ளது அவை எவை?
நன்மையை ஏவித் தீமையை தடுத்தல் பணியின் அந்தஸ்து
தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் சீர்த்திருத்தமே இஸ்லாத்தின் மிக முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாகும். எனவே, இஸ்லாம் இந்த இலக்கை அடைய நன்மையை ஏவுவதையும் தீமையைத் தடுப்பதையும் மார்க்கக் கடமையாக ஆக்கியுள்ளது. இந்த வகையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் சிறப்புகள் குறித்த முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு :
நன்மையை ஏவித் தீமையை தடுத்தல் பணியின் அந்தஸ்து
1-இது நபிமார்கள் மற்றும் ரஸுல் மார்களின் பணியாகக் காணப்பட்டமை
2- நன்மையை ஏவி தீமைத்தடுத்தல் என்ற பணியை செய்யுமாறு அல்லாஹ் ஆணையிட்டுள்ளமை
3-இவ்விரு பணிக்கும் உயர்ந்த கூலி கிடைக்கின்றமை
4-இப்பணி முஃமின்களின் பண்புகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளமை
5-சமூகத்தை அதிகாரம் படைத்ததாக மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றமை
6- இறை பாதையில் ஜிஹாத் - அறப்போராட்ட- வாயில்களில் ஒன்றாக திகழ்கின்றமை
7- இறைத்தன்டனை நீக்கப்படவும் விமோசனம்; கிடைப்பதற்குமான வழியாகவும் அமைந்துள்ளமை
நபிமார்கள் மற்றும் ரஸுல் மார்களின் பணி
அல்லாஹ் இறைத்தூதர்களை மக்களுக்கு நல்வழி காட்டி நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்காக அனுப்பிவைத்தான். அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறித்து பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் : "எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் (முஹம்மதை) பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து தடுப்பார்". (அல் அஃராப் : 157)
நன்மையை ஏவி தீமைத்தடுத்தல் என்ற பணியை செய்யுமாறு அல்லாஹ் ஆணையிட்டுள்ளமை
அதாவது நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் பணியை இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் முஸ்லிமுக்குரிய முக்கிய கடமைகளுள் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் : 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரங்களால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும். (ஆதாரம் : முஸ்லிம் 49.)
இப்பணிக்கு மிகப்பெரும் கூலி கிடைக்கின்றமை
நன்மை ஏவித் தீமையைத் தடுப்போருக்கு மிகப்பெரும் கூலி கிடைக்கும் என அல்லாஹ் வாக்களித்துள்ளான் இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் : தர்மத்தைப்பற்றி, அல்லது நன்மையானவற்றைப் பற்றி, அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப்பற்றி ஏவியவரைத் தவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அதைச் செய்தால் நாம் அவர்களுக்கு மகத்தான (நற்)கூலியைத் தருவோம். (நிஸாஃ : 114).
நன்மை ஏவித்தீமையைத் தடுப்பதற்கான கூலி பண்மடங்காக மாறுகிறது. இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : 'எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது (ஆதாரம் : முஸ்லிம் 2674).
இப்பணி முஃமின்களின் பண்புகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளமை :
சுவர்க்கத்திற்கு தகுதிபெற்றோர் பற்றி அல்லாஹ் விவரிக்கையில் இவர்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறான் பின்வரும் வசனம் இதனை காட்டுகிறது : மன்னிப்புக்கோரி மீண்டவர்கள்,(தவ்பா செய்தோர்) (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அத்தௌபா : 112).
அஸ்ஸாஇஹுன் என்பதன் கருத்து நோன்பு நோற்றோர் என்பதாகும்.
சமூகத்தை அதிகாரம் படைத்ததாக மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றமை :
அல்லாஹ் கூறினான் : அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஸகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. (அல்ஹஜ் : 41).
ஜிஹாதின் -அறப்போராட்ட - வாயில்களில் ஒன்றாக திகழ்கின்றமை
ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் மிகவும சிறப்புக்குரிய ஜிஹாத் எது எனக் கேட்டார்கள் அதற்கு : அநியாயக்கார அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைத்தல் எனப்பதிலளித்தார்கள். (ஆதாரம் :நஸாஈ: 4209)
இறைத்தன்டனை நீக்கப்படவும் விமோசனம்; கிடைப்பதற்குமான வழியாக அமைந்துள்ளமை
அல்லாஹ் கூறுகிறான்: "(உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் ஆடம்பரத்தில் தொடர்ந்தும் இருந்ததோடு அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர் இருந்தனர்". (ஹூத் : 116)
செயற்பாடுகள்
செயற்பாடு (2) கலந்துரையாடி உள்ளார்ந்த முடிவுகளை கண்டறிவேன் :
நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் பணி நல்ல பல விளைவுகளை தனிநபர் மற்றும் சமூகத்தின் மீது ஏற்படுத்துகிறது. இது குறித்து பின்வரும் இறைவசனத்தையும், இரண்டு ஹதீஸ்களையும் துணையாகக் கொண்டு உமது ஆசிரியர் மற்றும் உமது நன்பர்களுடன் கலந்துரையாடுக :
அல்லாஹ் கூறுகிறான்: "அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு. வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்". (அல் அஃராப் : 165)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன்மேல் ஆணையாக (கூறுகிறேன்), நீங்கள் நல்லதை ஏவி தீமையை தடுக்க வேண்டும் . அவ்வாறு செய்யவில்லையாயின் அல்லாஹ் அவனின் தண்டனையை அனுப்புவது மிக சமீபத்தில் நிகழலாம் . அதன் பின்பு நீங்கள் எந்த பிரார்த்தனை புரிந்தாலும் அவனால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது". (ஆதாரம் : திர்மிதீ 2169)
செயற்பாடு (2) சக மாணவர்களுடன் கலந்து விடையளிப்பேன் :
அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: மக்களே! நீங்கள் : யாஅய்யுஹல்லதீன ஆமனு அலைக்கும் அன்புஸகும் லா யழுர்ருக்கும் மன் ழழ்ழ இதஹ்ததைத்தும் (பொருள் : ' இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியில் இருந்தால் வழிதவறியவனால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது எனும் ( அல்குர்ஆன்: (5: 105 ) இந்த வசனத்தை ஓதுகின்றீர்கள். (மாஇதா : 105) ஆனால், அதற்கு தவறான பொருளை கொள்கிறீர்கள். நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த வசனம் குறித்து பின்வரும் விடயத்தை கூறக் கேட்டேன். நபியவர்கள் கூறினார்கள் : 'மக்கள், தீமையொன்றை கண்டு அதனை தடுக்கவில்லையென்றால் அல்லாஹ் அவனின் தண்டனையை அவர்கள்; அனைவரின் மீதும் இறக்கிவிடுவான்' (ஆதாரம் : அஹ்மத் 16, இப்னு மாஜா 4005).
அபூபக்கர் (ரழி) அவர்களின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு, உமது வகுப்பு நண்பரின் பங்குபற்றுதலுடன் பின்வருவனவற்றிற்கு விடை தருக.
அல்குர்ஆன் வசனத்தின் கருத்தை புரிந்து கொள்வதில் சில மனிதர்களிடன் காணப்பட்ட கோளாறு என்ன என்பதைத் தெளிவுபடுத்துக. அதாவது இந்த புரிந்த விதம் இவ்வாறு காணப்பட்டது :
ஒருவர் தான் மட்டும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் உறுதியாக இருந்து மற்றவர்கள் ஒழுக்கக்கேடுகளில் திழைத்திருக்க அவற்றை கண்டுகொள்ளாது அவர்களை அத்தீமையிலிருந்து தடுக்காது இருப்தால் அவருக்கு எந்த பாதிப்புமில்லை என்ற மனோபாவத்தில் இருப்பதாகும்.
இக்கோளாரை அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு எப்படி சரிசெய்தார்கள்?
அவர்களின் புரிதலில் காணப்பட்ட தவறை தெளிவுபடுத்தி, தீமையை தடுப்பதை விட்டு விடுவதால் ஏற்படும் தண்டணைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டார்கள்.
மதிப்பீடு :
கேள்வி 1: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரேனும் தீமை ஒன்றைக் கண்டால் அதனை தன் கரத்தால் தடுக்கட்டும் தீமையை தடுப்பது பற்றி இந்த வாசகம் குறிப்பது :
(விரும்பத்தக்கது - அவசியமானது - அனுமதிக்கப்பட்டது).
சிலர் பிழையாக புரிந்து கொண்ட அல்குர்ஆன் வசனம் என அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால்;, குறிப்பிடப்பட்ட வசனம் என்ன?
'அலைக்கும் அன்புஸகும் லா யழுர்ருகும் மன் ழல்ல இதஹ்ததைதும்'
'பலம்மா நஸு மா துக்கிரு பிஹி, அன்ஜைய்னல்லதீன யன்ஹவ்ன அனிஸ்ஸுஇ' (இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த வற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்).
'லா கைர பீ கஸீரின் மின் நஜ்வாஹும் இல்லா மன் அமர பி ஸதகதின் அவ் மஃரூப்' பொருள் : (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான ந்ன்மையும் இல்லை;
நன்மையை ஏவுதலில் மிகவும் சிறப்புக்குரிய வடிவங்களில் ஒன்று :
(மக்கள் கூட்டமாக இருக்குமிடத்தில்- ஜும்ஆ குத்பாவில்- அநியாக்கார ஆட்சியாளரிடம்) சத்தியத்தை எடுத்துரைப்பதாகும்.
கேள்வி:2 : பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
இஸ்லாமிய சமூகத்தை அதி சிறப்புமிக்க சமூகமாக அல்லாஹ் குறிப்பிட்டது ஏன்?
நன்மை ஏவித் தீமையைத் தடுப்பதின் சிறப்புகளில் மூன்றை விவரிக்குக.
'தீமையை தடுப்பதில் கவனக்குறைவாக இருப்பது தீமைகள் அதிகரிப்பதற்கு காரணமாக அமையும்' காரணம் கூறுக.
ஐந்தாம் பாடம் : நன்மை ஏவித்தீமைய தடுப்பதற்கான சட்ட ஒழுங்குகள்.
நடைமுறை (செயன்முறை) நோக்கங்கள்:
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
நன்மை ஏவித் தீமைத் தடுப்பதற்கான வரையரைகளை தெளிவு படுத்துவீர்.
தீமையொன்றை தடுப்பதற்கான படித்தரங்களை விளக்கிக் கூறுவீர்.
குறித்த தீமையின் நலன்கள் மற்றும் தீங்குகளை கருத்திற்கொள்வதன் முக்கியத்துத்தை விளக்கும் ஆதரங்களை முன்வைப்பீர்.
நன்மை ஏவி தீமையைத்தடுப்பதற்கான சட்ட ஒழுங்குகளை விளங்குவதின் அவசியத்தை உணர்ந்து நடப்பீர்.
ஷரீஆ வரைமுறைகளைக் கேற்ப நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பீர்
அறிமுகம்
நன்மை ஏவித் தீமையைத் தடுப்பதற்கு ஷரீஆப் பற்றி அறிவும், நடைமுறைப்படுத்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பமும் அவசியத் தேவையாக உள்ளன. அந்த வகையில் இந்தப் பாடத்தில் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலுக்கான பிக்ஹ்- சட்ட ஒழுங்குகள் பற்றி கற்கவிருக்கிறோம்.
முதலாவது: நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான வரையறைகள்.
நன்மையை ஏவுதல் அல்லது தீமையைத் தடுப்பதற்கான வரையறைகள்.
நன்மை மற்றும் தீமைக்கான வரையரையை இஸ்லாமிய ஷரீஆதான் வரையறுத்துக் குறிப்பிடும்.
இஜ்திஹாத் சார்ந்த விவகாரங்களில் குறிப்பிட்ட விடயத்தை தடுத்தல் என்பது கிடையாது.
தீமை பகிரங்கமாகக் காணப்படுதல்.
தீமை நிகழுவதை உறுதி செய்து கொள்ளுதல்
குறித்த தீமையின் (நலன்கள் மற்றும் தீங்குகள்) அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்திற் கொள்ளுதல்.(அவதானத்திற்குற்படுத்துதல்)
நாம் மக்களுக்கு ஒன்றை ஏவுவதில் அல்லது தடுப்பதில் உள்ள மிகமுக்கிய வரையறைகள் பின்வருமாறு :
நன்மை மற்றும் தீமைக்கான வரையரையை இஸ்லாமிய ஷரீஆதான் வரையறுத்துக் குறிப்பிடும்.
ஒருபோதும் பழக்கவழக்கங்கள் அல்லது வழக்காறுகள் அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் நன்மை தீமையை தீர்மானித்து விடமாட்டாது
இஜ்திஹாத் விவகாரங்களில் ஒரு விடயத்தை தடுத்தல் என்பது கிடையாது :
இஜ்திஹாத் விவகாரம் என்பது புகஹாக்கள்- இஸ்லாமிய சட்டநிபுனர்களான இமாம்கள் குறித்த சட்டபிரச்சினைகளில் தீர்ப்புத் தொடர்பாக கருத்து முரண்பட்ட பிரச்சினைகளாகும். அதாவது அல்குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ குறித்த சட்டபிரச்சினை தொடர்பான தீர்ப்பில் தெளிவான ஆதாரம் கிடைக்காமை, அல்லது குறித்த விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தும் அதன் நம்பகத் தன்மையில் அல்லது அதன் பொருள் கோடலில் கருத்து முரண்பாடு காணப்படுகின்ற மஸாஇல்கள் ஆகும். இவ்வாறான கருத்து முரண்பட்ட விடயங்களை செய்வோரை தடுப்பது கூடாது.
தீமை பகிரங்கமாகக் காணப்படுதல்.
தீமையானது தெளிவற்றதாகவோ இரகசியமானதாகவோ இருந்தால் அதனை தடுப்பது கூடாது. இதற்கு உதாரணமாக தடைசெய்யப்பட்ட ஒரு விடயம் வீட்டிற்குள் நடப்பதை குறிப்பிடலாம்.
குறித்த தீமை நிகழ்ந்ததை திட்டப்படுத்திக் கொள்ளுதல்:
நன்மை ஏவுபவரும், தீமையைத்தடுப்பவரும் பொய்யாக மக்களை குற்றம் சுமத்தாமல் இருக்க, குறித்த தீமையை நடக்கும் நேரத்தில் அதனைத் தடுப்பது, கண்டிப்பது கடமையாகும். தடுக்கப் போகும் தீமையானது நடந்து முடிந்ததாக இருந்தால் அல்லது எதிர்காலத்தில் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அவருக்கு உபதேசம் செய்வது கடமையாகும்.
நலன்கள் கெடுதிகளைக் கருத்திற் கொள்ளுதல் :
ஒரு தீங்கை தடுப்பதனால் குறித்த தீங்கை விடவும் கடுமையான தீங்கு அதன் விளைவாக ஏற்படுமென்றிருந்தால் அவ்வாறான நிலையில் குறித்த தீங்கை தடுப்பது கூடாது. இதற்கு பின்வரும் சம்பவம் உதாரணமாகும். உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபைப் இப்னு ஸலுலை கொல்ல நாடியபோது நபியவர்கள் அவரைத் தடுத்துவிட்டு, 'அவனை விட்டுவிடுங்கள் ஏனெனில் முஹம்மத் தனது தோழர்களையே கொலைசெய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது (அல்லவா). என்று அவரிடம் கூறினார்கள். (ஆதாரம் புஹாரி : 3330 ? 4905 முஸ்லிம் 63).
எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனைக் கொள்வதை விட்டும் தடுக்கக் காரணம் எஞ்சிய அறபுகள் இஸ்லாத்தில் நுழைவதற்கு பயப்படுவார்கள் என்பதினாலாகும்.
தீமையைத் தடுப்பதற்கான படித்தரங்கள்
தீமையை தடுப்பதற்கான படிமுறைகள் மூன்றாகும். அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வரும் ஹதீஸில் வரையறுத்துக் கூறியுள்ளார்கள். அந்த நபி மொழி பின்வருமாறு : 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரங்களால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும். (ஆதாரம் : முஸ்லிம் 49.)
இங்கே அந்த படிமுறைகள் பற்றிய விபரம் தரப்படுகிறது :
முதலாவது படித்தரம் : தீமையை கையினால் தடுத்தல்
இது, யாருக்கு பொறுப்பு அல்லது அதிகாரம் இருக்கிறதோ அவருக்குரியதாகும். உதாரணத்திற்கு நாட்டின் ஆட்சியாளர் தனது நாட்டிலும் , நீதிபதி நீதிமன்றத்திலும், படைத்தளபதி படையிலும், அதிபர் தனது பணியிலும், தந்தை தனது வீட்டிலும், நாட்டின் அதிகாரம் வழங்கப்பட்டோரால் நன்மையை ஏவித் தீமையைப் தடுத்தல் பணிக்காக அமர்த்தப்பட்டோர் ஆகியோர் இப்பகுதியில் உள்ளடங்குவர்.
இரண்டாம் படித்தரம் : தீமையை நாவினால் தடுத்தல்
கையினால் குறித்த தீமையை தடுப்பதற்கான அதிகாரத்தையோ அதற்கான சக்தியையோ பெறாத ஒருவர் அழகிய வார்த்தை மற்றும் நல்லுபதேசம் மூலம் அதனைத் தடுப்பார்.
மூன்றாம் படித்தரம் : மனதால் வெறுப்பதன் மூலம் குறித்த தீமையை தடுத்தல்.
இது தீமையொன்றை தடுப்பதில் மிகவும் தாழ்ந்த நிலையாகும். இது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் கட்டாயம் கடமையாகும், இப்படித்தரமானது ஒருபோதும் எந்த சூழ் நிலையிலும் அவர்களை விட்டும் நீங்கி விடமாட்டாது. ஒரு முஸ்லிம் தான் காணும் அல்லது கேட்கும் தீiயான விடயங்களை மனதால் வெறுப்பதன் மூலம் இது நிறைவேறுகிறது.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) ஆய்வு செய்து அடையாளப் படுத்துவேன் :
பின்வரும் நிலைகளை ஆய்வு செய்து அவை தீமையைத் தடுத்தல் படித்தரங்களில் எதில் உள்ளடங்கும் என்பதை குறிப்பிடுக :
நிலை தீமையைத் தடுப்பதற்கான படித்தரம்
கை நாவு
ஒருவர் தனது அண்டைவீட்டார் ஒரு தீமையை செய்வதைக் காண்கிறார் . (படித்தரம் )- நாவு
அஹ்மதிற்கு 12 வயதையுடைய ஒரு மகன் இருக்கிறான். அவன் தொழுகையை விடுவதில் பிடிவாதமாக இருக்கிறான். -((படித்தரம் ) )- கை
ஒரு பள்ளி இமாம் கிப்லாத்திசையிலிருந்து விலகி தொழும் ஒருவரை ஒரு பள்ளி இமாம் காண்கிறார் - (படித்தரம்) கை
ஆசிரியர் ஒருவர் சில மாணவர்கள் பாடசாலையில் புகைப்பிடிப்பதைக் காண்கிறார் -(படித்தரம்) கை மற்றும் நாவு
பொலிஸ்,(காவல் துரையினர்) சில குற்றவாலிகள் பாதையை இடைமரித்துக்கொண்டிருப்பதைக் கண்டனர்.(படித்தரம்) - கை
செயற்பாடு (2) கலந்துரையாடி உள்ளார்ந்த முடிவுகளை கண்டறிகிறேன் :
நன்மையை ஏவித்தீமையைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் ஒருவர் அவரின் அழைப்புப் பணி ஏற்றுக்கொள்ளப்படாத நிலையை உணர்கிறார். இவ்வாறான ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நன்மை ஏவித் தீமையை தடுக்கும் பணியை தொடர்ந்து செய்வதா அல்லது செய்யாது விட்டு விடுவதா?
இது தொடர்பாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தின் ஒளியில் உமது ஆசியர் மற்றும் உமது வகுப்புத்தோழர்களுடன் கலந்துரையாடுக. (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். (அத்ஸாரியாத் : 55).
ஒரு தீமையை காணும் ஒருவர் அவரின் எண்ணத்தில் தனது பிரச்சாரம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை எனக் கருதினாலும் அத்தீமையை தடுப்பது கடைமையாகும்.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
தீமையை உள்ளத்தால் வெறுத்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பர்ழ் அய்ன் ஆகும். (√)
இஜ்திஹாத்திற்குரிய பிரச்சினை தொடர்பான தீர்ப்புகளில்; தீமையை தடுத்தல் கடமையாகும். (X)
கையினால் ஒரு தீமையை தடுத்தல்; படித்தரங்களில் மிகவும் உயரிய படித்தரமாகும். (√)
தீமையொன்றை தடுப்பதில், குறித்த தீமையானது பகிரங்கமானதாகவும் தடுக்கும் வேளை அது நிகழ்ந்த ஒன்றாக இருப்பதும் அத்தீமையை தடுப்பதற்கான நிபந்தனையாகக் கொள்ளப்படுகிறது.(√)
ஒரு தீமையை தடுக்கும் போது அதை விட மிகப் பெரும் தீமையொன்று அதன் விளைவாக ஏற்படும் என்றிருப்பின் அத்தீமையை தடுப்பது ஹராமாகும். (√)
கேள்வி 2 : பின்வரும் இரு வினாக்களுக்கு விடையளிக்குக.
தீமையொன்றை தடுக்கும் போது நலன்கள் மற்றும் கெடுதிகளைக் கருத்திற்கொள்வதன் முக்கியத்தை விளக்கும் ஒரு ஆதாரத்தை உதாரணத்துடன் குறிப்பிடுக.
கையினால் தீமையைத் தடுக்கும் அதிகாரத்தைப் பெற்றோரின் விபரத்தைக் குறிப்பிட்டு, தீமையைத் தடுப்பதற்கான படித்தரங்களை விவரிக்குக.
ஆறாம் பாடம் : நன்மை ஏவித் தீமையைத் தடுப்போர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.
செயன்முறை கற்றல் பெறுபேறுகள்
நீங்கள் இப்பாடத்தை கற்ற பின் _ உங்களிடமிருந்து எதிர்பார்கப்படுகிறது:
நன்மை ஏவித் தீமையைத் தடுப்போர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவீர்
தீமையைத் தடுப்பதில் படி நிலைகளை ஒழுங்கு முறைப்படி குறிப்பிடுவீர்
நன்மை ஏவித் தீமையைத் தடுப்பதில் மென்மையாக நடந்து கொள்வதின் அவசியத்தை பேணி நடப்பீர்.
நன்மை ஏவித் தீமையைத் தடுப்போர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை கடைப்பிடித்து ஒழுகுவீர்.
நன்மை ஏவித் தீமையைத் தடுப்பது தொடர்பாக இஸ்லாமிய ஷரீஆ வகுத்தளித்த ஒழுக்கங்களை கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துவதன் மூலமே அதன் விளைவை கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் இப்பணியை மேற்கொள்பவரிடம் இருக்க வேண்டிய மிகப்பிரதான ஒழுக்கங்கங்களை இங்கு தருகிறோம்.
நன்மை ஏவித் தீமையைத் தடுப்பேரிடம் இருக்க வேண்டிய ஒழுக்கங்கள்
உளத்தூய்மை
அறிவு
நற்செயல்
மென்மை
படிமுறைகளைப் பின்பற்றல்
நன்மையை ஏவித் தீமையை தடுப்போரிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் பின்வருமாறு :
அல்லாஹ்வுக்காக மாத்திரமே இப்பணியை செய்தல் என்ற தூய்மையான எண்ணம் இருத்தல்.
உளத்தூய்மை செயல்கள்; ஏற்றுக்கொள்ளப்படவும், கூலியைப் பெற்றுக் கொள்வதற்குமான அடிப்படையாக, இருப்பதோடு அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் கிடைப்பதற்கான காரணமாக உள்ளது.
ஏவும் அல்லது தடுக்கும் விடயம் குறித்த சரியான அறிவைப் பெற்றிருத்தல்.
இந்த விவகாரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றி ஒழுக வேண்டும் என்ற வகையில் இது குறித்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டலை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கிறான் : 'இதுவே எனது பாதை. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான சான்றின் அடிப்படையில் அல்லாஹ்வின் பால் அழைக்கிறோம்' என்று நபியே கூறுவீராக. (யூஸுஃப்: 108).
இதனடிப்படையில் நன்மையை ஏவுபவர் தான் கட்டளையிடும் செயல்கள் இஸ்லாமிய ஷரீஆவால் அனுமதிக்கப்ட்டது என்ற தெளிவையும், அதே போல் தீமையை தடுப்பவர் தான் தடுப்பவை இஸ்லாமிய ஷரிஅத்தில் தடைசெய்யப்பட்டது என்ற தெளிவையும் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்.
தான் கட்டளையிடுவதை எடுத்து நடப்பதும், தடுப்பவற்றை தவிர்ந்து நடப்பதும்.
இது ஒரு தாஈ பின்பற்றி ஒழுக வேண்டிய மிக முக்கிய பண்புகளில் ஒன்றாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக பிறரிடம்) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்". (அஸ்ஸப்:2-3), ஒரு தாஈ ஏதாவது ஒரு வணக்க வழிபாட்டை செய்யாது அலட்சியம் செய்கிறார் அல்லது ஒரு பாவ காரியமொன்றில் வீழ்ந்து விடுகிறார் என்றால் அவர் அந்த வணக்கம் குறித்த கட்டளையை முழுமையாக விட்டுவிட்டார், என்றோ அல்லது தடுத்த அப்பாவத்தை செய்ய அனுமதி உள்ளது என்றோ அர்த்தமல்ல என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
மென்மை, இங்கிதம் போன்ற பண்புகளைப் கடைப்பிடித்து கடினப்போக்கை கைவிடுதல்:
கடினப்போக்கினால் மக்கள் விரண்டோடாது இருக்க மென்மை மற்றும் இங்கிதத்தை கடைப்பிடிக்குமாறு அல்லாஹ் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பின்வரும் வசனத்தில் கட்டளைப்பிரப்பிக்கிறான். 'நபியே! நீர் கடுப்பானவராகவும், கடினசித்தம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டு விலகிச்சென்றிருப்பார்கள்' (ஆல இம்ரான் : 159).
படிமுறைகளைப் பின்பற்றல்
தவறு செய்யும் ஓருவரை முழுமையாக வெறுத்து நடக்கவும், அல்லது ஒரே தடவையில் தண்டிக்கவும் அவசரப்படுதல் கூடாது. மாறாக அவரில் பின்வரும் படிமுறைகளை படிப்படியாக பிரயோகித்து குறித்த தவறைத் திருத்த முயலவேண்டும். அப்படிமுறைகள் பின்வருமாறு :
முதலாவது : குறித்த தவறு செய்தவறின் அறியாமை அல்லது சிறுபராயம் என்பவை காரணங்களாக இருப்பின் தவறு குறித்து தெரியப்படுத்துதல்.
இரண்டாவது: பகிரங்கமாக அன்றி மறைமுகமாக அவருக்கு அறிவுரை மற்றும் உபதேசம் செய்தல்
மூன்றாவது: கடுமையான வார்தையைப் பிரயோகிப்பதோடு தண்டனைக் குறித்து பயத்தை ஏற்படுத்தல்.
நான்காவது : தவறு செய்தவர் குறித்த தவறில் பிடிவாதமாக இருப்பின்; அவரை புறக்கணித்து, பகிஷ்கரித்தல்.
ஐந்தாவது: குறித்த விடயத்தை கட்டளையிடும் நபர் தந்தை அல்லது கணவர் போன்ற அதிகாரத்தில் -பொறுப்பில் உள்ளவராக இருப்பின் தவறிழைத்தவரை தண்டடித்தல்.
செயற்பாடுகள்
செயற்பாடு (1) மற்றவர்களுடன் ஒத்துழைத்து முடிவுகளைப் கண்டறிவேன்;.
உமது வகுப்பு நன்பர்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் அல்குர்ஆன் வசனம்; மற்றும் ஸுப்யான் அஸ்ஸவ்ரி அவர்களின் கூற்று ஆகியவற்றிலிருந்து நன்மையை ஏவுவோருக்கான ஒழுக்கங்களை கண்டறிக :
நல்லடியார் லுக்மான் தனது மகனுக்கு கூறிய அறிவுரையில் பின்வரும் விடயம் இடம் பெற்றுள்ளது : 'என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக, நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக, உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. (லுக்மான் : 17).
ஸுப்யான் அஸ்ஸவ்ரி ரஹிமஹுல்லா அவர்கள் கூறுகிறார்கள் : பின்வரும் மூன்று பண்புகளைப்பெற்ற ஒருவரே நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கு தகுதி பெற்றவராக இருக்கிறார். தான் ஏவும் மற்றும் தடுக்கும் விடயத்தில் நலினத்தைக் கடைப்பிடிப்பவராகவும், நீதியானவராகவும்; அது குறித்து அறிந்தவராகவும் இருத்தல் வேண்டு;ம்.
செயற்பாடு (2) : அறிவுரையொன்றை எழுதுக.
பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்தாது தமது மனைவியரை தண்டிப்பதில் சில ஆண்கள் அவசரப்படுகின்றனர் "எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள்". (அந்நிஸா : 34).
பாடத்தில் கற்றுக்கொண்ட விடயங்கள் மற்றும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை துணையாகக் கொண்டு மேற்படி மனைவியரை தண்டிக்க அவசரப்படும் ஆண்களுக்கு ஒரு அறிவுரையை எழுதுக.
மதிப்பீடு :
கேள்வி 1: பின்வருவனவற்றில் சரியாயின் (✓) எனவும், பிழையாயின் (x) எனவும் அடையாளமிடுக.
ஓர் ஆண் தனது மனைவியைத் திருத்த முதலாவதாக படுக்கையிலிருந்து விலக்கி வைப்பான் (X)
தீமையைத் தடுப்பவர் பாவங்களை செய்யாதவராக இருப்பது நிபந்தனையாகும் (X)
நன்மையை ஏவும் பணியை மேற்கொள்ள முன் அது குறித்த சட்டதிட்டங்களை அறிந்திருப்பது அவசியமாகும். (√)
கேள்வி 2: அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றில் சரியான விடையைத் தெரிவு செய்க.
அல்லாஹ் கூறுகிறான் : ''நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக". இந்த வசனம் குறிப்பது :
(வலிமை - மென்மை –பொறுமை)
நன்மையான விடயத்தை ஏவும் விடயத்தில் இஹ்லாஸை –உளத்தூய்மையை பேணுவது :
(வாஜிப் - முஸ்தஹப்- முபாஹ் ஆகும்).
நன்மையை ஏவுதலின் முதல் படிமுறை :
(இரகசியமாக உபதேசம் செய்தல் - பிழையை தெரியப்படுத்துதல்- மூன்று நாட்கள் புறக்கணிப்புச் செய்தல் ஆகும்).
கேள்வி :3 : பின்வரும் இரண்டு வினாக்களுக்கும் விடை தருக.
நன்மை ஏவுபரிடம் காணப்பட வேண்டிய மூன்று பண்பொழுக்கங்களை தெளிவாகக் குறிப்பிடுக.
தவறு செய்தவறிடம் அத்தவறை திருத்த கடைப்பிடிக்க வேண்டி படிமுறைகளை எழுதுக.
முதலம் பகுதி : அல்குர்ஆனும் தப்ஸீரும்.
1. புனித அல்குர்ஆனின் மகிமை :
புனித அல்குர்ஆன் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வார்த்தையாகும்.
அல்குர்ஆன் ஓர் அற்புதம்
அல்குர்ஆன் ஓளியும் ஆகிலத்தாருக்கு நேர்வழிகாட்டியுமாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனைப் பாதுகாத்துள்ளமை
அல்குர்ஆனோடு தொடர்பில் இருப்போருக்கு இம்மையிலும், மறுமையிலும கிடைக்கும் கௌரவம்:
அஹ்லுல் குர்ஆன் என்பது: புனித அல் குர்ஆனை ஒதுவோர், அதனை மனமிட்டவர்கள், அதன் வியாக்கியானம் மற்றும் அதன் கலைகள் குறித்து அறிந்தோர் ஆகியவர்களைக் குறிக்கும்.
அல்குர்ஆனிய மனிதர்களே (அஹ்லுல் குர்ஆன்) இந்த சமூகத்தின் சிரேஷ்டமானவர்கள் ஆவர்.
அல்குர்ஆன், குர்ஆனிய மனிதர்களுக்காக மறுமையில் பரிந்து பேசும்.
ஸுறா பாத்திஹாவுக்கான தப்ஸீர்-விளக்கவுரை
ஸூறா அல்பாத்திஹா அல்குர்ஆனில் உள்ள ஸூறாக்களில் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஸூறாவாகும்.
கலைச்சொற்கள் :
அர்ரஹ்மான என்பது : இவ்வுலகில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொதுவாக வழங்கப்படும் அருளுக்கு சொந்தக்காரன்.
அர்ரஹீம் என்பது : தனது அடியார்களான இறைவிசுவாசிகளுக்கு பிரத்தியேகமாக அன்பு காட்டுபவன் என்ற அர்த்தம் கொண்டதாகும்.
யவ்முத்தீன்: (கூலி வழங்கப்படும் தினம்) என்பது மறுமை நாளாகும்.
அல்மஃழூபி அலைஹிம் (கோபத்திற்கு உள்ளானவர்கள்) என்பது, யூதர்களைப் போன்று உண்மையை விளங்கி, அதைப் பின்பற்றாமல் இருப்போரைக் குறிக்கும்.
அழ்ழால்லீன் (வழி தவறியோர் )என்பது : கிறிஸ்தவர்களைப் போன்று, சத்தியத்தை அறிந்து கொள்ளாது அசத்தியத்தை பின்பற்றி வழிதவறிச்சென்றோரைக் குறிக்கும்
ஸூறா அல்பாத்திஹாவுக்கான விளக்கவுரை
ஸூறா அல் பாத்திஹாவின் சில சிறப்புகள் :
இந்த ஸூரா மாத்திரமே தொழுகையில் ஓதுவது கட்டாயமான ஸூராவாகும்.
அல்குர்ஆனின் ஸூறாக்களில் மிகவும் மகத்துவம் மிக்கதும், அதிகம் சிறப்புப் பொருந்திய ஸூறாவாகவும் இது உள்ளது.
இந்த ஸூறாவை அல்லாஹ் தனக்கும் தனது அடியாருக்குமிடையில் இரு பகுதிகளாக பிரித்திருப்பதாக ஹதீஸுல்குத்ஸியில் குறிப்பிடுகின்றமை.
அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
கூலி வழங்கப்படும் மறுமை நாளுக்காக அடியார்களாகிய நாம் தயாரவது அவசியம்.
வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் நிறைவேற்றக் கூடாது.
நபிமார்களின் வழியை அவசியம் பின்பற்றி, காஃபிர்களின் வழிமுறைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும்.
ஸூறா அல்கவ்ஸர் மற்றும் ஸூறா அல்காபீருனுக்கான விளக்கவுரை:
கலைச்சொற்கள்: (சொல் விளக்கம்)
அல் கவ்ஸர் என்பது இம்மையிலும் மறுமையிலும் உள்ள அதிகமான பாக்கியங்கள் அல்லது நன்மைகள். அவற்றுள் ஒன்றுதான், சுவர்க்கத்தில் உள்ள 'அல்கவ்ஸர்' எனும் நதியாகும்.
வன்ஹர் : (அறுப்பீராக) இதன் கருத்து, "உமது அறுவைப் பிராணியை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவீராக. அவனுக்கு நிகராக எந்த பங்குதாரரையும் ஆக்கிவிடாதே" என்பதாகும்
ஷானிஅக: என்பது உம்முடன் பொறாமை கொண்டவன், உம்மை வெறுப்பவன் என்ற அர்த்தம் கொண்டதாகும்.
அல் அப்தர்: என்பது இம்மை, மறுமை பலன்கள், பாக்கியங்கள் அற்றவன் என்ற அர்த்தம் கொண்டதாகும்.
மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருக்கும் உயர் மதிப்பும் அந்தஸ்த்தும்.
ஏகத்துவக் கொள்கையில் தூய்மை பேணி, அனைத்து வணக்கவழிபாடுகளையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்வது அவசியமாகும்.
இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் கடவுள்களிடமிருந்து ஒரு முஸ்லிம் முற்றாக விலகி நடப்பது அவசியமாகும்.
ஸூறா அந்நஸ்ர் மற்றும் அல்மஸதுக்கான விளக்கவுரை
கலைச்சொற்கள்:
தப்பத் என்றால் நாசமாகட்டும், நஷ்டமடையட்டும் என்று அர்த்தமாகும்.
(ஹம்மாலதல் ஹதப்) விறகு சுமப்பவள் : இது அபூலஹபின் மனைவி உம்மு ஜமீல் குறித்த அடைமொழியாகும். அவள் முற்களை சுமந்து சென்று நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செல்லும் பாதையில் போட்டுவிடுவாள்.
"ஜீதிஹா" என்பது 'அவளின் கழுத்து' என்று அர்த்தம் தரும்.
மஸத் என்றால்: இறுக்கமாக பின்னப்பட்ட கடினமான கயிறு
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து புகழ்வதும் தௌபாவையும் இஸ்திஃபாரைவும் புதுப்பித்துக்கொள்வதும் அவசியமாகும்.
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாத்து, அவர்களை நோவினை செய்தோரை தண்டிக்கிறான்.
அல்லாஹ்வை ஈமான் கொள்ளாமலும், நல்ல அமல்களை செய்யாதும் யார் இருக்கிறாரோ அவரின் செல்வம் மற்றும் நபியவர்களின் கிட்டிய உறவு முறை அவருக்கு எவ்விதப் பயனையும் தந்துவிடமாட்டாது.
ஸூறா அல்இஹ்லாஸ் மற்றும் அல்- முஅவ்விததான் (ஸூறா அல்பலக் மற்றும் அந் நாஸ்) ஆகியவற்றிற்கான விளக்கவுரை
கலைச்சொற்கள் -(சொல்விளக்கம்)
அஸ்ஸமத் என்பது : அடியார்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாடிச்செல்லும் ஒப்பற்ற தலைவன்.
குப்வன் : ஒப்பானவன், நிகரானவன்
அஊது : அடைக்கலம் தேடுகிறேன், பாதுகாப்பு கோருகிறேன்.
அல்பலக்: ஒளி, காலைப்பொழுது.
'காஸிகின் இதா வகப்' : இரவு அதன் கருமையால் மூடிக்கொண்டால்
'அன்னப்பாஸாத்' : சூனிய(ம் செய்து அதன்) முடிச்சுகளில் ஊதும் பெண்கள்.
'ஹாஸித்' (பொறாமைக்காரன்) : பிறரின் அருள்கள் அழிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.
'அல்கன்னாஸ்' : அல்லாஹ்வை நினைவு கூறுகையில் மறைந்து கொள்பவன்.
அல்ஜின்னது : ஜின் இனம்
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
அல்லாஹ்வே எல்லா வகையான வணக்கங்களையும் செலுத்த தகுதிபெற்ற உண்மையான கடவுள் -இறைவன்- ஆவான்
ஜின்கள் மற்றும் மனிதர்களின் தீங்கிலிருந்து பாதுகாக்க ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிச்சென்றால் அவனை அல்லாஹ்வே பாதுகாக்கிறான்.
சூனியம் மற்றும் பொறாமையின் பாதிப்புகள் யதார்த்தமானவை. ஆகவே, ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் இவைகளை விட்டும் பாதுகாப்புத் தேடுவதன் மூலமும், அவனிடமே காரியங்களை ஒப்படைத்து அவனில் உறுதியாக நம்பிக்கை கொள்வதன் மூலமும் இவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இரண்டாம் பகுதி : ஈமானும் தஸ்கியாவும். (இறைவிசுவாசமும் உளப்பரிசுத்தமும்)
1. இறைவிசுவாசம் (ஈமானும்) அதன் முக்கியத்துவமும்
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஹதீஸ் மார்க்கத்தின் மூன்று படித்தரங்களையும் உள்ளடக்கியுள்ளது:
முதலாம் படித்தரம் : இஸ்லாம் (கட்டுப்படுதல்), இது ஐந்து அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
இரண்டாம் படித்தரம் : ஈமான் (நம்பிக்கை கொள்ளல்) அது ஆறு அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
மூன்றாம் படித்தரம் :அல் இஹ்ஸான். அதற்கு இரண்டு படி நிலைகள் உண்டு.
1-அல்லாஹ்வை நம்புதலும் (ஈமான் கொள்வது.) அதன் பயன்களும்
முதலாவது: அல்லாஹ்வை ஈமான் கொள்வது. அல்லாஹ்வை ஈமான் கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
அல்லாஹ்வின் இருப்பை ஈமான் கொள்வது.
அவனின் ருபூபிய்யத்தை ஈமான் கொள்வது
அவனின் உலூஹிய்யத்தை ஈமான் கொள்வது.
அவனின் பெயர்களையும் பண்புகளையும் ஈமான் கொள்வது.
இரண்டாவது : அல்லாஹ்வை ஈமான் கொள்வதால் ஏற்படும் பலன்கள்:
இறை விசுவாசம் (ஈமான்) ஒரு முஃமினின் உள்ளத்தை அல்லாஹ்வுடன் இணைத்து விடுகிறது.
இறை விசுவாசம் (ஈமான்) அல்லாஹ்வைத் தவிரவுள்ள அனைத்து படைப்பினங்களின் மீதுள்ள பயத்தை அகற்றிவிடுகிறது.
இறை விசுவாசமானது (ஈமான்) வணக்க வழிபாடுகளையும், அடியார்களுக்குரிய கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு ஆர்வமுள்ள ஒருவராக ஒரு முஃமினை மாற்றி விடுகிறது.
2-மலக்குமார்களை ஈமான்(நம்பிக்கை) கொள்வதும் அதன் பலன்களும்:
முதலாவது: மலக்குமார்கள் என்போர் யார்?
மலக்குகள் என்போர் : ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாஹ்வின் மகத்தான(பிரமாண்டமான) சிருஷ்டிகள். அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள். ஒரு போதும் அவனின் கட்டளைக்கு மாறுசெய்யமாட்டார்கள்.
இரண்டாவது : மலக்குகளை ஈமான்(நம்பிக்கை) கொள்ளல் என்பதன் கருத்து:
அவர்களின் இருப்பை உண்மைப் படுத்தல்.
அவர்களின் பெயர்களில் நாம் அறிந்துள்ளவற்றை விசுவாசம் கொள்ளுதல்.
அவர்களின் பண்புகள் மற்றும் பணிகள் குறித்து நாம் அறிந்தவற்றை விசுவாசம் கொள்ளுதல்.
2. மலக்குகளை விசுவாசம் கொள்வதினால் எற்படும் பயன்கள்:
மூன்றாவது :மலக்குளின் சில பணிகள் :
வஹி கொண்டுவருதல். இது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பணியாகும்.
அடியார்களின் செயல்களை பதிவு செய்தல்.
உயிர்களைக் கைப்பற்றல். இது மலகுல் மௌத்தின் பணியாகும்.
நான்காவது: மலக்குகளை விசுவாசிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
மலக்குகளை முன்மாதிரியாகக்கொண்டு, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு முயற்சித்தல்.
அமல்களின் மூலம் பெருமை மற்றும் கர்வம் கொள்வதை விட்டு விலகி இருத்தல்
அல்லாஹ்வுக்குப் பயந்தும், பின்பு, மலக்குகளுக்கு வெட்கப்பட்டும் தடைசெய்யப்பட்டவற்றை தவிர்த்தல்.
3-வேதங்கள் மற்றும் இறைதூதர்களை ஈமான் கொள்வதும் அதன் விளைவுகளும்
முதலாவது : வேதங்களை ஈமான் கொள்ளல்
மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களை அல்லாஹ் இறக்கினான் என ஏற்றுக்கொள்வதே "வேதங்களை ஈமான் கொள்ளல்" என்பதன் கருத்தாகும்.
மிகவும் சிறப்புக்குரிய வேதம்:
அது அல்குர்ஆன் ஆகும். அது திரிபுபடுத்தலிலிருந்து பாதுகாக்கப்பட்டதும், படைப்புகளுக்கான ஓர் அற்புதமாகவும் உள்ளது. மேலும் ஏனைய எல்லா வேதங்களையும் மிகைத்து (அவற்றை செல்லுபடியற்றதாக ஆக்கி)விடும் ஒன்றாகும்.
3-வேதங்களையும் இறைத்தூதர்களையும் ஈமான் கொள்வதும் அதன் பலன்களும்:
இரண்டாவது: இறைத்தூதர்களை ஈமான் கொள்ளல்.
அது, அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதற்காக மக்களை அழைக்கும் பணிக்கு அவர்களை (தூதர்களை) அல்லாஹ் அனுப்பினான் என்பதை அங்கீரித்து ஏற்றுக்கொள்வதாகும்.
இறைத்தூதர்களில் மிகவும் சிறப்புக்குரியவர்.
இறைத்தூதரகளில் ஐந்து பேர் சிரேஷ்டமானவர்கள். அவர்கள் உலுல் அஸ்ம் (திட உறுதி பூண்டோர்) என்று அழைக்கப்படுவர். அவர்களுள் மிகவும் சிரேஷ்டமானவர், எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள்.
3-வேதங்களையும் இறைத்தூதர்களையும் ஈமான் கொள்வதும் அதன் பலன்களும்
மூன்றாவது : வேதங்களையும் இறைத்தூதர்களையும் விசுவாசம் கொள்வதினால் ஏற்படும் பலன்கள்:
எமக்கு நேர்வழிகாட்டுவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பிய அல்லாஹ்வின் மகத்தான கருணையை ஆழமாக நம்புதல்.
வேதங்கள் தெளிவுபடுத்தியதன் அடிப்படையில், இறைதூதர்கள் நடைமுறைபடுத்திக் காட்டியதற்கிணங்க, அல்லாஹ்வை தெளிவுடன் வணங்குதல்.
நபிமார்களின் குணங்கள் பண்புகள் மற்றும் பணிகளை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்றி ஒழுகுதல்
4. மறுமை நாளை நம்புதலும்; அதனால் ஏற்படும் விளைவுகளும்
முதலாவது : மறுமை நாளை நம்புதல் என்பதன் கருத்து :
மரணத்தின் பின் நிகழும் விடயங்கள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்தவற்றை நம்பி உண்மைப்படுத்துவதாகும்.
இரண்டாவது : மறுமை நாளின் படிநிலைகள் -
கப்ரின் சோதனை –உயிர்த்தெழுப்பப்படல் -ஒன்று சேர்த்தல்- நன்மை தீமை பட்டோலைகள் மற்றும் மீஸான் - ஸிராத் -சுவர்க்கம், நரகம்
மூன்றாவது: மறுமை நாளை நம்புவதால் ஏற்படும் பலன்கள்:
மறுமையைப் புறக்கணித்து விட்டு, இவ்வுலகில் மோகம் கொள்வதிலிருந்து தடுக்கின்றது.
வணக்கங்களை செய்வதில் அதிக ஆர்வமும் பாவச்செயல்களை செய்வதில் பயமும் அதிகரித்தல்
ஒரு முஃமின் மறுமையில் கிடைக்கும் பேரின்பத்ததை எதிர்பார்த்திருப்பதால், இவ்வுலகில் அவனுக்கு நிகழும் இழப்புகளுக்காக கவலைப்படாமல் இருப்பான்.
5- கழாகத்ரை ஈமான் கொள்வதும் அதன் பயன்களும்
முதலாவது: கழாகத்ரை ஈமான் கொள்வதன் கருத்து:
இப்பிரபஞ்சத்தில் நிகழும் நல்லவை கெட்டவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்து, பதிவு செய்துள்ளான் என்றும், அவற்றில் அவனின் நாட்டம் உள்ளது என்றும், அவற்றை உருவாக்கியவன் அவனே எனவும் உறுதியாக நம்பி உண்மைப்படுத்துவதாகும்.
இரண்டாவது : கழாகத்ரை நம்புவதும் தேவையான காரண காரியங்களை மேற்கொள்வதும்.
கழாகத்ரை நம்புதல், முயற்சி மற்றும் காரண காரியங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றுடன் முரண்படமாட்டாது.
ஹதீஸ் - "செயலாற்றுங்கள்! நீங்கள் ஒவ்வொருவருவரும் எதற்கென படைக்கப்பட்டுள்ளீர்களோ அவற்றுக்கே இலகு படுத்தப்படுவீர்கள்"
கழா கத்ரை நம்புவதால் கிடைக்கும் பயன்கள்:
அல்லாஹ்வின் ஏற்பாட்டைப் பற்றிய கலக்கம், கோபம் ஆகியவற்றை நீக்கி, பொறுமை மற்றும் உளத்திருப்தியை ஏற்படுத்துகிறது.
கத்ரை ஏற்ற ஒரு முஃமின் அவனுக்கு கிடைக்கும் எந்த அருளாயினும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்தே கிடைத்தது என ஆழமாக நம்புவதினால் அவனுள் பணிவு ஏற்படுதல்.
மூன்றாம் பகுதி : நபியின் ஸுன்னாவும் அவர்களின் அவயவத் தோற்றமும்;.(அங்க அடையாளங்களும் நடையுடை பாவனைகளும்)
1-நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றிய அறிமுகமும் அவர்களின் மிக முக்கிய பண்புகளும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றிய அறிமுகம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரம்பரையும், அவர்களின் பிற பெயர்களும் :
நபியவர்களின் முழுப்பெயர்: முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னி அப்துல் முத்தலிப் இப்னி ஹாஷிம்.
அவர்களின் சில பெயர்கள் : அஹ்மத் - ஹாஷிர் -ஆகிப்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பும், மரணமும் :
நபியவர்கள் யானை ஆண்டு (கி. பி. 571)மக்காவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 11, ரபீஉனில் அவ்வல் மாதம், 12ம் திகதியன்று மரணித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் பெயர்கள்:
கதீஜா -ஸவ்தா- ஆஇஷா- ஹப்ஸா- ஸைனப் பின்த் குஸைமா- உம்மு ஸலமா- ஸைனப் பின்த் ஜஹ்ஷ்-- ஜுவைரிய்யா- உம்மு ஹபீபா- ஸபிய்யா- மைமூனா (ரழியல்லாஹு அன்ஹுன்ன அஜ்மஈன்).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றி அறிமுகமும் அவர்களின் மிக முக்கிய குணங்களும் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களும் :
ஆண் பிள்ளைகள் : அல் காஸிம் -அப்துல்லாஹ்- இப்ராஹீம்.
பெண் பிள்ளைகள் : ஸைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், பாத்திமா ரழியல்லாஹு அன்ஹுன்ன.
நெருங்கிய உறவினர்களில் பிரபலமானவர்கள்: ஹம்ஸா, அல்அப்பாஸ், அலி, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உடல்சார் வர்ணணைகள் (நபியவர்களின் அகவயத் தோற்றம் ) :
நபியவர்கள் வெள்ளை நிறத் தோற்றமும், வசீகர முகமும் , சாதாரண உயரமும், அகன்ற நெஞ்சும், அடர்ந்த பெரிய தாடியும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணங்கள் சில :
தயாளத்தன்மை; வீரம்- சகிப்புத்தன்மை, இங்கிதம்-பணிவு – பொறுமை - மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுப்பு.
இம்மை, மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெற்றுள்ள தனித்துவங்கள்.
உலகில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கிடைத்த சிறப்புகள் (தனித்துவங்கள்) :
அவர்களின் அழைப்பு மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்- இறுதி நபி – சொற்சுருக்கமும் பொருட்செரிவும் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டவர்- இப்பூமி தொழுமிடமாகவும், சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளமை –எதிரிகளுக்கு நபியவர்கள் பற்றிய அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை – போர் பொருட்கள் (கனீமத்)அவர்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளமை.
மறுமையில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கிடைக்கவுள்ள சிறப்புகள் - தனித்துவங்கள்) :
மறுமை நாளில் ஆதமின் சந்ததியினரின் தலைவர் - (மறுமையில் மனிதகுலத் தலைவர்) மண்ணறையிலிருந்து முதலாவது வெளிப்படுபவர் - முதலாவது பரிந்துரைப்பாளர் - முதாலாவது பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுபவர் - மிகப்பெரும் நீர் தடாகத்தின் சொந்தக்காரர் - சுவர்க்கத்தின் கதவு முதலாவது திறக்கப்படுவதற்கு உரித்தானவர் (அதாவது சுவர்க்கத்தின் கதவு நபியவர்களுக்கே முதலாவதாக திறக்கப்படும்).
3- அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு
ஹதீஸ் வாசகம்:
"எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒர் எழுத்தை ஒதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை அதைப்போன்ற பத்து மடங்காகும். "அலிப்,லாம், மீம்" என்பது ஒர் எழுத்து என்று நான் கூறமாட்டேன், மாறாக அலிஃப் ஒர் எழுத்து, லாம் ஒர் எழுத்து, மீம் ஒர் எழுத்து ஆகும்" என்றார்கள்.
அறிவிப்பாளர்:
அபூஅப்திர்ரஹ்மான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அல் ஹுதலி (ரலி).
கலைச் சொற்கள் :
அலிப் லாம் மீம் : இது போன்ற சில தனித்தனியான எழுத்துக்கள் மூலம் அல்குர்ஆனின் சில சூறாக்கள் ஆரம்பமாகின்றன.
3- அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு
ஹதீஸின் சாரம்சம் :
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்காகத் தூண்டல்.
நன்மைகள் பன்மடங்காக உயரும் என்பது உறுதிப்படுத்தப்படல்
சிறிய நற்செயல்களுக்கும் அளப்பரிய கூலிகளை வழங்குவது அல்லாஹ்வின் தயாளத் தன்மையைக் குறிக்கிறது.
4-சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் செயல்கள்.
ஹதீஸ்:
''ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை - பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் - அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவை குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறன".
கலைச் சொற்கள் :
முகப்பிராத் : பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைபவை .
அல்கபாஇர் (பெரும்பாவங்கள்) : இஸ்லாமிய ஷரீஆவில் உலகில் தண்டனை அல்லது மறுமையில் தண்டனை விதிக்கப்பட்ட பெரும் பாவங்களையே இது குறிக்கும்.
அறிவிப்பாளர் :
அபூ ஹுரைரா, அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸி (ரலி).
4- பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் நன்மையான காரியங்கள்:
ஹதீஸின் சாரம்சம் :
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
வழிபாடுகளில் தொடராக ஈடுபடுவதன் சிறப்பு.
பாவங்கள் சிறியவை,பெரியவை என இரு வகைப்படும். சிறு பாவங்களுக்கு வணக்கவழிபாடுகள் பரிகாரமாக அமைகிறது. பெரும்பாவங்களுக்கு விசேடமாகப் பாவமன்னிப்புக் கேட்பது கட்டாயமாகும்.
பெரும்பாவங்களில் வீழ்வதன் ஆபத்து
5-அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்ளல்
ஹதீஸ்:
அல்லாஹ் கூறுகிறான் : 'எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் அவனுடன் நான் நடந்துகொள்வேன். எனவே, அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ அங்கு அவனுடன் நான் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுடுத்தினால், நான் அவனை எனது மனதில் நினைவு கூறுகிறேன். என்னை அவன் ஒர் சபையோர் மத்தியில் நினைவு கூறினால், அவனை அவர்களை விட மிகவும் சிறந்த ஒர் சபையினரிடத்தில் நான் நினைவு கூர்வேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், அவனிடம் ஒரு முழமளவு நெருங்குகிறேன். அவன் முழமளவு நெருங்கிவந்தால் அவனிடம் ஒரு பாகம் நெருங்குகிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் அவனை நோக்கி விரைந்து செல்கிறேன்'
கலைச் சொற்கள் :
(பாஅன்) : முழுக் கையையும் விரித்தால் கிடைக்கப்பெறும் தூரம் (மனிதனின் இரண்டு கைகளின் நீள அளவு: பாகம்)
ஹர்வலதன் : என்பதன் கருத்து விரைந்து என்பதாகும்
அறிவிப்பாளர் :
அபூ ஹுரைரா, அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸி (ரலி).
5-அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்.
ஹதீஸின் சாரம்சம் :
படிப்பினைகளும், வழிகாட்டல்களும் :
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதன் முக்கியத்துவமும், வணக்க வழிபாடுகளை மனதார ஏற்று, அல்லாஹ்வை நெருங்க வேண்டும் என்பதும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அல்லாஹ்வை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் நினைவுகூர்வது சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.
செயலுக்கு ஒத்த கூலி வழங்கப்படும்.
6. அல்லாஹ்வின் நிழல் பெறும் ஏழு நபர்கள்.
ஹதீஸ்:
அல்லாஹ், தனது அர்ஷின் (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்த போதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று கூறியவர். 6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.
கலைச் சொற்கள் :
தஅத்ஹு : விபச்சாரத்திற்கு அவனை அழைத்தாள்
காலியன் : (தனியாக) மக்கள் பார்வையை விட்டு தூரமாக
6. அல்லாஹ்வின் நிழல் பெறும் ஏழு நபர்கள்.
ஹதீஸின் சாரம்சம் :
படிப்பினைகளும், வழிகாட்டல்களும் :
நீதி, கற்பொழுக்கம், தூய்மை, அல்லாஹ்வுடன் இதயபூர்வத் தொடர்பு ஆகியவை ஒரு முஃமினின் மிக முக்கிய சில பண்புகளாகும்.
அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வது, இம்மை மறுமை மகிழ்ச்சிக்கான காரணமாகும்.
தடைசெய்யப்பட்ட மனோ இச்சைகளிலிருந்து விலகியிருப்பது மறுமையில் மிகப்பெரும் கூலியைப் பெற்றுத்தரும்.
நான்காவது பகுதி : பிக்ஹுல் அஹ்காம் - இஸ்லாமிய சட்டங்கள் -
1. சுத்தமும் வுழு செய்யும் முறையும்.
சுத்தம், தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகளுள் ஒன்றாகும்.
சுத்தம் இரு வகைப்படும் :
முதலாவது: உடல், உடை, இடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருத்தல்.
இரண்டாவது :பெருந்தொடக்கு, சிறுதொடக்கிலிருந்து சுத்தமாக இருத்தல்.
சுத்தத்தின் சிறப்பு :
ஒரு அடியானை அல்லாஹ் நேசிக்க சுத்தம் காரணமாக அமைகிறது
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
வுழு சிறு பாவங்கள் மன்னிக்கப்பட காரணமாக உள்ளது.
1-சுத்தமும் வுழு செய்யும் முறையும்.
வுழூ செய்யும் முறை:
ஒரு முஸ்லிம் வுழூ செய்வதாக உள்ளத்தால் நிய்யத் வைத்துக்கொள்வான்- தனது இரு உள்ளங்கைகளையும் மூன்று தடவைகள் கழுவுவான்- மூன்று தடவைகள் நாசிக்கு நீர்செலுத்துவதுடன் வாயும் கொப்பளிப்பான்- முகத்தை மூன்று தடவைகள கழுவுவான்- இரு கைகளையும் முழங்கைகள் உட்பட மூன்று தடவைகள் கழுவுவான் - தலையை இரு காதுகள் உட்பட -ஒரு தடவை ஈரக்கையால் மஸ்ஹ் செய்வான் -கரண்டைக் கால் உட்பட இரு கால்களையும் கழுவுவான்.
வுழு செய்து முடிந்ததும் பின்வரும் திக்ரை ஓதுவான் : 'அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளனில்லை; மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனின் அடியாரும் துதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்.)
2. தயம்முமும், கால் உறைகள் மீது மஸ்ஹ் செய்வதும்
முதலாவதாக : தயம்மும்
தயம்மும் என்பது : சுத்தமான மண்ணினால் சுத்தமாகிக்கொள்ளல் என்ற நிய்யத்துடன் முகத்தையும் இரு உள்ளங்கைகளையும் ஒரு முறை (மஸ்ஹு செய்தல்) தடவிக்கொள்வதாகும்.
தயம்மும் செய்வதற்கு ஷரீஆ அனுமதித்த சந்தர்ப்பங்கள் :
தயம்மும் செய்யும் முறை:
2-தயம்முமும் ,கால் உறைகள் மீது மஸ்ஹ் செய்வதும்
இரண்டாவது : காலணி (ஹுப்பின்) மீது மஸ்ஹ் செய்தல் :
'ஹுப்' என்பது : தோல் அல்லது அதை ஒத்த பொருட்களினால் செய்யப்பட்டு காலில் அணியப்படும் பாதணிகளை குறிக்கும்.
காலணி (ஹுப்பின்) மீது மஸ்ஹ் செய்வதற்கான நிபந்தனைகள் :
காலணி (ஹுப்பின்) மீது மஸ்ஹ் செய்யும் முறை :
2-தயம்முமும், கால் உரைகள் மீது மஸ்ஹ் செய்வதும்
மூன்றாவது: பெண்டேஜ்களில் மஸ்ஹு செய்தல் :
'ஜபீரா' –( bandage) என்பது முறிவுகள், காயங்கள் ஆறுவதற்கு இடப்படும் கட்டுகள்
முஸ்லிம் தனது தேவைக்கேட்ப கட்டுகளின் மீது மஸ்ஹ் செய்வான்.
கட்டுகளைப் பொறுத்தவரை அவை வுழுவுடன் போடப்பட்டிருத்தல் வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.
கட்டுகளின் மீது மஸ்ஹ் செய்வதற்கான கால வரையரை ஏதும் கிடையாது.
3-குளிப்பு:
குளித்தல் என்பதன் கருத்து :
குளித்தல் என்பது சுத்தமாகும் நோக்கத்தில் -எண்ணத்தில்- உடல் முழுவதையும் நீரால் நனைத்தல்.
கட்டாயமாக குளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் :
குளிப்பு வாஜிபுாகும் சந்தர்ப்பங்கள் :
குளிப்பின் முறை :
4- தொழுகையின் மகிமை
தொழுகை மார்க்கத்தின் தூணாகும்.
தொழுகை இஸ்லாத்தின் அடையாளமாகும்
ஏகத்துவத்தை ஏற்ற பின் நிறைவேற்ற வேண்டிய முதல் கடமையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இறுதி அறிவுரையாகும்.
மறுமை நாளில் அடியானிடம் விசாரிக்கப்படும் முதல் விடயமாகும்.
பாவங்கள் மற்றும் தவறுகளுக்கான பரிகாரமாக தொழுகையை அல்லாஹ் வைத்துள்ளான்.
5. தொழும் முறை
தொழும் முறை :
சுத்தம் -வுழூ செய்தல் -, அவ்ரத்தை மறைத்திருத்தல், கிப்லாவை முன்னோக்குதல்
(தொழுவதாக) நிய்யத் வைத்தல்- நிலையில் நிற்றல் - தக்பீர் கூறுதல் -ஸூறா அல்பாத்திஹா ஓதுதல்.
ருகூஉ செய்தல், அதிலிருந்து நிலைக்கு வருதல்.
இரண்டு முறை ஸுஜூத் செய்தல், அவற்றிற்கிடையில் அமர்தல்.
இரண்டாம் ரக்அத்திற்குப் பின் அமர்ந்து தஷஹ்ஹுத் - அத்தஹிய்யாத்- ஒதுதல்.
இறுதி ரக்அத் முடிவில் அமர்ந்து தஷஹ்ஹுத் - அத்தஹிய்யாத்- மற்றும் ஸலவாத் இப்ராஹிமிய்யாவை ஓதுதல்.
ஸலாம் கூறுதல் :
தொழுகையின் எல்லா செயற்பாடுகளிலும் நிதானத்தை கடைப்பிடித்தல்.
ஐந்தாம் பகுதி : அல் அஹ்லாக் : பண்பாடுகள் -ஒழுக்கங்கள்
1. உண்ணல், பருகலின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள்
முதலாவது : ஸுன்னாவில் வலியுறுத்தப்பட்ட ஒழுங்குகள் :
உண்பதற்கும் குடிப்பதற்கும் முன் பிஸ்மில் கூறுதல்
உண்பதற்கும் குடிப்பதற்கும் வலது கையைப் பயன்படுத்தல்
தனக்கு அருகாமையில் உள்ளவற்றை சாப்பிடுதல்.
உணவு உண்ட பின்னும் பானங்களை அருந்திய பின்னரும் அல்ஹம்துலில்லாஹ் கூறி அல்லாஹ்வைப் புகழுதல்.
இரண்டாவது : உண்ணல் பருகலின் தடைசெய்யப்பட்ட சில செயல்கள் :
சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்.
வீண்விரயம் செய்தல், அளவுக்கு மீறி சாப்பிடுதல்.
சூடான உணவில் ஊதுதல்.
பானங்களை அருந்தும் போது அதில் மூச்சுவிடுதல்.
2-வீட்டினுள் நுழைய அனுமதிபெறும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள்
அனுமதி கோருவதன் சட்ட நிலை :
அனுமதி கோருவதில் காணப்படும் தத்துவம் :
அனுமதி பெறுவதின் ஓழுங்குகள் :
ஸலாம் கூறிய பின் நுழைவதற்கு அனுமதி கோரல்.
அனுமதிகோருபவர் தனது பெயரை கூறி கதவின் வலப்பக்கமாக அல்லது இடப்பக்கமாக நிற்றல்.
2-வீட்டினுள் நுழைய அனுமதிபெறும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள்
வீட்டின் உள்ளே அனுமதி கோரல் -அதாவது வீட்டின் அறைகளுக்கு செல்லும் போது அனுமதி கோரல். :
அனுமதி கோருவதற்கான நேரங்கள் : பஜ்ர் முன் - பகல் பொழுதில் - இஷாத் தொழுகையின் பின்
பேசும் பேசும் போதும் சபையிலும் பேண (கடைபிடிக்க) வேண்டிய ஓழுங்குகள்
முதலாவது : உரையாடலின்-பேச்சின்- போது கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்:
பேசுவதற்கு முன் ஸலாம் கூறுதல்.
நல்ல விடயங்களை மாத்திரமே பேசுதல். பொய், புறம், கோள், ஆபசமான வார்த்தைகளை பேசுவதை தவிர்ந்து கொள்ளல்.
தேவையற்றதை பேசுவதை தவிர்க்க வேண்டும்.
ஓரிடத்தில் மூவர் இருக்கும் போது இருவர் மாத்திரம் தங்களுக்கிடையில் இரகசியம் பேசுதல் கூடாது.
சபையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க முறைகள் :
சபைக்குள் நுழையும் வேளையிலும்; வெளியேறும் போதும் ஸலாம் கூறுதல்.
சபையில் உமக்கு கிடைக்கும் இடத்தில் அமர்தல்.
சபையில் பிறரும் அமர்வதற்காக வழிவிட்டு இருத்தல்.
நல்லோருடன் சேர்ந்திருத்தல்.
கேளிக்கை பாவங்கள் நிகழும் சபைகளைவிட்டு விலகியிருத்தல்.
கப்பாரதுல் மஜ்லிஸ் திக்ரை ஓதுதல்.
4. இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் :
முதலாவது : இயற்கைத் தேவைகளை (மலசலம் கழிக்கையில்) நிறைவேற்ற முன் :
மலசல கூடத்தினுள் இடது காலை வைத்து நுழைதல்.
கழிவறையினுள் நுழைய முன் பின்வரும் துஆவை ஓதுதல் : (அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்) பொருள் : யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
இரண்டாவது :இயற்கைத் தேவைகளை (மலசலம் கழிக்கையில்) நிறைவேற்ற போது பேண வேண்டியவை:
மக்கள் பார்க்காத வகையில் மறைத்துக் கொள்ளல்.
மக்கள் செல்லும் பாதைகளில் அல்லது அவர்கள் நிழல் பெரும் மரங்களுக்கு கீழ் மலசலம் கழிப்பதை தவிர்ந்து கொள்ளுதல்.
கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ இருப்பதை தவிர்த்தல்.
4-இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள் :
மூன்றாவது : மலசலம் கழித்த பின் :
மலம்சலம் கழித்த இடத்தை சுத்தமான நிலையில் விட்டுச்செல்லுதல்.
இரு கைகளையும் நன்றாகக் கழுவுதல்.
வலது காலை முன்வைத்து வெளியேறுதல்.
வெளியேறிய பின் 'குப்ரானக’ என்று கூறுதல்.
அலகு ஒன்று: குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரை.
அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஓழுங்குகள்
அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு :
அல் குர்ஆன் ஓதும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஓழுங்குகள் :
அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை.
ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடல்.
கருத்துக்களை சிந்தித்தல்.
தஜ்வீத் சட்டங்களை நடைமுறைப் படுத்துதல்.
அல்குர்ஆனை அழகாக ஓதுதல்.
2. புனித அல்குர்ஆன் பிரதியும், அதனைக் கையாளும் ஒழுக்கங்களும்:
குர்ஆன் பிரதி என்பது யாது என்பதை விளக்குதல் :
அல்குர்ஆன் பிரதி : இது அல்குர்ஆனை உள்ளடக்கியுள்ள நூலாகும்.
ஸூரா பாதிஹாவில் ஆரம்பித்து, ஸூரா நாஸில் முடியும் விதத்தில் 114 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது.
குர்ஆன் பிரதியை கண்ணியப்படுத்துவதன் அவசியம் :
குர்ஆன் பிரதியை மகத்துவப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
அல்குர்ஆன் பிரதியை அவமதிப்பது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும்.
2. அல்குர்ஆன் பிரதியும், அதனைக் கையாளும் ஒழுக்கங்களும்
குர்ஆன் பிரதியைக் கையாளும் ஒழுங்குகள்
அல்குர்ஆன் பிரதியைப் பாதுகாத்து, சுத்தப்படுத்தி, சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
சுத்தமின்றி அல்குர்ஆன் பிரதியைத் தொடுவதைத் தவிர்த்தல்.
அல்குர்ஆன் பிரதியை அவமதிப்பது ஹராமாகும்.
3. ஆயதுல் குர்ஸியின் விளக்கம்
சொற்களின் கருத்துக்கள் :
அல்கய்யூம் : தனது படைப்பினங்களின் அனைத்து விடயங்களையும் நிலைத்திருந்து மேற்கொள்பவன்.
ஸினத் : சிறு தூக்கம்.
யஊதுஹூ : இயலாமையாக்குதல்
இவ்வசனத்திலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
ஆயதுல் குர்ஸிதான் அல்குர்ஆனின் மிக மகத்தான வசனமாகும்.
இவ்வசனம் அல்லாஹ்வை அனைத்து பரிபூரண பண்புகளைக் கொண்டு வர்ணிப்பதையும், அவனை விட்டும் அனைத்து குறைபாடுகளையும் மறுப்பதையும் அறிவிக்கின்றது.
குர்ஸி என்பது வானங்கள், பூமியை விட விசாலமான பிரமாண்ட படைப்பாகும்.
4. தகாஸுர் மற்றும் அஸ்ர் அத்தியாயங்களின் விளக்கம்
கலைச்சொற்கள் :
அல்ஹாகும் : உங்களைப் பராக்காக்கி விட்டது.
அத்தகாஸுர் : செல்வங்கள், பிள்ளைகளை வைத்துப் பெருமையடித்தல்.
ஸுர்தும் : நீங்கள் மரணித்து, அடக்கம் செய்யப்படும் வரை.
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
மறுமையின் கோர நிகழ்வுகளை விட்டும் அல்லாஹ் தனது அடியார்களை எச்சரிக்கின்றான்.
மக்கள் நன்றி செலுத்தாத அருட்கொடைகளைப் பற்றி அவர்களிடம் விசாரணை செய்வான்.
நான்கு விடயங்களை மேற்கொள்வோரைத் தவிர அனைத்து மக்களும் நட்டத்தில் உள்ளனர். (ஈமான் - நற்செயல் - அல்லாஹ்வின் பால் அழைத்தல் - பொறுமை).
5. ஹுமஸா, ஃபீல் அத்தியாயங்களின் விளக்கம்
கலைச்சொற்கள் :
ஹுமஸதில் லுமஸா : மக்களைக் குறை கூறி, அவர்களைப் பற்றிப் புறம் பேசுவோர்.
லயுன்பதன்ன : தூக்கி வீசியெறியப்படுவர்.
ஹுதமா : போடப்படும் அனைத்தையும் தகர்த்தெறிக்கும் நெருப்பு
முஃஸதா : மூடப்பட்டது.
தைரன் அபாபீல் : தொடராக வரும் பறவைக் கூட்டங்கள்.
ஸிஜ்ஜீல் : சுடப்பட்ட களிமண்கல்.
கஅஸ்பின் : விலகங்குகள் மென்று விட்டு உமிழ்ந்த காய்ந்த வைக்கோலைப் போன்று
5. ஹுமஸா, ஃபீல் அத்தியாயங்களின் விளக்கம்
மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
புறம், கோல், பரிகாசம் ஆகியன மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்க்கின்றன.
தீய பண்புகள் மறுமை வேதனைக்குக் காரணமாகின்றன.
அல்லாஹ் தனது புனிதங்களை மீறுவோன் மீது சக்தி பெற்றவன்.
6. குரைஷ், மாஊன் ஆகிய அத்தியாங்களின் விளக்கம்.
கலைச்சொற்கள் :
லிஈலாபி குரைஷ் : அவர்களுடைய வழமை மற்றும் இயல்பாக அவர்கள் பழகியவைக்காக.
யதுஃஉ : கடுமையாகத் தள்ளி, அவமதிப்பவன்.
யுராஊன : நற்செயல்களை முகஸ்துதிக்காக பகிரங்கப்படுத்துவார்கள்.
மாஊன் : மக்களுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள் போன்றவை.
மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
பாதுகாப்பு, உணவு, பான வசதிகள் இருப்பது அல்லாஹ் எமக்களித்துள்ள மிகப்பெரிய அருட்கொடைகளில் சிலவனவாகும்.
மறுமையைப் பொய்ப்பிப்பவன் அல்லாஹ்வுடைய கடமைகளையோ, அவனது அடியார்களுடைய கடமைகளையோ நிறைவேற்ற மாட்டான்.
முகஸ்துதி மற்றும் தொழுகையை உரிய நேரத்தை விட்டும் தாமதப்படுத்துவதன் விபரீதம்.
அலகு இரண்டு: நம்பிக்கை மற்றும் தூய்மைப்படுத்தல்
1. ஓரிறைக் கொள்கையின் சிறப்பு மற்றும் மகத்துவம் :
முதலாவதாக : ஓரிறைக் கொள்கையின் வரைவிலக்கணம் :
ஓரிறைக் கொள்கை : அல்லாஹ்வை அவனுக்கு மாத்திரமுள்ள அவனது பரிபாலனம்(ருபூபிய்யா), இறைமை (உளூஹிய்யா), பெயர் மற்றும் பண்புகளில் ஒருமைப் படுத்துவதாகும்.
இரண்டாவதாக : ஓரிறைக் கொள்கையின் சிறப்பு மற்றும் மகத்துவம் :
ஓரிறைக் கொள்கை என்பது அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
ஓரிறைக் கொள்கைதான் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்ததன் நோக்கம் .
ஓரிறைக் கொள்கையின்பால் அழைப்பு விடுப்பதுதான் இறைத்தூதர்களை அனுப்புவதன் நோக்கம்.
ஓரிறைக் கொள்கை நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனையாகும்.
ஓரிறைக் கொள்கை பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
2. பரிபாலித்தல் விடயத்தில் ஏகத்துவம் (தவ்ஹீதுர் ருபூபிய்யா)
முதலாவது : தவ்ஹீதுர் ருபூபிய்யாவின் வரைவிலக்கணம் :
இது படைத்தல், வாழ்வாதாரமளித்தல், திட்டமிட்டு நிர்வகித்தல் போன்ற அல்லாஹ்வின் பிரத்தியேகமான செயல்களைக் கொண்டு அவனை ஒருமைப்படுத்தல்.
இரண்டாவது : தவ்ஹீதுர் ருபூபிய்யாவை நம்பிக்கை கொள்ளும் முறை :
பின்வரும் விடயங்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானவை என நாம் ஈமான் கொள்ளுதல் :
படைத்தல், வாழ்வாதாரமளித்தல் - அதிகாரம், திட்டமிட்டு நிர்வகித்தல் - நலவு செய்தல், தீங்கு ஏற்படுத்துதல் - உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல்.
மூன்றாவது: தவ்ஹீதுர் ருபூபிய்யாவிற்கு முரண்படும் சில விடயங்கள் :
அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறுத்தல் .
மறைவான அம்சங்கள் பற்றிய ஞானம் இருப்பதாக வாதாடுதல்.
வாழ்வாதரத்தைக் கொண்டு வருதல், நலவு, கெடுதிகளை வைத்திருப்பவன் போன்ற விடயங்களில் அல்லாஹ் அல்லாத ஒருவன் செயல்படுவதாக வாதாடுதல்.
3. வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம் (தவ்ஹீதுல் உலூஹிய்யா)
முதலாவது : தவ்ஹீதுல் உலூஹிய்யாவின் வரைவிலக்கணம் :
அனைத்து விதமான வணக்கங்களைக் கொண்டும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல். அவை :
உள்ளம் தொடர்பான வணக்கங்கள் - வார்த்தை தொடர்பான வணக்கங்கள் - உடல் தொடர்பான வணக்கங்கள்.
இரண்டாவது : தவ்ஹீதுல் உலூஹிய்யா மற்றும் தவ்ஹீதுர் ருபூபிய்யா என்பவற்றுக்கிடையிலான தொடர்பு :
தவ்ஹீதுர் ருபூபிய்யாவை ஏற்றவர் தவ்ஹீதுல் உலூஹிய்யாவையும் ஏற்றே ஆக வேண்டும் .
ருபூபிய்யாவை ஏற்றுக் கொள்வதால் உலூஹிய்யா அவசியமில்லை என்றாகமாட்டாது.
3. வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம் (தவ்ஹீதுல் உலூஹிய்யா)
மூன்றாவது : தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்கு முரண்படும் சில அம்சங்கள்:
அல்லாஹ் அல்லாதோரை வணங்குதல்.
அல்லாஹ் அல்லாதோரை அழைத்துப் பிரார்த்தித்தல்.
அல்லாஹ் அல்லாதோருக்கு நேர்ச்சை வைத்தல், அறுத்துப் பலியிடல்.
4. இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம் (தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்)
முதலாவது : தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாதின் அர்த்தம் :
இது அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை நம்பிக்கை கொள்ளுதல்.
இரண்டாவது : அல்லாஹ்வின் பெயர்கள் :
அதன் வரைவிலக்கணம் : இவை அல்லாஹ் தனக்கென பிரத்தியேகமாகக் கொண்டுள்ள பெயர்கள்.
அல்லாஹ்வுடைய பெயர்கள் அவனது பண்புகளை அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் ஒவ்வொரு திருநாமமும் அவை சுட்டிக்காட்டும் பண்பை உள்ளடக்குகின்றது.
மூன்றாவது : அல்லாஹ்வின் பண்புகள் :
அல்லாஹ் தனக்கிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ள, பரிபூரணத்தை அறிவிக்கக் கூடிய பண்புகளை உள்ளடக்குகின்றன. அவற்றை ஏற்று, உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
அல்லாஹ்விட்கு இருக்க முடியாத பண்புகள். அவை உறக்கம், அநீதி போன்ற குறைகளைக் காட்டும் பண்புகளாகும்.
5. வணக்கமும் அதன் வகைகளும்
முதலாவது : வணக்கத்தின் வரைவிலக்கணம் :
இது : வெளிப்படையான, மறைவான வார்த்தைகள் மற்றும் செயல்களில் அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமான ஒரு பொதுவான பெயராகும்.
இரண்டாவது : வணக்கத்தின் வகைகள் :
உள்ரங்கமான வணக்கங்கள் : இவை நேசம், அச்சம், ஆதரவு போன்ற உள்ளத்துடன் தொடர்பான வணக்கங்களாகும்.
வெளிரங்கமான வணக்கங்கள் : இவை மூன்று வகையாகும் :
சொல் சார்ந்த வணக்கங்கள் - செயல் சார்ந்த வணக்கங்கள் - பொருளாதாரம் சார்ந்த வணக்கங்கள்.
5. வணக்கமும் அதன் வகைகளும்
மூன்றாவது : வணக்கத்தின் அவசியம் :
இதுவே மனிதன் படைக்கப்பட்ட நோக்கமாகும்.
இதுவே இறைத்தூதர்கள் அனுப்பப்படதன் நோக்கமாகும்.
நான்காவது : வணக்கத்தின் பயன் :
வணக்கம் ஈருலக சுபீட்சத்திற்கான காரணமாகும்.
6. வணக்கத்தின் நிபந்தனைகளும் கடமைகளும்.
முதலாவது : வணக்கத்தின் நிபந்தனைகள்
முதல் நிபந்தனை: உளத்தூய்மை:
அடியான் தன் எல்லா செயல்களாலும், வார்த்தைகளாலும் அல்லாஹ்வின் திருப்தியை உள்ளத்தால் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது நிபந்தனை : நபிவழியைப் பின்பற்றல் :
இதை நடைமுறைப்படுத்துவதென்பது, நபிவழிப் பிரகாரம் ஒரு முஸ்லிம் தனது இரட்சகனை வணங்குவதாகும்.
6. வணக்கத்தின் நிபந்தனைகளும் கடமைகளும்.
இரண்டாவது: வணக்கத்தின் அடிப்படை அம்சங்கள் :
முதல் அடிப்படை : அல்லாஹ்வை நேசித்தல் .
இரண்டாவது அடிப்படை : ஆதரவு வைத்தல்.
மூன்றாவது அடிப்படை : அச்சம் .
7. ஈமான் அதிகரித்தலும் குறைதலும் :
முதலாவது: ஈமான் அதிகரிக்கும் மற்றும் குறையும் என்பதற்கான ஆதாரங்கள் :
இரண்டாவது: ஈமானை அதிகரிக்கும் செயல்கள்:
அல்லாஹ்வைப் பற்றி அறிதல்.
அல்லாஹ்வை நேசித்தல்.
நற்பண்புகள்.
மூன்றாவது : ஈமானைக் குறைக்கும் செயல்கள் :
அனைத்துப் பாவங்களும் ஈமானைக் குறைக்கும். பெரும் பாவங்களைச் செய்வதன் மூலும் மென்மேலும் குறைவடையும்.
நான்காவது : விசுவாசிகளிடையிலான ஏற்றத் தாழ்வு :
விசுவாசிகள் தமது நற்செயல்கள் மற்றும் அவற்றில் அவர்களது உளத்தூய்மையின் அளவு என்பவற்றிற்கேற்ப ஈமானில் வேறுபடுவார்கள்.
மூன்றாவது அலகு: ஸுன்னா மற்றும் நபிகளாரின் நற்பண்புகள்
1. உறவினர்களுடனான நபியவர்களின் வழிமுறை
முதலாவது : தனது முஸ்லிம் உறவினர்களுடனான நபியவர்களின் வழிமுறை:
நபியவர்கள் தனது உறவினர்களை மதித்தமை.
அவர்களது சுக, துக்கங்களில் நபியவர்கள் பங்கெடுத்தமை.
அவர்களது பிள்ளைகளை நபியவர்கள் பராமரித்தமை.
இரண்டாவது : தனது முஸ்லிமல்லாத உறவினர்களுடனான நபியவர்களின் வழிகாட்டுதல்:
அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதில் அக்கறை செலுத்தியமை .
அவர்களால் ஏற்படும் துன்பங்களை நபியவர்கள் சகித்துக் கொண்டமை.
அவர்களுக்கு நபியவர்கள் இரக்கம் காட்டியமையும், அவர்களுக்காகப் பிரார்த்தித்தமையும்.
நபியவர்கள் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடந்தமை.
2. தனது அயலவர்களுடனான நபியவர்களின் வழிமுறை
அயலவர்களுக்கு உபகாரம் செய்தமை.
அயலவர்களுக்கு உதவியமை மற்றும் அவர்களுக்கு நலவு நாடியமை.
அயலவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டமை.
அயலவர்களின் துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டமை.
அயலவர்களைத் துன்புறுத்தாதிருந்தமை.
3. சிறார்களைக் கையாள்வதில் நபியவர்களின் வழிமுறை:
முதலாவதாக: பிறப்பிலிருந்தே அவர்களைப் பராமரிப்பது:
பிறந்த குழந்தையின் காதில் அதான் கூறுதல்.
பிறந்த குழந்தையின் வாயில் இனிப்புப் பண்டம் மென்று வைத்தல்.
சிறார்களுக்கு மார்க்க அடிப்படையில் மந்திரித்தல் (ஓதுதல்), அவர்களுக்காக இறைவனிடம் பாதுகாப்புத் தேடுதல்.
இரண்டாவது: அவர்களை இரக்கம், பணிவு மற்றும் மரியாதையுடன் நடத்துதல்:
சிறார்களை நபியவர்கள் சுமந்தமை.
அவர்களுடன் விளையாட்டில் பங்கெடுத்தமை.
உணவில் அவர்களுடன் பங்கெடுத்து, அதன் ஒழுக்கங்களை சுட்டிக்காட்டியமை.
அவர்களை மதித்து, அவர்களது உரிமைகளைப் பாதுகாத்தமை.
3. சிறார்களைக் கையாள்வதில் நபியவர்களின் வழிமுறை
மூன்றாவது: அவர்களைக் கல்வியூட்டி, ஒழுக்கமூட்டி வளர்ப்பதில் அக்கறை கொள்தல் .
எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்தமை .
சரியான அடிப்படைக் கொள்கையைக் கற்றுக் கொடுத்தமை.
வணக்கங்கள் மற்றும் நற்பண்புகளுக்கு அவர்களைப் பழக்கிவிடுமாறு நபியவர்கள் ஏவியமை.
சிறார்கள் இறைநிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாவதை நபியவர்கள் தடை செய்தமை.
4. முஸ்லிமல்லாதவர்களுடன் நபியவர்களின் நடைமுறை
முதலாவது: மார்க்கத்தை ஏற்க அவர்களை வற்புறுத்தாமை:
இரண்டாவது : அழகிய முறையில் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தமை:
மூன்றாவது: அவர்களை நன்றாக நடத்தியமை:
நான்காவது : அவர்களுடன் நீதமாக நடந்துகொண்டமை, அவர்களுக்கு அநீதி இழைப்பதைத் தடை செய்தமை:
ஐந்தாவது : அவர்களுடைய தனிப்பட்ட உரிமைகளை நிறைவேற்றியமை:
5. முஸ்லிமின் உரிமைகள்
ஹதீஸ்:
'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
சொற்களின் கருத்துக்கள் :
இயாதத் : நலம் விசாரிக்கச் செல்லல்
தஷ்மீதுல் ஆதிஸ் : யர்ஹமுகல்லாஹ் என அவருக்காகப் பிரார்த்தித்தல்.
அறிவிப்பாளர் :
அபூ ஹுரைரா, அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸி
ஹதீஸின் சாரம்சம் :
5. முஸ்லிமின் உரிமைகள்
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
மார்க்கம் முஸ்லிமின் உரிமையை மகத்துவப்படுத்தியுள்ளமை
இஸ்லாம், உள்ளங்களுக்கு மத்தியில் இணக்கப்படுத்துவதில் கவனமெடுத்துள்ளமை.
இந்த ஐந்து விடயங்களும் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் பிரதான கடமைகளாகும்.
6. உறவைப் பேணுவதன் சிறப்பு
ஹதீஸ்:
''தனது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் குடும்ப உறவைப் பேணி வாழட்டும்''.
சொற்களின் கருத்துக்கள் :
யுன்ஸஅ : நீளும், அல்லது பரகத் செய்யப்படும்.
அஸருஹூ : அவரது வாழ்நாள்
அறிவிப்பாளர் :
அன்ஸாரிகளைச் சேர்ந்த அனஸ் இப்னு மாலிக்
ஹதீஸின் சாரம்சம் :
6. உறவைப் பேணுவதன் சிறப்பு
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
குடும்ப உறவைச் சேர்ந்துநடக்க ஆர்வமூட்டல்.
சமூக வாழ்வின் பல்வேறு கோணங்களையும் இஸ்லாம் கவனித்துள்ளமை.
குடும்ப உறவைப் பேணுதல் வாழ்க்கையில் பரகத் கிடைத்தல், ரிஸ்கு விசாலமாகுதல், அழகிய பாராட்டு ஆகியன கிடைக்கக் காரணமாகும்.
7. இரக்கம் காட்டுதலும் மதித்தலும்
ஹதீஸ்:
"எமது சிறார்களுக்கு இரக்கம் காட்டாதவனும், எமது பெரியோர்களின் உரிமைகளை அறியாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்லர்".
சொற்களின் கருத்துக்கள்:
லைஸ மின்னா : எமது ஸுன்னாவைப் பின்பற்றுபவரல்லர்.
அறிவிப்பாளர் :
குரைஷிகளைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ்.
ஹதீஸின் சாரம்சம் :
7. இரக்கம் காட்டுதலும் மதித்தலும்
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
இரக்கம் காட்டுதலின் முக்கியத்துவம், குறிப்பாக சிறார்களுடன்.
பெரியோர் மற்றும் உயர்அந்தஸ்துகளில் உள்ளோரை கண்ணியப்படுத்தி, மதித்தல்.
இரக்கமும் மரியாதையும் முஸ்லிம் சமூகத்தின் விஷேட அடையாளங்கள்.
8. அயலவர் மற்றும் விருந்தாளிகளை கண்ணியப்படுத்தல்
ஹதீஸ்:
"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்".
சொற்களின் கருத்துக்கள் :
லியஸ்முத் : மௌனித்திருக்கட்டும்.
பல்யுக்ரிம் ஜாரஹூ : அழகிய நடைமுறை மூலம் கண்ணியப்படுத்தல்.
அறிவிப்பாளர் :
அபு ஹுரைரா
ஹதீஸின் சாரம்சம் :
8. அயலவர் மற்றும் விருந்தாளிகளை கண்ணியப்படுத்தல்
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
நல்வார்த்தையைப் பேசத் தூண்டுதல், வீணான பொய்யான பேச்சுக்களை விடுதல்.
அயலவர்களுக்கு உபகாரம் புரிவது ஈமானினைப் பரிபூரணப்படுத்தும் செயல்களில் ஒன்றாகும்.
விருந்தினரை கண்ணியப்படுத்துவதன் சிறப்பு.
மிதமான நடுநிலைப் போக்கு.
ஹதீஸ் :
ஸல்மான் பாரிஸீ (ரலி) அபுத்தர்தா (ரலி) அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்கள் : "உங்கள் இறைவனுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை உள்ளது, உங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை உள்ளது, உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை உள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை வழங்குங்கள்". அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸல்மான் உண்மையைச் சொன்னார்". என்று கூறினார்கள்.
ஹதீஸின் சாரம்சம் :
படிப்பினைகளும், வழிகாட்டல்களும்:
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுத்து, எந்த உரிமையிலும் குறைவைக்காமலிருத்தல்.
வணக்கத்தில் சக்திக்கப்பாற்பட்டதை வருத்திச் செய்வதைத் தவிர்ந்து கொள்தல்.
மனிதனின் இயல்புணர்வு, அவனது உளவியல், உடலியல் தேவைகளை இஸ்லாம் கவனித்துள்ளமை.
நான்காவது பகுதி : பிக்ஹுல் அஹ்காம் - இஸ்லாமிய சட்டங்கள் -
1. வுழூவின் சட்டங்கள்
முதலாவது : வுழூவின் பர்ழுகள் (கடமைகள்) ஆறு :
வாய் கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்துவதுடன் முகத்தைக் கழுவுதல்.
முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்.
தலைமுழுதும் மஸ்ஹு செய்தல்.
கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்.
ஒழுங்குமுறை பேணல்
விட்டு விட்டு செய்யாமல், தொடர்ந்து செய்தல்.
1. வுழூவின் சட்டங்கள்
இரண்டாவது : வுழூவின் ஸுன்னத்துகள்:
வுழூவின் ஆரம்பத்தில் மூன்று தடவை இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்.
வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்துதலை முகம் கழுவ முன்னர் செய்தல். மற்றும், நோன்பளி அல்லாதோர் அவற்றில் சற்று ஆழமாகச் செய்தல்.
பல் துலக்குதல்.
மும்மூன்று முறை செய்தல்.
வலதை முற்படுத்திச் செய்தல்.
1. வுழூவின் சட்டங்கள்
மூன்றாவது : வுழூவை முறிக்கக் கூடியவை:
முன், பின் துவாரங்களிலிருந்து ஏதாவது வெளிப்படல்.
திரையின்றி அபத்தைத் தொடுதல்.
புத்தி நீங்குதல்.
ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்.
2. தொழுகையின் நிபந்தனைகள்
தொழுகையின் நிபந்தனைகள் :
இஸ்லாம்.
புத்தி சுயாதீனம்
சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாக இருத்தல்.
உடல், உடை, தொழுமிடம் சுத்தமாக இருத்தல்.
தொழுகையின் நேரம் நுழைதல்.
உடலில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்தல்.
கிப்லாவை முன்னோக்குதல்.
நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்)
3. தொழுகையின் முதல் நிலை இரண்டாம் நிலை கடமைளும்கள்
முதலாவதாக : தொழுகையின் முதல் நிலை கடமைகள் :
1. கடமையான தொழுகையில் நின்று தொழுதல்.
2. ஆரம்பத் தக்பீர் கூறுதல்.
3. ஸூறா அல் பாத்திஹாவை ஓதுதல்.
4. ருகூஃ செய்தல்.
5. ருகூஃவிலிருந்து நடுநிலைக்கு வருதல்.
6. ஸுஜூது செய்தல்.
7. ஸுஜூதிலிருந்து நடு இருப்பிற்கு வருதல்.
8- இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல்.
3. தொழுகையின் முதல் நிலை இரண்டாம் நிலை கடமைகள்.
முதலாவதாக : தொழுகையின் முதல் நிலை கடமைகள் (ருக்ன்கள்) :
9. இறுதி அத்தஹிய்யாத் ஓத அமர்தல்.
10. இறுதி அத்தஹிய்யாத் ஓதுதல்.
11. இறுதி அத்தஹிய்யாதில் நபியவர்கள் மீது ஸலவாத் கூறுதல்.
12. ருகூன்களுக்கிடையில் ஒழுங்கு முறை பேணுதல்.
13. ஸலாம் கூறுதல்.
14. அனைத்து ருகூன்களிலும் அமைதியாக தரித்து நிற்றல்.
3. தொழுகையின் முதல் நிலை இரண்டாம் நிலை கடமைகள்
இரண்டாவதாக : தொழுகையின் இரண்டாம் நிலை கடமைகள் (வாஜிப்கள்):
ஆரம்ப தக்பீர் தவிர்ந்த ஏனைய அனைத்து தக்பீர்களும்.
ருகூஃவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அழீம்’ எனக் கூறுதல்.
ஸுஜூதில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று கூறுதல்.
ருகூஃவிலிருந்து எழும்போது தனித்துத் தொழுபவர் மற்றும் தொழுகை நடத்துபவர் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறுதல்.
ருகூஃவிலிருந்து எழும்போது ‘ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறுதல்.
இரு ஸஜ்தாக்களுக்கிடையில் ‘ரப்பிஃபிர்லீ’ எனக் கூறுதல்.
முதல் அத்தஹிய்யாதும் அதற்காக உட்காருதலும்.
4. தொழுகையின் ஸுன்னாக்களும் தொழுகையை முறிப்பவையும்
முதலாவதாக : தொழுகையின் ஸுன்னாக்கள்
முதலாவதாக : சொல் சார்ந்த ஸுன்னாக்கள் :
ஆரம்ப துஆ - அஊது கூறுதல் - பாதிஹாவுக்குப் பின் ஒரு ஸூரா ஓதுதல் - ஆமீன் கூறுதல் - ஒன்றுக்கு மேற்பட்ட தஸ்பீஹ்கள் - இறுதி அத்தஹிய்யாத் முடிந்ததும் பிரார்த்தித்தல்.
இரண்டாவதாக : செயல் சார்ந்த ஸுன்னாக்கள் :
தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துதல்.
நிலையில் இடது கைக்கு மேல் வலது கையை வைத்தல்.
ருகூஃவில் இரு கைகளையும் முழங்கால்களில் வைத்தல்.
இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இரு கைகளையும் தொடைகள் மீது வைத்தல்.
ஸுஜூது செய்யும் இடத்தை நோக்குதல்.
4. தொழுகையின் ஸுன்னாக்களும் அதை முறிப்பவையும்
இரண்டாவதாக : தொழுகையை முறிப்பவை
ஒரு ருகூனை வேண்டுமென்றே விடுதல் - ஒரு வாஜிபை வேண்டுமென்றே விடுதல் - ஒரு நிபந்தனையை வேண்டுமென்றே விடுதல் - வேண்டுமென்றே உண்ணல், பருகல் - தொழுகை நலனுக்காக அன்றி வேண்டுமென்றே கதைத்தல் - வேண்டுமென்றே சப்தமிட்டு சிரித்தல் - தொழுகையுடன் தொடர்புபடாத செயல்களை அதிகமாகச் செய்தல் போன்றவை அவற்றில் உள்ளடங்கும்.
5. கூட்டுத் தொழுகை
முதலாவதாக : கூட்டுத் தொழுகையின் சட்ட திட்டங்கள் :
புத்தியுள்ள, பருவமடைந்த ஆடவர் அனைவருக்கும் கூட்டுத்தொழுகை கடமையாகும்.
கூட்டுத் தொழுகை நிறைவேறுவதற்கான குறைந்த பட்ச எண்ணிக்கை இருவராகும்.
இரண்டாவதாக : கூட்டுத் தொழுகையின் சிறப்புகள் :
கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதை விடச் சிறந்தது .
சுவனம் நுழையக் காரணமாகும்
இஷா மற்றும் பஜ்ர் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதன் சிறப்பு
பதவிகள் உயர்த்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுதல் .
6. ஜும்ஆ தொழுகை
ஜும்ஆ தொழுகையின் சிறப்பு :
ஜும்ஆத் தொழுகையின் சட்டம் :
ஜும்ஆத் தொழுகை முறை :
தொழுகைக்கு முன் இமாம் இரண்டு குத்பாக்கள் ஓதுவார்.
ஜும்ஆத் தொழுகை பள்ளிவாயிலில் கூட்டாக இரண்டு ரக்அத்களாக, சப்தமாக ஓதப்பட்டு நிறைவேற்றப்படும்.
ஜும்ஆ மற்றும் முனாபிகூன், அல்லது அஃலா மற்றும் காஷியா அத்தியாயங்களை இரு ரக்அத்களிலும் ஓதுதல்.
6. ஜும்ஆ தொழுகை
ஜும்ஆத் தொழுகையின் ஒழுங்குகள் :
குளித்து, நறுமணமிடுதல், அழகிய ஆடையை அணிதல், தொழுகைக்காக நேரகாலத்துடன் செல்லுதல்.
நபியவர்கள் மீது அதிக ஸலவாத் கூறுதல்.
பிரார்த்தனை ஏற்கப்படும் நேரத்தை எதிர்பார்த்து அதிகம் பிரார்த்தனை புரிதல்.
குத்பாவை செவிமடுத்தல், வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதை விட்டுவிடுதல்.
7. உபரித் தொழுகை
வித்ரு தொழுகை :
முன்பின் சுன்னத் தொழுகைகள் :
தராவீஹ் (ரமழான் மாத இரவு) தொழுகை :
ழுஹா தொழுகை :
பொதுவான நபில் தொழுகை :
இதில் மிகச் சிறந்தது : இரவுத் தொழுகை.
7. உபரித் தொழுகை
பின்வரும் நேரங்களைத் தவிர பொதுவான ஸுன்னத் அனைத்து நேரங்களிலும் தொழலாம் :
பஜ்ர் தொழுகை முதல் சூரியன் உதயமாகி சற்று உயரும் வரை.
ளுஹர் தொழுகைக்கு சற்று முன்னர்.
அஸர் தொழுகை முதல் சூரியன் மறையும் வரை.
8. ஸகாத்
ஸகாதின் சட்டம் :
ஸகாத் மார்க்கத்தின் கடமைகளுள் ஒன்று, இதுவே இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகும்.
ஸகாத் சட்டபூர்வமாவதற்கான நுட்பங்கள் :
ஸகாத் விதியாகும் பொருட்கள் :
தங்கம், வெள்ளி, நாணயங்கள் உள்ளிட்ட பணங்கள்.
வியாபாரப் பொருட்கள். உதாரணமாக, வீடு நிலங்களை விற்று வியாபாரம் செய்தல் ( ரியல் எஸ்டேட்) வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான வியாபாரப்பொருட்கள்.
தானியங்கள் மற்றும் கனிவகைகள். உதாரணமாக, கோதுமை, அரிசி, பேரீத்தம்பழம், காய்ந்த முந்திரிகை போன்றன.
ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகள்.
ஸகாத் பெறத் தகுதியானவர்கள் :
எட்டுக் கூட்டத்தினர். அவர்கள் : வறியவர்கள் - ஏழைகள் - ஸகாத்திற்காக செயல்படுவோர் - (இஸ்லாமின் பால்) உள்ளம் ஈர்க்கப்படவுள்ளோர் - உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை - கடனாளிகள் - அறப்போராளிகள் - வழிப்போக்கர் ஆகியோராவர்.
9. நோன்பு
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள் :
பாவமன்னிப்பு, குற்றங்களுக்கான பரிகாரமாக அமைவது இதன் சிறப்புகளில் உள்ளதாகும்.
நோன்பின் நிபந்தனைகள் :
இஸ்லாம்.
பருவமடைதல்.
பகுத்தறிவு இருத்தல்.
நோன்பு நோற்க சக்தி பெறுதல்.
மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் நின்றுவிடுதல்.
நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்)
9. நோன்பு
நோன்பின் ஸுன்னாக்கள் :
நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துதல்.
கனிந்த அல்லது காய்ந்த பேரீத்தம் பழம் அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறத்தல்.
ஸஹர் உட்கொள்வதை அதான் நெருங்கும் வரை பிற்படுத்தல்.
நற்செயல்களை அதிகப்படுத்துதல்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பிரார்த்தனையில் ஈடுபடல்.
9. நோன்பு
நோன்பை முறிப்பவை :
1. உடலுறவு கொள்ளல்.
2. விந்தை வெளிப்படுத்துதல்.
வேண்டுமென்றே உண்ணல், பருகல்.
தண்ணீர் போன்றவற்றை வயிற்றினுள் ஏதாவதொரு வழியில் சேர்த்தல்.
வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்.
இரத்தம் குத்தி எடுத்தல் (கப்பிங் தெரபி).
10. ஹஜ்
ஹஜ்ஜின் சட்டம் :
ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது தூணாகும். சக்தி பெறும் ஒருவருக்கு வாழ்நாளில் அது ஒரு தடவை கடமையாகும்.
ஹஜ்ஜின் சிறப்பு :
பாவங்கள், தவறுகளுக்கு பரிகாரமாகுதல் - மார்க்கத்தின் மிகச் சிறந்த நற்செயல்களில் ஒன்றாகும்.
ஹஜ்ஜின் நிபந்தனைகள் :
முஸ்லிமாக இருத்தல் - பருவமடைதல் - பகுத்தறிவு உடையவராக இருத்தல் - சக்தி பெறுதல் - பெண்ணுடன் அவளது நெருங்கிய உறவுக்கார ஆணொருவர் இருத்தல்.
10. ஹஜ்
ஹஜ்ஜின் கடமைகள் :
இஹ்ராம் நிய்யத் வைத்தல்.
அரபாவில் தரித்தல்.
தவாபுல் இபாழா (ஹஜ்ஜின் கடமையான தவாப்).
ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்
அலகு ஐந்து: ¬ஒழுக்கங்கள் மற்றும் பண்பாடுகள்
1. நற்பண்புகள்.
நற்பண்புகள் :
நற்குணம் என்றால் மக்களுக்கு நலவு செய்வதும், சொல், செயல்கள் மூலம் அவர்களுக்கு நோவினை செய்யாதிருத்தலுமாகும்.
நற்குணத்தின் சிறப்புகள் :
சுவனம் நுழையக் காரணமாகும்.
அந்தஸ்துக்கள் உயர்த்தப்படுதல்.
ஈமான் பரிபூரணமானது என்பதற்கான அடையாளம்.
நபியவர்களைப் பின்பற்றி, அவர்களது வழிமுறைகளைக் கடைபிடித்தல்.
நபியவர்களின் நேசத்தையும், மறுமையில் அவர்களுக்கு நெருக்கமாக இருப்பதையும் அடைந்துகொள்ளல்.
மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றுக்கொள்ளல்.
2. உண்மை
உண்மையின் அர்த்தம் :
உண்மை என்பது : சொல் செயலோடும், வெளிரங்கம் உள்ரங்கத்தோடும், பேச்சு நடைமுறையோடும் பொருந்திப் போதல்
முதலாவதாக : உண்மையைக் கடைபிடிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் :
நோக்கத்தை சீராக்குவதன் மூலம், உள்ளத்தால் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்து கொள்ளல்.
பேச்சு நடைமுறையோடும் உடன்படுவதன் மூலம் நாவு உண்மையைக் கடைபிடித்தல்.
தனது செயல் வார்த்தைக்கு நேர்படுவதன் மூலம் செயலுண்மையைக் கடைபிடித்தல்.
2. உண்மை
உண்மையின் சிறப்புகள் :
உண்மை சுவனத்தில் நுழைவதற்கான காரணிகளில் ஒன்று.
உண்மை இறைத் தூதர்களின் பண்பு. அவர்களைப் பின்பற்றுமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம்.
உண்மை சமூகத்தின் உறுப்பினர்களிடையே அன்பையும் பாசத்தையும் பரப்புவதற்கு பங்களிக்கிறது.
3. அமானிதம்
முதலாவதாக : அமானிதம் பேணலின் அர்த்தம் :
இது அல்லாஹ்வின் உரிமைகள் மற்றும் அடியார்களின் உரிமைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கின்றது.
இரண்டாவதாக : அமானிதம் பேணலின் வடிவங்கள் :
மார்க்கத்தில் அமானிதம் - மானங்களில் அமானிதம் - செல்வங்களில் அமானிதம் - தொழிலில் அமானிதம் - இரகசியங்கள், உடன்படிக்கைகளில் அமானிதம் - புலன்கள், உறுப்புக்களில் அமானிதம்
3. அமானிதம் பேணல்
மூன்றாவதாக : அமானிதம் பேணலின் சிறப்புக்கள் :
அமானிதம் பேணல் நபிமார்களின் முக்கிய பண்புகளில் ஒன்றாகும்.
அமானிதம் பேணல் ஈமானின் மகத்தான கிளைகளில் ஒன்றாகும்.
அமானிதத்தை வீணடிப்பது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.
4. பொறுமை
முதலாவதாக : பொறுமையின் அர்த்தம் :
இது ஒரு முஸ்லிமை வழிபாட்டில் ஈடுபடுவதிலும், பாவத்தை விட்டும் தூரமாவதிலும், விதியைப் பொருந்திக் கொள்வதிலும் உறுதியாக வைக்கும் குணமாகும்.
இரண்டாவதாக : பொறுமையின் வகைகள் :
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்வது.
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாமலிருப்பதில் பொறுமை கொள்வது :
துன்பத்தின் போது பொறுமை கொள்ளுதல்.
4. பொறுமை
மூன்றாவதாக : பொறுமையின் சிறப்புக்கள் :
பொறுமையாளர்கள் கணக்கின்றி கூலி வழங்கப்படுவார்கள்.
பொறுமை நபிமார்களின் பண்புகளில் உள்ளதாகும்.
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருப்பான்.
5. வெட்கம்
முதலாவதாக : வெட்கத்தின் அர்த்தம் :
வெட்கம் என்பது மனிதனை சொல், செயல்களில் நல்லதைச் செய்து, கெட்டதை விடுவதற்குத் தூண்டும் ஒரு குணமாகும்.
இரண்டாவதாக : வெட்கத்தின் வகைகள் :
அல்லாஹ்விடம் வெட்கப்படுதல்
ஆன்மாவிடம் வெட்கப்படுதல்
மக்களிடம் வெட்கப்படுதல்
5. வெட்கம்
மூன்றாவதாக : வெட்கத்தின் சிறப்புகள் :
வெட்கம் அல்லாஹ் நேசிக்கும் ஒரு குணமாகும்.
வெட்கம் ஈமானின் மகத்தான கிளைகளில் ஒன்றாகும்.
வெட்கம் நலவையே கொண்டுவரும்.
6. நீதம்
முதலாவதாக : நீதியின் அர்த்தம் :
இது, ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையைக் கொடுப்பதுடன், மக்களுக்கு மத்தியில் பிரித்துப் பார்க்காமல் நடுநிலையாக நடந்துகொள்வதாகும்.
இரண்டாவதாக : நீதியின் வடிவங்கள் :
கடமைகளைச் செய்து, உரிமைகளை வழங்குதல்.
மக்களுக்கு மத்தியில் நீதமாகத் தீர்ப்பளித்தல் .
மூன்றாவதாக : நீதியை நிலைநாட்டும் முறை :
மார்க்க சட்டதிட்டங்களை அமுல்படுத்துதல்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையைக் கொடுத்தல், மக்களிடையே பாரபட்சம் காட்டுவதை விட்டுவிடல்.
அல்லாஹ்வை அஞ்சுதல், மற்றும் மறுமையில் அநியாயக்காரனிடமிருந்து அவன் நிச்சயம் பழி தீர்ப்பான் என்பதை அறிந்து கொள்ளுதல்.
6. நீதம்
நான்காவதாக : நீதியின் சிறப்புக்கள் :
அல்லாஹ் நீதத்தை ஏவியுள்ளான்.
நீதம் சமூகம் நிலைத்திருப்பதற்கான காரணமாகும்.
அலகு ஆறு: அழைப்புப் பணி
1. அறிவுரையின் மகத்துவம் :
முதலாவதாக : அறிவுரையின் அர்த்தம் :
அறிவுரை என்பது : அறிவுரை வழங்கப்படுபவருக்கு நலவு நாடி, அவருக்கு நலவுள்ள விடயத்தின்பால் அழைத்தல், தீங்குள்ள விடயத்தை விட்டும் அவரைத் தடுத்தல் ஆகிய அனைத்தையும் குறிக்கும் சொல்லாகும்.
இரண்டாவதாக : அறிவுரையின் மகத்துவம் :
மார்க்கம் என்பது அறிவுரை மூலம் நலவு நாடுதலாகும். எனவே மார்க்கம் நிலைத்திருக்க இதுவும் ஒரு காரணமாகும்.
அறிவுரை வழங்குவது நபிமார்களின் பணியாகும் .
அறிவுரை சமூக சீர்திருத்தத்திற்கான வழியாகும்
அறிவுரை ஈருலக வெற்றிக்கான வழியாகும்
அறிவுரை அறப்போரின் வகைகளில் ஒன்று .
அறிவுரை வேதனையிலிருந்து பாதுகாப்பாகும் .
2. அறிவுரையின் ஒழுங்குகள்
முதலாவதாக : உபதேசகருக்குரிய ஒழுக்கங்கள் :
1. உளத்தூய்மை.
2. பொறுமை
3. நேர்மை
4. அறிவுரை வழங்கப்படுபவருடன் மென்மையாக நடத்தல்.
5. இரகசியமாக அறிவுரை வழங்கல்.
6. அறிவுரை வழங்கப்படுபவருடன் இரக்கமாக நடத்தல்.
7. பிறருக்கு அறிவுரை வழங்கும் விடயத்தைத் தானும் அமுல்படுத்துதல்.
8. அறிவுரை வழங்கும் விடயம் பற்றி அறிந்திருத்தல்.
9. அறிவுரை வழங்கப்படுபவரின் நிலையைக் கவனிக்க வேண்டும்.
2. அறிவுரையின் ஒழுங்குகள்
மூன்றாவதாக : அறிவுரை வழங்கப்படுபவருக்கான பிரத்தியேக ஒழுங்குகள் :
அறிவுரை வழங்குபவரின் வார்த்தை சரியானதென்பதை உறுதிப்படுத்துதல் .
பெருமையை விட்டுவிட்டு அறிவுரையை ஏற்றல்.
அறிவுரையை நடைமுறைப்படுத்துதல்.
முதல் அலகு : குர்ஆன் மற்றும் அதன் விளக்க வுரை
1. அல்குர்ஆனைக் கற்று, கற்றுக்கொடுப்பதன் சிறப்பு
அல்குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதன் அவசியம் :
அல்குர்ஆனைக் கற்பதன் சிறப்பு :
அல்குர்ஆனைக் கற்பிப்பதன் சிறப்பு :
அல்குர்ஆனைக் கற்பதில் முயற்சி செய்வதன் சிறப்பு :
2. ஸூரா பகராவின் இறுதி வசனங்களின் விளக்கம்
விளக்கமும் விரிவுரையும்:
இவ்விரு வசனங்களும் இரண்டு விடயங்களை உள்ளடக்குகின்றன :
நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் ஈமானின் தூண்களை உண்மைப்படுத்தியதை சாட்சி கூறுதல்.
அல்லாஹ்விடம் எப்படி பிராத்தனைசெய்ய வேண்டும் என்பதை விளக்குவது.
இவ்விரு வசனங்களிலிருந்தும் பெறப்படும் படிப்பினைகள் :
அனைத்து நபிமார்கள், இறைத் தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுதல்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டாயமாக செவிதாழ்த்தி, கட்டுப்படுதல்.
இஸ்லாமிய ஷரீஅத்தின் இலகுத்தன்மை
3. ழுஹா, ஷர்ஹ், தீன் ஆகிய அத்தியாயங்களின் விளக்கம்
சொற்களின் கருத்துக்கள் :
ஸஜா : இருளாகும்.
கலா : வெறுத்தான்
ஆஇலன் : வறியவராக
அன்கழ : சுமையாக்கியது
பன்ஸப் : நற்செயல்களில் முயற்சி செய்வீராக.
தூரி ஸீனீன் : அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிய தூர்ஸினா மலை.
மம்னூன் : துண்டிக்கப்பட்டது.
3. ழுஹா, ஷர்ஹ், தீன் ஆகிய அத்தியாயங்களின் விளக்கம்
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள்:
அல்லாஹ் அவனுடைய தூதரை கண்ணியப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதை இந்த ஸூராக்கலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ் தனது அடியார்களுக்கு இரக்கம் காட்டி, அவர்களுக்கு எல்லா விடயங்களையும் இலகுபடுத்தியுள்ளான்.
அல்லாஹ் மனிதனை கண்ணியப்படுத்தி, அவனை அழகிய தோற்றத்தில் படைத்துள்ளான்.
4. அல்அலக் மற்றும் அல்கத்ர் அத்தியாயங்களின் விளக்கம்
சொற்களின் கருத்துக்கள் :
அலக் : இரத்தக் கட்டி.
லனஸ்பஅன் : நிச்சயமாக நாம் பிடிப்போம்.
ஸபானியா : தண்டிக்கும் வானவர்கள்.
ரூஹ் : ஜிப்ரீல் (அலை) அவர்கள்.
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
இஸ்லாத்தில் அறிவுக்கு பெரும் இடம் உண்டு.
அல்குர்ஆனை ஒரு சிறந்த இரவில், சிறந்த வானவர், சிறந்த மனிதருக்கு இறக்கியுள்ளார்.
லைலதுல் கத்ர் அல்லாஹ் எமக்குப் புரிந்துள்ள மகத்தான ஓர் அருட்கொடையாகும்.
5. அல்பய்யினா மற்றும் அல்ஸல்ஸலா அத்தியாயங்களின் விளக்கம்
சொற்களின் கருத்துக்கள் :
முன்பக்கீன : தாங்கள் இருக்கும் நிராகரிப்பை விட்டுவிடுபவர்களாக இல்லை.
பய்யினா : தெளிவான ஆதாரம், இங்கு அதன் மூலம் நாடப்படுவது : இறைத்தூதர் அவர்களாகும்.
பரிய்யா : படைப்புக்கள்
அஸ்காலஹா : அதில் அடக்கம் செய்யப்பட்ட மரணித்தோர்.
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
நபியவர்களின் நபித்துவத்தின் உண்மைக்கு அல்குர்ஆனே மிக மகத்தான சாட்சியாகும்.
நற்செயல் புரியும் விசுவாசிகளே படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள்.
மறுமை நாள் பயங்கரமான ஒரு நாளாகும், மனிதன் அந்நாளில் அனைத்து விடயங்களைப் பற்றியும் விசாரிக்கப்படுவான்.
6. ஆதியாத், காரிஆ அத்தியாயங்களின் விளக்கம்
சொற்களின் கருத்துக்கள் :
அல்ஆதியாத் : அல்லாஹ்வின் பாதையில் போரிட ஓடும் குதிரைகள்.
ழப்ஹா : ஒட்டகம் ஓடும்போது கேட்கும் சப்தம்.
அல்மூரியாதி கத்ஹா : வேகமாக ஓடுவதால் நெருப்பைக் கிளப்பக்கூடியவை.
மப்ஸூஸ் : பரத்தப்பட்டது.
இவ்வசனங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி, அதில் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது அவசியமாகும்.
மறுமையின் பயங்கரங்களை விட்டும் விசுவாசி எச்சரிக்கையாக இருப்பதோடு, அதற்காக நற்செயல்களைக் கொண்டு தயாராக வேண்டும்.
இரண்டாம் பகுதி : ஈமானும் தஸ்கியாவும். (இறைவிசுவாசமும் உளப்பரிசுத்தமும்)
1. குஃப்ர் (இறைநிராகரிப்பு) மற்றும் ஷிர்க் (இணைவைப்பு)
முதலாவதாக : குஃப்ர் :
இது : ஈமானின் அடிப்படையை அல்லது பரிபூரணத்தை முறிக்கும் நம்பிக்கை, சொல், செயல் சார்ந்தவை அனைத்துமாகும்.
குஃப்ரின் வகைகள்:
பெரிய குஃப்ர் : இது நம்பிக்கையின் அடித்தளத்தை முறிக்கக் கூடியது.
சிறிய குஃப்ர் : இது நம்பிக்கையின் பரிபூரணத்தை முறிக்கக் கூடியது.
பெரிய குஃப்ரின் சில உதாரணங்கள் :
அல்லாஹ்வின் இருப்பை மறுத்தல் .
ஈஸா (அலை) அவர்களைக் கடவுளெனக் கூறுதல்.
பெரிய குஃப்ரின் மோசமான விளைவுகள் :
1. குஃப்ர் (இறைநிராகரிப்பு) மற்றும் ஷிர்க் (இணைவைப்பு)
சிறிய குஃப்ரின் சில உதாரணங்கள் :
முஸ்லிமுடன் போரிடுதல்.
பிறர் வம்சத்தில் குறைகூறுதல்.
சிறிய குஃப்ரின் மோசமான விளைவுகள் :
இரண்டாவது : ஷிர்க் :
பெரிய ஷிர்க் :
இது அல்லாஹ்வுக்கு ஒருவரைக் கூட்டாக்குதலாகும்.
சிறிய ஷிர்க் :
இது : புனித குர்ஆன் அல்லது நபியின் ஸுன்னாவில் ஷிர்க் என்று அழைக்கப்படக்கூடிய, அதேவேளை பெரிய ஷிர்க்கின் அளவிற்குச் செல்லாத அனைத்துப் பாவங்களுமாகும்.
2. நிபாக் (நயவஞ்சகம்) மற்றும் ரித்தத் (மதத்தைத் துறத்தல்)
மூன்றாவதாக : நிபாகின் (நயவஞ்சகத்தனம்) வரைவிலக்கணம் :
இது : இறைநிராகரிப்பை (உள்ளத்தில்) மறைத்துக்கொண்டு, ஈமானை வெளிக்காட்டிக்கொண்டிருப்பதாகும்.
நிபாகின் வகைகள்:
நம்பிக்கை சார்ந்த நிபாக்.
செயல் சார்ந்த நிபாக்
2. நிபாக் (நயவஞ்சகம்) மற்றும் ரித்தத் (மதம் மாறுதல்)
நான்காவது : மதம் மாறுதல்:
இது ஒரு முஸ்லிம் வார்த்தை, செயல் அல்லது நம்பிக்கை மூலம் நம்பிக்கையிலிருந்து (ஈமானிலிருந்து) இறைநிராகரிப்புக்கு மாறுவதாகும்.
ரித்தத்தின் வெளிப்பாடுகள்:
நம்பிக்கை மூலம் மதம் மாறுதல்.
சொல் மூலம் மதம் மாறுதல்.
செயல் மூலம் மதம் மாறுதல்.
3. பித்அத்தும் அதன் வகைகளும்
முதலாவது: பித்அத்தின் வரையறை:
இரண்டாவது : மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்குவதற்கு எதிராக எச்சரிக்கை
மூன்றாவது: பித்அத்களை அடையாளம் காண்பதற்குண்டான வரையறைகள்:
3. பித்அத்தும் அதன் வகைகளும்
நான்காவது : மார்க்கத்தில் பித்அத்தின் வகைகள் :
நம்பிக்கை சார்ந்த பித்அத்கள்.
செயல் ரீதியான பித்அத்கள்.
வார்த்தை ரீதியான பித்அத்கள்.
ஐந்தாவது: பித்அத்தின் சட்டம்:
4. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்.
முதலாவது : உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் அர்த்தம் :
இரண்டாவது :உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் அவசியம் :
உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தல் நபிமார்களின் பணிகளில் ஒன்றாகும்
உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தல் வெற்றிக்கான காரணியாகும்.
உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தல் அடியானின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
நபியவர்கள் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார்கள்.
மூன்றாவது :உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் பயன்:
5. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் வழிகள்
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்.
அல்லாஹ்விடம் உதவி தேடி பிராத்தித்தல்
பாவங்களைத் தவிர்த்தல்.
கடமைகளை நிறைவேற்றல்.
அல்லாஹ்வை நினைவு கூருதல் மற்றும் திருக்குர்ஆன் ஓதுதல்.
சுய விசாரணை மற்றும் சுயஉபதேசம்.
நல்லடியார்களுடன் அமர்தல்.
6. உள்ளம் சார்ந்த நற்செயல்கள்
நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்) மற்றும் அல்லாஹ்வுக்காக மாத்திரமே இப்பணியை செய்தல் என்ற தூய்மையான எண்ணம் இருத்தல்.
இறைவனையும் இறைத்தூதரையும் நேசித்தல்.
அச்சம் மற்றும் ஆதரவு.
அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்ற உணர்வு.
பாவமீட்சி பெற்று மீளுதல்.
அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல்.
அல்லாஹ்வின் அடையளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்தல்.
மூன்றாவது அலகு: ஸுன்னா மற்றும் நபிகளாரின் நற்பண்புகள்
1. நபி (ஸல்) அவர்களக்கு செய்ய வேண்டிய கடமைகள்
நபிக்குக் கட்டுப்படுதல்.
நபியவர்களை நேசித்தல்.
நபியவர்களை மதித்து கண்ணியப்படுத்தல்.
நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுதல்.
நபியவர்கள் மீது ஸலவாதும், ஸலாமும் கூறுதல்.
2. நபி (ஸல்) அவர்களது குடும்பத்தார்களின் சிறப்புகள் மற்றும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
முதலாவதாக : அஹ்லுல் பைத் (நபியின் குடும்பத்தினர்) என்பதன் வரைவிலக்கணம் :
இரண்டாவதாக : நபி (ஸல்) அவர்களது குடும்பத்தார்களின் சிறப்புகள்.
மூன்றாவதாக : நபியவர்களின் குடும்பத்தினருக்கான தனித்துவ சட்டங்கள் :
அவர்களுக்கு ஸகாத் வழங்குவது ஹராமாக்கப்பட்டுள்ளது .
நபியவர்களுக்கு ஸலவாத் கூறுவதுடன் அவர்களுக்கும் ஸலவாத் கூறுதல்.
நபியவர்கள் அவர்களைப் பற்றி உபதேசித்துள்ளார்கள்.
2. நபி (ஸல்) அவர்களது குடும்பத்தார்களின் சிறப்புகள் மற்றும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
நான்காவதாக : அஹ்லுல் பைதினருக்கு செய்ய வேண்டிய கடமைகள் :
அவர்களை நேசித்து, மதித்தல்.
அவர்களைத் தூற்றுவதும், சபிப்பதும் ஹராமாகும்.
ஆஇஷா (ரலி) அவர்களுக்குப் படுதூறு கூறியவர் இறைநிராகரிப்பாளராகி விடுவார்.
3. நபி (ஸல்) அவர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் விடயத்தில் அளவுகடந்து செல்லலும், குறைவைத்தலும்.
முதலாவதாக : நபியவர்களின் விடயத்தில் அளவு கடந்து செல்வதன் வெளிப்பாடுகள் :
நபியவர்களை வர்ணிப்பதில் அளவு கடந்து செல்லல்.
நபியவர்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடுதல்.
நபியவர்கள் மீது சத்தியம் செய்தல்.
இரண்டாவதாக : நபியவர்களின் விடயத்தில் வெறுப்புப்போக்கின் வெளிப்பாடுகள் :
நபியவர்களை கண்ணியப்படுத்துவதில் குறைபாடு.
நபியவர்களின் ஸுன்னாவைப் புறக்கணித்து, அதனைப் பின்பற்றாமலிருத்தல்.
நபியவர்கள் மீது ஸலவாதும், ஸலாமும் கூறுவதை விட்டுவிடுதல்.
நபிவரலாறு மற்றும் அவர்களின் சிறப்புகளை அறியாதிருத்தல்.
3. நபி (ஸல்) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் குறைவைத்தல்.
மூன்றாவதாக : அஹ்லுல் பைதினர் உரிமைகளில் அளவுகடந்து செல்லல் மற்றும் வெறுத்தல் :
அஹ்லுல் பைதினர் தவறுகளிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் எனப் புனிதப்படுத்திக் கூறுதல் .
அவர்களுக்கு மறைவான அறிவு உண்டென வாதிடுதல்.
அவர்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடுதல் .
அவர்களுடைய மண்ணறைகளை வலம் வருதல் மற்றும் அவற்றுக்கு ஸுஜூது செய்தல் .
4. நபித்தோழர்களின் சிறப்புகளும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும்
முதலாவதாக : நபித்தோழர்களின் சிறப்புகள் :
நபியவர்களுடன் தோழமை கொள்வதைக் கொண்டு அவர்களை கண்ணியப்படுத்தியுள்ளதுடன், சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தியும் கூறியுள்ளான்.
அல்லாஹ் அவர்களுடைய பண்பாடுகள், செயல்களைப் பாராட்டியுள்ளான்.
நபித்தோழர்கள் இச்சமூகத்தின் மிகச் சிறந்தவர்கள்.
அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் எமக்கு அறிவித்தவர்கள் அவர்களே.
இறைத்தூதருக்கு உதவி செய்து, அவர்களுடன் இணைந்து போரிட்டவர்கள்.
4. நபித்தோழர்களின் சிறப்புகளும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும்
இரண்டாவதாக ; நபித்தோழர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் :
அவர்களை நேசித்து, மதித்து, கண்ணியப்படுத்த வேண்டும்.
அவர்களுக்காக பிரார்த்தித்து, பாவமன்னிப்புக் கோரி, அவர்களை இறைவன் பொருந்திக்கொள்ளவேண்டுமென பிரார்த்திக்க வேண்டும்.
அவர்களைத் தூற்றுவது, ஏசுவது, குறைத்து மதிப்பிடுவது ஹராமாகும்.
அவர்களுடைய பொதுவான சிறப்புகளையும், தனிநபர் சிறப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு சார்பாகப் பேசி, அவர்களைக் குறைத்து மதிப்பிடுவோருக்கு மறுப்புக் கொடுக்க வேண்டும்.
5. நிய்யதும் (எண்ணம்) அதன் அவசியமும்
ஹதீஸ் :
''செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும் என்றிருந்தால். அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்''.
சொற்களின் கருத்துக்கள் :
நிய்யத் : நிய்யத் என்பது செயலைச் செய்யவதற்கான நோக்கமும் அதற்கான தூண்டுதலும் ஆகும்.
யுஸீபுஹா : உலக பயனை அடைவதற்காக.
அறிவிப்பாளர் :
அபூ ஹப்ஸ் உமர் பின் கத்தாப், இரண்டாம் கலீபா.
5. நிய்யதும் (எண்ணம்) அதன் அவசியமும்
ஹதீஸின் சாரம்சம் :
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனையாகும்.
நற்செயல் குறைவாக இருந்தாலும் நல்ல எண்ணம் அதன் கூலியைப் பெரிதாக்கித் தரும்.
தீய எண்ணம் நற்செயலை வீணாக்கி, அதன் கூலியையும் போக்கி விடும்.
6. நபியவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும்
ஹதீஸ்:
'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்'.
சொற்களின் கருத்துக்கள் :
அஹ்தஸ : புதிதாக உருவாக்கினான்
அம்ரினா : மார்க்க விடயத்தில்
ரத்துன் : நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பாளர் :
விசுவாசிகளின் அன்னை ஆஇஷா பின்து அபீ பக்ர் (ரலி), நபியவர்களின் மனைவி.
6. நபியவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும்
ஹதீஸின் சாரம்சம் :
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குதல் தடுக்கப்பட்டதாகும்.
மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத எந்தவொரு செயலும் ஏற்கப்படமாட்டாது.
7. நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸிற்கு செய்த உபதேசம்
ஹதீஸ்:
"சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைத் தவிர எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன".
சொற்களின் கருத்துக்கள் :
துஜாஹக : உனக்கு நல்ல விடயத்தில் உதவுவான்.
ருஃபிஅதில் அக்லாம் : விதிகள் நிர்ணயிக்கப்பட்டு எழுதப்பட்டு விட்டன.
அறிவிப்பாளர் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் , நபியவர்களின் சிற்றப்பாவின் புதல்வர்.
7. நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸிற்கு செய்த உபதேசம்
ஹதீஸின் சாரம்சம் :
நபிமொழியிலிருந்து பெறப்படும் சில படிப்பினைகள் :
சொற்சுருக்கமும் பொருள்செரிவுமிக்க வார்த்தைகள் வழங்கப்பட்டமை.
சிறார்களுக்கு அகீதாவைப் போதிப்பதன் அவசியம்.
அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்தித்து, அவனிடம் தேவைகளை முன்வைத்தல் அவசியமாகும்.
8. உறுதிப்பாட்டின் அவசியம்
ஹதீஸ் :
"நான் ஈமான் கொண்டு விட்டேன் என்று கூறிவிட்டு அதில் உறுதிப்பாட்டுடன் இருப்பீராக!".
சொற்களின் கருத்துக்கள் :
இஸ்தகிம் : வணக்கங்களைச் செய்வதிலும், பாவங்களைத் தவிர்ந்து கொள்வதிலும் தொடர்ந்து நிலையாய் இருங்கள்.
அறிவிப்பாளர் :
அபூ அம்ரா ஸுப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி).
8. உறுதிப்பாட்டின் அவசியம்
ஹதீஸின் சாரம்சம் :
நபிமொழியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் :
வணக்கங்களைக் கடைபிடித்து, பாவங்களை விட்டும் தூரமாவதன் மூலம் உறுதிப்பாட்டுடன் இருப்பது அவசியமாகும்.
பயனுள்ள கல்வியைக் கற்கவும், அதைத் தேடவும் அக்கறை கொள்ளல்.
9. தேவையற்றதை விட்டுவிடுதல்
ஹதீஸ்:
'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.
அறிவிப்பாளர் :
அபூ ஹுரைரா, அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அத்தவ்ஸி
9. தேவையற்றதை விட்டுவிடுதல்
ஹதீஸின் சாரம்சம் :
நபிமொழியிலிருந்து பெறப்படும் சில படிப்பினைகள் :
முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விடயங்களை விடுவது அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கும்.
வீண், சம்பந்தமில்லாத விடயங்களை விட்டுவிடுவது இஸ்லாம் மற்றும் புத்தியின் பூரணத்துவத்திற்கு சான்றாகும்.
ஒரு முஸ்லிம் தனக்கு பயனளிக்கும் விடயத்தில் நேரத்தை கழிக்க ஊக்குவித்தல்.
நான்காவது பகுதி : பிக்ஹுல் அஹ்காம் - இஸ்லாமிய சட்டங்கள் -
1. ஹலாலான சம்பாத்தியமும், ஹராமான சம்பாத்தியமும்
முதலாவது : ஹலாலான சம்பாத்தியம்
ஹலாலான சம்பாத்தியத்தின் சிறப்பு:
இவ்வுலகில் சபீட்சமும், மறுமையில் வெற்றியும் கிடைக்கும்.
வாழ்வாதாரத்தை தேடி உழைப்பது அல்லாஹ்விடம் நெருக்கத்தை பெற்றுத் தரும் ஒரு வணக்கமாகும் .
ஹராத்தை விட்டும் தூய்மையாக இருத்தல்.(விலகியிருத்தல்) :
1. ஹலாலான சம்பாத்தியமும், ஹராமான சம்பாத்தியமும்
இரண்டாவது : ஹராமான சம்பாத்தியம் :
இஸ்லாமிய ஷரீஆ -அனுமதிக்காத –வுக்கு முரணான சம்பாத்தியங்களுள் சில :
மோசடியும் -இருட்டடிப்பும்- (வியாரப்பொருட்களின் குறைகளை மறைத்து விற்றல் )
அதிக விலைக்கு விற்றல்.
பதுக்கல் .
இலஞ்சம் .
தடுக்கப்பட்ட -ஹராமான- வற்றை விற்றல் அல்லது அவற்றை வாடகைக்கு விட்டு, ஊதியம் பெறுதல்.
2. வியாபாரத்தின் சட்டதிட்டங்கள்
முதலாவதாக : வியாபாரம் நடக்கும் முறை :
வார்த்தை மூலம் வியாபாரம் நிறைவேறல்.
செயல் மூலம் வியாபாரம் நிறைவேறல்.
இரண்டாவது: வியாபாரத்தின் நிபந்தனைகள்.
முதலாவது நிபந்தனை : கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் இருவரும் குறித்த வியாபாரத்தை திருப்தியுடன் ஏற்றுகொள்ளுதல் வேண்டும்.
இரண்டாவது நிபந்தனை : வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் புத்திசுவாதீனம் உள்ளவராகவும், விவரமறியும் பருவத்தை அடைந்தவர்களாகவும், பொறுப்பணர்வு உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும் .
2. வியாபாரத்தின் சட்டதிட்டங்கள்
இரண்டாவது: வியாபாரத்தின் நிபந்தனைகள் :
மூன்றாவது நிபந்தனை : விற்கும் பொருளானது சொந்தமானதாக இருக்க வேண்டும்.
நான்காவது நிபந்தனை : வியாபார பொருளானது விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் .
ஐந்தாவது நிபந்தனை : வியாபாரப்பொருள் மற்றும் அதன் விலை பற்றி அறிந்திருத்தல்.
ஆறாவது நிபந்தனை : பொருளும் அதன் பெறுமதியும் ஒப்படைப்பதற்கு இயலுமானதாக இருத்தல் .
3. வட்டியும், தடுக்கப்பட்ட வியாபாரங்களும்
முதலாவது : வட்டி :
வட்டியின் வகைகள் :
ரிபல் பழ்ல் (மேலதிக வட்டி).
ரிபா நஸீஆ (தவணை முறை வட்டி) : இது இரு வகைப்படும் :
ஒரே இனத்திலான இரு வியாபாரப்பொருளை பண்டமாற்றமாற்ற அடிப்படையில் விற்று, ஒன்றைத் தாமதமாகக் கையகப்படுத்தல்.
கடன்களுக்கான வட்டி.
3. வட்டியும், தடுக்கப்பட்ட வியாபாரங்களும்
நவீன காலத்தில் வட்டி முறைமைகள் :
இரண்டாவது : தடைசெய்யப்பட்ட வர்த்தக முறைகள்:
ஒரு முஸ்லிம் தனது சகோதரனின் வியாபாரத்தில் குறுக்கிட்டு வியாபாரம் செய்தல்.
ஒரு முஸ்லிம் தனது சகோதரன் வாங்கும் போது குறுக்கிட்டு அப்பொருளை தான் வாங்குவது.
ஜும்ஆ அதானிற்கு பின் வியாபாரம் செய்தல் .
4. இஜாரா (வாடகை ஒப்பந்தம்)
முதலாவது : இஜாராவின் வரைவிலக்கணம் :
இரண்டாவது : இஜாராவின் சட்ட நிலை :
மூன்றாவது : இஜாராவின் வகைகள் :
பயன்களை வாடகைக்கு விடுதல்.
குறித்த ஒரு பணியை நிறைவேற்ற கூலிக்கமர்த்துதல்.
4. இஜாரா (வாடகை ஒப்பந்தம்)
நான்காவது : இஜாராவின் நிபந்தனைகள் :
வாடகைக்கு விடப்படும் பொருளும், பணியும் அனுமதிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
பயனை அறிந்து வைத்தல்
காலம் அறியப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
கூலி அறியப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
5. தற்கால சில வியாபார முறைகள்:
முதலாவது : வங்கி அட்டைகள் (Bank cards) :
டெபிட் கார்ட்.
கடன் அட்டை (credit card) .
இரண்டாவது : வர்த்தக காப்பீடு-காப்புறுதி :
மூன்றாவது : கூட்டுறவுக் காப்புறுதி –ஒத்துழைப்புக் காப்புறுதி :
நான்காவது : தவணை முறை வியாபாரம் :
ஐந்தாவது : டிஜிடல் வியாபாரம் :
5. தற்கால சில வியாபார முறைகள் :
டிஜிட்டல் வர்த்தகத்தின் சில வகைகள் :
பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் பரிமாற்றம்.
சேவைகள் பரிமாற்றம்.
டிஜிட்டல் உற்பத்திகள் பரிமாற்றம்.
டீஜிட்டல் வியாபாரம் பற்றிய சட்டம் :
6. திருமண சட்டதிட்டங்கள்
முதலாவது : திருமணம் மார்க்கமாக்கப்படல் :
திருமணம் செல்லுபடியாவதற்குரிய நிபந்தனைகள் :
முதலாவது நிபந்தனை : சம்மதம்
இரண்டாவது நிபந்தனை : கணவன், மனைவியர் யார் என அறியப்பட்டிருத்தல்
மூன்றாம் நிபந்தனை : மணமகள் தரப்பில் பொறுப்பாளி ஒருவர் இருத்தல்.
நான்காவது நிபந்தனை : தம்பதிகள் இருவரும் திருமணத் தடைகளை விட்டும் நீங்கியிருத்தல் :
(அதாவது) இரத்த உறவு அல்லது பால்குடியுறவு மூலம் திருமணம் செய்யத் தடைசெய்யப்படுதல்.
மத வேறுபாடு மூலம் திருமணம் செய்யத் தடைசெய்யப்படுதல்.
இடையில் ஏற்பட்ட காரணம் மூலம் திருமணம் செய்யத் தடைசெய்யப்படுதல்.
ஐந்தாவது நிபந்தனை : சாட்சி இருத்தல்.
7. இல்லற வாழ்க்கை
முதலாவதாக : மனைவி தன் கணவனுக்கு செய்வேண்டிய கடமைகள் :
கணவனுக்கு கட்டுப்பட்டு நடத்தல் .
வீட்டில் முடிவெடுக்கும் உரிமை.
பாதுகாப்பு, நிர்வகித்தல் உரிமை .
இரண்டாவது : மனைவி மீதான கணவனின் கடமைகள் :
மஹர் அல்லது ஸதாக் எனும் மணக் கொடை கொடுத்தல் .
செலவு செய்தல்-ஜீவனாம்சம் .
நல்ல முறையில் -இணைந்து வாழ்தல்- வாழ்க்கை நடத்தல் .
7. இல்லற வாழ்க்கை
அழகிய இல்லற வாழ்க்கையின் வடிவங்களில் சில :
சாதுர்யமாக உறவாடி இங்கிதமாக நடந்து கொள்ளல், புன்முறுவல் பூத்தல் மற்றும் முகமலர்ச்சியுடன் இருத்தல்.
மனைவியுடன் பேசி, அவளுக்கு ஆறுதலாக இருத்தல். அவளுக்குத் தேவையான நேரத்தை வழங்குதல்.
உபசரித்து அழகிய முறையில் நடந்து கொள்ளும் போதும், கச்சிதமாக கருமமாற்றும் போதும் அவளை பாராட்டுவது (அவளின் அழகிய செயல்களை பாராட்டுவது).
தவறுகளையும், பிழைகளையும் பொறுத்து அதனை பொருட்டாக கொள்ளாதிருப்பது.
8. விவாகரத்து சட்டதிட்டங்கள்
தலாக் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதன் (நுட்பம் )- பின்னணி .
தலாக்கின் சட்ட நிலை :
அனுமதிக்கப்பட்டது - வெறுக்கப்பட்டது - தடுக்கப்பட்டது - விரும்பத்தக்கது - கடமையானது என ஐந்து சட்டங்களும் இதனுடன் தொடர்புபடுகின்றது.
தலாக்கின் (விவாகரத்தின்) வகைகள் :
மீளத்தக்க விவாரகத்து.
மீள முடியாத விவாகரத்து.
மீட்ட முடியாத விவாகரத்து இரு வகைப்படும் : சிறிய பிரிவினை - பெரிய பிரிவினை.
உடனடி விவாகரத்து.
தொடர்புபடுத்தப்பட்ட விவாகரத்து.
9. உணவு, பானம், உடைகளில் தடுக்கப்பட்டவை
முதலாவது : உணவுகள் குடிபானங்கள் தொடர்பான சட்டங்கள் :
உணவுகள் மற்றும் குடிபானங்களின் அடிப்படை :
தடைசெய்யப்பட்ட உணவுகளில் உள்ளவை :
இறந்த பிராணி - கழுத்து நெறித்துச் செத்தது - அடிபட்டுச் செத்தது - கீழே விழுந்து செத்தது - கொம்பால் முட்டப் பட்டுச் செத்தது - வேட்டைப் பிராணி உண்ட பிராணி - ஓட்டப்பட்ட இரத்தம் - பன்றி - அறுக்கும் போது அல்லாஹ் அல்லாதவருடைய பெயர் கூறப்பட்டது - கழுதை - வேட்டைப் பற்களுள்ள வேட்டைப் பிராணிகள் - வேட்டை நகங்களுள்ள பறவைகள் - அசுத்தங்களை மாத்திரம் உண்ணக்கூடிய பிராணி - மார்க்கம் கொலை செய்யுமாறு ஏவிய பிராணிகள்.
9. உணவு, பானம், உடைகளில் தடுக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை நிர்ப்பந்தத்தின் போது அனுமதிக்கப்படல் :
இரண்டாவதாக : ஆடை, அலங்காரங்களில் தடுக்கப்பட்டவை :
அவ்ரத்தை வெளிப்படுத்தும் ஆடைகள் - ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல் - ஆண்கள் பட்டாடை, தங்கம் அணிதல் - ஆண் கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடையணிதல்.
10 : மதுவும் போதைப்பொருட்களும் அவ்விரண்டினதும் அழிவுதரும் விபரீதங்களும்
மது அருந்துதல் (போதைப்பானங்கள்) .
போதை பொருட்கள்.
மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் மோசமான விளைவுகள்:
மதி மறைந்து- அறிவு மறைந்து அதன் விளைவாக தனிமனிதர்கள் மற்றும் சமூகங்களை அச்சுறுத்தும் நிலையை தோற்றுவிக்கும்.
மனிதனின் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய ஐந்து விடயங்களையும் பாதித்து விடும்.
பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணாகும்.
செல்வம் வீணாக்கப்படுவதோடு அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் செலவிடும் நிலை ஏற்படும்.
ஐந்தாவது அலகு : அழைப்புப் பணி
அழைப்புப் பணி
1. அல்லாஹ்வின் பால் அழைப்பதன் அவசியமும் சிறப்பும்
முதலாவது : தஃவா –அழைப்பணி என்பதன் -அர்த்தம்;.
இரண்டாவது : தஃவாப் பணியின் அவசியம்
மூன்றாவது : தஃவா செய்வதன் சிறப்பு :
தஃவா இறைத்தூதர்களின் பணியாகும்.
அழைப்பாளரே மக்களில் அழகிய வார்த்தைகள் உடையவர்.
தஃவாப்பணி, வெற்றி மற்றும் விமோசனத்திற்கான வழியாகும்.
அழைப்பணியில் ஈடுபடுவருக்கு மிகப்பெரும் வெகுமதி-கூலி கிடைக்கின்றமை.
அழைப்பணியானது அழிவிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமகும்.
2. மக்காவில் நபியவர்களின் அழைப்புப் பணியின் சுருக்கம்
அழைப்பணி குறித்த அறிமுகமும் ஆரம்பமும்.
இரகசியப்பிரச்சாரம் .
பகிரங்கப் பிரச்சாரம் .
அழைப்புப் பணி பற்றிய இணைவைப்பாளர்களின் நிலைப்பாடு.
இணைவைப்பாளர்களின் துன்புறுத்தல் பற்றி நபியவர்களின் நிலைப்பாடு.
தாஇப் வாசிகளுக்கான பிரச்சாரம் (அழைப்பு)
ஹஜ் காலங்களில் மதீனாவாசிகளுக்கான அழைப்பு.
மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லல்
3. மதீனாவில் நபியவர்களின் அழைப்புப் பணியின் சுருக்கம்
-இறை அழைப்பு பணியில் (தஃவாச் செய்வதில்) மஸ்ஜிதின் பங்களிப்பு.
பிரச்சார (தஃவா) சூழலை இஇஸ்திரப்படுத்துவதற்காக உழைத்தல்.
பிரச்சார (தஃவா) த்தை பாதுகாப்பதில் இராணுவ நடவடிக்கைகளின் பங்கு :
(பத்ருப் போர் - பனூ கைனுகாஃ போர் - உஹதுப் போர் - பனூ நழீர் போர் - அகழிப்போர் - பனூ குரைளா போர் - ஹுதைபியா உடன்படிக்கை - கைபர் போர் - மக்கா வெற்றி - ஹுனைன் போர்)
இராணுவ மோதல்களின் வெற்றிக்குப் பிறகு அழைப்புப்பணி பரவியமை.
நபியவர்களின் மரணம்.
4. நன்மையை ஏவித் தீமையை தடுத்தல் பணியின் அந்தஸ்து
நபிமார்கள் மற்றும் ரஸுல்மார்களின் பணி
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் என்ற பணியை செய்யுமாறு அல்லாஹ் ஆணையிட்டுள்ளான்.
இப்பணிக்கு மிகப்பெரும் கூலி கிடைக்கின்றமை.
இப்பணியை முஃமின்களின் பண்புகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளமை.
இது இச்சமூகத்திற்கு அதிகாரம் வாய்ப்பு கிடைப்பதற்கான வழிமுறைகளில் உள்ளது.
ஜிஹாதின் -அறப்போராட்ட -வாயில்களில் ஒன்றாக திகழ்கின்றமை.
இறைத்தன்டனை நீக்கப்படவும் விமோசனம் கிடைப்பதற்குமான வழியாக அமைந்துள்ளமை.
5. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான சட்ட ஒழுங்குகள்.
முதலாவதாக : நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதன் வரையறைகள்.
நன்மை மற்றும் தீமையை இஸ்லாமிய ஷரீஆதான் வரையறுத்துக் குறிப்பிடும்.
இஜ்திஹாத் விவகாரங்களில் சட்டங்களை நிராகரிக்க முடியாது.
தீமை பகிரங்கமாகக் காணப்படுதல்.
6. தீமை நிகழுவதை உறுதி செய்து கொள்ளுதல்
நலன்கள் கெடுதிகளைக் கருத்திற் கொள்ளுதல் .
மூன்றாவதாக : தீமையைத் தடுப்பதன் படித்தரங்கள் :
முதலாவது : தீமையை கையினால் தடுத்தல்.
இரண்டாவது : தீமையை நாவினால் தடுத்தல்.
மூன்றாவது : மனதால் வெறுப்பதன் மூலம் குறித்த தீமையை தடுத்தல்.
நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதன் ஒழுங்கு முறைகள்.
அல்லாஹ்வுக்காக மாத்திரமே இப்பணியை செய்தல் என்ற தூய்மையான எண்ணம் இருத்தல்.
ஏவும் அல்லது தடுக்கும் விடயம் குறித்த சரியான அறிவைப் பெற்றிருத்தல்.
கட்டளையிடப்பட்டவற்றை எடுத்து நடப்பதும், தடுக்கப்பட்டவற்றை தவிர்ந்து நடப்பதும்.
நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதன் ஒழுங்கு முறைகள்.
மென்மை,இங்கிதம் போன்ற பண்புகளைப் கடைப்பிடித்து கடினப்போக்கை கைவிடுதல்.
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் படிப்படியாக மேற்கொள்ளல் :
முதலாவது : பிழையை அறியப்படுத்துதல்.
இரண்டாவது : இரகசியமாக உபதேசித்து, அறிவுரை கூறுதல்.
மூன்றாவது : சற்று கடும் வார்த்தையைப் பிரயோகித்தல்.
நான்காவது : வெறுத்து, உறவைத் துண்டித்தல்.
ஐந்தாவது : தவறிழைத்தவருக்குத் தண்டனை வழங்கல்.