صفة العمرة (للوزارة)
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்புப்பணி மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றிற்கான அமைச்சு
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்புப்பணி மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றிற்கான அமைச்சு
உம்ரா செய்யும் முறை
மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க்
அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ்
ரஹிமஹுல்லாஹ்
அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.
இது உம்ராக் கடமையில் செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பான சுருக்கமான குறிப்புகளாகும். அவற்றை இங்கு வாசகர்களுக்கு தெளிவு படுத்துகிறோம்:
உம்ரா செய்ய இருப்பவர் தனக்கான பயண எல்லையை (மீகாத்) அடைந்ததும், குளித்து, சுத்தமாகிக் கொள்வது விரும்பத்தக்கதாகும். பெண்களும், மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தப் போக்குடன் இருந்தாலும் இவ்வாறே செய்யலாம். ஆனால் அவர்கள் பூரணமாக சுத்தமாகி குளிக்கும் வரை தவாஃபை செய்யக் கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்கள் தமது இஹ்ராம் ஆடையில் இல்லாமல் உடம்பில் வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ள வேண்டும். மீக்காத்தில் குளிக்க முடியாமல் போனால் அதில் குற்றமில்லை. அவர் மக்காவை வந்தடைந்ததும், முடியுமாயின் தவாஃப் செய்வதற்கு முன்னர் குளித்துக்கொள்வது விரும்பத்தக்கது.
ஆண்கள் உடலின் உறுப்புகளுக்கு ஏற்றவாறு தைக்கப்பட்ட அனைத்து ஆடைகளையும் கலைந்து, இரு புடவைகளை எடுத்து, ஒன்றை வேஷ்டியாகவும் மற்றதை போர்வையாகவும் போர்த்திக் கொள்ள வேண்டும். அவ்விரண்டும் வெண்ணிறமாகவும், சுத்தமாகவும் இருப்பது விரும்பத்தக்கது.
பெண்கள், அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாத தமது வழமையான ஆடைகளையே இஹ்ராமாக அணிந்து கொள்ள வேண்டும்.
பின்பு உம்ராக் கடமையை நிறைவேற்ற செல்கிறேன் என்பதை மனதால் நினைத்து, "لَبَّيْكَ عُمْرَةً" அல்லது "اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً" என வாயால் மொழிய வேண்டும். இஹ்ராம் நிய்யத் வைப்பவர், தனது நோயினாலோ, அல்லது பயங்கர சூழ்நிலைகளினாலோ உம்ரா செய்ய முடியாமல் போகும் என அஞ்சினால், தாம் இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது, பின்வருமாறு முன்நிபந்தனையிட்டு நிய்யத் வைக்க வேண்டும்: "இறைவா! நீ எந்த இடத்தில் (உம்ரா கடமையை செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுவே நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" இது ழுபாஆ பின்த் ஸுபைர் (ரழி) அவர்களுக்கு நபியவர்கள் கற்றுக்கொடுத்ததாகும். நூற்கள்: புஹாரி 5089, முஸ்லிம் 1207.
பின்பு கஃபாவை வந்தடையும் வரை நபியவர்கள் கூறிய முறையில் பின்வரும் தல்பியாவை அதிகம் மொழிந்து, திக்ர்களிலும், துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட வேண்டும். لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை. ((லெப்பைக், அல்லாஹும்ம லெப்பைக், லெப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த ளவன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக)) இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! யா அல்லாஹ்! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு நிகரானவர் எவருமில்லை.)) கஃபாவை அடையும் வரை தல்பியாவை அதிகமாகக் கூறுவதோடு, அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்து துஆக் கேட்கவேண்டும்.
பள்ளியினுள் நுழைந்ததும், தல்பியாவை நிறுத்தி விட்டு, ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். சனநெறிசல் ஏற்பட்டு, மக்களுக்கு சிரமம் ஏற்படாது என்றிருந்தால் அதன் முன் நின்று, வலது கையால் அதைத் தடவ வேண்டும். முடியுமானால் அதற்கு முத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு தொடும் போது, "بِسْمِ اللهِ، وَاللهُ أَكْبَرُ" எனக் கூற வேண்டும். முத்தமிட முடியால் போனால் தனது கை, கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட வேண்டும். பின்பு எதைக்கொண்டு தொட்டாரோ அதை முத்தமிட்டுக்கொள்ளவேண்டும். அவ்வாறும் தொட முடியாமல் போனால் அது இருக்கும் திசையை நோக்கி கையசைக்க வேண்டும். இதன் போது, "اللهُ أَكْبَرُ" எனக் கூறிக்கொள்ள வேண்டும். அவ்வாறு சைகை செய்யும் கையை முத்தமிடமாட்டார்.
தவாஃப் நிறைவேறுவதற்கு, சிறு, பெரும் தொடக்குகளிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். ஏனெனில் அது தொழுகை போன்ற வணக்கமாகும். எனினும், இதன்போது பேசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
5. கஃபாவை தனது இடது பக்க திசையில் வைத்து தவாஃபை ஆரம்பித்து, ஏழு சுற்றுக்கள் செய்யவேண்டும். கஃபாவின் நான்காவது மூலையான, ருக்னுல் யமானியை அடைந்ததும், முடியுமானால் தனது வலது கையால் முத்தமிடாமல் அதைத் தொட வேண்டும். இதன் போது, "بِسْمِ اللهِ، وَاللهُ أَكْبَرُ" எனக் கூற வேண்டும். தொட முடியாமல் போனால் கையால் சைகினை காட்டாமலும், தக்பீர் கூறாமலும் கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் நபியவர்கள் அவ்வாறு செய்ததாக அறிவிக்கப்படவில்லை.
ஒவ்வொரு தடவையிலும் ஹஜருல் அஸ்வதை அடையும் போதும் நாம் ஏலவே கூறியது போன்று, அதைத் தொட்டு முத்தமிடவேண்டும். அவ்வறில்லாவிட்டால் சைக்கினை செய்து தக்பீர் கூறுவார். அதிலும் குறிப்பாக ஆண்கள், தவாபுல் குதூமின் (மக்காவுள் வந்தவுடன் முதலில் செய்யப்படும் தவாப்) முதல் மூன்று சுற்றுகளிலும் சற்று துள்ளித் துள்ளி ஓடுவது ஸுன்னாவாகும். ஆண்கள் மாத்திரம், தவாஃபுல் குதூமின் முதல் மூன்று சுற்றுக்களிலும் சற்று விரைவாகச் செல்வது (ரமல் செய்வது) விரும்பத்தக்கதாகும்.
தவாஃபின் போது ஆண்கள் எல்லா சுற்றுக்களிலும், இழ்திபாஃ அணியவேண்டும். மேலாடையின் நடுஓரப் பகுதியை தமது வலது கையின் அக்குளுக்கு கீழ் வைத்து, இரு ஓரப் பகுதிகளையும் இடது கை தோல் புயத்திற்கு மேல் போட வேண்டும். இழ்திபாஃ என்பதன் அர்த்தம்: மேலாடையின் நடு ஓரப் பகுதியை தமது வலது கையின் அக்குளுக்கு கீழ் வைத்து, இரு ஓரப் பகுதிகளையும் இடது கை தோல் புஜத்திற்கு மேல் போட வேண்டும்.
தவாஃபின் அனைத்து சுற்றுகளிலும் துஆப் பிரார்த்தனைகளிலும், திக்ருகளிலும் அதிகம் ஈடுபடுவது ஸுன்னாவாகும்.
தவாஃபிற்கு என பிரத்தியேகமான எவ்வித துஆக்களோ, திக்ர்களோ இல்லை. ஆகையால் முடியுமான அனைத்து துஆக்களையும், திக்ர்களையும் இதில் ஓதிக்கொள்ள முடியும். கஃபாவின் நான்காவது மூலையான ருக்னுல் யமானியைக் கடந்து ஹஜருல் அஸ்வத் உள்ள முதல் மூலைக்கு வரும் போது: "رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ" எனக் கூற வேண்டும். பொருள்: எங்கள் இறைவா! இவ்வுலகத்திலும், மறுமையிலும் அழகானதை எங்களுக்கு நல்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக! இது நபியவர்களிடமிருந்து உறுதியாக வந்துள்ளதால், ஒவ்வொரு சுற்றிலும் இவ்வாறு கூறுவார்.
ஏழாம் சுற்றை முடிக்கும் போது, ஏற்கனவே கூறப்பட்டது போல் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு, அல்லது அதை நோக்கி கையசைத்துவிட்டு தக்பீருடன் முடித்துக்கொள்ள வேண்டும். அதோடு மேலாடையை மீண்டும் மார்பின் இருபுறமும் தொங்கும் வகையில் அணிந்து கொள்ள வேண்டும்.
6. முடிந்தால் மகாமு இப்றாஹீமிற்கு பின் நின்று இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். முடியாவிட்டால் பள்ளியின் எந்தப் பகுதியில் இருந்தும் இரண்டு ரக்அத்களை தொழுது கொள்ளலாம். அதில் சூறதுல் ஃபாதிஹாவிற்குப் பின்: قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ என்ற சூராவை முதல் ரக்அத்திலும், قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ என்ற சூராவை இரண்டாம் ரக்அத்திலும் ஓதிக்கொள்வது மிகவும் சிறந்தது. இது தவிர வேறு சூறாக்களையும் ஓதவும் முடியும். இரண்டு ரக்அத்துக்களையும் தொழுத பின் ஸலாம் கொடுத்துவிட்டு முடியுமானால், ஹஜருல் அஸ்வதிடம் சென்று, அதை தனது வலது கையால் தடவிக்கொள்ள வேண்டும்.
பிறகு ஸஃபா மலைக்குச் சென்று, அதன் மீது ஏறுவார் அல்லது அதற்கருகில் நிற்பார் (சாத்தியமானால் ஏறுவது சிறந்தது). பின்னர் பின்வரும் வசனத்தை ஓதுவார்: "إِنَّ ٱلصَّفَا وَٱلمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ" எனும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்கொள்ள வேண்டும். பொருள்: நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. (அல்குர்ஆன் :201)
கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை புகழ்ந்து, தக்பீர் கூறி, பின்வருமாறு கூறுவது விரும்பத்தக்கது: "لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، واللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ" (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன், உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளரும் இல்லை, ஆட்சியும் சர்வபுகழும் அவனுக்கே உரியது, அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன், உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை, அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான், தனது அடியாருக்கு உதவினான், கூட்டங்களை அவன் ஒருவனே தோற்கடித்தான்.) பின்னர் இரு கைகளையும் உயர்த்தி துஆ செய்வார், இந்த திக்ர் மற்றும் துவாவை மூன்று முறை மீண்டும் கூறுவார். பின்பு அங்கிருந்து மர்வா மலையை நோக்கி நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் போது இடையில் காணப்படும் பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடைந்ததும், அடுத்த பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடையும் வரை ஆண்கள் சற்று விரைந்து செல்லவேண்டும்.
ஆனால் பெண், அவள் அவ்ரத்தாக இருப்பதால், வேகமாக நடக்க வேண்டிய அவசியமில்லை. பின்பு மர்வாவில் ஏறவேண்டும், அல்லது அதற்கருகாமையில் நிற்கவேண்டும். ஏறுவது முடியுமானால் அதுவே சிறந்ததாகும். மர்வாவிலும், ஸஃபாவில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும். பின்னர், அதிலிருந்து இறங்கி, நடக்க வேண்டிய இடத்தில் நடந்தும், விரைவாகச் செல்ல வேண்டிய இடத்தில் விரைந்தும் ஸஃபாவை அடைய வேண்டும். இவ்வாறு ஏழு முறை செய்ய வேண்டும்; செல்வது ஒரு சுற்றாகவும், திரும்புவது இன்னொரு சுற்றாகவும் கருதப்படும். தேவையேற்பட்டால் வாகனத்தில் ஸஃயு செய்வதில் தவறில்லை. ஸஃயு செய்யும் போது சிறு, பெருந்தொடக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், அதிக திக்ருகளிலும் முடியுமான துஆக்களிலும் ஈடுபடுவதும் விரும்பத்தக்க விடயங்களாகும்.
சுத்தமின்றி ஸஈ செய்தாலும் அதுவும் நிறைவேறும். ஸஈயை முடித்த பின், ஆண் தலையை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும், இதில் மழித்தல் சிறந்ததாகும்.
ஸஈ செய்து முடிந்ததும் ஆண்கள் தமது தலைமுடியை மலித்துக்கொள்ளவோ, குறைத்துக்கொள்ளவோ வேண்டும். மலித்துக்கொள்வது மிகவும் ஏற்றமானது. அவர் மக்காவுக்கு வந்தது, ஹஜ்ஜுடையாக காலம் சமீபமாக இருக்கும் போதாக இருந்தால், ஹஜ்ஜை நிறைவு செய்யும் போது முழுமையாக மலித்துக்கொள்வதற்காக, இப்போது தலை முடியை குறைத்துக்கொள்வது மிகவும் ஏற்றமானது. பெண்களைப் பொறுத்தவரையில் தங்களது முடியை ஒன்று சேர்த்து, விரல் நுனியளவோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ முடிகளை வெட்டிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் அணிந்தவர் இவை அனைத்தையும் செய்து முடித்தால் அவரது உம்ரா நிறைவேறி விடும். - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அவருக்கு இஹ்ராம் நிய்யத் வைத்தவுடன் தடுக்கப்பட்ட அனைத்துத் தடைகளும் நீங்கிவிடும்.
எமக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தை சரியாக விளங்கி, அதில் உறுதியாக இருந்து, அதன் படி நடப்பதற்கு வல்ல இறைவன் அருள்புரிவானாக. எம் அனைவரிடமிருந்தும் நற்கருமங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. தூய அவனே, கொடையாளன், கண்ணியமானவன்.
அல்லாஹ் தனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் இறுதி நாள் வரை அவரைப் பின்பற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுவானாக.